Monday, August 22, 2016

அறமற்ற துறையினால் சிக்கி சீரழியும் கோயில்கள்


பொதுவாக வருமானம் வரும் கோயிலில் தான் அறமற்ற துறை கால் பதிக்கும். அந்தக் கோயிலை தன் வசம் எடுத்துக்கொள்ளும். ஆள் நடமாட்டம் இல்லாத கோயிலுக்குள் அறமற்ற துறை நுழைவதில்லை.

கோயில் உண்டியலிலேயே குறியாக இருக்கும் அறமற்ற துறை உண்டியலில் குவியும் பணத்தில் 10% கோயில் பணிகளுக்கு செலவிடுகிறது. ஏனைய வருமானத்தை இதர செலவுகளுக்கு பயன்படுத்துகிறது. உதாரணமாக, கோயில் செயல் அலுவலருக்கு ஜீப் வாங்குவது, மடிக்கணினி வாங்குவது, அமைச்சர்களின் தனிப்பட்ட உதவியாளர்களுக்கு கார் வாங்குவது, அரசாங்கத்தின் இதர செலவுகளுக்கு என கோயில் வருமானம் பயன்படுத்தப்படுகிறது. நித்தம் கோயிலில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர்களுக்கு உண்டியலிலிருந்து பங்கு கொடுக்கப்படுவதில்லை.

தான் எடுத்துக்கொண்டு கோயில்களை சீர்படுத்துகிறேன் பேர்வழி என்று நம்முடைய புராதன சின்னங்களையும், கலை பொக்கிஷங்களையும் அழித்துவிடுகிறது அறமற்ற துறை. கிடைத்தக்கறியா சிற்பங்களும், நுட்பமான வேலைப்பாடுகள் அடங்கிய பொருட்களும் கோயில்களிலிருந்து களவாடப்படுகின்றன. கோயில் புணர் நிர்மானம் என்ற வகையில் அறமற்ற துறை டெண்டர்கள் விட்டு பல கோடிகளை சம்பாதிக்கிறது. சாமியை பார்க்க தனி கியூ அமைத்து அதற்கு சீட்டு விற்று அதில் பணம் சம்பாதிக்கிறது. கோயிலுக்கு சொந்தமாக நம் முன்னோர்கள் எழுதி வைத்த லட்சக்கணக்கான நிலங்களை அறமற்ற துறை ஏனையோர்களுடன் சேர்ந்து ஆட்டையை போடுகிறது.

பல கோயில் நிலங்கள் ரியல் எஸ்டேட் நிலங்களாக மாறியிருக்கின்றன/மாறிவருகின்றன. பல சந்தர்ப்பங்களில் கோயில் நிலங்கள் சர்ச் கட்டுவதற்கும், மசூதி கட்டுவதற்கும் வழங்கப்பட்ட அவலங்களும் நடந்தேறி உள்ளன. கோயில் நிலத்தில் மாற்று சமூகத்தினர் கடைகள் அமைக்கின்றனர். ஆனால் அதற்கு அவர்கள் வாடகை ஏதும் தருவதில்லை. வாடகைக்கு விடப்பட்ட கோயில் சொத்துக்களிலிருந்தும் கோயிலுக்கு வருவாய் ஏதும் வருவதில்லை. கோயில்களுக்கு வராத வாடகை கோடிக்கணக்கில் இருக்க அறமற்ற துறை அதை வசூலிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லை.

நம்முடைய வீட்டையோ, சொத்தையோ மற்றவர் ஆக்கிரமித்தால் நாம் உடனே வழக்கு தொடர்கிறோம், நம்முடைய சொத்தை மீட்கிறோம். ஆனால் கோயில் சொத்துக்கள் ஆக்கிரமிக்கப்படும்போது அது நம்முடைய கவனத்திற்கு வருவதில்லை. அப்படியே வந்தாலும் நாம் அதை கண்டு கொள்வதில்லை. அரசியல் குண்டர்கள் தலையீடு இருக்கு நமக்கேன் வம்பு என்று நாம் ஒதுங்கிவிடுகிறோம். இது அறமற்ற துறையின் அராஜகங்களுக்கு வலிமை சேர்க்கிறது.

தன்னுடைய வரவு செலவு கணக்குகளை தானே தணிக்கை செய்யும் அதிகாரத்தைப் பெற்ற ஒரு அதிசய அரசுத்துறை உலகில் உண்டெனில் அது அறமற்ற துறைதான்.

இவ்வளவு பணத்தை கொள்ளையடிக்கும் அறமற்ற துறை பொது மக்களுக்கு என்று எந்த வசதியையும் கோயில்களில் செய்து தருவதில்லை. அறமற்ற துறையின் நிர்வாகத்தில் இருக்கும் பெரும்பான்மையான கோயில்கள் சரியாக பாராமரிக்கப்படுவதில்லை.

அறமற்ற துறையின் கிடுக்கிப்பிடியிலிருந்து என்று நம்முடைய கோயில்கள் விடுபடுமோ அன்றுதான் நம்முடைய தர்மம் தழைத்தோங்கும்.

நாம் நம் கோயில்களையும், தர்மத்தையும் காக்க வேண்டுமென்றால் கோயில்களில் காணிக்கை செலுத்தக்கூடாது. மாறாக அர்ச்சகர் தட்டில் காணிக்கை செலுத்தலாம். சாமிக்கு நெய்வேத்தியத்திற்கு ஏற்பாடு செய்யலாம். உண்டியலில் மட்டும் காசு போடக்கூடாது. மகரந்தம் இருக்குமவரை தான் தேனீக்கள் பூக்களை அண்டும். அதேபோல் உண்டியலில் காசு விழும் வரைதான் அறமற்ற துறை கோயில்களை தன் கைவசம் வைத்திருக்கும். அறமற்ற துறையின் கட்டுபாட்டில் இருக்கும் வரையில் கோயில்களுக்கு விமோச்சனம் இல்லை. எனவே ஹிந்து சகோதரர்கள் இது குறித்து சிந்திப்பீர், செயல்படுவீர்.

நீலகண்ட பிரம்மச்சாரி


ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்தவர். திருநெல்வேலி மாவட்ட கலக்டர் ஆஷ் கொலை வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டவர். நீதிமன்றம் தண்டனை விதித்த போது நீலகண்ட பிரம்மசாரிக்கு வயது 21. ஏழாண்டுகள் கடுங்காவல் தண்டனை முடிந்த பிறகு, நீலகண்ட பிரம்மச்சாரி 1919 ஆம் ஆண்டு விடுதலையானார். 

       விடுதலையான பிறகும் கூட, அவர் ஆங்கிலேயர்களுக்கு எதிராக தன்னுடைய நடவடிக்கைகளை தொடர்ந்தார். இதன் பொருட்டு, நீலகண்ட பிரம்மச்சாரி 1922 ஆம் ஆண்டு மறுபடியும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் 8 ஆண்டுகள் கழிந்து 1930 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார். 

          அதன் பின்னர் உலக வாழ்கையில் நாட்டமில்லாமல் துறவியானார். தேசம் முழுவதும் சுற்றித் திரிந்தார். 1936 ஆம் ஆண்டு மைசூரில் உள்ள நந்தி மலையில் ஆஸ்ரமம் அமைத்து தங்கினார். சுற்றியிருந்த ஏழை எளியவர்களுக்கு உதவி செய்து வந்தார். ஆன்மீகத்தில் கவனம் செலுத்தினார். நீலகண்ட பிரம்மச்சாரி, சத்குரு ஒம்கார் என்று அழைக்கப்பட்டார். அவர் தன்னுடைய 89வது வயதில் மரணமடைந்தார். 

          கம்யூனிஸ்டாக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, பெரிய மகானாக இருந்து சமாதி அடைந்தார்.

Saturday, August 20, 2016

கோயிலுக்குள் நுழையும் முன்

கோயிலின் நுழை வாயிலில் குறுக்காக இருக்கும் படிக்கட்டின் மேல் நின்று செல்லாமல் அதனை தாண்டி செல்ல வேண்டும் என்று பெரியவர்கள் கூறுகிறார்களே ..ஏன் தெரியுமா?

• ஒரு கோயிலுக்குள் நுழையும் முன் முதலில் நமது பாதத்தை கழுவ வேண்டும் ..

• பின் கால், கை ஆகியவைகளை கழுவிய பின் சில துளிகளை எடுத்து தலையை சுற்றி வட்டமிட்டு தெளித்து கொள்ள வேண்டும் ...

• இதன் மூலம் நம் உடலை தயார் படுத்திகொண்டு முதலில் கோபுரத்தையும் அதில் உள்ள கலசங்களையும் பார்த்து வணங்க வேண்டும் ...

• பின்னர் வாயிற்காப்போர்கள் ஆன துவாரபாலகர்களின் அனுமதியை வாங்கிகொண்டு உள்ளே செல்ல வேண்டும்

• உள்ளே செல்லும் முன் அங்குள்ள வாயிற்படியை கடந்து செல்ல வேண்டும் ..

• அந்த படியை தாண்டும் போது, " நான் கொண்டு வந்த எதிர்மறை வினைகள், எதிர்மறை எண்ணங்கள், கெட்ட செயல்கள், கவலைகள் எல்லாவற்றையும் இங்கேயே விட்டு உள்ளே செல்கின்றேன்..

• இனி ஆண்டவனின் கருணையுடன் கூடிய ஆசிர்வாதமும், நேர்மறை ( நல்ல ) வினைகளுமே எனக்கு கிடைக்க வேண்டும் ஆண்டவா " என்று கும்பிட்டவாறே அந்த படியை தாண்ட வேண்டும் ...

• அந்த படியின் மேல் நின்று கடந்தால் நாம் அவற்றை கூடவே உள்ளே எடுத்து செல்வதாக அர்த்தம் ...

• ஒரு கோயில் என்பது நாள் முழுவதும் கூறப்படும் மந்திரங்களாலும், நாதஸ்வரம், கெட்டி மேள சத்தங்களாலும், பேசப்படும் மங்களகரமான வார்த்தைகளாலும், முழுதும் நேர்மறை எண்ணங்களாலேயே நிரம்பியிருக்கும் ...

• எனவேதான் கோயிலுக்கு சென்று அந்த நேர்மறை எண்ணங்களை பெற்று உயர்வுடன் வாழுங்கள் என்று வாழ்த்துகிறோம் .

வானூர்தி குறித்து கம்பர்




1000 ஆண்டுகளுக்கு முன்னரே, வானூர்தி எப்படி பறக்க வேண்டும் என்று கம்பர் தன் கம்பராமயணத்தில்குறித்து இருக்கிறார். இது உண்மையில் வியப்பான ஒன்று தான்.ஏனென்றால் ஆரம்பத்தில் மேலை நாடுகளில் வானூர்திகள் உருவாக்கப்பட்ட போது, அதை எப்படி பறக்க வைப்பது என்று தெரியாமல் நிறைய பேர் மாண்டு போனர். சிலர், மலைகளின் உச்சியில் ஏறி அங்கிருந்து குதித்து பறக்க வைக்க முயன்றனர்.ஆனால், 1000 ஆண்டுகளுக்கு முன்னர் வானூர்தி எப்படி பறக்க வேண்டும் என்று கம்பர் குறித்திருக்கிறார். ”மண்ணின் மேல்அவன் தேர்சென்ற சுவடு எல்லாம் ஆய்ந்துவிண்ணில் ஓங்கிய ஒருநிலை மெய்யுற வெந்தபுண்ணில் ஊடுஒரு வெல்என மனம்மிகப் புழுங்கிஎண்ணி நாம்இனிச் செய்வது என்ன இளவலே என்றான்.”இராவணன் விமானத்திலே சீதையைக் கவர்ந்து போய்விட்டான். இராமரும் தம்பியும் தேடிப் போகிறார்கள். இராவணனின் விமானச் சக்கரங்கள் மண்ணிலே உருண்டு சென்ற அடையாளங்கள் தெளிவாகத் தெரிகிறது. அதைப் பின்பற்றிச் செல்கிறார்கள். ஆனால் போகப் போக தெளிவாகத் தெரிந்த சக்கரச் சுவடுகள்தெளிவில்லாமல் ஆகி விடுகின்றன. மண்ணிலே பட்டும் படாமலும் தெரிகின்றன. ஒருகட்டத்துக்குமேல் விமானத்தின் சுவடுகளே இல்லை. ஆம்! விமானம் ஓடுபாதையில் ஓடி வானத்தில் எழுந்து போய்விட்டது.எவ்வளவு துல்லியமாக விளக்கி இருக்கிறார் என்று பாருங்கள். வானூர்திகள் ஓடுபாதையில் ஓடி வேகம் எடுத்து புவியீர்ப்பை முறித்த பின்தான் மேலே எழ முடியும் என்ற விஞ்ஞான விளக்கம் சோழர் காலத்துக் கவிஞனான கம்பனுக்கு எப்படித் தெரிந்து இருந்தது. வானூர்தி பறப்பதை நேரில் கண்டாரா? இல்லை அது தொடர்பான ஏடுகள் அந்த அறிவை வழங்கினவா? அப்படியென்றால்,தாடியும் சடாமுடியும் கொண்டதாகச் சித்தரிக்கப்படும் சங்கப் புலவர் கூட்டத்தில் வானூர்திகளை வடிவமைக்கும் திறன் தெரிந்த பொறியியலாளரும் இருந்தார்களா?| 
அறிவியலும் ஆன்மீகமும் கலன்ந்தது தான் இந்து தருமம் |

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...