Saturday, September 29, 2012

வால்மார்ட்


இந்தியாவில், ஆண்டுக்கு 25.65 லட்சம் கோடி ரூபாய்க்கு சில்லரையில் வர்த்தகம் நடக்கிறது என, பொருளாதார நிபுணர்கள் கணக்கிட்டு உள்ளனர்.இதில், மளிகை பொருட்கள், ஆடைகள், காலணிகள், நகைகள், "வாட்ச்’ போன்ற தனிநபர் நுகர்வு பொருட்கள், அழகு சாதனங்கள், மருந்துகள், புத்தகங்கள், அறைகலன்கள், பாத்திரங்கள், பேன், லைட், பிரிட்ஜ் உட்பட மின் சாதனங்கள்; கணினி, செல்போன் உட்படமின்னணு பொருட்கள், புகையிலைபொருட்கள், சில்லரை கட்டுமானபொருட்கள் ஆகியவற்றின் சில்லரை வர்த்தகம் அடக்கம்.

பெரிய கடைகள்:
இப்படி, பரந்து விரிந்த சில்லரை வர்த்தக தொழிலில், பல இடங்களில் கடைகளை நடத்தும் பெரிய நிறுவனங்களின் பங்கு வெறும் ஆறுசதவீதம் தான் என, வர்த்தககூட்டமைப்புகளின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.இந்தியாவில், மளிகைபொருட்கள் தவிர, மற்ற பொருட்களின்வர்த்தகத்தில், பெரிய நகரங்களைபொருத்த வரை பெரிய நிறுவனங்கள் தான் கோலோச்சி வருகின்றன.ஒவ்வொரு மாநிலத்திலும், போத்தீஸ், சென்னை சில்கஸ், கல்யாண் குழுமம், அலுக்காஸ்குழுமம், போன்ற பெரிய சில்லரைவர்த்தக நிறுவனங்கள் உருவாகி உள்ளன. அவை தற்போது, அண்டைமாநிலங்களிலும், தங்கள் கிளைகளைதுவக்கி வருகின்றன. லைப்ஸ்டைல், ஷாப்பர்ஸ் ஸ்டாப், லேண்ட்மார்க், வெஸ்ட் ஸைட், ரிலையன்ஸ் டிரெண்ட்ஸ் போன்ற நிறுவனங்கள் பலமாநிலங்களில் கடைகளை நடத்தி வருகின்றன.இவற்றை விற்பனை செய்யும் சிறிய கடைகள் இருந்து வந்தாலும், அவற்றை அந்தந்த பகுதி மக்கள் மட்டுமேநாடுகின்றனர். இதனால், பெரிய நகரங்களில், சிறிய கடைகளின் முக்கியத்துவம் குறைந்து கொண்டே வருகிறது.மளிகை பொருட்களை பொறுத்தவரை, நீலகிரீஸ், ரிலையன்ஸ் பிரஷ், ஸ்பென்ஸர்ஸ், மோர் போன்ற பெரிய கடைகள் கடந்த ஐந்துஆண்டுகளாகவே, தங்கள் வர்த்தகத்தைவிரிவுபடுத்தி, வளர்ந்து வருகின்றன.இதனால், பல கிளைகள் கொண்ட பெரிய கடைகளின் வரவோ, விரிவாக்கமோ, நம் நாட்டில்புதிதல்ல.

மளிகை பொருட்கள்:
மொத்த சில்லரை வர்த்தகத்தில், மளிகை பொருட்களின் பங்கு 61 சதவீதம்.மளிகை வர்த்தகத்தில், பெரியநிறுவனங்கள் இருந்து வந்தாலும், இவை, பெரிய அளவில் ஊடுருவவில்லை. இதனால், சில்லரை வர்த்தகத்தில் பெரிய நிறுவனங்களின் பங்கில், மளிகை பொருட்களின் பங்கு 18 சதவீதம் தான் என, தேசிய வேளான் மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி (நபார்டு) தெரிவிக்கிறது. அதாவது, மொத்த சில்லரை வர்த்தகத்தில் ஒரு சதவீதம் தான்.மேலும், நபார்டின்கணிப்புப் படி பெரிய நிறுவனங்களின் மளிகை வர்த்தகத்தால், சிறிய கடைகளின் விற்பனை குறையவில்லை என, தெரிகிறது.இதற்கு, சிறிய கடைகள் வழங்கும் கடன் வசதி, சிறிய அளவிலான விற்பனை,வீட்டிற்கு பொருட்களை கொண்டு தரும் வசதி, ஆகியவை காரணங்களாக கூறப்படுகின்றன. 60 சதவீதம் நுகர்வோர்,காய்கறிகள், பழங்கள், முட்டை, பால், இறைச்சி போன்றவற்றை, அவரவர் பகுதியில் உள்ள சிறிய கடைகளில்வாங்குவதையே விரும்புவதாக நபார்டு நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது.தற்போது, மளிகை வர்த்தகத்தில், பெரியகடைகள் ஏற்படுத்தியுள்ள குன்றிய தாக்கம் மற்றும் நுகர்வோரின் விருப்பங்களைகணக்கில் கொள்ளும் போது, வெளிநாட்டுநிறுவனங்கள், சிறிய கடைகளுக்கு, உடனடியாக பெரிய பாதிப்பை ஏற்படுத்துமா என்பதுகேள்விக்குறியாக உள்ளது.
ரூ.224.50 லட்சம் கோடி!
டிலாய்ட் பொருளாதார ஆய்வு நிறுவனம்ஒவ்வொரு ஆண்டும், "க்ளோபல்பவர்ஸ் ஆப் ரீடெய்லிங்க்’ என்றஅறிக்கையை வெளியிடுகிறது. இதில், உலகில் சில்லரை வர்த்தகத்தில் முன்னிலையில்இருக்கும் 250 நிறுவனங்கள் பற்றிஆய்வு விவரங்கள் வெளியிடப்படுகின்றன.
2012ம்ஆண்டிற்கான, இந்த அறிக்கையின்விவரங்கள் படி;
*உலகின்முன்னணி சில்லரை வர்த்தக நிறுவனங்களின், ஒரு ஆண்டிற்கான, மொத்தவிற்பனை – 224.50 லட்சம் கோடிரூபாய்
*இதில், 52.50 லட்சம் கோடி ரூபாய் விற்பனை, இந்த நிறுவனங்கள் வெளிநாடுகளில் நடத்தும்கடைகளில் இருந்து வந்தது.
*ஒவ்வொருநிறுவனத்தின் சராசரி ஆண்டு விற்பனை – 89,860 கோடி ரூபாய்
*250 முன்னணிநிறுவனங்களில், 147 நிறுவனங்கள்வெளிநாடுகளில் கடைகள் வைத்துள்ளன.
முனணியில் உள்ள 10 நிறுவனங்கள்
நிறுவனம் தாய் நாடு செயல்படும் நாடுகள்
வால்மார்ட் அமெரிக்கா 16
கேரேபோர் பிரான்ஸ் 33
டெஸ்கோ இங்கிலாந்து 13
மெட்ரோ ஜெர்மனி 33
தி குரோகர் கோ. அமெரிக்கா 1
ஷ்வார்ஸ் ஜெர்மனி 26
காஸ்ட்கோ அமெரிக்கா 9
தி ஹோம் டிப்போ அமெரிக்கா 5
வால்கிரீன் அமெரிக்கா 2
ஆல்டி ஜெர்மனி 18
கோலி சோடாவிற்குவால்மார்டில் இடம் கிடைக்குமா?
சில்லரை வணிகத்தில் அன்னியமுதலீட்டை அனுமதிப்பதால், தமிழகத்தில்மட்டும், 22 லட்சம் சில்லரைவியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும், உள்ளூர் தயாரிப்புக்கள் எல்லாம், மறைந்து அன்னிய நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்களை மட்டும் வாங்கும்நிலைக்கு தள்ளப்படுவோம் என்ற, கருத்துமுன் வைக்கப்படுகிறது.வியாபாரிகள்தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அதைப் பற்றி கவலைப்படாமல், சில்லரைவணிகத்தில், அன்னிய முதலீட்டைநேரடியாக அனுமதிக்கும் முடிவை, மத்தியஅரசு எடுத்து உள்ளது. இதனால், பொருட்களின் விலை குறையும், தரமான பொருட்கள் கிடைக்கும் என்பதோடு, நாட்டின் பொருளாதாரமும் மேம்படும் என, மத்திய அரசு தெரிவித்து உள்ளது. இது ஏமாற்று வேலை எனவும், இது சிறு வணிகர்களின் வாழ்க்கையை ஒட்டுமொத்தமாகமுடக்கும் செயல் என, வணிகர்கள்சங்கங்கள் கொதிப்படைந்துள்ளன. இதுகுறித்து, அனைத்து தரப்புவிஷயங்களையும் அலசி, ஆராய்ந்துபார்ப்போம்…
உள்ளூர்தயாரிப்புகள் காணாமல் போகும்:
த.வெள்ளையன்தலைவர், தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை :
சில்லரை வணிகத்தில் அன்னியமுதலீட்டை அனுமதிப்பதால், உள்ளூர்தயாரிப்புகள் காணாமல் போகும். கொக்ககோலா, பெப்சி போன்றவை வந்து,உள்ளூர் தயாரிப்பு பானங்கள் காணாமல் போனதே உதாரணம்.அன்னிய நிறுவனங்கள், அதிக பட்ச முதலீடு, அதிரடிவிளம்பரம், அரசியல் உதவிகள், அநியாய வியாபாரம் என்ற கொள்கையுடன் தான்வருகின்றன.போட்டியாளர்கள் மற்றும்உள்ளூர் வியாபாரிகளை திட்டமிட்டு அழிப்பர். உள்ளூர் தயாரிப்புக்களை மொத்தமாக வாங்கி, அதை புழக்கத்தில் விடாமல் முடக்கி, அழித்துவிட்டு, அவர்களின்தயாரிப்புக்களை விற்பனை செய்வர். உற்பத்திபொருட்களை, ஒட்டுமொத்தமாக நேரடிகொள்முதல் செய்வர். உள்ளூர்வியாபாரிகளுக்கு தர மாட்டார்கள்.இதனால், குறிப்பிட்ட ஒரு பொருளை வாங்கச் செல்லும்பொதுமக்கள், காய்கறி முதல் கார் வரைஎல்லாம் கிடைக்கும் என்ற விளம்பரத்தால், எல்லா பொருட்களையும் அங்கேயே வாங்க விரும்புவர்.இதனால், தமிழகத்தில்நேரடியாகவும், மறைமுகமாகும் சில்லரைவர்த்தகத்தின் மூலம் பயன்பெற்று வரும், 40 லட்சம் வியபாரிகளின் வாழ்க்கை பாதிக்கப்படும்.உற்பத்தியாளர்களிடம் நேரடி கொள்முதல் செய்து, அப்படியே விற்பதால், விலைகுறையும் என, பிரதமர் கூறுகிறார். இது அறிவு சார்ந்த கருத்து அல்ல. உற்பத்தியாளர்களிடம் நேரடி கொள்முதல் செய்யும்நிறுவனங்கள், அவற்றை கிடங்குகளில்பதுக்கி, உலக அளவில் வர்த்தகம்செய்வதால், விலை அதிகம் கிடைக்கும்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வார்கள்.பிறஇடங்களில் உள்ள மட்டமான பொருட்கள் இங்கு இறக்குமதியாகும்.தரமில்லாத பொருட்களையும் மக்கள், அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை வரும். இதனால், சில்லரைவியாபாரிகள் மட்டுமின்றி, பொதுமக்களும்பாதிக்கப்படுவர். மத்திய அரசு, இதை தடுக்காது. அமெரிக்காவின் உத்தரவுக்கு பணிந்து, மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவை எதிர்க்க வேண்டியது நமது கடமை.
சில்லரைவியாபாரிகள் ஒட்டு மொத்தமாக முடங்குவர்:
விக்கிரமராஜாதலைவர், தமிழ்நாடு வணிகர் சங்கபேரமைப்பு :
சில்லரை வர்த்தகத்தில் அன்னியமுதலீட்டை அனுமதிப்பதால், காய்கறிசந்தைகள், சிறிய உணவகங்கள் எல்லாம்இழுத்து மூடப்படும். வால்மார்ட்போன்ற, வெளிநாட்டு நிறுவனங்கள்இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தும். வால்மார்ட்நிறுவனம், 27 லட்சம் கோடி ரூபாய்முதலீட்டில் வர்த்தகம் செய்கிறது.இந்தநிறுவனம், சீசன் கால பொருட்களைஒட்டுமொத்தமாக வாங்கும். தமிழதத்திற்குஆண்டுக்கு, 5,000 டன் நெல்தேவையெனில், விவசாயிகளிடம், அதை ஒரே நாளில் கொள்முதல் செய்யும். விலை குறைவாக இருந்தாலும், கையில் உடனே பணம் கிடைக்கிறதே என, விவசாயிகளும் உற்பத்திப் பொருட்களை தர முன்வருவர். காய்கறி உள்ளிட்ட எல்லாஉற்பத்திப் பொருட்களும் அவர்களிடம் செல்வதால், சந்தைக்கு வராது.இந்தசந்தைகளால் பயனடையும் , 22 லட்சத்திற்கும்மேற்பட்ட சில்லரை வியாபாரிகள் வாழ்க்கை பாதிக்கப்படும். ஆரம்பத்தில் உள்ளூர் தயாரிப்புகளை வாங்கும் அன்னிய நிறுவனங்கள், சில ஆண்டுகளில் சில்லரை வியாபாரிகள்ஒட்டுமொத்தமாக முடங்கியதும், உள்ளூர்தயாரிப்புக்கள் வாங்குவதை முற்றிலும் கைவிடுவர். ஏற்கெனவே, நம் பகுதியில்தயாரித்த, கோல்ட் ஸ்பாட், வின்சென்ட், போன்ற குளிர் பானங்கள் காணாமல்போய், பெப்சி, கோக் போன்றவற்றின்ஆதிக்கம் வந்துள்ளதே உதாரணம். வெளிநாட்டுநிறுவனங்களின் வருகையால், தமிழகத்தில், எல்லா நிலைகளிலும் வியாபாரிகள் பாதிக்கப்படுவர். இந்த நிறுவனங்களுக்கு ஆதரவாகத்தான், உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தையும் மத்தியஅரசு கொண்டு வந்துள்ளது. இதைதடுத்து வியாபாரிகளும், மக்களும்போராட வேண்டும்.
விவசாயிகளுக்கும்பாதிப்பு வரும்
வேல்சங்கர்தலைவர், தமிழ்நாடு உணவுப்பொருள்வியாபாரிகள் சங்கம் :
கிராமப்புறங்களில் விவசாயிகளுக்குதேவையான கட்டமைப்புகளை, அன்னியநிறுவனங்கள் செய்து கொடுத்த பின்புதான், அன்னிய நிறுவனங்களை அனுமதிப்போம் என, மத்திய அரசு கூறுகிறது. வெளிநாடுதொழில்நுட்பங்களை வாங்கி, பல கோடிரூபாயில் நாம் ராக்கெட் செலுத்துகிறோம். விவசாயிகளுக்கு கட்டமைப்பு செய்ய, அன்னிய
நிறுவனங்களை ஏன் அழைக்க வேண்டும்.நாட்டின்வளம் நம் கையில்தான் இருக்க வேண்டும். அன்னியர்களிடம் விடக்கூடாது. ஆரம்பத்தில் கூடுதல் விலை கொடுத்து வாங்குவோர். நாளடைவில் விலையை பாதியாக குறைப்பர். இதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவர். உற்பத்தியாளர்களை சார்ந்து தொழில் செய்தவியாபாரிகளும் பாதிக்கப்படுவர். அமெரிக்காவின்பொருளாதாரம் சீரழிந்ததுபோல், நம்நாடும் சீரழியும் நிலை வரும். அன்னியமுதலீட்டு அனுமதியை கைவிட்டு, விவசாயிகளுக்குதேவையான கட்டமைப்பு வசதிகளைச் செய்து தர, மத்திய அரசு முன் வரவேண்டும்.
"அன்னியநிறுவனங்களின் இறக்குமதியால் விவசாயிகள் அழிந்துவிடுவர்’:
டாக்டர். மோகன் ,செயலர், தமிழ்நாடுநெல், அரிசி மொத்த வியாபாரிகள்மற்றும் அரிசி ஆலை உரிமையாளர் சங்கங்களின் சம்மேளம் :
சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு என்பதுவரவேற்புக்குறியது அல்ல. அது இந்தியவிவசாயிகளின் பொருளாதாரத்தை பின்னோக்கி தள்ளிவிடும். அன்னிய முதலீட்டை எலக்ட்ரானிக், விமான போக்குவரத்து உள்ளிட்ட மற்ற எந்த துறையில் வேண்டுமானாலும்அனுமதிக்கலாம். ஏனெனில் அதில் நாம்பின் தங்கி உள்ளோம். ஆனால்உணவுப்பொருள் துறையில் அத்தகைய நிலை இல்லை.இந்தியாவில், 58.8 சதவீதமக்கள் விவசாயத்தை நம்பி உள்ளனர். 20 கோடி வணிகர்கள் உள்ளனர். அன்னியமுதலீட்டை அனுமதித்தால் அவர்களின் வாழ்வாதாரம் ஒட்டு மொத்தமாக பாதிக்கப்படும்.அன்னிய முதலீடு உள்ளே வருவதால், 10 கோடி பேருக்கு புதிய வேலை வாய்ப்புகள்கிடைக்கும் என்பது நடைமுறைக்கு உதவாத வாதம். அதனால், 20 கோடி பேர் சுயவேலை வாய்ப்பை இழந்து, அன்னியமுதலீட்டாளர்களிடம் வேலைக்காரர்களாக மாறும் நிலைதான் ஏற்படும்.இந்தியாவிற்குள் வரும் போது, குறைந்த விலையில் உணவுப்பொருட்களை கொடுக்கும்அன்னிய முதலீட்டு நிறுவனங்கள், ஒருசில மாதங்களில் தங்களின் சர்வாதிகாரத்தை செயல்படுத்துவர்.அதன் மூலம் அவர்கள் நிர்ணயிக்கின்ற விலைக்கு பொருட்களை வாங்கவேண்டிய நிலைக்கு நுகர்வோர் தள்ளப்படுவர். உதாரணத்திற்கு குளிர்பானங்கள், குடிநீர் பாட்டில்களின் விலை உயர்வை நாம் அறிவோம்.மொத்தத்தில் அவர்கள் இந்திய விவசாயிகளிடம் பொருட்களை வாங்க மாட்டார்கள். உலக சந்தையில் குறைந்த விலைக்கு வாங்கி, இங்கு தங்களை வளர்த்துக்கொள்வர். இங்கு உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு நமதுவிவசாயிகள் நிர்ணயிக்கும் விலையை அவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். இது தான் அன்னிய முதலீட்டின் நிலை.
விளை பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும்
ஜெயக்குமார் தலைவர், சென்னை பெருநகர சரக்கு வாகனபோக்குவரத்துஏஜென்டுகள் சங்கம்:
அன்னிய முதலீட்டால் தொழில் வளர்ச்சி மேம்படும். இந்தியா விவசாய நாடுதான். ஆனால் அதற்குரிய வளர்ச்சி திட்டங்கள் மிகவும்குறைவு. அடிப்படையில் நான் ஒருவிவசாயி. இன்றும், 10 ஏக்கரில் மஞ்சள், கரும்பு ஆகியவற்றை பயிரிட்டு வருகிறேன் என்றாலும் நஷ்டத்தையே சந்திக்கவேண்டி உள்ளது.விளை பொருளை உற்பத்திசெய்யும் விவசாயி அதற்குரிய விலையை நிர்ணயம் செய்ய முடியாத வியாபார நெருக்கடிநாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்நிலை மாறினால்தான் பொருளாதாரம் மேம்படும். ஆனால் இப்போது வரை விவசாயிகளிடம் இருந்து பொருட்களை கொள்முதல் செய்யும்இடைத் தரகர்கள்தான் அதிக லாபம் அடைகின்றனர். இதனால், 75 சதவீதம்இடைத்தரகர்களின் ஆதிக்கம் உள்ளது. அவர்களின்ஆதிக்கத்தால், உழைக்கின்றவிவசாயிகள் பலவீனமாகி விடுகின்றனர்.அவர்களின்உழைப்புக்கேற்ற வருவாய் கிடைப்பதில்லை. அதனால்தான் பலர் விவசாய நிலத்தை விற்று, வேறு தொழில்களுக்கு மாறிவிடுகின்றனர். விவசாய நிலங்கள் "கான்கிரீட்’ காடுகளாக மாறி வருவதால் மழை குறைந்து, இயற்கை வளமும், பொருளாதாரமும் சீர்குலைந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், அன்னியமுதலீட்டு நிறுவனங்கள் இங்கு வருவது வரவேற்கத்தக்கது. அவை, விளை பொருட்கள்உற்பத்தி செய்யப்படும் விவசாய பகுதிகளுக்கு நேரடியாக சென்று, அவற்றுக்குரிய விலை கொடுத்து கொள்முதல்செய்யும். மேலும் விவசாயிகளுக்குஉதவும் வகையில் மானியம் மற்றும் கடனுதவிகளை அளித்து, தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும். இது போன்ற மாற்றத்தால் நாட்டில் வேகமான பொருளாதார வளர்ச்சி ஏற்படும்.
பாதிக்குமா?பாதிக்காதா?
சில்லரை வர்த்தகத்தில், அன்னிய முதலீடு குறித்து, எக்கச்சக்ககேள்விகள் எழுந்துள்ளன. அவற்றிற்குபதில்களை தேடுவோம்…
அன்னிய நிறுவனங்கள் வந்தால்,அரசு கூறுவதுபோல், உணவு பொருட்கள் வினியோகத்திற்கான கட்டமைப்பு மேம்படுமா?
இந்தியாவில், காய்கறி, பழங்கள் போன்றதோட்டக்கலை பயிர்கள், ஒவ்வொருஆண்டும், கட்டமைப்பு வசதிஇல்லாததால், 30-40 சதவீதம் வரைவிணாவதாக அரசின் ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.இதில், குளிரூட்டுவசதிக்கான தேவைக்கும், இருப்புக்கும்மட்டும் உண்டான வித்தியாசம், 2.50 கோடிடன் என, கூறப்படுகிறது.அன்னிய நிறுவனங்கள் வந்தால், இந்த குளிரூட்டு வசதிகளை மேம்படுத்த முடியும், ஆனால், குளிரூட்டு வசதிகள் இந்த பயிர்கள் வீணாவதில் ஒரு பங்கு தான்.நிபுணர்கள் கருத்து படி,தோட்டக்கலை பயிர்களை, தோட்டத்தில் இருந்து சந்தைக்கு கொண்டு செல்லும் போது தான் பெருமளவு நஷ்டம்ஏற்படுகிறது.இது, சாலைகள் மேம்பட்டால் மட்டுமே சரியாகும். அதனால், அன்னிய நிறுவனங்கள் இதில் பங்களிக்க முடியுமா என்பது சந்தேகம் தான்.மேலும், இந்த வகையான கட்டமைப்புகளை உருவாக்குவது அரசின் பொறுப்பு. இதற்காக, எண்ணற்ற திட்டங்கள் வகுக்கப் பட்டு, சரியாக செயல்படுத்தப் படாததால், அவை தோல்வி அடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
குறைந்த அளவிலானாலும், கட்டமைப்புகள் எந்த அளவிற்கு மேம்படும்?
நம் நாட்டில், மொத்த விற்பனையில், 100 சதவிதம்அன்னிய முதலீடு, 2006ம் ஆண்டு முதல், அனுமதிக்கப் படுகிறது.சில்லரை வர்த்தகத்தில், அன்னிய முதலீட்டிற்கு அரசு அனுமதி அளிக்கும் என்று தெரிந்து, அன்னிய நிறுவனங்கள் இங்கு ஏற்கனவே மொத்தவிற்பனை தொழிலை துவங்கிவிட்டன.வால்மார்ட்நிறுவனம், "பெஸ்ட் ப்ரைஸ்’ என்ற பெயரில், 17 இடங்களில் செயல்படுகிறது. ஜெர்மனியின்மெட்ரோ நிறுவனம், "மெட்ரோ கேஷ்அண்டு கேரி’ என்ற பெயரில், 11 இடங்களில் செயல்படுகிறது. பிரான்ஸின் கேரேபோர் நிறுவனம், "கேரேபோர் ஹோல்சேல் கேஷ் அண்டு கேரி’ என்ற பெயரில், டில்லி மற்றும் ராஜஸ்தானில் செயல்படுகிறது.அதாவது, பொருட்களை வாங்கிசேமித்து வைக்கும் நிர்வாக அமைப்புகள், கிடங்குகள் ஆகியவை உருவாக்கப்பட்டு விட்டன. கடைகளை தொடங்குவது மட்டும் தான் மிச்சம்.இவை, கடந்த ஆறு ஆண்டுகளாகஉருவாகிய பின்பும், வேளான்பொருட்களின் வினியோக கட்டமைப்புகளில் பெரிய மாற்றம் ஏற்பட்டதாக தெரியவில்லை.கால போக்கில் இவற்றை விரிவுபடுத்த வாய்ப்புஉள்ளது. இருப்பினும் எந்த அளவிற்குமேம்படும் என, தெரியவில்லை.
பெரிய நிறுவனங்களின் நேரடி கொள்முதல் மூலம்விவசாயிகளுக்கு, நல்ல விலைகிடைக்கும் என, அரசு கூறுகிறதேஉண்மையா?
இடைத்தரகர்கள் மற்றும் வியாபாரிகள், விவசாயிகளின் சந்தைபடுத்தும் பலவீனத்தைபயன்படுத்தி கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றனர், என்பது பாட புத்தகங்களிலேயே உள்ள விஷயம்.தேசிய வேளான் மற்றும் ஊரக மேம்பாட்டு வங்கி (நபார்டு), கடந்த ஆண்டுநடத்திய ஆய்வில், ஸ்பென்ஸர்ரீட்டெயில் சூப்பர்மார்க்கெட்டுகளில் எடுக்கப்பட்ட தகவலின் படி, நேரடி கொள்முதல் மூலம் விவசாயிகளுக்கு, 8 சதவீதம் வரை அதிக விலை கிடைப்பதாகதெரியவந்தது.உள்நாட்டில், பெரிய சில்லரை வர்த்தக நிறுவனங்கள் ஏற்கனவேநேரடி கொள்முதலில் ஈடுபட்டு உள்ளன. இது, அன்னிய நிறுவனங்கள் வந்தால் அதிகரிக்கும்.இது தவிர, நேரடி கொள்முதல் மூலம் வளை பொருட்கள் வீணாவது, 7 சதவீதம் வரை குறையும் என, நபார்டுகணக்கிட்டு உள்ளது. இதுவும், விவசாயிகளுக்கு அதிக வருமானத்தை தரும்.
நேரடி கொள்முதலினால் ஏதாவது அபாயம் உள்ளதா?
நேரடி கொள்முதலில், பெரிய நிறுவனங்கள், விவசாயிகளிடம்குறிப்பிட்ட பயிர்களுக்கான ஒப்பந்தத்தை செய்து கொள்ளும். அதில், எத்தனை ஏக்கரில்பயிரிடப்பட வேண்டும், எவ்வளவுவேண்டும், பயிர்களின் ரகம், தரம், அளவு, நிறம் உள்ளிட்டவைகுறிப்பிடப்படும்.அதாவது, சூப்பர்மார்கெட்டுகளில் பெரும்பான்மையானோர்வாங்குவதற்கு ஏதுவாக இந்த அளவுகோல்கள் உருவாக்கப்படும்.இதனால், பயிர் பன்மைபாதிக்கப்படும் அபாயம் உண்டு. காலபோக்கில், இந்த ஒப்பந்தங்கள்அதிகரித்தால், மலை வாழைப்பழம், மாகாளி கிழங்கு போன்றவை, விவசாயிகளால் கைவிடப்படும் நிலை ஏற்படலாம். இதன் தாக்கம் தெரிவதற்கு பல ஆண்டுகளாகும். ஆனால், பெரிய நிறுவனங்கள் முழுமையாக, அனைத்து இடங்களுக்கும் ஊடுறுவினால் மட்டுமே இது நடக்கும்.மேலும், ஒப்பந்தம் செய்து கொள்ளும் விவசாயிகள், நிறுவனங்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப, தகுந்த நிறத்திலோ, தகுந்தவளைவுடனான வாழைப்பழத்தை விளைவிக்காவிட்டாலோ, அந்த பயிர் ஏற்றுக்கொள்ளப் படாது. இதனால், சமயத்தில், விவசாயிகள் நஷ்டம் அடைய வாய்ப்பு உள்ளது.
அன்னிய நிறுவனங்கள், வெளிநாடுகளில் இருந்து அனைத்து பொருட்களையும் மலிவு விலையில் இறக்குமதிசெய்து, உள்ளூர் கடைகளை "போண்டி’ ஆக்கிவிடுமா?
என்ன இறக்குமதி செய்தாலும்,அது இந்திய அரசின் இறக்குமதி வரன்முறைகளுக்குள் தான் செய்யமுடியும். அதாவது, அன்னிய நிறுவனங்கள் எதை இறக்குமதி செய்தாலும், அதையே இந்திய நிறுவனங்களும் செய்வதற்கு எல்லாவசதிகளும் உள்ளன.அதனால், அன்னிய நிறுவனங்களால் எல்.சி.டி., டி.வி.,யின் விலை திடீரென 2,000 ரூபாய்குறைத்து விற்பனை செய்ய முடியாது. உலகமெங்கும், சாம்சங் போன்ற டி.வி., நிறுவனங்கள் தான்செயல்படுகின்றன. அதனால், அன்னிய நிறுவனங்களால்,பெரும்பாலான பொருட்களில், உள்நாட்டு நிறுவனங்கள் வழங்காத அதிரடி சலுகைகளை வழங்க முடியாது.
சிறிய மற்றும் உள்நாட்டு கடைகள், அன்னிய நிறுவனங்களின் வருகையால் பாதிக்கப்படுமா?
சில்லரை வர்த்தகம் என்பது மளிகை பொருட்களின்வர்த்தகம் மட்டும் அல்ல (இந்தியாவில்சில்லரை வர்த்தகம் கட்டுரையை பார்க்கவும்). மளிகை பொருட்கள் தவிர மற்ற பொருட்களுக்கான வர்த்தகத்தில், உள்நாட்டு நிறுவனங்கள் நன்கு வளர்ந்துள்ளன. உதாரணத்திற்கு ஜவுளி, நகை போன்ற பொருட்களின் வர்த்தகம்.அதனால், இவை அன்னிய நிறுவனங்களின் வருகையால் பெரிய அளவில் பாதிக்கப்படவாய்ப்பில்லை.ஆனால், நம் நாட்டில், மொத்த சில்லரை வர்த்தகத்தில், மளிகை வர்த்தகம் தான் 61 சதவீதத்தைபிடித்து உள்ளது. இதில், பெரிய நிறுவனங்களின் பங்கு வெறும் ஒரு சதவிதம்தான். இதனால், அன்னிய நிறுவனங்கள் வந்தாலும், இது பெரிய அளவு அதிகரிக்குமா என்பது சந்தேகம்தான்.மேலும், நபார்டு ஆய்வின் படி,60 சதவீதத்திற்கும் மேலான மத்தியதர வர்க்கத்தினர், மளிகை பொருட்கள் வாங்குவதற்கு, சிறிய கடைகளையே விரும்புவதாக தெரியவந்து உள்ளது. (மேலும், தகவலுக்கு, வால்மார்ட்தோல்விகள் பகுதியை படிக்கவும்)இந்தியாபரந்து விரிந்த நாடு என்பதால், பெரியநகரங்களில், அன்னிய நிறுவனங்களால், பாதிப்பு ஒரளவிற்கு ஏற்பட்டாலும், மற்ற இடங்களில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை.
சுய தொழில் பாதிக்கப்படுமா?
தேசிய மாதிரி மதிப்பீடு நிறுவனம், 2004-05ல் எடுத்த வேலை வாய்ப்பிற்கான மாதிரிமதிப்பீட்டின் படி, 3.50 கோடி பேர்சில்லரை வர்த்தக தொழிலில் ஈடுபட்டு இருந்தனர். நாட்டில், வேலைபார்க்கும்வயதில் உள்ளவர்களில், இது 7.30 சதவீதம்.நம் நாட்டை பொறுத்தவரை, குறைந்தமுதல் வைத்து, சுலபமாக தொடங்கக்கூடிய சிறு தொழில் கடை வைப்பது தான்.ஏனெனில், பொருள் உற்பத்திபோன்ற தொழில்களுக்கு, அதிக முதல்தேவைப்படுவதோடு, அரசாங்கத்தின்எண்ணற்ற விதிகளாலும், ஊழலாலும், உற்பத்தி தொழிலில் இறங்குவது சற்று சிரமமானவிஷயம் தான்.சில்லரை வர்த்தகத்தில், காலப் போக்கில், பெரிய நிறுவனங்களின் ஆதிக்கம் முழுமையாகி விட்டால், சிறு கடைகள் போடுவதற்கான வாய்ப்புகள்குறைந்துவிடும். இதனால், முதலை கொஞ்சம் கொஞ்சமாக ஈட்டி வரும்சமுதாயங்களால், கடைகள் அமைத்து, தங்கள் சமுதாயத்தினரின் முதலை பெருக்குவதற்கானவாய்ப்பு குறையும் அபாயம் உள்ளது.
சிறு உற்பத்தியாளர்களின் பொருட்களுக்கு பெரியகடைகளில் இடம் கிடைக்குமா?
வீட்டிலேயே ஊறுகாய் போடுவோர், முறுக்கு சுற்றுபவர்கள், அப்பளம் தயாரிப்பவர்கள், கோலி சோடா தயாரிப்பவர்கள் என, நம் நாட்டில், சிறு, குறுஉற்பத்தியாளர்களின் எண்ணிக்கை ஏராளம். தற்போது, இவர்கள், சிறு கடைகள் மூலம் தங்கள் பொருட்களை விற்றுவருகின்றனர். உள்நாட்டு "சூப்பர்மார்கெட்’டுகளில் இவர்களது பொருட்களுக்கு இடம் இருப்பதாக தெரியவில்லை.அதே போல், வெளிநாட்டு நிறுவனங்களின் "சூப்பர்மார்கெட்’டுகளிலும்இவர்களது பொருட்களுக்கு இடம் கிடைக்காது. "சூப்பர் மார்க்கெட்’ தொழிலின்ஆதிக்கம் முழுமையாகிவிட்டால், சிறுஉற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவர் என்பதில் சந்தேகம் இல்லை. பெப்ஸி, கோக்க கோலா, போன்றகுளிர்பானங்கள் வந்தபோதே கோலி சோடா மற்றும் உள்ளூர் குளிர்பானங்களின் விற்பனைஅடிபட்டது. அது தொழில் போட்டிரீதியான தோல்வி.ஆனால், வளர்ந்து வரும் ஒரு சந்தையில், பொருளை விற்க இடம் கிடைக்காதது வாய்ப்புபறிக்கப்படுவதால் ஏற்படும் தோல்வி.என்னதான், அரசு விதிகளின் படி, அன்னிய நிறுவனங்கள், 30 சதவீதம்பொருட்களை உள்நாட்டு சிறு மற்றும் உற்பத்தியாளர்களிடம் வாங்க வேண்டும் என்றுஇருந்தாலும். இதிலும், வசதியுள்ள உள்நாட்டு நிறுவனங்கள் தான்பயன்பெறுவரே தவிர. உண்மையிலேயேசந்தைப்படுத்துதல் தேவைப்படும், சிறு, குறு உற்பத்தியாளர்கள் பயன் பெற மாட்டார்கள்.
வால்மார்டின் தோல்விகள்:
வால்மார்ட், பல நாடுகளில் செயல்படும், உலகிலேயேபெரிய சில்லரை வர்த்தக நிறுவனமாக இருந்தாலும், கால் பதித்த அனைத்து இடங்களிலும் வெற்றி பெறவில்லை. முக்கியமாக, ஜெர்மனி, தென் கொரியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் தோல்வியடைந்துஉள்ளது. இந்தோனேசியாவில் இருந்துஅரசியல் காரணங்களால் வெளியேறிய வால்மார்ட், ஜெர்மனி மற்றும் தென் கொரியாவில் தொழில் ரீதியாக தோல்வி அடைந்தது.
ஜெர்மனி:
1997ம் ஆண்டில் ஜெர்மனியில்நுழைந்த வால்மார்ட், 2006ம் ஆண்டு, சுமார் 95 கடைகளை மூடிவிட்டு கிளம்பிவிட்டது. இதில், அந்த நிறுவனத்திற்கு6,900 கோடி ரூபாய் வரை நஷ்டம்ஏற்பட்டு இருக்கலாம் என, தொழில்நிபுணர்கள்கணக்கிட்டு உள்ளனர்.இந்ததோல்விக்கான காரணங்கள் குறித்து, ஜெர்மனிநாட்டின், பிரெமன் பல்கலை, ஓர் ஆய்வு அறிக்கையை வெளியிட்டு உள்ளது. அதில், வியூகத்தில் பிழை, நிர்வாகதடுமாற்றம், பலத்த போட்டி மற்றும் ஜெர்மானிய சட்டங்களை மதிக்காததால் ஏற்பட்ட கெட்ட பெயர் ஆகியவை, முக்கிய காரணங்களாக குறிப்பிடப் பட்டு உள்ளன.

வியூகத்தில் பிழை
ஜெர்மனியில் ஏற்கனவே இயங்கி வந்த இரண்டு சில்லரைவர்த்தக நிறுவனங்களை வாங்கித்தான் வால்மார்ட் நுழைந்தது. இந்த இரண்டு நிறுவனங்களின் நிர்வாகங்களும், ஊழியர்களும் சரியாக ஒருங்கிணைக்கப் படவில்லை.நிர்வாக தடுமாற்றம்: முதலில், அமெரிக்க நிர்வாகிகளை வைத்தே வால்மார்ட் நடத்தவிரும்பியது. இவர்களுக்கு ஜெர்மானியகலாசாரம், மொழி ஆகியவற்றின் பரிச்சயம் இல்லாததால், ஊழியர்களிடையேஅதிருப்தியை ஏற்படுத்தினர். மேலும், இது, ஏற்கனவே இருந்த ஜெர்மானிய நிர்வாகிகளிடையேயும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
பலத்த போட்டி:
ஜெர்மனியில், வால்மார்ட் நுழைவுக்கு முன்பே, மெட்ரோ, ஆல்டி, லிடில், நார்மா, ரீவீ போன்ற பெரியசில்லரை வர்த்தக நிறுவனங்கள் கோலோச்சி வந்தனர்.வால்மார்ட் நிறுவனத்தின் வியூகம், "குறைந்த விலை, சிறந்த சேவை’ என்ற அடிப்படையில் இருந்தது. ஆனால், ஜெர்மனியில், ஆல்டி போன்றநிறுவனங்கள் குறைந்த விலை வியூகத்தில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்ததால், வால்மார்ட் அவர்களை வெல்ல முடியவில்லை.மேலும், சிறந்த சேவை என்ற பெயரில் வால்மார்ட் அமெரிக்க பாணியில், நுகர்வோர் வரவேற்பு போன்ற விஷயங்களை அமைத்தது. இது ஜெர்மானிய கலாசாரத்தில் பழக்கம் இல்லைஎன்பதால், சில நுகர்வோர், வரவேற்பாளர்கள் தங்களை தாக்க வந்ததாக கருதி போலீஸில் புகார் கொடுத்தனர்.
ஜெர்மானிய சட்டங்கள்:
மூன்று முக்கிய ஜெர்மானிய சட்டங்களை வால்மார்ட்மதிக்காததாகவும், அதனால், அதற்கு கெட்ட பெயர் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுஉள்ளது. அந்த சட்டங்கள்;
1. பெரிய நிறுவனங்கள்காரணம் காட்டாமல், எந்த பொருளையும்அதன் உற்பத்தி விலைக்கு கீழ் விற்க அனுமதி இல்லை.
2. அனைத்து "கார்பரேட்’ நிறுவனங்களும் வரவு, செலவுகணக்குகளை காண்பிக்க வேண்டும்.
3. காலியான பிளாஸ்டிக்மற்றும் உலோக குளிர்பான குப்பிகளை, நுகர்வோர்கடைகளில் கொடுத்தால், அதற்கு அந்தகடை பணம் கொடுக்க வேண்டும்; அல்லதுஅந்த வகையான பொருட்களை விற்பனை செய்யக் கூடாது.
தென் கொரியா:
தென் கொரியாவில் 1997ல், சில்லரை வர்த்தகத்தில்அன்னிய முதலீடு அனுமதிக்கப் பட்டது. வால்மார்ட் 1998ல்நுழைந்தது. ஆனால், எட்டு ஆண்டுகளுக்குள்,2006ம் ஆண்டு தோல்வி அடைந்து வெளியேறியது.இது குறித்து, தென் கொரியாவின், ஹான்யாங்பல்கலை ஒர் ஆய்வு அறிக்கையை வெளியிட்டது. அதில், போட்டி, இட பற்றாக்குறை மற்றும் கொரியர்களின் நுகர்வுபழக்கங்கள், முக்கிய காரணங்களாககுறிப்பிடப் பட்டு உள்ளன.
போட்டி:
வால்மார்ட் நுழைவதற்கு முன்பே, கொரியாவில் பெரிய சில்லரை வர்த்தக நிறுவனங்கள்நன்கு வளர்ந்து இருந்தன. அவற்றில், ஷின்செகே, லோட்டே, சாம்சங் மற்றும்எல்ஜி முன்னணி வகித்தன.தற்போது, ஷின்செகே நடத்தும் "இ-மார்ட்’ தான் தென் கொரியாவில் முதன்மை சில்லரை வர்த்தகநிறுவனம்.உள்நாட்டு நிறுவனங்கள் பலஆண்டுகளாக நன்கு செயல்பட்டு வந்ததாலும், அவர்களின் நுகர்வோர் கலாசார புரிதலாலும், அவர்களை போல் குறைந்த விலையை வால்மார்ட் கொடுக்க முடியாததாலும், வால்மார்ட் நிறுவனத்திற்கு பின்னடைவு ஏற்பட்டது.
இட பற்றாகுறை:
அனைத்து நகரங்களிலும் உள்நாட்டு வர்த்தகர்கள்முக்கிய இடங்களை கைப்பற்றி வைத்திருந்ததால், வால்மார்ட் நிறுவனத்திற்கு கடைகளை அமைக்க தகுந்த இடங்கள் கிடைக்கவில்லை.
நுகர்வு பழக்கங்கள்:
கொரிய நுகர்வோர், நடந்து செல்லும் தூரத்தில் உள்ள கடைகளையே விரும்புகின்றனர். கொஞ்சம், கொஞ்சமாக, தேவைக்கு ஏற்பமட்டுமே பொருட்களை வாங்குகின்றனர்.
கடைகளில், ஊழியர்கள் அவர்களுக்கு உதவ வேண்டும் என, எதிர்பார்க்கின்றனர். அனைத்துகடைகளிலும் சுவைத்து பார்ப்பதற்கும், பயன்படுத்தி பார்ப்பதற்கும், அழகான பெண்களை வைத்து இலவசங்கள் கொடுப்பது வழக்கம். கடைகளில், ஒரு கொண்டாட்டம் போன்ற சூழல் எப்போதும் நிலவ வேண்டும் என, எதிர்பார்ப்பர்.இதில், எதையுமே வால்மார்ட்நிறுவனத்தால் சரியாக செய்ய முடியவில்லை. வால்மார்ட் நிறுவனத்தின் பிரம்மாண்ட கடைகளை, கிடங்குகள் போல் இருந்ததாக கருதினர். மேலும், வால்மார்ட், குறைந்த விலைகளை விளம்பரப்படுத்தியதை அவர்கள்விரும்பவில்லை. அதனால், வால்மார்ட் கடைகளுக்கு செல்வதை கவுரவகுறைச்சலாக அவர்கள் நினைத்தனர்.கொரியநுகர்வோரை பொறுத்தவரை, இறைச்சி, மீன் போன்ற விஷயங்கள் அவர்கள் கண்களுக்குமுன்பே துண்டு போடப் பட வேண்டும். அது, நல்ல நிலையில் உள்ளதா என்பதை சோதித்து தான்வாங்குவர். இந்த வசதியை உள்நாட்டுநிறுவனங்கள் தங்கள் "சூப்பர்மார்கெட்’டுகளுக்கு உள்ளளேயே உருவாக்கினர். வால்மார்ட் அதை செய்யவில்லை. அதே நேரத்தில் கொரியர்கள் மிகவும் விரும்பும்தங்கள் பாரம்பரிய உணவுகளையும் வால்மார்ட் போதிய அளவில் தரவில்லை.வால்மார்ட் கடைகளில், மளிகை பொருட்களோடு, மின்மற்றும் மின்னணு பொருட்கள், அறைகலன்கள்என, அனைத்து வகை பொருட்களும் ஒரேஇடத்தில் விற்கப்பட்டன. இதையும்கொரியர்கள் விரும்பவில்லை. கொரியாவில்வெற்றிபெற்ற டெஸ்கோடெஸ்கோ, இங்கிலாந்தைசேர்ந்த, உலகில் மிகப்பெரிய சில்லரைவர்த்தக நிறுவனங்களில் ஒன்று. டெஸ்கோ, தென் கொரியாவில் நுழைந்தவுடன், சாமர்த்தியமாக, சாம்சங் நிறுவனத்துடன் ஒப்பந்தமிட்டுக் கொண்டது. கொரியாவில் "சாம்சங்டெஸ்கோ’ என்ற பெயரில் கடைகளைநடத்தியது. ஸாம்சங் ஏற்கனவே சில்லரைவர்த்தகத்தில் செயல்பட்டு வந்ததால், கொரிய நுகர்வோரின் விருப்பத்திற்கு ஏற்ப, டெஸ்கோ கடைகளை அமைக்க முடிந்தது. இதனால், தென் கொரியாவில், டெஸ்கோ, நல்ல வெற்றி பெற்றது.

"சப்போட்டா!"



வெப்ப மண்டலப் பழங்களில் சப்போட்டாவிற்குத் தனிச் சிறப்புண்டு. இதன் தாயகம் மெக்சிகோ ஆகும். ஆங்கிலத்தில் ‘சப்போட்டா’

(sapota) என்றும் ‘சப்போடில்லா’ (sapodilla) என்றும் கூறப் படுகிறது. இதன் தாவர இயல் பெயர், ‘அக்ரஸ் சப்போட்டா’ (Achars sapota).. சப்போட்டேசியே (sapotceae) என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. சப்போட்டா விற்கு, ‘அமெரிக்கன்புல்லி’ என்று ஒரு சிறப்புப்பெயர், செல்லப் பெயர் உண்டு.


* சீமை இலுப்பை


‘சப்போட்டா’ என்ற ஆங்கிலப் பெயரையே பெரும்பாலும் தமிழில் சப்போட்டா என்று பேச்சு வழக்கில் சொல்லியும், எழுதியும் வருகி றோம். இதன் தூய தமிழ்ப்பெயர், ‘சீமை இலுப்பை’ ஆகும். இலுப்பைப் பழத்தைப் போல் உருவ முடையதால் இப்பெயர் வந்தது. ஆனால், இலுப்பைப் பழத்தை விட அளவில் பெரியது சப்போட்டா பழம்.


* பயிரிடப்படும் மாநிலங்கள்


இந்தியாவில் சுமார் ஆயிரம் ஆண்டுகளாக சப்போட்டா பயிரிடப்படுகிறது. குஜராத்தில் அதிக பரப்பளவில் பயிரிடப்படுவதால், குஜராத்திற்கு ‘சப்போட்டா மாநிலம்’ என்று ஒரு சிறப்புப் பெயர் உள்ளது. மகாராஷ்டிரா, தமிழ்நாடு , கர்நாடகா, ஆந்திரா, மேற்கு வங்காளம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் கணிசமான பரப்பளவில் சப்போட்டா பயிரிடப்படு கிறது.


* வகைகள்


சப்பேட்டா பழத்தில் உருண்டை வடிவம், முட்டை வடிவம்போன் ற பல வகைகள் உண்டு. இதே போல், சிறியளவு, பெரிய அளவு கொண்டதும் உள்ளன.

இவற்றுள், சிறிய அளவு கொண்டது நாட்டு ரகங்கள். பெரிய அளவு கொண்டது, அதிக விளைவு தருவதாகும். இவை ஆராய்ச்சி மூலம் கண்டுபிடிக்கப்பட்டவை ஆகும். இரண்டிலும், பெரும்பான்மையும், ஒரே மாதிரியான சத்துக்கள் அடங்கி உள்ளன. ஆராய்ச்சி மூலம் கண்டுபிடிக்கப்பட்ட உயர் விளைச்சல் தரும் வகைகள் கோல்கத்தா ரவுண்ட், பாதாம், கிரிக்கெட் பால், துவார புரி, கீர்த் திபத்தி, ஓவர் முதலியன ஆகும்.

* சத்துப் பொருட்கள்


நாம் சாப்பிடும் நூறு கிராம் சப்போட்டாப் பழத்தில் கீழ்க்கண்ட அளவு சத்துப்பொருட்கள் அடங்கியுள்ளன. புரதம் 1.0 கிராம், கொழுப்பு 0.9 கிராம், நார்ப்பொருள் 2.6 கிராம், மாவுப் பொருள் 21.4 கிராம், கால்சியம் 2*.1 மில்லி கிராம், பாஸ்பரஸ் 27.0 மி.கி, இரும்புச் சத்து 2.0 மி.கி, தரோட்டின் 97 மைக்ரோகிராம், ரைபோஃபிளோவி ன் 0.03 மி.கி, நியாசின் 0.02 மி.கி, வைட்டமின் சி 6.1 மி.கி.


* எப்படிச் சாப்பிடலாம்:


சப்போட்டா நன்கு பழுத்தபின், நன்கு கழுவிச் சுத்தம் செய்து, உள்ளி ருக்கும் கறுப்புநிற விதைகளைக் களைந்து விட்டு, சாப்பிட வேண்டும். பழங்களில் மிகு ந்த இனிப்புச் சுவை கொண்டது சப்போட்டா தான். பழக்கூழ், ஜாம், சிரெப், கா ண்டி முதலியன தயாரித்துச் சாப்பிட லாம். சப்போட்டா பழக்கூழுடன், காய்ச்சின பால்சேர்த்து சப்போட்டா கீர்’’ செய்து பருகலாம். சப்போட்டா பழத்தைக் கொண்டு பாயசம், கேசரி, பர்பி முதலியன தயாரித்து இனிப்புப் பலகாரமாக சாப்பிடலாம்.


* மருத்துவப் பயன்கள்


நமது சருமத்தை மிருதுவாக்கி, அழகுக்கு சப்போர்ட் கொடுப்பதில் சிறந்தது சப்போட்டா! அதிக ஈரப்

பதத்தைத் தன்னுள் கொண்ட சப்போட்டா பழத்தின் அழகு மற்றும் ஆரோக்கிய பலன்களைப் பார்க்கலாம். ஒல்லியாக இருப்பவர்களுக் கு புறங்கை மற்றும் முழங்கையில் நரம்பு புடைத்து கொண்டு, முண்டு முண்டாகத் தெரியும். இதற்கு தீர்வு தருகிறது சப்போட்டா.

தோல் மற்றும் கொட்டை நீக்கிய சப்போட்டா பழத்துடன் 4 டீஸ்பூன் பால் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். இந்த விழுதில் 2 டீஸ்பூன் எடுத்து, அதில் ஒரு டீஸ்பூன் வெள்ளரி விதை பவுடர் கலந்து, குளிப்பதற்கு முன் கை, முழங்கை, விரல்களில் நன்றாகப்பூசுங்கள். சப்போட்டா வில் உள்ள ஈரப்பதம், கைகளை பொலிவாக்குவதுடன் பூசினாற்போலவும் காட்டும்.


ஒட்டிய கன்னங்கள், மொழு மொழு வென பிரகாசிக்க வேண்டுமா? சிறிது சப்போட்டா சதையுடன் ஒரு டீஸ்பூன் ரோஸ் வாட்டர், அரை டீஸ் பூன் சந்தன பவுடர் கலந்து கிரீம் போல குழைத்துக் கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை முகம் முதல் கழுத்து வரை இட, வலமாக பூசுங் கள். தடவிக் கொண்டிருக்கும்போதே இந்த பேஸ்ட் உலர்ந்துவிடும். அதனால் லேசாக தண்ணீரைத் தொட்டு 5 முதல் 6 முறை தேயுங்கள். பிறகு சூடான நீரில் முகத்தை க் கழுவுங்கள். வாரம் இருமுறை இப்படி செய்து வந்தால் பளபளவென மின்னுமே கன்னம் ‘எனக்கு ஆப்பிள் கன்னம்தான். ஆனாலும் பளபளப்பு இல்லையே..” என்கிறவர்கள், ஒரு டீஸ்பூன் கனிந்த சப் போட்டா பழ விழுதுடன் தலா ஒரு டீஸ்பூன் பால் மற்றும் கடலை மாவு கலந்து முகத்தில் ‘பேக்’ போட் டு, பத்து நிமிடம் கழித்து கழுவுங்கள். வாரம் இருமுறை இப்படி செய் தால் ‘ப்ளீச்’ செய்தது போல முகம் பளிச் சென்று இருக்கும்.


கொத்து கொத்தாக முடி கொட்டுகிற தே..’ என்று கவலைப்படுகிறவர்களுக்கு கைகொடுக்கிறது ‘சப்போட்டா கொட்டை தைலம்’. ஒரு டீஸ்பூன் சப் போட்டா கொட்டை பவுடருடன், ஒரு கப் நல்லெண்ணெய், கால் டீஸ்பூன் மிளகுத்தூள் கலந்து அடுப்பில் வைத்து கை பொறுக்கும் சூட்டில் காய்ச்சுங்கள். ஆறியதும் வடிகட்டுங்கள். இந்த தைல த்தை பஞ்சில் நனைத்து, தலை யில் தேய்த்து, அரை மணி நேரம் ஊறவிடுங்கள். பிற கு கடலைமாவு, சீயக்காய் தேய்த்து குளியுங்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இப்படி குளித்து வந் தால், ஒரே மாதத்தில் தலை மேல் பலன் கிடைக் கும்.


கண்டிஷனராகவும் கலக்குகிறது சப்போட்டா. காய வைத்த சப்போட்டா தோல் 100 கிராம், சப்போட்டா கொட்டை 50 கிராம். இரண்டையும் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். இதனுடன் கொட்டை எடுத்த புங்கங்காய் 100 கிராம், கொட்டை எடுத்த கடுக்காய் 10 கிராம், உலர்ந்த செம்பருத்தி பூ 50 கிராம், வெந்தயம் 100 கிராம்.. என எல்லாவற்றையும் சேர்த்து மெஷினில் அரைத்துக் கொள்ளுங்கள். வாரம் ஒருமுறை தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது சீயக்காய்க்கு பதிலாக இந்த பவுடரை தேய்த்துக் குளித்தால், நுனி முடி பிளவு குறைவதுடன், முடியின் வறட்டுத் தன் மை நீங்கி, பளபளப்பு கூடும்.


ஒரு டீஸ்பூன் பயத்தமாவுடன் அரை டீஸ்பூன் சப்போட்டா பழ விழுது, 4 துளி விளக்கெண்ணெய் கலந்து, குளிப்பதற்கு முன் உள்ளங்கை, விரல், நகம், பாதங்க ளில் தடவி, குளியுங்கள். தோலின் வறட்சி நீங்கி, மெழுகுபோல மிளிரும் பாதங்கள்!சப்போட்டா பழம், ரத்த ஓட்டத்தை சீராக்கி, கொழுப்பை நீக்குகிறது. வாய்ப்புண், வயிற்றெரிச்சல், மூல நோய் மற்று ம் மலச்சிக்கலுக்கும் தீர்வு தந்து, சிறந்த நோய் நிவாரணியாக செயல்படுகிறது. உடம்பு சூட்டை தணித்து, குளிர்ச்சி தருகிறது. 100 கிராம் சப்போட்டா பழத்தி ல் 28 மி.கிராம் கால்சியமு ம், 27 மி.கிராம் பாஸ் பரஸூம் இருக்கிறது. தினமும் 2 சப் போட்டா பழம் சாப்பிட்டால் எலும்புகள் வலுப்பெறும். முடி வளர்ச்சி அதிகரிக்கும். சரும பளபளப்பு கூடும்.


பித்தத்தால் ஏற்படும் வாந்தி, மயக்கத்தை சப்போட்டா போக்கும். சப் போட்டா பழத்துடன் ஒரு டீஸ்பூன் சீரகத்தை சேர்த்து சாப்பிட, பித்தம் நீங்கும். சப்போட்டா பழ ஜூஸூடன் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு கல ந்து சாப்பிட்டால் சளித்தொல்லை நீங்கும். சப்போட்டா உடம்பில் உள் ள தேவையில்லாத கொழுப்பை குறைத்துவிடும். சப்போட்டா பழத் தை அப்படியே சாப்பிட பிடிக்காத வர்கள், இரண்டு பழத்துடன், ஒரு டம்ளர் பால் சேர்த்து, மிக்ஸியில் அடித்து மில்க் ஷேக் செய்து சாப்பி டலாம்.


2 சப்போட்டா பழத்துடன், ஒன்றரை டீஸ்பூன் டீ தண்ணீரை கலந்து சாப்பிட்டால் வயிற்றுப்போக்கின் போது ரத்தம் கலந்து வெளியேறு வது குணமாகும். இரவெல்லாம் தூக்கம் இல்லாமல் தவிக்கிறவர்க ள், சப்போட்டா ஜூஸை குடித் துவிட்டு படுத்தால், அடுத்த நொடி தூக்கம் கண்களை தழுவும். பனைவெல்லம், சுக்கு , சித்தரத்தை மூன்றும் தலா ஒரு சிட்டிகை எடுத்து அதனுடன் ஒரு சப்போட்டா பழ பேஸ்ட்டை கலந்து லேகி யம்போல சாப்பிட்டால், திடீர் ஜுரம் வந்தவேகத்தில் காணா மல் போய்விடும்.


சப்போட்டா பழத்திலுள்ள சில சத்துப்பொருட்களும், வைட்டமின்க ளும், இரத்த நாளங்களைச் சீராக வைக்கும் குணம் கொண்டவை. இவை, இரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுக்கும் சிறப்பு செயல்பாடு உடையன ஆகும். கொலஸ்டிரால் பிரச்சனை உள்ளவர் களுக்கு இது இயற்கை மருந்தாகும். தினம் இரண்டு சப்போட்டா பழங்கள் சாப்பிடுவது நலன் பயக்கும்.


இதயம் சம்பந்தமான கோளாறுகளுக்கு ஏற்ப பாதுகாக்கும் தன்மையும் சப்போட்டா பழத்தி ற்கு உண்டு என அமெரிக்காவில் மேற்கொண் ட ஒரு ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கின்றது.
சப்போட்டா பழச்சாறுடன், தேயிலைச் சாறும் சேர்த்துப் பருகினால், இரத்தபேதி குணமாகும். சப்போட்டா பழக்கூழ், கோடையில் ஏற்படும் உடல் உஷ்ணத்தைக் குறைக்கும், தாகத்தையும் தணிக்கும் தன்மையது. தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள், இரவில் படுக்கைக்குப் போகும் முன் ஒரு தம்ளர் சப்போட்டா பழக்கூழ் குடித்தால், நிம்மதியான நித்திரைதான். ஆரம்பநிலை காசநோய் உள்ளவர்கள் சப்போட்டா பழக்கூழ்குடித்து, ஒரு நேந்திரன் பழமும் தின்று வர, காசநோய் குணமாகு ம். மூலநோய் உள்ளவர்களுக்கு, குறிப்பாக இரத்த மூலம் உள்ளவர்களுக்கு சப்போட் டா பழம் நல்ல எளிய இயற்கை மருந்து. பித்தத்தைப் போக்கும் குணம் சப்போட்டா பழத்திற்கு உண்டு. சப்போ ட்டா பழத்தைத் தின்று, பின்னர் ஒரு தேக்கரண்டி சீரகத்தை நன்கு மென்று விழுங்கினால் பித்தம் விலகும். பித்த மயக்கத்திற்கும் இது நல்மருந்து. சப்போட்டா கூழுடன், சிறிது சுக்கு, சித்தரத்தை பொடித்திட்டு, கொஞ்சம் கருப்பட்டியும் பொடித்திட்டு நன்கு கா ய்ச்சிக் குடித்தால், சாதாரண காய்ச்ச ல் குணமாகும். சப்போட்டா பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருபவர் களுக்கு, குடல் புற்று நோய் ஏற்படாது. இதில் கால்சியம், பாஸ்பரஸ் சத்துக்கள் கணிசமாக இருப்பதால், எலும்புகளை வலுப்படுத்தும். சப்போட்டா கூழுடன், எலுமிச்சம் பழச்சாறு சேர்த்துப் பருகினால் சளி குணமாகும். சப்போட்டா அடிக்கடி சாப்பிட்டுவந்தால், மேனியைப் பளபளப்பாக வைக்கும்

ஆதிலெக்ஷ்மி திருக்கோவில், சென்னை

வங்காள விரிகுடாக் கடற்கரையில், சென்னை பெசன்ட் நகரில் அமைந்த, அழகியல் நிறைந்த அஷ்ட லக்ஷ்மி கோயில். படிகளில் ஏறிச்சென்று, எட்டு திருநாமங்களில் கொலுவீற்றிருக்கும் அஷ்ட லக்ஷ்மி அன்னையைத் தரிசிக்கும் வண்ணம் கலை நயத்துடன், வடிவமைக்கப் பட்டுள்ளது இத்திருக்கோயில். அருள்மிகு அஷ்டலக்ஷ்மி தாயாரின் அருளைப் பெறவும், கவின்மிகு கடற்கரை அழகின் கண்கொள்ளாக் காட்சி

ITS NOT MOVING..BUT ITS MOVING..

Graviola Or Soursop


The Sour Sop or the fruit from the graviola tree is a miraculous natural cancer cell killer 10,000 times stronger than Chemo.

Why are we not aware of this? Its because some big corporation want to make back their money spent on years of research by trying to make a synthetic version of it for
sale.

So, since you know it now you can help a friend in need by letting him know or just drink some sour sop juice yourself as prevention from time to time. The taste is not bad after all. It’s completely natural and definitely has no side effects. If you have the space, plant one in your garden.
The other parts of the tree are also useful.

The next time you have a fruit juice, ask for a sour sop.

How many people died in vain while this billion-dollar drug maker concealed the secret of the miraculous Graviola tree?

This tree is low and is called graviola ! in Brazi l, guanabana in Spanish and has the uninspiring name “soursop” in English. The fruit is very large and the subacid sweet white pulp is eaten out of hand or, more commonly, used to make fruit drinks, sherbets and such.

The principal interest in this plant is because of its strong anti-cancer effects. Although it is effective for a number of medical conditions, it is its anti tumor effect that is of most interest. This plant is a proven cancer remedy for cancers of all types.

Besides being a cancer remedy, graviola is a broad spectrum antimicrobial agent for both bacterial and fungal infections, is effective against internal parasites and worms, lowers high blood pressure and is used for depression, stress and nervous disorders.

If there ever was a single example that makes it dramatically clear why the existence of Health Sciences Institute is so vital to Americans like you, it’s the incredible story behind the Graviola tree..

The truth is stunningly simple: Deep within the Amazon Rainforest grows a tree that could literally revolutionize what you, your doctor, and the rest of the world thinks about cancer treatment and chances of survival. The future has never looked more promising.

Research shows that with extracts from this miraculous tree it now may be possible to:
* Attack cancer safely and effectively with an all-natural therapy that does not cause extreme nausea, weight loss and hair loss
* Protect your immune system and avoid deadly infections
* Feel stronger and healthier throughout the course of the treatment
* Boost your energy and improve your outlook on life

The source of this information is just as stunning: It comes from one of America ‘s largest drug manufacturers, th! e fruit of over 20 laboratory tests conducted since the 1970's! What those tests revealed was nothing short of mind numbing… Extracts from the tree were shown to:

* Effectively target and kill malignant cells in 12 types of cancer, including colon, breast, prostate, lung and pancreatic cancer..
* The tree compounds proved to be up to 10,000 times stronger in slowing the growth of cancer cells than Adriamycin, a commonly used chemotherapeutic drug!
* What’s more, unlike chemotherapy, the compound extracted from the Graviola tree selectivelyhunts
down and kills only cancer cells.. It does not harm healthy cells!

The amazing anti-cancer properties of the Graviola tree have been extensively researched–so why haven’t you heard anything about it? If Graviola extract is

One of America ‘s biggest billion-dollar drug makers began a search for a cancer cure and their research centered on Graviola, a legendary healing tree from the Amazon Rainforest.

Various parts of the Graviola tree–including the bark, leaves, roots, fruit and fruit-seeds–have been used for centuries by medicine men and native Indi! ans in S outh America to treat heart disease, asthma, liver problems and arthritis. Going on very little documented scientific evidence, the company poured money and resources into testing the tree’s anti-cancerous properties–and were shocked by the results. Graviola proved itself to be a cancer-killing dynamo.
But that’s where the Graviola story nearly ended.

The company had one huge problem with the Graviola tree–it’s completely natural, and so, under federal law, not patentable. There’s no way to make serious profits from it.

It turns out the drug company invested nearly seven years trying to synthesize two of the Graviola tree’s most powerful anti-cancer ingredients. If they could isolate and produce man-made clones of what makes the Graviola so potent, they’d be able to patent it and make their money back. Alas, they hit a brick wall. The original simply could not be replicated. There was no way the company could protect its profits–or even make back the millions it poured into research.

As the dream of huge profits evaporated, their testing on Graviola came to a screeching halt. Even worse, the company shelved the entire project and chose not to publish the findings of its research!

Luckily, however, there was one scientist from the Graviola research team whose conscience wouldn’t let him see such atrocity committed. Risking his career, he contacted a company that’s dedicated to harvesting medical plants from the Amazon Rainforest and blew the whistle.

Miracle unleashed
When researchers at the Health Sciences Institute were alerted to the news of Graviola,! they be gan tracking the research done on the cancer-killing tree. Evidence of the astounding effectiveness of Graviola–and its shocking cover-up–came in fast and furious….

….The National Cancer Institute performed the first scientific research in 1976. The results showed that Graviola’s “leaves and stems were found effective in attacking and destroying malignant cells.” Inexplicably, the results were published in an internal report and never released to the public…

….Since 1976, Graviola has proven to be an immensely potent cancer killer in 20 independent laboratory tests, yet no double-blind clinical trials–the typical benchmark mainstream doctors and journals use to judge a treatment’s value–were ever initiated….

….A study published in the Journal of Natural Products, following a recent study conducted at Catholic University of South Korea stated that one chemical in Graviola was found to selectively kill colon cancer cells at “10,000 times the potency of (the commonly used chemotherapy drug) Adriamycin…”

….The most significant part of the Catholic University of South Korea report is that Graviola was shown to selectively target the cancer cells, leaving healthy cells untouched. Unlike chemotherapy, which indiscriminately targets all actively reproducing cells (such as stomach and hair cells), causing the often devastating side effects of nausea and hair loss in cancer patients.

விநாயகப்பெருமானின் உருவப்படம் அச்சிடப்பட்ட நாணயத் தால் .

உலகில் மிகப்பெரிய இஸ்லாமிய நாடு இந்தோனேசியா ஆகும். இந்தோனேசிய நாடானது 1998 ம் ஆண்டில் இந்துசமயத்தின் கடவுளான விநாயகப்பெருமானின் உருவப்படத்தினை தனது நாணயத் தாளில் அச்சிட்டு பெருமைப்படுத்தியது.

விநாயகப்பெருமானின் உருவப்படம் அச்சிடப்பட்டது 20,000 ருபியா நாணயத்தாளிலாகும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.



Friday, September 28, 2012

Sunbeam S7/S8, 1954



Giant Tricycle, 1896


The Boynton Bicycle Railway, 1892



“In 1892 the Boynton Bicycle Railway was built in Long Island. This railroad ran on a single rail at ground level, with an overhead stabilising rail. The railway operated for only two years, but the design was adopted elsewhere.”


Wreck of the SS Normandie, 1942


SS Normandie entered service in 1935 as the largest and fastest passenger ship afloat.  Her novel design and lavish interiors led many to consider her the greatest of ocean liners. Normandie held the Blue Riband for the fastest transatlantic crossing at several points during her service career.
“During World War II, Normandie was seized by US authorities at New York and renamed USS Lafayette. In 1942, the liner caught fire while being converted to a troopship, capsized onto her port side and came to rest on the mud of the Hudson River. Although salvaged at great expense, restoration was deemed too costly and she was scrapped in October 1946.


The history of the scroll bar

சோழப்பேரரசு



மேலைநாட்டவர் வெறும் வாணிபத்துக்காகவே கீழைநாடுகளை நாடிக்கொண்டிருந்த நாட்களில், கடல் கடந்து கொடி கட்டி ஆண்ட இனம் நம் தமிழினம். காம்போஜம்(கம்போடியா), ஸ்ரீவிஜயம்(சுமாத்திரா), சாவகம்(ஜாவா), சீயம்-மாபப்பாளம்(தாய்லாந்து), கடாரம்(மலேசியா), நக்காவரம்(நிக்கோபார் தீவுகள்), முந்நீர்ப்பழந்தீவு(மாலைதீவு) போன்ற தூரதேச நாடுகளிலெல்லாம், தமிழ் மூவேந்தரில் ஒருவரான சோழரின் புலிக்கொடி பறந்து அந்நா

ட்டவரெல்லாம் தமிழருக்கு திறை செலுத்தி பணிந்துநின்ற ஒரு பொற்காலம் சரித்திரத்தில் இடம்பிடித்திருக்கிறது. அவ்வாறு சிறந்திருந்த சோழப்பேரரசு தொடர்ந்து நீடிக்காததன் காரணம், போருக்கும் ஆக்கிரமிப்புக்கும் தொடர்ந்து ஆதரவளித்ததும் ஏனைய தமிழரசரான சேரர்-பாண்டியருடன் ஒற்றுமையின்றி இணங்கி நடக்காமையுமே என்பது அதே சரித்திரம் நமக்கு தரும் பாடம்.

Nice shot...

Mahabalipuram

"Mahabalipuram (as the place in called today) was known variably as Mallalkadal-Mallai and Mamallai in ancient Vaishnav hymns of the 6th-8th century A.D. The place, however dates back to early historic times on the evidence of stray pottery and roman coins.

All the monuments here except for the medieval Vishnu temple in worship in the heart of the village clearly owe their authorship to the Pall

avas of the Simha Vishu line who ruled from Kanchi. Mahabalipuram was one of the Pallava ports. A majority of the monuments (rock cut and monolithic) would seem to belong stylistically to the region of Narasimha Varmani, Mamalla (630-688 A.D.) while some others should be of the time of his successors such as Parameswaravarman (672-700 A.D.) and Narasimhavarmanii (Rajasimha) 700-728 A.D. All the four structural stone temples however, belong only to time of the last mentioned king. The monumental remains at Mahabalipuram are informed by three kinds of mode of execution: excavated cave temples, monolithic temples, models and structural erections. The first mentioned are essentially confined to the whole black granitic hillock rising in the centre of the village (e.g. the Trimurti, Mahishasura Mardini, Varaha Mandapa, Ramanuja Mandapa, Dharmaraja Mandapa) etc.

The pillars are both of simple square and octagonal shaft type as well as ornate fluted and lion based forms reflecting the elements of the pillar order. The monolithic rathas, however display the full form and features of the contemporary temple style and show many varieties both in ground plan and elevation they are of square (Dharmaraja , Arjuna and Draupadi Rathas), rectangular (Bhima Ganesha Rathas) and apsidal rathas, sahadeva rathas and range from single to triple stories. They carry art motifs as well as carved panels of many divinities on them together with the Valayankuttai and Pidari Rathas as isolated boulder on the western side of the hillock they represent the most impressive and the oldest preserved Vimana models of Tamil Nadu. The earliest and most modest of them is Mukundanayanar temple in the sand dune to the north of the light house and is very ornate though small sized and dilapidated.

The shore temples in the other hand are the best and give the most finite layout of a southern Vimana confute with Prakara, Dvarasala etc. and majestically fringe the sea. Most of these temples have Samaskanda (or vishnu or Durga etc.) as the case may be on the back wall of sanctum. The bas reliefs of Arjuna's penance and the Govardhana-Dhari are again another very important class of creation of Pallava activity. No less unique are the portrait sculptures with laurels, in the Adiyaraha cave temple, seemingly representing Simhavihsnu and Mahendravarman I. Many minor carvings of merit lie scattered in the place. They all bear mute witness to the virility of Pallava art and religious patronage. The standing structural temple which show a confidence in stone masonry constructions for first time, again have both simple as well complex models."

Appendicitis -அப்பன்டிசைடிஸ்


 
 Appendicitis (அப்பன்டிசைடிஸ்) - என்பது பொதுவாக கல்டைசல் வலி என எல்லோராலும் அழைக்கப்படுகின்றது. உண்மையில் இவ்வருத்தமானது குடல் வளரி தாக்கப்படுவதால் ஏற்படுகின்றது.

குடல் வளரி அல்லது குடல்வால் என்பது எமது உணவுக் கால்வாயின் பெருங்குடலும், சிறுகுடலும் பிரியுமிடத்தில் புறப்பக்கமாக நீட்டப்பட்ட விரல் மாதிரி அமைந்த நீளவடிவான ஒரு சிறு பை போன்ற உறுப்பு ஆகும். இது எமது வயிற்றின் கீழ்ப் பகுதியில் வலது பக்கமாக அமைந்துள்ளது. இவ் உறுப்பானது சுமார் 4 அங்குல நீளமும் அரை அங்குல விட்டமும் கொண்ட ஒரு புழு மாதிரியான தோற்றமுடையது.

அப்பன்டிசைடிஸ் என்ற பெயரைக் கேள்விப் படாதவர்கள் இருக்க முடியாது. இருந்தபோதும் நோய் பற்றிய தெளிவு பலருக்கும் இல்லை. நாம் உண்ணும் உணவில் உள்ள கல் குடலில் போய் அடைப்பதால்தான் ஏற்படுகிறது எனத் தவறாக எண்ணுபவர்கள் இன்றும் பலர் இருக்கிறார்கள்.

மனிதனின் உடலில் ஏராளமான பாக்டீரியாக்கள் வாழ்கின்றன. இவற்றில் நன்மை செய்யும் பாக்டிரியாக்களும் உண்டு. தீமை செய்யும் பாக்டிரியாக்களும் உண்டு. நன்மைசெய்யும் பாக்டீரியாக்கள் உணவை செரிக்கவைப்பதோடு மட்டுமல்லாமல், மனித உடலுக்குத் தீமை செய்யும் பாக்டீரியாக்களையும் விரட்டியடிக்கிறது.

இவ்வாறு செழிப்படைந்த நன்மைசெய்யும் பாக்டிரியாக்கள் உயிர் படலங்களாகக் குடல்வாலை ஆக்கிரமித்து கொண்டு வாழ்கின்றன. குடல்வாலே, தீமைசெய்யும் பாக்டீரியாக்களைத் தடுக்கும் அரணாக செயல்படுகிறது. எனவே குடல்வால் நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் கிடங்கு என அழைக்கப் படுகிறது.

பெருங்குடலில் வசிக்கும் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் கழிசல்,பேதி போன்றநோய்களின்போது வெளியேறிவிடுகின்றன. ஒரு-மண்டலம் ஆண்டிபயாட்டிக் மருந்து சாப்பிட்டபிறகும் இதேநிலை ஏற்படுகிறது. அதன் பிறகு குடலுக்குத் தேவையான நன்மை தரும் பாக்டிரியாக்களை சப்ளைசெய்வது அப்பென்டிக்ஸ் எனப்படும் குடல் வாலாகும்.

அப்பன்டிக்ஸ் எவ்வாறு ஏற்படுகிறது?
அப்பென்டிக்ஸ் குழாயில் அடைப்பு ஏற்படுவதால்தான் இது ஏற்படுகிறது. ஆனால் கல்லினால் அல்ல. மலத்துகள்கள், குடற் புழுக்கள், அல்லது கட்டிகள் பொதுவாகத் தடையை ஏற்படுத்தும். இதனால் அதில் சுரக்கும் திரவம் வெளியேற முடியாது தடைப்பட்டு வீங்கும். அத்துடன் அதில் கிருமித் தொற்று ஏற்பட்டு அழற்சியடையும்.

உடனடியாகச் சத்திரசிகிச்சை செய்து அதனை அகற்ற வேண்டும். இல்லையேல் வயிற்றறையில் அது வெடித்துவிடும். வெடித்தால் கிருமிகள் வயிற்றறை முழுவதும் பரவி ஆபத்தாக மாறிவிடும். வயிற்றறையில் அவ்வாறு கிருமி பரவுவதை பெரிடனைடிஸ் (Peritanaitis)என்பார்கள். எந்த வயதிலும் இந்நோய் ஏற்படலாம் என்ற போதும் 10 முதல் 30 வயதிற்கு இடைப்பட்டவர்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

அறிகுறிகள்
இதன் முக்கிய அறிகுறி வயிற்றில் ஏற்படும் வலிதான். இதன் வலியை எவ்வாறு ஏனைய வயிற்று வலிகளிலிருந்து வேறுபடுத்தி அறிவது?
திடீரென ஏற்படும் வலியாகும். தூக்கதிலிருந்தால் திடீரென விழத்தெழச் செய்யும்
ஆரம்பத்தில் முழு வயிறும் வலிப்பது போலிருக்கும். ஆனால் படிப்படியாக அவ்வலி வலது பக்க அடிவயிற்றில் நிலைகொள்ளும்.
முன்னெப்பொழுதும் அனுபவித்து இருக்காததாகத் தோன்றும் இவ்வலி சிலமணி நேரத்தில் மோசமாகும்.
படுத்தல், தலையணையை அணைத்தல், கால்களை மடக்கிப் படுத்தல் போன்ற எந்த நிலையிலும் குறையாது. ஆனால் எழுந்து நடக்கும் போதும், இருமும் போதும், தும்மும் போதும், ஆழ்ந்த மூச்செடுக்கும்போதும் தாங்க முடியாதளவு கடுமையாக இருக்கும்.

வலியைத் தொடர்ந்து வேறு சில அறிகுறிகளும் தோன்றலாம்
பசியின்மை
வாந்தி அல்லது வயிற்றுப் புரட்டு
மலங் கழித்தால் வலி குறையும் என்பது போன்ற உணர்வு. ஆனால் மலம் கழித்தாலும் வலி தணியாது.
கடுமையாக ஏறிக் காயாத குறைந்தளவு காய்ச்சல்
வயிற்றுப் பொருமல், வாய்வு வெளியேறுவதில் சிரமம்.
ஒரு சிலரில் மலச்சிக்கல் அல்லது மலம் இளக்கமாகக் கழிதல்

பொதுவாக எக்ஸ்ரே ஸ்கான் போன்ற எந்தப் ஆய்வு கூடப் பரிசோதனைகளும் இன்றி நோயாளியை சோதித்துப் பார்ப்பதன் மூலம் மருத்துவரால் நோயை நிச்சயிக்க முடியும்.

சிகிச்சை
அப்பென்டிசைடிஸ் என மருத்துவர் தீர்மானித்தால் சத்திர சிகிச்சை மூலம் அதனை அகற்றுவார்கள். இப்பொழுது பாரிய வெட்டுக் காயம் இன்றி சிறுதுளைகள் வழியான லப்ரஸ்கோபி சத்திரசிகிச்சையே பெரும்பாலும் செய்யப்படகிறது. உடனடியாகச் செய்வதன் மூலம் உன்ளே வெடிக்கும் ஆபத்தைத் தவிர்க்கலாம்.

சிறுதுளைகள் மூலம் சத்திரசிகிச்சை
சில தருணங்களில் அதைச் சுற்றிச் சீழ்க்கட்டி (Appendiciel Abscess) தோன்றலாம். நுண்ணுயிர் கொல்லி மருந்துகள் (Antibiotics) கொடுத்து அதைக் கட்டுப்படுத்துவதுடன் வயிற்றறையில் குழாய் விட்டு சீழை அகற்றவும் செய்வர். 6 முதல் 8 வாரங்களுக்குப் பின் சத்திர சிகிச்சை மூலம் அப்பென்டிக்சை அகற்றுவார்கள்.

சத்திரசிகிச்சை வசதி கிட்டாதபோது அல்லது நோயாளி சத்திரசிகிச்சைக்கு உட்படக் கூடியளவிற்கு ஆரோக்கியமாக இல்லையெனில் நுண்ணுயிர் கொல்லி மருந்துகள் மூலமும், நார்ப்பொருள் குறைந்த இலகுவாக சமிபாடடையும் ஆகாரங்களுடனும் சிகிச்சை அளிப்பதுண்டு.

சில ஆய்வுகள் சத்திரசிகிச்சை செய்யாமலே அப்பென்டிசைடிஸ் குணமாகும் என்று கூறுகின்றன. ஆயினும் சத்திரசிகிச்சைக்கான வசதிகள் இருக்கும்போது அவ்வாறு ரிஸ்க் எடுப்பது புத்திசாலித்தனம் என்று சொல்ல முடியாது

Emperor Ashoka in Sannathi

Sannathi intro slideSannathiSannathiSannathiSannathiSannathiSannathiSannathiSannathi

Thursday, September 27, 2012

நலம் தரும் முத்திரைகள்!

  
   தன்வந்திரி அருளிய “தன்வந்திரி 1000” என்கிற நூலில் விவரிக்கப் பட்டிருக்கும் முத்திரைகளின் முதல் வகையான யோக முத்திரைகள் பற்றி முந்தைய பதிவுகளில் பார்த்தோம். அதன் மற்ற வகையான தேக முத்திரைகளைப் பற்றி இனி வரும் பதிவுகளில் பகிர்ந்து கொள்கிறேன். இந்த முத்திரைகளைப் பற்றி தனது நூலின் 679 முதல் 713 வரையிலான பாடல்களில் விவரித்திருக்கிறார்.

முத்திரைகளை செயல்படுத்துவதில் விரல்களே பிரதானம் என்பதை முன்னரே பார்த்திருக்கிறோம்.கட்டை விரலானது நெருப்பையும், சுட்டு விரலானது காற்றையும், நடுவிரவிரலானது ஆகாயத்தையும், மோதிர விரலானது நிலத்தையும், சுண்டு விரலானது நீரையும் குறிக்கிறது.

நமது உடல் இயங்கத் தேவையான உயிர்சக்தியை நமது உடலிலுள்ள சக்கரங்களே உற்பத்தி செய்து தருகின்றன. எனவே இவற்றை சக்தி மையங்கள் என்று அழைக்கிறோம். இது மாதிரி மனித உடலில் சக்தி மையங்கள் 20000 க்கு மேல் இருப்பதாகவும், அவற்றில் முக்கியமானவை ஏழு என்றும் மற்றவை துணைச்சக்கரங்கள் என்று தன்வந்திரி கூறுகிறார்.

மூலாதாரம், சுவாதிச்டானம், மணிபூரகம், விசுத்தி, அனாகதம், ஆக்ஞை, சகஸ்ராரம் ஆகியன முதன்மை சக்கரங்கள் ஆகும்,இவை நலமாக இயங்கும் வரை உடல் நலமுடன் இருக்கும் என்றும், இவற்றில் ஏதும் தடைகள், தேக்கங்கள் உண்டாகும் பொது உடல் நிலையில் பாதிப்புக்கள் ஏற்படும் என்கிறார். இந்த பாதிப்புக்களை இலகுவாக நிவர்த்தி செய்யவே முத்திரைகள் பயன்படுகின்றன என்கிறார். இந்த முக்கிய சக்கரங்கள் நமது விரல்களினால் கட்டுப்படுத்தப் படுகிறது என்கிறார் .

பெருவிரல் மணிப்பூரகத்தையும், சுட்டுவிரல் அனாகதத்தையும், நடுவிரல் விசுத்தியையும், மோதிரவிரல் மூலாதாரத்தையும், சுண்டுவிரல் சுவாதிச்டானத்தையும் கட்டுப்படுத்தும் என்றும் மற்றைய இரண்டு சக்கரங்களான சகஸ்ராரம், ஆக்ஞை ஆகியவை ஞானச் சக்கரங்கள் என்றும் இவற்றை விரல்களால் கட்டுப்படுத்த முடியாதென்றும் குறிப்பிடுகிறார். நமது உள்ளங்கையில் ஒரு துணைச் சக்கரமும், விரல் மூட்டுகளில் ஒவ்வொரு துணைச் சக்கரங்கள் வீதம் பல சக்கரங்கள் இருப்பதாகவும் அவை இந்த முத்திரைகள் மூலம் தூண்டப்பட்டு மூல சக்கரங்களில் உள்ள குறைபாடுகளை நீக்கும் என்கிறார். ஆகவே இவற்றை தெளிவாக உணர்ந்தே முத்திரைகளைப் பயன்படுத்த தொடங்க வேண்டும் என்கிறார்.                        முத்திரைகள் வரிசையில் இன்று முதலாவதாய், நாம் இருகரங்களையும் கூப்பி வணக்கம் செய்வதே ஒரு முத்திரைதான்.தன்வந்திரி இதனை அஞ்சலி முத்திரை என்று சொல்கிறார். ஒவ்வொருவரும் தமக்கு அறிவை கற்பித்த குருவையும், தெய்வத்தையும் பிரம்மமாக எண்ணி இந்த முத்திரையை செய்யவேண்டும் என்கிறார்.



படத்தில் உள்ளவாறு வலது கையின் விரல்கள் இடது கையின் விரல்களுடன் இடைவெளியின்றி இணைத்து இருகைகளையும் ஒன்றோடொன்று சேர்த்து பிடித்தல் வேண்டும்.இந்த முத்திரையைப் பிடித்த கைகள் மார்புப் பகுதியின் மையத்தில் இருத்தி கண்களை மெதுவாக மூடி தலையை சற்றுக் குனிந்து பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் வரை நின்று கொண்டு செய்ய வேண்டும் என்று குறிப்பிடுகிறார்.

நமது உடலில் வலப்பாகம் சிவனாகவும், இடப்பாகம் சக்தியாவும் இரண்டு ஆற்றல் மையங்களாய் உள்ளது. கைகளை இவ்வாறு இணைக்கும் போது புதிய அருட் சக்தி ஓட்டம் ஒன்று உருவாகி, பிராண சக்தியை நம்முள் நிலைகொள்ள செய்யும் என்கிறார்.

பின் குறிப்பு :-

இறைவனை அன்பால் வணங்குபவர்கள் மார்புக்கு நேராயும், ஞானத்தால் வழிபடுபவர்கள் நெற்றிக்கு நேராகவும், இறைவனிடம் சரணாகதி என்று வணங்குபவர்கள் தலைக்கு மேலாயும் இந்த முத்திரையை பிடித்து வணங்கலாம்.

லிங்க முத்திரை





படத்தில் உள்ளது போல, இரண்டு கைகளின் விரல்களையும் ஒன்றோடு ஒன்றாக இறுக்கமாகக் கோர்த்து, இடது பெருவிரலை மட்டும் நேராக நிமிர்த்து வைத்துக் கொள்ளவேண்டும். அத்துடன் இரண்டு உள்ளங்கைகளும் அழுத்தமாக இணைந்திருக்குமாறு வைத்துக் கொள்ள வேண்டும் இதுவே லிங்க முத்திரையாகும்.இதை பதினைந்து முதல் இருபது நிமிடங்கள் வரை செய்யலாம்..

தொடர்ந்து இந்த முத்திரையை செய்து வருவதன் மூலம் உடல் எடை அதிகமாக இருப்பின் குறைந்து, அளவான உடல் எடையினைக் கொடுக்கும். மேலும் இந்த முத்திரை ஜலதோசதிற்கு சிறந்த நிவாரணமாக அமையும் என்கிறார்.

வயிறு சம்பந்தமான நோயுள்ளவர்கள் இந்த முத்திரையை செய்யகூடாது என்றும் எச்சரிக்கிறார்.


ருத்ர முத்திரை...



படத்தில் உள்ளதைப் போல பெருவிரல் நுனி , சுட்டு விரல் நுனி மற்றும் மோதிரவிரல் நுனி ஆகியவற்றை ஒன்றாக இணைத்து, நடுவிரல், சுண்டு விரல் நேராக வைத்திருத்தல் வேண்டும். இதுவே ருத்ர முத்திரையாகும்.இதனை பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் வரை செய்யலாம்.

உடல் வலிமை குன்றியவர்களுக்கு உடல்வலிமை மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அளிப்பதோடு, இருதயத்தையும் வலுப்படுத்தும் என்கிறார்.

பொதுவில் முத்திரைகளை யாரும் செய்யலாம், இதற்கென எந்த விதமான முன் தயாரிப்புகளும் தேவையில்லை. அமைதியான சூழலில் பத்மாசனத்தில் அமர்ந்து செய்வது இன்னமும் சிறப்பு. முத்திரைகளின் வகைக்கேற்ப குறைந்தது பத்து நிமிடம் முதல் முக்கால் மணி நேரம் வரை செய்ய வேண்டும். முத்திரைகளை தொடர்ந்து செய்து வருவதனால் மட்டுமே தேவையான பலன் கிட்டும். தகுந்த குருவின் மேற்பார்வையில் இவற்றை பழகி, பயன்படுத்துவது சிறப்பு.
 
 
அனுசாசன் முத்திரை



சுட்டு விரலை வளைவின்றி நேராக வைத்துக் கொண்டு, நடுவிரல் , மோதிரவிரல், சுண்டு விரல் ஆகியவற்றை பெருவிரலுடன் இணைந்து இருத்துவதே அனுசாசன் முத்திரையாகும். இதை பதினைந்து முதல் இருபது நிமிடங்கள் வரை செய்யலாம்.

உடலின் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடலும் மனமும் தெளிவடையும் முதுகுத்தண்டு வலுவடையும். அத்துடன் பல்வலி குறைந்து பற்கள் உறுதியாகும் என்கிறார்.


கருட முத்திரை



படத்தில் உள்ளவாறு இடது கையின் மேல் வலது கை வைத்து, இறுகிப் பெருவிரல்களையும் ஒன்றாக இறுகப் பற்றி, பின்னர் மற்ற விரல்கள் அனைத்தையும் நேராக விரித்தால் இதுவே கருட முத்திரையாகும். இதனை ஐந்து முதல் பத்து நிமிடங்கள் வரை செய்யலாம்.

உடல் அசதி சோர்வு போன்றவை மறைவதுடன், உடல் புத்துணர்ச்சி பெருகும், நினைவாற்றல் அதிகரிக்கும், அத்துடன் பார்வைக் கோளாறுகள் நிவர்த்தியாகி பார்வை கூர்மையடையும்.இந்த முத்திரையை உணவு அருந்த முன்னர் (வெறும் வயிற்றில்) செய்தால் அதிகபலன் கிடைக்கும் என்கிறார்.

முகுள முத்திரை


வெகு இலகுவான முத்திரைகளில் இதுவும் ஒன்று நான்கு விரல் நுனிகளையும் பெரு விரல் நுனியுடன் இணைப்பதே முகுள முத்திரை. அதிகமாக அழுத்த்தம் தராமல் சற்று தளர்வாக பிடித்தல் வேண்டும்.

நமது உடலில் ஏதாவது ஒரு பாகம் நோய்வாய்ப் பட்டிருந்தால் அந்த பகுதியில் இந்த முத்திரையைப் பிடித்து ஐந்து நிமிடங்களா வரை மன சக்தியை அந்த உறுப்பின் மேல் செலுத்துவதன் மூலம் அந்த உறுப்பு உறுதி அடைவதுடன் நோயும் படிப்படியாகக் குறையுமாம்.

பஞ்ச பூத சக்திகளை ஒருங்கிணைத்து உடலில் நோய்வாய்ப் பட்ட இடத்தில் பிடிக்கும் போது அந்த இடத்திற்கு தேவையான ஆற்றலை வழங்குவதே இந்த முத்திரையின் தத்துவமாகும்.


சுரபி முத்திரை


இந்த முத்திரையானது சற்று சிக்கலானது. அவதானமாக செய்ய வேண்டும்.

பெருவிரல்கள் இரண்டும் தொடாமல் படத்தில் உள்ள மாதிரி இருத்தல் வேண்டும், வலது ஆள்காட்டி விரல் நுனி இடது நடுவிரல் நுனியுடனும், வலது நடுவிரல் நுனி இடது ஆள்காட்டி விரல் நுனியுடனும், வலது மோதிரவிரல் நுனி இடது சுண்டு விரல் நுனியுடனும், வலது சுண்டு விரல் நுனி இடது மோதிரவிரல் நுனியுடனும் இணைந்து இருத்தல் வேண்டும் இதுவே சுரபி முத்திரையாகும். விரல்களில் அதிக அழுத்தம் தேவையில்லை.

ஆரம்பத்தில் இந்த முத்திரை செய்வது சிரமமாக இருந்தாலும் படிப்படியாக பழக்கப்பட்டுவிடும். நன்கு பழக்கப் பட்ட பின் இதை பதினைந்து முதல் இருபது நிமிடங்கள் வரை செய்யலாம்..

இந்த முத்திரை உடலை வலுவடையச் செய்யும் சிறுநீரகக் கோளாறு நிவர்த்தியாகும். சிந்தனை தெளிவாகும் உயர்ந்த எண்ணங்கள் மனதில் தோற்றுவிக்கும் என்கிறார். அத்துடன் இந்த முத்திரையானது யோகம் பயில்வோருக்கு மிகவும் உகந்தது என்றும் குறிப்பிடுகிறார்.

ஞான முத்திரை



மேலே படத்தில் உள்ளது போல சுட்டு விரல் நுனியால் பெருவிரல் நுனியை சற்று அழுத்தமாக தொட்டு, மற்ற விரல்கள் மூன்றும் வளைவின்றி நேராக ஒன்றோடொன்று சேர்ந்தபடி இருப்பதே ஞான முத்திரையாகும்.இதனை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் செய்யலாம்.

பெருவிரல் நெருப்பையும் , சுட்டுவிரல் காற்றையும் குறிப்பாதால் இவை இரண்டும் இணைந்து மனதில் உள்ள தீய சிந்தனைகளை அகற்றி ஞான நிலைக்கு இட்டுச் செல்லும் என்கிறார் தன்வந்திரி. மேலும் மனம் ஒருமுகப் படுவதுடன், கோபம் பிடிவாதம் பொறுமையின்மை போன்றவை மறையும். எதனையும் இலகுவாக கற்றுக்கொள்ளும் தன்மை அதிகரிக்கும்

ஞானமுத்திரையை செய்து கொண்டே, தியானம் செய்தால் பல அற்புத சித்திகள் கை கூடுமாம்


குபேர முத்திரை




மேலே படத்தில் உள்ளவாறு பெரு விரல் நுனியுடன் சுட்டுவிரல், நடுவிரல் நுனிகளை இணைப்பதே குபேர முத்திரை ஆகும். அதிகமாய் அழுத்தம் தராது.விரல்களை சற்று தளர்வாக பிடித்தல் வேண்டும்.பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் வரை இந்த முத்திரையை செய்யலாம்.

இந்த முத்திரையானது நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூத சக்திகளை ஒருங்கிணைத்து நினைத்த காரியத்தை சித்தியாக்கும் சக்தியாக மாற்றமடையும். இதன் மூலம் வாழ்வு வளமாகும் என்பதால் இதனை குபேர முத்திரை என்று அழைக்கிறார்.

சங்கு முத்திரை



இடது பெருவிரலை வலது உள்ளங்கையில் பதிய வைத்து, அதனை வலது கை விரல்களால் (பெருவிரல் தவிர்த்து) அதை இறுக மூட வேண்டும். வலது பெருவிரலானது இடது கையின் மற்றைய நான்கு விரல்களை தொட்டுக் கொண்டு இருக்க வேண்டும். இதுவே சங்கு முத்திரையாகும்.(படம் மேலே இணைக்கப் பட்டுள்ளது)

இதை பதினைந்து முதல் இருபது நிமிடங்கள் வரை செய்யலாம்..

பெருவிரல் நெருப்பு என்னும் பஞ்ச பூதங்களில் ஒன்றை இயக்கம் விரல் இது மற்றைய நான்கு பஞ்ச பூதங்களையும் ஒன்றிணைக்கும் இதுவே இந்த முத்திரையின் செயற்பாடு என்கிறார் தன்வந்திரி. இந்த முத்திரை யானது மணிபூரகத்தை சிறப்பாக செயல்பட வைத்து குரலை வளமாகும் . மேலும் திக்குவாய், தொண்டை நோய்கள் போன்ற குறைபாடுகளையும் நீங்கும் என்கிறார்.

சுவகரண முத்திரை



தன்வந்திரி, தனது ”தன்வந்திரி வைத்தியம் 1000” என்ற நூலில் சுவகரண முத்திரையை செயல் படுத்திடும் முறையினை பின்வருமாறு விளக்குகிறார்.

"சாற்றுவது சுவகரண முத்திரையைக் கொண்டு
சங்கையுடன் சம்மென்று தியானஞ்செய்யில்
பார்த்திபனே சதாகோடி மந்திரமுஞ்சித்தி
சகலகலை சாத்திரமுஞ் சித்தி
தோற்றியதோர் ஆதார மூலஞ்சித்தி
திருவாசி ஆனதொரு வாசிசித்தி
தோத்திரமாய் நின்றதொரு பூசைசித்தி
சுகமான ஆறான முத்திரையுஞ்சித்தே"

- தன்வந்திரி வைத்தியம் 1000 -

சுவகரண முத்திரையை இரு கரங்களிலும் செய்து கண்களை மூடி மனக்கண்ணால் புருவ மத்தியைப் பார்த்து சம் என்ற மந்திரத்தை மனதிற்குள் செபித்துக் கொண்டு தியானம் செய்ய, பத்துக் கோடி மந்திரமும், சகல சாத்திரங்களும், ஆதாரமான மூலப் பொருளும் சித்தியாவதுடன் வாசியும் சித்திக்கும் என்கிறார்.

இந்த யோக முத்திரைகளை தினமும் அதிகாலையில் அதாவது பிரம்ம முகூர்த்ததில் செய்து வர உடலில் உள்ள பஞ்சபூத அம்சங்கள் நிலைபெறும். இதனால் கிடைக்கும் நன்மைகள் கணக்கில் அடங்கா....யோக முத்திரைகளை முறையாக, குருமுகமாய் பயிற்சினை தொடங்கி, தொடர்ந்து பழகி வருதல் சிறப்பு.


யோனி முத்திரை




யோனி முத்திரையை செயல்படுத்தும் முறையினை ”தன்வந்திரி” தனது நூலில் பின்வருமாறு கூறுகிறார்.

"செய்யப்பா யோனி முத்திரையைக் கொண்டு
தீர்க்கமுடன் றீங்கென்றே தியானஞ்செய்யில்
மெய்யப்பா தேவாதி தேவர்களுஞ்சித்தி
மேலான அண்டமொடு புவனஞ்சித்தி
மய்யப்பா மையமென்ற சுழினைசித்தி
மாலொடு லட்சுமியும் தனங்கள்சித்தி
பையப்பா யோனி முத்திரயைப் பெற்று
பக்தியுடன் சிவயோகம் பணிந்து காணே"

- தன்வந்திரி வைத்தியம் 1000 -

மேலே படத்தில் உள்ளவாறு ”யோனி முத்திரை”யை இரு கரங்களிலும் செய்து, கண்களை மூடிக் மனக்கண்ணால் புருவ மத்தியைப் பார்த்து ”றீங்” என்ற மந்திரத்தை மனதிற்குள் செபித்துக் கொண்டு தியானம் செய்திட தேவாதி தேவர்களுடன், அண்டமும், புவனமும் சித்தியாவதுடன், லட்சுமியும், பொன் பொருட்களும், மையமான சுழினையும் சித்தியாகும் என்கிறார்.


அபான முத்திரை




அபான முத்திரையினை செயல்படுத்திடும் முறையினை ”தன்வந்திரி” தனது நூலில் பின்வருமாறு கூறுகிறார்.

"சித்தான அபான முத்திரையைச் செய்து
தீர்க்கமுடன் கிலியென்று தியானஞ்செய்ய
வத்தான பூரணமாய் சிவயொகஞ்சித்தி
மகத்தான கற்பூர தீபஞ்சித்தி
வித்தான பிரமனொரு சரசுவதியுஞ்சித்தி
வேத மயமான சிவயொகஞ்சித்தி
சத்தான அபான முத்திரயினுடமகிமை
சங்கையுடன் கண்டுசிவ யோகஞ்செய்யே"

- தன்வந்திரி வைத்தியம் 1000 -

மேலே படத்தில் உள்ளவாறு அபான முத்திரையை இரு கைகளிலும் செய்து, கண்களை மூடிக் கொண்டு மனக்கண்ணால் புருவ மத்தியைப் பார்த்து ”கிலி” என்ற மந்திரத்தை மனதிற்குள் செபித்துக் கொண்டு தியானம் செய்ய, பூரணமான சிவயோகமும், வேத மயமான சிவயொகமும் சித்தியாவதுடன் பிரம்மன், சரசுவதி அருளும் சித்தியாகும் என்கிறார்.



 “திருவினி”



 திருவினி முத்திரையின் மகத்துவம் பற்றி பின்வருமாறு கூறுகிறார்.

"காணவே திருவினி முத்திரையைக் கொண்டு
கருணையுடன் வங்கென்று தியானஞ்செய்யில்
பூணவே ருத்திரர் முதல் சகல செந்தும்
பூலோக ராசரோடு வசியமாகும்
தோணவே சந்தான சவுபாக்கியம்
சுத்தமுடம் ஐந்தறிவுஞ் சித்தியாகும்
பேணவே ருத்திரியும் சித்தியாகும்
பிலமான திருவினியால் சித்தியாமே"

- தன்வந்திரி வைத்தியம் 1000 -

மேலே படத்தில் காட்டியுள்ளவாறு திருவினி முத்திரையினை இரு கைகளிலும் அமைத்து, கண்களை மூடி, மனதினை ஒருமுகப் படுத்தி மனக்கண்ணால் புருவ மத்தியை கவனித்து பார்த்து ”வங்” என்ற மந்திரத்தை மனதிற்குள் செபித்துக் கொண்டு தியானம் செய்ய ருத்திரன் முதலான அனைத்து தெய்வங்களுடன், பூலோக அரசர்களும் வசியமாவதுடன் புத்திர பாக்கியமும், ஐந்தறிவும், உருவத்தை மாற்றும் தன்மையும் சித்திக்கும் என்கிறார்.

யோக்முத்திரை வரிசையில் மூன்றாவதான இந்த முத்திரையை பிரம்ம முகூர்த்தத்தில் ஏழு நிமிடங்கள் செய்திடல் வேண்டும்.

மோகினி முத்திரை



"ஆமப்பா மோகினி முத்திரையைச் செய்து
அருள் பெருக்கும் புருவமதில் மனக்கண்சாற்றி
ஓமப்பா யகாரமுடன் உகாரங்கூட்டி
உத்தமனே மகாரமென்ற மவுனத்தேகி
காமப்பால் கானற்பால் சித்தியாகும்
கருணைதரு மனேன்மணியுஞ் சித்தியாகும்
வாமப்பால் பூரணமுஞ் சித்தியாகும்
மகத்தான நால்பதமுஞ் சித்தியாமே"

- தன்வந்திரி வைத்தியம் 1000 -

மேலே படத்தில் உள்ளது மோகினி முத்திரை, இந்த முத்திரையினை இரு கைகளிலும் வைத்துக் கொண்டு கண்களை மூடி, மனக் கண்ணால் புருவ மத்தியைப் பார்த்து ”ஓம்” என்ற மந்திரத்தை மனதிற்குள் செபித்துக் கொண்டு தியானம் செய்ய நான்கு பாதங்களும், பரம்பொருள் பற்றிய தெளிவும், கருணையுள்ள மனோன்மணித் தாயின் அருளும் சித்தியாகும் என்கிறார்.


சோபினி முத்திரை




"பாரப்பா சோபினி முத்திரையைச் செய்து
பக்தியுடன் அம்மென்று தியானஞ்செய்ய
நேரப்பா சொல்லுகிறேன் சர்வலோகம்
நிசமான ஆதாரஞ் சித்தியாகும்
மேரப்பா மேருகிரி தீபஞ்சித்தி
மெய்யான மயேச்வரனும் மீச்வரியுஞ்சித்தி
காரப்ப சோபினி முத்திரையினாலே
கண்ணடங்கா போதசிவ யோகமாமே"

- தன்வந்திரி வைத்தியம் 1000 -


மேலே படத்தில் இருப்பது சோபினி முத்திரை. இந்த முத்திரையை இரு கைகளில் வைத்துக் கொண்டு கண்களை மூடி கொண்டு மனக்கண்ணால் புருவ மத்தியைப் பார்த்து ”அம்” என்ற மந்திரத்தை மனதிற்குள் செபித்துக் கொண்டு தியானம் செய்ய நிஜமான ஆதாரப் பொருளை உணர்வதுடன், மகேச்வரன், மகேச்வரி அருள் கிடைப்பதுடன், சிவயோகம் சித்திக்கும் என்கிறார்.

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...