Saturday, November 5, 2016

FOODS For Pain Relief


1. Muscle Pain – Ginger.
2. Toothaches – Cloves.
3. Acid Reflux – Apple Cider Vinegar.
4. Earache – Garlic.
5. Headaches and joint pains – Cherries.
6. Stomachaches – Fish.
7. PMS – Yogurt. 80% of women suffer from PMS-related pain before and during their periods.
8. Chronic Pains – Turmeric.
9. Endometriosis – Oats.
10. Ingrown Toenails and Toothaches – Salt.
11. Indigestion – Pineapple.
12. Muscle Pains – Mint.
13. Backaches – Grapes.
14. Injury-Related Pains – Water.
15. Sinus Pain – Horseradish.
16. Oral Infections – Honey.
17. Chest Pains – Flax Seeds.
18. Migraines – Coffee .and
19. Cramped Muscles – Tomato Juice.......

திப்பு ஏன் மணிமண்டபம்??


ஜனவரி மாதம் 19ம் தேதி 1790ம் ஆண்டு, திப்பு, பேக்கலின் (Beakel) ஆளுநர் புட்ருஸ் சுமான் கான் க்கு ( Badroos Saman Khan ) எழுதியது.

“நான் மலபாரில் பெரிய ஒரு வெற்றியை அடைந்திருக்கிறேன் என்பது உனக்கு தெரியாதா, அதில் 4 லட்சத்துக்கும் மேற்பட்ட ஹிந்துக்கள் இஸ்லாமியர்களாக மதம் மாற்றப்பட்டார்கள். நான் திருவாங்கூர் மன்னனான நாசமாய் போன இராமன் நாயருக்கு எதிராக போர் தொடுக்க தீர்மானம் செய்திருக்கிறேன். (அவன் இங்கே குறிப்பது திருவாங்கூர் சமஸ்தான ராஜா ராம வர்மா, அவர் மலபாரிலிருந்து தப்பி ஓடி வந்த அனைவருக்கும் கருணையோடு தஞ்சம் அளித்ததால், அவர் தர்ம ராஜா என்று பிரபலமாக அழைக்கப்பட்டார்).அவரையும் அவர் குடிமக்களையும் இஸ்லாத்துக்கு மதம் மாற்ற துடியாய் துடிக்கிறேன், நான் தற்போதைக்கு ஸ்ரீ ரங்க பட்டினத்துக்கு திரும்பும் என்ணத்தை கை விட்டிருக்கிறேன்.”

1788ம் ஆண்டு மார்ச் மாதம் 22ம் தேதி அப்துல் காதிருக்கு ( Abdul Kadir) எழுதிய கடிதம்:

“12,000க்கும் மேற்பட்ட ஹிந்துக்கள் இஸ்லாத்தால் கௌரவிக்கப்பட்டார்கள். அவர்களில் பல நம்பூதிரி பிராம்மணர்களும் அடக்கம். இந்த சாதனை ஹிந்துக்கள் மத்தியில் பரவலாக்கப்பட வேண்டும். அங்கே இருக்கும் உள்ளூர் ஹிந்துக்கள் உங்கள் முன்னே கொண்டு வரப்பட்டு, இஸ்லாத்துக்கு மாற்றப்பட வேண்டும். எந்த ஒரு நம்பூதிரியையும் விட்டு வைக்கக் கூடாது. அது மட்டுமல்லாமல், அவர்கள் போட்டுக் கொள்ள வேண்டிய உடைகள் உங்களை வந்து அடையும் வரை அவர்களை அடைத்து வைக்க வேண்டும்.”
1788ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ம் தேதியிட்ட, கோழிக்கோட்டில் இருந்த அவனது ராணுவத் தளபதிக்கு வரையப்பட்ட கடிதம்:

“நான் மீர் ஹுஸேன் அலியுடன் ( Mir Hussain Ali ) எனது 2 தொண்டர்களை அனுப்பி வைக்கிறேன். அவர்கள் உதவியோடு, நீங்கள் அனைத்து ஹிந்துக்களையும் கைப்பற்றி கொல்ல வேண்டும். 20 வயதுக்கு உட்பட்டோர் சிறையில் வைக்கப்படலாம், மற்றவர்கள் எல்லாம் மரங்களில் தூக்கிலிடப்பட வேண்டும், இவை என் ஆணைகள்”.

ஷேக் குதுப்புக்கு (Sheik Kutub ) டிசம்பர் 21ம் தேதி 1788ம் ஆண்டு வரைந்த கடிதம்:
“242 நாயர்கள் கைதிகளாக அனுப்பப்படுகிறார்கள். அவர்களை சமுதாய, குடும்ப அந்தஸ்துப்படி வகைப்படுத்துங்கள். அவர்களை இஸ்லாத்தால் கௌரவித்த பின்னர், ஆண்களுக்கும் அவர்களின் பெண்டிருக்கும் போதுமான துணி வகைகளை அளிக்கவும்”.

1790ம் ஆண்டு ஜனவரி மாதம் 18ம் தேதி சயீத் அப்துல் துலாயிக்கு ( Syed Abdul Dulai) எழுதிய கடிதம்:

”நபிகள் நாயகம் மற்றும் அல்லாஹ்வின் அருளினால் கிட்டத்தட்ட கோழிக்கோட்டில் இருக்கும் அனைத்து ஹிந்துக்களும் இஸ்லாத்துக்கு மதம் மாற்றப்பட்டு விட்டார்கள். கொச்சி மாநிலத்தின் எல்லைப்புறங்களில் தான் மதம் மாற்றப்படாத சிலர் இருக்கிறார்கள். அவர்களையும் நான் விரைவில் மதம் மாற்றி விடுவேன். நான் இதை ஜிஹாத்தாக கருதுகிறேன், அந்த இலக்கை விரைவில் அடைவேன்”.

இதையும் ஏற்றுக் கொள்ள மாட்டோம். இந்தப் புத்தகங்கள் கூட ஏகாதிபத்திய, அடக்குமுறையாளர்களின் நூலகத்திலிருந்தது எடுக்கப்பட்டது தானே! என்று நம் புரட்சியாளர்கள் வாதிடலாம்.இதை அன்றே திப்பு அறிந்திருந்தான். இந்த பிரச்சினை நாளை நமக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காக தன் வாளிலேயே தன் எண்ணத்தை வடித்து வைத்திருந்தான். இஸ்லாத்தை நிலை நிறுத்தவும். பிற சமயங்களை அழிக்கவும் தன் வாளுக்குள் புகுந்து துணை புரிய அல்லாவை கூவி கூப்பிட்டது, திப்பு மார்கஸ் வெல்லஸ்லிக்கு ( Marquess Wellesley) பரிசளித்த வாளின் கைப்பிடியில் பொறிக்கப்பட்டுள்ளது.

“நம்பிக்கை இல்லாதவர்களுக்கு என் வெற்றிவாள் மின்னல் போன்றது. விசுவாசிகளின் தலைவனான அலி, எனக்கு சாதகமாக வெற்றிகளை வழங்குகிறார், மேலும் அவர் விசுவாசம் இல்லாத தீய இனத்தை அழித்தார். இறைவா போற்றி, நீயே உலகங்களுக்கெல்லாம் தலைவன். நீயே எங்கள் அனைவருக்கும் தலைவன், நீ தான் விசுவாசிகள் அல்லாத நபர்களிடம் இருந்து எங்களை ஆதரிக்கிறீர். யாருக்கு இறைவன் வெற்றியை அளிக்கிறாரோ, அவரே மனித குலத்தின் தலைவன் ஆகிறான். இறைவா, முகம்மதுவின் சமயத்தை யார் ஒருவர் பரப்புகிறாரோ அவருக்கே வெற்றியை அளியும். முகம்மதின் சமயத்தை யார் ஏற்க மறுக்கிறார்களோ அவர்களை நாசம் செய்யுங்கள்; அத்தகைய நபர்களிடமிருந்து எங்களை விலக்கியே வையுங்கள். தனது செயல்களில் இறைவனே மேலோங்கி நிற்கிறான். வெற்றியும், படையெடுப்பும் இறைவனிடமிருந்தே. ஓ முகம்மதுவே!, விசுவாசிகளுக்கு மங்கலங்களை அளியுங்கள், கடவுள் அன்பே உருவான ரட்சகன், அளப்பரிய கருணை கொண்டவர். கடவுள் உங்களுக்கு உதவி செய்தால், நீங்கள் வளம் பெறுவீர்கள். கடவுள் மகத்தான வெற்றியை அளித்து, உங்களுக்கு உதவி செய்யட்டும், ஓ முகம்மதுவே.!”
-ராஜேஷ் குமார்

திப்பு ஆட்சியில் 27 கத்தோலிக்க தேவாலயங்கள் அழிக்கபட்டது ..


அவைகள் மங்களூரில் உள்ள னூஷா செனோரா டி ரொசாரியோ மிளகியர் திருச்சபை .
மான்டே மரியானோ மணிக்கு fr மிராண்டா செமினரி,
போலார் ஓம்சார் சேப்பல் மற்றும் ஜேசு
மேரி ஜோஸ், சேப்பல் சர்ச்,
சர்ச் ஆப் மெர்சஸ் உல்லால்
எமாகுளுட்ட கோன்ஸேஸாங் சர்ச் , முல்கி
சர்ச் ஆப் முல்கி
சான் ஜோஸ் சர்ச் , பேரர்
கரிமில் அமைந்த நாஸா சென்னோரா டோஸ் ரெமிட்டாஸ் சர்ச்

கார்கில் அமைந்த சாவோ லாரன்ஸ் சர்ச்
பர்கூர் அமைந்த ரொசாரியோ சர்ச்
பிந்தூரில் அமைந்த இம்மாங்குள கோன்ஸேஸாங்.சர்ச்
என்று அணைத்து தேவாலயமும் எரித்து , தரைமட்டமாக்கப்பட்டன,
இதில் ஹோஸ்பெட் ஹோலி கிராஸ் சர்ச் தப்பியது
மூடுபத்ரி ராஜா நட்பு காரணமாக
மேலும் அங்கே பணியில் இருந்த பாதிரியார்களுக்கு 2,00000 பணம் அபராதம் விதிக்கப்பட்டது ..

மதச்சார்பற்ற ஹீரோக்கள்

திப்பு சுல்தான் ஓர் மத பயங்கரவாத , மிகக்கொடூரமான மற்றும் காட்டுமிராண்டித்தனமான மன்னராக இருந்தார்..

திண்டுக்கல் மலைக்கோட்டையில் இருந்த அபிராமி அம்மன் சிலையை எட்டி உதைத்தான் "திப்பு சுல்தான்". அதான் சிலையில் ஒரு கை உடைந்து விட்டது. கோவிலையும் இடிக்க முயன்றான். இந்துக்கள் அவன் காலில் விழுந்து சிலையை தரைக்கு எடுத்து சென்று மீண்டும் கோவில் கட்டினர். அது தான் தற்போதைய அபிராமி அம்மன் கோவில்.

கோடிக்கணக்கான இந்துக்கள் அவரது ஆட்சியில் மிகக் கொடூரமான முறையில் மதத்தின் பெயரால் கொலை செய்யப்பட்டார்கள் ..

திப்பு ஜெயந்தி கொண்டாட்டம் , கர்நாடக அரசு ஒரு அவசரமான மற்றும் தவறான தகவல் அடிப்படையில் எடுத்த முடிவு என்று முன்னாள் பெங்களூர் பல்கலைக்கழகம் துணைவேந்தர் திம்மப்பா மனச்சாலே சூரியநாராயண ராவ் கூறுகிறார். மேலும் அரசு தனது அவசரத்தில் சில வரலாற்று நிகழ்வுகள் தேதிகளை கூட சரிபார்க்காமல் , தனது ராஜ்ய மக்களின் உணர்வுக்கு எதிராக செயல்படுகிறது என்று கூறுகிறார் . இது அரசாங்கத்தின் அறியாமையை காட்டுகிறது . எதேச்சிக் காரத்தை காட்டுகிறது .

மத கொடுங்கோல ஆட்சி புரிந்த திப்புவின் பிறந்த நாள் நவம்பர் 20-ம் தேதி ஆம் தேதி. அதே நேரத்தில் நவம்பர் 10 திப்பு சூல்தான் மேலக்கோட்டையில் உள்ள 700க்கும் அதிகமான ஐயங்கார் சமூகத்து மக்களை தூக்கிலிடப்பட்டார் என்றும் , அதனால் அந்த மேலக்கோட்டை மக்கள் தீபாவளி கொண்டாட்டத்தை இன்றுவரையிலும் கொண்டாடுவது இல்லை என்பது வரலாற்று பதிவு. அப்படி இருக்க அது கூர்க் , மற்றும் மேலக்கோட்டை மக்களுக்கு எந்த அளவுக்கு மன சங்கடமாக இருக்கும் என்பதை பற்றிய கவலையே இல்லாமல் , உதாசீனப்படுத்தி தங்களை மதச்சார்பற்ற ஹீரோவாக கட்டிக்கொள்ள , அந்த நவம்பர் 20 ஆம் தேதியை திப்பு ஜெயந்தி என்று கொண்டாட முதல்வர் சித்தராமையாவுக்கு எந்த அளவுக்கு குரூரமான வஞ்சனை புத்தி இருக்கும் என்று மக்கள் எண்ணி பார்க்கவேண்டும் என்று திம்மப்பா மனச்சாலே சூரியநாராயண ராவ் கூறுகிறார். திப்பு பற்றிய உண்மை தகவலுக்கு

References & Notes: There is ample evidence, available in many authentic records of his military operations in Kerala, to show that Tipu Sultan of Mysore was a fanatic Muslim tyrant who was responsible for the destruction of hundreds of Hindu temples, large-scale forcible conversion of the Hindus, and perpetration of unimaginable brutalities on the Hindu population in Kerala.

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...