Tuesday, October 29, 2019

ஞானியாக மாறிய அலெக்ஸாண்டர்

சிந்துநதி கரை வரை  வரை வந்துவிட்டு போரஸுடன் சண்டையிட்டு வெல்லமுடியாமல்   சமாதானமும் செய்த காலங்களில் மகா அலெக்சாண்டருக்கு இந்திய மதமான இந்துமதத்திலும் அதன் சாராம்ச தத்துவங்களிலும் பெரும் ஈடுபாடு உண்டாயிற்று,

அந்த காலத்து ரிஷி தண்டமில்ஸ் என்பவரை தன்னை காண அழைக்கின்றான். அவர் அன்று பெயர் பெற்ற ஞானியும் முனிவருமாயிருந்தார்.

(தண்ட முனி அல்லது தண்டம் வைத்திருக்கும் முனி என்பதே தண்டமில்ஸ் என கிரேக்கர்களால் அழைக்கபட்டது என்பார்கள்)

ஒரு நதிகரை மணலில் படுத்திருந்த தண்டமில்ஸிடம் அலெக்ஸாண்டரின் அடிபொடிகள் வந்து செய்தியினை சொல்கின்றன, மகா மன்னன் அழைத்தும் அசால்ட்டாக மறுக்கின்றார் ஞானி

"அவன் உலக அரசனாக இருக்கட்டும், அவன் கங்கையினை தாண்டி உலக முடிவுவரை வெல்லட்டும் , எனக்கென்ன வந்தது?

எனக்கு அவன் யார்?

அவன் ஒருநாள் சாகத்தான் போகின்றான், அவன் அரசு ஒழியத்தான் போகின்றது, பேராசையில் நாடு நாடாக அலையும் அவன் தன்னை உணராதவரை நிம்மதி அடையமாட்டான், சூரியனின் பாதை எல்லாம் அவன் வென்றாலும் அவனுக்கு நிறைவு வராது,  அவனை நான் சந்திக்கவரமாட்டேன் என சொல்" என திருப்பிசொன்னார்

வீரர்கள் சீறினர், சிரத்தை கொய்வோம் என்றனர் "சாவே மனிதனுக்கான விடுதலை, முடிந்தால் கொன்றுவிடு, நானோ நீயோ உன் அலெக்ஸாண்டரோ காலம் காலமாக இருக்க போகின்றோமா?"

செய்தி அலெக்ஸாண்டருக்கு செல்கின்றது, அவன் ஓடிவந்து பார்க்கின்றான், வந்தவன் தன் சந்தேகங்களை எல்லாம் கேட்கின்றான்.

புளூடார்ச் எனும் மேற்கத்திய வரலாற்று எழுத்தாளன் அந்த சந்திப்பை இப்படி சொல்கின்றான்

ஞானமான மறைபொருள் கொண்ட வார்த்தைகள் இவை, ஞான மனங்களுக்கு அற்புதமாய் பொருள் விளங்கும்

" உயிருள்ளவையா? இறந்தவைவா? உலகில் எது அதிகம்

  நிச்சயம் உயிருள்ளவை, ஏனெனில் இறந்தவை என்பது இல்லவே இல்லை
 
  பெரிய மிருகம் பூமியில் உண்டா? கடலில் உண்டா?

   நிச்சயம் பூமியில் ஏனெனில் கடல் பூமியின் ஒரு பாகமே

பகலா இரவா எது முதலானது?

பகல்தான், ஏனென்றால் ஒளிதான் முதன்மையானது

   மனிதன் எந்த மிருகத்தை கண்டு அஞ்சுவான்

  இதுவரை காணாத மிருகத்தை
   
ஒரு மனிதன் எப்பொழுது தெய்வம் ஆகின்றான்?

  மற்ற மனிதனால் செய்ய முடியா காரியத்தை செய்யும் பொழுது

  ஒரு மனிதன் தன்னை எல்லோரும் நேசிக்க என்ன செய்ய வேண்டும்?

  ஒரு மனிதன் பெரும் சக்திவாய்ந்தவனாக இருந்தாலும் பிறர் தன்னை கண்டு பயப்படாமல் இருக்க செய்கின்றானோ அவனை எல்லோரும் நேசிப்பர்

வாழ்வா சாவா எது கொடுமையானது?

வாழ்வுதான், செத்தபின் ஏது கொடுமை?"

இந்த வரிகள் சாதாரணமாக தோன்றலாம் அதன் அர்த்தம் அழுத்தமானது

இறந்தவைகளை பற்றி நினையாதே, நடக்கும் காட்சிகளை மட்டும் பார் கவலை அறுபடும் என்கின்றது முதல் வாதம்

மிருகம் என்பது உன் உள்ளே உள்ளது என்கின்றது இரண்டாம் வாதம்

கடவுளே முதன்மையானவர் என்பது மூன்றாம் வாதம்

மனிதனுக்கு ஆசை கூடிகொண்டே போகும், எதிர்காலத்தை நினைத்து அஞ்சுவான் என்பது நான்காம் வாதம்

மக்களை வாழ வைப்பதே தெய்வத்தின் பணி என்பது ஐந்தாம் வாதம்

நீ பிறரை பயமுறுத்தி நேசிக்க வைக்காதே அது நிலைக்காது, உண்மையான மதிப்பு உன் வாள்முனையில் உதிக்காது என அவன் செவிட்டில் சொல்கின்றது ஆறாம் வாதம்

வாழ்வு போராட்டம் மிக்கது கடினமானது அந்த வாழ்வில் ஞானத்தை தேடி அடை வீணாக ஒன்றும் அறியாமல் செத்துவிடாதே என்கின்றது 7ம் வாதம்

கிரேக்க தத்துவமும், பிளேட்டோவும் அரிஸ்டாட்டிலும் கொடுக்கா பதிலை தண்டமில்ஸ் கொடுத்ததில் அசந்துவிடுகின்றான் அலெக்ஸாண்டர்

அவன் அசோகரை போல் மனம் மாறினான், போரை வெறுத்தான், அதன் பின் எந்த போரிலும் அவன் ஈடுபடவில்லை,

தன் ராஜ்யத்தை தன் வம்சத்துக்கு அல்லாமல் தளபதிக்கு பிரித்து கொடுக்கும் எண்ணம் அன்றே அவனுக்கு உதயமாயிற்று

பொன்னும் வெள்ளியும் தேடி இந்தியா வந்த அலெக்ஸாண்டர் கடைசியில் இந்து ஞானத்தில்  ஞானம் அடைந்து அந்த தண்டமில்ஸை தன்னோடு கிரேக்கத்துக்கு வர அழைத்தான், இந்த மாபெரும் ஞானம் கிரேக்கத்துக்கும் வேண்டுமென்றான், அந்த ரிஷியும் உடன் வந்தார்

அவரை அதன் பின்  சுவாமி ஸ்பைன்ஸ், சுவாமி காலன்ஸ் என்றும் பல பெயர்களில்    கிரேக்கத்தில் அழைத்தார்கள்

அந்த ஸ்பைன்ஸ் ஸ்வாமி பாபிலோனில் அலெக்ஸாண்டருக்கு முன்பே பாரசீகத்தில் இறந்தார், அதுவும் தன் சாவு வருவதை உணர்ந்தார்,

அக்கால ரிஷிகள் ஜலசமாதி, மண் சமாதி போல அக்னி சமாதியும் செய்வார்கள், எரியும் தீயில் இறங்கி வாழ்வை முடிப்பார்கள்

அப்படி அந்த ஸ்பைன்ஸ் முனிவரும் அலெக்ஸாண்டரின் படை வீரர்களிடம் விடைபெற்றார், அலெக்ஸாண்டரை பார்த்து சிரித்தார் அவனோ கலங்கி நின்றான்

அவரோ புன்னகைத்தபடி உன்னை விரைவில் பாபிலோனில் சந்திப்பேன் என சொல்லி தீயில் இறங்கினார்

அடுத்தவருடம் பாபிலோனில் இறந்தான் அலெக்ஸாண்டர்,

முனிவர் சொன்ன வார்த்தையின் பொருள் அதன் பின்பே கிரேக்கருக்கு புரிந்தது

இச்சம்பவம் கிரேக்க கதைகளிலும் புளூடார்ச் போன்ற பெரும் வரலாற்று எழுத்தாளர்கள் எழுத்திலும் உண்டு

அதை திட்டமிட்டு இங்கு மறைத்தார்கள் என்பதுதான் நிஜம்.

பெரும் சாம்ராஜ்யங்களை வென்று பெரும் பெரும் செல்வத்தை குவித்து மாபெரும் நிலத்தையும் பொன்னையும் பொருளையும் கோட்டைகளையும் சேனையினையும் குவித்த அலெக்ஸாண்டரை தோற்கடித்து ஞானியாய் திரும்ப செய்தது இந்து தர்மம்

உலகில் எத்தனையோ மதங்களும் கலாச்சாரமும் தத்துவமும் சுவடே இல்லாமல் அழிந்தபின்பும் பன்னெடுங்காலமாக நிலைபெற்றிருகின்றது இந்துமதம்

எப்படி?

"நீதிமான் என ஒருவனை கண்டேனாகிலும் அந்த ஊரை அழிக்கமாட்டேன்" என பைபிளில் சொல்கின்றார் கடவுள்

Tuesday, October 22, 2019

விநாயகா் சிறப்புத் தலங்கள்


1)அழகிய விநாயகா்_ திருவாவடுதுறை.

2)ஆண்ட விநாயகா் - திருநறையூா்ச்சீத்தீச்சரம்.

3)ஆதி விநாயகா்- திருவையாறு.

4)ஆழத்துப்பிள்ளையாா்- திருமுதுகுன்றம் (விருத்தாசலம்).

5)உச்சிப்பிள்ளையாா்- திருச்சிராப்பள்ளி

6)கங்கைக் கணபதி- திருக்குடந்தைகீழ்கோட்டம்.

7)கடுக்காய்ப்பிள்ளையாா்- திருக்காறாயில்.

8)கருக்குடிவிநாயகா்- திருக்கச்சூா்.

9)கள்ளவாரணப்பிள்ளையாா்- திருக்கடவூா்.

10)கற்பக விநாயகா்- பிள்ளையாா்பட்டி.

11)கூப்பிடு பிள்ளையாா்- திருமுருகன்பூண்டி.

12)கைகாட்டிவிநாயகா்- திருநாட்டியத்தான்குடி.

13)கோடிவிநாயகா்- திருக்கொட்டையூா்.

14)சிந்தாமணிகணபதி- திருமறைக்காடு (வேதாரண்யம்).

15)சுந்தரகணபதி- திருமழபாடி, திருக்கீழ்வேளூா்.

16)சூதவனப்பிள்ளையாா்- திருவுசாத்தானம்.

17)செவிசாய்த்தவிநாயகா்- திருஅன்பிலாலந்துறை.

18)சொா்ணவிநாயகா்- திருநள்ளாறு.

19)தாலமூலவிநாயகா்- திருக்கச்சூா்

20)துணையிருந்தவிநாயகா்- திருப்பனையூா்.

21)நாகாபரண விநாயகா்- திருநாகைக்காரோணம்.
(நாகப்பட்டிணம்).

22)நிா்த்தன விநாயகா்- திருஇன்னம்பா்.

23)படிக்காசு விநாயகா்- திருவீழிமிழலை.

24)படித்துறை விநாயகா்- திருவிடைமருதூா்.

25)பிரளயங்காத்த விநாயகா்- திருப்புறம்பயம்.

26)பொய்யா விநாயகா்- திருமாகறல்.

27)பொல்லாப் பிள்ளையாா்- திருநாரையூா்.

28)மாவடிப்பிள்ளையாா்- திருநாகைக்காரோணம்.

29)மாற்றுரைத்த விநாயகா்- திருவாரூா், திருமுதுகுன்றம்.

30)முக்குறுணிப்பிள்ளையாா்- திருஆலவாய் ,சிதம்பரம், மயிலாடுதுறை.

31)வரசித்தி விநாயகா்- திருவல்லம்.

32)வலஞ்சுழி விநாயகா்- திருவலஞ்சுழி.

33)வலம்புாி விநாயகா்- திருக்களா்

34)வாதாபி விநாயகா்- திருப்புகலூா், திருச்செங்காட்டாங்குடி.

35)வீரஹத்தி விநாயகா்- திருமறைக்காடு.

36)வெள்ளை விநாயகா்- திருவலஞ்சுழி.

37)வேதப்பிள்ளையாா். திருவேதிக்குடி.

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...