Wednesday, January 30, 2013

உடல் இளைக்க வேண்டுமா? இஞ்சி சாறு சாப்பிடுங்க!


உடல் பருமனாக உள்ளதே என்று நீங்கள் கவலைப்பட்டால், அந்தக் கவலை இனி உங்களுக்கு வேண்டாம். இஞ்சி பிரியர் ஆக நீங்கள் இருந்தால், இந்த கவலை உங்களுக்கு இல்லை.
இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட, வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும்.
இஞ்சி துவையல், பச்சடி செய்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.
இஞ்சி சாற்றில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.
இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீரணம், வாய் நாற்றம் தீரும். சுறுசுறுப்பு ஏற்படும்.
இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம், இரைச்சல் தீரும்.
காலையில் இஞ்சி சாற்றில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்தம், தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடல் இளமை பெறும்

நீரிழிவு அல்லது சர்க்கரை நோய்யை கட்டுப்படுத்தும் செடி


இன்சுலின் செடி என்று பெரும்பாலும் அழைக்கப்படும் இச்செடி அழகுக்காக
அனைத்து வீடுகளிலும் வளர்க்கப்படுவதை காணலாம். இச்செடி சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் வல்லமை கொண்டது, நீரிழிவு நோயாளிகள் தினமும் ஒரு இலையை பறித்து, மென்று சாரை உண்டு வந்தால் (சக்கையை உமிழ்ந்து விட வேண்டும் ) சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும்.மேலும் இச்செடி உட்கொள்வதற்கு ஒருவகையான புளிப்பு சுவையாக இருக்கும், மற்ற மூலிகைகளை போன்று கசக்காது. எனவே இது நாளாவட்டத்தில் உங்களின் விருப்ப உணவாகி விடும் என்பதில் எந்த ஐயமும் இல்லை

தியாகராஜ சுவாமிகள்

இசைக்கலையில் உச்சநிலையாக கர்நாடக சங்கீதம் விளங்குகிறது. கர்நாடக சங்கீதத்தின் மூலம் இறைவழிபாட்டில் சிறப்புத் தன்மையை ஆழ்வார்கள், நாயன்மார்கள், அருணகிரிநாதர்,  புரந்தரதாசர், மீராபாய், கபீர்தாஸ், குருநானக் போன்ற மகான்கள் வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இவர்களை நாதயோகிகள் என்பார்கள். இவர்களுள் முதன்மையானவர் என போற்றப்படுபவர் சங்கீத ஜோதி, சத்குரு ஸ்ரீ தியாகராஜ சுவாமிகள். 1759 முதல் 1847 வரை உள்ள 88 ஆண்டுகளை தியாகராஜ சாகாப்தம் என்று அழைப்பது பொருத்தமானதாக இருக்கும். திருவாரூரில் ராமபிரும்மம் என்பவருக்கும், சாந்தாதேவியாருக்கும் மூன்றாவது குழந்தையாக பிறந்தார் தியாகராஜர். இவர்கள் மூலகநாடு திரைலிங்க தெலுங்கு பிராமணர் வகுப்பை சேர்ந்தவர்கள். இவருக்கு ஜப்யேசன், ராமநாதன் என்ற சகோதரர்கள் இருந்தனர்.  இவரது தந்தை சிவ, விஷ்ணு பக்தியில் ஈடுபட்டு, திவ்யநாத பஜனை செய்துவந்தார். திருவாரூரில் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் தியாகராஜர் தனது ஆரம்பக்கல்வியை பயின்றார். பிறகு பெற்றோருடன் திருவையாறு சென்றுவிட்டார். 8ம் வயதில் உபநயனம் செய்வித்தபோது, காயத்ரியுடன், ராமதாரக மந்திரத்தையும் தன் தந்தையிடம் உபதேசம் பெற்றார். தன் தந்தை வைத்திருந்த ராமவிக்ரகத்திற்கு அன்றுமுதல் பூஜை செய்ய ஆரம்பித்தார். ராமகிருஷ்ணானந்தரிடம் உபதேசம் பெற்ற ராம சடாட்சரி மந்திரத்தை லட்சக்கணக்கில் ஜபம் செய்தார். இவரது தந்தையார் பரமபாகவதர். சங்கீதம் அவரது ரத்தத்தில் ஊறி இருந்தது. சிறு வயதிலேயே தியாகராஜரும் இசைத்திறமை கொண்டவராக விளங்கினார். இனிமையான குரலும் கைகொடுத்தது. தன் தாயாரிடம் ராமதாசர் மற்றும் புரந்தரதாசரின் கீர்த்தனைகளை கற்றார். திருவையாற்றில் உள்ள சமஸ்கிருத கல்லூரியில் சேர்ந்து நான்கு ஆண்டுகள் ராமாயணம் படித்தார். வால்மீகி ராமாயணத்தை படிக்கப்படிக்க, ராமபக்தியில் மூழ்கி, ராம சைதன்யர் ஆனார். ஜோதிடமும் கற்றார்.
தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர் சரபோஜி சங்கீதத்தில் ஈடுபாடு உள்ளவர். அவரது அரசசபை வித்வானான ஸொண்டி வெங்கட ரமணய்யாவிடம் தியாகராஜர் சங்கீதம் கற்றார். அரசசபையில் பல பாட்டுக்களை பாடி பாராட்டு பெற்றார். அவர் பாடிய முதல் பாட்டு நமோ நமோ ராகவாய அதிசம் என்பதாகும். தியாகராஜர் தினமும் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ராம நாமம் சொல்லி 38ம் வயதிற்குள் 96 கோடி ராம ஜபம் உருவேற்றினார். தனது 38ம் வயதின் கடைசி நாளில் உள்ளம் உருகி ஸ்ரீ ராமனை பாடும்போது கதவு தட்டிய சப்தம் கேட்டது. திறந்து பார்த்தபோது ராம லட்சுமணர்கள் விஸ்வாமித்திரர் நடத்திய யாகத்திற்கு செல்வது போன்ற காட்சியை கண்டார். அப்போது பாடியதுதான் ஏல நீ தயராது என்று புகழ் பெற்ற பாடல். தியாகராஜர் முதலில் பார்வதி அம்மையாரை மணந்தார். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அவர் இறந்துவிட்டதால் அவரது தங்கையான கமலாம்பாள் என்ற உத்தமியை மணந்தார். இவர்களுக்கு சீதாலட்சுமி என்ற பெண் பிறந்தார். தியாகராஜரின் தந்தை இறக்கும் தருவாயில் மகனை அருகில் அழைத்து, ஸ்ரீ ராமமூத்தியை எப்போதும் பாடு என்று கட்டளையிட்டார். தந்தை இறந்தபிறகு தியாகராஜரின் சகோதரர்களுக்கு தம்பியின் பாட்டும் பக்தியும் பைத்தியக்காதரத்தனமாக தோன்றவே, அவரை ஊர் கோடியில் இருந்த கூரை வீட்டிற்கு அனுப்பிவிட்டனர் சொத்துக்களை அவர்களே எடுத்துக் கொண்டனர். தியாகராஜர் தனது தந்தை பூஜை செய்த ராம விக்ரகத்தை மட்டும் எடுத்துக்கொண்டு, அந்த சிறிய வீட்டில் ராமனை கொலுவிருக்கச் செய்தார். சதா ராம நாமமும், ராம கானமுமாகவே வாழ்ந்து வந்தார். தினமும் உஞ்சவிருத்தி (பிøக்ஷ) செய்து, அதில் வரும் வருமானத்தைக்கொண்டு ஜீவித்து வந்தார். பல சீடர்கள் அவரிடம் சங்கீதம் கற்றுக் கொண்டனர். யாரிடமும் எதுவும் அவர் பெற்றுக்கொண்டதில்லை. தனது சீடர்களுடன் ராமநவமி, கிருஷ்ண ஜெயந்தி ஆகிய நாட்களைக் கொண்டாடுவார். ஒரு சமயம் ஒரு சிஷ்யன் தவறு செய்த போது, அவனை கோபித்துக்கொண்டார். ஆனால் அவரது மனைவியோ கோபத்தினால் ஏற்படும் தீமையை எடுத்துக்கூறி சாந்தப்படுத்தினார். அப்போது தன் தவறை உணர்ந்து அவர் பாடிய பாட்டு தான் சாந்தமுலேக சவுக்கியமுலேது (சாந்தம் இல்லாமல் சவுக்கியம் இல்லை).
முதலில் ராமனை மட்டுமே பாடி வந்த தியாகராஜர், சிவபக்தையான அவரது மனைவியின் அறிவுரையை ஏற்று, மற்ற தெய்வங்களைப்பற்றியும் பாடலானார். சம்போ மஹாதேவ, சிவேபாஹிமாம் என்ற பாடல்கள் அதற்கு <<உதாரணமாகும். தியாகராஜரின் மகிமையும், கானச்சிறப்பும் நாடெங்கும் பரவியது. பலர் அவரை புகழ்ந்தாலும், பொறாமைக்காரர்களான அவரது சகோதரர்களுக்கு, அவர் புகழும், பெருமையும் பெறுவது சங்கடத்தைக் கொடுத்தது. மூத்த சகோதரர் ஜப்சேயன் அவர் எழுதிய பாட்டு புத்தகங்களை தீயிட்டு கொளுத்தி விட்டார். ஏராளமான கீர்த்தனைகள் அதனால் மறைந்துவிட்டன.  அவரது வீட்டிற்குள் புகுந்து ராம விக்ரகத்தை திருடிக்கொண்டு போய் காவிரியில் போட்டுவிட்டார். ராம விக்ரகத்தை காணாமல் தியாகராஜர் திகைத்து உள்ளம் உருகி அற்புதமான கீர்த்தனங்களால், ஸ்ரீ ராமனிடமே தன் வருத்தத்தை முறையிட்டார். அநியாய முஸேயகுரா ரானிது ராது என்ற பாடல் அப்போது பாடப்பட்டது. அன்ன பானம் இல்லாமல் உறங்காமல் துடித்தார். ஒருநாள் கனவில் ஸ்ரீராமன் தோன்றி ஆற்று மணலில் தான் புதைந்திருக்கும் இடத்தை சொல்லி மறைந்தார். விக்ரகம் கிடைத்த ஆனந்தத்தில், தொரிகிதிவோ (நீ எப்படித்தான் மீண்டும் கிடைத்தாயோ) ரகுவீர, ரணதீர என்ற பாடல்களால் ராமனை ஆராதித்தார். சரபோஜி மன்னர் தன்னை புகழ்ந்து பாட வேண்டும் என நிறைய பணத்துடன் ஒரு அதிகாரியை அனுப்பினார். அரசரின் அழைப்பை நிராகரித்து இறைவனைத் தவிர வேறு யாரையும் பாடமாட்டேன் என சொல்லி அவர்பாடிய சிறப்பான பாடல்தான் நிதிசால சுகமா ? ராமுனி சந்நிதி ஸேவசுகமா? என்பதாகும். பிறகு சரபோஜி மன்னர் மாறுவேடத்தில் வந்து மற்றவர்களுடன் அமர்ந்து அவரது பாட்டைக் கேட்டு மகிழ்ந்தார். திருவிதாங்கூர் மன்னரான சுவாதி திருநாள் மகாராஜா தியாகராஜரை அழைத்ததும் செல்ல மறுத்து விட்டார். பின்பு தியாகராஜர் திருப்பதி, காஞ்சி, மதுரை ஆகிய ÷க்ஷத்திரங்களுக்கு சென்று பாடினார். திருப்பதியில் திரை போட்டு மறைந்திருந்த பெருமாளைப்பற்றி ஒரு பெண்ணின் கணவனை கீர்த்தனை பாடி உயிர்பெறச் செய்தார். மனைவி இறந்தவுடன் பற்றற்ற துறவியாக வாழ்ந்த தியாகராஜர் பகுளபஞ்சமி தினத்தன்று பஜனை பாட்டுகளை கேட்டுக்கொண்டே நாதஜோதியாக மாறி இறைவனுடன் கலந்தார். அவர் சொல்லியபடி 60 ஆண்டுகள் கழித்து அவரது கீர்த்தனைகள் புகழ்பெற்றன. 1925ம் ஆண்டு பெங்களூரைச் சேர்ந்த நாகம்மாள் என்பவர் தியாகராஜருக்காக  திருவையாற்றில் கட்டிய சமாதியில் இன்றும் தியாகராஜ ஆராதனை ஒரு தூய கலைவிழாவாக சிறப்புடன் நடக்கிறது. இசையின் நோக்கம் பக்தியை வளர்க்கவே என்பதை உலகுக்கு எடுத்துக்காட்டியவர் சத்குரு தியாகராஜ சுவாமிகள்.

மஹா ப்ரத்யங்கிரா தேவியின் மூல மந்திரம்


ஓம் க்ஷம் பக்ஷ ஜ்வாலா ஜிஹ்வே
கராள தம்ஷ்ட்ரே ப்ரத்யங்கிரே
க்ஷம் ஹ்ரீம் ஹும் பட்

செய்யும் காரியங்களில் தடைகள் விலக


மஹா கணபதிர் புத்தி ப்ரிய: ஷிப்ர ப்ரஸாதத ந
ருத்ர ப்ரியோ கணாத்யக்ஷ உமாபுத்ரோஸ்க நாஸந;
இதை தினமும் 10 முறை சொன்னால் இடையூறின்றி காரியங்கள் நிறைவேறும்.

மாலையில் ஜபிக்க வேண்டிய மங்கள ஸ்லோகங்கள்


விபூதி, குங்குமம் தரித்து, தீபத்தை ஏற்றி வைத்து ஒரு தட்டில் விபூதி, குங்குமத்தை சாமிபடத்தின் முன் வைத்து மூன்று முறை பாராயணம் செய்து பிறகு விபூதி, குங்குமத்தை உபயோகப்படுத்தினால் சகல மங்களமும் உண்டாகும்.

1.
பாலாம்பிகேச வைத்யேச பவரோக ஹரேதி ச
ஜபேந் நாமத்ரயம்நித்யம் மஹாரோக நிவாரணம்
2.
நித்யான்னதான நிரதம் ஸச்சிதானந்த விக்ரஹம்
ஸர்வரோக ஹரம் தேவம் ஸுப்ரம்மண்ய முபாஸ்மஹே
3.
பஞ்சாபகேச ஜப்யேச ப்ரணதார்த்தி ஹரேதி ச
ஜபேந் நாமத்ரயம் நித்யம் புனர் ஜன்ம ந வித்யதே
4.
ரட்ச பஞ்ச நதீநாத தயாஸிந்தோ மஹேச்வர
அநாதநாத பக்தானாம் அபயம் குரு சங்கர
5.
ஸுமீனாக்ஷ? ஸுந்தரேசௌ பக்த கல்பமஹீருதௌ
தயோரநுக்ர ஹோ யத்ர தத்ர சோகோ ந வித்யதே
6.
ஸ்ரீ கண்ட பார்வதீ நாத தேஜிநீபுர நாயக
ஆயுர்பலம் ச்ரியம் தேஹி ஹர மே பாதகம் ஹர
7.
கௌரீவல்லப காமாரே காலகூட விஷாசன
மாமுத்ரா பதம் போதே: த்ரிபுரக்நாந்தகாந்தக
8.
கௌரீபதே நமஸ்துப்யம் கங்காசந்த்ர கலாதர
அசேஷ க்லேச துரிதம் ஹராசு மம சங்கர
9.
மஹாதேவம் மஹேசானம் மஹேச்வரம் உமாபதிம்
மஹா ஸேன குரும் வந்தே மஹாபய நிவாரணம்
10.
ம்ருத்யுஞ் ஜயாய ருத்ராய நீலகண்டாய சம்பவே
அம்ருதேசாய சர்வாய மஹாதேவாய தே நம:
11.
ச்ரிய: காந்தாய கல்யாண நிதயே நிதயேர்த்தினாம்
ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்
12.
மங்களம் கோசலேந்த்ராய மஹநீய குணாத்மனே
சக்ரவர்த்தி தநூஜாய ஸார்வ பௌமாய மங்களம்
13.
க்ருஷ்ண: கரோது கல்யாணம் கம்ஸ குஞ்சரீ கேஸரீ
காளிந்தீ ஜல கல்லோல கோலாஹலகுதூஹலீ
14.
ஸ்ரீ ராம சந்திர: ச்ரிதபாரிஜாத: ஸமஸ்த கல்யாண குணாபிராம:
ஸீதாமுகாம் போருஹ சஞ்சரீக: நிரந்தரம் மங்கள மாத நோது
15.
காஞ்சநாத்ரி நிபாங்காய வாஞ்சிதார்த்த ப்ரதாயிநே
அஞ்சநா பாக்ய ரூபாய ஆஞ்சநேயாய மங்களம்
16.
பீதாம்பரம் கரவிராஜித சங்க சக்ர கௌ மோதகீ ஸரஸிஜம் கருணாஸமுத்ரம்
ராதாஸஹாயமதி ஸுந்தர மந்தஹாஸம் வாதாலயேச மநிசம் ஹருதி பாவயாமி
17.
குண ரோகாதி தாரித்ரிய பாபக்ஷúபதப ம்ருத்யவம்
பயக்ரோத மந: க்லேசா: நச்யந்து மம ஸர்வதா !

ஆலிவ் எண்ணெய் பற்றிய தகவல் !!!



நமது தோலின் மேல்பகுதி எபிடெர்மிஸ், அடிப்பகுதி ஹைப்போடெர்மிஸ், மையப் பகுதி டெர்மிஸ் என்று அழைக்கப்படுகிறது. மூன்று அடுக்கும் சீராக பணிபுரிந்தால்தான் அழகிய, ஆரோக்கியமான தோல் நமக்கு கிட்டும். நாம் தற்சமயம் பயன்படுத்தும் அழகு சாதனப்பொருட்கள், களிம்புகள், முகப்பூச்சு மருந்துகள் தோலின் மூன்று அடுக்கு வரை ஊடுருவுவதில்லை. அதனால்தான் விலையுயர்ந்த களிம்புகளை பயன்படுத்தினாலும் பூரண பலன் கிடைப்பதில்லை. சாதாரணமான தோலை அழகாக புத்துணர்ச்சியுடனும் மினுமினுப்புடனும் திகழச்செய்து ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் அற்புத மூலிகைதான் ஆலிவ்.

இதன் இலை மேற்புறம் கரும் பச்சை வண்ணத்திலும் அடிப்புறம் வெளிர் பச்சை நிறத்திலும் இருக்கும். கனியின் நடுவில் கடினமான விதையும் சுற்றி திடமான சதைப் பகுதியும் இருக்கும். கனிகள் உருண்டை, நீளுருண்டை எனப் பலவடிவில் இருக்கும்.காய் பச்சை நிறத்திலும், கனிந்த பின் பழுப்பு, சிவப்பு அல்லது கறுப்பு நிறத்திலுமிருக்கும். இலைகளில் எண்ணெய்ச் சத்து அதிகம்.

ஓலியா யுரோபியா என்ற தாவரவியல் பெயர்கொண்ட ஓலியேசியே குடும்பத்தைச் சார்ந்த மரங்களின் பழக்கொட்டைகளே ஆலிவ் விதை. இவற்றிலிருந்து எடுக்கப் படும் எண்ணெய் ஆலிவ் எண்ணெய் என்றும் மேற்கத்திய மருத்துவத்திலும், சைத்தூன் எண்ணெய் என்று இந்திய மருத்துவத்திலும் அழைக்கப்படுகிறது.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்

ஆலிவ் எண்ணெயில் ஓலிரோசைடு, ஒலிரோபின், ஒலினோலிக் அமிலம், லிவ்டியோலின், எபிஜெனின் பிளேவனாய்டுகள், பால்மிட்டிக் மற்றும் ஸ்டீரிக் அமிலங்கள் பெருமளவு காணப்படுகின்றன.

திரவத் தங்கம்

ஆலிவ் எண்ணெய் சருமத்திற்கு வெண்மையும், கேசத்திற்கு போஷாக்கும் அளிக்கிறது. ஆலிவ் எண்ணெயில் வைட்டமின்களும், தாது உப்புகளும் அடங்கியுள்ளன. ஆன்டி ஆக்ஸிடென்டல், புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்துகள், காணப்படுகின்றன.

கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், துத்தநாகம், செலினியம் போன்றவை உள்ளன.

வைட்டமின் பி 1,2,3,5,6 ப்ரோ வைட்டமின் ஏ பீட்டா கரோட்டீன், வைட்டமின் ஈ. கே, போன்றவை இதில் அதிகம் காணப்படுகிறது. இதன் காரணமாகவே ஆலிவ் எண்ணெய் திரவத்தங்கம் என்று மதிக்கப்படுகிறது.

தோலினை மினுமினுப்பாக்கும்

இவை தோலில் ஹைப்போடெர்மிஸ் வரை ஊடுருவி, தோலின் அனைத்து அடுக்குகளையும் பளபளப்பாகவும் வழுவழுப்பாகவும் வைத்திருப்பதுடன் தசைக்கும் தோலுக்கும் இடையே வறட்சி ஏற்படாமல் பாதுகாக்கிறது. 100மிலி ஆலிவ் எண்ணெயில் ஏறத்தாழ 20 கிராம் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்களும், 12மிகி வைட்டமின் ஈ, 62 மைக்ரோகிராம் வைட்டமின் கே காணப்படுகிறது.

குளிக்கும்பொழுது இளவெந்நீரில் 10மிலி ஆலிவ் எண்ணெய் மற்றும் சில சொட்டுகள் லேவண்டர் எண்ணெய் கலந்து குளிக்கலாம். குழந்தைகளுக்கும் குளிப்பாட்டலாம். உள்ளங்கை கடினம் மாற ஆலிவ் எண்ணெயையும் சீனியையும் கலந்து உள்ளங்கையில் 10 நிமிடங்கள் தேய்த்து பின் கழுவ மென்மையடையும்.

இதயநோயை தடுக்கும்

ஆலிவ் எண்ணெய், விளக்கெண்ணெய், தேன், முட்டை வெண்கரு மற்றும் ரோஸ்மேரி எண்ணெய் ஆகியவற்றை நன்கு கலந்து முகம் மற்றும் தோல் வறட்சி உள்ள பகுதிகளில் தடவி 15 நிமிடங்கள் கழித்து இளஞ்சூடான நீரில் கழுவிவர வறட்சி நீங்குவதுடன், தோலும் மென்மையாகும். ரோமங்களை நீக்கியபின் முகம் மற்றும் தோலில் ஏற்படும் ஒவ்வாமை நீங்க அந்த இடங்களில் ஆலிவ் எண்ணெய் மற்றும் நகச்சொத்தை நீங்க ஆலிவ் எண்ணெயுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவி வரலாம். ஆலிவ் எண்ணெயை முடி நுனியில் தோன்றும் வெடிப்பில் தடவலாம்.

மார்பகப் புற்றுநோயைத் தடுக்கும்

தூய்மையான ஆலிவ் எண்ணெயில் காணப்படும் பாலிஃபீனால், மார்பகப் புற்றுநோயை வராமல் தடுப்பதுடன், மார்பகப் புற்றுநோய் இருப்பவர்களுக்கு குணப்படுத்துவதற்கும் உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த பாலிஃபீனால் மார்பகப் புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டதாக உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டின் ஐசிஓ அமைப்பும், கிரனடா பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய ஆய்வு முடிவு இதனைத் தெரிவித்துள்ளது.

ஆலிவ் எண்ணெயில் இருந்து பிரித்து வடிகட்டப்பட்டு, பின்னர் திடப் பொருளாக்கப்பட்டதைக் கொண்டு நடத்திய ஆய்வில், மார்பகப் புற்றுநோயை தடுக்கும் ஆற்றம் இருப்பது தெரிய வந்துள்ளது. எனவே மார்பகப் புற்றுநோய் வராமல் இருக்கவும், அந்நோய் உள்ளவர்கள் அதில் இருந்து நிவாரணம் பெறவும், ஆலிவ் எண்ணெயை உபயோகிக்கலாம்.

இதயநோயை தடுக்கும்

இதயத்துக்கு ஏற்ற மிகச்சிறந்த எண்ணெய் என்றால் ஆலிவ் எண்ணெய்யைத்தான் (Oilve Oil) சொல்ல வேண்டும். உலக அளவில் மேலை நாடுகளில் இதயத்துக்கு ஏற்ற சிறந்த சமையல் எண்ணெய்யாக ஆலிவ் எண்ணெய்தான் கருதப்படுகிறது. இந்த எண்ணெய்யைச் சமையலுக்குப் பயன்படுத்தும் மேலை நாடுகளில் இதய நோய்களின் தாக்கம் மிகமிகக்குறைவாக இருப்பதாக பலவகையான ஆய்வு முடிவுகள் உறுதி செய்துள்ளன.

ஸ்பெயின் நாட்டில் நடந்த ஆராய்ச்சியில், ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தினால் புற்றுநோய் மட்டுமின்றி இதய நோய், ரத்த தமனி பாதிப்பு ஆகியவற்றையும் தவிர்க்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. தினம் ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் வாரம் ஒருநாள் உட்கொண்டுவர இதயநோய் வருவதை தடுக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணையைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படியாமல் தடுக்கலாம்.

Monday, January 28, 2013

New Perspective for Immune System

Japanese scientists succeeded to grow in vitro a huge number of lymphocytes which  could potentially be used against cancer cells and HIV. In vitro means cultivated and grown in artificial laboratory environment (i.e. opposite of in vivo, which is growth in a living organism as in the nature).
Red_White_Blood_cells
This research is published in the journal Cell Stem Cell.
The cells naturally exist in small numbers, but it is hoped injecting huge amounts back into a patient could be the ultimate stimulation for the immune system.
Experts said the results had exciting potential, but any therapy must be proven as safe.
The researchers concentrated on a type of white blood cell known as a cytotoxic T-cell, which can recognise telltale markings of infection or cancer on the surfaces of cells. If a marking is recognised, it launches an attack.
Teams at the University of Tokyo and the Riken Research Centre for Allergy and Immunology used advances in stem cell technology to make more T-cells. One group used T-cells for treating a patient’s skin cancer. Another group did the same for HIV.
These T-cells were turned into stem cells, which could divide themselves and reach large numbers when grown in the laboratory. These were converted back into T-cells which should also have the ability to target the cancer or HIV.
The leader of the team that worked at RikenDr. Hiroshi Kawamoto,  said: “The next step will be to test whether these T-cells can selectively kill tumour cells, but not other cells in the body. If they do, these cells might be directly injected into patients for therapy. This could be realized in the not-so-distant future.”

Saturday, January 26, 2013

Amazing & Interesting Facts About India

  • India is the world's largest, oldest, continuous civilization.
  • India is the world's Largest democracy.
  • India never invaded any country in her last 1000 years of history.
  • India invented the number system. Zero was invented by Aryabhatta.
  • When many cultures were only nomadic forest dwellers over 5000 years ago, Indians established Harappan culture in Sindhu Valley (Indus Valley Civilization)
  • There are 300,000 active mosques in India , more than in any other country, including the Muslim world
  • Sanskrit is the mother of all the European Languages . Sanskrit is the most suitable language for computer software - a report in Forbes magzine July 1987.
  • Chess (Shataranja or AshtaPada) was invented in India.
  • India is one of the few countries in the world, which gain independence without violence.
  • India has the second largest pool of Scientist and Engineers in the World.
  • India is the largest English speaking nation in the world.
  • India is the only country other than US and Japan, to have built a super computer indeigenously.
  • India has the largest number of Post Offices in the world
  • One of the largest employer in the world is the Indian Railways , employing over a million people
  • India was one of the richest countries till the time of British rule in the early 17th Century. Christopher Columbus, attracted by India's wealth, had come looking for a sea route to India when he discovered America by mistake.
  • The Baily Bridge is the highest bridge in the world. It is located in the Ladakh valley between the Dras and Suru rivers in the Himalayan mountains. It was built by the Indian Army in August 1982
  • The Vishnu Temple in the city of Tirupathi built in the 10th century, is the world's largest religious pilgrimage destination. Larger than either Rome or Mecca, an average of 30,000 visitors donate $6 million (US) to the temple everyday.
  • Varanasi, also known as Benaras, was called "the Ancient City" when Lord Buddha visited it in 500 B.C., and is the oldest, continuously inhabited city in the world today.
  • Martial Arts were first created in India, and later spread to Asia by Buddhist missionaries.
  • Yoga has its origins in India and has existed for over 5,000 years. 
  •  
  • Interesting Facts About India

     
  •  
  • The name 'India' is derived from the River Indus, the valleys around which were the home of the early settlers. The Aryan worshippers referred to the river Indus as the Sindhu.
  • The Persian invaders converted it into Hindu. The name 'Hindustan' combines Sindhu and Hindu and thus refers to the land of the Hindus
  • Algebra, Trigonometry and Calculus are studies, which originated in India.
  • The world's highest cricket ground is in Chail, Himachal Pradesh. Built in 1893 after leveling a hilltop, this cricket pitch is 2444 meters above sea level
  • Ayurveda is the earliest school of medicine known to mankind. The Father of Medicine, Charaka, consolidated Ayurveda 2500 years ago.
  • India exports software to 90 countries.
  • Jainism and Buddhism were founded in India in 600 B.C. and 500 B.C. respectively.
  • Islam is India's and the world's second largest religion.
  • Jews and Christians have lived continuously in India since 200 B.C. and 52 A.D. respectively
  • Sikhism originated in the Holy city of Amritsar in Punjab. Famous for housing the Golden Temple, the city was founded in 1577.
  •  

Best Architecture In The World.

Ancient Hindu architecture is best architecture in the world.
In this,we can see maa parvathi's temple ishapit on top. This was shown in Discovery channel recently. A request to proud Hindus to share this so much that all Hindus feel proud.

The kakapo : A rare Bird :)

 

The kakapo is a large, flightless parrot from New Zealand and one of the rarest birds of all, with only 124 individuals alive today.
The main reason for its decline is predation by introduced mammals, particularly feral cats.... lets play our role to save this species 4rm extinct fully 4rm our world.

Flying frog:



A "flying" frog is a frog that has the ability to achieve gliding flight.

That is, it can descend at an angle of less than 45° relative to the
horizontal. Other (non-flying) arboreal frogs can also descend vertically, but only at angles greater than 45°, which is referred to as parachuting

Transparent Frog...!!!


 

Native to Venezuela, the Glass Frogs belong to the amphibian family Centrolenidae (order Anura). While the general background coloration of most glass frogs is primarily lime green, the abdominal skin of some members of this family is transparent, so that the heart, liver, and digestive tract are visible through their translucent skin.

Armadillo girdled lizard:

 
The Golden Armadillo Lizard (Cordylus cataphractus) is a lizard
endemic to desert areas of southern Africa.

Stop Hair Fall

 
Eat sprouted green gram everyday in the morning and within 3 weeks you will see that your hairfall has reduced.

The Rainbow Rose :




These are not artificial roses! The Rainbow Rose is now available in the UK for the first time and although you may think that these weird and wonderful blooms are painted or artificial they are one hundred percent natural.

Theyare also known as the happy rose and their rainbow colours come about when plant extracts are injected in to their stem

Golden Temple AMRITSAR

BOOST THE SIGNAL OF YOUR WI-FI

 
Did You Know THAT YOU CAN BOOST THE SIGNAL OF YOUR WI-FI BY USING A CAN

If your router still won't reach far enough, you can extend its range with simple DIY (do-it-yourself) tricks. You can use a beer can or any beverage can to extend your router's range. The results won't necessarily be mind blowing, but you should be able to eke a bit more distance out of your Wi-Fi network with minimal effort.

கைவிரல் (கணிதம்)

விரல் (கணிதம்) என்பது பண்டையத் தமிழர்கள் நீளத்தை அளப்பதற்குப் பயன்படுத்திய அளவை முறையின் அலகுகளில் ஒன்று. அளப்பதெற்கென்று தனிப்பட்ட அளவு கருவிகளை முழுவதுமாகச் சார்ந்திராமல், தமது உடம்பின் பாகங்களைக் கொண்டு அன்றாட வாழ்க்கையில் தேவைப்படும் பொருட்கள், (கயிறு, கம்பு, துணி...) நீளங்கள் மற்றும் இரு குறிப்பிட்ட பொருட்களுக்கு இடைப்பட்ட தூரம் (ஓரளவு சிறியதான) ஆகியவற்றை அளக்கும் வழமையைத் தமிழர்கள் கொண்டிருந்தனர். அவர்கள் பயன்படுத்திய அலகுகளுள் விரற்கடை, சாண் மற்றும் முழம் ஆகியவை பரவலானவை. ஒவ்வொரு மனிதருக்கும் உடல் அளவுகள் மாறுபடும் என்பதால் விரற்கடை, சாண் மற்றும் முழம் ஆகிய அலகுகள் குறிக்கும் தூரம் அளக்கும் ஆட்களைப் பொறுத்து மாறுபடும் தன்மையுடையது என்றாலும் சாதாரண மக்களும் எளிதாக பயன்படுத்தக்கூடிய ஒரு அளவை முறையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


ஒரு மனிதரின் கையில் அமைந்துள்ள ஒரு விரலின் அகலம், ஒரு விரல் அல்லது விரற்கடை அளவாகும். நமது வலது கையில் கட்டை விரலை மடித்துக் கொண்டு மற்ற நான்கு விரல்களையும் ஒட்டினாற்போல வைத்தநிலையில் ஆட்காட்டி விரலுக்கும் சுண்டு விரலுக்கும் இடைப்படும் அகலப்போக்கான அளவு நான்கு விரற்கடை எனப்படும்.
இருபத்து நான்கு விரல் கொண்டது ஒரு முழம் ஆகும். விரல் பன்னிரண்டு கொண்டது ஒரு சாண். சாண் இரண்டு கொண்டது ஒரு முழம்.

1 விரல் = 1/24 முழம் = 1/24 * 18 அங்குலம் = 3/4 அங்குலம்
1 விரல் = 1/12 சாண் =1/12 * 9 அங்குலம் =3/4 அங்குலம்
விரல் (கணிதம்) என்பது பண்டையத் தமிழர்கள் நீளத்தை அளப்பதற்குப் பயன்படுத்திய அளவை முறையின் அலகுகளில் ஒன்று. அளப்பதெற்கென்று தனிப்பட்ட அளவு கருவிகளை முழுவதுமாகச் சார்ந்திராமல், தமது உடம்பின் பாகங்களைக் கொண்டு அன்றாட வாழ்க்கையில் தேவைப்படும் பொருட்கள், (கயிறு, கம்பு, துணி...) நீளங்கள் மற்றும் இரு குறிப்பிட்ட பொருட்களுக்கு இடைப்பட்ட தூரம் (ஓரளவு சிறியதான) ஆகியவற்றை அளக்கும் வழமையைத் தமிழர்கள் கொண்டிருந்தனர். அவர்கள் பயன்படுத்திய அலகுகளுள் விரற்கடை, சாண் மற்றும் முழம் ஆகியவை பரவலானவை. ஒவ்வொரு மனிதருக்கும் உடல் அளவுகள் மாறுபடும் என்பதால் விரற்கடை, சாண் மற்றும் முழம் ஆகிய அலகுகள் குறிக்கும் தூரம் அளக்கும் ஆட்களைப் பொறுத்து மாறுபடும் தன்மையுடையது என்றாலும் சாதாரண மக்களும் எளிதாக பயன்படுத்தக்கூடிய ஒரு அளவை முறையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


ஒரு மனிதரின் கையில் அமைந்துள்ள ஒரு விரலின் அகலம், ஒரு விரல் அல்லது விரற்கடை அளவாகும். நமது வலது கையில் கட்டை விரலை மடித்துக் கொண்டு மற்ற நான்கு விரல்களையும் ஒட்டினாற்போல வைத்தநிலையில் ஆட்காட்டி விரலுக்கும் சுண்டு விரலுக்கும் இடைப்படும் அகலப்போக்கான அளவு நான்கு விரற்கடை எனப்படும்.
இருபத்து நான்கு விரல் கொண்டது ஒரு முழம் ஆகும். விரல் பன்னிரண்டு கொண்டது ஒரு சாண். சாண் இரண்டு கொண்டது ஒரு முழம்.

1 விரல் = 1/24 முழம் = 1/24 * 18 அங்குலம் = 3/4 அங்குலம்
1 விரல் = 1/12 சாண் =1/12 * 9 அங்குலம் =3/4 அங்குலம்

Thursday, January 24, 2013

Eating dark chocolate reduce stroke

Recent research done in Sweden, which followed over 37,000 men, showed that those who eat morechocolate have a smaller risk of having a stroke than those who eat less, or none. Those who were part of this study were monitored for over 10 years, and eating habits, as well as overall health, were both monitored during that time. Other studies have also shown that chocolate can help heart health as well. So why is chocolate so beneficial for us? The answer may be flavonoids. These have been shown to protect against cardiovascular diseases using anti-clotting, antioxidant, and anti-inflammatory properties. Many even say that these flavonoids can also decrease the bad cholesterol in the blood, and even lower blood pressure. All types of chocolate have shown to be beneficial, including both dark and milk. Although this study was done on men in particular, there is no proof that it would not do the same for women. One must be aware that overeating chocolate will not help you, and it also should be part of a healthy, balanced diet. Chocolate can help, but it is also full of calories, sugar, and fat, and should only be consumed in moderation in order to get the full benefit, and few of the downsides. Chocolate is delicious, and also can have many benefits. And with so many flavors and types out there, one has few excuses to not eat it on occasion and not only enjoy a great tasting treat, but also reap the few health benefits that it can provide.

K-15 Under Water Missile


650 Km distance in JUST 482 Seconds - K-15 Under Water Missile launch Success - Content suitable for ALL - Info Tech Category

Tamil  version scroll down

India’s DRDO (Defence Research and Development Organisation) successfully test-fired the K-15 underwater missile on Wednesday, off the Visakhapatnam coast. This underwater launch system makes India the fifth country on the planet to have technology after U.S., Russia, France and China. K-15 leaped 20km into the air from it’s base a few meters under the sea and covered 650 km in just 482 before splashing into the bay of Bengal. This was the 11th trial flight of the missile. The K-15 is a two stage missile, weighs about 6 tonnes and 10 meters in length. DRDO is planning to equip Arihant with 12 such missiles, capable of carrying nuclear warhead. DRDO’s engineers are already in the process of building the K-4 missile, which is even more powerful than the K-15 and have a range of about 3500 - 5000 km.
இன்று சொந்த ஊர் அறிய கண்டுபிடிப்பான கே 15 - ஏவுகனன நம்ம இந்தியா வெற்றிகரமா சோதனை செய்தது. ஏவுகனை பழைய விஷயமாச்சேன்னு கேக்குறவங்களுக்கு - இந்த ஏவுகனை தண்ணீருக்கு அடியில் சென்று தாக்கும் திறன் படைத்தது. உலகத்திலே நாலு பேர் தான் இதை வெற்றீகரமாக செய்தி முடித்திருக்கிறார்கள். அதாவது அமெரிக்கா, ரஷியா, பிரான்ஸ் , சைனா - நம்ம ஐந்தாவ்து நாடு என்று பெருமையை உலகில் அடைகிறது. கே 15 லான்ச் பண்ணீனா 2 கிலோ மீட்டர் மேலே போய் அப்படியே தண்ணீக்கு அடியிலே சென்னை டு கன்னியாக்குமரி தூரத்தை கடலுக்கு அடியில் பயணித்து தாக்கும் அதுவும் நீங்கள் கனவில் கூட நினைத்து பார்க்க முடியாத ஸ்பீடு வெறும் 482 நொடிகள் தான் அதாவது 7 நிமஷத்துக்குள்னா பார்த்துகோங்க. ஒலியை விட 7.5 மடங்கு வேகம். இதன் அடுத்த டெஸ்டிங் கே 4 - 3500 - 5000 கிலோமீட்டர் வரை தாக்கும். இந்த ஏவுகனைகள் எல்லாம் அணூ ஆயுதம் தாங்கி கொண்டு இலக்கை தாக்க செய்யும் இதை ரேடார் கண்கானித்து அழிக்க முடியாது. சபாஷ் இந்தியா - ஜெய்ஹிந்த்.

ஆற்றல் மிகு மனிதவுடல்


இன்று நாம் கண்ணால் காணும் பல அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்கியவர் ஆல்பெர்ட் ஐன்ச்டின் போன்ற விஞ்ஞானிகள். இன்று வரை தன் மூளையை அதிகபட்சம்(~10%) பயன்படுத்தியவர்கள் இவர்களே. அதுவே 100% பயன்படுத்த முடிந்தால் எவ்வாறு இருக்கும் என்று யோசியுங்கள்.

அவ்வாறு செய்தவர்கள் தான் சித்தர்கள். அவ்வாறு மனித மூளையை 100% வேலைசெய்ய வைக்க அவர்கள் கண்டுபிடித்த வழிகள் தான் சரியை, கிரியை, யோகம், ஞானம்.

சித்தர்களின் முக்கிய தத்துவம்
“அண்டத்தில் உள்ளது பிண்டத்திலும் உள்ளது”.

பிண்டம் என்றால் நமது உடல். அண்டம் என்றால் பிரபஞ்சம். இந்த மானிடப் பிறப்பே உயர்ந்ததும், அரிதானதுமாகும். அதாவது பிரபஞ்சத்திலுள்ள சகல ஆற்றலும் மனித உடலுக்குள் உண்டு. அதைச் சரியான குரு துணையோடு தட்டி எழுப்புபவன் இறைநிலை அடைகிறான். அவ்வாறு உயர்நிலை அடைந்து மரணமிலாப் பெருவாழ்வு/ பேரானந்தம்/ மெஞ்ஞான நிலை/ சகாக்கலை/ பேரறிவு/ இறைநிலை அடைந்தவர்களே சித்தர்கள்.

கீரியை பாம்பு கடித்தால் உடனே அது ஒரு பச்சிலையை தின்கின்றது. ஆனால், நம்மை கடித்தால் நமக்கு ஏன் தெரியவில்லை..?! மருந்து என்னவென்று நம் மூளையிலிருந்தும் அது அறிவுக்கு வருவதில்லை. அதை கொண்டுவருவதே குண்டலினி யோகம்.

மருந்து என்பது மிகசிறிய வேலை. குண்டலினி யோகம் முடியும் போது அட்டமாசித்திகள் நம் அறிவில் தோன்றும். அதாவது 100% நம் மூளை வேலை செய்ய ஆரம்பிக்கும். அறிவு பலமடங்கு அதிகரித்திருக்கும். பசி, மூப்பு, பிணி ஆகிய மூன்றும் நம்மை விட்டு ஒடிப்போகும். இவ்வாறே சித்தர்கள் பல யுகங்கள் வாழ்ந்துள்ளனர். இன்றும் சூட்சம உடலில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

யோகமும் தவமும் வேறு. யோக ஆசனங்கள் உடலை ஆரோக்கியமாக வைக்க பயன்படுகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒரு விடயம். தவம் போன்ற விடயங்கள் தவறானவர்களிடம் சேர்ந்து, அவர்களுக்கும் அட்டமாசித்து கைகூடினால் தவறான நெறிசென்று உலகையே வெல்லும் எண்ணமுண்டாகலாம். எனவே தான் இவை இரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.

அட்டமாசித்திகள்
*************************

சித்தர் பாடல்:

அணுவினும் நுண்ணுருவு கொளல் அணிமாவாம், அவற்றின்
....... அதி வேகத்து இயங்கியும் தோய்வற்ற உடல் லகிமா,
திணிய பெருவரை என மெய் சிறப்புறுகை பகிமா,
....... சிந்தித்த பலம் எவையும் செறிந்துறுகை பிராத்தி,
பிணை விழியர் ஆயிரவரொடும் புணர்ச்சி பெறுகை
....... பிரகாமி, ஈசிதை மாவலியும் அடி பேணி
மணமலர் போல் எவராலும் வாஞ்சிக்கப்படுகை
....... வசி வசிதை வலியாரால் தடுப்பரிய வாழ்வே.


1) அணிமா
2) மகிமா
3) இலகிமா
4) கரிமா
5) பிராப்தி
6) பிராகாமியம்
7) ஈசத்துவம்
8) வசித்துவம்

1) அணிமா: பூதவுடலை அணுப்போன்று சிறியதாக்குதல்
2) மகிமா: மேருபோன்று பெரியதாக்குதல்
3) இலகிமா: காற்றுப்போல இலேசாக்குதல்
4) கரிமா: பளுவாக்குதல்
5) பிராப்தி: அனைத்தையும் ஆளுதல்
6) பிராகாமியம்: கூடுவிட்டுக் கூடுபாய்தல்
7) ஈசத்துவம் : விரும்பியதனை செய்து முடித்தல்
8) வசித்துவம்: எல்லோரையும் தன் வயப்படுத்துதல்

The Great S.C.Bose

இந்திய வரலாற்றில் ஒளிவிடும் சில மனிதர்களையும், அவர்களது தன்னலமற்ற வாழ்க்கையையும், சரியான விதத்தில் நினைவூட்டிக் கொள்வது, அவசியமானதாகும்.

நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் இந்திய சுதந்திரத்திற்காக மாபெரும் பிரிட்டிஸ் சாம்ராஜ்யத்தை எதிர்த்து நேரடியாகப் போராட்டத்தில் இறங்கினார். அவருக்கு எதிராக பல அபாண்டமான அவதூறுகள் எழுந்தன. அவற்றில் அரைப்பங்கை பிரிட்டிஷ் அரசு செய்தது என்றால் மிகுதிப் பங்கை அன்றைய இந்தியத் தலைவர்கள் செய்தார்கள் என்பதே வரலாற்று உண்மையாகும்.

‘சுபாஸ் சந்திரபோஸ் அவசரக்காரர்-ஆத்திரக்காரர்’ என்று கூறினார் மகாத்மா காந்தி அவர்கள். ‘சுபாஸ் சந்திரபோஸ் படபடப்பானவர்-பண்படாதவர்’ -என்று கூறினார் ஜவகர்லால் நேரு அவர்கள்.

ஆனால் நேதாஜியோ ஒரு முழுமையான தேசபக்தனுக்குரிய அம்சங்கள் அனைத்தும் கொண்ட ஒரு தன்னிகர் இல்லாத் தலைவராக செயல்பட்டார். “இந்தியா வாழ்ந்தால் யாரே வீழ்வார்? இந்தியா வீழ்ந்தால் யாரே வாழ்வார்?” என்று முழங்கிய போராளி அவர்.

நேதாஜியின் வாழ்க்கை அனுபவங்களும் அபூர்வமானவையே! தியாக உணர்வும், துறவு மனப்பான்மையும், இளமைப்பருவம் முதலாகவே நேதாஜியின் வாழ்வொடு பின்னிப்பிணைந்து இருந்தன. தனது 16வது வயதில் துறவியாக விரும்பி தனது வீட்டை விட்டே வெளியேறினார். 24வது வயதில் மிகுந்த செல்வாக்கைக் கொண்ட உயர் பதவியான ஐ.சி.எஸ் உத்தியோகத்தை தூக்கி எறிந்தார். கட்டாக் நகரில் தாம் பிறந்த மாளிகையை தனது 35வது வயதில் தேசத்திற்காக அர்ப்பணித்தார். 42வது வயதில் முழுப்பெரும்பான்மைப் பலத்தோடு வெற்றி பெற்றிருந்த அகில இந்தியக் காங்கிரஸ் தலைவர் பதவியைத் தூக்கி எறிந்தார்.

44வது வயதில் தன் உயிரினும் மேலாகக் கருதிய பாரத தேசத்தை விடுவிக்க வேண்டும் என்பதற்காக தன் தேசத்தை விட்டே வெளியேறி, தன் உயிரையே பணயம் வைத்து ஜேர்மனியிலும், ஜப்பானிலும், கிழக்காசிய நாடுகளிலும் அலைந்து திரிந்து ஒரு தற்காலிக சுதந்திர அரசை அமைத்து இந்திய தேசிய இராணுவத்தைத் திரட்டி போரிட்டு உலக வரலாற்றிலேயே ஒரு புதிய சாதனையை அத்தியாயத்தை உருவாக்கிவர் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் அவர்கள்.!

‘ஒரு நாட்டின் சுதந்திரம் என்பது போராடி, இரத்தம் சிந்தி, உயிர்த் தியாகம் செய்து கைப்பற்ற வேண்டியதே தவிர, கெஞ்சியும் கேட்டும் பெறுவதல்ல பேரம் பேசிப் பெறுவதும் அல்ல’ என்று முழங்கியவர் நேதாஜி.

அதேநேரம் காங்கிரஸ் தவைர்கள் சிலரது செய்கைகள் நேதாஜியை மனம் நோக வைத்தன. என்பதையும் இங்கு நாம் குறிப்பிட விரும்புகின்றோம். சில சம்பவங்களை வெளியில் இப்போது அதிகம் பேசப்படாத சில சம்பவங்களை இங்கு நாம் சுட்டிக்காட்ட விழைகின்றோம்.

1928ம் ஆண்டு மே மாதத்தில் நடந்த மராட்டிய மாநில காங்கரஸ் அரசியல் மாநாட்டிற்கு தலைமை தாங்கிய நேதாஜி, பூரண சுதந்திரமே இந்தியாவின் இலட்சியம் என்று பிரகடனம் செய்தார். ஆனால் மோதிலால் நேருவும் மகாத்மா காந்தியும் இந்தியாவிற்கு ஒரு பூரண குடியேற்ற நாட்டு அந்தஸ்து தந்தாலே போதுமானது என்ற ரீதியில் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி, பூரண சுதந்திர இந்தியா என்ற பிரகடனத்தை புறம் தள்ள்pனார்கள். ஆனால் இந்த பூரண சுதந்திர இந்தியா என்ற தீர்மானம் ஏற்கனவே 1927ம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னையில் நடைபெற்ற 42வது காங்கிரஸ் மகாசபைக் கூட்டாத்தில் நிறைவேற்றப் பட்டிருந்தது. ஆகவே ஏற்கனவே நிறைவேற்றப் பட்டிருந்த தீர்மானத்திற்கு எதிராக மகாத்மா காந்தியும், மோதிலால் நேருவும் முடிவு எடுத்ததை நேதாஜி எதிர்த்தார். மகாத்மா காந்தியின் இந்த முடிவு பிழை என்றும் பூரணசுதந்திரமே இந்தியாவின் இலட்சியம் என்ற பிரகடனமே சரியானது எனறும் நேதாஜி வாதிட்டார். நேதாஜியின் தர்க்கம் தீர்க்க தரிசனமாகப் பின்னர் பலித்தது.

1929ம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ம் திகதி லாகூரில் இந்திய காங்கிரஸ் மகாநாடு நடைபெற்றது. அப்பொழுது பூரண சுதந்திரமே இந்தியாவின் இலட்சியம் என்ற பிரகடனத்தை மகாத்மா காந்தியே முன்மொழிந்தார் அதனை ஆதரித்துப் பேசிய நேதாஜி கீழ்வருமாறு கூறினார்.

‘அன்று இத்தீர்மானத்தை எதிர்த்த அதே மகாத்மாஜியால் அன்று முன்மொழியப்பட்டு எங்களது தீர்மானம் பண்டித மோதிலால் நேருவால் ஆமோதிக்கப்பட்டு அன்று நிறைவேறுவதை காண நான் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். ஆனால் இந்தத் தீர்மானத்தை கிடப்பில் போட்டு விடாமல் உள்ளபடியே நாம் செயல்பட வேண்டுமானால் அதற்கு நான் கூறும் ஒரு திருத்தத்தையும் ஏற்றுக் கொள்ளும்படி இந்தச் சபையை நான் கேட்டுக் கொள்கின்றேன்.’

‘பரிபூரண சுதந்திரத் திட்டம்’ வெற்றி பெற்று இங்குள்ள பிரிட்டிஸ் ஆட்சியை நாம் சிறிதும் மதிக்கக் கூடாது பிரிட்டிஸ் அரசாங்கத்தை திணறச் செய்வதற்காக அயர்லாந்தில் அமைக்கப்பட்டது போல ஒரு சுதந்திர இந்திய போட்டி அரசாங்கத்தை நாம் அமைக்க வேண்டும்’ என்று ஒரு திருத்தத்தை நேதாஜி கொண்டு வந்தார். சுபாஸ் சந்திரபோஸின் திருத்தத்திற்கு பதில் அளித்துப் பேசிய மகாத்மாகாந்தி, “சுபாஸ் கூறுவது சிறந்த யோசனைதான்! ஆனால் இன்று அதற்கு வேண்டிய மக்கள் சக்தியும் சாதனங்களும் கிடைக்குமா என்பதைச் சற்று சிந்தித்தல் அவசியம்”- என்று கூறி நேதாஜியின் திருத்தத்தை நிராகரித்தார். நேதாஜி கொண்டு வந்த அத்திருத்தம் தோல்வியுற்றது.

அதுமட்டுமல்ல-அன்றைய தினம் இன்னுமொரு முறைகேடான விடயமும் அந்த லாகூர் மாநாட்டில் நடைபெற்றது. அகில இந்திய காங்கிரஸ் செயற்குழுவிற்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் வேலை ஜனவரி 2ம் திகதி காலையில் நடக்கும் என்று காங்கிரஸ் தலைவர் ஜவகர்லால் நேரு அறிவித்திருந்தார். ஆனால் சுபாஸ் சந்திரபோசும் மற்றைய வங்காளத் தலைவர்களும் இல்லாத நாளான ஜனவரி முதலாம் திகதியன்றே செயற்குழு உறுப்பினர் தேர்தலை நேரு நடாத்தி விட்டார். அதாவது அறிவிக்கப்பட்ட நாளுக்கு ஒரு நாள் முதலாகவே இத்தேர்தல் நடாத்தப்பட்டது. இதனால் செயற்குழு உறுப்பினர் பட்டியலில் நேதாஜியின் பெயர் இடம் பெறவில்லை. சரியாக சொல்லப்போனால் நேதாஜிக்கு ஆதரவாளர்களைத் தவிர்த்து அவருக்கு எதிரானவர்களை அந்தத் திடீர் தேர்தல் அங்கத்தவர்களாக நியமித்திருந்தது.

செய்தியை அறிந்த நேதாஜி திடுக்கிட்டு போனார். ஜவகர்லால் நேருவா இப்படிச் செய்தார் என்று நேதாஜியால் நம்பவே முடியவில்லை. அடுத்தநாள் மாநாட்டில் பேசிய நேதாஜி செயற்குழு உறுப்பினர் தேர்தல் முறையாக நடக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டி வன்மையாக இச்செயலைக் கண்டித்தார். காங்கிரஸ் செயற்குழு, மிதவாதிகளின் கைப்பொம்மையாகச் செயல்படுவதாகக் கூறிய நேதாஜி ‘காங்கிரஸ் ஜனநாயக கட்சி’ என்ற புதிய கட்சியை அமைப்பதாக அன்றைய தினம் தெரிவித்தார்.

நேதாஜியின் அரசியல் வாழ்க்கை போராட்டமும், சிறைவாசமுமாகத் தொடர்ந்தது. வெளிநாடுகளுக்கு பயணம் செய்து இந்திய சுதந்திரப் பேராட்டத்திற்காக அவர் ஆதரவு திரட்டியும் வந்தார். வியன்னா நகரில் நேதாஜி இருந்தபோது ஜவகர்லால் நேரு கடிதம் ஒன்றை நேதாஜிக்கு எழுதினார். லட்சுமணபுரியில் நடக்கவிருக்கும் காங்கிரஸ் மகாசபைக்கு சுபாஸ் சந்திரபோஸ் தலைமையேற்று நடத்த வேண்டும் என்று நேரு வேண்டியிருந்தார். ஆனால் பம்பாய் துறைமுகத்தை நேதாஜி வந்தடைந்த போது அவரைப் பயங்கரவாதி என்றும், பயங்கரவாதத்தை பரப்புகின்ற தலைவர் என்றும் பிரிட்டிஸ் அரசு குற்றம் காட்டிக் கைது செய்தது.

சுமார் 11 மாதங்கள் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். ஆயினும் 1937ம் ஆண்டு நவம்பர் மாதம் 10ம் திகதியன்று கல்கத்தாவில் காங்கிரஸ் கட்சித் தலைவராக நேதாஜி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இரண்டாவது உலக மகாயுத்தம் அப்போது ஆரம்பமாகியிருந்தது. இந்த யுத்தத்தில் இங்கிலாந்து முக்கிய பங்கு வகிக்கும் இத்தருணத்தில், அதற்கு இடையூறு செய்வது போல் சுதந்திரத்திற்கான கிளர்ச்சிகளைச் செய்யக்கூடாது என்பது மகாத்மா காந்தியின் நிலைப்பாடாக இருந்தது. ஆனால் சுபாஸ் சந்திரபோஸோ வேறு கருத்தினைக் கொண்டிருந்தார்.

“இந்த யுத்தத்தில் இந்தியாவின் அனுமதியை இங்கிலாந்து கேட்கவில்லை கேட்காமலே யுத்தத்தில் நமது நாட்டைப் பிணைத்தவர்களுக்காக, நாம் ஏன் தயங்க வேண்டும்?. ஏன் தயவு காட்டவேண்டும்? நம்முடைய சுதந்திரத்தைப் பெறுவதற்காக கடவுள் தந்த அருமையான வாய்ப்பு இது. இதுவே தகுந்த தருணம் இதனை நழுவ விடுவது மதியீனமாகும்”- --என்பதே நேதாஜியின் நிலைப்பாடாக இருந்தது.

போராட்டம் இன்றிச் சுதந்திரத்தை பெற யாராலும் முடியாது. போராடித்தான் சுதந்திரத்தை பெறவேண்டும் குறைந்த பட்ச செயல் திட்டம் ஒன்றை வைத்துக் கொண்டு காங்கரஸ் கட்சி சுதந்திரப் போராட்டத்தைத் துரிதப்படுத்த வேண்டும். என்றும் நேதாஜி வற்புறுத்தி வந்தாலும். இந்த வேளையில் மீண்டும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கான தேர்தல் வந்தது. நேதாஜிக்கு எதிராக பட்டாபி சீத்தாராமையா நிறுத்தப்பட்டார்.

பட்டாபி சீத்தாராமையருக்கு ஆதரவாக காந்திஜி ஜவகர்லால் நேரு, ராஜாஜி, ராஜேந்திர பிரசாத், வல்லபாய் பட்டேல், கிருபளானி போன்ற நாடறிந்த தலைவர்கள் இருந்தார்கள். 1939ம் ஆண்டு ஜனவரி மாதம் 29ம் திகதி அன்று காங்கரஸ் தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்தது. நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் மகத்தான வெற்ற்p அடைந்தார். நேதாஜியின் வெற்றி மகாத்மா காந்திக்கும், மற்றவர்களுக்கும் பேரதிர்ச்சிpயை அளித்தது. நாட்டு மக்களுக்கோ அது அளவற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனால் காங்கிரஸ் கட்சிக்குள் நிலைமை மோசமானது. இவ்வேளையில் மகாத்மா காந்தியும் தனது கருத்தை வெளிப்படையாகவே சொன்னார். “சுபாஸ் சந்திரபோஸ் காங்கிரஸ் கட்சியின் தலைவராகக் கூடாது என்பதற்காகவே நான் பட்டாபி சீத்தாராமய்யாவை தேர்தலில் நிற்கச் சொன்னேன். எனவே பட்டாபியின் தோல்வி, என்னுடைய தோல்வி என்பதை ஒப்புக் கொள்கிறேன்”- என்று மகாத்மா கூறினார். மகாத்மா காந்தியின் அறிக்கையைப் பார்த்து நேதாஜி திடுக்குற்றார். தமது வெற்றியை மகாத்மா காந்தி தன்னுடைய தோல்வி என்று குறிப்பிட்டதை எண்ணி நேதாஜியின் மனது வேதனையுற்றது.

காந்தியடிகளின் விருப்பத்தை அறிந்த மற்றைய காங்கரஸ் தலைவர்கள் நேதாஜியுடன் ஒத்துழைக்க மறுத்தார்கள். நேதாஜி தன்னுடைய கடமையை செவ்வனே செய்ய முடியாத நிலையை காங்கரஸ் கட்சிக்குள் சிலர் உருவாக்கினார்கள. ஆகவே வேறு வழியின்றி நேதாஜி தன்னுடைய தலைமைப் பதவியை இராஜினாமா செய்தார். கல்கத்தாவில் உள்ள ஹஸ்ரா பூங்காவில் நேதாஜி நிகழ்த்திய நான் ஏன் இராஜினாமா செய்தேன் என்ற சொற்பொழிவு, செறிவும், பொருத்தமும் நிறைந்த பிரசித்தமான ஒன்றாகும்.

நேதாஜியோ வாளாவிருக்கவில்லை. ஜேர்மனி, ஜப்பான், இத்தாலி ஆகிய நாடுகளுடன் நேதாஜி ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டு அதில் கைழுத்திட்டார். இந்திய நாட்டில் வேரூன்ற்pய அன்னிய ஆட்சியை அகற்றுவதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக இந்த மூன்று நாடுகளும் ஒப்பந்தத்தில் கூறியிருந்தன.

நேதாஜி பல நாடுகளுக்கும் சென்று, இந்திய தேசிய இராணுவத்தைக் கட்டியெழுப்பி பயிற்சி கொடுத்தார். பயிற்சி முற்றுப்பெற்ற வீரர்களைப் பகுதி பகுதியாக பிரித்தார். சிங்கப்பூர், பர்மா, மலேயா, தாய்லாந்து நாடுகளுக்குத் தன்னுடைய படை வீரர்களை அனுப்பினார். நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்தின் அங்கத்தவர்களாக ஜான்சிராணி என்கின்ற பெண்கள் படையும் பாலர் படையும் இருந்தன. பன்ன்pரண்டு வயத்pற்கு மேல் பதினெட்டு வயதிற்கு உட்பட்ட இளையவர்களின் படையே பாலர் படையென அழைக்கப்பட்டது. இந்தப்படையில் ஆயிரத்துக்கு மேற்பட்ட இளையவர்கள் இருந்தார்கள்.

இரண்டாவது உலகப்போரில் ஜப்பான் கைப்பற்றிய அந்தமான் நிக்கோபர் தீவுகளை ஜப்பான் அரசு நேதாஜியிடமே கையளித்தது. 1943ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் திகதி இந்தியாவின் மூவர்ணக் கொடியை அந்தமான் தீவில் நேதாஜி பறக்க விட்டார்.

1944ம் ஆண்டு மார்ச் மாதம் 18ம் திகதியன்று நேதாஜியின் இராணுவம் இந்திய மண்ணில் கால் பதித்தது. நாகலாந்து மணிப்பூர் சமஸ்தானங்களைக் குறிவைத்து படைகள் முன்னேறின. இடைவிடாது போரிட்டு மணிப்பூரின் பல பகுதிகளை இந்திய தேசிய இராணுவம் கைப்பற்ற்pயது. மணிப்பூரின் தலைநகரம் இம்பால் அதைக் கடந்து விஸ்ணுபூர் என்று நேதாஜியின் இராணுவம் முன்னனேறியது. விஸ்ணுபூர் பிடிபட்டால் பிறகு வங்காளம் டெல்லி என்று முன்னேற வாய்பிருந்த வேளையில் ஜப்பான் அமெரிக்காவிற்கு அடிபணிந்தது. நேதாஜியின் படை பர்மாவுக்கு பின்வாங்க நேர்ந்தது. நேதாஜியோ கலங்கவில்லை. நாம் ஆடிய முதல் ஆட்டம் இது. இதில் தோற்றுப் போனாலும் இத்தோல்வியே இனிவரும் வெற்ற்pகளுக்கு படிக்கல்லாக அமையும். என்று முழங்கினார். ஆனால் 1945ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ம் திகதியன்று சரியாக 61 ஆண்டுகளுக்கு முன்பு விமான விபத்தில் நேதாஜி உயிர் இழந்ததாக அறியப்பட்டது.

நேதாஜி அஞ்சா நெஞ்சம் படைத்த தீர்க்கதரிசியாக விளங்கினார். ஆங்கில அமெரிக்க ஏகாதிபத்தியம் குறித்து 61 ஆண்டுகளுக்கு முன்பு நேதாஜி கூறியது அப்படியே நடக்கின்றது. “அமெரிக்க எஜமானனின் கைப்பிடிச் சங்கிலியில் பிணைக்கப்பட்ட ஏவல் நாயாகவே எதிர்காலத்தில் பிரிட்டன் விளங்கும்” என்று நேதாஜி அன்றே சொன்னார்.

சற்று ஆழமாக கூர்ந்து நோக்கினால் நேதாஜியின் தூண்டுதலும் போராட்டங்களும், கருத்துக்களும் நடவடிக்கைகளும்தான் காந்தியடிகள் ஆக்கிரோசமான பாதையை உத்வேகத்துடன் தேர்ந்தெடுக்க காரணமாக இருந்தது என்பது புலனாகும்.

குட்டிக்கதை

மனைவி : காரணம் இல்லாம குடிகமாட்டேன்னு சொன்னிங்களே இப்போ ஏன் குடிச்சிங்க???

கணவன் : ராக்கெட் விடுறதுக்கு பாட்டில் வேண்டும்னு பையன் கேட்டான் அதான்

மனைவி :??????

பைல்ஸ் பிரச்சனையா?


அனைவரது உடலில் இருக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் மலச்சிக்கல். அந்த மலச்சிக்கல் பிரச்சனை அதிகம் இருந்தாலே, அதற்கு அடுத்த நிலையான பைல்ஸ் வந்துவிடும். பைல்ஸை மூல நோய் என்றும் அழைப்பர். இத்தகைய பைல்ஸ் பிரச்சனை வந்தால் சரியாக உட்கார முடியாது. எப்போதும் ஒருவித டென்சன் இருக்கும். ஏன் தெரியுமா? ஆம், மலவாயில் புண் வந்தால் பின்னர் எப்படி இருக்கும். அதிலும் பைல்ஸ் என்பது சாதாரணமானது அல்ல. அது வந்தால், மலவாயில் கழிவுகளை வெளியேற்றியப் பின்னரும், வெளியேற்றும் போதும் கடுமையான வலி ஏற்படுவதோடு, இரத்தப்போக்கு, அரிப்பு போன்றவை ஏற்படும். இந்த பிரச்சனை வருவதற்கு உடலில் அதிகப்படியான வெப்பமும் ஒரு காரணம்.
எனவே மலச்சிக்கல் வந்தால், அதனை ஆரம்பத்திலேயே சரிசெய்துவிட வேண்டும். அதற்கான மருந்து வீட்டிலேயே இருக்கிறது. அது என்னவென்றால், உணவுகள் தான். குறிப்பாக பைல்ஸ் வந்துவிட்டால், அதனை மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று, அதற்கான மருந்துகளையும் உட்கொள்ளலாம். இல்லையெனில் ஒருசில வீட்டு மருந்துகளைக் கொண்டும் சரிசெய்யலாம். இப்போது அந்த பைல்ஸ் பிரச்சனையை சரிசெய்ய என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.


முள்ளங்கி ஜூஸ்
பைல்ஸ் இருந்தால் ஒரு டம்ளர் முள்ளங்கி ஜூஸ் குடித்தால், சரியாகிவிடும். அதிலும் எடுத்தவுடன் ஒரு டம்ளரை குடிக்காமல், கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து குடித்து வந்தால், சரியாகிவிடும்.
மாதுளை தோல்

இந்த சிவப்பு நிற மாதுளைப் பழத்தின் தோல் பைல்ஸ் பிரச்சனையை சரிசெய்யும். அதற்கு மாதுளையின் தோலை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரை தினமும் ஒன்று அல்லது இரண்டு டம்ளர் குடித்தால், சரியாகிவிடும்.

இஞ்சி மற்றும் எலுமிச்சை ஜூஸ்


நீர் வறட்சியும் பைல்ஸ் பிரச்சனைக்கு ஒரு காரணம். எனவே தினமும் இரண்டு முறை இஞ்சி மற்றும் எலுமிச்சையை நீரில் கலந்து ஜூஸ் போன்று இரண்டு முறை குடித்து வந்தால், உடலில் வறட்சி குறைந்து, பைல்ஸ் சரியாகிவிடும்.

அத்திப்பழம்


அத்திப்பழத்தில் உலர்ந்ததை வாங்கி, அதனை இரவில் படுக்கும் போது ஒரு டம்ளர் நீரில் ஊற வைத்து, காலையில் எழுந்ததும் பாதியை குடித்துவிட்டு, மீதியை மாலையில் குடிக்க வேண்டும். இதனால் மலச்சிக்கல் மற்றும் பைல்ஸ் குணமாகிவிடும்.

வெங்காயம்


வெங்காயத்தை பச்சையாக சாப்பிட்டால், பைல்ஸால் ஏற்படும் இரத்தப் போக்கை சரிசெய்துவிடலாம். அதுமட்டுமின்றி, அவை மலவாயில் ஏற்படும் வலியையும் குணமாக்கும்.
சரியான நிலை
மலம் கழிக்கும் போது சரியான நிலையில் லேசாக அடிவயிற்றை அழுத்தும் படியாக உட்கார்ந்து செல்ல வேண்டும். அவ்வாறு சரியான நிலையில் உட்கார்ந்து செல்வதால், மலக்குடலுக்கு எந்த ஒரு அழுத்தமும் கொடுத்து, கஷ்டப்பட்டு செல்ல வேண்டி இருக்காது. இதனால் பைல்ஸ் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.

உடற்பயிற்சி

மலச்சிக்கலை தடுத்து, இரத்த சுழற்சியை சீராக்க, தினமும் நன்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும். அதிலும் மிகவும் கடினமாக இருக்கும் உடற்பயிற்சியான எடை தூக்குதல் போன்றவற்றை செய்யவே கூடாது. அதற்கு பதிலாக வாக்கிங், ஜாக்கிங், நீச்சல் போன்ற லேசான உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

மஞ்சள்


மசாலா பொருட்களில் காயங்களை குணப்படுத்தும் பொருள் அதிகம் உள்ளது. எனவே மஞ்சளை சூடான நீரில் கரைத்து, தினமும் குடித்து வந்தால், பைல்ஸ் இயற்கையாக சரியாகிவிடும்.

வாழைப்பழம்

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால், மலச்சிக்கல் பிரச்சனை சரியாகிவிடும் வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுவார்கள். அதிலும் இதை இரவில் ஒரு டம்ளர் சூடான பால் குடித்துவிட்டு, ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால், மறுநாள் காலையில் எந்த ஒரு கஷ்டமுமின்றி கழிவுகளை வெளியேற்றலாம்.
பருப்பு வகைகள்

பருப்பு பருப்பு வகைகளில் காராமணி, உளுத்தம் பருப்பு போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்தால், பைல்ஸ் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.

Photo realistic Pencil Drawings by Diego Fazio


மேலே உள்ள இளம் பெண்ணின் படம் புகைப்படம் போல உள்ளதல்லவா? ஆனால் அதுதான் இல்லை. அது கையால் வரையப்பெற்ற ஓவியம்! சான்றாக இன்னும் சில படங்களைக் கீழே கொடுத்துள்ளேன். பாருங்கள்!








Photo realistic Pencil Drawings by Diego Fazio

நம்புங்கள், ஓவியங்கள்தான் இவைகள்!

இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஓவியர் டீகோ ஃபாஸியோ (வயது 23) வரைந்த, பென்சிலால் வரைந்த, ஓவியங்கள்தான் இவைகள். ஒரு ஓவியத்தை வரைந்து முடிக்க சுமார் 200 மணி நேரம் பிடிக்கும் என்பது உபரிச் செய்தி (அம்மாடியோவ்!)

மின்னஞ்சலில் வந்தது. அற்புதமாக இருந்ததால் உங்களுக்கு அறியத் தந்திருக்கிறேன்

Wednesday, January 23, 2013

பட்டா சிட்டா அடங்கல் என்றால் என்ன தெரியுமா?



சொத்து பரிமாற்றம் என்பது, ஏதோ இரு நபர்களுக்கு இடையிலான கொடுக்கல் வாங்கல் நிகழ்வாக மட்டுமில்லாமல், அது நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய அளவுகோலாக பார்க்கப்படும் வகையில் முக்கியத்துவம் பெற்றுவிட்டது.

எனவேதான், இத்தகைய பரிமாற்றங்களுக்கு சட்ட பாதுகாப்பு அளிக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.மன்னராட்சி காலத்தில் இருந்தே சொத்து பரிமாற்றங்களை ஆவணபடுத்துவது தொடர்பான பணிகள் நடைபெற்றுள்ளன.
கல்வெட்டுகள், செப்பு பட்டயங்கள், ஓலைச் சுவடிகள், காகிதங்கள் என, இதற்கு பயன்படுத்தப்பட்ட பொருள்களை போலவே இதற்கான மொழி வழக்குகளும் காலந்தோறும் மாறிவந்துள்ளன. தொடர்ந்து மாறியும் வருகின்றன.இதற்கான சட்ட பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக 1864ம் ஆண்டு பதிவுத்துறை ஏற்படுத்தப்பட்டது. 1899ம் ஆண்டு இந்திய ஸ்டாம்ப் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து பதிவு சட்டம் 1908ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இதில் உள்ள குறைபடுகளை சரி செய்யும் வகையில், அடுத்தடுத்து பல்வேறு சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு பத்திரப்பதிவு தொடர்பான பணிகள் முறைபடுத்தப்பட்டு வருகின்றன.
தமிழகம் முழுவதும் உள்ள 574 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு ஆண்டுக்கு சராசரியாக 1.5 கோடி பேர் வந்து செல்கின்றனர். இதன்மூலம் ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 30 லட்சம் ஆவணங்கள் பதிவு செய்யபடுகின்றன.இவ்வாறு பதிவு செய்வதற்கு, ஆவணங்களை எழுதுவது என்பதே ஒரு முக்கிய கட்டமாக உள்ளது. 30 ஆண்டுகள் முன்பு அனைத்து பிரிவு மக்களும் குறிப்பிட்ட சில பிரிவினரையே சார்ந்திருந்தனர். அரசு அங்கீகாரம் பெற்ற ஆவண எழுத்தர்கள் வரவை அடுத்து, இதில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. இதனால், ஆவணங்கள் எழுதும் முறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
பொதுவாக வீடு, மனை, வாங்கும் பலரும், அது தொடர்பான ஆவணங்களை பிறரிடம் அளித்தே சரி பார்க்கின்றனர். ஆனால் இந்த ஆவணங்களை வாங்குபவரும் விற்பவரும் முழுமையாக படிக்க வேண்டும் என்பதே வல்லுனர்களின் ஆலோசனையாக உள்ளது.இத்தகைய ஆவணங்களை எழுதுவோர் வழக்கமாக பயன்படுத்தி வரும் வாசகங்களில்
இடம்பெறும் குறிப்பிட்ட சில வார்த்தைகள் இன்னமும் புரியாதவையாகவே உள்ளன.
இதில், ஆவணங்கள் அடிக்கடி பயன்படுத்தப்படும் சில வார்த்தைகளும், அவற்றின்


விளக்கங்கள் விவரம்:


பட்டா: ஒரு நிலம் இன்னார் பெயரில் உள்ளது என்பதை குறிக்கும் வகையில் வருவாய்துறை அளிக்கும் சான்றிதழ்.


சிட்டா: குறிப்பிட்ட நிலத்தின் பரப்பளவு அதன் பயன்பாடு, யாருடைய கட்டுபாட்டில் உள்ளது என்பது தொடர்பான விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.


அடங்கல்: நிலத்தின் பரப்பு, பயன்பாடு, கிராமத்தின் மொத்த நிலத்தில் இது எந்த பகுதயில் உள்ளது என்ற விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.


கிராம நத்தம்: ஒவ்வொரு கிராமத்திலும் குடியிருப்பு பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலம்.


கிராம தானம்: கிராமத்தின் பொது பயன்பாட்டுக்காக நிலத்தை ஒதுக்குவது.
தேவதானம்: கோவில் பயன்பாட்டுக்காக குறிப்பிட்ட நிலத்தை தானமாக அளித்தல்.


இனாம்தார்: பொது நோக்கத்துக்காக தனது நிலத்தை இலவசமாக அளித்தவரை குறிக்க பயன்படுத்தும் சொல்.


விஸ்தீரணம்: நிலத்தின் பரப்பளவு. எல்லைகளை குறிப்பது.


ஷரத்து: பிரிவு.


இலாகா: துறை.


கிரயம்: நிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்வதை ஆவணபடுத்துதல்.


வில்லங்க சான்று: ஒருநிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்த அதன் உரிமையாளர், அதனை மறைத்துவிட்டு, அதே நிலத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்வது மோசடி. இந்த விவரத்தை அறிந்து கொள்ள உதவும் பதிவுத்துறை ஆவணம்.


புல எண்: நில அளவை எண்.


இறங்குரிமை: வாரிசுரிமை.


தாய்பத்திரம்: ஒரு குறிப்பிட்ட நிலம், இப்போதைய உரிமையாளருக்கு முன்னர் யாரிடம் இருந்தது என்பதை அறிய உதவும் முந்தய பரிவர்த்தன ஆவணங்கள்.


ஏற்றது ஆற்றுதல்: குறித்தவகை பொறுப்பை நிறைவற்றுவதற்கு உறுதி அளித்தல்.


அனுபவ பாத்தியதை: நிலத்தை பயன்படுதிகொள்ளும் உரிமை.


சுவாதீனம் ஒப்படைப்பு: நிலத்தின் மீதான உரிமையை ஒப்படைத்தல்.
ஜமாபந்தி: வருவாய் தீர்வாயம்.


நன்செய்நிலம்: அதிக பாசன வசதி கொண்டநிலம்.


புன்செய்நிலம்: பாசன தேவைக்கு மழையை நம்பியுள்ள நிலம்.


குத்தகை: ஒரு நிலத்தை பயன்படுத்தும் உரிமையை குறிப்பிட்ட காலத்துக்கு சில நிபந்தனைகளுடன் அளிப்பது அல்லது பெறுவது.


இந்த வார்த்தைகளின் பயன்பாடு சமீபகாலமாக படிப்படியாக குறைந்து வருகிறது என பதிவுதுரையினர் தெரிவித்தனர்.23 வகை மாதிரி ஆவணங்கள்ஒருவர் தன்னிடம் உள்ள சொத்தை, வேறு ஒருவருக்கு விற்பனை செய்வது தொடர்பான ஆவணங்களை எழுத மூன்றாவது நபர் ஒருவரை சார்ந்திருக்கும் நிலையை மாற்ற வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வந்தது.
இதை ஏற்ற, சொத்து விற்பனை, அடமானம், ஒப்பந்தம், பொது அதிகார ஆவணம், ரத்து செய்யும் ஆவணம், உள்ளிட்ட 23 வகையான ஆவணங்களின், ஆங்கிலம் மற்றும் தமிழ் மாதிரி படிவங்களை பதிவுத்துறை வெளியிட்டுள்ளது.
பதிவுதுறையின் www.tnreginet.net என்ற இணையத்தளத்தில் இருந்து இவற்றை இலவசமாக பதிவிறக்கம் செய்து, பெயர், முகவரி, சொத்து விவரங்களை மட்டும் பூர்த்தி செய்து பயன்படுத்தி கொள்ளலாம்...

தெரிஞ்சுக்குவோம் .

  1.உலகிலேயே அதிகம் பேருக்கு இருக்கும் பெயர் "முஹம்மது"

2. ஆங்கில கீபோர்டில் ஒரே வரிசையில் அதிக எழுத்துக்கள் பயன்படுத்தப்படு­ம் ஒரு சொல் "TYPEWRITER"

3. அதே போன்று இடது கையினால் மட்டும் டைப் செய்யப்படும்
நீண்ட வார்த்தை 'Stewardesses"

4. வானத்தை நிமிர்ந்து பார்க்க இயலாத ஒரே விலங்கு "பன்றி"

5. Sixth Sick Sheik's Sixth Sheep's Sick - இதுவே ஆங்கிலத்தில் மிகவும் கடினமான "Tongue Twister"

6. 111,111,111 ஐ திரும்ப 111,111,111 ஆல் (111,111,111 x 111,111,111) பெருக்கினால்
12,345,678,987,654,321 என்ற விந்தையான கூட்டுத்தொகை வரும்.

7. எப்போதும் கெட்டுப்போகாத ஒரே உணவு "தேன்"

8. தீப்பெட்டி கண்டுபிடிப்பதற் ­கு முன்பே சிகரெட் லைட்டர் கண்டுபிடிக்கப்ப ­ட்டது.

9. உலகில் மனிதர்கள் அதிகமாக இறப்பதற்கு காரணமாகும் விலங்கு - கொசு

10. தும்மும் போது 'நன்றாய் இரு" "இறைவனுக்கு நன்றி"என்றுசொல்லக் கேட்டிருப்போம். ­, ஆமாம் உண்மையில் தும்மும் போது இதயம் ஒரு 'மில்லி செகண்ட்' நிற்குதாம்

11. பூமியின் எடை 5,972,000,000,000,000,000,000 டன்கள்.

தெரிந்துக் கொள்ளுங்கள் !!!

தெரிந்துக் கொள்ளுங்கள் !!!

புதிதாக வெளிநாடு வருபவர்களுக்கு உதவ சில விஷயங்கள்...

* டிக்கெட் வாங்கும்போது குறைந்த நிறுத்தங்கள் (stopover) இருக்குமாறு வாங்குங்கள்..transit இருக்கும் பட்சத்தில், connecting flight நீங்கள் அங்கு வந்து குறைந்தது ரெண்டு மணி நேரம் கழித்து கிளம்புவதாக தேர்வு செய்யுங்கள்..விமான தாமதங்கள் சகஜமாக இருப்பதால் இரண்டு மணி நேரத்துக்கு குறைவாக இருந்தால் connecting flightஐ விட்டுவிட வாய்ப்பு அதிகம்..

* இந்தியாவிலிருந்து எடுத்து செல்லும் மசாலாக்களை விமானத்துக்குள் எடுத்து செல்ல முடியாது..அதனால் அதை செக்-இன் செய்ய வேண்டும்..மறக்காதீர்கள்.. வளைகுடா நாடுகளில் நாம் குருமாவுக்கு போடும் கசகசா தடை செய்யப்பட்ட போதைபொருள் வரிசையில் வருவதால் ஜாக்கிரதை..மாட்டினால் கண்டிப்பாக கம்பி எண்ண வேண்டியிருக்கும் ..(அதை நாம் குருமாவுக்கு போடுவோம்ன்னு அவங்களுக்கும் தெரியும்..ஆனாலும் அரப்பசங்க ஒதுக்கமாட்டானுங்க )

* புதிய இடம், புதிய உணவு, புதிய மக்கள், பிரிவு என்று முதல் ஒரு மாசம் வர இருக்கும் மன அழுத்தத்தை புரிந்து எதிர்கொள்ள வேண்டும்..வீட்டில் செல்லமாக வளர்ந்த "குழந்தைகள்" ஜாக்கிரதை...ரூமுக்குள் அடைபட்டு கிடைக்காமல் முடிந்தவரை வெளியே இருந்தால் நல்லது..குளிராக, வெயிலாக இருக்கும் பட்சத்தில் ரயில், பஸ்களில் பிரயாணிக்கலாம்..

* வங்கிக்கணக்கு ஆரம்பிப்பது தான் முதல் வேலை..போன், இன்டர்நெட், காஸ், மின்சாரம் என்று பல இதை சார்ந்தே இருக்கும்.. மாணவர்களாக இருந்தால் உங்கள் கல்லூரியின் அடையாள அட்டை தேவை..வேலை செய்யும் பட்சத்தில் இது ரொம்ப சுலபம்..அவர்களே பார்த்துகொள்வார்கள்...

* தயங்காமல் எந்தவொரு விஷயத்தையும் கேட்டு செய்யுங்கள்..நீங்க பாட்டுக்கு பராக்கு பாத்தா காசு வீணாயிடும்..ஒரு விஷயம் தெரியாம இருந்தாலும் காசு வீணாயிடும்..டாக்சிக்களை தவிர்த்து அரசு வாகனங்களை பயன்படுத்துங்கள்..

* சக இந்தியர்களை தெரிந்து கொள்வது ரொம்ப முக்கியம்..சில பேரு அவங்க சொத்தை நீங்க எழுதி வாங்கிடுவீங்களோன்னு கண்டும்காணமா இருப்பாங்க..ஆனா விடாதீங்க..விஷயங்களை இயல்பாக கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.. அவர்களை சந்திக்க சிறந்த இடம் பக்கத்தில் இருக்கும் வழிபாட்டு இடங்கள், (வேலை இடம், கல்லூரி தவிர)..உணவு, இருப்பிடம், உடை பற்றிய சிறந்த அறிவுரைகளை அவர்களை தவிர வேறு யாரும் தர முடியாது.. இந்திய காய்கறிகள், மசாலாக்கள் அநேகமாக எல்லா வெளிநாட்டு சூப்பர் மார்க்கெட்டுகளில் கிடைக்கும்..ஆனால் preservatives அதிகமாக இருப்பதால் சுவை மாறுபடும்..

* மேற்கத்திய நாடுகளான ஸ்வீடன், நார்வே, பின்லாந்து ஆகிய நாடுகளில் மக்களிடையே technology acceptance ரொம்ப அதிகம்.. எனக்கு தெரிந்த ஒரு பாட்டி அங்கு 500 Mbps இன்டர்நெட் உபயோகிக்கிறார்...விலையும் அதிகமில்லை..நல்ல இன்டர்நெட் இணைப்பு வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்..மொக்கையாக வாங்கிவிட்டு..contract இல் நுழைந்துவிட்டு சங்கடப்படாதீர்கள்...இந்தியாவிற்கு பேச இன்டர்நெட் கண்டிப்பாக தேவை...உங்கள் வீட்டிலும் இன்டர்நெட் கொடுத்து பெற்றோர்களுக்கு கற்றுகொடுப்பது ரொம்ப முக்கியம்..டிவி இணைப்பும் (ADSL) பெரும்பாலும் சேர்ந்து வருவதால் டிவியும் வாங்கிடலாம்..

*பஸ், ரயில் என்று எங்கு சென்றாலும் ஸ்மார்ட்கார்டுகள் தான்..போக்குவரத்துக்கு சலுகை அட்டைகளை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.. மாணவர்களுக்கு விசேஷ சலுகைகள் உண்டு..எல்லாமே நேரத்துக்கு நடப்பதால் தாமதமா வந்தால் தர்மசங்கடங்கள் நிச்சயம்...

* வசிக்கும் நாட்டில் வரி பற்றிய தகவல்களை கண்டிப்பாக தெரிந்துகொள்ளுங்கள்...சில சமயம் நம் நாடு திரும்பும்போது கட்டிய வரி பணத்தில் சிலதை திரும்ப பெறலாம்..வளைகுடாவில் வரி கிடையாது

* இன்சூரன்ஸ் ரொம்ப முக்கியம்..பல்லுக்கு தனியாக இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும்..இது இல்லையென்றால் தீட்டி விடுவார்கள்..

* இந்தியாவுக்கு கொண்டு செல்ல Electronic பொருட்கள் வாங்கும்போது அது இந்தியாவில் என்ன விலை என்று தெரிந்து வாங்குங்கள்..உதாரணமாக ஐரோப்பிய நாடுகளில் இந்தியாவை விட சில பொருட்கள் விலை அதிகம்..இந்தியா புறப்பட ரெண்டு மாதங்களுக்கு முன் taxfreeயாக வாங்கலாம்..பிரிக்கமுடியாதபடி சீல் செய்து தருவார்கள்..இந்தியா எடுத்து வந்து உபயோகிக்கலாம்...

* கல்லூரி மாணவர்களுக்கு: ஜெராக்ஸ் எடுப்பது, மாற்று சாவி செய்வது எனக்கு தெரிந்து ஸ்வீடன், பின்லாண்டு, நார்வேயில் ரொம்ப கஷ்டம்...பிரிட்டனில் இதெல்லாம் சர்வ சாதாரணம்..அதனால் தயாராக இந்தியாவில் வாங்கி வந்து விடுங்கள் ..ஏனென்றால் புத்தகங்கள் விலை அதிகம்..

* பிரிட்டன், scandinavia போல் இல்லை...ஸ்வீடன் போன்ற நாடுகளிலிருந்து பிரிட்டன் வந்தால், பிரிட்டனிலிருந்து இந்தியா வந்தது போல் இருக்கும்..பிரிட்டனில் possibilities அதிகம்..நவீன இந்தியா மாதிரி இருக்கும்..எல்லா பொருளும் கிடைக்கும்.. பொது இடங்களில் ஆண்-பெண் நெருக்கங்கள் ஸ்வீடனில் மிக அதிகம்..யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள்..topless ஆகா குளிக்கவும் சட்டபடி முடியும்..பிரிட்டனில் அப்படி இல்லை...முத்தமே சில நேரங்களில் தான் ...ஸ்வீடனில் என்னால் சொல்ல முடியவில்லை..நான் சொல்ல வருவது என்னவென்றால்..இதையெல்லாம் நீங்களும் கண்டு காணமல் இருக்க வேண்டும் என்பதே...staring is considered indecent .. (அப்ப அவங்க பண்றது என்னவாம்ன்னு கேக்காதீங்க..)

* Pub களில் குடித்துவிட்டு, டான்ஸ் ஆடிவிட்டு வந்துவிடுங்கள்..அதுக்கு மேல் அடியெடுத்து வைக்காதீர்கள்...சோக்காளியா இருந்தா சீக்காளியா ஆயிடுவீங்க..

* கடைசியாக...இந்தியா வரும்போது, ஸீன் போடுவதை தவிர்த்து, நம் நாட்டில் இருக்கும் சிறப்புக்களை எண்ணி பாருங்கள்...இந்தியாவை அடிக்கடி compare செய்து எரிச்சலூட்டாதீர்கள்.. நண்பர்களுக்கு தண்ணி, தம் வாங்கி வருவதை விட ஷூக்கள், துணிகள் வாங்கி வந்து கொடுங்கள்...கண்டிப்பாக பெற்றோரை அழைத்து செல்லுங்கள்.."

தெரிந்துக் கொள்ளுங்கள் !!!

ஆப்பிள் கம்ப்யூட்டர்ஸ்

இதன் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் விரும்பி சாப்பிடும் பழம் ஆப்பிள்! நிறுவனம் தொடங்கி மூன்று மாதங்களாகியும் பெயர் வைக்காமல் இருந்தார். தன் சகாக்கள், கடைசிநாள் மாலைக்குள் வேறு பெயர்களை பரிந்துரைக்காவிட்டால் ஆப்பிள் என்று பெயர் சூட்டப்போவதாகச் சொன்னார். ஆப்பிள் கனிந்தது.


யாஹு

ஜொனாதன் ஸ்விஃப்ட் எழுதிய ‘குலிவர்ஸ் டிராவல்ஸ்’ என்ற புத்தகத்தில் வரும் பாத்திரம் இது. துறுதுறுவென்று இயங்கும் ஒரு மனிதனின் பெயரை, தன் இணையதளத்திற்கு சூட்டினார்கள், யாஹுவை நிறுவிய ஜெர்ரியாங் மற்றும் டேவிட் ஃபிலோ.


ஜெராக்ஸ்

‘ஜெர்’ என்பது உலர்தலைக் குறிக்கும் கிரேக்கச் சொல்லை வேராகக் கொண்டது. நகலெடுக்கும்போது மை காய்ந்திருக்கும் என்பதைக் குறிக்க சென்டர் காரிஸன் இப்பெயரை வைத்தார். அதற்குமுன், நகலெடுத்தால், மை காய்வதற்குள் மண்டை காய்ந்துவிடும்.


லோட்டஸ்

இதன் நிறுவனர் மிட்ச் கபூர், மகரிஷி மகேஷ் யோகியின் தியானமுறை பயிற்றுனர். பத்மாசனம் இட்டு அமர்கிற யோகாசனத்தின் அடிப்படையில், லோட்டஸ் என்று தன் நிறுவனத்திற்குப் பெயர் வைத்தார்.


அடோப் (ADOBE)

அடோப் நிறுவனர் ஜான் வார்னாக்-கின் வீட்டுக்குப் பின்புறம் ஓடிக்கொண்டிருக்கும் நதியின் பெயர் அடோப்.


சன் மைக்ரோசிஸ்டம்ஸ்

ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் படித்த நான்கு நண்பர்கள் இணைந்து Stanford University Network என்பதை சுருக்கி
SUN MICRO SYSTEMS என்று பெயர் வைத்தனர்.

தெரிந்துக் கொள்ளுங்கள் !!!

தாய்ப்பால் பற்றிய தகவல்..

* குழந்தை பிறந்த முதல் 6 மாதத்துக்குத் தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும்.

* தாய்ப்பால் கொடுப்பதற்கு முன் வேறு உணவு - தண்ணீர்கூட தேவையில்லை. சர்க்கரைத் தண்ணீர், தேன் போன்றவற்றைத் தரக்கூடாது.

* குழந்தை அழும்போதெல்லாம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

* புட்டிப்பால், டின்பால் அறவே கூடாது.

* குழந்தையின் சீரான வளர்ச்சிக்கும் மூளை வளர்ச்சிக்கும் தாய்ப்பால் மிகவும் உதவுகிறது.

* தாய்ப்பால் கொடுப்பது, குழந்தைக்கு மட்டுமல்ல தாய்க்கும் கூட பல நன்மைகளை அள்ளித்தருகிறது.

* குழந்தைகள் வயிற்றுப் போக்கு நோயால் பாதிக்கப்படுவது தடுக்கப்படுகிறது.

* நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

* ஹெர்பிஸ் வைரஸ் தாக்குதலிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது.

* பற்கள் உறுதியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க தாய்ப்பால் உதவுகிறது.

* சர்க்கரை நோய், குழந்தைகளுக்கு ஏற்படும் புற்றுநோயைத் தடுக்கிறது.

* குழந்தைகளின் அறிவுத்திறன் மேம்பட வழிவகுக்கிறது...!

தெரிந்துக் கொள்ளுங்கள் !!!

நாம் இறந்த பிறகும் கண்கள் 6 மணிநேரம் பார்க்கும் தன்மையுடையது.

சுகபிரசவம் அல்லாமல் தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக்கப்பட்டவர் ஜூலியஸ் சீசர். அதனால்தான் இந்த முறைக்கு ‘சீசரியன்’ என்று பெயர் வந்தது.

பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.

நான்கு வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் 400 கேள்விகள் கேட்கும்.

கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு - இதயம் மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு - இதயம்.

மனித உடல்களில் சுமார் 6 கோடியே 50 லட்சம் செல்கள் இருகின்றன.

ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகள்.

மார்க்கோ போலோ என்கிற சிகரெட் நிறுவனத்தின் முதல் உரிமையாளர் நுரையீரல் புற்று நோய் தாக்கி இறந்துப் போனார்.

பழ மரங்களில் நீண்ட காலம் விளைச்சல் தருவது ஆரஞ்சு மரம். சுமார் 400 ஆண்டுகளாக தொடர்ந்து அது விளைச்சல் தரும்.

உலகிலேயே மிக சிறிய மரம் குட்டை வில்லோ மரம். அதன் உயரம் இரண்டே அங்குலம் தான்.

ஒரு தர்பூசணி பழம் இருந்தால் அதில் இருந்து 6 லட்சம் தர்பூச்சனை பழங்களை உற்பத்தி செய்து விடலாம்.

பொதுவாக தாவரங்கள் நகராது. ஆனால் கிலாமிடோமொனாஸ் என்ற ஒரு செல் தாவரம் நகர்ந்து போகும் தன்மை உடையது.

பச்சோந்தியின் நாக்கு தன் உடலின் நீளத்தை இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும்.

நாக்கை நீட்ட முடியாத ஒரே விலங்கு முதலை.

நீல திமிங்கலத்தின் எடை 22 யானைகளின் எடைக்கு சமம். அதன் இதயம் ஒரு சிறிய கார் அளவில் இருக்கும்.

யானையின் கால் தடத்தின் நீளம் அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே - யானையின் உயரம்.

ஒரு புள்ளி அளவு இடத்தை 70,000 (எழுபதாயிரம்) அமிபாக்களால் நிரப்ப முடியும்.

தரையில் முதுகு படும்படி உறங்கும் ஒரே உயிரினம் - மனிதன்.

முன்னால் பின்னால் பக்கவாட்டில் என அனைத்து பக்கங்களிலும் பறக்க முடிந்த பறவை - தேன்சிட்டு.

தேன்சிட்டு, மரங்கொத்தி, போன்ற பறவைகளுக்கு நடக்க தெரியாது.

e-mail லை கண்டுபிடித்த இந்தியார்

e-mail லை கண்டுபிடித்தவர் ஒரு இந்தியார் என்பது நம்மில் எத்தனைப் பேருக்குத் தெரிந்திருக்கும்?

வி. ஏ. சிவா ஐயாதுரை (V. A. Shiva Ayyadurai)
(பிறப்பு திசம்பர் 2 1963, தமிழ்நாடு, இந்தியா) தமிழ்நாட்டில் பிறந்து அமெரிக்காவின் குடிமகனாகிய ஓர் அறிவியலாளரும் புதியன கண்டுருவாக்குநரும் (புத்தியற்றுநரும்) தொழில் முனைவோரும் ஆவார்.
இன்று அறியப்படும் மின்னஞ்சல் ("EMAIL") என்பதை உருவாக்கியவர் என்னும் பெருமைக்குரியவர்.
இவர் 1978 இல் உயர்நிலைப்பள்ளியில் இருந்தபொழுதே மின்வழி அஞ்சல்களை அனுப்பும் மின்னஞ்சல் முறைமையையும், மின்னஞ்சல் என்பதை "EMAIL" என்னும் பெயரிலும் உருவாக்கி நிறுவியவர். இதற்கான காப்புரிமத்தை (காப்புரிமப் படிவம் "TXu-111-775") ஐக்கிய அமெரிக்காவின் காப்புரிம அலுவலகத்தில் இருந்து 1982 இல் பெற்றுள்ளார். இன்று "email" என்னும் பொதுவழக்குப் பெயரோடு (generic name) இவர் ஆக்கிய மின்னஞ்சல் என்னும் முறைமை ஒத்திருப்பதால், இது பற்றி நிறைய கருத்துவேறுபாடுகளும், கணினி வரலாற்றில் சிவா ஐயாதுரையின் இடம் பற்றியும் மாறுபாடுகள் கொண்ட பிணக்கான கருத்துகள் பலவும் இருந்துவருகின்றன..

தெரிந்துக் கொள்ளுங்கள்

பொது அ‌‌றிவு துணு‌க்குக‌ள் :

குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கவேண்டிய விஷயங்கள்

* அட்லாண்டிக் பகுதியில் ஆண்டிற்கு ஒரு முறைதான் சூரியன் உதயமாகிறது.

* மகாத்மா காந்தி இந்தியாவில் மட்டுமல்ல தென்னாப்ரிக்காவிலும் சிறைத் தண்டனை அனுபவித்துள்ளார்.

* முதன் முதலில் கேள்விக் குறியைப் பயன் படுத்திய மொழி இலத்தின் மொழிதான்.

*கைரேகையைப் வைத்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் முறையைக் கண்டறிந்தவர் எட்வர்ட் ஹென்றி.

* மீன் தன் வாழ்நாள் இறுதி வரை வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கும்.

* பசுமைப் புரட்சி என்று கேள்விப் பட்டிருப்போம். அது என்ன இளஞ்சிவப்புப் புரட்சி. அதாவது மருந்து வகைகள் உற்பத்தியை பெருக்குவது ஆகும்.

* நீலப் புரட்சி என்பது மீன் உற்பத்தியை பெருக்குவதும், வெண்மைப் புரட்சி என்பது பால் உற்பத்தியைப் குறிப்பதும் ஆகும்.

* மஞ்சள் புரட்சி என்பது எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியை பெருக்குவது ஆகும்.

தெரிந்துக் கொள்ளுங்கள் !!!

 என்னவெல்லாம் செய்ய முடியாது ??

* யாராலும் கண்களைத் திறந்து கொண்டு தும்மவும் முடியாது, தூங்கவும் முடியாது.

* பன்றிகள் தலை நிமிர்ந்து ஆகாயத்தைப் பார்க்க முடியாது.

* யானையால் துள்ளிக் குதிக்க முடியாது.

*முதலைகளால் அதன் நாக்குகளை வெளியே நீட்டி இரைகளை பற்ற முடியாது.

* தட்டான் பூச்சிகளைப் பார்த்திருக்கிறீர்களா. அவற்றிற்கு ஒரு அதிசயம் உண்டு. என்ன வென்றுத் தெரியுமா? அவை பறந்தாலும் சரி, நின்றாலும் சரி அதனால் இறக்கையை மடக்கி வைக்க முடியாது.

* முதலைகளும், திமிங்கலங்களும் நீரில் வாழ்ந்தாலும் அவற்றால் நீருக்குள் மூச்சு விட முடியாது.

தெரிந்துக் கொள்ளுங்கள் !!!



* கண்டங்களில் பெரியது ஆசியா கண்டம்.

* கடல்களில் பெரியது பசுபிக் பெருங்கடல்.

* தீவுகளில் பெரியது ஆஸ்திரேலியா தீவு.

* சிகரங்களில் பெரியது எவரெஸ்ட் சிகரம்.

* மலைகளில் பெரியது இமயமலை.

* ஆறுகளில் பெரியது அமேசான் ஆறு.

* ஏரிகளில் பெரியது காஸ்பியன் ஏரி.

* பாலைவனங்களில் பெரியது சஹாரா பாலைவனம்.

* பாறைகளைப் பற்றிய படிப்புக்கு பெட்ராலஜி என்று பெயர்.

* வெள்ளை யானைகளின் நிலம் என்றழைக்கப் படுவது தாய்லாந்து.

* மலைகளின் நிலம் என்றழைக்கப்படுவது மியான்மர்.

* மணலின் வேதியியல் பெயர் சிலிகான் - டை - ஆக்ஸைடு.

* மண்புழுவுக்கு ஐந்து இதயங்கள் உள்ளன.

* மிக வெப்பமான கோள் வெள்ளி.

* உலகில் 2000 வகையான பாம்புகள் உள்ளன.

* சூரிய ஒளி பூமியை வந்தடைய 8.3 நிமிடங்கள் ஆகின்றன.

* அரபிக் கடலின் ராணி எனப்படுவது கொச்சின்.

* இந்தியாவின் மிகப் பெரிய நூலகம் உள்ள இடம் கொல்கத்தா.

* ஓர் அணிலின் சராசரி ஆயுட்காலம் ஒன்பது ஆண்டுகள்.

* ஃபிலிப்பைன்ஸ் தீவுகளைக் கண்டுபிடித்தவர் மெகல்லன்.

* இரண்டாம் அசோகர் என்றழைக்கப்பட்டவர் கனிஷ்கர்.

* பாண்டிச்சேரியின் பழைய பெயர் வேதபுரி.

* செப்பு நாணயங்களை வெளியிட்டவர் முகமது பின் துக்ளக்.

* எரிமலை இல்லாத கண்டம் ஆஸ்திரேலியா.

உங்களுடைய ஆவணங்கள் தொலைந்தால் எப்படி திரும்பப் பெறுவது?




1.இன்ஷூரன்ஸ் பாலிசி!
 

யாரை அணுகுவது..?

பாலிசியை விநியோகம் செய்த கிளையை.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
முகவரிச் சான்று, புகைப்பட அடையாளச் சான்றின்
நகல்களில் நோட்டரி பப்ளிக் சான்றொப்பம்
இடப்பட்டவை மற்றும் பிரீமியம் செலுத்தியதற்கான ஏதாவது ஒரு ரசீது நகல்.

எவ்வளவு கட்டணம்?

ஆவணங்கள் தயாரிப்புக் கட்டணமாக ரூ.75 கட்ட
வேண்டும். இது தவிர, கவரேஜ் தொகையில் 1,000
ரூபாய்க்கு 20 காசு வீதம் கவரேஜ் தொகைக்கு ஏற்ப
கட்டணம் செலுத்த வேண்டும்.

கால வரையறை:
விண்ணப்பம் அளித்த 15 நாட்களுக்குள்
நகல் ஆவணம் கிடைக்கக்கூடும்.

நடைமுறை:

நகல் பாலிசி கோரும் விண்ணப்பக் கடிதம்
அளித்தால் அதற்குரிய இரண்டு ஆவணங்கள்
தருவார்கள். அதில் ஒரு ஆவணத்தை 80 ரூபாய்
பத்திரத்தில் டைப் செய்துகொள்ள வேண்டும்.
இன்னொரு ஆவணத்தில் பாலிசி தொலைந்து போனவிவரங்கள் கேள்வி பதில் வடிவில்
கேட்கப்பட்டிருக்கும்; அதை பூர்த்தி செய்து நோட்டரி பப்ளிக் ஒப்புதலோடு, ஆவணங்களை இணைத்து தரவேண்டும்.

2.மதிப்பெண் பட்டியல்! (பள்ளி
மற்றும்கல்லூரி) யாரை அணுகுவது..?

பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரி.என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ்,கட்டணம் செலுத்திய ரசீது.
எவ்வளவு கட்டணம்?

உயர்நிலைப் பொதுத்தேர்வு (10-ம் வகுப்பு) ரூ.105.
மேல்நிலை பொதுத்தேர்வு ( 2) பட்டியல் ரூ.505.

கால வரையறை:

விண்ணப்பம் செய்ததிலிருந்து 60 நாட்கள்.

நடைமுறை:

காவல் துறையில் புகார் அளித்து 'கண்டுபிடிக்க
முடியவில்லை’ என சான்றிதழ் வாங்கியபிறகு, முன்பு படித்த பள்ளி/நிறுவனத்தின் மூலம் விண்ணப்பம் வாங்கி அதை பூர்த்தி செய்து தாசில்தாரிடம் கையப்பம் வாங்க வேண்டும். அந்த விண்ணப்பத்தோடு ஒரு கடிதம் மற்றும் இணைப்புகள் சேர்த்து மாவட்ட கல்வித்துறை
அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். இந்த விவரங்களை அரசிதழில் வெளியிட்டு அதன் அடிப்படையில் அவர் பள்ளித் தேர்வுத்துறை இயக்குநருக்கு அனுப்புவார்.தனித் தேர்வர்கள் நேரடியாக தேர்வுத் துறை இயக்குநர்
அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும். பட்டம் மற்றும் அதற்கு மேற்பட்ட உயர் கல்விக்கு சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களை அணுக வேண்டும்.

3.ரேஷன் கார்டு! யாரை அணுகுவது..?

கிராமப்புறங்களில் வட்டார உணவுப் பொருள் வழங்கு அலுவலர்; நகர்ப்பகுதிகளில் உணவுப் பொருள் வழங்குதுறை மண்டல உதவி ஆணையர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

காணாமல் போன குடும்ப அட்டையின் நகல் அல்லது ஏதாவது ஒரு அடையாள அட்டை
எவ்வளவு கட்டணம்?

புதிய ரேஷன் கார்டு வாங்கும்போது ரூ.10 கட்ட
வேண்டும்.

கால வரையறை:

விண்ணப்பம் அளித்த 45 நாட்களுக்குள் கிடைத்துவிடும்.

நடைமுறை:

சம்பந்தப்பட்ட அலுவலரிடத்தில் காணாமல் போன
விவரத்தைக் குறிப்பிட்டு கடிதம் தந்து, அவர்கள்
வழங்கும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தர
வேண்டும். அவர்களின் விசாரணைக்குப் பிறகு புது
குடும்ப அட்டை அனுப்பி வைக்கப்படும்.

4.டிரைவிங் லைசென்ஸ்! யாரை அணுகுவது?

மாவட்டப் போக்குவரத்து அதிகாரி.என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

பழைய லைசென்ஸ் நகல் அல்லது எண்.
எவ்வளவு கட்டணம்?

கட்டணம் ரூ.315 (இலகுரக மற்றும் கனரக வாகனம்).

கால வரையறை:

விண்ணப்பம் செய்தபிறகு அதிகபட்சமாக ஒரு வாரம்.

நடைமுறை:

காவல் துறையில் புகார் தெரிவித்து, அவர்களிடம்
FIR ( NON TRACEABLE ) சான்றிதழ் வாங்கியபிறகு
மாவட்டப் போக்குவரத்து அதிகாரிக்கு விண்ணப்ப மனு கொடுக்க வேண்டும்.

5.பான் கார்டு!யாரை அணுகுவது?

பான் கார்டு பெற்றுத் தரும் அங்கீகரிக்கப்பட்ட
ஏஜென்டுகள் அல்லது வருமான வரித்துறை.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இரண்டு, அடையாளச்சான்று மற்றும் முகவரிச் சான்று நகல்கள். எவ்வளவு கட்டணம்?

அரசுக்குச் செலுத்த வேண்டிய ரூ.96 ரூபாய்.
கால வரையறை: விண்ணப்பித்தப் பிறகு 45 நாட்கள்.

நடைமுறை:

பான் கார்டு கரெக்ஷன் விண்ணப்பம் வாங்கி அதில்
தேவையான விவரங் களைக் குறிப்பிட்டு
விண்ணப்பிக்க வேண்டும்.

6.பங்குச் சந்தை ஆவணம்!
யாரை அணுகுவது?

சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பதிவாளர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

காவல் துறை சான்றிதழ், பங்கு ஆவணத்தின் நகல்
அல்லது ஃபோலியோ எண். எவ்வளவு கட்டணம்?

தனியாக கட்டணம் கட்டத் தேவையில்லை; ஆனால்,பங்குகளின் சந்தை மதிப்பிற்கு ஏற்ப முத்திரைத்தாள் கட்டணம் செலுத்த வேண்டும்.

கால வரையறை:

விண்ணப்பித்த 45 நாட்களிலிருந்து 90 நாட்களுக்குள்.

நடைமுறை:

முதலில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு கடிதம்
எழுதவும். இதன் அடிப்படையில் காவல் துறையில்
புகார் அளித்து சான்றிதழ் வாங்க வேண்டும். பங்குகள் மதிப்பிற்கு ஏற்ப நிறுவனம் குறிப்பிடும் தொகைக்கு முத்திரைத்தாளில் ஒப்புதல் கடிதம் தர வேண்டும். சில நிறுவனங்கள் செய்தித்தாள்களில் விளம்பரம் வெளியிட வலியுறுத்தும்.

7.கிரயப் பத்திரம்! யாரை அணுகுவது..?

பத்திரப்பதிவு துறை துணைப் பதிவாளர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காவல் துறை கடிதம், பத்திரிகையில் வெளியிடப்பட்ட விளம்பரம், யாரிடமும் இருந்து ஆட்சேபனை வரவில்லை என்பதற்கான நோட்டரி பப்ளிக் ஒருவரின் உறுதிமொழி, சர்வே எண் விவரங்கள். எவ்வளவு கட்டணம்?

ஆவணக் கட்டணம் 100 ரூபாய்.இது தவிர, கூடுதலாக ஒவ்வொரு பக்கத்திற்கும் 20
ரூபாய்.

கால வரையறை:

ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.

நடைமுறை:

கிரயப் பத்திரம் தொலைந்த பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்து அவர்களிடமிருந்து சான்றிதழ் வாங்க வேண்டும். தொலைந்த விவரம் குறிப்பிட்டு பத்திரிகையில் விளம்பரம் செய்ய வேண்டும்.இதற்குபிறகு சார்பு பதிவாளர் அலுவலம் செல்ல வேண்டும்.

8.டெபிட் கார்டு!யாரை அணுகுவது..?

சம்பந்தப்பட்ட வங்கியின் கிளை மேலாளர்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
கணக்குத் தொடர்பான விவரங்கள்.
எவ்வளவு கட்டணம்?

ரூ.100.

கால வரையறை:

வங்கியைப் பொறுத்து ஓரிரு நாட்கள் அல்லது
அதிகபட்சம் 15 நாட்கள்.

நடைமுறை:

டெபிட் கார்டு தொலைந்தவுடன் அந்த வங்கி
வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு தகவல்
தெரிவித்து, அதன் மூலம் மோசடியான
பரிவர்த்தனைகள் நடக்காதவாறு தடுக்க வேண்டும். அதற்குப் பிறகு சம்பந்தப்பட்ட கிளைக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தி
புது டெபிட் கார்டு வழங்குமாறு கோர வேண்டும்.

9 மனைப் பட்டா! யாரை அணுகுவது..?

வட்டாட்சியர்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்.?
நகல் பட்டா கோரும் விண்ணப்பம்.
எவ்வளவு கட்டணம்?

ரூ.20.

கால வரையறை:

ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்.

நடைமுறை:

முதலில் தாசில்தாரிடம் மனு தர வேண்டும். அவர்
பரிந்துரையின் பேரில் கிராம நிர்வாக அதிகாரி (வி.ஏ.ஓ.), வருவாய் ஆய்வாளரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.இதன் அடிப்படையில் தாசில்தார் அலுவலகத்தில்விண்ணப்பித்தால் நகல் பட்டா கிடைத்துவிடும்.

9.பாஸ்போர்ட்! யாரை அணுகுவது..?

மண்டல பாஸ்போர்ட் அலுவலகங்கள்.

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
காவல் துறை சான்றிதழ், பழைய பாஸ்போர்ட் நகல், 20ரூபாய் முத்திரைத்தாளில் விண்ணப்பம்.

எவ்வளவு கட்டணம்?
ரூ.4,000.

கால வரையறை:

இந்தியாவில் தொலைத் திருந்தால் 35-லிருந்து 40
நாட்கள்; வெளிநாட்டில் தொலைத்திருந்தால் அதிக
காலம் எடுக்கும்.

நடைமுறை:

பாஸ்போர்ட் தொலைத்த பகுதியில் உள்ள காவல்
துறையில் புகார் அளித்து கண்டு பிடிக்கப்படவில்லைஎன்கிற சான்றிதழ் வாங்க வேண்டும். 20 ரூபாய் முத்திரைத்தாளில் தொலைந்த விவரங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும். இவற்றில் நோட்டரி பப்ளிக்
ஒருவரின் கையெழுத்து பெற்று மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் அவர்கள் விசாரணை மேற்கொண்டபிறகு நகல் பாஸ்போர்ட் அனுப்பி வைத்துவிடுவார்கள்.

10.கிரெடிட் கார்டு!

கிரெடிட் கார்டு தொலைந்ததும் உடனடியாக
வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு தகவல் அளித்து பரிவர்த்தனைகளை நிறுத்த வேண்டும்.

யாரை அணுகுவது?

நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையம்.
என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
தொலைந்துபோன கிரெடிட் கார்டு தொடர்பான
விவரங்கள்.

எவ்வளவு கட்டணம்?

ரூ.100 (நிறுவனத்துக்கேற்ப வேறுபடும்).

கால வரையறை:

15 வேலை நாட்கள்.

நடைமுறை :

தொலைந்த கார்டுக்கு மாற்றாக வேறு கார்டு அளிக்கக்கோரினால் பதினைந்து வேலை நாட்களுக்குள் உங்களுக்கு அனுப்பி வைத்துவிடுவார்கள். அடையாளச்
சான்று காண்பித்து வாங்க வேண்டும்.

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...