Showing posts with label மந்திரங்கள். Show all posts
Showing posts with label மந்திரங்கள். Show all posts

Monday, August 24, 2020

வராஹி மூல மந்திரம்:

வராஹி அம்மன் வழிபாட்டை நம் வீட்டிலேயே செய்ய முடியும். இதற்காக நிரந்தரமாக ஒரு இடத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள் அது உங்கள் பூஜை அறையாக இருந்தாலும் சரி. இந்த வழிபாட்டை நாம் எந்த இடத்தில் முதலில் செய்கிறோமோ, அதே இடத்தில்தான் மற்ற எல்லா நாட்களிலும் செய்ய வேண்டும். வழிபாட்டில் அன்னையின் படம் மற்றும் விளக்கில் ஜோதி ஏற்றி வைத்து இருக்க வேண்டும். அதே போல் நாம் வடக்கு அல்லது மேற்க்கை நோக்கி அமர வேண்டும்.

வழிபாட்டிற்கு முன்பு நம் குளிக்க வேண்டும். இதில் துளசி மற்றும் வில்வ இலைகளை ஒரு கைப்பிடி அளவு போட்டு குளிப்பது நல்லது. வாராஹி வழிபாட்டிற்கு தனி பூஜை அறை இருந்தால் சேமமாக இருக்கும். அதே போல் அன்னையின் படத்திற்கு அருகில் விநாயகர் படத்தை வைப்பது நல்லது. வடக்கு மற்றும் கிழக்கு திசையை நோக்கி இப்படம் இருக்க வேண்டும்.

பூஜையறையில் பன்னீரில் மஞ்சளை மற்றும் ஏலக்காயை கலந்த நீரை வைக்க வேண்டும். இதை வீடு முழுவதும் தெளிப்பது நல்லது.


மஹா வராஹி மூல மந்திரம்:

ஓம் க்லீம் வராஹ முகி ஹ்ரீம் ஸித்தி ஸ்வரூபிணி
ஸ்ரீம் தன வசங்கரி தனம் வர்ஷய ஸ்வாகா



Wednesday, August 19, 2020

வேல் மாறல்

வள்ளிமலை ஸ்ரீ சச்சிதானந்த சுவாமிகள் தொகுத்தருளிய 'வேல் மாறல்'

... வேலும் மயிலும் துணை ...

திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே.

( ... இந்த அடியை முதலில் 12 முறை ஓதவும் ... )

( ... பின்வரும் ஒவ்வோரடியின் முடிவிலும் "திரு" என்ற
இடத்தில் மேற்கண்ட முழு அடியையும் கூறவேண்டும் ... )

1. பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை
கறுத்தகுழல் சிவத்தஇதழ் மறச்சிறுமி
விழிக்குநிகர் ஆகும் ... ... ... ( ... திரு ... )

2. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே ... ... ... ( ... திரு ... )

3. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை
அடுத்தபகை அறுத்(து)எறிய
உறுக்கிஎழும் அறத்தைநிலை காணும் ... ... ... ( ... திரு ... )

4. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி
தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை
கழற்குநிகர் ஆகும் ... ... ... ( ... திரு ... )

5. பனைக்கைமுக படக்கரட மதத்தவள
கஜக்கடவுள் பதத்(து)இடு(ம்)நி
களத்துமுளை தெறிக்கவரம் ஆகும் ... ... ... ( ... திரு ... )

6. சினத்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
குறைத்தலைகள் சிரித்(து)எயிறு
கடித்துவிழி விழித்(து)அலற மோதும் ... ... ... ( ... திரு ... )

7. துதிக்கும்அடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கஇடர்
நினைக்கின்அவர் குலத்தைமுதல் அறக்களையும்
எனக்(கு)ஓர் துணை ஆகும் ... ... ... ( ... திரு ... )

8. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின்உண
வழைப்ப(து) என மலர்க்கமல கரத்தின்முனை
விதிர்க்கவளை(வு) ஆகும் ... ... ... ( ... திரு ... )

9. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு
கவிப்புலவன் இசைக்(கு)உருகி
வரைக்குகையை இடித்துவழி காணும் ... ... ... ( ... திரு ... )

10. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை
முளைத்த(து)என முகட்டின்இடை
பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும் ... ... ... ( ... திரு ... )

11. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி
ஒளிப்பஅலை அடக்குதழல் ஒளிப்பஒளிர்
ஒளிப்பிரபை வீசும் ... ... ... ( ... திரு ... )

12. தனித்துவழி நடக்கும்என(து) இடத்தும்ஒரு
வலத்தும்இரு புறத்தும்அரு(கு)
அடுத்(து)இரவு பகற்றுணைய(து) ஆகும் ... ... ... ( ... திரு ... )

13. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல்
ஒழித்(து)அவுணர் உரத்(து)உதிர
நிணத்தசைகள் புசிக்கஅருள் நேரும் ... ... ... ( ... திரு ... )

14. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது
குடித்(து)உடையும் உடைப்(பு) அடைய
அடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும் ... ... ... ( ... திரு ... )

15. சுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி
தனக்கும்அரி தனக்கும்நரர் தமக்கும்உறும்
இடுக்கண்வினை சாடும் ... ... ... ( ... திரு ... )

16. சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர்
பெருத்தகுடர் சிவத்ததொடை
எனச்சிகையில் விருப்பமொடு சூடும் ... ... ... ( ... திரு ... )

17. சுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி
தனக்கும்அரி தனக்கும்நரர் தமக்கும்உறும்
இடுக்கண்வினை சாடும் ... ... ... ( ... திரு ... )

18. சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர்
பெருத்தகுடர் சிவத்ததொடை
எனச்சிகையில் விருப்பமொடு சூடும் ... ... ... ( ... திரு ... )

19. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல்
ஒழித்(து)அவுணர் உரத்(து)உதிர
நிணத்தசைகள் புசிக்கஅருள் நேரும் ... ... ... ( ... திரு ... )

20. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது
குடித்(து)உடையும் உடைப்(பு) அடைய
அடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும் ... ... ... ( ... திரு ... )

21. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி
ஒளிப்பஅலை அடக்குதழல் ஒளிப்பஒளிர்
ஒளிப்பிரபை வீசும் ... ... ... ( ... திரு ... )

22. தனித்துவழி நடக்கும்என(து) இடத்தும்ஒரு
வலத்தும்இரு புறத்தும்அரு(கு)
அடுத்(து)இரவு பகற்றுணைய(து) ஆகும் ... ... ... ( ... திரு ... )

23. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு
கவிப்புலவன் இசைக்(கு)உருகி
வரைக்குகையை இடித்துவழி காணும் ... ... ... ( ... திரு ... )

24. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை
முளைத்த(து)என முகட்டின்இடை
பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும் ... ... ... ( ... திரு ... )

25. துதிக்கும்அடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கஇடர்
நினைக்கின்அவர் குலத்தைமுதல் அறக்களையும்
எனக்(கு)ஓர் துணை ஆகும் ... ... ... ( ... திரு ... )

26. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின்உண
வழைப்ப(து) என மலர்க்கமல கரத்தின்முனை
விதிர்க்கவளை(வு) ஆகும் ... ... ... ( ... திரு ... )

27. பனைக்கைமுக படக்கரட மதத்தவள
கஜக்கடவுள் பதத்(து)இடு(ம்)நி
களத்துமுளை தெறிக்கவரம் ஆகும் ... ... ... ( ... திரு ... )

28. சினத்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
குறைத்தலைகள் சிரித்(து)எயிறு
கடித்துவிழி விழித்(து)அலற மோதும் ... ... ... ( ... திரு ... )

29. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை
அடுத்தபகை அறுத்(து)எறிய
உறுக்கிஎழும் அறத்தைநிலை காணும் ... ... ... ( ... திரு ... )

30. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி
தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை
கழற்குநிகர் ஆகும் ... ... ... ( ... திரு ... )

31. பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை
கறுத்தகுழல் சிவத்தஇதழ் மறச்சிறுமி
விழிக்குநிகர் ஆகும் ... ... ... ( ... திரு ... )

32. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே ... ... ... ( ... திரு ... )

33. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி
தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை
கழற்குநிகர் ஆகும் ... ... ... ( ... திரு ... )

34. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை
அடுத்தபகை அறுத்(து)எறிய
உறுக்கிஎழும் அறத்தைநிலை காணும் ... ... ... ( ... திரு ... )

35. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே ... ... ... ( ... திரு ... )

36. பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை
கறுத்தகுழல் சிவத்தஇதழ் மறச்சிறுமி
விழிக்குநிகர் ஆகும் ... ... ... ( ... திரு ... )

37. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின்உண
வழைப்ப(து) என மலர்க்கமல கரத்தின்முனை
விதிர்க்கவளை(வு) ஆகும் ... ... ... ( ... திரு ... )

38. துதிக்கும்அடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கஇடர்
நினைக்கின்அவர் குலத்தைமுதல் அறக்களையும்
எனக்(கு)ஓர் துணை ஆகும் ... ... ... ( ... திரு ... )

39. சினத்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
குறைத்தலைகள் சிரித்(து)எயிறு
கடித்துவிழி விழித்(து)அலற மோதும் ... ... ... ( ... திரு ... )

40. பனைக்கைமுக படக்கரட மதத்தவள
கஜக்கடவுள் பதத்(து)இடு(ம்)நி
களத்துமுளை தெறிக்கவரம் ஆகும் ... ... ... ( ... திரு ... )

41. தனித்துவழி நடக்கும்என(து) இடத்தும்ஒரு
வலத்தும்இரு புறத்தும்அரு(கு)
அடுத்(து)இரவு பகற்றுணைய(து) ஆகும் ... ... ... ( ... திரு ... )

42. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி
ஒளிப்பஅலை அடக்குதழல் ஒளிப்பஒளிர்
ஒளிப்பிரபை வீசும் ... ... ... ( ... திரு ... )

43. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை
முளைத்த(து)என முகட்டின்இடை
பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும் ... ... ... ( ... திரு ... )

44. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு
கவிப்புலவன் இசைக்(கு)உருகி
வரைக்குகையை இடித்துவழி காணும் ... ... ... ( ... திரு ... )

45. சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர்
பெருத்தகுடர் சிவத்ததொடை
எனச்சிகையில் விருப்பமொடு சூடும் ... ... ... ( ... திரு ... )

46. சுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி
தனக்கும்அரி தனக்கும்நரர் தமக்கும்உறும்
இடுக்கண்வினை சாடும் ... ... ... ( ... திரு ... )

47. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது
குடித்(து)உடையும் உடைப்(பு) அடைய
அடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும் ... ... ... ( ... திரு ... )

48. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல்
ஒழித்(து)அவுணர் உரத்(து)உதிர
நிணத்தசைகள் புசிக்கஅருள் நேரும் ... ... ... ( ... திரு ... )

49. திரைக்கடலை உடைத்துநிறை புனற்கடிது
குடித்(து)உடையும் உடைப்(பு) அடைய
அடைத்(து)உதிரம் நிறைத்துவிளை யாடும் ... ... ... ( ... திரு ... )

50. பசித்(து)அலகை முசித்(து)அழுது முறைப்படுதல்
ஒழித்(து)அவுணர் உரத்(து)உதிர
நிணத்தசைகள் புசிக்கஅருள் நேரும் ... ... ... ( ... திரு ... )

51. சலத்துவரும் அரக்கர்உடல் கொழுத்துவளர்
பெருத்தகுடர் சிவத்ததொடை
எனச்சிகையில் விருப்பமொடு சூடும் ... ... ... ( ... திரு ... )

52. சுரர்க்கு(ம்)முநி வரர்க்கு(ம்)மக பதிக்கும்விதி
தனக்கும்அரி தனக்கும்நரர் தமக்கும்உறும்
இடுக்கண்வினை சாடும் ... ... ... ( ... திரு ... )

53. திசைக்கிரியை முதற்குலிசன் அறுத்தசிறை
முளைத்த(து)என முகட்டின்இடை
பறக்கஅற விசைத்(து) அதிர ஓடும் ... ... ... ( ... திரு ... )

54. பழுத்தமுது தமிழ்ப்பலகை இருக்கும்ஒரு
கவிப்புலவன் இசைக்(கு)உருகி
வரைக்குகையை இடித்துவழி காணும் ... ... ... ( ... திரு ... )

55. தனித்துவழி நடக்கும்என(து) இடத்தும்ஒரு
வலத்தும்இரு புறத்தும்அரு(கு)
அடுத்(து)இரவு பகற்றுணைய(து) ஆகும் ... ... ... ( ... திரு ... )

56. சுடர்ப்பரிதி ஒளிப்பநில(வு) ஒழுக்கு(ம்)மதி
ஒளிப்பஅலை அடக்குதழல் ஒளிப்பஒளிர்
ஒளிப்பிரபை வீசும் ... ... ... ( ... திரு ... )

57. சினத்(து)அவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
குறைத்தலைகள் சிரித்(து)எயிறு
கடித்துவிழி விழித்(து)அலற மோதும் ... ... ... ( ... திரு ... )

58. பனைக்கைமுக படக்கரட மதத்தவள
கஜக்கடவுள் பதத்(து)இடு(ம்)நி
களத்துமுளை தெறிக்கவரம் ஆகும் ... ... ... ( ... திரு ... )

59. தலத்தில்உள கணத்தொகுதி களிப்பின்உண
வழைப்ப(து) என மலர்க்கமல கரத்தின்முனை
விதிர்க்கவளை(வு) ஆகும் ... ... ... ( ... திரு ... )

60. துதிக்கும்அடி யவர்க்(கு)ஒருவர் கெடுக்கஇடர்
நினைக்கின்அவர் குலத்தைமுதல் அறக்களையும்
எனக்(கு)ஓர் துணை ஆகும் ... ... ... ( ... திரு ... )

61. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே ... ... ... ( ... திரு ... )

62. பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை
கறுத்தகுழல் சிவத்தஇதழ் மறச்சிறுமி
விழிக்குநிகர் ஆகும் ... ... ... ( ... திரு ... )

63. தருக்கிநமன் முருக்கவரின் எருக்குமதி
தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை
கழற்குநிகர் ஆகும் ... ... ... ( ... திரு ... )

64. சொலற்(கு)அரிய திருப்புகழை உரைத்தவரை
அடுத்தபகை அறுத்(து)எறிய
உறுக்கிஎழும் அறத்தைநிலை காணும் ... ... ... ( ... திரு ... )

65. திருத்தணியில் உதித்(து)அருளும் ஒருத்தன்மலை
விருத்தன்என(து) உளத்தில்உறை
கருத்தன்மயில் நடத்துகுகன் வேலே ... ... ... ( ... திரு ... )

( ... முடிவிலும் இந்த அடியை 12 முறை ஓதவும் ... )

தேரணி யிட்டுப் புரம் எரித் தான்மகன் செங்கையில்வேற்
கூரணி யிட்டணு வாகிக் கிரௌஞ்சங் குலைந்தரக்கர்
நேரணி யிட்டு வளைந்த கடகம் நெளிந்து சூர்ப்
பேரணி கெட்டது தேவேந்த்ர லோகம் பிழைத்ததுவே.

வீரவேல் தாரைவேல் விண்ணோர் சிறை மீட்ட
தீரவேல் செவ்வேள் திருக்கைவேல் - வாரி
குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும்
தொளைத்தவேல் உண்டே துணை.

... ... ... வேலும் மயிலும் துணை ... ... ...

Tuesday, July 21, 2020

வினாயகர் ஸ்லோகங்கள்

ஸ்லோகம் 1 :

சுக்லாம்பரதரம், விஷ்ணும், சசிவர்ணம், சதுர்புஜம்
ப்ரஸந்த வதநம் த்யாயேத் ஸர்வ விக்நோப சாந்தயே.

ஸ்லோகம் 2 :

ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ரதுண்டாய தீமஹி
தன்னோ தந்தி ப்ரசோதயாத்.

ஸ்லோகம் 3 :

ஓம் ஏகதந்தாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தன்னோ தந்தி ப்ரசோதயாத்.

ஸ்லோகம் 4 :

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுத்தினைப்
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.

ஸ்லோகம் 5 :

மூஷிக வாகன மோதக ஹஸ்த
சாமர கர்ண விளம்பித சூத்ர
வாமன ரூப மஹேஸ்வர புத்ர
விக்ன விநாயக பாத நமஸ்தே.

ஸ்லோகம் 6 :

கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை
கணபதி என்றிடக் காலனும் கைதொழும்
கணபதி என்றிடக் கருமம் ஆதலால்
கணபதி என்றிடக் கவலை தீருமே.

ஸ்லோகம் 7  :

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான்
பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு.

ஸ்லோகம் 8 :

அல்லல்போம் வல்வினைபோம் அன்னைவயிற்றில் பிறந்த
தொல்லைபோம் போகாத் துயரம்போம்
நல்ல குணமதிக மாம் அருணைக் கோபுரத்தில்
மேவும் கணபதியைக் கைதொழுதக் கால்.

ஸ்லோகம் 9 :

கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலசார பக்ஷிதம்
உமாஸுதம் சோக விநாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்.

ஸ்லோகம் 10 :

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் - கோலம் செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீ எனக்குச்
சங்கத் தமிழ்மூன்றும் தா.

ஸ்லோகம் 11 :

விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்!
விநாயகனே வேட்கை தணிவிப்பான்! விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்
தன்மையினால் கண்ணில் பணிமின் கனிந்து.

ஸ்லோகம் 12 :

வக்ரதுண்டாய ஹீம்
ஓம் நமோ ஹேரம்ப மதமோதித
மம சர்வ சங்கடம் நிவாரயே ஸ்வாஹா
ஓம் கம் க்ஷிப்ரப்ரசாதனாய நமஹ.

Wednesday, May 27, 2020

ஸ்ரீ சனீஸ்வரபகவான் கவசம்

ஸ்ரீ  சனீஸ்வர கவசம் படித்து நமது துன்பங்களை நீக்கிக்கொண்டு இன்பங்கள் பெற்று மகிழ 

ஸ்ரீ சனீஸ்வரபகவான் அனுக்ரஹமூர்த்தியே திருவடிகள் சரணம்

ஸ்ரீ சனீஸ்வரபகவான் கவசம்

நெருங்கிடு பிணி யெலாம்

நீக்கு நோன்மையும்

ஒருங்கு மொய்ம்பு இரண்டும்

ஆங்குறும் கருந்துகில்

மருங்குலும் கழுகிவர்

வனப்பும் கொண்டு அமர்

அருங்கதிர் மதலை தாள்

அன்போடு ஏத்துவாம்!

(வேறு)

மறுவறும் எனது சென்னி

வளர்புகழ்ச் சனி புரக்க

பெறுமுகம் அன்பர் அன்பன்

பேணுக செவி கறுக்கும்

அறுவை நன்கு அணிவோன் காக்க

அச்சமே விளைக்கு மெய்யோன்

நறுமலர் விழி புரக்க

நாசி கை காரி காக்க.

கருங்களம் உடைய தேவன்

கவின்படு கண்டம் காக்க

பெருங்கடின் படுபு யத்தோன்

பெருவரைப் புயம் புரக்க

வருங்கை நீலோற் பலம்போல்

வளர்ஒளி அண்ணல் காக்க

ஒருங்குறும் எனது நெஞ்சம்

உடல் கரியவன் புரக்க.

சுந்தரம் தழுவும் உந்தி

சுட்கமாம் வயிற்றோன் காக்க

சந்தமார் விகடன் செய்வோன்

தடம்படு கடி புரக்க

நந்திய கோர ரூபன்

நற்றொடை புரக்க நாளும்

முந்துறு நெடிய ரூபன்

மொழிதரு முழுந்தாள் காக்க.

மங்கலம் ஈயும் ஈசன்

வனப்புறு கணைக்கால் காக்க

தங்குறு பரடு இரண்டும்

தகு குணாகரன் புரக்க

பங்கெனப் படுவோன் பாதம்

பழுதறப் புரக்க பார்மேல்

செங்கதிர் அளிக்கு மைந்தன்

திருந்திமென் அங்கங் காக்க.

நன்றிதரு சனிகவச நாள்தோறும்

அன்பினொடு நவின்று போற்றில்

வெற்றிதரும் விறல்உதவும் புகழ் அளிக்கும்

பெருவாழ்வு மேவ நல்கும்

கன்றுபவத் துயர்ஒழிக்கும் வினை ஒழிக்கும்

பிணி ஒழிக்கும் கவலை போக்கும்

அன்றியும் உள் நினைந்தவெலாம் அங்கை நெல்லி

யம்கனியாம் அவனி யோர்க்கே.

அருஞ்சுவணம் முதலவற்றின் அமைக்கும்

இயந்திரம் எள்ளுள் அமரவைத்து

வருஞ்சுகந்த மலராதிக்கு அரியவற்றால்

பூசித்து மனுப்பு கன்று

பெருஞ்சுகம் கொண்டிட விழைவோன்

கருந்துகிலோடு அந்தணர்க்குப் பெட்பின்ஈயில்

கருஞ்சனி உள் மகிழ்ந்துறு நோய்

களைந்துநல முழுதும்உளங் கனிந்தே நல்கும்.

ஆங்கதனோடு அரும்பொருளும் மற்றவனுக்கு

அளிப்பன் எனில் அவனுக்கு என்றும்

தீங்குஅகல மேன்மேலும் பெருகி எழு

வாழ்நாளும் செல்வப் பேறும்

ஓங்குமனை மக்கள்முதல் பற்பலசுற்

றப்பொலிவும் உதவும் காண்பீர்

வாங்குகடன் முளைத்திருள்நீத் தெழும்

கதிரேசன் அன்று உதவ வந்த மைந்தன்!

ஸ்ரீ சனீஸ்வரபகவான் அனுக்ரஹமூர்த்தியே திருவடிகள் சரணம்


சனி பகவானின் மூல மந்திர

ஏழரை சனி தொடர்பான பிரச்சனைகள் மற்றும் சனி திசையின் போது சனியின் கடவுளான அனுமனைத் தினமும் வழிபடவேண்டும். இதோ சனி பகவானை குளிர்விக்கும் மந்திரங்கள் !

சனி பகவானின் மூல மந்திர ஜபம்:

"ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌம் ஷக் சனைச்சராய நமஹ", 

 இதை 40 நாட்களில் 19000 முறை சொல்ல வேண்டும்.

சனி ஸ்தோத்திரம்:

நீலாஞ்ஜன ஸமாபாஸம்

ரவிபுத்ரம் யமாக்ரஜம்!

ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம்

தம் நமாமி சனைச்சரம்!!

சனி காயத்ரி மந்திரம்:

காகத்வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி|

தந்நோ மந்த: ப்ரசோதயாத்||

சனி திசையின்போது வால்மீகி ராமாயணத்தில் பாலா காண்டத்தின், 30 வது அத்தியாயம் தினமும் படிக்க வேண்டும். அனைத்து சனி தொடர்பான பிரச்சனைக்கும் தசரத சனி ஸ்தோத்திரம் ஒரு சிறந்த தீர்வாக உள்ளது.

ஸ்ரீ சம்மோஹன க்ருஷ்ண ஸ்துதி

ஸ்ரீ க்ருஷ்ணம் கமலபத்ராட்சம் திவ்ய ஆபரண பூஷிதம் |
த்ரிபங்கி லலிதாகாரம் அதிசுந்தர மோகனம் ||
பாகம் தட்சிணம் புருஜம் அந்யத் ஸ்திரீ ரூபிணம் ததா |
சங்கம் சக்ரம் சாங்குசஞ்ச புஷ்பபாணம் ச பங்கஜம் ||
இக்ஷூ சாபம் வேணு வாத்யம் ச தாரயந்தம் புஷாஷ்டகை : |
ஸ்வேத கந்தானு லிப்தாங்கம் புஷ்ப வஸ்த்ர த்ரகுஜ்வலம் ||
ஸர்வ காமார்த்த சித்யர்த்தம்
சம்மோஹனம்  க்ருஷ்ண மாஸ்ரயே ||

ஸ்ரீ ராமரின் மூல மந்திரம்

  
ஓம் ஸ்ரீ ராமாய நமஹ

“மகாவிஷ்ணுவின்” அவதாரமான ஸ்ரீ ராமனை போற்றும் மூல மந்திரம் இது. இந்த மந்திர துதியை தினந்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் மற்றும் உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் 108 முறை இத்துதியை வாய்விட்டு சத்தமாகவோ அல்லது மனதிற்குள்ளோ ஜெபித்து வர, உங்களிடம் இருக்கின்ற தீய பழக்கங்கள் குணங்கள் நீங்கி உடல் மற்றும் மன ரீதியாக நல்ல மாற்றங்கள் ஏற்பட தொடங்கும்.

பிறரிடம் இருக்கும் தீய குணங்கள், பழக்க வழக்கங்களை நீக்குவதற்கும் இத்துதியை ஜெபிக்கலாம். உங்களை பீடித்திருக்கும் எதிர்மறை அதிர்வுகள் நீங்கும். எதற்கும் கலங்காத மன உறுதியும் இத்துதியை படிப்பதால் உண்டாகும்.

Tuesday, May 26, 2020

ஸ்ரீமத் அபாமார்ஜந ஸ்தோத்ரம்

விஷ்ணு தர்மோத்தரத்தில் உள்ள அபாமார்ஜந ஸ்தோத்ரம் மிக அபூர்வமானது. இது ஏவல், சூன்யம், வியாதி, க்ரஹபீடை, விஷபீடை, முதலிய எல்லாத் துயர்களையும்  நீக்கவல்லது. ஒரு கலசத்தில் தீர்த்தம் நிரப்பி, ஸ்ரீவராஹ, நரஸிம்ஹ, வாமந, விஷ்ணு, ஸுதர்சந மூர்த்திகளை ஆவாஹனம் செய்து, தர்ப்ப கூர்ச்சத்தால் அந்தத் தீர்த்தத்தை ப்ரோக்ஷணம் செய்துகொண்டும், பருகியும் பலர் தம் கஷ்டங்களை நீக்கிக் கொண்டுள்ளார்கள். துர்தேவதைகளின் தொல்லைகளும், விஷ உபத்ரவங்களும், எதிரிகளின் மந்த்ரம், மாயம் இவற்றால் வரும் இன்னல்களும், இந்த ஸ்தோத்ரத்தைப் பாராயணம் செய்பவர்களுக்கு வராது; வந்தாலும் சிரமம் தராது என்று பெரியோர்கள் அநுபவபூர்வமாகச் சொல்லியிருக்கிறார்கள்.



ஸ்ரீ தால்ப்ய உவாச:

 

பகவந் ப்ராணிநஸ் ஸர்வே விஷரோகாத்யுபத்ரவை

துஷ்டக்ரஹாபிகாதைஶ்ச ஸர்வகால முபத்ருதா:                                             1

 
ஆபிசாரிக க்ருத்யாபி: ஸ்பர்ஶரோகைஶ்ச தாருணை:

ஸதா ஸம்பீட்யமாநாஸ்து திஷ்டந்தி முநிஸத்தம                                               2


கேந கர்மவிபாகேந விஷரோகாத்யுபத்ரவா:

ந பவந்தி ந்ருணாம் தந்மே யதாவத் வக்து மர்ஹஸி                                           3


ஸ்ரீ புலஸ்த்ய உவாச:

 
வ்ரதோப வாஸ்யைர் விஷ்ணுர் நாந்யஜந்மநி தோஷித:

தே நரா முநிஶார்தூல விஷரோகாதி பாகிந:                                                       4

யைர்ந தத்ப்ரவணம் சித்தம் ஸர்வதைவ நரை:க்ருதம்

விஷஜ்வரக்ரஹாணாம் தே மநுஷ்யா தால்ப்ய பாகிந:                         5

ஆரோக்யம் பரமாம் ருத்திம் மநஸா யத் யதிச்சதி

தத்ததாப்நோத்ய ஸந்திக்தம் பரத்ராச்யுத தோஷக்ருத்                                                6
நாதீந் ப்ராப்நோதி ந வ்யாதீந் விஷக்ரஹ நிபந்தநம்

க்ருத்யாஸ்பர்ஶபயம் வாபி தோஷிதே மதுஸூதநே                                         7
ஸர்வ து:க ஶமஸ்தஸ்ய ஸௌம்யாஸ் தஸ்ய ஸதா க்ரஹா:

தேவாநாமபி துஷ்ட்யை ஸ யஸ்ய துஷ்டோ ஜநார்தந:                          8

யஸ்ஸமஸ் ஸர்வ பூதேஷு யதாத்மநி ததா பரே

உபவாஸாதி தாநேந தோஷிதே மதுஸூதநே                                                      9

தோஷகாஸ் தஸ்ய ஜாயந்தே நரா: பூர்ணமநோரதா:

அரோகாஸ் ஸுகிநோ போகாந் போக்தாரோ முநிஸத்தம                            10

ந தேஷாம் ஶத்ரவோ நைவ ஸ்பர்ஶரோகாதி பாகிந:

க்ரஹரோகாதிகம் வாபி பாபகார்யம் ந ஜாயதே                                                           11

அவ்யாஹதாநி க்ருஷ்ணஸ்ய சக்ராதீந்யாயுதாநி ச

ரக்ஷந்தி ஸகலாபத்ப்ய: யேந விஷ்ணு ருபாஸித:                                     12


ஸ்ரீ தால்ப்ய உவாச:

 
அநாராதித கோவிந்தா யே நரா து:கபாகிந:

தேஷாம் து:காபிபூதாநாம் யத் கர்தவ்யம் தயாளுபி:                                         13

 
பஶ்யத்பிஸ் ஸர்வபூதஸ்தம் வாஸுதேவம் மஹாமுநே

ஸமத்ருஷ்டிபிரீஶேஶம் தந்மம ப்ரூஹ்யசேஷத:                                     14

 
ஸ்ரீ புலஸ்த்ய உவாச:


ஶ்ரோது காமோஸி வை தால்ப்ய ஶ்ருணுஷ்வ ஸுஸமாஹித:

அபாமார்ஜநகம் வக்ஷ்யே ந்யாஸபூர்வ மிதம் பரம்                                              15


ஓம் நமோ பகவதே வாஸுதேவாய

ஸர்வக்லேஶாபஹந்த்ரே நம:

அத ந்யாஸ:

 
அஸ்ய ஸ்ரீமத் அபாமார்ஜந ஸ்தோத்ர மஹா மந்த்ரஸ்ய

ஸ்ரீ புலஸ்த்யோ பகவாந் ருஷி:

அநுஷ்டுப்சந்த:

ஸ்ரீவாராஹ நாரஸிம்ஹ வாமந விஷ்ணு ஸுதர்ஶநா தேவதா:
 

ஹராமுகஸ்ய துரிதமிதி பீஜம்

அச்யுதாநந்த கோவிந்தேதி ஶக்தி:

ஜ்வலத்பாவக லோசநேதி கீலகம்

வஜ்ராயுத நகஸ்பர்ஶேதி கவசம்

 

ஸ்ரீவாராஹ  நாரஸிம்ஹ வாமந விஷ்ணு ஸுதர்ஶந ப்ரஸாத ஸித்யர்த்தே16

 

வராஹாய அங்குஷ்டாப்யாம் நம:

நாரஸிம்ஹாய தர்ஜநீப்யாம் ஸ்வாஹா

வாமநாய மத்யமாப்யாம் வஷட்

விஷ்ணவே அநாமிகாப்யாம் ஹும்

ஸுதர்ஶநாய கநிஷ்டிகாப்யாம் வௌஷட்

பாஞ்சஜன்யாய கரதலகரப்ருஷ்டாப்யாம் ஃபட் நம:

இதி கர ந்யாஸ:                                                                                                                 17

வராஹ நரஸிம்ஹாய வாமநாய மஹாத்மநே ஜ்ஞாநாய ஹ்ருதயாய நம:

நம: கமல கிஞ்ஜல்க பீதநிர்மல வாஸஸே ஐஶ்வர்யாய ஶிரஸே ஸ்வாஹா

நம: புஷ்கர நேத்ராய கேஶவாயாதி சக்ரிணே ஶக்த்யை ஶிகாயை வஷட்

தாமோதராய தேவாய அநந்தாய மஹாத்மநே பலாய கவசாய ஹும்

காஶ்யபாயாதிஹ்ரஸ்வாய  ருக்யஜுஸ்ஸாமமூர்த்தயே தேஜஸே

நேத்ரத்ரயாப்யாம் வௌஷட்

ஓம் நம: பரமார்த்தாய புருஷாய மஹாத்மநே வீர்யாய அஸ்த்ராய ஃபட்

 

ஓம் பூர்ப்புவஸ்ஸுவரோமிதி திக்பந்த:  எட்டுதிக்கில் வலமாக சொடக்கவும்18


த்யாநம்


அத த்யாநம் ப்ரவக்ஷ்யாமி ஸர்வபாப ப்ரணாஶநம்

வராஹரூபிணம் தேவம் ஸம்ஸ்மரந் அர்ச்சயேத் ஜபேத்                                  19


ஜலௌகதாம் ந: ஸசராசரா தரா

விஷாண கோட்யா கில விஶ்வரூபிணா

ஸமுத்த்ருதா யேந வராஹ ரூபிணா

ஸ மே ஸ்வயம்பூர் பகவாந் ப்ரஸீதது                                                           20

சஞ்சத் சந்த்ரார்க தம்ஷ்ட்ரம் ஸ்புரதுரு ரதநம் வித்யுதுத்யோத ஜிஹ்வம்

கர்ஜத பாஜநய நாதம் ஸ்புரித ரவி ருசிம் சக்ஷு ரக்ஷுத்ரரௌத்ரம்

த்ரஸ்தாஶா ஹஸ்தியூதம் ஜ்வலதநல ஸடா கேஸரோதபாஸமாநம்

ரக்ஷோ ரக்தாபிஷிக்தம் ப்ரஹரதி துரிதம் த்யாயதாம் நாரஸிம்ஹம்         21

அதிவிபுல ஸுகாத்ரம் ருக்மபாத்ரஸ்தமந்நம்

ஸலலித ததிகண்டம் பாணிநா தக்ஷிணேந

கலஶம் அம்ருதபூர்ணம் வாமஹஸ்தே ததாநம்

தரதி ஸகல து:கம் வாமநம் பாவயேத ய:                                        22

விஷ்ணும் பாஸ்வத கிரீடாங்கத வலயகளா கலப ஹாரோஜ் ஜ்வலாங்கம்

ஶ்ரோணீபூஷ ஸுவக்ஷோ மணிமகுட மஹா குண்டலைர் மண்டிதாங்கம்

ஹஸ்தோதயத் சங்க சக்ராம்புஜ கத மமலம் பீத கௌஶேய மாஶா

வித்யோதத பாஸ முதயத திநகர ஸத்ருஶம் பத்ம ஸ்ம்ஸ்தம் நமாமி 23


கல்பாந்தர்க ப்ரகாஶம் த்ரிபுவந மகிலம் தேஜஸா பூரயந்தம்

ரக்தாக்ஷம் பிங்ககேஶம் ரிபுகுலதமநம் பீம தம்ஷ்ட்ராட்ட ஹாஸம்

ஶங்கம் சக்ரம் கதாப்ஜம் ப்ருதுதர முஸலம் ஶூல பாஶாங்குஶாக்நீந்

பிப்ராணம் தோர்பிராத்யம் மநஸி முரரிபும் பாவயே சக்ரஸம்ஜ்ஞம்         24

ஸ்தோத்ராரம்ப:


ஓம் நம: பரமார்த்தாய புருஷாய மஹாத்மநே

அரூப பஹுரூபாய வ்யாபிநே பரமாத்மநே                                                          25

நிஷ்கல்மஷாய ஶுத்தாய த்யாநயோக ரதாய ச

நமஸ்க்ருத்ய ப்ரவக்ஷ்யாமி யத்ர ஸித்யது மே வச:                                              26

நாராயணாய ஶுத்தாய விஶ்வேஶாயேஶ்வராய ச

அச்யுதாநந்த கோவிந்த பத்மநாபாய ஸௌஹ்ருதே                                        27

ஹ்ருஷீகேஶாய கூர்மாய மாதவாச்யுதாய ச

தாமோதராய தேவாய அநந்தாய மஹாத்மநே                                                    28

ஜநார்தநாய க்ருஷ்ணாய உபேந்த்ர ஸ்ரீதராய ச

த்ரிவிக்ரமாய ராமாய வைகுண்டாய ஹராய ச                                                  29


ப்ரத்யும்நா யாநிருத்தாய புருஷோத்தம தே நம:

யோகீஶ்வராய குஹ்யாய கூடாய பரமாத்மநே                                                  30

பக்தப்ரியாய தேவாய விஷ்வக்ஸேநாய ஶார்ங்கிணே

அதோக்ஷஜாய தக்ஷாய மத்ஸ்யாய மதுஹாரிணே                                           31

வராஹாய ந்ருஸிம்ஹாய வாமநாய மஹாத்மநே

வராஹேஶ ந்ருஸிம்ஹேஶ வாமநேஶ த்ரிவிக்ரம                                              32

ஹயக்ரீவேஶ ஸர்வேஶ ஹ்ருஷீகேஶ ஹராஶுபம்

அபராஜித சக்ராத்யை: சதுர்பி: பரமாத்புதை:                                                      33

அகண்டிதா நுபாவைஸ்த்வம் ஸர்வதுஷ்டஹரோ பவ

ஹராமுகஸ்ய துரிதம் துஷ்க்ருதம் துருபோஷிதம்                                             34

ம்ருத்யு பந்தார்த்திபயதம் அரிஷ்டஸ்ய ச யத்பலம்

பரமத்வாந ஸஹிதம் ப்ரயுக்தம் சாபிசாரிகம்                                                      35

கரஸ்பர்ஶ மஹாரோகாந் ப்ரயுக்தாந் த்வரயா ஹர

ஓம் நமோ வாஸுதேவாய நம: க்ருஷ்ணாய சார்ங்கிணே                               36

நம: புஷ்கர நேத்ராய கேஶவாயாதி சக்ரிணே

நம: கமல கிஞ்ஜல்க பீத நிர்மல வாஸஸே                                                   37


மஹாஹவ ரிபுஸ்கந்த க்ருஷ்ட சக்ராய சக்ரிணே

தம்ஷ்ட்ராக்ரேண க்ஷிதித்ருதே த்ரயீமூர்த்திமதே நம:                                        38

மஹாயஜ்ஞவராஹாய ஶேஷபோகோபஶாயிநே

தப்தஹாடக கேஶாந்த ஜ்வலத்பாவக லோசந                                                      39

வஜ்ராயுத நகஸ்பர்ஶ திவ்யஸிம்ஹ நமோஸ்து தே

காஶ்யபாயாதி ஹ்ரஸ்வாய ருக்யஜுஸ்ஸாம மூர்த்தயே                                40

துப்யம் வாமநரூபாய க்ரமதே காம் நமோ நம:

வராஹாஶேஷ துஷ்டாநி ஸர்வபாப பலாநி வை                                               41

மர்த மர்த மஹாதம்ஷ்ட்ர மர்த மர்த ச தத்பலம்

நரஸிம்ஹ கராளாஸ்ய தந்தப்ராந்தோஜ் ஜ்வலாநந                                           42

பஞ்ஜ பஞ்ஜ நிநாதேந துஷ்டாந்யஸ்யார்த்தி நாஶந

ருக்யஜுஸ்ஸாம ரூபாபி: வாக்பிர் வாமந ரூபத்ருக்                                           43

ப்ரஶமம் ஸர்வதுஷ்டாநாம் நயத்வஸ்ய ஜநார்தந:

கௌபேரம் தே முகம் ராத்ரௌ ரௌத்ரம் ஸௌம்யம் முகம் திவா
 44

ஜ்வராந்ம்ருத்யுபயம் கோரம் விஷம் நாஶயதே ஜ்வரம்

த்ரிபாத்பஸ்மப்ரஹரண: த்ரிஶிரா ரக்தலோசந:

ஸ மே ப்ரீதஸ் ஸுகம் தத்யாத் ஸர்வாமயபதிர்ஜ்வர:                             45

ஆத்யந்தவந்த: கவய: புராணா:

ஸந்மார்கவந்தோ ஹ்யநுஶாஸிதார:

ஸர்வஜ்வராந் க்நந்து மமாநிருத்த

ப்ரத்யும்ந ஸங்கர்ஷண வாஸுதேவா:                                                                     46

ஐகாஹிகம் த்வயாஹிகம் ச ததா த்ரிதிவஸஜ்வரம்

சாதுர்த்திகம் ததாத்யுக்ரம் ததைவ ஸததஜ்வரம்                                                 47

தோஷோத்தம் ஸந்நிபாதோத்தம் ததைவாகந்துகம் ஜ்வரம்

ஶமம் நயாஶு கோவிந்த சிந்த்திச் சிந்த்யஸ்ய வேதநாம்                               48

நேத்ரது:கம் ஶிரோது:கம் து:கம் சோதரஸம்பவம்

அதிஶ்வாஸ மநுச்ச்வாஸம் பரிதாபம் ஸவேபதும்                                              49

குதக்ராணாங்க்ரிரோகாம்ஶ்ச குக்ஷிரோகம் ததா க்ஷயம்

காமாலாதீந் ததாரோகாந் ப்ர்மேஹாம்ச் சாதிதாருணாந்                              50

பகந்தராதிஸாராம்ஶ்ச முகரோகாம்ஸவல்குளிம்

அஶ்மரீ மூத்ரக்ருச்ஸ்ரம் ச ரோகாந் அந்யாகிச்ச தாருணாந்                         51

யே வாத ப்ரபவா ரோகா: யே ச பித்த ஸமுத்பவா:

கபோதவாஶ்ச யே ரோகா: யே சாந்யே ஸாந்திபாதிகா:                                  52

ஆகந்துகாஶ்ச யே ரோகா: லூதாதி ஸ்போடகாதய:

ஸர்வே தே ப்ரஶமம் யாந்து வாஸுதேவாபமார்ஜநாத்                                     53
விலயம் யாந்து தே ஸர்வே விஷ்ணோ ருச்சாரணே ந ச

க்ஷயம் கச்சந்து சாஶேஷா: சக்ரேணாபிஹதா ஹரே:                                        54
அச்யுதாநந்த கோவிந்த விஷ்ணோ நாராயணாம்ருத

ரோகாந் மே நாஶயாஶேஷாந் ஆஶு தந்வந்தரே ஹரே                                  55

அச்யுதாநந்த கோவிந்த நாமோச்சாரண பேஷஜாத்

நஶ்யந்தி ஸகலா ரோகா: ஸத்யம் ஸத்யம் வதாம்யஹம்                                 56

ஸத்யம் ஸத்யம் புநஸ் ஸத்யம் உத்த்ருத்ய புஜமுச்யதே

வேதாச்சாஸ்த்ரபரம் நாஸ்தி நதைவம் கேஶவாத்பரம்                                                57

ஸ்தாவரம் ஜங்கமம் சாபி க்ருத்ரிமம் சாபி யத்விஷம்

தந்தோத்பவம் நகோத்பூதம் ஆகாஶப்ரபவம் விஷம்                                       58

லூதாதிஸ்போடகம் சைவ விஷமத்யந்த துஸ்ஸஹம்

ஶமம் நயது தத்ஸர்வம் கீர்த்திதோஸ்ய ஜநார்தந:                                              59

க்ரஹாந் ப்ரேதக்ரஹாந் சைவ ததா வைநாயிகக்ரஹாந்

வேதாளாம்ஶ்ச பிஶாசாம்ஶ்ச கந்தர்வாந் யக்ஷராக்ஷஸாந்                           60

ஶாகிநீபூதநாத்யாம்ஶ்ச ததா வைநாயிகக்ரஹாந்

முகமண்டலிகாந் க்ரூராந் ரேவதீந் வ்ருத்த ரேவதீந்                                            61

வ்ருஶ்சிகாக்யாந் க்ரஹாந் சோக்ராந் ததாமாத்ருகணாநபி

பாலஸ்ய விஷ்ணோஶ்சரிதம் ஹந்து பாலக்ரஹாநிமாந்                                   62

வ்ருத்தாநாம் யே க்ரஹா: கேசித் யேசபாலக்ரஹா: க்வசித்

நரஸிம்ஹஸ்ய தேத்ருஷ்ட்யா தக்தா யே சாபி யௌவநே                                63

ஸடா கராளவதநோ நரஸிம்ஹோ மஹாரவ:

க்ரஹாநஶேஷாந்நிஶ்சேஷாந் கரோது ஜகதோ ஹித:                                      64

நரஸிம்ஹ மஹாஸிம்ஹ ஜ்வாலா மாலோஜ் ஜ்வலாநந

க்ரஹாநஶேஷாந் ஸர்வேஷாம் காதகாதாக்நிலோசந                                                65

யேரோகா யேமஹோத்பாதா யத்விஷம் யே மஹோரகா:

யாநி ச க்ரூரபூதாநி க்ரஹபீடாஶ்ச தாருணா:                                                     66

ஶஸ்த்ரக்ஷதே ச யே தோஷா: ஜ்வாலா கர்தமகாதய:

யாநி சாந்யாநி துஷ்டாநி ப்ராணி பீடா கராணி ச                                             67

தாநி ஸர்வாணி ஸர்வாத்மந் பரமாத்மந் ஜநார்தந

கிஞ்சித்ரூபம் ஸமாஸ்தாய வாஸு தேவாஸய நாஶய                          68

க்ஷிப்த்வா ஸுதர்ஶநம் சக்ரம் ஜ்வாலாமாலாதிபூஷணம்

ஸர்வதுஷ்டோபஶமநம் குரு தேவவராச்யுத                                                         69

ஸுதர்ஶந மஹாசக்ர கோவிந்தஸ்ய கராயுத

தீக்ஷ்ண பாவகஸங்காஶ கோடிகோடி ஸமப்ரப                                                  70

த்ரைலோக்யகர்தா த்வம் துஷ்ட த்ருப்த தாநவதாரண

தீக்ஷ்ணதார மஹாவேக சிந்தி சிந்தி மஹாஜ்வரம்                                             71

சிந்தி பாதம் ச லூதம்ச சிந்தி கோரம் மஹத்பயம்

க்ருமிம் தாஹம் ச ஶூலம் ச விஷஜ்வாலாம் ச கர்தமாந்                                 72

ஸர்வதுஷ்டாநி ரக்ஷாம்ஸி க்ஷபயாரி விபீஷண

ப்ராச்யாம் ப்ரதீச்யாம் திஶிச தக்ஷிணோத்தரயோஸ்ததா                             73

ரக்ஷாம் கரோது பகவாந் பஹுரூபி ஜநார்தந:

பரமாத்மா யதா விஷ்ணு: வேதாந்தேஷ்வபிதீயதே                                            74

தேந ஸத்யேந ஸகலம் துஷ்டமஸ்ய ப்ரஶாம்யது

யதா விஷ்ணௌ ஜகத்ஸர்வம் ஸதேவாஸுரமாநுஷம்                         75

தேந ஸத்யேந ஸகலம் துஷ்டமஸ்ய ப்ரஶாம்யது

யதா விஷ்ணௌ ஸ்ம்ருதே ஸத்ய: ஸம்க்ஷயம் யாந்தி பாதகா:                       76

தேந ஸத்யேந ஸகலம் துஷ்டமஸ்ய ப்ரஶாம்யது

யதா யஜ்ஞேஶ்வரோ விஷ்ணு: வேதாந்தேஷ்வபிதீயதே                                  77

தேந ஸத்யேந ஸகலம் யந்மயோக்தம் ததாஸ்து தத்

ஶாந்திரஸ்து ஶிவம் சாஸ்து ஹ்ருஷீகேஶஸ்ய கீர்த்தநாத்                               78

வாஸுதேவ ஶரீரோத்த: குஶஸ்ஸம்மார்ஜிதம் மயா

அபாமார்ஜது கோவிந்தோ நரோ நாராயணஸ் ததா                                         79

மமாஸ்து ஸர்வது:காநாம் ப்ரஶமோ யாசநாத் ஹரே:

ஶாந்தாஸ்ஸமஸ்தா ரோகாஸ்தே க்ரஹாஸ் ஸர்வ விஷாணி ச                   80

பூதாநி ச ப்ரஶாம்யந்து ஸம்ஸ்ம்ருதே மதுஸூதநே

ஏதத் ஸமஸ்த ரோகேஷு பூதக்ரஹபயேஷுச

அபாமார்ஜநகம் ஶஸ்த்ரம்  விஷ்ணூநாமாபி மந்த்ரிதம்                                  81

ஏதே குஶா விஷ்ணுஶரீர ஸம்பவா:

ஜநார்தநோஹம் ஸ்வயமேவ சாகத:

ஹதம் மயா துஷ்டமஶேஷஸ்ய

ஸ்வஸ்தா பவத்வேஷ யதாவசோ ஹரே:                                                                82

ஶாந்திரஸ்து ஶிவம் சாஸ்து ப்ரணச்ய த்வஸுகம் ச யத்

ஸ்வாஸ்த்யமஸ்து ஶிவம் சாஸ்து துஷ்டமஸ்ய ப்ரஶாம்யது               83


யதஸ்ய துரிதம் கிஞ்சித் தத்க்ஷிப்தம் லவணார்ணவே

ஸ்வாஸ்த்யமஸ்து ஶிவம் சாஸ்து ஹ்ருஷீகேஶஸ்ய கீர்த்தநாத்                     84

ஏதத் ரோகாதி பீடாஸு ஜந்தூநாம் ஹிதமிச்சதா

விஷ்ணுபக்தேந கர்தவ்யம் அபாமார்ஜநகம் பரம்                                                           85

அநேந ஸர்வதுஷ்டாநி ப்ரஶமம் யாந்த்யஸம்ஶய:

ஸர்வபூதஹிதார்த்தாய குர்யாத் தஸ்மாத் ஸதைவ ஹி                                   86


குர்யாத் தஸ்மாத் ஸதைவ ஹ்யோம் நம இதி

இதம் ஸ்தோத்ரம் பரம் புண்யம் ஸர்வவ்யாதி விநாஶநம்                               87


விநாஶாய ச ரோகாணாம் அபம்ருத்யு ஜயாயச

இதம் ஸ்தோத்ரம் ஜபேத் ஶாந்த: குஜைஸ்ஸமார்ஜயேத் ஶுசி:                      88


வ்யாத்யபஸ்மார குஷ்டாதி பிஶாசோரக ராக்ஷஸா:

தஸ்ய பார்ஶ்வம் ந கச்சந்தி ஸ்தோத்ரமேதத்து ய; படேத்                                89

வாராஹம் நாரஸிம்ஹம் ச வாமநம் விஷ்ணுமேவ ச

ஸ்மரந் ஜபேதிதம் ஸ்தோத்ரம் ஸர்வது:க்கோபஶாந்தயே


இதி விஷ்ணு தர்மோத்தரபுராணே

தால்ப்ய புலஸ்த்ய ஸம்வாதே

அபாமார்ஜந ஸ்தோத்ரம்

ஸம்பூர்ணம்

மந்திர ஜெபம்

மந்திரங்கள் அவற்றின் வகைகள், வழிபடும் முறைகள், உச்சாடனங்கள் இவைகள் பற்றி தெரிந்தக் கொள்ளுவோம்

மந்திரங்கள் பற்றிய விளக்கம், உச்சாடன வழிமுறைகள், முத்திரைகள் பற்றிய சிறு விளக்கம்:

மந்திரங்கள் – ஏழு அங்கங்கள் மந்திரமும் யந்திரமும் தேவியின் அருள் பெறுவதற்கான சாதனங்கள். அவற்றுள் மந்திரம் என்பது ஏழு அங்கங்களைக் கொண்டது. அவை:  
1.ரிஷி  
2. சந்தஸ்  
3. தேவதை  
4. பீஜம்  
5. சக்தி  
6. கீலகம்  
7. அங்க நியாசம் என்பன.

1. ரிஷி  
மந்திரங்களைக் கண்டுபிடித்து உலகத்திற்கு வழங்கியவா்கள் ரிஷிகள். ஒவ்வொரு மந்திரமும் ரிஷி, தேவதை, சந்தஸ் என்ற மூன்றையும் கொண்டிருக்கும். மந்திரத்தைக் கண்டுபிடித்துக் கொடுத்த ரிஷி, அந்த மந்திரத்துக்குரிய தேவதை, அந்த மந்தரத்தின் சொல்லமைப்பு (சந்தஸ்),.

எனவே மந்திர ஜெபம் செய்யும் போது, இம் மூன்றையும் போற்றித் துதிக்க வேண்டும் என்பது விதி. மந்தரத்தை வெளியிட்ட ரிஷி ஆதி குரு, அம்மந்திரத்தை நமக்கு உபதேசித்த மானிட குரு ஆகியவா்களை வணங்குவதற்காக வலது கையால் சிரசைத் தொட்டு உரிய மந்திரம் சொல்ல வேண்டும். இதுவே ரிஷி நியாசம்.

நமக்குச் சமமானவரை வணங்கும் போது நமது கூப்பிய கைகளின் விரல்களை அவா்கட்கு எதிரே நீட்டி வணக்கத்தைத் தெரிவிக்கின்றோம். தேவதையை வணங்கும்போது இதயத்தில் வசிப்பவராகப் பாவனையோடு மார்புடன் ஒட்டி நிமிர்ந்த கைகளைக் கூப்பியும் குருவைச் சிரமேல் கைகூப்பியும் வணங்குவது முறை.

2. சந்தஸ்  
சந்தஸ் என்பது மந்தரத்தின் சொல் அமைப்பு. அதற்கு வணக்கம் தெரிவிக்கும் முறையில் உதட்டின் வெளியே வலது கையால் தொடுவது சந்தஸ் நியாசம் எனப்படும்.

3. தேவதை: தேவதையை இதயத்தில் அமா்ந்திருப்பதாகப் பாவனையுடன் அதயஸ்தானத்தைத் தொடுவது தேவதாநியாசம்.

4. பீஜம்: மிகச் சிறிய ஆலம் விதையிலிருந்து மிகப் பெரிய ஆலமரம் வளா்ந்தோங்கிப் பயன் தருகிறது. மாபெரும் மரம் வளா்வதற்கான சக்தி அனைத்தும் அந்தச் சிறிய விதையிலே அடங்கிக் கிடக்கிறது.

அந்த வித்துக்குப் பீஜம் என்பா். இந்தப் பிரபஞ்சமும் பஞ்ச பூதங்களும் சூக்கும நிலையிலிருந்தே தூலமான நிலைக்குவந்தன. அந்தச் சூக்கும நிலைக்கு முன்பாக அதி சூக்கும நிலையிலிருந்தே வந்தன. ஒவ்வொரு சூக்கும ஒலியிலிருந்தே வெளிப்பட்டன. அந்த நுண் ஒலியை பீஜம் என்பா்.

பஞ்ச பூதங்கட்கும், ஒவ்வொரு தேவதைக்கும் பீஜ மந்திரம் உண்டு.

5. சக்தி: அந்த விதையில் அடங்கிக்கிடக்கிற வீரியம் சக்தி எனப்படும். வீரியம் தேஜஸ், பலம் என்பன சக்தியின் வெளிப்பாடுகள்.

6. கீலகம்: சக்தி தேவையின்றி வேறிடத்துக்குச் செல்லமுடியாதபடி கட்டி வைக்கும் முளைக்குச்சி போன்றது கீலகம். ஒரு தேரின் சக்கரத்திற்கு அச்சாணி போல மந்திரத்துக்குக் கீலகம் ஒரு முக்கியமான அங்கம்.

மந்திரங்களின் ஆற்றல்:  மந்திரங்கள் என்பவை சில எழுத்துக்களின் சோ்க்கை. பல மந்திரங்களுக்குப் பொருள் இல்லை. ஆயினும் அந்த மந்திரங்களின் சப்தங்கட்குச் சக்தி அதிகம்.

பீஜ மந்திரங்கட்கு என்ன பொருள் என்று சொல்ல முடியாது. ஆனாலும் அவற்றில் அளப்பரிய சக்தி அடங்கிக்கிடக்கிறது. இந்த மந்திரங்களை ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கை அளவு உருப்போட்டால் அதற்கு உகந்த ஓா் உருவம் உண்டாகி அவ்வுருவம் ஜெபிப்பவனுடைய கண்ணுக்குத் தோற்றம் அளிக்கும் என்றும், அந்த உருவத்திற்குச் சில காரியங்களைச் செய்யக் கூடிய வலிமை உண்டாகும் என்றும் சொல்வா்.

இந்த உருவங்களைப் படைக்கக்கூடிய எழுத்துக்களை எவ்வாறு கண்டு பிடித்து இணைத்தனா் என்பது வியப்பான ஒன்று. இந்த எழுத்துக்களையே ஆரம்ப காலத்தில் பீஜ அட்சரம் என்று குறிப்பிட்டனா்.

மேலே குறிப்பிட்ட பீஜாட்சரங்களின் மூலமாக மந்திரங்களை அமைத்து, ஒவ்வொரு மந்திரத்திற்கும் ஒவ்வொரு தேவதையின் பெயரை இட்டு, அவ்வகைத் தேவதைகளின் சக்தியை உணரச் செய்துள்ளனா்.

இத் தேவதைகளில் சிறு தேவதைகள், தேவதைகள், அதிதேவதைகள் என்ற மூன்று பிரிவுகள் உண்டு. குட்டிச் சாத்தான், யட்சிணி போன்ற தேவதைகள் சிறு தெய்வங்கள்.

காளி, துா்க்கை, ஆஞ்சநேயா், நவக்கிரகங்கள் என்பன தேவதைகள்.

சிவன், விஷ்ணு, பார்வதி, முருகன், கணபதி என்போர் அதிதேவதைகள்.

ஒவ்வொரு தெய்வத்தின் உருவத்தையும் நேரடியாகப் பார்த்துத் தரிசிக்க வேண்டுமானால் அதற்கு உபாயமாக ஒவ்வொரு மந்திரம் உள்ளது.

மந்திரம் என்பது ஒரு ஒலிக்கோவை. எழுத்துக்களின் கூட்டம்தான். ஒலி வடிவான எழுத்துக்களும் ஒளி வடிவான உருவங்களும் ஒரே உருவத்திலிருந்து வந்தவையே. அவை ஒன்றுக்கொன்று நெருக்கமான தொடா்பு உடையவை.

விஞ்ஞானிகள் ஒரு குளக்கரையில் பலவிதமான சப்தங்களை எழுப்பிப் பார்தார்கள். அப்போது அவற்றின் அதிர்வுகள் (Vibrations)  நீரின் மேலே மிதக்கின்ற இலேசான துகள்கள் வெவ்வேறு உருவங்களாக அமைந்ததைக் கண்டு நாதத்துக்கே உருவம் கொடுக்கிற சக்தி உண்டு என்பதைக் கண்டறிந்தார்கள்.

ஒவ்வொரு ராகத்துக்கும் ராக தேவதைகள் உண்டு என்று இசை நூல்கள் கூறுகின்றன.

அக்பரின் சபையில் தான்சேன் என்ற இசைமேதை இருந்தார். இரவு நேரத்திற்குரிய ஒரு ராகத்தைப் பாடுமாறு அரசா் கட்டளை இட்டாராம். அப்போது தான்சேன் ஒரு மந்திரத்தை உச்சரித்தவுடன் அரண்மனையின் எல்லாப் பக்கங்களிலும் இருள் கவ்வியதாம்.

சில மந்திர உச்சாடனங்களின் மூலம் இயற்கையையே வசப்படுத்தலாம் என்று தந்திர சாத்திரங்கள் கூறுகின்றன.

இறையருளைப் பெறுவதற்கு மந்திர உபாசனை சிறந்த சாதனம். மந்திர ஜெபத்துக்குரிய வழிமுறைகளையும் நுட்பங்களையும் தந்திர சாத்திரங்கள் கூறுகின்றன.

மந்திரம் என்றால் தன்னை நினைப்பவரைக் காப்பது என்று பொருள்.

எல்லாம் வல்ல கடவுளுக்கு வடிவம் மூன்று. அவை  
1. தூல வடிவம்  
2. சூக்கும வடிவம்  
3. அதி சூக்கும வடிவம்.

அவற்றுள் தூல வடிவம் என்பது மந்திர வடிவம் ஆகும். சூக்கும வடிவம் என்பது உயிருக்குயிராய் நமக்குள்ளே இருக்கிற வடிவம். அதி சூக்கும வடிவம் என்பது உண்மை அறிவாக, ஆனந்த மயமாக உள்ள சிற் சக்தி வடிவம்.

முன்னைய இரண்டும் பொது இயல்பு. பின்னையது சிறப்பு இயல்பு. எல்லாவற்றையும் அறியச் செய்யும் ஆற்றல், உயிர்கட்கு அருள் புரியும் ஆற்றல் என்னும் இரண்டு ஆற்றல்களைக் கொண்டவை மந்திரங்கள்.

மந்திரங்கள் – அதி தேவதைகள் உலகில் உள்ள பொருள்களை இருவகையாக வேறுபடுத்துகிறது.  
1. அசையும் பொருள்  
2. அசையாப்பொருள்.

அசைபவை உயிர்கள். அசையாதவை ஜடப் பொருள்கள். இவ்வாறுள்ள எல்லாப் பொருள்களையும் இடமாகக் கொண்டு அவற்றை இயக்கி வைக்கிற அதி தேவதைகள் உண்டு.

அந்த அதிதேவதைக்கு மந்திரங்கள் உண்டு. மந்திரங்களால் ஆகாத காரியம் இல்லை. இம்மந்திரங்கள் எல்லாவற்றிலும் சிறந்தது ஸ்ரீவித்யை என்கிறது லலிதா சகஸ்ர நாமம்.

பெண் தெய்வங்கட்குரிய மந்தரங்களை ஸ்ரீவித்யை என்பா். ஆண் தெய்வங்கட்குரிய மந்திரங்களை மந்திரம் என்றே குறிப்பிடுவா்.

ஒவ்வொரு மந்திரமும் ஒவ்வொரு தெய்வத்தின் சொரூபம் ஆகும். ஒவ்வொரு மந்திரத்திலும் உயிர்ச்சக்தி உறங்கிக் கிடக்கின்றது. அவை விதைகளைப் போன்றவை. விதை முளைத்துப் பலன் தர வேண்டுமானால் அதற்கான சூழ்நிலைகள் தேவையல்லவா?

ஒரு விதை முளைத்துப் பலன் கொடுக்க வேண்டுமானால்  
1. உரிய காலம் வேண்டும்.  
2. உரிய நிலம் வேண்டும்.  
3. பக்குவப்பட்ட விதையாக இருக்க வேண்டும்.  
4. பழக்கப்பட்டவன் விதைக்க வேண்டும்.  
5. நல்ல கைராசிவேண்டும்.  
6. விதை முளைக்கும் போது கூடவே களைகள் தோன்றும். அவற்றைக் களைய வேண்டும்.  
7. ஆடு மாடுகள் மனிதா்கள் போன்ற உயிர்களிடமிருந்து காப்பாற்ற வேண்டும்.  
8. நீா் பாய்ச்சி உரம் போட வேண்டும்.  
9. நன்கு விளைந்ததும் பாதுகாப்பாக வீட்டில் கொண்டு வந்து சோ்க்க வேண்டும்.

அதுபோலவே மந்திரங்களையும் உரிய காலத்தில் ஜெபிக்க வேண்டும். அவைமனத்தில் பதியும்படி மனநிலை அமைய வேண்டும்.

ஒரு குருவின் மூலமாகப் பெற வேண்டும். சந்தேகம்போக வேண்டும். அவ்வப்போது குருவைத் தரிசித்து மந்திர ஜெபத்துக்கு வலுவை ஊட்டிக் கொள்ள வேண்டும். மந்திரம் பலன்தர ஆரம்பிக்கும்போது அகங்காரம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

எவன் ஒருவன் 14 வருடம் ஒரு குறிப்பிட்ட தெய்வ மந்திரத்தை இடைவிடாமல் ஜெபித்து வருகிறானோ அவனுக்கு அந்த மந்திரம் நிச்சயமாகப் பலன் கொடுக்கும்.

எனக்கு மந்திரம் பலிக்கவில்லை, பலன் தரவில்லை என்று மந்திர ஜெபத்தை விட்டு விடுபவா்கள் சிலர். மந்திரம் பலிப்பது போலப் பலித்து ஆளையும் கீழே தள்ளிவிடும்.

இவற்றையெல்லாம் தெரிந்து வைத்துக் கொண்டு நம்பிக்கையோடும், முயற்சியோடும்பக்தியோடும் உபாசிக்கிறவனே நல்ல உபாசகன்.

சில மந்திரங்கள் காய்களாக இருக்கிற நிலையில் பலன் தரும். சில பழுத்த பின் பலன் தரும். சில விதையாக இருக்கிற நிலையில் பலன் தரும்.

முட்செடி போன்ற மந்திரங்கள் உண்டு. தீமை தரும் மந்திரங்கள் உண்டு. எல்லாவற்றுக்கும் மேலான மந்திரம் ஸ்ரீவித்யை மந்திரம்.

அது ஏகாட்சரி, திரியட்சரி, நவாட்சரி, பஞ்சதசாட்சரி, சோடசாட்சரி,  ஸ்ரீவித்யை என்று ஆறு வகைப்படும்.

ஓா் எழுத்துக் கொண்ட புவனேஸ்வரியின் பீஜ மந்திரம் உடையது ஏகாட்சரி, மூன்று பீஜமந்திரங்கள் கொண்ட வாலையின் மந்திரம் திரியட்சரி. சித்தா்கள் உபாசித்து உயா்வடையக் காரணமான மந்திரம் இது.

ஒன்பதாவது எழுத்துடைய அந்தரியின் மந்திரம் நவாட்சரி15 பீஜங்கள் உடைய புவனாபதியின் மந்திரம் பஞ்சதசாட்சரி.

ஸ்ரீம் என்னும் பீஜத்தை முதலில் கொண்ட 16 எழுத்து மந்திரம் சோடசி. 28 பீஜம் கொண்ட மந்திரம் மகா சோடசாட்சரி. 27 பீஜம் உள்ள மந்திரம் ஸ்ரீ பராவித்தை எனப்படும்.

சோடசி மந்திர உபாசனை செய்தவா் பகவான் இராமகிருஷ்ணா். ஸ்ரீவித்யை உபாசகா்கள் சக்தியின் ஸ்ரீவித்யை மந்திரங்களை உபாசித்து அருள் பெற்றவா்கள் உண்டு.

இராமன், பலராமன், இலக்குவன், பரதன், சூரியன், அக்கினி, குபேரன், இந்திரன், பிரமன், திருமால், சிவன், கணபதி, கந்தன், மன்மதன், நந்தி, மனு, உலோபா முத்திரை, அகத்தியா், துா்வாசா், சநகாதி முனிவா்கள், திருமூலா் இவா்களெல்லாம் ஸ்ரீவித்யை மந்திரம் ஜெபித்து உயா்நிலை அடைந்தவா்களே.

தாடகையைக் கொல்ல இராமனுக்கு விசுவாமித்திரா் உபதேசம் கொடுத்த மந்திரம் பாலா மந்திரம். அதனை “வாலை மந்திரம்” என்பா்.

சித்தா்களின் உபாசனைத் தெய்வம் வாலையே ஆவாள். ஸ்ரீவித்யை போல சிறந்த இன்னொரு மந்திரம் உண்டு. அசபா காயத்ரி என்று பெயா்.

அது ஹம்சம், ஸோஹம் என்று இரண்டு வகை. அசபை, அசபா, காயத்ரி, அம்ச மந்திரம், அங்குச மந்திரம், ஜீவ மந்திரம் எனப் பலபெயா் இதற்குண்டு.

இதனைப் பயபக்தியுடன் ஜெபித்தால் இறந்தவா்களையும் எழுப்பலாம். நினைத்த எல்லாம் கைகூடும். முத்தி கிடைக்கும். கரநியாசம் அங்க நியாசம், அதற்கான முத்திரைகள் என விதிமுறைகளோடு ஜெபித்தால் பலன் உண்டு.

ஒரு நிலைக்கண்ணாடியின் முன்பு நின்று கொண்டு எந்தக் கோலத்தில் நிற்கிறோமோ அந்தக் கோலத்தையே கண்ணாடி காட்டும். அதுபோல ஒருவன் எந்தத் தேவதைக்குரிய மந்திரத்தை ஜெபம் செய்கிறானோ அந்த மந்திரத்திற்குரிய அதி தேவதையாகவே அவன் ஆகிவிடுகிறான் என்பது மந்திர சாத்திர விதி.

அந்நிலையில் அவன் மந்திர ஆன்மாவாகி விடுகிறான் என்பது விதி. “மன ஒருமையோடு என் மந்திரங்களைப் படிக்கிறபோது நீயும் சக்தி மயமாய் ஆகிறாய் மகனே!”– என்பது நம் அன்னையின் அருள்வாக்கு.

பறவை, விலங்கு, மரம் முதலிய அசையும் பொருள், அசையாப் பொருள் ஆகிய அனைத்துக்கும் மந்திரம் உண்டு. அதி தேவதைகள் உண்டு.

மந்திரங்களின் துணையால் உலகியல் இன்பங்களிலிருந்தும், உலகக் கவா்ச்சியிலிருந்தும் விடுபட்டு முக்தியையும் பெறலாம். உலகியல் பொருள்களையும், இன்பங்களையும் அடையலாம்.

மந்திரத்தால் இங்கிருந்தபடியே தேவா்களையும் அழைக்கலாம். வசீகரம் முதலிய சக்திகளையும் பெறலாம். மந்திரத்தால் ஆக்கவும் முடியும், அழிக்கவும் முடியும்.

உடம்பிலே பஞ்ச பூதங்களை வெல்லும் ஆற்றல் வாய்ந்த மையங்கள் உண்டு. மந்திர சித்தி பெற்றவன் கூடுவிட்டுக் கூடு பாயலாம். தண்ணீரில் மூழ்கிக் கிடக்கலாம். நினைத்த இடத்திற்குப் போகலாம். வரலாம். மற்றவா்கள் கண்ணுக்குத் தெரியாமலே உலாவலாம். தேவா் உலகமும் சென்று வரலாம். ஏன்? ஒருவா்க்கு மரணத்தையும் உண்டாக்கலாம்.

மகாலட்சுமி மந்திரம் என ஒன்று உண்டு. இம்மந்திரம் செல்வத்தை அள்ளிக் கொடுப்பது. ஆனால் எல்லோர்க்கும் பலன் தருவது இல்லை. வறுமையில் வாடிய வித்யாரண்யா் இம்மந்திர ஜெபத்தால் வறுமையைப் போக்கிக் கொள்ள மகாலட்சுமி உபாசனையை மேற்கொண்டார். இறுதியில் மகாலட்சுமி அவருக்குக் காட்சி கொடுத்தாள். இந்தப் பிறவியில் உனக்குச் செல்வம் அளிக்க முடியாது. உன் பிராரத்துவ வினை இது என்றாளாம்.

உடனே வித்யாரண்யா், பிறவியிலிருந்து தப்பிக்கக் குறுக்கு வழிஒன்றை மேற்கொண்டார். சந்நியாசம் வாங்கிக் கொண்டால் புதுப்பிறவி எடுப்பதற்குச் சமம். ஆகவே சந்நியாசம் பெற்றுக் கொண்டார். மந்திர ஜெபத்துக்கான பலனை மகாலட்சுமி கொடுத்தாக வேண்டும் அல்லவா? உடனே அளவற்ற செல்வத்தை அள்ளிக் கொடுத்துவிட்டாள். வித்யாரண்யருக்கு இப்போது புதியதரும சங்கடம் வந்து விட்டது. சந்நியாசியாகி விட்டபிறகு பணத்தைத் தொடக்கூடாது.

அடி தாயே! இந்தச் செல்வத்தை வைத்து சந்நியாசியாகிவிட்ட நான் என்ன செய்யப்போகிறேன் என்றாராம். என்ன செய்வாயோ…… தெரியாது. உனக்குக் கொடுத்து கொடுத்ததுதான் என்றாளாம் மகாலட்சுமி. வேறுவழியின்றி இந்து சாம்ராஜ்யத்தை – விஜய நகரப் பேரரசை நிறுவுவதற்காக அரிகரா் என்ற அரசா்கட்கு அந்தச் செல்வத்தை அப்படியே கொடுத்து விட்டாராம்.

நினைத்த காரியத்தில் வெற்றியைக்கொடுப்பது வராகி மந்திரம். ஏவல், பில்லி, சூன்யம் போன்ற தீமைகளை வலுவிழக்கச் செய்வது அஸ்வாரூடா மந்திரம். கா்ண பிசாசினி என்ற தேவதைக்குரிய மந்திரம் உண்டு. இம்மந்திர ஜெபம் சித்தியானால் அந்த உபாசகன் மற்றவா்கள் வாழ்வில் நடந்தவை நடக்க இருப்பவை, ஆகிய சம்பவங்களைத் தெரிந்து சொல்ல முடியும்.

ஆவஹந்தி தேவதை என்ற ஒரு தேவதை உண்டு. அவள் மந்திரததை உள்ளன்போடு ஜெபித்து வந்தால் ஒரு குடும்பத்தைப் பசியில்லாமல்காப்பாற்றும்.

\"ஆவஹந்தியும் அடுப்பிலே நெருப்பும் இருந்தால்சாப்பாட்டுக்குப் பஞ்சமில்லை” என்பது கேரள நாட்டுப் பழமொழி.

தேள்கடி, பாம்புக்கடி, விஷம் இறக்க மந்திரம் உண்டு. எதிரிகளின் சதித்திட்டங்களை முறியடிக்க மந்திரம் உண்டு. வீட்டில் உள்ள கெட்ட தேவதைகளை விரட்ட மந்திரம் உண்டு. வீடு, தோட்டங்களில் திருடுகள் நடக்காமல் தடுக்க மந்திரம் உண்டு. நல்லது செய்யவும் மந்திரம் உண்டு. கெட்டது செய்யவும் மந்திரம் உண்டு.எல்லாமந்திரமும் எல்லோர்க்கும் பலித்து விடுவதில்லை.

ஏன்? தாமிரப் பாத்திரத்தில் தயிரை எடுத்துச் சென்றால் தயிர் கெட்டுப் போகும். சாக்கு மூட்டையில் தண்ணீரை முகா்ந்து கொண்டு செல்ல முடியாது. அது போலத்தான் மந்திரங்களும்!

அதன் குணத்துக்கேற்ற தன்மை படைத்தவா்கள் யாரோ அவா்களால் தான் பலன் பெற முடியும். இது தெரியாமால் தன் விருப்பப்படி மந்திரததைத் தேர்ந்தெடுத்து்ப பலன் காணாமல் பலா் தோற்று விடுகிறார்கள்.

உண்மையான உபாசகன் தன் உள்ளத்துக்கும் உடல் அமைப்புக்கும் மன நிலைக்கும் தக்கபடி ஒரு குருவிடமிருந்தே மந்திர உபதேசம் பெற வேண்டும். சிலருக்கு ஆண் தெய்வ மந்திரங்கள் பலிக்கும். சிலருக்குப் பெண் தெய்வ மந்திரங்கள் பலிக்கும்.

இவற்றையெல்லாம் தக்க குருமார்களிடமிருந்து கேட்டறிந்து பயன்பெற வேண்டும். இந்த மந்திரம் இவனுக்குப் பலன் தருமா என்று பார்த்தே குரு மந்திரம் சொல்வார். “சித்தாரி கோஷ்டம்” என்று அதற்குப் பெயா்.

குரு – மந்திரம் – இஷ்ட தெய்வம் ஆன்ம முன்னேற்றம் பெற விரும்பும் ஒருவனுக்கு வலுவான அடித்தளம் மூன்று தேவை.  
1. இஷ்ட தெய்வம்  
2. மந்திரம்  
3. குரு

ஒருவனது மனப்பக்குவத்துக்கு ஏற்ப ஒரு இஷ்ட தெய்வத்தைத் தோ்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும். அந்தத் தெய்வத்திற்குதிய மந்திரங்களைத் தேர்ந்தெடுத்து உரிய முறையில் பூசை செய்து வர வேண்டும். ஒரு குருவின் தயவு வேண்டும். விவரம் தெரிந்தவா்கள் ஒரு குருவின் மூலம் இஷ்ட தெய்வம், அதற்கான மந்திரம் கேட்டறிந்து பூசை செய்து பலன் அடைவார்கள்.

இதுபோன்ற நுட்பமெல்லாம் தெரியாமல் நாம் கிடப்பதால்தான் அன்னை \"நீங்களெல்லாம் ஆன்மித்தில் அனாதைகள்” என்கிறாள். தன் பக்தனுக்கு வலுவான அடித்தளங்களைப் போட்டுக்கொடுத்திருக்கிறாள். ஆதிபராசக்தியை இஷ்ட தெய்வமாகக் கொண்ட தன்பக்தனுக்கு அடிகளார் என்கிற குருவைக் காட்டிக் கொடுத்திருக்கிறாள். 108, 1008 மந்திரங்களை வழங்கியிருக்கிறாள்.

இந்த மூன்றையும் வலுவாகப் பற்றிக் கொண்டு முன்னுக்கு வர வேண்டும். அது அவரவா் பக்தி சிரத்தையைப் பொறுத்தது. முயற்சியைப் பொறுத்தது.

தெய்வம்: குரு:  மந்திரம்: உன் இஷ்ட தெய்வத்தை வெறும் கல்லாகப் பார்க்காதே!  உன் குருவைச் சாதாரண மனிதனாக எண்ணாதே! மந்திரங்களை வெறும் வார்த்தைகள் தானே என்று நினைக்காதே!  என்று தந்திர சாத்திரங்கள் அறிவுரை கூறி எச்சரிக்கின்றன.

மந்திரங்கள் நால்வகை  
1) ஒரு அட்சரம் உள்ள மந்திரம் பிண்டம் எனப்படும். அட்சரம் என்பது எழுத்து.  
2) இரண்டு அட்சரம் கொண்டவை கர்தரீ. கத்திரிபோன்ற இருமுனை உள்ளவை கர்தரீ. 3) மூன்று முதல் ஒன்பது வரை அட்சரங்கள் கொண்டவை பீஜம் எனப்படும்.  
4) 10 முதல் 20 வரை அட்சரங்கள் கொண்டவை மந்திரங்கள்.  
5) 20 க்கும் மேற்பட்ட அட்சரங்களை உடையவை மாலா மந்திரம். லலிதா சகஸ்ரநாமம்1008 மந்திரங்கள் கொண்டது. விஷ்ணு சகஸ்ரநாமம் 1008 மந்திரங்கள் கொண்டது. இவை மாலா மந்திரம் என்ற பிரிவில் அடங்கும்.புரச் சரணம்பெண் தெய்வங்கட்குரிய மந்திரங்கள் வித்யை எனப்படும். அது பலன் கொடுப்பதற்குப் புரச்சரணம் முதலிய வழிபாட்டு முறைகளைக் கையாள வேண்டும்.

புர – என்றால் முன்னதாக என்று பொருள். சரணம் என்றால் செய்ய வேண்டியவை என்று பொருள்.

ஒரு குருவிடமிருந்து மந்திர உபதேசம்பெற்றதும், உபாசகன் தான் தனித்து வழிபாடு செய்வதற்கு முன் மந்திர சித்தி பெறச் செய்யும் சடங்குகள் புரச்சரணம் எனப்படும். புரச்சரணம் என்றால் லட்சம் தடவை, கோடி தடவை உச்சரித்து உரு ஏற்றுதல் என்றும் கூறப்படுகிறது.

மந்திரங்கள் சித்தி பெற விரும்புகிறவன் மந்திரத்தில் உள்ள அட்சரங்களைக் கணக்கிட்டு அவ்வளவு லட்சம் மந்திர ஜபம் புரியவேண்டும்.பாலா மந்திரம் 3 அட்சரங்களைக் கொண்டது. இந்த மந்திர உபதேசம் பெற்றவன் மந்திர சித்தி பெற 3 லட்சம் தடவை மந்திரத்தை ஜபம் செய்ய வேண்டும்.

சிவ பஞ்சாட்சரி என்று ஒரு மந்திரம். அது ஐந்து அட்சரங்கள் கொண்டது. மந்திர சித்தி பெற விரும்புகிறவன் ஐந்து லட்சம் வரை ஜபம் செய்ய வேண்டும். மந்திர ஜப எண்ணிக்கைக்கு ஏற்றவாறு ஓமம், ஏழை பிராமணா்க்கு அன்னதானம், தா்ப்பணம், மார்ஜனம் என்ற நான்கும் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வது புரச்சரணம் எனப்படும்.

பலன் தருவதை ஒட்டி மந்திரங்கள் நால்வகைப்படும். அவை  
1. சித்த மந்திரங்கள்  
2. சுத்த மந்திரங்கள்  
3. சாத்திய மந்திரங்கள்  
4. சத்துரு மந்திரங்கள்.

புரச்சரணம் செய்வதால் அந்த மந்திரம் நினைத்த பலனைக் கொடுக்கும் அளவிற்குச் சித்தியாகிவிடும். குறிப்பிட்ட அளவு ஜபம் முதலியவற்றைச் செய்தால் சித்தியளிப்பவை உண்டு. அத்தகையவை சித்த மந்திரங்கள் எனப்படும்.

குறிப்பிட்ட அளவு ஜபம் செய்யாமலேயே குருவிடமிருந்து உபதேசம் பெற்றதும், ஜெபம் செய்ததும் சித்தி தரவல்ல மந்திரங்கள் உண்டு. அத்தகையவை சுரித்தம் எனப்படும்.

முன்பிறவிகளில் ஒருவன் மந்திரத்தைத் தவறாகப் பயன்படுத்தியிருக்கலாம். மந்திரதேவதையிடம் தவறாக நடந்து கொண்டு அதற்கு எதிரியாகி இருக்கலாம். அத்தகையவன் இப்பிறவியில் மந்திரஜபம் செய்யும்போது காப்பாற்ற வேண்டிய மந்திரம் அவனையும், அவன் குடும்பத்தையும் தண்டிக்கும்.

அத்தகைய மந்திரங்கட்கு அரிமந்திரம் அல்லது சத்துரு மந்திரம் என்று பெயா்.மேற்கண்ட நான்கு வகை மந்திரங்களை அறிந்து கொள்ள வேண்டி ஜாதகம் பார்ப்பது போல கட்டகங்கள் போட்டு விடை காண்பது சித்தாரி கோஷ்டம் எனப்படும். அவ்வாறு சோதித்துப் பார்த்த பிறகே குரு சீடனுக்கு மந்திர உபதேசம் செய்வார்.

திருமணம்நடப்பதற்கு முன்பு பெண்ணுக்கும்பிள்ளைக்கும் பொருத்தம் பார்ப்பதே சித்தாரி கோஷ்டம்.

சில மந்திரங்களுக்கு இவ்வாறு கோஷ்டம் பார்ப்பது இல்லை.

ஓா் எழுத்து கொண்டவை, மூன்று எழுத்து கொண்டவை, மிருத்தியுஞ்சயம், காளி, சியாமளா, சண்டிகை, இராமன், ஸ்ரீவித்யா, புவனேஸ்வரி, ராஜசியாமளா முதலிய மந்திரங்கட்கு இவ்விதி இல்லை. எப்போதும் யாவருக்கும் சித்தமான மந்திரங்கள் இவை.

பீஜ மந்திரங்கள்: மந்திரங்கள் என்பவை வெறும் சப்தங்கள் அல்ல. அந்தச் சப்தங்களிலிருந்துதான் படைப்பே தொடங்கியது என்கிறார்கள் ஞானிகள். ஓம் என்ற மந்திரத்திலிருந்தே பஞ்ச பூதங்கள் தோன்றின என்கிறார் திருமூலா்.

பிரபஞ்சம் தோன்றியது எப்படி?  
ஆதிக்கும் ஆதியிலே வெட்ட வெளிகிய சூன்யம் பரவெளியெங்கும் பரமாத்மா அணுவுக்குள் அணுவாக இரண்டறக் கலந்து நீக்கமற நிறைந்து பரிபூரணமாக நின்றது. அத்தகைய கோடானுகோடி அணுக் கூட்டங்கள் – இயற்கைச் சக்திகள் தன்னைத் தானே அதிவேகமாய்ச் சுழன்று ஓடியாடி இயங்கிக் கொண்டிருந்தன.

அத்தகைய சுழற்சியின் அதிவேகத்தால் அணுக்கூட்டங்கள் ஒன்றை ஒன்று உராய்ந்த காரண காரியத்தினால் முதன் முதலாக ஓசை (நாதம்) உண்டாயிற்று. அதைத் தொடா்ந்து ஒளி (விந்து) உண்டாயிற்று.

இதனையே பௌதிக விஞ்ஞானம் ஒலி (Sound) ஒளி (light) என்று பிரித்து ஆராய்ந்து கூறுகிறது. இந்த நாத விந்து என்பனவற்றைச் சிவம் என்றும் சக்தி என்றும் கூறுவா்.

\"நாத விந்து கலாதி நமோ! நம!\" என்று பாடுகிறார் அருணகிரிநாதர்.

இப்படி உண்டான நாத விந்துவிலிருந்து \"அ” – \"உ” – \"ம” என்ற மூன்று மந்திர எழுத்து உண்டாகி ஓம் என்ற பிரணவம் ஆயிற்று.

இந்தப் பிரணவத்திலிருந்தே நிலம், நீா், நெருப்பு, காற்று, ஆகாயம் எனும் பஞ்ச பூதங்கள் தோன்றின.

இப்பஞ்ச பூதக் கூட்டுறவிலிருந்து அந்தச்சக்தியிலிருந்து அண்ட – பகிரண்டசராசரங்களும், நவக்கிரகங்களும், கோடானுகோடி நட்சத்திரங்களும் மற்றும் சகலமும் தோன்றின.

இவைகளை அடக்கி, ஒழுக்கி, நடுநிலையிலிருந்து ஆட்சிபுரிய வேண்டிப் படைத்தல், காத்தல், அழித்தல், அருளல் என்ற காரியங்களைப் பரமாத்மா மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டது என்கிறார்கள் தத்துவ ஞானிகள்.

எனவே பிரபஞ்சத் தோற்றத்துக்கு மூலகாரணம் ஒலியும் ஒளியுமே என்று தெரிகிறது. ஓங்கார நாதமும் ஓங்கார ஒளியும் என்று தெரிகிறது. அந்த ஓங்கார நாதமும் ஓங்கார ஒளியும் நம் உடம்புக்குள்ளேயே இருக்கின்றன.

இந்த ஒளி மூலமாகவும் ஒலி மூலமாகவும் கடவுளை எட்டிப்பிடிக்க வேண்டும். அதற்காகவே மந்திர உபாசனை! நாக உபாசனை! அந்த ஒலியின் மூலமாக  அந்த அருள் ஒளியைத் தரிசித்து ஆனந்தமாகக் கிடக்கலாம்.

வள்ளலார் அப்படி ஒளியை அனுபவித்தவா். உலகப் பொருள் அனைத்திலும் ஒலியும் உண்டு, ஒளியும் உண்டு. ஒவ்வொரு பொருளும் மூலமான ஓா் ஒலியிலிருந்தே உற்பத்தியாயிற்று.

அந்த மூல ஒலியை நுண் ஒலியை பீஜ மந்திரம் என்பார்கள். \"முளை” மந்திரம் என்பார்கள்.

பஞ்ச பூதங்களை எடுத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொன்றுக்கும் பீஜ மந்திரம் உண்டு. அதற்கென்று ஒளிதரும் நிறம் உண்டு. வடிவம் உண்டு. அவை வருமாறு  
1.நிலம்: லம் (Lam) பீஜ மந்திரம். சதுர வடிவம். பொன் அல்லது மஞ்சள் நிறம்.  
2.நீா்: வம் (Vam) என்பது பீஜ மந்திரம். பிறை வடிவம். வெண்மை நிறம்  
3.நெருப்பு: ரம் (Ram) என்பது பீஜ மந்திரம். முக்கோண வடிவம். சிவந்த நிறம்  
4.காற்று: யம் (Yam) என்பது பீஜ மந்திரம். அறுகோண வடிவம். கருமை நிறம்  
5.ஆகாயம்: ஹம் (Hum) என்பது பீஜ மந்திரம். வட்ட வடிவம். கருமைநிறம்

உலகில் உள்ள சப்தங்களையெல்லாம் நுணுகி ஆராய்ந்து அந்த சப்தங்களையே 51 எழுத்துக்களாக சமஸ்கிருத மொழியில் வைத்துக்கொண்டார்கள். அந்த 51 எழுத்து சப்தங்களும் நம் உடம்பின் பல பகுதிகளில் உண்டு.

எல்லாச் சப்தங்களுமே ஓங்காரத்திலிருந்து பிறந்தவையே. ஆனாலும் குறிப்பிட்ட சில சப்தங்களுக்குரிய தேவதைகள் உண்டு. அவை அந்தந்தத் தேவதைக்குரிய பீஜ மந்திரம் எனப்படும்.

உதாரணமாக ஸ்ரீம் (Srim) என்பது லட்சுமிக்குரிய பீஜமந்திரம்  
க்ரீம் (Krim) என்பது காளிக்குரிய பீஜ மந்திரம். ஐம் (Aim) என்பது சரஸ்வதிக்குரிய பீஜ மந்திரம்.

நவக்கிரகங்கட்கும் பீஜ மந்திரங்கள் உண்டு. அவை  
1.சூரியன்        க்ரீம் (Krim)  
2.சந்திரன்        ரீம் (Rim)  
3.செவ்வாய்      ஹ்ரீம் (Hrim)  
4.புதன்           ஸ்ரீம் (Srim)  
5.வியாழன்       ஔம் (Houm)  
6.வெள்ளி        கிலீம் (Klim)  
7.சனி            ஐம் (Aim)  
8.ராகு           ஹ்ரௌம் (Hraum)  
9.கேது           சௌம் (Soum)

வடமொழி எழுத்துக்களில் ஒவ்வொரு உயிரெழுத்தும் தனித்தனியே எல்லா மெய்யெழுத்துக்களுடன் கூடினால் எத்தனை சப்தங்கள் உண்டோ அத்தனை பீஜ மந்திரங்கள் இருக்கின்றன.

ஒவ்வொரு எழுத்தை உச்சரிப்பதால் ஒரு குறிப்பிட்ட வேகமுள்ள சலனம் உண்டாகி உடலின் பாகங்களில் ஒரு குறிப்பிட்ட பாகத்தைப் பாதிக்கின்றது.

எடுத்துக்காட்டாக, ஓம், ஹ்ராம் (Hram) ஹ்ரீம் (Hrim) ஹ்ரூம் (Hrum) ஹ்ரைம் (Hraim) ஹ்ரௌம் (Hraum) ஹ்ர (Hra) என்ற பீஜ மந்திரங்களைப் பார்ப்போம்.

“ஓம்” வெட்ட வெளியில் பிறந்த முதல் ஒலி. இதுவே மற்ற சப்தங்கள் அனைத்துக்கும் தாய் – ஒலியின் பிறப்பிடம் இதுவே. இப்பிரணவம் உலகத்தின் உள் தத்துவத்தைத் தன்னுள்ளே அடக்கியிருக்கிறது.

“ஹ” (Rha) என்ற ஒலி இருதயப் பகுதியில் ஏற்படும் சலனத்தால் உண்டாவதால் இருதயத்திற்குப் பலத்தைக் கொடுத்து அதிக ரத்த ஓட்டத்தை உண்டாக்குகிறது.

“ர” (Ra) என்ற ஒலி நாக்கின் நுனியால் நாக்கின் மேல் அண்ணத்தின் முன் பாகத்தைத்தொடுவதால்தான் ஏற்படுகின்றது. இந்த “ர்” சப்தத்தினால் நாக்கு நுனியில் உள்ள நரம்பு முனைகள் மூலமாய் மூளையில் சலனத்தை ஏற்படுத்துகின்றன.

“ம்” – வாயை மூடிக் காற்றை வயிற்றிலிருந்து மூக்கு வழியாக வெளியிடுவதால் உண்டாகும் சப்தம். இது மூச்சுக் குழாயையும் மூக்குத் துவாரங்களையும் சுத்தப்படுத்துகிறது.

ஹ்ராம் (Hram) – இதிலுள்ள “ஆ” என்னும் உயிரெழுத்து விலா எலும்புகளை எழுப்பி உணவுக் குழாயைச் சுத்தப்படுத்துகிறது. இதன் சலனம் அனாகத சக்கரமாகிய இருதயத்தின் அருகிலிருந்து எழும்புகிறது.

ஹ்ரீம் (Hrim) – ஈ என்ற உயிரெழுத்தை உச்சரிப்பதால் கழுத்துப் பகுதியில் உள்ள சக்தி கேந்திரமான விசுத்தி சக்கரத்தில் சலனம் உண்டாகிறது. ஆதலால் இது தொண்டை, மூக்கு, வாய் முதலிய அவயவங்களுக்கு நன்மை பயக்கிறது. இதன் சக்தி கீழேயும் பரவி சுவாச உறுப்புக்களையும் ஜீரண உறுப்புக்களையும் சுத்தப்படுத்துகிறது.

ஹ்ரூம் (Hrum) – “ஊ” வின் சலனம் நாபிப் பகுதியில் உள்ள மணிபூரகச் சக்கரத்தில் எழும்புவதால் ஈரல், குலை முதலிய உறுப்புக்களை ஊக்குவித்து சரிகின்ற தொந்தியையும் கரைக்க உதவுகிறது.

ஹ்ரைம் (Hraim) – “ஐ” சப்தம் தொப்புளுக்குக் கீழேயுள்ள சுவாதிட்டான சக்கரத்தில் சலன அலைகளை எழுப்புகிறது. இச் சலனம் சிறுநீரக உறுப்புகட்குப் புத்துணா்ச்சி அளித்து சிறுநீா்சுரப்பதை ஒழுங்கானதாகவும் சரியானதாகவும் செய்கிறது.

ஹ்ரௌம் (Hraum) – “ஒலி” – மூலாதார சக்தியால் எழுப்பப்படும் சலன அலைகளால் ஆனது. ஆதலால் அச்சக்கரத்திலிருந்து பிரியும் நரம்புகளால் வியாபிக்கப்பட்டிருக்கும் ஆசனம் முதலிய கீழ் உறுப்புக்களை வலுப்படுத்துகிறது.

ஹ்ர (Hra) – இதில் “அ” இருப்பதால் ஹ்ராம் என்ற பீஜத்தை ஒத்திருக்கின்றது. ஆதலால் இது இதயப் பகுதியான அனாகத  சக்கரத்தைச் சலனப்படுத்துவதுடன் இல்லாமல் அடியில் மூலாதாரத்திலிருந்து உச்சியிலுள்ள சகஸ்ராரம் வரை ஏழு கேந்திரங்களிலும் சரியான சலனத்தை எழுப்பி உடலின் எல்லா அவயவங்களையும் ஊக்குவிக்கிறது.

அஜபா மந்திரம் இதற்கு ஹம்ஸ மந்திரம் என்ற பெயரும் உண்டு. மூக்கிலிருந்து செல்லும் காற்று “ஹம்” என்ற ஒலியோடு வெளியே செல்கிறது. அதே காற்று \"ஸம்\" என்ற ஒலியோடு உள் நுழைகிறது. நமது முயற்சி எதுவும் இல்லாமலேயே மூச்சு வாங்கும்போதும், மூச்சு விடும்போதும் இடைவிடாமல் இம் மந்திரம் ஓடிக்கொண்டிருக்கிறது.

ஹம்ஸம் – ஸோஹம் என்ற மந்திரங்கள் உண்டாகின்றன. இதற்கு அஜபா காயத்திரி என்று பெயா்.

மந்திர யோகம்:- மந்திர ஜெபத்தின் மூலம் கடவுளை அடைவது மந்திர யோகம் எனப்படும். எப்போதும் அலை பாய்கின்ற மனத்தை அலையாமல் கொண்டு வந்து நிறுத்திப் பழகுவதற்கு மந்திர ஜபம் உதவுகின்றது. மனத்தை ஒருமுகப்படுத்தி மந்திர ஜெபம் செய்வதால் நம் மனம் என்கிற பாத்திரம் சுத்தமாகிக்கொண்டே வரும்.

மந்திர ஜெபம் செய்வதால் பூா்வ ஜென்ம வாசனைகள் என்ற எண்ணப் பதிவுகள் தேய்கின்றன. அதனால் பாவங்கள் குறைகின்றன. மனம் ஒன்றிய மந்திர ஜெபத்தால் அந்த மந்திரத்துக்குரிய தெய்வங்களின் காட்சியும் கிடைக்கலாம். மந்திர ஒலி அதிர்வுகள் நம் உடம்பில் உள்ள 72000 நாடி நரம்புகளில் சில சலனங்களை உண்டாக்குகின்றன.

Thursday, November 14, 2019

ஶ்ரீ ஶிவமஹிம்னஸ்தோத்ரம்

அத ஶ்ரீ ஶிவமஹிம்னஸ்தோத்ரம் ||
மஹிம்னஃ பாரம் தே பரமவிதுஷோ யத்யஸத்றுஶீ
ஸ்துதிர்ப்ரஹ்மாதீனாமபி ததவஸன்னாஸ்த்வயி கிரஃ |
அதா‌உவாச்யஃ ஸர்வஃ ஸ்வமதிபரிணாமாவதி க்றுணன்
மமாப்யேஷ ஸ்தோத்ரே ஹர னிரபவாதஃ பரிகரஃ || 1 ||

அதீதஃ பம்தானம் தவ ச மஹிமா வாங்மனஸயோஃ
அதத்வ்யாவ்றுத்த்யா யம் சகிதமபிதத்தே ஶ்ருதிரபி |
ஸ கஸ்ய ஸ்தோதவ்யஃ கதிவிதகுணஃ கஸ்ய விஷயஃ
பதே த்வர்வாசீனே பததி ன மனஃ கஸ்ய ன வசஃ || 2 ||

மதுஸ்பீதா வாசஃ பரமமம்றுதம் னிர்மிதவதஃ
தவ ப்ரஹ்மன்‌ கிம் வாகபி ஸுரகுரோர்விஸ்மயபதம் |
மம த்வேதாம் வாணீம் குணகதனபுண்யேன பவதஃ
புனாமீத்யர்தே‌உஸ்மின் புரமதன புத்திர்வ்யவஸிதா || 3 ||



தவைஶ்வர்யம் யத்தஜ்ஜகதுதயரக்ஷாப்ரலயக்றுத்
த்ரயீவஸ்து வ்யஸ்தம் திஸ்ருஷு குணபின்னாஸு தனுஷு |
அபவ்யானாமஸ்மின் வரத ரமணீயாமரமணீம்
விஹன்தும் வ்யாக்ரோஶீம் விததத இஹைகே ஜடதியஃ || 4 ||

கிமீஹஃ கிம்காயஃ ஸ கலு கிமுபாயஸ்த்ரிபுவனம்
கிமாதாரோ தாதா ஸ்றுஜதி கிமுபாதான இதி ச |
அதர்க்யைஶ்வர்யே த்வய்யனவஸர துஃஸ்தோ ஹததியஃ
குதர்கோ‌உயம் காம்ஶ்சித் முகரயதி மோஹாய ஜகதஃ || 5 ||

அஜன்மானோ லோகாஃ கிமவயவவன்தோ‌உபி ஜகதாம்
அதிஷ்டாதாரம் கிம் பவவிதிரனாத்றுத்ய பவதி |
அனீஶோ வா குர்யாத் புவனஜனனே கஃ பரிகரோ
யதோ மன்தாஸ்த்வாம் ப்ரத்யமரவர ஸம்ஶேரத இமே || 6 ||

த்ரயீ ஸாங்க்யம் யோகஃ பஶுபதிமதம் வைஷ்ணவமிதி
ப்ரபின்னே ப்ரஸ்தானே பரமிதமதஃ பத்யமிதி ச |
ருசீனாம் வைசித்ர்யாத்றுஜுகுடில னானாபதஜுஷாம்
ன்றுணாமேகோ கம்யஸ்த்வமஸி பயஸாமர்ணவ இவ || 7 ||

மஹோக்ஷஃ கட்வாங்கம் பரஶுரஜினம் பஸ்ம பணினஃ
கபாலம் சேதீயத்தவ வரத தன்த்ரோபகரணம் |
ஸுராஸ்தாம் தாம்றுத்திம் தததி து பவத்பூப்ரணிஹிதாம்
ன ஹி ஸ்வாத்மாராமம் விஷயம்றுகத்றுஷ்ணா ப்ரமயதி || 8 ||

த்ருவம் கஶ்சித் ஸர்வம் ஸகலமபரஸ்த்வத்ருவமிதம்
பரோ த்ரௌவ்யா‌உத்ரௌவ்யே ஜகதி கததி வ்யஸ்தவிஷயே |
ஸமஸ்தே‌உப்யேதஸ்மின் புரமதன தைர்விஸ்மித இவ
ஸ்துவன்‌ ஜிஹ்ரேமி த்வாம் ன கலு னனு த்றுஷ்டா முகரதா || 9 ||

தவைஶ்வர்யம் யத்னாத் யதுபரி விரிஞ்சிர்ஹரிரதஃ
பரிச்சேதும் யாதாவனலமனலஸ்கன்தவபுஷஃ |
ததோ பக்திஶ்ரத்தா-பரகுரு-க்றுணத்ப்யாம் கிரிஶ யத்
ஸ்வயம் தஸ்தே தாப்யாம் தவ கிமனுவ்றுத்திர்ன பலதி || 10 ||

அயத்னாதாஸாத்ய த்ரிபுவனமவைரவ்யதிகரம்
தஶாஸ்யோ யத்பாஹூனப்றுத ரணகண்டூ-பரவஶான் |
ஶிரஃபத்மஶ்ரேணீ-ரசிதசரணாம்போருஹ-பலேஃ
ஸ்திராயாஸ்த்வத்பக்தேஸ்த்ரிபுரஹர விஸ்பூர்ஜிதமிதம் || 11 ||

அமுஷ்ய த்வத்ஸேவா-ஸமதிகதஸாரம் புஜவனம்
பலாத் கைலாஸே‌உபி த்வததிவஸதௌ விக்ரமயதஃ |
அலப்யா பாதாலே‌உப்யலஸசலிதாம்குஷ்டஶிரஸி
ப்ரதிஷ்டா த்வய்யாஸீத் த்ருவமுபசிதோ முஹ்யதி கலஃ || 12 ||

யத்றுத்திம் ஸுத்ராம்ணோ வரத பரமோச்சைரபி ஸதீம்
அதஶ்சக்ரே பாணஃ பரிஜனவிதேயத்ரிபுவனஃ |
ன தச்சித்ரம் தஸ்மின் வரிவஸிதரி த்வச்சரணயோஃ
ன கஸ்யாப்யுன்னத்யை பவதி ஶிரஸஸ்த்வய்யவனதிஃ || 13 ||

அகாண்ட-ப்ரஹ்மாண்ட-க்ஷயசகித-தேவாஸுரக்றுபா
விதேயஸ்யா‌உ‌உஸீத்‌ யஸ்த்ரினயன விஷம் ஸம்ஹ்றுதவதஃ |
ஸ கல்மாஷஃ கண்டே தவ ன குருதே ன ஶ்ரியமஹோ
விகாரோ‌உபி ஶ்லாக்யோ புவன-பய- பங்க- வ்யஸனினஃ || 14 ||

அஸித்தார்தா னைவ க்வசிதபி ஸதேவாஸுரனரே
னிவர்தன்தே னித்யம் ஜகதி ஜயினோ யஸ்ய விஶிகாஃ |
ஸ பஶ்யன்னீஶ த்வாமிதரஸுரஸாதாரணமபூத்
ஸ்மரஃ ஸ்மர்தவ்யாத்மா ன ஹி வஶிஷு பத்யஃ பரிபவஃ || 15 ||


மஹீ பாதாகாதாத் வ்ரஜதி ஸஹஸா ஸம்ஶயபதம்
பதம் விஷ்ணோர்ப்ராம்யத் புஜ-பரிக-ருக்ண-க்ரஹ- கணம் |
முஹுர்த்யௌர்தௌஸ்த்யம் யாத்யனிப்றுத-ஜடா-தாடித-தடா
ஜகத்ரக்ஷாயை த்வம் னடஸி னனு வாமைவ விபுதா || 16 ||

வியத்வ்யாபீ தாரா-கண-குணித-பேனோத்கம-ருசிஃ
ப்ரவாஹோ வாராம் யஃ ப்றுஷதலகுத்றுஷ்டஃ ஶிரஸி தே |
ஜகத்த்வீபாகாரம் ஜலதிவலயம் தேன க்றுதமிதி
அனேனைவோன்னேயம் த்றுதமஹிம திவ்யம் தவ வபுஃ || 17 ||

ரதஃ க்ஷோணீ யன்தா ஶதத்றுதிரகேன்த்ரோ தனுரதோ
ரதாங்கே சன்த்ரார்கௌ ரத-சரண-பாணிஃ ஶர இதி |
திதக்ஷோஸ்தே கோ‌உயம் த்ரிபுரத்றுணமாடம்பர-விதிஃ
விதேயைஃ க்ரீடன்த்யோ ன கலு பரதன்த்ராஃ ப்ரபுதியஃ || 18 ||

ஹரிஸ்தே ஸாஹஸ்ரம் கமல பலிமாதாய பதயோஃ
யதேகோனே தஸ்மின்‌ னிஜமுதஹரன்னேத்ரகமலம் |
கதோ பக்த்யுத்ரேகஃ பரிணதிமஸௌ சக்ரவபுஷஃ
த்ரயாணாம் ரக்ஷாயை த்ரிபுரஹர ஜாகர்தி ஜகதாம் || 19 ||

க்ரதௌ ஸுப்தே ஜாக்ரத்‌ த்வமஸி பலயோகே க்ரதுமதாம்
க்வ கர்ம ப்ரத்வஸ்தம் பலதி புருஷாராதனம்றுதே |
அதஸ்த்வாம் ஸம்ப்ரேக்ஷ்ய க்ரதுஷு பலதான-ப்ரதிபுவம்
ஶ்ருதௌ ஶ்ரத்தாம் பத்வா த்றுடபரிகரஃ கர்மஸு ஜனஃ || 20 ||

க்ரியாதக்ஷோ தக்ஷஃ க்ரதுபதிரதீஶஸ்தனுப்றுதாம்
றுஷீணாமார்த்விஜ்யம் ஶரணத ஸதஸ்யாஃ ஸுர-கணாஃ |
க்ரதுப்ரம்ஶஸ்த்வத்தஃ க்ரதுபல-விதான-வ்யஸனினஃ
த்ருவம் கர்துஃ ஶ்ரத்தா-விதுரமபிசாராய ஹி மகாஃ || 21 ||

ப்ரஜானாதம் னாத ப்ரஸபமபிகம் ஸ்வாம் துஹிதரம்
கதம் ரோஹித்‌ பூதாம் ரிரமயிஷும்றுஷ்யஸ்ய வபுஷா |
தனுஷ்பாணேர்யாதம் திவமபி ஸபத்ராக்றுதமமும்
த்ரஸன்தம் தே‌உத்யாபி த்யஜதி ன ம்றுகவ்யாதரபஸஃ || 22 ||

ஸ்வலாவண்யாஶம்ஸா த்றுததனுஷமஹ்னாய த்றுணவத்
புரஃ ப்லுஷ்டம் த்றுஷ்ட்வா புரமதன புஷ்பாயுதமபி |
யதி ஸ்த்ரைணம் தேவீ யமனிரத-தேஹார்த-கடனாத்
அவைதி த்வாமத்தா பத வரத முக்தா யுவதயஃ || 23 ||

ஶ்மஶானேஷ்வாக்ரீடா ஸ்மரஹர பிஶாசாஃ ஸஹசராஃ
சிதா-பஸ்மாலேபஃ ஸ்ரகபி ன்றுகரோடீ-பரிகரஃ |
அமங்கல்யம் ஶீலம் தவ பவது னாமைவமகிலம்
ததாபி ஸ்மர்த்றூணாம் வரத பரமம் மங்கலமஸி || 24 ||

மனஃ ப்ரத்யக்சித்தே ஸவிதமவிதாயாத்த-மருதஃ
ப்ரஹ்றுஷ்யத்ரோமாணஃ ப்ரமத-ஸலிலோத்ஸங்கதி-த்றுஶஃ |
யதாலோக்யாஹ்லாதம் ஹ்ரத இவ னிமஜ்யாம்றுதமயே
ததத்யன்தஸ்தத்த்வம் கிமபி யமினஸ்தத் கில பவான் || 25 ||

த்வமர்கஸ்த்வம் ஸோமஸ்த்வமஸி பவனஸ்த்வம் ஹுதவஹஃ
த்வமாபஸ்த்வம் வ்யோம த்வமு தரணிராத்மா த்வமிதி ச |
பரிச்சின்னாமேவம் த்வயி பரிணதா பிப்ரதி கிரம்
ன வித்மஸ்தத்தத்த்வம் வயமிஹ து யத் த்வம் ன பவஸி || 26 ||

த்ரயீம் திஸ்ரோ வ்றுத்தீஸ்த்ரிபுவனமதோ த்ரீனபி ஸுரான்
அகாராத்யைர்வர்ணைஸ்த்ரிபிரபிததத் தீர்ணவிக்றுதி |
துரீயம் தே தாம த்வனிபிரவருன்தானமணுபிஃ
ஸமஸ்தம் வ்யஸ்தம் த்வாம் ஶரணத க்றுணாத்யோமிதி பதம் || 27 ||

பவஃ ஶர்வோ ருத்ரஃ பஶுபதிரதோக்ரஃ ஸஹமஹான்
ததா பீமேஶானாவிதி யதபிதானாஷ்டகமிதம் |
அமுஷ்மின் ப்ரத்யேகம் ப்ரவிசரதி தேவ ஶ்ருதிரபி
ப்ரியாயாஸ்மைதாம்னே ப்ரணிஹித-னமஸ்யோ‌உஸ்மி பவதே || 28 ||

னமோ னேதிஷ்டாய ப்ரியதவ தவிஷ்டாய ச னமஃ
னமஃ க்ஷோதிஷ்டாய ஸ்மரஹர மஹிஷ்டாய ச னமஃ |
னமோ வர்ஷிஷ்டாய த்ரினயன யவிஷ்டாய ச னமஃ
னமஃ ஸர்வஸ்மை தே ததிதமதிஸர்வாய ச னமஃ || 29 ||

பஹுல-ரஜஸே விஶ்வோத்பத்தௌ பவாய னமோ னமஃ
ப்ரபல-தமஸே தத் ஸம்ஹாரே ஹராய னமோ னமஃ |
ஜன-ஸுகக்றுதே ஸத்த்வோத்ரிக்தௌ ம்றுடாய னமோ னமஃ
ப்ரமஹஸி பதே னிஸ்த்ரைகுண்யே ஶிவாய னமோ னமஃ || 30 ||

க்றுஶ-பரிணதி-சேதஃ க்லேஶவஶ்யம் க்வ சேதம் க்வ ச தவ குண-ஸீமோல்லங்கினீ ஶஶ்வத்றுத்திஃ |
இதி சகிதமமன்தீக்றுத்ய மாம் பக்திராதாத் வரத சரணயோஸ்தே வாக்ய-புஷ்போபஹாரம் || 31 ||

அஸித-கிரி-ஸமம் ஸ்யாத் கஜ்ஜலம் ஸின்து-பாத்ரே ஸுர-தருவர-ஶாகா லேகனீ பத்ரமுர்வீ |
லிகதி யதி க்றுஹீத்வா ஶாரதா ஸர்வகாலம் ததபி தவ குணானாமீஶ பாரம் ன யாதி || 32 ||

அஸுர-ஸுர-முனீன்த்ரைரர்சிதஸ்யேன்து-மௌலேஃ க்ரதித-குணமஹிம்னோ னிர்குணஸ்யேஶ்வரஸ்ய |
ஸகல-கண-வரிஷ்டஃ புஷ்பதன்தாபிதானஃ ருசிரமலகுவ்றுத்தைஃ ஸ்தோத்ரமேதச்சகார || 33 ||

அஹரஹரனவத்யம் தூர்ஜடேஃ ஸ்தோத்ரமேதத் படதி பரமபக்த்யா ஶுத்த-சித்தஃ புமான் யஃ |
ஸ பவதி ஶிவலோகே ருத்ரதுல்யஸ்ததா‌உத்ர ப்ரசுரதர-தனாயுஃ புத்ரவான் கீர்திமாம்ஶ்ச || 34 ||

மஹேஶான்னாபரோ தேவோ மஹிம்னோ னாபரா ஸ்துதிஃ |
அகோரான்னாபரோ மன்த்ரோ னாஸ்தி தத்த்வம் குரோஃ பரம் || 35 ||

தீக்ஷா தானம் தபஸ்தீர்தம் ஜ்ஞானம் யாகாதிகாஃ க்ரியாஃ |
மஹிம்னஸ்தவ பாடஸ்ய கலாம் னார்ஹன்தி ஷோடஶீம் || 36 ||

குஸுமதஶன-னாமா ஸர்வ-கன்தர்வ-ராஜஃ
ஶஶிதரவர-மௌலேர்தேவதேவஸ்ய தாஸஃ |
ஸ கலு னிஜ-மஹிம்னோ ப்ரஷ்ட ஏவாஸ்ய ரோஷாத்
ஸ்தவனமிதமகார்ஷீத் திவ்ய-திவ்யம் மஹிம்னஃ || 37 ||

ஸுரகுருமபிபூஜ்ய ஸ்வர்க-மோக்ஷைக-ஹேதும்
படதி யதி மனுஷ்யஃ ப்ராஞ்ஜலிர்னான்ய-சேதாஃ |
வ்ரஜதி ஶிவ-ஸமீபம் கின்னரைஃ ஸ்தூயமானஃ
ஸ்தவனமிதமமோகம் புஷ்பதன்தப்ரணீதம் || 38 ||

ஆஸமாப்தமிதம் ஸ்தோத்ரம் புண்யம் கன்தர்வ-பாஷிதம் |
அனௌபம்யம் மனோஹாரி ஸர்வமீஶ்வரவர்ணனம் || 39 ||

இத்யேஷா வாங்மயீ பூஜா ஶ்ரீமச்சங்கர-பாதயோஃ |
அர்பிதா தேன தேவேஶஃ ப்ரீயதாம் மே ஸதாஶிவஃ || 40 ||

தவ தத்த்வம் ன ஜானாமி கீத்றுஶோ‌உஸி மஹேஶ்வர |
யாத்றுஶோ‌உஸி மஹாதேவ தாத்றுஶாய னமோ னமஃ || 41 ||

ஏககாலம் த்விகாலம் வா த்ரிகாலம் யஃ படேன்னரஃ |
ஸர்வபாப-வினிர்முக்தஃ ஶிவ லோகே மஹீயதே || 42 ||

ஶ்ரீ புஷ்பதன்த-முக-பங்கஜ-னிர்கதேன
ஸ்தோத்ரேண கில்பிஷ-ஹரேண ஹர-ப்ரியேண |
கண்டஸ்திதேன படிதேன ஸமாஹிதேன
ஸுப்ரீணிதோ பவதி பூதபதிர்மஹேஶஃ || 43 ||

|| இதி ஶ்ரீ புஷ்பதன்த விரசிதம் ஶிவமஹிம்னஃ ஸ்தோத்ரம்

கடவுளைக் கண்ட ஹரி சிங்

ஜெய்ப்பூரில், சுவாமி (சுவாமி விவேகானந்தர்) அரசின் தலைமைத் தளபதியான சர்தார் ஹரி சிங்குடன் மிகவும் நெருக்கமாகப் பழகினார். அவர் ஹரி சிங்கின் இல...