Friday, June 28, 2013

இரு முக ருத்ராட்சம்..!



இரு முக ருத்ராட்சம் அர்த்தநாரீஸ்வரர் வடிவமானது .சிவசக்தி அருள் பெற்றது.இது சந்திரன் ஆதிக்கம் பெற்றதாகும்.

பத்ம புராணம் இதை அக்னியின் ஆதிக்கம் பெற்றதாக கூறுகிறது .அக்னி அணைத்து பொருட்களையும்
எரித்து சாம்பல் ஆக்குவது போல, இருமுக ருத்ராட்சம் அணிபவர்களின் எல்லா பாவங்களும் எரிந்து சாம்பல் ஆகிறது.இந்த மணி யாகங்கள் ,ஹோமங்கள் ,அக்னி ஹோத்ரங்கள் செய்ததன் பலனைத் தருவதாகும் .

இரு முக மணி பசுவைக் கொன்ற பாவத்தைப் போக்கும் .

இது குடும்பத்திலுள்ளவர்களிடம் நல்ல உறவை மேம்படுத்தி, குடும்பத்தை மகிழ்ச்சியாக்கும் .குடும்பம்
மட்டுமன்றி நண்பர்கள், உறவினர்களிடத்தில் நல்ல உறவை விரும்புபவர்கள் இரு முக ருத்ராட்சத்தை அணியவேண்டும் .

இருமுக மணியும் அபூர்வமாகவே கிடைக்கும் எனவிய இது சற்று விலை அதிகமாகவிய இருக்கும்,.

இருமுக ருத்ராட்சத்தை யார் அணியலாம் :
பிறரோடு நல்லுறவு கொள்ள இயலாமல்,தனிமையில் தவிப்போர்கள் இதை அணிந்தால் சிறந்த பலன்கள்
உண்டாகும்.

முக ருத்ராட்சம் உலகாயதச் செல்வங்களையும் , ஆன்மீக முன்னேற்றத்தையும் அளிக்கவல்லது .

குழந்தைக்காக ஏங்கித் தவிப்பவர்கள் இதை அணிந்து கொண்டலோ ,பூஜித்தலோ செய்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் .

இருமுக ருத்ராட்சமும் ஜோதிடமும்;

இது சந்திரனின் ஆதிக்கம் பெற்றது. ஜாதகத்தில் சந்திரனின் ஆதிக்க குறைவால் ஏற்படும் இடது கண் நோய், குடல்நோய், சிறுநீரக நோய்கள், இதை அணிவதால் குணமாகும்.மனரீதியாக இருமனிதர்களிக்கிடையே
ஏற்படும் உறவுச் சிக்கல்களை போக்கும்.

இருமுக ருத்ராட்சத்திற்கான மந்திரம்;

ஓம் நமஹ:

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...