Saturday, December 14, 2019

அமர்சிங் Vs ஜகாங்கீர்

பிரதாப்பின் புதல்வர் அமர்சிங் ஜகாங்கீருடன் 17 முறை போர் புரிந்தார் 
17 முறையும் மொகலாய  படைகள் துரத்தி அடிக்கப்பட்டது.
 
இறுதிப்போர்  ஒண்டாலா கோட்டைக்குமுன் நடந்தது 

இளவரசர் குர்ரத்தின் தலைமையில் பெரும்படை ஒண்டாலாவை முற்றுகை  இட்டது.

நடு இரவு  

ராஜபுத்திர பட்டத்து யானை பிளிற,
 கோட்டைக்கதவுகள் திறந்தன 

மாவீரர் ஜெயன்த்   சந்தாவத்   தலைமையில் மின்னலென வெளியே வந்த ராஜபுத்திர படைகள் மொகலாய படைகளை  துவம்சம் செய்ய  ,கூடாரங்கள் கொளுத்தப்பட, குர்ரத்தின் பாதுகாப்புப்படை அவரை இரண்டு மைல் அப்பால் தூக்கிக்கொண்டு ஓடின. 

மொகலாய படை நிலை குலைந்து பாதியாக குறைந்தது. 

வெற்றியுடன் ராஜபுத்திர படைகள் மறுபடியும் கோட்டையில்  நுழைந்தது  

இந்த வெற்றிக்கு பிறகும் அமரசிங் சமாதானத்துக்கு  ஒப்புக்கொண்டார் .ஏன் தெரியுமா?

ஜகாங்கீர் டைரி குறிப்புகளிலிருந்து அவரது சொந்த வார்த்தைகளில் :

" நான் பதவி ஏற்று எட்டாவது வ்ருடம் என் அதிருஷ்ட மகன் குர்ரம் ஒண்டாலா கோட்டையை  பிடிக்கமுடியாவிட்டாலும் அதை சுற்றியுள்ள பிரமுர்களின் மனைவியர், மகள், முதியோரை 
சிறைபிடித்து கூடுகளில் அடைத்து வைத்துவிட்டான் .
அவர்களை விடுவிக்க முடியாத நிலையில் 
வேறு வழி இல்லாமல் ராணா சமாதானத்துக்கு ஒப்புக்கொண்டு என் மகனுடன்  உடன்படிக்கை செய்துகொண்டார் "

இதே ராஜபுத்திர ஆவணங்களில்… 

சமாதானத்துக்கு செல்லுமுன் ...

" இந்த மகுடம் நான் தரித்திருப்பது எனக்காக அல்ல ...மக்களுக்காக என்ற ராணா, மகன் கருணாவின் நெற்றியில் சுக்லமிட்டு, இனி மேவாரின் கௌரவம் உன்கையில் என்று சொன்னார்.

பரிவார வங்களுடன் சென்று ஒப்பந்தம் கையெழுத்திட்டவர் திரும்பும்போது பின்தங்கி கோட்டைக்கு வெளியே தந்தை கட்டிய பாழடைந்த மண்டபத்தினருகே நின்றார் .

“ என் சாம்பலை என் தந்தையுடன் சேர்த்திடுங்கள் “ என்று சொல்லி உள்ளே நுழைந்தவர் அதன்பின் வெளியே வரவே இல்லை ...சாம்பலாகும்வரை .

படித்தபின் இலேசாக கண்கள் பனித்தது 

இவரை பற்றிய ராஜபுதன தெருப்பாடலை ஆங்கில ஆசிரியர் இப்படி மொழி பெயர்த்திருக்கிறார் : 

Rather than be less 
Cared not to be at all

Sunday, December 8, 2019

நைக்கிதேவி VS கோரி

இன்றைய ஈரானை தாய்நாடாக கொண்ட முஹம்மத் கோரி 1173 இல் கஜினியின் முஹம்மத் நகரை  தீக்கு இரையாக்கினான். 

எதனால் முஹம்மது கோரி அவ்வாறு செய்தான் ?

முஹம்மத் கோரியின் மூதாதையர் முஹம்மத் இப்ன் சுரி கஜினி மஹ்மூத்தால் கொல்லப்பட்டான்.

அதாவது கிபி 1030 திலேயே கஜினி மஹ்மூத் இறந்து விட்டான்.

143 ஆண்டுகளுக்கு முன்னர் இறந்த கஜினி மஹ்மூத் செய்த கொலைக்காக 1173 இல் முஹம்மத் கோரி கஜினியை கொளுத்தினான் என்றால் அப்ப கோரியின் மனதிலே எத்தகைய ஒரு பழிவாங்கும் வெறி இருக்கும்.

நாடி, நரம்பு, எலும்பு, சதை, ரத்தம், புத்தி னு எல்லாத்து லயும் பழிவாங்கற உணர்வு ஊறிப்போன ஒருத்தனால தான் இப்படி செய்ய முடியும்.

கஜினியை தீயிட்டு கொளுத்திய பின்னர் அந்த நகரில் மிஞ்சிய பகுதிகளில் சிலவற்றை அவன் சீர்படுத்தி அந்த கஜினியையே அவன் தனது மையப்பகுதியாக கொண்டு பல்வேறு பகுதிகளில் முஹம்மத் கோரி தாக்குதல் நடத்தினான். அங்கிருந்து நேராக முல்டான் சென்ற கோரி. முல்டானை தனது ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக மாற்றினான். அதன் பின்னர் ராஜஸ்தான் வந்த அவன் ராஜஸ்தான் பாலைவனம் வழியாக குஜராத் நோக்கி வந்தான். அங்கே அவன் தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்த வேளையில் அப்பொழுது அந்த பகுதியை ஆண்டு கொண்டிருந்த ராஜமாதா நைக்கிதேவியின் அழகை அவன் ஒற்றர்கள் மூலம் கேள்விப்பட அதனால் அவன் தனது தாக்குதல் நடத்தும் திட்டத்தை கொஞ்சம் தள்ளி வைத்தான்.

அப்பொழுது அந்த பகுதி சோலாங்கி [ Solanki ] சாம்ராஜ்யத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. சாளுக்கியர்களின் வழிவந்தவர்கள் தான் சோலாங்கிகள். கிபி 940 முதல் 1244 வரை சோலாங்கி பேரரசு இந்த பகுதியை ஆட்சி செய்தது.

அப்பொழுது சோலாங்கி பேரரசின் பட்டத்து ராஜா இரண்டாம் பீம்தேவ் சிறுகுழந்தை அதனால் பீம்தேவின் அம்மா ராணி நைக்கிதேவி தான் தனது மகனின் படைக்கு தளபதியாக இருந்து ஒரு ராஜமாதாவாக சிறப்பாக அந்த பகுதியை ஆட்சி செய்து கொண்டிருந்தார். ராணி நைக்கி தேவி யின் அழகை தனது ஒற்றர்கள் மூலம் கேள்விப்பட்ட முஹம்மத் கோரி அவளை அடைவதற்கு விரும்பினான். அதனால் அவன் நைக்கி தேவிக்கு தனது தூதுவன் மூலம் ஓலை அனுப்பினான். அந்த ஓலையில் கோரி என்ன சொல்லி இருந்தான் என்றால்.

இதுவரை நான் படை எடுத்து சென்ற அணைத்து இடங்களிலும் எனக்கு வெற்றி மட்டுமே கிடைத்துள்ளது. வலிமையான பல சாம்ராஜ்யங்கள் கூட என்னால் வீழ்த்தப்பட்டு அங்கு இன்று எனது கொடி பறந்து கொண்டிருக்கிறது. இந்த சிறிய ராஜ்யத்தை வீழ்த்துவது எனக்கு ஒரு பெரிய விஷயமே அல்ல. ஆனால் இங்கு எனக்கு போர் புரிவதில் விருப்பம் இல்லை. அதற்கு காரணம் இப்பொழுது இந்த தேசம் ஒரு பலவீனமான பெண்ணால் ஆளப்பட்டு கொண்டிருக்கிறது என்பதால் நான் இந்த ராஜ்யத்திற்கு கருணை காட்டலாம் என்று நினைக்கிறேன். ஆனால்? நீ எனது கருணையை பெற வேண்டுமானால் என்னிடம் சரணடைய வேண்டும். எனது அடிமையாக நீ ஆகி என்னை நீ கட்டிலில் மகிழ்விக்க வேண்டும். அவ்வாறு நீ செய்யவில்லை என்றால் எனது வாளிற்கு நீ பதில் சொல்ல வேண்டி வரும். நீ என்னிடம் சரண் அடைகிறாயா இல்லை எனது வாளிற்கு பதில் சொல்கிறாயா?

கோரி தூது அனுப்பிய ஓலையை படித்த ராணி நைக்கி தேவி அந்த தூதுவனை பார்த்து ஒரு சிரிப்பு சிரித்தார். நான் உனது எஜமானர் கோரியை இந்த நாளில். இன்ன தேதியில் கயாதாரா என்னும் இடத்தில் வந்து சந்திக்கிறேன் என்று சொல். அனைத்தும் உனது எஜமானர் கோரியின் விருப்பப்படியே ஆகட்டும். அதற்கு முன்பாக நான் துவாரகை கிருஷ்ணரை கொஞ்சம் வேண்டி விட்டு வருகிறேன் என்று சொல்லி நைக்கி தேவி அந்த தூதுவனை அனுப்பி வைத்தார்.

அதாவது நைக்கி தேவி இந்த கோரி போன்ற அரேபிய அடிமைகள் குறித்து நன்கு அறிந்து வைத்திருந்தார்.

கோரியின் கோரிக்கையை என்னால் ஏற்க முடியாது என்று நான் சொன்னால் கோரியின் படை எவ்வித முன் அறிவிப்பும் இல்லாமல் என் நாட்டில் உள்ள பொதுமக்கள் மீது திடீர் தாக்குதலை செய்யலாம். அதனால் யுத்தம் என்பது எனது படைக்கும், கோரி படைக்கும் மட்டும் தான் இருக்க வேண்டும். இந்த யுத்தத்தில் பொதுமக்கள் யாருக்கும் எந்த ஒரு சின்ன பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்று நைக்கிதேவி அம்மையார் நினைத்தார். அதன் காரணமாக தான் நைக்கி தேவி இந்த தந்திரத்தை செய்தார். அதே சமயம் நைக்கிதேவி வீரமும், துணிவும் மிக்க பெண் என்பதை முஹம்மத் கோரி ஏற்கனவே கேள்விப்பட்டு இருந்தான். அதனால் நைக்கிதேவி உடனே சரணடைய ஒத்து கொண்டதன் பின்னால் எதோ ஒரு சதித்திட்டம் இருக்கிறது என்பதை முஹம்மத் கோரி அறிந்து கொண்டான்.

முஹம்மத் கோரி ஒரு கொடியவன் அதே சமயம் அவன் ஒன்னும் முட்டாள் அல்ல. ஒருவேளை நமது திட்டத்தை அவன் சரியாக யூகித்து இருக்கலாம். ஒருவேளை அவன் நம் திட்டத்தை சரியாக யூகித்து இருந்தால். அதனால் நாம் சிறு படையோடு அங்கே செல்வது நமக்கும் ஆபத்து, நம் தேசத்திற்கும் ஆபத்து என்பதை புரிந்து கொண்ட நைக்கி தேவி அம்மையார் 20 ஆயிரம் வீரர்கள் கொண்ட படையோடு கயாதாரா என்னுமிடத்திற்கு விரைந்தார்.

முதலில் நைக்கிதேவி துவாரகை கிருஷ்ணர் கோவிலுக்கு சென்றார். ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா என்று முழங்கியவாறே கோவிலில் இருந்து வெளியே வந்த நைக்கிதேவி அம்மையார் குதிரை மீது பாய்ந்து அமர்ந்து வீறுகொண்டு புறப்பட்டார்.

நைக்கிதேவி ஒரு பெரிய படையோடு கயாதாரா வரும் தகவலை முஹம்மத் கோரி தனது ஒற்றர்கள் மூலம் உறுதிப்படுத்தி கொண்டான் உடனே முஹம்மத் கோரி தனது படையினர் சுமார் 50 ஆயிரம் பேரை ஒன்று திரட்டி கயாதாரா வில் நிற்க வைத்தான்.

குதிரை மீது அமர்ந்து ராணி நைக்கி தேவி வரும் அந்த தோரணையை தூரத்தில் இருந்து பார்த்த கோரிக்கு உடலில் லேசான ஒரு நடுக்கம் வந்தது. அதுவரை அவன் அத்தகைய ஒரு துணிவு மிக்க, வீரம்மிக்க பெண்ணை பார்த்தது இல்லை. நான் உன்னோடு கட்டிலில் படுக்க வரவில்லை உன்னை இங்கே வெட்டி வீழ்த்தவே நான் வந்தேன் என்று நைக்கிதேவி சொன்னவாறே தனது வாளினை உயர்த்த அடுத்த நொடி நைக்கிதேவி அம்மையாரின் படைக்கும், கோரியின் படைக்கும் ஆக்ரோஷமான யுத்தம் நடந்தது.

நைக்கிதேவி யின் படையில் வெறும் 20 ஆயிரம் வீரர்கள் தான். கோரியின் படையிலோ 50 ஆயிரம் அதே சமயம் நைக்கிதேவி அம்மையாரின் படையில் இருந்த ஒவ்வொரு வீரனும் கோரி படையில் இருந்த 3 வீரர்களை அடித்து கொல்லும் அளவு வலிமை மிக்கவர்களாக இருந்தார்கள். நைக்கிதேவி அன்று கயாதாரா யுத்தத்தில் சுழற்றிய அந்த வாளின் வீச்சு என்பது மிக வேகமாக ஓடும் ஒரு வண்டியின் சக்கரம் எவ்வாறு சுழலுமோ அதுபோல் நைக்கி தேவி அம்மையாரின் வாள் சுழண்டது. கோரி படையில் இருந்த பலநூறு பன்றிகளின் தலைகளையும், மார்பினையும் நைக்கிதேவி யின் வாள் பதம் பார்த்தது.

ஒரு கட்டத்தில் நைக்கிதேவி க்கும், முஹம்மத் கோரிக்கும் நேரடி யுத்தம் நடந்தது அதில் நைக்கிதேவி க்கு உடலில் சிறு காயம் உற்றாலும் முஹம்மத் கோரிக்கு மிகப்பெரிய அளவில் உடலில் காயங்கள் ஏற்பட்டது.

அந்த நேரம் கயாதாரா மண்ணிற்குள் மறைந்து இருந்த கோரி படையை சேர்ந்த 30 வீரர்கள் மண்ணில் இருந்து வெளியே வந்து நைக்கிதேவியை பின் பக்கமாக சூழ்ந்து தாக்குதல் நடத்த அதில் நைக்கிதேவி கீழே விழுந்தார். நைக்கிதேவி கீழே விழுவதற்கு முன்பே முஹம்மத் கோரி கீழே விழுந்து கிடந்தான்.

கோரியின் படையில் இருந்த 50 ஆயிரம் பேரில் மிஞ்சியது வெறும் 1700 த்தி சொச்சம் வீரர்கள் தான். நைக்கிதேவியின் ஆக்ரோஷ தாக்குதலில் முஹம்மத் கோரியின் படையில் இருந்த 95 சதவீதம் வீரர்கள் காலி ஆனார்கள். ஆனால் நைக்கிதேவியின் படையில் இருந்த 20 ஆயிரம் வீரர்களில் வெறும் 7 ஆயிரம் வீரர்களே இறந்தார்கள்.

அத்தகைய சூழலில் நைக்கிதேவி படையை எதிர்த்து போரிட்டாலும் வெல்ல முடியாது என்பதை உணர்ந்த அந்த 1700 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினார்கள்.

போர் செய்வதற்கு இப்பொழுது இது சரியான தருணம் அல்ல. நைக்கிதேவி தாக்கியதால் உயிருக்கு போராடி கொண்டிருக்கும் நம் மன்னரை முதலில் காப்பாற்ற வேண்டும் என்று முஹம்மத் கோரியின் படை வீரர்கள் நினைத்தார்கள். மண்ணுக்குள் மறைந்திருந்து பின்பக்கமாக கோரி படையின் கோழை வீரர்கள் நைக்கிதேவி யை தாக்கியதால் நைக்கிதேவி பலத்த காயங்களுடன் குதிரையில் இருந்து கீழே விழுந்தார். அந்த சூழலில் நாம் முதலில் நமது ராணியாரின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்னும் பதட்டத்தில் நைக்கிதேவி படையை சேர்ந்த வீரர்கள் இருந்தார்கள்.

ஒருபுறம் நைக்கிதேவியால் தாக்குதலுக்கு உள்ளான முஹம்மத் கோரிக்கு அன்று பஞ்சாபில் இருந்த முல்டானில் சிகிச்சை நடந்து கொண்டிருந்தது. இன்னொருபுறம் நைக்கிதேவி க்கு குஜராத்தில் சிகிச்சை நடந்து கொண்டிருந்தது.

முஹம்மத் கோரி சிகிச்சையின் மூலம் உயிர் பிழைத்தான், நைக்கிதேவி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

அன்று முஹம்மத் கோரியிடம் நைக்கிதேவி சரண் அடையவும் இல்லை, அவனோடு மோதி நைக்கிதேவி தோற்கவும் இல்லை. அன்று பல நாடுகளை நடுங்க வைத்து கொண்டிருந்த முஹம்மத் கோரியோடு நைக்கிதேவி அம்மையார் நேருக்கு நேர் மோதி அவனை வீழ்த்தினார். அன்று நைக்கிதேவி யின் வாள்வீச்சு வேகத்திற்கு முன்பாக முஹம்மத் கோரியால் நிற்க கூட முடியவில்லை. ஆனால் கோரியின் ஆட்களோ மண்ணுக்குள் மறைந்திருந்து திடீர் என்று வெளியே வெளிப்பட்டு நைக்கிதேவியின் முதுகில் தந்திரமாக தாக்கினார்கள்.

முஹம்மத் கோரியை முதன்முறையாக தோற்கடித்து அவனை ஓடவைத்த நைக்கிதேவி அம்மையாரை பற்றி நம்மில் எவ்வளவு பேர் முதலில் தெரிந்து வைத்திருக்கிறோம் ?

வீரப்பெண்மணி நைக்கிதேவி மாதாவின் வீரம் போற்றுவோம். 

நைக்கி தேவியின் வரலாற்றை பலர் அறியவேண்டும் என்று நீங்கள் நினைத்தால் இதை அதிகம் பகிருங்கள். 

இந்த மாதிரி நமது வீர வரலாறுகளை பாரதியர்களிடம் சென்று அடையாமல் பார்த்துக் கொண்டது கம்யூனிஸ்ட்களும் ...
காங்கிரஸ் அரசும் ...

courtesy : Chandran Muni

Thursday, November 14, 2019

ராணா பிரதாப் சிங்கை

அப்துல் ரகீம் கஹன்கான் தன் புரவியை லாயத்தில் விட்டு விட்டு வசந்த மாளிகைக்குள் நுழைந்து தனித்திருந்த அக்பரைப் பார்த்து வணங்கினான். தன்னுடைய ஹூக்காவில் மெய் மறந்திருந்த அக்பர் தன் சுய நினைவுக்குத் திரும்பியவனாக அப்துல்லை உட்காரும்படி சைகை செய்தான்.அப்துல் தனக்கெதிரே அமர்ந்திருந்த அக்பரை ஒரு முறை உற்று பார்த்தான்.அம்மை வடுக்கள் நிரம்பிய அதே நேரத்தில் கவர்ச்சி நிறைந்த அந்த முகத்தை நீண்ட காலமாக பார்த்து வருகிறான்.இப்போது அந்த முகத்தில்  சோகமும் வருத்தமும் இழையோடிக் கொண்டிருப்பதை அவன் காண்கிறான்.

“சொல்லுங்கள் சுல்தான்! என்னை அழைத்த காரணத்தை? “அப்துல்லின் குரல் மாளிகைச் சுவர்களில் எதிரொலிக்கிறது.

“ஒரு படையெடுப்பை நிகழ்த்தப் போகிறேன் அப்துல்.அதற்கு நீ தலைமை தாங்க வேண்டும்! அக்பரின் குரல் சன்னமாக ஒலிக்கிறது.

“கட்டளையிடுங்கள்.
வெற்றிகனியைப் பறித்து வந்து காலடியில் சமர்ப்பிக்கிறேன்! “

அக்பரின் முகத்தில் ஒரு ஏளனப் புன்னகை ஓடியது.

“ராஜபுதனத்தின் மேவார் ராஜ்ஜியம் நீ வெல்ல வேண்டியது.
கொல்ல வேண்டியது ராணா பிரதாப் சிங்கை! “கம்பீரமாக ஒலித்த அக்பரின் குரலால் அப்துல்லின் முகத்தில் பீதி தாண்டவமாடியது.

“ராஜபுதனத்தின் சிங்கத்தை வெல்லச் சொல்கிறீர்கள்? “

“என் படைபலம் உமக்கு உண்டு.”

“ராணாவைத் தேடிப் பிடிப்பது வைக்கோலில் விழுந்த ஊசியைத் தேடுவது போன்றது.
ராணாவை குறி வைக்கக் காரணம்? “

“இந்துஸ்தானம் என் காலடியில் விழுந்து கிடக்கிறது அப்துல்.
ராஜபுதனமும் கூட.
ஆனால் உதய்ப்பூர் என்னும் மேவார் விழ மறுக்கிறது.என்னைத் தொழவும் மறுக்கிறது.
காரணம் ராணா.
அவனது வீரம்.என்னை அவமானம் செய்து மகிழ்கிறான் அவன்.
அவனது ஆணவத்தை போக்கியாக வேண்டும்.
மொகல் ராஜ்ஜியத்தின் கரும்புள்ளியை கலைந்தாக வேண்டும்! 

“என்ன சொல்லி அவமானப்படுத்துகிறான் ராணா? “

“என்னை எதிர்க்கும் அரசர்களின் தங்கைகளையும், மகள்களையும் மணந்து அவர்களை அடக்குகிறேனாம். பெண்களின் பாவாடையால் விஸ்தரிக்கப்பட்டது மொகல் சாம்ராஜ்ஜியம் என்று அவமதிக்கிறான் ராணா! “

“அது மட்டுமா? தங்களுக்குப் பெண் கொடுத்த ராஜபுத்திர அரசர்களை, மதம் மாறியவர்களை ராணா சற்றும் மதிப்பதில்லை.
சபை நடுவே கிண்டல் செய்து அவமானப்படுத்துகிறான்.  கூட்டிக் கொடுத்தவர்கள் என்று கேவலப்படுத்துகிறான். அவர்களை ராஜபுத்திர இனத்திலிருந்தே ஒதுக்கியும் வைக்கிறான்.!”

“எனக்கு இணங்காமல் ராணா இறுமாப்புடன் இருக்க என்ன காரணம்? “

“சித்தூரை நாம் கைப்பற்றிய போது நடந்தவற்றை ராணா இன்னமும் மறக்கவில்லை.அவன் நெஞ்சில் அணையாத நெருப்பாய் அந்த துயரம் எரிந்து கொண்டேயிருக்கிறது.!”

“சித்தூரை நாம் வெற்றி கொண்ட போது என்ன நடந்தது? “

“வென்ற நீங்கள் மறந்து விட்டீர்கள்.
பாதிக்கப்பட்ட அவன் அதை மறக்கவேயில்லை.நம் கையில் அகப்படாதிருக்கும் பொருட்டு 25,000 பெண்கள் ஜஹர் என்னும் தீக்குளிப்பில் இறந்ததை ராணா இன்னமும் மறக்கவில்லை.
தோற்றோடி ஆரவல்லி மலைக் குன்றுகளில் ஒளிந்து வாழ்ந்ததை மறக்கவில்லை.
உதய்பூர் என்னும் மேவாரை உருவாக்கி அரசாண்டதை மறக்கவில்லை.!”

“பயத்தில் அவர்கள் இறந்ததற்கு நாம் என்ன செய்ய முடியும்.?”

“பயத்தை உருவாக்கியது நாம் தான்! “
“இருக்கலாம்!ஆனால் அவனுடைய உடன் பிறந்த சகோதரர்கள் ஜக்பல், சக்தி சிங், சரவ் சிங் அனைவரும் நம்முடன் இருக்கிறார்கள்.சொந்த ரத்தங்களை எதிர்த்து ராணா யுத்தம் செய்கிறான்.அந்த துணிச்சல்? “

“மகாபாரதத்திலிருந்த கிருஷ்ணா உபதேசம் தரும் தைரியமது.
ஜக்பல் மேவாரின் அரசனாக வேண்டியவன்.மக்களும் அரசு பிரதானிகளும் அதை விரும்பாததால் ராணா மன்னனாக்கப்பட்டான். வெறுப்படைந்த ஜக்பல் உங்களோடு சேர்ந்து கொண்டான்.தன் உற்றார் உறவினர்களை பகைத்துக் கொண்டு சொந்த சகோதரர்களின் துரோகத்தை சகித்து கொண்டு காட்டிலும் மேட்டிலும் ஒளிந்து கொண்டு ஒற்றை ஆளாக ரஜபுதன வீரத்தை மெய்பித்துக் கொண்டிருக்கிறான் ராணா.”

“அந்த இனத்தின் பெருமைக்கு அவன் ஒருவன் போதும்.!”

“வீரன் வீழ்ந்தாலும் அவன் இனத்திற்கு பெருமை சேர்த்து விட்டே வீழ்கிறான்.
துரோகி நெடுநாள் வாழ்ந்தாலும் இனத்தின் பெயரை சேதப்படுத்தி விடுகிறான்.”

“உண்மை தான்.
ராணாவின் நிலைக்கு நான் பரிதாபப்படுகிறேன்.
ஆனாலும் அவன் என் எதிரி.ஆகவே படையெடுப்பு துவங்கட்டும்.
ராணாவை உயிரோடு பிடிக்க முயற்சி செய்.!”

“விசித்திரமான விசயம் என்னவென்றால் உங்களின் தாத்தா பாபரை ராணாவின் தாத்தா ராணா சங்கா எதிர்த்தார்.இப்போது அவர்களின் பேரர்கள் களத்தில் எதிரெதிராக நிற்கிறீர்கள்! “

“தலைமுறை எதிரி! “என்றான் அக்பர்.

மறுநாள் அப்துல் ரகுமான் தலைமையிலான படை ரஜபுதனத்தை நோக்கி பயணமானது.தன் படைகளுடன் நிலை கொண்ட அப்துல் ராணாவைப் பிடிப்பதற்கான வியூகங்களை வகுக்க ஆரம்பித்தான்.அதே நேரம் படையை பின்பற்றி வந்து கொண்டிருந்த அப்துல்லின் மனைவியும் மகளும் வழி தவறியிருந்தனர்.
பல்லக்கு தூக்கிகளில் ஒருவன் “பேகம்! நாம் வழி தவறி விட்டோம்.
சரியான வழியை கண்டறிய முடியவில்லை! “என்றான்.

“அந்தி கவிழ்கிறது.
இனி என்ன செய்வது? “ஆயிசா குழம்பிக் கொண்டிருந்த போது அந்த குதிரை வீரர்கள் பல்லக்கு தூக்கிகளை சூழ்ந்தார்கள்.
பல்லக்கு தூக்கிகளில் ஒருவன் “பேகம்! பயம் வேண்டாம்! வழிப்பறி கொள்ளையர்களாக இருக்ககூடும்.
தளபதியின் பெயரைக் கேட்டதும் விலகி விடுவார்கள்! “என்றதுடன் அதை சொல்லவும் செய்தான்.
முன்னணியில் இருந்த குதிரை வீரன் உரக்கச் சிரித்ததுடன் “நல்லது.
நான் அமர்சிங்! ராணா பிரதாப் சிங்கின் மூத்த மகன்! “என்றான்.
பேகத்தின் முகம் சவமாக வெளுத்தது.
சேதியறிந்த அப்துல் எரிமலையானான்.

சற்று நேரத்தில் குதிரையில் வந்து இறங்கினான் ராணா பிரதாப்சிங்.

“வலிய வந்து மாட்டியிருக்கிறார்கள் எதிரியின் சொந்தங்கள்! “என்று அமர்சிங் ஆயிசாவையும் சாயீராவையும் சுட்டிக் காட்டினான்.

அருகே வந்து நின்ற ராணா “பயம் வேண்டாம் பெண்களே! என் பகை அப்துல்லோடு மட்டுமே! நீங்கள் என் விருந்தாளிகளே! இன்று இரவு பில் பழங்குடியினரோடு நீங்கள் தங்கலாம்.
நாளைக் காலை உங்களின் படைமுகாமுக்கு நானே அனுப்பி வைப்பேன்! “

சாயீரா ,அமர்சிங் பல்லக்கை மடக்கிய உடனேயே சேலைத் தலைப்பைக் கிழித்து ஆபரணங்களைக் கோர்த்து அவசரமாக இரண்டு ராக்கிகளை தயாரித்திருந்தாள்.

“உங்களை சகோதரர்களாக ஏற்க விரும்புகிறோம்.
கையை நீட்டுங்கள்! “
“அச்சம் வேண்டாம் பெண்ணே.
மனைவியைத் தவிர மற்ற பெண்களை சகோதரிகளாக எண்ணுவது தான் இந்துஸ்தானத்தின் பண்பாடு.அதற்கு நாங்கள் விதி விலக்கல்ல.உன் மனசாந்திக்காக அதை கட்டி கொள்ளச் சம்மதிக்கிறேன்.இந்த நேரத்தில் இதே ராக்கியை வைத்து அக்பர் செய்த அயோக்கிய தனத்தை சொல்ல வேண்டியது என் கடமை! “

“சொல்லுங்கள்.இதே ராக்கியை அக்பரின் கரத்தில் கட்டினாள் ராணி துர்க்காதேவி.
சகோதரியாக எண்ணாமல் அவளைக் கொன்றான் அக்பர்.
பெண்களை கொல்லக் கூடாது என்ற மத விதிகளை அவன் மதிக்கவில்லை.
ஆனால் எங்களின் போர் விதிகள் பெண்களை சீரழிக்க சொல்லவில்லை! “

“அக்பரை போல் நீங்களும் வாக்கு தவறி? “

“நான் ராணா பிரதாப்சிங் பெண்களே! அக்பரை போல் ஈனப் பிறவியல்ல நான்.
இந்துஸ்தானத்தின் பெருமைக்கு ஒரு தீங்கும் என்னால் நேராது.பெண்களால் ஒரு வெற்றி கிட்டுமெனில் தோற்பதையே பெருமையாகக் கருதுவேன்.!”

அதே நேரம் தீக்கனவுகளைக் கண்டு தூக்கமிழந்து கொண்டிருந்தான் அப்துல்.விடியற்காலை வேளையில் முகாமிற்கு வெளியே சத்தத்தை கேட்டு எழுந்து வந்தவன் அதிர்ந்தான்.

வெளியே கம்பீரமாக நின்று கொண்டிருந்தான் ராணா.அவனுடன் அமர்சிங்கும் பில் பழங்குடியினரும் பேகமும் நின்றிருந்தனர்.

“இதோ! உனக்குச் சொந்தமானவைகள்.
எந்த சேதமும் இன்றி திரும்ப ஒப்படைக்கிறேன்.
பெற்றுக் கொள் அப்துல்! “

பேகமும் மகளும் முன்னேறி முகாமுக்குள் வர தாக்க முனைந்த வீரர்களை அப்துல்லின் சைகை நிறுத்தியது.

“போய் வருகிறேன் அப்துல்.களத்தில் சந்திப்போம்! “ராணா தன் குதிரையில் தாவி ஏறினான்.

“ராணா!ஒரு கேள்வி? “

“கேள்! “

“உன் இடையில் இரண்டு வாள்கள் தொங்குகின்றனவே? எதற்காக? “

“நான் நிராயுதபாணிகளைக் கொல்வதில்லை.அப்படி சந்தர்ப்பம் வாய்த்து விட்டால் இந்த வாளில் ஒன்றைப் பரிசளிப்பேன்.போராடி வெல்வதே எனக்குப் பிடிக்கும்! “

“உன் வீரத்திற்கும், பெருந்தன்மைக்கும் தலை வணங்குகிறேன் ராணா! “

“ஜெய் பவானி! “என்ற முழக்கத்தோடு ராணாவின் குழு அங்கிருந்து கிளம்பியது.

“அசல் ராஜபுதன ரத்தத்தைப் பார்த்து விட்டேன்! “என்ற அப்துல் பேகத்தையும் மகளையும் தழுவிக் கொண்டான்.

அக்பரை இறுதி மூச்சுவரை எதிர்த்த பிரதாப் தன் 56 வது வயதில் மரணமடைந்தான்.

அவனுடைய மகன் அமர் சிங் மொகலாயப் படைகளை 13 முறை வென்று துரத்தியடித்தான்.

பிரதாப்பை எதிர்த்து போரிட முடியாது என்று பதவி விலகிய அப்துல் ரகீம் அக்பரின் மகன் சலீமின் மெய்க் காவலனாக நியமிக்கப்பட்டான்.

இழந்த மேவாரைத் திரும்ப பெறும் வரை ராணா வெறுந்தரையிலேயே உறங்கி சப்பாத்தியை மட்டுமே உண்டு வைராக்கியமாக வாழ்ந்து மேவாரை அக்பரிடமிருந்து கைப்பற்றினான்.

ஶ்ரீ ஶிவமஹிம்னஸ்தோத்ரம்

அத ஶ்ரீ ஶிவமஹிம்னஸ்தோத்ரம் ||
மஹிம்னஃ பாரம் தே பரமவிதுஷோ யத்யஸத்றுஶீ
ஸ்துதிர்ப்ரஹ்மாதீனாமபி ததவஸன்னாஸ்த்வயி கிரஃ |
அதா‌உவாச்யஃ ஸர்வஃ ஸ்வமதிபரிணாமாவதி க்றுணன்
மமாப்யேஷ ஸ்தோத்ரே ஹர னிரபவாதஃ பரிகரஃ || 1 ||

அதீதஃ பம்தானம் தவ ச மஹிமா வாங்மனஸயோஃ
அதத்வ்யாவ்றுத்த்யா யம் சகிதமபிதத்தே ஶ்ருதிரபி |
ஸ கஸ்ய ஸ்தோதவ்யஃ கதிவிதகுணஃ கஸ்ய விஷயஃ
பதே த்வர்வாசீனே பததி ன மனஃ கஸ்ய ன வசஃ || 2 ||

மதுஸ்பீதா வாசஃ பரமமம்றுதம் னிர்மிதவதஃ
தவ ப்ரஹ்மன்‌ கிம் வாகபி ஸுரகுரோர்விஸ்மயபதம் |
மம த்வேதாம் வாணீம் குணகதனபுண்யேன பவதஃ
புனாமீத்யர்தே‌உஸ்மின் புரமதன புத்திர்வ்யவஸிதா || 3 ||



தவைஶ்வர்யம் யத்தஜ்ஜகதுதயரக்ஷாப்ரலயக்றுத்
த்ரயீவஸ்து வ்யஸ்தம் திஸ்ருஷு குணபின்னாஸு தனுஷு |
அபவ்யானாமஸ்மின் வரத ரமணீயாமரமணீம்
விஹன்தும் வ்யாக்ரோஶீம் விததத இஹைகே ஜடதியஃ || 4 ||

கிமீஹஃ கிம்காயஃ ஸ கலு கிமுபாயஸ்த்ரிபுவனம்
கிமாதாரோ தாதா ஸ்றுஜதி கிமுபாதான இதி ச |
அதர்க்யைஶ்வர்யே த்வய்யனவஸர துஃஸ்தோ ஹததியஃ
குதர்கோ‌உயம் காம்ஶ்சித் முகரயதி மோஹாய ஜகதஃ || 5 ||

அஜன்மானோ லோகாஃ கிமவயவவன்தோ‌உபி ஜகதாம்
அதிஷ்டாதாரம் கிம் பவவிதிரனாத்றுத்ய பவதி |
அனீஶோ வா குர்யாத் புவனஜனனே கஃ பரிகரோ
யதோ மன்தாஸ்த்வாம் ப்ரத்யமரவர ஸம்ஶேரத இமே || 6 ||

த்ரயீ ஸாங்க்யம் யோகஃ பஶுபதிமதம் வைஷ்ணவமிதி
ப்ரபின்னே ப்ரஸ்தானே பரமிதமதஃ பத்யமிதி ச |
ருசீனாம் வைசித்ர்யாத்றுஜுகுடில னானாபதஜுஷாம்
ன்றுணாமேகோ கம்யஸ்த்வமஸி பயஸாமர்ணவ இவ || 7 ||

மஹோக்ஷஃ கட்வாங்கம் பரஶுரஜினம் பஸ்ம பணினஃ
கபாலம் சேதீயத்தவ வரத தன்த்ரோபகரணம் |
ஸுராஸ்தாம் தாம்றுத்திம் தததி து பவத்பூப்ரணிஹிதாம்
ன ஹி ஸ்வாத்மாராமம் விஷயம்றுகத்றுஷ்ணா ப்ரமயதி || 8 ||

த்ருவம் கஶ்சித் ஸர்வம் ஸகலமபரஸ்த்வத்ருவமிதம்
பரோ த்ரௌவ்யா‌உத்ரௌவ்யே ஜகதி கததி வ்யஸ்தவிஷயே |
ஸமஸ்தே‌உப்யேதஸ்மின் புரமதன தைர்விஸ்மித இவ
ஸ்துவன்‌ ஜிஹ்ரேமி த்வாம் ன கலு னனு த்றுஷ்டா முகரதா || 9 ||

தவைஶ்வர்யம் யத்னாத் யதுபரி விரிஞ்சிர்ஹரிரதஃ
பரிச்சேதும் யாதாவனலமனலஸ்கன்தவபுஷஃ |
ததோ பக்திஶ்ரத்தா-பரகுரு-க்றுணத்ப்யாம் கிரிஶ யத்
ஸ்வயம் தஸ்தே தாப்யாம் தவ கிமனுவ்றுத்திர்ன பலதி || 10 ||

அயத்னாதாஸாத்ய த்ரிபுவனமவைரவ்யதிகரம்
தஶாஸ்யோ யத்பாஹூனப்றுத ரணகண்டூ-பரவஶான் |
ஶிரஃபத்மஶ்ரேணீ-ரசிதசரணாம்போருஹ-பலேஃ
ஸ்திராயாஸ்த்வத்பக்தேஸ்த்ரிபுரஹர விஸ்பூர்ஜிதமிதம் || 11 ||

அமுஷ்ய த்வத்ஸேவா-ஸமதிகதஸாரம் புஜவனம்
பலாத் கைலாஸே‌உபி த்வததிவஸதௌ விக்ரமயதஃ |
அலப்யா பாதாலே‌உப்யலஸசலிதாம்குஷ்டஶிரஸி
ப்ரதிஷ்டா த்வய்யாஸீத் த்ருவமுபசிதோ முஹ்யதி கலஃ || 12 ||

யத்றுத்திம் ஸுத்ராம்ணோ வரத பரமோச்சைரபி ஸதீம்
அதஶ்சக்ரே பாணஃ பரிஜனவிதேயத்ரிபுவனஃ |
ன தச்சித்ரம் தஸ்மின் வரிவஸிதரி த்வச்சரணயோஃ
ன கஸ்யாப்யுன்னத்யை பவதி ஶிரஸஸ்த்வய்யவனதிஃ || 13 ||

அகாண்ட-ப்ரஹ்மாண்ட-க்ஷயசகித-தேவாஸுரக்றுபா
விதேயஸ்யா‌உ‌உஸீத்‌ யஸ்த்ரினயன விஷம் ஸம்ஹ்றுதவதஃ |
ஸ கல்மாஷஃ கண்டே தவ ன குருதே ன ஶ்ரியமஹோ
விகாரோ‌உபி ஶ்லாக்யோ புவன-பய- பங்க- வ்யஸனினஃ || 14 ||

அஸித்தார்தா னைவ க்வசிதபி ஸதேவாஸுரனரே
னிவர்தன்தே னித்யம் ஜகதி ஜயினோ யஸ்ய விஶிகாஃ |
ஸ பஶ்யன்னீஶ த்வாமிதரஸுரஸாதாரணமபூத்
ஸ்மரஃ ஸ்மர்தவ்யாத்மா ன ஹி வஶிஷு பத்யஃ பரிபவஃ || 15 ||


மஹீ பாதாகாதாத் வ்ரஜதி ஸஹஸா ஸம்ஶயபதம்
பதம் விஷ்ணோர்ப்ராம்யத் புஜ-பரிக-ருக்ண-க்ரஹ- கணம் |
முஹுர்த்யௌர்தௌஸ்த்யம் யாத்யனிப்றுத-ஜடா-தாடித-தடா
ஜகத்ரக்ஷாயை த்வம் னடஸி னனு வாமைவ விபுதா || 16 ||

வியத்வ்யாபீ தாரா-கண-குணித-பேனோத்கம-ருசிஃ
ப்ரவாஹோ வாராம் யஃ ப்றுஷதலகுத்றுஷ்டஃ ஶிரஸி தே |
ஜகத்த்வீபாகாரம் ஜலதிவலயம் தேன க்றுதமிதி
அனேனைவோன்னேயம் த்றுதமஹிம திவ்யம் தவ வபுஃ || 17 ||

ரதஃ க்ஷோணீ யன்தா ஶதத்றுதிரகேன்த்ரோ தனுரதோ
ரதாங்கே சன்த்ரார்கௌ ரத-சரண-பாணிஃ ஶர இதி |
திதக்ஷோஸ்தே கோ‌உயம் த்ரிபுரத்றுணமாடம்பர-விதிஃ
விதேயைஃ க்ரீடன்த்யோ ன கலு பரதன்த்ராஃ ப்ரபுதியஃ || 18 ||

ஹரிஸ்தே ஸாஹஸ்ரம் கமல பலிமாதாய பதயோஃ
யதேகோனே தஸ்மின்‌ னிஜமுதஹரன்னேத்ரகமலம் |
கதோ பக்த்யுத்ரேகஃ பரிணதிமஸௌ சக்ரவபுஷஃ
த்ரயாணாம் ரக்ஷாயை த்ரிபுரஹர ஜாகர்தி ஜகதாம் || 19 ||

க்ரதௌ ஸுப்தே ஜாக்ரத்‌ த்வமஸி பலயோகே க்ரதுமதாம்
க்வ கர்ம ப்ரத்வஸ்தம் பலதி புருஷாராதனம்றுதே |
அதஸ்த்வாம் ஸம்ப்ரேக்ஷ்ய க்ரதுஷு பலதான-ப்ரதிபுவம்
ஶ்ருதௌ ஶ்ரத்தாம் பத்வா த்றுடபரிகரஃ கர்மஸு ஜனஃ || 20 ||

க்ரியாதக்ஷோ தக்ஷஃ க்ரதுபதிரதீஶஸ்தனுப்றுதாம்
றுஷீணாமார்த்விஜ்யம் ஶரணத ஸதஸ்யாஃ ஸுர-கணாஃ |
க்ரதுப்ரம்ஶஸ்த்வத்தஃ க்ரதுபல-விதான-வ்யஸனினஃ
த்ருவம் கர்துஃ ஶ்ரத்தா-விதுரமபிசாராய ஹி மகாஃ || 21 ||

ப்ரஜானாதம் னாத ப்ரஸபமபிகம் ஸ்வாம் துஹிதரம்
கதம் ரோஹித்‌ பூதாம் ரிரமயிஷும்றுஷ்யஸ்ய வபுஷா |
தனுஷ்பாணேர்யாதம் திவமபி ஸபத்ராக்றுதமமும்
த்ரஸன்தம் தே‌உத்யாபி த்யஜதி ன ம்றுகவ்யாதரபஸஃ || 22 ||

ஸ்வலாவண்யாஶம்ஸா த்றுததனுஷமஹ்னாய த்றுணவத்
புரஃ ப்லுஷ்டம் த்றுஷ்ட்வா புரமதன புஷ்பாயுதமபி |
யதி ஸ்த்ரைணம் தேவீ யமனிரத-தேஹார்த-கடனாத்
அவைதி த்வாமத்தா பத வரத முக்தா யுவதயஃ || 23 ||

ஶ்மஶானேஷ்வாக்ரீடா ஸ்மரஹர பிஶாசாஃ ஸஹசராஃ
சிதா-பஸ்மாலேபஃ ஸ்ரகபி ன்றுகரோடீ-பரிகரஃ |
அமங்கல்யம் ஶீலம் தவ பவது னாமைவமகிலம்
ததாபி ஸ்மர்த்றூணாம் வரத பரமம் மங்கலமஸி || 24 ||

மனஃ ப்ரத்யக்சித்தே ஸவிதமவிதாயாத்த-மருதஃ
ப்ரஹ்றுஷ்யத்ரோமாணஃ ப்ரமத-ஸலிலோத்ஸங்கதி-த்றுஶஃ |
யதாலோக்யாஹ்லாதம் ஹ்ரத இவ னிமஜ்யாம்றுதமயே
ததத்யன்தஸ்தத்த்வம் கிமபி யமினஸ்தத் கில பவான் || 25 ||

த்வமர்கஸ்த்வம் ஸோமஸ்த்வமஸி பவனஸ்த்வம் ஹுதவஹஃ
த்வமாபஸ்த்வம் வ்யோம த்வமு தரணிராத்மா த்வமிதி ச |
பரிச்சின்னாமேவம் த்வயி பரிணதா பிப்ரதி கிரம்
ன வித்மஸ்தத்தத்த்வம் வயமிஹ து யத் த்வம் ன பவஸி || 26 ||

த்ரயீம் திஸ்ரோ வ்றுத்தீஸ்த்ரிபுவனமதோ த்ரீனபி ஸுரான்
அகாராத்யைர்வர்ணைஸ்த்ரிபிரபிததத் தீர்ணவிக்றுதி |
துரீயம் தே தாம த்வனிபிரவருன்தானமணுபிஃ
ஸமஸ்தம் வ்யஸ்தம் த்வாம் ஶரணத க்றுணாத்யோமிதி பதம் || 27 ||

பவஃ ஶர்வோ ருத்ரஃ பஶுபதிரதோக்ரஃ ஸஹமஹான்
ததா பீமேஶானாவிதி யதபிதானாஷ்டகமிதம் |
அமுஷ்மின் ப்ரத்யேகம் ப்ரவிசரதி தேவ ஶ்ருதிரபி
ப்ரியாயாஸ்மைதாம்னே ப்ரணிஹித-னமஸ்யோ‌உஸ்மி பவதே || 28 ||

னமோ னேதிஷ்டாய ப்ரியதவ தவிஷ்டாய ச னமஃ
னமஃ க்ஷோதிஷ்டாய ஸ்மரஹர மஹிஷ்டாய ச னமஃ |
னமோ வர்ஷிஷ்டாய த்ரினயன யவிஷ்டாய ச னமஃ
னமஃ ஸர்வஸ்மை தே ததிதமதிஸர்வாய ச னமஃ || 29 ||

பஹுல-ரஜஸே விஶ்வோத்பத்தௌ பவாய னமோ னமஃ
ப்ரபல-தமஸே தத் ஸம்ஹாரே ஹராய னமோ னமஃ |
ஜன-ஸுகக்றுதே ஸத்த்வோத்ரிக்தௌ ம்றுடாய னமோ னமஃ
ப்ரமஹஸி பதே னிஸ்த்ரைகுண்யே ஶிவாய னமோ னமஃ || 30 ||

க்றுஶ-பரிணதி-சேதஃ க்லேஶவஶ்யம் க்வ சேதம் க்வ ச தவ குண-ஸீமோல்லங்கினீ ஶஶ்வத்றுத்திஃ |
இதி சகிதமமன்தீக்றுத்ய மாம் பக்திராதாத் வரத சரணயோஸ்தே வாக்ய-புஷ்போபஹாரம் || 31 ||

அஸித-கிரி-ஸமம் ஸ்யாத் கஜ்ஜலம் ஸின்து-பாத்ரே ஸுர-தருவர-ஶாகா லேகனீ பத்ரமுர்வீ |
லிகதி யதி க்றுஹீத்வா ஶாரதா ஸர்வகாலம் ததபி தவ குணானாமீஶ பாரம் ன யாதி || 32 ||

அஸுர-ஸுர-முனீன்த்ரைரர்சிதஸ்யேன்து-மௌலேஃ க்ரதித-குணமஹிம்னோ னிர்குணஸ்யேஶ்வரஸ்ய |
ஸகல-கண-வரிஷ்டஃ புஷ்பதன்தாபிதானஃ ருசிரமலகுவ்றுத்தைஃ ஸ்தோத்ரமேதச்சகார || 33 ||

அஹரஹரனவத்யம் தூர்ஜடேஃ ஸ்தோத்ரமேதத் படதி பரமபக்த்யா ஶுத்த-சித்தஃ புமான் யஃ |
ஸ பவதி ஶிவலோகே ருத்ரதுல்யஸ்ததா‌உத்ர ப்ரசுரதர-தனாயுஃ புத்ரவான் கீர்திமாம்ஶ்ச || 34 ||

மஹேஶான்னாபரோ தேவோ மஹிம்னோ னாபரா ஸ்துதிஃ |
அகோரான்னாபரோ மன்த்ரோ னாஸ்தி தத்த்வம் குரோஃ பரம் || 35 ||

தீக்ஷா தானம் தபஸ்தீர்தம் ஜ்ஞானம் யாகாதிகாஃ க்ரியாஃ |
மஹிம்னஸ்தவ பாடஸ்ய கலாம் னார்ஹன்தி ஷோடஶீம் || 36 ||

குஸுமதஶன-னாமா ஸர்வ-கன்தர்வ-ராஜஃ
ஶஶிதரவர-மௌலேர்தேவதேவஸ்ய தாஸஃ |
ஸ கலு னிஜ-மஹிம்னோ ப்ரஷ்ட ஏவாஸ்ய ரோஷாத்
ஸ்தவனமிதமகார்ஷீத் திவ்ய-திவ்யம் மஹிம்னஃ || 37 ||

ஸுரகுருமபிபூஜ்ய ஸ்வர்க-மோக்ஷைக-ஹேதும்
படதி யதி மனுஷ்யஃ ப்ராஞ்ஜலிர்னான்ய-சேதாஃ |
வ்ரஜதி ஶிவ-ஸமீபம் கின்னரைஃ ஸ்தூயமானஃ
ஸ்தவனமிதமமோகம் புஷ்பதன்தப்ரணீதம் || 38 ||

ஆஸமாப்தமிதம் ஸ்தோத்ரம் புண்யம் கன்தர்வ-பாஷிதம் |
அனௌபம்யம் மனோஹாரி ஸர்வமீஶ்வரவர்ணனம் || 39 ||

இத்யேஷா வாங்மயீ பூஜா ஶ்ரீமச்சங்கர-பாதயோஃ |
அர்பிதா தேன தேவேஶஃ ப்ரீயதாம் மே ஸதாஶிவஃ || 40 ||

தவ தத்த்வம் ன ஜானாமி கீத்றுஶோ‌உஸி மஹேஶ்வர |
யாத்றுஶோ‌உஸி மஹாதேவ தாத்றுஶாய னமோ னமஃ || 41 ||

ஏககாலம் த்விகாலம் வா த்ரிகாலம் யஃ படேன்னரஃ |
ஸர்வபாப-வினிர்முக்தஃ ஶிவ லோகே மஹீயதே || 42 ||

ஶ்ரீ புஷ்பதன்த-முக-பங்கஜ-னிர்கதேன
ஸ்தோத்ரேண கில்பிஷ-ஹரேண ஹர-ப்ரியேண |
கண்டஸ்திதேன படிதேன ஸமாஹிதேன
ஸுப்ரீணிதோ பவதி பூதபதிர்மஹேஶஃ || 43 ||

|| இதி ஶ்ரீ புஷ்பதன்த விரசிதம் ஶிவமஹிம்னஃ ஸ்தோத்ரம்

Friday, November 1, 2019

முன்று வகை மனிதர்கள்

கிருபானந்த வாரியார் கூறியது

1. கஜ கர்ணம்🐘

2. அஜ கர்ணம்🐏

3. கோ கர்ணம்🐂

1. கஜகர்ணம் :

யானை தனது நான்கு கால்களையும் சரியாக ஊன்றி நிற்காது !!

அதுபோல சில மனிதர்கள் ஒரே விஷயத்தில் தங்கள் கருத்தைச் செலுத்தாமல், பல விஷயங்களில் ஈடுபட்டுக் குழம்புவார்கள்...

அவர்களை கஜகர்ணம் போடுபவர்கள் என்று அழைக்கிறோம்..

2. அஜகர்ணம் :

ஆட்டின் வாலைப் பிடித்து இழுத்தால் அது தன் தலையைத் தொங்கப்போடும் !!!

அதுபோல மனிதர்களில் சிலர் தங்கள் குறையை யாராவது சுட்டிக்காட்டினால் அவர்களை வெறுப்பார்கள்.... திரும்பிப் பார்க்க மாட்டார்கள்...

அவர்களை அஜகர்ணம் போடுபவர்கள் என்று அழைக்கிறோம்...

3.கோகர்ணம்

பசு மாட்டின் உடலில் எந்த இடத்தில் விரலால் தொட்டாலும், அந்த இடம் உணர்ச்சி வசப்பட்டு சிலிர்க்கும் !!!

அதுபோல அறிவாளிகள் எந்தச் சிறு குறையைச் சுட்டிக் காட்டினாலும் புரிந்துகொண்டு மன்னிப்புக் கேட்டுத் திருந்துவார்கள்...

இவர்களை கோகர்ணம் போடுபவர்கள் என்று அழைக்கிறோம்...

Tuesday, October 29, 2019

ஞானியாக மாறிய அலெக்ஸாண்டர்

சிந்துநதி கரை வரை  வரை வந்துவிட்டு போரஸுடன் சண்டையிட்டு வெல்லமுடியாமல்   சமாதானமும் செய்த காலங்களில் மகா அலெக்சாண்டருக்கு இந்திய மதமான இந்துமதத்திலும் அதன் சாராம்ச தத்துவங்களிலும் பெரும் ஈடுபாடு உண்டாயிற்று,

அந்த காலத்து ரிஷி தண்டமில்ஸ் என்பவரை தன்னை காண அழைக்கின்றான். அவர் அன்று பெயர் பெற்ற ஞானியும் முனிவருமாயிருந்தார்.

(தண்ட முனி அல்லது தண்டம் வைத்திருக்கும் முனி என்பதே தண்டமில்ஸ் என கிரேக்கர்களால் அழைக்கபட்டது என்பார்கள்)

ஒரு நதிகரை மணலில் படுத்திருந்த தண்டமில்ஸிடம் அலெக்ஸாண்டரின் அடிபொடிகள் வந்து செய்தியினை சொல்கின்றன, மகா மன்னன் அழைத்தும் அசால்ட்டாக மறுக்கின்றார் ஞானி

"அவன் உலக அரசனாக இருக்கட்டும், அவன் கங்கையினை தாண்டி உலக முடிவுவரை வெல்லட்டும் , எனக்கென்ன வந்தது?

எனக்கு அவன் யார்?

அவன் ஒருநாள் சாகத்தான் போகின்றான், அவன் அரசு ஒழியத்தான் போகின்றது, பேராசையில் நாடு நாடாக அலையும் அவன் தன்னை உணராதவரை நிம்மதி அடையமாட்டான், சூரியனின் பாதை எல்லாம் அவன் வென்றாலும் அவனுக்கு நிறைவு வராது,  அவனை நான் சந்திக்கவரமாட்டேன் என சொல்" என திருப்பிசொன்னார்

வீரர்கள் சீறினர், சிரத்தை கொய்வோம் என்றனர் "சாவே மனிதனுக்கான விடுதலை, முடிந்தால் கொன்றுவிடு, நானோ நீயோ உன் அலெக்ஸாண்டரோ காலம் காலமாக இருக்க போகின்றோமா?"

செய்தி அலெக்ஸாண்டருக்கு செல்கின்றது, அவன் ஓடிவந்து பார்க்கின்றான், வந்தவன் தன் சந்தேகங்களை எல்லாம் கேட்கின்றான்.

புளூடார்ச் எனும் மேற்கத்திய வரலாற்று எழுத்தாளன் அந்த சந்திப்பை இப்படி சொல்கின்றான்

ஞானமான மறைபொருள் கொண்ட வார்த்தைகள் இவை, ஞான மனங்களுக்கு அற்புதமாய் பொருள் விளங்கும்

" உயிருள்ளவையா? இறந்தவைவா? உலகில் எது அதிகம்

  நிச்சயம் உயிருள்ளவை, ஏனெனில் இறந்தவை என்பது இல்லவே இல்லை
 
  பெரிய மிருகம் பூமியில் உண்டா? கடலில் உண்டா?

   நிச்சயம் பூமியில் ஏனெனில் கடல் பூமியின் ஒரு பாகமே

பகலா இரவா எது முதலானது?

பகல்தான், ஏனென்றால் ஒளிதான் முதன்மையானது

   மனிதன் எந்த மிருகத்தை கண்டு அஞ்சுவான்

  இதுவரை காணாத மிருகத்தை
   
ஒரு மனிதன் எப்பொழுது தெய்வம் ஆகின்றான்?

  மற்ற மனிதனால் செய்ய முடியா காரியத்தை செய்யும் பொழுது

  ஒரு மனிதன் தன்னை எல்லோரும் நேசிக்க என்ன செய்ய வேண்டும்?

  ஒரு மனிதன் பெரும் சக்திவாய்ந்தவனாக இருந்தாலும் பிறர் தன்னை கண்டு பயப்படாமல் இருக்க செய்கின்றானோ அவனை எல்லோரும் நேசிப்பர்

வாழ்வா சாவா எது கொடுமையானது?

வாழ்வுதான், செத்தபின் ஏது கொடுமை?"

இந்த வரிகள் சாதாரணமாக தோன்றலாம் அதன் அர்த்தம் அழுத்தமானது

இறந்தவைகளை பற்றி நினையாதே, நடக்கும் காட்சிகளை மட்டும் பார் கவலை அறுபடும் என்கின்றது முதல் வாதம்

மிருகம் என்பது உன் உள்ளே உள்ளது என்கின்றது இரண்டாம் வாதம்

கடவுளே முதன்மையானவர் என்பது மூன்றாம் வாதம்

மனிதனுக்கு ஆசை கூடிகொண்டே போகும், எதிர்காலத்தை நினைத்து அஞ்சுவான் என்பது நான்காம் வாதம்

மக்களை வாழ வைப்பதே தெய்வத்தின் பணி என்பது ஐந்தாம் வாதம்

நீ பிறரை பயமுறுத்தி நேசிக்க வைக்காதே அது நிலைக்காது, உண்மையான மதிப்பு உன் வாள்முனையில் உதிக்காது என அவன் செவிட்டில் சொல்கின்றது ஆறாம் வாதம்

வாழ்வு போராட்டம் மிக்கது கடினமானது அந்த வாழ்வில் ஞானத்தை தேடி அடை வீணாக ஒன்றும் அறியாமல் செத்துவிடாதே என்கின்றது 7ம் வாதம்

கிரேக்க தத்துவமும், பிளேட்டோவும் அரிஸ்டாட்டிலும் கொடுக்கா பதிலை தண்டமில்ஸ் கொடுத்ததில் அசந்துவிடுகின்றான் அலெக்ஸாண்டர்

அவன் அசோகரை போல் மனம் மாறினான், போரை வெறுத்தான், அதன் பின் எந்த போரிலும் அவன் ஈடுபடவில்லை,

தன் ராஜ்யத்தை தன் வம்சத்துக்கு அல்லாமல் தளபதிக்கு பிரித்து கொடுக்கும் எண்ணம் அன்றே அவனுக்கு உதயமாயிற்று

பொன்னும் வெள்ளியும் தேடி இந்தியா வந்த அலெக்ஸாண்டர் கடைசியில் இந்து ஞானத்தில்  ஞானம் அடைந்து அந்த தண்டமில்ஸை தன்னோடு கிரேக்கத்துக்கு வர அழைத்தான், இந்த மாபெரும் ஞானம் கிரேக்கத்துக்கும் வேண்டுமென்றான், அந்த ரிஷியும் உடன் வந்தார்

அவரை அதன் பின்  சுவாமி ஸ்பைன்ஸ், சுவாமி காலன்ஸ் என்றும் பல பெயர்களில்    கிரேக்கத்தில் அழைத்தார்கள்

அந்த ஸ்பைன்ஸ் ஸ்வாமி பாபிலோனில் அலெக்ஸாண்டருக்கு முன்பே பாரசீகத்தில் இறந்தார், அதுவும் தன் சாவு வருவதை உணர்ந்தார்,

அக்கால ரிஷிகள் ஜலசமாதி, மண் சமாதி போல அக்னி சமாதியும் செய்வார்கள், எரியும் தீயில் இறங்கி வாழ்வை முடிப்பார்கள்

அப்படி அந்த ஸ்பைன்ஸ் முனிவரும் அலெக்ஸாண்டரின் படை வீரர்களிடம் விடைபெற்றார், அலெக்ஸாண்டரை பார்த்து சிரித்தார் அவனோ கலங்கி நின்றான்

அவரோ புன்னகைத்தபடி உன்னை விரைவில் பாபிலோனில் சந்திப்பேன் என சொல்லி தீயில் இறங்கினார்

அடுத்தவருடம் பாபிலோனில் இறந்தான் அலெக்ஸாண்டர்,

முனிவர் சொன்ன வார்த்தையின் பொருள் அதன் பின்பே கிரேக்கருக்கு புரிந்தது

இச்சம்பவம் கிரேக்க கதைகளிலும் புளூடார்ச் போன்ற பெரும் வரலாற்று எழுத்தாளர்கள் எழுத்திலும் உண்டு

அதை திட்டமிட்டு இங்கு மறைத்தார்கள் என்பதுதான் நிஜம்.

பெரும் சாம்ராஜ்யங்களை வென்று பெரும் பெரும் செல்வத்தை குவித்து மாபெரும் நிலத்தையும் பொன்னையும் பொருளையும் கோட்டைகளையும் சேனையினையும் குவித்த அலெக்ஸாண்டரை தோற்கடித்து ஞானியாய் திரும்ப செய்தது இந்து தர்மம்

உலகில் எத்தனையோ மதங்களும் கலாச்சாரமும் தத்துவமும் சுவடே இல்லாமல் அழிந்தபின்பும் பன்னெடுங்காலமாக நிலைபெற்றிருகின்றது இந்துமதம்

எப்படி?

"நீதிமான் என ஒருவனை கண்டேனாகிலும் அந்த ஊரை அழிக்கமாட்டேன்" என பைபிளில் சொல்கின்றார் கடவுள்

Tuesday, October 22, 2019

விநாயகா் சிறப்புத் தலங்கள்


1)அழகிய விநாயகா்_ திருவாவடுதுறை.

2)ஆண்ட விநாயகா் - திருநறையூா்ச்சீத்தீச்சரம்.

3)ஆதி விநாயகா்- திருவையாறு.

4)ஆழத்துப்பிள்ளையாா்- திருமுதுகுன்றம் (விருத்தாசலம்).

5)உச்சிப்பிள்ளையாா்- திருச்சிராப்பள்ளி

6)கங்கைக் கணபதி- திருக்குடந்தைகீழ்கோட்டம்.

7)கடுக்காய்ப்பிள்ளையாா்- திருக்காறாயில்.

8)கருக்குடிவிநாயகா்- திருக்கச்சூா்.

9)கள்ளவாரணப்பிள்ளையாா்- திருக்கடவூா்.

10)கற்பக விநாயகா்- பிள்ளையாா்பட்டி.

11)கூப்பிடு பிள்ளையாா்- திருமுருகன்பூண்டி.

12)கைகாட்டிவிநாயகா்- திருநாட்டியத்தான்குடி.

13)கோடிவிநாயகா்- திருக்கொட்டையூா்.

14)சிந்தாமணிகணபதி- திருமறைக்காடு (வேதாரண்யம்).

15)சுந்தரகணபதி- திருமழபாடி, திருக்கீழ்வேளூா்.

16)சூதவனப்பிள்ளையாா்- திருவுசாத்தானம்.

17)செவிசாய்த்தவிநாயகா்- திருஅன்பிலாலந்துறை.

18)சொா்ணவிநாயகா்- திருநள்ளாறு.

19)தாலமூலவிநாயகா்- திருக்கச்சூா்

20)துணையிருந்தவிநாயகா்- திருப்பனையூா்.

21)நாகாபரண விநாயகா்- திருநாகைக்காரோணம்.
(நாகப்பட்டிணம்).

22)நிா்த்தன விநாயகா்- திருஇன்னம்பா்.

23)படிக்காசு விநாயகா்- திருவீழிமிழலை.

24)படித்துறை விநாயகா்- திருவிடைமருதூா்.

25)பிரளயங்காத்த விநாயகா்- திருப்புறம்பயம்.

26)பொய்யா விநாயகா்- திருமாகறல்.

27)பொல்லாப் பிள்ளையாா்- திருநாரையூா்.

28)மாவடிப்பிள்ளையாா்- திருநாகைக்காரோணம்.

29)மாற்றுரைத்த விநாயகா்- திருவாரூா், திருமுதுகுன்றம்.

30)முக்குறுணிப்பிள்ளையாா்- திருஆலவாய் ,சிதம்பரம், மயிலாடுதுறை.

31)வரசித்தி விநாயகா்- திருவல்லம்.

32)வலஞ்சுழி விநாயகா்- திருவலஞ்சுழி.

33)வலம்புாி விநாயகா்- திருக்களா்

34)வாதாபி விநாயகா்- திருப்புகலூா், திருச்செங்காட்டாங்குடி.

35)வீரஹத்தி விநாயகா்- திருமறைக்காடு.

36)வெள்ளை விநாயகா்- திருவலஞ்சுழி.

37)வேதப்பிள்ளையாா். திருவேதிக்குடி.

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...