Saturday, November 6, 2021

உடுப்பி ஸ்ரீகிருஷ்னர்

கிருஷ்ணாவதாரதின்போது   துவாரகையில் ருக்மணி ஒரு நாள் கிருஷ்ணனிடம் தனது ஆசை ஒன்று உள்ளதாகவும், அதை நிறைவேற்றி த்தரவேண்டும் என்று கேட்டுகொண்ட்டர்கள்.

ஒரு நாள் கிருஷ்ணன் விவரமாக அந்த ஆசை என்ன என்று கேட்டபோது, ருக்மணி கீழ்கண்டவாறு சொன்னார்கள்.

நாதா, நீங்கள் சிறு பிராயத்தில் கோகுலத்திலும்,பிருந்தாவனத்திலும்,மதுராவிலும்,பல லீலைகள் செய்தீர்கள் அல்லவா. 

அப்போது உங்களுக்கு வயது பத்துக்குள்தான். ஆகவே, நான் அப்போது இல்லாததால், அந்த சிறு பிராயத்தில் நீங்கள் இருந்ததுபோல் எனக்கு காட்சி தரவேண்டும். என்றாள்.

உடன் கிருஷ்ணன் மூன்று வயது சிறுவன் போல் உள்ள தோற்றத்தை காண்பிக்க,தேவ சிற்பிகள் அதை அப்படியே வடிவமைத்துக் கொடுத்தார்கள். 

 ருக்மணிக்கு  ஏக சந்தோஷமாயிற்று.  ருக்மணி அந்த விக்ரஹத்திற்கு தினமும் ஒரு நாள் கூட விடாமல் பூஜை செய்து வந்தார்கள்.

பிற்காலத்தில் துவாரகை கடலுக்கு அடியில் போய்விட்டது அல்லவா.அந்த விக்ரஹமும் அப்போது இல்லை.

இது ஒரு புறம் இருக்க, இப்போது, மத்வாசார்யாரை பற்றி கொஞ்சம் பாப்போம்.

மத்வர் தினமும் தனது அனுஷ்டானத்தை முடித்துக்கொண்டு எப்போதும் கிருஷ்ண ச்மரனத்திலேயே இருப்பார்.

அப்படி இருக்கையில் ஒரு நாள் கடலில் சீற்றம் அதிகம் காரணமாக , அங்கு வந்த கப்பல் நிலை தடுமாரிப்போனது.

கப்பலில் உள்ள மாலுமி என்னன்னவோ செய்து பார்த்தும் எதுவும் இயலவில்லை . 

 அப்போது, கரையில் நின்று ஜபம் செய்துகொண்டிருந்த மத்வரை பார்த்து குரல் கொடுக்க, பிறகு அந்த மாலுமி மத்வரை வேண்டிக்கொண்டார். 

 சுவாமி மகான் போல் தெரிகிறது.நீங்கள்தான் எங்களை காப்பாற்றவேண்டும் என்றார்.

நமது ஆசாரியருக்கு தெரியாதா என்ன.  அவரும் ஒப்புக்கொண்டு,தனக்கு உண்டான பாணியில், கிருஷ்ணனை வேண்டி ,புயலை ஓயச்செய்தார்.

 இப்போது மாலுமிக்கு மிகவும் சந்தோசம் ஏற்பட்டு ,குரு காணிக்கை கொடுக்க சித்தம்பூண்டு ,மத்வரை அணுகினான்.  ஆச்சர்யார் என்ன நம்மைப்போல் ஆசைபடுபவரா என்ன

 .திட்டவட்டமாக மறுத்துவிட்டார். மீண்டும் ஏதாவது பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதின் கட்டாயத்தால், மத்வர் அப்போது ஒன்று கேட்டார்.  

உங்கள் கப்பலில் சரக்குகளுடன் வந்துள்ள,(packing materials), இது பிறகு தூக்கி எறியப்படும் ஒரு பொருள் ஆகும். அந்த கோபி சந்தன கட்டி என்கிற பொருள்.    

அதை கொடுக்கும்படி கேட்டார்.  மாலுமிக்கோ வியப்பு.  ஒன்றுக்கும் உதவாத இதை கேட்கிறாரே என்று. வியப்பில் ஆழ்ந்தவர், மத்வர் கேட்ட அந்த பொருளையே கொடுத்தார்.

மத்வாச்சாரியார், அதை சந்தோஷமாக பெற்றுக்கொண்டு, மாலுமியை ஆசிர்வதித்து, பிறகு அதை துப்புரவு வேலை செய்து, அதாவது அதை துடைத்து என்று அர்த்தம். 

இப்போது அப்படி அதை தேய்த்து அது கரைய கரைய, கடைசியில் ஒரு கிருஷ்ண விக்ரகம் வந்தது. 

 உடன் சுவாமி அதை தழுவிக்கொண்டு, சந்தோசம் அடைந்து, அதற்க்கு நித்திய ஆராதனைசெய்ய முன்வந்தார்கள்.

மத்வர் வாழ்ந்த இடம் இன்றைய உடுப்பி ஆகும்.  அந்த விக்ரஹம்தான் இன்று நாம் தரிசிக்கும், இல்லை இல்லை, துவாரகையிலே, ருக்மணி பூஜித்தாலே, அந்த கிருஷ்ணனை நாம் இன்று தரிசிக்க காரணம் இந்த மத்வரே ஆகும்.

மத்வர் காலம் கி.பி.13ம் நூற்றாண்டு. கிருஷ்ணாவதாரா காலத்தில் துவாரகையில் மூழ்கிய கிருஷ்ண விக்ரகம் ,எவ்வளவு காலம் கழித்து, மத்வர் கைக்கு கிடைத்து,அதை நாம் இன்று தரிசிக்கிரோமே என்னே நம் பாக்கியம் நண்பர்களே.

இந்த கிருஷ்ணரை கப்பலில் இருந்து கொண்டுவந்தார் அல்லவா. அப்போதே பல க்ரந்தங்கள் செய்துகொண்டே வந்தார்.  அந்த க்ராந்தம்தான் 

,இப்போது, கோயிலில் தீபாராதனை காண்பிக்கும்போது சொல்லுகிற, அதே நேரத்தில் நம் வீட்டில் சொல்லுகிற,சொல்லவேண்டிய,சக்தி வாய்ந்த ஒரு கிரந்தம்தான்.

த்வாதசநாம ஸ்தோத்திரம்.....

என்ன இனி உங்கள் வீட்டிலும் இந்த மந்திரம் ஒலிக்கும்தானே அன்பர்களே

ஸர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணமஸ்து 

Tuesday, October 19, 2021

கொடிய நோய்களையும் தீர்க்கும் பாடல்!

 இந்தப் பாடலைப் பாடினால் தீராத நோயெல்லாம் நொடியில் தீருமாம் தெரியுமா?

கூன் பாண்டிய மன்னனின் வெப்ப நோயை தீர்க்க திருஞானசம்பந்தர் பாடிய திருநீற்று பதிகம் மிகுந்த சக்தி பெற்றுள்ளது! உஷ்ணத்தால் வரக்கூடிய வெப்ப நோய்கள், அம்மை, காய்ச்சல் போன்ற விஷயங்களை எளிதாக தீர்க்க கூடிய இப்பாடல் சிவபெருமானை நினைத்து திருஞானசம்பந்தர் பாடியுள்ளார். எவ்விதமான நோய்களாக இருந்தாலும் இந்த பதிகத்தை பாடும் பொழுது சிவபெருமானே நம் நோய் தீர்க்கும் மருந்தாக மாறிவிடுவார் என்பது நம்பிக்கை. தீராத நோயால் அவதிப்படுபவர்கள் இப்பாடலை தினந்தோறும் காலை, மாலையில் நெற்றியில் திருநீறு பூசிக் கொண்டு பாடினால் பயன் பெறலாமே!


மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயான் திருநீறே!

வேதத்தி லுள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
போதந் தருவது நீறு புன்மை தவிர்ப்பது நீறு
ஓதத் தகுவது நீறு வுண்மையி லுள்ளது நீறு
சீதப் புனல்வயல் சூழ்ந்த திருஆல வாயான் திருநீறே!


முத்தி தருவது நீறு முனிவ ரணிவது நீறு
சத்திய மாவது நீறு தக்கோர் புகழ்வது நீறு
பத்தி தருவது நீறு பரவ இனியது நீறு
சித்தி தருவது நீறு திருஆல வாயான் திருநீறே!

காண இனியது நீறு கவினைத் தருவது நீறு
பேணி அணிபவர்க் கெல்லாம் பெருமை கொடுப்பது நீறு
மாணந் தகைவது நீறு மதியைத் தருவது நீறு
சேணந் தருவது நீறு திருஆல வாயான் திருநீறே!


பூச இனியது நீறு புண்ணிய மாவது நீறு
பேச இனியது நீறு பெருந்தவத் தோர்களுக் கெல்லாம்
ஆசை கெடுப்பது நீறு அந்தம தாவது நீறு
தேசம் புகழ்வது நீறு திருஆல வாயான் திருநீறே!

அருத்தம தாவது நீறு அவல மறுப்பது நீறு
வருத்தந் தணிப்பது நீறு வானம் அளிப்பது நீறு
பொருத்தம தாவது நீறு புண்ணியர் பூசும்வெண் ணீறு
திருத்தகு மாளிகை சூழ்ந்த திருஆல வாயான் திருநீறே!


எயிலது அட்டது நீறு இருமைக்கும் உள்ளது நீறு
பயிலப் படுவது நீறு பாக்கிய மாவது நீறு
துயிலைத் தடுப்பது நீறு சுத்தம தாவது நீறு
அயிலைப் பொலிதரு சூலத் தால வாயான் திருநீறே!

இராவணன் மேலது நீறு எண்ணத் தகுவது நீறு
பராவண மாவது நீறு பாவ மறுப்பது நீறு
தராவண மாவது நீறு தத்துவ மாவது நீறு
அராவணங் குந்திரு மேனி ஆல வாயான் திருநீறே!

மாலொ டயனறி யாத வண்ணமு முள்ளது நீறு
மேலுறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு
ஏல உடம்பிடர் தீர்க்கும் இன்பந் தருவது நீறு
ஆலம துண்ட மிடற்றெம் மால வாயான் திருநீறே!

குண்டிகைக் கையர்க ளோடு சாக்கியர் கூட்டமுங் கூட
கண்டிகைப் பிப்பது நீறு கருத இனியது நீறு
எண்டிசைப் பட்ட பொருளார் ஏத்துந் தகையது நீறு
அண்டத் தவர்பணிந் தேத்தும் ஆல வாயான் திருநீறே!

ஆற்றல் அடல்விடை யேறும் ஆலவா யான்திரு நீற்றைப்
போற்றிப் புகலி நிலாவும் பூசுரன் ஞானசம் பந்தன்
தேற்றித் தென்ன னுடலுற்ற தீப்பிணி யாயின தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே!!!


Wednesday, September 29, 2021

இந்தியாவின் முக்கியமான ஆறுகள்


 1 சிந்து நதி
 நீளம்: (2,880 கிமீ)
 தோற்றம்: மானசரோவர் ஏரிக்கு அருகில்
 துணை நதிகள்: (திபெத்) சட்லெஜ், பியாஸ்,
 ஜீலம், செனாப், ரவி, ஷிங்கர்,
 கில்கிட், ஷியோக் ஜம்மு மற்றும் காஷ்மீர், லே

 2 ஜீலம் ஆறு
 நீளம்: 720 கிமீ
 தோற்றம்: சேஷ்நாக் ஏரி,
 ஜம்மு காஷ்மீர்
 துணை நதிகள்: கிஷன், கங்கா, பூஞ்ச் ​​லிடர், கரேவால், சிந்து ஜம்மு காஷ்மீர்,
 காஷ்மீர்

 3 செனாப் ஆறு
 நீளம்: 1,180 கிமீ
 தோற்றம்: பரலாச்சா பாஸ் அருகில்
 தீர்ப்பாயம்: சந்திரபாகா ஜம்மு காஷ்மீர்

 4 ரவி ஆறு
 நீளம்: 725 கிமீ
 தோற்றம்: ரோஹ்தாங் பாஸ்,
 காங்க்ரா
 முக்கூடல்: சாஹோ, சுயில் பஞ்சாப்
 

 5 சட்லஜ் ஆறு
 நீளம்: 1440 (1050) கிமீ • தோற்றம்: மானசரோவருக்கு அருகில் உள்ள ரக்ஸ்தல்
 துணை நதிகள்: பியாஸ், ஸ்பிட்டி,
 பாஸ்பா இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப்

 
 6 பியாஸ் ஆறு
 நீளம்: 470
 தோற்றம்: ரோஹ்தாங் பாஸ் • துணை நதிகள்: தீர்த்தன், பார்வதி,
 ஹர்லா

 7 கங்கை ஆறு
  நீளம்: 2,510 (2071) கிமீ  
தோற்றம்:   கங்கோத்ரி அருகே கோமுகிலிருந்து
 துணை நதிகள்: யமுனா, ராம்கங்கா,
 கோமதி,
 பாகமதி, கந்தக்,
 கோசி, மகன்,
 அழகநந்தா,
 பாகீரதி,
 பிண்டார்,
 மந்தாகினி, உத்தராஞ்சல்,
 உத்தர பிரதேசம்,
 கிழக்கு இந்தியாவில் ஒரு மாநிலம்
 
 8 யமுனை ஆறு
 நீளம்: 1375 கிமீ
 தோற்றம்: யமுனோத்ரி பனிப்பாறை
 துணை நதிகள்: சம்பல், பெட்வா, கென், டன், கர்னல்கள், சிந்து,
 

 9 ராம்கங்கா ஆறு
 நீளம்: 690 கிமீ
 தோற்றம்: நைனிடால் அருகே உள்ள பனிப்பாறையிலிருந்து
 

 10 காக்ரா ஆறு
 நீளம்: 1,080 கிமீ
 தோற்ற இடம்: Mpsatung (நேபாளம்)
 துணை நதிகள்: பனிப்பாறை சாரதா, கர்னாலி,
 குவானா, ராப்டி,
 சோதனைச் சாவடி,

 11 கந்தக் ஆறு
 நீளம்: 425 கிமீ
 தோற்றம்: நேபாள-திபெத் எல்லையில் முஸ்டாக் அருகே • முக்கூற்று ஆறு: காளி கந்தக்,
 திரிசூல், கங்கை

 12 கோசி ஆறு
 நீளம்: 730 கிமீ
 தோற்றம்: நேபாளத்தில் சப்தகோஷிகி
 (கோன்சைதம்)
 தீர்ப்பாயம்: இந்திராவதி,
 தமூர், அருண்,


 13 சம்பல் ஆறு
 நீளம்: 960 கிமீ
 தோற்றம்: மவுவுக்கு அருகிலுள்ள ஜனபாவ் மலையில் இருந்து
 துணை நதி: காளி சிந்து,
 சிப்தா, பார்வதி, பனஸ்
 
 14 பெட்வா ஆறு
 நீளம்: 480 கிமீ
 தோற்ற இடம்: மத்திய பிரதேசத்தின் போபால் அருகே உபைதுல்லா கஞ்ச் அருகில்

 15 மகன் ஆறு
 நீளம்: 770 கிமீ
 தோற்றம்: அமர்கண்டக் மலைகளிலிருந்து
 தீர்ப்பாயங்கள்: ரிஹாண்ட், குன்ஹாட்

 16 தாமோதர் ஆறு
 நீளம்: 600 கிமீ
 தோற்றம்: சோட்டா நாக்பூர் பீடபூமியில் இருந்து தென்கிழக்கு
 துணை நதி: கோனார்,
 பெர்ரி, பரகர் ஜார்க்கண்ட்,
 மேற்கு வங்கம்

 17 பிரம்மபுத்திரா ஆறு
 நீளம்: 2,880 கிமீ
 தோற்றம்: மானசரோவர் ஏரிக்கு அருகில் (திபெத்தில் சாங்போ)
 தீர்ப்பாயம்: கன்சிரி,
 கபிலி, சுவான்சதி, மானஸ், லோஹித், நோவா, பத்மா, திஹாங் அருணாச்சல பிரதேசம், அசாம்

 18 மகாநதி
 நீளம்: 890 கிமீ
 தோற்ற இடம்: சிஹாவாவுக்கு அருகிலுள்ள ராய்பூர்
 முக்கூடல்: சியோநாத், ஹஸ்தேவ், உங், எப், பிராமணன், வைத்ராணி மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ஒரிசா
 
 19 ஸ்டைக்ஸ் ஆறு
 நீளம்: 333 கிமீ
 தோற்ற இடம்: கியோஞ்சர் பீடபூமி ஒரிசா

 20 தங்கக் கோடு
 நீளம்: 480 கிமீ
 தோற்ற இடம்; சோட்டா நாக்பூர் பீடபூமி ஒரிசா,
 ஜார்க்கண்ட்,
 மேற்கு வங்கம்

 21 கோதாவரி ஆறு
 நீளம்: 1,450 கிமீ
 தோற்றம்: நாசிக் மலைகளிலிருந்து
 முக்கூடல்: பிரன்ஹிதா,
 பெங்காங்கா, வர்தா,
 வைங்கங்கா,
 இந்திராவதி,
 மஞ்சிரா, பழைய மகாராஷ்டிரா,
 கர்நாடகா,
 ஆந்திர பிரதேசம்

 22 கிருஷ்ணா ஆறு
 நீளம்: 1,290 கிமீ
 தோன்றிய இடம்: மகாபலேஸ்வர் அருகில்
 துணை நதிகள்: கொய்னா, யர்லா,
 வர்ணா, பஞ்ச்கங்கா,
 தூத்கங்கா,
 கட்பிரபா,
 மலபிரபா,
 பீமா, துங்கபிரபா,
 முசி மகாராஷ்டிரா,
 கர்நாடகா,
 ஆந்திர பிரதேசம்

 23 காவேரி ஆறு
 நீளம்: 760 கிமீ
 தோற்ற இடம்: கேர்கரா அருகே பிரம்மகிரி
 துணை நதி: ஹேமாவதி,
 ஒம்புட்ஸ்மேன்,
 சிம்லா, பவானி,
 அமராவதி,
 ஸ்வர்ணவதி கர்நாடகா,
 தமிழ்நாடு

Saturday, September 4, 2021

பூலி வா

ஆப்பக்கிணற்றுத்  தண்ணீரை அள்ளிக் கொடுத்தேனே.

ஆவுடைதாய் உப்புத்தண்ணி க்கு கூட உதவலையே.

நெற்கட்டான்_செவ்வலிலே நிகரில்லை என்றிருந்தேனே.

இப்போ எதிரிகளால்  கை கால்களிலே விலங்கிட்டு  இரும்போடு நிற்கின்றேனே...

இது தான் உன் கருணையா!!!

என்று தன்னை  கைது செய்து ஆங்கலேயன் நெல்லைக்கு  கொண்டு செல்லும் போது என் அண்னையை வணங்கிவிட்டு வருகிறேன் என்று கூறி சங்கரன் கோவில்  #கோமதி_அம்மன் சன்னதி முன்பு வணங்கி இந்த பதிகத்தை  கூறியவுடன்.

பிணைக்கபட்டிருந்த இரும்பு சங்கிலிகள் தெறித்தோடி 

பூலி_வா 

என்ற ஒரு  குரல் மட்டுமே கேட்டது  உடனே கோவிலுக்குள் சென்ற பூலித்தேவன்  மறைந்தார்.

இன்றும் சங்கரன் கோவில் கோமதியம்மன் சன்னதியில் பூலித்தேவர் மறைந்த அறை  சாட்சியாக உள்ளது.

தமிழ் மன்னர்களை அவர்களின் கடவுள் நம்பிக்கையை நினைவு கூறுவோம்.

Wednesday, August 25, 2021

நொண்டி தைமூர்

மங்கோலிய பரம்பரை. செங்கிஸ்கானின் வழிவந்தவன் 

ஏப்ரல் 9 ம் தேதி 1336 ல் பிறந்தவன் . 

அறுபது வயதுக்குப்பின் தன்  பேரனான பீர் முகமதுவை பெரும்படையுடன் அனுப்பிவிட்டு,  பின்னாலே இன்னொரு 90 000 வீரர்களுடன் இந்துஸ்தானில் நுழைந்தான்.

வழியெங்கும் பார்க்கும்  அனைத்து ஆண்களையும்   கொன்று,  பெண்களை அடிமைகளாக்கி நாசம் செய்தான்.   

அப்போது  டெல்லியை ஆண்ட சுல்தான் கையாலாகாமல் பார்த்திருக்க, டெல்லியை சூறையாடி  டெல்லியில் மட்டும் இவன்  கொன்றது ஒரு லட்சம் பேர்.

இவனுக்கு நொண்டி தைமூர் என்று பேர் இருப்பதை  அறிவான் ..ம்ம் எவனாவது அதை என் முன்னால்  சொல்கிறானா என்று பார்க்கிறேன்...என்று குரூரமாக நகைப்பானாம்..

சொன்னால் ?
அவனுடன் ராணா பிரதாப் போல வாள் சண்டை ஈடுவானா ?
இல்லை மாமல்லர்  போல மல்யுத்தம் செய்வானா?   
இல்லை வீரபாண்டியன் போல ஈட்டி எறிவானா?  

நூறுபேரை காவலாய் வைத்துகொண்டு நிராயுதபாணியை வெட்டும் வெட்டிவீரன் தான் தைமூர்.. 

ஒருவழியாக டெல்லி அராஜாகத்துக்குப்பின் நாடு திரும்பினான் என்றுதான் சரித்திரம் படித்திருப்போம்.

படிக்காத உண்மை சரித்திரம் .......இதோ 

டில்லியை அடுத்த மீரட், ஹரியானா, ஷரன்பூர், ஹரித்துவார் பகுதிகளின் ராஜாவான இந்து மன்னர் தேவ் பாலாவுக்கு தைமூரின் கொலை வெறி படை எடுப்பு தெரிந்தது.

டெல்லியை அடுத்து  அவன் இந்த பகுதிக்குதான்  நகர்வான் என்றும்  தெரிந்திருந்தார்   .

அவரிடம் பெரும்   படை கிடையாது .

மஹா பஞ்சாயத்துக்கு அழைப்புவிடுத்தார் 

ஜாட், குஜ்ஜார், வால்மீகி, ராஜ்புத், பிராமணர் என்று அனைத்து  ஜாதியினரும் கூடி 

 " வாழ்ந்தால் வாழுவோம்  வீழ்ந்தால் வீரமாக சாவோம் " என்று முடிவெடுத்து ஆயுதங்களை தூக்கினர். 

ஒவொரு வீட்டிலும் ஆட்கள் வெளியே வர  80000 பேர் கொண்ட படை தயாரானது..

இவர்களுக்கு தலைவனாக ஜோக்ராஜ் சிங்க் குஜ்ஜார் என்ற மாவீரன் நியமிக்கப்பட்டார் 

ஏழு அடி உயரமான இவரை மகாபலி என்று அழைப்பார்கள் ..குதிரையை தூக்கி எறியக்கூடியவர் .

பெண்களின் மானத்தை காக்க எழுந்த படையில் பெண்களும் வருவோம் என்று சொல்லி 20 வயதே ஆன ராம் பியாரி குஜ்ஜார் என்ற  பெண்ணின் தலைமையில் 40000 பெண்கள் திரண்டனர் ..

அதிகம் பயிற்சி பெறாத படை...எதிரி மூர்க்கமானவன்… ஆயுதங்கள் இயந்திரங்கள் வைத்திருப்பவன் .எனவே கொரில்லா முறையை பயன்படுத்துவது என்று முடிவெடுத்தனர் .

தைமூர் வரும்வரை காத்திருக்காமல் ,அரவமில்லாது கிளம்பிய படை இரவு நேரத்தில் டெல்லியில் தைமூரின் முகாமுக்குள் நுழைந்து கொலை கலையை காட்டியது .

முதல் தாக்குதலில்  9000 துருக்கியர்கள் கொல்லப்பட்டனர்.  அவர்கள் பிணங்கள்  யமுனா நதியில் எறியப்பட்ட்டது . 

இப்படி மூன்றுமுறை வெவ்வேறு பகுதிகள் வழியாக நடந்த  தாக்குதலில் தைமூரின் படைகள் கலகலத்துப் போனது.

தாக்கியது  மீரட் பஞ்சாயத்தின்  படைகள் என்று தெரிந்து தைமூர் படைகளை மீரட்டை நோக்கி நகர்த்தினான் 

வழியில் தீடிரென தாக்கிய பெண்கள் படை ஆட்களை தாக்காமல் உணவு பொருட்களை அபகரித்து மிகுந்ததை அழித்து உணவுக்கு அலையவிட்டது தைமூரின்  படைகளை .

..மீரட்டில் உணவு கிடைக்கும் என்று  உள்ளே நுழைந்த தைமூரின் படைகள் ஆட்களே  இல்லாத வெறிச்சோடிய  நகரை கண்டு அதிர்ந்ததது 

இங்கும் கொரில்லா தாக்குதல் நடத்தப்பட்டாலும் , அதை எதிர்பார்த்திருந்த தைமூரின் படைகள் சமாளித்து தாக்க இரண்டு பக்கமும் சேதங்கள் .

வேறு வழி  இல்லாமல் ஹரித் துவாருக்கு  திரும்பினான் தைமூர்.

நகருக்குள் மூன்று முறை நடந்த  போரில் பெரும் சேதம் தைமூருக்கு 

முக்கியமாக    மூன்றாவது  போரில் ஹர்பீர் சிங் என்ற ஜாட் வீரன் பன்னிரண்டு அடி துள்ளிக்குதித்து தைமூரின் நெஞ்சில் ஈட்டியை பாய்ச்சினான் .ஹிஜிரா என்ற தளபதி தைமூரை கீழே விழாமல் தாங்க, மற்றவர்கள் ஹர்பீர் சிங்கின்மேல்  ஈட்டிகளை ஏறிய  ,  மஹாபலி ஜோக்ராஜ் ஹாதாகாதம் செய்தபடி நுழைய, ஹர் பீர் சிங்க் மீட்க்கப்பட்டார் ..

எனினும் ஹர்பீர் வீரமரணம் அடைய தைமூரின் படைகளும் திரும்ப ஆரம்பித்தது 

90000 பேருடன் வந்த தைமூருடன்  இப்போது சில ஆயிரம் பேர்தான் மிஞ்சினர் .....

படுகாயத்துடன்  தூக்கி செல்லப்பட்ட தைமூர்,  
அவன் அடுத்த தலைமுறை 
என்று அடுத்த 150 ஆண்டுக்கு மேற்கு பகுதியிலிருந்து யாருமே பாரதத்துக்குள்  நுழைய துணியவில்லை 

இந்த வெற்றிக்காக பஞ்சாயத்து  படைகள் இழந்த வீர்களின் எண்ணிக்கை 35 000 

இன்றும் அந்த பகுதிகளில் ராம்பியாரி, ஜோக்ராஜ் என்ற பெயர்கள் இங்கே ராஜேந்திரன், ராஜராஜன் போல  பிரபலம் .

இதை ஏன் நம்முடைய சரித்திர புத்தகங்களில் பார்க்க முடியவில்லை? 

ஒரு ஆழ்ந்த சரித்திர உண்மை என்னே தெரியுமா? 

தைமூர் , நாதிர் ஷா , அப்தாலி போன்ற காட்டுமிராண்டிகள் டெல்லி மாநகரை சூறையாடியபோது டெல்லியை ஆண்டது  இஸ்லாமிய அரசர்கள்தான்.

சரித்திரம் முழுவதும் கைலாகாதவர்களாக வெறும் லஞ்சம், வஞ்சம் வைத்தே ஆண்டுகொண்டிருந்தால் பின் எப்படி?

Saturday, July 17, 2021

ஆடி மாத சிறப்புகள்

1. ஆடி மாதம் பிறந்ததும் #தட்சணாயனம் ஆரம்பமாகிறது. ஆடி முதல் மார்கழி வரை தட்சணாயன காலமாகும்.

2. இந்த #புண்ணிய கால கட்டங்களில் புனித நதிகளில் நீராடுவது மிகவும் விஷேம்.

3. ஆடி மாதத்தைக் கணக்கிட்டுத்தான் பண்டிகைகளின் தொடக்கம் ஏற்படுகிறது.

4. ஆடி மாதம் முழுவதும் கிராமப்புறத்தில் காவல் தெய்வமாக விளங்கும் மாரியம்மன், அய்யனாரப்பன், மதுரை வீரன், மாடசாமி, கருப்பண்ணசாமி போன்ற கிராம தேவதைகளுக்கு பூஜைகளும், விழாக்களும் நடைபெறும்.

5. ஆடி மாதத்தில் #பாண்டியநாடு சங்கரன்கோவிலில் பன்னிரண்டு நாட்கள் அம்மனின் ஆடி தபசு திருநாள் மிகக் கோலாகலமாக கொண்டாடப் படுகிறது. ஹரியும் சிவனும் ஒன்றே என்ற தத்துவத்தை உலகிற்கு உணர்த்த இந்த விழா நடத்தப்படுகிறது.

6. ஆறு, மக்களின் ஜீவ நாடியாதலால், அதில் ஆடி மாதம் புதுநீர் வருவதைக் கொண்டாடுவது பல நூற்றாண்டுகளாக தமிழர் மரபாக உள்ளது.

7. ஆடி மாதத்தில் சிவனின் சக்தியை விட பார்வதியின் சக்தி அதிகமாக இருக்கும் என்பது ஐதீகம்.

8. தமிழ் மாதங்களில் ஆடி மாதத்தில் தான் அதிகபட்ச அளவுக்கு அம்மன் கோவில்களில் திருவிழா நடக்கிறது. எனவே ஆடி மாதத்துக்கு அம்மன் பக்தர்களிடம் தனி மரியாதை உண்டு.

9. கேரளாவில் ஆடி மாதத்தை  இராமாயண மாத மாக அம்மாநில மக்கள் கருதுகிறார்கள்.

10. ஆடி அமாவாசை அன்று மறைந்த  
முன்னோர்களுக்கு பிதுர் கடமைகளை செய்தால், ஆண்டு முழுவதும் பித்ருக்களுக்கு கடன் கொடுத்த பலன் கிடைக்கும்.

11. ஆடி பவுர்ணமி தினத்தன்று தான் ஹயக்ரீவர் அவதாரம் நிகழ்ந்தது. எனவே ஆடி பவுர்ணமி தினத்தன்று வைணவ தலங்களில் சிறப்பு வழிபாட நடைபெறும்.

12. தமிழகத்தில் பல பகுதிகளில் அம்மனுக்கு பல வித காய்கறிகளால் ஆன கதம்ப சாதத்தை படைப்பது ஐதீகமாக உள்ளது.

13. ஆடி மாதம் சுக்ல தசமியில் திக் தேவதா விரதம் இருக்க வேண்டும். அன்று திக்  
தேவதைகளை அந்தந்த திக்குகளில் வணங்கி பூஜித்தால் நினைத்தது நடக்கும்.

14. ஆடி மாதம் சுக்லபட்ச ஏகாதசி முதல் கார்த்திகை மாத சுக்லபட்ச ஏகாதசி வரை மாச உப வாசம் இருப்பது குடும்பத்தில் அமைதி ஏற்படுத்தும்.

15. ஆடி மாதம் கிராம தேவைதை கோவில்கள் உள்பட திறக்காத எல்லா கோவில்களும் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

16. ஆடி செவ்வாய்க்கிழமைகளில் கோவிலில் எலுமிச்சம் பழ விளக்கு ஏற்றினால் கூடுதல் பலன்கள் கிடைக்கும். ஆனால் எலுமிச்சம் பழ விளக்குகளை ஒரு போதும் வீட்டில் ஏற்றக் கூடாது.

17. ஆடி மாதம் வளர்பிறை துவாதசி நாளில் தொடங்கி கார்த்திகை மாதம் வளர்பிறை துவாதசி நாள் வரை பெண்கள் துளசி பூஜை செய்து வந்தால், நினைத்தது நடைபெறும். வீட்டில் சகல செல்வங்களும் குவியும்.

18. நாஞ்சில் நாடு தோவாளை என்ற ஊரில் முருகன் கோவில் உள்ளது. ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை அங்குள்ள முருகனுக்கு கூடை, கூடையாக மலர்களை கொட்டி மலர் அபிஷேகம் செய்வார்கள். இதை அந்த பகுதி மக்கள் ஆடியில் மலர் முழுக்கு, அழகு வேல்முருகனுக்கு என்று சொல்வார்கள்.

19. ஆடிப்பெருக்கு திருவிழா ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் விமரிசையாக நடைபெறும். அப்போது பெருமாள் மண்டபத்துக்கு எழுந்தருள்வார்.

20. ஆடி மாதம் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் காமாட்சியை வணங்கினால் திருமண தடைகள் விலகி சுபம் உண்டாகும்.

21. ஆடி மாதம் முழுவதும் மீனாட்சியை வழிபட்டால் குடும்பத்தில் அமைதி ஏற்படும்.

22. ஆடி மாதம் முத்து மாரியம்மனை மனம் உருக வழிபட்டால் திருஷ்டிகள் விலகி விடும்.

23. ஆடி மாதம் சுக்ல துவாதசியில் மகா விஷ்ணுவை நினைத்து விரதம் இருந்தால் செல்வம் பெருகும்.

24. ஆடி மாதம் சுக்ல பட்ச ஏகாதசி தினத்தன்று அன்னதானம் செய்தால் சகல பாக்கியங்களும் கிடைக்கும்.

25. ஆடி மாதம் சுக்லபட்ச திரயோதசியில் பார்வதி தேவியை நினைத்து விரதம் இருந்தால் நினைத்தது நடக்கும்.

26. கஜேந்திரன் என்ற யானையை முதலை கவ்வியபோது அந்த யானை ஆதிமூலமே என்ற கதற உடனே திருமால் சக்ராயுதத்தை ஏவி யானையை காப்பாற்றினார். இதனை நினைவுப்படுத்தும் வகையில் ஆடி மாதம் எல்லா திருமால் தலங்களிலும் கஜேந்திர மோட்ச வைபவம் நடத்தப்படுகிறது.

27. ஆடி மாதம் ஏகாதசி, துவாதசி நாட்களில் அரச மரத்தை சுற்றி வந்து வழிப்டால் வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.

28. தஞ்சாவூரில் நிசும் சூதனி உக்கிர காளியம்மன் கோவில் உள்ளது. ஆடி பதினெட்டாம் பெருக்கு தினத்தன்று தஞ்சை மாவட்ட கிறிஸ்தவர்கள் அங்கு ரொட்டி, ஆட்டுக்கறி படையலிட்டு வழிபடுவதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.

29. ஆடி மாத வெள்ளிக் கிழமைகளில் மகாலட்சுமியை வழிபட்டால் வீட்டில் செல்வம் சேரும்.

30. ஆடி மாதம் ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமை அம்மனை ஆவாகனம் செய்து வீட்டுக்கு வரவழைத்து வழிபடுவது சிறப்பை தரும்.

31. ஆடி மாதம் குத்துவிளக்கை லட்சுமியாக பாவித்து அலங்கரித்து வழிபடுதல் வேண்டும்.

32. ஆடி மாதம் அம்மனுக்கு பால் பாயாசம், சர்க்கரைப் பொங்கல் வைத்து வணங்குதல் வேண்டும்.

33. அம்மனை வழிபடும் போது மறக்காமல் லலிதாசகஸ்ர நாமம் சொல்ல வேண்டும்.

34. ஆடி மாதம் வீட்டில் சிறப்பு பூஜைகள் செய்யும் போது சிறு பெண் குழந்தைகளை அம்மனாக பாவித்து, உணவு கொடுத்து, ரவிக்கை, சீப்பு, குங்குமச்சிமிழ், கண்ணாடி, வளையல், தாம்பூலம் கொடுக்க வேண்டும்.

35. ஆடிப்பூரத்தன்று ஆண்டாள் பிறந்தாள் என்பது உங்களுக்குத் தெரிந்து இருக்கும். ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவிலில் ஆடிப்பூரத்தன்று ஆண்டாளை நந்தவனத்துக்கு எழுந்தருள செய்வார்கள். அப்போது திருப்பாவை, நாச்சியார் திருமொழி, திருப்பல்லாண்டு பாசுரங்கள் பாடப்படும். இதனால் ஆண்டாள் மனம் குளிர்ந்து இருப்பாள். அந்த சமயத்தில் ஆண்டாளை வழிபட்டால், உங்களது எல்லா பிரார்த்தனைகளும் நிறைவேறும்.

36. ஆடி மாதம் அம்மனுக்கு சாற்றப்படும் வளையல் களைப் பெண்கள் அணிந்து கொண்டால் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், சகல நலன்களையும், நீங்காத செல்வத்தை பெறலாம் என்பது ஐதீகம்.

37. ஆடி மாத வெள்ளிக் கிழமைகளில் அதிகாலையில் எழுந்து குளித்து, தூய ஆடை அணிந்து, சாணத்தைப் பிள்ளையாராகப் பிடித்து, செவ்வரளி, செம்பருத்தி, அறுகு கொண்டு சூர்யோதயத்திற்கு முன்னர் விநாயகரை பூஜிக்க வேண்டும். வாழையிலை மீது நெல்லைப்பரப்பி அதன் மீது கொழுக்கட்டை வைத்து விநாயகரை வழிபட செல்வம் கொழிக்கும்.

38. ஆடி மாதத்தை “பீடை மாதம்” என்று ஒதுக்குவது, அறியாமையால் வந்த பழக்கம். உண்மையில், “பீட மாதம்” என்றுதான் பெயர். அதாவது மனமாகிய பீடத்தில் இறைவனை வைத்து வழிபடவேண்டிய மாதம் என்பதே சரியானது.

39. ஆடி பவுர்ணமியன்று சிவபெருமானுக்கு திரட்டுப்பால் அபிஷேகம் செய்து, கருப்புப் பட்டாடை, நூறு முத்துக்கள் கோர்த்த மணிமாலை, கருஊமத்தம் பூமாலை அணிவித்து, மூங்கில் அரிசிப் பாயாசம் படைத்து வழிபட்டால் எப்பேர்ப்பட்ட பகையும் விலகும்.

40. பொதுவாகவே வெள்ளிக் கிழமைகள் அம்பாளுக்குரிய சிறந்த நாட்களாகும். இதனோடு அயனத்துக்குரிய சிறப்பும் சேருவதால் ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக் கிழமைகள் அம்பாளுக்குத் தனிச்சிறப்பு கொண்டவையாகக் கருதப்படுகின்றன.

Monday, June 21, 2021

தேசியக் கொடியில் உள்ள 24 ஆரங்கள்


அசோகர் பரப்பிய 24 தர்மங்களை குறிக்கிறது என குறிப்பிட்டிருந்தது.

 24  தர்மங்கள்:
     
1.அஹிம்சை: (உயிர்களுக்கு இன்னா செய்யாமை)

2.அப்பந்தா: (சிக்கனம், சேமிப்பு)

3.அபிச்சதி: பயபக்தி (பெரியோர் & ஆசிரியர்)

4.அபசினவம்: (மானமுடைமை)

5.உத்சஹா: (உற்சாகமாக செயலாற்றுதல்)

6.கிருதக்ஞாதா: (செய்நன்றி அறிதல்)

7.சத்யம்: (நேர்மையாக இருத்தல், உண்மையை போற்றுதல்.)

8.சமயப்பொறை: (மாற்று மதக்கருத்துக்களையும் மதித்தல்)

9.சாதுதா: (நல்லவர்களாக இருத்தல்)

10.சாம்யமா: (புலனடக்கம்)

11.சாத்வம்: (நன்மை தரும் செயல்களைச் செய்தல்)

12.சிரமசேவிதம்: (கடின உழைப்பு)

13.சுஷ்ருதா சரீர சஹாயம்: (உடல் நோய் தீர்த்தல்)

14.சௌசம்: (உடல் தூய்மை)

15.தயை: (இரக்ககுணம்)

16.தானம்: (வறியோர்க்கு வழங்கல்)

17.தம்மதானம்: (தர்மத்தைப் பரப்புதல்)

18.தம்ம விஜயம்: (அறத்தின் வழிபெறும் வெற்றி)

19.தர்மதாமதா: (அறம் செய்வதில் ஆர்வம்)

20.த்ருதபக்திதா: (மாறாத அன்புள்ளம்)

21.பயம்: (பாவம் செயவதில் அச்சம்)

22.பரிக்‌ஷா: தன்னம்பிக்கை)

23.பாவசுத்தி: எண்ணத்தூய்மை)

24.மார்த்தவம்: (அருளுடைமை)

Sunday, June 13, 2021

போதனா

ஆந்திர மாநிலம், வாரங்கல்லுக்கு அருகில் சிறு கிராமத்தில் பிறந்தவர் போதனா. சிறு வயதிலேயே கவிதை எழுதினார். வீரபத்ர விஜயம் எழுதும்போது அவருக்கு வயது பத்து. ராஜகொண்டா சமஸ்தான அரசர் சிங்கபூபாலர் அவரை ஆஸ்தான கவிஞராக நியமித்துப் பல பரிசுகள் அளித்தார். ஆனால், ராமனைத் தரிசிக்கும் ஆசையில் வெகு சீக்கிரம் பதவியிலிருந்து விலகிக் கொண்டார். கோதாவரி தீரத்தில் யோகத்தில் ஆழ்ந்து பரந்தாமனைத் தரிசித்தார். கவி சார்வபௌம ஸ்ரீநாதர் தன் சகோதரியை போதனாவுக்கு மணமுடித்தார். அவர்களுக்கு ஓர் ஆண் குழந்தையும் பிறந்தது. நிலத்தில் உழும்போதே இசை பாகவதம் எழுதத் தொடங்கினார். பயிரோடு பாகவதமும் வளர்ந்தது. ஒரு நாள் அமைத்த வார்த்தைகள் அவருக்குத் திருப்தியைத் தரவில்லை. மன வருத்தத்தோடு வரப்பில் படுத்து உறங்கி விட்டார். எழுந்து பார்த்தால் அழகாகப் பாடல் எழுந்து பார்த்தால் அழகாகப் பாடல் முடிக்கப்பட்டிருந்தது. பகவான் வந்து பாடலை எழுதியபோது பார்க்க முடியவில்லையே என்று வருந்தினார். இந்த விஷயம் மன்னர் செவிக்கு எட்ட, பாகவதத்தை அரசவையில் பாட வரும்படி அழைப்பு விடுத்தார் மன்னர் போதனா, கோவிலியே பாகவதம் அரங்கேறும் என்று தீர்மானமாகச் சொல்லி விட்டார்.

போதனாவின் தமையனார், ஆதிமூலமே... என்று கஜேந்திரன் அழைத்தவுடன் இரு தேவியருடன் கருட வாகனத்தில் வந்ததாக பாகவதம் சொல்கிறது. நீ உத்தரீயம் நழுவ, கதாயுதமும், சக்கரமும் கொண்டு கிரீடமும் தரிக்காமல் விரைந்து வந்ததாகப் பாடல் புனைந்திருக்கிறாய். புராணத்தை நம் இஷ்டத்துக்கு மாற்றக் கூடாது. திருத்தி எழுதிக் கொண்டு வந்தாலே கோயிலில் அரங்கேற்றலாம் என்று தீர்மானமாகச் சொல்லி விட்டார். போதனா எதுவும் பேசவில்லை. அன்று சனிக்கிழமை தமையனார் ஒரு சிறு துண்டோடு கிணற்றடியில் எண்ணெய் தேய்த்துக் கொண்டிருந்தார். பெரிய கிணறு. தமையனாரின் ஐந்து வயதுப் பையன் வேத கிரி, அதனருகில் சுற்றிச் சுற்றி வந்து விளையாடிக் கொண்டிருந்தான். கண்களில் எண்ணெய் கட்டிக் கொள்ளும் அந்தக் கால வழக்கப்படி கண்ணை மூடிக் கொண்டிருந்தார் தமையன். போதனா, வேதகிரிக்குத் தின்பண்டங்களும், விளையாட்டுச் சாமான்களும் கொடுத்துத் தூக்கிக் கொண்டு போய் மறைவாக விட்டார்.

கிணற்றில் ஒரு கல்லைப் போட்டார். கிணற்றிலே என்னை விழுந்தது? என்று தமையனார் குரல்கொடுக்க, உள்ளேயிருந்து பெண்கள் ஓடி வந்தனர். வேதகிரி விழுந்து விட்டானண்ணா என்று கவலையோடு போதனா கூற, அவரது தமையனார் பதற்றத்துடன் முகத்தைத் துடைத்துக் கொண்டு கிணற்றில் இறங்க முயன்றார். என்னண்ணா! தண்ணீரெல்லாம் எண்ணெய்யாகும். கைபிடி வழுக்கும், சீக்கிரம் குளித்து உத்தரீயம் தலைப்பாகை, நெற்றியில் திலகம் அணிந்து வாருங்கள் என்று தடுத்தார் போதனா. முட்டாள்! குழந்தை உயிருக்குப் போராடுகையில் அலங்காரமா? என்று சீறினார் தமையன். உங்களுக்கொரு தர்மம்! பகவானுக்கொரு தர்மமா! காலில் உதிரம் சொட்ட நீருக்குள் இழுபடும் கஜேந்திரனைக் காப்பாற்ற பகவான் தேவியரைத் தேடிக் கொண்டு அலங்கரித்துக் கொண்டா வருவார்...? பத்திரமாய் இருக்கிறான். கவலைப்பட வேண்டாம் என்று போதனா, வேதகிரீ என்று குரல் கொடுக்க ஓடி வந்தான் வேதகிரி. போதனா, பாகவதத்தை சங்கீதமாய் கோயிலில் அரங்கேற்ற அரசரும் வந்து, பாராட்டி பரிசுகளை வழங்கினார். இதேபோல் பிரகலாத  சரித்திரம், ருக்மணி கல்யாணம் ஆகியவற்றையும் இயற்றியிருக்கிறார் பக்த போதனா.

Sunday, June 6, 2021

Kamala Devi Hazarika

A Christian missionary was sent to Assam for the promotion of religion. His name was Cruz. He came across to one the boys from an influential family in Assam to teach him English. The pastor slowly began to study the house and he learned that the boy's grandmother was the most influential person in te house. ...
'Corrupting the grandmother's mind can make the whole family Christian as well as the whole village', he thought.
The pastor began to tell Grandma. How Jesus cured leprosy of lepers, how He gave sight to the blind, etc ... 
But the strong Sanatani grandmother said ...
A stone turned into a living woman(Ahalya) for our Rama when he touched the stone. She spoke of Rama setu and how influenced by the name of Rama, stones was floating in seawater on the route to Lanka, and that they are still floating today. The priest continued his efforts but all his tricks went in vain. 
One day he brought a cake from the church He believed that the old lady would not eat the cake. But contrary to his expectation, she took the cake and ate it
Feeling triumphant, the pastror told her .. 'Grandmother, you are eating the prasad of the church ... you are now a christian and your name is audrey. I hereby convert you to Christianity', he said. The grandmother pulled the priest by the ear and told him- ' How big a donkey you are and so are those of your religion who think like  you . If i am a christian for just eating a piece of cake. I feed you from my house every day so why don't you become a Hindu? You consume the food, air and water every day of this land then you have become a Hindu long back by this logic.' ...
This great lady played an instrumental role in saving the Nation from being misled and also prevented many Assamese from being led astray . Her name "Kamala Devi Hazarika", the famous revolutionary of Assam...
(Translated from Kannada)
Credit-Surya Sarathi Roy

Friday, June 4, 2021

How To Make Ashta Choornam?

Ingredients:
1 Part  Pippali - Piper longum    

1 Part Maricha  -  Piper nigrum    

1 Part Shunti  -  Zingiber officinalis    

1 Part Sweta jeeraka  -  Cuminum cyminum  

1 Part Krishna jeeraka  -  Carom bulbocastanum  

1 Part Shuddha Hingu (Processed with Ghee) - Ferula asafoetida  

1 Part Ajamoda  -  Carum roxburghianum 

1 Part Saindhava  - Rock salt

Method:
Purify the hingu with cow ghee.

Dry all the herbal ingredients separately till there is no moisture remaining.

Put them together in a blender and make a powder of it.

Now again keep the powder under direct sunlight to remove the presence of moisture.

Pass the entire powder through sieve no. 100 to remove any impurities or hard particles.

Store it in air-tight containers for future use.

Therapeutic Benefits Of Ingredients:
Pippali:    
Pippali or Indian long pepper is extensively used for the treatment of heartburn, indigestion, diarrhoea, cholera, asthma, etc. It also improves digestion and skin health.

Maricha:
It improves the function of the digestive tract, helps in digestion and alleviates symptoms of indigestion, flatulence, constipation, dysentery, skin disorders, disorders of the liver, oliguria, common cold, cough, dental and vision problems.

Sunthi:
Sunthi or dried ginger is a potent ayurvedic remedy for promoting digestion, relieving constipation, abdominal gas and distension. It is also widely used for treating asthma, cough and cold symptoms.

Shweta Jeeraka:
Being a rich source of iron, cumin is extremely beneficial for not only anemia but also promotes digestion, regulates diabetes and facilitates weight loss.

Krishna Jeeraka:
Black cumin is good for reducing pain and inflammation in the case of arthritis. It also reduces high blood pressure, treats IBS and good for dental hygiene.

Hingu:
The potent carminative, anti-viral, anti-bacterial, anti-inflammatory properties of hing are extremely useful in treating stomach pain, bloating, asthma, high blood pressure, sting bites, menstrual problems and headache.

Ajamoda:   
Ajamoda, also known as celery has potent antispasmodic, diuretic, anthelmintic, laxative and stimulant properties. It is used for treating pain and inflammation, indigestion, urinary disorder, insomnia, rheumatism, kidney problem, bronchitis, asthma, and other breathing disorders.

Lavana:
The addition of saindhava lavana in the formulation balances the electrolytes, keeps the body hydrated by meeting the ion needs, prevents muscle cramps, improves digestion, bloating and treats the common cold symptoms.

Ayurvedic Benefits Of Ashta choornam:
Relieves Constipation:
Ayurveda strongly suggests the use of this concoction in the treatment of constipation. It increases secretion of bile by the liver, which in turn, acts on the peristalsis movement of the intestines and liver, thereby allowing smooth faecal passage from the large intestine. It also plays a quintessential role in minimalizing mucous and excess fat content in the stools and preventing them from sticking to the intestinal walls and thereby allowing easy movement through peristalsis.

Promotes Digestion:
Touted as a powerful digestive stimulant, this traditional herbal formulation helps in breaking down food particles in the stomach and intestine, promotes the secretion of the digestive juices and thereby increases the absorption of essential nutrients through the intestines. It helps to eliminate abdominal gas and in turn reduces abdominal distension, bloating and gaseous cramps. It also holds high significance in treating a wide range of gastrointestinal disorders like esophagitis, heartburn, diarrhoea, flatulence, peptic ulcer and gastroesophageal reflux disease.

Treats IBS
IBS also known as Grahani in Sanskrit is mostly caused due to excessive intake of food particles which are difficult to digest, unhealthy dietary choices, intake of foods that cause allergy, intake of foods low on nutrients, overeating, eating at irregular intervals, and other physical and mental factors like emotional problems, stress, etc. IBS can cause both diarrhoea and constipation. The use of trikatu (i.e. pippali, maricha and shunthi)  and other powerful herbs in ashta choornam make it an effective choice for treating this painful disease. Also Read: Irritable Bowel Syndrome: 5 Incredible Ayurvedic Herbs To Relieve IBS

Enhances Appetite
Ashta choornam is extremely crucial for patients suffering from a loss of appetite and eating disorders like anorexia nervosa, bulimia, pre-existing chronic debilitating disorders, and during convalescence from an acute or chronic infective disorder. Regular intake of this magical remedy acts as a natural appetizer and aids in the digestion of food, improves appetite and helps the person to eat.

Remedies Arthritis
The classical medicine has potent analgesic and anti-inflammatory properties, which is extremely beneficial in reducing joint and muscle pain, thereby reducing the chances of chronic autoimmune inflammatory diseases like rheumatoid arthritis which occurs due to the vitiation of Vata Doshas. It is also beneficial for bursitis, muscle and joint pain, shoulder dislocation pain and general debility due to fever.

Effect On Doshas:
Ashta choornam is sanctified with Katu (i.e. pungent taste) and Lavana Rasa (i.e. salty taste) and Laghu (i.e. light), Ushna (i.e. hot) and Rukshna Guna (i.e. rough quality). It inherently portrays Ushna Virya (i.e. hot potency) and Katu Vipaka (i.e. pungent metabolic taste). Being rough and light, it appeases the Vata doshas (i.e. air) and Kapha (earth and water) doshas, whereas having a pungent metabolic taste, it aggravates and detoxifies the Pitta (fire and air) doshas. Also Read: Introduction To Ayurveda: Learn About Vata, Pitta And Kapha Doshas

Therapeutic Dosage
The effective therapeutic dosage of Ashta choornam may vary from person to person depending upon the age, severity, and condition of the patient. Consultation from an ayurvedic doctor is a must, as he or she will thoroughly examine the indications and prescribe the correct dosage for a specific time period.

Adults: 1 to 3 grams twice a day, preferably with lukewarm water or cow’s ghee or as specified by the ayurvedic doctor for the specific gastrointestinal disorder.

Side Effects
Although it is an absolute remedy for digestive anomalies, care should be taken to consume it with doctor’s consultation. Overdosage of the medicine or intake without dilution with water can lead to a burning sensation in the throat, gastric irritation, acid reflux, vertigo, sour belching, and restlessness.

Conclusion
Ashta Choornam is a traditional ayurvedic remedy that holds high significance in treating umpteen health problems including indigestion, gastritis, Irritable bowel syndrome, constipation, and loss of appetite. Imbued with potent herbal ingredients, seek benefit from this powerful digestive choornam with proper doctor recommendation

Wednesday, May 26, 2021

ஊத்துக்காடு வேங்கடகவி

கண்ணபிரானை நேரில் தரிசித்து கவிபாடிய அருளாளர்களில் வடநாட்டு ஜெயதேவருக்கு இணையானவர் ஊத்துக்காடு வேங்கடகவி. இவருடைய பிறப்பைப் பற்றிய வரலாறு கிடைக்கவில்லை. ராமச்சந்திர வாதூலர் பரம்பரையில் வந்தவர் இவர். தந்தையிடமே ஆரம்ப இசை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டார். எனினும், ஊத்துக்காடு வேங்கடகவிக்கு பகவான் ஸ்ரீகிருஷ்ணனே குருவாக இருந்து அருள்பாலித்ததாகக் கூறுவர். தஞ்சை அரசர்களின் மானியமாக ஒன்பது கிராமங்கள் ராமச்சந்திர வாதுலருக்கு அளிக்கப்பட்டது. இவரது தந்தையார் ஏழைகளிடம் இரக்கம் கொண்டவர். தானதர்மம் செய்தில் ஆர்வம் உள்ளவர் என்பதை ""ஏழைக்கு இரங்கும் ராமச்சந்திர அய்யன் எப்போ வருவாரோ அரசரடிக்கு என்று நாட்டுப்புறப்பாடல்கள் குறிப்பிடுவதைக் காணலாம். ஒன்பது கிராமத்து மக்களுக்கும் திருமண சடங்குக்காக ஒரு தாலியும், பொன்னும் அளிப்பதை இவரது முன்னோர்கள் கடமையாகக் கொண்டிருந்தனர். ராமச்சந்திர வாதுலருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தவர் வேங்கட சுப்பிரமணியன்.
வேங்கடகவியின் குடும்பம் சிறிது சிறிதாக பொருளாதார வளத்தை இழந்தது. ஒன்பது கிராமங்களும் அவரது குடும்பத்தை விட்டுச் சென்றன. இதன்பின், வேங்கடகவி தவயோகியாக வாழ்ந்த கிருஷ்ணயோகி என்பவரைத் தேடி நீடாமங்கலம் காட்டிற்குச் சென்றார். அவரே, தன்னுடைய தாய்மாமன் என்ற உண்மையை உணர்ந்தார். ஆனால், கிருஷ்ணயோகியோ வேங்கடகவியை சிஷ்யனாக ஏற்க மறுத்தார். இதன்பின், தன் தாயின் ஆசியுடன் ஊத்துக்காடு காளிங்க நர்த்தன கிருஷ்ணனை தன்னுடைய மானசீக குருவாக ஏற்று தியானத்தில் ஆழ்ந்தார். அப்போது வானில் அசரீரி ஒலித்தது. ""இன்று முதல் உமக்கு யாமே குருவானோம். கோயிலின் ஈசான மூலையில் உள்ள துளசி மாடத்தருகே உமக்கு இசை ஞானத்தைப் போதிப்போம் என்பதைக் கேட்டு அதிசயித்தார். இந்நிகழ்வை, ""கூடப் படித்தவன் குசேலன்- ஆடற்கொடுத்து வைத்தவன் காளீயன்- பகவத் கீதை கேட்டான் விஜயன்- சங்கீர்த்தனம் கேட்டவன் அடியேன் என்ற பாடல் மூலம் நமக்கு உணர்த்துகிறார்.
வேங்கடகவிக்கு நீலமேக சியாமளனாக கண்ணன் பலமுறை நேரில் வந்த காட்சி அளித்தார். கண்ணனின் அருளால் மனித இயல்புகளான ஆசை,கோபம், காமம் ஆகிய துர்குணங்கள் மறைந்தன. வயிற்றுப்பசிக்கு மட்டும் சிறிதளவு உணவை, அன்னதானம் இடும் ஊட்டுப்பறைகளில் பெற்று வாழ்ந்தார். ஒருசமயம் தஞ்சை மன்னன் வயிற்றுவலியால் அவதிப்பட்டான். செய்வினைக்கோளாறால் ஏற்பட்ட நோய் என்று சொல்லி மந்திரவாதி ஒருவன் மன்னனை ஏமாற்றி வந்தான். இவ்விஷயத்தை அறிந்த வேங்கடகவி, அரண்மனைக்கு சென்றார். வழியில் பல்லக்கில் மந்திரவாதி வந்து கொண்டிருந்தான். பல்லக்கை தூக்குபவர்களுடன் வேங்கடகவியும் சேர்ந்து அரண்மனைக்குள் நுழைந்தார். கண்ணனைப் பாடி மன்னனின் வயிற்றுவலியை முற்றிலும் போக்கினார். மற்றொரு சமயம் நாதஸ்வர வித்வான் பெரிய ருத்ராதிபிள்ளைக்கு, வேங்கடகவியின் தெய்வீக இசையைக் கேட்கும் வாய்ப்பு ஏற்பட்டது. இசையின் கடினவழிமுறைகளில் ஒன்றான ஸ்ரீருத்ர சப்தமான கனம் வழியில் அவர் பாடிக் கொண்டிருந்தார்.
ருத்ராதிபிள்ளை அவரின் ராகத்தை மறைந்திருந்து கேட்டு, அதை நாதஸ்வரத்தில் வாசித்துக் காண்பித்தார். வேங்கடகவி அவரைப் பாராட்டி ஆசி அளித்தார். மன்னார்குடி ஸ்ரீராஜகோபால சுவாமி திருவிழாவில் வெண்ணெய்த்தாழி சேவைவிழா நடந்து கொண்டிருந்தது. அவ்விழாவை தரிசிக்க தனவந்தர் ஒருவர, ஒரு சிறுவனை அழைத்து வந்திருந்தார். கூட்டத்தில் சிறுவன் காணாமல் போனான். தனவந்தர் தவித்துக் கொண்டிருந்தார். பஜனைக்கோஷ்டியினருடன் பாடிக் கொண்டு வந்த வேங்கடகவி தனவந்தரிடம் இரக்கம் கொண்டார். கண்ணபிரானைத் தியானித்து, ""கண்ணா! எழுந்திரும் பிள்ளாய்! என்று பாடினார். வேங்கடகவி பாடத் தொடங்கியதும், எங்கோ உறங்கிக் கொண்டிருந்த சிறுவன் எழுந்து ஓடி வந்தான். அச்சிறுவனைக் கண்ட தனவந்தர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. 
திருக்கண்ணபுரத்தில், அபிராமி என்ற நங்கை பரதநாட்டியக்கலையில் தேர்ச்சி பெற்றிருந்தாள். காசி சென்று, அங்குள்ள அரண்மனை நாட்டியக்காரி சித்ராவளியுடன் போட்டியில் பங்கேற்று தோற்றாள். ஒருமுறை, திருக்கண்ணபுரம் கோயிலுக்கு வந்த வேங்கடகவியைக் கண்டு தன் வருத்தத்தை தெரிவித்தாள். அவர் அவளுக்கு நடனத்தில் "லய நுணுக்கங்களை கற்றுக் கொடுத்து மீண்டும் காசிக்கு அனுப்பி வைத்தார். அவள் சித்ராவளியைத் தோற்கடித்து வெற்றிவாகை சூடினாள். வேங்கடகவியின் தொடையில் கண்ணன் இருந்ததால், ஆயுள்முழுவதும் தாளம் போட்டு பாடியதில்லை. திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்ந்து வந்தார். இவர் பாடிய பாடல்களில், "தாயே யசோதா, "காயாம்பூ வண்ணனே, "ராஜ விலாஸம், "புல்லாய் பிறக்க வேணும், "அலை பாயுதே போன்றவை இன்றும் இசைமேடைகளில் ரசிகர்களால் விரும்பிக் கேட்கப்படுபவையாகும். இவருடைய இறுதிக்காலம் பற்றி அறிந்து கொள்ள முடியவில்லை.

Monday, May 24, 2021

சிந்தனை செய் மனமே

சிரியாவிலுள்ள ஒரு பள்ளியில் நடந்த உண்மைச் சம்பவம்.

அற்புதமான ஒரு நிகழ்வு இது.

ஓர் ஆசிரியை பாடவேளையின் இறுதியில் மாணவிகளை ஊக்குவிக்க சிறிய தேர்வை நடத்தினார்.
அதில் வெற்றி பெறும் மாணவிக்கு புதியதொரு ஜோடி காலணி வழங்கப்படும் என்றும் கூறினார்.
அனைத்து மாணவிகளும் மிகுந்த மகிழ்ச்சியுடன் தேர்வு எழுதினர்.
இறுதியில் அவர்களது விடைகளைப் பரிசீலித்துப் பார்த்த பொழுது அவர்கள் அனைவரும் சரியான விடைகளை எழுதி இருந்தனர்.
ஆசிரியை யாருக்குப் பரிசினை வழங்குவது என்று சிந்தித்து விட்டு ஒரு பெட்டியில் அனைவரும் அவரவர் பெயர்களை ஒரு தாளில் எழுதி சுருட்டிப் போடுமாறு சொன்னார்.
அனைவரும் எழுதிப் போடவே ஆசிரியை அப்பெட்டியைக் குலுக்கி அதில் ஒரு தாளை எடுத்தார்.
அதில் "வபாஃ" என்ற மாணவியின் பெயர் காணப்படவே அம்மாணவிக்குப் பரிசு வழங்கப்பட்டது.
அம்மாணவி தான் அவ்வகுப்பில் மிகவும் ஏழ்மையான மாணவி. பல காலமாகவே தேய்ந்து போயிருந்த காலணிகளை அணிந்து வந்த அம்மாணவிக்கோ எல்லையில்லா மகிழ்ச்சி.
பின்னர் அவ்வாசிரியை மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு வந்து நடந்த நிகழ்வைப் பற்றி கணவரிடம் கண்ணீருடன் கூறினார். கணவனும் மகிழ்ச்சி அடைந்தார்.
எனினும் அவ்வாசிரியை வழக்கத்துக்கு மாறாக தொடர்ந்து கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார்.
கணவர் மீண்டும் காரணம் கேட்க " நான் வீட்டுக்கு வந்து பெயர்கள் இடப்பட்ட அப்பெட்டியில் இருந்த தாள்களைப் பிரித்துப் பார்த்தேன். அதில் அனைத்து மாணவிகளும் தங்களது பெயர்களை எழுதாமல் வகுப்பில் ஏழை மாணவியாக இருந்த "வபாஃ" வின் பெயரையே எழுதியிருந்தனர்". என்று
கண்ணீருடன் பதிலளித்தார்.
"தன்னை விட அதிகம் தேவையில் உள்ள பிறர் மீது அக்கறை கொண்டு அவர்களை முன்னிலைப் படுத்தும் பிள்ளைகளாக நமது பிள்ளைகளை வளர்ப்பது நமது கடமையாகும்""

நம்பிக்கையுட்டும் உற்சாகம்

ஒரு ராஜாவுக்கு பல யானைகள் இருந்தன, ஆனால் ஒரு யானை மிகவும் சக்திவாய்ந்த, கீழ்ப்படிதலான, விவேகமான மற்றும் சண்டை திறன்களில் திறமையானது.  பல போர்களில்,போர்க்களத்தில் அனுப்பப்பட்டு ராஜாவுக்கு வெற்றியைப் பெற்று திரும்பி வரும்.எனவே, ராஜாவின் மிகவும் விரும்பப்பட்ட யானையாகியது .  நாட்கள் ஓடியது.யானைக்கு வயதாகியது. இப்போது யானைக்கு முன்பு போல களத்தில் போர் செய்ய முடியவில்லை.  எனவே, இப்போது மன்னர் அதை போர்க்களத்திற்கு அனுப்பவில்லை, ஆனாலும் அவரது அணியின் ஒரு பகுதியாகவே யானை இருக்கிறது.

     ஒரு நாள் யானை தண்ணீர் குடிக்க ஏரிக்குச் சென்றது.ஆனால் அதன் கால்கள் சேற்றில் சிக்கி பின்னர் மூழ்கியது .  அதிக முறை முயன்றும் சேற்றில் இருந்து அதன் காலை அகற்ற முடியவில்லை.  யானை சிக்கலில் இருப்பதாக அதன் அலறல் சத்தத்திலிருந்து மக்கள் அறிந்து கொண்டனர்.  யானை சேற்றில் சிக்கிய செய்தி ராஜாவையும் சென்றடைந்தது.  ராஜா உட்பட மக்கள் அனைவரும் யானையைச் சுற்றி கூடி அதை சேற்றிலிருந்து வெளியேற்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.  ஆனால் நீண்ட நேரம் முயற்சி பலனளிக்கவில்லை.

  கவுதம புத்தர் அப்போது சாலையில் சென்று கொண்டிருந்தார்.  கவுதம  புத்தர் முதலில் சம்பவ இடத்தைப் பரிசோதித்தார், பின்னர் ஏரியைச் சுற்றி போர் முரசு இசைக்க வேண்டும் என்று ராஜாவுக்கு பரிந்துரைத்தார். 

     
        சேற்றில் சிக்கிய யானை, முரசு வாசிப்பதன் மூலம் எப்படி சேற்றில் இருந்து வெளியே வரும் என்று, வினோதமாக அனைவரும் பார்த்தார்கள். போர் முரசு ஒலிக்கத் தொடங்கியவுடன், அந்த யானையின் உடல் மொழியில் மாற்றம் ஏற்பட்டது.

                
            முதலில் யானை மெதுவாக எழுந்து நின்று,பின்னர் சேற்றில் இருந்து தானாகவே வெளியே வந்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

கவுதம புத்தர் செயலிலிருந்து நாம் அறிந்து  கொள்ள வேண்டியது :

 யானையின் உடல் பலம் குறைந்து விட இல்லை, அதற்கு உற்சாகத்தை கொடுக்க வேண்டிய அவசியம் மட்டுமே இருந்தது.

மேலும் மனிதர்கள் வாழ்க்கையில் உற்சாகத்தைத் தக்க வைத்துக் கொள்ள, சிறந்த குறிக்கோள், அதற்குரிய சிந்தனை மற்றும் மனநிலையையும் பராமரிக்க வேண்டியது அவசியம்.மேலும் எந்த சூழலிலும் விரக்தி அடைய கூடாது  

  இந்த சவாலான காலத்தில் நாம் அனைவரும், நம்மையும் மற்றும் நம்மைச் சுற்றியுள்ள மக்களையும் நம்பிக்கையுடனும், உற்சாகப்படுத்தும் படியும் பேச வேண்டும். உற்சாகப்படுத்த வேண்டும்(போர் முரசு கொட்டுவது போல் )

             வரும் காலங்களில் நண்பர்கள் அனைவரும்  நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் சந்தோசத்தை பெற்று வாழ்க்கையை கொண்டாடுவோம்  !!

அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்

“ஒரு முறை டெல்லி ரயில்வே ஸ்டேஷனில் டாக்ஸி ஏறினார்கள் இரண்டு இளைஞர்கள். டாக்ஸி டிரைவர் ஒரு வயதான சர்தார்ஜி. அவரைப் பார்த்ததும் இளைஞர்களுக்கு கிண்டல் புத்தி வந்துவிட்டது. அவர்கள் கேட்ட, படித்த சர்தார்ஜிகளைக் கேலி செய்யும் ஜோக்குகள் நினைவுக்கு வந்தன. டிரைவரை வெறுப்பேற்ற வேண்டும் என்றபதற்காக நிறைய சர்தார்ஜி ஜோக்குகளை சொல்லிக் கொண்டே வந்தார்கள். ஆனால் அந்த சர்தார்ஜி டிரைவர் ஒரு வார்த்தைகூடபேசவில்லை. பல மணி நேரம் சுற்றிவிட்டு அவர்கள் இறங்கும் இடம் வந்தது. அதற்குள் ஏகப்பட்ட கிண்டல் அடித்தவிட்டனர். 

இளைஞர்கள். மீட்டரைப் பார்த்து காசு கொடுத்ததும் அந்த சர்தார்ஜி டிரைவர், அந்த இளைஞர்களிடம் இரண்டு ஐந்து ரூபாய் நாணயங்களைக் கொடுத்து, “தம்பி, எங்க சர்தார்ஜிகளை நிறைய கிண்டலடிச்சிங்க பரவாயில்லை. எனக்காக ஒரே ஒரு காரியம் பண்ணுங்க. இந்த அஞ்சு ரூபாய் காசை நீங்க பாக்கிற முதல் சர்தார்ஜி பிச்சைக்காரனுக்கு போடுங்க. உங்களுக்கு புண்ணியமா போகும்’ என்று சொல்லி போய்விட்டார்.

இளைஞர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அந்த ஐந்து ரூபாய் நாணயங்களை வைத்துக் கொண்டு அவர்கள் போன இடமெல்லாம் பார்த்தார்கள். ஒரு இடத்தில் கூட பிச்சைக்கார சர்தார்ஜியை பார்க்க முடியவில்லை. 

அவர்கள் டெல்லியைவிட்டு கிளம்பும் நாள் வந்தது. ரயில் நிலைய வாசலில் அந்த சர்தார்ஜி டிரைவரை சந்தித்தனர். அப்போது அவர் கேட்டார், “என்ன தம்பி, அஞ்சு ரூபாயை சர்தார்ஜிக்கு பிச்சை போட்டிங்களா’ என்று. இளைஞர்கள் “இல்லை’யென்று தலையசைத்தார்கள்.“அதான் தம்பி சர்தார்ஜி. உலகம் முழுக்க எங்களை வச்சு ஜோக்கடிக்கிறாங்க. கேலி பண்றாங்க. 

ஆனா நாங்க அதெல்லாம் பொருட்படுத்துறதில்ல. எங்களுக்குத் தெரிஞ்சதுலாம் உழைப்புதான். ரோட்டுக் கடை வைப்போம், லாரி ஓட்டுவோம், மூட்டை தூக்குவோம் ஆனா பிச்சை மட்டும் எடுக்க மாட்டோம். டெல்லில நீங்க ஒரு பிச்சைக்கார சர்தார்ஜியைக் கூட பார்க்க முடியாது.’ என்று அந்த சர்தார்ஜி டிரைவர் சொன்னபோது இளைஞர்கள் கண்களில் பிரமிப்பு.’இந்தச் சம்பவத்தை குரு சொன்னதும் தான் செய்ய வேண்டியது என்ன என்பது வந்தவனுக்குப் புரிந்தது.அப்போது குரு அவனுக்குச் சொன்ன 

அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி.

Wednesday, April 21, 2021

விநாயகரும் விட்டலரும்

துக்காராம் மராத்தியைத் தவிர  வேறு மொழி தெரியாதவர்.  படிக்காதவர். பரிபூர்ண  பக்தியோடு  விட் டல ஸ்மரணம் செய்பவர். அபங்கங்கள்  இயற்றி  பாடுவார்.  

விட்டலன்   அவரிடம்   அலாதி அன்பு கொண்டவன்.  அவரோடு பேசுவான் சாப்பிடுவான்.  உற்ற  நண்பர்கள் இவ்வாறு தானே இருப்பார்கள். தேஹு  என்ற அந்த கிராமத்து  பிராமணர்கள் துக்காராமை  ஒரு விஷ  ஜந்துவாகவே பார்த்தார்கள்.

எரியும் தீயில் எண்ணையாக  துக்காராமோடு  சேர்ந்து  பாண்டுரங்கன்  சாப்பிடுகிறான் என்ற  செய்தி  அவர்களை வாட்டியது.  ஆனால்  அண்டை  கிராமங்களில் துக்காராம்   புகழ் பரவியது. இதனால் எங்கும் அவரை வரவேற்றனர். 

எங்கு  சென்றாலும்  யார் என்ன   உணவளித்தாலும் துக்காராம்   தனக்கு  அருகே  ஒரு மற்றொரு இலை  போடுங்கள்   என்பார் 
"யாருக்கு?"
"என் பாண்டுரங்கனுக்குத்தான்" 
எல்லோரும் சாப்பிட்டு முடித்தவுடன்  அந்த  ஆளில்லாத இலையும்  காலியாகத்தான் இருக்கும் விட்டலன் அரூபமாக (மற்றவர் கண்ணுக்கு)   அமர்ந்து சாப்பிடுவான். 

தேஹூ  பிராமணர்கள் சும்மா இருப்பார்களா? 
சின்ச்வாட் என்று ஒரு  ஊர் கூப்பிடு தூரத்தில்  இருந்தது  அங்கு   சிந்தாமணி தேவ் எனும் விநாயக உபாசகர் அவர்  விநாயகர்  கோயிலில் விசேஷம் அந்த சிந்தாமணி தேவ் அழைத்தால் விநாயகர் அவரோடு அமர்ந்து அன்னம் புசிப்பார் அதனால்  பிரமாத  ஏற்பாடுகளில்  அன்னதானமும் இருந்தது அன்று  ஏனோ அன்னம் புசிக்க சிந்தாமணி தேவ் விநாயகரை அழைத்திருந்தார் ஆனால் அவர் வரவில்லை ஆனாலும்  சிந்தாமணி தேவ் துக்காராமை அழைத்து அவமானப்படுத்தவென்றே ஒரு  தீர்மானம்   வரிசையாக எல்லோரும்  சாப்பிட உட்கார்ந்தபோது  துக்காராம்  அருகே ஒரு  காலி  இலை  போட்டார்கள்.

துக்காராமோ  "எனக்கு  இந்தப்பக்கமும் ஒரு  இலை  போடுங்கள்"   என்று  கேட்டுக்கொண்டார்.
"ஏன்  விட்டலன்  ரெண்டு பக்கமும்  உட்கார்ந்து   உங்களோடு சாப்பிடப்போகிராரோ?" பிராமணர்கள்  அவரைக் கேலியாக கேட்டார்கள் 
"இல்லை.    எப்போதும் போல் விட்டலன் இடப்பக்கம் அமர்வார்.

உங்கள் ஊர் 
வினாயகர் வந்து  வலப்பக்கம் அமர்வார்"
சிரித்தார்கள் பிராமணர்கள்  மற்றும் சிந்தாமணி தேவும் ஏற்கனவே படப்போகிற  அவமானத்துக்கு  விநாயகர் வேறு  சாட்சியா?"
அவர்கள் சந்தேகத்துக்கு இடமில்லாமல்  இரண்டு இலையில் உள்ள அன்னமும் குறைய ஆரம்பித்தது  விநாயகனும் விட்டலனுடன் சேர்ந்து துக்காராமுடன் சமாராதனையில்   சாப்பிட்டனர் 

துக்காராம் சாப்பிட்டு  முடித்தபோது  அவருக்கு இரண்டு  பக்க இலைகளும்   சாப்பிடப்பட்டு  காலியாக இருந்ததைப்  பார்த்த பிராமணர்களும் சிந்தாமணி தேவும்  வெட்கிப்போய்  என்ன  அபசாரம்  செய்தோம் என்று  துக்காராம் காலில்  விழுந்தனர் அன்றிலிருந்து சிந்தாமணி தேவ் தீவிர துக்கா ராம் மகராஜ் சிஷ்யர்களில் ஒருவரானர்.

Saturday, April 3, 2021

சனீஸ்வரர் பரிகாரத் தலங்கள்

திருக்கொள்ளிக்காடு -பொங்குசனி திருத்தலம்
சனீஸ்வரனுக்கு முற்பிறவிகளில் பாவச் செயல்களில் ஈடுபட்ட ஜீவன்களுக்கு அவற்றின் மறுபிறவிகளில் தயங்காது தண்டனை அளிக்கும் கடமை தரப்பட்டிருந்தது. இதனால் மக்கள் தன்னை ஏசுவதை நினைத்து அதிக மனவேதனை ஏற்பட்டு சிவபெருமானை வணங்கி, பாவத்திற்குத் தண்டனையளிக்கும் பொறுப்பிலிருந்து தன்னை விடுவிக்க மனமுருக வேண்டினார்.தவறு செய்பவர்களைத் தண்டிப்பதன் மூலம் தர்மத்தை நிலைநாட்டுவதால் அஞ்சற்க என்று சிவபெருமான் ஆறுதல் கூறி அருள்புரிந்தார். சனி பகவான் சமாதானம் அடையாமல் வசிஷ்ட முனிவரின் அறிவுரைப்படி அக்னீவனம் என்னும் திருத்தலத்திற்கு வந்து பல்லாயிரம் ஆண்டுகாலம் கடும் தவமியற்றியபோது, இறைவன் அக்னி உருவில் தரிசனம் அளித்து சனி பகவானை பொங்கு சனியாகத் தன் இரண்டாவது அவதாரம் எடுக்கச் செய்து அவரைத் தரிசிப்பவருக்கு, எத்தகைய கொடிய பாவத்தைச் செய்திருந்தாலும் அவர்களது பாவங்களை அடியோடு நிவர்த்தி செய்து தண்டனை இல்லாமல் தவிர்த்துவிடும் சக்தி அளித்து அனுக்கிரக சனியாக அருள் புரியச் செய்தார்.

சனி பகவானின் சோகத்தை தீர்த்த சக்தி வாய்ந்த திருத்தலம் அக்னீஸ்வரம். அக்னிபுரி, அக்னிவனம் எனும் சீரளத்தூர். இத்தலம் திருக்கொள்ளிக்காடு எனவும் அழைக்கப்படுகிறது. இங்கு சனி பகவான் சதூர் புஜத்துடன் வலதுகரம் அபயஹஸ்தமாகவும், ஒரு கரத்தில் கலப்பை ஏந்தியும், தனிச்சன்னிதியில் எதிரில் மகாலெட்சுமி சன்னிதி அமையப் பெற்று விளங்குவதால் பொங்குசனி என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். இங்கு இறைவனை தரிசித்து பொங்குசனி பகவானை பூஜிப்பவர்களின் பாவங்கள் அந்த விநாடியே அக்னீஸ்வரரால் எரிக்கப்பட்டு நீண்ட ஆயுளையும், தொழில் முன்னேற்றத்தையும் அடைவதாக கூறுகிறது புராதனமான தல வரலாறு. இங்கு நவக்கிரஹங்களுக்குத் தண்டனை அளிக்கும் பொறுப்பு இல்லாததால் தங்கள் மாறுபட்ட குணங்களை விட்டு ஒரே வரிசையில் “ப” வடிவில் நின்று தரிசனம் அளிப்பது சிறப்பாகும். இறைவன்-அக்னீஸ்வரன். இறைவி-மிருதபாதநாயகி. இத்தலத்தில் 3 தலவிருட்சங்கள் உள்ளன. வன்னிமரம் குபேர சம்பத்தை அளிக்கிறது. ஊமத்தை தீராத சஞ்சலம், சித்த பிரமை, மனக்கவலையைப் போக்குகிறது. சரக்கொன்றை மரம், கொன்றைப்பூ கொத்துக் கொத்தாதப் பூப்பது போல் குடும்பத்தில் மனவேற்றுமைகளைப் போக்கி ஒற்றுமையை அளிக்கிறது. இத்தலம் மன்னார்குடியிலிருந்து கிழக்கே 22கி.மீ. திருவாரூரிலிருந்து தென்மேற்கே 25 கி.மீ. திருத்துறைப்பூண்டியிலிருந்து வடமேற்கே 19 கி.மீ தொலைவில் உள்ளது. இது சுமார் 2,300 ஆண்டு பழமையானது என்பது தொல்பொருள் ஆராய்ச்சித் துறையின் கணிப்பாகும்.

திருநாரையூர் ஸ்ரீ இராமநாத சுவாமி திருக்கோயில் மங்கள சனீஸ்வரர்
கும்பகோணம்-திருவாரூர் வழித்தடத்தில் திருநாரையூர் எனும் சித்தீஸ்வரம் என்கிற சேத்திரத்திற்கு எதிரில் அரசாங்க மருத்துமனைக்கு அருகில் இராமநாத சுவாமி திருக்கோயில் உள்ளது.இத்தலத்தில் கஷ்டங்கள் ஏற்பட்டு இறைவனை வணங்கினார். அவரது வேண்டுதலை ஏற்று சித்தர்கள் வாழ்ந்த இத்தலத்தில் இராமநாத சுவாமியை பிரதிஷ்டை செய்து மங்களம் அளிக்கும் சனீஸ்வரர் சன்னிதியையும் ஏற்படுத்தி சனிதோஷம் நீங்கப் பெற்றதாகக் கூறப்படுகிறது. சனீஸ்வரர் தனிசன்னிதியில் தனது இரண்டு தேவியர்-மாந்தாதேவி, ஜேஷ்டதேவியுடன் தனது இரண்டு குமாரர்கள்-மாந்தி, குளிகன் ஆகியோருடன் குடும்ப சகிதமாக மங்களம் அளிக்கிறார். தசரதர் வழிபட்டதற்கு ஆதாரமாக மங்கள சனீஸ்வரர் சன்னிதியில் தசரத மகாராஜா வணங்கி பூஜிக்கும் நிலையில் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். இங்கு கோஷ்டத்தில் ரிஷப வாகனத்தில் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி எழுந்தருளியிருப்பது சிறப்பாகும்.

 

புதுக்கோட்டை ஆலங்குடி
புதுக்கோட்டை மாவட்டத்தில் கிடாரம் கொண்ட சோழபுரம் பேரூர் ஆண்டான் என்று அழைக்கப்பட்டு தற்சமயம் ஆலங்குடி என்று வழங்கப்படுகிற திருத்தலத்தில் ஸ்ரீ தர்ம சம்வர்த்தினி சமேத ஸ்ரீ நாமபுரீஸ்வரர் சைவ, வைணவ ஒருமைப்பாட்டினை உணர்த்தி அருள்புரிவது சிறப்பாகும். காசி வில்வம் இக்கோயிலின் தலவிருட்சமாகும். புதன்கிழமைகளில் வரும் பிரதோஷம் இக்கோயிலில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் விஷ்ணுவையும், பிரம்மாவையும் தரிசிக்கலாம். புதனுக்கும், சனீஸ்வரனுக்கு அதிதேவதையாக மகாவிஷ்ணு விளங்குகிறார்.இக்கோயிலில் அருள்பாலிக்கும் சிவபெருமானையும், மகாவிஷ்ணுவையும் வணங்கினால் சனி மற்றும் புதன் கிரஹ தோஷங்கள் நீங்குகின்றன.இங்குள்ள நந்தியெம்பெருமானுக்கு நெற்றியில் திருநாமம் இடப்பட்டிருப்பது காரணமாக இந்த கோயில் பெருமான் நாம புரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இங்குள்ள காலபைரவர், சூரியன் மற்றும் குழந்தை வடிவாகத் திகழும் பால சனீஸ்வரர் தனிச்சன்னிதிகளில் அருள் புரிவதால் இம்மூவரையும் தேய்பிறை அஷ்டமி தினத்தன்று வழிபட்டால் சகல தோஷங்களும் நீங்கி நற்பலன்கள் உண்டாகும். புதன் கிரஹத்திற்குரிய பரிகாரத்தலமும் ஆகும்.

 

திருநெல்வேலி மாவட்டம் கயத்தாறு
கயத்தாறு சேத்திரம் திருவாறைத்தலம் என்று வழங்கியது. இத்திருக்கோயில் திருநெல்வேலி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது.
அகத்தியர், ஸ்ரீ ராமர், அனந்த குணபாண்டியன், ராஜசேகர பாண்டியன் ஆகியோர் பூஜித்துத் திருவருள் பெற்ற தலம். ஆலயத்தின் கிழக்கே கயத்தாறு (யானை நதி) ஆலயத்தினுள் கோடி தீர்த்தம் ஆகிய புண்ணிய தீர்த்தங்கள். சுவாமி ஸ்ரீ கோதண்டராமேஸ்வரர். அம்பாள் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி. இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் சனீஸ்வரன் ஆவுடையார் மீது காகவாகனத்துடன் தெற்கு நோக்கி அமர்ந்து அருள்பாலிப்பது பிரத்யேக சிறப்பம்சமாகும்.
சனி பகவான் மானிடர்களின் உயிரைக் காக்கும் ஆயுள்காரக கிரகமாதலால் தெற்கு நோக்கி தரிசனம் அளிக்கிறார். ஜாதகத்தில் அஷ்டமச்னி,கண்டச்சனி, ஏழரைச்சனி ஆகியவற்றாலும், இதர கிரக தோஷங்களினாலும் ஆயுளுக்கு ஆபத்து வரும்போது இத்தலத்தில் தொடர்ச்சியாக 9 வாரம் சனிக்கிழமைகளில் சனீஸ்வரருக்கு அபிஷேகம் செய்வித்து, நெய் தீபமேற்றி ஆராதித்தால் யம பயம் நீங்கும். சித்திரைவிஷூ அன்று சூரியனின் கிரணங்கள் சிவலிங்கத்தின் மீது விழுவது ஒரே கல்லில் வடிக்கப்பட்ட 6 அடி உயரமுள்ள அற்புத நடராஜப் பெருமான் சிலை தரிசனம், நதிக்கரையில் உள்ள ஸ்ரீ ராமர் பாதம், நவக்கிரஹங்கள் ஒரே இடத்தில் இல்லாமல் தனித்தனியாக உட்பிரகாரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது ஆகியவை இத்தலத்தில் சிறப்பம்சமாகும்.

 

சென்னை பொழிச்சலூர் -சனீஸ்வரர் மற்றும் நாகதோஷ நிவர்த்தி திருக்கோயில்
சென்னை புறநகர்ப் பகுதியான பொழிச்சலூர் அகஸ்தீஸ்வரர் கோயில் வடதிருநள்ளாறு என்னும் பெருமைக் குரியதாகும். சனீஸ்வரர் பிறருக்குத் துன்பம் அளித்ததால் தனக்கு ஏற்பட்ட பாவங்களிலிருந்து நீங்குவதற்காக இத்தலத்திற்கு வந்து ஆனந்தவள்ளி ஸமேத அகஸ்தீஸ்வரரை வணங்கித் தண்னைப் பிடித்த பாவங்களிலிருந்து விமோசனம் பெற்றார் என்பது தலவரலாறு.

 

தனிச்சன்னிதியில் குடிகொண்டுள்ளாள் சனீஸ்வரர், நவக்கிரகங்களுக்கு அருகில் உள்ள சனீஸ்வரரின் குருநாதரான பைரவர் ஆகிய இருவரையும் சனிக்கிழமைகளில் விளக்கேற்றியும், அர்ச்சித்தும் வணங்கினால் எல்லா தோஷங்களும் நீங்கிவிடும் என்பது நிச்சயம்.

 

அகஸ்தீஸ்வர் கோயிலின் கருவறை முன்மண்டபத்தில் மேற்புறமுள்ள கல்லில் நாகத்தின் புடை சிற்பம் இருப்பதால் இது நாக தோஷ பரிகாரத்தலம் என்று கூறப்படுகிறது. கோயில் பிரகாரத்தில் நாக கற்கள் அருகில் விளக்கேற்றினால் நாகதோஷம் நீங்குகிறது என்பது நம்பிக்கை. ஐப்பசி மாதமும், சித்திரை மாதமும் 3 நாட்கள் லிங்கத்தின் மீது சூரிய கிரணங்கள் விழுவதால் சூரியன் வழிபாட்டுத் தலமாகவும் உள்ளது.

 

மங்கம்மாபேட்டை மங்கள சனீஸ்வரர்
அரக்கோணத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் மங்கம்மாபேட்டை எனும் நீலதேவி ஸமேத சனீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. பிரமிடு வடிவ குகைக்குள் கட்டப்பட்டுள்ள ஆலயத்தில் திருக்கல்யாண கோலத்தில் வீற்றிருக்கும் சனி பகவானைஎண்ணிக்கொண்டு எள் தீபம் ஏற்றி வன்னி மரத்தடியில் அமர்ந்திருக்கும் சனீஸ்வரரை மூன்று முறை வலம் வந்து பிரார்த்தனை செய்து தீபத்தை அவ்விடம் வைத்து இங்கு மூலவரை அர்ச்சித்து 27 முறை வலம் வந்து 5 நிமிடம் தியானம் செய்ய வேண்டும். இம்முறையில் 47.27 அல்லது 11 சனிக்கிழமைகள் வழிபட்டு கடைசி வாரம் அபிஷேக ஆராதனைகள் செய்தால் திருமணம், குழந்தை பாக்கியம், கல்வி வளர்ச்சி, வியாபார மேன்மை ஆகிய கோரிக்கைகள் அனைத்தும் மேற்கண்ட பரிகார பூஜையால் நிவர்த்தியாகும். இந்த ஆலய வழிபாட்டால் நாகதோஷம், காலசர்ப தோஷம், செவ்வாய் தோஷங்கள் அனைத்தும் நீங்கும். சனீஸ்வரர் கல்யாண கோலத்தில் அருள்பாலிப்பதால் இங்கு ஷஷ்டியப்தபூர்த்தி, சதாபிஷேகம், பீமரத சாந்தி போன்ற நிகழ்ச்சிகள் செய்தால் நற்பலன் கூடும்.

 

சோழபுரம் ஸ்ரீ பைரவேஸ்வரர் ஆலயம்
மக்களுக்கு ஏற்படும் தோஷங்களில் மிகக்கொடிய தோஷம் கலியுக பைரவ தோஷம் எனப்படும். ஆலயங்களை சீரழித்து, ஆலய சொத்துகளை அபகரித்தல், பெண்களின் நிராதரவான நிலைமையை பயன்படுத்தி அவர்களைக் கற்பழித்தல், பெற்ற தாய்க்குச் சமமாக பூஜிக்கப்பட வேண்டிய பசுக்களை வதை செய்வது போன்ற பாவங்கள் செய்பவர்களை கலியுக பைரவ தோஷம் பீடிக்கும். இத்தகைய கலியுக பைரவ தோஷத்திற்கு பரிகார தலம் கும்பகோணத்திலிருந்து சுமார் 12 கி.மீ. தூரத்தில் உள்ள சோழபுரம் ஸ்ரீ பைரவேஸ்வரர் சிவாலயமாகும். 64 பைரவ சக்திகளுக்கும் தனித்தனியான யாகசாலைகளுடன். மிகக்கடுமையான செய்வினை தோஷங்களை வேரோடு அறுக்கும் சக்தி கொண்டது. தொடர்ந்து 7 நாட்களுக்கு இடைவிடாது இச்சன்னிதியில் தீபம் ஏற்றி வந்தால் எத்தகைய கொடிய நாக தோஷங்களானாலும் நீங்கும். இதற்காகவே “பின்னற்பிறையால்” என்ற வகையிலான விசிறித் தட்டு அகல்கள் போன்ற அபூர்வமான தீப்பிறைகள் இத்திருக்கோயிலில் இருந்துள்ளன.மேலும் சென்ற வினை, வந்துள்ள வினை, இனி வரப்போகும் வினை ஆகிய 3 வினைகளையும் களைந்தெறியும் வினைதீர்த்த சனீஸ்வர பகவானும் சூட்சம் உருவில் இருந்து அம்பிகை ஸ்ரீ சிவாபூரணியையும் ஸ்ரீ கைலாச நாதரையும் பூஜிப்பதால் சனீஸ்வர பரிகார தலமாகவும் சோழபுரம் விளங்குகிறது.

 

தஞ்சாவூர் மாவட்டம் கட்டுமாவடி அருகில் விளங்குளம்
தஞ்சாவூர் மாவட்டப் பேராவூரணிலிருந்து 20 கி.மீ. தொலைவிலும், கட்டுமாவடியிலிருந்து 7 கி.மீ. தொலைவிலும் விளாங்குளம் உள்ளது. இங்கு அருள்மிகு பூசம் ஸ்ரீ அட்சயபுரீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.

 

சனீஸ்வர பகவானின் நடசத்திரமான பூச நட்சத்திரத்தில் பிறந்தோர் வழிபட வேண்டிய தலமாகும். சனீஸ்வர பகவான் யமனால் துண்டிக்கப்படட்டு ஊனமானார். ஊனமான கால்களுடன் மனித உருவில் வாழ்ந்தபோது சுரைக்காய்க் குடுவையில் பிச்சையெடுத்து தன்னால் முடிந்த அளவிற்கு அன்னதானம் வழங்கினார். வரும்போது விளம் என்னும் மரவேர் தடுக்கி எதிரே உள்ள பள்ளத்தில் விழுந்தார். அப்போது அக்குளத்தில் ஞானவாவி என்னும் ஞானதீர்த்தம் உற்பத்தியாகி சனீஸ்வர பகவானின் ஊனம் நீங்கியது. அவர் செய்த அன்னதானமே அப்பலனைத் தந்தது. ஊனம் நீங்கிய நாள் பூசம், சனிக்கிழமை, அட்சய கிருதியை ஆகிய மூன்றும் இணைந்த நாள்.

 

விளம் மரத்தின் வேர் தடுக்கிக் குளத்தில் விழுந்ததால் விளமும் குளமும் இணைந்து விளங்குளம் என்ற பெயர் ஏற்பட்டது. சிவபெருமான் அட்சய புரீஸ்வரராகக் காட்சியளித்து சனீஸ்வர பகவானுக்கு திருமணம் நடக்க வரம் அளித்தார். அந்த வரத்தின்படி சனீஸ்வரர் மந்தா, ஜேஷ்டா என்ற இரு பத்தினியரைத் திருமணம் செய்து அருள் பாலிக்கிறார். இத்தலத்தின் தீர்த்தம் மிகவும் சக்தி வாய்ந்தது. சனீஸ்வர பகவான் விழுந்தபோது ஊனம் நீங்கியதால் ஊனம் உள்ளவர்கள் வழிபட்டால் ஊனம் நீங்கும் என்பது ஜதீகம். குடும்பத்தில் குழப்பம் உள்ளவர்களும், பாவம் போக்கவும் சனீஸ்வர பகவானுக்கு அபிஷேகம் செய்து வழிபடலாம். இக்கோயிலின் முக்கிய தினமே சனீஸ்வர பகவானே நேரில் வரும் சனிக்கிழமை, பூசம், அட்சய திருதியை மூன்றும் சேர்ந்த நாளாகும்.

 

தேனி மாவட்டம் -குச்சனூர்
சனீஸ்வர பகவான் தல நாயகனாக, முதல் மூர்த்தியாக மற்ற கிரகங்களோடு இணைந்து இல்லாமல் தனித்தெய்வமாக கோவில் கொண்டிருப்பது குச்சனூரில் மட்டுமே. இவ்வூர் தேனி மாவட்டம் சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்தில் சுரபி நதி ராஜா வாய்க்காலின் மேற்கு கரையில் அமைந்துள்ளது. ஆழ்ந்த பக்தியோடு வழிபட்ட சந்திரவதனனுக்கு சனி பகவான் அருள்பாலித்த இடமே குச்சனூரில் கோயில் கொண்டுள்ள இடமாகும். மூலஸ்தானத்தில் மூலவர் சுயம்புவாகத் தோன்றியவர். லிங்க வடிவில் சற்று அகன்றுள்ள இவரது தோற்றம் காண்போர் மனதைக் கவரும் தன்மையுடையது. சனி பகவானுக்குரிய கருமையும், அழகும் கொண்டது. மூலவருக்கருகில் உற்சவ மூர்த்தி அமைந்துள்ளார். ஆண்டுக்கொருமுறை பவனி வருபவர் உற்சவ மூர்த்தியே ஆவார். குச்சனூரில் நிலைத்திருக்க விரும்பிய சனீஸ்வர பகவான் தனது உண்மைத் தொண்டராகிய லாட சன்னியாசியை இங்கே இருத்தித் தம் திருவடி கமலங்களில் ஐக்கியமடையச் செய்து துணைத் தெய்வங்களுள் ஒன்றாக அமைத்துக் கொண்டார். சனீஸ்வர பகவான் விரும்பிக் குடிகொண்டிருக்கும் இத்தலத்தின் பெருமையே பெருமை. தீர்த்தம் சுரபி நதி எனும் புகழ் பெற்ற சுருளி நதி. இதில் வருடம் 365 நாட்களும் தண்ணீர் ஓடிக் கொண்டிருப்பது சிறப்பாகும்.

 

ஈஸ்வரன் கட்டளையின்படி இடத்தலை மரத்தடியில் தியானத்தில் அமர்ந்து மனநிறைவு பெற்று மகிழ்வுடன் வீற்றிருக்கும் இடம் இத்திருத்தலம் ஆகும்.இப்போதும் இம்மரம் மூலஸ்தானத்திற்கு பின்னால் செழிப்பாக இருப்பதை நாம் காணலாம். விடியற்காலம், உச்சிக்காலம், சாயங்காலம் ஆகிய 3 வேலைகளிலும் நாள்தோறும் தவறாமல் பூஜை நடைபெறுகிறது. உச்சிகால பூஜையானவுடன் சனீஸ்வர பகவானின் வாகனமாகிய காகத்திற்குத் தளிகை அளித்த பின்னரே பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. சில சமயங்களில் காகம் தளிகை ஏற்காவிடில் அப்படியே அன்றைய அனைத்து நிகழ்ச்சிகளையும் நிறுத்தி வைத்து பக்கதர்களும், பூசாரிமார்களும் பகவான் சன்னிதானத்தில் தாழ்பணிந்து தங்கள் குற்றங்களுக்கு மன்னிப்பு வேண்டி மன்றாடியபின் காகம் தளிகை ஏற்று வருவது இன்றும் நடைபெறும் அதிசயங்களுள் ஒன்றாகும். இக்கோயிலில் எள் பொங்கல் படைப்பது சிறப்பாகும். ஒவ் வொரு வருடமும் ஆடி மாதம் சனிக்கிழமைகளில் தோறும் திருவிழா நடைபெறுகிறது. ஐந்து சனிக்கிழமைகளில் மூன்றாவது சனிக்கிழமையே மிகவும் விசேஷமானது. கோயிலை வலம் வரும்போது ஓம் மந்தாய நம: என்று சொல்லி வலம் வருவது விசேஷம். தேனி மாநகரத்திலிருந்து தெற்கே 20 கி. மீ. தூரத்தில் குச்சனூர் அமைந்துள்ளது.

 

திருநள்ளாறு
ஸ்ரீ சனீஸ்வர பகவான் பூஜை செய்த தலங்களுள் தலையாயது திருநள்ளாறு என்னும் திருத்தலமாகும். ஒருவருக்குப் பொங்கு சனி தசை வந்து விட்டால் பொன் கொழிக்கும். மங்கு சனி தசை வந்துவிட்டால் அஷ்ட தரித்திரம் கூத்தாடும். பல நோய்களும் வரும். சனிக்கிழமை விரதமிருந்து ஸ்ரீ சனீஸ்வர பகவானுக்கு ஸகஸ்ர நாமார்ச்சனை செய்தால் கெடுதல்கள் விலகிப் பலவகை நன்மைகள் உண்டாகும். இத்தலம் பேரளம்-காரைக்கால் ரயில் மார்க்கத்தில் அமைந்துள்ளது. இந்த சேத்திரத்திற்கு ஆதி புரி, நகவிடங்கபுரம் , நலேச்சுரம் என்று பல பெயர்கள் உண்டு. திருநள்ளாறு என்பது காரணப் பெயராகும். நளனுக்கு நல்ல வழியைக் கொடுத்ததால் நள்+ஆறு என்ற பெயர் பெற்று அதுவே மருவி நள்ளாறு என்று ஆயிற்று. திருநள்ளாற்றில் 13 தீர்த்தங்கள் உள்ளதாக தலவரலாறு கூறுகிறது. சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்ய பிரம்மன் தன்னுடைய தண்டாயுதத்தால் அமைத்த தீர்த்தத்தை பிரம்ம தீர்த்தம் என்கின்றனர்.

 

இது கோயிலுக்கு நேர்கிழக்கில் உள்ளது. இதில் நீராடுவோர் பிரம்மபதம் அடைவர். அம்மன் சன்னிதிக்கு எதிரே மதிலை ஒட்டி சரஸ்வதி தீர்த்தம் (வாணி) உள்ளது. இதில் நீராடுவோருக்கு எல்லாக் கலைஞானங்களும் கிட்டும். கோயிலுக்கு வடக்கு முகமாகச் சென்றால், அன்னதீர்த்தத்தையும், அகஸ்திய தீர்த்தத்தையும் காணலாம்.
கோயிலுக்கு வடமேற்கு திசையில் உள்ள நள தீர்த்தத்தில் ஸ்தானம் செய்தால் சகலவிதமான தோஷங்களும், பீடைகளும் அனலிடைப்பட்ட மெழுகுபோல் மறைந்துவிடும். நளனுக்காக சிவபெருமான் தன் சூலாயுதத்தால் கங்கையை இந்த இடத்தில் வரவழைக்கப் புராணம் போற்றும். இதை அனைவரும் ஸேவிக்கின்றனர். இதில் நீராடுவதில்லை. ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் சன்னிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இறைவனுக்கு ஸ்ரீ ஆதிமூர்த்தி, ஸ்ரீ நகவிடங்கர், ஸ்ரீ நள்ளாறர் என்ற பல திருநாமங்கள் உண்டு. ஸோபன மண்டபத்திற்கருகில் அம்மன் சன்னிதி வடக்கு முகமாய் அமைந்துள்ளது. ஸ்ரீ போக மார்த்த போகமார்த்த பூண்முலையாள், ஸ்ரீ பிராணேஸ்வரி என்பவை அம்மனின் திருநாமங்கள். அம்மன் சன்னிதிக்கு முன்புறம் கிழக்குப் பக்கமாக ஸ்ரீ சனீஸ்வர பகவான் சன்னிதி உள்ளது. ஒவ்வொரு சனிக்கிழமையும் விசேஷ அர்ச்சனைகள் நடைபெறுகின்றன. ஸ்ரீ சனீஸ்வர பகவானுக்கு சங்க புஷ்பம் (பாலாடை புஷ்பம் அல்லது காக்காட்டான் புஷ்பம் ) போன்ற நீல நிறமுடைய புஷ்பங்கள், மற்ற புஷ்பங்களுடன் வன்னிபத்ரமும், வில்வ பத்ரமும் சேர்த்து அர்ச்சனை செய்யப்படுகிறது. வைகாசி மாதத்தில் உத்திரட்டாதியில் துவஜாரோகணமாகி 18 நாட்களுக்கு பிரம்மோற்சவம் நடைபெறுகின்றது. தனுர்மாத பெளர்ணமியில் பலர் வந்து அன்னதானம் செய்கிறார்கள். எல்லா மதத்தினருக்கும் சம்மதமானவர் இவர். எல்லா மதத்தவரும் ஒன்று சேர்ந்து ஸ்ரீ சனீஸ்வர பகவானை துதித்து உய்வோமாக!
துயர்கள் நீங்கித் தூயவராக தொல்வினைகள் தொலைந்து போக, பிறப்பும், இறப்பும் அற்றுப்போக. தீராப்பிணிகள் தீர்ந்து போக, வாக்குவன்மை வளமாய்ப் பெருக சரஸ்வதி தீர்த்தத்திலும், சகல பாவங்களும் விலகத் திருக்குளம் மூன்றிலும் தீர்த்தமாட வேண்டும். புத்திர பாக்கியம் பெற 3 தீர்த்தங்களிலும் நீராடி ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் , ஸ்ரீ போகமார்த்த பூண்முலையாள், ஸ்ரீ சனீஸ்வர பகவான், ஸ்ரீ நளநாராயணப்பெருமாள் இவர்களை துதிப்போருக்கு புத்திர பாக்கியம் கிட்டும். சிவபெருமானுக்கு தும்பை மாலை சாற்றினால் சாற்றும் ஒவ்வொரு மலருக்கும் கோடி வருஷ சிவலோக வாசம் கிடைக்கும்.

Sunday, February 21, 2021

கரிசாலை & கரிசலாங்கண்ணி

தாவரப்பெயர் -: ECLIPTA PROSTRATA ROXB.

தாவரக்குடும்பம் -: ASTERACEAE.

வேறு பெயர்கள் -: கரிசாலை, கையாந்தகரை, கரிகா, கைகேசி, கைவீசி, கரியசாலை, கரிப்பான், கையான், பொற்றலைக்கரிப்பான்,பொற்கொடி(ECLIPTA PROCENA) என்ற பெயர்களாலும் வழங்கப்படும்.

வகை -: வெள்ளைக்கரிசலாங்கண்ணி, மஞ்சக்கரிசலாங்கண்ணி.

முக்கிய வேதியப்பொரிட்கள் -: இலைகளில் ஸ்டிக்மாஸடீரால், மற்றும்
ஏ-டெர்தைனில் மெத்தானால் மற்றும் எக்லிப்டின், நிக்கோடின் ஆல்கலாய்டுகள் உள்ளன. 16 வகையான பாலி அசிட்டெலினிக்தை
யொபீன்கள் எடுக்கப் பட்டுள்ளன.

 தாவர அமைப்பு -: எதிரடுக்கில் அமைந்த வெள்ளை நிற மலர்கள் உடைய மிகக்குறுஞ்செடியினம். தரையோடு படர்ந்தும் வளர்வதுண்டு. தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் ஈரமான நிலத்தில் தானே வளர்வது.
குத்து உரோமங்கள் கொண்ட ஒரு பருவச்செடி தலை சிறியது இரு இன மலர்கள் கொண்டது. கதிருள்ளது. இலைக் கோணங்களிலோ உச்சியிலோ இருக்கும். வெளிவட்ட மலர்கள் பெண்பாலானவை, அரைவட்டத்தில் இரு வரிசையிருக்கும். உள்வட்ட மலர்கள் இரு பாலானவை, 4 -5 மடல் கொண்டுமிருக்கும், வளமானவை, பூவடிச்சிதல், அடுக்குத் தட்டு மனிவடிவமானது. பூவடிச்சிதல், இருவரிசையில் இருக்கும். இலை போன்றது பூத்தளம் தட்டையானது. அல்லிகள், பெண் மலரில், மெலிந்தும், முழுமையாகவோ, இருபிளவாகவோ இருக்கும். மஞ்சள் நிறமானவை. இருபால் மலரில், 4 - 5 மடலாயிருக்கும். மகரந்தப்பை அடி மழுங்கியது. சூல் தண்டுக் கரங்கள் குருகலாயும் மழுங்கியும் இருக்கும். கனி, அக்கீன்கள், கதிர்மலர்களில் முப்பட்டையாயும் வெடித்தும் இருக்கும். வட்டத்தட்டு மலரில் அமுக்கியிருக்கும், பாப்பஸ் 1 - 2 நுணுக்கமான பற்களாகக் காணப்படும். இது விதை மூலமும், கட்டிங் மூலமும் இனப்பெருக்கம் செய்யப்படும்.
 பயன்படும் பாகங்கள் -: செடிமுழுதும் (சமூலம்)
மருத்துவப் பயன்கள் -: இது இருவகைப் பூக்கள் உடையது
மஞ்சள், வெள்ளை. மஞ்சள் பூ பூப்பது மஞ்சள் காமலைக்கும் வெள்ளைப் பூ பூப்பது ஊது காமாலைக்கும் நல்ல குணத்தைத் தருகின்றன. கற்பகமூலிகை இதுவாகும். இதன் பொதுவான குணம் என்னவென்றால் கல்லீரல். மண்ணீரல். நுலையீரல், சிறு நீரகம், ஆகியவற்றைத் தூய்மை செய்கிறது. சுரபிகளைத்தூண்டுகிறது. உடல் தாதுக்களை உரமாக்குகிறது. உடலை பொன்போல் மாற்றுகிறது. இரும்பு, தங்கச் சத்திக்களை உடையது. காமாலை எதுவாயினும் குணமாக்குகின்றது. நீரிழிவைக் கட்டுப் படுத்துகின்றது. சளி, இருமல், தோல்பற்றிய நோய்களுக்கும் மருந்தாகும்.

தொந்தி கரைய -: இதனைக் கீரையாகச் சமைத்துச் சாப்பிடலாம். பொரியல். கூட்டு, கடைசல் செய்து சாப்பிட உடலிலிருந்து கெட்ட நீர் வெளியாகும். உடல் குளிர்ச்சி பெறும், மலர்ச்சிக்கல் நீங்கும், அறிவு தெளிவுறும், நாளும்சாப்பிட்டு வர உடல் எடை குறையும். தொந்தி கரையும்.

மஞ்சக் காமாலை -: மஞ்சள் பூவுடைய கரிசலாங்கண்ணி, தும்பை இலை, கீழாநெல்லி சம அளவில் அரைத்து நெல்லி அளவு பசும்பாலில் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர 7 - 10 நாளில் மஞ்சள் காமாலை முற்றிலும் குணமாகும். ஆனால் பளி, காரம் நீக்கி பத்தியம் இருக்கவேண்டும்.

காமாலை சோகை -: இதன் மஞ்சள் பூவடைய இலை 10,வேப்பிலை 6, கீழாநெல்லி இரண்டு இணுக்கு துளசி 4,இலை சேர்த்து நன்றாக மென்று காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். மோர் அரிசிக் கஞ்சி சாப்பிடலாம். 10 - 20 நாளில் காமாலை சோகை நீர் சுரவை வீக்கம், கண், முகம் வெளுத்தல் ஆகியன குணமாகும். ஊளைச் சதை குறையும், சிறுநீர்த் தடை, எரிச்சல், கை,கால், பாதம் வீக்கம் குணமாகும்.

ஆஸ்த்துமா, சளி -: கரிசலைச் சாறு + எள் நெய் வகைக்குஒரு லிட்டர் கலந்து, இதில் அதி மதுரம்100 கிராம், திப்பிலி50 கிராம் போட்டு சாறு சுண்டக் காச்சி வடிக்கவும். இதில் 5 மி.லி, அளவு காலை மாலை சாப்பிட ஆஸ்த்துமா,சளி, இருமல், குரல்கம்மல் குணமாகும். தலைக்கும் தேய்க்கலாம்.

கண்மை - :தூய்மையான வெள்ளைத் துணியில் கரிசலைச் சாறுவிட்டு உலர்த்தி, அத்துணியை எரித்துச் சாம்பலாக்கவும். இச்சாம்பலை ஆமணக்கு எண்ணெயில் மத்தித்து கண்ணில் தீட்ட கண் ஒளிபெறும். சிறந்த கண் மையாகும்.

குழந்தை இருமல் -: இதன் சாறு பத்துச் சொட்டு+ தேன் பத்து துளி கலந்து வெந்நீரில் கொடுக்க குழந்தையின் இருமல், சளி குணமாகும்.

காது வலி -: இதன் சாறு காதில் விட காதுவலி தீரும்.

பாம்புக்கடி -: 200 மி.லி. மோரில் இதன் சாறு 50 மி.லி.கலந்து கொடுக்க பாம்புக் கடி விடம் குறையும், நீங்கும். தேள் கடிக்கு இலையைத் தின்னவும். அரைத்துக் கடிவாயில்கட்டவும் விடம் இறங்கும்.

நாள்பட்ட காமாலை -: முதல் நாள்காலை 10 மி.லி. எனத்தொடவ்கி 20, 30, 40, என 10 நாள் கூட்டி அதே விகிதப்படி 100 மி.லி ஆனதும் 90, 80, 70 என 10 நாள் குறைத்து ஆக இருபது நாள் சாப்பிட நாள்பட்ட முற்றிய காமாலையும் தீரும். பத்தியம் இருத்தல் வேண்டும். புளி, காரம், ஆகாது.மோரில் சாப்பிடவும்.

குட்டநோய் -: நூறுஆண்டு ஆன வேப்பம் பட்டை உலர்த்திய சூரணத்தை ஏழு முறை கரிசலாங்கண்ணி சாற்றில் ஊறவைத்து உலர்த்திய பொடியை 5 கிராம் அளவு வெந்நீரில் சாப்பிட 48 - 144 நாளில் 18 வகை குட்டமும் குணமாகும்.

முடிவளர -: எள் நெய் அல்லது தேங்காய் எண்ணையில் இதன் இலையை அரைத்துப் போட்டு கதிரொளியில் 8 நாள் புடமிட்டு வடித்துத் தலைக்குத் தேய்க்க முடி வளரும்.

வேர் வாந்தியுண்டாக்கியாகவும், நீர்மலம் போக்கியாகவும்பயன் படுத்தப் படுகிறது. வேர், ஆடுமாடுகளுக்குண்டாகும் குடல் புண் மற்றும் வெளிப்புண்ணை ஆற்றும் கிருமிநாசினியாகவும் பயன்படத்தப் படுகிறது. (சோப்ரா மற்றும் பலர் 1956,நட்கர்னி 1954)

இதனால் குரலுறுப்பு நோய், குணமடைந்து குரல் இனிமையாகும். பல் நோய் குணமாகும். இதன் வேர் பொடி தோலைப்பற்றிய பிணிக்கும் கொடுக்கலாம்.
கரிசாலை சாறு நல்லெண்ணெய் வகைக்கு ஒரு லிட்டர் கலந்து அதில் குமரிச்சாறு, நெல்லிக்காய்ச் சாறு வகைக்கு 250 மி.லி.சேர்த்துக் கஸ்தூரி மஞ்சள், சாதிக்காய் வகைக்கு 10 கிராம்பாலில் நெகிழ அரைத்துக் கலக்கிப் பதமுறக் காய்ச்சி வடித்து(கரிசாலைத்தைலம்) வாரம் ஒரு முறை தலையிலிட்டுக் குளித்துவரத் தலைவலி, பத்தக் கிறுகிறுப்ப், உடல் வெப்பம், பீனிசம், காது, கண் நோய்கள் தீரும்.

கரிசாலை, பூக்காத கொட்டைக் கரந்தை ஆகியவற்றின்சமன் சூரணம் கலந்து நாள் தோரும் காலை, மாலை அரைத் தேக்கரண்டி தேனில் சாப்பிட்டு வர இள வயதில் தோன்றும் நரை மாறும். 

கற்றது வேதம்

தேரோட்டியான அதிரதன் மற்றும் ராதையினால் வளர்க்கப்பட்டவன் கர்ணன். பிறப்பால் சத்ரியன். வீரத்துக்குக் குறைச்சல் இல்லை. இருந்தாலும் குரு வேண்டுமே? 

துரோணாச்சாரியார் மறுத்துவிட, கிருபாச்சாரியாரிடம் ஒரு நாள் அதிகாலை  போகிறான் கர்ணன்.  

மாணவர்களின் திறமையை சோதிக்க, வானத்தில் பறக்கும் ஒரு பறவையை குறிபார்த்து வீழ்த்தச்  சொல்கிறார் குரு. 

அர்ஜுனன் ஒரே அம்பில் பறவையை வீழ்த்திவிட்டு தேரேறிப் போய்விட்டான். 

இப்போது கர்ணனின் முறை. அம்பை நாணில் பூட்டியாயிற்று. ஒரு கணம் பறவையை வானில் குறி பார்த்தவன் வில்லையும் அம்பையும் கீழே வைத்து விட்டான். மிகச் சிறந்த வில்வீரனான கர்ணன் அப்படிச் செய்தது குருவுக்கு அதிசயம். காரணம் கேட்கிறார். குருவே இது  மிகவும் அதிகாலை நேரம். இந்த நேரத்தில் ஒரு பறவை விண்ணில் பறக்கிறது என்றால் நிச்சயம் தன் குஞ்சுகளுக்கான உணவைக் கொண்டு போகிறது என்றுதான் பொருள். இப்போது திறமைக்காக அதைக் கொன்றுவிட்டால் நான் வீரனாவேன். ஆனால் அந்த இளம் குஞ்சுகள் அனாதை ஆகிவிடும். எனவே நான் கொல்ல மாட்டேன் என்றானாம். கலங்கிப்போன குரு சொன்னாராம், "கர்ணா நீ கற்றது வித்தை அல்ல வேதம்" என்று-பாராட்டினார்.
      

இதய புற்று நோய்

இதய புற்றுநோய் என்பது இதயத்தில் உருவாகும் ஒரு கட்டியால் வகைப்படுத்தப்படும் புற்றுநோயின் மிக அரிதான வடிவமாகும், இது இதய முதன்மை கட்டி என அழைக்கப்படுகிறது. இத்தகைய கட்டிகள் 75% தீங்கற்றவை (புற்றுநோயற்றவை) அதே நேரத்தில் வீரியம் மிக்க (புற்றுநோய்) வடிவம் 2000 இல் சுமார் 1 நபருக்கு ஏற்படுகிறது. இதயத்தில் காணப்படும் மிகவும் பொதுவான வகை இந்தப் புற்றுநோயானது அருகிலுள்ள உறுப்புகளான நுரையீரல் மற்றும் மார்பகங்களிலிருந்து புற்றுநோய் செல்கள் பரவுவது அல்லது மெட்டாஸ்டாஸிஸ் காரணமாக உருவாகிறது.

அருகிலுள்ள உறுப்புகளிலிருந்து வரும் புற்றுநோய் செல்கள் உடைந்து, இரத்த ஓட்டத்தின் மூலம் இதயத்திற்குச் செல்லும்போது, இதய புற்றுநோய் ஏற்படும் நிலை ஏற்படுகிறது. இதயத்தின் இத்தகைய மெட்டாஸ்டாஸ் செய்யப்பட்ட கட்டிகள் இரண்டாம் நிலை கட்டிகள் என அழைக்கப்படுகின்றன மற்றும் அவை பெரும்பாலும் வீரியம் மிக்கவை (புற்றுநோய்).

*இதய புற்றுநோய் வகைகள்..* 

மேலே விவாதிக்கப்பட்டபடி, இதய புற்றுநோய் பெரும்பாலும் இதயத்தில் உருவாகும் கட்டி என்று குறிப்பிடப்படுகிறது. அவை மொத்தம் 4 வகைகள்: 

*1. தீங்கற்றவை:* அவை புற்றுநோயற்ற மற்றும் தீங்கு விளைவிக்காத இருதய கட்டிகள், அவை மற்ற உடல் பாகங்களுக்கு மாற்றங்களை விளைவிக்காத வகையைச் சேர்ந்தவை. தீங்கற்ற கட்டிகள் 3 வகைகளாகும், அவை பின்வருமாறு, மைக்ஸோமாக்கள்: இத்தகைய கட்டிகள் இதயத்தின் சுவரில் இணைக்கப்பட்டு காணப்படுகின்றன. இவை இரத்தக் கட்டிகள் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன. அறிகுறிகள் காய்ச்சல், சோர்வு மற்றும் எடை இழப்பு. பாப்பில்லரி ஃபைப்ரோலாஸ்டோசிஸ்: இத்தகைய கட்டிகள் (மிட்ரல் வால்வு அல்லது பெருநாடி வால்வு) ஒரு இதய வால்வுகளில் ஏற்படுகின்றன. எம்போலைசேஷன் காரணமாக அவை அறிகுறிகளை ஏற்படுத்துகின்றன. லிபோமாக்கள்: அவை பொதுவாக கொழுப்பு செல்கள் இவை இதய தசையின் மேற்பரப்பில் காணப்படுகின்றன. அவை எந்த அறிகுறிகளையும் காட்டுவதில்லை. ஆனால் இதயத் தடுப்பை ஏற்படுத்தக்கூடும். 

*2. மலிஞன்ட் ( Malignant):* இவை இதயக் கட்டிகளின் புற்றுநோய் வடிவமாகும், ஆனால் அவை மிகவும் அரிதானவை மற்றும் இதயக் கட்டிகளில் 20% அல்லது அதற்கும் குறைவான இடத்தையே பிடிக்கின்றன. இவை 2 வகைகளாகும் லிம்போமாக்கள்: மரபணு மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளின் விளைவாக இவை உருவாகும் என்று நம்பப்படுகிறது. சர்கோமாஸ்: இத்தகைய கட்டிகள் அதிக புற்றுநோய் வாய்ப்புள்ளவை. இவை உடல் முழுவதும் வேகமாக பரவுகின்றன. அவை பொதுவாக கண்டறியப்படுவதற்கு முன்னரே மற்ற உடல் பாகங்களுக்கு மாற்றங்களை விளைவிக்கின்றன. 

*3. ஓரளவு வீரியம் மிக்க கட்டிகள்:* இத்தகைய கட்டிகள் வீரியம் மிக்கவை அல்லது தீங்கற்றவை. அவை பின்வருமாறு 2 வகைகளாகும்: மெசோதெலியோமாஸ்: இதயத்தின் இத்தகைய கட்டிகள் வீரியம் மிக்கவை மற்றும் மீசோதெலியத்தில்(இதயம், நுரையீரல் மற்றும் வயிற்று குழி ஆகியவற்றைப் பாதுகாக்கும் இது ஒரு சவ்வு) காணப்படுகின்றன. பராகாங்லியோமாஸ்: இவை நியூரோஎண்டோகிரைன்(ஹார்மோன்களை உருவாக்கும் நரம்பு செல்கள்) திசுவில் உருவாகும் புற்றுநோய் அல்லது புற்றுநோயற்ற கட்டிகள். 

*4. மெட்டாஸ்டேடிக்:* இத்தகைய கட்டிகள் பொதுவாக மற்ற உடல் பாகங்களில் எழும் மற்றும் புற்றுநோய் செல்கள் உடைந்து இதயத்திற்கு பரவுகின்றன, அவை இரத்த ஓட்டத்தின் வழியாக இதயத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன, அங்கு அவை டெபாசிட் செய்யப்பட்டு ஒரு கட்டியை ஏற்படுத்துகின்றன.

*இதய புற்றுநோய்க்கான காரணங்கள்..* 

உடலின் எந்தப் பகுதியிலும் உள்ள செல்கள் வளர்ந்து கவனிக்கப்படாமல் பிரிக்கும்போது கட்டிகள் ஏற்படுகின்றன. சில நேரங்களில், டி.என்.ஏவில் பல பிறழ்வுகள் காரணமாக, புற்றுநோய் எழுகிறது. டி.என்.ஏவில் பிறழ்வானது செல் பிரிவு மற்றும் நகலெடுக்கும் செயல்பாட்டின் போது நடைபெறுகிறது. இந்த புற்றுநோய் செல்கள் பிளவுபடும்போது அவற்றின் பிறழ்வை மகள் உயிரணுக்களுக்கு அனுப்புகின்றன, இந்த வழியில், புற்றுநோய் பரவுகிறது. இதுவே இதயப் புற்றுநோய் நிலையில் பார்த்தால், இதய செல்கள் நகலெடுக்காது (காயம் இல்லாவிட்டால்) மற்றும் அவை இரத்தத்தை செலுத்துவதற்கு மட்டுமே பொறுப்பு என்பதை நாங்கள் அறிவோம். எனவே, இந்த உறுப்பில் ஒரு கட்டியின் வளர்ச்சிக்கு வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளது. பிறகு எப்படி நடக்கும் இது நடக்கிறது? 

மருத்துவ நிபுணர்களின் கூற்றுப்படி, இதயம் இணைப்பு திசுக்களால் ஆனது, எனவே அதில் புற்றுநோய் உருவாகுவது மிகவும் அரிதான நிகழ்வு. இதில் இரத்த நாளங்கள் மற்றும் தமனிகள் அதிக அளவில் இருப்பதால், இதயத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இரத்தத்தை செலுத்த உதவுகிறது எனவே இது உறுப்பு இரத்த நாளங்களின் நோய்களுக்கு மட்டுமே ஆளாகிறது. எனவே, சுற்றுச்சூழல் மாசுபாடு, புகைத்தல் மற்றும் டி.என்.ஏ பிறழ்வு போன்ற சில நிரூபிக்கப்படாத காரணிகள் இதயத்தில் முதன்மை தீங்கற்ற கட்டியை உருவாக்க காரணமாகின்றன. ஆனால் இன்னும், இந்த நிலை மிகவும் அரிதானது மற்றும் சரியான காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை.

*இதய புற்றுநோயின் அறிகுறிகள்:* 

இதய புற்றுநோயின் அறிகுறிகள் கட்டியின் இடம், வகை மற்றும் அளவைப் பொறுத்தது. முதன்மை இதய புற்றுநோயின் பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு, 

* கட்டி மேல் இதய அறையில் இருக்கும்போது மூச்சுத் திணறல் மற்றும் சோர்வு. 

* கட்டி ஒரு வென்ட்ரிக்கிளில் இருக்கும்போது மார்பு வலி, மூச்சுத் திணறல், தலைச்சுற்றல் மற்றும் மயக்கம் ஆகியவை இதயத்திலிருந்து இரத்த விநியோகத்தைத் தடுக்கின்றன. 

* இதயத்தின் தசைச் சுவரில் கட்டி இருக்கும்போது மூச்சுத் திணறல், சோர்வு மற்றும் வீங்கிய கால்கள். 

* இதயத்தின் தசைக்குள் கட்டி இருக்கும்போது விடுபட்ட இதயத் துடிப்பு, மயக்கம் மற்றும் இதயத் தடுப்பு ஆகியவை. 

* கட்டி இதயத்திலிருந்து உடைந்து நுரையீரலின் சிறிய தமனியில் சிக்கிக் கொள்ளும்போது ஒழுங்கற்ற இதய துடிப்பு மற்றும் கூர்மையான மார்பு வலி. 

* கட்டி இதயத்திலிருந்து உடைந்து மூளையின் சிறிய தமனியில் சிக்கிக் கொள்ளும்போது பக்கவாதம், குழப்பம் மற்றும் பேசுவதிலும் எழுதுவதிலும் சிக்கல். 

* கட்டி இதயத்திலிருந்து உடைந்து கால்கள் அல்லது கைகளின் சிறிய தமனியில் சிக்கிக்கொள்ளும்போது துடிப்பு இல்லாத மூட்டு மற்றும் குளிர். 

* முதன்மை இதயக் கட்டி தொற்று போன்ற குறிப்பிடப்படாத அறிகுறிகளை ஏற்படுத்தும் போது நைட்ஸ்வீட்ஸ், மூட்டு வலி மற்றும் காய்ச்சல்.

ஆபத்து காரணிகள் இதய புற்றுநோய்க்கான உண்மையான காரணம் தெரியவில்லை என்றாலும், அதற்கு நாம் ஆளாகக்கூடிய சில காரணிகள் பின்வருமாறு:

* வயது 
* புகைபிடித்தல் 
* கரோனரி நோய் 
* உயர் இரத்த அழுத்தம் 
* உடல்பருமன் 
* மோசமான நோயெதிர்ப்பு மண்டலம் 
* மரபணு புற்றுநோய் நோய்க்குறி
* முன் இதய செயலிழப்பு

*இதய புற்றுநோயின் சிக்கல்கள்:* 

இதய புற்றுநோயின் சிக்கல்கள் ஆபத்தானவை மற்றும் உயிருக்கு ஆபத்தானவை. அவை பின்வருமாறு, 

* மற்ற உடல் பாகங்களுக்கு புற்றுநோய் பரவுதல். அல்லது மெட்டாஸ்டாசிஸ் 
* இதய செயலிழப்பு 
* டுயூமர் எம்போலி 
* ஒழுங்கற்ற இதய தாளம்

*இதய புற்றுநோயைக் கண்டறிதல்..* 

இதய புற்றுநோய் அறிகுறிகள் மற்ற இதய நோய்களுக்கு பொதுவானவை, அதனால்தான் நோயறிதல் மிகவும் கடினம். ஆகையால், முதன்மை இதயக் கட்டியின் துல்லியமான நோயறிதலுக்கு பின்வரும் சோதனைகள் உகந்ததாக கருதப்படுகின்றன. 

* இதய வடிகுழாய்ப்படுத்தல் (Cardiac catheterization): கட்டியின் வகை அடையாளம் காணப்படும் ஒரு சோதனை. 
* எலக்ட்ரோ கார்டியோகிராம்: அசாதாரண இதய தாளங்களைக் கண்டறியும் சோதனை. 
* எக்கோ கார்டியோகிராம்: இதயத்தின் இயக்கத்தையும் அதன் வால்வுகளையும் கண்டறிய அல்ட்ராசவுண்ட் அலைகளால் நடத்தப்படும் ஒரு சோதனை. 
* டோமோகிராபி: இதயத்தில் உள்ள அசாதாரணங்களைக் கண்டறியும் ஒரு சோதனை. 
* கரோனரி ஆஞ்சியோகிராபி: எக்ஸ்-கதிர்களைப் போலவே இதயத்தில் உள்ள கட்டியின் வெளிப்புறத்தைக் காட்டும் ஒரு சோதனை. இரத்த பரிசோதனைகள், மார்பு எக்ஸ்ரே மற்றும் இதயத்தின் எம்ஆர்ஐ ஆகியவை மற்ற முறைகளில் அடங்கும்.

*இதய புற்றுநோய்க்கான சிகிச்சை முறைகள் பின்வருமாறு:* 

அறுவைசிகிச்சை: அறுவை சிகிச்சையின் மூலம் அறுவைசிகிச்சை மருத்துவர் புற்றுக்கட்டியை முற்றிலும் அகற்றுவதே இதய புற்றுநோயின் முக்கிய சிகிச்சையாகும். அதனால் இதயத்தின் சரியான செயல்பாட்டை பராமரிக்கலாம். இது பொதுவாக மென்மையான திசு சர்கோமாவுக்கு (soft tissue sarcoma) மேற்கொள்ளப்படுகிறது. 

கீமோதெரபி: இந்த அடிப்படை சிகிச்சை முறையில், சைட்டோடாக்ஸிக் மருந்துகள் இதயத்தின் புற்றுநோய் செல்களை அழிக்கவும் அறிகுறிகளைக் குறைக்கவும் பயன்படுத்தப்படுகின்றன. அறுவைசிகிச்சைக்குப் பிறகு முழுமையான கட்டி மறைந்துவிடாதபோது இந்த முறை மேற்கொள்ளப்படுகிறது. 

நோய்த்தடுப்பு சிகிச்சை: கடுமையான பிரச்சினைகளுடன் வாழும் மக்களுக்கு அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான சிறப்பு கவனிப்பு இது. இதய நிலை தீவிரமடையும் போது, நோயாளியின் அறிகுறிகளை மேம்படுத்துவதற்கு இந்த நோய்த்தடுப்பு சிகிச்சை முக்கியமானது. 

கதிரியக்க சிகிச்சை: இந்த சிகிச்சை முறையில், புற்றுநோய்களின் உயிரணுக்களைக் கொல்லவும், கட்டியின் வளர்ச்சியைக் குறைக்கவும் எக்ஸ்-கதிர்களின் உயர் ஆற்றல் கற்றை பயன்படுத்தப்படுகிறது. இந்த செயல்முறை குறைந்தபட்ச பக்க விளைவுகளை உள்ளடக்கியது. 

வருடாந்திர எக்கோ கார்டியோகிராம்: இந்த முறையில், இதயத்தின் சரியான செயல்பாட்டை சரிபார்க்க இதய வால்வுகள் மற்றும் அறைகளைக் காண எக்கோ டெஸ்ட் அல்லது அல்ட்ராசவுண்ட் போன்ற உயர் அதிர்வெண் ஒலி அலைகள் பயன்படுத்தப்படுகின்றன. கட்டி இருக்கும்போது இந்த முறை பயன்படுத்தப்படுகிறது, ஆனால் எந்த அறிகுறிகளையும் ஏற்படுத்தாது.

இதய புற்றுநோய் தடுப்பு முறைகள்..

* புகைப்பதை நிறுத்துங்கள் 

* மது அருந்துவதைக் கட்டுப்படுத்துங்கள் 

* சூரியன் ஒளி அல்லது அதன் கதிர்வீச்சுக்கு அதிகமாக வெளிப்படுவதைத் தவிர்க்கவும். 

* புற்றுநோய் நோய்அறிதல் சோதனையை சரியான நேரத்தில் திட்டமிடுங்கள்.

யானைக்கால் வீக்கம் தீர

தேவையான பொருட்கள்

திருகு கள்ளிப்பால் – அரை லிட்டர்
பால் – அரை லிட்டர்
தேன் – அரை லிட்டர்

     மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து கலக்கி பாகுபோல் செய்யவும். பிறகு, அதில் ஒரு கிலோ கருங்குறுவை அரிசி மாவைக் கொட்டி கிளறவும். ஆறிய பிறகு, அரை கிலோ நெய் உருக்கி அதில் ஊற்றி பத்திரப்படுத்தவும்.

     இதை தினமும் 10 கிராம் அளவுக்குப் பாலுடன் அதிகாலையில் சாப்பிட்டு வந்தால் யானைக்கால் வீக்கம் தீரும்.

பருமனை குறைக்கும் காய்கறிகள்

1.சுரைக்காய்

சுரைக்காயில நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளது எனவே, இதனை உணவில் சேர்ப்பதனால் அடிக்கடி பசி ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.

2.குடைமிளகாய்

குடைமிளகாயில் உள்ள விட்டமின்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்கள் உடல் எடையை குறைப்பதுடன் உடலை ஆரோக்கியமாகவும் வைக்க உதவுகிறது.

3.வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகமாகவும்,  கலோரிகள் குறைவாகவும் இருப்பதால் இதனை கோடையில் அதிகம் சாப்பிட்டு உடல் எடையை கட்டுப்பாட்டுக்குள் வைக்கலாம்.

4.பசலைக்கீரை

பசலைக்கீரை உடல் எடையை குறைக்கும் உணவுப் பொருட்களில் ஒன்று. இதில குறைவான அளவே கலோரிகள் உள்ளன. எனவே, இது உடல் எடையைக் குறைக்கபெரிதும் உதவுகிறது.

5.ப்ராக்கோலி

ப்ராக்கோலியை வேக வைத்து சாப்பிட்டு வந்தால் உடல் எடையை எளிதாக குறைக்க முடியும்.

6.பீன்ஸ்

பீன்ஸில் உடல் எடையைக் குறைக்கக் கூடிய விட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துகள் உள்ளது. அதுமட்டுமின்றி இதில் ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளது. எனவே இதனை நாம் உணவில் சேர்ப்பதன் மூலம் உடல் எடையை விரைவாகக் குறைக்கலாம்.

7.வெங்காயம்

வெங்காயத்தில் உடலில் தங்கியுள்ள கொழுப்புகளை கரைக்கும் சக்தி அதிகமாக உள்ளது. எனவே, உடல் எடையை எளிதில் குறைக்கலாம். அதுமட்டுமின்றி இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.

8.ஆளி விதை

எடையைக் குறைக்க நினைக்கும் ஆண், பெண் என இருபாலரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஓர் ஆரோக்கியமான விதை தான் ஆளி விதை. இதை உணவுகளின் மீது தூவி சாப்பிடலாம். இப்படி தூவி சாப்பிட்டால், அதில் உள்ள நார்ச்சத்து நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுப்பதோடு, அதிகளவு உணவு உட்கொள்வதையும் தடுக்கும். அதற்கு ஆளி விதையை அன்றாடம் நீங்கள் சாப்பிடும் உணவுகளின் மீது தூவி சாப்பிடலாம்.

9.ப்ராக்கோலி

உடல் எடையையும் குறைக்க உதவும் உணவுகளுள் ஒன்று. இதில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. உணவில் சேர்த்து கொள்வதின் மூலம் உடல் பருமனை குறைக்க முடியும்
 
10.கேரட்

கேரட் கண்களுக்கு நல்லது. அதுமட்டுமின்றி உடல் எடையைக் குறைப்பதில் கேரட் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.

11.தக்காளி

தக்காளி உடல் எடையை குறைத்திடவும் அழகான சருமத்தை பெறவும் பெரிதும் உதவுகிறது.

12.பாகற்காய்

கசப்பான பாகற்காய் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைப்பதுடன், உடல் எடையை எளிதாக குறைக்கும்

13.முட்டைக்கோஸ்

பச்சை இலைக்காய்கறிகளுள் ஒன்றான முட்டைக்கோஸில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் உள்ளதால், இதனை உட்கொள்ள, நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருப்பதால், உடல் எடையைக் குறைக்கும்

சிறுநீரகக்கல் பெண்களுக்கு அதிகம்

சிறுநீரகத்தில் ஏற்படும் கற்கள் குறித்து பல சந்தேகங்களும் கேள்விகளும் எப்போதும் நம்மிடம் உண்டு. ஆண்களுக்கு மட்டும்தான் பெரும்பாலும் இப்பிரச்னை ஏற்படும் என்ற பொதுவான கருத்தும் உண்டு. இதேபோல், சிறுநீரகக்கல் பாதிப்புக்கு ஒருவர் ஆளாகிவிட்டால் அறுவை சிகிச்சை செய்துதான் ஆக வேண்டும் என்றும் பலர் பயமுறுத்துவார்கள்.

அதேபோல், இயற்கை மருத்துவத்தின்மூலம் சிறுநீரகக்கல்லை அகற்றுகிறேன் என்று தவறான சுய மருத்துவம் செய்துகொள்கிறவர்களும் உண்டு. இந்த சந்தேகங்களுக்கு சரியான பதிலை விளக்குகிறார் ஆயுர்வேத மருத்துவர் ராதிகா.

சிறுநீரகத்தில் கற்கள் எதனால் வருகிறது?

சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதற்கு முக்கியமானதொரு காரணம் சரியான அளவில் தண்ணீர் குடிக்காததுதான். இது பலருக்கும் தெரியும். உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் உட்கொள்ளும்போது நம் உணவின் வழியாக நாம் உட்கொண்ட நச்சுப்பொருட்கள் அல்லது அவற்றில் உள்ள தேவையற்ற உப்புகள் சிறுநீர் வழியே வெளியேறி விடுகிறது.

ஆனால், தண்ணீர் சரிவர குடிக்காதபோது உடலில் உள்ள உப்பு முழுவதும் வெளியேறாமல் சிறிது சிறிதாக கற்களாக மாறிவிடுகிறது. இதுதவிர சிறுநீரகக் கற்கள் உருவாவதற்கு மற்றுமொரு காரணம் சிறுநீரை அடக்கிக்கொள்வதும் முக்கிய காரணமாகிறது. சரியான அளவு இடைவெளியில் சிறுநீரை வெளியேற்றாமல் அடக்குவது, சிறுநீரை அடக்குவதை தொடர்ந்து வழக்கமாக்கிக் கொள்வது ஆகியவையும் ஆகும்.

பொதுவாக ஆண்களுக்குதான் அதிகமாக சிறுநீரகக் கற்கள் உருவாகின்றன என்ற ஒரு கருத்து உள்ளது. அது தவறு. இது முழுவதுமாக ஆண்களுக்கு மட்டுமே வருகின்றன என்று உறுதியாக கூற முடியாது. அவ்வாறு நிரூபிக்கப்படவும் இல்லை. பெண்களுக்கும் சிறுநீரகக் கற்கள் உருவாவது இயல்பே. சரியான அளவு தண்ணீர் உட்கொள்ளாத நபர் யாராயிருப்பினும் அவர்களுக்கு கற்கள் உருவாகிறது.

நம் நாட்டில் இன்னும் போதுமான கழிப்பிட வசதிகள் இல்லை. இதன் காரணமாகவே பெரும்பாலான பெண்கள் அதிகம் தண்ணீர் குடிப்பது இல்லை. வீட்டை விட்டு வேலை காரணமாகவோ, பயணம் காரணமாகவோ வெளியே சென்றால் அது பெரிய அவஸ்தையையும் உண்டுபண்ணிவிடுகிறது. சிறுநீர் கழிக்க வேண்டும் என்கிற உணர்வு ஏற்படும்போது, ‘கழிவறை எங்கே இருக்கிறது’ என்ற கேள்வியைக் கேட்கக்கூட பலர் தயங்குவார்கள். இந்த நெருக்கடியான சூழலால் பெண்களுக்கும் அதிகம் சிறுநீரகக்க் கற்கள் பிரச்னை சமீபகாலத்தில் அதிகமாகி வருகிறது. எனவே, பெண்கள் கவனமாக இருக்க வேண்டும்.

ஆயுர்வேதத்தில் என்னென்ன சிகிச்சைகள் உள்ளன?

அலோபதி மட்டுமல்லாமல் சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருத்துவத்திலும் சிறுநீரகக் கற்களை கரைப்பதற்கான வழிகள் அதிகப்படியாக உள்ளன. ஆரம்ப நிலையில் அல்லது கற்களின் அளவைப் பொறுத்து முறையாக சிகிச்சை பெற்றால் அறுவை சிகிச்சை இல்லாமலேயே சிறுநீரகக் கற்களை எளிதில் கரைக்க முடியும்.சிறுநீரகக் கற்கள் வந்து சிகிச்சை பெற்று கரைந்த பின்னும் திரும்பத்திரும்ப வரும் என்பது பற்றி...

ஆயுர்வேத மருத்துவத்தில் சிறுநீரகக் கற்கள் உருவானதற்கான காரணம், உடலில் உள்ள கால்சியத்தின் அளவு மற்றும் உணவு முறை ஆகியவற்றை கருத்தில் கொண்டே சிகிச்சையை அணுகுவதால் கற்கள் திரும்ப உருவாவதற்கான காரணம் மிகக் குறைவு.

அது தவிர கற்கள் திரும்ப உருவாவது என்பது அந்த நபரின் தண்ணீர் அருந்தும் அளவு மற்றும் உணவு முறையை சார்ந்தது. சிறுநீரகக் கற்களை கரைப்பதற்கு சிகிச்சையின் போதே நிறைய தண்ணீர் உட்கொள்ள அறிவுறுத்தப்படும். சிகிச்சை முடிந்து கற்கள் கரைந்த பின் சரியான அளவு தண்ணீர் அருந்துவதை தவிர்க்கவோ அல்லது குறைத்துக் கொண்டாலோ மீண்டும் வருவதற்கு வாய்ப்புகள் உண்டு.

காய்கறிகள், பழங்கள், பழச்சாறுகள் அதிகப்படியாக உட்கொள்பவர்களுக்கு உடலில் நீர்ச்சத்து அதிகரிக்கும். ஆனால், அமிலத்தன்மை மற்றும் காரத்தன்மை கொண்ட உணவை அதிகம் விரும்பி உண்பவர்கள் அதிக அளவு தண்ணீர் அருந்துவது அவசியம். அவ்வாறு தண்ணீர் அருந்தும்போது உடலில் உள்ள உப்புகள் அனைத்தும் வெளியேறிவிடும். கற்கள் உருவாகாது.

சிறுநீரகக் கற்கள் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவு...விதைகள் உள்ள காய்கறிகள், பால் சார்ந்த உணவுப் பொருட்கள், சுண்ணாம்பு சத்துள்ள உணவுகள் இவற்றை குறைத்துக் கொள்வது அவசியம். குறிப்பாக தக்காளியை தவிர்ப்பது அவசியம். தவிர்க்க முடியாதவர்கள் அதில் உள்ள சதை பாகத்தை நீக்கிவிட்டு உணவில் சேர்த்துக் கொள்ளலாம். சிகிச்சையின் போது இடையிடையே வாழைத்தண்டை ஜூஸாகவோ அல்லது பொரியலாக உணவில் சேர்த்துக் கொள்வது நல்ல பலன் தரும்.

ஆயுர்வேதத்தில் உள்ள கற்களை கரைக்கும் மூலிகைகள்பாஷாணபேதி, சிறுநெருங்சில்முள், மூக்கிரட்டை மூலிகை போன்றவற்றில் கஷாயம் செய்து சாப்பிட்டு வர கற்கள் கரைய ஆரம்பிக்கும். முக்கியமாக இன்றைய தலைமுறையினர் பலரும் சிறுநீரகக் கற்களால் அவதியுறுகின்றனர். அவர்களுக்கு எளிதான முறையில் கற்களை கரைக்க மேற்கண்ட மூலிகைகளை கஷாயமாக்கி எடுத்துக் கொள்ளும்போது நல்ல பலனளிக்கும்.

சிறுநீரகக் கற்களுக்கு அறுவை சிகிச்சை அவசியமா?
கற்களின் அளவைப் பொறுத்து அறுவை சிகிச்சை அவசியமா இல்லையா என்பது தீர்மானிக்க முடியும். 11, 12 மி.மீட்டர் அளவு வரை ஆயுர்வேதத்தில் கற்கள் கரைத்திருக்கிறோம். அதற்கு மேல் செல்லும்போது ஆயுர்வேத மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு கற்களின் அளவு குறைய ஆரம்பிக்கும் பட்சத்தில் அறுவை சிகிச்சைக்கு அவசியம் ஏற்படாது...

மஹாலக்ஷ்மி 100

1. மகாலட்சுமி தாமரைப் பூவில் வாசம் செய்பவள். சித்தி, புத்தி, போகம், முக்தி தருபவள்.

2. மகாலட்சுமிக்கு ஈஸ்வரி, ஹரண்யமயி, ஹரிணி, சூர்யா, பிங்களா, புஷ்கரிணி, சந்திரா என்ற பெயர்களும் உண்டு.

3. லட்சுமிக்கு பிரியமான பூ செவ்வந்தி எனப்படும் சாமந்திப்பூ.

4. நெல்லிமரத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதால் துவாதசியன்று நெல்லிக்கனியை உணவில் சேர்த்துக் கொண்டால் ஏகாதசி விரதத்தின் பலன் கிடைக்கும்.

5. ஆதி சங்கரருக்கு துவாதசியன்று நெல்லிக்கனி தானம் செய்த பெண்மணிக்கு அவர் கனகதாரா ஸ்தோத்திரம் பாடி லட்சுமி அருளால் பெருஞ்செல்வம் கிடைக்கச் செய்தார்.

6. மகாலட்சுமி வில்வ மரத்தில் இருப்பதால் மாதப்பிறப்பு, அமாவாசை, பவுர்ணமி, சதுர்த்தி, அஷ்டமி, நவமி, திங்கட்கிழமை ஆகிய நாட்களில் வில்வத்தை மரத்திலிருந்து பறிக்கக் கூடாது.

7.பசுவின் பின்புறத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். இதனால் கோவில்களில் காலையில் கோபூஜை செய்தபின் தரிசனம் ஆரம்பமாகிறது.

8. மகாவிஷ்ணுவிற்குப் பிடித்த துளசி லட்சுமியின் அம்சம் ஆகும். வீட்டில் துளசி மாடம் வைத்து தினமும் அதை சுற்றி வந்து வழிபட்டு வந்தால் எல்லாச் செல்வங்களும் கிடைக்கும்.

9. வாழை, மாவிலை, எலுமிச்சம்பழம் ஆகியவைகளிலும் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். அதனால்தான் சுபகாரியங்களில் இவை பயன்படுத்தப்படுகின்றன.

10. தலைமுடியின் முன் வகிட்டில் மகாலட்சுமி வாசம் செய்வதால் திருமணமான பெண்கள் முன்வகிட்டில் குங்குமம் இட்டுக் கொள்கின்றனர்.

11. தீபாவளியன்று அதிகாலை மட்டும் மகாலட்சுமி நல்லெண்ணையில் வாசம் செய்கிறாள்.

12. யானையின் முகத்திலும் குதிரையின் முகத்திலும் லட்சுமி வாசம் செய்கிறாள்.

13. ஸ்ரீவைஷ்ணவத்தை நிலை நாட்டிய வேதாந்த தேசிகர் ஸ்ரீஸ்துதி என்னும் ஸ்தோத்திரத்தில் ஸ்ரீமகாலட்சுமியை மங்களத்துக்கெல்லாம் மங்களமானவள் என்று புகழ்ந்து பாடுகிறார்.

14. ஒரு பக்தனுக்கு பகவானின் அனுக்ரகம் வேண்டும் என்றால் புருஷகார பூதையான மகாலட்சுமியை முதலில் சரணடைய வேண்டும்.

15. நம்மாழ்வார் அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா என்று கணப்பொழுதுகூட பிரியாது மகாவிஷ்ணுவுடன் கூடி இருக்கும் மகாலட்சுமியை சரணடைவதே உயர்ந்தது என்று கூறியுள்ளார்.

16. திருமழிசையாழ்வாருக்கு குழந்தைப் பருவத்தில் ஞானப்பால் ஊட்டியது மகாலட்சுமியே.

17. குபேரனிடம் செல்வம் இருந்தாலும் அத்துடன் புகழ், ஆரோக்கியம், நல்வாழ்வு போன்ற பல செல்வங்களை உரியவர்களுக்கு வாரி வழங்குபவள் ஸ்ரீ மகாலட்சுமியே.

18. மகாவிஷ்ணுவுடன் இருக்கும் பொழுது லட்சுமிக்கு இரண்டு கரங்கள். ஆனால் தனியாக சன்னதியிலோ அல்லது தனிக் கோவிவிலோ நான்கு கரங்கள் கொண்டவள். முன் இரு கரங்கள் அபய வரத ஹஸ்தங்கள். பின் இரண்டு கரங்களில் தாமரை மலர் ஏந்தி இருப்பாள்.

19. வீரம் உடையவர்கள், சோம்பல் இல்லாமல் சுறுசுறுப்பாக இருப்பவர்கள், தவம் உடையவர்கள், ஈகை குணம் கொண்டவர்கள் செல்வத்தை நன்குஅனு பவிப்பவர்கள் ஆகியவர்களை நான் அடைகிறேன் என்கிறாள் மகாலட்சுமி.

20. மகாலட்சுமி ஓரிடத்தில் நிலைக்க மாட்டாள். அதனால் சஞ்சலா, சபலா என்ற பெயர்களும் அவளுக்கு உண்டு.

21. லட்சுமி பிரம்மனுடன் பிறந்தவள். இருவர் நிறமும் செம்பொன் நிறமாகும்.

22. லட்சுமிக்கு உலூகம் எனப்படும் ஆந்தை ஒரு வாகனம். மேற்கு வங்கத்தில் லட்சுமி பூஜையின்போது ஆந்தையை வழிபடுவது வழக்கம்.

23. மகாலட்சுமியின் பரிபூரண அருளைப் பெற்றது சுக்கிர வாரம் எனப்படும் வெள்ளிக்கிழமை. சுக்கிரனின் அதிதேவதை மகாலட்சுமி. எனவே வெள்ளிக்கிழமைகளில் சூரியன் உதயமான இரண்டு மணி நேரத்திற்குள் பூஜிப்பது. தரிசனம் செய்வது ஆகியவை மகாலட்சுமியின் அருள் பெற உதவும்.

24. லட்சுமிக்கு ஏற்ற நாள் வியாழக்கிழமை மாலை குபேர காலம் எனப்படுகிறது. பவுர்ணமியில் வரும் வியாழன் சிறப்பு. வளர்பிறை பஞ்சமி, வெள்ளியன்று வரும் அஷ்டமியும் சிறந்தது.

25. லட்சுமியின் திருக்கரங்கள் ஸ்வர்ண ஹஸ்தம் எனப்படுகிறது. எல்லா லட்சுமிகளும் அபய வரத ஹஸ்தத்துடன் அருள்புரிகின்றார்கள்.

26. லட்சுமியின் பெருமையை ஸ்ரீசூக்தம், ஸ்ரீசுதுதி, கனகதாரா ஸ்தோத்திரம், மகாலட்சுமி அஷ்டகம், அஷ்டோத்திர சதநாமாவளி ஸ்தோத்திரம் போன்றவை விளக்குகின்றன.

27. வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்களுக்கு அஷ்டபோக பாக்கியங்களும் கிடைக்கும்.

28. லட்சுமி செல்வத்தின் அதிபதி. தீபாவளி அன்று லட்சுமி பூஜை செய்வதால் செல்வம் இரட்டிப்பாக பெருகும்.

29. புதுக்கணக்கு எழுதுபவர்கள் தீபாவளி அன்று லட்சுமி பூஜை செய்து விட்டு நோட்டுப் புத்தகங்களின் மீது சந்தனம், மஞ்சள், குங்குமம் வைத்து மலர்தூவி பூஜை செய்து பிறகு வியாபாரத்தை ஆரம்பிப்பார்கள்.

30. வருத்தத்தால் மகாவிஷ்ணுவைப் பிரிந்த மகாலட்சுமி விஷ்ணுவை திரும்பவும் சேர்ந்த இடம் ஸ்ரீவாஞ்சியம் என்ற தலம். நன்னிலத்திற்கு அருகில் உள்ளது. ஸ்ரீ என்றும், திரு என்றும் அழைக்கப்படும் மகாலட்சுமியை விஷ்ணு வாஞ்சையால் விரும்பி சேர்ந்த இடம் இத்தலம் என்பதால் இத்தலத்திற்கு ஸ்ரீவாஞ்சியம் (திருவாஞ்சியம்) என்ற பெயர் ஏற்பட்டது.

31. மகாலட்சுமியை நவராத்திரி நேரத்தில் வணங்க சகல நன்மை கிடைக்கும்.

32. அதிகாலையிலும், மாலையிலும் வீட்டில் பெண்கள் விளக்கேற்றி வைத்து லட்சுமியை வரவேற்க லட்சுமி சுலோகங்கள், அஷ்டகம் போன்றவற்றைச் சொல்லிக் கொண்டிருந்தால் லட்சுமியின் அருள் கிடைக்கும்.

33. இந்திரன் மகாலட்சுமியை 4 பாகங்களாக நிலை பெறச் செய்தான். அவை பூமி, அக்னி, நீர் மற்றும் உண்மை பேசும் மனிதர்கள். இந்த இடங்களில் மகாலட்சுமி நிலையாக இருப்பாள்.

34. கோமாதா (பசு)வை தெய்வமாக மகாலட்சுமியின் அம்சமாகக் கருதி பூஜை செய்வது நம் நாட்டில் உள்ள பழக்கம். பசுவின் பின்புறம் மகாலட்சுமி வசிக்கிறாள் என்பதால் அதிகாலையில் பசுவின் பின்புறத்தைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொள்ள வேண்டும்.

35. லட்சுமிக்கு முன் தோன்றியவள் மூதேவி. லட்சுமிக்குப் பிறகு பிறந்தவள் வாருணி. இவள் மது போன்ற மயக்கம் தரும் வஸ்துக்களுக்கு தேவதை.

36. லட்சுமியின் திருக்குமாரர்கள் கர்தமர், சிக்லீதர்.

37.மகாலட்சுமியை நாராயணன் திருப்பாற்கடலில் சித்திரை, தை, புரட்டாசி மாதங்களில் பூஜிக்கிறார்.

38.பிரம்ம தேவன் மகாலட்சுமியை புரட்டாசி மாத சுக்லாஷ்டமியில் பூஜிக்கிறார்.

39.மனுதேவன் மகாலட்சுமியை வருஷ முடிவிலும், தை, மாசில மாத சங்கராந்தியிலும் பூஜிக்கிறார்.

40.தேவேந்திரன் மகாலட்சுமியை பூஜித்து அஷ்ட ஐஸ்வர்யங்களையும், ஐராவத்தையும், அமராவதி பட்டணத்தையும் பெற்றார்.

41. செல்வத்தை ஒருவருக்கு வாரி வழங்கும் தெய்வம் மகாலட்சுமி. அவளது அருள் இருந்தால் ஒரே நாளில் குபேரன் ஆகிவிடலாம்.

42. பூரணகும்பம், மஞ்சள், குங்குமம், திருமண் சூர்ணம், கோலம், சந்தனம், வாழை, மாவிலை தோரணம், வெற்றிலை, திருவிளக்கு, யானை, பசு, கண்ணாடி, உள்ளங்கை, தீபம் ஆகிய மங்கள பொருட்களில் மகாலட்சுமி நித்தியவாசம் புரிகிறாள்.

43. வில்வ மரம், நெல்லி மரம், துளசி, மஞ்சள் செடிகளிலும் மகாலட்சுமி வாசம் செய்கிறாள்.

44. லட்சுமியை வில்வத்தால் அர்ச்சனை செய்து பூஜிக்கலாம்.

45. மகாலட்சுமியை சாமந்திப்பூ, தாழம்பூ இலைகளாலும் அர்ச்சிக்கலாம்.

46. வில்வமரத்தை வலம் வருவது மகாலட்சுமியை வலம் வருவதற்கு சமமாகும்.

47. வாமன புராணத்தில் மகாலட்சுமியின் திருக்கரங்களில் இருந்து வில்வ விருட்சம் தோன்றியது என்று கூறப்பட்டுள்ளது.

48. வில்வ மர முட்கள் சக்தி வடிவம், கிளைகள் வேதம், வேர்கள் 14 கோடி ருத்ரர்கள் என்று கருதப்படுகிறது. இவ்வளவு சிறப்பு கொண்ட வில்வ மரமே மகாலட்சுமி சொரூபமாக விளங்குகிறது.

49. நெல்லிக்கனி இருக்கும் இல்லத்தில் மகாலட்சுமி நிரந்தரமாக வாசம் புரிகிறாள் என்பது ஐதீகம்.

50. துளசி செடியிலும் மகாலட்சுமி எழுந்தருளி வாசம் செய்கிறாள். இதேபோல் மஞ்சளிலும் இருக்கிறாள். அதனால் துளசி செடியுடன் மஞ்சள் செடியையும் சேர்த்து நம் வீட்டில் வளர்ப்பது நல்லது.

51. ஸ்ரீ மகாலட்சுமிக்கு இரண்டு ரூபங்கள் உண்டு. ஒன்று ஸ்ரீதேவி என்ற லட்சுமி. மற்றொன்று பூதேவி என்ற பூமிதேவி வடிவம்.

52. லட்சுமிதேவி, வைகுண்டத்தில் ரமாதேவி, சொர்க்கத்தில் சொர்க்கலட்சுமி, பாதாள உலகில் நாகலட்சுமியாக இருக்கிறாள். அவள் ராஜாக்களிடம் ராஜ லட்சுமியாகவும் விளங்குகின்றாள். விலங்குகளிடத்தில் சோம லட்சுமியாகவும், புண்ணியவான்களிடம் ப்ரீதிலட்சுமியாகவும் வேதாந்திகளிடம் தயாலட்சுமியாகவும் இருக்கிறாள்.

53. திருமால் கோவில்களில் பகவானுடைய மார்பில் உள்ள லட்சுமிக்கு யோகலட்சுமி என்றும், இருபக்கமும் உள்ள தாயாருக்கு போகலட்சுமி என்றும், தனிச்சன்னதியில் அருள்புரிபவளுக்கு வீரலட்சுமி என்றும் பெயர்.

54. லட்சுமி மாதுளம் கனியிலிருந்து உதித்ததால் மாதுளங்கி என்றும், பத்மாசனால் வளர்க்கப்பட்டதால் பத்மா என்றும், அக்னி குண்டத்தில் வாசம் செய்ததால் அக்னிகர்ப்பை என்றும், ரத்தின வடிவம் எடுத்ததால் ரத்தினாவதி என்றும், ஜனக மகாராஜனுக்கு மகளானதால் ஜானகி என்றும், பூமிக்குள்ளே கலப்பையின் நுனியிலிருந்து வெளியேற்றப்பட்டமையால் சீதை என்றும் பாற்கடலிலிருந்து தோன்றியதால் ஸ்ரீ என்றும் போற்றப்படுகிறாள்.

55. தீபாவளித் தினத்தன்று லட்சுமியை கொண்டாடுவதால் மகாலட்சுமியின் பேரருளைப் பரிபூரணமாக பெறலாம்.

56. சாஞ்சி ஸ்தூபத்தில், ஒரு கம்பத்திலும் சாரநாத் தோரணத்திலும், யானைகள் உடைய திருமகள் உருவங்களைக் காணலாம்.

57. பல்லவர் காலத்துச் சிற்பங்களில் கஜலட்சுமியை காண முடியும். கஜலட்சுமியின் உருவங்கள் இரண்டு மாமல்லபுரத்தில் உள்ளது.

58. திருக் குறுங்குடியில் கோபுர முகப்பின் நடுவில் அபூர்வமான செதுக்கு வேலைப்பாடு அமைந்த கஜலட்சுமியைப் பார்க்கலாம்.

59. சீல கிரந்தம் எனும் புத்த நூல் மகாலட்சுமி வழிபாட்டினை விளக்குகிறது.

60. கி.பி. முதல் இரண்டாம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த குஷானர்களின் சிற்ப ரீதியில் அமைந்த, செந்நிறக் கல்லால் ஆன, சற்றுச் சிதைந்த லட்சுமியின் உருவம் ஒன்று டில்லி காட்சிச் சாலையில் உள்ளது.

61. ஜைனர்கள் மகாலட்சுமியை ஜீவஜகத்தின் தென்புறத்துப் பாதியைக் காக்கும் தேவதைகளில் ஒருத்தியாகப் பாவிக்கின்றனர். தீபாவளியின்போது இவளை வழிபடுகின்றனர்.

62. மகாலட்சுமி வடிவங்கள் எவ்வாறு அமைய வேண்டுமென லட்சண கிரந்தங்கள் உள்ளன. அம்சுபேதாகமத்தின் படி, திருமகள் தாமரையில் வீற்றிருப்பாள்.

63. வராக அவதாரத்தில் திருமால் பூமியை தோண்டி விட்டுத் தம் சிரமத்தை மறந்திருக்கத் திருமகளைத் தம் தொடை மீது நிறுத்தி இன்பமடைகிறார். மாமல்லபுரத்தில் இவ்வமைப்புடைய சிலை உள்ளது.

64. பில்லர்கள் எனும் தொல்குடியினரின் தெய்வம் லட்சுமியே.

65. தென்னாட்டில் மாலர் என்ற வகுப்பினர் ஆறு கலயங்களை அடுக்கி அவற்றைத் திருமகளாகப் பாவித்துக் கும்பிடுகின்றனர்.

66. குஜராத்தில் லட்சுமி பூஜை ஒரு விசேஷ நிகழ்ச்சியாகும். அவர்கள் வழிபடும் லட்சுமியின் கையில் வீணை இருக்கும்.

67. மகாராஷ் டிரத்தில் உழவர்கள் லட்சுமியை பயிர் வளத்தைக் காட்டும் தேவதையாக கருதுகிறார்கள். ஒரு மரத்தின் கீழ் ஐந்து கற்களை நிறுத்தி அதற்கு மஞ்சள் குங்குமம் இட்டுக் கோதுமை மாப்படையல் சாத்துவர். மாலைப்பொழுது இளங்கதிர்களைக் கொய்து வீட்டுக்குக் கொண்டு வருவார்கள். அத்துடன் துணியில் மறைத்த ஒரு விளக்கினையும் ஏந்தி வருவர். அதுவே அவர்களுடைய லட்சுமி.

68. ராஜஸ்தானில் லட்சுமியை அன்னபூரணியாக வழிபடுகின்றனர். தானியம் அளக்கும் காரி என்ற மரக்காலை லட்சுமி வடிவமாக அமைத்துத் தாமரைப் பூக்களால் அலங்கரித்து அவர்கள் வழிபடுவது உண்டு.

69. இந்தோசீனாவிலும் திருமகளின் வழிபாடு உள்ளது. அவள், தலையில் முத்துக்கிரீடமும், கைகளில் வளையல்களும் அணிந்திருப்பாள். மேற்புறக் கைகளில் சங்கு சக்கரம் இருக்கும். நாகக்குடை பூண்டிருப்பாள். கல்லறைகள் மீது திருமகள் உருவைப் பொறிப்பது அந்நாட்டு வழக்கம். 

70. கோஜாகர பூர்ணிமை விரதம் வங்காளிகளிடையே நிலவும் லட்சுமி பூஜையாகும்.

71. லட்சுமி பூஜை செய்யும் போது, நம் வீட்டுக்கு வரும் விருந்தினர்களை நாம் எப்படி உற்சாகமாக வரவேற்போமோ, அதே மாதிரி வாசலில் நின்று லட்சுமியை பாவனை செய்து அழைக்க வேண்டும்.

72. வரலட்சுமி விரத பூஜை நடத்தப்படும் வீடுகளில் மகாலட்சுமி வாசம் செய்வாள்.

73. லட்சுமி வழிபாட்டால் நீண்ட ஆயுள், புகழ், செல்வம், உடல் நலம் உண்டாகும்.

74. வரலட்சுமி விரத பூஜை செய்தால் உடனடியாக திருமண யோகம் கைகூடும்.

75. எட்டு விதச் செல்வங்களை தருவதுடன் தாலிப் பாக்கியத்தையும் வரலட்சுமி வழங்குகிறாள். இதனால் தான் மணமான பெண்கள் மகாலட்சுமியை போற்ற வரலட்சுமி விரதத்தை மேற்கொள்ளுகின்றனர்.

76.மகாலட்சுமிக்கு உகந்தது நெய் விளக்காகும். சகலவித செல்வத்தையும் வீட்டில் நலனையும் தருவது நெய் விளக்கு வழிபாடுதான். எனவே இதை மறக்கக்கூடாது.

77. பூஜை செய்யும் போது மகாலட்சுமிக்குரிய பாராயணப் பாடல்களை பாடித் தியானிக்கலாம்.

78. வரலட்சுமி நோன்பை கடைபிடித்தவர்கள் பெரும் பயனை அடைந்தார்கள் என்று பத்ம புராணம் கூறுகிறது.

79. வீடுகளில் லட்சுமி படம் வைத்து வெள்ளிக்கிழமைகளில் தூபம் காட்டி, தீபாராதனை செய்ய வேண்டும். உப்பு பாத்திரத்தில் உப்பு குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எட்டுவித நல்லெண்ணை கலந்து காலையும் மாலையும் தீபம் ஏற்றினால் லட்சுமிக்கு மிகவும் பிடிக்கும்.

80. நாம் செய்யும் பாவ, புண்ணியந்த்துக்கு ஏற்பவே லட்சுமி நமக்கு செல்வத்தை வழங்குவாள்.

81. மகாலட்சுமி நித்திய சுமங்கலி என்று அழைக்கப்படுகிறாள். எனவே தான் அவளை நினைத்து பெண்கள் வரலட்சுமி விரதம் மேற் கொள்கிறார்கள்.

82. வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்களிடம் அஷ்ட லட்சுமி களும் மகிழ்ந்து அன்புடன் இருப்பார்கள் என்பது ஐதீகம்.

83. மகாலட்சுமி கணவரின் மார்பில் பொறுமையுடன் இருப்பவள். எனவே அவளுக்கு நன்றி தெரிவிக்கும் விரதமாக வரலட்சுமி விரதம் கருதப்படுகிறது.

84. மகாலட்சுமிக்கு மஞ்சள் நிறப்பட்டு என்றால் பிரியம் அதிகம்.

85.லட்சுமி, அனைவருக்கும் நன்மை தருபவள் என்று அதர்வன வேதத்தில் கூறப்பட்டுள்ளது.

86. வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்களுக்கு மாங்கல்ய பலம் நீடிப்பதோடு செல்வம், தைரியம், வெற்றி, அரசு பதவி, குழந்தைப் பேறு, கல்வி உள்ளிட்ட எல்லா வளங்களும் வந்து சேரும்.

87. வரலட்சுமி தினத்தன்று அன்னம், பருப்பு, வடை, பாயசம், கொழுக்கட்டை, அப்பம், இட்லி முதலியவற்றுடன் பழவகைகளை நைவேத்தியம் செய்ய வேண்டும்.

88. வரலட்சுமி பூஜைக்கு கொழுக்கட்டை நைவேத்தியமே பிரதானமானது.

89. வரலட்சுமி பூஜையின் போது அருகம்புல்லை தூவி வழி பட்டால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

90. வரலட்சுமி பூஜைக்கு பயன்படுத்தும் கும்பத்தை பிறகு பத்திரப்படுத்தி, சுத்தமான இடத்தில் வைத்துக் கொள்ளலாம். வேறு பூஜைகள் நடத்தும் போது அதை பயன்படுத்தலாம்.

91. வரலட்சுமி பூஜைக்கு பயன் படுத்தும் கும்பம் எதிர்பாராத விதமாக நெளிந்து விட்டாலோ, சேதம் அடைந்து விட்டாலோ, வீட்டில் வைத்துக் கொள்ளக்கூடாது. தானமாக கொடுத்து விட வேண்டும்.

92. வரலட்சுமி பூஜையின் போது சந்தனத்தில் லட்சுமி செய்து வழி படலாம். ஆனால் மறுநாள் அதை நீர் நிலைகளில் கரைத்து விட வேண்டும்.

93. வரலட்சுமி தினத்தன்று புண்ணிய நதிகளில் நீராடலாம். இது ஓராண்டு லட்சுமி வழிபாட்டுக்குரிய பலன்களை நமக்குத் தரும்.

94. வரலட்சுமி பூஜை தினத்தன்று சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள், குங்குமம் கொடுத்து வணங்கினால் நல்லது.

95. வரலட்சுமியை எந்த அளவுக்கு தாமரை மலர்களால் அலங்கரித்து வழிபாடு செய்கிறோமோ, அந்த அளவுக்கு புண்ணியம் சேரும்.

96. சித்ரநேமி என்ற கணதேவதை வரலட்சுமி விரதத்தை அனுஷ்டித்து தன்னுடைய குஷ்ட ரோகம் நீங்கப் பெற்றாள்.

97. பார்வதி தேவி ஸத்புத்திர லாபத்திற்காக வரலட்சுமி விரதத்தை அனுஷ்டித்து சண்முகனைப்பெற்றாள்.

98. விக்ரமாதித்தன் இந்த விரதத்தை அனுஷ்டித்து இழந்த ராஜ்ஜியத்தை திரும்பப்பெற்றான்.

99. நந்தன் இந்த விரதத்தை கடை பிடித்து அழகிய மனைவியை அடைந்தான்.

100. லட்சுமி, வழிபாட்டின் போது மறக்காமல் அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம் சொல்வது மிகவும் நல்லது.


பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...