Friday, November 13, 2015

திப்பு சுல்தான் ஒரு காட்டுமிராண்டி


திப்புசுல்தான் பெரிய வீரன் மாதிரி ஒரு பொய்யான வரலாறை இங்கே பாட புத்தகங்களில் படிக்கிறோம்.

உண்மையில் திப்பு சுல்தான் ஒரு காட்டுமிராண்டி, மதத்தின் பெயரால் பல ஆயிரம் கொலைகளை கொடூரமாக செய்தவன். ஹிந்து பெண்களை கற்பழித்தவன், கோவில் சொத்துக்களை கொள்ளை அடித்தவன்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள வரலாற்று ஆதாரங்களை படியுங்கள்

பாதிரி பார்தலோமாகொ (Fra Bartolomaco) தனது கிழக்கிந்தியப் பயணம் ( Voyage to East India) என்ற புத்தகத்தில் திப்புவின் கொடுமைகளை எப்படி விவரிக்கிறார்.

”முதலில் 30000 காட்டுமிராண்டிகள் கொண்ட ஒரு படை கண்ணில் கண்ட அனைவரையும் கொன்று குவித்தது. அதைத் தொடர்ந்து ஃப்ரெஞ்சு கமாண்டர் M. Lally தலைமையின் கீழ் ஒரு field gun unit வந்தது. திப்பு சுல்தான் ஒரு யானை மீது அமர்ந்து வந்தான், அவனைத் தொடர்ந்து மேலும் 30000 பேர்கள் கொண்ட ஒரு படை தொடர்ந்தது. பெரும்பாலான ஆண்களும் பெண்களும் கோழிக்கோட்டில் தூக்கில் தொங்க விடப்பட்டனர். முதலில் தாய்மார்கள் தூக்கிலிடப்பட்டார்கள், அவர்கள் கழுத்துகளில் குழந்தைகள் தொங்க விடப்பட்டனர். காட்டுமிராண்டியான திப்பு சுல்தான் நிர்வாணமான கிறிஸ்தவர்களையும், ஹிந்துக்களையும் யானையின் கால்களில் கட்டி, அந்த யானைகளை நகரச் செய்யும் போது, ஆதரவற்ற அந்த அபலைகள், கடைசியில் சின்னாபின்னமானார்கள். கோயில்களும் சர்ச்சுகளும் எரிக்கப்பட்டன, அசுத்தப்படுத்தப் பட்டு, அழிக்கப்பட்டன. கிறிஸ்தவ மற்றும் ஹிந்துப் பெண்கள் முகம்மதியர்களை திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்தப்பட்டனர், அதே போல அவர்களும் முகம்மதியப் பெண்டிரை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தப்பட்டனர். எந்த கிறிஸ்தவர்கள் இஸ்லாத்துக்கு மதம் மாற மறுத்தார்களோ, அவர்கள் அந்த இடத்தி லேயே தூக்கிலாடினார்கள். மேற்கூறிய சோக நிகழ்வுகள் பற்றிய சேதிகள் எல்லாம், திப்புவின் படையிலிருந்து தப்பி ஓடி வந்தவர்கள், ஆலுவாவுக்கு(Aluva) அருகே இருக்கும் வரப்புழாவுக்கு வந்த போது, தெரிவித்தவை; இது தான் Carmichael Christian Missionனின் தலைமையிடம். நானே கூட படகுகள் மூலம் பல அபலைகள் தப்ப உதவினேன்."

“60000 பேர்கள் கொண்ட படையோடு திப்பு சுல்தான் கோழிக்கோட்டுக்கு 1788ம் ஆண்டு வந்து அந்த ஊரை தரைமட்டமாக்கினான். மைசூரைச் சேர்ந்த அந்த இஸ்லாமிய காட்டுமிராண்டி இழைத்த கொடூரங்களை விவரிக்க கூட இயலாது”
 
Gazetteer of Keralaவின் முன்னாள் ஆசிரியரும், பிரபலமான வரலாற்று ஆசிரியருமான திரு.ஸ்ரீதர மேனோன் (A. Sreedhara Menon).

”ஹிந்துக்கள், குறிப்பாக இஸ்லாமிய கொடுமைகளை எதிர்த்த நாயர்களும், தளபதிகளும், திப்புவின் கோபத்திற்கு பிரதான இலக்கானார்கள். நூற்றுக்கணக்கான நாயர் பெண்களும் குழந்தைகளும், ஸ்ரீரங்கப்பட்டினத்துக்கு கடத்திச் செல்லப்பட்டு, டச்சுக்காரர்களுக்கு அடிமைகளாக விற்கப்பட்டார்கள். நாயர்கள் வேட்டையாடப்பட்டு கொல்லப்படார்கள், அவர்களின் பாரம்பரியமான சமுதாய சலுகைகளும் உரிமைகளும் பறிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான பிராம்மணர்களும், க்ஷத்ரியர்களும், நாயர்களும், ஹிந்துக்களின் மேல்தட்டு மக்களும் இஸ்லாத்துக்கு மதம் மாற்றப்பட்டு, அவர்களின் முன்னோர் இல்லங்களிலிருந்து விரட்டப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் திருவாங்கூர் சமஸ்தானத்தில் தஞ்சம் புகுந்தார்கள், நூற்றுக்கணக்கானோர் திப்புவின் கொடுமைகளிலிருந்து தப்ப காடுகளிலும் மலைகளிலும் தஞ்சம் புகுந்தார்கள், இது அவர்களின் பாதுகாப்பு உணர்வை முழுவதுமாக உலுக்கி விட்டது”.

மங்களூரில் நிறுத்தப்பட்டிருந்த ப்ரிட்டிஷ் ராணுவத்தின் கர்னல் புல்லர்டன் (fullarton) என்ற ஆங்கிலேயரின் அதிகாரபூர்வமான அறிக்கை:
 

”ஜாமோரின் அரசனாலும், அவரது ஹிந்து படை வீரர்களாலும் பாதுகாக்கப்பட்டு வந்த பாலக்காடு கோட்டை முற்றுகையின் போது, 1783ம் ஆண்டு மிக கொடூரமான செயல்களை பிராமணர்கள் மீது கட்டவிழ்த்து விட்டான் திப்பு சுல்தான். திப்புவின் படை வீரர்கள் தினமும், அப்பாவி பிராமணர்களின் தலைகளை, ஜாமோரின் கோட்டையில் உள்ளவர்கள் பார்வையில் படுமாறு பிளந்தார்கள். அந்த கோரங்களை காணச் சகியாமலும், அப்பாவி பிராமணர்களின் படுகொலையை தடுக்கும் வண்ணமும் ஜாமோரின் பாலக்கோடு கோட்டையை கைவிட நேர்ந்தது”.
 
பல்வேறு ராணுவ பிரிவுகளுக்கு திப்பு அனுப்பிய முதன்மை ஆணை, பாலக்கோடு கோட்டையை ஆங்கிலேயக் கம்பெனி 1790ல் கைப்பற்றிய போது ஆவணங்களில் கண்டெடுக்கப்பட்டது. இது malabar manualன் பக்கம் 510ல் அடிக்குறிப்பாக கொடுக்கப்பட்டிருக்கிறது.
 
“இது அனைத்து ராணுவப் பிரிவுகளுக்கும் என்ன அறிவுறுத்தியது என்றால், மாவட்டத்தில் உள்ள அனைவரும் இஸ்லாத்துக்கு மாற்றப்பட வேண்டும், அவர்கள் மறைவிடங்களிலிருந்து அவர்களை வெளிப்படுத்த வேண்டும். அவர்கள் அனைவரையும் இஸ்லாத்துக்கு மாற்ற, உண்மையோ, பொய்யோ, ஏய்ப்போ, பலப் பிரயோகமோ, எதை வேண்டுமானாலும் கையாள வேண்டும்”.
 
“அண்மைக்கால வரலாற்றில், யதுராயர் நிறுவிய வம்சத்தவரால் மேல்கோட்டை ஆளப்பட்டு வந்தது. அவரது வம்ஸத்தவர் பல நீர் நிலைகளை ஏற்படுத்தினார்கள் – கல்யாணிகள் – அவைமிக திறன் மிக்கவையாகவும் அழகாகவும் இருந்தன. அங்கே ஒரு சிறிய அளவிலான பண்டித குழுவினர் தழைத்தார்கள். 19ம் நூற்றாண்டின் முற்பகுதில், திப்பு சுல்தானின் படை ஒரு தீபாவளி நன்னாளில் அங்கே சூறையாடி 800 குடிமக்களை கொன்று குவித்தது, அவர்களில் பெரும்பாலானோர், மாண்டயம் ஐயங்கார்கள் என்ற பிரிவைச் சேர்ந்தவர்கள். சம்ஸ்க்ருத பாண்டித்யம்தான் அவர்களின் பலமாக இருந்தது. (இன்று வரை மேல்கோட்டையில் தீபாவளி கொண்டாடப்படுவதில்லை.) அந்த நரவேட்டை மேல்கோட்டையை ஒரு பிசாசு நகரமாக மாற்றியது. சுற்றுச் சூழலோடு இயைந்த இதன் வாழ்க்கை அறுந்து போனது, கல்யாணிகள் நாசமாகின, நீர் பற்றாக்குறை பீடித்தது, குன்றுகள் வறண்டன, சம்ஸ்க்ருதம் தனது இல்லங்களில் ஒன்றை இழந்தது.”
 
1782 முடிவு வாக்கில் திப்பு மைசூரின் சுல்தானான போது, வடக்கு மலபாரின் அனைத்து ராஜாக்களும், தளபதிகளும் புரட்சி செய்து, சுதந்திரப் பிரகடனம் செய்தார்கள். பிரிட்டிஷாரும் வல்லமை அதிகம் பெற்றவர்களாக இருந்தார்கள். மலபாரை விட்டு ஹைதர் அலி கான் சென்ற பிறகு, மைசூரின் ஆளுமைக்கு எதிராக போர்க் கொடி உயர்த்திய சமஸ்தானங்களை மீண்டும் அடக்கி, மீட்டெடுப்பதே திப்புவின் முற்கால ராணுவ செயல்பாடாக இருந்தது. இதுவரை மிகவும் அமைதியான, நேர்மையான பிராமணர்களே, உயர் இடங்களுக்கு தூதுவர்களாக அனுப்பப்பட்டு வந்தார்கள். ஆனால் திப்புவின் ஆணைக்குட்பட்டு, “அவர்கள் பிடிக்கப்பட்டு, சுன்னத் செய்யப்பட்டு, இஸ்லாத்துக்கு வலுக்கட்டாயமாக மாற்றப்பட்டார்கள்” அதனால் அவர்கள் திப்புவுக்கு தூதுவர்களாக செயல்படுவதை ஏற்க மறுத்தார்கள். அவர்களுக்கு முழுப் பாதுகாப்பு அளிக்க வாக்களித்த பிரிட்டிஷாருடைய தூதுகளையும் ஏற்று மலபாருக்கு செல்ல மறுத்தார்கள். கோழிக்கோட்டிலிருந்து உறுதியாக தெரிய வந்த தகவல் என்னவென்றால், அங்கே 200 பிராமணர்கள் பிடிக்கப்பட்டு, அடைக்கப்பட்டு, இஸ்லாமியர்களாக மதம் மாற்றப்பட்டு, மாட்டிறைச்சி புகட்டப்பட்டார்கள், அவர்கள் பாரம்பரியத்துக்கு எதிரான விஷயங்களை செய்ய வைக்கப்பட்டார்கள்” (பக்கம் 507).
 

ஜனவரி மாதம் 19ம் தேதி 1790ம் ஆண்டு, திப்பு, பேக்கலின் (Beakel) ஆளுநர் புட்ருஸ் சுமான் கான் க்கு ( Badroos Saman Khan ) எழுதியது.
 
“நான் மலபாரில் பெரிய ஒரு வெற்றியை அடைந்திருக்கிறேன் என்பது உனக்கு தெரியாதா, அதில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட ஹிந்துக்கள் இஸ்லாமியர்களாக மதம் மாற்றப்பட்டார்கள். நான் திருவாங்கூர் மன்னனான நாசமாய் போன இராமன் நாயருக்கு எதிராக போர் தொடுக்க தீர்மானம் செய்திருக்கிறேன். (அவன் இங்கே குறிப்பது திருவாங்கூர் சமஸ்தான ராஜா ராம வர்மா, அவர் மலபாரிலிருந்து தப்பி ஓடி வந்த அனைவருக்கும் கருணையோடு தஞ்சம் அளித்ததால், அவர் தர்ம ராஜா என்று பிரபலமாக அழைக்கப்பட்டார்).அவரையும் அவர் குடிமக்களையும் இஸ்லாத்துக்கு மதம் மாற்ற துடியாய் துடிக்கிறேன், நான் தற்போதைக்கு ஸ்ரீ ரங்க பட்டினத்துக்கு திரும்பும் என்ணத்தை கை விட்டிருக்கிறேன்.”
 
1788ம் ஆண்டு மார்ச் மாதம் 22ம் தேதி அப்துல் காதிருக்கு ( Abdul Kadir) எழுதிய கடிதம்:
 
“12,000க்கும் மேற்பட்ட ஹிந்துக்கள் இஸ்லாத்தால் கௌரவிக்கப்பட்டார்கள். அவர்களில் பல நம்பூதிரி பிராம்மணர்களும் அடக்கம். இந்த சாதனை ஹிந்துக்கள் மத்தியில் பரவலாக்கப்பட வேண்டும். அங்கே இருக்கும் உள்ளூர் ஹிந்துக்கள் உங்கள் முன்னே கொண்டு வரப்பட்டு, இஸ்லாத்துக்கு மாற்றப்பட வேண்டும். எந்த ஒரு நம்பூதிரியையும் விட்டு வைக்கக் கூடாது. அது மட்டுமல்லாமல், அவர்கள் போட்டுக் கொள்ள வேண்டிய உடைகள் உங்களை வந்து அடையும் வரை அவர்களை அடைத்து வைக்க வேண்டும்.”
 
1788ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ம் தேதியிட்ட, கோழிக்கோட்டில் இருந்த அவனது ராணுவத் தளபதிக்கு வரையப்பட்ட கடிதம்:
 
“நான் மீர் ஹுஸேன் அலியுடன் ( Mir Hussain Ali ) எனது 2 தொண்டர்களை அனுப்பி வைக்கிறேன். அவர்கள் உதவியோடு, நீங்கள் அனைத்து ஹிந்துக்களையும் கைப்பற்றி கொல்ல வேண்டும். 20 வயதுக்கு உட்பட்டோர் சிறையில் வைக்கப்படலாம், மற்றவர்கள் எல்லாம் மரங்களில் தூக்கிலிடப்பட வேண்டும், இவை என் ஆணைகள்”.
 
ஷேக் குதுப்புக்கு (Sheik Kutub ) டிசம்பர் 21ம் தேதி 1788ம் ஆண்டு வரைந்த கடிதம்:
“242 நாயர்கள் கைதிகளாக அனுப்பப்படுகிறார்கள். அவர்களை சமுதாய, குடும்ப அந்தஸ்துப்படி வகைப்படுத்துங்கள். அவர்களை இஸ்லாத்தால் கௌரவித்த பின்னர், ஆண்களுக்கும் அவர்களின் பெண்டிருக்கும் போதுமான துணி வகைகளை அளிக்கவும்”.
 
1790ம் ஆண்டு ஜனவரி மாதம் 18ம் தேதி சயீத் அப்துல் துலாயிக்கு ( Syed Abdul Dulai) எழுதிய கடிதம்:
 
”நபிகள் நாயகம் மற்றும் அல்லாஹ்வின் அருளினால் கிட்டத்தட்ட கோழிக்கோட்டில் இருக்கும் அனைத்து ஹிந்துக்களும் இஸ்லாத்துக்கு மதம் மாற்றப்பட்டு விட்டார்கள். கொச்சி மாநிலத்தின் எல்லைப்புறங்களில் தான் மதம் மாற்றப்படாத சிலர் இருக்கிறார்கள். அவர்களையும் நான் விரைவில் மதம் மாற்றி விடுவேன். நான் இதை ஜிஹாத்தாக கருதுகிறேன், அந்த இலக்கை விரைவில் அடைவேன்”. 
 
திப்பு தன் வாளிலேயே தன் எண்ணத்தை வடித்து வைத்திருந்தான். இஸ்லாத்தை நிலை நிறுத்தவும். பிற சமயங்களை அழிக்கவும் தன் வாளுக்குள் புகுந்து துணை புரிய அல்லாவை கூவி கூப்பிட்டது, திப்பு மார்கஸ் வெல்லஸ்லிக்கு ( Marquess Wellesley) பரிசளித்த வாளின் கைப்பிடியில் பொறிக்கப்பட்டுள்ளது.
 
“நம்பிக்கை இல்லாதவர்களுக்கு என் வெற்றிவாள் மின்னல் போன்றது. விசுவாசிகளின் தலைவனான அலி, எனக்கு சாதகமாக வெற்றிகளை வழங்குகிறார், மேலும் அவர் விசுவாசம் இல்லாத தீய இனத்தை அழித்தார். இறைவா போற்றி, நீயே உலகங்களுக்கெல்லாம் தலைவன். நீயே எங்கள் அனைவருக்கும் தலைவன், நீ தான் விசுவாசிகள் அல்லாத நபர்களிடம் இருந்து எங்களை ஆதரிக்கிறீர். யாருக்கு இறைவன் வெற்றியை அளிக்கிறாரோ, அவரே மனித குலத்தின் தலைவன் ஆகிறான். இறைவா, முகம்மதுவின் சமயத்தை யார் ஒருவர் பரப்புகிறாரோ அவருக்கே வெற்றியை அளியும். முகம்மதின் சமயத்தை யார் ஏற்க மறுக்கிறார்களோ அவர்களை நாசம் செய்யுங்கள்; அத்தகைய நபர்களிடமிருந்து எங்களை விலக்கியே வையுங்கள். தனது செயல்களில் இறைவனே மேலோங்கி நிற்கிறான். வெற்றியும், படையெடுப்பும் இறைவனிடமிருந்தே. ஓ முகம்மதுவே!, விசுவாசிகளுக்கு மங்கலங்களை அளியுங்கள், கடவுள் அன்பே உருவான ரட்சகன், அளப்பரிய கருணை கொண்டவர். கடவுள் உங்களுக்கு உதவி செய்தால், நீங்கள் வளம் பெறுவீர்கள். கடவுள் மகத்தான வெற்றியை அளித்து, உங்களுக்கு உதவி செய்யட்டும், ஓ முகம்மதுவே.!”


ஒரு இனம் எப்படி அழியவேண்டும் என்பதை ஈவு இரக்கமில்லாத கொடுமைக்காரன் எப்படி அனுபவித்து வருணிப்பான்! கொஞ்சம் கற்பனை செய்து பார்த்து விட்டு இதை படியுங்கள். இந்த வாசகம் ஸ்ரீரங்கப்பட்டினத்தில், கோட்டையின் மிக முக்கியமான இடத்தில் 1780ல் நடைபெற்ற போரின் நினைவாக பொறிக்கப்பட்டது. இந்த கல்வெட்டு 1795 ல் கண்டெடுக்கப்பட்டது.
”ஓ சர்வவல்லமை பொருந்திய இறைவா! விசுவாசிகள் அல்லாதவர்களின் உடலை ஒழித்து விடு! அவர்கள் இனத்தை சின்னாபின்னமாக்கு! அவர்கள் கால்களை தடுமாறச் செய்! அவர்கள் சபைகளை தூக்கியெறி! அவர்கள் நாட்டை மாற்று, அவர்களை வேரடி மண்ணோடு நிர்மூலமாக்கு! அவர்களுக்கு பிரியமானவர்களுக்கு மரணத்தை ஏற்படுத்து! உயிர் வாழும் வழிகளை அழித்து விடு! அவர்கள் வாழ்நாளை குறைத்து விடு! மரணம் அவர்களை நிழலைப் போலத் தொடரட்டும்! அவர்கள் உடலை நோய் பீடிக்குமாறு செய்! அவர்கள் கண்பார்வையை மங்கச் செய்!, அவர்கள் முகத்தில் கரியை பூசு (அவமானத்தை உரித்தாக்கு)”
 
இந்த ஸ்ரீரங்கபட்டினக் கோட்டையில் சில தங்கப் பதக்கங்கள் கண்டெடுக்கப்பட்டன; அதில் ஒரு பக்கத்தில் பாரசீக மொழியில், :”ஆசிகளை நல்குவது கடவுள் ”, என்றும், மறு பக்கத்தில் “வெற்றியும் படையெடுப்பும் இறைவனிடமிருந்தே வருகின்றன”. என்றும் பொறிக்கப்பட்டிருக்கின்றன. இதிலிருந்து, கொலை, கொள்ளை, கற்பழிப்பு, மதமாற்றம் இதெல்லாம் அல்லாவின் ஆணைப்படி செய்தேன்! இஸ்லாத்தின் அடிப்படையே இந்த ஜிஹாத் என்ற கொலை வெறி என்பதை அரங்கேற்றிய திப்பு சுல்தானே ஒப்புக் கொண்டுவிட்டான்.
Mysore Gazetteer, சூறையாடும் திப்பு சுல்தானின் படை, தென்னிந்தியாவின் 8000த்திற்கும் மேற்பட்ட கோயில்களை அழித்ததாக கூறுகிறது. மலபார், கொச்சின் சமஸ்தானங்கள் தான் இந்த கொள்ளை மற்றும் நாச வேலையின் பெரும் பகுதியை ஏற்க வேண்டியிருந்தது என்று பதிவு செய்துள்ளது.
 
ஆகஸ்ட் 1786ல், திப்புவின் படை பிரபலமான பெருமனம் கோயிலின் விக்ரகங்களை அழித்து, திரிசூர் மற்றும் கருவனூர் ஆறுகளுக்கு இடையே இருந்த அனைத்து கோயில்களையும் நாசம் செய்தது. ”இரிஞ்சாலக்குடா, திருவஞ்சிக்குளம் கோயில்களும் திப்புவின் படையினரால், அசுத்தம் செய்யப்பட்டு நாசம் செய்யப்பட்டன.” 
 
அவர்கள் சூறையாடி நாசம் செய்த பிரபலமான கோயில்களில் சில: த்ரிப்ராங்கோட், த்ரிச்செம்பரம், திருநாவாய், திருவன்னூர், கோழிக்கோடு தளி ஹேமாம்பிகா கோயில், பாலக்கோட்டில் உள்ள சமண கோயில், மம்மியூர், பரம்படலி, வெங்கிதாங்கு, பெம்மாயநாடு, திருவஞ்சிக்குளம், தெருமனம், திருசூரின் வடக்கநாதன் கோயில், பேலூர் சிவன் கோயில், ஸ்ரீ வெலியானட்டுக்கவா, வரக்கல், புது, கோவிந்தபுரம், கேரளாதீச்வரா, த்ரிகண்டியூர், சுகபுரம், ஆல்வன்சேரி தம்ரக்கால், ஆரநாடின் வெங்கார கோவில், ராமநாதக்கரா, அழிஞ்சாலம் இந்தியன்னூர், மன்னூர் நாராயண கன்னியார், மாடை வடுகுந்த சிவன் கோயில்.
 
கோயில்களை இடிப்பதை ஒரு இறை பணியாகக் கொண்டிருந்தான் திப்பு என்பதை சர்தார் பணிக்கைகர் தனது புத்தகமான Freedom Struggle ல் குறிப்பிடுகிறார்.
 
திப்பு சுல்தானின் சில தனிப்பட்ட நாட்குறிப்புகளின் படி, சிரக்கல் ராஜா அவனுக்கு 4 லட்சத்துக்கும் அதிகமான தங்கத்தையும் வெள்ளியையும் அளித்து, திப்புவின் படை உள்ளூர் ஹிந்துக் கோயில்களை அழிக்காமல் இருக்க வாக்குத்தர வேண்டினாராம். ஆனால், தனது இயல்புக்கு ஏற்றபடியே, “உலகமே எனக்கு அளிக்கப்பட்டாலும், நான் ஹிந்துக் கோயில்களை அழிக்காமல் விடுவதில்லை” என்று திப்பு பதில் அளித்தானாம்.
 
திப்புவின் போலி மத சகிப்புத்தன்மையை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறார் லூயிஸ் ரைஸ் (Lewis Rice) ஸ்ரீரங்கப்பட்டினக் கோட்டைக்குள்ளே 2 ஹிந்துக் கோயில்களின் பூஜைகள் நடைபெற்று வந்தன, மற்ற கோயில்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நிர்வாக விஷயங்களிலும் கூட இஸ்லாமியர்களுக்கு வெளிப்படையாக பாரபட்சம் காட்டப்பட்டது, குறிப்பாக வரிவிதிப்பு கொள்கையில். இஸ்லாமியர்கள் அனைத்து வரிகளிலிருந்தும் விலக்கு பெற்றிருந்தார்கள். இஸ்லாத்தை தழுவியவர்களுக்கும் இந்த சலுகை நீட்டிக்கப்பட்டது என்கிறார் கோபால் ராவ். வேலை வாய்ப்பு விஷயத்தில், ஹிந்துக்கள் முடிந்த வரை விலக்கி வைக்கப்பட்டார்கள். திப்பு சுல்தானின் மொத்த 16 ஆண்டுகால ஆட்சிக் காலத்தில், முக்கியமான பதவி வகித்த ஒரே ஹிந்து அதிகாரி பூர்ணைய்யா தான்.
 
      
 
 
 
 
 
 
 
 
 
 

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...