Friday, May 31, 2019

ஸ்ரீ லலிதா ஸௌபாக்ய ஸ்தோத்திரம்

ஸ்ரீ திரிபுர ரஹஸ்யம் எனும் ஓர் அரிய நூலில் காணப்படும் ஒரு மஹோன்னத பொக்கிஷம் இந்த “ஸௌபாக்ய ஆஷ்டோத்திர ஸதநாம ஸ்தோத்திரம்”. இதனை காமேஷ்வரனான சிவனே காமேஷ்வரியான தேவிக்கு அருளியதாக ஸ்ரீ பரசுராமருக்கு, ஸ்ரீ தத்தாத்ரேயர் உபதேஸிக்கிறார். இதிலுள்ள நாமாவளிகள் அனைத்தும் “ஸ்ரீ ஸௌபாக்ய வித்யா” மந்திரத்தை முன் வைத்து அமைக்கப்பட்டது.

“ஸ்ரீ வித்யா” என்ற அம்பிகையின் ஆராதனையை உபாஸிப்பவர்களுக்கு, பஞ்ச தஸாக்ஷரியிம் அதிலிருந்து பெறப்பட்ட ஸ்ரீ லலிதா த்ரிசதியும் இன்றியமையாதவை. ஸ்ரீ வித்யா பூஜாவிதிகளை கடைப்பிடிக்க மிகக்கடுமையான நியம, நிஷ்டைகள் மிக அவசியம். ஸ்ரீ வித்யா சம்பிரதாயத்தை கடைப்பிடித்து, உய்யும் வாய்ப்பு எல்லோருக்கும் எழிதில் கிட்டாது. அம்பிகையே விரும்பினால் தான், இம்மார்கம் வயப்படும் என்பது சான்றோர் வாக்கு.

அப்படிப்பட்ட அம்பிகையை எல்லோரும் வணங்கி, உய்யவே ஐயன் நந்தி வாஹனன், ஸ்ரீ தத்தர் – ஸ்ரீ பரசுராமர் மூலமாக உலகிற்கு இதை உறைத்தார் என்பது சான்றோர் கருத்து.

விமர்ஸ ப்ரணவங்கள்: ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஸௌ:

இதில் பாலா திரிபுரசுந்தரியின் மூலம் “ஐம் க்லீம் ஸௌ:” – இதை பஞ்சதசியின் ஒவ்வொரு கூடத்தின் முன்னும் சேர்த்தால் கிடைப்பது, “ஸௌபாக்ய வித்யா”. யாதெனில், “ஐம் க ஏ ஈ ல ஹ்ரீம், க்லீம் ஹ ஸ க ஹ ல ஹ்ரீம், ஸௌ: ஸ க ல ஹ்ரீம்” எனும் ஸக்தி மிகு 18 அட்சர மந்திரம். இந்த மந்திரத்தை உபாஸிக்க, கடினமான அனுஷ்டானம் தேவை.

க ஏ ஈ ல, ஹ ஸ க ஹ ல, ஸ க ல என்பது, பீஜங்களையும், சிவ சக்தி பீஜமான ஹ்ரீம் ஐயும் எடுத்துவிட்டால் நிற்பது, இவற்றுள் சக்தி அட்சரங்களை, மறு முறை ப்ரயோகிக்காமல் இருந்தால் அமைவது, “க ஏ ஈ ல ஹ ஸ க ஹ க” என்ற நவாக்ஷரீ அமைகிறது. இரண்டாவது மூன்றாவதாக வரும் க வை அ என்று மாற்றியும், இரண்டாவதாக வரும் ஹ வை ர என மாற்றவும் வேதங்களால் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. இவ்வாரு இரண்டாவது வகை நவாக்ஷரி “க ஏ ஈ ல ஹ ஸ அ ர அ” என அமைகிறது.

இதனை சிறிது திருத்தி எழுதினால் க அ ஏ ஈ ல ஹ ர அ ஸ என்ற நவாக்ஷரி கிடைக்கிறது. இந்த நவாக்ஷரியை வைத்தே ஒவ்வொரு அக்ஷரத்திற்கும் 12 நாமாவாக 108 நாமம் உள்ள சொபாக்ய அஷ்டோத்திர சத நாமாவளி ஸ்தோத்ரம் அமையப்பெற்றுள்ளது.

இவ்வாறு பஞ்சதசியிலிருந்து பெறப்பட்ட நவாக்ஷரி ஸ்தோத்ர மாலை அல்லது அஷ்டோத்திரம், பாராயணம் செய்யும் பொழுது, அன்னையின் பேரருளால், பஞ்ச தஸி மந்திரத்தின் பெரும் பலன், பஞ்சதசியின் கடின ஆராதனை முறையில்லாமல், சாதாரண ஆராதனை முறையிலேயே கிட்டும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. இந்த ஆராதனையை இருபாலரும் அம்பிகையின் முன்னே, வீட்டிலேயோ அல்லது கோவிலிலோ, கூட்டு வழிபாடாகவோ, அல்லது தீப வழிபாடாகவோ செய்யலாம். வெள்ளிதோரும் வாக்கு, மனம், உடல் சுத்தியுடன் இதை தொடர்ந்து பாராயணம் செய்ய, வியக்கத்தகு சர்வதோமுக பலன் தரும் ஒரு ரஹஸ்ய தேவி உபாஸனை முறை இது.

இது த்யான ஸ்லொகமும், மாலா ஸ்தோத்திர மந்திரமும்

த்யானம்.

வந்தே காமகலாம் திவ்யாம் கருணாமய விக்ரஹாம் |
மஹா காமேஷ மஹிஷீம் மஹா திரிபுரசுந்தரீம் ||

மாலா ஸ்தோத்திர மந்திரம்

ஓம் காமேஷ்வரீ காமசக்தி: காம ஸௌபாக்ய தாயினி |
காமரூபா காமகலா காமினி கமலாஸனா || – 1

கமலா கல்பனாஹீநா கமநீய கலாவதி |
கமலா பாரதி ஸேவ்யா கல்பிதாஸேஷ ஸம்ஸ்க்ருதி || – 2

அநுத்தராநகா அனந்தா அத்புதரூபா அநலோத்பவா |
அதிலோக சரித்ராதி ஸுந்தரீ அதிஸுபப்ரதா || – 3

அகஹந்த்ரீ அதிவிஸ்தாரா அர்ச்சந துஷ்ட்ட அமிதப்ரபா |
ஏகரூபா ஏகவீரா ஏகநாதா ஏகாந்தார்ச்சன ப்ரியா || – 4

ஏகைக பாவதுஷ்டா ஏக ரஸா ஏகாந்த ஜனப்ரியா |
ஏதமாந-ப்ரபவைதத் பக்த-பாதக நாஸினீ || – 5

ஏலாமோதஸுகா ஏனோத்ரி சக்ராயுத ஸம்ஸ்திதி: |
ஈஹாஸூன்யா ஈப்த்சிதேஸாதி ஸேவ்யா ஈஸான வராங்கநா: || – 6

ஈஸ்வராஜ்ஞாபிகா ஈகாரபாவ்யேப்ஸித பலப்ரதா |
ஈஸானாதிஹரேக்ஷேக்ஷத் அருணாக்ஷீஸ்வரேஸ்வரீ || – 7

லலிதா லலனாரூபா லயஹீநா லஸத்தநு: |
லயசர்வா லயக்ஷோணி:லயகர்த்ரீ லயாத்மிகா || – 8

லகிமா லகுமத்யாட்யா லலமாநா லகுத்ருதா |
ஹயாரூடா ஹதாமித்ரா ஹரகாந்தா ஹரிஸ்துதா || – 9

ஹயக்ரீவேஷ்டதா ஹாலா ப்ரியா ஹர்ஸமுத்பவா |
ஹர்ஷணா ஹல்லகாபாங்கீ ஹஸ்த்யந்தைஸ்வர்ய தாயினீ || – 10

ஹலஹஸ்தார்ச்சித-பதா ஹவிர்தாந ப்ரஸாதினீ |
ராமா ராமார்ச்சிதா ரஜ்ஞீ ரம்யா ரவமயீ ரதி: || – 11

ரக்ஷிணீ ரமணீ ராகா ரமணீ மண்டலப்ரியா |
ரக்ஷிதாகில லோகேஸா ரக்ஷோகண நிஷூதினீ || – 12

அம்பாந்தகாரிண்யம்போஜ ப்ரியாந்தக பயங்கரீ |
அம்புரூபாம் புஜகராம் புஜ ஜாத வரப்ரதா || – 13

அந்த: பூஜா ப்ரியாந்தஸ்த ரூபிண்யந்தர்-வசோமயீ |
அந்தகாராதி வாமாங்க ஸ்திதாந்த ஸுகரூபிணீ || – 14

ஸர்வக்ஞா ஸர்வகா ஸாரா ஸமாஸமசுகா ஸதீ |
ஸந்ததி: ஸந்ததா ஸோமா ஸர்வா ஸாங்க்ய ஸநாதநீ || – 15

சுபம்

M.P மட்டும் ஆகவில்லை EMPTY ஆனேன்.

தமிழக அரசியல் கட்சிகளின் அவல நிலைகளையும் சிறிய கதைகளாக
டாக்டர் ராமதாஸ் வெளியிடுவார்.
அந்த வகையில் தற்போது நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற திமுக MP க்களின் நிலையை குறித்து கற்பனை கதையாக அவர் பதிவிட்டுள்ளார். அந்த கற்பனை கதையில் கூறியிருப்பதாவது.

போதுமடா சாமி!

வேட்பாளராக விருப்ப மனு தாக்கல் செய்ததுமே
பதற்றம் என்னைத் தொற்றிக் கொண்டது. நேர்காணலுக்கு
அழைக்கப்பட்ட போது தான் முன்பணமாக ரூ.5 கோடி
செலுத்தும்படி செல்லமாக ஆணையிட்டது கட்சித் தலைமை.

வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன்
எனக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி.
பிறகு தான் தெரிந்தது… அப்போது
மட்டும் தான் மகிழ்ச்சி என்பது.

வேட்பாளர் தோரணையுடன் தொகுதிக்குள்
நுழைந்ததுமே தொடங்கியது தொல்லை.
‘‘அண்ணே…. தொகுதி முழுக்க உங்க பேரையும்,
நம்ம சின்னத்தையும் வரையணும்னே’’ என்றான் நிர்வாகி.

‘‘ஆஹா…. பேஷா வரையுங்க’’ என்று நான்
சொன்னது தான் பெரும் குற்றம் போலிருக்கிறது.
அதற்கு அடுத்த நாளே நிர்வாகிகள் வந்தனர் என்னை நாடி
சுவர் விளம்பரச் செலவாக அவர்கள் கொடுத்த பில்லோ ரூ.2 கோடி.

விளம்பர பில்லை கட்டுவதற்காக என் வீட்டை விற்றேன்
அடுத்த நிமிடமே பணம் தீர்ந்தது;
செலவு மட்டும் தீரவே இல்லை
அடுத்தக்கட்டமாக முதல் கட்ட பூத் செலவுக்கு ரூ.4 கோடி
அந்தப் பணத்தைத் திரட்ட வயலையும், தோட்டத்தையும் விற்றேன்

வாக்கு சேகரிக்கவும், அதற்காக வந்தவர்களுக்கு
சரக்கு வாங்கவும் தினமும் செலவு தலா ரூ.10 லட்சம்.
அந்த வகையில் 20 நாட்களுக்கு ரூ.2 கோடி காலி
இடைக்கால பூத் செலவுக்கு இன்னும் ஒரு 2 கோடி.

என்னடா இது…. பணம் தண்ணியாக கரைகிறதே என்று நிர்வாகியிடம்
புலம்பிய போது தான் தம்பி தண்ணிக்கு தனி செலவு உண்டு என்றார்.
ஆம். தலைவர் ஓட்டு கேட்டு வந்த போது கூட்டத்திற்கு ஆள்பிடிக்க
தலைக்கு ஒரு குவார்ட்டர், பிரியாணி, ரூ.200 என ஒரு கோடி காலி

செலவுகளை சமாளிக்க முடியாமல் திணறிய போது
என் மீது இறங்கியது அடுத்த பேரிடி.
‘‘அண்ணே ஒரு ஓட்டுக்கு ரூ.500 என்றால், குறைந்தது
12 லட்சம் ஓட்டுக்கு ஒரு 60 கோடி எடுத்து வையுங்கண்ணே’’

அடப்பாவிகளா…. ஒட்டுமொத்த சொத்தையும் விற்றாலும்
60 கோடியில் பாதி கூட தேறாதேடா’’ எனக் கதறினேன்.
‘‘அண்ணே… மத்தியில் அடுத்து நாம தான். விட்டதையெல்லாம்
6 மாசத்துல அள்ளிடலாம்னே’’ எனத் தேற்றினான் அடிப்பொடி.

ஒரு பக்கம் பகுத்தறிவு தடுத்தாலும், இன்னொரு பக்கம்
பேராசை தூண்டியதால் வட்டிக்கு வாங்கி ஓட்டுக்கு தந்தேன்.
அத்துடன் எல்லா செலவும் முடிந்தது என நினைத்திருக்க,
அதெல்லாம் முடியலண்ணே என்றார் தலைமை நிர்வாகி.

கட்சிக்காரர்கள் எல்லாம் கிருஷ்ணரைப் போன்றவர்கள் போலும்.
கர்ணனிடம் பிடுங்கியதெல்லாம் போதாது என தர்மத்தால் கிடைத்த
புண்ணியத்தையும் பறித்து சாகடித்ததைப் போல, கடைசி கட்ட பூத்
செலவுக்காக என்னிடம் நிர்வாகிகள் கேட்ட தொகை ரூ. 4 கோடி.

தேர்தலே முடிந்த போதிலும் செலவு மட்டும் முடியவில்லை.
விருந்துக்காக என்னிடம் பிடுங்கிய தொகை ரூ. 1 கோடி.
இவ்வளவு செலவு செய்தும் கிடைக்காமல் போகுமா வெற்றி?
ஏழரை லட்சம் ஓட்டு வாங்கி நாலரை லட்சம் மார்ஜினில் வென்றேன்!

பிறகு தான் தெரிந்தது நாங்கள் மட்டும் தான் வென்றோம்…
எங்கள் கூட்டணி படுதோல்வி அடைந்தது என்று!
மத்திய அமைச்சர் பதவி கனவோடு கலைந்தது…
வாங்கிய கடன் மட்டும் கழுத்தை நெறிக்கிறது.

வாங்கிய ஏழரை லட்சம் ஓட்டுக்கு
81 கோடி செலவு.
ஒரு ஓட்டின் சராசரி விலை ரூ. 1000-க்கும் மேல்
சொத்தை விற்றுக் கொடுத்தது ரூ.25 கோடி,
மீதமுள்ள 50 கோடிக்கு மாதா மாதம் வட்டி மட்டும் ரூ. 1 கோடி.

மக்களவை உறுப்பினருக்கான மாத ஊதியமோ ரூ.2 லட்சம்
கட்ட வேண்டிய வட்டியோ ரூ.1 கோடி. நான் என்ன செய்வேன்?
நான் எம்.பி. மட்டும் ஆகவில்லை… எம்ட்டியாகவும் (EMPTY) ஆனேன்.
அதனால் தொகுதிக்கும், பார்லிக்கும் செல்லாமல் தலைமறைவாகப் போகிறேன்!
அடேங்கப்பா….. போதுமடா சாமி!

Tuesday, May 28, 2019

நேதாஜி கொடுத்த நெருக்கடி

1955ல் பிபிசி செய்தி நிறுவனத்துக்கு டாக்டர் அம்பேத்கர் அளித்த ப்ரத்யேக பேட்டியில் நாடு சுதந்திரம் அடைந்ததற்கு உண்மையான காரணம் என்ன என்று கேட்கப்பட்டது.
அதற்கு அவர் பதிலளிக்கையில், 'பிரிட்டீஷார் இவ்வளவு சீக்கிரம் சுதந்திரம் கொடுத்ததற்கு முக்கிய காரணம் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவம் கொடுத்த நெருக்கடியும், பிரிட்டீஷாரிடம் கைதான இந்திய தேசிய ராணுவ வீரர்களுக்கு ஆதரவாக 1946 பிப்ரவரியில் நடந்த கடற்படை வேலைநிறுத்தமும்தான்  நினைக்கிறேன். பிரிட்டிஷ் பிரதமர் அட்லி சுயசரிதை எழுதினால் இப்போது நான் சொல்வதை எழுதுவார்' என்று பதிலளித்தார்.
அவர் இப்படி சொன்ன ஒரே ஆண்டில் அட்லி கொல்கத்தாவுக்கு வந்தார்.
1956ல் இந்தியா வந்த அட்லியை, கோல்கத்தாவில் அப்போதைய ஐகோர்ட் தலைமை நீதிபதியும் பொறுப்பு கவர்னருமான சக்ரவர்த்தி சந்திக்கிறார்.
அப்போது காந்தியின் வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஒடுக்கப்பட்டு பல ஆண்டுகள் கழித்து, அதன்பிறகு இந்தியாவில் பெரிதாக எந்த போராட்டமும் வெடிக்காத நிலையில் நீங்கள் சுதந்திரம் கொடுத்ததற்கு உண்மையான காரணம் என்ன என்று சக்ரவர்த்தி கேட்கிறார்.
அதற்கு அட்லி, 'நேதாஜியின் இந்திய தேசிய ராணுவம் கொடுத்த நெருக்கடி ஒரு முக்கியமான காரணம் என்று'அட்லி கூறுகிறார்.
இப்படி பிரிட்டீஷாருக்கு இந்திய தேசிய ராணுவம் மூலம் நேதாஜி கொடுத்த நெருக்கடியின் பின்னணியில் இருந்தவர் வீரசாவர்க்கர்.
மதரீதியில் தனிநாடு என்ற கோரிக்கையை ஜின்னா தீவிரமாக முன்னெடுத்த போது அதை தடுக்க விரும்பிய நேதாஜி,  இது தொடர்பாக அவர் சில தலைவர்களை சந்தித்து பேச கோல்கத்தாவில் இருந்து புறப்படுகிறார்.
அவர் முதலில் வந்து நின்ற இடம் நாக்பூர் ஆர்.எஸ்.எஸ். அலுவலகம். ஆர்.எஸ்.எஸ். தலைவர் டாக்டர் ஜியை சந்திக்க அவர் வந்திருந்தார். 1940 ஜூன் 20ல் அவர் வந்தபோது டாக்டர் ஜி மரணத் தருவாயில் படுத்த படுக்கையில் இருந்ததால் அவரிடம் எதுவும் பேச முடியாமல் அங்கிருந்து மும்பை செல்கிறார். அங்கு ஜின்னாவை சந்திக்க முயற்சி செய்கிறார். அவரை சந்திக்க ஜின்னா மறுக்கிறார். அங்கிருந்து கோல்கத்தா திரும்பும் வழியில் சாவர்க்கரை நேதாஜி சந்திக்கிறார்.
அப்போதுதான், நேதாஜி யிடம், ராஷ்பிகாரி போஷ் நடத்திவரும் இந்திய தேசிய ராணுவம் குறித்தும், வயது முதுமையால் அந்த அமைப்பை அவரால் நடத்த முடியாமல் அவர் தள்ளாடுவதாகவும் அதற்கு சரியான ஆளை தான் தேடி வருவதாக சாவர்க்கர் கூறுகிறார். மேலும் இந்த பணிக்கு சரியான நபரை தேடியதில் என் முதல் தேர்வு நீங்கள் தான் என்ற தனது திட்டத்தையும் நேதாஜியிடம் சாவர்க்கர் கூறுகிறார்.
இந்த சந்திப்பு நடந்தது 1940 ஜூன் 29.
அங்கிருந்து கோல்கத்தா சென்றவர், ஆப்கன் வழியாக வெளிநாடு சென்று, இந்திய தேசிய ராணுவத்துக்கு தலைமையேற்று இந்தியா நோக்கி படையெடுத்து வந்தார்.
அந்த நெருக்கடி தாளாமல் தான் சுதந்திரம் கொடுத்ததாக அட்லி கூறினார்.
நேதாஜி போன்றவர்களை வழிநடத்திய வீரர் வீரசாவர்க்கர்.
ஈடு இணையற்ற தேசபக்தர்.
சுதந்திர போராட்டத்தில் அவர் காட்டிய தீவிரத்தினால் அவரது பட்டம் திரும்பப் பெறப்பட்டது. பாரிஸ்டர் பட்டம் நிராகரிக்கப்பட்டது. இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு அந்தமான் சிறையில் அடைக்கப்பட்ட போதும் சிறை சுவர்களில் நூற்றுக்கணக்கான விடுதலைக் கவிதைகள் எழுதினார்.
1910ல் இருந்து 21 வரை அந்தமான் சிறை. அதன் பிறகு 24 வரை இந்தியாவில் வெவ்வேறு சிறைகளில் சிறைவாசம். அதன் பிறகு 37வரை வீட்டுக்காவல் என வாழ்நாளில் பெரும்பகுதியை சிறையில் கழித்தவர்.
சுதந்திர போராட்ட வீரராக மட்டுமின்றி சமூக சீர்திருத்த வாதியாகவும் வாழ்ந்தார். தீண்டாமைக்கு எதிராக போராடிய அவர் அந்த காலத்திலேயே ஏராளமான பட்டியலின் மக்களுக்கு பூணூல் அணிவித்து புரட்சி செய்தார். பட்டியலின மக்களை உள்ளடக்கிய அரிஜன்பஜன் மண்டலிகளை உருவாக்கினார். பட்டியலின மக்கள் வேதம் படிக்க தடை என்பதை எதிர்த்தார்.
சுதந்திர போராட்ட வீரராக, இந்து சமுதாயத்தில் நிலவிய தீண்டாமைக்கு எதிராக ஓங்கி குரல் கொடுத்த சீர்திருத்தவாதி யாக வாழ்நாள் முழுவதும் தேசப் பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட வீரத்திருமகன் வீரசாவர்க்கர்.

Saturday, May 25, 2019

குழந்தை வரம் அருளும் திருவிடைமருதூர்

பாவங்களை போக்கும், குழந்தை வரம் அருளும் திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து 9 கி.மீ. தொலைவில் மயிலாடுதுறை செல்லும் வழியில் திருவிடைமருதூரில் உள்ளது மகாலிங்கேஸ்வரர் திருக்கோயில்.  மூலவர் மகாலிங்கேஸ்வரர்.
தாயார் பிருஹத் சுந்தரகுசாம்பிகை.

காவிரிக் கரையில் உள்ள 6 சிவஸ்தலங்கள் காசிக்கு சமமாக கருதப்படுகிறது. அவற்றில் திருவிடைமரு தூர் தலமும் ஒன்றாகும். இத்தலத்து இறைவன் சுயம்பு லிங்க மூர்த்தியாகும். இறைவன் மகாலிங்கேஸ்வரர், தன்னைத்தானே அர்ச்சித்துக்கொண்டு பூஜை விதிகளை சப்தரிஷிகள் மற்றுமுள்ள முனிவர்களுக் குப் போதித்து அருளிய தலம் திருவிடைமருதூர்.

மார்க்கண்டேய முனிவருக்கு அவரின் விருப்பப்படி அர்த்தநாரீஸ்வரர் உருவத்தில் இத்தலத்து இறைவன் காட்சி கொடுத்துள்ளார்.  இந்த ஆலயத்தில் உள்ள மூகாம்பிகை சந்நிதி மிகவும் புகழ் பெற்றது. அம்பாள் சந்நிதிக்கு தெற்குப் பக்கம் இந்த மூகாம்பிகை சந்நிதி அமைந்துள்ளது. மூகாசுரனை கொன்ற பாவம் நீங்க மூகாம்பிகை இத்தலத்து சிவபெருமானை வழிபட்டாள்.

தலத்தின் சிறப்பு:

திருவிடைமருதூர் தலம் வரகுண பாண்டியன் என்ற பாண்டிய நாட்டு அரசனின் வாழ்க்கையுடன் சம்பந்தம் உடையதாகும். ஒருமுறை, வரகுண பாண்டி யன் அருகிலுள்ள காட்டுக்கு வேட்டையாடச் சென்றான். மாலை நேரம் முடிந்து இரவு தொடங்கி விட்ட நேரத்தில், அரசன் குதிரை மீதேறி திரும்பி வந்து கொண்டிருக்கும் போது வழியில், உறங்கிக் கொண்டி ருந்த ஒரு அந்தணன், குதிரையின் காலில் மிதிபட்டு இறந்துவிட்டான்.  இச்சம்பவம்  அவனறியாமல் நடந்திருந்தாலும், ஒரு அந்தணனைக் கொன்ற தால் அரசனை பிரம்மஹத்தி தோஷம் பற்றிக்கொண் டது. அத்துடன், அந்தணின் ஆவியும் அரசனைப் பற்றிக்கொண்டது.

சிறந்த சிவபக்தனான வரகுண பாண்டியன், மதுரை சோமசுந்தரரை வணங்கி இவற்றில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று வேண்டினான். மதுரை சோமசுந்தரரும் அரசனுடைய கனவில் தோன்றி திருவிடைமருதூர் சென்று அங்கு தன்னை வழிபடும் படி கூறினார்.

எதிரி நாடான சோழ நாட்டிலுள்ள திருவிடைமருதூரு க்கு எப்படிச் செல்வது என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்த அரசனுக்கு, தன் நாட்டின் மீது சோழ மன்னன் படையெடுத்து வந்திருக்கும் செய்தி கிடைத்தது. சோழ மன்னனுடன் போருக்குச் சென்ற வரகுண பாண்டியன், சோழ மன்னனை போரில் தோற்கடித்து சோழநாடு வரை துரத்திச் சென்றான்.

அப்போது திருவிடைமருதூர் சென்று இங்குள்ள இறைவனை வழிபட ஆலயத்தினுள் பிரதான கிழக்கு வாயில் வழியாக நுழைந்தான். வரகுண பாண்டிய னைப் பற்றியிருந்த பிரம்மஹத்தியும் அந்தணனின் ஆவியும் அரசனைப் பின்தொடர்ந்து கோயிலுக்குள் செல்ல தைரியமின்றி வெளியிலேயே தங்கிவிட்டன. அரசன் திரும்பி வரும்போது மறுபடியும் அவனை பிடித்துக் கொள்ளலாம் என்று காத்திருந்தன.

ஆனால், திருவிடைமருதூர் இறைவனோ வரகுண பாண்டிய னை மேற்கு வாயில் வழியாக வெளியேறிச் செல்லும் படி அசரீரியாக ஆணையிட்டு அவனுக்கு அருள்புரிந் தார். அரசனும் பிரம்மஹத்தி நீங்கியவ னாக பாண்டிய நாடு திரும்பினான். இதனால் இக்கோயிலு க்கு வரும் பக்தர்களும் கிழக்கு வாயில் வழியாக உள்ளே சென்று, மேற்கு கோபுரவாயில் வழியாக வெளியே செல்லும் முறையைக் கடைப்பிடித்து வருகின்றனர்.

திருவிடைமருதூரில் உள்ள சிவாலயம் சுமார் 1200 வருடங்களுக்கு மேல் பழமையான ஒரு ஆலயமாகும். மழையின்றி மக்கள் வறட்சியால் வருந்தும் காலங்க ளில் இப்பெருமானுக்கு சிறப்பு பூஜை செய்து, தேவாரப் பதிகங்களை பாராயணம் செய்வதால் மழை பொழியும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இக்கோவிலில் அஸ்வமேதப் பிராகாரம், கொடுமுடிப் பிராகாரம்,  ப்ரணவப் பிராகாரம் என்று மூன்று பிராகாரங்கள் உள்ளது.

இம்மூன்று பிராகாரங்களி லும் வலம் வருதல் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது.இக்கோயிலில் 32 தீர்த்தங்கள் உள்ளன. இவற்றில் ஒரு ஏக்கர் பரப்பில்  உள்ள காருண்யாம்ருத தீர்த்தம் மிகவும் புகழ் வாய்ந் தது. அதுபோலவே, கலியாணத் தீர்த்தம் எனப்படும் பூசத்தீர்த்தமும் சக்தி வாய்ந்தது.

தைப்பூசத் திருநாளில் இத்தீர்த்தத்தில் நீராடுவோர் பாவவிமோச னம் பெறலாம்  என்பது ஐதீகம். இங்குள்ள தீர்த்தங்க ளில் நீராடினால் குழந்தை வரம் கிடைக்கும். பிரமஹத்தி தோஷம் மற்றும் பல தோஷங்களை தீர்க்கும் தலமாக திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது.

Wednesday, May 22, 2019

அறம் வெல்லும் பாவம் தோற்கும்

"அறம் வெல்லும் பாவம் தோற்கும்” என்று ஒரு எளிய, அற்புதமான வரி கம்பராமாயணத்தில் வருகிறது. கடல்தாவி வந்த அனுமன் சிறு குரங்கு வடிவெடுத்து இலங்கை நகருக்குள் புகும்போது நுழைவாயிலில் காவல் காக்கும் இலங்கிணி என்ற இலங்காதேவி, “அடா, யார் நீ? எதற்காக வந்தாய்?” என்று அவனைத் தடுத்து நிறுத்துகிறாள். ”இந்த அழகான நகரைச் சுற்றிப் பார்த்து விட்டுப் போகலாம் என்று வந்தேன். இந்த எளியவன் உள்ளே போவதால் என்ன பெரிய நஷ்டம் வந்து விடப்போகிறது உங்களுக்கு?” என்கிறான் அனுமன் (’அளியான் இவ் ஊர் காணும் நலத்தால் அணைகின்றேன்; எளியேன் உற்றால், யாவது உனக்கு இங்கு இழவு? ‘என்றான்). கோபமுற்ற இலங்காதேவி பயங்கர ஆயுதங்களால் தாக்கத் தொடங்க, அனுமன் அவள் மார்பில் ஒரே ஒரு குத்து விடுகிறான். அவள் நிலைகுலைந்து கீழே விழுந்து விடுகிறாள். பின்னர் சுதாரித்துக் கொண்டு எழுந்து அவள் பேசும்போது கூறுவது தான் அந்த வரி.

”அன்னதே முடிந்தது ஐய!
'அறம் வெல்லும் பாவம் தோற்கும்'
என்னும் ஈது இயம்ப வேண்டும்
தகையதோ? இனி மற்று உன்னால்,
உன்னிய எல்லாம் முற்றும்,
உனக்கும் முற்றாதது உண்டோ?
பொன்நகர் புகுதி” என்னாப் புகழ்ந்து
அவள் இறைஞ்சிப் போனாள்.

- சுந்தர காண்டம், ஊர்தேடு படலம்.

(அன்னதே - அவ்வாறே; ஈது - இது; உன்னிய எல்லாம் - நினைத்ததெல்லாம்; முற்றும் - நிறைவேறும்; புகுதி - புகுவாய்; இறைஞ்சி - தொழுது)

”ஒரு சாபத்தால் தெய்வ நிலையிலிருந்து கீழிறங்கி, பிரம்ம தேவனால் இப்பணியில் அமர்த்தப் பட்டேன். எத்தனை காலம் இந்த நகரைக் காவல் காப்பது? இதற்கு விமோசனமே இல்லையா? என்று கேட்டேன். அரக்கர்களின் ஆணவமும் அகந்தையும் அதர்மமும் அத்துமீறிப் போகும். அப்போது ஒரு குரங்கு உன்னை அடித்து வீழ்த்தும். அதன்பின், இந்த நகரமே அழியும் என்றான். அவன் சொன்னவாறே முடிந்தது” என்றாள் இலங்காதேவி.

அனுமனிடம் பிரார்த்திக்கும்போது பக்தர்கள் கூறும் பிரபலமான சுலோகம் ஒன்று உண்டு.

அஸாத்4ய ஸாத4க ஸ்வாமின் அஸாத்4யம்’ தவ கிம் வத3 |
ராமதூ3த க்ரு’பாஸிந்தோ4 மத்கார்யம்’ ஸாத4ய ப்ரபோ4 ||

“உன்னால் உன்னிய எல்லாம் முற்றும், உனக்கும் முற்றாதது உண்டோ?” என்பது தான் இந்த சுலோகத்தின் முதலடியாக வந்திருக்கிறது. கம்பனின் வாசகத்தை அப்படியே இந்த சுலோகத்தைப் புனைந்த ஆஞ்சநேய பக்தர் எடுத்தாண்டிருக்கக் கூடும்.

சென்ற சனிக்கிழமை சுந்தரகாண்ட சொற்பொழிவுக்கு முன்னால் சும்மா புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தபோது கவனத்தைக் கவர்ந்தது இந்தப் பாடல். இப்படித் தான் ஒவ்வொரு முறை ராம காவியத்தை வாசிக்கும் போதும் புதிய புதிய மாணிக்கங்கள் அகப்பட்டுக் கொண்டே இருக்கும். அதுவே அதன் வீச்சும் வசீகரமும்.

Friday, May 17, 2019

ஸ்ரீ நரசிம்ம ப்ரபத்தி

நம்முடைய துயரங்கள், துன்பங்கள் தீர்க்கும் மிக சக்தி வாய்ந்த மந்திரமாகும்.

1. மாதா ந்ருஸிம்ஹ: பிதா ந்ருஸிம்ஹ:
2. ப்ராதா ந்ருஸிம்ஹ: ஸகா ந்ருஸிம்ஹ:
3. வித்யா ந்ருஸிம்ஹ: த்ரவிணம் ந்ருஸிம்ஹ:
4. ஸ்வாமி ந்ருஸிம்ஹ: ஸகலம் ந்ருஸிம்ஹ:
5. இதோ ந்ருஸிம்ஹ: பரதோ ந்ருஸிம்ஹ:
6. யதோ யதோ யாஹி: ததோ ந்ருஸிம்ஹ:
7. ந்ருஸிம்ஹ தேவாத் பரோ நகஸ்சித்:
8. தஸ்மான் ந்ருஸிம்ஹ சரணம் ப்ரபத்யோ:

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...