Saturday, July 7, 2012

கல்வி தரும் கலைமகள்


"வெள்ளை தாமரை பூவிலிருப்பாள்
வீணை செய்யும் ஒலியிலிருப்பாள்
கொள்ளை யின்பங் குலவு கவிதை
கூறு பாவலன் உன்னத் திருப்பல் " ---- மகாகவி பாரதியார்

அன்பார்ந்த வலைதள பார்வையாளர்களே ! கல்வியாளர்களே அனைவருக்கும் கல்வி,கலைகளுக்கு அதிபதியான கலைமகள் ஸ்ரீ சரஸ்வதி தேவியின் ஸ்ரீ பாத கமலம் பணிந்து ,'சரஸ்வதி பூஜை செய்யும் இந்நன்னாளில் கல்வியை பற்றி ஆய்வது தானே சிறப்பு எனவே கல்வி நிலையை பற்றி ஆய்வோமா ?

மேதைகளையும் ,கணிதவல்லுனர்களையும் ,தர்க்கவாதிகளையும் ,பேச்சாளர்களையும் ,மருத்துவர்களையும் ,பொறியாளர்களையும் ,ஜோதிடர்களையும் ,நடனம்,நாடகம்,நாட்டிய கலைஞர்களையும் உருவாக்கிடும் மூலகர்தா வித்யா காரகன் புதனே யாவார்

பாவங்களில் , கிரகங்களும் , ஜாதகரின் நிலையும் :-
லக்னத்தில் - சந்திரன் இருக்க ஜாதகர் பக்தி , ஞானம் , ஆசாரமுடையவராகவும்
- புதன் இருக்க இனியவாக்கும் , சாத்திர மறிந்தவராகவும்,
- குரு இருக்க புத்தி கூர்மை , அறிஞன் , பண்டிதனாகவும்
- சனி இருக்க நினைவாற்றல் அற்றவராகவும் இருப்பர் .

இரண்டாமிடத்தில் சந்திரன் இருக்க நல்ல படிப்பும் ,
- புதன் இருக்க நல்வாக்கு கல்வியுடையவனாகவும் ,
- குரு இருக்க அறிவு கூர்மை யுடையவனாகவும் இருப்பர்.

மூன்றாமிடத்தில் புதன் இருக்க சிறந்த அறிவுள்ளவனாகவும்
- குரு இருக்க கூர்மதியுடையவனாகவும்
- சனி இருக்க கல்வியிற் தடை , படிப்பில் மந்தகதி உடையவனாகவும் , சனிபலம் பெற - ஞானம் உண்டு .
- கேது இருக்க ஞானம் , வித்தை யுடையவனாகவும் இருப்பர் .

ஐந்தில் சந்திரனிருக்க நற்ப்புதியும் கல்வித்திறனும் உடையவனாகவும்,
- புதனிருக்க ஞானவிருத்தி , நர்கல்வியாலனாகவும் .

-குரு யிருக்க நற்புத்தி ,சாஸ்திர ஞான முடையவனாகவும் இருப்பான் .

ஒன்பதில் புதனிருக்க பண்டிதனாகவும் அறிஞனாகவும் ,
- குருவிருக்க நல்லறி உடையோனாகவும் இருப்பான் .

பத்தில் புதனிருக்க ஞானியாகவும் ,
- கேது இருக்க விவேகமிக்கவனாகவும் இருப்பான் .

பனிரெண்டில் குரு இருக்க புத்திசாலியாகவும்
- கேது இருக்க ஞான முடையவனாகவும் இருப்பான் .

பாவகாதிபதிகள் மாறிநின்ற பலன்கள் :-
---------------------------------------------------------- லக்னாதிபதி பலம்பெற்று 2 ல் இருக்க வாக்குவன்மை கல்வி கேள்விகளின் தேர்ச்சி பெற்றவராக ஜாதகர் திகழ்வார் லக்னாதிபதி 4 ல் பலம் பெற்றிருக்க கல்வியில் உயர்ந்த நிலை அடைவார் . இரண்டாமிடத்து அதிபதி லக்னத்திருக்க அறிவாளியாகவும். பட்டம் பெற்று உயர் பதவி அடைபவனாகவும் இருப்பார் . இரண்டாம் அதிபதி முன்றில் பல மற்றிருக்க கல்வி ஞானமில்லாதவனாகவும் . கல்வி கற்க சந்தர்பமுடையாதவனாகவும் இருப்பான் . இரண்டாமதிபதி பத்தில் பலமுடன் இருக்க கல்வியில் சிறந்தவனாகவும் ,சாஸ்திர ஆராயிச்சி , வாதத்திறன் ,ஆசிரியர் ,ஆச்சாரியாராவும் திகழ்வான் முன்றாமதிபதி லக்னத்தில் பலம் பெற்றிருக்க சினிமா,நாடகம் ,நாட்டியம்,சங்கிதம் ,என சகலகலா வல்லவனாக இருப்பான் . நான்காமதிபதி லக்னத்திலிருக்க (பலமுடன்) கல்வி திறன் மிக்கவன் . ஐந்தாமதிபதி லக்னத்தில் பலமுடன் இருக்க புத்தி , வித்தை , கல்வியிற் சிறந்தவனாகவும் இருப்பான் . ஐந்தாமதிபதி 4 ல் இருக்க படித்தவர்களின் நட்பு கிடைக்கும். ஐந்தாமதிபதி 5 ல் இருக்க ஜாதகரின் குழந்தைகள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவர் . ஐந்தாமதிபதி 6 ல் இருக்க புத்தி அற்றவனாகவும் நினைவாற்றல் இல்லாதவனாகவும் இருப்பான் . ஐந்தாமதிபதி 9 ல் சிறந்த கல்வி , ஒளிமயமான எதிர்காலம் உண்டு . பத்தாமதிபதி லக்னத்தில் பலம் பெற்றிருக்க ஞானமிக்கவனாக இருப்பான் . பத்தாமதிபதி 2 ல் (பலம்) வாக்குவன்மை , பேசுந்திரன் இருக்கும் . பத்தாமதிபதி 5 ல் (பலமுடன்) சாத்திரமறிந்த பண்டிதன் ஆவான் . பன்னிரெண்டாம் அதிபதி 2 ல் இருக்க கல்வியில் ஆர்வமும் ஊக்கமும் இருக்காது .
கிரக இணைவு பலன்கள் :
கல்வி பற்றி அறிய 2,4,5,11 ம் பாவநிலைகள் ஆராயப்பட வேண்டும் . இத்துடன் 8 , 12 சம்பந்தம் பெற கல்வி சிறக்காது / இருக்காது . 2 ம் பாவம்-ஆரம்பக்கல்வி
4 ,9 ,11 தேர்வுகளில் வெற்றி நான்காம் அதிபதி 4 ,9 ,11 ம் பாவத் தொடர்பு = உயர்கல்வி தொழிற்கல்வி அமையும் . சந்திரன் + செவ்வாய் அல்லது சூரியன் + செவ்வாய் - ராகு கேது தொடர்பு .
4 ,9 ,11 மற்றும் சூரியன் தொடர்பு (கன்னி , சிம்மம் , விருச்சிகம் , மீனம் லக்னம் ) - மருத்துவ கல்வி குரு இணைய = பொது மருத்துவர்
புதன் இணைய = நரம்பியல் நிபுணர்
செவ்வாய் இணைய = அறுவை சிகிச்சை நிபுணர்
சனி இணைய = எலும்பு முறிவு / பல் நிபுணர்
சுக்கிரன் இணைய = கண் மருத்துவர் சிறுநீரகம்
சுக்கிரன் + சந்திரன் = ENT நிபுணர்
சுக்கிரன் + ராகு = எக்ஸ்ரே ஸ்கேன் நிபுணர்
குரு + செவ்வாய் + சூரியன் = ஆயுர் வேத மருத்துவர்
குரு + சூரியன் + சனி = ஹோமியோ மருத்துவர்
சூரியன் + குரு = சித்த வைத்தியர்
சூரியன் + புதன் + குரு = தத்துவ ஞானி
சூரியன் + புதன் = விஞ்ஞானி , நிபுணத்துவம்
10 மிடத்துடன் புதன் தொடர்பு = எழுத்தாளர் ஆவார்
10 மிடத்துடன் சுக்கிரன் தொடர்பு = கவிஞர் ஆவார்
10 மிடத்துடன் குரு தொடர்பு = தத்துவ ஞானி ஆவார் .
6,8,12 ல் ராகு இருந்து ராகு திசையில் படிப்பே வராது .
சந்திரன் + ராகு = நல்ல படிப்பு வரும் .
புதன் + செவ்வாய் = படிப்பில் தடை ஏற்படும் .
2,5,11 சம்பந்தம் - முதுநிலை பட்டம் .
2 மிடம் - பள்ளிபருவம்
4 மிடம் - இளங்கலை , பட்டயப்படிப்பை குறிக்கும் .
2,9,11 - பி , எச் , டி
2,11 - ஆராய்ச்சிப் படிப்பை குறிக்கும்
எந்த நிலைக்கு , என்ன படிப்பு ஏற்படும் ?
1 . மேஷம் , விருச்சிகம் , செவ்வாய் , சந்திரன் ஆகியோர் பலம் பெற்றிருக்க மின்னியலிலும்
2 . மிதுனமும் , செவ்வாயும் பலம் பெற இலக்கியம் மற்றும் தகவல் தொடர்பு துறையிலும்
3 . புதன் , குரு , மிதுனம் , விருச்சிகம் பலம் பெற வானொலி கம்பி இல்லா தகவல் தொடர்பும்
4 . காற்று ராசிகளான மிதுனம் , துலாம் , கும்பம் , சூரியன் , குரு , புதன் , ஏரோ நாட்டிக்கல் , ஏவியேஷன் துறை
5 . மீனம் , தனுஷு குரு + சந்திரன் - சுக்கிரன் தொடர்பு = கடல் வழிக்கான துறை வாகனக்கல்வி
மீனம் + தனுஷு + குரு + சந்திரன் - செவ்வாய் தொடர்பு = கடற்படை
மீனம் + தனுஷு + குரு + சந்திரன் - புதன் தொடர்பு = வணிகம் மற்றும் பொறியியல்
6 . புதன் + குரு - பத்திரிகைத் துறை ( ஜர்னலிசம் )
7 . மேஷம் , செவ்வாய் குரு + சுக்கிரன் = ஆட்டோ மொபைல்
8 . சுக்கிரன் + சூரியன் - குரு தொடர்பு = சினிமாத்துறை
9 . பலம் மிக்க சுக்கிரன் + புதன் + சந்திரன் - சனி தொடர்பு = பொறியியற்கல்வி
10 . சூரியன் + புதன் + குரு தொடர்பு = பட்டயப் படிப்பு , ஆசிரியர் கல்வி
11 . சூரியன் + சனி + புதன் + செவ்வாய் அல்லது ராகு தொடர்பு - சட்டப்படிப்பு
13 . சூரியன் + புதன் + சுக்கிரன் = வணிக நிர்வாகம் (MBA) , கணினியியல் (PGDCA)
- புதன் வலுவுடன் இருந்தாலன்றி பட்டப் படிப்பு சாத்தியமாகாது .
- புதன் வலுவுடன் இருந்தாலும் , 2 ல் தீய கிரகம் இடம் பெற படிப்பில் தடை ஏற்படும் .
- புதன் பலத்துடன் இருந்தாலும் , லக்னாதிபதி பலமற்று 11 ல் இருக்க பட்டப் படிப்பு கேள்வி குறியாகும் . ஆயினும் தொழிற் கல்வி கை கொடுக்கும்
- ரிஷபம் , துலாம் , மகரத்திற்கு புதன் நலந்தரும் கிரகமாகும் .
- மிதுனம் , கன்னிக்கு - நன்மை , தீமை கலந்து தரும் கிரகமாகும் .
- கடகம் , மீனம் , தனுஷு , விருச்சிகம் , சிம்மம் , மேஷம் ஆகிய ராசிகளில் தீங்கு செய்தாலும் , 2 ம் அதிபதி பலம் பெற நற்கல்வி அமையும் .
கைரேகை சாஸ்திரம் :-
புதன் மேடு வனமாக இருக்க , கல்வியில் சிறந்தவராக இருப்பார் . புதன் மேட்டில் கீழ்க்கண்ட குறிகள் இருக்க ( முக்கோணக் குறி ) - மேடைப் பேச்சாளராகவும் , சூரிய மேட்டில் ( சதுரக் குறி ) இருக்க கலைத்துறையில் புகழ் பெறுவார் . சந்திர மேட்டில் ( வட்டக் குறி ) இருக்க இலக்கியவாதியாவார் .
கீழ் செவ்வாய் மேட்டிலிருந்து , புதன் மேடு நோக்கி சிறு சிறு ரேகைகள் இருக்க ஆராய்ச்சிக் கல்வியில் ஈடுபாடு ஏற்படும் . வாஸ்து :
அறிவை அபரிமிதமாக அளித்து ஞானத்தை பெருக்குபவன் ' ஈசானன் ' ஆவான் .
நாடி ஜோதிடம் :-
மேஷத்தில் புதன் :-
(புதன் + செவ்வாய்) , விவசாயம் , கல்வியில் தடை , தொழிற் கல்வி , மருத்துவ அறுவை சிகிச்சை
ரிஷப புதன் :-
(புதன் + சுக்கிரன் ) வணிகவியல் , கணிதம் , சட்டம் , பொருளாதாரம் , ஆகிய கல்விகளும் , கலைத்துறை , ஈடுபாடும் ஏற்படும் .
மிதுன புதன் :-
கணிப்பொறி , கணக்கியல் , வணிகவியல் படிப்புகளும் , எழுத்தாற்றல் , பேச்சாற்றல் , பத்திரிக்கைத்துறை , தகவல் தொடர்பு மற்றும் சிறந்த கல்வியும் உண்டு .
கடக புதன் :-
கலை , இலக்கியம் , மொழிக்கல்வி அமையும் (புதன் + சந்திரன் )
சிம்ம புதன் :-
அறுவை சிகிச்சை ( புதன் + சூரியன் ) பொறியியல் , சித்தா , சமூகவியல் , அரசியல் , தத்துவம் , சம்பந்தப்பட்ட கல்வி சிறக்கும் .
கன்னி புதன் :-
கணக்கியல் , வணிகவியல் , அனைத்து துறைகளிலும் கல்வி சிறக்கும் .
துலா புதன் :-
வணிகவியல் , அழகுக்கலை , சட்டம் , சங்கீதம் , கணக்கியல் , கலைக்கல்வி (சுக்கிரன் + புதன்) .
விருச்சிக புதன் :-
(செவ்வாய் + புதன் ) இயந்திர மற்றும் உலோக சம்பந்தமான கல்வி விவகாரம் , அறுவை மருத்துவக் கல்வி ஏற்படும் .
தனுஷு புதன் :-
(குரு + புதன்) தத்துவம் , பொருளாதாரம் , சட்டம் , கணக்கியல்
மகர புதன் :-
(சனி + புதன் ) சுரங்கவியல் , கனிமங்கள் , சம்பந்தமான கல்வி .
கும்ப புதன் :-
(சனி + புதன் ) மணவியல் , தத்துவம் , பொறியியல் , மருத்துவக் கல்வி சிறக்கும் .
மீன புதன் :-
(குரு + புதன் ) சாஸ்திரம் , வணிகவியல் , பொருளாதாரக் கல்வி தேர்ச்சி தரும் .
புத்த பகவான் ஸ்தோத்திரம் ப்ரயங்கி கலிகா ஸ்யாமம் ரூபேணா பிரதிமம் புதம் ! சௌம்ய சௌம்ய குணோ பேதம் ( இதை உச்சரிக்க ) தம்புதம் ப்ரணமாம் யாஹம் !! ( கல்வி ஞானம் பெருகும் )
புத காயத்ரி ஓம் கஜத் வஜாய வித் மஹே சுக ஹஸ்தாய தீமஹி ! தன்னோ புத பிரச் சோதயாத் !!
கல்வி சிறக்க சொல்ல வேண்டிய ஸ்லோகம் :-
ஞானானந்தமயம் தேவம் நிர்மல ஸ்படிகா க்ருதிம் !]
ஆதாரம் ஸர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ் மஹே !!
எனவே , அன்பர்களே ! கல்விக்கான பலநிலைகளை , கலைமகள் அருளால் ஆய்வு செய்தோம் . பயனுள்ளதாக அமைந்திருக்கும் என எண்ணி நிறைவு செய்கிறேன் .
வாழ்க வளமுடன்

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...