Wednesday, December 26, 2012

முருங்கைக்கீரை

நரம்புகளின் வீரியத்தை நிலைப்படுத்துவது முருங்கை.
தேங்காயை கற்பக விருட்சம் என அழைப்பது போல முருங்கையை பிரம்ம விருட்சம் என போற்றுகின்றனர். இக்கீரை மரத்தில் கிடைப்பதால் நிறைய பஞ்சபூத ஆற்றல்கள் உள்ளன. மனிதர்கள் சாப்பிடக்கூடிய கீரைகளில் முக்கியமாக சாப்பிடக்கூடிய கீரை முருங்கையும், கறிவேப்பிலையும் தான். இதை நாம் சமைத்து சத்துக்களை வீணாக்கி விடுகிறோம்.
ஏழைகளின் பிணிகளை விரட்டும் அற்புதக்கீரை. மலிவானது. எல்லா இடங்களிலும் எல்லாக் காலங்களிலும் கிடைக்கிறது. மனித குலத்திற்கு என படைக்கப்பட்ட முதல் தர கீரை முருங்கையாகும்.
முருங்கைக்கீரையில் உள்ள சத்துக்கள்:
  1. நீர்=71%
  2. மாவுப்பொருள்=12.5%
  3. புரதம்=6.7%
  4. கொழுப்பு=1.7%
  5. நார்பொருள்=12.5%
  6. தாது உப்புக்கள்=4%
  7. கால்சியம்=0.44%
  8. பாஸ்பரஸ்=0.07%
  9. இரும்புத் தாது=7 யூனிட்
  10. வைட்டமின் A=11300 யூனிட்
  11. வைட்டமின் B=70 யூனிட்
  12. வைட்டமின் C=200 யூனிட்
இவை அனைத்தும் 100 கிராம் முருங்கைக்கீரைச்சாறில்  உள்ள சத்துகள்.

மருத்துவக் குணங்கள்:
  • இதில் பொட்டசியம் அதிகமாக உள்ளதால் உடல் உப்பால் உடலை குலைத்தவர்கள் நலம் பெறுகின்றனர். உயர் இரத்த அழுத்த நோய் மறைகிறது.
  • நீரிழிவு பிணியாளர்களின் ஒப்பற்ற நம்பிக்கை நட்சத்திரம் முருங்கை எனலாம். அளவற்ற பிணிகளின் மூல நோயான மலச்சிக்கலை இரு வேளையிலேயே விரட்டிடும் அற்புதக்கீரை.
  • மாலைக்கண் மற்றும் சில கண் நோய் உள்ளவர்கள் முருங்கையால் உறுதியான முன்னேற்றம் பெறுவார்கள்.
  • முதுமைக்கும், இளமைக்கும் இடையில் ஊசல் ஆடுபவர்கள் முருங்கையால் வாழ்வின் வசந்தத்தை தக்கவைத்துக் கொள்ளலாம்.
  • ஹீமோகுளோபினைக் கூட்டும். இரத்த சோகை நீக்கும்.
  • பக்கவாதம், நரம்பு தள‌ர்ச்சி, அதிக உடல் எடை போன்ற பிணிகளைத் தினமும் முருங்கையைப் பயன்படுத்தி குணம் பெறலாம்.
  • தாது பலம் தரும் சஞ்சீவிக் கீரை.நரம்பு பலம் பெற முருங்கைக்கீரை மிக சிறந்தது.
குறிப்பு:
  • முருங்கைக்கீரைகளைச் சமைக்காமல் சாப்பிட்டால் பல பிணிகள் குறையும்.
  • சமைக்காமல் சாறாக எடுத்து நீரில் அல்லது தேனில் கலந்து சாப்பிடுவது சிறந்தது.

முருங்கைப் - மருத்துவக் குணங்கள்:




மருத்துவக் குணங்கள்:
  1. பொதுவாக தாவர இனங்களின் அனைத்து பாகங்களும் மருத்துவக் குணங்கள் நிறைந்தது. தினமும் உணவில் சேர்க்கும் கீரை, காய், பூ மூலம் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் இதிலிருந்து கிடைக்கின்றன. இந்த உணவுகள் எளிதில் ஜீரணமாகக் கூடியதும், உடலுக்கு புத்துணர்வு ஏற்படுத்துவதுமாகும்.
  2. ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு பூக்களின் பயன்களைப் பற்றி அறிந்து வருகிறோம். இந்த இதழில் முருங்கைப் பூவின் மருத்துவப் பயன்பற்றி தெரிந்துகொள்வோம்.
  3. முருங்கையைப் பற்றி அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. வீடு கட்டும் முன்பே முருங்கைக் கொம்பை நட்டு வைப்பார்கள். அது வளர்ந்து மரமாகி காலங்காலமாக பயன்கொடுக்கும் என்பதால்தான் அதனை நட்டு வைக்கின்றனர்.
  4. முருங்கையின் பயன்களை ஒரு புத்தகமாகவே எழுதலாம். ஆயுர்வேத மருத்துவத்திலும், சித்த மருத்துவத்திலும் முருங்கையின் பயன்களைப் பற்றி அதிகம் கூறப்பட்டுள்ளது.
  5. முருங்கையின் இலை, பூ, பிஞ்சு, காய், விதை, பட்டை, வேர் என அனைத்து பாகங்களும் அளவற்ற மருத்துவக் குணங்களைக் கொண்டவை.
  6. இந்தியாவில் இமயமலையில் தொடங்கி தென்குமரி வரை எங்கும் காணப்படும் மரங்களில் முருங்கையும் ஒன்று.
  7. இலங்கை, மியான்மர், மலேசியா போன்ற நாடுகளில் இதனை அதிகம் பயிர்செய்கின்றனர். இதில் காட்டு முருங்கை, கொடிமுருங்கை, தவசு முருங்கை என பலவகையுண்டு.
  8. முருங்கைக் கீரையைப் போலவே பூவிலும் அதிக மருத்துவக் குணங்கள் உள்ளன.
  9. இன்றைய கம்ப்யூட்டர் யுகத்தில் கண்களுக்குத் தான் அதிக வேலை கொடுக்கிறோம். அதுபோல் வீடுகளில் தொலைக்காட்சியும் நம் கண்களுக்கு ஓய்வு கொடுப்பதில்லை. இதனால் கண்கள் விரைவில் வறண்டுவிடும். கண் இமைகள் சிமிட்டும் தன்மை குறைந்துவிடும். இதனால் தலைவலியும், கண்கள் முன்னால் மின்மினிப் பூச்சிகள் பறப்பது போலவும் தோன்றும். பார்வை மங்கலாகத் தெரியும். இவர்கள் முருங்கைப் பூவுடன் பசும்பால் சேர்த்து நன்றாகக் காய்ச்சி காலை மாலை என இருவேளையும் அருந்தி வந்தால் கண்களில் ஈரப்பசை அதிகரித்து, கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.
  10. 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கண்ணாடி இல்லாமல் பேப்பர் படிக்க முடியாது. இதை வெள்ளெழுத்து என்பார்கள். இவர்கள் முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து தேன்கலந்து சாப்பிட்டு வந்தால் வெள்ளெழுத்து மாறும். கண்ணில் ஏற்படும் வெண்படலமும் மாறும்.
  11. சில பெற்றோர்கள் தங்கள் குழந்தை நன்றாக படித்தும் தேர்வில் மதிப்பெண் பெறவில்லை என்பார்கள். இந்த பிரச்சனைக்குக் காரணம் அந்தக் குழந்தைகளுக்கு ஞாபக சக்தி குறைவே. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஞாபக மறதியால் பெரும் அவதிக்கு ஆளாகின்றனர். இந்த ஞாபக மறதி கொடிய நோய்க்கு ஒப்பாகும்.
  12. இந்த ஞாபக மறதியைப் போக்கி நினைவாற்றலைத் தூண்டும் சக்தி முருங்கைப் பூவிற்கு உண்டு.
  13. முருங்கைப் பூவை அரைத்து பாலில் கலந்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை இருவேளையும் அருந்தி வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.
  14. மன உளைச்சல், மன அழுத்தம், பயம், கோபம், இயலாமை போன்ற மனம் சார்ந்த காரணங்களும், தூக்கமின்மை, உடல் அசதி போன்ற காரணங்களும் ஈரலை பாதித்து அதனால் பித்தம் அதிகரித்து இரத்தத்தில் கலந்து மேல் நோக்கிச் சென்று தலைவலி, தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் போன்றவற்றை உண்டாக்கும். பித்த அதிகரிப்பால் தான் உடலில் பல நோய்கள் உருவாகின்றன. இதற்கு முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் கஷாயம் செய்து காலை மாலை அருந்தி வந்தால் உடலில் உள்ள பித்தம் குறைந்து, உடல் அசதி நீங்கி உடல் நிலை சீராகும்.
  15. அதிக வேலைப் பளு, மன அழுத்தம் காரணமாக சிலருக்கு நரம்புகள் செயலிழந்து நரம்பு தளர்ச்சி உண்டாகும்.
  16. முருங்கைப் பூவை கஷாயம் செய்து வாரம் இருமுறை அருந்தி வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும்.
  17. நீரிழிவு நோயாளிகளின் நிலையும் இதுபோல்தான். இவர்கள் முருங்கைப் பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நீரிழிவு நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும்.
  18. சில பெண்கள் மாத விலக்குக் காலங்களில் அதிக கோபம், எரிச்சல், தலைவலி, அடி வயிறு வலி என பல வகையில் அவதிக்கு ஆளாவார்கள். இவர்கள் முருங்கைப் பூவை கசாயம் செய்து அருந்தி வந்தால் மேற்கண்ட உபாதைகள் குறையும்.

அத்திப்பழம்-மருத்துவக் குணங்கள்:


  1. அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்க செய்து உடலை சுறுசுறுப்படைய செய்கிறது.
  2. கரும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியேற செய்து ஈரல், நுரையீரலிலுள்ள தடுப்புகளை குறைய செய்கிறது. அத்திப்பழத்தை சாப்பிடுவதால் கால் விரல்களில் உண்டாகும் ஒருவித நோயை வரவிடாமல் தடுக்கிறது.
  3. அத்திப்பழத்தை சாப்பிடுவதால் வாய்நாற்றம்  குறைய செய்கிறது. தலை முடி நீளமாக வளரச் செய்கிறது.
  4. அத்திப்பழம் தினசரி இரண்டு சாப்பிட்டு வந்தால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும் உடல் வளர்ச்சி அடைந்து பருமனைடயும். மலச்சிக்கலை குறையச் செய்யும்.

Tuesday, December 25, 2012

தமிழ்ப் பழமொழிகள்



பசித்தவன் எதையும் தின்பான். பகைத்தவன் எதையும் சொல்வான்.


 ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி

கடுங்காற்று மழை கூட்டும். கடும் சினேகம் பகை கூட்டும்.

வீட்டு வாசலில் காவேரி, முழுக மாட்டாளாம் மூதேவி.

குண்டு பட்டு சாகாதவன் வண்டு கடித்துச் செத்தானாம்

பண்ணிய பாவத்தைப் பட்டுத் தான் தொலைக்க வேண்டும்.

காட்டிலே செத்தாலும் வீட்டிலே தான் தீட்டு.

தலைக்குத் தலை அம்பலம். உலைக்கு அரிசி இல்லை.

நீரிலும் நனைய மாட்டான். நெருப்பிலும் வேக மாட்டான்.

அசை போட்டுத் தின்பது மாடு; அசையாமல் தின்பது வீடு.

ஏறச் சொன்னால் எருதுக்குக் கோபம். இறங்கச் சொன்னால் நொண்டிக்குப் கோபம்.

அஞ்சு காசுக்குக் குதிரையும் வேணும். அது ஆற்றைக் கடந்து பாயவும் வேணும்.

அறுவடைக் காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி.

மேய்த்தால் கழுதை மேய்ப்பேன். இல்லா விட்டால் பரதேசி ஆவேன்.

அன்ன நடை நடக்கப் போய் தன்னடையும் கெட்டுப் போச்சு.

குதிரை செத்ததும் இல்லாமல் குழி தோண்ட மூணு பணம்.

-      
  -   தொகுப்பு: என்.கணேசன்

பதினெட்டு படி உணர்த்தும் தத்துவம்!


காமம்: பற்று உண்டானால் பாசம், மோகம் ஏற்பட்டு புத்தி நாசமடைந்து அழிவு ஏற்படுகிறது.

குரோதம்: கோபம் குடியைக் கெடுத்து, கொண்டவனையும் அவன் சுற்றத்தையும் சேர்த்து அழித்து விடும்.

லோபம்: பேராசைக்கு இடம் கொடுத்தால் இருப்பதும் போய்விடும், ஆண்டவனை அடைய முடியாது.

மதம்: யானைக்கு மதம் பிடித்தால் ஊரையே அழித்து விடும். அந்த யானையை அப்போது யாராவது விரும்புவார்களா? அதுபோல் வெறி பிடித்தவனை ஆண்டவன் வெறுத்துவிடுவான்.

மாத்ஸர்யம்: மனதில் பொறாமையை நிலைநிறுத்தி வாழ்பவனுக்கு, வேறு பகையே வேண்டாம். அதுவே அவனை அழித்துவிடும்.

டம்பம் (வீண் பெருமை): அசுர குணமானது நமக்குள் இருக்கக்கூடாது.

அகந்தை: தான் என்ற அகந்தை கொண்டவன் ஒரு போதும் வாழ்வில் முன்னேற முடியாது. அகந்தை என்பது முடிவில்லா ஒரு சோகச் சுமை.

சாத்வீகம்: விருப்பு, வெறுப்பு இன்றி கர்மம் செய்தல் வேண்டும்.

ராஜஸம்: அகங்காரத்தோடு கருமம் செய்தல் கூடாது.

தாமஸம்: அற்ப புத்தியை பற்றி நிற்பது. மதி மயக்கத்தால் வினை செய்வது.

ஞானம்: எல்லாம் ஆண்டவன் செயல் என்று அறியும் பேரறிவு.

மனம்: நம்மனம் கெடாது, பிறர் மனம் வருந்தாது வாழவேண்டும். எப்போதும் ஐயன் நினைவே மனதில் இருக்க வேண்டும்.

அஞ்ஞானம்: உண்மைப் பொருளை அறிய மாட்டாது மூடி நிற்கும் இருள்.

கண்: ஆண்டவனைப் பார்க்கவும், ஆனந்தக் கண்ணீர் உகுக்கவுமே ஏற்பட்டது.

காது: ஆண்டவனின் மேலான குணங்களைக் கேட்டு, அந்த ஆனந்தக் கடலில் மூழ்க வேண்டும்.

மூக்கு: ஆண்டவனின் சன்னதியிலிருந்து வரும் நறுமணத்தை முகர வேண்டும்.

நாக்கு: கடுஞ் சொற்கள் பேசக்கூடாது.

மெய்: இரு கரங்களால் இறைவனை கைகூப்பித் தொழ வேண்டும். கால்களால் ஆண்டவன் சன்னதிக்கு நடந்து செல்ல வேண்டும். உடல் பூமியில் படும்படி விழுந்து ஆண்டவனை நமஸ்கரிக்க வேண்டும்.

இந்தப் பதினெட்டு வித குணங்களில் நல்லவற்றைப் பின்பற்றியும், தீயவற்றைக் களைந்தும் வாழ்க்கைப்படியில் ஏறிச் சென்றால்தான் இறைவன் அருள் நமக்குக் கிடைக்கும். இவையே சபரிமலை தர்ம சாஸ்தாவின் பதினெட்டுப் படிகள் உணர்த்தும் தத்துவம்.

18 படி தெய்வங்கள்

ஐயப்பன் கோயிலில் உள்ள 18 படியிலும் 18 தெய்வங்கள் அருள்பாலிப்பது சிறப்பு.

1.விநாயகர் 2. சிவன் 3.பார்வதி 4.முருகன் 5.பிரம்மா 6.விஷ்ணு 7.ரங்கநாதர் 8.காளி 9.எமன் 10.சூரியன் 11.சந்திரன் 12.செவ்வாய் 13.புதன் 14.குரு(வியாழன்) 15.சுக்கிரன் 16.சனி 17.ராகு 18.கேது

பதினெட்டுப் படிகளின் தாத்பரியம் என்ன?

முதல் படி: விஷாத யோகம். பிறப்பு நிலையற்றது. நாம் செய்யும் நல்லவையும் கெட்டவையுமே நம் புண்ணிய, பாவங்களை நிர்ணயிக்கும் என்று உணர வேண்டும். இறைவன் அருளால் முக்தியடைய வேண்டும் என்ற ஆத்மத் துடிப்பே விஷாத யோகம் இதுவே முதல் படி.

இரண்டாம் படி: சாங்கிய யோகம். பரமாத்மாவே என் குரு என்பதை உணர்ந்து அவரிடம் ஆத்ம உபதேசம் பெறுவது இரண்டாவது படி.

மூன்றாம் படி: கர்மயோகம். உபதேசம் பெற்றால் போதுமா? மனம் பக்குவம் அடைய வேண்டாமா? பலனை எதிர்பார்க்காமல் கடமையைச் செய்யும் பக்குவம் மூன்றாவது படி.

நான்காம் படி: ஞான கர்ம சன்னியாச யோகம். பாவம், புண்ணியங்கள் பற்றிக்கூட கவலைப்படாமல் எதன்மீதும் பற்று இல்லாமல், பரமனை அடையும் வழியில் முன்னேறுவது நான்காம் படி.

ஐந்தாம் படி: சன்னியாச யோகம். நான் உயர்ந்தவன் என்ற கர்வம் இல்லாமல் தான, தர்மங்கள் செய்வது ஐந்தாம்படி.

ஆறாம் படி: தியான யோகம். கடவுளை அடைய புலனடக்கம் முக்கியம். மெய், வாய், கண், மூக்கு, செவி இந்த புலன்கள் நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டுமே தவிர அவை இழுத்த இழுப்புக்கு நாம் போய்விடக்கூடாது. இதுவே ஆறாவது படி.

ஏழாம் படி: ஞானம். இந்த உலகில் காண்பவை எல்லாமே பிரம்மம்தான்.. எல்லாமே கடவுள்தான் என உணர்வது ஏழாவது படி.

எட்டாம் படி: அட்சர பிரம்ம யோகம். எந்நேரமும் இறைவனைப்பற்றிய நினைப்புடன் வேறு சிந்தனைகளே இல்லாமல் இருப்பது எட்டாவதுபடி.

ஒன்பதாம் படி: ராஜவித்ய, ராஜ குஹ்ய யோகம். கடவுள் பக்தி மட்டுமே இருந்தால் பயனில்லை. சமூகத்தொண்டாற்றி, ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்பதுதான் உண்மையான பக்தி. உண்மையான ஆன்மிகம் என்று உ<ணர்வது ஒன்பதாம் படி.

பத்தாம் படி: விபூதி யோகம். அழகு, அறிவு, ஆற்றல் என எத்தகைய தெய்வீக குணத்தைக் கண்டாலும் அதை இறைவனாகவே காண்பது பத்தாம் படி.

பதினொன்றாம் படி: விஸ்வரூப தரிசன யோகம். ஆண்டவனில் உலகத்தையும் உலகில் ஆண்டவனையும் பார்க்கும் மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்வது பதினொன்றாம் படி.

பன்னிரண்டாம் படி: பக்தி யோகம். இன்பம் - துன்பம், விருப்பு-வெறுப்பு, ஏழை - பணக்காரன் என்பன போன்ற வேறுபாடுகளைக் களைந்து எல்லாவற்றிலும் சமத்துவத்தை விரும்புவது பன்னிரண்டாம் படி.

பதின்மூன்றாம் படி: ஷேத்ரக்ஞ விபாக யோகம். எல்லா உயிர்களிலும் வீற்றிருந்து ஆண்டவனே அவர்களை இயக்குகிறார் என்பதை உணர்தல் பதின்மூன்றாம் படி.

பதினான்காம் படி: குணத்ர விபாக யோகம். பிறப்பு, இறப்பு, மூப்பு ஆகியவற்றால் ஏற்படும் துன்பங்களை அகற்றி, இறைவனின் முழு அருளுக்கு பாத்திரமாவதே பதினான்காம் படி.

பதினைந்தாம் படி: தெய்வாசுர விபாக யோகம். தீய குணங்களை ஒழித்து, நல்ல குணங்களை மட்டும் வளர்த்துக்கொண்டு, நம்மிடம் தெய்வாம்சத்தை அதிகரிப்பது பதினைந்தாம் படி.

பதினாறாம் படி: சம்பத் விபாக யோகம். இறைவன் படைப்பில் எல்லோரும் சமம் என்று உணர்ந்து, அகங்காரம் வராமல் கவனமுடன் இருப்பது பதினாறாம் படி.

பதினேழாம் படி: சிரித்தாத்ரய விபாக யோகம். சர்வம் பிரம்ம மயம் என்று உணர்ந்து பரப்பிரம்ம ஞானத்தை பெறுவது பதினேழாவது படி.

பதினெட்டாம் படி: மோட்ச சன்யாச யோகம். யாரிடமும் எந்த உயிர்களிடமும் பேதம் பார்க்காமல், உன்னையே சரணாகதி அடைகிறேன் என்று இறைவன் சன்னதியில் வீழ்ந்தால் அவன் அருள் செய்வான் என்று ஆண்டவனையே சரணடைவது பதினெட்டாம் படி. சத்தியம் நிறைந்த இந்தப் பொன்னு பதினெட்டுப் படிகளையும் படிப்படியாய் கடந்து வந்தால், நம் கண் எதிரே அந்த கரிமலை வாசன் மணிகண்ட பிரபு பேரொளியாய் தரிசனம் தருவார். நம் வாழ்வுக்கு வளம் சேர்ப்பார் என்பதே ஐயனின் பதினெட்டுப் படிகள் நமக்கு உணர்த்தும் தத்துவமாகும்.

ஓம் ஸ்ரீ சரஸ்வதி ஸ்லோகங்கள்


ஓம் ஸ்ரீ சரஸ்வதி ஸ்லோகங்கள் :-"ஓம் வாக்தேவ்யை நம"

ஓம் ஸ்ரீ மகாஸரஸ்வதி மந்திரம்:-ஓம் ஐம் ஹ்ரீம் க்லீம் சரஸ்வதியைபுத ஜனன்னியை ஸ்வாஹா

கம்ப்யூட்டர் துறையில் உலகம் வியக்க, மாபெரும் சாதனை புரிய தினந்தோறும் 1008 முறை ஜெபிக்க வேண்டிய ஸ்லோகம் :-ஸ்ரீ அணுராதாக்ரமண ஸரஸ்வத்யை நம‌
ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் என்னம்மை தூய‌
உருப்பளிங்கு போல்வாள் என் உள்ளத்தின் உள்ளே
இருப்பளிங்கு வாராது இடர்.

மந்திர உச்சாடனம் மந்திர உச்சாடனம்


"ஓம்"கார நமசிவாய "மூலமந்திரம்"
ஓம் ஓம்கார நமசிவாய ஓம் நகாராய நமசிவாய‌
ஓம் மகாராய நமசிவாய ஓம் சிகாராய நமசிவாய
ஓம் வகாராய நமசிவாய ஓம் யகாராய நமசிவாய
ஓம் நம ;
ஸ்ரீ குரு தேவாய, பரமபுருஷாய ஸர்வ தேவதா வசீகராய‌
ஸர்வாரிஷ்ட விநாசாய ஸர்வ துர்மந்தரச் சேதனாய
த்ரை லோக்யம் வசமாய ஸ்வாஹா।


இந்த மந்திரத்தை தொடர்ந்து ஜபித்து வர சற்குரு அமைவார்।ஈசன் அருளால் அனைத்தும் கைவரப் பெறலாம்। தோல்வியே கிடையாது। புகழ் பெறுவர்। வசீகர சக்தி கிடைக்கும்।துஷ்ட சக்திகள் ஆண்டாது।

"ஓம் அகத்தீசாய நம‌
ஓம் நந்தீசாய நம‌
ஓம் திருமூலதேவாய நம‌
ஓம் கரூவூர் தேவாய நம‌"



ஓம் ஸ்ரீ ஷீரடி சாயிபாபா:-

ஓம் ஸ்ரீ ஸமர்த்த ஸத்குரு ஸாயிநாதாய நம!



"அருணாசல, அருணாசல, அருணாசல பாஹிமாம்
அருணாசல, அருணாசல, அருணாசல ரட்சமாம்"


மஹாதேவம் மஹேசானம் மஹேச்வரம் உமாபதிம்
மஹாஸேனகுரும் வந்தே மஹாபய நிவாரணம்!!


சிவம் சிவகரம் சாந்தம் சிவாத்மானம் சிவோத்தமம்
சிவமார்கப்ரணே தாரம் ப்ரணதோஸ்மி ஸ்தாசிவம்!!

பெருமாள் தமிழ் மந்திரம்
"அரியே, அரியே, அனைத்தும் அரியே!
அறியேன் அறியே அரிதிருமாலை
அறிதல் வேண்டி அடியேன் சரணம்"

திருமால் நெறிவாழி! திருத்தொண்டர் செயல் வாழி!


"தர நக சிவ உரு சிவா சிவா"

ஓம் அண்ணாமலை அரசே போற்றி!
ஓம் உண்ணாமுலை உவந்தாய் போற்றி!!


அருட்பெருஞ்ஜோதி! அருட்பெருஞ்ஜோதி!!
தனிப்பெருங்கருணை! அருட்பெருஞ்ஜோதி!!


ஓம் ஸ்ரீ குரு ராகவேந்தராய நமஹ‌



"ஓம் நமோ நாராயணாய"



"ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஆதி ச‌க்தி ம‌கா ச‌க்தி ப‌ராச‌க்தி ஓம்"

துர்க்கா ஸ்துதி (ராகுகாலத்திற்குரியது) - மூலமந்திரம்

ஸ்ரீ மங்கள சண்டிக ஸ்தோத்ரம்

ஸாரே மங்கள தாரே பாரேச ஸர்வ கர்மணாம்
ப்ரதி மங்களா தாரேச பூஜ்யே மங்கள சுகப்ரதே

மங்களத்திற்கு ஆதாரமானவளே ! மங்கள வாரம் தோறும் (செவ்வாய்க்கிழமை தோறும்) பூஜிக்கத் தக்கவளே மங்களத்தை அருளும் அன்னையே உன்தாள் பணிகின்றேன்.

தேவீம் ÷ஷாடஸ வர்ஷியாம் ஸுஸ்திர யௌவனாம்
பிம்போஷ்டீம் ஸுதீதம் சுந்தரம் சரத் பத்ம நிபாநநாம்

தேவியை என்றும் பதினாறு வயதுடைய நித்யயௌவன உருவமுடையவளாகவும், அழகிய உதடுகளில் அருள் வழியும் புன்னகையுடன் சரத் காலத்து நிலவொளியில் தாமரை மலர் மீது அமர்ந்திருப்பவளாக தியானிக்கிறேன்.

ஸ்வேத சம்பக வர்ணாம் ஸுநீலோத்லப லோசநாம்
ஜகதாத்ரீம் சதாத்ரீம் ச ஸந்வேப்ய : ஸர்வ சம்பதாம்

காயாம்பு வண்ண மேனியுடன் நீலோத்பல மலர் போன்ற கண்களுடன் விளங்கும் அன்னை, உலகை ஈன்று சகல சௌபாக்கியங்களையும் அளிக்கின்றாள்.

ஸ்ம்ஸார சாகரே கோரே ஜ்யோதிரூபாம் சதாபஜே
தேவ்யாச்ச த்யான மித்யேவம் ஸ்தவ நம் ச்ருயதாம் முனே

பயங்கரமான பிறவிப் பெருங்கடலைத் தாண்ட, மணி விளக்காய் வழிகாட்டும் தேவியின் பாதங்களை நினைப்பதே சிறந்த மார்க்கமாகும்.

மங்கள மங்களார் ஹே ச சர்வ மங்கள மங்களே
ஸதாம் மங்களதே தேவி ஸர்வேஷாம் மங்களாலயே

மங்களத்தை தரும் மங்கள நாயகியே !
என்றென்றும் மங்கள வாழ்வை அளிப்பாயாக.

பூஜ்ய மங்கள வாரே ச மங்களா பீஷ்ட தேவதே
பூஜ்யே மங்கள பூபஸ்ய மனுவம்சஸ்ய ஸந்தகம்

பூஜிக்க தக்க மங்கள நாயகியே ! சுபத்தை அளிக்கும் தேவியே! மனித வர்க்கத்திற்கு என்றும் நல்வாழ்வை நல்குவாயாக !

மங்களா திஷ்டாத்ரு தேவி மங்களநாம்ச மங்களே
ஸம்ஸார மங்களா தாரே மோக்ஷ மங்கள தாயினி

மங்களத்தைத் தரும் அருள் நோக்கு உடையவளே! மங்களமே உருவானவளே உலகின் நல்வாழ்வுக்கு ஆதாரமானவளே ! மாந்தருக்கு மோக்ஷத்தை அளிப்பவளே !

ஸாரே மங்கள தாரே பாரேச ஸர்வ கர்மணாம்
ப்ரதி மங்களா தாரேச பூஜ்ய மங்கள சுகப்ரதே

மங்களத்திற்கு ஆதாரமானவளே மங்கள வாரம் தோறும் (செவ்வாய்கிழமை தோறும்) பூஜிக்கத்தக்கவளே மங்களத்தை அருளும் அன்னையே உன் தாள் பணிகின்றேன்.

பலஸ்ருதி

ஸ்தோத்ரேனாநேந சம்பிஸ் ச ஸ்துத்வா மங்கள சண்டிகாம்
ப்ரதி மங்கள வாரே ராகு காலௌ பூஜரம் தத்வா கத: சிவ

மங்கள சண்டிகையான அன்னையை மங்கள வாரம் தோறும் ராகு காலத்தில் பூஜித்து துதித்தால் சகலநன்மைகளையும் அளிப்பாள்.

தேவ்யாஸ் ச மங்கள ஸ்தோத்ரம் ய ச்ருணோதி ஸமாஹித
தத்மங்களம் பவேத் தஸ்ய நபவேத் தத் மங்களம்
வர்த்ததே புத்ர பௌத்ரஸ்ச மங்களம் ச திநே திநே

தேவியைப் போற்றும் இந்த மங்கள ஸ்துதியை ஓதுவதால் உலகில் கிடைக்காத பாக்கியமே இல்லை, சகல சம்பத்துகளும் வம்ச விருத்தியும் எண்ணற்ற பாக்யங்களும் நாளுக்கு நாள் பெருகும் என்பதில் ஐயமே இல்லை.

பவானி த்வம் தாஸேமயீ விதிர க்ருஷ்டியும் ஸகருணாம்
இதி ஸ்தோதும் வாஞ்சன் கதயதிபவானி த்வமிதிய:
தவைத த்வம் தஸ்மை திசஸி நிஜ ஸாயுஜ்ய பதவீம்
முகுந்த ப்ரஹ்மேந்திர ஸ்புட மகுட நீராஜித பதாம்

ஹே பவானி அடிமையாகிய என்னிடம் கருணையுடன் கூடிய பார்வையை நீ செலுத்தி அருள்வாயாக என்று எவனொருவன் துதிசெய்ய விரும்பி பவானி நீ என்ற இரண்டு வார்த்தைகளை சொன்ன மாத்திரம் விஷ்ணு, பிரம்மா, இந்திரன் ஆகியவர்களின் கிரீட ஒளியால் நிராஜனம் செய்ய பெற்ற திருவடிகளையுடைய உனது ஸாயுஜ்ய பதவியை அவனுக்கு அளிக்கிறாய்.

பன்னிரு ராசி நேயர்கள்  ராகு தோஷம் நீக்கி ஸ்ரீதுர்கையின் அருள் கிடைக்க திருநாமம்

ஓம் துர்லபாம் துர்கமாம் துர்காம்
துக்க ஹந்த்ரீம் ஸுகப்ரதாம்
துஷ்டதூராம் துராசார ஸமனீம்
தோஷவர்ஜிதாம் ஜெயப்ரதாம் ஓம்

(தன, ஸித்தி, ஞான, ஸஹாய குணயோக போக, மோக்ஷ என மாற்றியும் சொல்லலாம்)

மூலமந்திரம்

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்
ஓம் ஸ்ரீதுர்காதேவ்யை ஸ்வாஹா ஓம்

பசுவின் பால் சைவமா அசைவமா?


மாமிசம் சாப்பிடுபவர்கள் சைவர்களைப் பார்த்து, நீங்கள் குடிக்கும் பால், பசுவின் உடலிலிருந்து தானே வருகிறது. அதன் ரத்தம் தானே பாலாக மாறுகிறது, அதைக் குடிக்கும் நீங்களும் அசைவர்கள் தான், என்று கேலி பேசுவார்கள். ஒரு மிருகக்தைக் கொன்று அதன் இறைச்சியைச் சாப்பிட்டால் தான் அது அசைவம். பால் அப்படியல்ல. பாலைக் கறக்காமல் விட்டால் தான் பசுவுக்கு துன்பம் ஏற்படும். ஆனால், பால் கறக்கும் விஷயத்தில் கவனம் வேண்டும். பசுவுக்கு நான்கு மடு இருக்கும். இதில் இரண்டில் இருந்து மட்டுமே பால் கறக்க வேண்டும். மற்ற இரண்டு மடுக்களை கன்றுக்காக விட்டுவிட வேண்டும். பசும்பால் மனிதனுக்கு சாந்த குணத்தை தரும் வல்லமையுள்ளது. அது புனிதமானதும் கூட. பசுவின் கோமியமும் மருந்தாகவும், கிருமிநாசினியாகவும் பயன்படுகிறது. அது புனிதமானது என்பதால் தான், பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன், என்று விநாயகருக்கு வாக்களிக்கிறாள் அவ்வைப்பாட்டி.

திருமணத்தின் போது செய்யப்படும் சடங்கு முறைகளும் அவற்றின் சிறப்பும்! மாங்கல்ய தாரணம்


திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்று சொல்வார்கள். இத்தகைய திருமணத்தில் பல்வேறு சம்பிரதாயங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு செய்யப்படும் ஒவ்வொரு காரியங்களுக்கும் வலுவான காரணங்கள் உண்டு அவற்றில் முக்கியமான சில...

காசி யாத்திரை: மணமகன் துறவு பூண எண்ணி எளிய ஆடை உடுத்தி, விசிறி, குடை ஏந்தி, மரப்பாதுகை அணிந்து காசியை நோக்கிச் செல்லத் துவங்குகின்றான். அப்போது மணப்பெண்ணின் தந்தை அவன் முன் வந்து இல்லறவாழ்வின் சிறப்பையும், அதன் அவசியத்தையும் விரிவாகச் சொல்லி, அவன் இல்லறத்தை மேற்கொள்ள, தன் மகளையும் துணைநலமாக, தருவதாக வாக்களித்து, மணமகனை அழைத்து வருவது காசி யாத்திரையாகும்.

மாலை மாற்றல்: மணப்பெண்ணும் மணமகனும் தம்தம் தாய்மாமன் தோள்களில் அமர்ந்து, ஒருவர் கழுத்தில் ஒருவர் மாலை மாற்றும் நிகழ்ச்சி இது. கணவன் மனைவி என்கிற உறவு, ஈருடல் ஓர் உயிர் என்று இரண்டறக் கலக்கும் நிலையில், ஒருவர் அணிந்த மாலையை மற்றவர் அணிய வைப்பது மாலை மாற்றல்.

ஊஞ்சல் அமர்த்தி லாலி பாடுதல்:  இந்நிகழ்ச்சியில் ஊஞ்சல் சங்கிலி, இல்வாழ்க்கைக்கு, இறைவனிடத்தில் ஏற்படுத்திய தொடர்பாகவும், ஆடும் ஊஞ்சல், மேடு பள்ளம், சலனம் நிறைந்த வாழ்க்கைப்பாதையை இருவரும் இணையாக அமைதியாக உறுதியாகக் கடக்க வேண்டிய முறையையும் உருவகப்படுத்துவதாகும்.

மாங்கல்ய தாரணம்: தேர்ந்து எடுக்கப்பட்ட புனித நேரத்தில், மங்கள நாதஸ்வரமும் மேளமும் முழங்க கிழக்கு நோக்கி அமர்ந்துள்ள மணப் பெண்ணை நேராக நோக்கி அவள் கழுத்தில் மங்கள தாலியைக் கட்டுகின்றான். முதல் முடிச்சை மணமகனும் மற்ற இரண்டை அவன் சகோதரியும் போட மாங்கல்ய தாரணம் நடைபெறுகின்றது.

கைப்பிடித்தல் (பாணிகிரஹணம்): மணமகன், விரல்கள் மேல் குவிந்த பெண்ணின் வலது கையை தனது வலது கையால் எல்லா விரல்களும் சேர்ந்திருக்கும் வண்ணம் பிடிப்பதே பாணிகிரஹணம் ஆகும் நான் முதுமையடைந்த பின்னும் உன்னை கைவிடமாட்டேன் என மணமகன் மணமகளிடம் கூறுவதாகும்.

ஸப்தபதி (ஏழடி வைத்தல்): ஏழடி எடுத்து வைக்கும் பெண்ணே, உனக்கு ஸ்ரீ மஹாவிஷ்ணுவானவர் உன் முதலடியில் அன்னமும், இரண்டாவதில் தேஹபுஷ்டியும் மூன்றாவதில்  விரத அனுஷ்டானமும், நாலாவதில் சுகமும், ஐந்தாவதில் பசுக்கள் விருத்தியும், ஆறாவதில் ருதுக்களால் அனுகூலமும், ஏழாவதடியில் ஹோமம்  செய்யும் ஆற்றலையும் அளிக்க உன்னை பின் தொடர்வாராக.

நலுங்கிடல்: திருமண தினத்தின் மாலை, மணமக்கள் மனசாந்தியும் சுகமும் பெறும் வகையில் கேளிக்கையும் குதூகலமும் பொங்கும் நிகழ்ச்சியே நலுங்கிடலாகும். மணமகள் மணமகனை, தன்இனிய பாட்டினால் நலுங்கிட அழைக்கின்றாள். சுற்றமும் நண்பரும் சூழ சிரிப்பும் கேலியும் நிறைந்து எல்லோரையும் மகிழ்விக்கும் நிகழ்ச்சி நலுங்கிடல் ஆகும்.

கந்தசஷ்டி தோன்றிய கதை தெரியுமா?


படைக்கும் கடவுளான பிரம்மாவிற்கு தட்சன், காசிபன் என்ற இரு புதல்வர்கள் உண்டு. இவர்களுள் தட்சன், சிவனை நோக்கி தவம் புரிந்து பல வரங்களைப் பெற்று சிவபிரானுக்கே மாமனாராகியும் அகந்தை காரணமாக இறுதியில் சிவனால் உருவாக்கப்பட்ட வீரபத்திரரால் கொல்லப்பட்டான். (தட்சனே அடுத்த பிறவியில் சூரபத்மனாக பிறந்தான். தட்சனின் மகள் பார்வதி. பார்வதியின் மகன் முருகன். இதன் படி பார்த்தால் முருகனுக்கு சூரபத்மன் தாத்தா உறவு வருகிறது என்ற கருத்தும் உள்ளது.)
அடுத்து காசிபனும் கடும் தவம் புரிந்து சிவனிடம் பல வரங்களைப் பெற்றான். ஒரு நாள் அசுர குரு சுக்கிரனால் ஏவப்பட்ட மாயை எனும் பெண்ணின் அழகில் மயங்கி தான் பெற்ற தவ வலிமையை இழந்தான். இதைத் தொடர்ந்து காசிபனும் மாயை எனும் அசுரப் பெண்ணும் முதலாம் சாமத்தில் மனித உருவத்தில் இணைந்து மனிதத் தலையுடைய சூரபத்மனும், இரண்டாம் சாமத்தில் சிங்க உருவில் இருவரும் இணைந்து சிங்கமுகமுடைய சிங்கனும், மூன்றாம் சாமத்தில் யானை உருவில் இணைந்து யானை முகமுடைய தாரகனும், நான்காம் சாமத்தில் ஆட்டுருவத்தில் இணைந்து ஆட்டுத் தலையுடைய அஜமுகி எனும் அசுரப் பெண்ணும் பிறந்தனர். மாயை காரணமாகத் தோன்றிய இந்த நான்கு பேரும் ஆணவ மிகுதியால் மிதந்தனர்.
காஷ்யபர் தன் பிள்ளைகளிடம், குழந்தைகளே! வடதிசைநோக்கிச் சென்று சிவபெருமானை நோக்கித் தவம் செய்யுங்கள். வேண்டிய வரங்களைப் பெற்று வாழுங்கள்! என்று உபதேசம் செய்தார். இவர்கள் கடும் தவமிருந்து சிவபெருமானிடம் பல வரங்களைப் பெற்றனர்.  

இவர்களுள் சூரபத்மன் சிவனை நோக்கி கடும் தவம் புரிந்து 108 யுகம் உயிர் வாழவும் 1008 அண்டம் அரசாளவும் இந்திர ஞாலம் எனும் தேரையும் வரமாக பெற்றான். மேலும் தனக்கு சாகாவரம் வேண்டும் என சூரபத்மன்  சிவனிடம் கேட்டான். பிறந்தவன் மடிந்தே தீர வேண்டும் என்ற சிவன், எந்த வகையில் அவனுக்கு அழிவு வர வேண்டும் எனக் கேட்டார். சூரபத்மன் புத்திசாலித்தனமாக, ஒரு பெண்ணின் வயிற்றில் பிறக்காத பிள்ளையால் தான் தனக்கு அழிவு வர வேண்டும், எனக் கேட்டான். பெண்ணையன்றி வேறு யாரால் ஜீவர்களை உற்பத்தி செய்ய முடியும் என்பது அவனது கணக்கு. இந்த வரத்தைப் பெற்ற சூரபத்மனும் அவனுடன் பிறந்தவர்களும் தன் குலகுருவான சுக்ராச்சாரியரிடம் ஆசி பெற்று தம்மைப் போல் பலரை உருவாக்கி அண்டசராசரங்கள் எல்லாவற்றையும் ஆண்டு இந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்களையும் சிறையிலடைத்தனர். இந்திரன் சூரபத்மனுக்கு பயந்து பூலோகம் வந்து ஒளிந்து கொண்டான்.
அசுரர்களின் இந்தக் கொடுமையைத் தாங்க முடியாத தேவர்கள், கயிலாயம் சென்று சிவபெருமானிடம் சூரபத்மனிடம் இருந்து தங்களைக் காக்கும்படி முறையிட்டனர். சிவனும் அவர்களைக் காப்பாற்றும் நோக்குடன் பார்வதியின் தொடர்பின்றி, தனது ஆறு நெற்றிக் கண்களைத் திறக்க (சிவனுக்கு ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம், ஞானிகளுக்கு மட்டும் தெரியக்கூடிய அதோ முகம் (மனம்) என்று ஆறுமுகங்கள் உண்டு) அவற்றிலிருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகளையும் வாயு பகவான் ஏந்திச் சென்று சரவணப் பொய்கையில் மலர்ந்திருந்த தாமரை மலர்கள் மீது சேர்த்தான். அந்த தீப்பொறிகள் ஆறும் ஆறு குழந்தைகளாகத் தோன்றின! அந்த ஆறு குழந்தைகளையும் ஆறு கார்த்திகைப் பெண்கள் அறுவர் பாலூட்டி சீராட்டி வளர்த்தனர். இந்த ஆறு திருமுகங்களும் ஞானம், ஐஸ்வர்யம், அழகு, வீரியம், வைராக்கியம், புகழ் எனும் ஆறு குணங்களைக் குறிக்கிறது. பிரணவ சொரூபியான முருகனிடம் காக்கும் கடவுள் முகுந்தன், அழிக்கும் கடவுள் ருத்ரன், படைக்கும் கடவுள் கமலோற்பவன் ஆகிய மும்மூர்த்திகளும் அடங்குவர். மேலும் முருகப் பெருமான் சிவாக்னியில் தோன்றியவராதலால் ஆறுமுகமே சிவம்-சிவமே ஆறுமுகம் என்பதுண்டு. அந்த ஆறு குழந்தைகளையும் பார்வதி கட்டி அணைக்க... அவர்கள் ஒரு மேனியாக வடிவம் கொண்டு ஆறு முகங்களும் இரு கரங்களும் கொண்ட முருகப் பெருமானாகத் தோன்றினர். இத் திருவுருவைப் பெற்றதால் ஆறுமுகசுவாமி என்ற பெயர் முருகப் பெருமானுக்கு ஏற்பட்டது. அத்துடன் இந்த ஆறு குழந்தைகளையும் பார்வதி ஒரே குழந்தையாக ஸ்கந்தம் (சேர்த்தல்) செய்ததால் முருகன் ஸ்கந்தப்பெருமான் ஆனார்.  முருகன் என்றால் அழகன். கோடி மன்மதர்களை விட அழகாக இருந்தான் அவன்.முருகப்பெருமான் தேவகுரு பிரகஸ்பதி மூலம் அசுரர்களின் வரலாற்றினை அறிந்தார். திருக்கரத்தில் வேலேந்திக் கொண்டு முருகப்பெருமான், இந்திராதி தேவர்களே! நீங்கள் அசுரர்களுக்குச் சிறிதும் அஞ்சத்தேவையில்லை. அஞ்சும் முகம் தோன்றும் போது இந்த ஆறுமுகத்தை எண்ணுங்கள். உங்கள் குறைகளை சீக்கிரமே போக்கி அருள்செய்வது என் வேலை, என்றார். அசுரர்களை அழிக்க நினைத்த முருகன் முதலில்  சிங்கமுகன், தாரகாசுரன், அவன் மகன் என எல்லா சேனைகளையும் ஐந்து நாட்களில் அழித்தார். ஆறாம் நாள் எஞ்சியவன் சூரபத்மன்தான்.

தனது சேனைத்தலைவரான வீரபாகுவை சூரபத்மனிடம் தூது அனுப்பி அவனைத் திருந்தும்படி எச்சரித்தார். ஆனால், சூரபத்மன், பாலகன் முருகனா எனக்கு எதிரி! யார் வந்தாலும் இந்திராதி தேவர்களைக் காக்க யாராலும் முடியாது, என்று வீராவேசமாகக் கூறினான். உடனே பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் முருகப் பெருமானை சூரனுடன் போர் புரிய அனுப்பினர். சூரனோ, கடலின் நடுவில் வீரமகேந்திரபுரி என்ற பட்டணத்தை எழுப்பி அங்கே வசித்து வந்தான். அங்கே செல்வது அவ்வளவு எளிதல்ல. ஆனால், உலகாள வந்த முருகனுக்கு இது சாதாரண விஷயம். அவர் அந்த நகரை அடைந்தார். சூரன் அவரைப் பார்த்து ஏளனம் செய்தான். ஏ சிறுவனே! நீயா என்னைக் கொல்ல வந்தாய். பச்சை பிள்ளையப்பா நீ! உன்னைப் பார்த்தாலே பரிதாபமாக இருக்கிறது. பாலகா! இங்கே நிற்காதே, ஓடி விடு, என்று பரிகாசம் செய்தான். முருகன் அசரவில்லை. தன் உருவத்தைப் பெரிதாக்கி அவரைப் பயமுறுத்தினான். அதன் மீது சக்தி வாய்ந்த ஏழு பாணங்களை எய்தார் முருகன். உடனே அவன் மகாசமுத்திரமாக உருமாறினான். மிகப்பெரிய அலைகளுடன் முருகனைப் பயமுறுத்திப் பார்த்தான். உடனே நூறு அக்னி அம்புகளை கடல் மீது ஏவினார் முருகன். கடல் பயந்து பின் வாங்கியது. இருப்பினும், முருகனைக் கொல்ல வேண்டும் என்ற எண்ணம் சூரனுக்கு வரவில்லை. காரணம், ஒரு சிறுவனைக் கொல்வது தன் வீரத்துக்கு இழுக்கு என்றும், அது பாவமென்றும் அவன் கருதினான். அந்தக் கல்லுக்குள்ளும் இருந்த ஈரத்தைக் கண்டு தான், கருணாமூர்த்தியான முருகனும் அவனைக் கொல்லாமல் ஆட்கொள்ள முடிவெடுத்தார். தன் விஸ்வரூபத்தை அவனுக்குக் காட்டினார். அதைப் பார்த்தவுடனேயே சூரனின் ஆணவம் மறைந்து ஞானம் பிறந்தது. முருகா! என் ஆணவம் மறைந்தது. தெய்வமான உன் கையால் மடிவதை நான் பாக்கியமாகக் கருதுகிறேன். உன்னை பயமுறுத்த கடலாய் மாறினேன். அந்தக் கடலின் வடிவாகவே நான் இங்கு தங்குகிறேன். உன்னை வணங்க வரும் பக்தர்கள் என்னில் நீராடியதுமே, ஆணவம் நீங்கி, உன் திருவடியே கதி என சரணமடையும் புத்தியைப் பெற வேண்டும், என்றான். முருகனும் அந்த வரத்தை அவனுக்கு அளித்தார். அதன் பிறகு, தன் ரூபத்தை சுருக்கி, சூரனுக்கு ஞாபகமறதியை உண்டாக்கினார். சூரனுக்கு ஆணவம் தலை தூக்கவே அவன் மாமரமாக மாறி அவரிடமிருந்து தப்ப முயன்றான்.

முருகப்பெருமான் தன் தாய் உமாதேவியிடம் ஆசிபெற்று வாங்கிய வேலாயுதத்தை மாமரத்தின் மீது விடுத்தார். (நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் தலத்தில்தான் முருகப் பெருமான் தன் தாயிடம் வேலைப் பெற்றார். சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சூரசம்ஹாரம் என்பர்.  சஷ்டியின் ஐந்தாம் நாள் விழாவன்று, வேல் வாங்கும் உற்சவ முருகனுக்கு முகமெங்கும் வியர்வைத் துளிகள் அரும்பும் அதிசயத்தை ஆண்டுதோறும் காணலாம்.)வேல் பட்டதும் மாமரம் இரண்டாகப் பிளந்தது. அதன் ஒருபாதியை மயிலாகவும், மறுபாதியை சேவலாகவும் மாற்றிய முருகன் தனது வாகனமாகவும், கொடிச்சின்னமாகவும் ஆக்கினார். சூரன் மாமரமான இடம் மாம்பாடு எனப்படுகிறது. இன்றும் இங்கு மாமரம் தழைப்பதில்லை. பகைவனுக்கும் அருளும்பரமகாருண்ய மூர்த்தி யான அவர், சூரனை வதம் செய்யாமல் அவனை ஆட்கொண்டார். இச்செயலால்வைதாரையும் வாழவைப்பவன் என்ற சிறப்புப் பெயர் பெற்றார். சூரசம்ஹாரம் முடிந்தபின் முருகன் சிவபூஜை செய்ய விரும்பினான். அதற்காகக் கடற்கரையில் கட்டப்பட்ட கோவில்தான் திருச் செந்தூர் கோவில். இங்கு மூல ஸ்தானத்தின் பின்பகுதியில் முருகன் பூஜை செய்த சிவலிங்கத்தைக் காணலாம். சூரசம்ஹாரத்தோடு விழா முடிவதில்லை. தேவர்களுக்கு முருகன் செய்த உதவிக்கு கைம் மாறாக, இந்திரன் தன் மகள் தெய்வானையை முருகனுக்கு மணம் முடித்து வைத்தான். எனவே மறுநாள் முருகன்- தெய்வானை திருமண வைபவத்தோடுதான் விழா நிறைவு பெறுகிறது.

கிருத்திகை என்றால் திருத்தணி. (இங்கு மட்டும் சூரசம்ஹார விழா நடைபெறாது). தைப்பூசம் என்றால் பழனி. கந்தசஷ்டி என்றால் திருச்செந்தூர். வேல் என்றால் கொல்லும் ஆயுதமல்ல. அது ஆணவத்தை அழித்து நற்கதி தரும் பரமானந்தமான வழிபாட்டுப் பொருள். அதனால் தான், வேல் வேல் வெற்றி வேல் என்று முழங்குகிறார்கள் பக்தர்கள். அந்த வேல் பிறவித்துன்பத்தை அழித்து, முருகனின் திருவடியில் நிரந்தரமாக வசிக்கும் முக்தி இன்பத்தைத் தரக்கூடியது. சூரசம்ஹாரம் கந்தனால் ஐப்பசி சஷ்டி திதியில் நிகழ்த்தப்பட்டதால் இது கந்தசஷ்டி ஆயிற்று. முருகப் பெருமான் அசுரர்களான சூரபத்மன் மற்றும் அவனது தம்பியரை அழிக்கப் போர் புரிந்த திருவிளையாடலையே நாம் கந்த சஷ்டி விழாவாகக் கொண்டாடி மகிழ்கிறோம். கந்தசஷ்டி திருநாளில் சக்திவேலுடன் கூடிய முருகப்பெருமானை வணங்கி நற்கதி பெறுவோம்.

முருகன் பற்றி அமெரிக்கர் செய்த ஆராய்ச்சி!


1966, டிச.21ல் சுதேசமித்திரனில் வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த இதழில், குளோதி என்ற அமெரிக்க இளைஞர் முருகனைப் பற்றிய ஆய்வில் ஈடுபட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.  அந்த செய்தியின் சாராம்சம் இது தான். ""அமெரிக்க பாதிரியாரின் மகனாக இந்தியாவில் 1936ல் பிறந்தவர் குளோதி. கொடைக்கானலில் படித்தவர். முருகன் வழிபாடு பற்றி ஆராய்ச்சி செய்வதற்காக தமிழகத்தில் ஒரு ஆண்டு தங்கியிருப்பார். அமெரிக்காவில் உள்ள இந்திய ஆராய்ச்சிக்கூட்டத்தைச் சேர்ந்த அறிஞர் குளோதி. இவர் தென்னிந்திய சமயவரலாறு பற்றிய ஆராய்ச்சிகளை முடித்த பிறகு சிகாகோ பல்கலைக்கழகத்தின் டாக்டர் பட்டத்திற்குரிய தேர்வு எழுத இருக்கிறார். இவருக்கு தமிழ் இலக்கியம் மீது ஆர்வம் ஏற்படக் காரணம் உண்டு. சிகாகோ பல்கலைக்கழக திராவிடவியல் வல்லுநர் டாக்டர் சுமில்சுவலபில், சமய ஆராய்ச்சி வல்லுநர் டாக்டர் எலியாடி, தமிழ்த்துறைத்தலைவர் டாக்டர் ஏ.கே.ராமானுஜம் ஆகியோர் குளோதியிடம் தமிழ் பாரம்பரியத்தை ஆய்வு செய்ய ஊக்கப்படுத்தினர். குளோதி இது பற்றிக் கூறும்போது,"" வரலாற்றின் உண்மைச் செய்திகளை எழுதி வைக்க வேண்டும் என்று நான் முருகவழிபாடு பற்றிய மரபுகளை ஆராயவில்லை. மனிதனுடைய சமயங்களில் காணப்படும் பல்வேறு கோட்பாடுகளில் சின்னங்களுக்குப் புதுவிளக்கம் கொடுப்பதில் மனித குலத்திற்கு துணையாக இருப்பதே எனது நோக்கமாகும். இந்து, கிறிஸ்தவ மதங்கள் இரண்டிலுமே மறைபொருளான சின்னங்கள் உள்ளன. உதாரணமாக கிறிஸ்தவர்களுக்கு ஆட்டுக்குட்டி, சிலுவை, புல்லுருவிச் செடி ஆகியவை குறிப்பிடத்தக்கவை. அதுபோல, முருகனின் வாகனங்களாக ஆடு, மயில், யானை ஆகியவை கூறப்பட்டுள்ளன, என்று குறிப்பிடுகிறார்.

வேலவனின் வெற்றிநகர்: தேவர்களைக் கொடுமைப்படுத்திய சூரபத்மனை முருகப்பெருமான் சம்ஹாரம் செய்த தலம் திருச்செந்தூர். முருகன் தன் படையுடன் வந்து தங்கியதால் ஏற்பட்ட பெயரே படைவீடு. மற்ற முருகன் தலங்களை படைவீடு என்று குறிப்பிட்டாலும் திருச்செந்தூருக்கே அது பொருந்தும். தேவதச்சனான விஸ்வகர்மா மூலம் படைவீடு அமைத்து தங்கிய முருகன், தேவகுருவாகிய வியாழபகவான் மூலம் அசுரர்களின் வரலாற்றை அறிந்து கொண்டதாக தலவரலாறு கூறுகிறது. திருச்செந்தூர் என்பதற்கு "புனிதமும் வளமும் பொருந்திய வெற்றிநகரம் என பொருள்.
செந்தூரில் தீர்த்தமாடும்முறை: திருச்செந்தூர் என்ற சொல்லை காதால் கேட்டாலே முக்தி தரும். தலம், தீர்த்தம், மூர்த்தி மூன்றும் அமையப்பெற்றது. எந்தச் செயலையும் முறையாகச் செய்தால் தான் அதன் பலனை அடைய முடியும். திருச்செந்தூரைப் பொறுத்த வரை தீர்த்தமாடும் முறையில் மிக கண்டிப்பான முறையை பின்பற்ற வேண்டும். பொதுவாக பக்தர்கள் கடலில் நீராடிய பிறகு நாழிக்கிணற்றில் நீராடுகிறார்கள். கடலில் தங்கள் மீது படிந்த உப்புநீரைக் கழுவ வேண்டும் என்பதற்காக இவ்வாறு செய்கிறார்கள். இது சரியான முறையல்ல. ஸ்கந்த புஷ்கரணி எனப்படும் நாழிக்கிணற்றில் கிணற்றில் நீராடிய பிறகே கடலில் நீராட வேண்டும். நாழிக்கிணறு சூரபத்மனின் உடலைக் கூறாக்கிய வேலுக்கு தோஷம் நீங்கும் பொருட்டு அதனை பூமியில் ஊன்றி வரவழைக்கப்பட்டது. முருகப்பெருமான் வேலை எய்து பாதாள கங்கையை வரவழைத்தார். அதுவே நாழிக்கிணறாக மாறியது. வேறு எந்த முருகன் தலத்திலும் இது போன்ற தீர்த்தம் கிடையாது. கடலில் நீராடிய பின் நாழிக்கிணற்றில் குளித்தால், செந்தூர் வந்த புண்ணியபலனை அடைய முடியாது.

அருள்புரிவாய் கருணைக்கடலே: கந்தசஷ்டி நன்னாளில் முருகனருளால் எல்லா நலமும் வளமும் பெருக இந்த அருளுரையை வாசியுங்கள்.
* ஆனைமுகக் கணபதியின் அன்புத் தம்பியே! ஞானபண்டிதனே! ஆறுமுகப்பெருமானே! மயில்வாகனனே! சிக்கல் சிங்கார வேலவனே! திருப்பரங்குன்றத்தில் உறையும் பரம்பொருளே! வள்ளிக்கு வாய்த்தவனே! தஞ்சம் என வந்தவரைத் தாங்கும் தயாபரனே! செந்தூரில் வீற்றிருக்கும் வெற்றி வேலனே! எப்போதும் என் உள்ளத்தாமரையில் வீற்றிருந்து அருள்புரிய வேண்டும்.
* ஆறுபடை வீடுகளில் ஆட்சி நடத்துபவனே! ஆதிசிவனின் அருமைப்பிள்ளையே! சரவணப்பொய்கையில் அவதரித்தவனே! காங்கேயனே! திருமாலின் மருமகனே! வேதமந்திரங்களின் உட்பொருளாகத் திகழ்பவனே! தெய்வானை மணவாளனே! தண்டாயுதபாணியே! சோலைமலை சுந்தரனே! குழந்தைக் கடவுளே! குன்றுதோறும் குடிகொண்டிருக்கும் குமரப்பெருமானே! உனது அருளால் எங்கள் மனதில் எப்போதும் மகிழ்ச்சி நிலைத்திருக்கட்டும்.

* பிறவிக்கடலைக் கடக்க வைக்கும் தோணியே! மலையேறி வருபவர்களை அவர்களது வாழ்விலும் உயரச் செய்பவனே! அசுரனுக்கும் பெருவாழ்வு தந்த இரக்க குணமுள்ள ஈசனே! தவஞானியர் உள்ளத்தில் குடிகொண்டிருக்கும் உத்தமனே! வேடராஜன் நம்பியின் மகளான வள்ளியின் அன்பனே! பன்னிருகரங்களால் வாரிவழங்கும் வள்ளலே! திருத்தணி வாழ் பெருமானே! உன்னை எப்போதும் சிந்திக்கும் பாக்கியத்தைத் தந்தருள்வாயாக.
* தந்தைக்கு பாடம் சொன்ன சுப்பையனே! சந்திரனைப் போல குளிர்ச்சி மிக்க ஆறுமுகங்களைக் கொண்டவனே! சரவணனே! சண்முகனே! வெற்றிவேலாயுதனே! சிவகுமாரனே! தேவசேனாபதியே! பக்தர்களின் துயர் தீர்ப்பவனே! தாரகாசுரனை வதம் செய்தவனே! பிள்ளைக் கனியமுதே! அருள்புரியும் கருணைக்கடலே! பழநிமலை பாலகனே! உன் திருவடிகளைச் சரணடைந்து விட்டேன். நீயே என்னை பிறவிக்கடலில் இருந்து மீட்டு உன் திருவடியில் சேர்க்க வேண்டும்.

* வீரம், அன்பு, அருள், ஞானம், இன்பம், கருணை ஆகிய ஆறுகுணங்களின் இருப்பிடமே! வைதாரையும் வாழவைக்கும் தெய்வமே! கேட்டதை அருளும் கற்பகத் தருவே! கற்றவர் போற்றும் கனியே! அன்பர் வேண்டும் வரம் தருபவனே! முத்தமிழ் நாயகனே! திருப்புகழ் போற்றும் திருமுருகனே! வலிமை மிக்க பன்னிருதோள்களைக் கொண்டவனே! சுவாமிமலை குருநாதனே! குடும்பத்தில் அனைவரும் நல்வாழ்வு பெறச் செய்வாயாக.
* சிவபார்வதி மைந்தனே! பரங்குன்றத்து பவித்ரமே ! சங்கரன் புதல்வா! கதிர்காமம் வாழும் கதிர்வேல் முருகா! கந்தா! கடம்பா! சூரபத்மனுக்கு வாழ்வளித்த வள்ளலே! வள்ளிமணாளனே! வெற்றிவேல் தாங்கி வருபவனே! வாழ்வில் குறுக்கிடும் தடைகளைப் போக்கி வெற்றியைத் தந்தருள்வாயாக.
*பார்போற்றும் தெய்வமே! நவவீரர்கள் போற்றும் நாயகனே! புண்ணிய மூர்த்தியே! குருவாய் வந்தருளும் குகப்பெருமானே! எட்டுக்குடி வேலவனே! விராலிமலைவாழ் விமலனே! குமரகுருபரர் பாடிய திருச்செந்தூர் கந்தா! உன் திருவடியில் அடைக்கலம் கொடு.

* பிரம்மனுக்கு பாடம் புகட்டியவனே! முத்தமிழ் வித்தகனே! தும்பிக்கையான் தம்பியே! அருணகிரியை ஆட்கொண்டவனே! குமரகுருவே! வயலூரில் வாழ்பவனே! கந்தகோட்டத்தில் உறைந்திருக்கும் கந்தசுவாமியே! குமரகோட்டத்து குருபரனே! உன்னருளால் மனநிம்மதியும், உடல் ஆரோக்கியமும் உண்டாகட்டும்.

* தாமரை மலர் போன்ற திருவடிகளைக் கொண்டவனே! வேதம் போற்றும் சிவசண்முகனே! குறிஞ்சிக்கடவுளே! ஆறு தலை அமலனே! செங்கல்வராயனே! அவ்வைக்கு நாவற்கனி கொடுத்தவனே! கலியுகவரதனே! முத்துக்குமார சுவாமியே! கண்கண்ட தெய்வமே! அலைகடல் ஓரத்தில் அருளாட்சி செய்யும் செந்திலாண்டவனே! எல்லோரும் இன்புற்றிருக்க உன் அருள்மழையை எப்போதும் பொழிவாயாக.

Wednesday, December 12, 2012

பலாப்பழம்

பலாப்பழத்தில் பல்வேறு நன்மைகள் உள்ளன. முக்கனிகளில் இரண்டாவதாய் கருதப்படும் பலாவின் சுவைக்கு ஈடு இணையில்லை. பலாப்பழத்தின் மேல் தோல் கரடுமுரடாக இருந்தாலும், அதன் உட்பகுதியில் இருக்கும் பழம் சுவையாகவும் கண்ணை கவரும் நிறத்திலும் காணப்படும். இந்த பலாப்பழம் ஊட்டச்சத்து மிக்கது மருத்துவ குணம் கொண்டது.  
நார்ச்சத்து அதிகமுள்ள பலாப்பழம் செரிமானத்துக்கு நல்லது. வைட்டமின் ஏ, பி, சி, கால்சியம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்த இப்பழம் முதுமையை தடுக்க வல்லது. கார்போஹைட்ரேட், பொட்டாசியம், கால்சியம் சத்து, புரதச்சத்து ஆகிய சத்துக்கள் உள்ள இந்த பலாப்பழம், புற்றுநோய் வராமல் தடுக்கும்.
பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இரத்த அழுத்தத்தை குறைத்து இதய நோய் வராமல் தடுகிறது. பலாப்பழத்தில் இரும்புச்சத்து இருப்பதால் அனிமியா வராமல் தடுப்பதோடு, உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. வயது முதிர்தலைத் தள்ளிப் போட, பலாப்பழம் உதவுகிறது. இது வயது ஆவதால் ஏற்படும் தோல் சுருக்கத்தைத் தடுக்கிறது. மலச்சிக்கலை நீக்க, பலாப்பழம் உதவுகிறது.
அல்சரை குணமாக்கும் தன்மை கொண்டது. ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். காய்ச்சலை குணமாக்கும்.  நோய் எதிர்ப்பு சக்தி உள்ளிட்ட ஏராளமான நன்மைகள் மற்றும் சுவை கொண்ட பலாப்பழத்தை நாமும் சாப்பிட்டு பயன்பெறுவோம். பலாப்பழம் மட்டுமல்லாமல் பலாப்பழத்தில் உள்ள விதையும் பல்வேறு நன்மைகள் கொண்டது.

Chandrashila - in the arms of Shiva


Chandrashila

The peak of Chandrashila, cloaked in fog on this autumn morning, looks out at a panorama of mountains. Chandrashila is 13,000 feet above sea level.Tungnath templeTungnath templeTungnath templeTungnath templeAkashkund at TungnathCurious OnlookersHimalayan Monal pheasant

Tungnath – the kingdom of Lord Shiva

Tungnath, at 12,073 above mean sea level, is the world's highest built temple dedicated to Shiva, discounting perhaps the Amarnath Cave shrine near Srinagar, Kashmir, which is situated at an altitude of 12,756 feet. Tungnath is second in importance among the five mountain shrines collectively known as the Panch Kedar. The temple opens for worship after winter snows melt in June and remains open until late October when snowfall cuts off access to the temple. At this time the deity is moved ceremoniously to the Ukhimath, thousands of feet below. Besides its majestic location against a backdrop of cliffs, peaks and snow-clad mountains, Tungnath is also popular with trekkers, who make it a point to witness the sunrise from Chandrashila, a nearby peak at 13,123 feet. To reach Tungnath from Delhi, drive or take an overnight train/ bus to Rishikesh (236 km) and drive/ take a bus to Ukhimath (170 km/ 6 hours). Halt overnight and catch the morning bus for Chopta (17 km/ 1 hour), a roadhead at 9,500 feet. Tungnath is a 4-km trek from here. The nearest airport is Jolly Grant, Dehradun (258 km)

Tungnath Temple Uttarakha …Tungnath TempleTungnath TempleUkhimathUkhimathUkhimath WaterfallThe road to GopeshwarShack in ChoptaBhotia dog in ChoptaThe trail to TungnathPathway on the mountainTemple bells, TungnathMain street, TungnathTungnath - Priest's chair

Ladakh - India's great mountain kingdom

Travel Ladakh IndiaTravel Ladakh IndiaTravel Ladakh IndiaTravel Ladakh IndiaTravel Ladakh IndiaTravel Ladakh IndiaTravel Ladakh IndiaTravel Ladakh IndiaTravel Ladakh IndiaTravel Ladakh IndiaTravel Ladakh IndiaTravel Ladakh IndiaTravel Ladakh IndiaTravel Ladakh IndiaTravel Ladakh IndiaTravel Ladakh IndiaTravel Ladakh India

Tuesday, November 27, 2012

பிராண பிரதிஷ்டை



                             பீடம் அமைத்து கும்பம் வைத்து செய்யப்படும் எந்த பூஜை முறைக்கும் பிராண பிரதிஸ்டை செய்வது மிக மிக அவசியமாகும். இதனை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

பிராண பிரதிஷ்டை மந்திரம்

ஓம் அஸ்யஸ்ரீ ப்ராண பிரதிஷ்ட மந்த்ரஸ்ய ப்ரஹ்ம விஷ்ணு மகேஸ்வர ரிஷி ருக் யஜூர் சாம அதர்வண மந்த்ரம் ஸ்ரீ சகல சக்தி ஹ்ரீ சைதன்ய ரூபிணி பிராண சக்தி தேவதா ஆம்பீஜம்; ஹ்ரீம்சக்தி க்ரோம்கீலகம் ஸ்வாஹா சக்தி ஹம்பீஜம்ச சக்தி அஸ்யபிராண பிரதிஷ்டாகரணே ஜெபே விநியோகஹ

நியாசம்:-

(உடலில் உள்ள அவயவங்களை அவற்றிற்குரிய மந்திரங்களைச் சொல்லி அவற்றை சுத்தம் செய்து அந்த மந்திரத்தைக் கொண்டே காப்புச் செய்து கொள்வதே நியாசம் ஆகும். தூய்மையான தண்ணீரினால் அந்தந்த உறுப்புக்களை தொட்டு நனைக்க வேண்டும்.)

“ஓம் ஆம் ஹ்ரீம் ஹ்ரோம் அம் கம் கம், கம் கம் கம்ஙம் பிருதிவீயப்தஜோ வாய்வாஹாஸாத்மனே அங்குஸ் டாப்யாம் நம”
(கட்டை விரலைத் தொடவும்)

“அம் ஆம் ஹ்ரீம் இம் சம்சம் ச்சம் ஜம் ஜ்ஜம் ஞம் சப்தஸ்பரிச ரஸகந்தாத்மனே ஈம் தர்ஜனிப்யாம் நம”
(ஆள்காட்டி விரலைத் தொடவும்)

“ஆம் ஹ்ரீம் ஹ்ரோம் உம் டம்டம் டம்டம் டம்ஜிம் த்வக்சஷ ஸ்ரோத்ரா ஜிக்வ பிராணாத்மனே ஊம் மத்யமாப்யாம் நம”
(நடுவிரலைத் தொடவும்)

“ஓம் ஆம் ஹ்ரீம் ஹ்ரோம் ஏம் தம்தம் தம்தம் தம்நம் வாக் பாணீ பாதபாயுர் உபஸ்தாத்மனே ஜம் அனாமிகாப்யாம் நம”
(மோதிர விரலைத் தொடவும்)

“ஓம் ஆம் ஹ்ரீம் ஹ்ரோம் ஒளம் பம்பம் பம்பம் பம்பம் வசபாதன கமன விசர்க்க நந்தாத்மனே அம் கனுஷ்டிகாப்யாம் நம”
(சுண்டு விரலைத் தொடவும்)

“ஆம் ஹ்ரீம் ஹ்ரோம் அம்யம் நம் லம் வம் ஸம் சம் ஹம் ஹம் ஷம் மனோ புத்தி அகங்கார சித்தாத்மனே அம் கரதல கரப்ப்ருஷ்டாப்யாம் நம”
(புறங்கை முழுவதம் தடவவும்)

“ஓம் ஆம் ஹ்ரீம் ஹ்ரோம் அம்கம் கம்கம் கம்நம் ப்ரதிவியாச தேஜோ வாய் வாஹாஸாத்மனே ஹ்ருதயாய நம”
(இருதயப் பகுதியை தொடவும்)

“அம் ஆம் ஹ்ரீம் ஹ்ரோம் இம்சம் ச்சம் ஜ்ஜம் ஞம் ச்ரத ஸ்பரிச ரூபரஸ கந்தாத்மனே இம் சஜரசே ஸ்வாஹா”
(தலையைத் தொடவும்)

“ஆம் ஹ்ரீம் ஹ்ரோம் உம்டம் டம்டம் டம்டம் த்வக் சஷரோத்ரா ஜிக்வ பிராணத்மனே ஊம் சிகாயை வஷட்”
(கூந்தலைத் தொடவும்)

“ஓம் ஹ்ரீம் ஹ்ரோம் ஏம் கம்தம் தம்தம் வாக்பாணீ பாதபாயூர் உபசஸ்தாத்மனே ஐம் கவசாய ஹ_ம்”
(பிறப்புறுப்புப் பகுதியைத் தொடவும்)

“ஓம் ஆம் ஹ்ரீம் ஹ்ரோம் ஒளம் பம்பம் பம்பம் வசபாதன கமன விசர்க்க நந்தாத்மனே அம் நேந்திராய வஷட்”
(கண்களைத் தொடவும்)

“ ஆம் ஹ்ரீம் ஹ்ரோம் அம் யம் ரம் லம் வம் ஸம் சம் ஷப்ழம் ஷம் மனோ புத்தி அகங்கார சித்தாத்மனே அம் அஸ்திராய பட் பூர் புவஸ்வரோம் இதி திக்பந்த”
(எட்டு திக்கிற்கும் நீர் தெளித்து பந்தனம் செய்து கொள்ளவும்)

தியானம் :-

ரக்தாம் போதிஸ் ஸ்தபோதெல்லா சத்ருணா சரோஜாதீருடா ஹ்ராம்சை பாசம் கோதண்டம் மிச்சுத்வயமன குணம்ம்ப் அங்குசம் பஞ்சபாணம் பீப்ராணாம் ஸ்ருக்கவாள த்ரிநயன வசித பீண தேவி பாலார்க்க வருணா பவது சுகரீ ப்ராணசக்தி ப்ராணா வட்ரோரு கட்யா

மூலமந்திரம் :-

ஓம் ஆம் ஹ்ரீம் ஹ்ரோம் பாசாங்குச புடாசக்தி சாந்தச சபித்து
ஹெளம் ஹம் ஸஹ யம் ரம் லம் சம் ஷம் ஸம் ஹம் ஸஹ
ஹெளம் ஸஹஸோகம் ஸோகம் ஹம் ஸஹ
அஸ்யபிராண மமபிரண மமஜீவ வாக்மன சட்சு ஸ்ரோத்ர ஜிக்வ
பிராண அபான உதான சமான வியான மானஸ்
சக கஸ்ய முகம் சிரம் திஷ்டது ஸ்வாஹா



பூசை செய்யும்முறை :-
தூய்மையான நன்னீரீல் நீராடித் தூய்மையான ஆடையணிந்து, பத்மாசனத்தில் அல்லது சுகாசனத்தில் அமர்ந்து 1008 உரு ஜெபிக்க மந்திரம் சித்தியாகும். ஒரு தூய்மையான அறையில் மெழுகி கோலமிட்டு, கும்பம் வைக்க வேண்டும். பால், பழம், பாயாசம் ஆகியவற்றை நிவேதனமாக வைத்து, தாம்பூல தட்சணைகள் வைத்து, தேங்காய் உடைத்து தூப தீப ஆராதனை செய்து 1008 முறை மூலமந்திரத்தினை ஜெபிக்க சித்தியாகும். தூப தீப ஆராதனை செய்து பூசையினை நிறைவு செய்யவும்.
இந்த மந்திரம் சித்தியான பின்பு பீடம் அமைத்து, கும்பம் வைத்த செய்யும் எந்த பூசைக்கும் பிராணபிரதிஸ்டை மந்திரத்தை 108 முறை ஜெபித்து கலசம், யந்திரம், பூசையில் அமர்த்தியுள்ள தேவதையின் படம் அல்லது விக்கிரகம் ஆகியவற்றின் மீது அட்சதை (முனைமுறியாத பச்சரிசியினை மஞ்சளோடு கலந்து பிசைந்தது) எடுத்து போட்டால் மேற் சொன்னவற்றிற்கு உயிர்ப்பு(பிராணணன்) சக்தி உண்டாகும்.

பீடபூசை :-
ஓம் குருப்யோம் நம : கங் கணபதியே நம : தூம் துர்க்காயை நம : ஷம் ஷேத்திர பாலாய நம : ஆதார சக்தியே நம : மூலப்பிரகிருதியே நம : ஆதி கூர்மாயை நம : அனந்தாய நம : பிருத்வியை நம : ஸ்வேத ஷத்ராயை நம : சிதஸ்சாஸ்போம் நம : தர்மாயை நம : ஞானானாய நம : ஐஸ்வர்யாயை நம : வைராக்கியாய நம : ஓம் நமோ பகவதே சகல சக்தி யுக்தாய அனந்தாய மஹா யோக பீடாத்மனே நம

யந்திர பூசை செய்பவர்கள் யந்திரம் ஸ்தாபிக்கும் பீடத்திற்கும். விக்கிர ஆராதனை செய்பவர்கள் விக்கிரகத்தினை வைக்கும் பீடத்திற்கும் மேற்படி மந்திரத்தினைச் சொல்லி மலர்பளால் அர்ச்சனை செய்து தூப தீப ஆராதனை செய்யவேண்டும்.

கலச பூசை :-
ஒரு தலைவாழையிலையினைப் பரப்பி அதில் அரைப்படி பச்சரிசி அல்லது நெல்லினை பரப்பி நடுவில் ஓம் என்று எழுத வேண்டும். கும்பம் வைக்கும் செம்பிற்கு செம்பிற்கு விபூதி, சந்தனம், குங்குமம் இட்டு மேற்படி வாழையிலையில் வைத்து கையால் மூடிக் கொண்டு கீழ்கண்ட மந்திரத்தை ஜெபிக்க வேண்டும்.

“கலசஸ்ய முகே விஷ்ணு கண்டே ருத்ர ஸ்மாச்ரித மூலேதத்ர ஸ்திதோ ப்ரஹ்மாத்மயே மாத்ருகணாஸ்ம் (அ)ருதாகு ஷெளது ஸாகரா ஸர்வே ஸப்தந்வீபா வஸ_ந்தரா ருக்வேதநாத யஜூர்வேத ஸாமவேதோம் யதர்வண அங்கைஸ்ய ஸஹ்தாஸ் ஸர்வே கலசாம்பு ஸமாச்ரிதா ஆயாந்த வேத பூஜார்த்தம் துரிதஷயகாரசா கங்கேசா யமுனே சைவ கோதாவரி சரஸ்வதி நர்மதே சிந்து காவேரி தீர்த்தே சந்நிதம் குரு”

பின்னர் கலச தீர்த்தத்தினால் பூசைப் பொருட்கள் மீதும் பூசைக்குரிய தேவதை மீதும், தன் மீதும் தெளித்துக் கொள்ள வேண்டும். அதற்கு பிறகு மாவிலை வைத்து, மஞ்சள் தடவி விபூதி, சந்தனம், குங்குமம் வைத்த தேங்காயினை வைக்க வேண்டும். கும்பத்திற்கு மாலையணிவித்து பிராண பிரதிஷ்டை மந்திரம் சொல்லி அட்சதை தூவ வேண்டும்.

விநாயகர் யந்திரம்



கிழக்குத் திசை நோக்கி தலைவாயில் கொண்ட இல்லத்தில், வடக்கில் மட்டும் மற்றொரு வாயில்
அமைத்துக் கொண்டால் அந்த இல்லம் அமைதியைத் தராது. வீட்டு மூலைகளில் கழிவறை இருப்பதும் கூடாது. கிழக்கு நோக்கிய வீட்டில் ஏற்படும் பஞ்சபூத தாக்கங்களிலிருந்து காப்பாற்ற உதவும் இந்த விநாயகர் எண் யந்திரம், 25 எண்கணித கோணங்களில் நல்வழிப்படுத்தித் தரும். வளர்பிறையில் வைத்துக் கொண்டால் தொய்வின்றி நன்மைகள் அதிகரிக்கும்.


குபேர வசிய யந்திரம் (வடக்கு)

இல்லத்தில் வசிப்பவர்கள் தீராத கடனாலும் ஏழ்மை யினாலும் துன்புறாமல் பாதுகாக்கும் பஞ்ச வண்ண யந்திரம் இது. வடக்குத் திசையில் தலைவாயில் உள்ள இல்லத்தில் ஏற்படக்கூடிய வாஸ்து தோஷங் களை அறவே அகற்றிவிடும். மடம், சத்திரங் கள், பாழாகிவிட்ட மனைகள் போன்றவற்றை விலை கொடுத்து வாங்கி வீடு, கடை கட்டியவர்களிடம் இருக்க வேண்டிய வசிய யந்திரம். யாவருக்கும் செல்வச் செழிப்பை ஏற்படுத்தித் தர பாடுபடும்.

பத்ரகாளி யந்திரம் (மேற்கு)

வாஸ்துரீதியாக மேற்கு சனியின் பார்வைக்கு உட்பட்ட திசை. பிறரை வசப்படுத்திக் கொள்ளுதல், செல்வ வளர்ச்சி, அறிவாற்றல் இவைசார்ந்த நன்மைகளை அதிகரிக்கச் செய்யும் யந்திரம் இது. கோவில் அருகில் இருப்பதால் விளையக்கூடிய தோஷங்கள், முக்கோண வடிவமுள்ள மனையில்  ஏற்படும் கெடுதல்கள், முக்கோண வடிவத்தில் வீடு கட்டியிருந்தால் உருவாகும் பின்னடைவுகள் போன்றவற்றிலிருந்து காப்பாற்றும் சக்திவாய்ந்த யந்திரம்.


கணபதி யந்திரம் (தெற்கு)

தென்மேற்கு, மேற்குத் திசையில் பள்ளமாக இருத்தல், இல்லத்தில் அறைகள் முறையாக அமையாமல் திருஷ்டியால் ஏற்படும் தோஷம், கிருக கர்ப்பத்தில் (மையத்தில்) சுவர் முதலியன இருப்பதால் ஏற்படும் தோஷம், வடக்கு உயர்ந்து தெற்கு தாழ்ந்ததால் உருவாகும் வாஸ்து தோஷம் இவற்றிலிருந்து தப்பிக்க வைக்கும் பஞ்சவண்ண யந்திரம் இது. வடக்கு சுவரில் தெற்கு நோக்கி இருத்தல் சிறப்பு.

ஷீரடி சாயி பாபா சக்தி யந்திரம்

"என்னை நினைவுகூர்ந்து, எனது அற்புத சக்தியினை உணரும் பக்தர்களுக்கு நான் பக்கத் துணையாக இருந்து, இன்பத்தை அள்ளித்தர அயராது துணை நிற்பேன். சாயி, சாயி, சாயி என உச்சரித்தால் பாவங்கள் தொலைந்துவிடும்.'

-சாயிபாபா

எண் 6-ன் ஆதிக்கம் பெற்ற- சுக்கிரனின் பலம்வாய்ந்த யந்திரம் இது. சித்திரை, மாசி, மார்கழி மாதங்களில் கோரிக்கைகளை வைத்தால் ஆறே மாதங்களில் வேகமான பலன் கிடைக்கப் பெறும். முயலுங்கள்; பாபா அருள்புரிவார்!

பிரத்தியங்கிரா வழிபாடு




பிரத்தியங்கிரா வழிபாடு
பிரத்தியங்கிரா யந்திரம்
நரசிம்மருக்கும் சரபருக்குமிடையே உக்கிரமாக சண்டை ஏற்பட்டபோது கண்ட பேருண்டம் என்ற பக்ஷியின் உருவில் நரசிம்மம் யுத்தம் செய்தார். கண்ட பேருண்டம் சரபப் பக்ஷிக்கு வைரியாகும். சரபருக்கு கோபத்தில் அவர் நெற்றிக்கண்ணிலிருந்து உக்கிரப் பிரத்தியங்கிரா என்ற பத்திரகாளி உதித்தாள். இவள் கண்ட பேருண்டத்தின் சக்தியை விழுங்கி விட்டாள். சரபேஸ்வரரின் சக்திகளாக விளங்குபவர்கள் பிரத்தியங்கிராவும், சூலினியும். இவர்கள் இருவரும் சரபரின் மனைவிகள். இருவரும் சரபருக்கு இரு இறக்கைகளாக விளங்குகின்றனர். பிரத்தியங்கிரா என்பது பத்ரகாளியே தான். சரப மூர்த்தி நரஸிம்மத்தை அடக்க உதவ வந்த சக்தி இவளே. பயங்கரமானத் தோற்றத்தின் காரணமாக உக்ரா என்று அழைக்கப்படுகிறாள்.
பிரத்தியங்கிராவுக்கு ஆயிரம் முகங்கள். இம்முகம் எல்லாம் சிங்க முகம் போலவே இருக்கும். இரண்டாயிரம் கைகள், பெரிய சரீரம், கரிய நிறம், நீல ஆடை, சூலம், கபாலம், பாசம், டமருகம் முதலிய ஆயுதங்களைக் கொண்டிருப்பவள். சந்திர கலை, கரிய நிறம், நீல ஆடை இப்படி தியானித்து உபாசித்தால் நாட்டுக்கோ, மக்களுக்கோ சத்ரு பயம் ஏற்படாது. தக்ஷ யக்ஞத்தை அழிக்க சிவபெருமான் அனுப்பிய வீரபத்திரருக்கு துணையாக இருந்து உதவியவள் பிரத்தியங்கிரா தான். இவளை உபாசித்து இவள் அருளைப் பெற்றுவிட்டால் அந்த ராம லக்ஷ்மணர்கள் கூட தன்னை வெல்ல முடியாது என்பதை உணர்ந்த இந்திரஜித் நிகும்பலை என்ற இடத்தில் மிக ரகசியமாக யாகம் செய்தான். தன்னை உபாசிப்பவன் நல்லவனா கெட்டவனா என்பதை கவனிக்கக் கூடியவள் அல்ல இவள். பிரத்தியங்கிராவின் அருள் இந்திரஜித்திற்கு கிடைத்து விட்டால் அவனை யாரும் வெல்ல முடியாது என்பதை ஜாம்பவான் மூலம் அறிந்த ஆஞ்சநேயர் அந்த யாகத்தை முதலில் அழித்து விட்டு மறு வேலை பார்த்தார்.
பிரத்தியங்கிரா தேவி பயத்தை போக்குபவள். எந்தக் காரணத்தினால் பயம் ஏற்பட்டாலும் இவள் நாமாவைச் சொன்னாலே நிவாரணம் கிடைத்து விடும். பிரம்மானந்தத்தை அடைந்தவனுக்கு ஒரு விதமான பயமுமில்லை என்பது ச்ருதி வாக்கியம். ஆனந்தம் ப்ரும்ஹனோ வித்வான் ந பிபேதி குதச்சன ஸம்ஸாரமே பயங்கரமானது. இதிலிருந்து அம்பிகை விடுவிக்கிறாள்.
பீதம்மாம் நிதராம் அனன்ய சரணம் ரக்ஷ அனுகம்பாநிதே
ப்ரஸீத பரதேவதே மம ஹ்ருதி ப்ரபூதம் பயம் விதாரய
- தேவி மஹிம்ன ஸ்தோத்திரம்
ஆயிரம் தலை தத்துவம்
ஆயிரம் தலை, 2000 கைகள் என்றால் அவள் விச்வரூபி என்றே கொள்ள வேண்டும். விஸ்வமென்ற சமஸ்த ஜகத்திலும் பரவி இருப்பவள் என்று பொருள்.
யதாஹி கதலீ நாமத்வக் பத்ரான்யா ந த்ருச்யதே
ஏவம் விஸ்வஸ்ய நான்யத்வம் த்வத்ஸ்தா ஈஸ்வர த்ருச்யதே
- விஷ்ணு புராணம்
முன்பு இல்லை (ப்ராக பாவம்) இனி இருக்கப் போவதில்லை (த்வம்ஸாபாவம்) என்று பல பாவங்கள் இருக்கின்றன. இவைகள் எல்லாம் அம்பிகைக்கு இல்லை. இதை பின் கண்ட வாக்கியங்கள் விளக்குகின்றன.
ஸ பூர்வேஷாமபி குரு : காலேநா நவசச் சேதாத்
- யோக ஸூத்திரம்
புமான் ஆகரசவத் வ்யாபீ ஸ்வாதிர்க்தம் ம்ருஷாயத:
தேசத: காலதச் சாபி ஹ்யநந்தோ வஸ்துத: ஸ்ம்ருத :
- ஸெளர ஸம்ஹிதை
கோபம் என்பது அற்ப குணம்தான். ஆனால் வீரபத்திரரின் கோபம் தர்மாவேசம்தான். சிஷ்ட பரிபாலன துஷ்ட நிக்ரஹ வெறி தான். இதற்குப் பக்கத் துணையாக இருந்தவள் பிரத்தியங்கிரா. அம்பிகைக்கு க்ரோத சமனீ அதாவது கோபத்தை நாசம் செய்பவள் என்று பெயர். கோபமுடையவர் செய்யும் தானம். யக்ஞம், தபஸ் உபாசனை எல்லாம் பச்சை மண்ணாலாகிய குடத்தில் எடுத்த ஜலம்போல போய் விடுகிறது என்கிறது ஆபஸ்தம்ப ஸூத்திரம். தாருகனை அழித்தவளும் பத்ரகாளியான பிரத்தியங்கிராவே. தாருகனை அழிக்க சிவபெருமான் சிருஷ்டித்த இவளுக்கு காலகண்டி என்று பெயர் என்கிறது லிங்க புராணம்.
ஸ ஸர்ஜ காளீம் காமாரி : கால கண்டீம் காபர்தினீம்
பிரத்தியங்கிராவை உபாசித்தால் சத்ரு பயம் நாட்டுக்கோ நாட்டு மக்களுக்கோ ஏற்படாது.
க்ருஷ்ண வர்ணி ப்ருஹத்ரூபி பிருஹத்கண்டி மஹத்பயி
தேவி தேவி மஹாதேவி மம சத்ரூன் வினாசய
என்று சொல்லப்பட்டிருக்கிறது.
பைரவ மஹிஷி
சரபர், பைரவர் எல்லோருமே சிவ அம்சம். பிரத்தியங்கிரா பைரவரின் மஹிஷி. லோகத்திற்கு மரணம் (சிருஷ்டி) ரமணம் (ஸ்திதி) வமனம் (சம்ஹாரம்) செய்வதால் பரமசிவனுக்கு பைரவர் என்று பெயர். ஸ்ரீ புரத்தில் 22, 23 -வது பிராகாரங்களுக்கு நடுவில் மார்த்தாண்ட பைரவர் வசிப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது.
பைரவ மூர்த்தி
சிவலீலைகளில் ஒன்று அந்தகன் என்ற அசுரனை பைரவ மூர்த்தியாக சிவபெருமான் வதம் செய்தது. சிவபெருமான் பைரவரை அழைத்து அந்தகனுக்கு அந்திய காலத்தைக் கொடுக்கும் ரகசியத்தைச் சொல்லி அனுப்பினார். பைரவர் அந்தகனை சம்ஹரித்துத் திரும்பி வருகிறார். இதற்கு உதவியாக இருந்தவள் பிரத்தியங்கிரா. பைரவ பத்னியாதலால் பைரவி என்ற பெயரும் உண்டு.
மங்கள ரூபிணி
ஒன்றை விரும்பி ஒன்றை வெறுப்பது என்ற எண்ணம் இருந்தால் ஆனந்தத்தை அனுபவிக்க முடியாது. எல்லாவற்றிலும் சரி, சமத்துவ மனோபாவம் ஏற்பட்டால்தான் ஞானத்தை அடைய முடியும். காளியை தாமஸீ என்கிறது தேவி மகாத்மியம். மோக்ஷம் என்பது இவளது கிருபையாலேதான் கிடைக்கிறது. மோக்ஷம் அடைவது என்றால் ஏதோ இறந்த பின்பு கிடைப்பது என்பதில்லை. இவள் அருள் இருந்தால் உயிருள்ள போதே மோக்ஷ நிலை கிடைக்கும். இதற்கு உன்மனீ நிலை என்பர். பிரத்தியங்கிராவின் தயவு இருந்தால் இத்தகைய உன்மனீ பாவம் எளிதில் ஏற்படும்.
ஞான ரூபிணி
இவள் ஞானத்தை தருபவளாதலால் வித்யை ரூபமாகவும், அவித்யை ரூபமாகவும் இருக்கிறாள். வித்யை, ஸ்வாத்மா ரூபமான ஞானம். அவித்யை (ஞானம் ஏற்படுவதற்கு முன்புள்ள நிலை). கடைசி விருத்தியின் ரூபமான ஞானம். இவ்விரண்டு ஸ்வரூபங்களாகவும் அம்பிகை இருக்கிறாள். இவ்விரண்டையும் உடையவன் அவித்யையினால் ம்ருத்யுவை ஜயித்து வித்யையினால் அமிர்தத்துவத்தை அடையச் செய்கிறான்.
வித்யாம் சாவித்யாம் ச யஸ்தத் வேதோபயம்  ஸஹ
அவித்யாய ம்ருத்யும் தீர்த்வா வித்யயாம்ருதமசநுதே - ச்ருதி
இந்த இரண்டு ரூபங்களில் வித்யா ரூபத்தால் ஜீவன் விடுவிக்கப்படுகிறதென்றும், அவித்யா ரூபத்தால் கட்டப்படுகிறதென்றும் சொல்லப்படுகிறது.
வித்யா வித்யேதி தேவ்யா த்வே ரூபே ஜானிஹீ பார்த்திவ
ஏகயா முச்யதே ஜந்து : அந்யயா பத்யதே புந : -தேவி பாகவதம்
வ்யக்தா  அவ்யக்தம்
முதல் முதலில் ஏற்படும் மஹத் தத்துவம் வ்யக்தம் எனப்படும். எல்லாவற்றையும் விட பெரியதாகையால் மஹத். இது வ்யக்தம், அவ்யக்தம் என்று பிரிந்தது. பூதங்களால் ஏற்படும் விகாரங்களோடு கூடியது வ்யக்தவான ரூபம். இவ்விதமான விகாரங்களுக்கு உட்படாதது அவ்யக்தமான ரூபம், இந்த இரண்டு விதமும் அம்பிகைக்கு உண்டு. தத்துவங்களில் மஹத் முதலிய 23 தத்துவங்கள் வ்யக்தம் என்றும், அவ்யக்தமென்றால் பராப்ரக்ருதி என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.
பிரத்தியங்கிரா விதானம்
அஸ்ய ஸ்ரீ அதர்வண பத்ர காளீ மகா மந்திரஸ்ய பிரயங்கிரா ரிஷய : அதர்வண பத்ரகாளீ தேவதா
க்ஷம் பீஜம் ஹும் சக்தி : பட் கீலகம்
மம ஸர்வ துரித நிவிர்த்யர்த்தே ஜபே விநியோக:
ஓம் க்ஷம் பக்ஷ ஜ்வால ஜிஹ்வே கராள தம்ஷ்ட்ரே ப்ரத்யகரே க்ஷம் ஹ்ரீம் ஹும் பட்.
- அங்கன்யாஸம், கரன்யாஸம்
தியானம்
ஸிம்ஹீம் ஸிம்ஹ முகீம் பகவத: ஸ்ரீ பைரவஸ் யோல்லஸ சூல ஸ்தூல கபால பாச டமரு வ்யக்ரோக்ர ஹஸ்தாம் புஜாம்
தம்ஷ்ட்ராகோடி விசங்கடாஸ்ய குஹராமாக்த நேத்ரத்ரயீம் பாலேந்து த்யுதி மௌக்திகாம் பகவதீம் ப்ரத்யங்கராம் பாவயே லம் இத்யாதி பஞ்சபூஜா.
மூல மந்திரம்
ஓம் க்ஷம் பக்ஷ ஜ்வாலா ஜிஹ்வே கராள தம்ஷ்ட்ரே ப்ரத்யங்கரே க்ஷம் ஹ்ரீம் ஹும் பட்
தேவியின் இம்மூலமந்திரத்தை தினமும் பய பக்தியுடன் ஜெயிப்பவர்கள் நோய் நொடியற்று, சத்ரு அழிந்து, பேய் பில்லி சூன்யம் பறந்தோட, பயம் நீங்கி, பாதுகாப்பான வாழ்வில் எல்லா ஆனந்தத்தை யும் அடைந்து ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவியின் அருள்பெற்று, நீண்ட ஆயுளுடன் இம்மண்ணுலகில் நிலைபெற்று வாழ்வார்கள்.
பிரணவத்தில் இருந்து விரிவடைந்திருக்கும் இந்தத் தேவியின் மூலமந்திரம் காயத்ரீ மஹா மந்திரம் சொல்லுவதுபோல் ஐந்து இடைவெளி விட்டுச் சொல்ல வேண்டும்.
ஓம் - என்ற பிரணவத்தை தீர்க்க ஸ்வரத்திலும் அடுத்த க்ஷம் என்பதை ஸ்வரித அதாவது குறுகிய ஸ்வரத்திலும் ஓம் -க்ஷம் என்று ஒரு இடைவெளியிலும்
பக்ஷஜ்வாலா ஜிஹ்வே என்று இரண்டாவது இடைவெளியும் -
கராளதம்ஷ்ட்ரே என்று மூன்றாவது இடைவெளியும் -
ப்ரத் யங்கரே என்று நான்காவது இடைவெளியும் - க்ஷம் - ஹ்ரீம் ஹும்பட் ஸ்வாஹா என்று ஐந்தாவது இடைவெளியும் வைத்து ஒவ்வொரு இடைவெளிக்கும் இடைப்பட்ட காலம் மூன்று மாத்திரை நேரம் எனக் கொள்ளலாம். மூன்று மாத்திரை என்பது மூன்று செகண்டுகள் என்று கொள்ளலாம்.
கருணை உள்ளம் கொண்ட இத்தேவியின் மூல மந்திர அக்ஷரத்தின் பிரணவ கலைகளைக் கூர்ந்து நோக்கின், இதில் சம்ஹாரத்தைக் குறிக்கும் கலைக்கு இடமே இல்லை என்று கூறலாம். 1. ஜ்ஜம் என்ற சித்தி கலையும், 2. ஜம் என்ற சித்திகலையும், 3. கம் என்ற சிருஷ்டி கலையும், 4. த்தம் என்ற வரத கலையும் தான் உள்ளது. இந்தக் கலைகள் அக்னி சூரியக் கலைகளில் அடங்கி ஒளி வீசுகின்றபடியால் ஜ்வாலா என்ற பெயரை அடைகின்ற தேவி சித்தி, சிருஷ்டியை வரமாக அளிக்கும் வரதா எனப் பெயர் பெற்று, ஒளி வீசி, பக்த கோடிகளுக்கு உபாசகர்களுக்கு ஸகல சம்பத்துகளையும் அளிக்கின்ற பிரத காளி என்ற திருப்பெயரையும் பெற்று பிரத்தியங்கிரா தேவியாக என்றும் போற்றித் துதிக்கப்படுகிறாள். தனித்து ஏகாந்தமாக புன்னாக மரங்கள் சூழ்ந்த ஸ்தலத்தில் சர்வமங்களம் பொருந்திய காரிண்யை யாக ஒளிவீசுகின்ற மகா சக்தியான இந்தத் தேவியை போற்றித்துதித்து புகழும் ,பொருளும் சர்வசம்பத்தும் பெறுவோமாக.
அதர்வ ருக் மந்திரம்
ஓம் க்ருஷ்ணவர்ணீ ப்ருஹத்ரூபி, பிருஹத் கண்டீ மஹத்பயீ
தேவி தேவி மஹா தேவி மம சந்ரூன் விநாசய மம:
சத்ரூன் விநாசயோன் நம:
மூல மந்திரம்
கட் பட் ஜஹி மஹா க்ருத்யே விதூ மாக்நி ஸமப்ரபே தேவி தேவி மஹா தேவி மம சத்ரூன் விநாசய, மம சத்ரூன் விநாசயோம் நம:
ஓம் உச்சிஷ்ட புருஷி கும்ஸ்வபிஷி பயமே ஸமுபர்ச்சிதம் யதி சக்யம் சக்யம் வா தன்மே பகவதி சமய ஸ்வாஹா
பிரத்தியங்கிரா யந்த்ரம்
பிந்து, திரிகோண அஷ்ட கோண விருத்த அஷ்டதள, விருத்தத்ரர பூபுரம்.
பிந்து :- ஆதார சக்தி கமலாஸனாய நம: ஸ்ரீ பைரவ ஸஹித ஸ்ரீ ப்ரத்யங்கிரா தேவ்யை நம:
ஆவரண பூஜை
பூபுரம் :- ருத்ராய நம: அக்னி, யம, நிருதி, வருண வாயு, குபேர, ஈசனாய நம: வஜ்ராய நம: சக்தி, தண்ட கட்க, பாச, அங்குச கதா திரிசூலாய நம:
விருத்தத்ரயே
திவ்யௌக குரவே நம: ஸித்தௌக குரவே நம: மானவெளக குரவே நம: கௌலானந்த நாத பரமகுருவே நம: பரமா சார்ய குரவே நம: பரமேஷ்டி குரவே நம: ஸ்வ குரவே நம:
அஷ்டதளம் மூலே
ஓம் அஸிதாங்க பைரவாய நம
ஓம் ருரு பைரவாய நம
ஓம் சண்ட பைரவாய நம
ஓம் க்ரோதந பைரவாய நம 
ஓம் உன்மத்த பைரவாய நம
ஓம் கபால பைரவாய நம
ஓம் பீஷண பைரவாய நம
ஓம் ஸம்ஹார பைரவாய நம
அஷ்டதளாக்ரே
ஓம் பிராம்யை நம
ஓம் மாகேஸ்வரியை நம
ஓம் கௌமார்யை நம
ஓம் வைஷ்ணவ்யை நம
ஓம் வராஹ்யை நம
ஓம் இந்திராண்யை நம
ஓம் நாரஸிம்ஹ்யை நம
ஓம் சாமுண்டாயை நம
அஷ்டதள கிரந்தி ஸ்தானேஷு
ஓம் காமரூப பீடாய நம
ஓம் மலயகிரி பீடாய நம
ஓம் கொல்லகிரி பீடாய நம
ஓம் காலாந்தக பீடாய நம
ஓம் ஸெளஹார பீடாய நம
ஓம் ஜாலாந்திர பீடாய நம
ஓம் உட்டியான பீடாய நம
ஓம் தேவகூட பீடாய நம
விருத்த மண்டலே
ஓம் ஹேதுக பைரவாய நம
ஓம் வேதாள பைரவாய நம
ஓம் த்ரிபுராந்தக பைரவாய நம
ஓம் அக்னி ஜிஹ்வ பைரவாய நம
ஓம் காலாந்தக பைரவாய நம
ஓம் ஏக பாத பைரவாய நம
ஓம் கபால பைரவாய நம
ஓம் பீமரூப பைரவாய நம
ஓம் மலய பைரவாய நம
ஓம் தாடகேஸ்வர பைரவாய நம
அஷ்ட கோணேஷு
ஓம் ஸ்தம்பின்யை நம
ஓம் ÷க்ஷõபின்யை நம
ஓம் திராவின்யை நம
ஓம் ப்ராமின்யை நம
ஓம் மோகின்யை நம
ஓம் ஸ்தம்பின்யை நம
ஓம் ரௌத்ராயை நம
ஓம் சம்ஹாரிண்யை நம
திரிகோணாத் பரித :
ஓம் ஆக்னேயாதி நம
ஓம் ஹிருதயாய வாமின்யை நம
ஓம் சிரஸே நீலின்யை நம
ஓம் சிகாய சக்ரிண்யை நம
ஓம் கவசாய கட்கின்யை நம
ஓம் நேத்ரயாய பாசாங்க்யை நம
ஓம் அஸ்த்ராய காம்பின்யை நம
திரிகோகேணஷு
ஓம் காள்யை நம
ஓம் பத்ர காள்யை நம
ஓம் நித்யா காள்ளை நம:
பிந்து
ஊர்த்வ கேசிம் ச ஸிம்ஹஸ்தம் சந்த் ராங்கித சிரோருஹாம்
கபால சூல டமரு நாகபாச தராம் சுபாம்
ப்ரயத்யங்காரம் பஜேந் நித்யம் ஸர்வ சத்ரு விநாசினீம்
ஸ்ரீ பைரவ ஸஹிதாம் ஸ்ரீ ப்ரத்யங்கரா மஹா தேவீம் ஸம்பூஜ்ய
பூபுரே
ஓம் வடுகாய நம:
ஓம் யோகினீப்யோ நம:
ஓம் ÷க்ஷத்ர பாலேப்யோ நம:
ஓம் கணபதயே நம:
ஓம் ஸுதாயை நம:
ஓம் த்வாதசாதி த்யேப்யோ நம:
ஓம் ஏகாதச ருத்ரேப்யோ நம:
ஓம் ஸர்வேப்யோ பூதேப்யோ நம

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...