Tuesday, June 30, 2020

108_திவ்ய_தேசங்களில்

தாயார்_யார்?  பெருமாள்_யார்?

அந்த தலம் எந்த மண்டலத்தில் இருக்கிறது ?

எந்த நகருக்கருகில் இருக்கிறது ?

போன்ற விவரங்களை இந்த பட்டியலில் காணலாம்.

1-ஸ்ரீரங்கம்
(திருவரங்கம்)
ஸ்ரீரங்க நாச்சியார்
ஸ்ரீ ரங்கநாதன்
நம்பெருமாள்
சோழ நாடு,திருச்சிராப்பள்ளி

2-திருக்கோழி
(உறையூர், நிசுலாபுரி, உரந்தை)
ஸ்ரீ கமலவல்லி நாச்சியார்
ஸ்ரீ அழகிய மணவாளன்
சோழ நாடு,திருச்சிராப்பள்ளி

3-திருக்கரம்பனூர் (உத்தமர் கோவில், கடம்ப க்ஷேத்ரம்)
ஸ்ரீ பூர்வ தேவி
ஸ்ரீ புருஷோத்தமன்
சோழ நாடு,திருச்சிராப்பள்ளி

4-திருவெள்ளறை (வேதகிரி க்ஷேத்ரம்)
ஸ்ரீ செண்பகவல்லி நாச்சியார்
ஸ்ரீ புண்டரீகாக்ஷன்
சோழ நாடு,திருச்சிராப்பள்ளி

5-திருஅன்பில்
ஸ்ரீ அழகியவல்லி நாச்சியார்
ஸ்ரீ வடிவழகிய நம்பி
ஸ்ரீ சுந்தரராஜன்
சோழ நாடு,திருச்சிராப்பள்ளி

6-திருப்பேர்நகர் ,அப்பக்குடத்தான்
ஸ்ரீ கமலவல்லி (இந்திரா தேவி)
அப்பலா ரங்கநாதன்
சோழ நாடு,திருச்சிராப்பள்ளி

7-திருக்கண்டியூர்
ஸ்ரீ கமலவல்லி
ஹர சாப விமோசன பெருமாள்
கமலநாதன்
சோழ நாடு,திருச்சிராப்பள்ளி

8 -திருக்கூடலூர்,
ஆடுதுறை பெருமாள் கோவில்
ஸ்ரீ பத்மாசனி (புஷ்பவல்லி)
வையம் காத்த பெருமாள் (ஜகத்ரக்ஷகன்)
சோழ நாடு,கும்பகோணம்

9-திரு கவித்தலம் (கபிஸ்தலம்)
ஸ்ரீ ரமாமணிவல்லி (பொற்றாமரையாள்)
கஜேந்திர வரதன்
சோழ நாடு,கும்பகோணம்

10-திருப்புள்ளம் (பூதங்குடி)
ஸ்ரீ பொற்றாமரையாள் (ஹேமாம்புஜவல்லி)
ஸ்ரீ வல்விலி ராமர்
சோழ நாடு,கும்பகோணம்

11-திரு ஆதனூர்
ஸ்ரீ ரங்கநாயகி
ஸ்ரீ ஆண்டளக்குமையன்
சோழ நாடு,கும்பகோணம்

12-திருகுடந்தை
(பாஸ்கர க்ஷேத்ரம்)
ஸ்ரீ கோமளவல்லி (படிதாண்டா பத்தினி)
ஸ்ரீ சாரங்கபாணி
சோழ நாடு,கும்பகோணம்

13-திருவிண்ணகர்,
ஒப்பிலியப்பன் கோயில்
ஸ்ரீ பூமிதேவி நாச்சியார்
ஸ்ரீ ஒப்பிலியப்பன் (ஸ்ரீநிவாசன்)
சோழ நாடு,கும்பகோணம்

14-திரு நறையூர்,
நாச்சியார் கோயில்
ஸ்ரீ வஞ்சுளவல்லி நாச்சியார்
திருநறையூர் நம்பி
சோழ நாடு,கும்பகோணம்

15-திருச்சேறை
ஸ்ரீ சாரநாயகி (சார நாச்சியார்)
ஸ்ரீ சாரநாதன்
சோழ நாடு,கும்பகோணம்

16-திரு கண்ணமங்கை
ஸ்ரீ அபிசேக வல்லி
பக்த வத்சல பெருமாள்
சோழ நாடு,கும்பகோணம்

17-திருக்கண்ணபுரம்(கிருஷ்ணாரண்யா, பஞ்சக்ருஷ்ண, சப்த புண்ணிய க்ஷேதரம்)
ஸ்ரீ கண்ணபுர நாயகி
நீல மேகப் பெருமாள்
சௌரிராஜ பெருமாள்
சோழ நாடு,நாகப்பட்டினம்

18-திரு கண்ணங்குடி
ஸ்ரீ லோகநாயகி (அரவிந்த வல்லி)
ஸ்ரீ லோகநாதன் (சியாமளமேணிப் பெருமாள்)
தாமோதர நாராயணன்
சோழ நாடு,கும்பகோணம்

19-திரு நாகை,
நாகப்பட்டினம்
ஸ்ரீ சௌந்தர்ய வல்லி
நீலமேகப் பெருமாள்
சௌந்தர்யராஜன்
சோழ நாடு,நாகப்பட்டினம்

20-தஞ்சைமாமணி கோயில்
ஸ்ரீ செங்கமல வல்லி
நீலமேகப் பெருமாள்
சோழ நாடு,தஞ்சாவூர்

21-திரு நந்திபுர விண்ணகரம்,
நாதன் கோயில், தக்ஷின ஜகன்னாத்
ஸ்ரீ செண்பக வல்லி தாயார்
ஸ்ரீ ஜகந்நாதன் (நாதநாதன், விண்ணகர பெருமாள்)
சோழ நாடு,கும்பகோணம்

22-திரு வெள்ளியங்குடி
ஸ்ரீ மரகத வல்லி
கோலவல்வில்லி ராமன்
ஸ்ருங்கார சுந்தரன்
சோழ நாடு,சீர்காழி

23-திருவழுந்தூர்
(தேரழுந்தூர்)
ஸ்ரீ செங்கமல வல்லி
தேவாதிராஜன்
ஆமருவியப்பன்
சோழ நாடு,மயிலாடுதுறை

24-திரு சிறுபுலியூர்
ஸ்ரீ திருமாமகள் நாச்சியார்
அருள்மாக்கடல் (ஜலசயனப் பெருமாள்)
க்ருபா சமுத்ரப் பெருமாள்
சோழ நாடு,மயிலாடுதுறை

25-திரு தலைச் சங்க நாண்மதியம்(தலைச்சங்காடு)
ஸ்ரீ தலைச்சங்க நாச்சியார்
நாண்மதியப் பெருமாள் (வெண்சுடர் பெருமாள்)
வியோமஜோதிப்பிரான் (வெண்சுடர்பிரான், லோகநாதன்)
சோழ நாடு,மயிலாடுதுறை

26-திரு இந்தளூர்
ஸ்ரீ பரிமள ரங்க நாயகி (சந்திர சாப விமோசன வல்லி, புண்டரிக வல்லி)
பரிமள ரங்கநாதன் (மருவினிய மைந்தன், சுகந்தவன நாதன்)
சோழ நாடு,மயிலாடுதுறை

27-திருக் காவளம்பாடி,
திரு நாங்கூர்
ஸ்ரீ மடவரல் மங்கை
ஸ்ரீ கோபால கிருஷ்ணன் (ராஜ கோபாலன்)
சோழ நாடு,சீர்காழி

28-திருக் காழி ஸ்ரீராம விண்ணகரம்,சிர்காழி
ஸ்ரீ லோக நாயகி (மட்டவிழ்குழலி)
திரு விக்ரமன் (தாடாளன்)
த்ரிவிக்ரம நாராயணன்
சோழ நாடு,சீர்காழி

29-திரு அரிமேய விண்ணகரம்,
திரு நாங்கூர்
ஸ்ரீ அம்ருதகட வல்லி
குடமாடுகூத்தன்
சதுர்புஜங்களுடன் கோபாலன்
சோழ நாடு,சீர்காழி

30-திருவண் புருடோத்தமம்,
திரு நாங்கூர்
ஸ்ரீ புருஷோத்தம நாயகி
ஸ்ரீ புருஷோத்தமன்
சோழ நாடு,சீர்காழி

31-திரு செம்பொன்செய் கோயில்,
திரு நாங்கூர்
ஸ்ரீ அல்லிமாமலர் நாச்சியார்
ஸ்ரீ பேரருளாளன்
ஹேமரங்கர் (செம்பொன்னரங்கர்)
சோழ நாடு,சீர்காழி

32-திருமணிமாடக் கோயில்,
திரு நாங்கூர்
ஸ்ரீ புண்டரீக வல்லி தாயார்
ஸ்ரீ நாராயணன் (நந்தாவிளக்கு)
நாராயணன், அளத்தற்கரியான்
சோழ நாடு,சீர்காழி

33-திரு வைகுந்த விண்ணகரம்,
திரு நாங்கூர்
ஸ்ரீ வைகுந்த வல்லி
ஸ்ரீ வைகுந்த நாதன்
சோழ நாடு,சீர்காழி

34-திருவாலி மற்றும் திருநகரி
திருவாலி: ஸ்ரீ அம்ருதகட வல்லி, திருநகரி: ஸ்ரீ அம்ருத வல்லி
திருவாலி: ஸ்ரீ லக்ஷ்மி ந்ருசிம்ஹர் (வயலாளி மணவாளன்), திருநகரி: ஸ்ரீ வேதராஜன்
திருவாலி: ஸ்ரீ திருவாலி நகராளன்,

திருநகரி: ஸ்ரீ கல்யாண ரங்கநாதன்
சோழ நாடு,சீர்காழி

35-திரு தேவனார் தொகை,
திரு நாங்கூர்
ஸ்ரீ கடல் மகள் நாச்சியார், மாதவநாயகி
தெய்வநாயகன்
மாதவப் பெருமாள்
சோழ நாடு,சீர்காழி

36-திருத்தெற்றி அம்பலம்,
திரு நாங்கூர்
ஸ்ரீ செங்கமல வல்லி
செங்கண் மால் (ரங்கநாதன், ஸ்ரீ லக்ஷ்மிரங்கர்)
சோழ நாடு,சீர்காழி

37-திருமணிக்கூடம் ,
திரு நாங்கூர்
ஸ்ரீ திருமகள் நாச்சியார் (ஸ்ரீதேவி), பூதேவி
வரதராஜப் பெருமாள் (மணிகூட நாயகன்)
சோழ நாடு,சீர்காழி

38-அண்ணன் கோயில்(திருவெள்ளக்குளம்), திரு நாங்கூர்
ஸ்ரீ அலர்மேல்மங்கை, ஸ்ரீ பூவார் திருமகள் நாச்சியார், பத்மாவதி
ஸ்ரீநிவாசன், கண்ணன், நாராயணன், அண்ணன் பெருமாள்
சோழ நாடு,சீர்காழி

39-திரு பார்த்தன் பள்ளி,
திரு நாங்கூர்
ஸ்ரீ தாமரை நாயகி
ஸ்ரீ தாமரையாள் கேள்வன்
ஸ்ரீ பார்த்தசாரதி
சோழ நாடு,சீர்காழி

40-திருச்சித்திரக் கூடம் ,
சிதம்பரம்
ஸ்ரீ புண்டரீக வல்லி தாயார்
கோவிந்தராஜன்
தேவாதி தேவன் (பார்த்தசாரதி)
சோழ நாடு, சிதம்பரம்

41-திரு அஹீந்த்ரபுரம்,
ஆயிந்தை
ஸ்ரீ ஹேமாமபுஜ வல்லி தாயார் (வைகுண்ட நாயகி)
ஸ்ரீ தெய்வநாயகன்
ஸ்ரீ மூவராகிய ஒருவன், தேவநாதன்
நடு நாடு,கடலூர்

42-திருக்கோவலூர்
ஸ்ரீ பூங்கோவை நாச்சியார்
த்ரிவிக்ரமன்
ஆயனார், கோவலன் (கோபாலன்)
நடு நாடு,கடலூர்

43-திருக்கச்சி,
அத்திகிரி (அத்தியூர், காஞ்சிபுரம், சத்யவ்ரத க்ஷேத்ரம்)
ஸ்ரீ பெருந்தேவி (மகாதேவி) தாயார்
ஸ்ரீ பேரருளாள வரதராஜன்
தொண்டை நாடு,காஞ்சிபுரம்

44-அஷ்டபுயகரம்,
காஞ்சிபுரம்
ஸ்ரீ அலர்மேல் மங்கை, பத்மாசனித் தாயார்
ஆதி கேசவ பெருமாள் (சக்ரதரர், கஜேந்திர வரதன்)
தொண்டை நாடு,காஞ்சிபுரம்

45-திருத்தண்கா,
தூப்புல், காஞ்சிபுரம்
ஸ்ரீ மரகத வல்லி
ஸ்ரீ தீபப் பிரகாசன் (விளக்கொளிப் பெருமாள், திவ்யப்ரகாசர்)
தொண்டை நாடு,காஞ்சிபுரம்

46-திரு வேளுக்கை,
காஞ்சிபுரம்
ஸ்ரீ வேளுக்கை வல்லி (அம்ருதவல்லி)
அழகியசிங்கர் (ந்ருசிம்ஹர், ஸ்ரீ முகுந்த நாயகன்)
தொண்டை நாடு,காஞ்சிபுரம்

47-திரு நீரகம்,
காஞ்சிபுரம்
ஸ்ரீ நிலமங்கை வல்லி
ஸ்ரீ ஜகதீச்வரர்
தொண்டை நாடு,காஞ்சிபுரம்

48-திருப் பாடகம்,
காஞ்சிபுரம்
ஸ்ரீ ருக்மிணி, சத்ய பாமா
பாண்டவ தூதர்
தொண்டை நாடு,காஞ்சிபுரம்

49-திரு நிலா திங்கள் துண்டம்,காஞ்சிபுரம்
நேர் ஒருவர் இல்லா வல்லி (நிலாத்திங்கள் துண்ட தாயார்)
சந்திர சூட பெருமாள் (நிலாத்திங்கள் துண்டத்தான்)
தொண்டை நாடு,காஞ்சிபுரம்

50-திரு ஊரகம்,
காஞ்சிபுரம்
ஸ்ரீ அமுத வல்லி நாச்சியார் (அம்ருதவல்லி)
ஸ்ரீ த்ரிவிக்ரமன் (உலகளந்த பெருமாள்)
தொண்டை நாடு,காஞ்சிபுரம்

51-திரு வெஃகா,
காஞ்சிபுரம்
ஸ்ரீ கோமள வல்லி நாச்சியார்
ஸ்ரீ யதோக்தகாரி (வேகாசேது, சொன்னவண்ணம் செய்த பெருமாள்)
தொண்டை நாடு.காஞ்சிபுரம்

52-திருக் காரகம்,
காஞ்சிபுரம்
ஸ்ரீ பத்மாமணி நாச்சியார் (ரமாமணி நாச்சியார்)
ஸ்ரீ கருணாகர பெருமாள்
தொண்டை நாடு, காஞ்சிபுரம்

53-திருக் கார்வானம்,
காஞ்சிபுரம்
ஸ்ரீ கமல வல்லி (தாமரையாள்)
ஸ்ரீ கள்வன்
தொண்டை நாடு,காஞ்சிபுரம்

54-திருக் கள்வனூர்,
காஞ்சிபுரம்
ஸ்ரீ அஞ்சில வல்லி நாச்சியார்
ஆதி வராஹப் பெருமாள்
தொண்டை நாடு,காஞ்சிபுரம்

55-திருப் பவளவண்ணம்,
காஞ்சிபுரம்
ஸ்ரீ பவள வல்லி
ஸ்ரீ பவளவண்ணன்
தொண்டை நாடு,காஞ்சிபுரம்

56-திருப் பரமேஸ்வர விண்ணகரம்,காஞ்சிபுரம்
ஸ்ரீ வைகுண்ட வல்லி
ஸ்ரீ பரமபதநாதன் (வைகுந்தநாதன்)
தொண்டை நாடு,காஞ்சிபுரம்

57-திருப்புட்குழி
ஸ்ரீ மரகத வல்லி தாயார்
ஸ்ரீ விஜய ராகவப் பெருமாள்
ஸ்ரீ விஜய ராகவப் பெருமாள்
தொண்டை நாடு
காஞ்சிபுரம்

58-திரு நின்றவூர்
(தின்னனூர்)
ஸ்ரீ சுதா வல்லி (என்னைப் பெற்ற தாயார்)
ஸ்ரீ பக்தவத்சலப் பெருமாள் (பத்தராவிப் பெருமாள்)
தொண்டை நாடு
சென்னை

59-திரு எவ்வுள்
(புண்யாவ்ருத, வீக்ஷாரண்ய க்ஷேத்ரம்), திருவள்ளூர்
ஸ்ரீ கனக வல்லி (வசுமதி)
வைத்ய வீர ராகவப் பெருமாள்
தொண்டை நாடு
சென்னை

60-திரு அல்லிக் கேணி(திருவல்லிக்கேணி, ப்ரிந்தாரண்ய க்ஷேத்ரம்)
ஸ்ரீ ருக்மிணித் தாயார்
ஸ்ரீ வேங்கட கிருஷ்ணன்
ஸ்ரீ பார்த்தசாரதி
தொண்டை நாடு
சென்னை

61-திரு நீர்மலை
ஸ்ரீ அணிமாமலர் மங்கை
நீர்வண்ணன் (நீலமுகில்வண்ணன்)
தொண்டை நாடு
சென்னை

62-திரு இட வெந்தை
ஸ்ரீ கோமள வல்லி நாச்சியார்
லக்ஷ்மி வராஹப் பெருமாள்
நித்ய கல்யாணப் பெருமாள்
தொண்டை நாடு
சென்னை

63-திருக் கடல் மல்லை,
மஹாபலிபுரம்
ஸ்ரீ நில மங்கை நாயகி
ஸ்தல சயனப் பெருமாள்
ஸ்தலசயனதுரைவார் (உலகுய்ய நின்றான்)
தொண்டை நாடு
சென்னை

64-திருக்கடிகை,
சோளிங்கர்
ஸ்ரீ அம்ருத வல்லி
யோக ந்ருஸிம்ஹன்
அக்காரக்கனி
தொண்டை நாடு
சென்னை

65-திரு அயோத்தி,
அயோத்யா
ஸ்ரீ சீதாப் பிராட்டி
ஸ்ரீ ராமன் (சக்கரவர்த்தித் திருமகன், ரகுநாயகன்)
வட நாடு
உத்தர் பிரதேஷ்

66-திரு நைமிசாரண்யம்
ஸ்ரீ ஸ்ரீஹரி லக்ஷ்மி (ஸ்ரீ புண்டரீகவல்லி)
ஸ்ரீ ஸ்ரீஹரி (தேவராஜன்)
வட நாடு
உத்தர் பிரதேஷ்

67-திருப் ப்ரிதி (நந்தப் பிரயாக்,
(ஜோஷி மடம்)
ஸ்ரீ பரிமள வல்லி நாச்சியார்
பரம புருஷன்
வட நாடு
உத்தராஞ்சல்

68-திருக் கண்டமென

்னும் கடிநகர்(தேவப்ரயாகை)
ஸ்ரீ புண்டரீக வல்லி தாயார்
ஸ்ரீ நீலமேக பெருமாள் (ஸ்ரீ புருஷோத்தமன்)
வட நாடு
உத்தராஞ்சல்

69-திரு வதரி ஆசிரமம்
(பத்ரிநாத்)
ஸ்ரீ அரவிந்த வல்லி
ஸ்ரீ பத்ரி நாராயணன்
வட நாடு
உத்தராஞ்சல்

70-திரு சாளக்ராமம்
(முக்திநாத்)
ஸ்ரீ ஸ்ரீதேவி நாச்சியார்
ஸ்ரீ ஸ்ரீ மூர்த்தி
வட நாடு
நேபால்

71-திரு வட மதுரை
(மதுரா)
ஸ்ரீ சத்ய பாமா நாச்சியார்
கோவர்தனேசன் (பால க்ருஷ்ணன்)
வட நாடு
உத்தர் பிரதேஷ்

72-திருவாய்ப்பாடி,
கோகுலம்
ஸ்ரீ ருக்மிணி மற்றும் சத்ய பாமா
ஸ்ரீ நவ மோகன கிருஷ்ணன்
வட நாடு
உத்தர் பிரதேஷ்

73-திரு த்வாரகை
(துவரை, துவராபதி)
ஸ்ரீ கல்யாண நாச்சியார் (ஸ்ரீ லக்ஷ்மிஸ்ரீ, ருக்மிணி)
கல்யாண நாராயணன் (த்வாரகாதீசன், த்வாரகாநாத்ஜி)
வட நாடு
குஜராத்

74-திரு சிங்கவேழ்குன்றம்,அஹோபிலம்
ஸ்ரீ செஞ்சு லக்ஷ்மி (ஸ்ரீ அம்ருத வல்லி)
ப்ரஹலாதவரதன் (லக்ஷ்மிந்ருசிம்ஹன்)
வட நாடு
ஆந்திரம்

75-திருவேங்கடம்
(திருப்பதி, திருமலை, ஆதிவராஹ க்ஷேத்ரம்)
அலர்மேல் மங்கை (பத்மாவதி)
ஸ்ரீ திருவேங்கமுடையான் (வெங்கடாசலபதி, பாலாஜி)
ஸ்ரீநிவாசன் (மலையப்ப சுவாமி, மலைகுனியன் நின்ற பெருமாள்)
வட நாடு
ஆந்திரம்

76-திரு நாவாய்
ஸ்ரீ மலர் மங்கை நாச்சியார் (சிறுதேவி)
நாவாய் முகுந்தன் (நாராயணன்)
மலை நாடு
கேரளம்

77-திரு வித்துவக்கோடு(திருவிசிக்கோடு, திருவஞ்சிக்கோடு)
ஸ்ரீ வித்துவக்கோட்டு வல்லி (பத்மபாணி நாச்சியார்)
உய்ய வந்த பெருமாள் (அபயப்ரதன்)
மலை நாடு
கேரளம்

78-திருக்காட்கரை
ஸ்ரீ பெருஞ்செல்வ நாயகி (ஸ்ரீ வாத்சல்ய வல்லி நாச்சியார்)
காட்கரையப்பன்
மலை நாடு
கேரளம்

79-திரு மூழிக்களம்
ஸ்ரீ மதுரவேணி நாச்சியார்
திரு மூழிக்களத்தான் (ஸ்ரீ சூக்தி நாத பெருமாள், அப்பன்)
மலை நாடு
கேரளம்

80-திரு வல்ல வாழ்
(திருவல்லா, ஸ்ரீ வல்லபா க்ஷேத்ரம்)
ஸ்ரீ வாத்சல்ய தேவி (ஸ்ரீ செல்வ திருக்கொழுந்து) நாச்சியார்
ஸ்ரீ கோலப்பிரான் (திருவல்லமார்பன் , ஸ்ரீவல்லபன்)
மலை நாடு
கேரளம்

81-திருக்கடித்தானம்
ஸ்ரீ கற்பக வல்லி
ஸ்ரீ அம்ருத (அத்புத) நாராயணன்
மலை நாடு
கேரளம்

82-திருச்செங்குன்றூர்
(திருசிற்றாறு)
ஸ்ரீ செங்கமல வல்லி
இமயவரப்பன்
மலை நாடு
கேரளம்

83-திருப்புலியூர்
(குட்டநாடு)
ஸ்ரீ பொற்கொடி நாச்சியார்
மாயப்பிரான்
மலை நாடு
கேரளம்

84-திருவாறன்விளை
(ஆறன்முளா)
ஸ்ரீ பத்மாஸநி நாச்சியார்
திருக்குறளப்பன் (செஷாசனா )
மலை நாடு
கேரளம்

85-திருவண் வண்டுர்
ஸ்ரீ கமல வல்லி நாச்சியார்
பாம்பணை அப்பன்
மலை நாடு
கேரளம்

86-திருவனந்தபுரம்
ஸ்ரீ ஸ்ரீஹரி லக்ஷ்மி
அனந்தபத்மநாபன்
மலை நாடு
கேரளம்

87-திரு வட்டாறு
ஸ்ரீ மரகத வல்லி நாச்சியார்
ஆதி கேசவ பெருமாள்
மலை நாடு
கேரளம்

88-திருவண்பரிசாரம்
ஸ்ரீ கமல வல்லி நாச்சியார்
ஸ்ரீ திருக்குறளப்பன் (திருவாழ்மார்பன்)
மலை நாடு,கேரளம்

89-திருக்குறுங்குடி
ஸ்ரீ குறுங்குடிவல்லி நாச்சியார்
சுந்தர பரிபூரணன் (நின்ற நம்பி)
பாண்டியநாடு,திருநெல்வேலி

90-திரு சிரீவர மங்கை(வானமாமலை, தோதாத்ரி க்ஷேத்ரம்,திருசிரீவரமங்கள நகர், நாங்குநேரி)
ஸ்ரீ சிரீவரமங்கை நாச்சியார்
ஸ்ரீ தோதாத்ரிநாதன் (வானமாமலை)
ஸ்ரீ தெய்வநாயகன்
பாண்டியநாடு,திருநெல்வேலி

91-ஸ்ரீவைகுண்டம்,
நவதிருப்பதி
ஸ்ரீ வைகுந்தவல்லி
ஸ்ரீ வைகுந்தநாதன் (ஸ்ரீ கள்ளபிரான்)
பாண்டியநாடு,திருநெல்வேலி

92-திருவரகுணமங்கை,
நவதிருப்பதி
ஸ்ரீ வரகுண வல்லி தாயார் (ஸ்ரீ வரகுணமங்கை தாயார்)
விஜயாசனப் பெருமாள்
பாண்டியநாடு,திருநெல்வேலி

93-திருப்புளிங்குடி,
நவதிருப்பதி
ஸ்ரீ மலர்மகள் நாச்சியார், ஸ்ரீ புளிங்குடி வல்லி
ஸ்ரீ காய்சினவேந்தன்
பாண்டியநாடு,திருநெல்வேலி

94-திரு தொலைவில்லிமங்கலம்(ரெட்டைத் திருப்பதி), நவதிருப்பதி
ஸ்ரீ கரும் தடங்கண்ணி நாச்சியார்
ஸ்ரீ அரவிந்த லோசனன், ஸ்ரீநிவாசன் (தேவப்பிரான்)
பாண்டியநாடு,திருநெல்வேலி

95-திருக்குளந்தை (பெருங்குளம்), நவதிருப்பதி
ஸ்ரீ அலமேலுமங்கை தாயார், ஸ்ரீ குளந்தை வல்லி
ஸ்ரீ ஸ்ரீநிவாசன்
ஸ்ரீ மாயக்கூத்தன்
பாண்டியநாடு,திருநெல்வேலி

96-திருக்கோளூர், நவதிருப்பதி
ஸ்ரீ குமுத வல்லி, ஸ்ரீ கோளூர் வல்லி நாச்சியார்
ஸ்ரீ வைத்த மாநிதி பெருமாள் (நிக்ஷேபவிதன்)
பாண்டியநாடு,திருநெல்வேலி

97-திருப்பேரை
(தென் திருப்பேரை), நவதிருப்பதி
ஸ்ரீ குழைக்காது வல்லி, ஸ்ரீ திருப்பேரை நாச்சியார்
ஸ்ரீ மகர நெடும் குழைக்காதன் (ஸ்ரீ நிகரில் முகில் வண்ணன்)
பாண்டியநாடு,திருநெல்வேலி

98-திருக்குருகூர்
(ஆழ்வார் திருநகரி), நவதிருப்பதி
ஸ்ரீ ஆதிநாத வல்லி, ஸ்ரீ குருகூர் வல்லி
ஸ்ரீ ஆதிநாதன் (ஸ்ரீ ஆதிப்பிரான்)
ஸ்ரீ பொலிந்து நின்ற பிரான்
பாண்டியநாடு,திருநெல்வேலி

99-ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீ ஆண்டாள் (ஸ்ரீ கோதா நாச்சியார்)
ஸ்ரீ வடபத்ரசாயி (ரங்கமன்னார்)
பாண்டியநாடு,விருதுநகர்

100-திருதண்கால் (திருதண்காலூர்)
ஸ்ரீ செங்கமல தாயார் (அன்ன நாயகி, அனந்த நாயகி, அம்ருத நாயகி, ஜாம்பவதி)
ஸ்ரீ நின்ற நாராயணன்
பாண்டியநாடு,விருதுநகர்

101-திருக்கூடல்,
மதுரை
ஸ்ரீ மதுர வல்லி (வகுலவல்லி, வரகுணவல்லி,

மரகதவல்லி)
கூடல் அழகர்
பாண்டியநாடு,மதுரை

102-திருமாலிரும் சோலை
(அழகர் கோயில்)
ஸ்ரீ சுந்தர வல்லி (ஸ்ரீதேவி)
திரு மாலிரும் சோலை நம்பி (அழகர், கள்ளழகர், மாலாங்காரர்)
பாண்டியநாடு,மதுரை

103-திரு மோகூர்
ஸ்ரீ மோகூர் வல்லி (மேகவல்லி, மோகன வல்லி)
ஸ்ரீ காளமேக பெருமாள்
ஸ்ரீ திருமோகூர் ஆப்தன்
பாண்டியநாடு,மதுரை

104-திருக்கோஷ்டியூர் (கோஷ்டி க்ஷேத்ரம்)
திருமாமகள் நாச்சியார்
ஸ்ரீ உரகமெல்லணையான்
ஸ்ரீ சௌம்யநாராயணன்
பாண்டியநாடு,புதுக்கோட்டை

105-திருப்புல்லாணி, ராமநாதபுரம்
ஸ்ரீ கல்யாண வல்லி, ஸ்ரீ பத்மாஸநி த் தாயார்
ஸ்ரீ கல்யாண ஜகந்நாதன் (தெய்வச் சிலையார்)
பாண்டியநாடு,ராமநாதபுரம்

106-திருமெய்யம்
ஸ்ரீ உய்ய வந்த நாச்சியார்
ஸ்ரீ சத்ய கிரிநாதன் (ஸ்ரீ சத்யமூர்த்தி)
ஸ்ரீ மெய்யப்பன்
பாண்டியநாடு,புதுக்கோட்டை

107-திருப்பாற்கடல்
ஸ்ரீ கடல் மகள் நாச்சியார் (ஸ்ரீ பூதேவி)
ஸ்ரீ க்ஷீராப்தி நாதன்
விண்ணுலகம்

108-பரமபதம்
ஸ்ரீ பெரிய பிராட்டியார்
ஸ்ரீ பரமபத நாதன்
விண்ணுலகம்

Sunday, June 28, 2020

இராமாயணம் 16 வார்த்தைகளில்


●பிறந்தார் 
●வளர்ந்தார் 
●கற்றார் 
●பெற்றார்
●மணந்தார் 
●சிறந்தார் 
●துறந்தார் 
●நெகிழ்ந்தார்
●இழந்தார் 
●அலைந்தார் 
●அழித்தார் 
●செழித்தார்
●துறந்தார் 
●துவண்டார் 
●ஆண்டார் 
●மீண்டார்...

விளக்கம்:
***********
1. பிறந்தார்: ஸ்ரீராமர் கௌசல்யா தேவிக்கு தசரதரின் ஏக்கத்தைப் போக்கும்படியாக பிறந்தது.

2.வளர்ந்தார்: தசரதர் கௌசல்யை சுமித்திரை கைகேயி ஆகியோர் அன்பிலே வளர்ந்தது

3.கற்றார்: வஷிஷ்டரிடம் சகல வேதங்கள் ஞானங்கள் கலைகள் முறைகள் யாவும் கற்றது.

4.பெற்றார்: வஷிஷ்டரிடம் கற்ற துனுர்வேதத் தைக் கொண்டு விஸ்வாமித்ரர் யாகம் காத்து விஸ்வாமித்ரரை மகிழ்வித்து பல திவ்ய அஸ்திரங்களை பெற்றது.

5.மணந்தார்: ஜனகபுரியில் சிவனின் வில்லை உடைத்து ஜனகர்-சுனயனாவின் ஏக்கத்தை தகர்த்து சீதையை மணந்தது.

6.சிறந்தார்: அயோத்யாவின் மக்கள் மற்றும் கோசல தேசத்தினர் அனைவர் மனதிலும் தன் உயரிய குணங்களால் இடம் பிடித்து சிறந்து விளங்கியது.

7.துறந்தார்: கைகேயியின் சொல்லேற்று தன்னுடையதாக அறிவிக்கப்பட்ட ராஜ்ஜிய த்தை துறந்து வனவாழ்வை ஏற்றது.

8. நெகிழ்ந்தார்: 
★அயோத்தியா நகரின் மக்களின் அன்பைக் கண்டு நெகிழ்ந்தது.
★குகனார் அன்பில் நெகிழ்ந்தது.
★பரத்வாஜர் அன்பில் நெகிழ்ந்தது.
★பரதரின் அப்பழுக்கற்ற உள்ளத்தையும் தன் மீது அன்பினையும் தன்னலமற்ற குணத்தை யும் தியாகத்தையும் விசுவாசத்தையும் கண்டு நெகிழ்ந்தது.
★அத்ரி-அனுசூயை முதல் சபரி வரையிலான சகல ஞானிகள் மற்றும் பக்தர்களின் அன்பிலே நெகிழ்ந்தது.
★சுக்ரீவர் படையினரின் சேவையில் நெகிழ்ந்தது.
★விபீஷணரின் சரணாகதியில் நெகிழ்ந்தது.
★எல்லாவற்றுக்கும் மேலாக ஆஞ்சநேயரின் சேவையைக் கண்டு, 'கைம்மாறு செய்ய என்னிடம் எதுவுமில்லை. என்னால் முடிந்தது என்னையே தருவது' எனக் கூறி ஆஞ்சநேய ரை அணைத்துக் கொண்டது.

9.இழந்தார்: மாய மானின் பின் சென்று அன்னை சீதையை தொலைத்தது.

10.அலைந்தார்: அன்னை சீதையை தேடி அலைந்தது.

11.அழித்தார்:  இலங்கையை அழித்தது.

12.செழித்தார்: சீதையை மீண்டும் பெற்று அக மும் முகமும் செழித்து ராஜ்ஜியத்தை மீண்டும் பெற்று செல்வச் செழிப்பான வாழ்க்கைக்கு திரும்பியது.

13.துறந்தார்: அன்னை சீதையின் தூய்மை யை மக்களில் சிலர் புரிந்து கொள்ளாத நிலை யில் மக்களின் குழப்பத்தை நீக்குவதற்காக அன்னை சீதையை துறந்தது.

13.துவண்டார்: அன்னை சீதையை பிரிய நேர்ந்தது சீராமருக்கு மிகுந்த வலியை தந்தது. அந்த வலி அவரை சில காலம் மனதளவில் துவள செய்தது.

15.ஆண்டார்: என்ன தான் மனதினுள் காயம் இருந்தாலும் மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் அனைத்தையும் குறைவற செய்து மக்கள் உடலால், மனதால் ஆரோக்கியமான வர்களாகவும் செல்வச் செழிப்புடன் வாழும் படியும் பார்த்துக் கொண்டது.

16.மீண்டார்: பதினோறாயிரம் ஆண்டுகள் நல்லாட்சி செய்து மக்கள் அனைவரையும் ராமராகவும் சீதையாகவும் மாற்றி தன்னுடனே அழைத்துக் கொண்டு தன் இருப்பிடமான வைகுண்டம் மீண்டது".

ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே..

Saturday, June 20, 2020

மூன்றுவித உணவுகள்


1.சாத்விக உணவு
2.ராஜஸ உணவு
3.தாமஸ உணவு

உயிரிலிருந்து உணவு உற்பத்தியாகிறது.உணவிலிருந்து உயிர் உற்பத்தியாகிறது என்று வேதம் கூறுகிறது.

ஒரு உயிர் இன்னொரு உயிரின் உணவாகிறது.

ஸ்ரீமத்பகவத்கீதையில் ஸ்ரீகிருஷ்ணர் மூன்றுவித உணவுகளைப்பற்றி கூறுகிறார்

ஆயுள், அறிவு, பலம், ஆரோக்கியம், சுகம், விருப்பம் ஆகியவைகளை  உண்டுபண்ணுபவை,  ரசமுள்ளவைகள், பசையுள்ளவைகள், வலிவு தருபவைகள், இன்பமானவைகள் ஆகிய ஆகாரங்கள் சாத்வீக உணவு

கசப்பு, புளிப்பு, உவர்ப்பு, அதிக உஷ்ணம், காரம், உலர்ந்தவை, எரிச்சலூட்டுபவை, துக்கத்தையும், சோகத்தையும், நோயையும் உண்டுபண்ணுபவையான ரஜோகுண உணவு

பொழுது கழிந்த, சுவையிழந்த, நுர்நாற்றமெடுத்த, பழைய, எச்சிலான, தூய்மையற்ற உணவு.
போதையூட்டக்கூடிய உணவுகள், நீண்ட நாட்கள் பாதுகாக்கப்பட்டு பின்பு பரிமாறப்படும் உணவுகள், ஒரே தட்டில் உள்ள உணவை எச்சில் உணவை பலர் உண்பது, மாமிச உணவுகள் போன்றவை தமோ குண உணவு

உணவில் ஐந்து தோஷங்கள் உண்டு.

1) அர்த்த தோஷம்
தீயவழியில் பணம் சம்பாதிப்பவனிடம், பாவியிடம், தெய்வநம்பிக்கை இல்லாதவனிடம் உணவு உண்பதால் பாவம் வருகிறது.

2) நிமித்த தோஷம்.
எதற்காக உணவு சமைக்கப்படுகிறது? யார் உணவை சமைக்கிறார்கள்? என்பதை பார்க்க வேண்டும். அத்தோடு சமைக்கப்பட்ட உணவு நாய், எறும்பு, காகம் போன்ற ஜந்துக்களால் தொடப்படாமல் இருத்தலும் அவசியம், உணவில் தூசி, தலை மயிர், புழுக்கள் போன்றவையும் இருக்கக் கூடாது.
-
3) ஸ்தான தோஷம்
உணவு சமைக்கப்படும் இடம் நல்ல இடமாக இருக்க வேண்டும்.பலர் கூடும் இடங்கள்,தூசி நிறைந்த இடங்கள்,அசுத்த சூழல் உள்ள இடங்கள்,மழை,காற்று இவைகளால் பாதிக்கப்படும் இடங்கள்,
அற்ப விவாதங்கள் நடக்கும் இடங்கள் போன்றவை சமைப்பதற்கு ஏற்ற இடங்கள் அல்ல.

4) ஜாதி தோஷம்
ஒவ்வொரு உணவுக்கும் ஒரு ஜாதி இருக்கிறது. ஜாதி என்பது பிறவியில் உண்டான குணம். சில காய்கள் பிறவியிலேயே விஷமுள்ளவையாக இருக்கும்.சில காய்கள் அதிக சூட்டை உருவாக்கும். சில மாமிசங்கள் நோய்க்கிருமிகள் உள்ளவையாக இருக்கும், சில காய்கள் அல்லது மாமிசம் இயல்பிலேயே நாற்றமெடுக்கும். இவைகள் ஜாதிதோஷம் உள்ளவை.

5) சம்ஸ்கார தோஷம்
ஒரு உணவு இன்னொரு உணவுடன் சேர்வதால் வரும் தோஷம். சாத்விக உணவுடன் தாமஸ உணவை கலத்தல் உணவை உரிய முறையில் சமைக்காமல் பாதியில் இறக்குதல்
உணவை அதிக அளவு வேகவைத்தல், அதிகமாக வறுத்தல், கரியவைத்தல் போன்றவை 

உணவை சமைத்தபிறகு தெய்வங்களுக்கு படைக்க வேண்டும்.

இந்த உலகத்தில் நாம் மட்டும் வாழவில்லை.நமக்கு மேலே தெய்வங்கள் இருக்கின்றன.
அவர்களும் உணவினால்தான் வாழ்கிறார்கள். உணவில் தூலபகுதி, சூட்சுமப்பகுதி என்று இரண்டு உள்ளது.
சூட்சுமப்பகுதியை தெய்வங்கள் உணவாக உட்கொள்கின்றன.
தூலப்பகுதியை மனிதர்கள் உணவாக உட்கொள்கிறார்கள்.

உணவை நியதிப்படி சமைத்தாலும், ஒவ்வொரு உணவும் பிற உயிர்களிடமிருந்து பெறப்படுபவைதான்
ஒரு உயிர் இன்னொரு உயிருக்கு உணவாகிறது. இதனால் உயிர்களைக் கொன்ற பாவம், அதை உண்பர்களுக்கு வந்து சேர்கிறது.
காய்கறி,விதைகள், பால் போன்ற உணவை உண்டாலும் அதனால் பாவம் வரவே செய்கிறது.

தெய்வங்களுக்கு உணவை படைப்பதால் அந்த உணவில் வரும் பாவத்தின் பெரும்பகுதியை தெய்வங்கள் ஏற்றுக்கொள்கின்றன.
அப்படியானால் தெய்வங்களுக்கு பாவம் வராதா? தெய்வங்கள் பாவத்தை தங்களிடம் எதையும் வைத்துக்கொள்வதில்லை.தெய்வங்களை யார் பழிக்கிறார்களோ அவர்களுக்கு அந்த பாவம் செல்கிறது.

Thursday, June 18, 2020

அகத்தியர் எழுதிய நூல்களில் கிடைத்தவை:

அகத்தியர் வெண்பா
அகத்தியர் வைத்தியக் கொம்மி
அகத்தியர் வைத்திய ரத்னாகரம்
அகத்தியர் வைத்தியக் கண்ணாடி
அகத்தியர் வைத்தியம் 1500
அகத்தியர் வைத்திய சிந்தாமணி
அகத்தியர் கர்ப்பசூத்திரம்
அகத்தியர் ஆயுள் வேத பாஷ்யம்
அகத்தியர் வைத்தியம் 4600
அகத்தியர் செந்தூரம் 300
அகத்தியர் மணி 4000
அகத்தியர் வைத்திய நூல் பெருந்திரட்டு
அகத்தியர் பஸ்மம் 200
அகத்தியர் நாடி சாஸ்திரம்
அகத்தியர் பக்ஷணி
அகத்தியர் கரிசில் பஸ்யம் 200
சிவசாலம்
சக்தி சாலம்
சண்முக சாலம்
ஆறெழுத்தந்தாதி
காம வியாபகம்
விதி நூண் மூவகை காண்டம்
அகத்தியர் பூசாவிதி
அகத்தியர் சூத்திரம் 30
போன்ற நூல்களை இவர் எழுதியதாகக் கூறப்படுகிறது. மேலும்
அகத்திய ஞானம் என்னும் அகத்தியம் என்னும் ஐந்திலக்கணம்
அகத்திய சம்ஹிதை என்னும் வடமொழி வைத்திய நூலும் இவரால் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அகத்தியரின் சீடர்கள்

அதங்கோட்டு ஆசான்
துராலிங்கன்
செம்பூண்சேய்
வையாபிகன்
வாய்ப்பிகன்
பனம்பாரன்
கழாரம்பமன்
அநவிநயன்
பெரிய காக்கைபாடினி
நத்தத்தன்
சிகண்டி
தொல்காப்பியன்
ஆகிய 12 பேரும் அகத்தியரின் சீடர்கள் ஆவர் இவர்கள் 12 பேரும் சேர்ந்து "பன்னிரு படலம்" என்னும் நூலை எழுதினார்கள் இந்த செய்தியை புறப்பொருள் வெண்பாமாலை குறிப்பிடுகிறது.
அகத்தியர் சித்த வைத்தியத்திற்கு செய்த பணி சிறப்பானது. பல நோய்களுக்கும் மருத்துவ சந்தேகங்களுக்கும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார். அகத்தியர் பெயரில் வெளியாகியுள்ள சமரச நிலை ஞானம் என்னும் நூலில் உடம்பில் உள்ள முக்கியமான நரம்பு முடிச்சுகள் பற்றிய விளக்கம் காணப்படுகிறது. அகத்தியர் ஐந்து சாஸ்திரங்கள் என்னும் நூலில், பதினெட்டு வகையான மனநோய் பற்றியும் அதற்குரிய மருத்துவம் பற்றியும் விளக்கப்பட்டிருக்கின்றன. அகத்தியர் அஷ்ட மாசத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் தோஷங்கள் பற்றியும் கூறியுள்ளார்.

Wednesday, June 17, 2020

அருள்மிகு அசலேஸ்வரர் திருக்கோவில் !!

ஆரூர் அகிலேசுவரர் கோவில் (ஆரூர் அரநெறி) தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 88ஆவது சிவத்தலமாகும்.

அப்பர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் தியாகராசசுவாமி கோவிலின் தெற்குச் சுவற்றில் அமைந்துள்ளது.

மூலவர் : அசலேஸ்வரர், அரநெறியப்பர்
உற்சவர் : அரநெறியப்பர்
தாயார் : வண்டார்குழலி
தல விருட்சம் : பாதிரி
தீர்த்தம் : சங்கு தீர்த்தம், கமலாலயம்
புராண பெயர் : ஆருர் அரநெறி
ஊர் : ஆருர் அரநெறி
மாவட்டம் : திருவாரூர்

தல வரலாறு :

நமிநந்தியடிகள் சிறுவயதிலிருந்து திருவாரூர் பெரிய கோவிலில் உள்ள எம்பெருமானை வழிபட்டு வந்தார்.

இக்கோவிலுக்குள்ளேயே அரநெறி என்ற தனிக்கோவில் உண்டு. இங்குள்ள சிவன் அரநெறியப்பர் என அழைக்கப்படுகிறார். இவரையும் நமிநந்தியடிகள் வழிபாடு செய்து வந்தார். ஒருமுறை அரநெறியப்பர் கோவிலுக்கு மாலை வேளையில் வழிபாடு செய்ய வந்தார்.

கோவில் விளக்கு ஒளி மங்கலாகி, நெய் தீர்ந்து போகும் நிலை ஏற்பட்டது. அப்போது அடிகள் விளக்கேற்ற யாராவது வருகிறார்களா? என பார்த்தார். யாரும் வரவில்லை.

தொலைவிலுள்ள தமது வீட்டிற்கு சென்று நெய் வாங்கி வருவதற்குள் நன்றாக இருட்டிவிடும். அத்துடன் விளக்கும் அணைந்துவிடும் என்று நினைத்த அடிகள் கோவில் வாசலில் இருந்த வீட்டிற்கு சென்று சிறிது நெய் கேட்டார்.

அந்தக்காலத்தில் கோவிலை சுற்றி சமணர்கள் அதிகம் வசித்து வந்தனர். இவர் நெய் கேட்ட சமணர் வீட்டை சேர்ந்தவர்கள், கையில் தீ ஏந்தி நடனம் செய்யும் உங்கள் இறைவனுக்கு விளக்கு தனியாக வேண்டுமா? தீயின் ஒளியே போதுமே. அப்படியும் நீ விளக்கு ஏற்ற வேண்டுமானால், கோவில் எதிரில் உள்ள குளத்து நீரை எடுத்து தீபத்தை ஏற்றுவது தானே? என கேலி பேசினார்.

இதனால் வருத்தமடைந்த அடிகள் கோவிலுக்கு வந்து, இறைவா! உனக்கு விளக்கேற்ற நெய் கேட்க சென்ற வீடுகளில், என்னுடன் சேர்த்து உன்னையும் கேலி செய்கின்றனர்.

இதையெல்லாம் கேட்பதற்கு நான் என்ன பாவம் செய்தேன்? என அழுது புலம்பினார். அப்போது இறைவன் அசரீரியாக, அடிகளே! கலங்காதே. அவர்கள் கூறியபடி இங்குள்ள குளத்து நீரை எடுத்து எனது சன்னதியில் விளக்கேற்று என கூறினார். இதைக்கேட்டவுடன் அடிகளுக்கு மிகுந்த சந்தோஷம் ஏற்பட்டது.

உடனே ஓடிச்சென்று அங்கிருந்த சங்கு தீர்த்தம் எனப்படும் குளத்திலிருந்த நீரை எடுத்து வந்து விளக்கில் ஊற்றி தீபத்தை தூண்டிவிட்டார். தீபம் முன்பை விட பலமடங்கு பிரகாசமாக எரிந்தது. அத்துடன் அங்கிருந்த பல விளக்குகளிலும் நீரை ஊற்றி தீபம் ஏற்றினார்.

கோவில் முழுவதும் சூரிய ஒளி பட்டது போல் பிரகாசித்தது. இதை கேள்விப்பட்ட சமணர்கள் இறைவனின் திருவிளையாடலை கண்டு ஆச்சரியமடைந்தனர்.

சோழமன்னன் அடிகளின் பக்தியை கேள்விப்பட்டு, அவரையே கோவிலுக்கு தலைவராக்கி, கோவிலில் புகழ் மென்மேலும் பரவவும், திருவிழாக்கள் சிறப்பாக நடக்கவும் உதவினான். இறைவன் அடிகளின் பக்தியில் மகிழ்ந்து 63 நாயன்மார்களில் ஒருவராக்கினார்.

தலபெருமை :

கழற்சிங்கர் எனும் பல்லவ மன்னன் தன் மனைவியுடன் இத்தலத்திற்கு வந்தான். அப்போது இறைவனுக்கு சாற்றுவதற்காக வைக்கப்பட்டிருந்த மலரை, ராணி முகர்ந்து பார்த்தாள்.

இந்த தவறை செய்தது ராணி என்று தெரிந்தும் கூட, செருத்துணையார் என்ற சிவனடியார் ராணியின் மூக்கை அறுத்து விட்டார். இறைவனின் கருணையால் ராணியின் மூக்கு சரியானது. செருத்துணையார் 63 நாயன்மார்களில் ஒருவரானார்.

தல சிறப்பு :

இங்கு சிவன் மேற்கு நோக்கிய சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். அசலேஸ்வரர் கோவில் மூலஸ்தானத்தின் நிழல் கிழக்கு திசையில் மட்டும் விழும். மற்ற திசைகளில் விழுகாது.

தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோபுரத்தை போன்ற கட்டட அமைப்பில் இது கட்டப்பட்டுள்ளது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 151 வது தேவாரத்தலம் ஆகும்.

பிரார்த்தனை :

திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.

நேர்த்திக்கடன் :

சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடனை நிறைவேற்றலாம்.

ராசிக்காரர் செய்யவேண்டிய தானம்

மேஷம்:
 மேஷ ராசிக்காரர்கள் குலதெய்வ வழிபாட்டை தவறாமல் செய்ய வேண்டும். 
சிவன்கோவில்களுக்கு சென்று வரும்போது வாசலில் உள்ள ஏழைகளுக்கு தவறாமல் தானம் செய்ய வேண்டும். 
பணக்காரராக விரும்பும் மேஷ ராசிக்காரர்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு தேவையான பொருட்களை தானம் செய்தால் பலன் கிடைக்கும்.

ரிஷபம்:
 ரிஷப ராசிக்காரர்கள் செவ்வாய்கிக் கிழமைகளில் சாம்பார் சாதம் தானம் செய்ய வேண்டும். இதனால் செல்வம் பெருகும். 
மேலும் ஏழை பெண்களின் திருமணத்துக்கு உங்களால் முடிந்த பொருட்களை தானம் செய்யுங்கள். இதனால் தடையில்லாத முன்னேற்றம் ஏற்படும்.

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்கள் தவறாமல் பித்ரு வழிபாடு செய்ய வேண்டும். புதன்கிழமைகளில் பெருமாளை தரிசனம்செய்து வெண் பொங்கலை உங்களால் முடிந்த அளவுக்கு தானம் கொடுங்கள். 
எல்லாவித செல்வமும் தேடி வரும்.மேலும் ஏழை மாணவர்களுக்கு படிப்புக்கு பண தானம் கொடுப்பதும் நல்லது.

கடகம்:
 கடக ராசிக்காரர்கள் பசுமாட்டுக்கு உணவு தானம் செய்வதை வழக்கமாக கொள்ள வேண்டும். இது குடும்பத்தில் வறுமையை விரட்டி செல்வத்தை சேர்க்க உதவும். 
மேலும் ஏழை நோயாளிகளுக்கு மருந்து வாங்கி தானம் கொடுத்தால் உங்களுக்கு நிம்மதியான வாழ்வு கிடைக்கும்.

சிம்மம்:
 சிம்ம ராசிக்காரர்கள் ஏழை எளியோர்களுக்கு அடிக்கடி தயிர் சாதம் தானம் செய்ய வேண்டும். இதனால் உங்கள் மனதில் அமைதி ஏற்படும். 
மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையானதை கேட்டு வாங்கிக்கொடுங்கள். அது புண்ணியத்தை சேர்க்கும்.

கன்னி:
 கன்னி ராசிக்காரர்கள் குருபகவானை தவறாமல் வழிபடவேண்டும். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கோதுமையால் ஆன இனிப்பு மற்றும் உணவு பொருட்களை தானம் செய்ய வேண்டும். 
மேலும் ஏழை மாணவர்களுக்கு நோட்டு, பென்சில், பேனா வாங்கிக் கொடுக்காலாம். இது உங்களை முன்னேற்றும்.

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு விநாயக வழிபாடு கைகொடுக்கும். அடிக்கடி ஏழை எளியோர்களுக்கு வெண் பொங்கல்தானம் செய்யுங்கள். 
இதனால் புதிய சொத்துக்கள் வந்து உங்களுக்கு சேரும். மேலும் ஆதரவற்ற இல்லங்களில் தங்கி படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு படிப்பு உதவித்தொகை தானமாக கொடுத்தால் உங்கள் வாரிசுகளுக்கு நல்லது.

விருச்சகம்:
 விருச்சக ராசிக்காரர்கள் தங்களால் இயன்ற அளவு மாற்றுத்திறனாளிகளுக்கு தானம் செய்ய வேண்டும். கடன்கள் தீர லட்சுமி நரசிம்மரை வழிபட்டு பானகம் தானம் செய்யலாம். 
மேலும் அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல் தானம் செய்தால் பண வரவு அதிகரிக்கும்.

தனுசு:
 தனுசு ராசிக்காரர்கள் தவறாமல் முருகனை வழிபட வேண்டும். குருபகவானுக்கு கொண்டை கடலை மாலை அணிவித்து பிறகு பக்தர்களுக்கும் தானம் செய்யலாம். 
வாரம் ஒரு முறை செவ்வாய் அல்லது வெள்ளியில் துர்க்கை அம்மனுக்கு மலர் தானம் செய்யலாம். மேலும் செவ்வாய்க் கிழமைகளில் சாம்பார் சாதம் தானம்செய்தால் வாழ்வு செழிக்கும். மேலும் வயதான பெண்களுக்கு தானம் செய்தால் நல்லது.

மகரம்:
 மகர ராசிக்காரர்கள் ஏழை பெண்களின் திருமணத்துக்கு உங்களால் முடிந்ததை தானமாக கொடுக்க வேண்டும். 
மேலும் வாயில்லா ஜீவன்களுக்கு தீவனம் வாங்கி கொடுக்கலாம். கோவில்களில் சீரமைப்பு பணிகள் நடக்கும்போது தானம் செய்தால் வீட்டில் லட்சுமி கடாட்சம் உண்டாகும்.

கும்பம்:
 கும்ப ராசிக்காரர்கள் குலதெய்வ வழிபாடை மறக்காமல் செய்ய வேண்டும். ஏழைகளுக்கு கதம்ப உணவை அடிக்கடி தானமாக கொடுக்க வேண்டும். 
இதனால் உங்களுக்கு வரும் பண வரவு இரட்டிப்பாகும். மேலும் ஏழை நோயாளிகளுக் மருந்து மாத்திரி வாங்கி கொடுத்தால் வளமான வாழ்வு அமையும்.

மீனம்:
 மீன ராசிக்காரர்கள் பவுர்ணமி நாட்களில் சிவ தரிசனம் செய்வது நல்லது.
ஏழை மாற்றுத்திறனாளிகளுக்கு உதவினால் புண்ணியம் அதிகரிக்கும். மேலும் நல்லெண்ணை தீபம் தானம் செய்யலாம். அய்யப்ப பக்தர்களுக்கு உதவினால் கூடுதல் நன்மை உண்டாகும்.

மாக ராணி தாராபாய்


சிவாஜி மஹராஜருக்கு பிறகு 
நடந்த வரலாற்று அற்புதம்.

சனாதன  தர்மத்தை காத்த மராட்டாக்களின் வீர வரலாறு.

ஹிந்துக்களை அச்சுறுத்தி இந்த தேசத்தை அடிமைப்படுத்த நினைத்த கொலைகார காட்டுமிராண்டி இஸ்லாமியர்கள் விவரிக்க இயலாத கொடூரங்களை ஹிந்துக்கள் மீது இழைத்தனர். பல ஆயிரம்  திருக்கோவில்களை இடித்து தரைமட்டமாக்கினர். இஸ்லாமியர்கள் போர்களில் வென்ற பகுதிகளில் ஹிந்துக்களை சிறைபிடித்து அடிமைகளாக விற்றனர். கணவனடமிருந்து மனைவியைப் பிரித்து, பெற்றோர்களிடமிருந்து கண்ணின் மணிகளாம் குழந்தைகளைப் பிரித்து, குழந்தைகள் துடித்து கதறக் கதற  பெற்றோர்களை ஆடு மாடுகளைப்போல அடித்து இழுத்து சென்று சந்தைகூட்டி அடிமைகளாக விற்பனை செய்து அன்பால் விளைந்த குடும்பங்களை நாசமாக்கினார்கள். ஹிந்துக்களை மதம் மாற்ற சித்தரவதை செய்தார்கள். மதமாற மறுத்தவர்களை கொலை செய்தார்கள். ஜிஸியா வரி விதித்து கொடுமைப்படுத்தினார்கள்.  

அந்த தீயினும் கொடிய காலகட்டத்தில் தாய்மதப்பற்று, தாய்நாட்டுப்பற்று கொண்ட வீரசூரர்கள் பலரும் இஸ்லாமியர்கள் மீது ஓயாது போர்தொடுத்து தமது வீர ரத்தத்தை சிந்தி நமது  தர்மத்தையும் மக்களையும் காத்தனர். 

அந்த வகையில் ஹிந்துக்களின் வீர வரலாற்றுக்கு அஞ்சா நெஞ்சுரம் படைத்த, மாவீரமும், யுத்த சாகசமும், சனாதன தர்மப்பற்றும் கொண்டு வாராது வந்த மாமணியாய், விடிவெள்ளியாய் வந்து உதித்த ஸ்ரீ சத்ரபதி சிவாஜி மகராஜர் தனது மாவீரத்தாலும், மதிகுன்றா விவேகத்தாலும் தாய்மதப்பற்றாலும், தேசபக்தியின் ஆற்றலாலும் அன்னை பாவானியின் திருவருளாலும் மகராஜரது குருபகவான் ஸ்ரீமத் ஸ்ரீசமர்த்த ராமதாஸ் ஸ்வாமிகளது ஆசியாலும் இஸ்லாமியர்களின் கொடூரத்தால் உள்ளம் செத்து ஊண் வாடி குற்றுயிராய் கிடந்த  சமுதாயத்தை வீரம்கொண்டு எழச்செய்து, வீரபோர்ப்படை திரட்டி, தீரச்செயல்களுக்கு தூண்டி தொடர்ந்து அதிசாகச யுத்தங்களை நடத்தி சனாதன தர்மத்தை மீண்டும் உன்னதத்திற்கு உயர்த்தினார்.  தர்மம் நீதி நேர்மை எதற்கும் அஞ்சாத காட்டுமிராண்டி இஸ்லாமியர்களை  அடக்கி ஒடுக்கி நூற்றாண்டுகளுக்கு பிறகு ஒரு சுதந்திர ஹிந்து  சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்தார். ஹிந்து  மதத்தை ஒட்டு மொத்த அழிவிலிருந்து காத்தார். 

சத்ரபதி சிவாஜி மகராஜர் ஸ்தாபித்த  சாம்ராஜ்த்தில் மகராஜருக்குப் பின் அரியணையேறிய அவரது அருந்தவப் புதல்வர் சத்ரபதி சம்பாஜி மஹராஜ் சமாதான பேச்சுவார்த்தை என்கிற பெயரில் வஞ்சகமாக டெல்லிக்கு வரவழைக்கப்பட்டு, ராஜதர்மத்தை மீறி அவுரங்கசீப்பால் கண்டதுண்டமாக வெட்டப்பட்டு காக்கைகளுக்கு உணவாகப்போடப்பட்டார்.

அடுத்து பதவிக்கு வந்த அவரது இளவல் சத்ரபதி ராஜாராம் மஹராஜ் ரத்தபேதியால் அல்பாயுசில் மடிந்தார். 

அப்போது ராஜ குடும்பத்திலோ அல்லது ராணுவத்தலைவர்கள் மத்தியிலோ நாட்டை ஆண்டு ராணுவத்தை வழி நடத்தக்கூடிய அளவில் யாரும் தென்படவில்லை. நிலைகுலைந்து நின்றது புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட  ராஜ்யம். 

டெல்லி, பீஜப்பூர், பாமினி, கோல்கொண்டா, அஹமத்நகர் சுல்தான்கள் தள்ளாடும் ஹிந்து ராஜ்ஜியத்தை அழிப்பது அவர்கள் கையில் வந்துவிட்டது என்று எக்காளமாக சிரித்தனர். தங்களுக்கு சகாயம் செய்த அல்லாவுக்கு சிறப்பு துதிகள் செய்தனர்.  அரசவைக் கவிஞர்கள் அல்லாவையும் அரசர்களையும் புகழ்ந்து கவிதை பாடி சிறப்பு பரிசுகளை அள்ளினர்.

ராஜாராம் இறந்த மூன்றாவது நாள் உடனே சரணடையும்படி மராட்டா தலைவர்களுக்கு சுல்தான்கள் ஆணையிட்டனர். 

சிவாஜி மகராஜர் தனது வீரத்தாலும் மதியூகத்தாலும் ஸ்தாபித்த ஹிந்து ராஜ்யம் விகிர்த்துப்போய் நின்றது. அப்படி சரணடைய நேர்ந்தால் அத்தனை  கோவில்களும் இடிக்கப்படும். அர்ச்சாவதார திருமேனிகள் அனைத்தும் உடைக்கப்படும். ஹிந்துக்கள் மீண்டும் படுகொலை செய்யப்படுவார்கள்.  பெண்களும் குழந்தைகளும் அடிமைகளாக பிடித்து சென்று விற்பனை செய்யப்படுவார்கள்.  சமூகம் மீண்டும் கொலைகார இஸ்லாமியர்களுக்கு முழு அளவில் அடிமைப்படவேண்டியிருக்குமென நெஞ்சம் பதைத்து நின்றனர் ஹிந்துக்கள். 

ராஜாராம் இறந்து ஆறாவது நாளில் அனைத்து காரியமும் நடைபெற வேண்டுமெனவும் ஏழாவது நாள் அரசவை கூடி புதிய ராஜாவை அரியணையில் அமர்த்த  வேண்டும் எனவும் 19 வயதில் கைம்பெண்ணான ராஜாராமின் மனைவி தாராபாய் வேண்டுகோள் கலந்த ஆணை விடுத்தார். 

அவர்  சுல்தான்களுக்கு பயந்து போய் ஈம  காரியங்களை சீக்கிரம் முடித்துவிட்டு தனது பத்து மாத குழந்தையுடன் தப்பியோட உத்தேசித்திருப்பதாக பலரும் நினைத்தார்கள். இந்த தகவல்கள் உளவாளிகள் மூலம் சுல்தான்களுக்கு கிடைத்தது. சுல்தான்கள் சிவாஜி மகாராஜர் அரும்பாடுபட்டு ஸ்தாபித்த  சாம்ராஜ்யத்தின் கதியை எண்ணி எக்காளமிட்டனர்.

அப்போது குறுகிய எல்லைக்குள் தங்கள் சிற்றரசுகளை நிறுவிக்கொண்டு கண்ணில் பட்ட ஹிந்துக்களை ஜிஸியா வரி வசூலித்து சாறாகப்பிழிந்தும் அவ்வப்போது ஹிந்துக்களை அடிமைகளாக பிடித்து விற்றும் சுக ஜீவனம் செய்து வந்த சில எச்சிக்கலை இஸ்லாமிய  ராஜாக்கள் மராட்டாக்களோடு கூட்டணி வைக்க தூது அனுப்பினார்கள்.  சில மராட்டா  தலைவர்கள் அச்சத்தில் அந்த எச்சிக்கலை ஆதரவை ஏற்பது சரியென்றனர்.

ஏழாவது நாள் ராஜ சபை கூடியது பிரதான மந்திரி தலைமையில் ராஜ்யத்திற்கு பொறுப்பேற்க விருப்பமுள்ளவர்கள் முன்வரலாம் என அறிவிக்கப்பட்டது. முகலாய கொடூரங்களை நேரில் அனுபவித்திருந்த  தலைகள் கவிழ்ந்தன.  முன்பே சொன்னது போல  கிட்டத்தட்ட முக்கால்வாசி படைத்தலைவர்கள் சிவாஜி ராஜா காலத்து மனிதர்கள். வீரத்தில் கொஞ்சமும் சளைத்தவர்கள் அல்ல என்றாலும் வயது அவர்களை பலவீனப்படுத்தியிருந்தது. மீதமிருந்த கால்வாசி படைத்தலைவர்கள் போதிய அனுபவமற்ற இளசுகள்.

பிரதான மந்திரி சிவ்நாத் ராவ் மோஹித்ஜி  நிலைமையை எதிர்கொள்ள சபையோரின் ஆலோசனையை வேண்டினார். முக்கால்வாசிப்பேர் பீஜப்பூருடன் சமாதானமாப்போகலாம் என்றனர். பலர் அவுரங்கசீப்புக்கு தூது அனுப்பலாம் என்றனர். 

ஆக மொத்தத்தில் எல்லாம் முன்னைவிட குழப்பமாக இருந்தது. மதியம் பன்னிரண்டு மணிக்கு தாராபாய் அரசவைக்கு வருவதாக முன்னறிவிக்கப்பட்டது. 

அரசவையில் ஒரு விதமான அமைதி நிலவியது.  தாராபாயும் தாதிகள் புடைசூள வந்தார். அவரைப்பார்த்த அரசவை அதிர்ந்தது. விதைவைக்கான எந்த அறிகுறியும் இன்றி சர்வ அலங்கார பூஜிதையாக பட்டாடை அணிந்து தங்க வைர ஆபரணகள் சூடி உடை வாளுடன் நிமிர்ந்த நடையுடன் அரசவையை ஊடுருவும் பார்வையுடன் கம்பீரமாக வந்து அரியணையில் அமர்ந்தார். 

அவையோரின் ஆலோசனை முடிவு என்னவென தலைமை அமைச்சரை கேட்டார். தாராபாய் ஒரு கைம்பெண்ணுக்கான விதிகளை மீறி பரிபூரண ஆடை அலங்காரத்துடன் அரசவைக்கு வந்ததுமல்லாமல் தான் ஒரு விதவை என்பதையும் மறந்து அரியணையில் அமர்ந்ததை பார்த்ததால் அடைந்த அதிர்ச்சியிலிருந்து மீளாத அவர் இன்னும் தெளிவு பிறக்கவில்லை என கூறினார். அனைவரது நடவடிக்கையிலும் சிறு பெண தானே என்கிற அலட்சியம் இருந்தது. ஆனால் ராணியின் தீர்க்கமான முகம் அவர்களுக்கு ஒருவித தயக்கத்தை கொடுத்தது. கம்பீரமாக எழுந்து நின்ற ராணி சைகை காட்ட ஒரு தாதி ராணியின் பத்து மாத குழந்தையை கொண்டு வந்து ராணியிடம் கொடுத்தாள். அந்த குழந்தையை ராஜாவாக அறிவித்த ராணி ரஜ்ஜியத்தையும் ராணுவத்தையும் தானே பொறுப்பேற்றுக்கொள்வதாக அறிவித்தார்.  

குழப்பமான ராஜ சபையில் சிலர் முனக ஆரம்பித்தனர். ராணி புருவத்தை உயர்த்த அவர்களோடு சமாதானம் இவர்களோடு சமாதானம் என ஆளாளுக்கு இழுத்தனர். ராணி அவர்களை ஒருவித பரிதாபத்துடன் பார்த்துவிட்டு சமாதானத்திற்கு முயன்ற சம்பாஜி ராஜாவின் கதியை நினைவு படுத்தி சமாதன முயற்சிகளை புறக்கணித்தார். ஒரு வயதான தளபதி எழுந்து முகலாய குறுநில மன்னர்கள் சமாதானம் வேண்டி தூது அனுப்பியுள்ளதை நினைவுபடுத்தினார். நிமிர்ந்து பார்த்த ராணி நமது வாட்களுக்கு முதல் பலி அவர்கள் தான் என்று கூற அரசவை மீண்டும் அதிர்ந்தது. அவர்கள் குறுகிய பகுதிகளை ஆண்டாலும் அவர்கள் இடத்தில் போய் அவர்களை தாக்குவது புவியல் ரீதியாக ஆபத்து என சில படைத்தலைவர்கள்  கூறினர். பலரும் அதை ஆமோதித்தனர். 

அவையோரின் தடுமாற்றங்கள் எதையும் பொருட்படுத்தாமல் ராணி பிறப்பித்த அடுத்த உத்தரவு அவர்களை சிலையாக்கியது. இன்னும் மூன்று நாழிகையில் படைகள் நகரும் என்றும் இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் அவர்கள் அனைவரும் அழிக்கப்படுவார்கள் எனவும் அறிவித்தார். அடுத்த மூன்று நாட்கள் தொடர்ந்து பாய்ந்தோடிய மராட்டா குதிரைப்படை யாரும் எதிர்பாரதா நேரத்தில் அந்த குறுநில படைகள் மீது பாய்ந்தது. என்ன நடக்கிறது என அவர்கள் அனுமானிக்கும் முன் வெட்டிச்சாய்க்கப்பட்டனர்.   ராணுவ கூடங்கள் மீது நெருப்பு அம்புகள் வீசப்பட்டு பற்றி எரிந்தன. மிகக்கேவலமாக மிருகங்களைப்போல் வாயில் புல்லைக்கடித்துக்கொண்டு சரணடைந்த இஸ்லாமியர்களும் கூட வெட்டித்தள்ளப்பட்டனர். 

மராட்டா படை முழு வெற்றியுடன் ராஜ கைதிகள் அனைவரையும் வரிசையாக நிற்க வைக்கப்பட்டு பெண்கள் குழந்தைகள் என அனைவரையும் வெட்டித்தள்ளியது.  ராணி கடந்த காலத்தில் ஹிந்து மன்னர்கள் நடத்திய தர்மயுத்தம் என்கிற முட்டாள்தனத்தையெல்லாம் செய்துகொண்டிருக்கவில்லை. எதிரிகளை எதிரிகளாகவே பார்க்கும் நல்லறிவுடன் சாகச யுத்தங்களை நடத்தினார்.  எதிரிகள் மீது கொடூரத் தாக்குதல்களை தொடுத்தார்.  ராணியின் குதிரைப் படைகள் பாய்ந்தோடிய இடங்களிலெல்லாம் எதிரிகளின் ரத்த ஆறு  ஓடியது.  

அடுத்து மாராட்டா ராஜியத்தில்  ஏற்பட்ட குழப்பங்களை பயன்படுத்தி கலகம் விளைவித்த  கல்யாண்பிவாண்டி கோட்டை தலைவன் பாஜிராவ் கோர்பதே என்கிற  துரோகியை தண்டிக்க  கல்யாண் பிவாண்டி கோட்டை மீது பாய்ந்தது ராணியின் படை. பல சாகசங்களை கையாண்டு முகலாயர்களாலேயே தகர்க்க இயலாத கோட்டை கதவை பெயர்த்து துரோகிகளை கொன்றொழித்து ருத்தர தாண்டவமாடினார் ராணி. அதுவரை அவரை இளகாரமாக பார்த்த படைத்தலைவர்கள் அச்சத்துடனும் மரியாதையுடனும் அவரை பார்த்தனர். 

இந்த ராணி தாராபாய் – சிவாஜி மஹராஜரது மாவீரப் படைத்தலைவர்களில் ஒருவரான ஹம்பிராவ் மோஹித் என்பவரது தவப் புதல்வி ஆவார். தாராபாய் மூன்று வயது குழந்தையாக இருக்கும்போது அவரது தாய் பீஜப்பூர் படை தாக்குதலில் இறந்து போனார். உடன் பிறந்தவர்கள் இல்லாத அவர் சிறு வயது முதல் தனது தந்தையுடன் படை முகாம்களில் வளர்ந்தவர். எட்டு வயதிலேயே எந்த குதிரை மீதும் பாய்ந்து ஏறி சவாரி செய்யத் திறமை பெற்றார்.  பத்துவயதில் வில் வித்தையில் தேர்ச்சிபெற்றார். பன்னிரண்டு வயதில் வாட்சண்டை பயில ஆரம்பித்து சில ஆண்டுகளில் தேர்ச்சி பெற்றார். துப்பாக்கி சுடுவதிலும் நன்கு தேர்ச்சியடைந்தார். உரிய வயதில் பெரியோர் விருப்பப்படி இளவரசர் ராஜாராமுக்கு மணமுடிக்கப்பட்டு இல்வாழ்க்கையை நடத்திவந்தவர் தனது கணவரது அகால மரணத்தால் பெரிய பொருப்புகளை மிகச்சிறிய வயதில் துணிந்து ஏற்றுகொள்ளவேண்டியவரானார். 

அதன் பிறகு ராணியின் படைகள் தொடர்ந்து நான்கு திசைகளிலும் எதிரிகள் மீது பாய்ந்தது. ஏளனமாக சிரித்த சுல்தான்கள் அல்லா ஏன் இப்படி ஒரு பெட்டை சைத்தானை படைத்தான் என அறிஞர்களுடன் ஆராய்ச்சி செய்தனர்.  ராணியை கைது செய்து தனது அந்தப்புரத்தில் சேர்க்கும் நோக்கத்துடன் சுல்தான்களால் அனுப்பபட்ட படைகள் எல்லாம் மராட்டாக்களின் வாளுக்கு இறையாகின.   

மராட்டா ராணுவத்தில் துரோகம் செய்ய நினைப்பவன் யாரும் கிடையாது. ராணுவத்தினர் சிறு தவறு செய்தாலும் கடுமையாக தண்டிக்கப்பட்டனர்.  தீரச்செயல் செய்தவர்கள் பாராட்டப்பட்டனர். கைகால்களை இழந்த வீரர்களுக்கு சகல வசதியும் செய்துகொடுக்கப்பட்டது. 

ராணி தனக்கென எந்த சிறப்பு சலுகை அல்லது வசதி செய்து கொள்ளவில்லை.  ராணுவ உடை அணிந்து ஆயுதங்கள் பூண்டு எப்பொழுதும் போர்க்கோலத்திலேயே இருந்தார். மற்ற ராணுவ வீரர்கள் உண்ணும் உணவையே உண்டார். உறங்குவதற்கு தனி கூடாரம் கூட வைத்துக்கொள்ளாமல் மற்ற ராணுவ வீரர்களைபோலவே மைதானத்தில் உறங்கினார். தனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க இயலாத  இளம் தாயான அவர் தனது மார்பில் சுரக்கும் தாய்ப்பாலை பீய்ச்சி மருத்துவ பயன்பாட்டுக்காக மருத்துவர்களிடம் கொடுப்பாராம்.  அடிபட்டுகிடக்கும் ராணுவ வீரர்களை ஒருநாளும் அனாதையாக விடமாட்டாராம். மிகவும் மோசமாக காயம்பட்டு உயிர் பிரியும் தருவாயில் இருக்கும் ராணுவ வீரர்களை கண்டால் அவர்களது தலையை உயிர் பிரியும்வரை தனது மடியில் வைத்து அணைத்துக்கொள்வாராம்.  

கண்டிப்பும் கருணையும்  ஒருங்கே படைத்த ராணியை தங்களது தாயாகவே ராணுவ வீரர்கள் நினைக்க ஆரம்பித்தார்கள்.  அவரது படையில் சேர்வதே பெரும் பாக்கியம் என கருதிய ஹிந்து  இளைஞர்கள் அணியணியாக வந்தனர். படை வளர்ந்து கொண்டே இருந்தது. அதுவரை பல நூற்றாண்டுகள் ஹிந்துக்கள் மீது கொடூரங்களை இழைத்து வந்த முகலாயர்கள் மீது ராணியின் ராணுவம்  ஓயாது போர்தொடுத்தது.  கோவில்களை கேந்திர முக்கியத்துவம் மிக்க கோட்டைகளை காப்பது போல் காத்தார் ராணி. வேதியர்கள் உரிய வசதிகள் செய்துகொடுக்கப்பட்டு கோவில் காரியங்களும் வைதீக காரியங்களும் செவ்வனே நடக்க ஆவன செய்தார் ராணி. வேத பாடசாலைகளுக்கு ராணுவ பாதுகாப்பு கொடுக்கப்பட்டது.  மதத்திற்கு விரோதமாக பேசினால் அவனது தலை துண்டிக்கப்பட்டது.

அப்போது நோய் வாய்ப்பட்டிருந்த பீஜப்பூரின் மன்னன் அடில்ஷாவின் ராணி சாஹிபாபேகம் அசாத்திய திறமையுடன் ஆட்சியை நடத்தி வந்தாள். அவள் தான் சிவாஜி மகராஜரை அழிக்க அப்சல்கான் என்கிற காட்டுமிராண்டியை பெரும்படையுடன் அனுப்பியவள். சிவாஜி மகராஜர் அசாத்திய சாகச திறமையுடன் அவனை எதிர்கொண்டு புலிநகத்தால் அவனது வஞ்சக குடலை உறுவிக் கொன்று அவனது பெறும்படையை சுற்றிவளைத்து கொன்றதால் அவளது திட்டம் பெரும் தோல்வியடைந்து நடுங்கிகொண்டிருந்தாள்.  ஆனால் மராட்டிய ராஜகுடும்ப நிகழ்வுகள் அவளுக்கு சாதகமாக அமைய மராட்டக்களை பழிதீர்க்க நேரம் பார்த்துக்கொண்டிருந்தாள். அனாலும் நமது ராணியின் எழுச்சி அவளை கொஞ்சம் யோசிக்க வைத்தது. தந்திர ஓநாயான அவள் ராணி மற்ற சுல்தான்களுடன் போரிட்டு ஓயட்டும் சமயம் பார்த்து சுலபமாக ராணியை தோற்கடிக்கலாம் என பெரும் படையை தயார் செய்து காத்திருந்தாள். ஆனால் நமது மதியூக ராணி பீஜப்பூர் மீது படையெடுக்க ஆவன செய்வது போல நடித்துக்கொண்டே எதிர்பார்க்காத அதி சாகசத்துடன் கொடூரத்துக்கு பெயர்போன கோல்கொண்டா, பாமினி, அஹமத் நகர் சுல்தான்களை தீடீரென்று தாக்கி  பூண்டோடு அழித்தார். பீஜப்பூரை தாக்க ராணி அஞ்சுகிறார் என அனைவரும் நினைத்தார்கள். ராணியை தாக்க பீஜப்பூரின் படைகள் அணிதிரள ஆரம்பித்தன.

அப்போது அவுரங்கசீப் கைப்பற்றிய தனது கோட்டைகளை தாக்கி மீட்கப்போவதாக அறிவித்தார். உளவாளிகள் தீவிரமாக மராட்டியத்தின் வடபகுதியில் செயல்பட்டனர்.  அதே போல ராஜ்கர், புரந்தர், கிங்காட் கோட்டைகளிலிருந்த மராட்டா படைகள் வடக்கு நோக்கி நகர்ந்தன. ஆனால் அவை பாதியில் குழுக்களாக பிரிந்து மலைகாடுகளில் மறைந்து தெற்கு நோக்கி பயணித்து சந்திரபாக நதிக்கரையில் இன்றைய பண்டரீபுரத்திற்கு அருகில் ஒன்றுகூடி பீஜப்பூர் மீது எமகிங்கரர்களைப்போல பாய்ந்தனர். ஜெய் சம்போ மகாதேவ் என்கிற பேரிரைச்சல் விண்ணை முட்டியது. கொடூரங்களுக்கு பெயர்போன ஈவு இரக்கமற்ற பிஜப்பூர் இஸ்லாமிய காட்டுமிராண்டிகளின் படைகள் ஆங்காங்கே சுற்றிவளைக்கப்பட்டு வெட்டிச்சாய்க்கப்பட்டனர். அவர்களது அல்லாகோ அக்பர் கூச்சல் அவர்களுக்கே கேட்கவில்லை. அதுவரை அப்பாவி ஹிந்துக்களை கொன்றே பழக்கப்பட்ட துலக்கர்கள் மராட்டாக்களின் வாட்களுக்கும் துப்பாக்கி குண்டுகளுக்கும் இறையாகினர். பீஜப்பூரின் தொண்ணூறு சதவிகித தாக்குதல் படைகளை அழித்த ராணி ஒரு குறுகிய எல்லைக்குள் ஒடுங்கிய பீஜப்பூரின் தற்காப்பு படைகளை அழிக்க முயன்றால் தனது படைகளுக்கு உயிர் சேதம் அதிகம் ஏற்படும் என்று கருதி நாடு திரும்பினார்.  அப்போது அவரது ராணுவத்தின் எண்ணிக்கை மூன்று லட்சமாக உயர்ந்து இஸ்லாமியர்களை குலை நடுங்கவைத்துக்கொண்டிருந்தது.

அப்பொழுது இந்திய வரலாறு மிகப்பெரிய மாறுதல்களுக்கு உள்ளாகிக்கொண்டிருந்தது. கொங்கன் கடற்கரையில் அமைந்திருந்த ராஜபுரி என்கிற நகரத்தில் அமைந்திருந்த வெள்ளையர்களின் வியாபார மற்றும் ஆயுத தொழிற்கூடங்கள் மிகப்பெரிய அளவில் விரிவடைந்திருந்தன. பாரத தேசமெங்கும் வெள்ளையர்கள் உலவ ஆரம்பித்திருந்தனர். போர்த்துகீசியர்கள் கோவாவை கைப்பற்றி ஹிந்துக்களை மதமாற்ற இன்குசிஷன் (Inquisition) என்னும் கொடூர விசாரணை முறைகளால் லட்சக்கணக்கான ஹிந்துக்களை சித்ரவதை செய்து  மதமாற்றி வரும்வதாகவும்  மதமாற மறுத்தவர்களை கொடூரமாக கொலை செய்து வருவதாகவும் ராணிக்கு தகவல் வந்த வண்ணம் இருந்தன.  இவை குறித்து சிந்தித்து முடிவெடுக்க இயலாத வண்ணம் டெல்லி சுல்தான் அவுரங்கசீப்பின் படைகள் ராணிக்கு தொல்லை கொடுத்தன. ராணி தனது முழுப்பலத்தையும் திரட்டிக்கொண்டு டெல்லி படைகளை தாக்கினார். அவுரங்கசீப்பின்  முக்கால்வாசி படையினர் மராட்டாக்களுக்கு இறையாகினர். தப்பியோடிய அவுரங்கசீப்பின் படைகளை நர்மதை நதிவரை துரத்தி சென்றார் ராணி. ராணியின் படையிலிருந்த சந்தோஷ்ராவ் தேஷ்முக் என்கிற இளைஞன் படைகளுடன் நர்மதை நதியையும் தாண்டி இஸ்லாமியர்களுக்கு பயம் காட்டிவிட்டு வந்தான்.  தனது தலைநகர் வரை ஒரு காஃபிர்  பெட்டைசாத்தான் வந்துவிட்டாளே என்கிற அவமானம் தாங்காமல் அவுரங்கசீப் ஓபியம் என்னும் போதை வஸ்த்துவை அளவுக்கு அதிகமாக தின்றுவிட்டு முடங்கி கிடந்தான். 

ஹிந்து தாயின் புதல்வர்களே புதல்விகளே பாரதத்தை எண்நூறு ஆண்டுகள் ஆண்டபோதும் இஸ்லாமியர்களால் ஏன் முழு இஸ்லாமிய நாடாக்க முடியவில்லை என்பது தெரிகிறதா? 

ராணியின் வீர வரலாறு தியாக வரலாறான சரித்திரம்.

ராணி நிலைமைகளை அவதானிக்கும் முன் அவுரங்கசீப் மராட்டக்களை வெல்லவேண்டும் என்கிற தனது ஆசை நிறைவேராமலேயே அல்லாவிடம் போய் சேர்ந்தான். சிவாஜி மஹராஜர் காலத்து மாவீர தளபதிகளான பாலாஜிராவ், பாஜிராவ், மோஹன்ராவ் பாண்டுரங், டானாஜி ராவ், ஏஷாஜிராவ் தேஷ்முக், சிவ்நாத்ராவ், கங்காநாத் கோர்பதே, டானாஜி ராவின் காதலியும் பெண் சிறுத்தை என்று அழைக்கப்பட்டவருமான பிரபாவதி உள்ளிட்ட பலர் போரிட்டு போரிட்டு  போர்க்களத்தில் வீரசொர்க்கம் அடைந்தும் வயது மூப்பால் செயலிழந்தும் போனதால் மராட்டா ராணுவத்தில் பெரிய வெற்றிடங்கள் ஏற்பட்டன. 

டானாஜி ராவ் மற்றும் பிரபாவதியின் காதல் பற்றிய சிறு குறிப்பு:- பிராமணக்குடும்பத்தில் பிறந்த டானாஜி ராவுக்கு பிரபாவதி அத்தை மகள். இருவரும் பால்ய வயது தொட்டு காதலர்கள். ஆனால் இருவரும் தீவிர தேசபக்தியால் மதாபிமானத்தால் சிவாஜிராஜரின் ராணுவத்தில் சேர்ந்து ஆளுக்கொரு திசையில் போரிட்டு வந்தனர். சாதாரண சிப்பாய்களாக இருந்தவர்கள் தங்கள் திறமையால் தளபதிகளாக உயர்ந்தார்கள். பல கொடிய போர்களில் பங்கேற்ற இருவரும் பாரதம் முழுதும் இஸ்லாமியர்களிடமிருந்து மீட்கப்படும்வரை திருமணம் செய்து கொள்வதில்லை என்று சபதம் செய்துகொண்டனர். அவ்வாறே வாழ்ந்தனர். கடைசிவரை போரிட்டு இருவரும் போர்க்களத்திலேயே மடிந்தனர். அவர்களது புனிதமான காதலைப்பற்றி கர்ணபரம்பரை கதைகள் மற்றும் நாட்டுப்புற பாடல்கள் மூலம் தெரியவருகின்றன.

அவ்வாறு லட்சக்கணக்கான மாவீரர்கள் உடல் பொருள் ஆவியை தியாகம் செய்து கொடூர போர்களை நடத்தி பெற்றத்தந்த சுதந்திரத்தின் சுகபோகங்களை ருசிபார்த்த அடுத்த தலைமுறையினர் அரசியல் காலித்தனகளில் இறங்கினர். ராணிக்கு எதிராக அந்த மூடர்களால் பங்காளிப் பகை வளர்க்கப்பட்டு ராணியின் செயல் பாடுகள் முடக்கப்பட்டது.  ஊண் உறக்கமின்றி போர்க்களங்களை சந்தித்து வந்த ராணிக்கு உள்ளூர் துரோகிகளின் செயல்களை எதிர்கொள்ள இயலாமல் போனது. ஆனாலும் ராணிக்காக எதையும் செய்ய அவரது படையணிகள் தயாராகவே இருந்தன. ராணி நினைத்திருந்தால் நான்கு நாட்களுக்குள் கலக்காரர்கள் கொன்று புதைக்கப்பட்டிருப்பார்கள்.  ஆனால் பங்காளிப்போரால் மராட்டாக்கள் அழிந்துபோவதை விரும்பாத ராணி சிவாஜி ராஜாரின் முதல் ராணி சாயிபாய் வயித்து பேரனான சாகுவிடம் ஆட்சியையும் ராணுவத்தையும் அமைதியாக ஒப்படைத்தார். 

தனது பத்தொன்பது வயதில் கையிலெடுத்த வாளை முப்பத்தாறு நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு 55 வயதில் உறையில் போட்டார். அப்பொழுது தரைமேல் ஒரு இஸ்லாமிய அரசு கூட முழுவதுமாக இல்லாமல் போயிருந்தன.  தனது சாகச யுத்த திறமையாலும் தேர்ந்த மதியாலும் இஸ்லாமியர்களின் எழுநூறு – எட்டுநூறு ஆண்டு கால கொடூர ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்திருந்தார் ராணி. அவர் தனக்கு ஆதரவு வேண்டி யாரையும் யாசிக்கவில்லை. நத்திகொண்டிருக்கவில்லை. மாறாக கடவுள் மீதும் தர்மத்தின் மீதும் நம்பிக்கை வைத்து வீரத்துடன் எதிரிகளை எதிர்த்தார். கொடூரங்களுக்கு பெயர்போன இஸ்லாமியர்களை  நாசமாக்கினார்.

அவரைப்பற்றி விவரிக்கும் ஜாதுநாத் ஜவகர் என்கிற வரலாற்று பேராசிரியர் கீழ்கண்டவாறு ஒப்பிடுகிறார். 

சிவாஜி மகராஜர் ஹிந்துக்களை காக்க தனது இறுதி மூச்சுவரை நிம்மதியாக தூங்கியதில்லை. 

ஆனால் ராணி தாராபாய் இஸ்லாமியர்களை ஒருநாளும் நிம்மதியாக தூங்கவிட்டதில்லை என்கிறார். 

இந்த ராணியின் மாவீர வரலாற்றை நமது நேருவிய கைக்கூலி வரலாற்று ஆசிரியர் பெருமக்கள் முற்றும் முழுதாக மறைத்துவிட்டார்கள்.  மேலும் ஆங்கிலேயர்கள் வந்துதான் இந்தியாவை இஸ்லாமியர்களிடமிருந்து மதமாற்றத்திலிருந்து காப்பற்றியதாக கதை சொல்கிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால் ராணி தாராபாய் அத்தனை சுல்தானிய அரசுகளையும் முற்றாக அழித்துவிட்டிருந்தார். இருந்த சில இஸ்லாமியர்களும் ராணிக்கு பணிந்து வாழவேண்டிய சூழல் உருவாகியிருந்தது. இன்னும் ஒரு பத்தே ஆண்டுகள் ராணியின் கையில் ஆட்சி அதிகாரம் இருந்திருந்தால் ஒட்டு மொத்த இஸ்லாமியர்களுக்கு சமாதி கட்டியிருப்பதுடன் வெள்ளையர்கள் பாரத புண்ணிய பூமியில் காலடி வைக்க இயலாத அளவுக்கு ஒரு மாபெரும்  சாம்ராஜ்யத்தை நிறுவியிருப்பார்.  

இவ்வாறான மாவீரர் வீராங்கனைகள் தங்கள் சுக துக்கங்களை புறந்தள்ளி  அன்னிய மதவெறியர்களுடன் தொடர்ந்து போரிட்டதாலயே சனாதான  தர்மம் இம்மட்டும் பிழைத்திருக்கிறது.  அந்த மாவீரப்போராளிகளால் தான்  நமது தாய் மதம் அழிவிலிருந்து காக்கப்பட்டது. 

மேலும் ராணியிடமிருந்து ராணுவத்தை பெற்றுக்கொண்டு சத்ரபதியாக பதவி ஏற்ற சாகுவும் சோடைபோகவில்லை.  தன் பங்குக்கு மீதமிருந்த இஸ்லாமிய சிற்றரசுகளையெல்லாம் நாசம் செய்தார்.  பல நூற்றாண்டுகளுக்கு பிறகு டெல்லிக்குள் முழு அதிகாரத்துடன் ஹிந்துப்படை பிரவேசம் செய்தது.. அவரது காலத்தில்தான் மராட்டியர்கள் அதிகபட்ச நிலப்பரப்பை ஆண்டார்கள். 

அவர் நினைத்திருந்தால் ஒட்டு மொத்த இஸ்லாமியர்களையும் ஹிந்து மதத்திற்கு மாற்றியிருக்கலாம் அல்லது படுகொலை செய்திருக்கலாம். ஆனால் ஹிந்துக்களின் ரத்தத்தில் ஓடும் பகைவனுக்கும் இரங்கும் இரக்ககுணத்தால் அவர் அதை செய்யவில்லை. இவ்வாறு ஹிந்துக்களின் கருணையினால் உயிர் தப்பி பிழைத்த இஸ்லாமியர்கள் எவ்வாறு இந்தியாவை இஸ்லாமிய நாட்டாக்கியிருக்க முடியும்? ராணி தாராபாய் காலம் தொட்டு சத்ரபதி சாகு மற்றும் அவர்களுக்கு பின்னும் கூட இஸ்லாமியர்கள் மராட்டா படைகளை கண்ட இடத்தில் வாயில் புல்லை கடித்துக்கொண்டு மண்டியிட்டு உயிர் பிச்சை கேட்பது பல பத்தாண்டுகள் வழக்கத்திலிருந்தது. ஹிந்துக்கள் காட்டிய கருணையினால் உயிர் தப்பி பிழைத்த அந்த  இஸ்லாமியர்கள் எப்படி ஹிந்துக்களை மதமாற்றியிருக்க முடியும்?

Sunday, June 14, 2020

விண்ணவராய பெருமாள் திருக்கோயில்

அருள்மிகு விண்ணவராய பெருமாள் திருக்கோயில், வள்ளாளர் தெரு, பழைய அம்பத்தூர், கொரட்டூர், சென்னை, திருவள்ளூர் மாவட்டம்.

மூலவர்–விண்ணவராய பெருமாள்

உற்சவர்–ஸ்ரீனிவாசன்

தாயார்–கனகவல்லி

ஆகமம்–வைகானசம்

பழமை–1000 வருடங்களுக்கு முன்

ஊர்–பழைய அம்பத்தூர்

மாவட்டம்–திருவள்ளூர்

மாநிலம்–தமிழ்நாடு

இந்தப் பகுதியை ஆட்சி செய்த அரசன் ஒருவர், தன் நாட்டைச் சுற்றிப் பார்த்தார். கொண்டு வந்த உணவு தீர்ந்து விட்டது. குறிப்பிட்ட ஓரிடத்தில் உணவுப்பொருள் ஏதும் கிடைக்காமல் பசியில் களைத்துப் போனார். அவருடன் வந்த வீரர்களும் பசி தாளாமல், ஓரிடத்தில் அமர்ந்து விட்டனர். அவர்களது கண்ணில் ஒரு கோயில் தென்பட்டது. அங்கே ஏதாவது உணவு கிடைக்குமா என பார்த்து வரும்படி வீரர்களுக்கு ஆணையிட்டார். அவர்கள் பெருமாள் கோயிலைக் கண்டனர். அர்ச்சகரிடம் தங்கள் நிலையைக் கூறினர். சுவாமிக்கு நைவேத்யம் செய்த வரகரிசி பிரசாதத்தை வீரர்களிடம் அர்ச்சகர் வழங்கினார். சுவாமிக்கே இவ்வளவு எளிய உணவா என எண்ணிய நவாப், அர்ச்சகரை அழைத்து விபரம் கேட்டார். பஞ்சம் காரணமாக வரகரிசியை சமைத்து சுவாமிக்கு நைவேத்யம் செய்வதாக அர்ச்கர் தெரிவித்தார். அந்தக் கோயிலுக்கு திருப்பணி செய்து, நைவேத்யம் செய்ய பணஉதவியும் செய்வதாக வாக்களித்தார். அப்போது, வரகரிசி பிரசாதம் உடனடியாக உயர்ரக அரிசி பிரசாதமாக மாறியது. கண் எதிரில் நிகழ்ந்த அந்த அதிசயத்தைக் கண்ட அரசன், பெருமாளின் பேரருளை எண்ணி மெய்சிலிர்த்துப் போனார்.

கரி என்னும் இருளாகிய தீவினையை நீக்கி, வாழ்விற்கு ஒளிதரும் மாணிக்கமாகப் பிரகாசிக்கக் கூடியவர் என்னும் பொருளில், திருமாலுக்கு, கரியமாணிக்க பெருமாள் என்ற திருநாமம் இருந்தது. பிற்காலத்தில் விண்ணவராய பெருமாள் என்று திருநாமம் சூட்டப்பட்டது.

பெருமாள் எதிரிலுள்ள கருடாழ்வாரை சுவாதி நட்சத்திரத்தன்று வலம் வந்து வழிபட்டால் சர்ப்பதோஷம் விலகும். அத்துடன் தடைப்பட்ட திருமணங்கள், தடை நீங்கி கைகொடுக்கும். தாயார் கனகவல்லிக்கு வெள்ளிக்கிழமை வில்வத்தால் அர்ச்சனை செய்வதால் திருமணத்தடை விலகுவதுடன், குழந்தை பாக்கியமும் கிடைக்கிறது. விண்ணவராயப் பெருமாளை 11 வாரம் சென்று பக்திப்பூர்வமாக வணங்கினால், வீட்டில் செல்வ செழிப்பு ஏற்படுவதுடன், உணவுக்குப் பஞ்சம் வராது என்ற நம்பிக்கை உள்ளது.

கோயில் மண்டபத்தில் காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயிலில் இருப்பது போன்று பல்லி வடிவம் மேற்கூரையில் செதுக்கப்பட்டு இருந்தது. தற்போது மண்டபம் இடிந்து போனதால், பல்லி உருவம் பொறித்த விதானக்கல்லை தனியே வைத்துள்ளனர். தலையில் பல்லி விழுதல் போன்றவற்றால் மனக்கஷ்டம் அடைந்துள்ளவர்கள், இதனை 11 வாரம் சென்று பூஜித்து, பெருமாள் தாயாருக்கு திருமஞ்சனம் செய்வதன் மூலம் தோஷம் விலகுவதாக நம்பிக்கையுள்ளது. கருவறையில் கரியமாணிக்கப்பெருமாள் என்ற தன் முந்தைய திருநாமத்திற்கு ஏற்ப, கரிய நிறத்துடன், அருள்ஒளி வீச நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். திருமகளும், பூமகளும் அவரருகில் உள்ளனர். மூலவருக்கு முன் கருணை விழிகளுடன், அபயவரதகரங்களுடன் அன்பே வடிவாக கனகவல்லிதாயார் அருள்பாலிக்கிறாள். தாயாருக்கான தனிச்சன்னதி புனரமைக்கப்பட்டு வருவதால், பெருமாள் அருகில் தாயார் அருள்பாலிக்கிறார். திருவோணத்தன்று இந்தப் பெருமாளை வணங்கினால் நினைத்தவை கைகூடும்.

இங்கு ஸ்ரீதேவி, பூதேவி, கனகவல்லி தாயார், பெருமாள், கருடாழ்வார், இராமானுஜர் சன்னதிகள் உள்ளன. நம்மாழ்வார் தியானக் கோலத்தில் இருப்பது சிறப்பு.

திருவிழா:

புரட்டாசி சனிக்கிழமை, புரட்டாசி திருவோணம், வைகுண்ட ஏகாதசி விழா தமிழ்ப்புத்தாண்டு, ஆடிப்பூரம், கிருஷ்ணஜெயந்தி, நவராத்திரி, கார்த்திகை தீபம், மார்கழி மாத பூஜை, பங்குனி உத்திரம், வைகுண்ட ஏகாதசி.

கோரிக்கைகள்:

திருமணத்தடை நீங்க, குழந்தை பாக்கியம் கிடைக்க, சர்ப்ப தோஷம் நீங்க இங்குள்ள கருடாழ்வாரை வழிபடுகின்றனர். வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படவும், உணவு பஞ்சம் ஏற்படாமல் இருக்கவும் இங்குள்ள பெருமாளை வழிபடுகின்றனர்.

நேர்த்திக்கடன்:

பெருமாள் மற்றும் தாயாருக்கு திருமஞ்சனம் செய்வதன் மூலம் தோஷம் விலகுவதாக நம்பிக்கையுள்ளது. பிரார்த்தனை நிறைவேறியவுடன் துலாபாரம் நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.

காலை 6 மணி முதல் 10.30 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

இது ஆன்மீக பூமி,

சித்தர்களும்,மகான்களும், மகரிஷிகளும், முனிவர்களும்,யோகிகளும், நம்மை நல்வழி நடத்தும் மகா குருமார்களும், இன்னும் பிற தவஷ்ரேஷ்டர்களும், வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் மண்.

ௐ நமோ நாராயணாய நம:

சிவவாக்கியம்-065

தீர்த்தம்_ஆடவேண்டுமென்று தேடுகின்ற தீனர்காள்
தீர்த்தம் ஆடல் எவ்விடம் தெளித்து நீர் இயம்பிலீர்
தீர்த்தமாக உம்முளே தெளிந்து நீர் இருந்த பின்
தீர்த்தமாக உள்ளதும் சிவாயம் அஞ்செழுத்துமே.

                             -சிவவாக்கியர்

பொருள்:-
 
தலம்_தீர்த்தம்_மூர்த்தம் என்றும் நல்ல தீர்த்தங்களில் மூழ்கி நீராடினால் அநேக பாவங்களும் அகன்றுவிடும் என்றும் காவிரி, கங்க, யமுனா என்று தீர்த்தங்களைத் தேடி ஓடும் அன்பர்களே!! அப்படியெல்லாம் தேடித் தீர்த்தமாடியதால் செய்த பாவம் யாவும் போய்விட்டதா? 

பாவங்கள்_அகல தீர்த்தமாடுவது எந்த இடம் என்று நீங்கள் தெளிவாகச் சொல்ல வேண்டும். உங்களுக்குள் தெளிந்த தீர்த்தமாக உள்ள நீரையும் அது இருக்கும் இடத்தையும் தெரிந்து கொண்டீர்களா? 

அவ்வாறு_அனைத்து பாவங் களையும் போக்க வல்லதாக உள்ள தீர்த்தமாகிய அது பஞ்சாட்சரம் என்ற மெய்ப்பொருள் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

அதிலேயே_பஞ்சபூதங்களும் உள்ளதை உணர்ந்து சிவயநம என்று அஞ்செழுத்தை ஓதி அதையே நினைந்து நெகிழ்ந்து நீராடும் வழியை அறிந்து தியானம் செய்யுங்கள். 

Thursday, June 4, 2020

புன்னைநல்லூர் மாரியம்மன்

முன்னர் தஞ்சாவூரை, சரபோஜி மன்னர் பரம்பரையைச் சேர்ந்த வெங்கோஜி ஆண்டு வந்தார். அவர் அவ்வப்போது தீர்த்த யாத்திரை செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். அந்த வகையில் கண்ணபுரம் என வழங்கும் சமயபுரத்தில் அருளும் மாரியம்மனை தரிசிக்கச் சென்றார்.

அன்னையை வணங்கி வழிபட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார் வெங்கோஜி. அப்போது அவர் கனவினில் தோன்றிய மாரியம்மன் தஞ்சை நகருக்குக் கிழக்கே புன்னை வனக்காட்டில் புற்றுருவாய் தான் குடி கொண்டிருப்பதாகவும், அங்கேயே தன்னை தரிசிக்கலாம் எனவும் திருவாய் மலர்ந்தருளினாள். திடுக்கிட்டு விழித்த மன்னர் புன்னைக்காட்டினை அடைந்தார். அங்கே திறந்த வெளியில் புற்றுருவாய் அமர்ந்திருந்த அம்பிகையைக் கண்டார். உலகையே ரட்சிக்கும் அன்னை இப்படி வெட்ட வெளியில் இருப்பது கண்டு மனம் நொந்தார். உடனே மேற்கூரை அமைத்து அனைவரும் வந்து வழிபட வகை செய்தார்.

சிறிது காலம் சென்ற பின் வெங்கோஜி மன்னனின் மகனான  துளசிராஜா ஆட்சிக்கு வந்தார். இவருடைய மகளுக்குக் கடும் அம்மை நோய் கண்டது. அதனால் அவளது பார்வை பறிபோயிற்று. மகளுடைய இந்த நிலையைக் கண்டு மன்னர் ஆழ்ந்த வருத்தம் கொண்டார். அவருடைய கனவில் ஒரு சிறுமி தோன்றினாள். ‘உன் தந்தை எனக்கு வெயிலிலிருந்தும், மழையிலிருந்தும் பாதுகாப்புத் தர மேற்கூரை வேய்ந்தார். அவருடைய மகளான உன்னை நான்  காக்க மாட்டேனா?’ என்று புன்முறுவலுடன் சொன்னாள். அந்தச் சிறுமி புன்னைநல்லூர் மாரியம்மன்தான் என்பதைப் புரிந்து கொண்டார் துளசிராஜா. 

மறுநாள் துயிலெழுந்ததும் முதல் வேலையாக தன் மகளுடன் புன்னைநல்லூர் வந்தார். மாரியம்மனுக்கு சிறப்பு வழிபாடுகளுடன் அபிஷேகங்களும், அர்ச்சனையும் புரிந்து வணங்கினார். அன்னையின் சந்நதியில் நெய்தீபங்களை ஏற்றினார். அந்த தீபங்களின் ஒளி நேராக துளசிராஜாவின் மகளை நோக்கிச் செல்வது போன்ற பிரமை ஏற்பட்டது. ஆனால், அது பிரமை அல்ல; உண்மை. ஆமாம், அவளுக்குப் பார்வை மீண்டது.

அன்னையின் மகத்தான சக்தியை மனப்பூர்வமாக உணர்ந்த மன்னன், திருச்சுற்றுச் சுவர்களைக் கட்டி, இறைவிக்கு அழகிய கோயிலை உருவாக்கி அதை பக்தர்களுக்குக் காணிக்கையாக்கினார். அந்த மன்னனின் திருவுருவச் சிலை இன்றும் இறைவியின் சக்திக்கு சாட்சியாக ஆலயத்தில் காட்சி தருகிறது. 

சக்திக்கே சக்தி தரும் வகையில் மகான் சதாசிவப்பிரம்மேந்திரர் அம்பிகையின் சந்நதியில் புற்றுமண்ணைக் கொண்டே அம்மனை வடிவமைத்து சக்ரத்தையும் நிறுவினார். அதனால் மூலவருக்கு அபிஷேகம் செய்வதில்லை. உற்சவ அம்மனுக்குத்தான் அபிஷேகம். வரப்ரசாதியாகக் திகழும் இந்த அம்பிகைக்கு பக்தர்கள் பால் குடமெடுத்தும், மாவிளக்கும் போட்டும் தங்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுகின்றனர்.

பேச்சியம்மை, லாட சந்நியாசி, மதுரைவீரன், கருப்பன், பாடகச்சேரி சுவாமிகள், சதாசிவ பிரம்மேந்திரர் ஆகியோரின்சுதை உருவங்கள் உடன் திகழ, அன்னை அருளாட்சி புரிகிறாள்.

கடுமையான கோடைக் காலத்தில் அம்மனின் திருமுகத்தில் முத்து முத்தாக வியர்வை பெருகி வரும். இது பலநூறு ஆண்டுகளாக நிகழ்ந்து வரும் அற்புதம். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஒரு வெள்ளைக்கார அதிகாரி, இவ்வாறு வியர்வை அரும்புவதை கேலி செய்ததோடு அது தற்செயலாக வேறு ஏதாவது நீர்பட்டு அவ்வாறு தோன்றியிருக்கும் என்று சொல்லி, அந்த நீரைத் துடைக்குமாறு கட்டளை இட்டான். அவன் ஆணையை மீற முடியாத கோயில் அர்ச்சகர் நடுங்கும் கரங்களுடன் அவ்வாறே செய்ய, முத்துகளாய் அரும்பியிருந்த அந்த வியர்வைத் துளிகள் அதிகாரியின் உடலில் அம்மை முத்துகளாகப் பொங்கி, அவனை அதிர வைத்தன. 

அதிர்ச்சிக்குள்ளான அந்த அதிகாரி, அந்தப் பகுதி பக்தர்களின் நம்பிக்கையைக் கேவலப்படுத்திய தன் தவறை உணர்ந்து வருந்தி, கண்களில் நீர் பெருக்கினான். நாளடைவில் அம்மனின் அருளால் அவன் அதிகத் துன்பமின்றி, நோய் வந்த வடுவும் எதுவும் இன்றி பூரண நலம் பெற்றான். சிறந்த பிரார்த்தனைத் தலமாக விளங்கும் புன்னை நல்லூர் மாரியம்மன் ஆலய திருக்குளத்தில் வெல்லம் கரைப்பதாக வேண்டிக் கொண்டால் உடலில் தோன்றும் கட்டிகள், மருக்கள் போன்றவை விரைவில் மறைவதாக பக்தர்கள் நம்புகின்றனர். தஞ்சாவூர் - திருவாரூர் சாலையில் தஞ்சாவூரிலிருந்து 7 கி.மீல் உள்ளது புன்னைநல்லூர் திருத்தலம்.

Wednesday, June 3, 2020

13 வகையான சாபங்கள்

சாபங்கள் மொத்த‍ம் 13 வகையான சாபங்கள் இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?!

1) பெண் சாபம், 
2) பிரேத சாபம், 
3) பிரம்ம சாபம், 
4) சர்ப்ப சாபம்,
5) பித்ரு சாபம், 
6) கோ சாபம், 
7) பூமி சாபம், 
8) கங்கா சாபம், 
9) விருட்ச சாபம், 
10) தேவ சாபம் 
11) ரிஷி சாபம் 
12) முனி சாபம், 
13) குலதெய்வ சாபம்
அவற்றை ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

1) பெண் சாபம் :

இது எப்படி ஏற்படுகிற தென்றால், பெண்களை ஏமாற்று வதும், சகோதரிகளை ஆதரிக்காமல் இருப்பதாலும், மனைவியைக் கைவிடுவதாலும் வருகிறது.பெண் சாபம் ஏற்பட்டால் வம்சம் அழியும்.

2) பிரேத சாபம் :

இறந்த மனிதனின் உடலை வைத்துக்கொண்டு அவரை இழிவாகப் பேசுவதும், அவருடைய உடலைத் தாண்டுவதும், பிணத்தின் இறுதி காரியங்களை செய்யவிடாமல் தடுப்பதும், இறந்தவரை வேண்டியவர்கள் பார்க்க அனுமதி மறுப்பதும் பிரேத சாபத்தை ஏற்படுத்தும்.பிரேத சாபத்தால் ஆயுள் குறையும்.

3) பிரம்ம சாபம்:

நமக்கு வித்தை கற்றுக்கொடுத்த குருவை மறப்பது,
வித்தையை தவறாக பயன்படுத்துவது,
மற்றவர்களுக்கு சொல்லிக் கொடுக்காமல் ஒரு வித்தையை மறைத்து வைப்பது,இவற்றான காரணங்களால், பிரம்ம சாபம் ஏற்படுகிறது.பிரம்ம சாபத்தால், வித்யா நஷ்டம் அதாவது, படிப்பு இல்லாமல் போகும்.

4) சர்ப்ப சாபம்:

பாம்புகளை தேவையின்றி கொல்வதாலும் அவற்றின் இருப்பிடங்களை அழிப்பதாலும்,சர்ப்ப சாபம் உண்டாகும்.
இதனால், கால-சர்ப்ப தோஷமும் ஏற்பட்டு திருமணத் தடை ஏற்படும்.

5) பித்ரு சாபம்:

முன்னோர்களுக்கு செய்யவேண்டிய திதி மற்றும் தர்ம காரியங்களை செய்யாமல் மறப்பதும், தாய்- தந்தை தாத்தா-பாட்டி போன்றோரை உதாசீனப்படுத்துவதும் , அவர்களை ஒதுக்கி வைப்பதும்,பித்ரு சாபத்தை ஏற்படுத்தும்.
பித்ரு சாபம் பாலாரிஷ்ட சாபத்தையும் ஏற்படுத்தி, வம்சத்தில் ஆண் குழந்தை பிறக்காமல் போவது, குழந்தைகள் இறந்துபோவது போன்றவற்றை ஏற்படுத்தும்.

6) கோ சாபம்:

பசுவை வதைப்பது, பால் மரத்த பசுவை வெட்டக் கொடுப்பது கன்றுடன் கூடிய பசுவைப் பிரிப்பது , தாகத்தால் பசு தவிக்கும் போது தண்ணீர் கொடுக்காதது போன்ற காரணங்களால் கோ சாபம் ஏற்படும்.இதனால், குடும்பத்திலோ வம்சத்திலோ எவ்வித வளர்ச்சியும் இல்லாமல் போகும்.

7) பூமி சாபம்:

ஆத்திரத்தில் பூமியை சதா காலால் உதைப்பதும், பாழ்படுத்துவதும், தேவையற்ற பள்ளங்களை உண்டு பண்ணுவதும், அடுத்தவர் பூமியைப் பறிப்பதும் பூமி சாபத்தை உண்டாக்கும்.பூமிசாபம் நரகவேதனையைக் கொடுக்கும்.

8) கங்கா சாபம்:

பலர் அருந்தக்கூடிய நீரை பாழ் செய்வதாலும், ஓடும் நதியை அசுத்தம் செய்வதாலும், கங்கா சாபம் வரும். கங்கா சாபத்தால் எவ்வளவு தோண்டினாலும் நீர் கிடைக்காது.

9) விருட்ச சாபம்:

பச்சை மரத்தை வெட்டுவதும், கனி கொடுக்கும் மரத்தை பட்டுப்போகச் செய்வதும், மரத்தை எரிப்பதும், மரங்கள் சூழ்ந்த இடத்தை, வீடு கட்டும் மனையாக்குவதும் விருட்ச சாபத்தை ஏற்படுத்தும்.விருட்ச சாபத்தினால், கடன் மற்றும் நோய் உண்டாகும்.

10) தேவ சாபம்:

தெய்வங்களின் பூஜையைப் பாதியில் நிறுத்துவது, தெய்வங்களை இகழ்வது போன்ற காரணங்களால், தேவ சாபம் ஏற்படும். தேவ சாபத்தால் உறவினர்கள் பிரிந்துவிடுவர்.

11) ரிஷி சாபம்:

இது கலியுகத்தில் ஆச்சார்ய புருஷர்களையும் உண்மையான பக்தர்களையும் அவமதிப்பது போன்றவற்றால் ஏற்படும்.
ரிஷி சாபத்தால், வம்சம் அழியும்.

12) முனி சாபம்:

எல்லைதெய்வங்கள், மற்றும் சின்னசின்ன தெய்வங்களுக்கு வழங்க வேண்டிய மரியாதைகளையும் பூஜையையும் மறப்பது முனி சாபத்தை ஏற்படுத்தும்.முனி சாபத்தால் செய்வினைக் கோளாறு எற்படும்.

13) குலதெய்வ சாபம் :

இது நமது முன்னோர்கள் பூஜித்த தெய்வத்தை மறக்காமல் இருப்பது.குலதெய்வ சாபத்தால் குடும்பத்தில் ஒரு போதும் மகிழ்ச்சி ஏற்படாமல் போகும்.ஒருவித துக்கம் சூழ்ந்துகொள்ளும்.சாபம் என்பது நல்லவர்களுக்கு வரமாக மாறும்.தீயவர்களை அழிக்கும்.எவ்வளவு வரங்கள் பெற்றாலும், தாங்கள் பெற்ற வரத்தின் பலத்தால், நல்லவர்களை ஒரு போதும் அழிக்க முடியாது.ஆனால், ஆற்றாமல் அழுது பதறிய நெஞ்சிலிருந்து வந்த வார்த்தை சாபமாக மாறினால் எப்பேற்பட்ட வலிமையான மனிதனையும் உரு தெரியாமல் அழித்து விடும்.




பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...