Friday, December 29, 2017

திருவாதிரைக்கு ஒரு_வாய்_களி

சிதம்பரத்திற்கருகே ஒரு ஊரில் சேந்தனார் என்ற ஒரு சிவ பக்தர் வாழ்ந்து வந்தார். இவர் சிவபெருமானிடம் அளவு கடந்த அன்பு கொண்டவர். அவர் தினமும் விறகுகள் வெட்டி விற்று அதன் மூலம் வரும் வருமானத்தில், உணவை தயாரித்து அன்றைய தினம் ஒரு சிவனடியார்க்கு உணவிட்டு, அவர் பசியாற்றி, பின் தான் உணவருந்தி, சிவ சிந்தனையுடன் தனது தொண்டினை சிறப்பாக ஆற்றி வந்தார்.

ஒரு நாள் பலத்த மழை காரணமாக அவர் சேர்த்து வைத்திருந்த விறகுகள் காயாமல் போகவே, அன்றைய தினம் வரும் வருமானமும் தடைபட, நல்ல அரிசியுடன் கூடிய உணவுக்கு வழியின்றி, கிடைத்த கேழ்வரகு தானியத்தில் செய்த களியை வைத்துக்கொண்டு யாராவது சிவனடியார்கள் வந்தால் அவர்களுக்கு தானமிட்டு தொண்டு செய்து அவர்கள் பசியை போக்கிவிடலாமென்று ஆவலுடன் காத்திருந்தார். நேரம் செல்ல செல்ல எவரையும் காணாது சிவபெருமானை துதித்தபடி இருந்தார். பக்தர்களை சோதிப்பதும், பின் அவர்களின் பெருமையை உலகத்துக்கு பறைச்சாற்றுவதும் சிவபெருமானின் லீலைகளில் ஒன்றல்லவா?

இவரின் பெருமையை உலகத்திற்கு அனறைய தினம் காட்டிட உள்ளத்தில் முடிவெடுத்தார் சிவபெருமான். தானே ஒரு அடியார் வேடத்தில், அவரின் இல்லத்திற்கு வந்து அவர் பக்தியுடன் படைத்த கேழ்வரகு களியை “இதுவல்லவோ அமிர்தம்”! என்று பாராட்டியபடி, உண்டு பசியாறி, இரவு பசிக்கும் வேண்டுமென, அவரிடம் வேண்டியதை பெற்றுச் சென்றார்.

மறு நாள் சிதம்பரம் கோவில் பூஜைக்காக கோவிலை திறந்து இறைவனுக்கு அபிஷேக ஆராதைனைகள் நடத்திட வந்து கருவறை கதவை திறந்த சிவாச்சாரியார்கள், இறைவன் குடிகொண்டிருக்கும், கருவறை முழுதும் ஆங்காங்கே சிதறியிருந்த உணவாகிய கேழ்வரகு களியமுதுகளை கண்டும், இறைவனின் வாயிலும், கரத்திலும் இருந்த கேழ்வரகு களியமுதை கண்டும் திகைத்துப் போய் அந்நாட்டு மன்னனிடம் சென்று முறையிட்டார்கள்.

முன் தினம் அரசனின் கனவில் வந்து சேந்தனார் தமக்குப் படைத்த கேழ்வரகு களியமுதின் பெருமைகளை இறைவன் குறிப்பட்டிருந்ததும், கோவில் அர்ச்சகர்கள் வந்து முறையிடுவதும், ஒத்துப்போகவே அரசன் ஆச்சரியத்தில் ஆழ்ந்தான். அமைச்சரை வரவழைத்து, அந்த சேந்தனாரின் விபரம் சொல்லி அவரை உடனழைத்து வர ஆட்களை அனுப்பினான்.

பின் அன்றைய தினம் சிதம்பரம் கோவிலில் எழுந்தருளியுள்ள நடராஜரின் ரதோத்ஸ்வத்தில் கலந்து கொள்ள வந்திருந்த அரசன் முன்னின்று இறைவனை பக்தியுடன் தேரில் எழுந்தருளச்செய்த பின், பக்தியுடன் தேரின் வடம் பிடித்து அரசனும் மற்றும் அனைவரும் ரதத்தை இழுக்க முயல தேர் மழையினால் சேறான இடத்தில் அழுந்திக் கொண்டு நகர மறுத்தது. அவ்வேளையில் அரசனால் தேடப் பட்ட சேந்தனாரும், நடராஜரின்த் தேர் திருவிழாவை கண்டு களிக்க அங்குதான் வந்திருந்தார். அப்போது ஒரு அதியசம் நடந்தது. “சேந்தனாரே.! என் மீது பல்லாண்டு பாடினால் தேரின் சக்கரம் விடுபட்டு நகரும். நீ பாடுவாயாக.!” என்று வானிலிருந்து ஓர் அசரீரி குரல் எழுந்தது. அனைவரும் திகைத்தனர். யார் அவர்? எங்கே அந்த சேந்தனார்? என்று அனைவரும் திகைக்க, “இறைவா! எனக்கு பாடவெல்லாம் தெரியாதே! இந்த ஏழைக்கு உன் மீது வைத்திருக்கும் அன்பைத் தவிர எனக்கு என்ன தெரியும்.? என இறைவனின் திருமுகத்தை நோக்கி சேந்தனார் மெய்யுருகி கதற, “உன்னால் இன்று முடியும்! பாடு” என்ற அசரீரியின் குரலுக்கு அடுத்த நொடி மீண்டும் ஒரு அதிசயம் நடந்தது.

சேந்தனார் இறைவனின் அருளால் இறைவனை வாழ்த்தி

மன்னுக தில்லை வளர்கநம் பத்தர்கள் வஞ்சகர் போயகல
பொன்னின்செய் மண்டபத் துள்ளே புகுந்து புவனி யெல்லாம் விளங்க அன்னநடை மடவாள் உமைகோன் அடியோ முக்கருள் புரிந்து
பின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த பித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே

என்ற பாடலை முதல் பாடலாகக் கொண்டு பதின்மூன்று பாடல்களாக பல்லாண்டு பாடினார்.

உடனே பள்ளத்திலிருந்து விடுபட்டு தேர் நகர்ந்தது. அனைவரும் சேந்தனாரின் காலில் விழுந்து வழிபட்டனர். அரசன் சேந்தனாரின் பெருமைகளை தன் கனவில் கண்ட நிகழ்ச்சியினை,அனைவருக்கும் உரைக்க, “இறைவனே வந்து என் கையால் உணவு புசித்தானா?” என்ற மகிழ்வில் பக்தியின் உச்சத்தில் சேந்தனார் மனம் கனிந்து உருகினார்.

இவ்வாறு தன் பக்தனுக்கு சிவபெருமான் அருள் புரிந்ததும் ஒரு திருவாதிரை நாளே! இன்றும் சிவன் கோவில்களில், களி செய்து இறைவனுக்கு படைத்து பிரசாதமாக வழங்குகின்றனர்.

“திருவாதிரைக்கு ஒரு வாய்க் களி!  உண்ணாதவருக்கு நரகக் குழி ” என்ற பேச்சு வழக்கும் உண்டு.

ஓம்_நமசிவாய
திருச்சிற்றம்பலம்

இந்துக்கள்அறிய வேணடியவை

ஒவ்வொரு இந்துவும் அறிய வேண்டிய, உணர வேண்டிய சில விஷயங்கள்
அனைத்து மதத்திற்கும் மூல மதமாக நமது இந்துமதம் (Hindu) தொன்று தொட்டே இருந்து வருகிறது.
ஒவ்வொரு இந்துவும் அறிய வேண்டிய, உணர வேண்டிய சில விஷயங்கள்

நான்கு வகை உயிரினங்கள் :

1. சுவேதஜம்

– புழுக்கத்திலிருந்து பிறக்கக்கூடியன – புழு, பூச்சி, கொசு போன்றவை.

2. உத்பிஜம்

– பூமியைப் பிளந்து கொண்டு வெளிவருவன – மரம், செடி, கொடி போன்றவை.

3. அண்டஜம்

– முட்டையிலிருந்து வெளிவருவன – பறவைகள், சில நீர்வாழ்வன போன்றவை.

4. ஜராயுதம்

– கருப்பையிலிருந்து வெளிவருவன – மனிதன், சில விலங்குகள் போன்றவை.

ஆதித்தனுடைய ஏழு புத்திரர்கள் :

1. கர்ணன்  (Karnan)
2. காளந்தி (Kalandhi)
3. சுக்ரீவன் (Sukriva)
4. தத்திய மகன் (Son of Thathiya)
5. சனி (Sani)
6. நாதன் (Nathan)
7. மனு (Manu)

நந்தியின் அருள் பெற்ற எட்டுப்பேர் :

1. சனகர் (Sanagar)
2. சனாதனர் (Sanadhanar)
3. சனந்தகர்  (Sanandhagar)
4. சனத்குமாரர் (Sanathkumarar)
5. வியாக்கிரபாதர்  (Viyakkirabhadhar)
6. பதஞ்சலி (Padhanjali)
7. சிவயோக முனிவர் (Shivayoga Munivar)

8. திருமூலர் (Thirumoolar)

அஷ்ட பர்வதங்கள் :

1. கயிலை (Kailai)
2. இமயம் (Himalaya)
3. ஏமகூடம் (Eamakoodam)
4. கந்தமாதனம் (Kandhamaadhanam)
5. நீலகிரி (Neelagiri)
6. நிமிடதம்  (Nimidadham)
7. மந்தரம் (Mantharam)
8. விந்தியமலை (Vindhaya Mount)

ஆத்ம குணங்கள் :

1. கருணை (Mercy)
2. பொறுமை (Patience)
3. பேராசையின்மை (without Greed)
4. பொறாமையின்மை (without Jealousy)
5. நல்லனவற்றில் பற்று [உறுதி] (persistence)
6. உலோபத்தன்மையின்மை  (Ulobathanmaiyinmai)
7. மனமகிழ்வு (Pleasure)

8. தூய்மை (Purity)

எண்வகை மங்கலங்கள் :

1. கண்ணாடி (Mirror)
2. கொடி (Flag)
3. சாமரம் (Samaram)
4. நிறைகுடம் (Full pot)
5. விளக்கு (Lamp)
6. முரசு (Drum)
7. ராஜசின்னம் (The royal symbol)
8. இணைக்கயல் (

எண்வகை (எட்டு வகை) வாசனைப் பொருட்கள் :

1. சந்தனம் (Sandal)
2. கோட்டம்
3. கஸ்தூரி (Musk)
4. கற்பூரம் (Camphor)
5. குங்குமம் (Vermilion)
6. பச்சிலை
7. அகில்
8. விளாமிச்சை வேர் (Rhizome root)

ஏழுவகைப் பிறப்புக்கள் :

1. தேவர் (Deity)
2. மனிதர் (Human)
3. விலங்குகள்  (Animals)
4. பறப்பவை (Birds)
5. ஊர்பவை
6. நீர்வாழ்பவை
7. தாவரம் (Plants)

ஈரேழு உலகங்கள் – முதலில் மேல் உலகங்கள்:

1. பூமி (Earth)
2. புவர்லோகம்
3. தபோலோகம்
4. சத்யலோகம்
5. ஜனோலோகம்
6. மஹர்லோகம்
7. சுவர்க்கலோகம்

ஈரேழு உலகங்கள் – கீழ் உலகங்கள் :

1.அதலம்
2.கிதலம்
3.சுதலம்
4. இரசாதலம்
5. தவாதலம்
6. மகாதலம்
7.பாதாலம்.

குபேரனிடம் இருக்கும் நவநிதிகள் :

1.சங்கநிதி
2.பதுமநிதி
3.கற்பநிதி
4.கச்சபநிதி
5. நந்தநிதி
6. நீலநிதி
7. மஹாநிதி
8. மஹாபதுமநிதி
9. முகுந்த நிதி

அஷ்ட ஐஸ்வர்யங்கள் :

1. தனம்
2. தான்யம்
3. பசு
4. அரசு
5. புத்திரர்
6. தைரியம்
7. வாகனம்
8. சுற்றம்

எண்வகை போகங்கள் :

1. அணிகலன்
2. தாம்பூலம்
3. ஆடை
4. பெண்
5. பரிமளம்
6. சங்கீதம்
7. பூப்படுக்கை
8. போஜனம் (உணவு)

நவ நாகங்கள் :

1. ஆதிசேஷன்
2. கார்க்கோடகன்
3.அனந்தன்
4. குளிகன்
5. தஷன்
6. சங்கபாலன்
7. பதுமன்
8. மகாபதுமன்
9. வாசுகி

நன்மை தரக்கூடிய தச தானங்கள் :

1. நெல்
2. எள்
3. உப்பு
4. தீபம்
5. மணி
6. வெள்ளி
7. வஸ்திரம்
8.சந்தனக்கட்டை
9. தங்கம்
10. நீர்ப்பாத்திரம்

நமது சமய கருத்துக்கள் ஒவ்வொரு இந்துக்களும் கற்க வேண்டும். நாம் கற்றதின் படி (தர்மத்தை) கடைபிடிக்க வேண்டும் .

கற்று தெளிவதோடு நின்றுவிடாமல் கற்ற தை, பெற்றதை, தெரிந்ததை நமது குழந்தைகளுக்கு. கற்பிப்போம். இதன் மூலம் நமது தேசம், தெய்வம், த‌ர்மம் காக்கப்படும்.

Monday, June 26, 2017

கி.பி. 16-ஆம் நூற்றாண்டு சுவரோவியம்

காயல்பட்டினத்தில் அரேபிய குதிரை வியாபாரிகள் கி.பி. 16-ஆம் நூற்றாண்டு சுவரோவியம் நாறும்பூநாதர் திருக்கோயில்
திருப்புடைமருதூர் நெ
ல்லை மாவட்டம்

திருகுறுங்குடி-ஆலயமணி

ஒவ்வொரு ஆலயத்தின் மணியும் சிறப்பிடம் பெறுகிறது. படத்தில் காண்பது திருகுறுங்குடி நம்பி கோயிலில் உள்ள பிரமாண்டமான ஆலயமணி. இந்த மணி ஒலிக்கையில் எழும் மணியோசை பல கிலோமீட்டர் தூரம் வரை கேட்கும் என்று சொல்லப்படுகிறது. திருகுறுங்குடி திருஜீயர்மடத்துக்காக உருவாக்கப்பட்ட மணி இது என்கிற எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ள இந்த பிரமாண்டமான மணி கப்பியின் மூலம் இழுபடும் கயிற்றினால் இயக்கப்படுகிறது.

Tuesday, May 9, 2017

தர்மம் தழைக்க தரும ராஜா

பெரும்பனை, இட்டமொழி, திருநெல்வேலி
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ளது பெரும்பனை. இவ்வூரில் அமைந்துள்ளது தருமராஜா கோயில். இது பஞ்ச பாண்டவர் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழியிலிருந்து கருப்பையா நாடார் குடும்பம் பிழைப்பு தேடி பெரும்பனை ஊருக்கு வந்துள்ளனர்.
பெரும்பனை முன்னொரு காலத்தில் செழிப்புடன் திகழ்ந்ததால் இந்த ஊர் பெரும்பண்ணை என்றே அழைக்கப்பட்டதாகவும் அது மருவி பெரும்பனை என்று அழைக்கப்படலாயிற்று என்றும் கூறுகின்றனர். ஈத்தாமொழி கருப்பையாவின் குல தெய்வம் பொன்னார மாடனும்,
சாஸ்தாவும் ஆகும். கருப்பையா நாடார் தனது குடும்பத்துடன் ஊருவிட்டு வரும்போது அவரது குலதெய்வமும் அவர்களுடன் வந்துவிட்டது. இதையடுத்து தனது குலதெய்வங்களுக்கு பிடிமண் கொண்டு வந்து பெரும்பனையில் கோயில் அமைத்துள்ளார்.
ஊரிலிருந்து வரும்போது தருமர் உள்ளிட்ட பஞ்ச பாண்டவர்களுடன் திரௌபதியும் சேர்ந்திருக்க கூடிய வரைபடம் ஒன்றினை கொண்டு வந்து வீட்டுச் சுவரில் மாட்டி வைத்துள்ளார்.
வயது முதிர்ந்த நிலையில் ஒருநாள் பகலில் கருப்பையா நாடார் அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்கும்போது அவரது கனவில் தோன்றிய தருமர், என்னை நம்பிய உனக்கும் உன்னைச் சார்ந்தவர்களுக்கும் அருள்பாலிக்க விரும்புகிறேன். ஆகவே, எனக்கு கோயில் கட்டி பூஜை செய் என்று கூறியதாக சொல்லப்படுகிறது. அதன்படி கருப்பையா நாடார், தனது மகன் பண்டார நாடார் மூலம் 1927ம் ஆண்டு அவர்களது சாஸ்தாங்கோயிலிலேயே தருமருக்கு கோயில் கட்டினார்.அக் கோயில் தருமராஜா கோயில் என்று அழைக்கப்படுகிறது. இக்கோயிலில் நடுவில் மூர்த்தி சாமி உள்ளார்.
இவர் பொன்னார மாடன் சாஸ்தாவாக கருதப்படுகிறார்.
பஞ்ச பாண்டவரோடு திரௌபதி வீற்றிருக்கிற படம் தெற்கு பகுதியில் வடக்கு திசை நோக்கி வைக்கப்பட்டுள்ளது. மேற்கு பகுதியில் கிழக்கு நோக்கி பெருமாள்சாமி, ராமசாமி,
பரமசிவம் போன்ற தெய்வங்களின் படங்களும் வைக்கப்பட்டுள்ளது.
இக்கோயிலில் தருமர், பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன், திரௌபதி, குந்திதேவி, பெருமாள், ராமசாமி, ஜானகி,
பரமசிவம், சுடலைமாடன், இசக்கியம்மன் ஆகிய தெய்வங்கள் உள்ளன. இக்கோயிலில் தினசரி பூஜைகள் இல்லை. வாரத்தில் வெள்ளி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் மாலை நேரத்தில் பூஜைகள் நடைபெறுகிறது.
வைகாசி, கார்த்திகை, மாசி மாதங்களில் வரும் கடைசி வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.
ஆண்டு தோறும் ஆவணி மாதம் 3வது வெள்ளிக்கிழமைகளில் கொடை விழா நடைபெறுகிறது.
வியாழக்கிழமை இரவு குடியழைப்புடன் தொடங்கும் கொடைவிழா, ஞாயிறு மாலை சாப்பாடு எடுப்பு என்ற
நிகழ்ச்சியுடன் நிறைவுபெறுகிறது. இக்கோயிலைச் சார்ந்தவர்கள் பழங்காலத்திலேயே தூத்துக்குடி,
பண்டாரபுரம், அச்சம்பாடு, ரெட்டங்கிணறு, நன்னிகுளம், பேய்குளம் போன்ற ஊர்களுக்கு குடிபெயர்ந்து விட்டனர்.
கொடை விழாவின்போது இங்கு வந்து வரி கொடுத்து விழாவில் பங்கேற்கின்றனர். பக்தர்கள் கொடுக்கும் நன்கொடையை பெற்றுக் கொண்டாலும் அதை வரியாக கருதவில்லை.
ஆண்டு தோறும் சைவ கொடைவிழா நடத்தும் இவர்கள் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டும் கிடா வெட்டி கொடை நடத்துகின்றனர். தருமருக்கு கருத்த கிடா,
பீமனுக்கு அடிவயிற்றில் சிவப்பும் மேல் பகுதியில் வெள்ளை நிறமும் கொண்ட புள்ளப்போர் ஆடும், அர்ச்சுனனுக்கு அடி வயிற்றில் வெள்ளை நிறமும் மேல் பகுதியில் சிவப்பு நிறமும் கொண்ட ஆடு, நகுலனுக்கு சிவப்பில் வௌ்ளை புள்ளி போட்ட ஆடு,
சகாதேவனுக்கு சிவப்பு நிறத்தில் வெள்ளை புள்ளி போட்ட ஆடு, குந்தி தேவிக்கு செம்மறி ஆட்டுக்கிடா என பாண்டவர்களுக்கு பலி கொடுத்து வழிபாடு நடத்துகின்றனர்.
இவ்வாறு நிறம் பார்த்து ஆட்டுக்குட்டியை வாங்கி வளர்த்து பலி கொடுக்கத்தான் மூன்று ஆண்டுகள் எடுக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
வெள்ளிக்கிழமை பலியிடப்படும் ஆடுகளை சமைத்து அடுத்தவேளை பூஜையின்போது சாமிக்கு படைத்து பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குகின்றனர்.
பண்டார நாடார் சாமி ஆடி வந்தார். அவருக்கு பின்னர் அவரது மகன் ராமர் சாமி ஆடுகிறார்.
கொடை விழாவின்போது சாமி ஆடும் அவர் பீமனுக்கு ஆடும்போது கையில் கதாயுதமும், அர்ச்சுனனுக்கு ஆடும்போது வில்லும், நகுலனுக்கு ஆடும்போது தண்டாயுதமும் கொண்டு சாமி ஆடுவார்.
இக்கோயிலில் கொடைவிழாவின்போது மேளம் பயன்படுத்துவதில்லை, அதற்கு பதிலாக வில்லிசை மட்டுமே பாடப்படுகிறது. முதலில் சாஸ்தா பிறப்பும்,
அடுத்து பாண்டவர்கள் கதையும் பாடப்படுகிறது. பின்னர் சுடலைமாடன் கதையை பாடிய பின்னர் கோயில் அமைந்த கதையையும் கதைப்பாடலாக பாடுகின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை மாலை கொடை விழா நிறைவாக வாழி பாடுதல் நடக்கிறது. அப்போது கொடை விழா நடத்தியவர்கள், வரி கொடுத்தவர்கள்,
நன்கொடை அளித்தவர்கள் மற்றும் ஊரிலுள்ள சிறுவர் முதல் பெரியவர்கள் வரை நோயின்றி செல்வ செழிப்போடு வாழ வேண்டும் என்று வாழ்த்தி பாடுகின்றனர்.
சாஸ்தாவுக்கும், ராமருக்கும் சைவ படையல் படைக்கப்படுகிறது.
மூன்று நாள் கொடைவிழாவில் சனிக்கிழமை காலை ராமருக்கும், ஜானகி அம்மனுக்கும் திருமண வைபோக பூஜை நடத்தப்படுகிறது. அது முடிந்த பின் கருப்பட்டியும்,
வாழைப் பழமும் சேர்த்து பக்தர்களை நோக்கி வீசுகின்றனர். அதை பக்தர்கள் ஆவலோடு ஓடிச்சென்று வாங்கிக் கொள்கின்றனர்.
இதில் பிரசாதம் கிடைக்காதவர்களுக்கு கடைசியில் அவர்களை தேடிக்கொண்டு கொடுக்கின்றனர். அதனைத்தொடர்ந்து அன்னதானம் நடைபெறுகிறது. இதை தருமச் சாப்பாடு என்கின்றனர்.
இக்கோயிலில் எல்லா தெய்வ சந்நதியிலும் திருநீறு கொடுத்தாலும், திரௌபதி, குந்தி தேவி சந்நதிகளில் குங்குமமும்,
ராமர் சந்நதியில் திருமண்ணும் வழங்கப்படுகிறது. சுடலைமாடன் சந்நதியில் திருநீறு பூசும் பக்தர்கள், ராமர்சந்நதியில் திருநாமம் இட்டுக் கொள்கின்றனர்.
சாதி, மதவேறு பாடின்றி அனைவரும் இக்கோயில் விழாவில் பங்கேற்கின்றனர். இக்கோயில் திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையிலிருந்து சாத்தான்குளம் செல்லும் வழியில் இட்டமொழியிலிருந்து வடக்கே ஒரு கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. தருமராஜா கோயில் என்றும் பஞ்ச பாண்டவர் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.

Tuesday, May 2, 2017

சத்தியம் வத (உண்மையே பேசு)

ஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான். அவன் தினமும் திருடப் போவதற்கு முன்னர், ஒரு கோவிலுக்குள் நுழைந்து “சாமி, இன்னிக்கு எனக்கு நல்ல வரும்படி கிடைக்க வேண்டும்” என்று வேண்டிக்கொண்டு புறப்படுவான். அந்தக் கோவில் மண்டபத்தில் தினமும் ஒரு சாமியார் உபந்யாசம்/ சொற்பொழிவு ஆற்றிவந்தார். சில நேரங்களில் அங்கிருக்கும் கூட்டம் சிரிப்பதைக் கேட்டு நாமும் சாமியார் சொல்லும் ‘ஜோக்’கைக் கேட்போமே என்று போவான். நல்ல குட்டிக் கதைகள் சொன்னால் அதையும் கேட்டுவிட்டு திருடப் போவான்.

ஒரு நாள் அவனுக்கு பூர்வ ஜன்ம வாசனையால் ஞானோதயம் ஏற்பட்டது. பகற்பொழுதில் அந்த சாமியார் இருக்கும் குடிலுக்குச் சென்று, “குருவே! வணக்கம் பல! எனக்கு ஒரு மந்திரம் சொல்லித் தாருங்களேன்” என்றான். அவரும் , “மகனே! நீ யார்?” என்று கேட்டார். அவன் கூசாமல் உண்மையைச் சொன்னான்: “நான் ஒரு பக்காத்திருடன்! பத்து வயது முதல் திருட்டுத் தொழில்தான் செய்து வருகிறேன்”

சாமியார் : அடக் கடவுளே! வேறு எதுவும் நல்ல தொழில் செய்யக்கூடாதா?

திருடன்: இப்போதைக்கு எனக்குத் தெரிந்த தொழில் அது ஒன்றுதான். மனைவி மைந்தர்களைக் காப்பாற்ற 30 ஆண்டுகளாகச் செய்யும் தொழில் இது.

சாமியார்: சரி, போ. நீ உண்மை பேசுவதால் உனது உள்ளத்தில் ஏதோ சில நல்ல அம்சங்களிருப்பதை உணர்கிறேன். இன்று, வேதத்திலுள்ள, எல்லோருக்கும் சொல்லித் தரும் முதலாவது மந்திரத்தை உனக்கும் போதிக்கிறேன். அதைப் பின்பற்றினால் அந்த மந்திரம் பலித்து சில அற்புதங்களைச் செய்யும்.

திருடன்: சரிங்க சாமி! அப்படியே செய்வேன்.
சாமியார்: முதல் மந்திரம்: ‘சத்தியம் வத’ – அதாவது, ‘உண்மையே பேசு”

திருடன்: சாமி, இது ரொம்ப எளிதான மந்திரம். பின்பற்றுவதும் எளிது. கைகள் தானே திருட்டுத் தொழில் செய்யும்; வாய், உண்மையைப் பேசுவது ஒன்றும் கடினமில்லையே’ என்றான்.

சாமியார் புன்னகை பூத்தார்; அவனும் விடை பெற்றுச் சென்றான்.

மனைவியிடம் போய் நடந்ததைச் சொன்னான். அவளுக்கு ஒரே சிரிப்பு. இது என்னங்க? நெசவாளி குரங்கு வளர்த்த கதையாய் இருக்கு’ என்றாள்.

அது என்னடி கதை? என்றான்.

ஒரு நெசவாளி குரங்கு வளர்க்க ஆசைப்பட்டு குரங்கை வாங்கினான். அது அவன் செய்த ஒவ்வொரு துணியையும், நூலாக இருக்கையிலேயே பிய்த்துப் போட்டது. அது போல நீர் உண்மை பேசினால் திருடும் முன்னரே அகப்பட்டுக் கொள்வீர்” என்றாள்.

“கண்மணி! கவலைப்படாதே, குருவருள் கிட்டும்” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான்.
இரவு நெருங்கியதும், கன்னக் கோல், நூலேணி, சுத்தியல், கடப்பாரை, அளவுபார்க்கும் நூல் எல்லாவறையும் எடுத்துக்கொண்டு போனான்.
இன்று மந்திர உபதேசம் இருப்பதால், பெரிய இடத்தில் கைவைத்து பெரிய சாதனை புரியவேண்டுமென்றெண்ணி, அரண்மனையில் திருடப் போனான். நள்ளிரவுக்குப் பின், கும்மிருட்டு. அரண்மனை மதிலைச் சுற்றி வருகையில், அந்நாட்டு மன்னரும் கையில் விளக்குடன் மாறு வேடத்தில் வந்தார். இந்து சமய ராஜாக்கள் நாட்டு மக்களின் நாடி பிடித்துப் பார்க்க இப்படி நள்ளிரவில் மாறுவேடத்தில் நகர் வலம் வருவதுண்டு.

ராஜா: நில், யார் அங்கே?

திருடன்: ஐயா, நான் பக்காத் திருடன்.

ராஜா: அட நான் பாக்தாத் திருடன். அசலூரிலிருந்து வந்திருக்கிறேன். எனக்கும் பணம் வேண்டும். உன்னுடன் வரட்டுமா? பங்கில் பாதி கொடுத்தால் போதும்

திருடன்: மிக நல்லது. வா போவோம் என்றான்.

ராஜாவுக்கு அவரது அரண்மனை வழியெல்லாம் அத்துபடி என்பதால் திருடனை நேரே கஜானாவுக்கு அழைத்துச் சென்றார்.

இருவரும் ஒரு பெரிய பெட்டியைத் திறந்தனர். அதில் மூன்று விலையுயர்ந்த பெரிய மாணிக்கக் கற்கள் இருந்தன.

திருடன்: இன்று நமக்கு அதிர்ஷ்ட நாள். உனக்கு ஒன்று , எனக்கு ஒன்று. மூன்றாவது ரத்தினக் கல்லை அதன் சொந்தக் காரனுக்கு இந்தப் பெட்டியிலேயே வைத்துவிடுவோம்.

ராஜா: அட உனக்கு என்ன பைத்தியமா? நாமோ திருடர்கள் இதில், சொந்தக்காரனுக்கு ஒரு பங்கா?

திருடன்: நண்பா! நான் உனக்கு பாதி தருவதாக ஒப்புக் கொண்டேன். இப்பொழுது இந்த மூன்றாவது ரத்தினக் கல்லை நான் எடுத்தாலும், நீ எடுத்தாலும், 50-50 வராது ஒருவருக்குக் கூடுதலாகிவிடும். அதுமட்டுமல்ல. இதை இவ்வளவு காலம் கஜானாவில் வைத்திருக்கும் மன்னன் , ஒரு கல்லாவது திருடுபோகாமல் இருந்ததே என்று சந்தோஷப் படுவானில்லையா?

ராஜாவும் அவன் சொன்ன வாதத்தில் பசையிருப்பதை ஒப்புக் கொண்டு வீடு திரும்பலாம் என்றார். அந்தத் திருடன் விடைபெற்றுச் சென்றபோதும், அவனுக்குத் தெரியாமல் அவனைப் பின் தொடர்ந்து சென்று அவன் எங்கே வசிக்கிறான் என்பதை குறித்துக்கொண்டார்.

மறு நாள் அரசவை கூடியது.

ராஜா: ஒரு முக்கிய அறிவிப்பு! நமது அரண்மனை கஜானாவில் திருடு நடந்திருப்பதாக் நமது உளவாளிகள் எனக்குத் தகவல் தந்துள்ளனர்.

நிதி அமைச்சர்: மன்னர் மன்னவா! சிறிது நேரத்துக்கு முன் நாங்கள் மந்திரிசபை கூட்டம் நடத்தினோம். அதில் கூட யாரும் இதுபற்றிச் சொல்லவில்லை. இதோ, உடனே சென்று பார்த்து அறிக்கை சமர்ப்பிப்பேன்.

அவர் கஜானாவுக்குச் சென்று பார்த்ததில் திருடன் ஒரு மாணிக்கக் கல்லை மட்டும் விட்டுச் சென்றிருப்பதைக் கண்டார். திடீரென அவருக்குப் பேராசை வரவே அதை இடுப்பில் வேட்டியில் முடிந்து வைத்துக் கொண்டார்.
அரசவைக்கு ஓடோடி வந்தார்.

நிதியமைச்சர்: மன்னரே, நமது உளவாளிகள் மிகவும் திறமைசாலிகள், ராஜ விசுவாசிகள். அவர்கள் சொன்னது சரியே. கஜானாவில் உள்ள ஒரு பெட்டி உடைக்கப்பட்டு, மூன்று மாணிக்கக் கற்கள் திருடப்பட்டிருக்கின்றன.

ராஜா: அப்படியா? ஒரு கல்லைக் கூட அவர்கள் விட்டுச் செல்லவில்லையா?

நிதியமைச்சர்: மன்னவா, திருடர்கள் என்ன முட்டாள்களா? ஒரு கல்லை நமக்கு விட்டுச் செல்ல. இருப்பதையெலாம் சுருட்டுவதுதானே அவர்கள் தொழில்

ராஜா: போகட்டும் எனக்கு இன்னும் ஒரு உளவுத் தகவலும் வந்துள்ளது. யார் அங்கே? காவலர்கள் எங்கே?

அவர்கள் ஓடி வந்து, மன்னவன் முன் நிற்க, இதோ இந்த முகவரியிலுள்ள திருடனை உடனே பிடித்து வாருங்கள். ஆனால் அவனை ஒன்றும் செய்துவிடாதீர்கள்.

குதிரை மீது விரைந்து சென்ற காவலர், அந்தத் திருடனைப் பிடித்துவந்து, அரசன் முன்னர் நிறுத்தினர்.

திருடன்: ராஜா, வணக்கமுங்க (நடுங்கிக் கொண்டே)

ராஜா: நேற்று இரவு என்ன நடந்தது? சொல்.
திருடன்: நானும் இன்னொருவனும் உங்கள் அரண்மனை கஜானாவுக்குள் நுழைந்து பெட்டியை உடைத்தோம். அதில் மூன்று மாணிக்கக் கற்கள் இருந்தன. நான் ஒன்றை எடுத்துக்கொண்டு, என்னுடன் வந்த மற்றொருவனுக்கு ஒன்றைக் கொடுத்தேன். மூன்றாவது ரத்தினக் கல்லை உங்களுக்கே இருக்கட்டும் என்று வைத்துவிட்டேன். இதோ நான் எடுத்த மாணிக்கம். (அதை அரசர் முன் பயபக்தியுடன் சமர்ப்பிக்கிறான்)

ராஜா: உன்னுடன் வந்தவன் திருடனில்லை. நான்தான் மாறுவேடத்தில் வந்து உன்னுடன் கஜானாவில் நுழைந்தேன். இதோ நீ என் பங்காகக் கொடுத்த மாணிக்கக் கல் (அரசனும் அதை முதல் கல்லுடன் வைக்கிறார்.)
நிதி அமைச்சரே, மூன்றாவது கல்லை வையுங்கள்.

நிதியமைச்சர்: மன்னர் மன்னவா! என்ன அபவாதம் இது? மூன்று தலைமுறைகளாக எங்கள் குடும்பம் உங்களுக்குச் சேவை செய்துவருகிறது. ஒரு நிமிடத்தில் எனக்குத் திருட்டுப் பட்டம் கட்டிவிட்டீர்களே. அந்தக் கல்லையும் இந்தத் திருடன்தான் எடுத்திருப்பான்; திருடர்களுக்குக் கண்கட்டு வித்தை தெரியும்

ராஜா: நிதியமைச்சரே! இன்னும் ஒரு நிமிடத்தில் அந்த ரத்தினக் கல்லை சமர்ப்பிக்கவில்லையானால், உமது வேட்டியை உருவி சோதனை செய்ய உத்தரவிடுவேன். உமது வீடு முழுவதையும் சோதனையிட உத்தரவிடுவேன்.

நிதியமைச்சர் (நடுங்கிக் கொண்டே): மன்னவா! என்னை மன்னித்துவிடுங்கள்; அரை நிமிட காலத்தில் பேராசை என் கண்களை மறைத்துவிட்டது. நான்தான் திருடினேன்; இதோ அந்தக் கல் என்று வேட்டியின் முடிச்சிலிருந்து எடுத்து வைத்தார்.

ராஜா: யார் அங்கே? (காவலர்கள் ஓடி வருகின்றனர்); இந்த நிதியமைச்சரை சிறையில் தள்ளுங்கள்.

முக்கிய அறிவிப்பு: (அனைவரும் கவனத்துடன் கேட்கின்றனர்); இன்று முதல் நமது நாட்டின் நிதியமைச்சராக இந்தத் திருடனை நியமிக்கிறேன். உங்கள் அனைவரையும் விட உண்மையுடனும் ராஜ விசுவாசத்துடனும் இருந்தமைக்காக அவரே இப்பதவிக்குத் தகுதியுடையவர்.

அனைவரும்: புதிய நிதி அமைச்சர் வாழ்க! வாழ்க, வாழ்க; மன்னர் மன்னவர் வாழ்க, வாழ்க!!
புதிய நிதியமைச்சர் (பழைய திருடன்), மறு நாளைக்குச் சாமியாரைச் சந்தித்து உண்மை விளம்பியதால் ஏற்பட்ட நன்மைகளைக் குருநாதரிடம் ஒப்புவித்தார்.

சாமியார்: சத்தியம் வத (உண்மையே பேசு) என்பதுதான் வேதத்தின் முக்கியக் கட்டளை. நீ அதைக் கடைபிடித்தால் வேறு எதுவும் தேவையில்லை.

“எனைத்தானும் நல்லவை கேட்க”- என்று வள்ளுவன் சொன்னான். நீயும் அப்படிச் சிறிது உபதேசம் கேட்டு இந்நிலைக்கு உயர்ந்தாய்.

"பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம் பிற
செய்யாமை செய்யாமை நன்று (குறள் 297)

                - என்று வள்ளுவனும் செப்பினான். அடுத்த முறை சந்திக்கும்போது உனக்கு வேறு ஒரு மந்திரம் உபதேசம் செய்கிறேன் இன்னும் உயர்வாய்- என்றார்.

Tuesday, April 18, 2017

தாந்தியா தோபே

இது ஏதோ உண்ணும் உணவுப்பண்டம் என்றோ நெடுஞ்சாலை ஒர தாபாக்கள் எனப்படும் மோட்டல்கள் பெயரோ என எண்ண வேண்டாம்...
நம்முடைய பாரத தேசத்தின் இதிகாசங்களில் எத்தனையோ வீரர்களைப் பற்றிப் படிக்கிறோம். அர்ஜுனன், பீமன், அபிமன்யு, அனுமன் என்றெல்லாம் படிக்கும்போது இவர்களைப் போன்ற மாவீரர்கள் இப்போதும் இந்த மண்ணில் தோன்றுகின்றார்களா என்று எண்ணத் தோன்றுகிறதல்லவா? ஆம்! ஒவ்வொருவர் மனதிலும் இந்தப் புராணகால வீரர்களைப் போல இன்றும் இருந்தால் எத்தனை நன்றாக இருக்கும் என்ற எண்ணம் உண்டு.
ஆம்! நம் காலத்திலும் அப்படிப்பட்ட வீரனொருவன் இருந்தான். அவன் தான் 1857-58-இல் நடந்த முதல் சுதந்திரப் போரில் சாகசங்களை நிகழ்த்திக் காட்டிய மாவீரன் தாந்தியா தோபே. இவன் ஒரு க்ஷத்திரியன் அல்ல. பிரம்மவர்த்தம் அரண்மனையில் கணக்கராக இருந்த ஒரு பிராமணனின் பிள்ளை. மகாபாரதத்தில் குரு துரோணரின் புதல்வன் அஸ்வத்தாமனைப் போல இவனும் பிறப்பால் பிராமணன், வீரத்தால் க்ஷத்திரியன்.
வீரம் பொதிந்து கிடந்த இந்த தாந்தியா தோபேயின் செயல்பாடுகள் வெளி உலகத்துக்குத் தெரிய ஒரு வாய்ப்பாக அமைந்தது 1858-இல் பிரிட்டிஷ் கம்பெனியாரை எதிர்த்து நடந்த முதல் சுதந்திரப் போர். பிரம்மவர்த்தம் அரண்மனையில் தான் கடைசி பேஷ்வா பாஜிராவ் வாழ்ந்து வந்தார். தனக்கு மகன் இல்லை என்பதால் நாராயணபட் என்பவரின் மகனான நானாவை தத்து எடுத்துக்கொண்டார். அரண்மனையில் நானா இளவரசன் என்றால், இந்த தாந்தியா தோபே இளவரசனின் தோழன்.
பிரம்மவர்த்தம் அரண்மனையில் நானா, தாந்தியா தோபே, லக்ஷ்மி பாய் ஆகியோர் இளமையில் வீர விளையாட்டுக்களைத் தான் விளையாடி வந்தனர். ஆயுத சாலையில் இருந்த ஆயுதங்களை எடுத்து இவர்கள் பயிற்சி பெற்றது, பின்னாளில் ஆங்கில கம்பெனி படைகளை எதிர்த்துப் போரிட பெருமளவில் உதவி செய்தது.
தாந்தியா தோபே அரண்மனையில் கணக்கெழுதும் குமாஸ்தாவாகத் தொடங்கினாலும், யுத்தக் கலையைப் பயின்று மாவீரனாகவும், சிக்கலான பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு காணக்கூடிய அறிவாற்றல் பெற்றவனாகவும், ராஜதந்திரியாகவும் அவனால் திகழ முடிந்தது. நல்லோர் சேர்க்கை,  சூழ்நிலை ஆகியவை ஒரு மனிதனுடைய வாழ்க்கையை எப்படியெல்லாம் மாற்றுகின்றன என்பதை தாந்தியாவின் வாழ்விலிருந்து புரிந்து கொள்ளலாம்.
பாஜிராவ் தன் பரிவாரங்களுடன் ஆலோசனை நடத்தும் சமயம் அவர்கள் விவாதிக்கும் விஷயத்துக்கு நல்லதொரு தீர்வை தாந்தியா கொடுத்து சில சமயங்களில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறார். தர்க்க சாஸ்திரம் அந்த நாளில் நம் நாட்டில் கற்பிக்கப்பட்டு வந்தது. அந்த தர்க்க சாஸ்திரத்தில் தாந்தியாவுக்கு இயற்கையிலேயே நல்ல பயிற்சி இருந்தது.
வீரம் பொதிந்து கிடந்த இந்த தாந்தியா தோபேயின் செயல்பாடுகள் வெளி உலகத்துக்குத் தெரிய ஒரு வாய்ப்பாக அமைந்தது 1858-இல் பிரிட்டிஷ் கம்பெனியாரை எதிர்த்து நடந்த முதல் சுதந்திரப் போர். சிப்பாய் கலகத்தை மத்திய இந்தியாவில் மிகச் சிறப்பாக செயல்படுத்தி ஆங்கிலேயருக்கு மிகுந்த துன்பம் கொடுத்தவர்.
தாந்தியா தோபேயைப் பற்றி ஒரு ஆங்கில வரலாற்றாசிரியர் சொல்கிறார்:   “புரட்சிப் படைக்குத் தலைமை தாங்குபவர் சாமான்யர் அல்ல. ஐரோப்பாவில் யுத்தக் களத்தில் தங்கள் திறமையைக் காட்டி போர் புரிந்த ஆங்கில தளபதிகளையெல்லாம் தாந்தியா எந்தவித பயமோ, தயக்கமோ இன்றி எதிர்த்து மோதியிருக்கிறார். திறமையான ஒரு தளபதிக்கு இருக்க வேண்டிய மதிநுட்பமும், தீரமும், செயல் திறனும் பெற்றிருந்தார் தாந்தியா தோபே. எதிரியின் பலவீனத்தைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் ஆற்றல் அவரிடம் இருந்தது.”
1857 ஆம் ஆண்டு சிப்பாய்க் கலகம் நடைபெற்றது என்றார்களே, அது சிப்பாய்க் கலகம் அல்ல; முதல் இந்திய விடுதலைப் போர். அந்தக் களத்தில் ஜான்சி ராணிக்கும், நானா சாகேப்புக்கும் சேனாதிபதியாகத் திகழ்ந்த தாந்தியா தோபே தூக்கில் இடப்பட்ட நாள் தான் இந்த ஏப்ரல் 18.
அவர் மறைந்து வாழ்ந்த நேரத்தில் குவாலியரைச் சேர்ந்த சர்தார் மான்சிங் என்பவனிடம் சென்று தான் உடல் சோர்ந்திருப்பதால் சில நாட்கள் அவருடன் தங்கி ஓய்வெடுத்துக் கொள்வதாகச் சொன்னார் தாந்தியா. அவரும் சம்மதித்து தங்கவைத்துக் கொண்டார். அதற்குள் இந்த செய்தியை அறிந்த பிரிட்டிஷார் எப்படியோ மான்சிங்கை மனம் மாறவைத்து விட்டனர். தாந்தியா தோபே அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த நேரம், மான்சிங் பிரிட்டிஷ் வீரர்களை வரவழைத்து அவரைச் சுற்றி நின்றுகொண்டு அவரைக் கைது செய்யக் காரணமாக இருந்தான். துரோகியின் துரோகச் செயல் வெற்றி பெற்றது.
1859-ஆம் வருஷம் ஏப்ரல் மாதம் 7-ஆம் தேதி தாந்தியா தோபே கைது செய்யப்பட்டார். வழக்கம் போல் விசாரணை எனும் நாடகத்தை நடத்தி அவருக்குத் தூக்கு தண்டனை விதித்தனர்...
தூக்குமேடைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது, அவர் ஒரு அறைகூவல் விடுத்தார். "அடிமைச்சங்கிலிகளில் இருந்து நான் விடுதலை பெற வேண்டும். பீரங்கியின் வாயில் தெறிக்கும் குண்டில் என் தலை சிதற வேண்டும்; அல்லது தூக்குக் கயிற்றில் என் கழுத்து முறிய வேண்டும்" என்றார்.
தூக்கில் இடுதவற்கு முன்பு, அந்தக் கயிறைத் தானே கழுத்தில் எடுத்து  மாட்டிக்கொண்டு, நின்றுகொண்டு இருந்த நாற்காலியை தம் காலால் எட்டி உதைத்தார் ஈடு  இணையற்ற பாரத தாயின் வீர புதல்வன்..
அவரது உயிர் அற்ற உடல், அந்த நாள் முழுவதும் தொங்கிக் கொண்டு இருந்தது. அங்கே இருந்த இராணுவ வீரர்கள், ஆங்கிலத் தளபதிக்குத் தெரியாமல் சல்யூட் செய்தார்கள். பொதுமக்கள் அவர் உடலில் இருந்த தலைமுடியின் ஒவ்வொரு மயிரையும் பிடுங்கி எடுத்துக்கொண்டு போய், பொக்கிசமாகப் பாதுகாத்தார்கள்.
இத்தகைய வீரத்திருமகன் உயிர்நீத்த நாள் ஏப்ரல் 18.
அந்த தூக்கு மரத்தில் அந்த மாவீரனின் ஆவி பிரிந்தது; பாரதம்  ஒரு வீரப் புதல்வனை இழந்தது. செய்தி கேட்டு தேசபக்தர்கள் எல்லோருமே கதறி அழுத காட்சியை இன்று நாம் மனக்கண்களால் தான் பார்க்க முடியும்.
வாழ்க தேசபக்தன் மாவீரன் தாந்தியா தோபேயின் புகழ்.!
மறக்கடிக்கப்பட்ட மாவீரர்களை நினைவு கூர்வோம்....

Monday, April 17, 2017

108 நற்பண்புகள்


1.  வைராக்கியம்  (Assertiveness)
2.  தேசநலன் (Citizenship)
3.  நிறைவேற்றுதல் (Chivalry)
4.  துணிச்சல்  (Courage)
5.  கீழ்படிதல்  (Obedience)
6.  வெளிப்படையாக  (Openness)
7.  ஒழுங்குமுறை  (Order)
8.  ஏற்றுக்கொள்ளுதல் (Acceptance)
9.  ஆன்மிகம்  (Spirituality)
10.கருணை  (Mercy)
11.இரக்கம் (Compassion)
12.காரணம் அறிதல் (Consideration)
13.அக்கறையுடன்  (Mindfulness)
14.பெருந்தன்மை (Endurance)
15.பண்புடைமை (Piety)
16. அஹிம்சை  (Non violence)
17.துணையாக  (Subsidiarity)
18.சகிப்புத்தன்மை (Tolerance)
19. ஆர்வம் (Curiosity)
20. வளைந்து கொடுத்தல்  (Flexibility)
21.நகைச்சுவை (Humor)
22. படைப்பிக்கும் கலை  (Inventiveness)
23.வழிமுறை  (Logic)
24.எழுத்து கற்க பிரியம் (Philomathy)
25.காரணம்  (Reason)
26.தந்திரமாக  (Tactfulness)
27.புரிந்து கொள்ளுதல்  (Understanding)
28.பிறர் நலம் பேணுதல் ( Altruism )
29.நன்மை செய்ய விரும்புதல் (Benevolence)
30.அறம் (Charity)
31.உதவுகின்ற  (Helpfulness)
32.தயாராக  இருப்பது  (Readiness)
33.ஞாபகம் வைத்தல்  (Remembrance)
34.தொண்டு செய்தல்  (Service)
35.ஞாபகசக்தி  (Tenacity)
36மன்னித்தல்  (Forgiveness)
37.வாக்குறுதி  (Commitment)
38.ஒத்துழைப்பு  (Cooperativeness)
39.சுதந்திரம்  (Freedom)
40.ஒருங்கிணைத்தல்  (Integrity)
41.பொறுப்பு (Responsibility)
42.ஒற்றுமை  (Unity)
43.தயாள குணம் (Generosity)
44.இனிமை  (Kindness)
45.பகிர்ந்து கொள்ளுதல்  (Sharing)
46.சுத்தமாயிருத்தல்  (Cleanliness)
47.அருள் (Charisma)
48. தனித்திருத்தல்  (Detachment)
49.சுதந்திரமான நிலை (Independent)
50.தனிநபர் உரிமை (Individualism)
51.தூய்மை  (Purity)
52.உண்மையாக  (Sincerity)
53.ஸ்திரத்தன்மை  (Stability)
54.நல்ஒழுக்கம்  (Virtue ethics)
55.சமநிலை காத்தல் (Balance)
56.பாரபட்சமின்மை (Candor)
57.மனஉணர்வு (Conscientiousness)
58.உள்ளத்தின் சமநிலை  (Equanimity)
59.நியாயம் (Fairness)
60. நடுநிலையாக  (Impartiality)
61. நீதி (Justice)
62.  நன்னெறி  (Morality)
63.நேர்மை  (Honesty)
64.கவனமாக இருத்தல்(Attention)
65.விழிப்புணர்வுடன் இருத்தல் (Awareness)
66.எச்சரிக்கையாக இருத்தல் (Cautiousness)
67.சீரிய யோசனை (Consideration)
68.பகுத்தரிதல்  (Discernment)
69. உள் உணர்வு  (Intuition)
70.சிந்தனைமிகுந்த  (Thoughtfulness)
71.கண்காணிப்பு  (Vigilence)
72.அறிவுநுட்பம் (Wisdom)
73.லட்சியம்  (Ambition)
74.திடமான நோக்கம்  (Determination)
75.உழைப்பை நேசிப்பது  (Diligence)
76.நம்பிக்கையுடன்  (Faithfulness)
77.விடாமுயற்சி  (Persistence)
78.சாத்தியமாகின்ற  (Potential)
79.நம்பிக்கைக்குரிய  (Trustworthiness)
80.உறுதி (Confidence)
81.ஊக்கத்துடன் முயற்சி (Perseverance)
82.கண்ணியம்  (Diginity)
83.சாந்த குணம் (Gentleness)
84.அடக்கம்  (Moderation)
85.அமைதி (Peacefulness)
86.சாதுவான  (Meekness)
87.மீளும் தன்மை  (Resilience)
88.மௌனம் (Silence)
89.பொறுமை (Patience)
90.செழுமை  (Wealth)
91.சுய அதிகாரம் (Autonomy)
92.திருப்தி (Contentment)
93.மரியாதை (Honor)
94.மதிப்புமிக்க  (Respectfulness)
95.கட்டுப்படுத்துதல்  (Restraint)
96.பொது கட்டுப்பாடு  (Solidarity)
97.புலனடக்கம்  (Chasity)
98.தற்சார்பு  (Self Reliance)
99. சுயமரியாதை  (Self-Respect)
100.உருவாக்கும் கலை (Creativity)
101.சார்ந்திருத்தல்  (Dependability)
102.முன்னறிவு  (Foresight)
103.நற்குணம் (Goodness)
104.சந்தோஷம்  (Happiness)
105.ஞானம் (Knowledge)
106.நேர்மறை சிந்தனை  (Optimism)
107.முன்யோசனை  (Prudence)
108.விருந்தோம்பல் (Hospitality)

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...