Saturday, July 7, 2012

ராசி & இலக்கண பலன்


மேஷம்

மேஷராசி (அ) மேஷ லக்கினத்தைச் சேர்ந்த அன்பர்களே,

நீங்கள் என்னதான் குடும்பத்திற்காக கஷ்டப்பட்டாலும், உழைத்தாலும், குடும்பத்தில் உள்ளவர்கள் உங்களை தவறாகவே எண்ணக்கூடும்.இதற்கு என்ன காரணம் என்று யோசித்து பாருங்கள் உங்களுடைய முன் கோபந்தான். என்ன? ஒத்துக்கீறீர்களா அந்த கோபத்தை ஒழித்து விட்டு சிரித்த முகத்துடன் காட்சி தந்து பாருங்கள். அதனால் ஏற்படும் மாற்றத்தை கண்டு மகிழ்வீர்கள். உங்களுக்குரிய பிரிகாரங்களை கடைபிடித்து உங்களுக்கு ஏற்படுக் கூடிய இடையர்களை போக்கி வளம் பெறுங்கள்
1. செவ்வாயக்கிழமைதோறும் “ஆதித்ய ஹருதய ஸ்தோத்திரத்தை” வீட்டில் ஒலிக்கச் செய்யவும். அப்படியே மணப்பாடமும் செய்துக் கொள்ளவும்.
2.பிரதி வளர்பிறை ஞாயிற்றுக்கிழமை அன்று பிரசத்தித்து பெற்ற சிவ ஆலயம் சென்று அர்ச்சனை செய்யவும்
3. அர்த்த நாரீஸ்வரரை வழிபட்டு வரவும் (திருசெங்கோடு)
4. கும்பகோணம் அருகே நாச்சியார் கோவில் என்ற ஊரில் “கல் கருடனை” வணங்கி வரலாம்
5. பாளையங்கோட்டை அருகே சீவலப்பேரி என்ற ஊர் உள்ளது. இவ்வ+ரில் ஸ்ரீவிஷ்ணு துர்க்கை தனி சன்னதியில் உள்ளார். இவரையும் தரிசித்து அருள் பெறலாம்.

மேஷ ராசி (அ) மேஷ லக்னத்தில் பிறந்த பெண்களே

நீங்கள் சமையல் கலையில் சிறந்தவர்தான். உங்கள் கணவர் விரும்பி சாப்பிடவில்லையே என்ற கவலை உங்களுக்கு உள்ளது. அவர் சிறு தீனிகள் அதிகமாக சாப்பிட்டு விட்டு வருவதால், உங்கள் சாப்பாட்டை சாப்பிட முடியாமல் இருக்கிறார்.இரக்க குணம் அதிகம் இருந்தாலும், குடும்ப நன்மைக்காக எவ்வித தியாகத்தையும், செய்ய தயாராக உள்ளீர்கள் இருந்தும் கணவர் மற்றும் குழந்தைகளிடத்தில் அனுசரித்து போக முடியாமல் உள்ளது. கீழ்காணும் பரிகாரத்தை கடைபிடித்து பாருங்கள்.
1. உங்கள் ஊர் கோவிலில் நாகர் பிரிதிஷ்டை செய்து இருப்பார்கள். அங்கு வெள்ளிக்கிழமை சென்று 5 மண் சட்டியில் தீபம் ஏற்றி நாகரை 8 முறை வலம் வரவும்.
2.பிரசித்து பெற்ற துர்க்கை அம்மன் சன்னதிக்கு வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் (காலை 10.30 முதல் 12.00) சென்று 5 எண்ணை கலந்து தீபம் ஏற்றி அம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிப்பட்டு வரவும்.

ரிஷப ராசி

ரிஷப ராசி (அ) ரிஷப லக்கினத்தை சேர்ந்த அன்பர்களே

“ நாம் என்னதான் பொறுப்பாக வேலையை இழுத்துப் போட்டு கொண்டு செய்தாலும். நம்மைப் பற்றி அவதூறான வதந்திகளைப் பரப்பி முன்னேற்றத்தை தடுக்கின்றார்களே” என்ற கவலையாவது? எப்படி இப்படி ஏற்படுகிறது. உங்களை போன்று உழைக்காமல் இருப்பவரை பக்கத்திலுள்ளவர்களிடம் கூறாதீர்கள்.உங்களால் தான் முடியும் என்றாகி விட்டது பின் ஏன் மற்றவர்களின் குறைகளை பார்க்கிறீர்கள். அவர்கள் உங்களை பற்றி வதந்திகளை பரப்பி விடுவார்கள். இந்த தொல்லைகள் நீங்க கீழ்காணும் பரிகாரங்களை செய்து வாருங்கள்.
1.மகான்களின் ஜீவ சாமாதிக்கு சென்று வாருங்கள்
2.ஸ்ரீரங்க நாதர் ஆலயத்திற்கு வெள்ளிக்கிழமை சென்று வணங்கி வாருங்கள்
3.நாக பஞ்சமி அன்று எட்டு சிவன் ஆலயத்திற்கு சென்று வழிபாடு நடத்துங்கள்
4.ஸ்ரீபைரவர்ட்கு நெய்தீபம் ஏற்றி வாருங்கள் (வெள்ளிக்கிழமையோடு அம்மாவாசை வரும்காலம் உத்தமம்)

ரிஷப லக்ன (அ) ரிஷப ராசி பெண்களே


அழகு, பொறுமை, உழைப்பு, பெருந்தன்மை கொண்ட நீங்கள் பிறர் மனம் நோகாதவாறு நடந்து கொள்வீர்கள். என்ன செய்வது எல்லாம் விதி. குழப்பமான குடும்பத்தில் வாழ வேண்டிய நிலை. அமைந்த வாழ்க்கையை சிறப்பாக மாற்றிக் கொள்ளவும் முடியும் உங்களால். குடும்பபாரம் தாங்க முடியவில்லையே. இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்து பாருங்கள் காண்பீர்கள் அற்புத மாற்றத்தை.
1.வெள்ளி, செவ்வாய் கிழமை மாலையில், துர்க்கை(அ) காமாட்சி அம்மனுக்கு எலும்பிச்சை மாலை அணிவித்து நெய் தீபம் ஏற்றி வரவும் (மாதம் ஒரு கிழமை செய்தால் போதுமானது)

2. வீட்டில் தீபம் ஏற்றி பழம் வைத்து லலிதா சகஸ்ரதமை ஸ்துதியை படித்து வாருங்கள்.நல்ல பலன் நன்றாகவே நடக்கும்.

மிதுனம்

மிதுனம் லக்னம் அல்லது ராசியாக கொண்டு பிறந்த அன்பர்களே


“வாழ்க்கையில் முன்னேற வேண்டும்” என்ற ஆசை தான், அதற்காக துரித காலத்தில், முன்னேற வேண்டும் என்ற ஆசையில் விபரிதத்தை விலைக்கு வாங்கலாமா? உங்களுடைய பொருளாதார நிலையோ மாதத்தில் பாதி நான் உயர்ந்தும், மீதி நாள் ஒன்றிமில்லாமல் போல் ஆகிவிடுகிறதே என்னவென்று யோசித்தீர்களா? உங்களுடைய பதட்டமான போக்கு தன்னம்பிக்கை அவ்வபோது இடிந்து விடுகிறீர்கள் அவநம்பிக்கையோடு எந்த காரியத்திலும் ஈடுபடாதீர்கள் நம்பிக்கையுடன் செயல்படுங்கள்.
1.ஸத்திய நாராயண பஐ பிரதி பௌர்ணமி தோறு செய்யுங்கள்
2.ஸ்ரீ மூகாம்பிகை அம்மன் போட்டோவை வைத்து புதன்கிழமை நெய் தீபம் போட்டு வணங்கி வரவும்.
3மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்திற்கு புதன்கிழமை இரவு நடக்கும் பள்ளி அறை ப+iஐயில் கலந்து மல்லிகை ப+ சாற்றி வழிபாடு செய்யலாம்.
4.கும்ப கோணம் அருகே “கதிராமங்கலம்” என்று ஊர் உள்ளது. இங்கு “வனதுர்க்கைக்கு” தனி சன்னதி உள்ளது. இங்கும் சென்று வரலாம்.
5.ஸ்ரீசுதர்ஸன யந்திரம் வைத்து தினம் ஸ்ரீ சுதர்ஸன் காயத்ரி படித்து வாருங்கள்

மிதுன லக்கினம் (அ) மிதுன ராசியை பெண்களே


நீங்கள் அழகான முகஅமைப்பும், நல்ல வாழ்க்கையும், அமையப் பெற்றவர்களே, என்ன கணவர் கறுப்பாக இருக்கின்றார் என்று வருத்தப்படுகின்றீர்களா? ஆதனால் என்ன அறிவும் - படிப்பும் உள்ளதே அதைப் பற்றி கவலை இல்லை என்கிறீர்களா? அப்புறம் என்ன குடும்ப பிரச்சனை அது இருந்துகிட்டே தாங்க இருக்கும். அதுக்காக மணிக்கணக்கில் கோப குறியோடு இருத்திராதீர்கள். குழந்தையை எப்படி வளர்ப்பது படிக்க வைப்பது பயமாக உள்ளது. நரம்பு கோளாரால் அடிக்கடி மயக்கம் வேற வருகிறது. போதும், போதும் இதோ உங்களது பிரச்சனைக்கான பரிகாரம்.
1.வினாயகருக்கு எண்ணெய் அபிஷேகத்திற்கு எண்ணெய் கொடுத்து ஏழு அகல் விளக்குகளில் தீபம் ஏற்றி ஏழு முறை வலம் வரவும்.
2. முருகன் கோவிலுக்கு சஷ்டி, கிருத்திகை, செவ்வாய்கிழமை சென்று தீபம் ஏற்றி உங்களது பெயருக்கு அர்ச்சனை செய்து வாருங்கள். பிரச்சனை அதிகமாக இருந்தால், பால் அபிஷேகம் செய்து வாருங்கள். கோயிலில் 12 பேருக்கு சர்க்கரை பொங்கல் தானம் செய்யுங்கள்.

கடகம்

கடக லக்கினம் கடகராசி அன்பர்களே


வெள்ளை உள்ளம் படைத்த நீங்கள் பிறரால் ஏதோ ஒரு காரணத்திற்காக வெறுக்கப்படுகின்றீர்கள். வாழ்க்கையில் ஸ்திர தன்மை இல்லாமல் நமது தலைவிதி இதுதானோ என்று நொந்து போய், உள்ளீர்கள். இதில் கஷ்டப்பட்டு சேர்த்த பணத்தை பிறரின் கஷ்டத்திற்காக கொடுத்து அந்த பணம் திரும்ப வராமல் தவிக்கின்றீர்கள். பேங்கில் அக்கொளண்டுதான் உள்ளது பணம் இல்லை வெளி பார்வைக்கு பெரிய ஆள் உள்ளே வேண்டாம,; உங்கள் குறைகளை போக்கவும், பிரச்சனைகள் நீங்கி. பணம் இல்லை வெளிபார்வைக்கு பெரிய ஆள். உள்ளே வேண்டாம் உங்கள் குறைகளை போக்கவும், பிரச்சனைகள் நீங்கி பண புழக்கம் ஏற்படவும், உங்களுக்குரிய பரிகாரங்கள் இதோ
1. திருகடையர் பௌர்ணமி அன்று சென்று ஸ்ரீஅன்னை அபிராமியை வழிபாடு செய்யவும். வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் துர்க்கைக்கு செவ்வரளி மாலைபோட்டு தீபம் ஏற்றவும்.
2.சூரியனார் கோவிலுக்கு சென்று அவ்வ+ருக்கு அருகில் இருக்கும் “கற்கடகேசுவரர்” ஈஸ்வரனை தரிசனம் செய்து அபிஷேக ஆராதனை செய்யவும்.
3.சித்தர்களின் சமாதிக்கு சென்று வாருங்கள்
4.கும்பகோணம் அருகே உள்ள “துக்காச்சி” என்ற ஊரில் இருக்கும் சிவன் ஆலயத்தில் தனி சன்னதி பெற்று இருக்கும் ஸ்ரீசரபேஸ்வரருக்கு வெள்ளை மலர் மாலை சாந்தி வழிபடவும்.
5.கும்பகோணம் சேங்காலிபுரம் தாத்ரேயர் கோயிலில் “கர்த்த வீர்யார்ஜன” யந்திரம் பிரதிஷ்டடை செய்யப்பட்டுள்ளது. இங்கு சென்று வர உங்களுக்கு வர வேண்டிய பணம் வரும்.

கடக லக்கின (அ) கடக ராசியை கொண்ட பெண்களே


சிறுவயது முதல் குடும்பத்தின் மீது அக்கரை கொண்ட நீங்கள் பிறருக்கு உதவி செய்வதில் உங்களது நலனையும் விட்டு கொடுப்பீர்கள். மற்றவர்கள் கஷ்டத்தை பார்த்தால், உங்களுக்கு அழுகை வந்து விடும். மணவாழ்க்கையா? அதற்கென்ன செய்வது எல்லாம் விதிப்படிதான். மிகவும் சோதனைகள் அதிகமானால் கீழ்காணும் பரிகாரத்தை செய்து வாருங்கள். தொடர்ச்சியாக இவற்றில் ஒன்றை கூட செய்தால் போதும். சக்ஸஸ் என்ற வார்த்தையை ஆனந்த கண்ணீர் கண்களில் ததும்ப சொல்வீர்கள்.
1.ஞாயிற்று கிழமை தோறும் வினாயகர் கோயிலுக்கு சென்று தீபம் ஏற்றி வழிபாடு செய்யவும்.
2.செவ்வாய் கிழமை சிவப்பு நிற ஆடை உடுத்தி வீட்டில் “லலிதா சகஸ்ர நாமத்தை” சொல்லி அல்லது கேட்டு வாருங்கள்
3.உங்கள் ஊர் கோயில் திருவிழா காலங்களில் நீர் மோர் பந்தல்- அமைத்து தாகம் தணிக்கவும்.

சிம்மம்

சிம்ம லக்கினம் (அ) ராசியை சேர்ந்த அன்பர்களே


நேர்மையும், வைராக்கியமும். கொண்டவர்கள் நீங்கள்- பிறருக்கு உதவும் எண்ணம் கொண்டவர்கள் மிகப்பெரிய ஆளுக்கெல்லாம் - உதவி செய்து இருப்பீர்கள். ஆனால் அவர்கள் செய்நன்றி மறந்து விட்டார்கள் என்ற கவலையும். உங்களுக்குள் உள்ளது. எவ்வளவு பெரிய ஆளானால் என்ன நான் போய் பார்க்க மாட்டேன் என்று உங்களை சுற்றி வட்டம் போட்டு அதிலிருந்து வெளியே வர மாட்டேன் என்கீறிர்கள். ஹலோ சார். காலத்திற்கேற்ப பிழைத்துக் கொள்ளுங்கள். முதலில் பிறரிடம்ம சிடு சிடு வென்று பேசுவதை நிறுத்துங்கள். எல்லாவற்றையும். சமாளித்து விடுகிறேன். மனைவி-குடும்பம் சமாளிக்க முடியவில்லையே என்று திணருவது உண்மைதான். உங்களுக்குரிய பரிகாரம்.
1.தினசரி சூரிய நமஸ்காரம் செய்து வரவும்
2.ஆதித்ய ஹிருதய ஸ்தோத்ரம் தினம் தியானித்து வரவும்
3.ஸ்ரீரங்கத்தில் உடையவர் சன்னதி உள்ளது. அங்கு ஸ்ரீஇராமானுஜரின் சரீரம் காய கல்ப முறைப்படி அப்படியே சுய தோற்றத்துடன் உள்ளது. இங்கு சென்று இவரை தரிசனம் செய்து வாருங்கள்.ஸ்ரீரங்கத்தில் உள்ளது சென்று வாருங்கள்.

சிம்ம லக்னம் (அ) ராசியாக கொண்ட பெண்களே


உங்களிடத்தில் நேர்மையும் பெருந்தன்மையும்,இருக்கும், உங்களிடத்தில். பிறர் பேசுவதற்கே பயம் கொள்வார்கள். சொந்தகாரர்களின் அதிருப்தியை பெற வேண்டியிருக்கும்.காரணம் சில கசப்பான சம்பவங்களே உங்ககிட்டே இருந்து அவர்களை பிரித்து இருக்கும்.வெளியே சொல்ல முடியாத அளவிற்கு ஏமாற்றங்களை தாங்கி தான் ஆக வேண்டும். வயதான காலங்களில் பிள்ளைகளால் வேதனைகள் மற்றும் போராட்டங்களையும், அனுபவித்துக் கொண்டு இருப்பீர்கள். இந்த நிலைகள் நீங்கிட இப்பரிகாரங்ளை கடைபிடித்து வாருங்கள். இதுப்போன்ற பல பிரச்சனைகளும் எப்படி குறைகிறது பாருங்கள்.
1.தினசரி காலையில் சூரிய வழிபாடு செய்து வரவும்.
2.சூhயிற்று கிழமை சைவ உணவு சாப்பிடுங்கள்
3.வெள்ளியால் ஆன வேல் 5 இஞ்ச் செய்து வீட்டில் வைத்து தினசரி பால் அபிஷேகம் செய்து வரவும்.
4.செவ்வாய் கிழமைகளில் முருகன் கோவில் சென்று பால் அபிஷேகம் செய்து, வாருங்கள்
5.பௌர்ணமி அன்று அம்மன் கோவிலுக்கு சென்று உங்களால் முடிந்த அளவிற்கு பால் பாயசம் தானம் செய்யுங்கள்
6.”ஸ்ரீசுதர்ஸன்” சக்கரத்தை பிரதிஷ்டை செய்து பiஐயறையில் வைத்து வழிபாடு செய்ய எல்லா துன்பம் சூரியனை கண்ட பனிப் போல் நீங்கும்.

கன்னி

கன்னி லக்னம்(அ) கன்னி ராசியாக கொண்டவர்களே


சம்பந்தமில்லா காரியங்களில் ஈடுப்பட்டு கொண்டு இருப்பீர்கள், ஆராய்ச்சி மனப்போக்கு இருக்கும். பழமையான விஷயங்களில் கவனத்தை செலுத்தி வீணாக பொழுதை கழிப்பீர்கள். நல்லா தூங்குவீர்கள் அம்மா, அப்பா- உங்களை வளர்த்து விட்டார்கள். மனைவி யோகதோடு வந்திருப்பார்- யோகம் தான் உங்களுக்கு அப்படியிருந்தும் மற்றவர்களிடம் வெடுக் வெடுக்கென்று பேசுறீங்க மற்றவர் உங்களிடம் பேசவே பயப்படுகின்றார்கள். ஓரே தொழிலே செய்யுங்கள் வெற்றி பெறுவீர்கள். பலத்தொழிலை செய்து ஏன் மாட்டிக்கிட்டு இப்படியா முழிப்பது. உங்களுக்குண்டான பரிகாரங்களை செய்து இன்றும் வெற்றியை ஈடுட்டுங்கள்.
1.மதுரை ஸ்ரீமீனாட்சி அம்மன் ஆலயத்திற்கு சென்று வாருங்கள்
2.சனிபகவானையும் ஆஞ்நேயர் பகவானையும் தொடர்ந்து வழிபடுங்கள்
3.நாகப்பட்டினம் சிவன் கோவிலில் தசரத சக்ரவர்த்தியின் பிரிதிஷ்டை செய்யப்பட்ட சனீஸ்வரர் உள்ளார்.இவரையும் சென்று தரிசித்து வாருங்கள்
4.கும்பகோணம் ஆடுதுரை மார்க்கத்தில் குத்தாலம் அருகில் “திருக்கோடிக்கரை” என்ற ஊரில் திருகோடீஸ்வரரையும், திரிபுர சுந்தரியையும் தரிசித்து வரலாம்.

கன்னி லக்னம் (அ) ராசியாக கொண்ட பெண்களே


குடும்ப விசயத்தில் அதிக அக்கரையுடன் செயல்படுவீர்கள். உங்கள் இலட்சியங்களை ஏற்றுக் கொள்ள கூடியவராக கணவர் இல்லையே என்று கவலை இருந்து கொண்டே இருக்கும். கணவரை சார்ந்த உறவினர்கள் தொல்லைகள் வேறு உங்களை படாதபாடுபடுத்தும். போதாகுறைக்கு குழந்தைகளின் உடல் நிலையில் கோளாறு, வைத்திய செலவுகள் வேறு மனதை வேதனைபடுத்து ஏதாவது தொழில் செய்தாலும் அதிலும் நஷ்டம் என்ன செய்வது என்று புலம்பாதீர்கள். இதோ உங்களுக்குரிய பரிகாரம்.
1.வளர்பிறை ஞாயிற்றுக்கிழமை, வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று விநாயகருக்கு அம்மனுக்கும் தீபம் ஏற்றி வழிப்பட்டு பொங்கல் தானம் கொடுக்கவும்.
2. வளர்பிறை, தேய்பிறை சஷ்டி விரதம் இருந்து முருகனுக்கு அர்ச்சனை செய்து தரவும்.
3. கணவன் வழி உறவினர்களால் தொல்லைகள் ஏற்படின் வளர்பிறை திங்கட்கிழமை உங்கள் ஊரில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மனுக்கு “மஞ்சள் காப்பு” சாற்றி வழிபாடு செய்யுங்கள்.

துலாம்

துலாம் லக்னம் (அ)ராசியாக கொண்ட அன்பர்களே

நீங்க்ள பொறுப்பானவர்கள் தான், குடும்ப பொறுப்பு முழுவதும் உங்கள் தலையில் தான். அதற்காக எதுக்கு எடுத்தாலும். யோசிப்பது யோசித்து செய்த காரியமாவது சரியாக வருகிறதா குழப்பம். கொள்ளாமல் எதையும் உடன் முடிவு செய்யுங்கள். நன்மையாக நடக்கும் முன் கோபத்தையும். மற்றவர்கள் மீது குற்றம் கண்டு பிடிக்கும் குணத்தையும் மாற்றிக் கொள்ளுங்கள். உங்கள் உழைப்பையெல்லாம் சுற்றியுள்ள உறவினர்கள் அனுபவிக்கின்றார்களே. உங்கள் மனைவி குழந்தைகள் என்று கவனம் செலுத்துங்கள். பொய்கள் பேசுவீர்கள். தவிர்த்துக் கொள்ளவும். சொத்து ரீதியாக பிரச்சனைகளை சந்திப்பீர்கள் கவலைபடாமல் இந்த பரிகாரங்களை செய்து பாருங்கள்.
1.சொர்ண பைரவரை வழிபாடு செய்யலாம்.புதுக்கோட்டை அருகே உள்ள ‘தபசுமலை” என்ற இடத்தில் தேய்பிறை அஷ்டமி தினதன்று சென்று சிறப்பு ப+ஜையில் கலந்து- பைரவரின் திருவருள் பெறலாம்
2.கனகதாரா ஸ்தோத்திர பாடலையும். வீட்டில் கேசட் மூலம் ஒலிக்க செய்து வாருங்கள்

துலாம் லக்னம் (அ) ராசியாக கொண்ட பெண்களே

பெருந்தன்மை. மதிப்பு, சுறுசுறுப்பும் கொண்டவர் நீங்கள். எல்லா காரியங்களையும், நீங்கள் ஓரே ஆளே செய்து முடிக்கும் திறமை உங்ககிட்டே இருக்கும்.அதே வேளையில் கோபமும், வேகமாக வந்து விடுகிறதே ஏன். சற்று பொறுமையாக இருந்து பாருங்கள்.முடியவில்லையா. பேசிக் கொண்டே அழுவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். அதுவும் முடியாதா வாழ்க்கையே வெறுப்பாக இருக்கும். ஆத்திரத்தை அழுதாவது தீர்த்துக் கொள்கிறேன் என்கிறீர்கள். கவலையை விடுங்கள். இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். நிச்சயம் உங்கள் வாழ்வில் வசந்தம் பிறக்கும்.
1. வளர்பிறை ஞாயிற்றுகிழமை பிரசித்துப் பெற்ற அம்மன் கோவில் சென்று. இலுப்பை எண்ணை, நெய், எள் (நல்ல) எண்ணை கலந்து தீபம் ஏற்றி வாருங்கள். 3 முறை செய்தாலே போதும்.
2. சுண்டல் (வெங்காயம் சேர்க்காமல்) செய்து, செவ்வாய்கிழமை அம்மன் கோயிலுக்கு சென்று கோயிலின் பிரதான விளக்குக்கு தீபம் ஏற்றி சுண்டலை தானம் செய்யுங்கள்
3. உங்கள் இஷ்ட தெய்வ ஆலயத்திற்கு, ஆலயமணி, தூங்காவிளக்கு, அல்லது சரவிளக்கு தானம் கொடுக்கவும்.

விருச்சிகம்

விருச்சிகம் லக்னம் (அ) ராசியாக கொண்டவர்களே

தேவையில்லாமல் அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிட்டு அதனால் நண்பருடன் பகை ஏற்பட்டு வேதனைபடுவீர்கள். நண்பர்கள் விசயத்தில் உங்கள் மூக்கை நுழைக்காதீர்கள். நண்பர்களால் தான் உங்கள் வளர்ச்சியே இருக்கும். பட் பட் என்று பேசாதீர்கள். உங்கள் முகத்தை போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் போது சிரித்த மாதிரி இருப்பீங்களே அது மாதிரி எப்பவும் வைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.பிறர்கிட்டை அன்பை கூட அதிகாரமாக செலுத்துவீர்கள். மற்றவர்களுக்கு அதை புரிந்து கொள்ள தாமதம் ஆகும். மனைவியோடு மட்டுமாவது சற்று சிரித்து பேசி பழகுங்கள். வெட்டு ஒன்று, துண்டு இரண்டு. என்று பேசுவதை போக்கி விடுங்கள். யார் சொன்னாலும் கேட்க மாட்டீங்க பரிகாரத்தையாவது செய்து மனத்தை மாற்றிக் கொள்ளவும்.பணத்தை அள்ளிக் கொள்ளுங்கள்.
1.மகிசா சூரணி ஆலயம் சென்று வாருங்கள் ஒருமுறை மகிசா சூரணி ஆலயம் - திருத்தணியிலிருந்து 2 கி.மீட்டரில்; உள்ள “மத்தூர்” என்ற ஊரில் உள்ளது.
2. திருப்பத்தூர் (சிவகங்கை மாவட்டம்) அருகே உள்ள “திருகோஷ்டிய+ர்” என்ற வைணவ ஸ்தலத்திற்கு சென்று வாருங்கள்
3. ஸ்ரீஆகர்ஸன பைரவ யந்திரம் வைத்து தினசரி வழிபடவும், அபிராமி அந்தாதி பாடலை பாடவும், கேட்டு வரவும்.
விருச்சிக லக்னம் (அ) ராசிகா கொண்ட பெண்களே
காரியத்தை சாதித்துக் கொள்வதில் ராணி நீங்கள். அது எப்படி அழுது புலம்பியாவது தேவையை ப+ர்த்தி செய்துக்கீறிங்க. சொல்ல வேண்டாம் அந்த ரகசியம் உங்ககிட்டேயே இருக்கட்டும். என்னத்தே சாதித்தேன், என்ற அங்கலாய்ப்பு வேறு இடமாற்றம் அடிக்கடி நேரிடுகிறது. சொந்த வீடு அமையவில்லை. அமைந்தாலும் சிறப்பாய் இல்லை என்ற கவலை- தாய், தகப்பனார், கூட உங்களுக்கு ஆதரவாய் பேச மாட்டார்கள். கணவரின் உடல்நிலையில் அடிக்கடி குறைபாடுகள் இந்த கவலை எல்லாம் தீர இந்த பரிகாரங்களை செய்யுங்கள்.
1.ஸ்ரீரங்கம் சென்று- அரங்கநாதரிடம் சென்று- உங்களது குறைகளை சொல்லி முறையிடுங்கள், அப்படியே சமயபுரம் சென்று ப+iஐ செய்து துள்ளு மாவு தானம் செய்யுங்கள்.
2.பௌர்ணமி நாளில் திருக்கடைய+ர் அபிராமி அம்மனை தரிசித்து வாருங்கள்
3.வினாயகர் அகவல் தினம் படித்து பின் காரியத்தை தொடங்குகள்
4. வசதி வாய்ப்பு இருந்தால் - பொது இடம்(அ) கோயிலில் - குடிநீர் வசதி நிரந்தரமாக செய்து கொடுங்கள்

தனுசு

தனுசு லக்னம்(அ) ராசியாக கொண்ட அன்பர்களே

பிறருக்கு ஆலோசனைகள் சொல்வதில் வல்லவர் குடும்பத்திலும். பிள்ளைகளிடத்திலும், உங்கள் சம்பம் சாயவில்லையே என்ற கவலை உங்களை வாட்டி எடுக்கும். எல்லோர் குணமும் ஒன்றா அமைதியாக செயல்படும் நீங்கள். தீடீர் கோபகாரர் ஆக மாறிவிடுவீர்கள். உடனே அமைதி நிலைக்கும் திரும்பி விடுவீர்கள். அது உங்ககிட்டே இருக்கிற சிறப்பு உங்களிடத்தில் வேலை செய்பவர்கள். முழு ஒத்துழைப்பு தர மாட்டார்கள். விளைவு காரியதாமதம். தேக்கம். இவையெல்லாம் நீங்க இந்த பரிகாரங்களை அவசியம் செய்யுங்கள்.
1.ஏதேனும் சித்தர் ஜீவ சமாதிக்கு சென்று வரவும்.
2.பௌர்ணமி தினத்தன்று காளியம்மன் கோவில் சென்று வரவும்.
3.காஞ்சிபுரம் ஸ்ரீகாமாட்சி அம்மனை செவ்வாய் கிழமையன்று தரிசனம் செய்து வரவும்.
4.(சிவகங்கை மாவட்டம்) திருப்பத்தூர் அருகே உள்ள பட்டமங்கலம் என்ற இடத்திலும் திருவண்ணாமலை அருகே உள்ள ரமணாஸ்ரமம் அருகேயும் தனித் தெட்சிணாமூர்த்தி பிரதிஷ்டை உள்ளது இங்கும் சென்று வரவும்.
5. கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார் கோவில் சென்று வரலாம்.

தனுசு லக்னம் (அ) தனுசு ராசி பெண்களே

படபடப்பும்- விட்டுக் கொடுக்காமலும் பேசுவீர்கள் காரியத்தை கண்ணீரால் சாதித்து விடுவீர்கள். சிறு குழந்தையை போன்று கிடைக்காத பொருளுக்கு ஏங்குவீர்கள். பிறரை துச்சமென நினைக்காதீங்க. மற்றவர்களின் உள் மனவேதனை உங்களை உடல் ரீதியாகவும். மனரீதியாவும் பாதிக்கும். உரிமை என்ற பெயரில் எடுத்தெரிந்து பேச வேண்டாம். இதனால் உங்களுக்கு நீங்களே பிரச்சனையை உருவாக்கி கொள்கின்றீர்கள். வசதிகளும் நல்ல வாழ்க்கையும் சிறப்பாக இருந்தாலும். மனதிற்கும் கவலை ஒன்று ஆக்பரித்து கொண்டு இருக்கும்.
1.புதன்கிழமை தோறும் நவக்கிரஹ சன்னதியில் ஏற்றி வரவும்
2.ஏழை குழந்தைகளுக்கு படிப்புக்கு தேவையான உதவி செய்யுங்கள்
3.ஏகாதசி. சனிக்கிழமை அன்று பெருமாள் கோவில் சென்று பெருமாளுக்கு பச்சை வஸ்திரம் சாற்றி பளியோதரை நிவேதனம் செய்து தானம் செய்யவும்.
4.ஸ்த்தில நாராயண ப+iஐ பௌர்ணமி அன்று வீட்டில் செய்து வரவும்.

மகரம்

மகர லக்னம் (அ) மகர ராசியில் பிறந்த அன்பர்களே

விவேகத்துடன் செயல்படுவீர்கள். அப்படியிருந்தும் நஷ்டத்தை அடிக்கடி சந்திப்பீர்கள். எதையும், திரும்ப திரும்ப பேசாதீர்கள். யார்கிட்டேயும் வழக்காடாதீர்கள். எல்லோருக்கும் எதுவும் தெரியாது தனக்கு தான் தெரியும் என்று விளம்பரபடுத்திக் கொள்ளும் நீங்கள் பொருளாதார சிக்கல்களை சந்திக்க ஆரம்பித்து விடுவீர்கள். உழைப்புக்கு அஞ்சாதவர். மனைவி மூலம்; மகத்தான உயர்வு உண்டு. மனைவி சொல்லை தட்டாதீர்கள். மனைவியை சந்தோஷபடுத்த பணவரவு கூடும். உங்களுக்குண்டான பரிகாரம் இதோ.
1.ஸ்ரீரங்கம் கோயிலில் உள்ள ஸ்ரீதன்வந்திரி பகவானை வழிபடலாம்
2.குற்றாலத்திலுள்ள குற்றால நாதர் ஆலயத்தில் பராசக்தி பீடம் உள்ளது. அப்பீடத்தினை பௌர்ணமி அன்று சென்று வழிபடலாம்.
3.வக்ரகாளியம்மன் கோவில் சென்று வரவும்
4.”அழகன் புதூர்” முருகன் தரிசனம் செய்து வரவும். அழகன் புதூர் கும்பகோணம் திருவாரூர் மார்;க்கத்தில் ஒன்று

மகர லக்னம் (அ) ராசியாக கொண்ட பெண்களே

நீங்கள் எதையும் கூர்;ந்து கவனிக்கும் திறன் கொண்டவர்கள். பிறருக்கு உதவி செய்வதில் முன்னின்று செயல்படுவீர்கள். ஆனால் மற்றவர்கள் முன் சொல்லி காட்டி நீங்கள் மகத்தான சேவையை நீங்களே கெடுத்தும் விடுவீர்கள். பிடிவாத குணமும், உங்களிடத்தில் மேலோங்கி இருக்கும் மாற்றிக் கொள்ளுங்கள். மனதை தேவையில்லாமல் குழப்பிக் கொண்டு உங்கள் கணவருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுவீர்கள். கணவர் செய்ய துவங்கும் நல்ல காரியங்களுக்கு முட்டு கட்டை போடாதீர்கள். வயிற்று உபாதைகளும் ஆஸ்துமா நோய் கொடுக்கும். அபிப்ராய பேதங்களை விட்டு விடுங்கள். தீய குணங்கள் மறைந்து நல்ல செயல்கள் பெருகவும் மனசாந்தி அடையவும், இந்த பரிகாரங்களை செய்து பாருங்கள்.
1.புதன். வெள்ளிகிழமைகளில் நாக பிரதிஷ்டைக்கு அபிஷேகம் செய்து தீபம் ஏற்றி வழிபாடு செய்யவும்
2.சதூர்த்தி அன்று விரதம் இருந்து விநாயகரை வழிபாடு செய்யவும்
3.ஸ்ரீசுதர்ஸன சக்கரம் எழுதி வீட்டில் வைத்து வழிபட எல்லா தொல்லைகளும் நீங்கி செல்வம் பெறலாம்.
4.செவ்வாய்கிழமை அன்று எலும்பிச்சை சாதம் செய்து தானம் செய்யவும், புதன்கிழமை செய்யவும்.

கும்பம்

கும்பம் லக்னம்(அ) ராசியாக கொண்ட அன்பர்களே

சுரியான ஆள் நீங்கள் தான். அமைதியாக செயல்பட்டு, தக்க சமயத்தில் உங்கள் திறமையை வெளிக்காட்டுவீர்கள். மற்றவர்களால் முடியாத காரியம் உங்களால் எப்படி முடிகிறது என்று பலரையும் வியப்பில் ஆழ்த்தும் கெட்டிக்காரர்கள்.நீங்கள் அதுசரி பொருளாதார நிலைமை எண்ணிபாருங்கள் தகந்த நேரத்தில் அல்லாட வேண்டியிருக்கிறதே பலருக்கும் உதவி செய்வது சரிதான் ஆனால் உங்களுக்கு உதவி தேவைபடும் போது கேட்க கூச்சபடுவீர்கள். வாக்கு கொடுப்பதை நிதானமாக யோசித்து சொல்லுங்க தயவு செய்து பலர் முன்னிலையில் யாரையும். திட்டாதீங்க.பாருங்க உங்க மனைவி என்னோட கருத்தை ஏத்துகிட்டு சிரிக்கிறாங்க. அவங்க சொல்வதை நான் சொல்லிட்டேன். உங்களுக்குரிய பரிகாரம்

1.அஞ்சநேயர் வழிபாடு சனிக்கிழமையன்று செய்யுங்கள்
2.ஸ்ரீசரபெஸ்வரர் காயத்திரியை தினம் ஜபித்து வாருங்கள்
3.கும்பகோணம்,ஆடுதுறை மார்க்கத்தில், திருப்புவனம் என்ற ஊரில் சரபோஸ்வரருக்கு தனி சன்னதி உள்ளது. சென்று வரவும்.
4.காமாட்சி அம்மனை வழிபாடு செய்வது மிகசிறப்பு
5.புதன்கிழமை அன்று மதுரை ஸ்ரீமீனாட்சி அம்மன் கோவிலுக்கு இரவு பள்ளியறை ப+ஜையில் மல்லிகை ப+வும் நெய்யும் கொடுத்து வழிபாடு செய்து பின் பாருங்கள். பணபற்றாக்குறை என்பது இருக்கவே இருக்காது.

கும்பம் லக்னம் (அ) ராசியாக கொண்ட பெண்களே

உங்களுடனே இருப்பவர்கள் உங்களை பற்றி ஏளனமாக பேசுவதை கண்டு மனம் பதை பதைப்பது தெரிகிறது. ஒருவரின் குறைகளை மற்றவரிடம் கூறாதீர்கள். சில வேதனைகளும், சோதனைகளும் உண்டாவது இயல்பு அதற்காக தாழ்வு மனப்பான்மையோடு இருக்காதீர்கள். உங்கள் குடும்ப நிர்வாகம். சீர்குழைந்து விடும். கெட்டிகார பெண்மணி என்று பெயர் எடுக்க போறீங்க. குழந்தைகளை நன்றாக கவனித்து அவர்கள் வளர்ச்சியில் மனதை செலுத்துங்கள். தேவையற்ற குழப்பங்களை போக்கிவிடும்.உங்களுக்கு நிறைய பொறுப்பு இருக்கு அவை எல்லாம் வெற்றி அடைய இந்த பரிகாரங்களை செய்து, சந்தோஷமாயிருங்கள்.
1.சஷ்டி விரதம் இருந்து வாருங்கள்
2.ஸ்ரீராகவேந்திர மகானை வழிபடுங்கள்
3.வாரந்தோறும் பெருமாள் கோவில் சென்று ஆண்டாள்தாயாருக்கு தீபம் ஏற்றி வரவும்
4.ஏகாதசி விரதம் இருந்து பெருமாள் கோவிலுக்கு சென்று பெருமாளுக்கு தாயாருக்கும் சந்தனம் சாற்றி வழிபட புதிய புதிய எண்ணங்கள் நல்ல சிந்தனைகள் தோன்றி வாழ்வில் மகிழ்ச்சியை கொடுக்கும்.

மீனம்

மீனம் லக்கினம் (அ) ராசியாக கொண்ட அன்பர்களே

பொறுமையானவர் நீங்கள் தான். சிக்கனமானவர் கூட அதற்காக இப்படியா காசு மீது ஆவல் கொள்வது. செலவழித்து பாருங்கள் பணம் இன்னும் சேரும்.ஒரு விஷயத்தை பற்றி விளக்கம் உங்ககிட்டே தான் கேட்க வேண்டும். மற்றவர்கள் போதும் போதும் என்னும் அளவிற்கு பேசுவீர்கள். கவலை இல்லாத மனிதன் நீங்க தான். அதே வேளையில் மற்றவர்களை கண்டிக்கும் போது சாபமிடுவது போல் பேச வேண்டாம். வார்த்தைகளை கூட வியாபாரம் செய்யும் திறமையிருந்தும் மற்றவர்களுக்காக மருத்துவ செலவு அதிகரித்து கொண்டே போகுதே என்ற கவலையும் இருக்கும். நல்ல மனமும் குணமும் உள்ள நீங்க பிறருக்கு தானம் செய்வதில் மட்டும் கையை சுருக்கி கொள்ளாதீர்கள் உங்களுக்குரிய பரிகாரம் இதோ
1.ஸ்ரீதன்வந்திரி பகவான் காயத்ரியை தினம் ஜபித்து வாருங்கள்
2.சூலினியந்திரத்தை பிரதிஷ்டை செய்து சூலினி காயத்ரியை தியானித்து வரவும்.
3.ஸ்ரீராகவேந்திரர் மந்திராயலம் சென்று வரவும்
4.நலிந்தோருக்கு ஆடைதானம் செய்யவும்
5.சிவகங்கை- காரைக்குடி வழியில் மானகிரி என்ற ஊரில் கல்யாண நவகிரஹக ஆலயம் உள்ளது.அங்கு சென்று வரவும். எல்லா நலன்களும் கிடைக்கும்.

மீன லக்ன (அ) ராசியாக கொண்ட பெண்களே

சிந்தித்து செயல்புரியும் ஆற்றலும், சகஸமாக பழக கூடிய தன்மையும், மேலோங்கி இருக்கும். தப்பு செய்ய பயப்படுவீர்கள். பிறர் மனம் நோகாமல் செயல்படுவீர்கள். சிறு துன்பம் என்றாலும் துவண்டு விடுவீர்கள்.பொது இடங்களிலும், வீட்டில் விஷேச நேரங்களில் டென்சன் பேர்வழியாக மாறி, யாரை திட்டுகிறோம் என்று தெரியாமல் வசை பாடி கொண்டிருப்பீர்கள்.குழந்தை பிறப்பு ஆப்ரேஷன் மூலம் பிறக்கும் நிலை உண்டாகும். சிலருக்கு அனுதினமும் கோபம் ஏற்பட்டுக் கொண்டிருக்கும்.
இந்நிலை போக்கவும். தொண்டைநோய் பாத எரிச்சல் குதிவாதம், போன்ற நோய் நீங்கவும், இந்த பரிகாரங்களை செய்யவும்
1.வீட்டில் வேல் வைத்து ப+ஜை செய்வது நல்லது
2.புதன்கிழமை நவக்கிரக சன்னதி சென்று நெய் தீபம் அல்லது 5 வித எண்ணை கலந்து தீபம் ஏற்றவும், அர்ச்சனை செய்தும் வரவும்.
3.வீட்டின் முன் தாகசாந்திக்கு ஏற்பாடு செய்யவும்
4.நாகபிரஸ்திஷ்டைக்கு மஞ்சள் அபிஷேகம் பால் அபிஷேகம் செய்து தீபம் ஏற்றி வலம் வரவும்.உளுந்தவடை தானம் செய்யவும், நலம் பல உருவாகும்.

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...