Monday, June 26, 2023

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன. 

(1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி கூட நீடிக்க முடியாது. 

(2) *செல்வம்* : இவ்வளவு பொருள் தான் அதற்கு ப்ராப்தம். அதற்கு மேல் எகிறி குதித்தாலும் ஒரு சல்லி 
காசு கூட சேமிக்க முடியாது. தங்காது. 

(3) *வித்யா* : 

இவ்வளவு கல்வி தான் வாய்க்கும். எவ்வளவு பணம் செலவு
செய்தாலும் மணிக்கணக்காக படித்ததாலும் பயனளிக்காது.  

(4) *கர்மா* : 

தொழில், குணம், மனைவி 
மக்கள் அமைவது. இவன் இந்த தொழில் தான் செய்வான். இன்ன
தொழில் செய்து தான் இந்த ஜீவன் 
ஜீவிக்கும் என்பது விதிக்கப்பட்டது.
வாழ்க்கையில் நாமே காண்கிறோம். பலர் அவர்கள் படித்த படிப்பிற்கும் செய்யும் தொழிலுக்கும் சிறிதளவும் சம்பந்தம் இருக்காது. நல்லவர்கள் கெட்டவர்களாகவும், அவ்வாறே கெட்டவர்கள் நல்லவர் களாக மாறுவதையும் கண்கூடாக 
பார்த்துக் கொண்டிருக்கிறோம். 

(5) *மரணம்* : 

இன்றைய தினத்தில் இந்த க்ஷணத்தில் இந்த நிலையில் 
இந்த ஜீவனுக்கு மரணம் என்று எழுதப்பட்டிருக்கிறது. அதை
யாரும் மாற்றமுடியாது. 

Sunday, June 18, 2023

ஆசிரியர்

1. ஒரு மனிதனுக்கு நீங்கள் எதையும் கற்பிக்க முடியாது, அதை அவனுக்குள் கண்டுபிடிக்க மட்டுமே உதவ முடியும். - கலிலியோ கலிலி

2. ஒரு தேசம் ஊழலில்லாமலும், அறிவாளிகளின் தேசமாகவும் இருக்க மூன்று பேரால் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.

தந்தை, தாய், ஆசிரியர்தான் அந்த மூன்று பேர். டாக்டா் ஏ.பி.ஜே  அப்துல் கலாம்

3. ஒரு ஆசிரியருக்கு ஆக்கப்பூர்வமான மனம் இருக்க வேண்டும். - டாக்டா் ஏ.பி.ஜே அப்துல் கலாம்

4. கற்பித்தல் என்பது மிகவும் உன்னதமான பணியாகும், கற்பித்தலில்  ஒருவரின் பாத்திரம், திறமை மற்றும் ஒரு தனிநபரின் எதிர்காலம் வடிவமைக்கப்படுகிறது.

மக்கள் என்னை ஒரு நல்ல ஆசிரியராக நினைத்தால், அது எனக்கு மிகப்பெரிய கவுரவமாக இருக்கும். டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம்


5. சராசரி ஆசிரியர் சிக்கலை விளக்குகிறார்; திறமையான ஆசிரியர் எளிமையை வெளிப்படுத்துகிறார். - ராபர்ட் பிரால்ட்.


6. ஆசிரியர் கற்பிப்பவர் அல்ல, யாரிடமிருந்து அவர்கள் கற்றுக்கொள்கிறாரோ அவரே ஆசிரியர். - ஏ.எம். காஷ்பிரோவ்ஸ்கி


7. ஆசிரியர்கள் கதவைத் திறக்கிறார்கள், ஆனால் நீங்கள்தான் உள்ளே நுழைய வேண்டும். - சீன பழமொழி


8. இதை நீங்கள் படிக்க முடிந்தால், ஒரு ஆசிரியருக்கு நன்றி. - அமெரிக்க பழமொழி


9. ஒருவர் கற்பிக்கும்போது, இருவர் கற்றுக்கொள்கிறார்கள். - ராபர்ட் ஹெய்ன்லைன்


10. கற்றலில் நீங்கள் கற்பிப்பீர்கள், கற்பிப்பதில் நீங்கள் கற்றுக்கொள்வீர்கள்.- பில் காலின்ஸ்


11. கல்வி என்பது ஒரு சமுதாயத்தின் ஆன்மா, அது ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்கு செல்கிறது."- ஜி.கே செஸ்டர்டன்


12. உண்மையிலேயே அற்புதமான ஆசிரியரைக் கண்டுபிடிப்பது அரிது, பிரிவது கடினம், மறக்க இயலாது.- தெரியவில்லை


13. கற்பிக்கத் துணிந்தவர் ஒருபோதும் கற்றுக்கொள்வதை நிறுத்தக்கூடாது. - ஜான் சி. டானா


14. நல்ல ஆசிரியர்களுக்கு மாணவர்களில் சிறந்தவர்களை எப்படி வெளியே கொண்டு வருவது என்பது தெரியும். - சார்லஸ் குரால்ட்


15. வீட்டுப்பாடம் தவிர, வீட்டிற்கு எடுத்துச் செல்ல உங்களுக்கு ஏதாவது கொடுக்கும் ஒரு ஆசிரியரை நான் விரும்புகிறேன்.- லில்லி டாம்லின்


16. நல்ல போதனை என்பது சரியான பதில்களைக் கொடுப்பதை விட சரியான கேள்விகளைக் கொடுப்பது. - ஜோசப் ஆல்பர்ஸ்

17. வாழ்க்கையின் வெற்றிக்கு கல்வியே முக்கியமாகும், மேலும் ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களின் வாழ்க்கையில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள். - சாலமன் ஆர்டிஸ்


18. தெரிந்தவர்கள் செய்கிறார்கள். புரிந்துகொள்பவர்கள் கற்பிக்கிறார்கள். - அரிஸ்டாட்டில்

 

19. நாளை நீங்கள் இறப்பது போல் வாழுங்கள். நீங்கள் என்றென்றும் வாழ்வது போல் கற்றுக்கொள்ளுங்கள்.  - மகாத்மா காந்தி


20 உண்மையில் ஞானமுள்ள ஆசிரியர் உங்களை தனது ஞானத்தின் வீட்டிற்குள் நுழைய விடாமல் உங்களை உங்கள் மனதின் வாசலுக்கு அழைத்துச் செல்கிறார்.- கலீல் ஜிப்ரான்


21. ஆசிரியரின் பாராட்டு கல்வி உலகைச் சுற்றச் செய்கிறது. - ஹெலன் பீட்டர்ஸ்


22. நான் யாருக்கும் எதையும் கற்பிக்க முடியாது, என்னால் அவர்களை சிந்திக்க வைக்க முடியும். - சாக்ரடீஸ்


23. வாழ்நாளில் ஒரு நல்ல ஆசிரியர் சில சமயங்களில் குற்றவாளியை திடமான குடிமகனாக மாற்றலாம். - பிலிப் வைலி


24. சிறந்த ஆசிரியர்கள் குழந்தைகளுடன் பச்சாதாபம் கொள்கிறார்கள், அவர்களை மதிக்கிறார்கள், மேலும் ஒவ்வொருவரிடமும் ஏதாவது சிறப்பு இருக்க முடியும் என்று நம்புகிறார்கள்.- ஆன் லிபர்மேன்

25. கற்பித்தல் மற்ற எல்லா தொழில்களையும் உருவாக்கும் ஒரு தொழில். - யாரோ


26. கற்பித்தல் என்பது புரிதலின் மிக உயர்ந்த வடிவம்.- அரிஸ்டாட்டில்


27. தங்களுக்கு எவ்வளவு குறைவாகத் தெரியும் என்பதை அறிந்தவர்களே நல்ல ஆசிரியர்கள். தங்களுக்கு தெரியாததை விட தங்களுக்கு அதிகம் தெரியும் என்று நினைப்பவர்கள் மோசமான ஆசிரியர்கள். - ஆர். வெர்டி


28. கல்விக்கூடம் ஒரு தோட்டம்; மாணவர்கள் செடிகள்; ஆசிரியர்கள் தோட்டக்காரர்கள். - ஜிக்ஜேக்ளர்

29. நல்ல ஆசிரியர்கள் நல்ல மாணவர்களை உருவாக்குகிறார்கள். - ஆஸ்ட்ரோகிராட்ஸ்கி எம்.வி.


30. ஒரு சிறந்த தாய் நூறு ஆசிரியர்களுக்குச் சமமாவாள்.  - ஹெர்பர்ட்


31. உங்களைச் சுற்றியுள்ள அனைவரும்  உங்கள் ஆசிரியர். - கென் கீஸ்

 

32. ஒரு ஆசிரியரின் நோக்கம் மாணவர்களை தனது சொந்த உருவத்தில் உருவாக்குவது அல்ல, மாறாக தங்கள் சொந்த உருவத்தை உருவாக்கக்கூடிய மாணவர்களை உருவாக்குவது. - யாரோ


33. மாணவர்களுக்கு சிறந்ததை எவ்வாறு கொண்டு வருவது என்பது நல்ல ஆசிரியர்களுக்குத் தெரியும்.- சார்லஸ் குரால்ட்.


34. சொல்வதை நான் மறந்துவிடுவேன். எனக்கு கற்றுக்கொடுங்கள்  நான் நினைவில் கொள்கிறேன்.

என்னை ஈடுபடுத்துங்கள் நான் கற்றுக்கொள்கிறேன். பெஞ்சமின் பிராங்க்ளின்



35.  ஒரு நல்ல ஆசிரியர் பதில்களை விட அதிகமான கேள்விகளைக் கேட்கிறார். - ஜோசப் ஆல்பர்ஸ்

 
36. எனக்கு ஒரு மீன் கொடுத்தால் நான் ஒரு நாள் சாப்பிடுவேன். மீன் பிடிக்க கற்றுக்கொடுங்கள், நான் வாழ்நாள் முழுவதும் சாப்பிடுவேன். - சீன பழமொழி

 

37. பள்ளிக்கும் வாழ்க்கைக்கும் உள்ள வித்தியாசம்? பள்ளியில், உங்களுக்கு ஒரு பாடம் கற்பிக்கப்பட்டு பின்னர் ஒரு சோதனை கொடுக்கப்படுகிறது. வாழ்க்கையில், உங்களுக்கு ஒரு பாடம் கற்பிக்கும் போது ஒரு சோதனை கொடுக்கப்பட்டுறது - டாம் போடெட்


38. சாதாரண ஆசிரியர் கூறுகிறார். நல்ல ஆசிரியர் விளக்குகிறார். உயர்ந்த ஆசிரியர் நிரூபிக்கிறார். சிறந்த ஆசிரியர் ஊக்கமளிக்கிறார். - வில்லியம் ஆர்தர் வார்டு.


39. நான் உயிரோடு இருப்பதற்கு, என் தந்தைக்குக் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால், சிறப்பாக வாழ்வதற்கு என் ஆசிரியருக்குக் கடமைப்பட்டிருக்கிறேன். - மாவீரன் அலெக்சலாண்டர்


40. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர்; போதிப்பவர் எல்லாம் ஆசிரியர் ஆகார். - கதே


41. சிறந்த ஆசிரியர்கள் இதயத்திலிருந்து கற்பிக்கிறார்கள், புத்தகத்திலிருந்து அல்ல.  - யாரோ


42. இயற்கைதான் மிகச் சிறந்த ஆசிரியர். - கார்லைஸ்


43. நல்ல ஆசிரியர் என்பவர் அறிவுத் தேடலில் மாணவனுடன் சக பயணியாகப் பயணிக்க வேண்டும் - டாக்டா் எஸ் .இராதாகிருஷ்ணன்.

44. கற்பித்தலின் மூலம் நீங்கள் கற்றுக்கொள்ள முடியும் என்ற கருத்தில் எனக்கு  நம்பிக்கை உண்டு-ஸ்டீபன் கோவே.

45. சராசரி ஆசிரியர் பாடத்தை நடத்துகிறார். சிறந்த ஆசிரியர் நடைமுறை உதாரணங்களோடு கற்பிக்கிறார். உன்னதமான ஆசிரியர் உயிரோட்டத்தை ஏற்படுத்துகிறார். - வில்லியம் ஆல்பர்ட்

46. ஆசிரியர் என்பவர் கடினமான விசயங்களை எளிதாக்கக்கூடிய ஒரு நபர் - எமர்சன்

47. அனுபவம் எல்லாவற்றுக்கும் ஆசிரியர் - ஜீலியஸ் சீசர்

48. இரண்டு வகையான ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். அதிகமாகக் கற்பிப்பவர்கள் மற்றும் கற்பிக்காதவர்கள் - சாமுவேல் பட்லர்

49.  ஆசிரியர்கள் கட்டளையிடாமல் வழிகாட்ட வேண்டும், ஆதிக்கம் செலுத்தாமல் பங்கேற்க வேண்டும். - சிபி நெப்லெட்

50. நிறைய ஆசிரியர்கள் ஒரு மாணவருக்கு என்ன தெரியாது என்று கண்டறிகிற கேள்விகளாகவே கேட்டு நேரத்தை வீணடிக்கின்றனர். உண்மையான கேள்வி கேட்கும் கலை ஒரு மாணவனுக்கு என்ன தெரியும் அல்லது என்ன தெரிந்துகொள்ள முடியும் என்பதைக் கண்டறிவதிலேயே இருக்கிறது -ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

Dr.குப்புசாமி

நெல்லை மாவட்டம் பத்தமடையில் அந்தண குலத்தில் குப்புசாமி  1887ல் பிறந்தார்.  வறுமையுற்ற குடும்பம் என்றாலும் அவர் படிப்பில் கெட்டிக்காரர், அதனால் அந்நாளைய மருத்துவபடிப்பினை தஞ்சாவூரில் படித்தார்.
அவரின் தந்தையின் மரணம் அவரை வறுமையில் தள்ளி 1915 களில் மலேய நாட்டுக்கு தள்ளிற்று.

அது மலேயாவின் ரப்பர் தோட்டம் ஆதிக்கம் செலுத்திய காலம், அந்நாட்டில் பெரும் தொழிலாளர்களை குவித்த வெள்ளையன் அவர்களுக்காக மருத்துவர்களையும் குவித்திருந்தான், ஓயா மழை கொட்டும் ரப்பர் எஸ்டேட்டுகளில் ,காடுகள் நிறைந்த அத்தேசத்தில் நோய் இயல்பானது பல விஷயங்களுக்கு தரமான மருத்துவர்கள் தேவையாய் இருந்த காலமது.

அப்பொழுதுதுதான் குப்புசாமி அங்கு பணியாற்றினார், மலேய தோட்ட தொழிலாளர்களில் இந்தியாவில் பொருளாராதார ரீதியாக ஒடுக்கபட்ட மக்கள் அதிகம்.

குப்புசாமி மலேயாவின் மிக சிறந்த மருத்துவராக மின்னினார் அவர், பெரும் பட்டமும் பதக்கமும் அவரை தேடி வந்தது, மிகபெரிய மருத்துவ கலாநிதியாக .

மலேயாவில் எஸ்டேட் கூலிதொழியான பெண்ணின் பிரசவத்தில் உதவி மிக கடினபட்டு தாயினையும் சேயினையும் இருநாட்கள் போராடி காத்தார் அந்த குப்புசாமி.

உயிர் பிழைத்த குடும்பம் அவர் காலில் விழுந்து நன்றி சொல்லிற்று, அந்த நன்றியில் தெய்வத்தை உணர்ந்தார் குப்புசாமி.

மலேய நாட்டில் ஒரு ஏழை குடும்பத்துக்கே இவ்வளவு உதவி தேவைபட்டால் இந்தியாவில் எவ்வளவு பெரும் உதவி தேவையாயிருக்கும் என எண்ணினார், விளைவு சேவையில் இறைவனை காணலாம் என்ற மனம் அவருக்கு வந்தது.

இன்னும் அவரின் சிந்தனை நீண்டது, மருத்துவம் நோயினை மட்டும் தீர்க்கின்றது ஆனால் மனம் சம்பந்தமான சிக்கலை, வாழ்வியலின் பல தீர்வுகளை அதனால் சொல்லமுடிவதில்லை.

ஆன்ம பலமே உண்மையான மருத்துவம் என்பதை அந்நொடியில் தெரிந்து கொண்டார்.

அவரின் மனம் ஆன்ம பலம் ,யோகா, தியானம் என இறைநிலையை நோக்கிய பயணத்தைத் துவக்கியது.

தன் டாக்டர் தொழிலை உதறினார், கோட்டும் ஸ்டெஸ்கோப்பும் அகன்றது காவியும் ருத்திராட்சமும் கழுத்தில் ஏறியது, ஆயினும் மனம் நிலையின்றி தவித்தது.

தன் மனதை அடக்க ரிஷிகேஷம் சென்றார் குப்புசாமி அல்லது விதி இழுத்து சென்றது,பல நாள் பட்டினி கிடந்தார், வீதியில் உறங்கினார், பிச்சைகார கோலத்தில் ஞானம் தேடினார்.

அந்த தேடலில் மகான் விஸ்வானந்த சரஸ்வதியினை சந்தித்தார், அவர் இவரை எதிர்பார்த்து இருந்தவர் போல அழைத்து தீட்சை கொடுத்து ஞானத்தை ஞானமே அடையாளம் கண்டுகொள்ளும் என்பது போல அந்த விஸ்வானந்தர் இவருக்கு சிவானந்தர் எனும் பட்டமும் கொடுத்து மன்னனிடம் சொல்லி ஒரு காணிநிலமும் கொடுத்து ஆசிரமம் அமைத்தார்

அப்படித்தான் சிவானந்தாவின் ஆஸ்ரமம் தொடங்கியது, மெல்ல மெல்ல அவரின் ஆன்மீக மருத்துவ சேவை உள்ளிட்டவை தொடர்ந்தன‌

ஒரு கட்டத்தில் 100 பணியாளர்கள் கொண்ட மருத்துவ ஆஸ்ரமம் எழுந்தது, அதில் தொழுநோயாளி முதல் எல்லா நோயாளிகளும் பராமரிக்கபட்டனர்.

ஆம் சிவானந்த சுவாமிகளே இந்தியாவில் ஏழை தொழுநோயாளிகளை மருத்துவரீதியாக அரவணைத்த மகான், தெரசா இவருக்கு பின்னால் வந்தவர்.

இந்தியாவின் சொந்த மக்களுக்கான தொழுநோய் மருத்துவமனையினை தொடங்கியது   இந்த இந்து சன்யாசிதான்.‌

ஒருநாள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட பெண்ணோருத்தி சாமியின் சீடர்களால் காப்பாற்றபட்டு அவரிடம் கொண்டுவரபட்டார்கள், அவள் தொலைதூரத்தில் இருந்து வந்தவள், அவள் சாக துணிந்த காரணம் மணமாகாமல் கர்ப்பம் தரித்தது.

சுவாமி அவளை திட்டவில்லை, கர்ப்பம் கலைக்க சொல்லவில்லை, அவளை பெற்றோரிடமும் அனுப்பவில்லை, அனுப்பினால் என்னாகும் என்பது சுவாமிக்கு புரிந்தது.

அவள் அங்கேயே தங்க வைக்கபட்டாள் குழந்தை பிறந்ததும் குழந்தை இல்லா தம்பதியிடம் அக்குழந்தையினை ஒப்படைத்துவிட்டு அப்பெண்ணின் வழியில் அவளை போக சொன்னார்.

சுவாமியின் காலில் விழுந்து இரு பெண்களும் அழுதனர், சுவாமி நிதானமாக சொன்னார்.

"ஒரு உயிரை காத்து இன்னொரு உயிரிடம் ஒப்படைக்க‌ இறைவன் என்னை பயன்படுத்தினான் அவ்வளவுதான்".

சிவானந்த சாமியின் புகழும் அவரின் ஞானமும் அது கொடுத்த போதனையும் ஏராளம், ஏகபட்ட புத்தகங்களை எழுதினார், உலகெல்லாம் அவர் மடம் கிளைகளும் திறந்தது.

இன்று சுமார் 300 கிளைகளுடன் மிகபெரிய தொண்டு நிறுவணமாக அது வளர்ந்தும் நிற்கின்றது

அந்த இளைஞன் 1962ல் ரிஷிகேஷில் விரக்தி நிலையில் இருந்தான், ஒல்லியான உருவமும் குள்ள வடிவமும் கொண்ட அவன் கண்களில் நீர்வழிய சுவாமி முன் நின்றிருந்தான்.

அவனையே உற்று நோக்கினார் சுவாமி, அந்த இளைஞன் கண்ணீர் விட்டு சொன்னான், "சுவாமி நான் ஏழை மீணவ வீட்டு மகன், நன்றாக படித்து பைலட்டாக வேண்டுமென கனவு கண்டேன், படித்தும் முடித்தேன்.

ஆனால் பைலட் தேர்வில் என்னை நிராகரித்துவிட்டார்கள், நான் அதற்கு தகுதி இல்லையாம், இனி நான் என்னாவேன் என எனக்கே தெரியவில்லை" என மனமுடைந்து நின்றான்.

புன்னகைத்த சுவாமி சொன்னார் "நீ படைக்கப்பட்டது விமான ஓட்டியாவதற்கு அல்ல. வேறு எதற்காகவோ நீ படைக்கப்பட்டிருக்கிறாய். அதை நோக்கிச் செல். காரணங்களின்றி இங்கு எதுவும் நடக்காது".

அவரிடம் ஆசீர்வாதம் வாங்கிய அந்த இளைஞன் பின் தீவிரமாக உழைத்து ஏவுகனை விஞ்ஞானியாகி பாரதத்தின் குடியரசு தலைவனுமானான்

அவர்தான் அப்துல் கலாம்.

சிவானந்தர் இந்தியாவின் மிகபெரும் யோகி, அதுவும் விஞ்ஞான கல்வி கற்றுவிட்டு அதெல்லாம் பணம் சம்பாதிக்கும் விஷயம் மட்டுமே, வாழ்க்கைக்கு உண்மையன தேவை ஆத்ம தெளிவு, ஆன்ம பலம் கொடுக்கும் ஆன்மீகம் என உணர்ந்து நின்றவர்.

சுருக்கமாக சொன்னால் தன்னை அறிந்தவர்.

எத்தனையோ லட்சம் மக்கள் அவரால் கல்வி, மருத்துவம், ஆன்மீக தெளிவு என பலன் பெற்றனர், இன்னும் பெற்று கொண்டே இருக்கின்றனர்.

ஒவ்வொருவர் வாழ்வும் அதன் நோக்கில் நல்லபடியாக செல்ல, அவர்கள் பிறந்த கடமையினை சரியாக செய்ய இடையூறுகளை நீக்கி வழிகாட்டினார் சுவாமி, இன்றும் அவரின் ஆஸ்ரமம் அதை தொடர்ந்து செய்கின்றது
அந்த நெல்லை பிறப்பு பாரதி போல தனித்துவம் மிக்கது, தொழுநோயாளிகளை தொட்டு அரவணைத்த உன்னத கரங்கள் அவருடையது.

ஆனால் தெரசாவுக்கு இருந்த விளம்பரமும் உலகளாவிய கொண்டாட்டமும் பாரத ரத்னா போன்ற விருதுகளும் ஏன் சுவாமி சிவானந்தாவுக்கு இல்லை.

அதுதான் நெல்லை பிறப்பான அந்த உத்தம சத்திய ஞானவானை ஏன் மறைத்தது?

ஆம் நெல்லையில் பாரதி தவிர ஏகபட்ட பிம்பங்கள் உண்டு, பொதுநல பித்தர்கள் உண்டு. தன் ஆஸ்தி கொடுத்து பாலம் கட்டிய சுலோச்சன முதலியார் முதல் பெரும் மருத்துவ வாழ்வினை உதறி தள்ளி தொழுநோய் ஆசிரமம் அமைத்த ஞானி சிவானந்தர் வரை பலர் உண்டு.

ஆனால் தமிழரில் யாருக்காவது இவர்களை தெரியும்?

அல்பேனியாவில் இருந்து வந்த தெரசாவினை தெரிந்த அளவு, மானிட நேயத்தில் உண்மையான பாரத மரபில் இங்கு தொழுநோயாளிகளை அரவணைத்த சுவாமி சிவானந்தா பற்றி யாருக்கும் தெரியாது.

இன்று அந்த மகான் சிவானந்தருக்கு பிறந்த நாள், அவரை வணங்கி ஆசிபெறலாம்.

இம்மாதிரி மகான்களை என்று தேசம் கொண்டாட தொடங்குமோ அப்பொழுதுதான் இத்தேசம் இன்னும் வேகமாக தன்  பொற்காலத்தை எட்டும்

Monday, June 12, 2023

ஸ்ரீ சிவ பஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்திரம்

ஸ்ரீ சிவ பஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்திரம் இந்த ஸ்லோகத்தை அவரவர் நக்ஷத்திரத்திற்கு கீழே உள்ள ஸ்லோகத்தை தினம் பாராயணம் செய்து வர சகல காரியங்களும் வெற்றி உண்டாகும்.

ஸகல பாக்யங்களையும் அளிக்கும் ஆதிசங்கரர் அருளிய
ஸ்ரீசிவபஞ்சாக்ஷர நக்ஷத்ரமாலா ஸ்தோத்திரம்

1. அஸ்வினி
ஸ்ரீமதாத்மனே குணைகஸிந்தவே நம: சிவாய 
தாமலேச தூதலோக பந்தவே நம: சிவாய
நாம சோஷிதா நமத் பவாந்தவே நம: சிவாய 
பாமரேதர ப்ரதாத பாந்தவே நம: சிவாய

2. பரணி
கால பீதவிப்ரபால பாலதே நம: சிவாய 
சூல பின்ன துஷ்ட தக்ஷபாலதே நம: சிவாய
மூல காரணீய கால காலதே நம: சிவாய 
பாலயாதுனா தயாலவாலதே நம: சிவாய

3. கிருத்திகை
இஷ்ட வஸ்து முக்யதான ஹேதவே நம: சிவாய 
துஷ்ட, தைத்யவம்ச, தூமகேதவே நம: சிவாய
ஸ்ருஷ்டி ரக்ஷணாய தர்ம ஸேதவே நம: சிவாய 
அஷ்ட மூர்த்தயே வ்ருஷேந்ர கேதவே நம: சிவாய

4. ரோஹிணி
ஆபதத்ரி பேத டங்க ஹஸ்ததே நம: சிவாய 
பாப ஹாரி திவ்ய ஸிந்து மஸ்ததே நம: சிவாய
பாப தாரிணே லஸன்ந மஸ்ததே நம: சிவாய 
சாப தோஷ கண்டன ப்ரசஸ்ததே நம: சிவாய

5. ம்ருகசீர்ஷம்
வ்யோம கேச திவ்ய ஹவ்ய ரூபதே நம: சிவாய 
ஹேம மேதி னீ தரேந்ர சாப தே நம: சிவாய
நாம மாத்ர தக்த ஸர்வ பாபதே நம: சிவாய 
காமிநைக தாந ஹ்ருத்துராபதே நம: சிவாய

6. திருவாதிரை
ப்ரம்ம மஸ்தகாவலீ நிபத்ததே நம: சிவாய 
ஜிம் ஹகேந்ர குண்டல ப்ரஸித்ததே நம: சிவாய
ப்ரம்மணே ப்ரணீத வேத பந்ததே நம: சிவாய 
ஜிம்ஹ கால தேஹ தத்த பந்ததே நம: சிவாய

7. புனர்பூசம்
காமநாசனாய சுத்த கர்மணே நம: சிவாய 
ஸாம கான ஜாயமான சர்மணேநம: சிவாய
ஹேம காந்தி சாக சக்ய வர்மணே நம: சிவாய 
ஸாம ஜாஸூராங்க லப்த சர்மணே நம: சிவாய

8. பூசம்
ஜன்ம ம்ருத்யு கோரதுக்க ஹாரிணே நம: சிவாய 
சின்மயை கரூப தேஹ தாரிணே நம: சிவாய
மன்மனோ ரதாவ பூர்த்தி காரிணே நம: சிவாய 
மன்மனோகதாய காம வைரிணே நம: சிவாய

9. ஆயில்யம்
யக்ஷராஜ பந்தவே தயாளவே நம: சிவாய 
ரக்ஷ பாணி சோபி காஞ்ச நாளவே நம: சிவாய
பக்ஷிராஜ வாஹ ஹ்ருச் சயாளவே நம: சிவாய 
அக்ஷி பால வேத பூத தாளவே நம: சிவாய

10. மகம்
தக்ஷ ஹஸ்த நிஷ்ட ஜ்õத வேதஸே நம: சிவாய 
அக்ஷராத்மனே நமத்பி டௌ ஜஸே நம சிவாய
தீஷித ப்ரகாசிதாத்ம தேஜஸே நம: சிவாய 
உக்ஷராஜ வாஹதே ஸதாம் கதே நம: சிவாய

11. பூரம்
ராஜிதாசலேந்ர ஸாநு வாஸிநே நம: சிவாய 
ராஜமான நித்ய மந்த ஹாஸினே நம: சிவாய
ராஜகோர காவ தம்ஸ பாஸினே நம: சிவாய 
ராஜராஜ மித்ரதா ப்ரகாசினே நம: சிவாய

12. உத்திரம்
தீனமான வாளி காம தேனவே நம: சிவாய 
ஸூந பாண தாஹ த்ருக் க்ருசானவே நம: சிவாய
ஸ்வாநு ராக பக்த ரத்ன ஸானவே நம: சிவாய 
தானவாந்தகார சண்ட பானவே நம: சிவாய

13. ஹஸ்தம்
ஸர்வ மங்களா குசாக்ர சாயினே நம: சிவாய 
ஸர்வ தேவதா கணாத் சாயினே நம: சிவாய
பூர்வ தேவ நாச ஸம்விதாயினே நம: சிவாய 
ஸர்வ மன் மனோஜ பங்க தாயினே நம: சிவாய

14. சித்திரை
ஸ்தோக பக்திதோபி பக்த போஷிணே நம: சிவாய 
மாகரந்த ஸாரவர்ஷ பாஸிணே நம: சிவாய
ஏகபில்வ தானதோபி தோஷிணே நம: சிவாய 
நைகஜன்ம பாப ஜால சோஷிணே நம: சிவாய

15. ஸ்வாதி
ஸர்வ ஜீவரக்ஷணைக் சீலினே நம: சிவாய 
பார்வதீ ப்ரியாய பக்த பாலினே நம: சிவாய
துர்விதக்த தைத்ய ஸைன்ய தாரிணே நம: சிவாய 
சர்வரீச தாரிணே கபாலினே நம: சிவாய

16. விசாகம்
பாஹிமாமுமா மனோக்ஞ தேஹதே நம: சிவாய 
தேஹிமே பரம் ஸிதாத்ரி தேஹதே நம: சிவாய
மோஹி தர்ஷி காமினீ ஸமுஹதே நம: சிவாய 
ஸ்வேஹித ப்ரஸன்ன காம தோஹதே நம: சிவாய

17. அனுஷம்
மங்களப் ரதாயகோ துரங்கதே நம: சிவாய 
கங்கையா தரங்கி தோத்த மாங்காதே நம: சிவாய
ஸங்கத ப்ரவிருத்த வைரி பங்கதே நம: சிவாய
அங்கஜாரயே கரே குரங்கதே நம: சிவாய

18. கேட்டை
ஈஹித க்ஷண ப்ரதாந ஹேதவே நம: சிவாய 
அக்னி பால ச்வேத உக்ஷ கேதவே நம: சிவாய
தேஹ காந்தி தூத ரௌப்ய தாதவே நம: சிவாய 
கேஹ துக்க புஜ்ஜ தூமகேதவே நம: சிவாய

19. மூலம்
திரியக்ஷ தீன ஸத்க்ருபா கடாக்ஷதே நம: சிவாய 
தக்ஷ ஸப்த தந்து நாச தக்ஷதே நம: சிவாய
ருக்ஷராஜ பானு பாவகாக்ஷதே நம: சிவாய 
ரக்ஷமாம் ப்ரஸன்ன மாத்ர ரக்ஷதே நம: சிவாய

20. பூராடம்
அந்ரி பாணயே சிவம் கராயதே நம: சிவாய 
ஸங்கடாத் விதீர்ண கிம்கராயதே நம: சிவாய
பங்க பீஷிதா பயங்கராயதே நம: சிவாய 
பங்க ஜாஸனாய சங்கராயதே நம: சிவாய

21. உத்தராடம்
கர்மபாச நாச நீலகண்டதே நம: சிவாய 
சர்ம தாய நர்ய பஸ்ம கண்டதே நம: சிவாய
நிர்ம மர்ஷி ஸேவி தோப கண்டதே நம: சிவாய 
குர்மஹே நதீர்ந மத்விகுண்டதே நம: சிவாய

22. திருவோணம்
விஷ்ட பாதிபாய நம்ர விஷ்ணவே நம: சிவாய 
சிஷ்ட விப்ர ஹ்ருத்குஹா வரிஷ்ணவே நம: சிவாய
இஷ்ட வஸ்து நித்ய துஷ்ட ஜிஷ்ணவே நம: சிவாய 
கஷ்ட நாசனாய லோக ஜிஷ்ணவே நம: சிவாய

23. அவிட்டம்
அப்ரமேய திவ்ய ஸூப்ரபாவதே நம: சிவாய 
ஸத்ப்ரபன்ன ரக்ஷண ஸ்வபாவதே நம: சிவாய
ஸ்வப்ரகாச நிஸ்துலா நுபாவதே நம: சிவாய 
விப்ர டிம்ப தர்சிதார்த்ர பாவதே நம: சிவாய

24. சதயம்
ஸேவ காயமே ம்ருட ப்ரஸாதினே நம: சிவாய 
பவ்ய லப்ய தாவக ப்ரஸீத தே நம: சிவாய
பாவ காக்ஷ தேவ பூஜ்ய பாததே நம: சிவாய 
தாவ காங்க்ரி பக்த தத்த மோத தேநம: சிவாய

25. பூரட்டாதி
புக்தி முக்தி திவ்ய தாய போகினே நம: சிவாய 
சக்தி கல்பித ப்ரபஞ்ச பாகினே நம: சிவாய
பக்த ஸங்கடாபஹர யோகினே நம: சிவாய 
யுத்த ஸன்மனஸ் ஸரோஜ யோகினே நம: சிவாய

26. உத்தரட்டாதி
அந்த காந்த காய பாப ஹாரிணே நம: சிவாய 
சம்தமாய தந்தி சர்ம தாரிணே நம: சிவாய
ஸந்த தாச்ரிவ்யதா விதாரிணே நம: சிவாய
ஜந்து ஜாத நித்ய ஸெளக்ய காரிணே நம: சிவாய

27. ரேவதி
சூலினே நமோ நம: கபாலினே நம: சிவாய
பாலினே விரிஞ்சி துண்ட மாலினே நம: சிவாய
லீலனே விசேஷ முண்ட மாலிநே நம: சிவாய
சீலினே நம ப்ரபுண்ய சாலினே நம: சிவாய

Tuesday, January 24, 2023

செல்வநாராயணர் கோவிலில் உள்ள மகுடி வாசிக்கும் சிற்பம்

கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டத்தில் உள்ள மேல்கோட்டை செல்வநாராயணர் கோவிலில் உள்ள ராயர கோபுரத்தின் கல் தூணில், ஒருவர் பாம்புக்கு மகுடி வாசிக்கும் சிற்பச்செதுக்கல் அற்புதமாக செதுக்கப்பட்டுள்ளது..!!

Sunday, January 22, 2023

முதலில் தாயார் பிறகு பெருமாள் ஏன்?

|| கோவிலில், தாயாரை தரிசித்து விட்டு, பிறகு பெருமாளை பார்க்க வேண்டும் என்று சொல்வது ஏன் ||

கோவிலில், தாயாரை தரிசித்து விட்டு, பிறகு பெருமாளை பார்க்க வேண்டும் என்று சொல்வது ஏன்? வால்மீகி ராமாயணம்.

"14 வருடங்கள் தண்டக வனத்தில் வாழ வேண்டும்" என்று கைகேயி வரமாக தசரதரிடம் கேட்டு கொண்டதால், ஸ்ரீராமபிரான் சித்ர கூடத்தில் பரதனை பார்த்து தன் பாதுகையை கொடுத்து சமாதானம் செய்து, அயோத்திக்கு திருப்பி அனுப்பிய பிறகு தண்டக வனத்தில் பிரவேசித்தார்.

அங்கு சரபங்க முனிவரை தரிசித்தார். 

ஸ்ரீராமபிரானை தரிசித்த பிறகு, சரபங்க ரிஷி தன் உடலை அக்னியில் விட்டு விட்டு, ப்ரம்ம லோகம் சென்று விட்டார்.

சரபங்கர் சொன்னபடி, சுதீக்ஷன ரிஷியைபார்க்க பல வனங்கள், மலைகள் கடந்து வந்து கொண்டிருந்தார் ஸ்ரீராமபிரான். கூடவே லக்ஷ்மணரும், சீதா தேவியும் வந்து கொண்டிருந்தனர்.

வரும் வழிகளில், பல ரிஷிகள் தவத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது சில ரிஷிகள் ஸ்ரீராமபிரானை பார்த்து, தங்களுக்கு நேரும் அபாயத்தை பற்றி விவரித்து, ராமபிரானிடம் அபயம் கேட்டனர். 

ஸ்ரீராமா ! நாங்கள் பெரும்பாலும் வானப்ரஸ்தம் ஏற்ற ப்ராம்மணர்கள். உங்களை போன்ற பாதுகாவலர் இருந்தும், இங்கு ராக்ஷஸர்களால் அனாதைகள் போல நாங்கள் குவியல் குவியலாக கொல்லப்படுகிறோம்.

ஸ்ரீராமா ! இதோ பாருங்கள்.. இங்கு குவியலாக கிடக்கும் எலும்பு குவியலை. நர மாமிசம் உண்ணும் ராக்ஷஸர்கள், தவம் செய்து கொண்டிருக்கும் ரிஷிகளை விழுங்கி துப்பிய எலும்புகள் இவை. 

ஸ்ரீராமா! பம்பா நதிக்கரையில், மந்தாகினி ஓடும் நதிக்கரையில், சித்ரகூட சமீபத்தில் வசிக்கும் அனைவரையும் கொத்து கொத்தாக கொன்று குவிக்கிறார்கள் ராக்ஷஸர்கள்.

ஸ்ரீராமா! ராக்ஷஸர்கள் செய்யும் இந்த பெரும் நாசத்தை, எங்களால் பொறுத்து கொள்ள முடியவில்லை. 

நீங்கள் அடைக்கலம் கொடுப்பதற்கு தகுதியானவர். எனவே உங்கள் பாதுகாப்பை நாடி நாங்கள் உங்களிடம் வந்துள்ளோம். இரவில் சஞ்சரிக்கும் ராக்ஷஸர்களால் நாங்கள் கொல்லப்படுகிறோம். எங்களை காப்பாற்றுங்கள்.

பராக்ரமசாலியே ! ஸ்ரீராமா ! இந்த உலகில் உங்களை போன்ற வலிமையான ரக்ஷகன் இல்லவே இல்லை. நீங்கள் எங்கள் அனைவரையும் இந்த ராக்ஷஸர்களிடமிருந்து ரக்ஷிக்க வேண்டும். 

இவ்வாறு தவ ரிஷிகளின் சொல்ல, தர்மத்தில் இருப்பவர்களை காக்கும் காகுஸ்தனான ஸ்ரீராமபிரான் கம்பீரமாக பேசலானார்.. 

ரிஷிகளான தாங்கள் இவ்வாறு என்னிடம் கேட்பது கூடாது. எனக்கு நீங்கள் ஆணை இட வேண்டும். நீங்கள் இட்ட ஆணையை செயல்படுத்தும் சேவகன் நான். நான் என்னுடைய கடமையை செய்யவே வனத்திற்கு வந்தேன்.

என் தந்தையின் கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து இந்த காட்டிற்கு வந்த நான், உங்களுக்கு தொந்தரவு செய்யும் இந்த ராக்ஷஸர்களை தடுப்பேன்.

அதிர்ஷ்டத்தால், உங்களுக்கு சேவை செய்ய, எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. உங்களுக்கு சேவை செய்வதால் என் வனவாசம் பலன் பெற்றது.

உங்களுக்கு எதிரியாக இருக்கும் அந்த ராக்ஷஸர்களை நான் ஒழிப்பேன். மஹாத்மாக்களான ரிஷிகளே! என் சகோதரனோடு நான் வெளிப்படுத்தும் வீரத்தை நீங்கள் காணப்போகிறீர்கள்.

சங்கல்பத்தில் உறுதியும், மரியாதைக்குரியவருமான துணிவுடைய ராமபிரான், தவமே செல்வமாக கொண்ட ரிஷிகளைப் பாதுகாப்பதாக உறுதியளித்தார். மேலும், சுதீக்ஷ்ண ரிஷியை நோக்கி தரிசிக்க முன்னேறினார்.

சுதீக்ஷ்ண ரிஷியை தரிசித்து, அவர் ஆசிரமத்தில் ஒரு இரவு தங்கி விட்டு, மேலும் தண்டக வனத்திற்குள் சஞ்சரிக்கலானார்.

குற்றங்களே கண்ணுக்கு தெரியாத, கருணையே உருவான சீதாதேவி... ராமபிரானிடம் சொல்கிறாள்...

ஓருவனுக்கு திருப்தியே இல்லாத போது, மூன்று வகையான தீமைகள் பிறக்கின்றன. 

திருப்தியே இல்லாதவன், பொய் பேச துணிவான். 

திருப்தியே இல்லாதவன், பர தாரத்தை கூட அபகரிக்க நினைப்பான்.

திருப்தியே இல்லாதவன், தன்னிடம் பகை காட்டாதவனிடம் கூட வலிய சென்று பகையை காட்டுவான். 

பொய் சொல்வதை காட்டிலும், மற்ற இரண்டும் மிகவும் கொடியது.

ராகவா! நீங்கள் அன்றும் இன்றும் என்றுமே சத்தியத்தை மீறுபவர் இல்லை. உங்களிடம் அஸத்தியம் கிடையவே கிடையாது. 

ராகவா! அதே போல, பிற தாரத்தின் மேல் ஆசை கொள்வதில்லை.

ராகவா! பிறர் தாரத்தை அடையும் ஆசை உங்களுக்கு முன்பும் இருந்தது இல்லை. இப்பொழுதும் இல்லை. உங்கள் மனதில் இந்த எண்ணமே இல்லை.

ராகவா! நீங்கள் எப்பொழுதுமே உங்கள் பத்னிக்கு துரோகம் செய்யாதவராக இருக்கிறீர்கள். நீங்கள் தர்மத்தை அறிந்தவர், சத்தியத்தை மீறாதவர், தகப்பனார் ஆணையை மீறாதவர்.

ராகவா! சத்யசந்தரே! போற்றுதலுக்கு உரியவரே! லக்ஷ்மணனுக்கு சகோதரரே! உங்களிடம் எப்பொழுதும் தர்மமும், சத்தியமும் குடி கொண்டு இருக்கிறது.

ராகவா! புலனடக்கம் உள்ளவர்களுக்கு மட்டுமே இது போன்ற நற்குணங்கள் காணப்படும். நீங்கள் புலனடக்கம் உள்ளவர் என்பதை நான் அறிவேன்.

ராகவா! உங்களிடம் பொய்யும் இல்லை, பெண்ணாசையும் இல்லை. ஆனால் 'உங்களிடம் நேரிடையாக பகை இல்லாதவர்களை தாக்கும்' மூன்றாவது குறை தெரிகிறதே!! 

ராகவா ! தண்டக வனத்தில் வசிக்கும் ரிஷிகளைப் பாதுகாப்பதற்காக, 'ராக்ஷஸைக் கொல்வேன்' என்று வனவாசிகளுக்கு வாக்குறுதி அளித்து விட்டீர்களே!

ராகவா ! நீங்கள் தண்டக வனத்தில் ராக்ஷஸைக் கொல்ல விரும்புகிறீர்கள் என்பது மிகவும் தெளிவாகத் தெரிகிறது, இதன் காரணமாக தான், நீங்கள் உங்கள் சகோதரருடன் வில் மற்றும் அம்புகளுடன் தண்டக வனத்தில் நுழையத் தொடங்கியுள்ளீர்கள்.

ராகவா! இந்த காரணத்தால் நான் பெரிதும் கவலை கொள்கிறேன் 'உங்கள் புகழுக்கு எந்த குறையும் ஏற்பட கூடாதே!' என்று கவலை கொள்கிறேன், என்றாள் சீதாதேவி.

பரமாத்மா தர்மத்தை காப்பவர்.

தர்மம் செய்பவர்களை காக்க, அவர்களை தொந்தரவு செய்பவர்களை, அதர்மம் செய்பவர்களை தண்டித்து விடுவார்.

தாயாருக்கு தாய் பாசமே மேலோங்கி இருக்கும். தன் பிள்ளைகளில் ஒரு பிள்ளை அதர்மமே செய்தாலும் பரிந்து பேசும் குணம் உடையவள்.

ராமபிரான், ரிஷிகளை அநியாயமாக கொன்று குவித்ததை பார்த்ததும், 'ராக்ஷஸர்களுக்கு தண்டனை தர வேண்டும்' என்று வாக்கு கொடுத்தார்.

ராக்ஷஸர்கள் கொன்று குவித்து எலும்பு குவியலை நேரில் பார்த்தும், 'ராக்ஷஸர்களை தண்டிக்க வேண்டுமா? அவர்களை திருத்தலாமே என்று நினைத்தாள் சீதாதேவி..

இந்த குணம் இந்த இடத்தில் மட்டுமல்ல, அசோகவனத்திலும் காணலாம்.

சீதாதேவியை பார்த்து, "உன் கண்ணை பிடுங்கட்டுமா? நர மாமிசமாக உன்னை வெட்டி சாப்பிட போகிறேன்" என்று 10 மாதங்கள் ராக்ஷஸிகள் சூழ்ந்து கொண்டு சித்ரவதை செய்தனர்.

போரில் ராவணன் கொல்லப்பட்ட பின், ஹனுமான் சீதாதேவியை அழைக்க வந்த போது, "உங்களை கொடுமையான சொற்களால் இத்தனை மாதங்கள் மிரட்டிய இந்த ராக்ஷஸிகளை துண்டு துண்டாக வெட்டட்டுமா? இவர்கள் கண்களை பிடுங்கி ஏறியட்டுமா?" என்று கேட்க, அப்பொழுதும் சீதாதேவி தன்னை சித்ரவதை செய்த ராக்ஷஸிகளுக்கு பரிந்து பேசி ஹனுமானை சமாதானம் செய்து விட்டாள்.

தர்மத்தை மீறி நடப்பவர்களை கண்டால், பெருமாளுக்கு பிடிக்காது. 

தகப்பன் நிலை, பெருமாளுக்கு.

இவன் நல்ல பிள்ளையாக இல்லையே! தர்மம் சொன்னாலும் கேட்காமல், அதர்மம் செய்கிறானே ' என்று கோபப்படுவார்.

தாயாரோ, தனக்கே துரோகம் செய்தாலும், அதர்மமே செய்தாலும், "சொல்லி திருத்துங்கள்… தண்டிக்காதீர்கள்" என்று பரிந்து பேசுவாள்.

குற்றம் வெளிப்படையாக செய்தாலும், குற்றத்தை பார்க்காமல், சிபாரிசு செய்பவளாக தாயார் இருக்கிறாள்.

மஹாலக்ஷ்மியே சீதாதேவியாக அவதரித்து இருப்பதால், இந்த ஆச்சர்யமான குணம் வெளிப்பட்டது.

'எலும்பு குவியலாக ரிஷிகளை கொன்று குவித்த, ராக்ஷஸர்களை கொல்ல கூடாது' என்பதற்காக 'தன்னிடமே ஒரு குற்றம் இருப்பதாக சொல்லும்' தாயுள்ளம் கொண்ட சீதாதேவியை கண்டு மந்தாஹாசம் செய்தார் ராமபிரான்.

தாயாரின் குணம் இது என்று அறிந்த ராமபிரான், சீதாதேவியிடம், "தர்மத்தை காப்பது என் கடமை. நானாக ராக்ஷஸர்களை அனாவசியமாக கொல்ல நினைக்கவில்லை. 

ரிஷிகள் என்னிடம் வந்து காப்பாற்றுமாறு கேட்டார்கள். அவர்களை காக்கும் பொறுப்பு இருப்பதால், அவ்வாறு வாக்கு கொடுத்தேன். 

நீ எனக்கு எதுவும் ஆக கூடாதே! என்ற அக்கரையில் தான் இப்படி பேசினாய் என்று அறிவேன். 

வாக்கு கொடுத்து விட்டால், என்னால் மீறவே முடியாது" என்று சாமர்த்தியமாக பேசி, மந்தஹாசத்துடன் சீதாதேவி, லக்ஷ்மணருடன் மேலும் வனத்திற்குள் நடக்கலானார்.

"கோவிலில், முதலில் தாயாரை தரிசித்து விட்டு, பிறகு பெருமாளை பார்க்க வேண்டும் என்று சொல்வது ஏன்?" என்பதற்கு இதுவே காரணம்.

நேரிடையாக பெருமாள் சந்நிதிக்குள் நாம் சென்றால், தகப்பனார் போல இருக்கும் பெருமாள், உடனேயே 'இந்த பிள்ளையின் நல்ல குணங்கள் என்ன? கெட்ட குணங்கள் என்ன? நல்ல செயல்கள் என்ன? கெட்ட செயல்கள் என்ன ' என்று கவனித்து விடுவார்.

நாமோ பெரும்பாலும் அதர்மம் செய்பவர்களே!

பெருமாள் பெருமைப்படும் அளவுக்கு நம் செயல்கள் இல்லை.

நம்மை பார்த்தவுடனேயே, 

'இப்படி அதர்மம் செய்கிறானே! இவனை திருத்த, தண்டனை கொடுத்தால் என்ன?' என்று நினைப்பார்.

நாம் முதலில் தாயாரை பார்த்து விட்டு, பிறகு பெருமாளை பார்க்க சென்றால், நாம் செல்வதற்கு முன்பேயே, 'நம் குழந்தை வந்து இருக்கிறான். அவனுக்கு அணுக்ரஹம் மட்டுமே செய்யுங்கள்' என்று நமக்காக சிபாரிசு செய்து விடுவாள் தாயார்.

தாயாரை பார்த்து விட்டு, வரும் நம்மை, 'தவறு தெரிந்தாலும் எதுவும் சொல்லாமல், நாம் கேட்பதை எல்லாம் கிடைக்க செய்து' அணுகிரஹம் செய்து விடுவார் பெருமாள்.

சீதாதேவியின் பெருமை மகத்தானது... 

திருப்பதியில் பெருமாள் நெஞ்சிலேயே தாயார் இருப்பதால், தாயாருக்கு திருமலையில் தனி சந்நிதி இல்லை. 

நாம் திருமலையப்பனை பார்க்கும் போது, பெருமாள் நம்மை பார்க்கும் போது, தாயாரும் அவர் நெஞ்சிலிருந்து பார்த்து விடுகிறாள்.

பெருமாள் நெஞ்சிலேயே தாயார் இருப்பதால், திருப்பதியில் மட்டும் பெருமாள் 'யார் வந்தாலும் குற்றம் பார்க்காமல் அணுகிரஹம் மட்டுமே செய்கிறார்'.
 
ஸ்ரீ மஹாலக்ஷ்மி அருளாலே இன்றைய நாளும் திரு நாளாகட்டும் !

ஸர்வம் கிருஷ்ணார்பணமஸ்து.

உமாமகேஸ்வரி ஹலபேடு

சிவ_பெருமானின் கையில் உள்ள ருத்ராட்ச மாலை, அவரும் உமாமகேஸ்வரி அணிந்திருக்கும் அணிகலன்கள், அதிலும் உமாமகேஸ்வரியின் மடக்கி வைத்திருக்கும் காலில் உள்ள கொலுசின் நிலைப்பாடு என்று பார்த்துப் பார்த்து, பொற்கொல்லர்களைப் போல் ரசித்து ரசித்து செதுக்கியிருக்கிறார்கள் நம் சிற்பிகள்..!!
அமைவிடம்: ஹலபேடு, ஹாசன் மாவட்டம், கர்நாடக மாநிலம்.

கிராதன்

சிறிதளவும் ஈவு இரக்கமில்லாமல் கொலைத் தொழில் செய்யும் வேடுவனை கிராதகன் என்பர் என்று பொருள் கூறுவர். ஆனால் இச்சிலையைக் கிராதகன் எனக் குறிப்பிடுவது தவறு. "கிராதன்" என்பதுவே சரி.


கிராதன் தலைமுடியில் சூரிய சந்திரர் உள்ளனர். நெற்றிப் பட்டையில் சிறிய சிவலிங்கங்கள் வரிசையாக உள்ளன. நெற்றியில் நீரு இல்லை. நெற்றிக் கண் உள்ளது. மீசை உள்ளது. காது வளர்க்கப்பட்டு அதில் குண்டலங்கள் தொங்குகின்றன. காளிக்கு உள்ளது போல் கோரைப் பற்கள் கடவாய்ப் பகுதியில் உள்ளன. உயிர்ப்பலி ஏற்றல், மாமிசம் உண்ணுதல் முதலான தெய்வங்களுக்கே இவ்வாறான கோரைப் பற்கள் இருக்கும். கழுத்தில் ஒற்றை உத்திராட்சம், இடது கையில் கடகம் அணிந்து கேடயம் ஏந்தியுள்ளார். வலதுகை மணிக்கட்டுக்குக் கீழே பட்டி, கொலை வாள், மார்பில் மணிமாலைகளும் பூணூலும் உள்ளன. இடுப்புக்குக் கீழே முழங்காலுக்கு மேலே கபால மாலை.
இடுப்பில் பூதம் பதித்த இடைவார் (ஒட்டியாணம்). பெருமாளுக்கே இதுபோன்ற பூதம் உள்ள இடைவார் இருக்கும். இடது கால் தரையில் ஊன்றியிருக்க, வலதுகாலால் முயலகனை த்தலையில் மிதித்துக் கொலைவாளால் நெஞ்சுக்கூட்டுக்குக் கீழே குத்திச் சாய்த்துள்ள நிலை. 

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயில்

சகல சௌபாக்ய அஷ்டகம்

1..மங்கள மாலினி மன்மத ரூபிணி மஞ்சுள பாஷிணி மதிவதனீ சங்கடம் நீங்கிடச் சடுதியில் வந்து நீ சகல சௌபாக்கியம் தந்தருள்வாய் பங்கயன் மாலொடு பரமனும் பணிந்திடும் பதுமபதங்கொளும் பகவதியே ஐயஜய மங்கள கவுரி மகேஸ்வரி திரிபுர சுந்தரி காமாக்ஷி 
2..கஞ்சியில் மிஞ்சிய கருணையுடன் திகழ் கற்பக மென்றொளிர் சிற்பரையே தஞ்சமென்றுன்சரண் சாருமெனக்கு நீ சகல சௌபாக்கியம் தந்தருள்வாய் அஞ்சிய நெஞ்சுடனடிகள் பணிந்திடும் அன்பருக்கபயமளிப்பவனே ஜயஜய மங்கள கவுரிம கேஸ்வரி திரிபுர சுந்தரி காமாக்ஷி. 

3..பூமகள் நாமகள் பூவடி போற்றிடப் பொலிவுடன் கொலுகொளும் பூரணியே தாமத மின்றியென் சஞ்சலம் தவிர்த்து நீ சகல சௌபாக்கியம் தந்தருள்வாய் கோமள முகமதிற் குறு நகை கொஞ்சிடக் குங்குமமும் திகழ் கோமகளே ஜய ஜய மங்கள கவுரிமகேஸ்வரி திரிபுர சுந்தரி காமாக்ஷி. 

4..பங்கய னுன்பதத் தூளிக ளால் பல அண்டமும் நன்கு படைத்தனனே சங்குடை மாயவன் தன் தலை ஆயிரம் கொண்டவை சீர்படத் தாங்கினனே சங்கரன் இறுதியில் சாம்பலுமாக்கியே தன் நுதலொளிபெற தரித்தனனே ஜயஜய மங்கள கவுரிம கேஸ்வரி திரிபுர சுந்தரி காமாக்ஷி.

5..கற்பகவல்லியும் கஞ்சிகாமாக்ஷியும் கயற்கண் மீனாக்ஷியுமானவளே சற்கதி கூடிட சஞ்சலமோடிட சகலசௌபாக்கியம் தந்தருள்வாய் பொற்பதம் போற்றிடும் புண்ணியர் கவலைகள் போக்கியருள்புரி பூரணியே ஜயஜய மங்கள கவுரிமகேஸ்வரி திரிபுர
சுந்தரி காமாக்ஷி. 

6..ஆதியும் அந்தமும் அற்ற சுதந்தரி அகிலமும் தானென ஆனவளே பாத சரோருகம் பணியுமெனக்கு நீ பரிந்து சௌபாக்கியம் பல்கிடுவாய் வேதமெலாம்புகழ் மீன்விழியாள் பசும் பொன்னென மின்னிய மேனியளே ஐயஜய மங்கள கவுரிமகேஸ்வரி திரிபுர சுந்தரி காமாக்ஷி. 

7..நாதமும் பிந்துவும் நாடுமெய் ஞானமும் நானென நன்குமொருந்தவளே வேதனை நீங்கிட வெம்மிடர் தீர்ந்திட விரைவில் சௌபாக்கியம் தந்தருள்வா போதமெலாம்தரும் புண்ணியனே பல போகமு மிந்தருள் பூரணியே ஜயஜய மங்கள கவுரிய கேஸ்வரி திரிபுர சுந்தரி காமாக்ஷி. 

8.ஜயஜய மங்கள சண்டிகையே ஜய ஜய ஜய சாமுண்டேஸ்வரியே ஜயஜய ஜய சௌபாக்கிய சுந்தரி ஜயமகிஷாஸுரமர்த்தனியே ஜய ஜய ஜயலலிதாம்பிகையே ஐய ஐயபுவனேஸ்வரி பைரவியே ஜய ஜய மங்கள கவுரிமகேஸ்வரி திரிபுர சுந்தரி காமாக்ஷி . 

அம்பிகையின் திருவடிகளில் சரணம்.


அபிராமி அந்தாதி பலன்கள்

அபிராமி அந்தாதி 100 பாடல்களுக்கும் ஒவ்வொரு பலன் சொல்லப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:- 

1. ஞானமும் நல் வித்தையும் பெறுவார்கள்.
2. பிரிந்தவர் ஒன்று சேருவார்கள்.
3. குடும்பக் கவலையிலிருந்து விடுபடுவார்கள்.
4. உயர்பதவிகளை அடையலாம். 
5. மனக்கவலை தீரும்.
6. மந்திர சித்தி பெறலாம்.
7. மலை யென வருந்துன்பம் பனியென நீங்கும்.
8. பற்றுகள் நீங்கி பக்தி பெருகும்.
9. அனைத்தும் கிடைக்கும்.
10. மோட்ச சாதனம் பெறலாம்.
11.இல்வாழ்க்கையில் இன்பம் பெறுவார்கள்.
12. தியானத்தில் நிலை பெறுவார்கள்.                  
13. வைராக்கிய நிலை அடைவார்கள்.
14. தலைமை பெறுவார்கள்.
15.பெருஞ்செல்வமும் பேரின்பமும் பெறுவார்கள்.
16. முக்காலமும் உணரும் திறன் உண்டாகும்.
17. கன்னிகைக்கு நல்ல வரன் அமையலாம்.
18. மரணபயம் நீங்கும்.
19. பேரின்ப நிலையை அடையலாம்.
20. வீடு வாசல் முதலிய செல்வங்கள் உண்டாகும்.
21. அம்பிகையை வழிபடாமல் இருந்த பாவம் நீங்கும்.
22. இனிப்பிறவா நெறி அடையலாம்.                  
23. எப்போதும் மகிழ்சியாய் இருக்கும்.
24. நோய்கள் விலகும்.
25. நினைத்த காரியம் நிறைவேறும். 26. செல்வாக்கும் சொல்வாக்கும் பெருகும்.
27. மனநோய் அகலும்.
28. இம்மை மறுமை இன்பங்கள் அடையலாம்.
29. எல்லா சித்திகளும் அடையலாம்.
30. விபத்து ஏற்படாமல் இருக்கும்.
31. மறுமையில் இன்பம் உண்டாகும்.
32. துர் மரணம் வராமலிருக்கும். 33. இறக்கும் நிலையிலும் அம்பிகை நினைவோடு இருக்கும்.
34. சிறந்த நன்செய் நிலங்கள் கிடைக்கும்.                     
35. திருமணம் நிறைவேறும்.
36. பழைய வினைகள் வலிமை அழியும்.
37. நவமணிகளைப் பெறுவார்கள்.                    
38. வேண்டியதை வேண்டியவாறு அடைவார்கள்.                          
39. கருவிகளைக் கையாளும் வலிமை பெறலாம்.                                
40. பூர்வ புண்ணியம் பலன்தரும்.
41. நல்லடியார் நட்புப்பெறும்.
42. உலகினை வசப்படுத்தும்.
43. தீமைகள் ஒழியும்.
44. பிரிவுணர்ச்சி அகலும்.
45. உலகோர் பழியிலிருந்து விடுபடுவார்கள்.
46.நல்நடத்தையோடு வாழ்வார்கள்.
47. யோகநிலை அடைவார்கள். 48. உடல்பற்று நீங்கும்.
49. மரணத்துன்பம் இல்லா திருக்கும்.
50. அம்பிகையை நேரில் காண முடியும்.                        
51. மோகம் நீங்கும்.
52. பெருஞ் செல்வம் அடைவார்கள்.
53. பொய்யுணர்வு நீங்கும்.
54. கடன்தீரும். 
55. மோன நிலை கிடைக்கும்.
56. அனைவரையும் வசப்படுத்தலாம்.
57. வறுமை ஒழியும்.
58. மன அமைதி பெறலாம். 59. பிள்ளைகள் நல்லவர்களாக வளர்வார்கள்.                                          
60. மெய்யுணர்வு பெறலாம்.
61. மாயையை வெல்லலாம்.
62. எத்தகைய அச்சமும் வெல்லலாம்.
63. அறிவுத் தெளிவோடு இருக்கலாம்.
64. பக்தி பெருகும். 65. ஆண்மகப்பேறு அடையலாம்.
66. கவிஞராகலாம்.                         
67. பகை வர்கள் அழிவார்கள்.
68. நில வீடு போன்ற செல்வங்கள் பெருகும்.
69. சகல சவுபாக் கியங்களும் அடைவார்கள்.
70. நுண்கலைகளில் வல்லமை பெறலாம்.
71. மனக்குறைகள் தீரும்.
72. பிறவிப்பிணி தீரும். 73. குழந்தைப்பேறு உண்டாகும்.
74. தொழிலில் மேன்மை அடையலாம்.
75. விதியை வெல்வார்கள்.
76. தனக்கு உரிமையானதைப் பெறுவார்கள்.
77. பகை அச்சம் நீங்கும்.
78. சகல செல்வங்களையும் அடைவார்கள்.
79. அபிராமி அருள்பெறுவார்கள். 
80. பெற்ற மகிழ்ச்சி நிலைக்கும். 81. நன்னடத்தை உண்டாகும்.
82. மன ஒருமைப்பாடு அடையலாம்.
83. ஏவலர் பலர் உண்டாகும். 84. சங்கடங்கள் தீரும்.
85. துன்பங்கள் நீங்கும்.
86. ஆயுத பயம் நீங்கும்.
87. செயற்கரிய செய்து புகழ்பெறுவார்கள்.
88. எப்போதும் அம்பிகை அருள்பெறலாம்.
89. யோக சித்தி பெறலாம்.
90. கணவன் மனைவி கருத்து வேற்றுமை நீங்கும்.
91. அரசாங்கச் செயலில் வெற்றி பெறுவார்கள்.
92. மனப்பக்குவம் உண்டாகும்.
93. உள்ளத்தில் ஒளியுண்டாகும்.
94. மனநிலை தூய்மையாக இருக்கும்.
95. மன உறுதி பெறும்.
96. எங்கு பெருமை பெறலாம். 97. புகழும் அறமும் வளரும்.
98. வஞ்சகர் செயல்களி லிருந்து பாதுகாப்பு பெறலாம்.
99. அருள் உணர்வு வளரும்.
100. அம்பிகையை மனத்தில் காண முடியும்..!!

திருக்கடையூ அபிராமி பட்டர்

ஒரு தை அமாவாசை தினத்தன்று தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னர் பூம்புகார் சங்கமுகத்தில் நீராடிவிட்டு, திருக்கடையூர் ஆலயம் வந்தார். கோயிலில் இருந்த அனைவரும் சரபோஜி மன்னனுக்கு மரியாதை செலுத்தினர். அபிராமி சன்னிதியில் அமர்ந்து அன்னையின் வடிவழகில் ஆழ்ந்திருந்தார், அபிராமி பட்டர். 

மன்னர் அவரின் நிலையை அறிய அவரிடம், "இன்று என்ன திதி..??" என கேட்டார். உலக சிந்தனை சிறிதும் இல்லாத அபிராமி பட்டர், தன் மனதில் அபிராமியின் முழுமதி திருமுகம் தெரிய "பவுர்ணமி" என்று பதிலளித்தார். ஆனால், அன்றோ அமாவாசை. கோபமுற்ற மன்னன், "இன்று பவுர்ணமி நிலவை காட்ட முடியுமா..??" என்று கேட்க, அதற்கு பட்டர் "முடியும்..!!" என்றார். இதனால் மேலும் கோபம் கொண்ட மன்னன், "இன்று இரவு நிலவு வானில் உதிக்காவிட்டால் உமக்கு சிரச்சேதம்தான்..!!" என்று கூறி சென்றுவிட்டார்.
சூரியன் மறைந்தது, அமாவாசை ஆதலால் வானில் நிலவும் இல்லை. உடனே அபிராமி பட்டர் கோவிலுக்குள் ஒரு குழி வெட்டி, அதில் தீ மூட்டினார். அதன்மேல் ஒரு விட்டத்தில் இருந்து 100 ஆரம் கொண்ட ஓர் உறியை கட்டி தொங்கவிட்டு அதன்மேல் ஏறி நின்று அபிராமி அன்னையை வேண்டி துதித்தார். "இன்று நிலவு வானில் வராவிடில் உயிர் துறப்பேன்..!!" என்று சபதம் செய்தார்.

பின்பு,
‘‘உதிக்கின்ற செங்கதிர்’’ எனத்தொடங்கும் ‘‘அபிராமி அந்தாதி’’ பாடத்தொடங்கினார். ஒவ்வொரு பாடல் முடியும் போதும் உறியின் ஒவ்வொரு கயிற்றை அறுத்து கொண்டே வந்தார். அப்போது 79–வது பாடலாக ‘‘விழிக்கே அருளுண்டு’’ எனத்தொடங்கும் பாடலை பாடி முடித்தார். உடனே அபிராமி பட்டருக்கு காட்சி கொடுத்த அன்னை அபிராமி, தனது தாடங்கம் (தோடு) ஒன்றை கழற்றி வானில் வீச, அது பல கோடி நிலவின் ஒளியை வெளிச்சமிட்டது. அமாவாசை அன்று வானில் நிலவு வந்தது.

‘‘தொடங்கிய அந்தாதியை தொடர்ந்து பாடுக..!!’’ என அபிராமி அன்னை பட்டரிடம் கூற, பட்டரும் ‘‘ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை’’ என தொடர்ந்து 100 பாடல்கள் வரை பாடி அபிராமி அந்தாதியை நிறைவு செய்தார். மன்னரும், மக்களும் பட்டரை பணிந்தனர். பட்டருக்கு மன்னன் நிலபுலன்கள் பல அளித்தான். அதற்கான உரிமை செப்பு பட்டயம் பட்டர் சந்ததியினரிடம் இன்றும் இருக்கிறது.

ஒவ்வொரு தை அமாவாசை அன்று திருக்கடையூரில் அபிராமி பட்டர் விழா நடக்கும். அன்றைய தினம் அபிராமி, தன் தோட்டினை ஆகாயத்தில் வீசி பவுர்ணமி உண்டாக்கிய நிகழ்ச்சியை பெருவிழாவாக நடத்துகிறார்கள்.


பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...