Showing posts with label சிற்பங்கள். Show all posts
Showing posts with label சிற்பங்கள். Show all posts
Tuesday, January 24, 2023
செல்வநாராயணர் கோவிலில் உள்ள மகுடி வாசிக்கும் சிற்பம்
கர்நாடக மாநிலம், மாண்டியா மாவட்டத்தில் உள்ள மேல்கோட்டை செல்வநாராயணர் கோவிலில் உள்ள ராயர கோபுரத்தின் கல் தூணில், ஒருவர் பாம்புக்கு மகுடி வாசிக்கும் சிற்பச்செதுக்கல் அற்புதமாக செதுக்கப்பட்டுள்ளது..!!
Sunday, January 22, 2023
உமாமகேஸ்வரி ஹலபேடு
சிவ_பெருமானின் கையில் உள்ள ருத்ராட்ச மாலை, அவரும் உமாமகேஸ்வரி அணிந்திருக்கும் அணிகலன்கள், அதிலும் உமாமகேஸ்வரியின் மடக்கி வைத்திருக்கும் காலில் உள்ள கொலுசின் நிலைப்பாடு என்று பார்த்துப் பார்த்து, பொற்கொல்லர்களைப் போல் ரசித்து ரசித்து செதுக்கியிருக்கிறார்கள் நம் சிற்பிகள்..!!
அமைவிடம்: ஹலபேடு, ஹாசன் மாவட்டம், கர்நாடக மாநிலம்.
கிராதன்
சிறிதளவும் ஈவு இரக்கமில்லாமல் கொலைத் தொழில் செய்யும் வேடுவனை கிராதகன் என்பர் என்று பொருள் கூறுவர். ஆனால் இச்சிலையைக் கிராதகன் எனக் குறிப்பிடுவது தவறு. "கிராதன்" என்பதுவே சரி.
கிராதன் தலைமுடியில் சூரிய சந்திரர் உள்ளனர். நெற்றிப் பட்டையில் சிறிய சிவலிங்கங்கள் வரிசையாக உள்ளன. நெற்றியில் நீரு இல்லை. நெற்றிக் கண் உள்ளது. மீசை உள்ளது. காது வளர்க்கப்பட்டு அதில் குண்டலங்கள் தொங்குகின்றன. காளிக்கு உள்ளது போல் கோரைப் பற்கள் கடவாய்ப் பகுதியில் உள்ளன. உயிர்ப்பலி ஏற்றல், மாமிசம் உண்ணுதல் முதலான தெய்வங்களுக்கே இவ்வாறான கோரைப் பற்கள் இருக்கும். கழுத்தில் ஒற்றை உத்திராட்சம், இடது கையில் கடகம் அணிந்து கேடயம் ஏந்தியுள்ளார். வலதுகை மணிக்கட்டுக்குக் கீழே பட்டி, கொலை வாள், மார்பில் மணிமாலைகளும் பூணூலும் உள்ளன. இடுப்புக்குக் கீழே முழங்காலுக்கு மேலே கபால மாலை.
இடுப்பில் பூதம் பதித்த இடைவார் (ஒட்டியாணம்). பெருமாளுக்கே இதுபோன்ற பூதம் உள்ள இடைவார் இருக்கும். இடது கால் தரையில் ஊன்றியிருக்க, வலதுகாலால் முயலகனை த்தலையில் மிதித்துக் கொலைவாளால் நெஞ்சுக்கூட்டுக்குக் கீழே குத்திச் சாய்த்துள்ள நிலை.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயில்
Subscribe to:
Posts (Atom)
"நகர்ப்புற நக்சல்" (Urban Naxal)
செயல்பாடுகள் மற்றும் சட்டப் பின்னணி 1. அறிமுகம் மற்றும் சொல்லாடலின் தோற்றம் "நகர்ப்புற நக்சல்" (Urban Naxal) என்பது இந்திய அ...
-
பீடம் அமைத்து கும்பம் வைத்து செய்யப்படும் எந்த பூஜை முறைக்கும் பிராண பிரதிஸ்டை செய...
-
Ancient Sacred Chants AUM. In chapter 17 of Bhagwadgita, one of the most sacred texts of the Hindus. Lord Krishna has said that the word...