Tuesday, January 26, 2016

நம்_வேதத்தின்_மீது_கைவைத்த_வெளிநாட்டு அறிஞர்கள்”!


ஒவ்வொரு தமிழனும்  இதை படிக்கனும்

இன்னும்  எத்தனை  நாளுக்குதான் நீங்கள்  இப்படியே இறுக்க போரிங்க

இந்துக்களே  சினிமா  மோகத்தை தூக்கி போடுங்கள்  உன் வரலாற்றை

நீ அறிந்துக்கொள்  தமிழா  தூங்கினது போதும்  விழித்தெழடா

1651ல் ஆப்ரஹாம் ரோஜர் என்ற பாதிரியார் பர்த்ருஹரியின்  சுபாஷித த்ரிசதியை போர்ச்சுகீசிய மொழியில் வெளியிட்டார்.

பின்னர் அதை டச்சு மொழியிலும் வெளியிட்டார்.

இந்த 300 நீதிநெறிப்பாடல்கள் சம்ஸ்கிருத இலக்கியத்தின் பெருமையை ஐரோப்பாவுக்கு அறிமுகம் செய்துவைத்தன.

தத்துவ போத சுவாமிகள் செய்த திகிடுதத்தம்

ராபர்ட் டி நொபிலி/ தத்துவ போத சுவாமிகள் (Jesuit Roberto De Nobilius cheated with fake Yajurveda:) இவர் கோவாவில் வந்து இறங்கி கிறிஸ்தவ மத பிரசாரம் செய்தார்.

பின்னர் மலையாளம் தமிழ் வழங்கும் பிரதேசங்களில் பிரசாரம் செய்தார்.

 மதுரையில் தங்கி ஐயர் போல குடுமி, பூணூல் தரித்து மேலை வகுப்பினரை மத மாற்றம் செய்ய முயன்றார்.

 ஆனால் அவரது வேஷம் பலிக்கவில்லை.

யஜூர்வேதத்தை கண்டுபிடித்துக் கொண்டுவந்தததாகச் சொல்லி ஐரோப்பாவில் பரபரப்பை ஏற்படுத்தினார்.

ஆனால் அது யஜூர் வேதம் இல்லை. அது அப்பட்டமான மோசடி.

இதை வால்டேர், கோல்ப்ரூக் போன்றவர்களும் நம்பி ஏமாந்தனர்.

 வால்டேர் அதைப் படித்துவிட்டு (மொழிபெயர்ப்பு) உண்மையென்று நம்பி, அதை பிரான்ஸ் தேசிய  நூலகத்தில் சேர்த்தார்.

இவர் மோசடி செய்யவில்லை என்றும் இவரது கும்பலில் இருந்த வேறு சிலர் மோசடி செய்ததாகவும் இப்பொழுது பிரசாரம் கிளம்பி இருக்கிறது.

இது வழக்கமாக திருடர்கள் கையாளும் தந்திரம்.

பிடிபட்டுவிட்டால் மற்றவன் பெயரில் பழிபோடுவார்கள்.

பிடிபடாவிட்டால் தான் சாதித்ததாகக் கூறுவர்.

எப்படியாகிலும் வேதத்தின் பெயரில் கிறிஸ்தவ பாதிரிக் கும்பல் மோசடி செய்தது என்பதை எல்லோரும் ஒப்புக் கொள்கின்றனர்.

இவர் சேர்ந்துள்ள ஜீசைட் கிளப்பின் உறுதி மொழிப் பிரமாணம் பயங்கர வன்முறைப் பிரமாணம்.

அதாவது கிறிஸ்தவ மதத்தைப் பரப்ப என்ன கொடுமை வேண்டுமானாலும் செய்யலாம் என்று உறுதி மொழி எடுக்க வேண்டும்.

ஆகையால் அவர் மோசடி செய்ததில் வியப்பொன்றுமில்லை.

இதே போல திருக்குறள் கிறிஸ்த நூல் என்று மெய்ப்பிப்பதாக ஒரு ஐயர் பல லட்சம் பெற்று மோசடி செய்த வழக்கை நாம் எல்லோரும் அறிவோம்.

 இப்பொழுதும் கூட வெப்சைட், பேஸ்புக்கில் ஒரு பெரிய கும்பல் வேதத்தில் ஏசு இருக்கிறார்,

அல்லா இருக்கிறார் என்று பலரைக் குழப்பி மோசடி செய்துவருகிறது.

 இந்துக்கள் முதலில் தங்களிடம் உள்ள உண்மைச் செல்வத்தை அறிந்தால் இந்த மோசடிக் கும்பல்கள் தானாக கடை கட்டி விடுவர்.

ராபர்ட் டி நொபிளி செய்த மோசடியால், ஐரோப்பாவில் வேதம் என்று ஒன்று இல்லவே இல்லை என்றும் பத்திரிக்கைகள் எழுதத் துவங்கின.

 அப்பொழுது கர்னல் போலியர் என்பவர் ஜெய்ப்பூரி லிருந்து மிகவும் கஷ்டப்பட்டு நான்கு வேதங்களையும் திரட்டி பிரிட்டிஷ் மியூசியத்தில் சமர்ப்பித்தார்.

 இது நடந்தது 1798ல். பின்னர் சர்ச்சை அடங்கியது.

மாக்ஸ் முல்லர் அந்தர் பல்டி

மாக்ஸ்முல்லர் Max Muller Friedrich Max Muller (1823-1900):

ஜெர்மனியில் பிறந்து இங்கிலாந்தில் வசித்தவர்.

வேதத்திற்கு சாயணர் எழுதிய உரையுடன் அதை வெளியிட்டவர் மாக்ஸ்முல்லர்.

 1856-59- ஜெர்மன் பாஷையில் ரிக் வேதத்தை வெளியிட்டார்.

 நிறைய நூலகள் எழுதியுள்ளார்.

 கீழ்திசை இலக்கியங்கள் என்று எல்லா நூல்களையும் மொழி பெயர்க்கச் செய்து ஐம்பதுக்கும் அதிகமான வால்யூம்களாக வெளியிட்டார்.

 ஆனால் முதலில் உள்நோக்கத்துடன் மொழிபெயர்க்கத் தொடங்கினார்.

 வேதங்களை வேரறுத்து கிறிஸ்தவ மதத்தை நிலை நாட்டுவேன் என்று சூளுரைத்தார். கொக்கரித்தார்.

இதோ விக்கி பீடியா வாசகம்:

Muller once wrote that;-

The translation of the Veda will hereafter tell to a great extent on the fate of India, and on the growth of millions of souls in that country. It is the root of their religion, and to show them what the root is, is, I feel sure, is the only way of uprooting all that has sprung from it during the last 3,000 years.[20][21]

As to religion, that will take care of itself. The missionaries have done far more than they themselves seem to be aware of, nay, much of the work which is theirs they would probably disclaim. The Christianity of our nineteenth century will hardly be the Christianity of India. But the ancient religion of India is doomed—and if Christianity does not step in, whose fault will it be?

—Max Müller, (1868)[22]

அதி பயங்கர நோக்கத்தோடு மொழிபெயர்ப்பைத் துவங்கிய அவர் அப்படியே மாறிப் போனார்

 ஜி.யூ. போப் பாதிரியார் போல. உலகிலேயே பழமையான நூலான ரிக் வேதம் கி. 1200க்கு முந்தையது என்றார்.

அது மிகவும் தவறு- இன்னும் மிகப் பழமையானது என்று பல மேலை நாட்டினர் எதிர்த்தவுடன்.

 வேதத்தின் காலத்தை எந்த ஒரு மனிதனாலும் கணிக்க முடியாது. அவ்வளவு பழமையானது என்று பல்டி அடித்தார்.

ரால்ப் டி.எச்,கிரிப்பித் ( R T H Griffith),1826-1906

கிரிப்பித் இங்கிலாந்தில் பிறந்து இந்தியாவில் வசித்து தமிழ்நாட்டில் கோத்தகிரியில் இறந்தார்.

 ஒரு பாதிரியாருக்குப் பிறந்தவர். அவருக்கு முன் வெளியான ரிக் வேத மொழி பெயர்ப்புகளை எல்லாம் கலந்து இவர் ஒரு மொழி பெயர்ப்புச் செய்தார்.

 ஆனால் பெரும்பாலும் சாயணர் வாதத்தை ஏற்றார் (இவருடைய ஆங்கில மொழி பெயர்ப்புதான் என் மேஜையில் எப்போதும் இருக்கும்). பக்கத்துக்குப் பக்கம் விளங்க வில்லை,

 பொருள் தெரியவில்லை என்று ஒப்புக் கொள்கிறார் .

நான்கு வேதங்களையும் வெளியிட்டுள்ளார்.

இங்கிலாந்தில் வேலைபார்த்த பின்னர் காசியிலும் கல்லூரி முதல்வராக வேலை பார்த்தார்.

ராமாயணத்தை ஆங்கிலப் பாடலாக மொழி பெயர்த்தார்.

காளிதாசனின் குமார சம்பவம் உள்பட பல நூல்களை மொழி பெயர்த்து இருக்கிறார்.

 தியோடர் ஔபிரெட் 1822-1907(Theodor Aufrecht) இவர் மாக்ஸ்முல்லர், பென்வே ஆகியோருடன் பயின்றார்.

 எடின்பரோ, பான் பல்கலைக் கழகங்களில் சம்ஸ்கிருதம் கற்பித்தார்.மாக்ஸ்முல்லர், ரிக்வேத மொழிபெயர்ப்பை வெளியிட உதவி செய்தார்.

 அவரைப் போலவே இவரும் 40 ஆண்டுக் காலம் வேத மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபாட்டார்.

அதே நேரத்தில்(1849-75) ரிக் வேதத்தின் மூலத்தையும் வெளியிட்டார்.

சம்ஸ்கிருத மொழியில் அச்சிட்ட நூல்கள், இன்னும் அச்சேறாத நூல்கள் என்று மூன்று கேடலாக் (நூல் பட்டியல்) வெளியிட்டார் (இதைப் பார்க்கையில் சம்ஸ்கிருத இலக்கியம் எவ்வளவு விரிவானது என்று விளங்கும்.

உலகில் சம்ஸ்கிருத நூல்கள் உருவான காலத்தில் கிரேக்க, எபிரேய, தமிழ், லத்தீன் மொழி நூல்கள் பிறக்கவே இல்லை.அதாவது கி.மு1700 முதல் கி.மு.1000 வரை).

ரோஸனின் பணி

1830-ல் பேராசிரியர் ரோஸன் என்பவர் சில ரிக்வேத சூத்திரங்களைப் பிரசுரித்தார்.

1838ல் ரிக் வேத முதல் அஷ்டகத்தைப் பிரசுரித்தவுடன் இந்திய தத்துவம் பற்றிய ஆர்வம் பிறந்தது (ரிக் வேதத்தை எட்டு அஷ்டகமாகவோ பத்து மண்டலங்களாகவோ– இரண்டு முறையில் பிரிப்பது வழக்கம்).

மேனாட்டு வேத பண்டிதர்களில் பேராசிரியர் தியோடர் கோல்ட்ஸ்டக்கர் என்பவருக்கு  பழைய வேத பாஷ்யக்காரர்களான யாஸ்கர், மஹீதரர், சாயணர் முதலியவர்களிடத்து அளவற்ற மதிப்பு உண்டு.

பழைய பாஷ்யக்காரர்களில் கருத்து வேறுபாடு இருந்தால் யாஸ்கரையே பின்பற்ற வேண்டும் என்பது இவர் கொள்கை. ராத், இதற்கு நேர் மாறாக அபிப்ராயம் உள்ளவர்.

போட்லிங், ராத், கிராஸ்மேன் ஆகியோர் பாரதீய விற்பன்னர்களை மதிக்கவில்லை.

வேத கால அறிஞர்களை விட தங்களுக்கு கூடுதல் அறிவு என்று கருதினர்.

 இது இந்து மத எதிரிக் கும்பல்.

பிஷெல், கெல்ட்னர் ஆகியோர் சாயண பாஷ்யத்தை அடியொற்றிச் சென்றனர்.

#பகவத்_கீதை_மொழி_பெயர்ப்பு

வாரன் ஹேஸ்டிங்ஸ் கொடுத்த உற்சாகத்தால் சார்ல்ஸ் வில்கின்ஸ் என்பார் பகவத் கீதையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.

 அதற்கு முன்னுரை எழுதிய வாரன் ஹேஸ்டிங்ஸ், பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் அஸ்தமிக்கும்.

ஆனால் பகவத் கீதை அழியாது என்று எழுதி இருக்கிறார்.

சர் வில்லியம் ஜோன்ஸ் (1746-94), சம்ஸ்கிருதம்—ஐரோப்பிய மொழிகளை ஆராய்ந்து வியத்தகு ஒற்றுமை இருப்பதை அறிவித்தார்.

 அவர் கல்கத்தாவில்   ஆசிய சங்கத்தை தாபித்து மொழி ஆராய்ச்சிக்கு அடிக்கோல் நாட்டினார்.

 சாகுந்தலம், மனுஸ்மிருதி ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

சம்ஸ்கிருதத்தை வானளாவஒப் புகழ்ந்தார்.

பின்னர் ஒரு குடப் பாலில் ஒரு சொட்டு விஷம் கலந்தார்.

 அதாவது, ஆரியர்கள் எல்லாம் வந்தேறு குடிகள் என்று!

ஹென்றி தாமஸ் கோல்ப்ரூக்(1765-1837), வில்லியம் ஜோன்சுக்கு உறுதுணையாக நின்றார்.

 நிறைய கட்டுரைகள் எழுதி வேதங்களின் பெருமையைப் பரப்பினார்.

பிரெடெரிக் ஷ்லெகல் (1772-1829) என்பார் 1808ல் On the Language and Wisdom of the Indians என்ற நூல் எழுதினார்.

 அவருடைய சகோதரர் ஏ.டபிள்யூ. வான் ஷ்லெகலும் சம்ஸ்கிருத ஆசிரியராக இருந்தார்.

ஷேஜி (1773-1832) என்பவர், பிரான்ஸ் தேசீய கழகத்தில் முதல் சம்ஸ்கிருத பேராசிரியர் ஆனார்

பிரான்ஸ் பாப் (1791-1867), ஷேஜியிடம் சம்ஸ்கிருதம் கற்று வினைச் சொற்களை ஒப்பிட்டு ஒரு நூலும், சம்ஸ்கிருத அகராதியும் வெளியிட்டார்.

 லாசன் என்பவர், ஷ்லெகலின் சீடர்.வேதங்கள் பற்றிக் கட்டுரை எழுதினார்

நிறைய பனை ஓலைச் சுவடிகளைச் சோதித்து ரிக்வேத முதல் அஷ்டகத்தை வெளியிட்டார்.

தியோடர் பென்வே (1809-1881)சாம வேதத்தையும் சம்ஸ்கிருத-ஆங்கில நிகண்டையும் அச்சிட்டார்.

ஆட்டோ மற்றும் போட்லிங்க் ஆகிய இருவரும் பிருஹத் சம்ஸ்கிருத நிகண்டு உருவாக்கினர்

விட்னி 1905ல் அதர்வ வேத மொழிபெயர்ப்பை வெளியிட்டார்.

வெபர் 1858ல் பாணீணிய சிட்சை மற்றும் பிங்களனது சந்தஸ் சூத்திரத்தை வெளியிட்டார்.

1877ல் ருடால்ப் மேயர், ரிக் விதானம், பிருஹத் தேவதை ஆகியவற்றை வெளியிட்டார்

1862ல் டாக்டர் பிட்ஸ் எட்வர்ட் ஹால் என்பவர் ரிக் வேதம் மீதான ராவண பாஷ்யத்தை அச்சிட்டார்.

1877லௌப்ரெக்ட் ரிக்வேதம் முழுதையும் அச்சிட்டார்.

1876ல் லுட்விக்கும், 1876ல் கிராஸ்மேன் ஜெர்மானிய பாஷையிலும் வெளியிட்டனர்.

போட்லிங்கும் பேராசிரியர் ராத்தும் அப்போதைய ரஷியத் தலைநகரான செயின் ட் பீட்டர்ஸ்பர்க்கிலிருந்து சம்ஸ்கிருத-

 ஜெர்மானிய அகராதியை வெளியிட்டனர்.

186ல் பேராசிரியர் மார்ட்டின் ஹாக், ஐதரேய பிராமணத்தை வெளியிட்டார்.

1864-65ல் பேராசிரியர் ஸ்டென்ஸ்லர் ஆஸ்வலாயன க்ருஹ்ய சூத்திரத்தை ஜெர்மன் மொழியில் வெளியிட்டார்.

அதே சமயத்தில் ஹெர்மன் ஓல்டன்பர்க், சாங்க்யாயன க்ருஹ்ய சூத்திரத்தை அச்சிட்டார்.

இது வீபர் வெளியிட்ட பத்திரிகை மூலம் வெளியானது

1857-58 ல், பேராசிரியர் ரேநீர். பிரெஞ்சு மொழியில் ரிக்வேதத்தை வெளியிட்டார்

பேராசிரியர் கீத் (Prof.Arthur  Berriedale  Keith): இவர் மக்டொனலின் சீடர். எடின்பரோ பல்கலைக் கழகத்தில் சம்ஸ்கிருதம் கற்பித்தவர்.

தைத்ரீய சம்ஹிதையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார் .சம்ஸ்கிருத இலக்கிய வரலாறு, நாடக இலக்கிய வரலாறு கர்ம மீமாம்ஸை முதலிய நூல்கள் இயற்றியுள்ளார்.

ஏ.ஏ.மக் டொனல் Prof Arthur Anthony MacDonnell (1854-1931): இவர் பென்வேயிடம் பயின்றார். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சம்ஸ்கிருதம் சொல்லிக் கொடுத்தார். Vedic Index of Names and Subjects என்ற புத்தகம் எழுதினார்.

1927ஆம் ஆண்டில் India’s Past என்ற நூல் வெளியிட்டார்.. ஆங்கில- சம்ஸ்கிருத அகராதி, சம்ஸ்கிருத இலக்கிய வரலாறு ஆகிய நூல்களையும் எழுதினார்.

(கீத்தும் மக்டொனலும் தயாரித்த வேதப் பெயர், பொருள் அகராதியும் என் மேஜையில் எப்போதும் இருக்கிறது)

கெல்ட்னர் Prof Karl Friedrich Geldner(1853-1929):- இவர் ஒரு ஜெர்மானியர். ராத் என்பவரின் மாணாக்கர். ஜெர்மனியில் பெர்லின், மார்பரி பல்கலைக்கழகங்களில் சம்ஸ்கிருதம் சொல்லிக்கொடுத்தார்.

 ராத் கொடுத்த விளக்கங்களை இவர் ஏற்கவில்லை.சாயண பாஷ்யத்தை ராத் புறக்கணிப்பது தவறு என்றும் சாயண பாஷ்யமே சரி என்றும் எழுதினார்.

 சாயண பாஷ்யம் இன்றி வேதத்தில் ஒரு சொல்லுக்குகூட பொருள் சொல்ல முடியாதென்றும் எழுதினார்.

டாக்டர் ஜார்ஜ் பூலர் Dr Gorge Buhler: இவர் பென்வேயிடம் கற்றவர்.பிராக் பலகலைக்கழகத்தில் சம்ஸ்கிருதம் கற்பித்தார்.

சம்ஸ்கிருத இலக்கிய வரலாறு என்னும் நூலை எழுதினார். பம்பாய், வியன்னா ஆகிய பல்கலைக்கழகங்களிலும் பணி புரிந்தார்.

சம்ஸ்கிருத  நூல்கள் பற்றி கலைக் களஞ்சியம் ஒன்றை தயரித்தார்.

சர் மோனியர் வில்லியம்ஸ் Sir Monier Williams: இவர் தற்கால இந்து தேசம் என்ற நூலில் சம்ஸ்கிருதத்தின் சிறப்பை எழுதியுள்ளார்.

 சம்ஸ்கிருத அகராதியும் வெளியிட்டுள்ளார்.

 ஆக்ஸ்போர்ட் சம்ஸ்கிருதப் பேராசிரியர் பதவிக்கான போட்டியில் மாக்ஸ் முல்லரைத் தோற்கடித்தவர்.

 அந்தப் பதவியே கிறிஸ்தவ மதத்தை நிலநாட்டுவதற்கான பதவியாகும்.

பேராசிரியர் லான்மென் ( Prof. Charles Rockwell Lanman) இவர் விட்னியிடம் பயின்றார்.

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சம்ஸ்கிருதம் கற்பித்தார்.

இவருக்கு முன் பலர் வேறு மொழிகளில் எழுதிய வேத இலக்கியப் புத்தகங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார்.

ஹெர்மன் ஜாகோபியும் இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரர் பால கங்காதர திலகரும் தனித்தனியே நடத்திய ஆரய்ச்சியில் ரிக் வேதத்தின் காலம் கி.மு.4000 என்று கணித்துள்ளனர்.

-மாரிமுத்து கனி

Saturday, January 23, 2016

பிட்சாடனர்!



   அழிந்து போகும் பொருள் சிறிதளவைப் பெற்றுக் கொண்டு அழியாப் புகழையும், வீடுபேற்றையும் நமக்குக் கொடுப்பதை உணர்த்துகிற வடிவமே பிட்சாடனர் வடிவம்! உலகையே ரட்சிக்கும் ஈசன், பிச்சை எடுப்பவராக ஏன் வருகிறார்?

 தாருகாவனத்தில் முனிவர்கள் குடும்பத்தோடு கடும் தவம் புரிந்தனர். இறைவனை அடைய உண்மையான வழி எது என அவர்கள் அறியவில்லை. அதை உணர்த்த பிட்சாடனராக வடிவெடுத்தார் ஈசன். அவரின்  அழகில் மனதைப் பறிகொடுத்த முனி பத்தினிகள், தம்மை மறந்து ஆடைகள் நெகிழ, அவர் பின்னே சென்றனர். முனிவர்களிடையே மோகினி வடிவில் திருமால் தோன்றினார். மோகினியின் அழகில் மயங்கி, முனிவர்கள் தவச் சாலைகளை விட்டு, அவள் பின்னே சென்றனர். தங்கள் மனைவியர் பிட்சாடனர் பின் செல்வதையும், தாங்கள் மோகினி பின் செல்வதையும் ஒரு கட்டத்தில் உணர்ந்தனர். ஆவேசத்துடன் ஆபிசார வேள்வி நடத்தினார்கள். யாகத்தில் இருந்து சிங்கம், புலி, யானை, பாம்பு, முயலகன் என வெளிப்பட, அவற்றை பிட்சாடனர் மீது ஏவினார்கள். விலங்கின் தோல்கள் ஆடைகளாகவும் பாம்பு அணிகலனாகவும் முயலகன் தன் திருவடிக்குக் கீழேயும் கொண்டு, கர்வம் சத்ரு என்பதை உணர்த்தினார் ஈசன்!

 இடது காலை ஊன்றி, வலது காலை வளைத்து நடந்து வருகிறார் பிட்சாடனர். நான்கு கரங்கள். முன் வலக்கரத்தில் உள்ள அருகம்புல்லால் மானை ஈர்த்தும் பின் இடக்கரங்கள் ஒன்றில் உடுக்கை ஏந்தியும், மற்றொன்றில் பாம்புடன் திரிசூலம் ஏந்தியும், முன் இடக்கரத்தில் கபாலம் ஏந்தியும் காட்சி தருகிறார்.

ஆடையாக பாம்பையே அரையில் அணிந்துள்ளார். நெற்றிப் பட்டமும், முக்கண்ணும் கொண்டு திகழ்கிறார். அவர் தலை ஜடாமண்டலத்துடனும் வலக் காலில் வீரக்கழலும் உள்ளன. பாதுகைகளாக விளங்கும் வேதங்கள். பிச்சைப் பாத்திரமான கபாலம் ஏந்திய கை, தொப்பூழ் (உந்தி) வரை நீண்டிருக்கும். இது கட்க முத்திரையில் உள்ளது. உடுக்கை கொண்ட வலக் கை, காது வரை நீண்டு ஓங்கி விளங்கும்.

  உடுக்கை ஒலி- உலக உற்பத்தி. திரிசூலம்- அழித்தல். மானுக்குப் புல் அளித்தல்- அருள் புரிதல். குண்டோதரனை அடக்கி ஆளுதல்- மறைத்தல் தொழில். கபாலம் ஏந்தி நிற்பது- காத்தல் தொழில். அணிந்துள்ள பாம்புகள் யோக சாதனையாகவும், பாதச் சிலம்பு ஆகமங்களாகவும், பாதுகைகள் வேதங்களாகவும் இருப்பதாகத் தெரிவிக்கின்றன சிவபுராண நூல்கள்!

 - வி.ராம்ஜி

பொதுஆவுடையார் கோயில் பரக்கலாக்கோட்டை



காலையில் நடை திறந்து, மதியத்திலும் பிறகு மாலையில் திறந்து இரவு பூஜையுடன் சார்த்துவார்கள். ஆனால், தஞ்சாவூர் மாவட்டம் பட்டுகோட்டைக்கு அருகில் உள்ள பரக்கலாக்கோட்டை கிராமத்தில் உள்ள மத்தியபுரீஸ்வரர் என்றும் பொது ஆவுடையார் கோயில் என்றும் அழைக்கப்படும் சிவாலயத்தில் திங்கட்கிழமைகளில் மட்டும் இரவில் நடை திறப்பார்கள். வருடந்தோறும் பொங்கல் நாளில் மட்டும் பகலில் நடை திறந்து, பூஜைகளும் விசேஷங்களுமாக அமர்க்களப்படும்!

 வெள்ளால மரத்துக்கு அருகில் அமர்ந்தபடி ஸ்ரீவான்கோபரும் ஸ்ரீமகாகோபரும் சிவபெருமானின் வருகைக்காகக் காத்திருந்தார்கள்.  சிதம்பரத்தில் அர்த்தஜாம பூஜை முடிந்த கையுடன் முனிவர்களை சந்தித்தார் ஈசன். 

 ‘இறைவனை அடைவதற்கு சிறந்த வழி இல்லறமா... துறவறமா?’ என்று இரண்டு பேருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட... இந்திரனிடம் சென்று விளக்கம் தரும்படி கேட்டனர். ‘முனிவர்களின் சாபத்துக்கு ஆளாகக் கூடாது’ என்று பதறிப் போன இந்திரன், ‘’தில்லையம்பலத்தானிடம் கேளுங்கள். தக்க பதில் கிடைக்கும்‘’ என்றான்.

  அதன்படி இரண்டு முனிவர்களும் சிதம்பரத்துக்குச் சென்று, சிவனாரைப் பணிந்தனர். தங்கள் சந்தேகத்தைச் சொல்லி விளக்கம் அளித்து அருளும்படி வேண்டினர்.  ‘’நீங்கள் தவம் செய்யும் இடத்தில் வெள்ளால மரம் உள்ளது. அதற்கு அருகில், உறங்கு புளி, உறங்கா புளி என இரண்டு மரங்கள் இருக்கின்றன. அங்கே காத்திருங்கள். அர்த்தஜாம பூஜை முடிந்ததும் வருகிறேன்’’ என்று சொல்லி அனுப்பிவைத்தார் ஆடல்வல்லான். இப்போது, சிவனாம் வந்துவிட்டார்.

   ‘’இல்லறமாக இருந்தாலென்ன, துறவறம் பூண்டால் என்ன? நெறிமுறை பிறழாமல், நேர்மையும் ஒருமித்த மனமும் கொண்டு வாழ்ந்தால் என்னை அடைவது எளிது. இதில் உயர்வு தாழ்வு என்பதற்கெல்லாம் இடமே இல்லை. இரண்டும் இணையானதே!’’ என்று அருளினார் சிவனார்.

  இப்படி இரண்டு பேருக்கும் பொதுவாக பதில் உரைத்ததால், பொதுஆவுடையார் என்று அழைக்கப்பட்டார். இரண்டு பேருக்கும் மத்தியஸ்தம் செய்து தீர்ப்பு சொல்லியதால், ஸ்ரீமத்தியபுரீஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார்!

  ‘‘தாங்கள் இங்கிருந்தபடி அருள வேண்டும்‘’ என்று முனிவர்கள் வேண்ட, ‘’அப்படியே ஆகட்டும்‘’ என்ற ஆடல்வல்லான், அந்த வெள்ளால மரத்திலேயே ஐக்கியமானார். இன்றைக்கும் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்!

- வி.ராம்ஜி

கால சம்ஹாரர்!



   சிவனடியார்களை கவருவதற்கு எமதருமன் வரும் போது,  அந்தக் காலனையே அழித்து அருள் புரிவதால், சிவனாருக்கு கால சம்ஹாரர், எம சம்ஹாரர் எனும் திருநாமம் அமைந்தது. ‘மிருத்யுஞ்ஜயர்’ என்றும் சொல்வார்கள்!

  கௌசிக முனிவரின் புதல்வர் மிருகண்டு. அவர் மனைவி மருத்துவதி. அவர்கள், ஆண் குழந்தை வேண்டி தவம் செய்தனர். அப்படி அவதரித்த மைந்தன் மார்க்கண்டேயன். அவனுக்கு வயது 16 மட்டுமே என்பது பிரம்மாவின் கணக்கு! ஆனால் அவனோ சிவபக்தன்! 16 வயதை அடையும் வேளையில், அவன் உயிரைக் கவர்ந்து செல்ல எமதருமன் வந்தான்.

  அப்போது சிவபூஜையில் இருந்தான் மார்க்கண்டேயன். எமன் அழைக்க, அப்படியே சிவலிங்கத்தைக் கட்டிக் கொண்டான். மார்க்கண்டேயனுடன் சிவலிங்கத்தையும் சேர்த்து பாசக்கயிற்றால் இழுத்தான் எமன். சிவபெருமான் லிங்கத்திலிருந்து வெளிப்பட்டு காலனை உதைத்தார். காலன் வீழ்ந்தான். மார்க்கண்டேயன் ‘என்றும் பதினாறு’ எனும் வரம் பெற்றான்.

  இறைவன் மார்க்கண்டேயருக்கு வரங்கள் தந்த பின் அந்த லிங்கத்திலேயே மறைந்து அருளினார். இதனால், சிவபெருமான், கால சம்ஹாரர், எம சம்ஹாரர் என்று திருவடிவம் கொண்டு அருள் புரிந்து வருகிறார்!

- வி.ராம்ஜி

ஸ்ரீகுற்றாலநாத சுவாமி கோயில்



நெல்லையில் இருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ளது தென்காசி. இந்த ஊருக்கு அருகிலேயே உள்ளது குற்றாலம். சலசலவென அருவியில் சப்தமும் பச்சைப்பசேல் எனும் மரங்களின் குளுமையும் ஓங்கி உயர்ந்த மலைகளின் பேரழகுடனும் சூழ, அழகுற அமைந்திருக்கிறது ஸ்ரீகுற்றாலநாத சுவாமி  கோயில். சுவாமியின் பெயர் ஸ்ரீகுற்றாலநாத சுவாமி. அம்பாள் ஸ்ரீகுழல்வாய்மொழி அம்மன்!

  புராணம் மற்றும் இலக்கியத்திலும் தொடர்புகள் பல கொண்ட அற்புதமான ஆலயம் இது. பிருகு மன்னனுக்கு இருந்த ஒரே வருத்தம்... சுருசி என்பவன் சிவனாரை நிந்தித்து வந்ததுதான்! இதுகுறித்து அகத்தியரிடம் முறையிட்டான். மேலும் இந்த ஆலயம், வைணவக் கோயிலாக இருந்தது. அருகில் உள்ள இலஞ்சி தலத்துக்குச் சென்று முருகக்கடவுளை வேண்டினார் அகத்தியர். பிறகு கந்தனின் ஆணைக்கிணங்க, வைணவ அடியார் போல உள்ளே நுழைந்து, திருமாலை வணங்கி, ‘குறுகுக குறுகுக குற்றால நாதா’ என்று சொல்லி, திருமாலின் தலையில் தன் கையை வைத்து, அழுத்த... குற்றாலநாதராக திருமேனி மாறியது என்கிறது புராணம்!

 இதனால் குற்றாலநாதருக்கு தீராத தலைவலி ஏற்பட்டதாம். ஆகவே தினமும் காலசந்தி பூஜையில், 64 வகையான மூலிகைகள் கொண்ட சந்தனாதித் தைலம் கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது.

அம்பாளும் சக்திவாய்ந்தவள். 64 சக்தி பீடங்களில் பராசக்தி பீடமாக இந்தத் தலம் போற்றப்படுகிறது.

 கோயில் நேரம் :
 காலை 6 முதல் மதியம் 12.30 வரை.
 மாலை 4.30 முதல் இரவு 8 வரை.

- வி.ராம்ஜி

ஸ்ரீசங்கரநாராயண சுவாமி கோயில்



நெல்லையில் இருந்து 54 கி.மீ. தொலைவிலும் ராஜபாளையத்தில் இருந்து 35 கி.மீ. தொலைவிலும் உள்ளது சங்கரன்கோவில். சைவ வைணவ ஒற்றுமைக்கு உதாரணமாக சிவனாரும் திருமாலும் ஒன்று சேர்ந்து அருள்பாலிக்கும் அற்புதமான திருத்தலம். அம்பாளின் திருநாமம் ஸ்ரீகோமதி அம்பாள்!

சங்கரன்கோவில் மட்டுமின்றி நெல்லை மாவட்டத்தில் பிறக்கும் பெண் குழந்தைக்கு கோமதி என்றே பலரும் பெயர்சூட்டுவார்கள்.

சைவ வைணவ வேறுபாடு நீங்காதா என்று உமையவள் கேட்க, பூலோகத்தில், புன்னைவனத்தில் நீ தவம் செய். அதற்கான விடை கிடைக்கும் என அருளினார் சிவபெருமான். அதன்படி இங்கு வந்து தவமிருந்தாள் அம்பிகை. ஆடி மாத உத்திராட நட்சத்திர நாளில், ஹரியும் ஹரனும் ஒன்றே என திருக்காட்சி தந்தருளினார் சிவனார். அன்று அம்பிகைக்குக் காட்டிய திருக்கோலத்தில், ஸ்ரீசங்கரநாராயணராக இன்றைக்கும் காட்சி தந்து அருள்பாலித்து வருகிறார்கள் சங்கரன்கோவிலில்!

சிருங்கேரி பீடாதிபதி வழங்கிய ஸ்படிக லிங்கம், திருவாவடுதுறை ஆதீனம் அமைத்த ஸ்ரீசக்கரம், புற்று மண் பிரசாதம், எனப் பலபெருமைகள் கொண்ட திருத்தலத்துக்கு வந்து வேண்டிக் கொண்டால், சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கும். கல்யாண வரன் அமையும். வீட்டில் தடைப்பட்ட மங்கல காரியங்கள் நிகழும் என்பது ஐதீகம்!

 கோயில் நேரம் :
 காலை 6 முதல் மதியம் 12.30 வரை.
 மாலை 4 முதல் இரவு 9 வரை.

- வி.ராம்ஜி

கல்யாண வரம் தருவார் வள்ளியூர் ஸ்ரீசுப்ரமண்யர்!



  திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவில் செல்லும் வழியில், சுமார் 42 கி.மீ. தொலைவில் உள்ளது வள்ளியூர். இங்கே, குன்றில் கோயில் கொண்டிருக்கிறார் ஸ்ரீசுப்ரமண்யர்!

 மலையைக் குடைந்து, குடைவரைக் கோயிலாகக் கட்டப்பட்ட தலம் இது. சுமார் 1500 வருடங்களுக்கு முந்தைய ஆலயம் என்பதை, கற்களும் கட்டுமானப் பணிகளும் தெரிவிக்கின்றன.

 வேலாண்டித் தம்பிரான் சுவாமிகள், அருணாசலம் பிள்ளை ஆகியோர் திருப்பணிகள் மேற்கொண்டதாகத் தெரிவிக்கும் கல்வெட்டுகள் உள்ளன.
இந்திரன், அகத்திய முனிவர், அருணகிரிநாதர், இடைக்காட்டு சித்தர் ஆகியோர் இங்கு  வந்து நெடுங்காலம் தங்கி, ஸ்ரீசுப்ரமண்யரை வழிபட்டு, வரம் பெற்றுள்ளனர். வண்ணச்சரபம் தண்டபாணி தேசிகர் சுவாமிகள், இங்கே உள்ள ஸ்ரீசுப்ரமண்யரின் அழகில், சொக்கிப் போய் மனமுருகிப் பாடியுள்ளார்.

  கார்த்திகை கடைசி வெள்ளிக்கிழமை தெப்போத்ஸவம் சிறப்புற நடைபெறுகிறது. அதையொட்டி நடைபெறும் திருக்கல்யாணத்திலும் மாதந்தோறும் சஷ்டி நாளிலும் இங்கு வந்து ஸ்ரீசுப்ரமண்யரை வேண்டினால், தடைப்பட்ட திருமணம் விரைவில் நடந்தேறும் என்பது நம்பிக்கை!

- வி.ராம்ஜி

கோதை பிறந்த ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலை, ஸ்ரீவடபத்ர சாயி என்பார்கள். மிக பிரமாண்டமான, தொன்மையான, புராணப் பிரசித்திப் பெற்ற ஆலயங்களில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலும் ஒன்று! விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அற்புதமான திருத்தலம். 108 திவ்விய தேசங்களில் இந்தத் தலமும் ஒன்று! எல்லாவற்றுக்கும் மேலாக, கோதை பிறந்த ஊர், கோவிந்தன் வாழும் ஊர் என்று சொல்வார்கள், ஸ்ரீவில்லிபுத்தூரை!

நந்தவனத்தில் தாம் பறிக்கும் பூக்களை இறைவனுக்கு மாலையாகக் கட்டி முதலில் அதை தன் கூந்தலில் சூடி, இறைவனுக்கு தாம் ஏற்ற பொருத்தம் உடையவளா என்பதைக் கண்ணாடியிலே கண்டு களிப்பாள் ஆண்டாள். பிறகு மாலையைக் கழட்டி, பூஜைக்கு கொடுத்து விடுவாள். தந்தை பெரியாழ்வாரும் தினமும் இதையே இறைவனுக்கு சாத்துவார்

ஒருநாள்... இறைவனுக்கு சார்த்தவேண்டிய மாலையில் தலைமுடி இருப்பது கண்டு அஞ்சி அதைத் தவிர்த்து விட்டு வேறு மலர்களை சூட்டினார். உடனே இறைவன், “கோதையின் கூந்தலில் சூட்டிய மாலையையே நான் விரும்புகிறேன். அதையே எனக்கு சூட்டு” என்றார்.
 
ஆழ்வாரும் கோதையை மானுடர் யாருக்கும் மணமுடிக்க சம்மதிக்காமல் இறைவனுக்காக காத்திருந்தார். கோதைஆண்டாள், இறைவனையே நினைத்து ஏங்கினாள்.  இறைவனும் தாம் கோதையை நேசிப்பதாகவும் தன்னை திருவரங்கரத்திற்கு வந்து சந்திக்கும்படி அழைப்பு விடுத்தார். அதையடுத்து, பூப்பல்லக்கில் ஸ்ரீரங்கம் சென்று இறைவனோடு ஐக்கியமானாள். 

ஸ்ரீவில்லிபுத்தூரிலும் கோதையோடு சேர்ந்து எழுந்தருள வேண்டும் என்று பெரியாழ்வார் பிரார்த்திக்க, இறைவனும் அதை ஏற்று இங்கே எழுந்தருளினார். வைணவர்களின் முக்கிய தலமாக இந்தக் கோயில் இன்றைக்கும் போற்றப்படுகிறது.
 
மூலஸ்தானத்தில் விமலாக்ருதி விமானத்தின் கீழ், அரவணைப் பள்ளியில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக , சயனக் கோலத்தில் காட்சி தருகிறார் பெருமாள். இவரைச் சுற்றி மூன்று பக்கங்களிலும் சுதை வேலையாய்ச் செய்து வர்ணம் தீட்டப்பட்ட கருடன், சேனை முதலியார், சூரியன், தும்புருநாரதர், சனத்குமாரர், வில், கதை, சக்கரம், சங்கு, பெருமாளின் நாபிக் கமலத்திலிருந்து உண்டான தாமரையில் அமர்ந்த பிரம்மா, வாள் சனகர், கந்தர்வர்கள், சந்திரன், மதுகைடபர், பிருகு, மார்க்கண்டடேயர் ஆகீயோரின் உருவங்கள் இருக்கின்றன.
 
விமானத்தைச் சுற்றி வர விமானத்திலே ஒரு சிறுவிட்ட வாசல் பிரகாரமும் இருக்கிறது. இதில் திருமுடியையும் திருவடிகளையும் சேவிக்க சிறிய திட்டி வாசல்கள் உள்ளன. இவை மார்கழித் திருநாள் ஆரம்பத்திற்கு முதல்நாள் பிரியாவிடையன்று யாவரும் வழிபட திறந்து வைக்கப்படுகின்றன.
 
திருப்பதியில் புரட்டாசி 3&வது சனிக்கிழமை பிரம்மோற் ஸவத்துக்கு ஆண்டாள் மாலையை திருப்பதி பெருமாளுக்கு அணிவிக்கப்படுகிறது. இங்கே, ஆண்டாள் திருக்கல்யாணத்துக்கு திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலிலிருந்து திருமணப் பட்டுப் புடவை வருகிறது.
 
மதுரையில் சித்திரைத் திருவிழா அழகர் எதிர் சேவையின் போது ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையைத்தான் கள்ளழகர் அணிவிக்கிறார். 

விஷ்ணு சித்தர் என்று போற்றப்படும் பெரியாழ்வாரும் ஸ்ரீஆண்டாளும் அவதரித்த திருத்தலம் ஸ்ரீவில்லிபுத்தூர்!
 
ஸ்ரீவில்லிப்புத்தூரில் வசித்த பெரியாழ்வார் மதுரையில் நடந்த போட்டியில் பொற்கிழி பரிசு பெற்றார். பெருமாள் கருட வாகனத்தில் தோன்றி, இப்பரிசை கிடைக்கச் செய்தார். இந்தக் காட்சியை அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கானோர் தரிசித்தனர். மக்களின் கண் பெருமாள் மீது பட்டு அவருக்கு திருஷ்டி ஏற்பட்டிருக்குமோ, அவருக்கு ஏதாவது ஆபத்து ஏற்படுமோ என பெரியாழ்வார் பயந்துபோனாராம். பக்தியின் உயர்நிலை இது. எனவே, அவர் பல்லாண்டு வாழ வேண்டும் எனக் கருதி,”பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம், மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா உன் சேவடி செவ்வி திருக்காப்பு” என்று துவங்கி “திருப்பல்லாண்டு” பாடினார். இந்த உயர்ந்த பக்தியை மெச்சிய பெருமாள், “நீரே பக்தியில் பெரியவர்” என வாழ்த்தினார்.
 
அதுவரை, விஷ்ணு சித்தர் என்று அழைக்கப்பட்டவர்,  பெரியாழ்வார் எனும் திருநாமம் பெற்றார். இந்தப் பல்லாண்டு பாடலே உலகம் முழுவதும் உள்ள திருமால் கோயில்களில் இன்றைக்கும் தினந்தோறும் பாடப்படுகிறது.

ராமேஸ்வரத்தில் உள்ள புனித தீர்த்தங்கள்!


ஸ்ரீராமபிரான் புண்ணிய தீர்த்தத்தில் நீராடி, சிவலிங்க பூஜை செய்து, பிரம்மஹத்தி தோஷத்தில் இருந்து விடுபட்ட தலம் ராமேஸ்வரம் எனும் புண்ணியபூமி!

22 புண்ணிய தீர்த்தங்களையும் அவற்றில் நீராடினால் கிடைக்கும் பலன்களையும் தெரிந்து கொள்வோம்!

 மகாலக்ஷ்மி தீர்த்தத்தில் நீராடினால், சகல ஐஸ்வரியங்களும்  பெருகும். சாவித்திரி, காயத்ரி, சரஸ்வதி தீர்த்தங்களில் நீராடினால்,  இதுவரை சடங்குகளைச் செய்யாதவர்களும், சந்ததி இல்லாதவர் களும் நற்கதி பெறலாம்.

  சங்கு தீர்த்தத்தில் நீராடினால்,  நன்றி மறந்த பாவம் நீங்கும்.   சக்கர தீர்த்தத்தில் நீராடினால் தீராத நோயும் தீரும்.  சேது மாதவ தீர்த்தத்தில் நீராடினால்  செல்வம் கொழிக்கும்.    நள தீர்த்தத்தில் நீராடினால், இறையருளைப் பெற்று சொர்க்கத்தை அடையலாம்.  நீல தீர்த்தத்தில் நீராடினால்,  யாகம் செய்த பலனைப் பெறலாம். கவாய தீர்த்தத்தில் நீராடினால், மனவலிமையைப் பெறலாம்.

  கவாட்ச தீர்த்தத்தில் நீராடினால், தேக ஆரோக்கியம் உண்டாகும்.  கந்தமான தீர்த்தத்தில் நீராடினால், தரித்திரம் நீங்கும்.    பிரம்மஹத்தி விமோசன தீர்த்தத்தில் நீராடினால்,  பிரம்மஹத்தி தோஷம் நீங்கும். பில்லி சூனிய ஏவல்கள் அகலும்.  சந்திர தீர்த்தத்தில் நீராடினால், கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கலாம். சூரிய தீர்த்தத்தில் நீராடினால், ஞானமும் யோகமும் பெறலாம்.

  சாத்யாம்ருத தீர்த்தத்தில் நீராடினால், தேவதைகளின் கோபத்தில் இருந்து விடுபடலாம்.  சிவ தீர்த்தத்தில் நீராடினால்  சகல ஐஸ்வரியங்களையும் பெறலாம். சர்வ தீர்த்தத்தில் நீராடினால், அனைத்து யோகங்களும் கைகூடும்.  கயா, யமுனா மற்றும் கங்கா தீர்த்தங்களில் நீராடினால், - பிறவிப் பயனை அடையலாம்.

  நிறைவாக, கோடி தீர்த்தத்தில் நீராடினால், - மகா புண்ணியம்.

ஸ்ரீராமர், சிவலிங்க அபிஷேகத்துக்குப் பயன்படுத்திய தீர்த்தம் இது. சிவனாரின் அருளையும் ஸ்ரீராமரின் அருளையும் பெற்றுப் பெருவாழ்வு வாழவைக்கும் மகா தீர்த்தம்!  இந்த தீர்த்தங்களைத் தவிர, கடலிலேயே கலந்திருக்கிறது அக்னி தீர்த்தம். இதில் நீராடிவிட்டே தரிசனத்துக்குச் செல்வது வழக்கம்!

ராமேஸ்வரம்



ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் பாடல் பெற்ற தலங்களில் ஒன்று. ஞானசம்பந்தர், அப்பர் பெருமான் ஆகியோரின் பாடல் பெற்ற இந்தத் திருத்தலம்.

ராமநாதபுரம் மாவட்டத்தில், ராமேஸ்வரத்தில் அமைந்துள்ளது. இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.

ராவணனைக் கொன்ற பாவம் தீர ஸ்ரீராமர் இங்கே வழிபட்டார் என்கிறது ஸ்தல புராணம்! மூலவர் பெயர் ராமநாதசுவாமி, அம்பாள் ஸ்ரீ பர்வத வர்த்தினி.

ஸ்ரீராமன் சீதையை மீட்க ராவணனிடம் போர் புரிந்து அவனைக் கொன்றார். ராவணனைக் கொன்ற பாவத்தைப் போக்குவதற்காக,  மணலால் ஆன லிங்கத்தை வைத்து பிரதிஷ்டை செய்தார் ஸ்ரீராமர்.

இதனால், மூலவருக்கு ராமநாத சுவாமி என்றும் தலத்துக்கு ராமேஸ்வரம் என்றும் பெயர் அமைந்ததாகச் சொல்கிறது தல புராணம்!

காசி &- ராமேஸ்வரம் யாத்திரை வாழ்வில் முக்கியத் துவம் வாய்ந்தது. காசி, ராமேஸ்வரம் யாத்திரை செல்பவர்கள் முதலில் ராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்தத்தில் நீராடி, மணல் மற்றும் தீர்த்தம் எடுத்துக்கொண்டு காசிக்குச் சென்று, கங்கையில்  மணலை போட்டுவிட்டு, காசி விஸ்வநாதருக்கு அக்னி தீர்த்தத்தை அபிஷேகம் செய்யவேண்டும். பிறகு காசியிலிருது கங்கை தீர்த்தம் எடுத்து வந்து, ராமநாதருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.
இங்கு கோயில் கொண்டுள்ள அம்மன் பெயர் பர்வத வர்தனி அம்மன்.

பர்வதவர்த்தினி அம்பிகை பீடத்திற்கு கீழே ஆதிசங்கரர் நிறுவிய ஸ்ரீசக்கரம் உள்ளது. அம்பிகைக்கு சித்திரைப் பிறப்பன்று மட்டும் சந்தனக் காப்பு

அலங்காரம் செய்வது வழக்கம். அம்மன் சன்னதி பிரகாரத்தில் ஆதிசேசன் மீது பள்ளி கொண்ட கோலத்தில் பெருமாள் காட்சி தருகிறார். 

முதல் பிரகாரத்தில் சீதை அமைத்த மணல் லிங்கத்திற்கு ராமர் பூஜை செய்யும் சன்னதி அமைந்துள்ளது.

பல்லாயிரக்கணக்கான ருத்ராட்சங்கள் சேர்த்து பின்னப்பட்ட பந்தலில் நடராஜர் காட்சி தருகிறார். யோகக் கலையில் தேர்ச்சி பெறவும், நாகதோஷ நிவர்த்திக்காகவும் இந்த சன்னதியில் நாகவடிவில் உள்ள பதஞ்சலி முனிவரிடம் வேண்டிக்கொள்கிறார்கள்.

கர்ப்பகிரகத்தில் உள்ள ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்படிக லிங்கத்திற்கு தினமும் காலை 5 மணி முதல் 6 மணி முடிய சிறப்பு தரிசனம் நடைபெறும்.
ராமநாதபுரம் மன்னர் முத்துராமலிங்க சேதுபதி, கோயிலின் உலகப் புகழ் பெற்ற நீண்ட மூன்றாம் பிரகாரத்தை அமைத்தார். 1212 தூண்களுடன் கூடிய இந்த பிரகாரம் 690 அடி நீளம், 435 அடி அகலம், 22லு அடி உயரம் கொண்டது.

ஐஸ்வரியம் தருவார் ஸ்ரீசௌந்தர பாண்டீஸ்வரர்!



  திருநெல்வேலியில் இருந்து 37 கி.மீ. தொலைவில் உள்ளது மேலக்கரு வேலங்குளம். இங்கே சௌந்தரபாண்டீஸ்வரர் எனும் திருநாமத்துடன் கோயில் கொண்டிருக்கிறார் ஈசன். அம்பாளின் பெயர் ஸ்ரீகோமதி அம்பாள்!

  கோயிலின் மகா மண்டபத்தில், பலகை ஒலியுடன் கூடிய சிறிய தூண்கள் பிரமிக்க வைக்கின்றன. அங்கே கல்தூண் ஒன்று சுழல்வது போல் அமைக்கப் பட்டிருப்பது கட்டட நுணுக்கத்திற்குச் சான்றாகத் திகழ்கிறது. யாளி சிலையின் வாயில் ஒரு கல் உருண்டை, சுழல்வது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

  பதஞ்சலி முனிவர், வியாக்ரபாத முனிவர், புலிப்பாணி சித்தர் முதலானோர் இங்கு தவம் செய்து சிவதரிசனம் செய்துள்ளனர். இதைக் குறிக்கும் வகையில் இவர்களுக்கு சிலைகளும் இங்கு உள்ளன!

 மாதந்தோறும் திருவாதிரை நட்சத்திர நாளில், ஸ்ரீசிவகாமி அம்மைக்கும் ஸ்ரீநடராஜருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. இதில் கலந்துகொண்டு தரிசித்தால், சகல சௌந்தர்யங்களுடன் இனிதே வாழலாம் என்பது ஐதீகம்!

- வி.ராம்ஜி

ஸ்ரீகனகசபாபதி கோயில்- கரிசூழ்ந்தமங்கலம்



நெல்லையில் இருந்து மேலப்பாளையம் வழியே சேரன்மகாதேவி செல்லும் வழியில் உள்ளது பத்தமடை. இங்கிருந்து கிளை பிரிந்து செல்லும் சாலையில், 5 கி.மீ. தொலைவில் உள்ளது கரிசூழ்ந்தமங்கலம் திருத்தலம். இங்கே சிவனாரின் பெயர் ஸ்ரீகனகசபாபதி. அம்பாளின் திருநாமம் ஸ்ரீசுந்தராம்பிகை!

  ஒருகாலத்தில், கட்டாரிமங்கலம் முதலான இந்தப் பகுதிகளை ஆட்சி செய்தவர் வீரபாண்டியன் எனும் சிற்றரசன். மணற்படைவீட்டை ஆட்சி செய்த முழுதுங்கண்ட ராமபாண்டிய மன்னனின் உறவினர் இவர். செப்பறையில் உள்ள நடராஜரைப் போல தன்னுடைய ஊரிலும் இருக்கவேண்டும் என விரும்பினான். அதன்படி நமசிவாய ஸ்தபதி என்பவர் தாமிரத்தைக் கொண்டு சிலை செய்யும் பணியில் இறங்கினார்.

  கட்டாரிமங்கலத்துக்கு ஒன்று, நெல்லையப்பர் கோயிலுக்கு ஒன்று என செய்யச் சொன்னான். சிலை முழுமை பெற்றதைக் கண்ட வீரபாண்டியன், இப்படியொரு அழகுச் சிலை வேறு எவருக்கும் செய்யக்கூடாது என நினைத்து, சிற்பியின் கைகளை வெட்டினான். இரண்டு சிலைகளில் ஒன்று கட்டாரிமங்கலத்துக்கு வந்து சேர்ந்தது. இன்னொரு சிலையை எடுத்துவரும்போது, ஆற்றில் பெருவெள்ளம் ஏற்பட்டு, நீரில் சிக்கிக் கொண்டது. வெள்ளம் வடிந்ததும் அந்த ஊர்மக்களின் கண்களில் பட... தென்கரையில் வைத்து வழிபட்டார்கள்!

 அன்றிரவு மன்னனின் கனவில் வந்த இறைவன், கரையில் உள்ள இடத்தில் கோயில் கட்டு என அருளினார். என கரிசூழ்ந்தமங்கலத்தில் கோயில் கட்டினான் என்கிறது ஸ்தல வரலாறு.

  தென்காளஹஸ்தி எனப் போற்றப்படும் ஒப்பற்ற திருத்தலம் இது. அம்பாள் சுந்தராம்பிகை, பெயருக்கு ஏற்றார்போல, அழகு ததும்பக் காட்சி தருகிறாள். தோஷங்கள் நீக்கி அருளும் தலம் எனப் போற்றுகின்றனர் பக்தர்கள்!

 கோயில் நேரம் :
  காலை 6 முதல் 9 வரை.
  மாலை 5.30 முதல் இரவு 8.30 வரை.

- வி.ராம்ஜி

பெண்களும் சபரி மலை செல்ல தடை? காரணம் என்ன?


குழந்தைபருவ பெண்களும், வயது முதிர்ந்த பெண்களும் சபரி மலை செல்ல தடையேதும் இல்லை. இதன் காரணம் என்ன?

யோக சக்தி என்பது மனிதனின் உடலில் கீழ் இருந்து மேல்நோக்கி செயல்பட வேண்டும். மேலிருந்து கீழ் நோக்கி செயல்படக் கூடாது. பிறப்புறுப்பு பகுதியான "மூலாதாரத்தில்" செயல்கள் இருக்கும் பொழுது ப்ராண சக்தியானது உடலில் கீழ் நோக்கி பயணிக்கும். இந்நிலையில் ஆன்மீக எழுச்சி ஏற்படாமல் மன சிதறல்கள் ஏற்பட்டு, இது போன்ற பாதிப்புகள் பிறருக்கும் பரவும்.

இதை தவிர்த்து தலைப்பகுதியான "துரியனில்"செயல்கள் (தலையின் உச்சியில் இருமுடி பை வைப்பதன் காரணம் இது தான் )இருந்தால் ப்ராணன் மேல் நோக்கி பயணித்து ஆன்மீக உயர்வுக்கு வழிகாட்டும்..
கருமுட்டையை தயார்படுத்துதல், கருப்பையில் அதை நிலைப்படுத்துதல் மற்றும் கருமுட்டையை உடைத்து வெளியேற்றுதல் என பெண்களின் கருப்பை மாதம் முழுவதும் செயல்படும் ஒர் உறுப்பு.
 
அப்படி கருப்பை செயல்படும் சமயம் அதீதமான இறைசக்தி உள்ள இடத்திற்கு சென்றால், (அபாணன்) கீழ் நோக்கி செயல்படும் ப்ராணன் திடீரென மேல்நோக்கி செயல் படத்துவங்கும். இதனால் கருப்பை தன் செயல்பாட்டை இழந்து கருமுட்டையை வெளிப்படுத்தும் தன்மையை விட்டு மலட்டுத்தன்மைக்கு செல்லும்.

கோவிலுக்கு சென்றால் வளர்ச்சி என்பது தான் நடக்க வேண்டுமே தவிர அழிவு நடக்கலாமா? கருப்பை செயல்படும் பெண்கள் அனேகர் இத்தகைய இடத்திற்கு சென்றால் நம் எதிர்கால சந்ததிகள் என்ன ஆவது? இதனாலேயே நம் கோவில்களில் கூட சில இடங்களில் இளம் பெண்கள் அனுமதிப்பதில்லை. சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்படுவார்கள், கருப்பை செயல்படும் நிலையில் அல்ல என்பதை புரிந்துகொண்டீர்களா?

சபரி மலையில் உள்ள பதினெட்டு படிகள் ஆன்மீக சக்தி நிறைந்த பகுதி. முழுமையான "ப்ராணன்" கொண்ட பகுதி. அதனால் தான் அந்த படிகளுக்கு பூஜைகள் நடத்தப்படுகிறது. வேறு எந்த கோவிலிலும் படிக்கட்டுகள், கட்டிடங்களுக்கு வருடா வருடம் பூஜை செய்யமாட்டார்கள். இருமுடி கட்டி தலையில் அழுத்தம் கொடுத்தவண்ணம் தலையில் "ப்ராணன்" செயல்படும் நிலையில் அந்த படிக்கட்டுகளை அணுகினால் முழுமையான சக்திமாற்றம் ஏற்படும். .

இருமுடி கட்டாமல் கூட ஐயப்பனை தரிசனம் செய்யலாம். ஆனால் இருமுடிகட்டாமல் பதினெட்டாம் படியை தொட அனுமதியில்லை. ஐயப்பனைவிட அந்த படிகள் அவ்வளவு உயர்ந்தவை..
 
இவ்வாறு சபரிமலையில் பின்பற்றும் அனேக விஷயங்களில் நுட்மமான பின்புலம் உண்டு. இது புரியாமல் சபரிமலை பெண்களுக்கு எதிரானது என சில ஆட்கள் அறியாமையை வளர்க்கிறார்கள்.

நன்றி Suba Shankar

கடவுள் ஏன் நம்மை இப்படி சோதிக்கிறார் …?


        சுகத்தை மட்டும் விரும்பி ஏற்கிற மனிதன், கஷ்டம் வரும்போது அதை பொறுத்துக் கொள்ள மாட்டேன் என்று சொன்னால், அவன் இறைவனையோ, இயற்கையையோ, புரிந்து கொள்ளவில்லை என்று தான் அர்த்தம்.கடவுள் நம்மை சோதிப்பதெல்லாம் இல்லை. அது ஒரு தவறான நம்பிக்கை. அவர் நமக்காக நம் கர்ம விதியை சரிவர நடத்தி வைக்கிறார். அவர் மேலும் நமக்கு நம் தலைவிதியை இறை வழிபாட்டின் மூலம் மாற்றியெழுத முழுச் சுதந்திரமும் கொடுத்திருக்கிறார்.நாம் கடவுளின் சோதனை என்று சொல்வது, நமக்கு நாமே, ஏற்படுத்திக் கொண்டிருக்கும் விளைவுகளேயன்றி வேறல்ல.மக்களிடம் ஆச்சரியப்பட வைக்கும் விஷயம் என்னவென்றால், கஷ்டங்களை அனுபவிக்கும்போது, ஏன் எனக்கு, என்பவர்கள், அவர்கள் வளர்ச்சி யடைகையில், எனக்கு ஏன் இந்த வளர்ச்சி, என்று கேட்பதேயில்லை … !
எனக்கு மட்டும் ஏன் இத்தனை கஷ்டம் என்பவர்கள், என்றாவது எனக்கு மட்டும் ஏன்,இந்த மாருதி கார்,ஹீரோ ஹோண்டா பைக், சாம்சங் கலக்ஸி மொபைல், லேப் டாப்,ஐ.டி கம்பனி வேலை, வங்கியில் பணம் ,வீடு, நகை, வெளிநாட்டுப் பயணம், என்று கேட்டதுண்டா .. ?வைரம் அறுக்கப்படாமல் பளபளப்பாகாது, மின்னாது,தங்கம் நெருப்பில் புடம் போடாமல் புனிதமாகாது.நல்லவர்கள் சோதனைக்கு உள்ளாவார்கள், ஆனால் வேதனைப்பட மாட்டார்கள். வாழ்வின் அனுபவங்கள் அவர்களை சிறப்பிக்குமே தவிற கசப்பிக்காது.ஆரம்பதிலிருந்து கடைசி வரை கஷ்டப்பட்டே வாழ்ந்து செத்தவர்கள் இந்த உலகத்தில் யாரும் கிடையாது.அதே போல பிறந்த தேதியிலி ருந்து இறுதிவரை சந்தோஷத் துடனே வாழ்ந்து மடிந்தவர்களும் கிடையாது.கஷ்டப்படுகிறவர்களுக்கு, துன்பம் அனுபவித்த வர்களுக்கு, ஆண்டவன் ஒரு நாள் உதவாமற் போக மாட்டான். எப்பொழுதுமே கஷ்டப்படட்டும் என்று, யாரையும் ஆண்டவன் அப்படியே விட்டுவிட மட்டான்.விதிக்கப்பட்ட தடைக் கற்கள் தரும் பாடங்களே போராட்டங்களிலும் சகிப்பிலுமே மன வலிமை வரும். சோதனைகள் என்பது மனோதி டத்தை அதிகரிக்க உதவும்சில சமயங்களில், அவர் நம்மைக் கைவிட்டு விட்டாரோ என்று தோன்றுகிறது. ஏனெனில், நாம் அவரைக் காண முடிவதில்லை. சோதனை வேளை களில் நாம் காணமுடியாதவாறு அவர் நம்மோடே இருக்கிறார்.அவருடைய கண்கள் நம்மீது எப்போதும் நோக்கமாயி ருக்கின்றன.எனவே, நற் சிந்தனையுடன், அவரது நாமமே ஜபித்து, அவரை வணங்கி, அவரிடம் சரண் அடைந்தால், நாம் நமது சோதனைகளையு ம், கர்ம வினைகளையும், பயமின்றி கடந்து சாதனையாக்கலாம்.உங்கள் பிரச்சனை பெரிதாக இருந்து, அதை சமாளிக்க கூடிய கொள்ளளவு உங்களிடம் இல்லையென்றால், சோர்ந்து விடாதீர்கள், உங்களது அனைத்து முயற்சி களும் தீர்ந்து போகும் போது, கடவுளின் கருணை ஆரம்பமாகும்.கடந்த காலத்தை கலக்கமில்லாமல் உணர்ந்து கொள்ளுங்கள்…நிகழ் காலத்தை ஊக்கத்துடன் 

அணுகுங்கள்….வருங்காலத்தை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்….கிடைக்காததையும் தவறவிட்டதையும் நினைத்துத் தளராதீர்கள்…பயத்தைக் களைந்து நம்பிக்கையை தக்க வையுங்கள்…சந்தேகங்களை நம்பாதீர்கள்நம்பிக்கையை சந்தேகிக்காதீர்கள்.உங்களுக்கு கிடைத்த வரங்களை எண்ணில் கொள்ளுங்கள்.கடவுளை நம்புங்கள் அவர் நல்லவர்களைக் கை விட மாட்டார்…!

Monday, January 18, 2016

எது? உலக அதிசயம்.





ஒரு பெரிய குரூப்போடு நான் தாஜ் மஹாலை பார்க்க சென்று இருந்தேன். பார்த்து திரும்பி பஸ்ஸில் வரும் பொழுது தாஜ் மஹாலை விட அழகான ஒரு கட்டிடம் உலகில் வேறு எதுவுமே இல்லை என்பதை போல் என்னுடன் பஸ்ஸில் பயணம் செய்தவர்கள் பேசி கொண்டார்கள். தாஜ் மஹால் மிக அழகான கட்டிடம் தான். அதை யாரும் மறுக்க முடியாது. ஆனால்? தாஜ் மஹால் மட்டும் தான் உலகில் அழகான கட்டிடமா. அதை விட அழகான ஒரு கட்டிடம் உலகில் வேறு எதுவும் இல்லையா. ஏன்? இல்லை. நிறையவே இருக்கிறது. சரி உலக அதிசயம் என்றால் என்ன? ஒன்று உருவான பின் அதே போல் ஒன்றை உருவாக்க முடியாது என்பது தான் உலக அதிசயம்.


நெல்லையப்பர் கோவிலில் கல் தூனை தட்டினால் ச, ரி, க, ம, ப, த, நி என்கிற ஏழு இசை ஸ்வரங்கள் ஒலிக்கும். கல்லுக்குள் 7 ஸ்வரங்களை வைத்தார்களே. அது உலக அதிசயம். திருப்பூரில் உள்ள குண்டடம் வடுக நாத பைரவர் கோவிலில். குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் பொழுது. குழந்தை இந்த, இந்த மாதத்தில் இந்த, இந்த வடிவத்தில். இவ்ளவு விதமான Positions ல இருக்கும் என்பதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கல்லில் சிற்ப்பங்களாக வடித்து வைத்துள்ளார்கள் என் முன்னோர்கள். அது உலக அதிசயம். அன்னியர் படை எடுப்பின் பொழுது கூட. இந்த அதிசய சிற்ப்பங்களை அவர்களால் சிதைக்க முடியவில்லை. இன்றும் நிறைய கோவில்களில் சூரிய ஒளி குறிப்பிட்ட ஒரு தேதி, நேரத்தில் மாலை போல் வந்து சிவலிங்கத்தின் மீது விழும். அப்ப எவ்ளவு துல்லியமாக Measure செய்து ஆலயங்களை கட்டி இருப்பார்கள் என்று பாருங்கள். சில கோவில்களில் தினமுமே சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது மாலை போல் வந்து விழும். வட சென்னையில் உள்ள வியாசர் பாடி ரவீஸ்வரர் சிவன் கோவிலில் 3 வேளையும் சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது மாலை போல் வந்து விழும். இந்த கோவிலில் உள்ள சிவலிங்கம் எவ்ளவு ஆண்டுகள் பழமையான லிங்கம் தெரியுமா? ஐயாயிரம் ஆண்டுகள். இது உலக அதிசயம். மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில், தஞ்சை பெரிய கோவில் சிற்ப்ப, கட்டிட வேலைபாடுகளில் உள்ள அதிசயங்களை பற்றி சொல்வதென்றால். அதற்கு எனக்கு இந்த ஒரு பிறவி பத்தாது.


ஓசோன் 20 ம் நூற்றாண்டில் கண்டு பிடிக்கப்பட்ட படலம். 700 ஆண்டுகளுக்கு முன்பே மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலில் ஓசோன் படலத்தின் படம், அதன் முக்கியத்துவம், அதை நாம் எவ்வாறு பாதுக்காக்க வேண்டும் அனைத்தும் அங்கே வைக்கப்பட்டு உள்ளது. அது உலக அதிசயம். யாழி என்கிற மிருகத்தின் சிலை. பல பழங்கால கோவில்களில் இருக்கும். டைனோசர் போல். அதுவும் உலகில் வாழ்ந்து அழிந்த மிருகம் என்று சொல்கிறார்கள். சில பழம்கால கோவில்களில் உள்ள யாழி சிலையின் வாயில் ஒரு உருண்டை இருக்கும். அந்த உருண்டையை நாம் உருட்டலாம். ஆனால் ஆயிரம் குன்பூ வீரர்கள் ஒன்று சேர்ந்து முயற்சித்தாலும். யாழி வாயில் உள்ள உருண்டையை வெளியே உருவ முடியாது. அது உலக அதிசயம்.


இன்று தாஜ் மஹாலை விட மிகப்பெரிய மார்பிள் கட்டிடங்கள் உலகில் உருவாகி விட்டது. இன்று ஒரு வல்லரசு நாடு நினைத்தால். ஆயிரம் தாஜ் மஹாலை உருவாக்க முடியும். ஆனால் கல்லுக்குள் 7 ஸ்வரங்களை வைக்கும் அந்த வித்தையை. எந்த வல்லரசாலும் செய்ய முடியாது. வாயில் உள்ள உருண்டையை உருட்டலாம். ஆனால் உருவ முடியாது. இந்த வித்தையை இன்று எந்த வல்லரசாலும் செய்ய முடியாது. மிகப்பெரிய பிரும்மாண்ட கற் கோவில்களை. அழகிய கலை வேலைபாடுகளோடு உருவாக்குவது. இதை எந்த உலக வல்லரசாலும் செய்ய முடியாதது. உலகில் கிரேக்க, எகிப்து போன்ற பழம்கால நாகரீகங்களுக்கு முன்பே. ஸ்கேன் கருவி இல்லாமல் வயிற்றில் உள்ள குழந்தையை படம் பிடித்ததில் இருந்து. தொலைநோக்கி இல்லாது உலகம் உருண்டை என்பது முதல் ஓசோன் படலம் வரை. முதன் முதலில் உலகிற்கு சொன்னது நமது பாரத தேச முன்னோர்கள். நமது முன்னோர்களின் அறிவு உலக அதிசயம் அல்லவா. இதை போல் இன்னொன்றை இனி உருவாக்க முடியாது என்று இருப்பவையே உலக அதிசயங்கள்.


ஆக தாஜ் மஹால் மிக அழகான கட்டிடம் அதில் சந்தேகம் இல்லை. ஆனால்? அது ஒன்றும் அதிசயம் கிடையாது. ஷாஜகானுக்கு 600 ஆண்டுகளுக்கு முன்பே. ராணி உதையமதி தனது கணவர் பீம் தேவுக்காக தாஜ் மஹாலை விட அழகான, பிரும்மாண்டமான ஒரு நினைவு சின்னத்தை உருவாக்கியது உங்களில் எவ்ளவு? பேருக்கு தெரியும். அந்த நினைவு சின்னத்தின் பெயர் என்ன? தெரியுமா. ராணி கி வாவ். ஹிந்தியில் வாவ் என்றால் கிணறு என்று பொருள். கிணற்று வடிவத்தில் உள்ள கட்டிடங்கள் உலகில் மிக, மிக அபூர்வம். இந்தியாவில் கிணற்று வடிவில் உள்ள மிக பிரும்மாண்டமான அரண்மனை ராணி கி வாவ். இது எந்த அளவு பிரும்மாண்டமான கட்டிடம் என்பதற்கு ஒரு சிறிய உதாரணம். இந்த கட்டிடத்தின் உள். 30 கிலோ மீட்டர் நீள சுரங்க பாதை. ஆங்கிலத்தில் Tunnel என்று சொல்வார்கள். இந்த ராணி கி வாவ் இன்றைய குஜராத் மாநிலத்தில் சித்பூர் என்கிற ஊருக்கு அருகில் உள்ள பதான் pathan என்கிற ஊரில் இருக்கின்றது. இப்பொழுது கூட. நீங்கள் Googleளில் ராணி கி வாவ் என்று போட்டு பாருங்கள். ராணி கி வாவ் படங்களை பார்த்து விட்டு. நீங்கள் தாஜ் மஹாலை பார்க்கும் பொழுது தாஜ் மஹால் உங்களுக்கு ஜிஜூபியாக தெரியும்.


ராணி கி வாவ். வெறும் பீம் தேவருக்காக கட்டப்பட்ட நினைவு சின்னம் மட்டுமல்ல. அது ஒரு ஸ்ரீ மண் நாராயணன் கோவிலும் கூட. ஆம். ஆயிரம் ஆண்டுகள் பழமையான விஷ்ணு கோவில்.


இப்போ நம்ப மீண்டும். தாஜ் மஹால் பக்கமே வருவோம். தாஜ் மஹாலை பார்த்து விட்டு திரும்பி வரும் பொழுது. பஸ்ஸில் அனைவரும் இதைவிட அழகான கட்டிடம் இந்த உலகில் எதுவுமே இல்லை என்பதை போலவும். எந்த ஒரு பெண்ணும் தனது கணவனுக்காக ஒரு குடிசை கூட கட்டவில்லை என்பதை போல் பேசி கொண்டனர். நான் உடனே. எனக்கு தெரிந்த அரைகுறை ஆங்கிலத்தில். இந்த ராணி கி வாவ் பற்றி சொன்னேன். அதை கேட்டவுடன். ஜனவரி மாத டெல்லி குளிரில் கூட உறையாதவர்கள். நான் சொன்ன அந்த தகவலை கேட்டவுடன் அப்டியே அதிர்ச்சியில் உறைந்து போய் விட்டார்கள். ஏற்க்கனவே குஜராத் சுற்றுலா போனவர்கள் அதை பார்க்காமல் விட்டு விட்டோமே என்று வருத்தப்பட்டார்கள். அந்த பேட்ச்சில் ஒரு குஜராத் குடும்பம் கூட வந்து இருந்தார்கள். அவர்களுக்கும் இந்த ராணி கி வாவ் பற்றி நான் சொல்லும் வரை தெரியாது. பின்னர் அனைவரும் இன்டர்நெட்டில் ராணி கி வாவ் படங்களை பார்த்து பிரம்மித்து போனார்கள்.


அன்னியர்களின் தாக்குதலுக்கு பலமுறை உள்ளாகியும் இந்த ராணி கி வாவ் இன்றும் இத்தகைய ஒரு அழகு, பிரும்மாண்டத்தோடு இருக்கின்றது என்றால். அது சாதாரண விஷயம் அல்ல. நீங்க எல்லாம் மைன்ட் வாய்சில் நினைப்பது புரிகிறது. வரும் ஜுன், ஜுலைக்கு மேல். குஜராத் சுற்றுலாவை நமது ஹரிகேசா டிராவல்ஸ் செய்ய போகிறது. அப்ப நீங்க என்னுடன் இந்த ராணி கி வாவின் பிரும்மாண்டத்தை கண்டு மகிழலாம்.


நமது நாட்டின் மீது படை எடுத்த முகல், வெள்ளையர்கள் போன்ற அந்நியர்களை மட்டும் நாம் குறை சொல்வதில் ஒரு பயனும் இல்லை. முன்னோர்கள் நமக்கு நிறையவே நிறைகளை விட்டு சென்று இருக்கிறார்கள். இந்த ராணி கி வாவ் போன்ற நமக்கு. அன்னியர் தாக்குதலில் இருந்து தப்பித்தது போக மிஞ்சியுள்ள கலை பொக்கிசங்களை நாம் போற்றி, பாதுகாக்க வேண்டும்.


நாம் அனைவருமே காலம், காலமாக ஜாதி, மொழி ரீதியாக பிரிந்தே இருக்கிறோம். அணைத்து இந்தியர்களும் ஒற்றுமையாக இருந்து இருந்தால். அரேபியர்கள் நம்மை 800 ஆண்டுகளும், ஐரோப்பியர்கள் நம்மை 500 ஆண்டுகளும் ஆண்டு இருப்பார்களா? மாலிக்காகப்பூர் தமிழத்தின் மீது படை எடுத்து வந்தான். தஞ்சை, மதுரை போன்ற கோவில் செல்வங்களை கொள்ளை அடித்தான். சரி. அவன் இங்கு வந்ததற்கு காரணம் யார்? அவன் தானாகவா வந்தான்.


சுந்தர பாண்டியன், வீர பாண்டியன் இருவரில் யார் அடுத்து பாண்டிய சிம்மாசனத்தில் அமர்வது என்பதில் பங்காளி சண்டை. சுந்தர பாண்டியன் வீர பாண்டியனை தோற்க்கடிக்கிறான். வீர பாண்டியன் மாலிக்காகபூரிடம் உதவி கேட்கிறான். மாலிக்காகப்பூர் என்ன? செய்தான். முதலில் சுந்தர பாண்டியனை அடித்தான். பின்னர் வீர பாண்டியனையும் அடித்தான். அதன் பின்னர் தான் கோவில்களில் அவன் கொள்ளை அடித்தான். இதை நமது இந்திய மன்னர்கள் யாருமே செய்யவில்லையா. விஜயாலயன் பல்லவ மன்னனை நம்ப வைத்து கழுத்து அறுக்கவில்லை. ராஜேந்திர சோழன் பாண்டிய மன்னன் மீது உள்ள கோபத்தில். ஒட்டுமொத்த மதுரையையும் எரித்து தீக்கு இரையாக்கவில்லை. சங்க தமிழ் வளர்த்த, ம் மீனாக்ஷி அம்மன் அவதாரம் செய்த மதுரை மண்ணின் மைந்தர்களை ராஜேந்திரன் அடிமைபடுத்தவில்லை.


பிறருக்கு வந்தால் அது தக்காளி சட்னி, நமக்கு வந்தால் அது ரத்தமா? என்ன. விஜயாலயன், ராஜேந்திரன் முதலானோர் ஹிந்துக்கள் என்பதால். அவர்கள் கோவில்களை மட்டும் ஒன்றும் செய்யவில்லை. இல்லையென்றால். மாலிக், கஜினி, கில்ஜி, தைமூர், கோரி, ஔரங்கசீப் போன்ற பல அரேபிய தளபதிகள், மன்னர்கள் செய்ததை தான் அவர்களும் செய்து இருப்பார்கள்.


அக்கால மன்னர்கள் செய்த தவறுகளுக்கு நாம் இன்றைய மக்களை குறை சொல்லி ஒரு பயனும் இல்லை. நமது நாட்டின் பொக்கிசங்களை பாதுக்கப்பது, வரும் காலத்தில் நமது பாரத தேசத்தை உலக அரங்கில் தலை நிமிர செய்வது எப்படி? என்பதை தான் நாம் பார்க்க வேண்டும்.


2009 எவிடன்ஸ் அமைப்பு என்கிற அமைப்பு தமிழகத்தில் உள்ள 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் நடத்திய சர்வேயில் ஏழாயிரம் கிராமங்களில் இன்றும் தீண்டாமை இருக்கின்றது என்று எவிடன்சோடு அந்த எவிடன்சோடு அந்த எவிடன்ஸ் அமைப்பு ரிப்போர்ட் கொடுத்தது. பரமக்குடி, முதுகுளத்தூர் போன்ற கிராமங்களை தீண்டாமை கொடுமைக்கு உதாரணமாக சொல்லலாம்.


தமிழகத்தில் இந்த 21 ம் நூற்றாண்டிலும் தொடர்ந்து கொண்டிருக்கும் தீண்டாமை கொடுமைக்கு எதிராக பொங்காதவர்கள். ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக மட்டும் இப்படி பொங்குகிரார்களே.


நான் தெரியாமல் தான் கேட்கிறேன். தப்பு, தப்பு தெரிந்தே தான் கேட்கிறேன். தமிழர்களின் மானம். வெறும் இந்த ஜல்லிக்கட்டில் மட்டும் தான் இருக்கின்றதா.
—  நான் பாரத மைந்தன்.

Tuesday, January 12, 2016

உழவும்‬, பசுவும் ஒழிந்த கதை!


ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆக்கிரமித்த பின் இங்குள்ளவை பற்றி அவர்கள் ஆச்சரியப்பட்ட விஷயங்கள் இரண்டு.ஒன்று குருகுலக் கல்வி, மற்றொன்று நமது பாரம்பரிய விவசாயம்.அப்போதைய பிரிட்டிஷ் இந்திய கவர்னரான ராபர்ட் கிளைவ் நம் விவசாய முறையைப் பற்றி நீண்ட விரிவான ஆய்வு செய்தார்.

இந்திய விவசாய முறை பிரிட்டிஷாரைச் சார்ந்திருக்கவும் அவர்களுக்குச் சாதகமாகவும் மாற்ற நினைத்தார். அவருடைய ஆய்வின்படி, இந்தியக் கால்நடைகள், குறிப்பாக, பசுக்கள்தான் நமது விவசாயத்தின் முதுகெலும்பு. பசுக்கள் இல்லை என்றால் இந்திய விவசாயம் அழியும். இப்பசுக்களை அழித்துவிட்டால் விவசாயம் அழிவுப்பாதையை நோக்கித் திரும்பும். அதன் மூலம் ரசாயன உரங்களுக்காகவும், பூச்சிக்கொல்லி மருந்துகளுக்காகவும், ஆங்கிலேயர்களைச் சார்ந்திருக்கும் நிலை ஏற்படும் என உணர்ந்தார்.

நமது பசுக்களின் சாணம் நல்ல சத்தான உரமாகவும், அவற்றின் சிறுநீர் சிறந்த பூச்சிக்கொல்லியாகவும் காலம்காலமாக நம்மால் பயன்படுத்தப்பட்டு வந்தது.
பசுக்கள் அழிந்தால் இந்தியர்கள், உரத்துக்கும், பூச்சிக்கொல்லி மருந்துக்கும் ஆங்கிலேயரைச் சார்ந்து நிற்கும் நிலை உருவாகும் என முடிவு செய்தார்.
இப்படித்தான் ஆங்கிலேய நாட்டின் உரங்கள் இங்கு நுழைந்தன.

நமது பசுக்களின் சாணத்தையும், சிறுநீரையும் பயன்படுத்தி ஒரு ஏக்கருக்கு 54 குவிண்டால் அளவுக்குச் சத்தான அரிசியை நாம் உற்பத்தி செய்தோம்.இதை அறிந்து, 1760-இல் ராபர்ட் கிளைவ், பசுக்களை கொல்லப் பசுவதைக் கூடங்களை (ஸ்லாட்டர் ஹவுஸ்) இந்தியாவில் நிறுவினார். நாளொன்றுக்கு 30 ஆயிரம் பசுக்கள் வீதம் ஒரு ஆண்டில் ஒரு கோடிப் பசுக்களைக் கொன்றார்கள்.

அவர் இந்தியாவை விட்டுச் செல்வதற்கு முன் இதேபோல பல கூடங்களை நிறுவினார். இதன் மூலம் லட்சக்கணக்கான பசுக்கள் உணவுக்காகக் கொல்லப்பட்டன. அக்காலத்தில் பெரும்பாலான பகுதிகளில் நம் மக்கள்தொகையை விட, பசுக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இதன் மூலம் உணவுதானிய உற்பத்தி தடையின்றி நடந்தது. 1910-ஆம் ஆண்டு நம் நாட்டில் 350 பசுவதைக் கூடங்கள் இரவும், பகலும் இயங்கின.

பசுக்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்ததும் நாம் ரசாயன உரத்துக்கு அவர்கள் வாசலை நாடிய நிலை உருவானது. இதன் மூலம் யூரியாவும், பாஸ்பேட் உரங்களும் உள்ளே நுழைந்தன. நம் நாடு சுதந்திரம் அடைந்தபின் பசுமைப்புரட்சி என்ற பெயரில் பெருமளவு ரசாயன உரங்களைப் பயன்படுத்தி உற்பத்தியைப் பெருக்கினோம். அதன் பக்க விளைவுகளை இன்று அனுபவிக்கிறோம்.

ஒருமுறை நிருபர் ஒருவர் இந்த பசுவதைக் கூடங்கள் பற்றி மகாத்மா காந்திஜியிடம் கேட்டபோது, “இந்தியா சுதந்திரம் அடையும் நாளில் அனைத்து பசுவதைக் கூடங்களும் மூடப்படும்’ என்றார். 1929-ஆம் ஆண்டு நேரு ஒரு பொதுக்கூட்டத்தில் பேசுகையில், “நான் இந்தியாவின் பிரதமரானால் இங்குள்ள பசுவதைக் கூடங்களை மூடுவதே என்னுடைய முதல் வேலையாக இருக்கும்’ என்றார். இதில் மிகப்பெரிய சோகம் என்னவென்றால் 1947-க்கு பின் 350 பசுவதைக்கூடங்கள் என்ற நிலையில் இருந்து, 36 ஆயிரம் பசுவதைக் கூடங்கள் என்ற நிலைக்கு இப்போது முன்னேறி விட்டோம். இன்று அதிநவீன இயந்திரங்களால் ஆன வதைக்கூடங்கள் நிறுவப்பட்டு, ஒரு மணி நேரத்தில் பத்தாயிரம் பசுக்கள் என்ற அளவில் வதை செய்யும் திறனுடன் இரவும், பகலும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. சாப்பாட்டுக் கறிக்காகவும், தோலுக்காகவும் லட்சக்கணக்கான பசுக்கள் கொடூரமாகக் கொல்லப்படுகின்றன. தில்லியில் மட்டும் 11 ஆயிரம் பசுவதைக் கூடங்கள் சட்டத்துக்குப் புறம்பாக இயங்குகின்றன, இங்கு மட்டும் நாளொன்றுக்கு இரண்டு லட்சம் பசுக்கள் கொல்லப்படுகின்றன. நமது நாட்டுப் பசுக்களின் இனமே கருவறுக்கப்படும் சூழல் நடந்து கொண்டிருக்கிறது. நமது பாரம்பரிய கால்நடைகள் நல்ல உடல் சக்தியுடன் நோய் எதிர்ப்புத் திறன், வெயிலைத் தாங்கும் சக்தி பெற்றவை. மாபியா கும்பல், அவர்களுடைய லாரி, டிரக்குகளில் நூற்றுக்கணக்கானபசுக்களைச் சந்தைகளில் வாங்கி, வதைக் கூடங்களுக்கு அனுப்பி வருகிறது. இதற்கு போலீஸ் துறையும் உடந்தையாகச் செயல்படுகிறது. வடமாநிலங்களில் துப்பாக்கி முனையில் கால்நடைகள் கிராம மக்களிடமிருந்து பறித்துச் செல்லப்படுகின்றன. விவசாயம் அழிந்து தொழிற்சாலைகளும், நகரமயமாதலும் பெருகி வருகிறது. பெரும்பாலான விவசாய நிலங்கள் பிளாட்டுகளாகவும், வர்த்தகக் கேந்திரங்களாகவும் உருமாறிவிட்டன. கால்நடைகளுக்கு பசுந்தீவனம், வைக்கோல் குறைந்துகொண்டே வருகிறது. மேய்ச்சல் நிலமும் மறைந்து கொண்டே வருகிறது. முந்தைய ஆட்சியில் நிலமற்ற விவசாயிகளுக்கு இரண்டு ஏக்கர் நிலம் திட்டத்தில் இருந்த புறம்போக்கு நிலங்களும் மறைந்துவிட்டன.
விளைநிலம் குறைந்தால் என்ன?

குறைந்த நிலம், அதிக மகசூல் என்ற நோக்கில் அறிவியலார்கள் உள்ளனர். உணவுப்பொருள்களை விளைவிப்பதை விட, இறக்குமதி செய்து கொள்வது எளிது என அரசியல்வாதிகள் கூறுகின்றனர். இதன் பாதிப்புகளை அனுபவிக்கப் போவது வருங்கால சந்ததிகள்தான்.அறிவியலார்கள் மற்றும் பிராணிகள் நல அமைப்பினர்களின்புள்ளிவிவரப்படி நம் நாட்டில் உள்ள 72 மில்லியன் (ஒரு மில்லியன் என்றால் பத்து லட்சம்) உழவு மற்றும் வண்டி மாடுகள், 27 மில்லியன் மெகாவாட் சக்தி அளவுக்கு உடல் உழைப்பை நமக்குக் கொடையாக அளிக்கின்றன. இந்த உழைப்பின் மூலம், அதே அளவு சக்தியை உற்பத்தி செய்ய நிலக்கரி மற்றும் மற்ற மூலப்பொருள்களைச் சேமிக்கின்றன.
இக்கால் நடைகளால் ஓராண்டுக்கு 100 மில்லியன் டன் காய்ந்த சாணம் நமக்குக் கிடைக்கிறது. இதன் மதிப்பு 20 ஆயிரம் கோடி ரூபாய். இச்சாணம் கிடைப்பதால் 50 மில்லியன் டன் விறகு சேமிக்கப்படுகிறது. இதனால் மரங்கள் அதிக அளவுக்கு வெட்டப்படாமல் தவிர்க்கப்படுவதுடன், இயற்கைச் சூழலும் பாதுகாக்கப்படுகிறது.

இந்த 73 மில்லியன் கால்நடைகளும் கறிக்காகவோ, தோலுக்காகவோ கொல்லப்பட்டால் நமக்கு 7.3 மில்லியன் டிராக்டர்கள் தேவைப்படும். இதற்கு 2 லட்சம் கோடி ரூபாய் முதலீடு தேவைப்படும்.அவற்றை இயக்குவதற்கு 2 கோடியே 37 லட்சத்து 50 ஆயிரம் டன் டீசல் தேவைப்படும். இதன் மதிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாய். இந்த அளவு டீசலைப் பயன்படுத்துவதால் காற்று மாசுபாடு மற்றும் புவி வெப்பமயமாதல் அதிகரிக்கும். இயற்கை நமக்குத் தந்த செல்வங்களான, கால்நடைகளைக் கொல்வதன் மூலம் நாம் எவ்வளவு விலையை தந்து கொண்டிருக்கிறோம் என்பதை சிந்திக்கும் ஆற்றல் பெற்றவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.
இன்று ரசாயன உர இறக்குமதிக்காக கோடிக்கணக்கான ரூபாயை பன்னாட்டு கம்பெனிகளுக்கு கொட்டிக் கொடுக்கிறோம். அது மட்டுமன்றி பால் மற்றும் பசு சார்ந்த பொருள்களையும் இறக்குமதி செய்கிறோம். ஒரு நவீன மாடு வதைக் கூடத்திற்கு அதைச் சுத்தம் செய்ய தண்ணீர் அளவு ஒரு நாளைக்கு இரண்டு லட்சம் லிட்டர். இது பல லட்சம் மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும். தண்ணீர் தட்டுப்பாடும், எரிசக்தி தட்டுப்பாடும் உள்ள நம் நாட்டில் இயற்கையின் கொடையாகக் கிடைத்த இந்த கால்நடைச் செல்வங்களைக் கொல்வதை இனிமேலும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டுமா? யோசியுங்கள்!

மாட்டிறைச்சியை நாம் ஏன் சாப்பிட கூடாது?...
மிருதுவான மாட்டிறைச்சியை சாப்பிட்டுள்ளீர்களா?

அது வேறொன்றும் இல்லை. பல நேரங்களில் கர்ப்பமுற்ற பசுக்களை வெட்டும் போது அதன் வயிற்றில் முழுவதும் வளராத கன்றுக்குட்டியின் கறி. அதை தான் நீங்கள் சாப்பிட்டிருக்கிறீர்கள். மிளகாய் பொடி கண்ணில் தேய்கப்பட்டு; மூன்று முதல் ஐந்து நாட்கள் வரை லாரியில் நிற்க வைக்கப்பட்டு, நீரும் புல்லும் மறுக்கப்பட்டு; கூட்ட நெரிசலில் கொம்புகள் குத்தி கண் இழந்து; கால்கள் தளர்ந்து, முறிவுற்று; பின்னர் லாரியில் இருந்து இறக்கப்பட காலில் கயிறு கட்டி இழுக்கப்பட்டு; மண்டையில் சுத்தியல் கொண்டு பலமுறை அடிவாங்கி, இரும்பு கம்பி மூளையில் செலுத்தப்பட்டு; தலைகீழாக தொங்கவிடப்பட்டு; உயிரோடு கழுத்தை அறுத்து...
இதற்கு மேலும் நான் சொல்ல வேண்டுமா?
மாட்டிறைச்சி உடல் சூட்டையும், உடல் துர்நாற்றத்தையும் அதிகரிக்கும்.
உலகளவில் இதய சம்பந்தப்பட்ட நோய்களுக்கு மாட்டிறைச்சியே பிரதான காரணமாக கூறப்படுகிறது. புற்றுநோய்க்கும் வழி வகுக்கிறது. எவ்வளவு வேக வைத்தாலும் மாட்டிறைச்சியிலுள்ள Beef Tapeworm என்னும் புழு பல நேரங்களில அழிக்கப்படுவதில்லை. அதே போல E coli என்னும் கிருமியின் புதிய வகை (new toxic strain); Dioxin எனப்படும் நச்சுப்பொருள்; மனித மூளையை பாதிக்கும் கிருமி என்று ஒரு பெரிய பட்டியலே மாட்டிறைச்சியில் உண்டு.
இயற்கை அன்னை உண்மையிலேயே மனிதர்களுக்கு உணவிற்காக ஒரு விலங்கை கொடுத்திருந்தால் அது கண்டிப்பாக மனித உடலுக்கு இவ்வளவு பாதிப்புகளை கொடுக்காது.

மாடுகளை வதைப்பவர்களை நாம் ஒன்றும் செய்ய முடியாமல் போனாலும், மாட்டிறைச்சியை சாப்பிடுவதன் மூலம் உள்ள தீங்கையும் அதனால் ஏற்படும் உடல் நோய்களையும் பிறருக்கு எடுத்து சொல்லி அதை தவிர்ப்பதன் மூலம் சந்தையில் மாட்டிறைச்சிக்கான வரவேற்பை குறைக்க முடியும் என 

எதிர்பார்த்து காத்திருக்கலாம்...
காலம் பதில் சொல்லட்டும்...
கருணை உள்ளம் உள்ள எல்லோருக்கும் பகிருங்களேன் !
பசுவதை தடுப்போம்!
தேசம் காப்போம்!

பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி


[திருவண்ணாமலை கிரிவலத்தின் சிறப்பைப் பற்றி பகவான் சொல்லும் உண்மைக் கதை இதுதான்.]

கால்கள் இரண்டும் உணர்விழந்து தொங்கிப் போன ஒரு பெரியவர், கவட்டுக் கட்டைகளின் உதவியுடன், நொண்டி நொண்டி கிரிவலம் வந்து கொண்டிருந்தார்.அவர் அதுபோல் அடிக்கடி மலை வலம் வருவது உண்டு. ஆனால் இந்த முறை வழக்கமான உற்சாகமின்றி, மிகுந்த சோர்வுடனும் கலக்கத்துடனும் அந்த மாற்றுத் திறனாளி மலையைச் சுற்றி வந்து கொண்டிருந்தார்.

அதற்குக் காரணம் இருந்தது.பல முறை கிரிவலம் வந்திருந்தாலும் இதுதான் கடைசி முறை என்ற முடிவுக்கு அவர் வந்திருந்தார். ஏன்?
கால்கள் தொய்வுற்ற தான் தன் குடும்பத்திற்கு பாரமாக இருந்து வருவதாக அவருக்குத் தோன்றிற்று. குடும்பத்தினருக்குத் தன்னால் எந்தப் பிரயோஜனமும் இல்லை.அவர்களுக்குச் சிரமம் மட்டும் கொடுப்பது சரியில்லை என்று அவருக்குப் புலனாகவே, பாரமாக இருக்கக் கூடாது என்பதற்காக, அவர்களை விட்டு விலகி, யாரிடமும் சொல்லாமல் கண் காணாமல் ஏதாவது ஒரு கிராமத்துக்குச் சென்றுவிடலாம் என்று அந்தப் பெரியவர் முடிவெடுத்தார்.அதனால் கடைசி முறையாக திருவண்ணா-மலைக்கு கிரிவலம் செய்ய வந்திருந்தார்.

விந்தி,விந்தி சூம்பிய கால்களுடன் பெரியவர் திருவண்ணாமலையை வலம் வந்து கொண்டிருந்தபோது,பாதி வழியில் ஒரு வாலிபன் எதிர்ப்பட்டான்.
பெரியவரை நெருங்கிய வாலிபன், “ஓய், கால் சரியில்லாத நீ கவட்டைக்கட்டையுடன் கிரிவலம் வரவேண்டும் என்று யார் அழுதார்கள்? இப்படி நடந்தால் எல்லாம் நீ மலையைச் சுற்றி வர முடியாது. இதெல்லாம் உனக்குச் சரிப்படாது’’ என்று கூறிக் கொண்டே, எதிர்பாராத ஒரு செயலைச் செய்தான்.

ஆமாம்.அந்தப் பெரியவருக்கு உதவியாக இருந்த கோல்கள் இரண்டையும் வெடுக்கெனப் பிடுங்கித் தூர எறிந்துவிட்டு,அவன் பாட்டுக்குச் சென்றுவிட்டான்.

அந்தப் பெரியவருக்குத் தாங்க முடியவில்லை. கோபம் பொத்துக்கொண்டு வந்தது. வந்தான், திட்டினான், கவட்டைக் கட்டையைப் பிடுங்கினான், தூர எறிந்தான். இப்படியா ஒருத்தன் மனிதாபிமானமே இல்லாமல் இருப்பான்? ஆவேசத்துடன் அவனைத் திட்ட ஆரம்பித்த அந்தப் பெரியவர், ஒரு நிமிடம் தன்னைப் பார்த்தார். உடம்பும் மனமும் சிலிர்த்து, அப்படியே நின்றார்.
ஆமாம்.கால் ஊனம் காணாமல் போய்,கவட்டுக் கட்டைகளின் உதவியின்றி ஜம்மென்று நேராய் நின்று கொண்டிருந்தார் அந்தப் பெரியவர். அந்த இளைஞன் சென்ற திசை நோக்கி அவர் தொழுதார். அவர் கண்களிலிருந்து ஆனந்தம் அலை பாய்ந்தது.

அதற்குப் பிறகு திருவண்ணாமலையை விட்டு அந்தப் பெரியவர் எங்குமே செல்லவில்லை.

இந்த உண்மைச் சம்பவத்தை பக்தர்கள் பலரிடமும் சொல்லியிருக்கிறார் பகவான். இதோ இந்த விரூபாட்ஷி குகையில் பகவான் இருந்த போது நடந்த சம்பவம் இது. அந்தப் பெரியவர் அதற்குப் பிறகு பல்லாண்டுகள் இதே திருவண்ணாமலையில் வாழ்ந்து மறைந்ததைப் பலரும் அறிவார்கள். அருணாசல மலையைச் சுற்றி வருவதால் அத்தனை பலன் உண்டு என்பதைச் சுட்டிக்காட்டவே ரமண மகரிஷி இதைச் சொல்வார்.

ஆனால் இந்த உண்மைக் கதையில் பகவான் சொல்லாத ஒரு விஷயத்தை நான் உங்களுக்குச் சொல்கிறேன். பகவான் கடைசி வரை அதன் க்ளைமாக்ஸைத் தன் வாயால் சொல்லவே இல்லை.
ஆமாம். அது என்ன தெரியுமா?

விரூபாட்ஷி குகையில் பகவான் இருந்த போது அவரது வயது என்ன? 20. கால் சுவாதீனமில்லாத பெரியவரின் ஊன்றுகோலைப் பிடுங்கி எறிந்து குறும்பு செய்தது யார்? ஓர் இளைஞன்.
.
ஆமாம். நம் பகவான் ரமண மகரிஷிதான் அந்த இளைஞன்! எழுதும்போதே மெய் சிலிர்க்கிறது.கால்கள் கொடுத்தவர் பகவான்தான். அவர் செய்யாத அற்புதங்கள் இல்லை.ஆனால் அவர் அதையெல்லாம் சொல்லிக் கொண்டதும் இல்லை.தட்சிணாமூர்த்தியின் அம்சமாயிற்றே. கடவுள் எல்லாம் நன்மைகள் செய்துவிட்டு, தான்தான் செய்தோம் என்று என்றைக்காவது சொல்லியிருக்கிறார்களா என்ன?நம் குரு தேவரும் அப்படித்தான்.

அப்போது என்று இல்லை.இப்போதும் நீங்கள் ரமணாச்ரமம் சென்று பகவானின் சன்னதி முன்னால் நின்று பாருங்கள்.உங்களுக்கு என்ன கிடைக்க வேண்டுமோ அதையெல்லாம் உடனே தருவார் பகவான். இந்த அனுபவத்தை உணர்ந்தவர்கள் ஆயிரம், ஆயிரம்!

கிரிவலம் சென்றால் இத்தனை நன்மை இருக்கிறதே, அப்படி என்னதான் இருக்கிறது அந்தத் திருவண்ணாமலையில்?
ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய!!

Friday, January 8, 2016

சிவவிளையாட்டில்... ‘பொன்மீன்!’



   சோழ தேசத்தில், காவிரிப் பூம்பட்டினமும், நாகபட்டினமும் மிக முக்கிய நகரங்கள்! கப்பல் வாணிபத்தில் வல்லமை பெற்ற நாகப்பட்டினத்தின் கடற்கரை ஓரத்தில் நுழைப்பாடி என்ற கிராமம் இருந்தது. அங்கே, மீன் வியாபாரம் செய்தும் சங்கு, பவழம் முதலான பொருட்களை விற்பனை செய்தும் வாழ்ந்து வந்தனர் பலரும்! இப்படி ஆழ்கடல் வரை சென்று மீன்பிடித்தொழிலை செய்து வந்தவர்களில், அதிபத்தரும் ஒருவர்! வலையில் விழும் முதல் மீன்... சிவனாருக்கு என்று வாழ்ந்து வந்தார் அதிபத்தர்.

அதாவது, கடலில் இருந்து மீன் பிடித்து, கடலிலேயே விட்டுவிடுவார்! இவரின் பக்தியைக் கண்ட சிவனார், அதிபத்தரின் புகழை உலகுக்கு உணர்த்த திருவுளம் கொண்டார்.

  அடுத்தடுத்து வந்தது அதிபத்தருக்கு சோதனை. தினமும் ஆயிரக்கணக்கான மீன்கள் பிடித்தவரின் வலையில், மீன்களே  சிக்கவில்லை. ஒரெயொரு மீன் கிடைக்கும். அதையும் சிவநாமத்தைச் சொல்லி, கடலிலேயே விட்டுவிட்டு, வெறுங்கையுடன் கரை திரும்பினார். இதனால் வியாபாரமில்லை. பெருத்த நஷ்டம். சேர்த்து வைத்த செல்வமெல்லாம் கரைந்தன.

   ஒருநாள்... அதிபத்த நாயனாரின் வலையில், விசித்திரமான ஒரு மீன் கிடைத்தது. சூரிய ஒளியுடன் தோன்றிய அந்தப் பொன் மீன் நவமணிகளால் இழைக்கப்பட்ட  செதில்களைப் பெற்றிருந்தது.  இந்த பொன்மீனைக் கொண்டே இழந்த செல்வத்தை எல்லாம் மீண்டும் பெற்று வறுமை நீங்கி சுபிட்சமாக வாழலாம் என்றார்கள்.

  ஆனால் அதிபத்தர் அதற்கு சம்மதிக்கவில்லை. ‘என் சிவபெருமானுக்கு இன்றைக்கு பொன் மீன் கிடைத்திருக்கிறது’ என்று ஆவல் கொண்டார். பொன் மீனை கடலிலேயே வீசினார். அதிபத்தரின் பக்தி கண்டு அனைவரும் சிலிர்த்தார்கள். அப்போது, வானில் பேரொளி தோன்றியது. சிவபெருமான் பார்வதிதேவியுடன் ரிஷபத்துடன் காட்சி தந்தருளினார்.

மனக்கோயில் கட்டியவருக்கு அருளிய சிவபெருமான்!



  செல்வம் முக்கியமில்லை. மனமும் எண்ணமுமே முக்கியம் என்பதையும் அவருடைய பக்தியையும் உலகுக்கு உணர்த்த விரும்பினார் சிவபெருமான். அவர் மிகச் சிறந்த சிவபக்தர். எண்ணமும் செயலும் எப்போதும் சிவநினைப்பிலேயே இருந்தது. எப்போதும் சிவநாமத்தையே சொல்லிக் கொண்டிருந்தார். அந்த பக்தர்... பூசலார்!

    ஒருநாள் என் சிவனுக்கு ஒரு ஆலயம் கட்டினால் என்ன? என்று தோன்றியது. ஆனால் கையில் காசு இல்லை. செல்வந்தர்களிடம் சிவ பக்தர்களிடம் பொருளுதவி கேட்டார். ஆனால் கிடைக்கவில்லை. இதில் நொந்துபோனார்.   அப்போதுதான் அவருக்கு அந்த யோசனை வந்தது. ஒரு பிரமாண்டமான சிவாலயத்தை, தன் மனதுக்குள்ளேயே கட்டத் துவங்கினார் பூசலார். ஆகம விதிப்படி ஒரு கோயில் எப்படி கட்டவேண்டுமோ அதன்படி, மனதுக்குள் கட்ட ஆரம்பித்தார்.  ஓரிடத்தில் அமர்ந்து கொண்டு, கண்கள் மூடி, சிவனாரை வேண்டி, மளமளவென வேலைகளை மனதுக்குள்ளேயே வேலைகளை முடுக்கிவிட்டார்.  கோபுரம், விமானம், பலிபீடம், கொடிமரம் என பார்த்துப்பார்த்து மனதாலேயே கட்டிய ஆலயத்திற்கு குடமுழுக்கு செய்ய நாளும் குறித்தார் பூசலார்.

  அதே வேளையில்... காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த ராஜசிம்ம பல்லவ மன்னன், சிவனாருக்கு அழகிய, கருங்கல்லால் ஆன ஆலயத்தைக் கட்டி முடித்திருந்தான். கும்பாபிஷேகம் நடத்துவதற்கு நாள் குறித்தான்.

  பூசலார் குறித்த நாளும் மன்னன் குறித்த நாளும் ஒரேநாளாக அமைந்தது. அங்கே... சிவனாரின் திருவிளையாடல் துவங்கியது! மன்னனின் கனவில் தோன்றிய சிவனார், ‘கும்பாபிஷேகத் தேதியை மாற்ற முடியுமா? திருநின்றவூரில் என் பக்தர் ஒருவர் எனக்காக, அழகாக ஒரு கோயில் கட்டியிருக்கிறார். அங்கே நாளைய தினம் கும்பாபிஷேகம். நான் அங்கேதான் இருப்பேன். ஆகவே தேதியை மாற்ற முடியுமா?’’ என்று கேட்டார். 

அதைக் கேட்டு அதிர்ந்தான் மன்னன். ராஜாவான நாம் கட்டிய ஆலயத்தை விட, அந்தக் கோயிலுக்கு முக்கியத்துவம் தருகிறாரே இறைவன் என சிந்தித்தவர், தன் படைகளுடன் திருநின்றவூருக்கு உடனே கிளம்பிச் சென்றான்.

 அங்கே,  அந்த ஊரில் எந்தக் கோயிலும் புதிதாகக் கட்டப்படவில்லை. ஊர்மக்களும் ‘இங்கே யாரும் கோயிலும் கட்டலை’ என்று தெரிவித்தனர். அப்படியே விசாரித்தபடியே வந்தவர், பூசலாரிடம் விஷயத்தைச் சொல்லிக் கேட்க, ‘ஆமாம், கோயில் கட்டி முடித்து, நாளைய தினம் கும்பாபிஷேகம் நடக்கப் போகிறது’ என்றார். அதைக் கேட்டு குழம்பிய மன்னன், ‘அந்த ஆலயம் எங்கே’ என்று கேட்க, தன் நெஞ்சுப் பகுதியைத் தொட்டு, ‘இங்கேதான் இருக்கிறது கோயில்’ என்று, கோயில் கட்டுமானத்தின் முழுப்பணிகளையும் எடுத்துரைக்க... அதிசயித்த மன்னர், பூசலாரின் காலில் விழுந்து வணங்கினார்.

  பூசலாரின் இறைபக்தியை உணர்ந்த மன்னன், அவரது வேண்டுகோளின் படி மனதில் கட்டிய ஆலயம் போலவே திருநின்றவூரில் ஆலயம் எழுப்பினான். பூசலாரும் நாயன்மார்களில் ஒருவரானார்! திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூரில் உள்ள அந்தக் கோயிலின் இறைவன் ஸ்ரீஇருதயாலீஸ்வரர்!

ஸ்ரீநெல்லையப்பர் கோயில்



திருநெல்வேலி பழைய பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில், டவுன் எனும் பகுதியில் உள்ளது நெல்லையப்பர் கோயில். ச்வாமி ஸ்ரீநெல்லையப்பர். அம்பாள் ஸ்ரீகாந்திமதி.

  ஏழை அந்தணர் உலர்த்தியிருந்த நெல், மழையில் நனைந்து விடும் நிலையில், சிவபெருமான் வேலியிட்டுக் காத்தருளினார். எனவே அவருக்கு ஊருக்கு நெல்வேலி என்றும் சிவனுக்கு நெல்லையப்பர் என்றும் பெயர் அமைந்தது. 32 தீர்த்தங்களைக் கொண்ட பிரமாண்டக் கோயில் இது! ஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோர் தேவாரம் பாடிய திருத்தலம்!

மூங்கில் வனமாகத் திகழ்ந்ததால் வேணுவனம் என்றும் வேணுவனநாதர் என்றும் அமைந்தது. உலக மக்களுக்காக உமையவள் தவமிருந்து சிவனருளைப் பெற்றாள் இங்கே. எனவே காந்திமதி அன்னை சக்தி வாய்ந்தவளாகப் போற்றப்படுகிறாள்!

 நெல்லை வேலியிட்டுக் காத்த தலத்தில் வந்து வேண்டினால் நம்மையும் நம் சந்ததியையும் காத்தருள்வார் என்பது ஐதீகம்! கேட்கும் வரங்களை கருணையுடன் தந்தருள்வாள் காந்திமதி என்பது நம்பிக்கை. இந்த ஊரில் பெண் குழந்தை பிறந்தால் காந்திமதி என்று பெயர் சூட்டுவது அதிகம்!

  கோயில் நேரம் :
 காலை 6 முதல் 12.30 வரை.
 மதியம் 4 முதல் இரவு 8.30 வரை.

திருமுடியையே விளக்குத் திரியாக்கியவர்!



  வடவெள்ளாற்றின் தென்கரையில், இருக்குவேளூர் எனும் தலத்தில் மக்களின் பேரன்பைப் பெற்று வாழ்ந்து வந்தார் கணம்புல்ல நாயனார். இவர்,  சிவனருட் செல்வர். சிவபக்தியால், ஈசன் குடிகொண்டிருக்கும் ஆலயங்களுக்கு நெய்விளக்கேற்றுவதற்கான பணிகளை செவ்வனே செய்து வந்தார்.  

கோயில்கோயிலாகச் சென்று, விளக்கேற்றுவதையே வாழ்க்கையாகக் கொண்டவர், கொஞ்சம் கொஞ்சமாக வறுமை நிலைக்கு தள்ளப்பட்டார். ஆனாலும் விளக்கேற்றும் திருப்பணியை விடவில்லை இவர்! நிலங்களையும் வீடுகளையும் மாடுகளையும் விற்று காசாக்கி, அதை எடுத்துக் கொண்டு ஊர் ஊராகச் சென்று, விளக்கேற்றி தொழுதார்.

தில்லை எனப்படும் சிதம்பரத்துக்கு வந்தார். நடராஜர் பெருமானின் அழகில் சொக்கிப் போய் அங்கேயே, அந்த ஊரிலேயே தங்கினார். அருகில் உள்ள ஆலயங்களுக்கெல்லாம் சென்று நெய்விளக்கேற்றி மகிழ்ந்தார். கையில் இருந்து காசு கரைந்தது.

  பிறகு, வனத்துக்குச் சென்று, கணம்புல் எனும் ஒருவகை புல்லை அறுத்து, அதை அப்படியே திரியாக்கி விற்கும் வேலையில் இறங்கினார். ஒருகட்டத்தில் அவை விற்கவே இல்லை. அந்தத் திரிகளைக் கொண்டு, விளக்கேற்றினார். ஆனால் எரிய வைத்த சில விநாடியிலேயே திரி அணைந்தது. இதைக் கண்டு நொந்து அழுதவர், அந்த முடிவுக்கு வந்தார். நிற்காமல் எரியவேண்டும் என்பதற்காக விளக்கில் தன் திருமுடியை, தலையை வைத்தார்.  அவரின் தலையில் மெள்ள மெள்ள தீப்பற்றத் துவங்கியது.

  விளையாட்டு போதும் என முடிவுக்கு வந்த சிவபெருமான், திருப்புலீச்சரம் எனும் தலத்தில் அவருக்கு திருக்காட்சி தந்தருளினார். ஆட்கொண்டார்.
  கணம்புல்ல நாயனார் என்று உலகளவும் சிவபக்தர்களால், போற்றப்படுகிறார்!

ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ணசுவாமி திருக்கோவில், மல்லேஷ்வரம், பெங்களூரு



1902ம் வருடத்தில் பெங்களூரு மல்லேஷ்வரம் பகுதியில் வாழ்ந்த மக்களால் இவ்வாலயம்  கட்டப்பட்டது. மைசூர் மகாராஜா அவரது நிலத்தையும், அதிகபட்ச நன்கொடையையும்  வழங்கினார். பஞ்சராத்திராகம சாஸ்திர விதி முறைப்படி இவ்வாலயம் கட்டப்பட்டது. வேத மந்திரங்கள்,  தமிழ் வேதங்கள் முழங்க இங்கே பூஜைகள், ஆராதனைகள் நடைப்பெறுகின்றன.

நூறு வருடத்திற்கு முன்பு கருங்கல்லால் கட்டப்பட்ட ஆலயம் இது. எல்லா விக்கிரகங்களும் வெவ்வேறு இடங்களிலிருந்து வரவழைக்கப்பட்டது. மூலவரின் சிலை ஆயிரம் வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்தது. திருக்கடலூர் எனும் இடத்தில் ஒரு இடிப்பாடான கோவிலிலிருந்து இச்சிலை கொண்டு வரப்பட்டது.

அம்பேகாலு நவநீத கிருஷ்ணர் திருக்கோவில், தோட்ட மல்லூர், கர்நாடகா



பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் கிருஷ்ணர் குழந்தை வடிவில் தவழ்ந்தப்படி காட்சி அளிக்கிறார். அதோடு, ஒரு கையில் வெண்ணை உருண்டையை(நவநீதம்) என்தியப்படி அறிய காட்சி தருகிறார். இந்த ஆலயத்தின் மூலவர் ஸ்ரீ அப்ரமேய சுவாமி மற்றும் ஸ்ரீ அரவிந்தவல்லி தாயார் ஆவர்.

கர்நாடக சங்கீதத்தின் தந்தை என்று போற்றப்படும் ஸ்ரீ புரந்தரதாசர் இந்த நனவீத கிருஷ்ணரை போற்றி 16ம் நூற்றாண்டில் "ஜகதோதாரணா"என்ற புகழ்பெற்ற பாடலை பாடினார்.

குழந்தை வரம் வேண்டும் தம்பதிகள் இங்கே நவநீத கிருஷ்ணருக்கு வெண்ணை காப்பு சாற்றுவார்கள். பிறகு வெண்ணையை பிரசாதமாக பெற்றுகொள்வார்கள்.

காரையாறு ஸ்ரீசொரிமுத்தையனார் கோயில்



  நெல்லையில் இருந்து அம்பாசமுத்திரம், பாபநாசம் வழியே செல்லும் பாதையில், சுமார் 70 கி.மீ. தொலைவில் உள்ளது காரையாறு எனப்படும் சிங்கம்பட்டி. பொதிகைமலையில் அமைந்துள்ள அற்புதமான ஆலயம் இது!

   வணிகர்கள், பொருட்களை மாட்டு வண்டிகளில் ஏற்றிக் கொண்டு செல்லும் போதெல்லாம், வழியில் உள்ள பாறை ஒன்றில் குளம்படி பட்டு, ரத்தம் பெருகியது. இது ஒவ்வொரு முறையும் தொடர்ந்து நிகழ... எல்லா வணிகர்களும் அந்த இடத்துக்கு வந்து என்னவாக இருக்கும் என யோசித்தனர். அப்போது, குருதி வருகிற பாறைக்குக் கீழே மகாலிங்க சுவாமி இருக்கிறார். அவருக்கும் கூடவே சொரிமுத்தையன், சங்கிலிமாடன், பிரம்மராட்சஷி முதலானவர்களுக்கும் சிலை அமைத்து வழிபடுங்கள்’ என அசரீரி கேட்டது. அதையடுத்து, இங்கே ஆலயம் அமைத்து வழிபடலானார்கள் என்கிறது ஸ்தல வரலாறு.

  சிவ பார்வதியின் திருமணத்தின் போது, தேவர்கள், முனிவர்கள், ரிஷிகள் என அனைவருக்கும் வடக்கே வந்து சேர, அதனால் தெற்கு தாழ்ந்தது. இதை சமன் செய்ய, சிவபெருமான் அகத்திய முனிவரை அங்கே அனுப்பினார். இங்கே, இப்போது கோயில் உள்ள இடத்தில் தங்கி, நித்ய அனுஷ்டானங்களைச் செய்தார் அகத்தியர். அப்போது சாஸ்தாவான அய்யனார், இங்கு சூட்சும வடிவில் இருப்பதை உணர்ந்தார். அவரையும் சேர்த்து வணங்கினார். அப்போது, அங்கே வானில் இருந்து மலர் சொரிந்தது. இதனால், மலர் சொரி முத்தையனார் என பெயர் அமைந்ததாக புராணம் தெரிவிக்கிறது.

  சக்தி வாய்ந்த அய்யனார். இங்கு வந்து வேண்டிக் கொண்டால், கேட்டது கிடைக்கும். நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம்!

  கோயில் நேரம் :
  காலை 6 முதல் 10 மணி வரை.
  மாலை 5 முதல் 7 மணி வரை.

அனுமனை வணங்கினால் சனீஸ்வர பயமில்லை!



  இலங்கைப் போரின்போது, இந்திரஜித்தின் அஸ்திரத்தால் மயங்கி வீழ்ந்து உயிருக்குப் போராடிய லட்சுமணனையும் வானர சேனைகளையும் காப்பாற்ற, அனுமன் சஞ்ஜீவி மலையைப் பெயர்த்தெடுத்து வந்தார். அப்போது, ராவணனின் ஆணைக்கு இணங்க, அப்போது அவனுடைய கட்டுப்பாட்டில் இருந்த சனி பகவான், அனுமனைத் தடுத்து நிறுத்த முற்பட்டார்.

   தன்னை வழிமறித்த சனியிடம், ‘‘போர்க்களத்தில் மலையைச் சேர்த்து விட்டுத் திரும்பும்போது நாம் பலப்பரீட்சை செய்யலாம். இப்போது வேண்டாம்’’ என்றாராம் அனுமன். ஆனால் சனி, அனுமனின் வேண்டுகோளை ஏற்கவில்லை. ஆவேசத்துடன் அனுமன் மீது பாய்ந்தார். இதனால் கோபம் கொண்ட அனுமன், சனியைத் தன் காலில் சுற்றிக் கட்டிக்கொண்டு போர்க்களத்தை நோக்கிப் பறந்தாராம். பிறகு, அவர் மீண்டும் அதே இடத்துக்குத் திரும்பி வந்து, சனி பகவானுக்கு விமோசனம் தந்ததாக புராணம் உண்டு!

 விமோசனம் பெற்ற சனிபகவான், ‘இனி தங்களை வணங்கும் அடியார்க்கு என்னால் பாதிப்பு இருக்காது’ என்று வாக்கு தந்தாராம். இங்கே அனுமன் நின்ற இடத்தில்தான் தற்போது கோயில் அமைந்திருக்கிறது.

  தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ளது ஹனுமந்தன்பட்டி. இங்கே, சுரபி நதிக்கரையில் கோயில் கொண்டிருக்கிறார் சனிபந்தன ஹனுமந்தராயப் பெருமாள். மிகுந்த வரப்பிரசாதி இவர்!

நவகாளி கலவரம்


வங்காளத்தின் தலைநகரான கல்கத்தாவில் 1946 ஆகஸ்ட் 16 சாதரணமாகத்தான் விடிந்தது. முஸ்லிம் லீக் உறுப்பினர்கள் தெருக்களில் திரண்டு, ஹிந்துக்களும் சீக்கியர்களும் திறந்து வைத்திருந்த கடைகளை மூடுமாறு வற்புறுத்தத் தொடங்கினார்கள். பாகிஸ்தான் கோரிக்கையை நாங்கள் ஆதரிக்கவில்லை. அதனால் நாங்கள் கடையை மூட வேண்டிய அவசியம் இல்லை என்று ஹிந்து, சீக்கிய வியாபாரிகள் வாதித்தனர். உடனே கடைகளை நோக்கிக் கல் வீச்சு தொடங்கியது. வெகு விரைவில் அது ஹிந்துக்களையும் சீக்கியர்களையும் திட்டமிட்டுத் தாக்கும் கலவரமாக உருவெடுத்தது. எப்படியும் நேரடி நடவடிக்கை தினம் ஹிந்துக்களையும் சீக்கியர்களையும் தாக்குவதில் முடியும் என எதிர்பார்த்த வங்காளிகளும் சீக்கியர்களும் முன்னெச்சரிக்கையுடன் இருந்ததால் பதில் தாக்குதல் நடத்தி நிலைமையைச் சமாளித்தார்கள். ஆனால் அரசே முகமதியர் பக்கம் இருந்ததாலும் பாதுகாப்பு கிட்டாததாலும் ஹிந்துக்களும் சீக்கியர்களும் அதிக அளவில் உயிர்ச் சேதமும், பொருள் சேதமும் அடைய நேரிட்டது.

ஒரே நாள் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நேரடி நடவடிக்கை ஹிந்துக்களையும் சீக்கியர்களையும் கொன்று குவிப்பதற்கு வசதியாக நாலைந்து நாட்கள் நீடித்தது. ஆக்ரோஷமிக்க வங்காளிகளும் சீக்கியர்களும் சளைக்காமல் பதில் தாக்குதல் நடத்தினார்கள். ஆனால் திட்டமிட்டு வந்திரு ந்த உள்ளூர் வெளியூர் கும்பல்களின் கைதான் மேலோங்கியிருந்தது. எனினும் வைசிராய் வேவலுக்குக் கலவரம் குறித்து அறிக்கை அனுப்பிய சுரவர்த்தி அரசு, முகமதியர் தரப்பில்தான் அதிகச் சேதம் எனத் தெரிவித்தது! வங்காளத்தின் ஆங்கிலேய கவர்னர் இரு தரப்பினரிடையிலான மோதலில் வெள்ளையருக்குப் பாதிப்பு வந்துவிடலாகாது என்பதற்காக ராணுவத்தின் பாதுகாப்பு வெள்ளையருக்குக் கிடைக்கச் செய்வதிலேயே கவனமாக இருந்தார். சுரவர்த்தி அறிக்கையின் நம்பகத் தன்மை குறித்து அவர் கவலைப்படவில்லை. வைசிராய் வேவல், சுரவர்த்தியின் அறிக்கையை அப்படியே நகல் செய்து பிரிட்டிஷ் அரசின் இந்தியா மந்திரிக்கு அனுப்பிவைத்தார்!

கல்கத்தாவில் கலவரம் அடங்கத் தொடங்கியதும், வங்காளத்தின் பிற பகுதிகளுக்கு அது பரவத் தொடங்கியது. முக்கியமாக முகமதியர் அதிக எண்ணிக்கையில் வாழும் இடங்களில் அது வேகம் எடுத்தது.

கிழக்கு வங்காளத்தின் நவகாளி மாவட்டத்திற்கு இவ்வாறாகத்தான் கலவரம் போய்ச் சேர்ந்தது. முஸ்லிம் லீக் அறிவித்த ஒரே நாள் நேரடி நடவடிக்கை தினம் ஆகஸ்ட் 16. ஆனால் நவகாளியில் அதைச் சாக்கிட்டு அக்டோபர் மாதம் ஹிந்துக்கள் மீதான தாக்குதல் தொடங்கியது.

அன்றைய நவகாளி மாவட்டத்தில் எழுபது சதம் முகமதியர், முப்பது சதமே ஹிந்துக்கள். கிறிஸ்தவர்கள் அன்று அங்கு இல்லையென்றே சொல்லிவிடலாம். அது ஒரு வெறும் விவசாய பூமி. மாட்டு வண்டி போக்குவரத்துகூடச் சொற்பம். படகுப் பயணம் அதிகம். எண்பது சத நிலம் ஹிந்து நிலச் சுவான்தார்கள் வசம் இருந்தது. ஆனால் முப்பது சத ஹிந்துக்களும் அவற்றுக்குச் சொந்தம் என்று எண்ணிவிடக் கூடாது. நிலப் பிரபுக்களின் எண்ணிக்கை குறைவுதான். மக்களில் பெரும்பாலானவர்கள் குத்தகைதாரரும் விவசாயக் கூலிகளும்தாம். உப தொழில்கள் செய்வோர் இரு சமயத்தவரிலும் இருந்தனர். பொதுவாக மாவட்டத்தில் முகமதியர் பெரும்பான்மையினராக இருப்பினும் பல கிராமங்களில் ஹிந்துக்கள் கூடுதலாகவும் சில இடங்களில் சரிசமமாகவும் இருந்தனர். ஹிந்து விவசாயக் கூலித் தொழிலாளரில் தலித்துகளே கூடுதல்.

அக்டோபர் மாத மையத்தில் நவகாளி மாவட்ட முகமதியர் ஹிந்துக்கள் மீதான தமது தாக்குதலைத் தொடங்கினார்கள். மாவட்டத்தில் ஹிந்துக்களை இன அழிப்புச் செய்துவிடுவதே அவர்களின் நோக்கமாக இருந்தது.

வங்கப் பெரும் பஞ்சம் என்று பெயர் பெற்ற, 1943 ல் நிகழ்ந்த கொடிய பஞ்சத்தின்போது நவகாளி நிலச் சுவான்தார்கள் ஹிந்து, முகமதியர் என வேறுபாடு பாராமல் ஏழை விவசாயத் தொழிலாளர் அனைவரிடமுமே நிர்த்தாட்சண்யமாகத்தான் நடந்துகொண்டார்கள். ஆனால் முகமதிய விவசாயத் தொழிலாளர்கள் சமயத்தின் அடிப்படையில் நிலச் சுவான்தார்கள் மீது தாக்குதலைத் தொடங்குமாறு தூண்டிவிடப்பட்டனர். அது விரைவில் ஹிந்துக்கள் அனைவர் மீதுமான தாக்குதலாக விரிவடைந்தது. தலித்துகளின் சேரிகள் கூடத் தீக்கிரையாக்கப் பட்டன!
 
வழக்கம் போல ஹிந்துக்களில் ஆண்கள் கொடூரமாகக் கொல்லப்படுவதும் பெண்கள் பாலியல் கொடுமைக்கு இலக்காவதும் தொடர்ந்தது. கொல்லப்பட்ட ஆண்களின் மனைவிமார் வலுக்கட்டாயமாக முகமதியராக மத மாற்றம் செய்யப்பட்டு பலவந்த மணம் செய்விக்கப்பட்டனர்.

நவகாளியில் ஹிந்துக்கள் மீதான படுகொலைத் தாக்குதல் நடந்துகொண்டிருந்தபோது காந்திஜி கல்கத்தாவில்தான் இருந்தார். அங்கு அவர் சமரசப் பணிகளைச் செய்து கொண்டிருந்த போது நவகாளியில் ஐம்பதாயிரத்திலிரிருந்து எழுபதாயிரம் வரையில் ஹிந்துக்கள் கொல்லப்பட்டுவிட்டனர். அன்று நவகாளி மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை இருபது முதல் இருபத்தைந்து லட்சம் வரை. அக்டோபர் மாதம் முழுவதும் முகமதியரின் தாக்குதலுக்குப் பலியான பிறகு வெளி மாவட்ட ஹிந்துக்களின் துணையோடு நவகாளி மாவட்ட ஹிந்துக்கள் சுதாரித்துக் கொண்டு பதிலடி கொடுக்கத் தயாரானபோது, பிரதமர் சுரவர்த்தியின் வேண்டுகோளுக்கு இணங்க நவம்பர் மாதம் 6 ஆம் தேதி நவகாளி வந்து சேர்ந்தார், காந்திஜி. கிராமம் கிராமமாகப் பாத யாத்திரை சென்று ஹிந்துக்களை சமாதானப் படுத்தலானார்.

முகமதியர் தாக்கினாலும் ஹிந்துக்கள் திருப்பித் தாக்கலாகாது. அஹிம்சையே ஹிந்துக்களின் ஆயுதம். முகமதியரால் வன்புணர்ச்சிக்கு ஆளான பெண்களை ஹிந்து இளைஞர்கள் மணம் செய்துகொள்ளவேண்டும். வலுக்கட்டாயமாக முகமதியராக மதம் மாற்றப்பட்டவர்கள் விரும்பினால் திரும்பவும் ஹிந்துக்களாகிவிடலாம். அவர்களை ஹிந்துக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். இவையெல்லாம் காந்திஜி மக்களுக்குச் சொன்ன அறிவுரைகள். தினமும் மாலையில் பிரார்த்தனை கூட்டம் நடத்தி சர்வ சமய வேதங்களை ஓதச் செய்வார். குறிப்பாகக் குரானிலிருந்து அதிக வரிகள் படிக்கச் செய்து முகமதியரை அமைதி வழிக்குத் திருப்ப முயற்சி செய்வார்.

பிரார்த்தனைக் கூட்டங்கள் நடக்கும்போது முகமதியர் ஓரமாக நின்று கேட்டுவிட்டுக் கூட்டம் முடிந்ததும் சென்றுவிடுவார்கள். ஹிந்துக்கள் மட்டும் கலைந்து செல்லாமல் பழி கிடப்பார்கள். காந்திஜி எழுந்து செல்லும்போது அவர் பின்னாலேயே பய பக்தியுடன் செல்வார்கள்!
 
நவகாளியில் மக்களை அமைதிப்படுத்த வந்த காந்திஜியோடு இருந்த குழுவினருள் திருமணமாகாத ஒரு முகமதியப் பெண்ணும் இருந்தார். முகமதியர் அதிக எண்ணிக்கையில் இருந்த நவகாளி கிராமத்திற்கு அவர் சென்று மக்களைச் சந்தித்தபோது ஹிந்துக்கள் தமது வழிபாட்டுத் தலத்தில் பூஜை செய்து வந்த வாளை முகமதியர் கைப்பற்றிச் சென்றுவிட்டதாகத் தெரிய வந்தது. உடனே அந்த வாள் எங்கு இருந்தாலும் அதனை முகமதியர் ஹிந்துக்களிடம் திருப்பிக் கொடுத்து விட வேண்டும் என்று அந்த முகமதியப் பெண் கேட்டுக் கொண்டார். ஆனால் அந்த வாள் ஹிந்துக்களிடம் ஒப்படைக்கப்பட வில்லை. முகமதியப் பெண் தமது கோரிக்கையை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கிவிட்டார்.

நவகாளியில் முகமதியரைத் தமது கோரிக்கையை ஏற்கச் செய்வதற்காக ஒரு முகமதியப் பெண் உண்ணாவிரதம் தொடங்கினார்! அது இன்றைய காலை உணவுக்குப் பிறகு மாலைவரை மட்டுமே நடக்கும் அடையாள உண்ணாவிரதம் அல்ல. கோரிக்கை ஏற்கப்படும் வரையிலான தொடர் உண்ணாவிரதம்.

முகமதியர் மனம் மாறும் வரை உண்ணாவிரதம் தொடங்கிய முகமதியப் பெண்மணியின் பெயர் அம்துஸ் ஸலாம். அம்துஸ் உண்ணாவிரதம் நீடித்ததேயன்றி ஹிந்துக்களின் பூஜைக்குரிய வாள் வந்து சேர்ந்தபாடாயில்லை. அம்துஸ் திரும்பத் திரும்பத் தமது கோரிக்கையை வலியுறுத்தினார். அம்துஸ் உண்ணாவிரதம் இருப்பதை அறிந்து காந்திஜி அங்கு வந்துவிட்டார். அதன் பிறகு முகமதியர் குற்ற உணர்வுடன் ஓர் உண்மையை வெளியிட்டனர்.
 
வாளைத் திரும்பக் கொடுப்பது சாத்தியமில்லை. ஏனென்றால் ஆத்திரத்தில் ஒரு குளத்தில் அது வீசி எறியப்பட்டுவிட்டது. அதைக் கண்டெடுப்பது இயலாத காரியம். இதை அறிந்த பின் அம்துஸ்ஸுக்கு வேறு வழி தெரியவில்லை. பிற சமயத்தவரின் வழிபாட்டு சுதந்திரத்தில் இனி தலையிடுவதில்லை என வாக்குறுதியளிக்கும் ஒப்புதல் கடிதம் எழுதி முகமதியர் அனைவரிடமும் அதில் கையொப்பமிடச் செய்து தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார், அம்துஸ் ஸலாம்.

அறிவுத் தெளிவுடன் துணிவும் மிக்க அந்த முகமதியப் பெண்மணியின் பெயர் நமது சரித்திரப் புத்தகத்தில் தேடினாலும் கிடைக்காது. அதனால் அவருக்கு என்ன நஷ்டம்? இழப்பெல்லாம் நமக்குத்தான். இந்தச் சந்தர்ப்பத்தில் அவருக்குத் தலை வணங்குவோம். காந்திஜி தமது ஹரிஜன் பத்திரிகையில் அம்துஸ் பற்றி எழுதியிருக்கிறரா என்று எனக்குத் தெரியாது. ஆனால் காந்திஜியின் நவகாளி யாத்திரை பற்றிச் செய்தி சேகரிக்க உலகின் பிரபல பத்திரிகைகளிலிருந்தெல்லாம் நிருபர்கள் வந்திருந்தனர். அவர்களில் அமெரிக்காவின் ஷிகாகோ டெய்லி நாளிதழின் தெற்கு ஆசிய நிருபர் பிலிப்ஸ் டால்போட் நவகாளி பற்றிய உண்மைத் தகவல்கள் பலவற்றையும் தெரிவித்ததோடு இந்தச் செய்தியையும் பதிவு செய்திருக்கிறார்.

காந்திஜியின் வருகைக்குப் பிறகு நவகாளியில் கலவரம் ஓயலாயிற்று என்ற போதிலும் அதற்குள் இன அழிப்பு என்று சொல்லும் அளவுக்கு மாவட்டத்தில் ஹிந்துக்கள் கொல்லப்பட்டுவிட்டிருந்தனர். ஹிந்துக்கள் கூடுதலாக உள்ள கிராமங்களில் முகமதியரைத் திருப்பித் தாக்குவது தவிர்க்கப் படுவதற்கே காந்திஜியின் நவகாளி யாத்திரை பெரிதும் பயன்பட்டது. அக்டோபர் மத்தியில் நவகாளியில் முகமதியர் தொடங்கிய இனக் கலவரத்தை அடக்கக் கல்கத்தாவிலிருந்து நவம்பர் 6 ஆம் தேதிதான் காந்திஜியால் நவகாளி செல்ல முடிந்திருக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும். கல்கத்தாவில் 1947 தொடக்கத்தில் காந்திஜி உண்ணாவிரதம் இருந்ததும் தேசப் பிரிவினையைத் தம்மால் தவிர்க்க இயலவில்லை என்ற வேதனையில் சுய தண்டனையாக மேற்கொண்டதுதான். மேலும் பழி தீர்க்கமாட்டோம் என ஹிந்துக்களிடம் உத்தரவாதம் பெறுவதற்காகவும் அவர் உண்ணா விரதம் இருந்தார். பாகிஸ்தான் கோரிக்கையை முகமதியர் கைவிட வேண்டும் என்பதற்காக அவர் உண்ணாவிரதம் இருந்ததில்லை. ஏனெனில் உண்ணாவிரதம் என்கிற தமது வலிமை மிக்க ஆயுதம் முகமதியரிடம் செல்லுபடியாகாது என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார். அதேபோலத் தமது அஹிம்சைப் போராட்டம் ஆங்கிலேயரை மட்டுமே வழிக்குக் கொண்டுவரும் என்பதைத் தாம் அறிந்திருப்பதாக அவரே ஒப்புக் கொண்டிருக்கிறார். மனிதாபிமானம் சிறிதும் இல்லாத போர்த்துக்கீசியர், ஸ்பானியர்கள் போன்ற ஐரோப்பியர் அதைப் பொருட்படுத்தியிருக்க மாட்டார்கள் என அவர் அறிந்திருந்தார்.


-மலர்மன்னன்

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...