Friday, July 31, 2020

ஆத்திரம்

ஒரு கிராமத்தில் ஒருவன் அழகிய புள்ளிமான் ஒன்றை தன் வீட்டில் வளர்த்து வந்தான். ஒரு நாள், அந்த மான் காணாமல் போய்விட்டது. இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத அந்த மனிதர், அந்த மானை பிடித்துப் போயிருப்பவனை பழிவாங்கத் துடித்தான். கடவுளிடம் முறையிட்டான். கடவுளும் வந்தார்.

கடவுளிடம் அந்த மனிதர், தான் ஆசையாய் வளர்த்த மானை தாருங்கள் என்று தானே கேட்டிருக்க வேண்டும்? ஆனால் அவ்வாறு கேட்கவில்லை.மாறாக, ஆத்திரத்தில், "நான் ஆசையாய் வளர்த்த மானை யாரோ அபகரித்து சென்று விட்டார்கள். அந்த மானை திருடியவன் யாராக இருந்தாலும் அவனை என் முன் நிறுத்த வேண்டும்" என்று கேட்டான்.

அதற்கு கடவுள், "பக்தா! மானை நான் உனக்குத் திருப்பித் தருகிறேன். ஆனால், மான் காணாமல் போனதற்கு காரணமானவர்கள் யார் என்று கேட்காதே" என்றார்.

"கடவுளே! நான் மிகுந்த கோபத்தில் உள்ளேன். மானை திருடியவனை பழிவாங்காமல் விட மாட்டேன். எனவே, திருடியவனை இங்கு வரவழைக்க வேண்டும்" என்று பிடிவாதமாக கேட்டான்.

இதனைக் கேட்ட கடவுள், "சரி. நீ கேட்கின்ற வரத்தை தருகிறேன். ஆனால், பின்னால் வருத்தப்படக் கூடாது" என்றார். அந்த மனிதரும் சரி என்றார்.

"தந்தேன் நீ கேட்ட வரத்தை. இந்த மானை திருடிச் சென்றவர் உன் பின்னால் நிற்கிறார்", என்று பக்தனிடம் கூறினார் கடவுள்.

உடனே பக்தன் திரும்பிப் பார்த்தான். மிகப் பெரிய சிங்கம் நின்று கொண்டிருந்தது.

சிங்கத்தைப் பார்த்தவுடன், பழிவாங்கும் கோபம் மறைந்து, பயம் கவ்விக் கொண்டது. "அய்யோ கடவுளே காப்பாற்று!" என்று அலறியடித்துக் கொண்டு ஓடினார் பக்தர்.

நம்மில் பலருக்கு ஆத்திரத்தில் அறிவும் – புத்தியும்  வேலை செய்வதில்லை. ஆத்திரம் பெரும்பாலும்  அழிவைத் தருகிறது.

*ஆத்திரம் , கோபம்  தவிர்த்து அன்புடனும், அமைதியுடனும் வாழ்ந்திட*
இந்த நாள் இனிய நாளே....
இனிய  மாலை வணக்கம்

Thursday, July 30, 2020

பசுபதேஸ்வரர் திருக்கோவில்

ராமாயண, மகாபாரதக் காலத்திற்கு முன்பே புகழ்பெற்ற நகரம் காசி. இத்தகைய பெருமை வாய்ந்த காசிக்கு நிகராக அதே பெயரில் விளங்குகிறது பசுபதேஸ்வரர் ஆலயம். காசிக்கு நிகரான பசுபதேஸ்வரர் கோவில் திருநெல்வேலி

பெயர் காரணம் 

ராமாயண, மகாபாரதக் காலத்திற்கு முன்பே புகழ்பெற்ற நகரம் காசி. சிவபெருமான் ஆனந்தத்துடன் தங்கியிருக்கும் தலம் எனபதால் காசி நகருக்கு ‘"#ஆனந்தவனம்’ என்னும் பெயரும் உண்டு. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே காசி நகரம் ஆன்மிகத்தில் சிறந்து விளங்கியுள்ளது. ‘அறிவு தரத்தக்க ஒளி பொருந்திய நகரம்’ என்னும் பொருளில் காசி நகரம் பற்றி ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ளது. ஸ்கந்த புராணத்தின் ஒரு சுலோகத்தில் ‘மூவுலகும் என் ஒரு நகரான காசிக்கு இணையாகாது’ என காசியின் பெருமையை ஈசன் கூறியுள்ளார். பண்டைய காலங்களில் கல்விக் கூடங்கள் பல அமைத்து, கல்வியிற் சிறந்த நகரமாக காசி விளங்கி இருக்கிறது.

இத்தகைய பெருமை வாய்ந்த காசிக்கு நிகராக அதே பெயரில் விளங்குகிறது #பசுபதேஸ்வரர்ஆலயம். இது திருநெல்வேலி மாவட்டத்தில் திருமலாபுரம் என்ற ஊரில் உள்ள ஒரு குடவரைக் கோவிலாகும். இப்பகுதியில் சுமார் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் மனிதர்கள் பயன்படுத்திய நுண்ணியக் கருவிகளைத் தொல்லியல்துறை கண்டு பிடித்து பாதுகாத்து வருகிறது.

திருநெல்வேலி மாவட்டம், சுரண்டை நகரை அடுத்துள்ள சேர்ந்தமரம் என்னும் ஊருக்கு மேற்கே, மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிற்றூர் திருமலாபுரம். இவ்வூரில் புராண காலத்தோடு தொடர்புடைய நீண்ட நெடிய கிழக்கு நோக்கிய மலைத்தொடர் ஒன்று உள்ளது. இந்த மலை புராண காலத்தில் ‘#வருணாச்சிமலை’ என்றும், இப்பகுதியில் அமைந்திருந்த ஊர் ‘#வாரணாசிபுரம்’ என்றும், ‘#வருணாச்சிபுரம்’ என்றும் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது, இந்த மலைத்தொடர் ‘#சர்வேஸ்வரன்மலை’ எனவும், இங்கு எழுந்தருளியிருக்கும் ஈசன் பெயர் ‘#பசுபதேஸ்வரர்’ எனவும் வழங்கப்படுகிறது. சிவபெருமானின் வழித்தோன்றல்களான பாண்டிய வம்ச மன்னர்கள், தங்கள் நாயகனின் பெருமையைப் பறைசாற்றும் விதமாக சுமார் 1,300 ஆண்டுகளுக்கு சர்வேஸ்வரன் மலைத்தொடரின் இருபுறமும் இரு குடவரைக் கோவில்களை உருவாக்கினர். கிழக்கு - மேற்காக நீண்டிருக்கும் சர்வேஸ்வரன் மலைத் தொடரின் வடக்குப் பகுதியிலுள்ள குடவரைக் கோவில் முழுமை பெற்றுள்ளது. தென்பகுதியில் உள்ள குடவரை முழுமை பெறவில்லை.

திருதலத்தின் சிறப்புகள் 

வடக்குப் பகுதியில், வடக்குப் பார்த்து அமைந்த முழுமைப்பெற்ற குடவரைக் கோவில், கருவறை, அர்த்த மண்டபம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. சுமார் 19 அடி நீளம், 12 அடி அகலம் கொண்ட செவ்வக வடிவ அர்த்த மண்டபம் உள்ள இக்குடவரையில், கருவறை எட்டு சதுர அடியில் அமைந்துள்ளது. காசியிலுள்ள கருவறை போன்றே சிவலிங்கத்தை வலம் வந்து அர்ச்சகர் பூஜைசெய்யும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.

தரைமட்டத்தில் இருந்து சுமார் ஐந்தடி உயரத்தில் உள்ள இக்கோவிலுக்குள் ஏறிச் செல்வதற்கு மேற்குப் பகுதியில் இருந்தும், கிழக்குப் பகுதியில் இருந்தும் பாறைக் கற்களால் படிகள் அமைக்கப்பட்டுள்ளன. மழைநீர் குடவரையின் உள்ளே புகாவண்ணம் குடவரையின் மேலே, பாறையில் புருவம் போன்ற காடி வெட்டப்பட்டுள்ளது
குடவரையில் மூன்று நுழைவு வாசல்கள் உள்ளன. நுழைவு வாசலில் காணப்படும் தூண்களின் மீது அழகிய பூ வேலைப்பாடுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. நுழைவு வாசல்களுக்கு நேரே உள்ளே முன்மண்டபத்தில் நடராஜர், பெருமாள், விநாயகர் புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. அதிலுள்ள சிவபெருமான் ஆடல் நிகழ்த்த, அவரது இருபுறமும் பக்கத்திற்கு ஒன்றாக இரண்டு பூதங்கள் நிற்கின்றன. வலப்புற பூதத்தின் உடல் பெரு மளவு சிதைந்துள்ளது. கால்கள் மட்டும் எஞ்சியுள்ளன. நின்ற கோலத்தில் காணப்படும் இடப்பூதம் கரண்ட மகுடம் அணிந்து, செவிகளில் பனை ஓலைச் சுருள்களுடன் காட்சியளிக்கிறது. இடக்கையில் ஏந்தி, இடது தோளில் சாத்தியிருக்கும் நரம்பிசைக்கருவியை வலக்கைக் கோலால் இயக்கும் இப்பூதம் இறைவனைத் தலை உயர்த்திப் பார்த்தவாறு பூரித்து நிற்கிறது.

குடவரை கோவில் அமைந்த மலை

தமிழ்நாட்டில் எத்தனையோ குடவரை இருந்தாலும், ‘சிரட்டைக் கின்னரி’ (பழமையான வில்லிசைக் கருவி) இடம் பெற்றுள்ள ஒரே குடவரைக் கோவில், பசுபதேஸ்வரர் ஆலயம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

நின்ற திருக்கோலத்தில் மகாவிஷ்ணு சங்கு, சக்கர தாரியாய் நான்கு திருக்கரங்களுடன் இங்கு வீற்றிருக்கிறார். அருகே அமர்ந்த நிலையில் விநாயகர் எழுந்தருளியுள்ளார். பல்லவர் காலத்தை ஒட்டிய கோவில் என்பதால், பல்லவர் குகைக்கோவில்களில் காணப்பெறாத, சிறப்புமிக்க விநாயகர் புடைப்புச் சிற்பம் இங்குள்ளது. கருவறைக்கு நேர் எதிரில் கிழக்கு உட்பகுதி பாறைச்சுவற்றில், நின்ற நிலையில் பிரம்மா மூன்று சிரசு, நான்கு கரங்களுடன் காணப் படுகிறார்.

நுழைவு வாசலில் உள்ள கனமான தூண்கள், விரிந்த தாமரைப் பதக்கங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. தரங்கப் பொதிகைகள் (தோரணம் போன்ற அமைப்பு) நுழைவு வாசலுக்கு மேன்மேலும் அழகு சேர்க்கின்றன. முன்மண்டப விதானத்தில் பழங்கால ஓவியங்களின் (அன்னம், தாமரை மலர், வேட்டுவேர், சிம்மாசனம்) வண்ண எச்சங்கள் சிதைந்த நிலையில் உள்ளன.

முன்மண்டபத்திலிருந்து சுமார் 2 அடி உயரத்தில் கருவறை அமைக்கப்பட்டுள்ளது. கருவறை வாசலில் இருபுறமும் துவார பாலகர்கள் உள்ளனர். கருவறையில் பாறையில் வடிக்கப்பட்ட ஒற்றைக் கற்பீடத்தில் பசுபதேஸ்வரர் அழகாகக் காட்சி தருகிறார். குடவரைக் கோவில் உருவாக்கப்பட்ட காலத்திலிருந்தே முறையான அபிஷேக, ஆராதனை சிறப்பாக நடைபெற்று வந்துள்ளன என்பதை சிவலிங்கம் உணர்த்துகிறது.

காலத்தால் பழையதும், கீர்த்தியால் செழுமை பெற்றதும், மனித உயிர்களை மெய் மறக்கச் செய்து, வேண்டுவன தந்து உலகம் உய்யக் கோவில் கொண்டு எழுந்தருளியிருக்கிறார், பசுபதேஸ்வரர் இவருக்கான நித்யபூஜை சிறப்புடன் நிகழ்வுற, வல்லவ தேவன் என்ற பாண்டிய மன்னன் மலைப்பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள குளங்களை தானமாக வழங்கியுள்ளான். இத்தகவல் குகைக்கோவில் இடது தூண் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. இங்கு மன்னர்களின் 2 கல்வெட்டுகள் உள்ளன.

வழிபாடு 

சுயம்புலிங்கம்போல் குடவரையில் உள்ள சிவலிங்கத்துக்கும் அதீத ஆற்றல் உண்டு என்பதால், பிரதோஷ வழிபாட்டில் இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம் செய்கின்றனர். மேலும் பவுர்ணமிதோறும் நடைபெறும் கிரிவலத்திலும் திரளான பக்தர்கள் பங்கேற்கிறார்கள். திருக்கார்த்திகை, மகா சிவராத்திரி தினங்களில் சுற்றுப்பகுதி கிராம மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து தரிசனம் செய்து மகிழ்கின்றனர். திருக்கார்த்திகை தினமான இன்று (23-11-2018) வெள்ளிக்கிழமை காலையில் உலக நலன், உலக ஒற்றுமை, உலக நல்வாழ்வு, உலக ஆரோக்கியம் கருதி ‘மகா ருத்ர யாகம்’ நடைபெறுகிறது.

பசுபதேஸ்வரரை வழிபடுவோருக்கு எல்லா விதமான தோஷங்கள், சாபங்கள் நீங்கி, சகல யோகங்களும் ஏற்படுவதால், இப்பகுதி மக்கள் ஈசனை ‘சர்வேஸ்வரன்’ எனவும் அழைக்கின்றனர். திருமணம், வாரிசு ஆகிய பிரார்த்தனைக்காகவும், சிறந்த கல்வி, உயர்பதவி பெறவும் வேண்டிப் பயன்பெறுகின்றனர். மழை பொழியவும், மன பயம் அகலவும் இங்கு வேண்டியதும் கைமேல் பலன் கிட்டுகிறது என்பது ஐதீகம்.

மூர்த்தி, தலம், தீர்த்தம், விருட்சம் (பனை) ஆகிய நான்கு அம்சங்களைக் கொண்டுள்ளது இக்குடவரைக் கோவில். சாலையில் இருந்து கோவில் வரை செல்லும் மண்பாதையின் இருபுறமும் தல விருட்சமான பனை மரம் அணிவகுத்து நிற்பது கொள்ளை அழகு!

தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த ஆலயம், தினமும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும்.

துன்பங்களைப் போக்கி, இன்பங்களைத் தந்து, நிறைவில் முக்தியைத் தரவல்ல சர்வேஸ்வரனாம் பசுபதேஸ்வரரை, வாழ்வில் ஒருமுறையாவது தரிசனம் செய்ய வாருங்கள்!

அமைவிடம்

சங்கரன்கோவிலில் இருந்து 15 கி.மீ. தொலைவில் சேர்ந்தமரம் என்னும் ஊர் உள்ளது. இங்கிருந்து மேற்குத் திசையில் 3 கி.மீ. தூரத்தில் பசுபதேஸ்வரர் குடவரைக் கோவில் அமைந்துள்ளது. கடையநல்லூரில் இருந்து 10 கி.மீ. தொலைவில் சுரண்டை செல்லும் வழியில் இவ்வாலயம் இருக்கிறது. திருநெல்வேலியில் இருந்து ஆலங்குளம், வீ.கே.புதூர், சுரண்டை, சேர்ந்தமரம் வழியாக 60 கி.மீ. பயணித்தும் இக்கோவிலுக்கு வரலாம்.

ஓம் சிவாய நம 
சர்வம் சிவமயம் 
எங்கும் சிவநாமம் ஒலிக்கட்டும் 
அனைவருக்கும் சிவனருள் கிடைக்கட்டும் 

                

Wednesday, July 29, 2020

புருஷ சூக்தத்திரம்

பிறப்பால். அனைவரும் சமம் என்று உலகின் மூத்த மற்றும் முன்னோடி வேதமான ரிக்வேதம் சொல்கிறது

இப்படி சொல்வது இந்து மதம் புருஷ சூத்திரத்தில் வரும் ஒரு செய்யுள். சரியான அர்த்தம் தெரியாமல் ஒரு பிதற்றல் பலரால் சொல்ல படுகிறது

பிராமணன்
தலையில் பிறந்தான்;
சத்திரியன் தோளில் பிறந்தான்;
வைஷியன் தொடையில் பிறந்தான்;
சூத்திரன் பாதத்தில் பிறந்தான் என்று!

இப்படித்தான் சமஸ்கிருதம் தெரியாத நாத்திகர்கள் வேதங்களை தூற்றுகின்றனர் பொய்யை பல முறை அதை உண்மை போல் உளருகிர்கள்.

ஆனால் உண்மை என்ன?

புருஷ சூக்த்தத்தில் வரும் ஸ்லோகம் இதுதான்:‘

"பிராமணஸ்ய முகமாஸீத், பாஹூ ராஜன்ய: க்ருத:
ஊரு ததஸ்ய யத்வைஸ்ய:,பத்ப்யாகும் சூத்ரோ அஜாயத"

என்று புருஷ சூக்தத்திலும் உள்ளது.இந்த வரிகளுக்கு அர்த்தம் யாதெனில்,

பிராமனணுக்கு முகமே பலம்.

வேதம் ஓதும் பிராமணன் முகலட்சணத்தோடு விளங்கவேண்டும்.மேலும் வாயால் நல்லாசி வழங்கவும்.நல் உபதேசம் செய்யவும்,நல் மந்திரம் உச்சாடனம் செய்யவும் முகமே துணை.எனவே பிராமணணுக்கு முகபலம் தேவை. (பிராமணன் முகத்தில் பிறந்தான் என்பது தவறு.)

சத்திரியனுக்கு தோள் பலம் தேவை.

சத்திரியன் வாள் கொண்டு எதிரிகளிடம் இருந்து மக்களை காப்பாற்றவும்,பாதுகாக்கவும்.வறியவர்களுக்கு கொடை அளித்து ஆதரிக்கவும் தோள் பலம் கொண்ட கரங்கள் தேவை. ( ஷத்திரியன் தோளில் பிறந்தான் என்பது தவறு.)

வைசியன் உட்கார்ந்த நிலையில் வியாபாரம் செய்பவன்.எனவே வியாபாரம் செய்யவும்,கணக்கு வழக்குகளை பார்க்கவும் வைசியனுக்கு தொடை பலம்மிக்கதாக விளங்க வேண்டும்.( வைசியன் இடுப்பில் பிறந்தான் என்பது தவறு.)

சூத்திரன் உழவு செய்பவன்.உழவு செய்பவனுக்கு கால் பலம் தேவை. கால்கள் பலமாக இருந்தால் தான் பயிரிடவும் விவசாயத்தை பராமரிக்கவும் முடியும்.(சூத்திரன் காலில் பிறந்தான் என்பது தவறு.)

மேலே குறிப்பிட்ட ரிக் வேதத்தின் புருஷ சூக்த்தத்தில் ஜாதி என்பதே எங்குமே வரவில்லை! என்பதே உண்மை.

இதில் பிறப்பு என்ற சொல் எங்கே வந்தது?பிறப்பினால் யாரும் எதையும் அடையமுடியாது.

மேலே குறிப்பிட்ட ஸ்லோகத்தில் பிறப்பு என்ற வார்த்தை எங்கே வந்தது? 

வாய்க்கு வந்தார் போல் அர்த்தம் புகட்டிவிட்டு முட்டாள் மாணவனாக இருந்து விட்டு ஆசிரியரை குறை சொல்லி என்ன பயன்.

பிறப்பால் வர்ணங்கள் இல்லை – மனு தர்மம்:

பிறப்பால் வர்ணங்கள் இல்லை என்பதை இவர்கள் விமர்சிக்கும் மனு தர்மம் சொல்கிறது. அதற்கான ஸ்லோகம்,

“ஜன்மனா ஜாயதே சூத்ர: கர்மணா த்விஜ ஜாயதே”

அதாவது பிறப்பால் அனைவரும் சூத்திரர்களே,

தொழிலினால்தான் இரு பிறப்பாளராகின் றனர் (துவீஜம்).

இரு பிறப்பாளர் என்பது வேத காலத்தில், முதல் மூன்று வர்ணங்களைக் குறித்தது.
இங்கே தான் பிறப்பு என்ற சொல் வருகிறது:

ஜன்மனா – பிறப்பால்;

ஜாயதே – பிறந்த அனைவரும்;

சூத்ர – சூத்திரரே;

கர்மணா – தான் மேற்கொண்ட பணிக்குட்பட்டு; த்விஜ – இருபிறப்பாளனாக;

ஜாயதே – பிறப்பாளன் ஆகிறான். 

செய்யும் தொழில் தான் ஒருவரை அடையாளம் காண்கிறது. பிறப்பு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்

இதையே திருவள்ளுவர் 
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்.

பொருள்:  எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒருத் தன்மையானதே, ஆயினும் செய்கின்ற தொழில்களின் வேறுபாடுகளால் சிறப்பியல்பு (குணம்/character/வர்ணம்) ஒத்திருப்பதில்லை.

இரண்டு வரிகளுள்ள திருக்குறளையே சரியாகப் படித்து, பொருள் கூற இயலாதவர்கள், சமஸ்கிருதச் சுலோகங்களுக்குத் தங்கள் விருப்பப்படி, பொருள் கூறி, தானும் குழம்பிப் பிறரையும் குழப்புகின்றனர்

நாத்திகவாதிகளால்காலம் காலமாக திரித்து சொல்லிவருவது நினைவில் கொள்க...

உண்மைகளை எளிதில் மறைத்துவிட முடியாது.

- Ramachandran Krishnamurthy

Sunday, July 26, 2020

தியான் சந்த் சிங்

நமது தேசத்தின் சின்னங்கள் பறவை விலங்கு இவையாவும் நாம் அறிவோம். நமது நாட்டின் தேசிய விளையாட்டு தினம் எது என்று நாம் அறிந்து கொள்வோம். ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி ஆகும். அன்று என்ன அவ்வளவு சிறப்பு? அன்றுதான் பத்மபூஷன் விருது பெற்ற உலகப் புகழ்பெற்ற ஹாக்கி வீரர் ,பாரதத்தின் "தியான் சந்த்"  பிறந்த தினம்.

அப்படி சிறப்பு என்ன?
ஆங்கிலேயர் காலத்தில் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்த சோமேஸ்வரர் தத்சிங்  என்ற வீரரின் மகனாக பிறந்த தியான்சிங்,  அவரது குடும்பத்தின் மற்ற சகோதரர் போல் ராணுவத்தில் சேர்ந்தார். ஹாக்கி விளையாட்டு ராணுவத்தில் மிகவும் முக்கியமான பங்கு வகித்தது. தியான் சிங்கும் ஹாக்கி விளையாட வேண்டியிருந்தது .

    சிறுவயதில் அவருக்கு மல்யுத்தத்தில் தான் நாட்டம். ஆனால் இப்பொழுது ஹாக்கி விளையாட வேண்டி இருந்தது. ஆகவே தனது பணி நேரம் முடிந்த பின் நீண்ட நேரம் பயிற்சி எடுக்க ஆரம்பித்தார். இரவுகளில் நிலா ஒளியில் நீண்ட நேரம் பயிற்சி செய்வார். அப்போது பந்தை நன்றாகப் பார்க்கும் திறன் வரும் என்று அவருக்கு புரிந்தது. இவ்வாறு அவர் செய்வதை பார்த்து அவருடைய பயிற்சியாளர் அவருக்கு சந்த்(chand )நிலா ஒளி என்று பெயரிட்டார்.

     அது முதல் அவருக்கு தியான் சந்த் என்ற பெயர் நிலைத்துவிட்டது. தனக்கு பழக்கம் இல்லாத ஹாக்கி விளையாட்டு என்றாலும் முழு பயிற்சி பயிற்சி மூலம் தன்னை அதிக திறன் உள்ளவராக ஆக்கிக்கொண்டார் தியான்சந்த். நாமும்  ஷாகாவில் அதிக பயிற்சி எவ்வளவு முக்கியத்துவம் என்பதை அறிவோம்.

  அவரது அதீத திறமை காரணமாக ராணுவத்தின் அவரது பிரிவு அவரை அனைத்து ஹாக்கி விளையாட்டு போட்டிகளுக்கு அனுப்பி வைத்தது. அவரும் நாட்டுக்குள் நடக்கும் எல்லா இடங்களுக்கும் சென்று சிறப்பாக ஆடி வந்தார்.

  முதல்முறையாக 1928ஆம் ஆண்டு ஹாக்கியை ஒலிம்பிக் விளையாட்டில் சேர்த்தார்கள். அந்த ஆண்டு இந்திய குழுவில் தியான் சந்த் மற்றும் அவரது சகோதரர் நீப் சிங் உட்பட இந்திய குழு ஆம்ஸ்ட்ராங்மில்  நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் பங்கு பெற்றது. முதல் முறையாக வெளிநாடுகளில் சென்று விளையாட தொடங்கினார். அந்தப் போட்டிகளில் நமது குழுவில் பல வீரர்களுக்கு தொடர்ந்து உடல் நிலை சரி  இல்லாமல் போனது தியான் சந்த் அவர்களுக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இருந்தாலும் மனம் தளராது அவர் சிறப்பான விளையாட்டை நடத்திக் காட்டினார். அதன்மூலம் சக வீரர்களுக்கு வெளிநாடுகளிலும் சென்று ஒன்றாக விளையாட முடியும் என்ற நம்பிக்கை பிறந்தது. மேலும் சர்வதேச அளவில் நமது ஹாக்கி குழு மீது மதிப்பு பிறந்தது.

    தியான் சந்த் அவர்களின் புகழ் பரவத் தொடங்கியது. ஆனால் தியான் சந்த் அவர்கள் தன் முழுக்கவனத்தையும் திறன் வளர்ச்சியில் மட்டுமே செலுத்தினார் .நாம் ஆர்வத்தடனும், ஈடுபாட்டுடனும் சங்க வேலை செய்கிறோம். ஆனால் நமது கவனம் நம் திறனை வளர்ப்பதிலே முழுதும் செலுத்தவேண்டும். 1936 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடக்க ஏற்பாடு ஆகி இருந்தது. அது நாசிச ஆட்சியில் அடாப் ஹிட்லர் தலைமையில் இருந்த ஜெர்மனியில் நடக்க இருந்தது. அலுவல் காரணமாக தியான் சந்த் அவர்களுக்கு பயிற்சி முற்றிலும் கிடைக்கவில்லை. தேர்ச்சி விளையாட்டிற்கு நேரம் அனுமதி அவரது படைப்பிரிவு கொடுக்கவில்லை. ஆனால் நேரடியாக ஒலிம்பிக்கில் விளையாட இந்திய அணியில் சேர்க்கப்பட்டார்.

      அதன்பின் அவர் ஜெர்மனிக்கு குழுவோடு அனுப்பப்பட்டார். அங்கு சென்று எல்லா நேரத்திலும் பயிற்சி மேற்கொண்டு தங்களை எதிர்த்த எல்லா நாட்டு அணிகளையும், அதிக கோல் வித்தியாசத்தில் நமது அணி வெற்றி பெற்று வந்தது. எல்லாவற்றுக்கும் முன் நமது அணியை உற்சாகப்படுத்த தியான் சந்த் அவர்கள் அன்றைய காலத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மூவர்ணக்கொடி முன் சபதம் ஏற்பார். மற்ற அணியினரும் அவரோடு சபதம் ஏற்பார்கள். சிறப்பாக விளையாடி நமது அணி இறுதிப்போட்டிக்கு வந்தது. 15 ஆகஸ்ட் 1936 ஆம் ஆண்டு இறுதிப் போட்டி அன்று மிகவும் சக்திவாய்ந்த ஜெர்மனியில், அதுவும் அவர்கள் நாட்டில் ஹிட்லர் போன்ற சர்வாதிகாரியின் கண்முன் நடக்க இருந்தது. இதுவே ஹிட்லருக்கு தனது பெருமையை உலகுக்கு காட்ட ஒரு வாய்ப்பாக அமைந்தது. .ஜெர்மனி வெற்றி பெற்று விடும் என்ற இருமாப்போடு  இருந்த நேரம் அது.
        
      விளையாட்டு தொடங்கியது முதல் காலப்பகுதியில் மிகவும் கடினமான போட்டி நிலவியது. நமது வீரர்களால் கோல் போட முடியவில்லை. ஆனால் ஜெர்மனி ஒரு கோல் போட்டு முன்னிலையில் சென்றது. இரண்டாவது காலப்பகுதியின் போது தனது வேகம் குறைந்து வருவதாக உணர்ந்த தியான் சந்த் அவர்கள் தான் அணிந்த காலணியை(sports shoe) கழற்றிவிட்டு ஆடுகளத்தில் ஓடி விளையாட ஆரம்பித்தார். வேகத்தை அதிகரிக்க ஆரம்பித்தார். அதை பார்த்த மற்ற வீரர்களுக்கு உற்சாகம் பிறந்தது. தியான் சந்த் அடுத்தடுத்து கோல்களைப் போட பாரதம் வெற்றியை நோக்கி செல்ல ஆரம்பித்தது. ஹிட்லர் உட்பட ஜெர்மானிய மக்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். இந்திய அணி 8 க்கு 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று ஒலிம்பிக் தங்கத்தை வென்றது.

     தான் ஆடும் களம் எவ்வளவு ஆபத்தானதாக இருந்தாலும், தன் குழு மீதும் தேசத்தின் மீதும் தன் மீதும், முழு நம்பிக்கை மற்றும் பக்தியோடு விளையாடி வெற்றி மட்டுமே லட்சியமாகக் கொண்டு ஒலிம்பிக் தங்கத்தை பெற்றுத் தந்தவர் தியான் சந்த் அவர்கள். நாமும் சங்க வேலை செய்யும்போது கடினமான சூழ்நிலைகள் வரும் ஆனால் தன் திறமை மீது நம்பிக்கை, தன் சக கார்யகர்தர்களுக்கு நம்பிக்கை, தன் தேசத்தின் மீது முழு நம்பிக்கையோடு வெற்றியை லட்சியமாகக் கொண்டு வேலை செய்தால் சிறப்பான வெற்றி கிடைக்கும் என்பது தியான் சந்த் அவர்கள் வாழ்க்கையில் நாம் தெரிந்து கொள்கிறோம். அவர் தன் திறமையை வளர்த்துக்கொள்ள செய்த சில முயற்சிகள்

1. போசிஷன் மட்டும் இல்லாமல் ஆடுகளத்தில் முழு நீள அகலத்தில் ஓடி செல்வார் அதன் மூலம் எதிரணியின் நிறை குறைகளை அறிந்து கொள்வார்.
 
2. ஹாக்கி மட்டையை விட்டு பந்து வெளியே செல்லாமல் இருக்கும் அளவிற்கு (dribbling) என்ற முறையை அதிகம் பழகுவார். ஒருமுறை நெதர்லாந்து  நாட்டினர்  அவருடைய மட்டையை வாங்கி அதில் காந்தம் உள்ளதா? என்று பரிசோதனை செய்தனர்.

3. கோல் சரியாக போடுவதற்கு ஒரு காலிடயர்  வைத்து அதனுள் பந்தை அடிக்க அதிக பயிற்சி எடுப்பார். அதன் மூலம் குறி மாறாமல் அடிக்கும் தன்மையை வளர்த்துக்கொண்டார்.

4. விளையாட்டின் அனைத்து விதிமுறைகளையும் சரியாக தெரிந்து வைத்திருந்தார். ஒரு முறை நடந்த விளையாட்டில் அவர் ஒரு கோல் கூட போட முடியாத நிலை ஏற்பட்டது. உடனே அவர் கோல் போஸ்ட் அளவு தவறாக உள்ளது, அதை அளந்து சரி செய்யுமாறு கூறினார். அவர்களும் பார்த்தபோது அவ்வாறே தவறாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பின் சரி செய்தார்கள்.
 
       ஆகவே ஹாக்கி உலகத்தின் மெஜிசியன் என்ற பெயரைப் பெற்ற தியான் சந்த் நமது நாட்டிற்கு ஒலிம்பிக் சங்கத்தை அளித்த பெருமையை பெற்றார். சுதந்திரத்திற்கு பின் இந்திய ராணுவத்தில் மேஜர் என்ற நிலைக்கு வந்து பணி ஓய்வு பெற்றார். 1956 ஆம் ஆண்டு பத்மபூஷன் விருது கொடுத்து கௌரவித்தது நமது அரசாங்கம். அவர் தன்னை பற்றி சொல்லும்போது “என்னிடம் இயற்கையான திறமை (Talent) இருப்பதை கண்டு கொண்டேன். ஆனால் அதை தக்கவைக்க கடும் உழைப்பை மட்டும் தான் நான் போட்டேன்” என்று அடக்கமாக கூறினார். இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த ஒரு மனிதன், விளையாட்டு வீரர், தேசபக்தர், யோகி, தியான் சந்த் அவர்களைப் போல நாமும் தினசரி ஷாகா மூலம் நம் திறமைகளை வளர்த்து, தேசத்திற்காகவும் சமுதாயத்திற்காகவும் பல நல்ல செயல்களில் வெற்றி பெற தொடர்ந்து கடும் உழைப்பை காணிக்கையாக்குகிறோம்.

விளையும் பயிர்

பள்ளி மாணவராக இருந்த நாட்களில் திலகர் ஒல்லியாக ஒடிந்து விழுகிறவராகத்தான் இருந்தார். கல்லூரியில் காலடி வைத்ததும், ஒரு வருடம் முழுவதும் உடற்பயிற்சிகளில் தீவிர கவனம் செலுத்தி, உடலை ஆரோக்கியத்துடன் வலிமையும் நிறைந்ததாக ஆக்கிக்கொண்டார்.
கல்லூரி விடுதியின் மொட்டை மாடியில் ஐந்தாறு நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்தார் இளைஞரான திலகர். “நாம் சுயராஜ்ஜிய போராட்டத்தில் ஈடுபட்டு இருப்பதால் நம்மை சி.ஐ.டி.கள் வட்டமிடுகிறார்கள். திடீரென்று இங்கே வந்து, அவர்கள் நம்மை வளைத்துக் கொண்டால், நாம் மாயமாய் மறைவது எப்படி?” என்று ஒரு நண்பர் கேட்டார்.
“இதோ இப்படித்தான்!” என்று சொல்லிக் கொண்டே, திலகர் தொபேலென்று கைப்பிடி சுவர் ஏறி மாடியில் இருந்து குதித்து விட்டார். மற்றவர்கள் அலறிப் புடைத்துக் கொண்டு படி இறங்கி வந்து பார்த்தால், திலகர் ஆனந்தமாகக் கைகளைத் தட்டியவாறு படியேறி வந்து கொண்டிருந்தார்!  பின்னாளில் “சுதந்திரம் நமது பிறப்புரிமை!” என்ற தாரக மந்திரத்தை நாட்டுக்குத் தந்தவர் அல்லவா அவர். விளையும் பயிர் முளையிலேயே - அன்றே பளிச்சென்று மின்னி இருக்கிறது!

தவ வலிமை

அடியோடு நம்பிக்கை இழந்து போய் அந்த அரசன், முனிவரின் ஆசிரமத்தில் அடைக்கலம் தேடி போனான். “முனிவர் பெருமானே! போரில் தோற்று நாட்டை இழந்து விட்டேன். அன்பு கூர்ந்து என்னை கைதூக்கி விட வேண்டும்” என்று வேண்டினான்.
முனிவர், “அரசே அதோ அந்த மரத்தின் கீழே போய் நின்று மரத்திடம் உன் விருப்பத்தைச் சொல்” என்றார். அது கற்பக விருட்சம்! அதனால் அரசன் எண்ணம் நிறைவேறியது. இழந்த நாட்டை பெற்றுவிட்டான். ஆனால் மறுபடி ஆசிரமத்துக்குப் போய் முனிவரிடம் தனது சந்தேகத்தை கேட்டான்.
“புண்ணியாத்மாவே! தங்களிடம் விரும்பியதையெல்லாம் அளிக்கும் கற்பகமே இருக்கும் போது தாங்கள் இப்படி ஏழையாகவே ஏன் இருக்கிறீர்கள்? மிகவும் தேவையான சௌகரியங்களைக் கூட கேட்டு பெற்றுக் கொள்வதில்லையே ஏன்?” என்றான் அரசன்.
முனிவர் சிரித்தபடி சொன்னார்:-
“அரசே! நாங்கள் கஷ்டங்கள் நிறைந்த வாழ்க்கை நடத்துகிறோம். ஆகவேதான் கற்பகமரம் இங்கே முளைத்துள்ளது. எனது தவம் தளர்ச்சி அடையுமானால் அந்தக் கணத்திலேயே இந்த கற்பக மரத்தின் சக்தி போய்விடும். மனிதன் உயர்ந்த லட்சியத்தை அடைய ஆழ்ந்த ஈடுபாட்டுடன் செயல்படும்போது சுற்றுப்புற சூழ்நிலை எப்படி இருந்தாலும் பொருட்படுத்தவே கூடாது. பற்றற்ற மனநிலையுடன் செயல்பட வேண்டும். நமது எண்ணம் கைகூட இவைதான் காரணமாகின்றன”.

சுவாமி விவேகானந்தர் ௯றியது

அளவற்ற ஆற்றல், பெரும் ஊக்கம், அளவுகடந்த அஞ்சாமை, அளவில்லாத பொறுமை இவையே நமக்குத் தேவை.

Friday, July 24, 2020

ஆத்மா ஏன் வீழ்ச்சியடைந்தான்?

ஆன்மீகத் தன்மையைக் கொண்ட ஜீவன் இவ்வுலகிற்கு ஏன் வந்தான் என்னும் முக்கிய வினாவிற்கு ஸ்ரீல பிரபுபாதர் விடையளிக்கிறார்.

வழங்கியவர்: தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்

ஸ்ரீ ஸுக உவாச

ஆத்ம-மாயாம் ருதே ராஜன்
பரஸ்யானுபவாத்மன:
ந கடேதார்த-ஸம்பந்த:
ஸ்வப்ன-த்ரஷ்டுர் இவாஞ்ஜஸா

“ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்: அரசே, பரம புருஷ பகவானின் சக்தியால் பாதிக்கப்படாவிடில், தூய உணர்விலுள்ள தூய ஆத்மா பெளதிக உடலுடன் கொண்டுள்ள உறவில் எந்த அர்த்தமும் இல்லை. அந்த உறவானது ஒருவன் தனது உடலின் இயக்கத்தை கனவில் காண்பதைப் போன்றதாகும்.” (ஸ்ரீமத் பாகவதம் 2.9.1)

ஜீவன் வீழ்ச்சியடையவில்லை
கிருஷ்ணருடன் இருந்த ஜீவன், இந்த பெளதிக உலகில் எவ்வாறு வீழ்ச்சியடைந்தான் என்னும் வினாவினை பலரும் வினவுகின்றனர். அதற்கான விடை இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. ஜீவனின் நிலையானது ஜட சக்தியில் அவன் மயக்கப்பட்டுள்ளதைக் குறிக்கிறது; உண்மையில், அவன் வீழ்ச்சியடையவில்லை. மேகக் கூட்டம் நகரும்போது அதற்குப் பின்னால் உள்ள நிலாவும் சேர்ந்து நகருவதைப் போன்று தோன்றலாம். ஆனால் உண்மையில் நிலா நகருவதே இல்லை. அதுபோலவே, பரமனின் ஆன்மீகப் பொறியாகிய ஜீவன் வீழ்ச்சியடைவதே இல்லை. ஆயினும், “நான் வீழ்ச்சியடைந்துள்ளேன், நான் பெளதிகமானவன், நான் இந்த உடல்,” என்று அவன் நினைத்துக் கொண்டுள்ளான்.

ஆத்மாவிற்கும் உடலிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இதனை நம்மால் நன்கு உணர முடியும். உடல் மாற்றமடைகிறது; மடிகிறது. ஆனால், நான் மாற்றமின்றி அப்படியே இருக்கின்றேன். உடலுடன் நமக்கு தொடர்பு இருப்பதாக நாம் நினைப்பதற்கு கிருஷ்ணருடைய மாயா சக்தியே காரணமாகும். கிருஷ்ணரை நாம் மறக்கும்போதே, அந்த மாயா சக்தி வளர்ச்சியடைகிறது.

நாடகத்தில் நடித்தல்
வேறு விதமாகக் கூறினால், உடலுடனான நமது பொய்யான அடையாளத்திற்கு நமது மறதியே காரணமாகும். நாம் கிருஷ்ணரை மறக்க விரும்பினோம், கிருஷ்ணரைக் கைவிட்டு பெளதிக உலகில் அனுபவிக்க விரும்பினோம். எனவே, கிருஷ்ணர் அதற்கான வாய்ப்பினை வழங்கியுள்ளார். நீங்கள் ஒரு நாடகத்தில் நடிக்கும்போது, “நான் ஓர் அரசன்,” என்று நினைத்தால், உங்களால் அரசனைப் போன்று அருமையாகப் பேச முடியும். ஆனால், “நான் ஒரு சீடன்” என்று நீங்கள் நினைத்தால், உங்களால் அவ்வளவு அருமையாகப் பேச முடியாது. எண்ணங்கள் இங்கே அவசியமாகின்றன. நீங்கள் அரசனின் கதாபாத்திரத்தில் நடிப்பதாக இருந்தால், நீங்கள் உங்களை அரசனாக நம்புவதும் அந்த அரசனுக்குரிய துணிவுடன் இருப்பதும் அவசியமாகிறது, நீங்கள் ஒரு சீடன் என்பதை மறந்துவிட வேண்டும். அப்போதுதான் உங்களால் அருமையாக நடிக்க முடியும், பார்ப்பவர்களின் பாராட்டுதலையும் பெற முடியும். “நான் ஒரு சீடன், ஆனால் அரசனாக நடித்துக் கொண்டுள்ளேன்,” என்று நினைத்தால், உங்களால் நடிக்க முடியாது.

நாம் அனுபவிப்பாளரான கிருஷ்ணரின் கதாபாத்திரத்தில் நடிக்க விரும்பியதால், கிருஷ்ணரும் அவ்வாறே ஆகட்டும் என்று அதற்கான வாய்ப்பினை நமக்கு வழங்கியுள்ளார். “நீ அரசனின் கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புகிறாய். சரி, அதற்கான பாதையில் நான் உனக்கு பயிற்சியளிக்கின்றேன்.”

இந்த பெளதிக உலகில் நாம் செய்ய வேண்டியது என்பது எதுவுமில்லை. ஆனாலும், “நான் இந்தியன், நான் அமெரிக்கன், நான் பிராமணன், நான் சூத்திரன், நான் இது, நான் அது, நான் இதனைச் செய்தாக வேண்டும், எனக்கு எண்ணற்ற கடமைகள் இருக்கின்றன,” என்றெல்லாம் நினைக்கும்படி மாயா சக்தியினால் நாம் பயிற்சியளிக்கப்படுகின்றோம். இவை அனைத்தும் அறியாமையே. இத்தகைய அபத்தங்களைச் செய்ய வேண்டிய அவசியம் நமக்கு இல்லை. இருப்பினும், நாம் இதனை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டு வாழ்ந்து வருகிறோம்.

மேகக்கூட்டம் நகரும்போது நிலா நகருவதைப் போல தோன்றுகிறது; அதுபோலவே, ஆத்மா வீழ்ச்சியடைந்திருப்பதைப் போல தோன்றுகிறது.

கனவில் தோன்றும் புலி
இதுவே இங்கு விளக்கப்பட்டுள்ளது: ஆத்மமாயாம் ருதே ராஜன் பரஸ்யானுபவாத்-மன:, பரம புருஷ பகவானின் சக்தியால் பாதிக்கப்படாவிடில், தூய ஆத்மா பெளதிக உடலுடன் கொண்டுள்ள உறவில் எந்த அர்த்தமும் இல்லை. அந்த உறவானது ஒருவன் தனது உடலின் இயக்கத்தை கனவில் காண்பதைப் போன்றதாகும்.

கனவில் புலியைக் காணும் மனிதன், “புலி வருகின்றது, புலி வருகின்றது, என்னைக் காப்பாற்றுங்கள், என்னைக் காப்பாற்றுங்கள்,” என்று அலறுகின்றான். ஆனால், அவனுக்கு அருகில் விழித்துக் கொண்டுள்ள மனிதனோ, “புலி எங்கே இருக்கின்றது? எதற்காக அழுகின்றான்?” என்று நினைக்கிறான். ஆயினும், கனவு கண்டு கொண்டுள்ள மனிதனைப் பொறுத்தவரையில், புலி தன்னைத் தாக்க வருவதாக உண்மையிலேயே நினைக்கின்றான்.

எனவேதான், இந்த உதாரணம் வழங்கப்பட்டுள்ளது, ந கடேதார்த ஸம்பந்த:, ஆத்மா உடலுடன் கொண்டுள்ள உறவு, கனவு காணும் மனிதனின் நிலையைத் தவிர வேறொன்றுமில்லை. புலி இருப்பதாக கனவு காண்பதால், அவன் ஒருவித பயங்கரமான சூழ்நிலையை தானே உருவாக்கிக்கொள்கின்றான். உண்மையில் பயப்படுவதற்கான காரணம் எதுவுமேயில்லை. அங்கு புலியே இல்லை. கனவின் மூலமாகவே சூழ்நிலைகள் உருவாக்கப்படுகின்றன.

அதுபோலவே, பெளதிக உலகையும் பெளதிகச் செயல்களையும் நாமே உருவாக்கிக் கொண்டுள்ளோம். “நான் அதிகாரி, நான் தொழிலதிபர், நான் இவன், நான் அவன். எங்களுக்கு அவனுடைய ராஜ தந்திரம் தெரியும், எங்களுடைய போட்டியாளரை நாங்கள் வெல்ல வேண்டும்,” என்றெல்லாம் நினைத்தபடி மக்கள் ஓடிக் கொண்டுள்ளனர். இவை அனைத்தும் கனவு காணும் மனிதனால் உருவாக்கப்படும் சூழ்நிலைகளைப் போன்றவையே, ஸ்வப்ன த்ரஷ்டுர் இவாஞ்ஜஸா.

இவ்வுலகில் நிகழும் ஜீவனின் உறவுகள் அனைத்தும் கனவில் நிகழும் புலியின் தாக்குதலைப் போலவே. கனவு முடிந்தால், எல்லாம் முடிவுறும்.

மாயையுடன் எப்போது வந்தோம்?
எனவே, “நாம் எப்போது இந்த பெளதிக சக்தியின் தொடர்பிற்கு வந்தோம்?” என்று யாரேனும் வினவினால், அதற்கான விடை, நாம் அந்தத் தொடர்பிற்கு வரவே இல்லை என்பதே. வெளிப்புற (மாயா) சக்தியின் ஆதிக்கத்தினால், நாம் அதனுடன் தொடர்பு கொண்டுள்ளதாக நினைத்துக் கொண்டுள்ளோம். உண்மையில், நாம் வீழ்ச்சியடையவில்லை, வீழ்ச்சியடையவும் முடியாது. சூழ்நிலைகளை மட்டுமே நாம் உருவாக்கியுள்ளோம். உண்மையில், அந்தச் சூழ்நிலைகளையும் நாம் உருவாக்கவில்லை, கிருஷ்ணரே அச்சூழ்நிலைகளை நமக்கு வழங்குகின்றார். ஏனென்றால், நாம் கிருஷ்ணரை நகல் செய்ய விரும்புகின்றோம், எனவே, அதற்கான வாய்ப்பை கிருஷ்ணர் வழங்கியுள்ளார்: “நீ என்னை நகல் செய்ய விரும்புகின்றாய், மேடையில் அரசனைப் போல நடிக்க விரும்புகின்றாய். அவ்வாறே நடிப்பாயாக, அவ்வாறே செய்வாயாக, மக்களும் அருமையான அரசன் என்று கைதட்டுவர்.”

பெளதிக உலகில் உள்ள ஒவ்வொருவருமே ஏதாவதொரு பாத்திரத்தில் நடித்துக்கொண்டுள்ளனர். நான் பிரதம மந்திரியாக விரும்புகின்றேன். நான் ஒரு பெரும் தொழிலதிபராக விரும்புகின்றேன். நான் தலைவராக விரும்புகின்றேன், நான் ஒரு தத்துவவாதியாக விரும்புகின்றேன், நான் விஞ்ஞானியாக விரும்புகின்றேன். இத்தகைய அபத்தமான பாத்திரங்களில் நடிப்பதற்கு நாம் முயற்சிக்கின்றோம், கிருஷ்ணரும் சரி என்று இதற்கான வாய்ப்பினை நமக்கு வழங்குகின்றார்.

உடலுடன் அனைத்தும் மடிகின்றன
ஆயினும், இவை அனைத்தும் அபத்தமே. வெறும் கனவே. நீங்கள் கனவு கண்டு விழிக்கும்போது, அடுத்த நொடியில் கனவு மறைந்துவிடுகின்றது, கனவில் கண்ட அனைத்தும் மறைந்துவிடுகின்றன. புலியும் இல்லை, காடும் இல்லை. அதுபோலவே, உடல் இருக்கும் வரையில், “நான் ஒரு பொறுப்புமிக்க தலைவன், நான் இவன், நான் அவன்” என்றெல்லாம் நாம் நினைக்கின்றோம். ஆனால், உடல் அழிந்தவுடன் இந்த எண்ணங்கள் அனைத்தும் மறைந்துவிடுகின்றன.

கிருஷ்ணர் கூறுகின்றார், ம்ருத்யு ஸர்வ ஹரஸ் சாஹம், “நானே எல்லாவற்றையும் அழிக்கும் மரணம்.” நமது முந்தைய பிறவியின் வாழ்க்கையைப் பற்றி சிந்தித்துப் பாருங்கள். ஒருவேளை நான் ஓர் அரசனாக இருந்திருக்கலாம். பிருகு சம்ஹிதையின் மூலமாக நான் எனது முற்பிறவியில் ஒரு பெரிய மருத்துவராக இருந்ததாக கணிக்கப்பட்டது; நான் மிகவும் நல்லவனாக பாவங்களற்றவனாக இருந்திருக்கின்றேன். நான் அவ்வாறு இருந்திருக்கலாம், ஆனால் அவ்வாறு இருந்ததில் எனக்குச் சற்றும் நினைவில்லை. நான் மிகவும் பிரசித்தி பெற்ற மருத்துவராக, மிகச்சிறந்த அனுபவம் மிக்க மருத்துவராக இருந்திருக்கலாம், ஆனால் அதெல்லாம் தற்போது எங்கே? அனைத்தும் மறைந்துவிட்டன.

இவ்வாறே பெளதிகத்துடனான நமது உறவும் கனவைப் போன்றதே. நாம் வீழ்ச்சியடையவில்லை. எனவே, எந்த நொடியிலும் நம்மால் நமது கிருஷ்ண உணர்வைப் புதுப்பித்துக்கொள்ள முடியும். “ஜடத்திற்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நான் கிருஷ்ணரின் நித்திய சேவகன்,” என்பதைப் புரிந்து கொண்ட உடனேயே நாம் விடுதலை பெற்று விடுகின்றோம். சில நேரங்களில் தாங்க முடியாத பயங்கரமான கனவு உண்டாகும்போது, நாம் விழித்துக்கொள்கின்றோம். அதுபோலவே, எந்த தருணத்திலும் நம்மால் பெளதிக உறவைத் துறந்துவிட முடியும்; கிருஷ்ண உணர்வை அடைந்தவுடன் அது சாத்தியமாகும். “கிருஷ்ணரே எனது நித்திய எஜமானர், நான் அவரது சேவகன்.” இதுவே வழிமுறை.

எல்லாவற்றையும் அழிக்கும் மரண தேவனாக பகவான் கிருஷ்ணர் விளங்குகிறார்.

மாயையிலிருந்து விடுபடுதல்
கிருஷ்ணர் கூறுகின்றார், மாம் ஏவ யே ப்ரபத்யந்தே மாயாம் ஏதாம் தரந்தி தே, “ஒருவன் என்னிடம் சரணடைந்த உடனேயே மாயையைக் கடக்கின்றான்.” மக்கள் கட்டுண்டவர்களாக, அடைக்கப்பட்ட நிலையில் உள்ளனர். மாயாவாதிகள் (அருவவாதிகள்) முக்தியடைவதற்காக தவங்களையும் விரதங்களையும் மேற்கொள்கின்றனர். யோகிகளும் கூட பரமனுடன் ஐக்கியமாவதற்கே முயல்கின்றனர். இவ்வாறாக பற்பல முயற்சிகள் மேற்கொள்ளப்

படுகின்றன. ஆயினும், சரணடைந்தவுடன் வீழ்ச்சியுற்ற நிலையிலிருந்து விடுபடுதல் என்பது எளிமையான வழிமுறையாகும். “இதுவரை மாயையின் கனவில் இருந்தபோதிலும், உண்மையில் நான் கிருஷ்ணருக்குச் சொந்தமானவன்,” என்று நினைப்பதன் மூலமாக ஒருவன் நொடிப்பொழுதில் உடனடியாக விடுவிக்கப்படுகின்றான்.

கிருஷ்ணரின் உத்தரவைப் பின்பற்றுவதன் மூலமாக நம்மால் நொடிப் பொழுதில் விடுதலை அடைய முடியும். ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் ஷரணம் வ்ரஜ. இதுவே உண்மை. நாம் வீழ்ச்சியடையவில்லை, வீழ்ச்சியடைந்துள்ளதாக நினைத்துக் கொண்டுள்ளோம். எனவே, முதலில் நாம் இத்தகைய அபத்தமான எண்ணங்களைக் கைவிட வேண்டும், அப்போது முக்தி பெறுவோம்.

மக்கள் கேட்கலாம், “இதயத்திலிருக்கும் கிருஷ்ணர் ஒருவருக்கு ஒருவிதமான உணர்வையும் மற்றொருவருக்கு வேறொரு விதமான உணர்வையும் வழங்குவது ஏன்?” இஃது அவருடைய கருணையாகும். நான் கிருஷ்ணரை மறக்க விரும்புவதால், கிருஷ்ணர் அதற்கான வாய்ப்பினை வழங்குகின்றார்.

ஏன் மறதியை வழங்குகிறார்?
கர்மிகள் (சாதாரண பெளதிகவாதிகள்), மாயாவாதிகள், போலி யோகிகள் முதலியோர் கிருஷ்ணரை மறக்க விரும்புகின்றனர். எனவே, கிருஷ்ணர் எந்தெந்த வழிகளில் அவரை மறக்கலாம் என்பதற்கான அறிவை வழங்குகின்றார். நீங்கள் கிருஷ்ணருடனான உறவைப் புதுப்பித்துக்கொள்ள விரும்பினால், அவர் உங்களுக்கும் அறிவை வழங்குவார். ததாமி புத்தி-யோகம் தம் யேன மாம் உபயாந்தி தே, “என்னிடம் வந்தடைவதற்கான அறிவை நானே வழங்குகின்றேன்.” உங்களுடைய விருப்பத்தின்படி கிருஷ்ணர் உங்களுக்கு வசதிகளை வழங்குகின்றார்.

இப்பொழுது இயற்கையாக எழும் அடுத்த வினா: பகவான் ஏன் ஜீவன்களுக்கு அத்தகு உணர்வையும் மறதியையும் ஏற்படுத்துகிறார் என்பதாகும். இதற்கான விடை யாதெனில், பகவானின் அம்சங்களான ஜீவன்கள் தமது தூய உணர்வில் நிலைபெற்று பகவானின் அன்புத் தொண்டில் ஈடுபட வேண்டும் என்பதே பகவானின் உண்மையான விருப்பம். ஆனால், ஜீவன் சிறிதளவு சுதந்திரம் உடையவனாக இருப்பதால், அவன் பகவானுக்குத் தொண்டாற்ற விரும்பாமல், பகவானைப் போன்று சுதந்திரமாகச் செயல்பட விரும்பலாம்.

ஜீவன் ஒருபோதும் கடவுளாக முடியாது, ஆனால் மாயையின் ஆதிக்கத்தினால், “நான் கடவுள்” என்றோ, “சுவாசத்தைக் கட்டுப்படுத்துவதின்

மூலமாக நான் கடவுளாக ஆகிவிடுவேன்,” என்றோ மக்கள் நினைத்துக் கொண்டுள்ளனர். ஆயினும், அவர்களால் ஒருபோதும் கடவுளாக முடியாது. இது சாத்தியமே இல்லை. அனைவருமே கடவுளாகலாம் என்றால், கடவுள் என்பதற்கு அர்த்தமே இல்லை.

ரஸகுல்லா கடவுள்
“நான் இலட்சாதிபதி ஆவேன், கோடீஸ்வரன் ஆவேன், முதலமைச்சர் ஆவேன், பிரதமர் ஆவேன்,” என்று கூறும் கர்மிகள் இவற்றை அடைவதற்காகப் போராடுகின்றனர்.

யோகிகளோ, “நான் கடவுளாவேன்,” என்று எண்ணுகின்றனர். இது மற்றொரு வகையான போராட்டமாகும். இது மாயையே. கிருஷ்ணர் அவர்களுக்கு சில யோக சித்திகளை வழங்கலாம். இந்தியாவில் தங்கத்தை வரவழைக்கும் ஓர் அயோக்கியன் இருக்கின்றான். மக்களும் அவனைப் பார்த்து, “இவரே கடவுள், இவரே கடவுள்,” என்று அவன் பின்னால் ஓடுகின்றனர். சிறிதளவு தங்கத்தை உருவாக்குவதால், அவன் கடவுளாகின்றான்.

மற்றொரு யோகியோ இரண்டு ரஸகுல்லாவை தோற்றுவிக்கிறான். பத்து ரூபாய் மதிப்புள்ள இரண்டு ரஸகுல்லாவை தோற்றுவிப்பதால் அவன் கடவுளாகின்றான். பாருங்கள்! இதுவே மாயை. கடையில் பத்து ரூபாய் கொடுத்தால், இரண்டு ரஸகுல்லாவை வாங்கிவிடலாம், ஆனால் அவனோ அந்த பத்து ரூபாயினால் கடவுளாகியுள்ளான். “இவரே கடவுள், இவரால் ரஸகுல்லாவை தோற்றுவிக்க முடிகின்றது,” என மக்கள் நினைக்கின்றனர். இந்த மக்களுக்கு அறிவே இல்லை. ரஸகுல்லாவை சமையலறையில் எளிதில் சமைக்க முடியும், ஆனால் முட்டாள்களோ, “ஆஹா, என்னே யோகியின் அற்புதம்!” என்று நினைக்கின்றனர்.

இவ்வாறாக, கிருஷ்ணர் ஒருவருக்கு சில யோக சித்திகளை வழங்கினால், உடனே அவன் தான் கடவுளாகி விட்டதாக நினைத்துக்கொள்கிறான். சில முகஸ்துதியாளர்களும், “ஆமாம், நீங்கள் கடவுளேதான்,” என்று புகழ்கின்றனர். இத்தகைய யோகிகளும் கர்மிகளைப் போன்று கனவில் உள்ளவர்களே. ஆனால் மரணம் வந்தவுடன் அனைத்தும் முடிந்துவிடுகின்றன.

இவற்றைப் புரிந்துகொள்வதில் ஏதேனும் சிரமம் உள்ளதா? இந்த ஸ்லோகம் மிகவும் முக்கியமானது. ஒவ்வொரு ஸ்லோகத்தையும் படியுங்கள், கவனத்துடன் தினமும் படியுங்கள், அறிந்து புரிந்துகொள்வதற்கு முயலுங்கள். இதனால் பெருமளவில் பயனடைவீர்கள். தினந்தோறும் நூற்றுக்கணக்கான அடிகள் முன்னேறுவீர்கள். இவை மிகவும் முக்கியமான ஸ்லோகங்கள், வியாஸதேவரால் எவ்வளவு அருமையாகத் தொகுக்கப்பட்டுள்ளன. இரண்டே வரிகளில் அனைத்து விஷயங்களும் விவரிக்கப்பட்டுள்ளன. இதுவே சாஸ்திரம். மிக்க நன்றி

ஆய கலைகள் 64

1. எழுத்திலக்கணம் (அக்கரவிலக்கணம்)

2. எழுத்தாற்றல் (லிகிதம்)

3. கணிதம்

4. மறைநூல் (வேதம்)

5. தொன்மம் (புராணம்)

6. இலக்கணம் (வியாகரணம்)

7. நயனூல் (நீதி சாத்திரம்)

8. கணியம் (சோதிட சாத்திரம்)

9. அறநூல் (தரும சாத்திரம்)

10. ஓகநூல் (யோக சாத்திரம்)

11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்)

12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்)

13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்)

14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்)

15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்)

16. மறவனப்பு (இதிகாசம்)

17. வனப்பு

18. அணிநூல் (அலங்காரம்)

19. மதுரமொழிவு (மதுரபாடணம்)

20. நாடகம்

21. நடம்

22. ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்)

23. யாழ் (வீணை)

24. குழல்

25. மதங்கம் (மிருதங்கம்)

26. தாளம்

27. விற்பயிற்சி (அத்திரவித்தை)

28. பொன் நோட்டம் (கனக பரீட்சை)

29. தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை)

30. யானையேற்றம் (கச பரீட்சை)

31. குதிரையேற்றம் (அசுவ பரீட்சை)

32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை)

33. நிலத்து நூல்/மண்ணியல் (பூமி பரீட்சை)

34. போர்ப்பயிற்சி (சங்கிராமவிலக்கணம்)

35. மல்லம் (மல்ல யுத்தம்)

36. கவர்ச்சி (ஆகருடணம்)

37. ஓட்டுகை (உச்சாடணம்)

38. நட்புப் பிரிப்பு (வித்துவேடணம்)

39. காமநூல் (மதன சாத்திரம்)

40. மயக்குநூல் (மோகனம்)

41. வசியம் (வசீகரணம்)

42. இதளியம் (ரசவாதம்)

43. இன்னிசைப் பயிற்சி (காந்தருவ வாதம்)

44. பிறவுயிர் மொழியறிகை (பைபீல வாதம்)

45. மகிழுறுத்தம் (கவுத்துக வாதம்)

46. நாடிப்பயிற்சி (தாது வாதம்)

47. கலுழம் (காருடம்)

48. இழப்பறிகை (நட்டம்)

49. மறைத்ததையறிதல் (முஷ்டி)

50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்)

51. வான்செலவு (ஆகாய கமனம்)

52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்)

53. தன்னுருக் கரத்தல் (அதிருசியம்)

54. மாயச்செய்கை (இந்திரசாலம்)

55. பெருமாயச்செய்கை (மகேந்திரசாலம்)

56. அழற்கட்டு (அக்கினித் தம்பனம்)

57. நீர்க்கட்டு (சலத்தம்பனம்)

58. வளிக்கட்டு (வாயுத்தம்பனம்)

59. கண்கட்டு (திருட்டித்தம்பனம்)

60. நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்)

61. விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்)

62. புதையற்கட்டு (கனனத்தம்பனம்)

63. வாட்கட்டு (கட்கத்தம்பனம்)

64. சூனியம் (அவத்தைப் பிரயோகம்)

சித்ரகுப்தர் கோயில், காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் நெல்லுக்காரத் தெருவில் சித்ரகுப்தர் மூலவராக தனிக்கோயிலில் வீற்றிருக்கிறார். உயிர்களின்  பாவ, புண்ணிய கணக்கு எழுதும் இவரை மாணவர்கள் வழிபட்டால் படிப்பில் சிறந்து விளங்குவர். 


தல வரலாறு: சிவனை நோக்கி தவத்தில் ஆழ்ந்த பிரம்மாவின் உடம்பில் இருந்து, கையில் எழுத்தாணி, ஓலைச்சுவடியுடன், தெய்வீக வடிவில் ஒருவர் வெளிப்பட்டார். தவத்தின் பலனாக இந்த அதிசயம் நிகழ்ந்ததை அறிந்த பிரம்மா, ”ரகசியமாக என் உடம்பிலிருந்து (காயம்) தோன்றியதால், ‘சித்ர குப்தர்’ என அழைக்கப்படுவாய்.

உனது சந்ததியினர் காயஸ்தா என பெயர் பெறுவர்” என்று அருள்புரிந்தார். இவர்கள் தற்போது ‘கருணீக மரபினர்’ எனப்படுகின்றனர். சித்ரகுப்தர் காளி தேவியை வழிபட்டு, எண்ணும், எழுத்தும் கற்றுக் கொண்டார். பிறகு உஜ்ஜயினி சென்று மகாகாளேஸ்வரரின் அருளால் கணக்கு வழக்குகளைப் பேரேட்டில் பதியும் திறமை பெற்றார். ஐப்பசி மாதத்தில் வரும் எம துவிதியையன்று எமலோகத்தில் கணக்கராகப் பதவி ஏற்றார்.

இவருக்கு காஞ்சிபுரம் நெல்லுக்காரத்தெருவில் கோயில் உள்ளது.

ராஜாதி ராஜன்: முன்னொரு காலத்தில், சவுதாஸ் என்ற மன்னன் சவுராஷ்டிர தேசத்தை ஆட்சி செய்தான். கொடுங்கோலனான அவன் மக்களைத் துன்புறுத்தினான். ‘நானே ராஜாதிராஜன்’ என்று ஆணவத்துடன் திரிந்தான். ஒருநாள், காட்டில் வேட்டையாடச் சென்ற போது தன் உடன் வந்தவர்களை விட்டு வழி தவறினான். அந்த நேரத்தில்,
” ஓம் தத்புருஷாய வித்மஹேசித்ர குப்தாய தீமஹிதந்நோ: லோக ப்ரசோதயாத்”
என்னும் காயத்ரி மந்திரம் ஒலித்தது. அந்த திசை நோக்கிச் சென்றான். அங்கு முனிவர்கள் யாகம் நடத்தக் கண்டான். ”என் ஆணையில்லாமல் யாகமா செய்கிறீர்கள்? நிறுத்தாவிட்டால், அனைவரையும் கொல்வேன்” என கத்தினான். முனிவர் ஒருவர், ‘நீ யார்? ஏன் இடையூறு செய்கிறாய்?” என்று கேட்டார். அதற்கு, “நான் ராஜாதி ராஜன் சவுதாஸ்” என கர்ஜித்தான். அதற்கு அவர், ”உயிர்களின் பாவ, புண்ணிய கணக்கை எழுதும் சித்ரகுப்தரே ராஜாதி ராஜன். அவரை வழிபட்டு நன்மை பெறுங்கள்” என்றார். அதைக் கேட்ட சவுதாஸுக்கு ஞானம் பிறந்தது. மனம் திருந்தி நல்லாட்சி நடத்தி தொடங்கினான். சவுதாஸின் ஆயுள்காலம் முடியவே, எமதுாதர்கள் எமலோகம் அழைத்துச் சென்றனர். அங்கு சித்ரகுப்தர், ”பிரபோ…சவுதாஸ் என்னும் இம்மன்னன் செய்த பாவம் கணக்கில் அடங்காது. ஆனால், தற்போது மனம் திருந்தியதால் சொர்க்கம் செல்ல அனுமதிக்கலாம்” என்றார்.

அதன்படியே, சொர்க்கம் செல்ல அனுமதிக்கப்பட்டான்.
கல்வி யோகம்: நவக்கிரகங்களில் ஒருவரான கேதுபகவானின் அதிதேவதை சித்ரகுப்தர். இவரை வணங்குவதால் கேது தோஷம் நீங்கும். நல்ல புத்தி உண்டாகும். மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் ஏற்படும். 

எப்படி செல்வது: காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டுக்கு அருகிலுள்ள நெல்லுக்காரத்தெரு 

விசேஷ நாட்கள் : சித்ராபவுர்ணமி, 

எம துவிதியைநேரம்:
 காலை 6:00 – 10:00 மணி; 
மாலை 5:00 – 08:00 மணி
தொடர்புக்கு: 044-2723 0571, 
                           97894 22852, 
                           94436 44256.    

விநாயகருக்கு செய்யப்படும் அர்ச்சைனையின் பலன்கள்

1,மாவிலை - அறம், நீதி காக்க

2. கரிசலாங்கன்னி - வாழ்க்கைக்கு தேவையான பொருள் கிடைக்க

3. வில்வம் - இன்பம் அடைய

4. அருகம்புல் - சகல பாக்யங்களும் பெற

5. இலந்தை - கல்வி ஞானம் பெற

6. ஊமத்தை - பெருந்தன்மை உயர

7. வன்னி - இந்த பிறப்பிலும் அடுத்த பிறப்பிலும் நன்மை அடைய

8. நாயுருவி - வசீகரம் உண்டாக

9. கண்டங்கத்திரி - வீரம் உண்டாக

10. அரளி - எடுக்கும் காரியங்கள் வெற்றி பெற

11. அரசு - உயர் பதவி கௌரவம் அடைய

12. எருக்கு - வம்ச விருத்தி அடைய

13. மருதம் - குழந்தை பேறு அடைய

14. துளசி - கூர்மையான அறிவினை பெற

15. மாதுளை - பெரும் புகழ் அடைய

16. தேவதாரு - எதையும் தாங்கும் வலிமை பெற

17. மரிக்கொழுந்து - இல்லற சுகம் பெற

18. ஜாதி மல்லி - சொந்த வீடு பூமி பாக்கியம் பெற

19. நெல்லி - செல்வ செழிப்பு உண்டாக

20. அகத்திக்கீரை - கடன் தொல்லையில் இருந்து விடுபட

21. தவனம் - திருமண தடை விலகி நல்வாழ்வு கிட்ட

விநாயக பெருமானுக்கு இந்த 21 விதமான அர்ச்சனையும் செய்து வந்தால் நம் வினைகள் எல்லாம் நீங்கி நல்வாழ்வு பெறலாம்....

Wednesday, July 22, 2020

பெரியபாளையம் பவானி அம்மன்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரியபாளையத்தில் ஆரணி ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ளது, பவானி அம்மன் திருக்கோவில்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரியபாளையத்தில் ஆரணி ஆற்றின் கரையோரத்தில் அமைந்துள்ளது, பவானி அம்மன் திருக்கோவில். பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் அம்மன் சக்தி வாய்ந்தவராக திகழ்கிறார்.

தல வரலாறு 

கம்சன் என்னும் அசுரனின் தங்கை தேவகிக்கும், வசுதேவருக்கும் திருமணம் நடைபெற்றது. தங்கையையும், மைத்துனரையும் தேரில் வைத்து ஊர்வலமாக அழைத்துச் சென்றான் கம்சன். அப்போது ஒரு அசரீரி ஒலித்தது. ‘கம்சா! உன்னுடைய தங்கைக்கு பிறக்கப்போகும் 8-வது ஆண் குழந்தையால் உனக்கு மரணம் நிகழும்’ என்றது அந்தக் குரல். அதைக் கேட்டு ஆத்திரமடைந்த கம்சன், தங்கையென்றும் பாராமல் தேவகியை கொல்ல முயன்றான். அவனைத் தடுத்து நிறுத்திய வசுதேவர், தங்களுக்கு பிறக்கும் அனைத்துக் குழந்தைகளையும், பிறந்த மறு கணமே கொடுத்துவிடுவதாக கம்சனிடம் வாக்குறுதி கொடுத்தார்.

கம்சனும் இதற்கு ஒப்புக்கொண்டான். இருப்பினும், தங்கை தேவகியையும், வசுதேவரையும் தன் கண்காணிப்பிலேயே இருக்க வேண்டும் என்று சிறையில் அடைத்தான். சிறையிலேயே வாழ்க்கை நடத்திய தேவகிக்கும், வசு தேவருக்கும் பிறந்த 7 குழந்தைகளை கம்சன் அழித்து விட்டான். 8-வதாக கண்ணன் பிறந்தார். அது ஒரு நள்ளிரவு நேரம். கண்ணன் பிறந்ததும் ஒரு அசரீரி ஒலித்தது. ‘வசுதேவரே! உங்கள் மகனை கோகுலத்தில் உள்ள நந்தகோபரின் மனைவி யசோதையிடம் சேர்த்து விட்டு, அங்கு யசோதையிடம் இருக்கும் பெண் குழந்தையை இங்கே தூக்கி வந்து விடுங்கள்’ என்றது.

மந்திரத்திற்கு கட்டுப்பட்டது போல் வசுதேவர், தன்னுடைய மகன் கண்ணனை கூடையில் வைத்து தலையில் சுமந்தபடி சென்று, யசோதையிடம் வைத்து விட்டு, அங்கிருந்த பெண் குழந்தையை எடுத்து வந்து தேவகியின் அருகில் வைத்தார். அதிகாலையில் தேவகிக்கு 8-வது குழந்தைப் பிறந்தது பற்றி கம்சனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

விரைந்து வந்த கம்சன், ஆண் வாரிசுக்கு பதிலாக பெண் குழந்தை இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தான். இருப்பினும் 8-வது குழந்தையால் ஆபத்து ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அந்தக் குழந்தையை கையில் எடுத்து, அந்தரத்தில் சுவரில் வீசி கொல்ல முயன்றான். அந்தரத்தில் பறந்த குழந்தை, சக்தியின் உருவம் எடுத்து காட்சியளித்தது.

‘கம்சனே! உன்னைக் கொல்லப்போகிறவன், ஏற்கனவே பிறந்துவிட்டான். அவன் கோகுலத்தில் வளர்ந்து வருகிறான். உரிய நேரத்தில் உன்னைக் கொல்வான்’ என்று கூறி மறைந்தது. அந்த சக்தியே அங்கிருந்து இங்குள்ள பெரியபாளையம் தலத்தில் பவானியாக வந்து அமர்ந்ததாக தல வரலாறு கூறுகிறது.

*🔯வளையல் வியாபாரி 

முற்காலத்தில் ஆந்திரப்பகுதியில் இருந்த வளையல் வியாபாரிகள் பலரும் இங்குவந்து வியாபாரம் செய்து வந்தனர். அவர்கள் தங்களிடம் வளையல் வாங்கும் பெண்களுக்கு, மாங்கல்ய சுகத்துடன் வாழ மஞ்சள், குங்குமமும் வழங்குவதை வழக்கமாக வைத்திருந்தனர். ஒரு முறை வளையல் வியாபாரி ஒருவர் தன்னுடைய வியாபாரத்தை முடித்துக் கொண்டு ஆந்திராவுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். 

இரவு வெகு நேரம் ஆகிவிட்டதால், பெரியபாளையத்தில் ஒரு வேப்பமரத்தடியில் அவர் ஓய்வெடுத்தார். அதிகாலையில் கண் விழித்து பார்த்தபோது, அவர் அருகில் இருந்த வளையல் மூட்டையைக் காணவில்லை. சுற்றும் முற்றும் பார்த்த அவருக்கு, அங்கிருந்த புற்று ஒன்று கண்ணில்பட்டது. சந்தேகத்தின் காரணமாக அந்தப் புற்றை எட்டிப் பார்த்தபோது, அதற்குள் வளையல் மூட்டை கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் பயத்துடன் ஊருக்குத் திரும்பினார். அன்று இரவு வளையல் வியாபாரியின் கனவில் தோன்றிய அம்மன், ‘நான் ரேணுகாதேவி. பெரியபாளையத்தில் பவானி அம்மனாக அமர்ந்திருக்கிறேன். அங்குள்ள புற்றில் நான் சுயம்புவாக இருக்கிறேன். எனக்கு கோவில் அமைத்து வழிபட்டு வா’ என்று கூறி மறைந்தார்.

மறுநாள் பெரியபாளையம் வந்த வளையல் வியாபாரி, கடப்பாரையால் புற்றை உடைத்தார். அப்போது சுயம்பு அம்மனின் மீது கடப்பாரை பட்டு ரத்தம் பீறிட்டது. இதனைக் கண்டு பயந்த வளையல் வியாபாரி, தன்னிடம் இருந்த மஞ்சளை எடுத்து ரத்தம் வந்த இடத்தில் வைத்து தேய்த்தார். உடனே ரத்தம் நின்று போனது. இதையடுத்து புற்றை முழுமையாக நீக்கி விட்டு, அம்மனுக்கு அலங்காரம் செய்து தினமும் வழிபட்டு வந்தார். பிற்காலத்தில் அம்மனுக்கு கோவில் அமைக்கப்பட்டது. சுயம்புவாக உள்ள அம்மனுக்கு வெள்ளிக் கவசம் அணிவிக்கப்பட்டிருக்கும். கவசத்தை நீக்கும் போது, சுயம்பு அம்மனின் மீது கடப்பாரை பட்ட தழும்பு இருப்பதைக் காண முடியும்.

🚩ஆலய அமைப்பு :

பாளையம் என்பதற்கு படைவீடு என்று பெயர். அம்மன் வீற்றிருக்கும் பெரிய படைவீடு என்பதால், பெரிய பாளையம் என்று பெயர் பெற்றதாக கூறப்படுகிறது.

ஆலயத்திற்குள் நுழையும் போது விநாயகர் வீற்றிருக்கிறார். அவருக்கு பின்புறம் மாதங்கி அம்மன் காட்சியளிக்கிறார். ஆலயத்தின் சுற்று பிரகாரத்தில் பவானி அம்மனின் உற்சவர் சன்னிதி அமைந்திருக்கிறது. பிரகார வீதியில் வள்ளி- தெய்வானை சமேத முருகப் பெருமான், தாயாருடன் பெருமாள், ஆஞ்சநேயர், பரசுராமர் ஆகியோரது சன்னிதிகள் உள்ளன. கருவறையில் பவானி அம்மன் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். ஓங்கார வடிவமாக, சங்கு சங்கரதாரிணியாக, பாதி திருவுருவத்துடன் அமர்ந்த கோலத்தில் அன்னை வீற்றிருக்கிறார். நான்கு கரங்களுடன் காட்சியளிக்கும் அன்னையின் மேல் இரு கரங்களில் சங்கு, சக்கரமும், கீழ் இரு கரங்களில் வாள், அமுத கலசமும் தாங்கியிருக்கிறார். அன்னையின் அருகில் கண்ணன், நாகதேவன் ஆகியோரது திருவுருவங்கள் உள்ளன.

இத்தல அன்னையிடம் மாங்கல்ய பலம் வேண்டி வரும் பெண்களின் எண்ணிக்கை அதிகமானது. வாழ்வில் வளம் பெருகவும், குழந்தை வரம் கிடைக்கவும் வழிபடுபவர்களும் ஏராளம். வேப்பிலை ஆடை உடுத்தி பிரார்த்தனை செய்தால், அனைத்து வேண்டுதல்களும் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. அன்னைக்கு எலுமிச்சைப் பழ விளக்கேற்றி வழிபட்டாலும் கோரிக்கைகள் நிறைவேறும்.

இந்த ஆலயத்தில் சித்திரை மாதத்தில் வரும் சித்ரா பவுர்ணமி அன்று 108 பால்குட ஊர்வலம், அபிஷேகம் நடைபெறும். ஆடி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி 10 நாட்கள் நடைபெறும் உற்சவமும் சிறப்பு வாய்ந்ததாகும். மேலும் ஆடி மாதம் வரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 5.30 மணி முதல் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் கோவில் நடை பக்தர் களின் தரிசனத்திற்காக திறந்திருக்கும். ஞாயிற்றுக் கிழமையில் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை முழுமையாக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

அமைவிடம் :

சென்னையில் இருந்து 43 கிலோமீட்டர் தூரத்திலும், திருவள்ளூரில் இருந்து 30 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயம்.

ஓம் சக்தி 
பராசக்தி 

Tuesday, July 21, 2020

1008 லிங்கங்கள்


1 அகர லிங்கம் 
2 அக லிங்கம்
 3 அகண்ட லிங்கம் 
4 அகதி லிங்கம்
 5 அகத்திய லிங்கம்
 6 அகழ் லிங்கம்
 7 அகில லிங்கம்
 8 அகிம்சை லிங்கம் 
9 அக்னி லிங்கம்
 10 அங்கி லிங்கம்
 11 அங்கு லிங்கம்
 12 அசரிய லிங்கம்
 13 அசுர லிங்கம் 
14 அசை லிங்கம் 
15 அசோக லிங்கம்
 16 அச்சு லிங்கம்
 17 அஞ்சா லிங்கம்
 18 அட்ட லிங்கம் 
19 அட்ச லிங்கம் 
20 அட்சதை லிங்கம்
 21 அட்டோ லிங்கம் 
22 அடிமுடி லிங்கம் 
23 அடி லிங்கம் 
24 அணணா லிங்கம் 
25 அண்ட லிங்கம் 
26 அணி லிங்கம்
 27 அணு லிங்கம் 
28 அத்தி லிங்கம் 
29 அதழ் லிங்கம்
 30 அதிபதி லிங்கம் 
31 அதிர்ஷ்ட லிங்கம் 
32 அதிய லிங்கம் 
33 அதிசய லிங்கம் 
34 அதீத லிங்கம் 
35 அந்தார லிங்கம் 
36 அந்தி லிங்கம் 
37 அநந்தசாயி லிங்கம் 
38 அநலி லிங்கம்
 39 அநேக லிங்கம் 
40 அப்ப லிங்கம் 
41 அப்பு லிங்கம்
 42 அபய லிங்கம்
 43 அபி லிங்கம் 
44 அபிநய லிங்கம்
 45 அபிஷேக லிங்கம்
 46 அம்பல லிங்கம்
 47 அம்பி லிங்கம் 
48 அம்புசி லிங்கம் 
49 அம்ம லிங்கம்
 50 அமல லிங்கம்
 51 அமர லிங்கம்
 52 அமராவதி லிங்கம்
 53 அமிர்த லிங்கம்
 54 அர்ச்சனை லிங்கம்
 55 அர்ச்சுண லிங்கம்
 56 அர்த்த லிங்கம்
 57அரச லிங்கம் 
58 அரவ லிங்கம்
 59 அரங்க லிங்கம் 
60 அரம்பை லிங்கம்
 61 அரளி லிங்கம்
 62 அரி லிங்கம்
 63 அரிணி லிங்கம்
 64 அரிமா லிங்கம்
 65 அருக லிங்கம் 
66 அருணை லிங்கம் 
67 அருமணி லிங்கம் 
68 அரும்பு லிங்கம்
 69 அருளி லிங்கம்
 70 அரூப லிங்கம் 
71 அல்லி லிங்கம் 
72 அலை லிங்கம் 
73 அவைய லிங்கம்
 74 அழகு லிங்கம்
 75 அளத்தி லிங்கம்
 76 அற லிங்கம் 
77 அறிவு லிங்கம்
 78 அன்பு லிங்கம்
 79 அன்புரு லிங்கம் 
80 அன்ன லிங்கம்
 81 அனுதாபி லிங்கம் 
82 அனுபூதி லிங்கம் 
83 அஷ்ட லிங்கம் 
84 ஆக்கை லிங்கம்
 85 ஆகம லிங்கம் 
86ஆகாய லிங்கம்
 87 ஆசான லிங்கம் 
88 ஆசிரிய லிங்கம்
 89 ஆசி லிங்கம் 
90 ஆட லிங்கம் 
91 ஆடரி லிங்கம் 
92 ஆண் லிங்கம்
 93 ஆண்டி லிங்கம்
 94 ஆணுரு லிங்கம் 
95 ஆத்ம லிங்கம் 
96 ஆதார லிங்கம் 
97 ஆதி லிங்கம் 
98 ஆதிரி லிங்கம் 
99 ஆதிசேவி லிங்கம் 
100 ஆதிரை லிங்கம் 
101 ஆதினா லிங்கம் 
102 ஆபேரி லிங்கம் 
103 ஆமிர லிங்கம் 
104 ஆமை லிங்கம் 
105 ஆய லிங்கம் 
106 ஆயதி லிங்கம் 
107 ஆர்த்தி லிங்கம்
 108 ஆரண்ய லிங்கம்
 109 ஆரண லிங்கம்
 110 ஆராதனை லிங்கம்
 111 ஆராபி லிங்கம்
 112 ஆரூர லிங்கம் 
113 ஆரோக்ய லிங்கம் 
114 ஆலகால லிங்கம்
 115 ஆலவாய் லிங்கம் 
116 ஆலால லிங்கம்
 117 ஆலி லிங்கம் 
118 ஆவார லிங்கம்
 119 ஆவி லிங்கம் 
120 ஆவே லிங்கம்
 121 ஆவுடை லிங்கம் 
122 ஆழி லிங்கம் 
123 ஆனந்த லிங்கம்
 124 இக்கு லிங்கம்
 125 இசை லிங்கம்
 126 இடப லிங்கம்
 127 இணை லிங்கம்
 128 இதய லிங்கம்
 129 இந்திர லிங்கம் 
130 இமய லிங்கம்
 131 இமை லிங்கம்
 132 இரட்டை லிங்கம்
 133 இராம லிங்கம்
 134 இலக்கிய லிங்கம் 
135 இலாப லிங்கம்
 136 இளைய லிங்கம் 
137 இறவா லிங்கம் 
138 இறை லிங்கம் 
139 இனிமை லிங்கம் 
140 ஈகை லிங்கம் 
141 ஈசான்ய லிங்கம்
 142 ஈட லிங்கம்
143 ஈடண லிங்கம்
 144 ஈடித லிங்கம்
 145 ஈடிலி லிங்கம் 
146 ஈர்ப்பு லிங்கம்
 147 ஈழ லிங்கம் 
148 ஈஸ்வர லிங்கம் 
149 ஈஸ்வரி லிங்கம் 
150 உக்ர லிங்கம்
 151 உச்சி லிங்கம்
 152 உசித லிங்கம் 
153 உடம்பி லிங்கம்
 154 உடுக்கை லிங்கம்
 155 உணர் லிங்கம் 
156 உத்தம லிங்கம் 
157 உத்ராட்ச லிங்கம்
 158 உதய லிங்கம்
 159 உதிர லிங்கம்
 160 உப்பிலி லிங்கம்
 161 உப்பு லிங்கம்
 162 உப லிங்கம் 
163 உபதேச லிங்கம் 
164 உபய லிங்கம் 
165 உமா லிங்கம் 
166 உமை லிங்கம் 
167 உயிர் லிங்கம் 
168 உரி லிங்கம் 
169 உரு லிங்கம் 
170 உருணி லிங்கம்
 171 உருமணி லிங்கம்
 172 உவப்பு லிங்கம்
 173 உழவு லிங்கம்
 174 உழுவை லிங்கம்
 175 உற்சவ லிங்கம் 
176 உன்னி லிங்கம்
 177 ஊக்க லிங்கம்
 178 ஊசி லிங்கம் 
179 ஊதா லிங்கம்
 180 ஊருணி லிங்கம் 
181 ஊழி லிங்கம் 
182 ஊற்று லிங்கம் 
183 எட்டி லிங்கம் 
184 எட்டு லிங்கம் 
185 எதனா லிங்கம் 
186 எந்தை லிங்கம்
 187 எம லிங்கம்
 188 எருது லிங்கம் 
189 எல்லை லிங்கம்
 190 எளிய லிங்கம் 
191 எழிலி லிங்கம்
 192 எழுத்தறி லிங்கம் 
193 என்குரு லிங்கம் 
194 ஏக லிங்கம் 
195 ஏகம லிங்கம் 
196 ஏகா லிங்கம் 
197 ஏகாம்பர லிங்கம் 
198 ஏகாந்த லிங்கம் 
199 ஏடக லிங்கம்
 200 ஏந்திழை லிங்கம் 
201 ஏம லிங்கம் 
202 ஏர் லிங்கம்
 203 ஏரி லிங்கம் 
204 ஏவச லிங்கம்
 205 ஏழிசை லிங்கம் 
206 ஏறு லிங்கம் 
207 ஏனாதி லிங்கம் 
208 ஐங்கர லிங்கம் 
209 ஐய லிங்கம்
 210 ஐராவத லிங்கம் 
211 ஒப்பிலா லிங்கம்
 212 ஒப்பிலி லிங்கம்
 213 ஒருமை லிங்கம்
 214 ஒளி லிங்கம் 
215 ஓசை லிங்கம்
 216 ஓடேந்தி லிங்கம் 
217 ஓம் லிங்கம் 
218 ஓம்கார லிங்கம் 
219 ஓவிய லிங்கம் 
220 ஔடத லிங்கம் 
221 ஔவை லிங்கம்
 222 கங்கா லிங்கம்
 223 கச்ச லிங்கம் 
224 கண்ட லிங்கம்
 225 கடம்ப லிங்கம் 
226 கடார லிங்கம் 
227 கடிகை லிங்கம்
 228 கடை லிங்கம்
 229 கதிர் லிங்கம்
 230 கதலி லிங்கம்
 231 கந்த லிங்கம் 
232 கபால லிங்கம்
 233 கபில லிங்கம் 
234 கமல லிங்கம் 
235 கயா லிங்கம் 
236 கயிலை லிங்கம்
 237 கர்ண லிங்கம் 
238 கர்ப்ப லிங்கம் 
239 கரண லிங்கம்
 240 கரு லிங்கம் 
241 கருட லிங்கம்
 242 கருமை லிங்கம்
 243 கருணை லிங்கம்
 244 கல்ப லிங்கம் 
245 கல்வி லிங்கம்
 246 கலி லிங்கம் 
247கலை லிங்கம் 
248 கவி லிங்கம் 
249 கற்பக லிங்கம் 
250 கற்பூர லிங்கம் 
251 கன்னி லிங்கம் 
252 கன லிங்கம்
 253 கனக லிங்கம் 
254 கனி லிங்கம் 
255 கஸ்தூரி லிங்கம் 
256 கஜ லிங்கம் 
257 கருணாகர லிங்கம் 
258 காசி லிங்கம்
 259 காஞ்சி லிங்கம் 
260 காடக லிங்கம் 
261 காத்த லிங்கம் 
262 காதம்பரி லிங்கம் 
263 காந்த லிங்கம் 
264 காப்பு லிங்கம் 
265 காம லிங்கம்
 266 கார் லிங்கம் 267கார்த்திகைலிங்கம் 
268 காரண லிங்கம் 
269 கால லிங்கம் 
270 காவி லிங்கம் 
271காவிய லிங்கம்
 272 காவேரி லிங்கம் 
273 காளி லிங்கம் 
274 காளத்தி லிங்கம் 
275 காளை லிங்கம்
 276 கான லிங்கம் 
277கிண்கிணி லிங்கம் 
278 கிரி லிங்கம்
 279 கிரியை லிங்கம்
 280 கிரீட லிங்கம்
 281 கிருப லிங்கம்
 282 கிள்ளை லிங்கம்
 283 கீத லிங்கம் 
284 கீர்த்தி லிங்கம் 
285 கீர்த்தன லிங்கம் 
286 குக லிங்கம் 
287 குங்கும லிங்கம்
 288 குஞ்சு லிங்கம்
 289 குட லிங்கம்
 290 குடுமி லிங்கம் 
291 குண லிங்கம் 
292 குணக்ரி லிங்கம்
 293 குபேர லிங்கம்
 294 குருதி லிங்கம்
 295 குமர லிங்கம்
 296 குமரி லிங்கம்
 297 குமுத லிங்கம் 
298 குல லிங்கம் 
299 குழலி லிங்கம்
 300 குழவி லிங்கம் 
301 குழை லிங்கம் 
302 குற்றால லிங்கம்
 303 குன்று லிங்கம் 
304 குண்டலி லிங்கம்
 305 குந்த லிங்கம்
 306 கும்ப லிங்கம்
 307 குரவ லிங்கம் 
308 குறிஞ்சி லிங்கம்
 309 கூததாடி லிங்கம்
 310 கூத்து லிங்கம்
 311 கூர்ம லிங்கம்
 312 கெஜ லிங்கம் 
313 கேச லிங்கம்
 314 கேசரி லிங்கம்
 315 கேசவ லிங்கம்
 316 கேடிலி லிங்கம் 
317 கேதார் லிங்கம்
 318 கேள்வி லிங்கம்
 319 கைலாய லிங்கம்
 320 கொங்கு லிங்கம் 
321 கொடி லிங்கம் 
322 கொடு லிங்கம் 
323 கொளஞ்சி லிங்கம் 
324 கொற்றை லிங்கம்
 325 கொன்றை லிங்கம்
 326 கோ லிங்கம் 
327 கோகழி லிங்கம் 
328 கோகுல லிங்கம்
 329 கோட்டை லிங்கம்
 330 கோடி லிங்கம் 
331 கோண் லிங்கம்
 332 கோண லிங்கம்
 333 கோதண்ட லிங்கம்
 334 கோதை லிங்கம் 
335 கோப லிங்கம் 
336 கோபி லிங்கம் 
337 கோமதி லிங்கம்
 338 கோல லிங்கம் 
339 கௌசிக லிங்கம்
 340 கௌதம லிங்கம்
 341 கௌரி லிங்கம் 
342 சக்தி லிங்கம் 
343 சக்கர லிங்கம் 
344 சகஸ்ர லிங்கம் 
345 சகல லிங்கம் 
346 சங்க லிங்கம்
 347 சங்கம லிங்கம் 
348 சங்கர லிங்கம் 
349 சங்கு லிங்கம் 
350 சஞ்சீவி லிங்கம் 
351 சடாட்சர லிங்கம் 
352 சடைமுடி லிங்கம் 
353 சண்முக லிங்கம்
 354 சத்திய லிங்கம் 
355 சதங்கை லிங்கம் 
356சதய லிங்கம்
 357 சதா லிங்கம் 
358 சதாசிவ லிங்கம் 
359 சதுர் லிங்கம் 
360 சதுர்த்தி லிங்கம்
 361 சதுரங்க லிங்கம் 
362 சதுரகிரி லிங்கம் 
363 சந்த லிங்கம் 
364 சந்திர லிங்கம் 
365 சந்தன லிங்கம்
 366 சந்தான லிங்கம்
 367 சப்த லிங்கம் 
368 சபா லிங்கம் 
369 சம்பந்த லிங்கம் 
370 சம்பு லிங்கம்
 371 சமுத்திர லிங்கம் 
372 சயன லிங்கம்
 373 சர்வேஸ லிங்கம் 
374 சரச லிங்கம் 
375 சரீர லிங்கம் 
376 சவரி லிங்கம்
 377 சற்குண லிங்கம்
 378 சஹான லிங்கம்
 379 சற்குரு லிங்கம் 380 சாட்சி லிங்கம் 381 சாணக்ய லிங்கம் 382 சாதக லிங்கம் 383 சாதனை லிங்கம் 384 சாதி லிங்கம் 385 சாது லிங்கம் 386 சாந்த லிங்கம் 387 சாந்து லிங்கம் 388 சாம்ப லிங்கம் 389 சாமுண்டி லிங்கம் 390 சிகர லிங்கம் 391 சிகா லிங்கம் 392 சிகரி லிங்கம் 393 சிகை லிங்கம் 394 சிங்கார லிங்கம் 395 சிசு லிங்கம் 396 சித்தி லிங்கம் 397 சித்திரை லிங்கம் 398 சிந்தாமணிலிங்கம் 399 சிந்து லிங்கம் 400 சிநேக லிங்கம் 401 சிப்பி லிங்கம் 402 சிபி லிங்கம் 403 சிம்ம லிங்கம் 404 சிர லிங்கம் 405 சிரஞ்சீவி லிங்கம் 406 சிரபதி லிங்கம் 407 சிருஷ்டி லிங்கம் 408 சிலம்பு லிங்கம் 409 சிவ லிங்கம் 410 சிவகதி லிங்கம் 411 சிவாய லிங்கம் 412 சிற்பவ லிங்கம் 413 சினை லிங்கம் 414 சிஷ்ட லிங்கம் 415 சீதன லிங்கம் 416 சீதாரி லிங்கம் 417 சீமை லிங்கம் 418 சீர்மை லிங்கம் 419 சீற்ற லிங்கம் 420 சீனி லிங்கம் 421 சுக்கிர லிங்கம் 422 சுக லிங்கம் 423 சுகந்த லிங்கம் 424 சுகநிதி லிங்கம் 425 சுகுண லிங்கம் 426 சுடர் லிங்கம் 427 சுத்த லிங்கம் 428 சுதர்சண லிங்கம் 429 சுந்தர லிங்கம் 430 சுந்தரி லிங்கம் 431 சுப்பு லிங்கம் 432 சுமித்ர லிங்கம் 433 சுய லிங்கம் 434 சுயம்பு லிங்கம் 435 சுரபி லிங்கம் 436 சுருதி லிங்கம் 437 சுருளி லிங்கம் 438 சுரை லிங்கம் 439 சுவடி லிங்கம் 440 சுவடு லிங்கம் 441 சுவர்ண லிங்கம் 442 சுவாச லிங்கம் 443 சுவாதி லிங்கம் 444 சுனை லிங்கம் 445 சூட்சம லிங்கம் 446 சூர லிங்கம் 447 சூரி லிங்கம் 448 சூரிய லிங்கம் 449 சூல லிங்கம் 450 சூள்முடி லிங்கம் 451 சூளாமணி லிங்கம் 452 செக்கர் லிங்கம் 453 செங்கு லிங்கம் 454 செண்பக லிங்கம் 455 செந்தூர லிங்கம் 456 செம்ம லிங்கம் 457 செம்பாத லிங்கம் 458 செரு லிங்கம் 459 செருக்கு லிங்கம் 460 செல்வ லிங்கம் 461 செழுமை லிங்கம் 462 சேகர லிங்கம் 463 சேலிங்கம் 464 சேது லிங்கம் 465 சேர்ப்பு லிங்கம் 466 சேற்று லிங்கம் 467 சைல லிங்கம் 468 சைவ லிங்கம் 469 சொக்க லிங்கம் 470 சொப்பன லிங்கம் 471 சொர்க்க லிங்கம் 472 சொரூப லிங்கம் 473 சோம லிங்கம் 474 சோண லிங்கம் 475 சோபன லிங்கம் 476 சோலை லிங்கம் 477 சோழ லிங்கம் 478 சோழி லிங்கம் 479 சோற்று லிங்கம் 480 சௌந்தர்ய லிங்கம் 481 சௌந்தர லிங்கம் 482 ஞான லிங்கம் 483 தகழி லிங்கம் 484 தகு லிங்கம் 485 தங்க லிங்கம் 486 தச லிங்கம் 487 தட்சண லிங்கம் 488 தடாக லிங்கம் 489 தத்துவ லிங்கம் 490 தந்த லிங்கம் 491 தந்திர லிங்கம் 492 தமிழ் லிங்கம் 493 தர்பை லிங்கம் 494 தர்ம லிங்கம் 495 தருண லிங்கம் 496 தவ லிங்கம் 497 தளிர் லிங்கம் 498 தன லிங்கம் 499 தனி லிங்கம் 500 தவசி லிங்கம் 501 தாண்டக லிங்கம் 502 தாண்டவ லிங்கம் 503 தாமு லிங்கம் 504 தாய் லிங்கம் 505 தார லிங்கம் 506 தாழி லிங்கம் 507 தாழை லிங்கம் 508 தாள லிங்கம் 509 தான்ய லிங்கம் 510 தாரகை லிங்கம் 511 திக்கு லிங்கம் 512 திகம்பர லிங்கம் 513 திகழ் லிங்கம் 514 தியாக லிங்கம் 515 தியான லிங்கம் 516 திரி லிங்கம் 517 திரிபுர லிங்கம் 518 திரு லிங்கம் 519 திருமேனி லிங்கம் 520 திருவடி லிங்கம் 521 திருவாசக லிங்கம் 522 திருவாத லிங்கம் 523 திலக லிங்கம் 524 திவ்ய லிங்கம் 525 தீ லிங்கம் 526 தீட்சை லிங்கம் 527 தீர்க்க லிங்கம் 528 தீர்த்த லிங்கம் 529 தீப லிங்கம் 530 தீர லிங்கம் 531 தீர்ப்பு லிங்கம் 532 துதி லிங்கம் 533 துர்கை லிங்கம் 534 துருவ லிங்கம் 535 துலா லிங்கம் 536 துளசி லிங்கம் 537 துறவு லிங்கம் 538 தூங்கா லிங்கம் 539 தூண்டா லிங்கம் 540 தூமணி லிங்கம் 541 தூய லிங்கம் 542 தூளி லிங்கம் 543 தெங்கு லிங்கம் 544 தெய்வ லிங்கம் 545 தெரிவை லிங்கம் 546 தெளி லிங்கம் 547 தென்னவ லிங்கம் 548 தேக லிங்கம் 549 தேகனி லிங்கம் 550 தேகி லிங்கம் 551 தேச லிங்கம் 552 தேசு லிங்கம் 553 தேயு லிங்கம் 554 தேர லிங்கம் 555 தேவ லிங்கம் 556 தேவபத லிங்கம் 557 தேவாதி லிங்கம் 558 தேவு லிங்கம் 559 தேன் லிங்கம் 560 தேன்மணி லிங்கம் 561 தேன லிங்கம் 562 தேனுக லிங்கம் 563 தைரிய லிங்கம் 564 தொகை லிங்கம் 565 தொட்டி லிங்கம் 566 தொடி லிங்கம் 567 தொடைய லிங்கம் 568 தொண்டக லிங்கம் 569 தொண்டை லிங்கம் 570 தொல் லிங்கம் 571 தோகச லிங்கம் 572 தோண்டி லிங்கம் 573 தோணி லிங்கம் 574 தோத்திர லிங்கம் 575 தோரண லிங்கம் 576 தோரி லிங்கம் 577 தோழ லிங்கம் 578 தோன்ற லிங்கம் 579 தௌத லிங்கம் 580 தௌல லிங்கம் 581 நகமுக லிங்கம் 582 நகு லிங்கம் 583 நகை லிங்கம் 584 நங்கை லிங்கம் 585 நசை லிங்கம் 586 நஞ்சு லிங்கம் 587 நடன லிங்கம் 588 நடம்புரி லிங்கம் 589 நடு லிங்கம் 590 நதி லிங்கம் 591 நந்தி லிங்கம் 592 நம்பி லிங்கம் 593 நம லிங்கம் 594 நயன லிங்கம் 595 நர்மதை லிங்கம் 596 நலமிகு லிங்கம் 597 நவ லிங்கம் 598 நவமணி லிங்கம் 599 நவிர லிங்கம் 600 நற்குண லிங்கம் 601 நற்றுணை லிங்கம் 602 நறுமண லிங்கம் 603 நன்மணி லிங்கம் 604 நன்மை லிங்கம் 605 நனி லிங்கம் 606 நா லிங்கம் 607 நாக லிங்கம் 608 நாச்சி லிங்கம் 609 நாசி லிங்கம் 610 நாட லிங்கம் 611 நாடி லிங்கம் 612 நாத்திர லிங்கம் 613 நாத லிங்கம் 614 நாரண லிங்கம் 615 நாரணி லிங்கம் 616 நாரி லிங்கம் 617 நாபிச லிங்கம் 618 நாயன லிங்கம் 619 நாயாடி லிங்கம் 620 நாவ லிங்கம் 621 நாற்கர லிங்கம் 622 நான்மறை லிங்கம் 623 நான்முக லிங்கம் 624 நிகர் லிங்கம் 625 நித்தில லிங்கம் 626 நித்ய லிங்கம் 627 நிதர்சண லிங்கம் 628 நிதி லிங்கம் 629 நிபவ லிங்கம் 630 நிர்மல லிங்கம் 631 நிரஞ்சன லிங்கம் 632 நிரம்ப லிங்கம் 633 நிருதி லிங்கம் 634 நிமல லிங்கம் 635 நில லிங்கம் 636 நிலை லிங்கம் 637 நிவேத லிங்கம் 638 நிறை லிங்கம் 639 நிஜ லிங்கம் 640 நிசாக லிங்கம் 641 நீடு லிங்கம் 642 நீடுநீர் லிங்கம் 643 நீத்தவ லிங்கம் 644 நீதி லிங்கம் 645 நீர்ம லிங்கம் 646 நீரச லிங்கம் 647 நீரேறு லிங்கம் 648 நீல லிங்கம் 649 நீள்முடி லிங்கம் 650 நீறாடி லிங்கம் 651 நீறு லிங்கம் 652 நுதற் லிங்கம் 653 நுதி லிங்கம் 654 நூதன லிங்கம் 655 நெகிழ் லிங்கம் 656 நெஞ்சு லிங்கம் 657 நெட்ட லிங்கம் 658 நெடு லிங்கம் 659 நெய் லிங்கம் 660 நெற்றி லிங்கம் 661 நெறி லிங்கம் 662 நேச லிங்கம் 663 நேர் லிங்கம் 664 நைச்சி லிங்கம் 665 நைவேத்ய லிங்கம் 666 நொச்சி லிங்கம் 667 நோக்கு லிங்கம் 668 நோன்பு லிங்கம் 669 பசு லிங்கம் 670 பசுவ லிங்கம் 671 பசுபதி லிங்கம் 672 பஞ்ச லிங்கம் 673 பஞ்சாட்சர லிங்கம் 674 பட்டக லிங்கம் 675 படரி லிங்கம் 676 படிக லிங்கம் 677 பண்டார லிங்கம் 678 பண்டித லிங்கம் 679 பத்ம லிங்கம் 680 பத்ர லிங்கம் 681 பத்திர லிங்கம் 682 பதி லிங்கம் 683 பதிக லிங்கம் 684 பர்வத லிங்கம் 685 பரசு லிங்கம் 686 பரத லிங்கம் 687 பரம லிங்கம் 688 பரமாத்ம லிங்கம் 689 பரமேஸ்வர லிங்கம் 690 பரணி லிங்கம் 691 பரிதி லிங்கம் 692 பவண லிங்கம் 693 பவணி லிங்கம் 694 பவநந்தி லிங்கம் 695 பவழ லிங்கம் 696 பவாணி லிங்கம் 697 பவித்ர லிங்கம் 698 பளிங்கு லிங்கம் 699 பன்னக லிங்கம் 700 பனி லிங்கம் 701 பரகதி லிங்கம் 702 பராங்க லிங்கம் 703 பராபர லிங்கம் 704 பவநாச லிங்கம் 705 பா லிங்கம் 706 பாக்ய லிங்கம் 707 பாக லிங்கம் 708 பாச லிங்கம் 709 பாசறை லிங்கம் 710 பாசுர லிங்கம் 711 பாத லிங்கம் 712 பாதாள லிங்கம் 713 பாதி லிங்கம் 714 பாதிரி லிங்கம் 715 பார்வதி லிங்கம் 716 பாரதி லிங்கம் 717 பாராயண லிங்கம் 718 பாரி லிங்கம் 719 பாரிஜாத லிங்கம் 720 பாயிர லிங்கம் 721 பாலக லிங்கம் 723 பாலா லிங்கம் 723 பாவை லிங்கம் 724 பானு லிங்கம் 725 பாஷான லிங்கம் 726 பாகோட லிங்கம் 727 பாசுபத லிங்கம் 728 பாணிக லிங்கம் 729 பார்த்திப லிங்கம் 730 பாநேமி லிங்கம் 731 பாம்பு லிங்கம் 732 பாழி லிங்கம் 733 பிச்சி லிங்கம் 734 பிச்சை லிங்கம் 735 பிட்டு லிங்கம் 736 பிடரி லிங்கம் 737 பிடாரி லிங்கம் 738 பிடி லிங்கம் 739 பிண்ட லிங்கம் 740 பித்த லிங்கம் 741 பிதா லிங்கம் 742 பிம்ப லிங்கம் 743 பிரகதி லிங்கம் 744 பிரகாச லிங்கம் 745 பிரசன்ன லிங்கம் 746 பிரணவ லிங்கம் 747 பிரதர்சன லிங்கம் 748 பிரபாகர லிங்கம் 749 பிரபு லிங்கம் 750 பிரம்ம லிங்கம் 751 பிரம்பு லிங்கம் 752 பிரமிள லிங்கம் 753 பிராண லிங்கம் 754 பிராசித லிங்கம் 755 பிரிய லிங்கம் 756 பிரேம லிங்கம் 757 பிள்ளை லிங்கம் 758 பிழம்பு லிங்கம் 759 பிறவி லிங்கம் 760 பிறை லிங்கம் 761 பீச லிங்கம் 762 பீட லிங்கம் 763 பீடு லிங்கம் 764 பீத லிங்கம் 765 பீதகார லிங்கம் 766 பீதசார லிங்கம் 767 பீதமணி லிங்கம் 768 பீதாம்பர லிங்கம் 769 பீர லிங்கம் 770 பீம லிங்கம் 771 புகழ் லிங்கம் 772 புங்கவ லிங்கம் 773 புங்கவி லிங்கம் 774 புடக லிங்கம் 775 புண்ணிய லிங்கம் 776 புத்தி லிங்கம் 777 புத்ர லிங்கம் 778 புதிர் லிங்கம் 779 புது லிங்கம் 780 புரட்சி லிங்கம் 781 புரவு லிங்கம் 782 பராண லிங்கம் 783 புரி லிங்கம் 784 புருஷ லிங்கம் 785 புருவ லிங்கம் 786 புலரி லிங்கம் 787 புலி லிங்கம் 788 புவன லிங்கம் 789 புற்று லிங்கம் 790 புற லிங்கம் 791 புன்னை லிங்கம் 792 புனித லிங்கம் 793 புனை லிங்கம் 794 புஜங்க லிங்கம் 795 புஷ்கர லிங்கம் 796 புஷ்ப லிங்கம் 797 பூசனை லிங்கம் 798 பூத லிங்கம் 799 பூதர லிங்கம் 800 பூதி லிங்கம் 801 பூபதி லிங்கம் 802 பூபால லிங்கம் 803 பூதவணி லிங்கம் 804 பூர்ண லிங்கம் 805 பூர்த்தி லிங்கம் 806 பூர்வ லிங்கம் 807 பூரணி லிங்கம் 808 பூமித லிங்கம் 809 பூமுக லிங்கம் 810 பூவிழி லிங்கம் 811 பூலோக லிங்கம் 812 பூஜித லிங்கம் 813 பெண் லிங்கம் 814 பெண்பாக லிங்கம் 815 பெரு லிங்கம் 816 பேரின்ப லிங்கம் 817 பேழை லிங்கம் 818 பைரவி லிங்கம் 819பொன்னம்பலலிங்கம் 820 பொன்னி லிங்கம் 821 பொருந லிங்கம் 822 பொருப்பு லிங்கம் 823 பொழி லிங்கம் 824 பொய்கை லிங்கம் 825 போக லிங்கம் 826 போதக லிங்கம் 827 போதன லிங்கம் 828 போதி லிங்கம் 829 போற்றி லிங்கம் 830 போனக லிங்கம் 831 பௌதிக லிங்கம் 832பௌர்ணமி லிங்கம் 833 மகர லிங்கம் 834 மகவு லிங்கம் 835 மகா லிங்கம் 836 மகிழ லிங்கம் 837 மகுட லிங்கம் 838 மகுடி லிங்கம் 839 மகேச லிங்கம் 840 மகேஸ்வர லிங்கம் 841 மங்கள லிங்கம் 842 மஞ்சரி லிங்கம் 843 மஞ்சு லிங்கம் 844 மண லிங்கம் 845 மணி லிங்கம் 846 மதன லிங்கம் 847 மதி லிங்கம் 848 மந்தாரை லிங்கம் 849 மந்திர லிங்கம் 850 மயான லிங்கம் 851 மயூர லிங்கம் 852 மரகத லிங்கம் 853 மருக லிங்கம் 854 மருத லிங்கம் 855 மருது லிங்கம் 856 மலர் லிங்கம் 857 மழலை லிங்கம் 858 மவுலி லிங்கம் 859 மன்னாதி லிங்கம் 860 மனித லிங்கம் 861 மனோ லிங்கம் 862 மலை லிங்கம் 863 மாங்கல்ய லிங்கம் 864 மாசறு லிங்கம் 865 மாசி லிங்கம் 866 மாசிவ லிங்கம் 867 மாட்சி லிங்கம் 868 மாணிக்க லிங்கம் 869 மாதங்கி லிங்கம் 870 மாதவ லிங்கம் 871 மாதவி லிங்கம் 872 மாது லிங்கம் 873 மாதேவி லிங்கம் 874 மாமிச லிங்கம் 875 மாயை லிங்கம் 876 மாலை லிங்கம் 877 மார்க்க லிங்கம் 878 மிசை லிங்கம் 879 மிண்டை லிங்கம் 880 மீளி லிங்கம் 881 மீன லிங்கம் 882 முக்கனீ லிங்கம் 883 முக்தி லிங்கம் 884 முகுந்த லிங்கம் 885 முடி லிங்கம் 886 முத்து லிங்கம் 887 மும்மல லிங்கம் 888 முரசு லிங்கம் 889 முருக லிங்கம் 890 முல்லை லிங்கம் 891 முனி லிங்கம் 892 மூர்த்தி லிங்கம் 893 மூல லிங்கம் 894 மெய் லிங்கம் 895 மேக லிங்கம் 896 மேதினி லிங்கம் 897 மேவி லிங்கம் 898 மேனி லிங்கம் 899 மொழி லிங்கம் 900 மொட்டு லிங்கம் 901 மோட்ச லிங்கம் 902 மோன லிங்கம் 903 மோலி லிங்கம் 904 மௌன லிங்கம் 905 யதி லிங்கம்
 906 யாக லிங்கம்
 907 யாசக லிங்கம்
 908 யாத்திரை லிங்கம் 
909 யுக்தி லிங்கம் 
910 யுவ லிங்கம் 
911 யோக லிங்கம் 
912 யோகி லிங்கம் 
913 ரகசிய லிங்கம் 
914 ரம்ய லிங்கம் 
915 ரமண லிங்கம் 
916 ரத்தின லிங்கம் 
917 ரத லிங்கம் 
918 ராக லிங்கம் 
919 ராட்சச லிங்கம் 
920 ராவண லிங்கம் 
921 ராஜ லிங்கம் 
922 ரிஷப லிங்கம் 
923 ரிஷி லிங்கம் 
924 ருத்ர லிங்கம் 
925 ரூப லிங்கம்
926 ரௌத்திர லிங்கம் 
927 லகரி லிங்கம் 
928 லாவண்ய லிங்கம் 
929 லீலா லிங்கம் 
930 லோக லிங்கம் 
931 வசந்த லிங்கம் 
932 வஞ்சி லிங்கம் 
933 வடுக லிங்கம் 
934 வர்ம லிங்கம் 
935 வர லிங்கம் 
936 வருண லிங்கம் 
937 வல்லப லிங்கம் 
938 வழக்கு லிங்கம் 
939 வள்ளுவ லிங்கம் 
940 வளர் லிங்கம் 
941 வன லிங்கம் 
942 வனப்பு லிங்கம் 
943 வஜ்ர லிங்கம் 
944 வாகை லிங்கம் 
945 வாசி லிங்கம் 
946 வாணி லிங்கம் 
947 வாயு லிங்கம் 
948 வார்ப்பு லிங்கம் 
949 வாழ்க லிங்கம் 
950 வான லிங்கம் 
951 வானாதி லிங்கம் 
952 வார்சடை லிங்கம் 
953 விக்ர லிங்கம் 
954 விக்ரம லிங்கம் 
955 விகட லிங்கம் 
956 விகார லிங்கம் 
957 விகிர்த லிங்கம் 
958 வசித்ர லிங்கம் 
959 விடங்க லிங்கம் 
960 வித்தக லிங்கம் 
961 விதி லிங்கம் 
962 விது லிங்கம் 
963 விந்தை லிங்கம் 
964 விநாசக லிங்கம் 
965 விபீஷ்ண லிங்கம் 
966 விபூதி லிங்கம் 
967 விமல லிங்கம் 
968 வியூக லிங்கம் 
969 விருட்சக லிங்கம் 
970 வில்வ லிங்கம்
971 விளம்பி லிங்கம் 
972 விழி லிங்கம் 
973 வினைதீர் லிங்கம் 
974 வினோத லிங்கம் 
975 விஜய லிங்கம் 
976 விஷ்ணு லிங்கம் 
977 விஸ்வ லிங்கம் 
978 விஸ்வேஸ்வரலிங்கம் 
979 வீர லிங்கம் 
980 வீணை லிங்கம் 
981 வெற்றி லிங்கம்
 982 வெற்பு லிங்கம்
 983 வெள்ளி லிங்கம் 
984 வேங்கட லிங்கம் 
985 வேங்கை லிங்கம் 
986 வேட்டுவ லிங்கம் 
987 வேத லிங்கம் 
988 வேதாந்த லிங்கம் 
989 வேம்பு லிங்கம் 
990 வேழ லிங்கம் 
991 வேள்வி லிங்கம் 
992 வைகை லிங்கம் 
993 வைர லிங்கம் 
994 வைத்திய லிங்கம் 
995 வைய லிங்கம்
 996 ஜடா லிங்கம்
 997 ஜதி லிங்கம்
 998 ஜல லிங்கம்
 999 ஜீவ லிங்கம் 
1000 ஜெக லிங்கம் 
1001 ஜெய லிங்கம்
 1002 ஜென்ம லிங்கம் 
1003 ஜோதி லிங்கம்
 1004 ஸ்ரீ லிங்கம்
1005 ஸோபித லிங்கம் 
1006 ஹேம லிங்கம் 
1007 ஐஸ்வர்ய லிங்கம் 
1008 சுப லிங்கம்.

வினாயகர் ஸ்லோகங்கள்

ஸ்லோகம் 1 :

சுக்லாம்பரதரம், விஷ்ணும், சசிவர்ணம், சதுர்புஜம்
ப்ரஸந்த வதநம் த்யாயேத் ஸர்வ விக்நோப சாந்தயே.

ஸ்லோகம் 2 :

ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ரதுண்டாய தீமஹி
தன்னோ தந்தி ப்ரசோதயாத்.

ஸ்லோகம் 3 :

ஓம் ஏகதந்தாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தன்னோ தந்தி ப்ரசோதயாத்.

ஸ்லோகம் 4 :

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுத்தினைப்
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.

ஸ்லோகம் 5 :

மூஷிக வாகன மோதக ஹஸ்த
சாமர கர்ண விளம்பித சூத்ர
வாமன ரூப மஹேஸ்வர புத்ர
விக்ன விநாயக பாத நமஸ்தே.

ஸ்லோகம் 6 :

கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை
கணபதி என்றிடக் காலனும் கைதொழும்
கணபதி என்றிடக் கருமம் ஆதலால்
கணபதி என்றிடக் கவலை தீருமே.

ஸ்லோகம் 7  :

வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம் மாமலராள்
நோக்குண்டாம் மேனி நுடங்காது - பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கையான்
பாதம் தப்பாமல் சார்வார் தமக்கு.

ஸ்லோகம் 8 :

அல்லல்போம் வல்வினைபோம் அன்னைவயிற்றில் பிறந்த
தொல்லைபோம் போகாத் துயரம்போம்
நல்ல குணமதிக மாம் அருணைக் கோபுரத்தில்
மேவும் கணபதியைக் கைதொழுதக் கால்.

ஸ்லோகம் 9 :

கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலசார பக்ஷிதம்
உமாஸுதம் சோக விநாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்.

ஸ்லோகம் 10 :

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான்தருவேன் - கோலம் செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே! நீ எனக்குச்
சங்கத் தமிழ்மூன்றும் தா.

ஸ்லோகம் 11 :

விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்!
விநாயகனே வேட்கை தணிவிப்பான்! விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்
தன்மையினால் கண்ணில் பணிமின் கனிந்து.

ஸ்லோகம் 12 :

வக்ரதுண்டாய ஹீம்
ஓம் நமோ ஹேரம்ப மதமோதித
மம சர்வ சங்கடம் நிவாரயே ஸ்வாஹா
ஓம் கம் க்ஷிப்ரப்ரசாதனாய நமஹ.

Sunday, July 19, 2020

வண்ணான்

சூரியன் இன்னும் எழாத விடியற்காலை பொழுதில் ஸ்வாமி ராமானுஜர் வடதிருக்காவேரியில் (கொள்ளிடம்) நீராட்டத்தை முடித்தார்.  பன்னிரெண்டு இடங்களில் திருமண் காப்பு தரித்து கொண்டார். பின்னர் காஷாயம் உடுத்தி, கையில் திரிதண்டத்தை எடுத்துக் கொண்டார்.  அங்கு கரையில் காத்திருந்த சிஷ்யர் பிள்ளை உறங்காவில்லி தாசர் கரம் நீட்ட, நீட்டிய கரத்தை பற்றியபடி ஸ்வாமி மெல்ல கரையேறினார்.  அங்கு காத்துக் கொண்டிருந்த மற்றொரு சிஷ்யரான முதலியாண்டானுடன் திருவரங்கம் கோவிலை நோக்கி நடக்கத் துவங்கினார். 


அப்பொழுது திருவரங்கனின் வஸ்திரங்களை துவைக்கும் வண்ணான் ஒருவன் பெரிய பிரம்பு கூடை ஒன்றை தூக்கியபடி காவிரியை நோக்கி வந்து கொண்டிருந்தான்.  தூரத்தில் ஸ்வாமி ராமானுஜர் தன் சிஷ்யர்களுடன் வருவதை கண்டான்.  எப்பொழுது ராமானுஜரை கண்டாலும் பரவசமாவன்.  அவருடன் ஏதாவது பேசுவான்.  இன்றும் அவரை கண்டவுடன்  பரவசமானான்.  வேக வேகமாக நடந்தான்.  ஸ்வாமியின் அருகில் வந்தான்.  கையில் இருந்த பிரம்பு கூடையை கீழே வைத்தான்.  நெடுஞ்சாண்கிடையாக விழுந்து அவரை நமஸ்கரித்தான்.  ராமானுஜர் பதறினார்.


"எழுந்திரு வரதா," என்றார்.   வரதன் என்ற பெயர் கொண்ட வண்ணான் எழுந்திருந்தான். 


அந்த பிரம்புக் கூடையைப் பார்த்தார்  ராமானுஜர். உள்ளே மஞ்சள் நிறத்தில் அரங்கனின் வஸ்த்திரங்கள். பிரம்பு கூடையைப் பார்த்து கைகூவித்தார் ராமானுஜர்.


 "பொழுது புலரும் முன்னரே  அரங்கனின் வஸ்திரங்களை துவைக்க வந்துவிட்டாயா?"


"ஆமாம் சாமி,"  


"வெய்யில் வந்த பிறகு வந்திருக்கலாமே.  காவிரி இன்று சற்று குளிர்வாக இருக்கிறாள்."


" நம்ம ரங்கன் குழந்தை மாதிரி சாமி.  அவனுக்கு எல்லாம் பாத்து பாத்து தான்  செய்யணும். வெய்யில் வரதுக்கு முன்னாடி அவன் வஸ்த்திரங்கள  தோய்க்கணும்.     வண்ணான் குடிக்கு போய் எல்லாத்தையும் இளம் வெய்யில்ல நல்ல பதமா  காயவைக்கணும்.  உச்சி வெய்யில்ல காய வைச்சா வஸ்த்திரம்லாம் மொட மொடனு ஆயிடும். அவனோட உடம்புக்கு அந்த மாதிரி மொட மொட துணியெல்லாம் ஒத்துக்காது. அப்புறம் எல்லாத்தையும்  நல்ல அழகா மடிச்சு கோவில் பட்டர் கிட்ட குடுத்துட்டா அப்புறம அவர் பாத்துப்பார்.."


"என்ன பரிவு, என்ன பரிவு?"  ராமானுஜர் கூறினார்.  "அரங்கனுக்காக பரியும் உன்னைப் போல் ஒரு வண்ணாணானை பிற்க்காமல் போனேனே." அவர் கண்களில் நீர் வழிந்தோடியது. 


ராமானுஜரின் கண்களில் கண்ணீரை கண்ட வரதனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.  பிரம்புக் கூடையை தூக்கிக் கொண்டான்.  "நான் போயிட்டு வரேன் சாமி."  ராமானுஜர் தலையாட்ட, விடைபெற்று போனான்.


இந்த வண்ணானை நினைத்தபடியே திருவரங்கம் கோவிலை நோக்கி நடந்து கொண்டிருந்த ராமானுஜரின் மனதில் மற்றொரு வண்ணானின் நினைவு வந்தது. 


"கண்ணா, எங்கள் உடைகளைப் பார்...." சொன்னான் பகவான் கண்ணனின் நண்பன் ஒருவன்.  கம்சனைக் காண தன் நண்பர்களோடும், அண்ணா பலராமனோடும் மதுரா நகரத்திற்கு வந்திருந்தான் கண்ணன். 

 "நீ கூப்பிட்டாய் என்ற ஒரே காரணத்திற்காக மாடு மேய்க்கும் உடைகளுடனே கம்சனை காண வந்துவிட்டோம்.  இந்த உடைகளுடன் அரண்மனைக்கு செல்ல கூச்சமாக இருக்கிறது.  எங்களுக்கு வேறு நல்ல உடைகளுக்கு ஏற்பாடு செய் கண்ணா."


"யமுனைக் கரையில் வண்ணான்கள் இருப்பார்கள்.  அவர்களிடம் சென்று உடைகள் கேட்கலாம் வாருங்கள்."  

யமுனைக்கரைக்கு அவர்கள் வந்த போது வண்ணான் ஒருவன் துணிகளுக்கு வண்ணம் தீட்டிக் கொண்டிருந்தான்.  அவனிடம் சென்றான் கண்ணன்.


"ஐயா, கம்சனின் மருமகன் நான். அவரைக் காண சென்று கொண்டிருக்கிறோம்.  எங்களுக்கு நல்ல உடைகள் இருந்தால் தாருங்கள்.  கம்சனைப் பார்த்து விட்டு போகும் போது திருப்பி கொடுத்து விடுகிறோம்."


கம்சனின் வண்ணான் அவன்.  கண்ணணைப் பார்ப்பதற்கே பிடிக்கவில்லை என்பது போல் முகத்தை திருப்பிக் கொண்டான்.


கண்ணன் மீண்டும் கேட்டான்.  "நான் சொல்வது உங்களுக்கு கேட்கவில்லையா? நல்ல உடைகள் இருந்தால் எங்களுக்கு கொடுத்து உதவுங்கள்."


வண்ணான் கோவம் கொண்டான்.  " நீ ஒரு இடையன்.  எப்பொழுதும் அழுக்கு உடைகளை அணிந்து கொள்பவன். உனக்கு புது உடை, பட்டாடை எல்லாம் வேண்டுமா?  என் கண்னில் படாமல் ஒடிவிடு.  இல்லை என்றால் உன் கம்ச மாமா உன்னை என்ன செய்ய நினைத்துக் கொண்டிருக்கிறாரோ அதை நான் செய்து விடுவேன்.  ஜாக்கிரதை."


"கண்ணா, இவன் பேசுவது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.  உன் கைவரிசையை இவனிடம் காட்டு," சொன்னான் கண்ணனின் நண்பன் ஒருவன்.


"அப்படியா சேதி.  என் கை வரிசையை முதலில் பாருங்கள்," கோவத்துடன் வண்ணான், கண்ணனை தாக்குவதற்கு கையை ஓங்கினான். 

ஓங்கிய கையை மரித்தான் கண்ணன்.  "இனி உனக்கும், உன் குலத்திற்கும் மன்னிப்பு கிடையாது....." என்று சொல்லி  அவன் தலையைத் தட்ட, வண்ணானின் தலை துண்டித்து கீழே விழுந்தது. 


"அரங்கா...." ராமானுஜர் மானசீகமாக அரங்கனைக் கூப்பிட்டார்.   "அன்று அந்த வண்ணானின் செயலால் கோவம் கொண்டு அவன் குலத்தையே மன்னிக்காமல் விட்டு விட்டாய்.  இன்று இந்த வண்ணானைப் பார்த்தாயா.  உன் மேல் எத்துணை பரிவு, பாசம்?  அவன் பார்த்து பார்த்து சலவை செய்த வஸ்த்ரங்களை அணிந்து நீ சந்தோஷப் படவில்லையா?  இவனுக்காக,  வண்ணான் குலத்தை மன்னித்து விடு.  நீ மன்னிக்காவிட்டால் அவர்கள் குலம் பரிமளிக்காது...." 


வடதிருக்காவிரியில் அரங்கனின் வஸ்த்திரங்களை துவைத்துக் கொண்டிருந்த வண்ணானை  குளிர் காற்று ஒன்று தழுவிச் சென்றது.

வால்மீகி என்னும் ரத்னாகர்

அயோத்யாவை ஒட்டிய அடர்ந்த வனப்பகுதியில் "ரத்னாகர்" என்னும் கொள்ளையன் வாழ்ந்து வந்தான்... வனத்தின் வழியாக செல்லும் யாத்ரீகர்களை கொன்று அவர்களின் செல்வங்களை கொள்ளையிட்டு வாழ்ந்து வந்தான்...

நாரத மகரிஷி அவ்வழியே பயனித்த போது, அவரைத் தடுத்தான் ரத்னாகர்,

ரத்னாகர் : ஏய் உன்கிட்ட என்ன இருக்கிறதோ அனைத்தையும் என்கிட்ட கொடுத்துடு, உன்ன உயிரோடு விட்டுறேன்"

நாரதர் : "ஏனப்பா, நானோ ஒரு முனிவன், உன்னிடம் கொடுக்க, என்னிடம் என்ன இருக்கிறது? என்னை விட்டு விடு...

ரத்னாகர் : அதெல்லாம் விட முடியாது, என் அப்பா, அம்மா, பொண்டாட்டி, பிள்ளைங்க, எல்லாம் சாப்பிட்டு 3 நாளாச்சி, உன்கிட்ட இருந்து எதாச்சும் கொண்டு போனாதான் இன்னைக்கு எங்களுக்கு சாப்பாடு, அதனால மரியாதையா உன்கிட்ட இருக்கிறத குடுத்துடு, இல்ல உன்ன கொன்னுடுவேன்...

"உன்னிடம் இருப்பதை கொடு, உன்னிடம் இருப்பதைகொடு , என்று கேட்கும், கொள்ளையன் ரத்னாகரை பார்க்கும் போது ஏனோ பரிதாபம் தோன்றியது நாரதருக்கு... 

எனவே, தன்னிடம் இருக்கும் ஞானத்தை அவனுக்கு தர முடிவெடுத்தார்,

"ரத்னாகரா, நீ வேண்டியபடி என்னிடம் இருக்கும் மிக உயர்ந்த ஒன்றை உனக்கு தருகிறேன், ஆனால் அதற்கு முன் என் கேள்விகளுக்கு பதிலளி...

ரத்னாகர் : என்ன கேள்வி? சீக்கிரம் கேளுங்க...

நாரதர் : கொள்ளை அடிக்கும் பொருளை என்ன செய்வாய்?

ரத்னாகர் : என் குடும்பத்தினரோடு பங்கிட்டு உண்பேன்...

நாரதர் : அப்படியா? சரி கொள்ளையடித்த பொருளை பங்கிட்டு கொள்ளும் உன் குடும்பத்தார், கொலை, கொள்ளையால், உன் தலையில் நீ சுமந்திருக்கும் பாவ மூட்டையையும் பங்கிட்டு கொள்வார்களா?

ரத்னாகர் : யோவ் முனிவரே, என்ன கேள்வி இது? செல்வத்தை, சுகத்தை பங்கிட்டு, பெற்றுக் கொள்பவர்கள், பாவத்தை பெற்று கொள்ள மறுப்பார்களா? நிச்சயம் நான் செய்கின்ற பாவங்களின் பங்கையும் பெற்றுக் கொள்வார்கள்...

நாரதர் : நிச்சயமாகத்தான் சொல்கிறாயா?

ரத்னாகர் : ஆம், கண்டிப்பாக பெற்றுக் கொள்வார்கள், அதிலென்ன சந்தேகம்? முதலில் உன்னிடம் இருப்பதை கொடு...

நாரதர் : இல்லை ரத்னாகரா, எதற்கும் அவர்களிடம் கேட்டுவிடேன், நீ சென்று கேட்டு வா, நான் இங்கேயே காத்திருக்கிறேன்...

ரத்னாகர் : ஓஹோ! நான் அந்த பக்கம் சென்றதும் இந்தப் பக்கம் ஓட திட்டமிடுகின்றீரா?

நாரதர் : நிச்சயமாக இல்லை, நான் இங்கேயே உனக்காக காத்திருப்பேன்...

ரத்னாகர் : யோவ்! உம்மை நம்ப முடியாதய்யா, நீர் ஒடிவிட்டால்?

நாரதர் : ரத்னாகரா! நான் ஒரு முனிவன், கொடுத்த வாக்கை மீற மாட்டேன், அதோடு இன்று, இங்கு எனக்கு நிறைய வேலையிருக்கிறது, எனவே சென்று வா...

ஒரு முடிவோடு கூறினார் நாரத மகரிஷி... 
ரத்னாகர் அவரை நம்பாமல்
நாரதரை
கயிற்றினால் மரத்தில் கட்டி வைத்து சென்றான்.

ரத்னாகரன் சென்று குடும்பத்தாரிடம் கேட்டான் , "நான் உங்களுக்காக கொள்ளையடிக்கிறேன், வழிப்பறி செய்கிறேன், அதனால் ஏற்படும் பாவத்தை பங்கிட்டு கொள்வீர்களா?

பெற்றோர் : மகனே, உன்னை பெற்று, சிறு வயதில் இருந்து வளர்த்து இருக்கிறோம், அதற்கு பிரதி உபகாரமாகவே, நீ இப்போது எங்களை காப்பாற்றுகிறாய், இது உன் கடமை, எனவே நீ உன் கடமையை செய்வதனால் ஏற்படும் பாபத்தை நாங்கள் பங்கிட மாட்டோம்...

மனைவி :
என்னை காப்பதாக வாக்களித்து மணம் புரிந்தீர், எனவே தமது பாவங்களில் எனக்கு பங்கில்லை.

பிள்ளைகள் :
இன்று எம்மை நீர் ஆதரித்தால், நாளை உமக்கு முதுமை வரும் காலத்தில், உம்மை நாங்கள் ஆதரிப்போம், எனவே நீர் செய்யும் பாவங்களில் நாங்கள் பங்கேற்கமாட்டோம்...

அனைவரின் பேச்சை கேட்டு அதிர்ந்தான் ரத்னாகர், 

பூமியே பாதத்திலிருந்து நழுவுவது போல இருந்தது... 

எந்த குடும்பத்தின் நலனுக்காக ஊரை கொள்ளையடித்தானோ, அதர்மங்களை புரிந்தானோ, அக்குடும்ப உறுப்பினர்கள், அவன் செய்த பாவங்களில் பங்கேற்க மறுத்துவிட்டனர்... இதுவே நிதர்சனம்...

ரத்னாகர் கண்ணீருடன் திரும்பி வருவதை கண்ட நாரத மகரிஷிக்கு எல்லாம் தெளிவாக விளங்கியது... 

ரத்னாகர், மனமொடிந்து, "சாமி! நீங்க சொன்னது நிஜம்தான்னு எனக்கு இப்பதான் புரியுது, என்னை காப்பாத்துங்க" என்று சொல்லி மரத்தில் நாரதரை கட்டி இருந்த கயிறு கட்டுகளை அவிழ்த்து விட்டு
நெடுஞ்சான்கிடையாக மகிரிஷி நாரதர் காலில் விழுந்தான், 

பாதம் பணிந்தவனுக்கு, முன்னர் கூறியபடி, தன்னிடமிருந்த ஞானத்தை வழங்கிட எண்ணினார், 

ஆம் கிடைத்தற்கரிய, மோட்சம் தரவல்ல மந்திரமான "ராமா " நாமத்தை உபதேசித்தார், 

ஆனால் ரத்னாகர் அதுவரை செய்த பாபாங்களின் விளைவால், அவனால் புனிதமான "ராம" நாமத்தை மனத்தில் இருத்தவோ, உச்சரிக்கவோ இயலவில்லை...

எனவே, நாரத மகரிஷி, ரத்னாகரனுக்கு, "மரா மரா" என்று தொடர்ந்து உச்சரிக்குமாறு அறிவுறுத்தினார்... ஆம், ரத்னாகரனின் கர்ம வினையை, தன் புத்தியால் வென்றார்... "மரா மரா" என்று சொல்லும் போது நாளடைவில் அது "ராம ராம" என்று மாறிவிடும்...

நாரதர் சென்ற பின், மரத்தடியில் அமர்ந்து, தொடர்ந்து ஜபித்தார், பல நூறு ஆண்டுகள் கழிந்தது, ரத்னாகரரை சுற்றி புற்று வளர்ந்தது, தவம் தொடர்ந்தது...

இறுதியில், பிரம்மதேவர் தோன்றினார், 

’ஓ முனிவனே எழுந்திரு!’ என்ற குரல் அவனை எழுப்பியது. அவனோ, ’நான் முனிவனல்ல, கொள்ளைக்காரன” என்று திகைத்து பதில் கூற,

’இனி நீ கொள்ளைக்காரனும் அல்ல, உனது பழைய பெயரும் மறைந்து விட்டது. வால்மீகி - கறையான் புற்றிலிருந்து தோன்றியவர் என்று வழங்கப்படுவாய்’ என்று சொன்னார் பிரம்மா.

சமஸ்கிருதத்தில், எறும்பு புற்றுக்கு, வால்மீகம் என்று அர்த்தம், புற்றை பிளந்து, பூமியின் மைந்தனாக மறுபிறப்பு போல தோன்றியமையால் வால்மீகி என்றழைக்கப்படுகிறார்..

பின், பிரம்மதேவர் வால்மீகி மகரிஷிக்கு, முக்காலமும் உணரும் வரத்தோடு, இராமாயணத்தை இயற்றும் வாய்ப்பையும் வழங்கினார்...

சென்னையின் முக்கியப் பகுதியான திருவான்மியூர், இவரது பெயரில் வழங்கப்படுவதே. திருவான்மீகியூர் என்று இருந்து பின் மருவி திருவான்மியூர் என்று வழங்கப்படலானது. மேலும் இங்கு வான்மீகி முனிவருக்குத் தனிக்கோயிலும் அமைந்துள்ளது.

நடப்பது நடந்தே தீரும்

என்ன வசதி வாய்ப்பு இருந்தாலும் அன்று நாம் சாப்பிடகூடாது என்ற விதி இருந்தால் அனைத்தும் இருந்தும் எதுவும் சாப்பிட முடியாத விதி இருந்தால் விதியே வெற்றி பெறும்...

நமது ஒவ்வொரு செயலும் கணக்கொன்றை உருவாக்கும் அல்லது பழைய கணக்கொன்றை தீர்க்கும்.

வாரியார் அவர்களின் கதை தொகுப்பில் இருந்து.....

பிறவிகளின் வழியே விதி .....

ஒரு குளக்கரையில் ஓரு அந்தணர் மான் தோல்மீது அமர்ந்து காயத்திரி மந்திரம் ஜெபம் செய்துகொண்டிருந்தார். 

ஒரு புலையன் பசுவை வெட்டும்பொருட்டு கத்தியைத் தீட்டிக் கொண்டிருந்தான்.

அறிவுள்ள அப்பசு, நம்மைக் கொல்லும்பொருட்டே இவன் கத்தியைத் தீட்டுகின்றான் என்று அறிந்து கட்டுத் தறியை அறுத்துக்கொண்டு அக்குளக்கரை வழியே ஓடியது.

 அந்தப் புலையன் பசுவைத் தேடிக்கொண்டு வந்தான்.அந்த ஜெபம் புரியும் பிராமணனைப் பார்த்து, “ஐயரே, பசு இந்த வழியாகச் சென்றதா?” என்று கேட்டான்.

 ஜெபம் செய்துகொண்டிருந்த அந்தணர் இருகரங்களையும் நீட்டி பசு ஓடின வழியைக் காட்டினார். அவர் காட்டிய வழியே சென்று புலையன் பசுவைக் கொலை செய்துவிட்டான்.

அடுத்த பிறவி...

வட நாட்டில் தாழ்ந்த குலத்தில் சாருகர் என்பவர் பிறந்தார்.
 சாருகர் என்ற குலத்தில் பிறந்தவர் உயர்ந்த குணங்களை உடையவராக விளங்கினார். அதனால் ஸஜ்ஜன சாருகர் என்று பெயர் பெற்றார். 

அவர் இளமையிலிருந்தே உத்தம குணங்களுக்கு உறைவிடமாகத் திகழ்ந்தார்.

 அடக்கம், பொறுமை, சாந்தம், ஈஸ்வர பக்தி ஒழுக்கம், பண்பு முதலிய நற்குணங்களை அணிகலமாக அணிந்த அவர் ஆசார சீலராக இருந்தார். 

அவர் பண்டரிநாதனை உபாசனை புரிந்துவந்தார். பண்டரி நாதா! பண்டரிநாதா! எனு கூறி அலறுவார்.”விட்டல், விட்டல்” என்று பஜனை செய்வார். 
இரவு பகலாக எட்டெழுத்தை ஓதி உள்ளம் உருகுவார்., கண்ணீர் பெருகுவார்.

பண்டரீபுரம் பூலோக வைகுந்தம். ஸஜ்ஜன சாருகருக்கு பண்டரீபுரம் சென்று விட்டல நாதனைச் சேவிக்க வேண்டும் என்ற தாகம் மேலிட்டது.

அந்தக் காலத்தில் ரயில் பஸ் முதலிய வாகன வசதிகள் கிடையா. சாருகர் பஜனை செய்துகொண்டு நடந்து போகிறார். பகல் முழுதும் நடப்பார். பொழுதுபோன ஊரில் பிட்சை எடுத்து உண்டு சத்திரங்களில் தங்கி பஜனை செய்வார்.

ஒருநாள் ஒரு நகரத்தில் தங்கினார்.இரவில் வேறு  இடமின்மையால் ஒரு தனவந்தரின் வீட்டுத் திண்ணயில் அமர்ந்து ஜெபம் செய்துகொண்டிருந்தார். 

இரவு ஒரு மணி. நகரம் இருள் சூழ்ந்திருந்தது. ஒலியடங்கி இருந்தது. அங்கங்கே நாய்கள் குலைத்துக் கொண்டிருந்தன.

 அந்த வீட்டுப் பெண் சிறுநீர் கழிக்க கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தாள். சாருகரைக் கண்டாள். அவர் மீது மையல் கொண்டாள். அவரருகே சென்று, “தாங்கள் பூலோக மன்மதரைப் போல காட்சி தருகிறீரே! தாங்கள் யார்? என்று கேட்டாள்.

அம்மா! வணக்கம், நான் ஒரு யாத்ரீகன்.என் பேர் சாருகன். நான் பண்டரிபுரம் போகின்றேன். 

அந்த பெண்மணி இவரிடம்..என் உள்ளததைக் கொள்ளைகொண்ட உத்தமரே! தாங்கள் என் இதய ராஜா. நான் உங்கள் இதய ராணி. இந்த விநாடி முதல் தாங்கள் என் இன்னுயிர்க் கணவர்.”என அவரை ஆசையுடன் நெருங்குகிறாள்..

அம்மா! இந்த உலகம் கடுகளவு. பாவத்தால் வரும் துன்பம் மலையளவு. 
நான் மனத்தினாலும் மாதரைத் தீண்டாதவன். 
பிரம்மச்சாரி. 
தாங்கள் உங்களுடைய கணவருடன் வாழ்வதுதான் கண்ணியம்; கற்பு நெறியில் நிற்பதுதான் புண்ணியம்...என கூறுகிறார்..

அவள் வெறி பிடித்தவளைப் போல ஓடி கொடுவாளை எடுத்து அயர்ந்து தூங்குகின்ற கணவனுடைய தலையை வெட்டித் துணித்தாள்.

 “என் உயிரினும் இனிய உத்தமரே! என் கணவரைக் கொன்றுவிட்டேன். இனி நீர்தான் என் கணவர்”—என்று கூறி அவரைக் கட்டித் தழுவ வந்தாள்.

இந்தக் கொடுஞ்செயலைக் கண்டு சாருகர் நடுநடுங்கினார். 

ஐயோ! கணவரைக் கொன்ற இவள் ஒரு பெண்ணா? பூதமா?பேயா? என்று எண்ணித் திண்ணையை விட்டுக் குதித்து ஓடினார். 

அந்தப் பெண் அவரைத் தொடர்ந்தாள்.சாருகரைப் பற்ற முடியவில்லை. நான்கு தெரு கூடுமிடத்தில் நின்று அப்பெண் ஓவென்று கதறி ஓலமிட்டாள். அங்கு உறங்கியிருந்தவர்கள் கூடினார்கள்.

பெரியோர்களே! இந்தப் பாவி எங்கள் வீட்டுத் திண்ணையில் படுத்திருந்தான். நான் சிறு நீர் கழிப்பதற்காக கதவைத் திறந்து வெளியே வந்தேன். என் கணவரை வெட்டிவிட்டு என்னைக் கற்பழிக்க என்னைத் துரத்தி வந்தான் என்று கூறி கதறியழுதாள்.

ஊர்க்காரங்க. .சாருகரைப் பிடித்து அடித்துத் துன்புறுத்தினர். காவல் துறையினர், அவரைச் சிறையில் அடைத்தார்கள்.

 பொழுது விடிந்தபின். அவ்வூர் சிற்றரசன் வழக்கை விசாரித்தான். “எல்லாம் பாண்டுரங்கன் அறிவான். நான் ஒரு குற்றமும் செய்யவில்லை: என நடந்ததை உள்ளபடி சொன்னார்.

 குற்றம்புரிந்தவன் ஒப்புக்கொள்வானா? என்று எல்லோரும் சொன்னார்கள்.

 சாருகருடைய கரங்களைத் துண்டிக்குமாறு அரசன் ஆணையிட்டான். சாருகருடைய இரு கரங்களும் துண்டிக்கப்பட்டன. குற்றம் செய்யாத குணப் பெருங்குன்றான அவர் துடிதுடித்தார்.

பின்னர் எங்கும் தங்காமல் பண்டரீபுரம் வந்து சேர்ந்தார்.

 அன்றிரவில் கோயில் அர்ச்சகர்கள், அறங்காவலர்கள், தக்கார்களின் கனவில் பண்டரீநாதர் தோன்றி,
 “நமது பரம பக்தனான ஸஜ்ஜன சாருகன் வருகிறான். கோயில் மேளம், குடை, சுருட்டி, பூரண கும்பம் வைத்து உபசரித்து அழைத்து வாருங்கள்” என்று பணித்தருளினார்.

எல்லோரும் வந்து சாருகருக்கு கோவில் பரிவட்டம் கட்டி கனவில் பாண்டுரங்கன் கூறியதைச் சொல்லி பேரன்பு காட்டினர். 

சாருகர் இதனைக் கேட்டு அழுதார். பாண்டுரங்கன் திருவுருவம் முன் நின்றார்.

 கைகளில்லாமையால் தொழ முடிய வில்லையே என்று கதறினார்.”தேவ தேவா! உன்னை என்னடியார் என்று அருள் புரிந்தனையே. அன்று அரசன் என் கரங்களை வெட்டுமாறு ஆனையிட்டானே.

 அப்போது இவன் குற்றமற்றவன் என்று அசரீரியாகவாது ஒரு குரல் கொடுத்திருக்கலாமே. அன்று என்னைக் கை நழுவவிட்டீரே.
 இது நியாயமா? இதுதான் உன் கருணையா? இது தருமமா? நான் இப்பிறவியில் எவருக்கும் எந்தத்தீங்கும் செய்யவில்லையே. உன்னைக் கையெடுத்துக் கும்பிடக்கூட முடியவில்லையே என்று சொல்லி அழுதார்.

பாண்டுரங்கண் கூறினார்: “அன்பனே அழாதே. அவரவர் வினைகளை அவரவர் அனுபவித்தே தீர வேண்டும். அன்று ஒரு நாள் குளக்கரையில் ஓரந்தணன் காயத்ரி மந்திரம் ஜெபித்துக் கொண்டிருந்தான். 

பசுவை வெட்ட வந்த புலையன் பசு ஒடிப்போன வழியைக் கேட்டவுடன் இரு கரங்களையும் நீட்டி அது போன பக்கத்தைக் காட்டினாய்,புலையன் அவ்வழியே சென்று பூலோக காமதேனுவாகிய பசுவைக் கொன்று விட்டான். 

நீதான் அந்த காயத்ரி ஜபம் செய்த அந்தணன். பசுவின் கொலைக்குக் காரணமான உனது இரு கரங்களும் வெட்டப்பட்டன. 

கொலையுண்ட பசுதான் அப்பெண் (தனவந்தனின் மனைவி); பசுவைக் கொலை செய்த புலையன்தான், அவளுடைய கணவன். ஆகையால் இவை அனைத்தும் முற்பிறப்பில் செய்த தீவினையால் வந்தவை என்று கூறினார். 

வாழ்வின் ஒரு பெரும் புயலில், எதில் கவனம் செலுத்த வேண்டுமோ அதில் செலுத்தி மற்றதை இறைவனிடம் விட்டு விடுங்கள்..
அவன் எப்போதும் எதிலும் நம்மை வருத்த செய்ய மாட்டான்.
விதிக்குக் கட்டுப்பட்டுத்தான் மனிதன் வாழ வேண்டும். 

உன் செயலில் நீ கவனம் செலுத்து..
மற்றவை நடக்க வேண்டியவை நடந்தே தீரும்.

ஸ்ரீ ருக்மணி சமேத ஸ்ரீ பாண்டுரங்க மஹராஜ் கி ஜெய் !!

Tuesday, July 14, 2020

மகான் ரமண மகரிஷி

வரலாறு சுருக்கம்
அருணாசலம் எனப்படும் திருவண்ணாமலையின் தென்புற அடிவாரத்தில் அமைந்துள்ளது உலகப் புகழ் பெற்ற ரமணாஸ்ரமம். வேகங்கடராமன் என்று அழைக்கப்பட்ட ஸ்ரீரமண மகரிஷி இங்கேதான் திருச்சமாதி கொண்டுள்ளார். தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து அமைதியாக தரிசித்து, ஆனந்தம் பெற்றுச் செல்கிறார்கள். ரமணாஸ்ரமம் ஒரு கோயிலா? ஆசிரமமா? எப்படி உங்களுக்குத் தோன்றுகிறதோ அப்படியே வைத்துக் கொள்ளுங்கள். மொத்தத்தில், இது அமைதியையும் நிம்மதியையும் தேடி வருபவர்களுக்கு அவற்றை நல்கக்கூடிய ஆனந்த நிலையம். ரமணர் எத்தனையோ உபதேசங்களையும் அருள்மொழிகளையும் நமக்கு வழங்கி உள்ளார். அவற்றுள் முக்கியமான உபதேசம் - நான் யார்? என்னும் ஆன்ம விசாரம். ஞான மார்க்கத்தில் தன்னை அறிந்து கொள்ளுதல் அல்லது முக்தி பெறுதலே இந்த வழியின் நோக்கம்.

இன்றைக்கு எத்தனையோ துறவிகள் மௌன விரதம் இருக்கிறார்கள். ஆனால், மௌன விரதம் என்பது எப்படி இருக்க வேண்டும் என ஸ்ரீரமணர் கூறுகிறார். மௌனமாக இருப்பது மிகவும் நல்லது. அது ஒரு விரதம்தான். ஆனால் வாயை மட்டும் மூடிக் கொண்டு மனம் அலைபாய்ந்து கொண்டிருக்குமானால் அது மௌனமாகாது. அதனால் எந்த பலனும் இல்லை. வாஸ்தவம்தானே! அமாவசை விரதம் இருக்கின்றவன். அடை அவியலை நினைத்துக் கொண்டே இருக்காலாமா? ஸ்ரீரமணரது அவதாரம் அருப்புக்கோட்டைக்கு அருகே உள்ள திருச்சுழியில் 1879-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29-ஆம் தேதி பின்னிரவு ஒரு மணிக்கு (எனவே இவரது அவதார தினத்தை 30-ஆம் தேதி என்று குறிப்பாரும் உளர்) நிகழ்ந்தது. ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு உகந்த திருவாதிரை தினத்தில், வழக்கறிஞர் சுந்தரம்மய்யர்-அழகம்மையார் தம்பதிக்கு இரண்டாவது குழந்தையாக வேங்கட்ராமன் அவதரித்தார்.

திருச்சுழியிலேயே கல்வி கற்கத் தொடங்கினார். பின் திண்டுக்கல்லிலும் மதுரையிலும், படித்தார். ஆனால், படிப்பு பிரகாசிக்கவில்லை, விளையாட்டும் ரசிக்கவில்லை. சிறுவயதில் இருந்தே அருணாசலம்......அருணாசலம் என்கிற வார்த்தை வேகங்கடராமனின் மனதில் ஏனோ ஒலித்துக் கொண்டிருந்தது. எது அருணாசலம்? இதன் பொருள் என்ன? ஏன் என் மனதில் ஒலிக்கிறது என்றெல்லாம் வேங்கடராமன் குழம்பிக் கொண்டே இருந்ததில், வருடங்கள் கரைந்தன. அது 1895-ஆம் ஆண்டு நவம்பர் மாதம்.... வேகங்கடராமனுக்கு 16 வயது, வாழ்வில் பெரிய திருப்பு முனையை ஏற்படுத்திய சம்பவம் அன்று நிகழ்ந்தது. இதுதான் ஸ்ரீ அருணாசலேஸ்வரனின் உத்தரவோ?

வக்கீல் சுந்தரமய்யார் வீட்டுக்கு உறவினர் ஒருவர் வந்தார். அவரை எங்கிருந்து வருகிறீர்கள்? என்று வேகங்கடராமன் வெகு இயல்பாகக் கேட்க, அருணாசலத்தில் இருந்து வருகிறேன் என்று கூறினார். அந்த உறவினார். அவ்வளவுதான்....அருணாசலம் என்ற சொல்லைக் கேட்ட மாத்திரத்தில் வேங்கடராமனின் உடலெங்கும் உயர் அழுத்த மின்சாரம் பாய்ந்தது போல் இருந்தது. உள்ளத்தில் இனம் புரியாத பரவசம். அருணாசலத்தின் ஏக்கமும் தாக்கமும் உள்ளத்தில் குடி இருக்க ..... ஒரு வருடம் உற்சாகமாய் ஓடிற்று. 1896-ல் அந்த நிகழ்வு. அப்போது மதுரையில் சித்தப்பா வீட்டில் தங்கிப் படித்துக் கொண்டிருந்தார். வேங்கடராமன். மாடியில் இருந்தார். ஏனோ தெரியவில்லை - ஒரு வித பயம் திடீரென அவரைக் கவ்விக் கொண்டது. நான் இறந்து விடுவேனோ? என்று அவருக்குத் தோன்றியது. ஆனால், தேகத்தில் எந்தப் பாதிப்பும் இல்லை, நோயும் இல்லை; நொடியும் இல்லை. நன்றாகத்தான் இருந்தார். ஆனால், இந்த உணர்வை யாரிடமும் சொல்லவில்லை. தனக்கு வந்ததைத் தானே தீர்த்துக் கொள்ள விழைந்தார்.

இந்த அனுபவம் அரை மணிக்குள் நடந்தேறி விட்டது. மரண பயம் சிட்டுப் போல பறந்தது. அவரது மனம் ஆத்ம தியானத்தில் ஆழ்ந்தது. இந்த அனுபவம் குறித்துப் பின்னாட்களில் மகரிஷியே ழுதுகிறார் திடீரென்று ஏற்பட்ட இந்த சம்பவம் என்னைத் தீவிர யோசனையில் ஆழ்த்தியது. சரி, சாவு நெருங்கி விட்டது. சாவு என்றால் என்ன? எது சாகிறது? இந்த உடல்தானே செத்துப் போகிறது என்று எனக்குள்ளாகவே சொல்லிக் கொண்டு பிணம் போல் விறைக்குமாறு கைகால்களை நீட்டிப் படுத்தேன். இந்த உடம்டு செத்து விட்டது என்று உள்ளுக்குள்ளேயே சொல்லிக் கொண்டேன். இதை மயானத்துக்குக் கொண்டு சென்று எரித்து விடுவார்கள். இது சாம்பலாய் போகும். ஆனால் இந்த உடம்பின் முடிவுடன் நானும் இறந்து விட்டேனா? இந்த உடல் நான்தானா? ஆனால், இந்த உடலுக்கும் அப்பால்கூட நான் என்ற சொரூபத்தின் சக்தியும் தொனியும் ஒலிக்கிறதே.... ஆகவே நான்தான் ஆத்மா.... உடலுக்குள் கட்டுப்படாத ஒரு வஸ்து என்ற முடிவுக்கு வந்தேன்;-இப்படிக் குறிப்பட்டிருக்கிறார்.

சாகப் போகிறேன் என்கிற எண்ணம் வந்த அடுத்தடுத்த நாட்களில் வேகங்கடராமனின் செயல்களில் கூடுதல் மாற்றங்கள் தெரிந்தன. வீட்டில் இருக்கிற எவரையும் மனம் நினைக்கவில்லை. தோழர்களை மறந்தார். விளையாட்டும் உணவும் சுத்தமாக மறந்தே போயின. படிப்பு செல்லவே இல்லை உற்றாரும் உறவினர்களும் வேகங்கடராமன் மீது வெறுப்பும் கோபமும் கொண்டனர். ஆறு வாரங்கள் சென்றன. ஆசிரியர் கொடுத்த வேலையை எழுதி முடிக்காததால் அதன் மீது வெறுப்பு வந்தது. பூர்த்தி செய்யப்படாத நோட்டை மூடினார். கண்களையும் மூடினார் தியானத்துக்கு. இதன் பின் அண்ணனுடன் ஏற்பட்ட ஒரு வாக்குவாதம் வேங்கடராமனை வீட்டை விட்டுத் துரத்தியது.

வீட்டில் கோபம் என்றால், சிலர் என்ன செய்வார்கள்....சினிமாவுக்கு, பூங்காவுக்கு, சொந்தக்காரர் வீட்டுக்கு-இப்படித்தானே பயணிப்பார்கள்? ஆனால், வீட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று வேகங்கடராமன் சிந்தித்த மறுகணம் அவருக்கு அருணாசலம் நினைவு வந்தது. ஃபீஸ் கட்டுவதற்காக அண்ணன் நாகசாமி ஐந்து ரூபாய் கொடுத்திருந்தான். கடகடவென்று தன் பயணம் குறித்து ஒரு லெட்டார் எழுதினார். அத்துடன், அண்னண் கொடுத்த ஐந்த ரூபாயில் இருந்து மூன்றைப் பாத்திரப்படுத்திக் கொண்டார். மீதி இரண்டு ரூபாயையும், தான் எழுதிய லெட்டரையும் வீட்டார் பார்வை படும்படியான இடத்தில் வைத்து விட்டு, ஒரு அடலஸைத் தன்னுடன் எடுத்துக் கொண்டு ரயில் நிலையம் புறப்பட்டார். வீட்டில் இருந்து அரை மைல் தொலைவு ரயில் நிலையம். அன்றைக்குப் பார்த்துப் இவர் போக வேண்டிய ரயில் தாமதமாக வந்தது. ரயிலில் ஏறி அமர்ந்
தார்.

1896 செப்டம்பர் முதல் தேதி திருவண்ணாமலையில் இருந்தார். புனித பூமியில் காலடி பட்டதும். அருணாசலேஸ்வரர் கோயிலை நோக்கி ஓடினார். ஆச்சிரியம்-கோயிலில் அர்ச்சகர்கள் உட்பட பக்தர்கள் கூட்டமே இல்லை. வேகடராமன் பேரின்பம் பெற வேண்டும் என்பதற்காக இறைவனே இப்படி ஒரு சூழலை ஏற்படுத்தி இருக்கலாம். வெளியே வந்தார். எண்ணியது ஈடேறிப் போகும் ஆனந்தத்தில் திருவண்ணாமலை வீதிகளில் நடந்தார். ஐயன் குளத்தருகே வந்ததும், தன் கையில் இருந்த பலகாரப் பொட்ட லத்தைத் தூக்கி எறிந்தார். தற்செயலாக அப்போது வேங்கடராமனுக்கு அருகில் வந்த ஒருவர், முடி எடுக்க வேண்டுமோ? என்று கேட்டார். எது நடக்க வேண்டுமோ, அது நன்றாகவே நடக்கிறது. குடுமி அகன்றது. அணிந்திருந்த வேட்டியை அவிழ்த்தார். ஒரு கோவணத்துக்குத் தேவையான துண்டை மட்டும் கச்சிதமாகக் கிழித்தார். எஞ்சிய துணியை ஒரு பந்தாகச் சுருட்டி, புணூலையும் மிச்சம் இருந்த ரூபாயையும் சேர்த்து வீசி எறிந்தார். மீண்டும் அருணாசலேஸ்வரனைத் தரிசிக்க அவரது மனம் விரும்பியது. குளிப்பது தேவை இல்லை என நினைத்தார். கோயிலுக்கு நடந்தார். இறைவனே திடீரென மழையைப் பொழிவித்து வேங்கடராமனைக் குளிக்க வைத்தான்.

ஆயிரங்கால் மண்டபத்தில்தான் தவம் துவங்கியது. விஷமக்காரச் சிறுவர்களின் தொந்தரவு தாங்க முடியவில்லை. இதை அடுத்து. பாதாளலிங்கம் இருட்டு குøக்கு மாறினார். பார்த்தாலே உள்ளுக்குள் பயத்தை வரவழைக்கக்கூடிய இடம். ஆனாலும், தவம் தொடர்ந்தது. ஒரு சிறுவன் இங்கே அமர்ந்து தவ யோகத்தில் திளைத்துக் கொண்டிருக்கிறான் என்று தாமதமாகப் பலருக்கும் தெரிய வந்தபோது கூட்டமாக வந்து தரிசித்து ஆச்சிரியப்பட்டனர். ஈ, எறும்பு, பூச்சிகளுக்கு இரையாக உடலின் கீழ்ப் பாகம் அரிக்கப்பட்டு, ரத்தமும் சீழும் கட்டி கட்டியாகத்தெரிந்தது. ஆனால் வேங்கடராமனின் உள்மனம் துன்பத்தை அறியவில்லை.

இந்தப் பக்குவத்தைப் பெற்ற வேகங்கடராமனின் தவ யோகத்தை உணர்ந்து அங்குள்ள சாதுக்கள் மரியாதை செய்தனர். இந்த இடம் பலருக்குத் தெரிந்துவிட்டபடியால், வேறு இடம் மாறுவதற்கு உதவினர். எங்கெங்கு போனாலும் வேகங்கடராமனைத் தேடி வந்து பக்தர்கள் தரிசித்தனர். அழுக்கடைந்த மேனியோடு, நகங்கள் வளர்ந்த விரல்களோடு பவழக்குன்றின் கரடுமுரடான ஒரு பாறையில் படுத்திருந்த தன் மகனை தாய் அழகம்மையும் ஒரு நாள் தரிசித்துக் கண்ணீர் சிந்தனாள். வேங்கடராமனை வீட்டுக்கு வரவழைக்கும் முயற்சிகள் பலராலும் எடுக்கப்பட்டு, அனைத்தும் தோல்வியில் முடிந்தன. சம்ஸ்க்ருதப் பண்டிதராண கணபதி சாஸ்திரிகள் என்பவர் வேங்கடராமனின் அருளுக்குப் பாத்திரமானார். சீடரானார். இவர்தான் வேங்கடராமனுக்கு ரமண மகரிஷி என்று பெயர் சூட்டினார். அதுவரை பிராம்மண சுவாமி என்றே அழைத்து வந்தனர்.

விருபாட்சி குகை, கந்தாஸ்ரமம், பாலாக்கொத்து என பல இடங்களில் வாசமும் தவமும் தொடர்ந்தது. இறுதியில் அடிவாரம். அதுவே ரமணாஸ்ரம்மாக உருவானது. பாரதத்தின் முன்னாள் ராஷ்டிரபதி பாபு ராஜேந்திர பிரசாத் 1938-ஆம் ஆண்டில் ஒரு நாள் துவண்ட முகத்துடன் மகாத்மா காந்தியின் ஆசிரமம் வந்தார். பாபுஜி....மன அமைதியை நாடி தங்களின் ஆசிரமத்துக்கு வந்துள்ளேன் என்றார். மன அமைதியை நீவிர் விரும்புனால் திருவண்ணாமலை ரமணாஸ்ரமம் செல்லுங்கள். அங்கு ரமண மகிரிஷியின் சந்நிதியில் கேள்வி, பேச்சுக்கள் எதுவும் இல்லாமல் ஒரு வாரம் இருங்கள் என்றார். அதன்படி பாபு 14.8.38 அன்று திருவண்ணாமலை வந்தார். அவருடன் வந்தவர்கள் பகவான் ரமணரிடம் ஏதேதோ பேசினர். பல இடங்களுக்கும் பயணப்பட்டனர். ஆனால், பாபு மட்டும் ஸ்ரீரமணர் சந்நிதியை விட்டு நகரவில்லை. காந்திஜியின் அறிவுரைப்படி அங்கே தங்கி இருந்த ஒரு வார காலத்துக்கு யாதொரு பேச்சும் கேள்வியும் இல்லாமல் ஒரு வாரம் கழித்தார். அதன் பின் அவர் பெற்ற மன அமைதி, எத்தனை கோடி கொடுத்தாலும் கிடைக்காது.

அருணாசலத்தில் அடி எடுத்து வைத்த நாள் முதல் அரை விநாடி கூட எங்கும் செல்லாமல் 54 வருடங்கள் அங்கேயே வாழ்ந்தார். 1949-ல் இடது புஜத்தின் கீழ்ப்பாகத்தில் புற்று நோய்க்கான ஒரு கட்டி புறப்பட்டது. அதற்கு சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. பகவானுக்கு வந்த வியாதி பற்றி ஒரு பக்தர் பகவானிடமே கவலைப்பட்டுச் சொன்னார். அதற்கு, கொம்பில் சுற்றப்பட்ட மாலை ஒன்று நழுவியதையோ அல்லது கொம்பிலேயே இருப்பதையோ அறியாத பசுவைப் போலவும், தன் உடல் மேலிருந்து ஆடை போயிற்றா, இருக்கிறதா என்பதை அறியாத குடிவெறியினைப் போலவும். ஞானி ஒருவன் தனக்கு சரீரம் என்கிற ஒன்று இருக்கிறதா போயிற்றா என்பதை அறிவதே இல்லை என்றார் ஒரு புன்னகையுடன்.

தன் இறுதி மூச்சு வரை எல்லோருக்கும் பாகுபாடு இல்லாமல் தரிசினம் தந்தார். 1950-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 8.47-க்கு பத்மாசனம் இட்டவாறே அமர்ந்து மூச்சை ஒடுக்க, பரிபூரணமாய் பிரகாசித்தார். பகவான் இருந்த அறையின் வாயிலில் ஒரு பேரொளி தோன்றி அந்த அறையையும் சுற்றுப்புறத்தையும் வியாபித்துப் பரவி, பின் வெட்டவெளியில் - வான்வெளியில் கலந்து மெள்ள மெள்ள வடக்கு நோக்கி நகர்ந்து ஸ்ரீஅருணாசலத்தின் உச்சிக்குப் பின் சென்று மறைந்தது.

பகவான் ஸ்ரீரமணர் சொல்வார்; கடவுளை ஒவ்வொருவரும் அவரவர்களுடைய இதயத்தில் தேடினால், கடவுள் அருளும் அவர்களை நிச்சியம் தேடும்.

இந்த தேடல் எப்படி சாத்தியம்?

பால் பிரண்டனுக்கு பகவான் சொன்னதே இதற்குப் பதில்.




பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...