Sunday, February 21, 2021

கரிசாலை & கரிசலாங்கண்ணி

தாவரப்பெயர் -: ECLIPTA PROSTRATA ROXB.

தாவரக்குடும்பம் -: ASTERACEAE.

வேறு பெயர்கள் -: கரிசாலை, கையாந்தகரை, கரிகா, கைகேசி, கைவீசி, கரியசாலை, கரிப்பான், கையான், பொற்றலைக்கரிப்பான்,பொற்கொடி(ECLIPTA PROCENA) என்ற பெயர்களாலும் வழங்கப்படும்.

வகை -: வெள்ளைக்கரிசலாங்கண்ணி, மஞ்சக்கரிசலாங்கண்ணி.

முக்கிய வேதியப்பொரிட்கள் -: இலைகளில் ஸ்டிக்மாஸடீரால், மற்றும்
ஏ-டெர்தைனில் மெத்தானால் மற்றும் எக்லிப்டின், நிக்கோடின் ஆல்கலாய்டுகள் உள்ளன. 16 வகையான பாலி அசிட்டெலினிக்தை
யொபீன்கள் எடுக்கப் பட்டுள்ளன.

 தாவர அமைப்பு -: எதிரடுக்கில் அமைந்த வெள்ளை நிற மலர்கள் உடைய மிகக்குறுஞ்செடியினம். தரையோடு படர்ந்தும் வளர்வதுண்டு. தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் ஈரமான நிலத்தில் தானே வளர்வது.
குத்து உரோமங்கள் கொண்ட ஒரு பருவச்செடி தலை சிறியது இரு இன மலர்கள் கொண்டது. கதிருள்ளது. இலைக் கோணங்களிலோ உச்சியிலோ இருக்கும். வெளிவட்ட மலர்கள் பெண்பாலானவை, அரைவட்டத்தில் இரு வரிசையிருக்கும். உள்வட்ட மலர்கள் இரு பாலானவை, 4 -5 மடல் கொண்டுமிருக்கும், வளமானவை, பூவடிச்சிதல், அடுக்குத் தட்டு மனிவடிவமானது. பூவடிச்சிதல், இருவரிசையில் இருக்கும். இலை போன்றது பூத்தளம் தட்டையானது. அல்லிகள், பெண் மலரில், மெலிந்தும், முழுமையாகவோ, இருபிளவாகவோ இருக்கும். மஞ்சள் நிறமானவை. இருபால் மலரில், 4 - 5 மடலாயிருக்கும். மகரந்தப்பை அடி மழுங்கியது. சூல் தண்டுக் கரங்கள் குருகலாயும் மழுங்கியும் இருக்கும். கனி, அக்கீன்கள், கதிர்மலர்களில் முப்பட்டையாயும் வெடித்தும் இருக்கும். வட்டத்தட்டு மலரில் அமுக்கியிருக்கும், பாப்பஸ் 1 - 2 நுணுக்கமான பற்களாகக் காணப்படும். இது விதை மூலமும், கட்டிங் மூலமும் இனப்பெருக்கம் செய்யப்படும்.
 பயன்படும் பாகங்கள் -: செடிமுழுதும் (சமூலம்)
மருத்துவப் பயன்கள் -: இது இருவகைப் பூக்கள் உடையது
மஞ்சள், வெள்ளை. மஞ்சள் பூ பூப்பது மஞ்சள் காமலைக்கும் வெள்ளைப் பூ பூப்பது ஊது காமாலைக்கும் நல்ல குணத்தைத் தருகின்றன. கற்பகமூலிகை இதுவாகும். இதன் பொதுவான குணம் என்னவென்றால் கல்லீரல். மண்ணீரல். நுலையீரல், சிறு நீரகம், ஆகியவற்றைத் தூய்மை செய்கிறது. சுரபிகளைத்தூண்டுகிறது. உடல் தாதுக்களை உரமாக்குகிறது. உடலை பொன்போல் மாற்றுகிறது. இரும்பு, தங்கச் சத்திக்களை உடையது. காமாலை எதுவாயினும் குணமாக்குகின்றது. நீரிழிவைக் கட்டுப் படுத்துகின்றது. சளி, இருமல், தோல்பற்றிய நோய்களுக்கும் மருந்தாகும்.

தொந்தி கரைய -: இதனைக் கீரையாகச் சமைத்துச் சாப்பிடலாம். பொரியல். கூட்டு, கடைசல் செய்து சாப்பிட உடலிலிருந்து கெட்ட நீர் வெளியாகும். உடல் குளிர்ச்சி பெறும், மலர்ச்சிக்கல் நீங்கும், அறிவு தெளிவுறும், நாளும்சாப்பிட்டு வர உடல் எடை குறையும். தொந்தி கரையும்.

மஞ்சக் காமாலை -: மஞ்சள் பூவுடைய கரிசலாங்கண்ணி, தும்பை இலை, கீழாநெல்லி சம அளவில் அரைத்து நெல்லி அளவு பசும்பாலில் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர 7 - 10 நாளில் மஞ்சள் காமாலை முற்றிலும் குணமாகும். ஆனால் பளி, காரம் நீக்கி பத்தியம் இருக்கவேண்டும்.

காமாலை சோகை -: இதன் மஞ்சள் பூவடைய இலை 10,வேப்பிலை 6, கீழாநெல்லி இரண்டு இணுக்கு துளசி 4,இலை சேர்த்து நன்றாக மென்று காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். மோர் அரிசிக் கஞ்சி சாப்பிடலாம். 10 - 20 நாளில் காமாலை சோகை நீர் சுரவை வீக்கம், கண், முகம் வெளுத்தல் ஆகியன குணமாகும். ஊளைச் சதை குறையும், சிறுநீர்த் தடை, எரிச்சல், கை,கால், பாதம் வீக்கம் குணமாகும்.

ஆஸ்த்துமா, சளி -: கரிசலைச் சாறு + எள் நெய் வகைக்குஒரு லிட்டர் கலந்து, இதில் அதி மதுரம்100 கிராம், திப்பிலி50 கிராம் போட்டு சாறு சுண்டக் காச்சி வடிக்கவும். இதில் 5 மி.லி, அளவு காலை மாலை சாப்பிட ஆஸ்த்துமா,சளி, இருமல், குரல்கம்மல் குணமாகும். தலைக்கும் தேய்க்கலாம்.

கண்மை - :தூய்மையான வெள்ளைத் துணியில் கரிசலைச் சாறுவிட்டு உலர்த்தி, அத்துணியை எரித்துச் சாம்பலாக்கவும். இச்சாம்பலை ஆமணக்கு எண்ணெயில் மத்தித்து கண்ணில் தீட்ட கண் ஒளிபெறும். சிறந்த கண் மையாகும்.

குழந்தை இருமல் -: இதன் சாறு பத்துச் சொட்டு+ தேன் பத்து துளி கலந்து வெந்நீரில் கொடுக்க குழந்தையின் இருமல், சளி குணமாகும்.

காது வலி -: இதன் சாறு காதில் விட காதுவலி தீரும்.

பாம்புக்கடி -: 200 மி.லி. மோரில் இதன் சாறு 50 மி.லி.கலந்து கொடுக்க பாம்புக் கடி விடம் குறையும், நீங்கும். தேள் கடிக்கு இலையைத் தின்னவும். அரைத்துக் கடிவாயில்கட்டவும் விடம் இறங்கும்.

நாள்பட்ட காமாலை -: முதல் நாள்காலை 10 மி.லி. எனத்தொடவ்கி 20, 30, 40, என 10 நாள் கூட்டி அதே விகிதப்படி 100 மி.லி ஆனதும் 90, 80, 70 என 10 நாள் குறைத்து ஆக இருபது நாள் சாப்பிட நாள்பட்ட முற்றிய காமாலையும் தீரும். பத்தியம் இருத்தல் வேண்டும். புளி, காரம், ஆகாது.மோரில் சாப்பிடவும்.

குட்டநோய் -: நூறுஆண்டு ஆன வேப்பம் பட்டை உலர்த்திய சூரணத்தை ஏழு முறை கரிசலாங்கண்ணி சாற்றில் ஊறவைத்து உலர்த்திய பொடியை 5 கிராம் அளவு வெந்நீரில் சாப்பிட 48 - 144 நாளில் 18 வகை குட்டமும் குணமாகும்.

முடிவளர -: எள் நெய் அல்லது தேங்காய் எண்ணையில் இதன் இலையை அரைத்துப் போட்டு கதிரொளியில் 8 நாள் புடமிட்டு வடித்துத் தலைக்குத் தேய்க்க முடி வளரும்.

வேர் வாந்தியுண்டாக்கியாகவும், நீர்மலம் போக்கியாகவும்பயன் படுத்தப் படுகிறது. வேர், ஆடுமாடுகளுக்குண்டாகும் குடல் புண் மற்றும் வெளிப்புண்ணை ஆற்றும் கிருமிநாசினியாகவும் பயன்படத்தப் படுகிறது. (சோப்ரா மற்றும் பலர் 1956,நட்கர்னி 1954)

இதனால் குரலுறுப்பு நோய், குணமடைந்து குரல் இனிமையாகும். பல் நோய் குணமாகும். இதன் வேர் பொடி தோலைப்பற்றிய பிணிக்கும் கொடுக்கலாம்.
கரிசாலை சாறு நல்லெண்ணெய் வகைக்கு ஒரு லிட்டர் கலந்து அதில் குமரிச்சாறு, நெல்லிக்காய்ச் சாறு வகைக்கு 250 மி.லி.சேர்த்துக் கஸ்தூரி மஞ்சள், சாதிக்காய் வகைக்கு 10 கிராம்பாலில் நெகிழ அரைத்துக் கலக்கிப் பதமுறக் காய்ச்சி வடித்து(கரிசாலைத்தைலம்) வாரம் ஒரு முறை தலையிலிட்டுக் குளித்துவரத் தலைவலி, பத்தக் கிறுகிறுப்ப், உடல் வெப்பம், பீனிசம், காது, கண் நோய்கள் தீரும்.

கரிசாலை, பூக்காத கொட்டைக் கரந்தை ஆகியவற்றின்சமன் சூரணம் கலந்து நாள் தோரும் காலை, மாலை அரைத் தேக்கரண்டி தேனில் சாப்பிட்டு வர இள வயதில் தோன்றும் நரை மாறும். 

கற்றது வேதம்

தேரோட்டியான அதிரதன் மற்றும் ராதையினால் வளர்க்கப்பட்டவன் கர்ணன். பிறப்பால் சத்ரியன். வீரத்துக்குக் குறைச்சல் இல்லை. இருந்தாலும் குரு வேண்டுமே? 

துரோணாச்சாரியார் மறுத்துவிட, கிருபாச்சாரியாரிடம் ஒரு நாள் அதிகாலை  போகிறான் கர்ணன்.  

மாணவர்களின் திறமையை சோதிக்க, வானத்தில் பறக்கும் ஒரு பறவையை குறிபார்த்து வீழ்த்தச்  சொல்கிறார் குரு. 

அர்ஜுனன் ஒரே அம்பில் பறவையை வீழ்த்திவிட்டு தேரேறிப் போய்விட்டான். 

இப்போது கர்ணனின் முறை. அம்பை நாணில் பூட்டியாயிற்று. ஒரு கணம் பறவையை வானில் குறி பார்த்தவன் வில்லையும் அம்பையும் கீழே வைத்து விட்டான். மிகச் சிறந்த வில்வீரனான கர்ணன் அப்படிச் செய்தது குருவுக்கு அதிசயம். காரணம் கேட்கிறார். குருவே இது  மிகவும் அதிகாலை நேரம். இந்த நேரத்தில் ஒரு பறவை விண்ணில் பறக்கிறது என்றால் நிச்சயம் தன் குஞ்சுகளுக்கான உணவைக் கொண்டு போகிறது என்றுதான் பொருள். இப்போது திறமைக்காக அதைக் கொன்றுவிட்டால் நான் வீரனாவேன். ஆனால் அந்த இளம் குஞ்சுகள் அனாதை ஆகிவிடும். எனவே நான் கொல்ல மாட்டேன் என்றானாம். கலங்கிப்போன குரு சொன்னாராம், "கர்ணா நீ கற்றது வித்தை அல்ல வேதம்" என்று-பாராட்டினார்.
      

இதய புற்று நோய்

இதய புற்றுநோய் என்பது இதயத்தில் உருவாகும் ஒரு கட்டியால் வகைப்படுத்தப்படும் புற்றுநோயின் மிக அரிதான வடிவமாகும், இது இதய முதன்மை கட்டி என அழைக்கப்படுகிறது. இத்தகைய கட்டிகள் 75% தீங்கற்றவை (புற்றுநோயற்றவை) அதே நேரத்தில் வீரியம் மிக்க (புற்றுநோய்) வடிவம் 2000 இல் சுமார் 1 நபருக்கு ஏற்படுகிறது. இதயத்தில் காணப்படும் மிகவும் பொதுவான வகை இந்தப் புற்றுநோயானது அருகிலுள்ள உறுப்புகளான நுரையீரல் மற்றும் மார்பகங்களிலிருந்து புற்றுநோய் செல்கள் பரவுவது அல்லது மெட்டாஸ்டாஸிஸ் காரணமாக உருவாகிறது.

அருகிலுள்ள உறுப்புகளிலிருந்து வரும் புற்றுநோய் செல்கள் உடைந்து, இரத்த ஓட்டத்தின் மூலம் இதயத்திற்குச் செல்லும்போது, இதய புற்றுநோய் ஏற்படும் நிலை ஏற்படுகிறது. இதயத்தின் இத்தகைய மெட்டாஸ்டாஸ் செய்யப்பட்ட கட்டிகள் இரண்டாம் நிலை கட்டிகள் என அழைக்கப்படுகின்றன மற்றும் அவை பெரும்பாலும் வீரியம் மிக்கவை (புற்றுநோய்).

*இதய புற்றுநோய் வகைகள்..* 

மேலே விவாதிக்கப்பட்டபடி, இதய புற்றுநோய் பெரும்பாலும் இதயத்தில் உருவாகும் கட்டி என்று குறிப்பிடப்படுகிறது. அவை மொத்தம் 4 வகைகள்: 

*1. தீங்கற்றவை:* அவை புற்றுநோயற்ற மற்றும் தீங்கு விளைவிக்காத இருதய கட்டிகள், அவை மற்ற உடல் பாகங்களுக்கு மாற்றங்களை விளைவிக்காத வகையைச் சேர்ந்தவை. தீங்கற்ற கட்டிகள் 3 வகைகளாகும், அவை பின்வருமாறு, மைக்ஸோமாக்கள்: இத்தகைய கட்டிகள் இதயத்தின் சுவரில் இணைக்கப்பட்டு காணப்படுகின்றன. இவை இரத்தக் கட்டிகள் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன. அறிகுறிகள் காய்ச்சல், சோர்வு மற்றும் எடை இழப்பு. பாப்பில்லரி ஃபைப்ரோலாஸ்டோசிஸ்: இத்தகைய கட்டிகள் (மிட்ரல் வால்வு அல்லது பெருநாடி வால்வு) ஒரு இதய வால்வுகளில் ஏற்படுகின்றன. எம்போலைசேஷன் காரணமாக அவை அறிகுறிகளை ஏற்படுத்துகின்றன. லிபோமாக்கள்: அவை பொதுவாக கொழுப்பு செல்கள் இவை இதய தசையின் மேற்பரப்பில் காணப்படுகின்றன. அவை எந்த அறிகுறிகளையும் காட்டுவதில்லை. ஆனால் இதயத் தடுப்பை ஏற்படுத்தக்கூடும். 

*2. மலிஞன்ட் ( Malignant):* இவை இதயக் கட்டிகளின் புற்றுநோய் வடிவமாகும், ஆனால் அவை மிகவும் அரிதானவை மற்றும் இதயக் கட்டிகளில் 20% அல்லது அதற்கும் குறைவான இடத்தையே பிடிக்கின்றன. இவை 2 வகைகளாகும் லிம்போமாக்கள்: மரபணு மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளின் விளைவாக இவை உருவாகும் என்று நம்பப்படுகிறது. சர்கோமாஸ்: இத்தகைய கட்டிகள் அதிக புற்றுநோய் வாய்ப்புள்ளவை. இவை உடல் முழுவதும் வேகமாக பரவுகின்றன. அவை பொதுவாக கண்டறியப்படுவதற்கு முன்னரே மற்ற உடல் பாகங்களுக்கு மாற்றங்களை விளைவிக்கின்றன. 

*3. ஓரளவு வீரியம் மிக்க கட்டிகள்:* இத்தகைய கட்டிகள் வீரியம் மிக்கவை அல்லது தீங்கற்றவை. அவை பின்வருமாறு 2 வகைகளாகும்: மெசோதெலியோமாஸ்: இதயத்தின் இத்தகைய கட்டிகள் வீரியம் மிக்கவை மற்றும் மீசோதெலியத்தில்(இதயம், நுரையீரல் மற்றும் வயிற்று குழி ஆகியவற்றைப் பாதுகாக்கும் இது ஒரு சவ்வு) காணப்படுகின்றன. பராகாங்லியோமாஸ்: இவை நியூரோஎண்டோகிரைன்(ஹார்மோன்களை உருவாக்கும் நரம்பு செல்கள்) திசுவில் உருவாகும் புற்றுநோய் அல்லது புற்றுநோயற்ற கட்டிகள். 

*4. மெட்டாஸ்டேடிக்:* இத்தகைய கட்டிகள் பொதுவாக மற்ற உடல் பாகங்களில் எழும் மற்றும் புற்றுநோய் செல்கள் உடைந்து இதயத்திற்கு பரவுகின்றன, அவை இரத்த ஓட்டத்தின் வழியாக இதயத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன, அங்கு அவை டெபாசிட் செய்யப்பட்டு ஒரு கட்டியை ஏற்படுத்துகின்றன.

*இதய புற்றுநோய்க்கான காரணங்கள்..* 

உடலின் எந்தப் பகுதியிலும் உள்ள செல்கள் வளர்ந்து கவனிக்கப்படாமல் பிரிக்கும்போது கட்டிகள் ஏற்படுகின்றன. சில நேரங்களில், டி.என்.ஏவில் பல பிறழ்வுகள் காரணமாக, புற்றுநோய் எழுகிறது. டி.என்.ஏவில் பிறழ்வானது செல் பிரிவு மற்றும் நகலெடுக்கும் செயல்பாட்டின் போது நடைபெறுகிறது. இந்த புற்றுநோய் செல்கள் பிளவுபடும்போது அவற்றின் பிறழ்வை மகள் உயிரணுக்களுக்கு அனுப்புகின்றன, இந்த வழியில், புற்றுநோய் பரவுகிறது. இதுவே இதயப் புற்றுநோய் நிலையில் பார்த்தால், இதய செல்கள் நகலெடுக்காது (காயம் இல்லாவிட்டால்) மற்றும் அவை இரத்தத்தை செலுத்துவதற்கு மட்டுமே பொறுப்பு என்பதை நாங்கள் அறிவோம். எனவே, இந்த உறுப்பில் ஒரு கட்டியின் வளர்ச்சிக்கு வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளது. பிறகு எப்படி நடக்கும் இது நடக்கிறது? 

மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, இதயம் இணைப்பு திசுக்களால் ஆனது, எனவே அதில் புற்றுநோய் உருவாகுவது மிகவும் அரிதான நிகழ்வு. இதில் இரத்த நாளங்கள் மற்றும் தமனிகள் அதிக அளவில் இருப்பதால், இதயத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இரத்தத்தை செலுத்த உதவுகிறது எனவே இது உறுப்பு இரத்த நாளங்களின் நோய்களுக்கு மட்டுமே ஆளாகிறது. எனவே, சுற்றுச்சூழல் மாசுபாடு, புகைத்தல் மற்றும் டி.என்.ஏ பிறழ்வு போன்ற சில நிரூபிக்கப்படாத காரணிகள் இதயத்தில் முதன்மை தீங்கற்ற கட்டியை உருவாக்க காரணமாகின்றன. ஆனால் இன்னும், இந்த நிலை மிகவும் அரிதானது மற்றும் சரியான காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை.

*இதய புற்றுநோயின் அறிகுறிகள்:* 

இதய புற்றுநோயின் அறிகுறிகள் கட்டியின் இடம், வகை மற்றும் அளவைப் பொறுத்தது. முதன்மை இதய புற்றுநோயின் பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு, 

* கட்டி மேல் இதய அறையில் இருக்கும்போது மூச்சுத் திணறல் மற்றும் சோர்வு. 

* கட்டி ஒரு வென்ட்ரிக்கிளில் இருக்கும்போது மார்பு வலி, மூச்சுத் திணறல், தலைச்சுற்றல் மற்றும் மயக்கம் ஆகியவை இதயத்திலிருந்து இரத்த விநியோகத்தைத் தடுக்கின்றன. 

* இதயத்தின் தசைச் சுவரில் கட்டி இருக்கும்போது மூச்சுத் திணறல், சோர்வு மற்றும் வீங்கிய கால்கள். 

* இதயத்தின் தசைக்குள் கட்டி இருக்கும்போது விடுபட்ட இதயத் துடிப்பு, மயக்கம் மற்றும் இதயத் தடுப்பு ஆகியவை. 

* கட்டி இதயத்திலிருந்து உடைந்து நுரையீரலின் சிறிய தமனியில் சிக்கிக் கொள்ளும்போது ஒழுங்கற்ற இதய துடிப்பு மற்றும் கூர்மையான மார்பு வலி. 

* கட்டி இதயத்திலிருந்து உடைந்து மூளையின் சிறிய தமனியில் சிக்கிக் கொள்ளும்போது பக்கவாதம், குழப்பம் மற்றும் பேசுவதிலும் எழுதுவதிலும் சிக்கல். 

* கட்டி இதயத்திலிருந்து உடைந்து கால்கள் அல்லது கைகளின் சிறிய தமனியில் சிக்கிக்கொள்ளும்போது துடிப்பு இல்லாத மூட்டு மற்றும் குளிர். 

* முதன்மை இதயக் கட்டி தொற்று போன்ற குறிப்பிடப்படாத அறிகுறிகளை ஏற்படுத்தும் போது நைட்ஸ்வீட்ஸ், மூட்டு வலி மற்றும் காய்ச்சல்.

ஆபத்து காரணிகள் இதய புற்றுநோய்க்கான உண்மையான காரணம் தெரியவில்லை என்றாலும், அதற்கு நாம் ஆளாகக்கூடிய சில காரணிகள் பின்வருமாறு:

* வயது 
* புகைபிடித்தல் 
* கரோனரி நோய் 
* உயர் இரத்த அழுத்தம் 
* உடல்பருமன் 
* மோசமான நோயெதிர்ப்பு மண்டலம் 
* மரபணு புற்றுநோய் நோய்க்குறி
* முன் இதய செயலிழப்பு

*இதய புற்றுநோயின் சிக்கல்கள்:* 

இதய புற்றுநோயின் சிக்கல்கள் ஆபத்தானவை மற்றும் உயிருக்கு ஆபத்தானவை. அவை பின்வருமாறு, 

* மற்ற உடல் பாகங்களுக்கு புற்றுநோய் பரவுதல். அல்லது மெட்டாஸ்டாசிஸ் 
* இதய செயலிழப்பு 
* டுயூமர் எம்போலி 
* ஒழுங்கற்ற இதய தாளம்

*இதய புற்றுநோயைக் கண்டறிதல்..* 

இதய புற்றுநோய் அறிகுறிகள் மற்ற இதய நோய்களுக்கு பொதுவானவை, அதனால்தான் நோயறிதல் மிகவும் கடினம். ஆகையால், முதன்மை இதயக் கட்டியின் துல்லியமான நோயறிதலுக்கு பின்வரும் சோதனைகள் உகந்ததாக கருதப்படுகின்றன. 

* இதய வடிகுழாய்ப்படுத்தல் (Cardiac catheterization): கட்டியின் வகை அடையாளம் காணப்படும் ஒரு சோதனை. 
* எலக்ட்ரோ கார்டியோகிராம்: அசாதாரண இதய தாளங்களைக் கண்டறியும் சோதனை. 
* எக்கோ கார்டியோகிராம்: இதயத்தின் இயக்கத்தையும் அதன் வால்வுகளையும் கண்டறிய அல்ட்ராசவுண்ட் அலைகளால் நடத்தப்படும் ஒரு சோதனை. 
* டோமோகிராபி: இதயத்தில் உள்ள அசாதாரணங்களைக் கண்டறியும் ஒரு சோதனை. 
* கரோனரி ஆஞ்சியோகிராபி: எக்ஸ்-கதிர்களைப் போலவே இதயத்தில் உள்ள கட்டியின் வெளிப்புறத்தைக் காட்டும் ஒரு சோதனை. இரத்த பரிசோதனைகள், மார்பு எக்ஸ்ரே மற்றும் இதயத்தின் எம்ஆர்ஐ ஆகியவை மற்ற முறைகளில் அடங்கும்.

*இதய புற்றுநோய்க்கான சிகிச்சை முறைகள் பின்வருமாறு:* 

அறுவைசிகிச்சை: அறுவை சிகிச்சையின் மூலம் அறுவைசிகிச்சை மருத்துவர் புற்றுக்கட்டியை முற்றிலும் அகற்றுவதே இதய புற்றுநோயின் முக்கிய சிகிச்சையாகும். அதனால் இதயத்தின் சரியான செயல்பாட்டை பராமரிக்கலாம். இது பொதுவாக மென்மையான திசு சர்கோமாவுக்கு (soft tissue sarcoma) மேற்கொள்ளப்படுகிறது. 

கீமோதெரபி: இந்த அடிப்படை சிகிச்சை முறையில், சைட்டோடாக்ஸிக் மருந்துகள் இதயத்தின் புற்றுநோய் செல்களை அழிக்கவும் அறிகுறிகளைக் குறைக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. அறுவைசிகிச்சைக்குப் பிறகு முழுமையான கட்டி மறைந்துவிடாதபோது இந்த முறை மேற்கொள்ளப்படுகிறது. 

நோய்த்தடுப்பு சிகிச்சை: கடுமையான பிரச்சினைகளுடன் வாழும் மக்களுக்கு அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான சிறப்பு கவனிப்பு இது. இதய நிலை தீவிரமடையும் போது, நோயாளியின் அறிகுறிகளை மேம்படுத்துவதற்கு இந்த நோய்த்தடுப்பு சிகிச்சை முக்கியமானது. 

கதிரியக்க சிகிச்சை: இந்த சிகிச்சை முறையில், புற்றுநோய்களின் உயிரணுக்களைக் கொல்லவும், கட்டியின் வளர்ச்சியைக் குறைக்கவும் எக்ஸ்-கதிர்களின் உயர் ஆற்றல் கற்றை பயன்படுத்தப்படுகிறது. இந்த செயல்முறை குறைந்தபட்ச பக்க விளைவுகளை உள்ளடக்கியது. 

வருடாந்திர எக்கோ கார்டியோகிராம்: இந்த முறையில், இதயத்தின் சரியான செயல்பாட்டை சரிபார்க்க இதய வால்வுகள் மற்றும் அறைகளைக் காண எக்கோ டெஸ்ட் அல்லது அல்ட்ராசவுண்ட் போன்ற உயர் அதிர்வெண் ஒலி அலைகள் பயன்படுத்தப்படுகின்றன. கட்டி இருக்கும்போது இந்த முறை பயன்படுத்தப்படுகிறது, ஆனால் எந்த அறிகுறிகளையும் ஏற்படுத்தாது.

இதய புற்றுநோய் தடுப்பு முறைகள்..

* புகைப்பதை நிறுத்துங்கள் 

* மது அருந்துவதைக் கட்டுப்படுத்துங்கள் 

* சூரியன் ஒளி அல்லது அதன் கதிர்வீச்சுக்கு அதிகமாக வெளிப்படுவதைத் தவிர்க்கவும். 

* புற்றுநோய் நோய்அறிதல் சோதனையை சரியான நேரத்தில் திட்டமிடுங்கள்.

யானைக்கால் வீக்கம் தீர

தேவையான பொருட்கள்

திருகு கள்ளிப்பால் – அரை லிட்டர்
பால் – அரை லிட்டர்
தேன் – அரை லிட்டர்

     மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து கலக்கி பாகுபோல் செய்யவும். பிறகு, அதில் ஒரு கிலோ கருங்குறுவை அரிசி மாவைக் கொட்டி கிளறவும். ஆறிய பிறகு, அரை கிலோ நெய் உருக்கி அதில் ஊற்றி பத்திரப்படுத்தவும்.

     இதை தினமும் 10 கிராம் அளவுக்குப் பாலுடன் அதிகாலையில் சாப்பிட்டு வந்தால் யானைக்கால் வீக்கம் தீரும்.

பருமனை குறைக்கும் காய்கறிகள்

1.சுரைக்காய்

சுரைக்காயில நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளது எனவே, இதனை உணவில் சேர்ப்பதனால் அடிக்கடி பசி ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.

2.குடைமிளகாய்

குடைமிளகாயில் உள்ள விட்டமின்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்கள் உடல் எடையை குறைப்பதுடன் உடலை ஆரோக்கியமாகவும் வைக்க உதவுகிறது.

3.வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகமாகவும்,  கலோரிகள் குறைவாகவும் இருப்பதால் இதனை கோடையில் அதிகம் சாப்பிட்டு உடல் எடையை கட்டுப்பாட்டுக்குள் வைக்கலாம்.

4.பசலைக்கீரை

பசலைக்கீரை உடல் எடையை குறைக்கும் உணவுப் பொருட்களில் ஒன்று. இதில குறைவான அளவே கலோரிகள் உள்ளன. எனவே, இது உடல் எடையைக் குறைக்கபெரிதும் உதவுகிறது.

5.ப்ராக்கோலி

ப்ராக்கோலியை வேக வைத்து சாப்பிட்டு வந்தால் உடல் எடையை எளிதாக குறைக்க முடியும்.

6.பீன்ஸ்

பீன்ஸில் உடல் எடையைக் குறைக்கக் கூடிய விட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துகள் உள்ளது. அதுமட்டுமின்றி இதில் ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளது. எனவே இதனை நாம் உணவில் சேர்ப்பதன் மூலம் உடல் எடையை விரைவாகக் குறைக்கலாம்.

7.வெங்காயம்

வெங்காயத்தில் உடலில் தங்கியுள்ள கொழுப்புகளை கரைக்கும் சக்தி அதிகமாக உள்ளது. எனவே, உடல் எடையை எளிதில் குறைக்கலாம். அதுமட்டுமின்றி இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.

8.ஆளி விதை

எடையைக் குறைக்க நினைக்கும் ஆண், பெண் என இருபாலரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஓர் ஆரோக்கியமான விதை தான் ஆளி விதை. இதை உணவுகளின் மீது தூவி சாப்பிடலாம். இப்படி தூவி சாப்பிட்டால், அதில் உள்ள நார்ச்சத்து நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுப்பதோடு, அதிகளவு உணவு உட்கொள்வதையும் தடுக்கும். அதற்கு ஆளி விதையை அன்றாடம் நீங்கள் சாப்பிடும் உணவுகளின் மீது தூவி சாப்பிடலாம்.

9.ப்ராக்கோலி

உடல் எடையையும் குறைக்க உதவும் உணவுகளுள் ஒன்று. இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. உணவில் சேர்த்து கொள்வதின் மூலம் உடல் பருமனை குறைக்க முடியும்
 
10.கேரட்

கேரட் கண்களுக்கு நல்லது. அதுமட்டுமின்றி உடல் எடையைக் குறைப்பதில் கேரட் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.

11.தக்காளி

தக்காளி உடல் எடையை குறைத்திடவும் அழகான சருமத்தை பெறவும் பெரிதும் உதவுகிறது.

12.பாகற்காய்

கசப்பான பாகற்காய் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைப்பதுடன், உடல் எடையை எளிதாக குறைக்கும்

13.முட்டைக்கோஸ்

பச்சை இலைக்காய்கறிகளுள் ஒன்றான முட்டைக்கோஸில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் உள்ளதால், இதனை உட்கொள்ள, நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருப்பதால், உடல் எடையைக் குறைக்கும்

சிறுநீரகக்கல் பெண்களுக்கு அதிகம்

சிறுநீரகத்தில் ஏற்படும் கற்கள் குறித்து பல சந்தேகங்களும் கேள்விகளும் எப்போதும் நம்மிடம் உண்டு. ஆண்களுக்கு மட்டும்தான் பெரும்பாலும் இப்பிரச்னை ஏற்படும் என்ற பொதுவான கருத்தும் உண்டு. இதேபோல், சிறுநீரகக்கல் பாதிப்புக்கு ஒருவர் ஆளாகிவிட்டால் அறுவை சிகிச்சை செய்துதான் ஆக வேண்டும் என்றும் பலர் பயமுறுத்துவார்கள்.

அதேபோல், இயற்கை மருத்துவத்தின்மூலம் சிறுநீரகக்கல்லை அகற்றுகிறேன் என்று தவறான சுய மருத்துவம் செய்துகொள்கிறவர்களும் உண்டு. இந்த சந்தேகங்களுக்கு சரியான பதிலை விளக்குகிறார் ஆயுர்வேத மருத்துவர் ராதிகா.

சிறுநீரகத்தில் கற்கள் எதனால் வருகிறது?

சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதற்கு முக்கியமானதொரு காரணம் சரியான அளவில் தண்ணீர் குடிக்காததுதான். இது பலருக்கும் தெரியும். உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் உட்கொள்ளும்போது நம் உணவின் வழியாக நாம் உட்கொண்ட நச்சுப்பொருட்கள் அல்லது அவற்றில் உள்ள தேவையற்ற உப்புகள் சிறுநீர் வழியே வெளியேறி விடுகிறது.

ஆனால், தண்ணீர் சரிவர குடிக்காதபோது உடலில் உள்ள உப்பு முழுவதும் வெளியேறாமல் சிறிது சிறிதாக கற்களாக மாறிவிடுகிறது. இதுதவிர சிறுநீரகக் கற்கள் உருவாவதற்கு மற்றுமொரு காரணம் சிறுநீரை அடக்கிக்கொள்வதும் முக்கிய காரணமாகிறது. சரியான அளவு இடைவெளியில் சிறுநீரை வெளியேற்றாமல் அடக்குவது, சிறுநீரை அடக்குவதை தொடர்ந்து வழக்கமாக்கிக் கொள்வது ஆகியவையும் ஆகும்.

பொதுவாக ஆண்களுக்குதான் அதிகமாக சிறுநீரகக் கற்கள் உருவாகின்றன என்ற ஒரு கருத்து உள்ளது. அது தவறு. இது முழுவதுமாக ஆண்களுக்கு மட்டுமே வருகின்றன என்று உறுதியாக கூற முடியாது. அவ்வாறு நிரூபிக்கப்படவும் இல்லை. பெண்களுக்கும் சிறுநீரகக் கற்கள் உருவாவது இயல்பே. சரியான அளவு தண்ணீர் உட்கொள்ளாத நபர் யாராயிருப்பினும் அவர்களுக்கு கற்கள் உருவாகிறது.

நம் நாட்டில் இன்னும் போதுமான கழிப்பிட வசதிகள் இல்லை. இதன் காரணமாகவே பெரும்பாலான பெண்கள் அதிகம் தண்ணீர் குடிப்பது இல்லை. வீட்டை விட்டு வேலை காரணமாகவோ, பயணம் காரணமாகவோ வெளியே சென்றால் அது பெரிய அவஸ்தையையும் உண்டுபண்ணிவிடுகிறது. சிறுநீர் கழிக்க வேண்டும் என்கிற உணர்வு ஏற்படும்போது, ‘கழிவறை எங்கே இருக்கிறது’ என்ற கேள்வியைக் கேட்கக்கூட பலர் தயங்குவார்கள். இந்த நெருக்கடியான சூழலால் பெண்களுக்கும் அதிகம் சிறுநீரகக்க் கற்கள் பிரச்னை சமீபகாலத்தில் அதிகமாகி வருகிறது. எனவே, பெண்கள் கவனமாக இருக்க வேண்டும்.

ஆயுர்வேதத்தில் என்னென்ன சிகிச்சைகள் உள்ளன?

அலோபதி மட்டுமல்லாமல் சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருத்துவத்திலும் சிறுநீரகக் கற்களை கரைப்பதற்கான வழிகள் அதிகப்படியாக உள்ளன. ஆரம்ப நிலையில் அல்லது கற்களின் அளவைப் பொறுத்து முறையாக சிகிச்சை பெற்றால் அறுவை சிகிச்சை இல்லாமலேயே சிறுநீரகக் கற்களை எளிதில் கரைக்க முடியும்.சிறுநீரகக் கற்கள் வந்து சிகிச்சை பெற்று கரைந்த பின்னும் திரும்பத்திரும்ப வரும் என்பது பற்றி...

ஆயுர்வேத மருத்துவத்தில் சிறுநீரகக் கற்கள் உருவானதற்கான காரணம், உடலில் உள்ள கால்சியத்தின் அளவு மற்றும் உணவு முறை ஆகியவற்றை கருத்தில் கொண்டே சிகிச்சையை அணுகுவதால் கற்கள் திரும்ப உருவாவதற்கான காரணம் மிகக் குறைவு.

அது தவிர கற்கள் திரும்ப உருவாவது என்பது அந்த நபரின் தண்ணீர் அருந்தும் அளவு மற்றும் உணவு முறையை சார்ந்தது. சிறுநீரகக் கற்களை கரைப்பதற்கு சிகிச்சையின் போதே நிறைய தண்ணீர் உட்கொள்ள அறிவுறுத்தப்படும். சிகிச்சை முடிந்து கற்கள் கரைந்த பின் சரியான அளவு தண்ணீர் அருந்துவதை தவிர்க்கவோ அல்லது குறைத்துக் கொண்டாலோ மீண்டும் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு.

காய்கறிகள், பழங்கள், பழச்சாறுகள் அதிகப்படியாக உட்கொள்பவர்களுக்கு உடலில் நீர்ச்சத்து அதிகரிக்கும். ஆனால், அமிலத்தன்மை மற்றும் காரத்தன்மை கொண்ட உணவை அதிகம் விரும்பி உண்பவர்கள் அதிக அளவு தண்ணீர் அருந்துவது அவசியம். அவ்வாறு தண்ணீர் அருந்தும்போது உடலில் உள்ள உப்புகள் அனைத்தும் வெளியேறிவிடும். கற்கள் உருவாகாது.

சிறுநீரகக் கற்கள் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவு...விதைகள் உள்ள காய்கறிகள், பால் சார்ந்த உணவுப் பொருட்கள், சுண்ணாம்பு சத்துள்ள உணவுகள் இவற்றை குறைத்துக் கொள்வது அவசியம். குறிப்பாக தக்காளியை தவிர்ப்பது அவசியம். தவிர்க்க முடியாதவர்கள் அதில் உள்ள சதை பாகத்தை நீக்கிவிட்டு உணவில் சேர்த்துக் கொள்ளலாம். சிகிச்சையின் போது இடையிடையே வாழைத்தண்டை ஜூஸாகவோ அல்லது பொரியலாக உணவில் சேர்த்துக் கொள்வது நல்ல பலன் தரும்.

ஆயுர்வேதத்தில் உள்ள கற்களை கரைக்கும் மூலிகைகள்பாஷாணபேதி, சிறுநெருங்சில்முள், மூக்கிரட்டை மூலிகை போன்றவற்றில் கஷாயம் செய்து சாப்பிட்டு வர கற்கள் கரைய ஆரம்பிக்கும். முக்கியமாக இன்றைய தலைமுறையினர் பலரும் சிறுநீரகக் கற்களால் அவதியுறுகின்றனர். அவர்களுக்கு எளிதான முறையில் கற்களை கரைக்க மேற்கண்ட மூலிகைகளை கஷாயமாக்கி எடுத்துக் கொள்ளும்போது நல்ல பலனளிக்கும்.

சிறுநீரகக் கற்களுக்கு அறுவை சிகிச்சை அவசியமா?
கற்களின் அளவைப் பொறுத்து அறுவை சிகிச்சை அவசியமா இல்லையா என்பது தீர்மானிக்க முடியும். 11, 12 மி.மீட்டர் அளவு வரை ஆயுர்வேதத்தில் கற்கள் கரைத்திருக்கிறோம். அதற்கு மேல் செல்லும்போது ஆயுர்வேத மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு கற்களின் அளவு குறைய ஆரம்பிக்கும் பட்சத்தில் அறுவை சிகிச்சைக்கு அவசியம் ஏற்படாது...

மஹாலக்ஷ்மி 100

1. மகாலட்சுமி தாமரைப் பூவில் வாசம் செய்பவள். சித்தி, புத்தி, போகம், முக்தி தருபவள்.

2. மகாலட்சுமிக்கு ஈஸ்வரி, ஹரண்யமயி, ஹரிணி, சூர்யா, பிங்களா, புஷ்கரிணி, சந்திரா என்ற பெயர்களும் உண்டு.

3. லட்சுமிக்கு பிரியமான பூ செவ்வந்தி எனப்படும் சாமந்திப்பூ.

4. நெல்லிமரத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதால் துவாதசியன்று நெல்லிக்கனியை உணவில் சேர்த்துக் கொண்டால் ஏகாதசி விரதத்தின் பலன் கிடைக்கும்.

5. ஆதி சங்கரருக்கு துவாதசியன்று நெல்லிக்கனி தானம் செய்த பெண்மணிக்கு அவர் கனகதாரா ஸ்தோத்திரம் பாடி லட்சுமி அருளால் பெருஞ்செல்வம் கிடைக்கச் செய்தார்.

6. மகாலட்சுமி வில்வ மரத்தில் இருப்பதால் மாதப்பிறப்பு, அமாவாசை, பவுர்ணமி, சதுர்த்தி, அஷ்டமி, நவமி, திங்கட்கிழமை ஆகிய நாட்களில் வில்வத்தை மரத்திலிருந்து பறிக்கக் கூடாது.

7.பசுவின் பின்புறத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். இதனால் கோவில்களில் காலையில் கோபூஜை செய்தபின் தரிசனம் ஆரம்பமாகிறது.

8. மகாவிஷ்ணுவிற்குப் பிடித்த துளசி லட்சுமியின் அம்சம் ஆகும். வீட்டில் துளசி மாடம் வைத்து தினமும் அதை சுற்றி வந்து வழிபட்டு வந்தால் எல்லாச் செல்வங்களும் கிடைக்கும்.

9. வாழை, மாவிலை, எலுமிச்சம்பழம் ஆகியவைகளிலும் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். அதனால்தான் சுபகாரியங்களில் இவை பயன்படுத்தப்படுகின்றன.

10. தலைமுடியின் முன் வகிட்டில் மகாலட்சுமி வாசம் செய்வதால் திருமணமான பெண்கள் முன்வகிட்டில் குங்குமம் இட்டுக் கொள்கின்றனர்.

11. தீபாவளியன்று அதிகாலை மட்டும் மகாலட்சுமி நல்லெண்ணையில் வாசம் செய்கிறாள்.

12. யானையின் முகத்திலும் குதிரையின் முகத்திலும் லட்சுமி வாசம் செய்கிறாள்.

13. ஸ்ரீவைஷ்ணவத்தை நிலை நாட்டிய வேதாந்த தேசிகர் ஸ்ரீஸ்துதி என்னும் ஸ்தோத்திரத்தில் ஸ்ரீமகாலட்சுமியை மங்களத்துக்கெல்லாம் மங்களமானவள் என்று புகழ்ந்து பாடுகிறார்.

14. ஒரு பக்தனுக்கு பகவானின் அனுக்ரகம் வேண்டும் என்றால் புருஷகார பூதையான மகாலட்சுமியை முதலில் சரணடைய வேண்டும்.

15. நம்மாழ்வார் அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா என்று கணப்பொழுதுகூட பிரியாது மகாவிஷ்ணுவுடன் கூடி இருக்கும் மகாலட்சுமியை சரணடைவதே உயர்ந்தது என்று கூறியுள்ளார்.

16. திருமழிசையாழ்வாருக்கு குழந்தைப் பருவத்தில் ஞானப்பால் ஊட்டியது மகாலட்சுமியே.

17. குபேரனிடம் செல்வம் இருந்தாலும் அத்துடன் புகழ், ஆரோக்கியம், நல்வாழ்வு போன்ற பல செல்வங்களை உரியவர்களுக்கு வாரி வழங்குபவள் ஸ்ரீ மகாலட்சுமியே.

18. மகாவிஷ்ணுவுடன் இருக்கும் பொழுது லட்சுமிக்கு இரண்டு கரங்கள். ஆனால் தனியாக சன்னதியிலோ அல்லது தனிக் கோவிவிலோ நான்கு கரங்கள் கொண்டவள். முன் இரு கரங்கள் அபய வரத ஹஸ்தங்கள். பின் இரண்டு கரங்களில் தாமரை மலர் ஏந்தி இருப்பாள்.

19. வீரம் உடையவர்கள், சோம்பல் இல்லாமல் சுறுசுறுப்பாக இருப்பவர்கள், தவம் உடையவர்கள், ஈகை குணம் கொண்டவர்கள் செல்வத்தை நன்குஅனு பவிப்பவர்கள் ஆகியவர்களை நான் அடைகிறேன் என்கிறாள் மகாலட்சுமி.

20. மகாலட்சுமி ஓரிடத்தில் நிலைக்க மாட்டாள். அதனால் சஞ்சலா, சபலா என்ற பெயர்களும் அவளுக்கு உண்டு.

21. லட்சுமி பிரம்மனுடன் பிறந்தவள். இருவர் நிறமும் செம்பொன் நிறமாகும்.

22. லட்சுமிக்கு உலூகம் எனப்படும் ஆந்தை ஒரு வாகனம். மேற்கு வங்கத்தில் லட்சுமி பூஜையின்போது ஆந்தையை வழிபடுவது வழக்கம்.

23. மகாலட்சுமியின் பரிபூரண அருளைப் பெற்றது சுக்கிர வாரம் எனப்படும் வெள்ளிக்கிழமை. சுக்கிரனின் அதிதேவதை மகாலட்சுமி. எனவே வெள்ளிக்கிழமைகளில் சூரியன் உதயமான இரண்டு மணி நேரத்திற்குள் பூஜிப்பது. தரிசனம் செய்வது ஆகியவை மகாலட்சுமியின் அருள் பெற உதவும்.

24. லட்சுமிக்கு ஏற்ற நாள் வியாழக்கிழமை மாலை குபேர காலம் எனப்படுகிறது. பவுர்ணமியில் வரும் வியாழன் சிறப்பு. வளர்பிறை பஞ்சமி, வெள்ளியன்று வரும் அஷ்டமியும் சிறந்தது.

25. லட்சுமியின் திருக்கரங்கள் ஸ்வர்ண ஹஸ்தம் எனப்படுகிறது. எல்லா லட்சுமிகளும் அபய வரத ஹஸ்தத்துடன் அருள்புரிகின்றார்கள்.

26. லட்சுமியின் பெருமையை ஸ்ரீசூக்தம், ஸ்ரீசுதுதி, கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி அஷ்டகம், அஷ்டோத்திர சதநாமாவளி ஸ்தோத்திரம் போன்றவை விளக்குகின்றன.

27. வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்களுக்கு அஷ்டபோக பாக்கியங்களும் கிடைக்கும்.

28. லட்சுமி செல்வத்தின் அதிபதி. தீபாவளி அன்று லட்சுமி பூஜை செய்வதால் செல்வம் இரட்டிப்பாக பெருகும்.

29. புதுக்கணக்கு எழுதுபவர்கள் தீபாவளி அன்று லட்சுமி பூஜை செய்து விட்டு நோட்டுப் புத்தகங்களின் மீது சந்தனம், மஞ்சள், குங்குமம் வைத்து மலர்தூவி பூஜை செய்து பிறகு வியாபாரத்தை ஆரம்பிப்பார்கள்.

30. வருத்தத்தால் மகாவிஷ்ணுவைப் பிரிந்த மகாலட்சுமி விஷ்ணுவை திரும்பவும் சேர்ந்த இடம் ஸ்ரீவாஞ்சியம் என்ற தலம். நன்னிலத்திற்கு அருகில் உள்ளது. ஸ்ரீ என்றும், திரு என்றும் அழைக்கப்படும் மகாலட்சுமியை விஷ்ணு வாஞ்சையால் விரும்பி சேர்ந்த இடம் இத்தலம் என்பதால் இத்தலத்திற்கு ஸ்ரீவாஞ்சியம் (திருவாஞ்சியம்) என்ற பெயர் ஏற்பட்டது.

31. மகாலட்சுமியை நவராத்திரி நேரத்தில் வணங்க சகல நன்மை கிடைக்கும்.

32. அதிகாலையிலும், மாலையிலும் வீட்டில் பெண்கள் விளக்கேற்றி வைத்து லட்சுமியை வரவேற்க லட்சுமி சுலோகங்கள், அஷ்டகம் போன்றவற்றைச் சொல்லிக் கொண்டிருந்தால் லட்சுமியின் அருள் கிடைக்கும்.

33. இந்திரன் மகாலட்சுமியை 4 பாகங்களாக நிலை பெறச் செய்தான். அவை பூமி, அக்னி, நீர் மற்றும் உண்மை பேசும் மனிதர்கள். இந்த இடங்களில் மகாலட்சுமி நிலையாக இருப்பாள்.

34. கோமாதா (பசு)வை தெய்வமாக மகாலட்சுமியின் அம்சமாகக் கருதி பூஜை செய்வது நம் நாட்டில் உள்ள பழக்கம். பசுவின் பின்புறம் மகாலட்சுமி வசிக்கிறாள் என்பதால் அதிகாலையில் பசுவின் பின்புறத்தைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொள்ள வேண்டும்.

35. லட்சுமிக்கு முன் தோன்றியவள் மூதேவி. லட்சுமிக்குப் பிறகு பிறந்தவள் வாருணி. இவள் மது போன்ற மயக்கம் தரும் வஸ்துக்களுக்கு தேவதை.

36. லட்சுமியின் திருக்குமாரர்கள் கர்தமர், சிக்லீதர்.

37.மகாலட்சுமியை நாராயணன் திருப்பாற்கடலில் சித்திரை, தை, புரட்டாசி மாதங்களில் பூஜிக்கிறார்.

38.பிரம்ம தேவன் மகாலட்சுமியை புரட்டாசி மாத சுக்லாஷ்டமியில் பூஜிக்கிறார்.

39.மனுதேவன் மகாலட்சுமியை வருஷ முடிவிலும், தை, மாசில மாத சங்கராந்தியிலும் பூஜிக்கிறார்.

40.தேவேந்திரன் மகாலட்சுமியை பூஜித்து அஷ்ட ஐஸ்வர்யங்களையும், ஐராவத்தையும், அமராவதி பட்டணத்தையும் பெற்றார்.

41. செல்வத்தை ஒருவருக்கு வாரி வழங்கும் தெய்வம் மகாலட்சுமி. அவளது அருள் இருந்தால் ஒரே நாளில் குபேரன் ஆகிவிடலாம்.

42. பூரணகும்பம், மஞ்சள், குங்குமம், திருமண் சூர்ணம், கோலம், சந்தனம், வாழை, மாவிலை தோரணம், வெற்றிலை, திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் ஆகிய மங்கள பொருட்களில் மகாலட்சுமி நித்தியவாசம் புரிகிறாள்.

43. வில்வ மரம், நெல்லி மரம், துளசி, மஞ்சள் செடிகளிலும் மகாலட்சுமி வாசம் செய்கிறாள்.

44. லட்சுமியை வில்வத்தால் அர்ச்சனை செய்து பூஜிக்கலாம்.

45. மகாலட்சுமியை சாமந்திப்பூ, தாழம்பூ இலைகளாலும் அர்ச்சிக்கலாம்.

46. வில்வமரத்தை வலம் வருவது மகாலட்சுமியை வலம் வருவதற்கு சமமாகும்.

47. வாமன புராணத்தில் மகாலட்சுமியின் திருக்கரங்களில் இருந்து வில்வ விருட்சம் தோன்றியது என்று கூறப்பட்டுள்ளது.

48. வில்வ மர முட்கள் சக்தி வடிவம், கிளைகள் வேதம், வேர்கள் 14 கோடி ருத்ரர்கள் என்று கருதப்படுகிறது. இவ்வளவு சிறப்பு கொண்ட வில்வ மரமே மகாலட்சுமி சொரூபமாக விளங்குகிறது.

49. நெல்லிக்கனி இருக்கும் இல்லத்தில் மகாலட்சுமி நிரந்தரமாக வாசம் புரிகிறாள் என்பது ஐதீகம்.

50. துளசி செடியிலும் மகாலட்சுமி எழுந்தருளி வாசம் செய்கிறாள். இதேபோல் மஞ்சளிலும் இருக்கிறாள். அதனால் துளசி செடியுடன் மஞ்சள் செடியையும் சேர்த்து நம் வீட்டில் வளர்ப்பது நல்லது.

51. ஸ்ரீ மகாலட்சுமிக்கு இரண்டு ரூபங்கள் உண்டு. ஒன்று ஸ்ரீதேவி என்ற லட்சுமி. மற்றொன்று பூதேவி என்ற பூமிதேவி வடிவம்.

52. லட்சுமிதேவி, வைகுண்டத்தில் ரமாதேவி, சொர்க்கத்தில் சொர்க்கலட்சுமி, பாதாள உலகில் நாகலட்சுமியாக இருக்கிறாள். அவள் ராஜாக்களிடம் ராஜ லட்சுமியாகவும் விளங்குகின்றாள். விலங்குகளிடத்தில் சோம லட்சுமியாகவும், புண்ணியவான்களிடம் ப்ரீதிலட்சுமியாகவும் வேதாந்திகளிடம் தயாலட்சுமியாகவும் இருக்கிறாள்.

53. திருமால் கோவில்களில் பகவானுடைய மார்பில் உள்ள லட்சுமிக்கு யோகலட்சுமி என்றும், இருபக்கமும் உள்ள தாயாருக்கு போகலட்சுமி என்றும், தனிச்சன்னதியில் அருள்புரிபவளுக்கு வீரலட்சுமி என்றும் பெயர்.

54. லட்சுமி மாதுளம் கனியிலிருந்து உதித்ததால் மாதுளங்கி என்றும், பத்மாசனால் வளர்க்கப்பட்டதால் பத்மா என்றும், அக்னி குண்டத்தில் வாசம் செய்ததால் அக்னிகர்ப்பை என்றும், ரத்தின வடிவம் எடுத்ததால் ரத்தினாவதி என்றும், ஜனக மகாராஜனுக்கு மகளானதால் ஜானகி என்றும், பூமிக்குள்ளே கலப்பையின் நுனியிலிருந்து வெளியேற்றப்பட்டமையால் சீதை என்றும் பாற்கடலிலிருந்து தோன்றியதால் ஸ்ரீ என்றும் போற்றப்படுகிறாள்.

55. தீபாவளித் தினத்தன்று லட்சுமியை கொண்டாடுவதால் மகாலட்சுமியின் பேரருளைப் பரிபூரணமாக பெறலாம்.

56. சாஞ்சி ஸ்தூபத்தில், ஒரு கம்பத்திலும் சாரநாத் தோரணத்திலும், யானைகள் உடைய திருமகள் உருவங்களைக் காணலாம்.

57. பல்லவர் காலத்துச் சிற்பங்களில் கஜலட்சுமியை காண முடியும். கஜலட்சுமியின் உருவங்கள் இரண்டு மாமல்லபுரத்தில் உள்ளது.

58. திருக் குறுங்குடியில் கோபுர முகப்பின் நடுவில் அபூர்வமான செதுக்கு வேலைப்பாடு அமைந்த கஜலட்சுமியைப் பார்க்கலாம்.

59. சீல கிரந்தம் எனும் புத்த நூல் மகாலட்சுமி வழிபாட்டினை விளக்குகிறது.

60. கி.பி. முதல் இரண்டாம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த குஷானர்களின் சிற்ப ரீதியில் அமைந்த, செந்நிறக் கல்லால் ஆன, சற்றுச் சிதைந்த லட்சுமியின் உருவம் ஒன்று டில்லி காட்சிச் சாலையில் உள்ளது.

61. ஜைனர்கள் மகாலட்சுமியை ஜீவஜகத்தின் தென்புறத்துப் பாதியைக் காக்கும் தேவதைகளில் ஒருத்தியாகப் பாவிக்கின்றனர். தீபாவளியின்போது இவளை வழிபடுகின்றனர்.

62. மகாலட்சுமி வடிவங்கள் எவ்வாறு அமைய வேண்டுமென லட்சண கிரந்தங்கள் உள்ளன. அம்சுபேதாகமத்தின் படி, திருமகள் தாமரையில் வீற்றிருப்பாள்.

63. வராக அவதாரத்தில் திருமால் பூமியை தோண்டி விட்டுத் தம் சிரமத்தை மறந்திருக்கத் திருமகளைத் தம் தொடை மீது நிறுத்தி இன்பமடைகிறார். மாமல்லபுரத்தில் இவ்வமைப்புடைய சிலை உள்ளது.

64. பில்லர்கள் எனும் தொல்குடியினரின் தெய்வம் லட்சுமியே.

65. தென்னாட்டில் மாலர் என்ற வகுப்பினர் ஆறு கலயங்களை அடுக்கி அவற்றைத் திருமகளாகப் பாவித்துக் கும்பிடுகின்றனர்.

66. குஜராத்தில் லட்சுமி பூஜை ஒரு விசேஷ நிகழ்ச்சியாகும். அவர்கள் வழிபடும் லட்சுமியின் கையில் வீணை இருக்கும்.

67. மகாராஷ் டிரத்தில் உழவர்கள் லட்சுமியை பயிர் வளத்தைக் காட்டும் தேவதையாக கருதுகிறார்கள். ஒரு மரத்தின் கீழ் ஐந்து கற்களை நிறுத்தி அதற்கு மஞ்சள் குங்குமம் இட்டுக் கோதுமை மாப்படையல் சாத்துவர். மாலைப்பொழுது இளங்கதிர்களைக் கொய்து வீட்டுக்குக் கொண்டு வருவார்கள். அத்துடன் துணியில் மறைத்த ஒரு விளக்கினையும் ஏந்தி வருவர். அதுவே அவர்களுடைய லட்சுமி.

68. ராஜஸ்தானில் லட்சுமியை அன்னபூரணியாக வழிபடுகின்றனர். தானியம் அளக்கும் காரி என்ற மரக்காலை லட்சுமி வடிவமாக அமைத்துத் தாமரைப் பூக்களால் அலங்கரித்து அவர்கள் வழிபடுவது உண்டு.

69. இந்தோசீனாவிலும் திருமகளின் வழிபாடு உள்ளது. அவள், தலையில் முத்துக்கிரீடமும், கைகளில் வளையல்களும் அணிந்திருப்பாள். மேற்புறக் கைகளில் சங்கு சக்கரம் இருக்கும். நாகக்குடை பூண்டிருப்பாள். கல்லறைகள் மீது திருமகள் உருவைப் பொறிப்பது அந்நாட்டு வழக்கம். 

70. கோஜாகர பூர்ணிமை விரதம் வங்காளிகளிடையே நிலவும் லட்சுமி பூஜையாகும்.

71. லட்சுமி பூஜை செய்யும் போது, நம் வீட்டுக்கு வரும் விருந்தினர்களை நாம் எப்படி உற்சாகமாக வரவேற்போமோ, அதே மாதிரி வாசலில் நின்று லட்சுமியை பாவனை செய்து அழைக்க வேண்டும்.

72. வரலட்சுமி விரத பூஜை நடத்தப்படும் வீடுகளில் மகாலட்சுமி வாசம் செய்வாள்.

73. லட்சுமி வழிபாட்டால் நீண்ட ஆயுள், புகழ், செல்வம், உடல் நலம் உண்டாகும்.

74. வரலட்சுமி விரத பூஜை செய்தால் உடனடியாக திருமண யோகம் கைகூடும்.

75. எட்டு விதச் செல்வங்களை தருவதுடன் தாலிப் பாக்கியத்தையும் வரலட்சுமி வழங்குகிறாள். இதனால் தான் மணமான பெண்கள் மகாலட்சுமியை போற்ற வரலட்சுமி விரதத்தை மேற்கொள்ளுகின்றனர்.

76.மகாலட்சுமிக்கு உகந்தது நெய் விளக்காகும். சகலவித செல்வத்தையும் வீட்டில் நலனையும் தருவது நெய் விளக்கு வழிபாடுதான். எனவே இதை மறக்கக்கூடாது.

77. பூஜை செய்யும் போது மகாலட்சுமிக்குரிய பாராயணப் பாடல்களை பாடித் தியானிக்கலாம்.

78. வரலட்சுமி நோன்பை கடைபிடித்தவர்கள் பெரும் பயனை அடைந்தார்கள் என்று பத்ம புராணம் கூறுகிறது.

79. வீடுகளில் லட்சுமி படம் வைத்து வெள்ளிக்கிழமைகளில் தூபம் காட்டி, தீபாராதனை செய்ய வேண்டும். உப்பு பாத்திரத்தில் உப்பு குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எட்டுவித நல்லெண்ணை கலந்து காலையும் மாலையும் தீபம் ஏற்றினால் லட்சுமிக்கு மிகவும் பிடிக்கும்.

80. நாம் செய்யும் பாவ, புண்ணியந்த்துக்கு ஏற்பவே லட்சுமி நமக்கு செல்வத்தை வழங்குவாள்.

81. மகாலட்சுமி நித்திய சுமங்கலி என்று அழைக்கப்படுகிறாள். எனவே தான் அவளை நினைத்து பெண்கள் வரலட்சுமி விரதம் மேற் கொள்கிறார்கள்.

82. வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்களிடம் அஷ்ட லட்சுமி களும் மகிழ்ந்து அன்புடன் இருப்பார்கள் என்பது ஐதீகம்.

83. மகாலட்சுமி கணவரின் மார்பில் பொறுமையுடன் இருப்பவள். எனவே அவளுக்கு நன்றி தெரிவிக்கும் விரதமாக வரலட்சுமி விரதம் கருதப்படுகிறது.

84. மகாலட்சுமிக்கு மஞ்சள் நிறப்பட்டு என்றால் பிரியம் அதிகம்.

85.லட்சுமி, அனைவருக்கும் நன்மை தருபவள் என்று அதர்வன வேதத்தில் கூறப்பட்டுள்ளது.

86. வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்களுக்கு மாங்கல்ய பலம் நீடிப்பதோடு செல்வம், தைரியம், வெற்றி, அரசு பதவி, குழந்தைப் பேறு, கல்வி உள்ளிட்ட எல்லா வளங்களும் வந்து சேரும்.

87. வரலட்சுமி தினத்தன்று அன்னம், பருப்பு, வடை, பாயசம், கொழுக்கட்டை, அப்பம், இட்லி முதலியவற்றுடன் பழவகைகளை நைவேத்தியம் செய்ய வேண்டும்.

88. வரலட்சுமி பூஜைக்கு கொழுக்கட்டை நைவேத்தியமே பிரதானமானது.

89. வரலட்சுமி பூஜையின் போது அருகம்புல்லை தூவி வழி பட்டால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

90. வரலட்சுமி பூஜைக்கு பயன்படுத்தும் கும்பத்தை பிறகு பத்திரப்படுத்தி, சுத்தமான இடத்தில் வைத்துக் கொள்ளலாம். வேறு பூஜைகள் நடத்தும் போது அதை பயன்படுத்தலாம்.

91. வரலட்சுமி பூஜைக்கு பயன் படுத்தும் கும்பம் எதிர்பாராத விதமாக நெளிந்து விட்டாலோ, சேதம் அடைந்து விட்டாலோ, வீட்டில் வைத்துக் கொள்ளக்கூடாது. தானமாக கொடுத்து விட வேண்டும்.

92. வரலட்சுமி பூஜையின் போது சந்தனத்தில் லட்சுமி செய்து வழி படலாம். ஆனால் மறுநாள் அதை நீர் நிலைகளில் கரைத்து விட வேண்டும்.

93. வரலட்சுமி தினத்தன்று புண்ணிய நதிகளில் நீராடலாம். இது ஓராண்டு லட்சுமி வழிபாட்டுக்குரிய பலன்களை நமக்குத் தரும்.

94. வரலட்சுமி பூஜை தினத்தன்று சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள், குங்குமம் கொடுத்து வணங்கினால் நல்லது.

95. வரலட்சுமியை எந்த அளவுக்கு தாமரை மலர்களால் அலங்கரித்து வழிபாடு செய்கிறோமோ, அந்த அளவுக்கு புண்ணியம் சேரும்.

96. சித்ரநேமி என்ற கணதேவதை வரலட்சுமி விரதத்தை அனுஷ்டித்து தன்னுடைய குஷ்ட ரோகம் நீங்கப் பெற்றாள்.

97. பார்வதி தேவி ஸத்புத்திர லாபத்திற்காக வரலட்சுமி விரதத்தை அனுஷ்டித்து சண்முகனைப்பெற்றாள்.

98. விக்ரமாதித்தன் இந்த விரதத்தை அனுஷ்டித்து இழந்த ராஜ்ஜியத்தை திரும்பப்பெற்றான்.

99. நந்தன் இந்த விரதத்தை கடை பிடித்து அழகிய மனைவியை அடைந்தான்.

100. லட்சுமி, வழிபாட்டின் போது மறக்காமல் அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம் சொல்வது மிகவும் நல்லது.


Friday, February 19, 2021

பானிப்பட் போர்

18ம் நூற்றாண்டு......The stage is set...

 மராட்டிய பேரரசு ஆல் போல் தழைத்து, அருகு போல் வேரூன்றி, கிட்டதட்ட இந்த முழு பாரதமும் அதன் ஆளுமையில், டில்லி முகலாயர்கள் செல்லா காசு. 

ஒரு மராட்டிய மன்னர் டில்லி அரியணையில் அமர்வது தான் பாக்கி.

 அதற்க்கும் ஆள் தயார், அது "ஸ்ரீ மான் விஸ்வாஸ்  ராவ்." மராட்டிய பேஷ்வா நானா சாகிப் பின் புதல்வர். தேவை ஒரு Excuse... சீக்கிரமே அதுவும் லபித்தது 

 14 ஆம் தியதி, ஜனவரி மாதம் 1761
அந்த பானிப்பட்  சமவெளியில் மாதக்கணக்கான பலப் பரீக்ஷை  களுக்கு பின் அந்த இரு படைகளும் மோதிக் கொண்ட.ன..

 சத்திரபதி சிவாஜி  மஹராஜ் அவர்கள் கனவுகண்ட..... ஹிந்து சாம்ராஜ்யம்...... , A Slip betwex the cup and the lip ஆன நாளும் அது தான்..... 

அதற்க்கு முக்கிய   காரணம்  ஒரே, ஒரு டெக்னிக்கல் தவறு தானாம்... 

அந்தப் படைகள்.... 
ஒன்று...    இந்திய மிலேச்சர் களின் வேண்டுகோளின் படி   இந்தியாவை கொள்ளை அடிக்க, வீர மராட்டியரின்  வளர்ச்சியை தடுக்க அழைக்கப்பட்ட ஆப்கானிய மன்னர்  அஹ்மத் ஷா அப்தாலி தலைமையில்.. . (... 1, 00,000  ஆப்கானிய,+ இந்திய ரோகில்லா+, அவந் நவாப் சிரஜ் - உத்-தௌலா "ஜிகாத்" பெயரால், அவர்களின் உள் ஊர் உதவி உடன் . ) 

மற்றொன்று  காலம் காலமாக நடந்து வரும் இந்த அட்டூழியத்திற்க்கு முற்றுப்புள்ளி இட வேண்டும் என்ற சங்கல்பத்துடன்  மராட்டிய பேரரசின்... வீர மராட்டியர்களின் வட திசை படை...

 சதாசிவ ராவ் பாகு , மற்றும்  பேஷ்வா பாஜி ராவ் வின் மகன், (அடுத்த டில்லி சக்கரவர்த்தி...?? )  ஸ்ரீமான் விஸ்வாஸ்  ராவ் தலைமையில்... . (70,000 வீர மராட்டியர்கள், முக்கியமாக 200 long range, அதி நவீன பிரஞ்சு பீரங்கிகளுடன்... , 

மராட்டியர்கள் டில்லியை கைப்பற்றினர், அதை ஆக்கிரமித்து  இருந்த அப்தாலி. , மிகுந்த உயிர் சேதத்துடன் பின் வாங்கினார். 

சில மாதங்களில்..... அவரை பானிப்பட்டில் சதாசிவ ராவ் மீண்டும்  எதிர் கொண்டார்..
 ஆனால் நிலைமை இப்போது  தலைகீழ்,

 மராட்டியர்கள் ஏறத்தாழ  முற்றுகையில், பாசறையில் தலைவிரித்து ஆடும் கடும் உணவு,,பணப் பஞ்சம், 

பூனாவில் இருந்து பேஷ்வா அனுப்பிய பணம்... உணவு ஆப்கானியர்களிடம் மாட்டிக் கொண்டது. உள் ஊர்   ஹிந்து.... ராஜபுத்திர்கள், ஜாட், சீக்கிய படை உதவி இல்லை... . தளபதிகளிடையே முணு முணுப்பு. 

ஆப்கானியர்க்கு இந்தப் பண, உணவு ப் பிரச்சனைகள் இல்லை, நன்றி இந்திய மிலேச்சர்கள்... ரோகில்லாக்கள், அவுத் நவாப்,, "ஜீகாத் ." .... ஆனால் அவர்களுக்கு போரை ஆரம்பிக்க அச்சம்.. 

பட்டினியில்  சாவதை விட, போரில் சாகலாம்... , முற்றுகையை உடைத்து டில்லி போனால் உணவு கிடைக்கும் என மராட்டியர்கள் சதா சிவ  ராவிடம் வேண்ட, போர் துவங்க அனுமதி கிடைக்கிறது. ஜனவரி 14.... 

காலையில் ஆரம்பித்த போரின் 
முதல் சுற்றில் மராட்டிய, பீரங்கி, துப்பாக்கி தாக்குதலில் 15,,000 ரோகில்லா, ஆப்கானியர்கள் point blank ஆக கொல்லப் பட்டனர்.. 

இப்போது தான் அந்த டெக்னிகல் தவறு நடந்தது.. 

மராட்டியர்களுக்கு  தங்கள் குதிரை படை மேல் மிகுந்த  நம்பிக்கை. பலமுறை அவர்களின் வெற்றிகளுக்கு அது  காரணமும். கூட.... ஆனால்... 

 சதா சிவ ராவ் ஒரு கண்டிப்பான ஒரு  கட்டளை இட்டு இருந்தார், பீரங்கி தாக்குதல்களினால்  எதிரி போதுமான அளவு, மென்மை பட்ட பிறகு தான் குதிரை படை களம் புக வேண்டும் என்று, 

ஆனால் அது அன்று  மீறப்பட்டது. சர்தார்களின் போட்டி பெறாமை,.... தான் பெயர் எடுக்க வேண்டும் என்ற அல்ப ஆசை,

 மராட்டிய... குதிரை படைகள்  முன்னேறி தாக்க ஆரம்பித்தன. 

இப்போது மராட்டிய பீரங்கிகள் சுட  தயங்கின, சுட்டால் தங்கள் குதிரை படையே அடி படும்.. 

அப்தாலி தேர்ந்த தளபதி.. எதிர்பாராமல் லட்டு போல்  வாய்த்த இந்த   சந்தர்ப்பத்தை நழுவ  விடுவாரா? 

பயன் அற்று இருந்த தன் short range, பீரங்கிகளால் குதிரை படையை  தாக்க ஆரம்பித்தார்...  பெரும் அழிவு 

கவனித்த சதாசிவ ராவ் பல போர் கண்டவர்... அந்த சந்தர்ப்பத்தில் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்தார்...

 தனே தலைமை தாங்கி முழு மராட்டிய  பலத்துடன் நேரடியாக  எதிரிகள் மேல் பாய்ந்தார்".ஹர ஹர மஹாதேவ்" முழக்கத்துடன். 

எதிரி யால் இந்த இடியை  தாங்க  முடிய வில்லை... பின் வாங்க ஆரம்பித்தான்...

 அப்தாலி தன்  ரிசர்வ் படைக்கு கட்டளை இட்டார், "புற முதுகு காட்டி ஓடிவரும் ஆப்கானியர்களை வெட்டித் தள்ளுங்கள்" என்று, 

பின் வாங்கி ஓடியவர்கள் திரும்பினர்... வேறு வழி.. போர் மாலை வரை நடந்தது. 

மதியம் 3 மணி வரை வெற்றி முகத்தில் இருந்த மராட்டியர்... போர் திசை மாறியது.. 

அதிகம் வளர்த்துவானேன்..., 30,000/அப்தாலி படையினரும்,, 40,000 வீர மராட்டியரும் கொல்லப் பட்டனர், சதா சிவ ராவும் ..... ஸ்ரீ மான் விஸ்வாஸ்  ராவும் களத்திலேயே  வீர மரணம், 

அதை விட கொடுமை மராட்டிய  படையின் பாதுகாப்பில் வட நாட்டின் புண்ணிய தலங்களை தரிசிக்கலாம் என வந்த 30,000 ++ போரில் ஈடுபடாத ( DEAD WEIGHT) ஆண், பெண், குழந்தைகள் ஈவு இரக்கமின்றி கொல்லப் பட்டனர். அடிமை படுத்தப் பட்டனர். 

போரில் தங்கள் உறவு  களை இழக்காத ஒரு மராத்திய குடும்பம் கூட இல்லை, 

படு தோல்வியை குறிக்கும் விதமாக "அது தான் என் பானிப்பட்". எனும் புதிய மராத்திய  சொலவடையே அறிமுகம் ஆயிற்று... 

பொது எதிரி... ஆப்கானியர்களுக்கு எதிரான இப்போரில் இராசபுத்திர,
 சீக்கிய, ஜாட் படைகள் மராட்டியப் படைகளுக்கு உதவ முன் வரவில்லை.  இது மராத்திய  தோல்விக்கு ஒரு காரணம். 

போரில் ஆப்கானிய வெற்றி இந்திய வரலாற்றில் ஒரு பெரும் திருப்புமுனையாக அமைந்தது.

 மராத்தியர்கள் பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், தில்லி, கங்கைச் சமவெளி பகுதிகளை  விட்டு .வெளியேறினர். 

மராத்தியப் பேரரசு சிதைந்து, தனித்தனி நாடுகளாக மாறியது. .

 இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி வலுப்பட  இப்போர் காரணமாக அமைந்தது. 

போரின் கடுமையை அனுபவித்த  ஆக்கிரமிப்பாளர்கள் பிறகு இந்தியா பக்கம் பிறகு தலை வைத்தும் படுக்க வில்லை..

இதற்க்கு எல்லாம் காரணம் அந்த  தலைமைக்கு கீழ் படியா அந்த  டெக்னிகல் தவறு, மற்றும் ஹிந்துக்களின் ஒற்றுமை இன்மை தான் என்பது சரித்திர ஆய்வாளர்களின் முடிவு. 

நாம், இன்னும் பாடம் கற்ற பாடு இல்லை.

Thursday, February 18, 2021

தமிழும் சமஸ்கிருதமும்

இங்கு சிலர் சமஸ்கிருதம் பிராமணர்களின் மொழி என்றும் அது ஈரானில் இருந்து ஆரியர்களால் இங்கே புகுத்தப்பட்டது என்றும் தமிழுக்கு சமஸ்கிருதம் விரோதி மொழி என்றும் எழுதிவருகின்றனர். ஆனால் சமஸ்கிருதமானது  முற்காலத்தில் அதாவது ஆங்கிலேயர் வருகைக்கு முன்புவரை  அனைத்து தரப்பினரும் பயன்படுத்தினர் என்பதை ஏகமனதோடு ஒத்துக்கொள்ளும் சில தமிழ்மொழி ஆர்வலர்கள், பெரும்பான்மையாக இன்றைய காலகட்டத்தில் பிராமணர்கள்  மட்டுமே அம்மொழியை பயன்படுத்துவதால் அது பிராமண மொழி என்றும் தமிழுக்கு அந்நியம்  என்றும் எழுதி வருகின்றனர்...!

ஆனால் எனக்கு என்ன சந்தேகமெனில்  ஒரு மொழியை ஒரு மதத்தைச் சார்ந்தவரோ அல்லது  ஒரு சாதியை சார்ந்தவர்களோ  அதிகம் பயன்படுத்துகிறார்கள் என்பதற்காக அம்மொழியை  அச்சாதியினருக்கோ அல்லது அம்மதத்தினருக்கோ உரிமையாக்கிவிடும் என்று கூறுவது முட்டாள்தனமாக தோன்றவில்லையா??? நான் எனது  தமிழ் மொழியின் பெருமையை இன்னொரு மொழியை, அதன் மகத்துவத்தை  பழித்துப் பேசுவதன் மூலம்தான் உயர்த்தமுடியும் என்பது அறிவின்மையாகவே கருதுகிறேன். ஒருவேளை தனது தாய்மொழிக்காக இன்னொரு மொழியை அவமதிப்பவர்களால் நிச்சையமாக அம்மொழிக்கு தீங்குதான் விளையுமே அன்றி என்றும் நன்மை பயக்காது..!

ஆனால் கடவுளுக்கு தமிழ் தெரியாதா என்று நகைப்பாக நெல்லைக் கண்ணன் அவர்கள் பேசியிருந்தார். கடவுளுக்கு மொழிகள் கிடையாது. இந்த மொழிதான் எனக்கு உகந்தது மற்றவைகள் ஏற்றுக்கொள்ள முடியாதது என்று இறைவன் எந்த இடத்திலும் யாரிடமும் கூறியதாக சரித்திர சான்றுகள் இல்லை. இதற்கு புராண, இதிகாச ஆதாரங்களும் இல்லை. இறைவனை வழிபடும் போது தமிழ் மொழியிலும் வழிபடலாம். சமஸ்கிருதத்திலும் வழிபடலாம். இதுவரை எழுத்து வடிவமே இல்லாத நரிக்குறவர் பாஷையிலும் வழிபாடு நடத்தலாம். இறைவன் அதை ஒரு போதும் ஏற்காமல் விலக்கி வைப்பது கிடையாது...!

தமிழ் மொழியில் அழகான பாடல்கள் உண்டு. அருமையான கருத்துக்கள் உண்டு. நிகரற்ற திருக்குறளும், நெஞ்சை நெகிழ்விக்கும் பாசுரங்களும் தமிழில் மட்டுமே உண்டு. அதுபோல சமஸ்கிருதத்தில் புகழ்பெற்ற இதிகாசங்களும், காவியங்களும், சிற்றிலக்கியங்களும் உண்டு என்றாலும் அவைகள் தமிழோடு ஒப்பிடும் போது மிகவும் குறைவுதான் என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும்....!

தக்க அந்தணர்களை வைத்து, நிலம் தானம் கொடுத்து, பசு தானம் கொடுத்து சொர்ண தானம் கொடுத்து வேத பாடசாலை வைத்து வடமொழியை வளர்க்க தெரிந்த தமிழ் மன்னர்களுக்கு வடமொழி தமிழுக்கு அந்நியம் என்ற உண்மை தெரியாமல் சென்றதற்கான காரணத்தை தன்னை அறிவில் சிறந்தவர்களாக கருதிக்கொண்டு தமிழ் மொழி காப்பாளர்களாக பிரகடனப்படுத்துபவர்கள் கூறத்தான் வேண்டும். தமிழ் வேதம் என்று போற்றுகின்ற திருமுறைகளிலேயே வேதாகமங்கள் போற்றப்படுகின்றன. இந்த ஆகமமே சைவத்திற்கு ப்ரமாணம். இந்த ஆகமங்கள் இன்றி சைவம் முற்று பெறாது
இந்த ஆகமங்கள் வடமொழியிலேயே உள்ளன. இதை திருமந்திரம் இயற்றிய திருமூலர் தாம் #வடமொழி #ஆகமங்களை தமிழில் சிவபெருமான் அருளியதாகவே குறிப்பிடுகிறார். ஆகமங்கள் மொத்தம் இருபத்து எட்டு. இந்த இருபத்து எட்டு ஆகமங்கள் எது எதுவென்றுகூட பட்டியலிடுகிறார் திருமூலர்.

"பெற்றநல் ஆகமம் காரணம் காமிகம்
உற்றநல் வீரம் உயர்சிந்தம் வாதுளம்
மற்றவ் வியாமள மாகுங்கா லோத்தரம்
துற்றநற் சுப்பிரம் சொல்லும் மகுடமே"

திருமுறைகளிலேயே ஆகமம், நால்வேதம், மந்திரம், ஆகுதி, வேள்வி என்று வடமொழி சம்பந்தமான அனைத்தும் புதைந்திருக்கும்போது தமிழிலிருந்து வடமொழியை அந்நியப்படுத்த நினைப்பது மிகவும் தவறாகும்...!

‘தண்ணிலவார் சடையார்தாம் தந்தஆ கமப்பொருளை
மண்ணின் மிசைத்திருமூலர் திருவாக்கால் தமிழ்வகுப்ப’

என்று கூறியதன் மூலம் இறைவன் வடமொழியில் அருளிச்செய்த ஆகமங்களின் பொருளை தமிழில் தரவே, திருமூலரைத் திருவருள் தந்தது என்று விளக்குகிறார் சேக்கிழார் பெருமான். இதை திருந்திரத்தின் வழியே பார்த்தோமேயானால்,

‘என்னை நன்றாக இறைவன் படைத்தனன்
தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே’

என்று குறிப்பிடுகின்றார். இங்கே சேக்கிழாரும் திருமூலரும் வடமொழி ஆகமங்களை தமிழ்ப்படுத்துவதற்காக சிவபெருமானே திருமூலரை அனுப்பியதாக தனது திருப்பதிகங்கள் மூலம் உறுதி செய்கின்றனர். இனி சமஸ்கிருதம் அந்நிய மொழியா? என்பதையும் தமிழ் இலக்கியங்களில்  இது எங்கெங்கு பயின்று வந்துள்ளது என்பதையும் சுருக்கமாக காண்போம்...!

முதலில் தொல்காப்பியத்தில் ஆரிய கலப்பு இல்லை என்றும் தொல்காப்பிய காலத்திற்கு பின்தான் ஆரியர் வருகை என்பதும் இங்கு இருக்கும் பெரும்பான்மை கூற்று. அதன் அடிப்படையில்,

"வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லா கும்மே"

என்ற தொல்காப்பிய சூத்திரத்தின் மூலம் தொல்காப்பியர் காலத்திலேயே வடசொல் தமிழில் பெற்றிருந்த செல்வாக்கைக் காட்டுகிறது. வடசொற்களைத் தமிழில் எடுத்தெழுதுவது பற்றியும் தொல்காப்பியர் சிந்தித்துள்ளார். இதை விளக்குகையில்,

"சிதைந்தன வரினும் இயைந்தன வரையார்"

அதாவது தமிழ் மொழி மரபுக்கேற்ப மாற்றி எழுத வேண்டும் என்றும், சிதைந்து வருவனவற்றையும் ஏற்றுக் கொள்ளலாம் என்றும் குறிப்பிடுகிறார். ஆக இங்கு தொல்காப்பியர் வடமொழி அந்நிய மொழி  என்றோ அது தமிழர்கள் பயன்படுத்தக்கூடாது என்றோ பதிவு செய்யவில்லை. ஆனால் அதற்கு பின் வந்த இலக்கியங்களில் எது ஏது நமது மொழி எது எது பிறநாட்டு மொழிகள் என்பதையும் நம் முன்னோர்கள் ஆங்காங்கே நமக்கு ஊட்டியே சென்றுள்ளனர் அதாவது,

12 ஆவது திருமுறையில் பரமனையே பாடுவோர் புராணத்தில்

"தென்றமிழும் வடகலையும்
தேசிகமும் பேசுவன
மன்றினிடை நடம்புரியும்
வள்ளலையே பொருளாக
ஒன்றியமெய் யுணர்வோடும்
உள்ளுருகிப் பாடுவார்
பன்றியுடன் புட்காணாப்
பரமனையே பாடுவார்"

அதாவது இங்கு #சேக்கிழார் பெருமான் என்ன சொல்கிறார் எனில், #தென்_தமிழ், #வடமொழி, #பிறநாட்டு மொழிகள் ஆகிய மொழிகளுள் யாதொன்றில் தமக்குப் பயிற்சியிருப்பினும் அவற்றுள், ஒன்றில் இறைவனை வணங்கலாம் என்கிறார். அதாவது அவர் இங்கு தமிழையும் வடமொழியையும் நம் நாட்டு மொழிகளாக குறிப்பிட்டிருப்பது கவனிக்கத்தக்கது. அடுத்தாக #திருவிளையாடல் புராணத்தில்,

"வடமொழியை பாணிணிக்கு வகுத்து அருளி
தொடர்புடைய தென்மொழியை உலகமெலாம்
தொழுதேத்தும் குடமுனிக்கு வலியுறுத்தார் கொல்லேற்றுப் பாகர்
கடல் வரைப்பினிதன் பெருமை யாவரே கணித்து அறிவார்’’

என்று இரு மொழிகளின் பிறப்பிடம் எது என்பதையும் தெளிவாக உணர்த்தி விட்டனர். ஆனால் மொழிப்பேதம் பார்த்து பிரிவினை பேசுபவர்களை அதாவது வடமொழியோடு தமிழ் மொழியையும் சிறப்பிக்காதவர்களை குரங்குக்கு சமமாகவும் பாடியுள்ளனர். அதாவது இங்கே வடமொழியை உயர்வாக பேசுபவர்களுக்கே இந்த சவுக்கடியை கொடுத்துள்ளார். இங்கே நாம் கவனிக்க வேண்டியது இரண்டு மொழியையும் சமமாக பாவித்துள்ளார் என்பதே.

"மந்தி போல் திரிந்து ஆரியத்தொடு செந்தமிழ் பயன் அறிகிலா
அந்தகர்க்கு எளியேன் அலேன்”

ஆக ஒவ்வொரு மலருக்கும், தனித்தனி வாசனை உண்டு. ஒவ்வொரு மனிதனுக்கும் தனிதனி இயல்புகள் உண்டு. அதே போன்று ஒவ்வொரு மொழிக்கும் அதன் சொல் அசைவிற்கு ஏற்ப தனித்தனி சக்திகள் உண்டு. இந்த சக்திகள் மனிதனால் உருவாக்கப்பட்டது அல்ல. இயற்கையின் ஆற்றலினால் மொழி தோன்றும் போதே கூடவே தோன்றுவது உண்டு....!

ஆனால் இங்கு பிரிவினை பேசித்திரியும்  கோஷ்டிகளை விட நம் முன்னோர்கள் ஒன்றும் #மூடர்கள் அல்ல எதையும் தெளிவாக சிந்தித்து செயல்படுகின்ற ஆற்றல் அவர்களுக்கு நம்மை விட சற்று அதிகமாகவே இருந்திருகிறது என்பதையும் நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். அப்படி இருந்ததனால் தான் அவர்கள் தமிழ் மொழி காதலர்களாக இருந்தாலும் கூட சமஸ்கிருதத்தின் காவலர்களாகவும் இருந்திருக்கிறார். ஆகவே தான் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடிய சுந்தரம் பிள்ளை அவர்கள்,

"வடமொழி தென்மொழியெனவே வந்த இருவிழி"

என்று வாழ்த்தி இரண்டுமே நமது மொழி என்கிறார். அதோடு திரு.வி.க  வரும் இதே கருத்தை தான் முன்மெழிகிறார்.

"அவிழ்க்கின்றவாறும் அதுகட்டுமாறும்
சிமிட்டலைப் பட்டுயிர் போகின்றவாறும்
தமிழ்ச்சொல் வடசொல் எனும் இவ்விரண்டும்
உணர்த்தும் அவனை உணரலும் ஆமே"

என்று ஆசான் #திருமூலர் இருமொழிக்கு உண்டான ஒற்றுமையை உணர்த்தி இரண்டு நம் மொழியே என்று ஒற்றுமை பேசுகிறார்....!

"மைம்மலர்க்கோதை மார்பினரெனவு மலைமகளவளொடு மருவினரெனவும்
செம்மலர்ப்பிறையுஞ் சிறையணிபுனலுஞ் சென்னிமேலுடையரெஞ்சென்னிமேலுறைவார்
தம்மலரடியொன் றடியவர்பரவத் #தமிழ்ச்சொலும்
#வடசொலுந் தாணிழற்சேர
அம்மலர்க்கொன்றை யணிந்தவெம்மடிக ளச்சிறுபாக்கம தாட்சிகொண்டாரே"

என்று #திருஞானசம்பநத்ர் இரு மொழிகளிலும் இறைவன் பாதத்தை பணிய வேண்டும் என்கிறார்....!

‘’வடமொழி தமிழ் மொழி எனும் இரு மொழியினும்
இலக்கணமொன்றே என்றே எண்ணுக’’

என்கிறார் ஈசான தேசிகர். ஆனால் எங்கேயுமே வடமொழியை தமிழுக்கு அந்நியம் என்றோ அது பிராமணர்களின் மொழி என்றோ குறிப்பிடவில்லை என்பதை அறிக. ஆக மீண்டும் சொல்கிறேன். இவைகளை எல்லாம் நமது முன்னோர்கள் அறியாதது அல்ல. நமது மன்னர்கள் மடையர்களும் அல்ல. எல்லாம் அறிந்தே, எல்லாம் தெளிந்தே ஒவ்வொரு காரியத்தையும் செய்தார்கள்.  இன்னும் சொல்லப் போனால் அவர்கள் இரண்டு மொழியையும் இரண்டு கண்களாகவே பார்த்தார்கள்.....!

இறுதியாக ஆரிய இனவாத கோட்பாட்டை கால்டுவெல்லும் மேக்ஸ் மில்லரும் ஆரம்பிப்பதற்கு முன்புவரை சமஸ்கிருதம் கைபர் கணவாய் வழியாக வந்தது என்றோ அது தமிழுக்கு விரோதி மொழி என்றோ எந்த தமிழ் அறிஞரும் பதிவு செய்யாதபோது இந்த பதிவின் பின்னூட்டத்தில் தமிழ்மொழியின் விசுவாசிகள் என்று தன்னை கூறிக்கொள்பவர்கள் கதற வேண்டாம். அதோடு மாற்றுமத அன்பர்களும் ஒதுங்கிச்செல்லுங்கள். ஏனெனில் கிறிஸ்தவத்தில் இன்று நமது கைகளில் புழங்கும் பைபிளும், இஸ்லாமின்  தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட குரானும் சமஸ்கிருதமின்றி முழுமையாக இயங்காது. அவ்வளவு ஏன் சமஸ்கிருதம் இன்றி அந்த இரு மதப்பெயர்களுமே முழுமை அடையாது. புரியவில்லை எனில் #கிறிஸ்தவம், #இஸ்லாம் இந்த இரு சொற்களிலுள்ள சமஸ்கிருத சொற்களை நீக்கிவிட்டு எழுதிப்பாருங்கள் புரியும்....!

தமிழ்நாட்டில் சிவனுக்குரிய ஸ்தலங்களின்

தமிழ்நாட்டில் சிவனுக்குரிய பெருமை மிக்க ஸ்தலங்களின்
பெருமைகள்...

ராஜ கோபுரத்தை விட மூலவருக்கு உயர்ந்த விமானம் உள்ள இடங்கள்

1,தஞ்சை – பிரகதீஸ்வரர்
2,கங்கைகொண்டசோழபுரம் – பிரகதீஸ்வரர்
3,தாராசுரம் – ஐராவதேஸ்வரர்
4,திருபுவனம் – கம்பேஸ்வரர்

சிவனுக்குரிய விஷேச ஸ்தலங்கள்.

1, திருவேள்விக்குடி – கௌதுகாபந்தன க்ஷேத்ரம்
2, திருமங்கலகுடி – பஞ்சமங்கள க்ஷேத்ரம்
3, திருவையாறு – பஞ்ச நந்தி க்ஷேத்ரம்
4, திருவிடைமருதூர் – பஞ்சலிங்க க்ஷேத்ரம்
5, திருநீலக்குடி – பஞ்சவில்வாரண்ய க்ஷேத்ரம்
6, திருவிற்கோலம் – நைமிசாரண்ய க்ஷேத்ரம்
7, திருநெல்லிக்கா – பஞ்சாட்சரபுரம்
8, காஞ்சி – சத்தியவிரத க்ஷேத்ரம்
9, திருவல்லம் – வில்வாரண்யம்
10, திருகண்டியூர் – ஆதிவில்வாரண்யம்

சிவ பூஜைக்கு சிறந்த ஸ்தலங்கள்.

1, திருக்குற்றாலம் – திருவனந்தல் பூஜை
2, இராமேஸ்வரம் – காலை சந்தி பூஜை
3, திருவானைக்கா – உச்சிகால பூஜை
4, திருவாரூர் – சாயரக்ஷை பூஜை
5, மதுரை – இராக்கால பூஜை
6, சிதம்பரம் – அர்த்தஜாம பூஜை

காசிக்கு சமமான ஸ்தலங்கள்

1, திருவெண்காடு. 2, திருவையாறு. 3, மயிலாடுதறை. 4, திருவிடைமருதூர்.
5, திருச்சாய்காடு. 6, ஸ்ரீவாஞ்சியம். 7, விருத்தாசலம். 8, மதுரை.
9, திருப்புவனம்

தருமநூல்கள் 18.

கடவுளால் வகுத்தது தருமத்தை பற்றி மட்டும் உபதேசித்தது.

1.மனு, 2.அத்தி, 3.விண்டு, 4.வாசிட்டம், 5.யமம், 6.ஆபத்தமம், 7.யாஞ்ஞ வற்கியம், 8.பராசரம், 9.அங்கீரசம், 10.உசனம், 11.காத்தியாயனம், 12.சம்பவர்த்தம், 13.வியாசம், 14.பிரகற்பதி, 15.சங்க்லிதம், 16.சாதாதபம். 17.கௌதம், 18.தக்கம்.

பாரதத்தின் முக்தி ஸ்தலங்கள்

1,காசி 2,காஞ்சி 3,மதுராபுரி 4,அரித்துவார் 5,உஜ்ஜையினி 6,அயோத்தி 7,துவாரகை.

பாரதமே பரமசிவம்.

1,திருப்பரும்பதம் – தலை உச்சி
2,திருக்கேதாரம் – நெற்றி.
3,காசி – புருவநடு
4,பிரயாகை – நெஞ்சு
5,தில்லை – இதயம்
6,திருவாரூர் – மூலம்.

முக்தி தரும் ஸ்தலங்கள்.

திருவாரூர் – பிறக்க முக்தி
காசி – இறக்க முக்தி
திருவண்ணாமலை – நினைக்க முக்தி
சிதம்பரம் – தரிசிக்க முக்தி
வேதாரண்யம் – தீர்த்தமாட முக்தி
மதுரை – கூற முக்தி
அவினாசி – கேட்க முக்தி.

ஐந்து அற்புதங்கள்.

1, ஆவுடையார் கோவில் கொடுங்கை. 2, கடாரங்கொண்டான் மதில்
3, திருவீழிமிழலை வௌவ்வால் ஒட்டிமண்டபம் 4, தஞ்சாவூர் கோபுரம் 5, திருவலஞ்சுழி பலகணி

திவசம் சிறப்பு இடம் {பிதுர்கடன் கொடுக்க சிறப்பு ஸ்தலம்.}

காசி, கயா {விஷ்னுபாதம் ஆலமரம்}
திருவெண்காடு – ஆலமரத்தடி {ருத்ரபாதம்}
பத்ரிநாத், திருக்கோகர்ணம், பவானி, திலதர்ப்பணபுரி, செதிலப்பதி, {தசரதன்,ஜடாயுக்கு இராமன் லட்சுமனன் தர்ப்பணம் செய்தது.}
இராமேஸ்வரம், துவாரகாபுரி, பூம்புகார், இடும்பாவனம், சங்குமுகேஸ்வரர்.

12 தமிழ் மாதங்களும், தெய்வங்களும்.
1, சித்திரை, ஆடி, ஐப்பசி, தை. – பிரம்மா, சித்திரை, ஐப்பசி பிறக்கும் காலம் விஷு {விஷாவகன் – பிரம்மா}
2, வைகாசி, ஆவணி, கார்த்திகை, மாசி – விஷ்ணு. பிறக்கும்நேரம் விஷ்ணுபதி புண்ணிய காலம்.
3, ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி – சிவம். பிறக்கும் நேரம் “ஷடசீதி” {ஷடாங்கன் – சிவன்}
ஆடி மாதப் பிறப்பு தட்சிணாயன – புண்ணியகாலம் – சூரியன் தெற்கு பயனிப்பது.
தை மாதப் பிறப்பு உத்தராயண – புண்ணியகாலம் – சூரியன் வடக்கு நோக்கி பயனிப்பது.

பெரிய தேர்கள் உள்ள ஸ்தலங்கள்.

திருவாரூர், திருநெல்வேலி, ஸ்ரீவில்லிபுதூர், திருவண்ணாமலை, சிதம்பரம், காஞ்சி, மதுரை.

பன்னிரு ஜோதிர்லிங்க ஸ்தலங்கள்.
1, கேதாரம் – இமயம் {கேதாரேஸ்வரர்}
2, சோமநாதம் – குஜராத் {சௌராஷ்டிரம்,சோமநாதேஸ்வரர்}
3, மகாகாளேசம் – உஜ்ஜையினி {மகா காளேஸ்வரர்}
4, விஸ்வநாதம் – காசி {விஸ்வநாதேஸ்வரர்}
5, வைத்தியநாதம் – {மகாராஷ்டிரம், வைத்தியனாதர்}
6, பீமநாதம் – {மகாராஷ்டிரம், பீமநாதேஸ்வர்.}
7, நாகேஸ்வரம் – {மகாராஷ்டிரம், தாருகாவனம், நாகேஸ்வர்}
8, ஓங்காரேஸ்வரம் – மத்தியப்பிரதேசம் {அமலேஸ்வரம், ஓங்காரேஸ்வரர்}
9, த்ரயம்பகம் – {மகாராஷ்டிரம், கௌதம்} திரயம்பகேஸ்வரர்.
10, குசுமேசம் – மகாராஷ்டிரம் குஸ்ருணேஸ்வர்.
11, மல்லிகார்ஜுனம் – {ஆந்திரம்} ஸ்ரீசைலம் – மல்லிகார்ஜுனர்.
12, இராமநாதம் – இராமேஸ்வரம் {தமிழ்நாடு}

சப்த விடங்கத் ஸ்தலங்கள்.
1, திருவாரூர் – வீதிவிடங்கர் – அஜபா நடனம்.
2, திருநள்ளாறு – நகரவிடங்கர் – உன்மத்த நடனம்.
3, நாகப்பட்டினம் – சுந்தரவிடங்கர் – வீசி நடனம்.
4, திருக்காறாயில் – ஆதிவிடங்கர் – குக்குட நடனம்.
5, திருக்கோளிலி – அவனிவிடங்கர் – பிருங்க நடனம்.
6, திருவாய்மூர் – நீல விடங்கர் – கமல நடனம்.
7, திருமறைக்காடு – புவனி விடங்கர் – ஹம்ஸபாத நடனம்.

பஞ்ச சபைத் ஸ்தலங்களும், பஞ்சாட்சர வடிவமும்.

1, திருநெல்வேலி – தாமிர சபை – ந
2, திருக்குற்றாலம் – சித்திர சபை – ம
3, திருவாலங்காடு – இரத்தின சபை – சி
4, திருத்தில்லை {சிதம்பரம்} – பொற்சபை – வ
5, மதுரை – வெள்ளிசபை – ய

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...