Showing posts with label கட்டுரை. Show all posts
Showing posts with label கட்டுரை. Show all posts

Tuesday, August 18, 2026

"நகர்ப்புற நக்சல்" (Urban Naxal)

செயல்பாடுகள் மற்றும் சட்டப் பின்னணி

​1. அறிமுகம் மற்றும் சொல்லாடலின் தோற்றம்

"நகர்ப்புற நக்சல்" (Urban Naxal) என்பது இந்திய அரசியல், ஊடகம் மற்றும் பொது விவாதங்களில் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு சொல்லாடலாகும். நகரங்களில் வாழ்ந்துகொண்டு, தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் (நக்சலைட்) அமைப்புகளுக்குக் கருத்தியல், சட்டம், நிதி மற்றும் தளவாட ஆதரவுகளை வழங்கும் புத்திஜீவிகள், எழுத்தாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களைக் குறிக்க இச்சொல் பயன்படுத்தப்படுகிறது.

  • சொல் உருவாக்கம்: இச்சொல் 2018-ஆம் ஆண்டு திரைப்பட இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி எழுதிய 'Urban Naxals: The Making of Buddha in a Traffic Jam' என்ற புத்தகத்தின் மூலம் பொதுவெளியில் பெரும் கவனத்தைப் பெற்றது. மாவோயிஸ்ட் வலைப்பின்னல்கள் பல்கலைக்கழகங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் ஊடகங்களில் செயல்படுவதாக அவர் அதில் வாதிட்டார்.
  • பீமா கோரேகான் வழக்கு (2018): 2018 எல்கார் பரிஷத் / பீமா கோரேகான் கலவரத்தைத் தொடர்ந்து, பல மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் மீது சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டம் (UAPA) பாய்ந்தபோது இந்தச் சொல் தேசிய விவாதப் பொருளானது.

2.பாதுகாப்பு முகமைகள் ஆவணங்களின்படி

  • நகர்ப்புற உத்தி (Urban Perspective Plan): தடை செய்யப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்)  தொழில்துறை மண்டலங்கள் மற்றும் நகரங்களில் மக்கள் அமைப்புகளை உருவாக்குவது அவர்களின் முக்கிய உத்தியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • அந்நிய நிதி மற்றும் வளர்ச்சித் திட்ட எதிர்ப்பு: சில அரசு சாரா நிறுவனங்கள் (NGOs) அந்நிய நிதி ஒழுங்குமுறைச் சட்டங்களை (FCRA) மீறி நிதி பெற்று, நாட்டின் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு எதிராகப் போராட்டங்களைத் தூண்டுவதாகப் பாதுகாப்பு முகமைகள் கூறுகின்றன.
  • அறிவுசார் ஆதரவு: காடுகளில் இயங்கும் ஆயுதமேந்திய குழுக்களுக்கு சர்வதேச அளவிலும் ஊடகங்களிலும் நியாயம் கற்பிக்கும் தளமாக இவர்கள் செயல்படுவதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.

​3. விவாதிக்கப்படும் முக்கியச் செயல்பாடுகள்

செயல்பாட்டுப் பிரிவுவிளக்கங்கள்
கருத்தியல் பரப்புரைபல்கலைக்கழகங்கள், மாணவர் அமைப்புகள் மற்றும் கருத்தரங்குகள் வாயிலாக இடதுசாரி சிந்தனைகளைப் பரப்புதல்; கலைக் குழுக்கள் மூலம் எதிர்ப்புணர்வை உருவாக்குதல்.

சட்ட மற்றும் நிதி உதவி

கைது செய்யப்படும் மாவோயிஸ்ட் உறுப்பினர்களுக்கு நீதிமன்றங்களில் சட்டப் பாதுகாப்பை ஒருங்கிணைத்தல் மற்றும் போராட்டச் செலவுகளுக்கு நிதி திரட்டுதல்.

மக்கள் திரட்டல்

உள்கட்டமைப்பு, சுரங்கம் மற்றும் வன நில ஆக்கிரமிப்பு திட்டங்களுக்கு எதிராகத் தொழிலாளர்கள் மற்றும் பழங்குடியினரைத் திரட்டிப் போராட்டங்கள் நடத்துதல்.

தகவல் தொடர்பு மற்றும் புகலிடம்

காடுகளிலுள்ள தலைவர்களுக்குத் தேவையான மறைகுறியாக்கப்பட்ட தகவல்களைப் பரிமாறுதல், போலி ஆவணங்கள் மூலம் மருத்துவ சிகிச்சை மற்றும் தங்குமிட ஏற்பாடுகளைச் செய்தல்.

4. வழக்குகளில் தொடர்புபடுத்தப்பட்ட முக்கிய நபர்கள்

கோபந்த் காந்தி (Kobad Ghandy): மாவோயிஸ்ட் மத்தியக் குழுவில் செயல்பட்டு நகர்ப்புறப் பிரிவை வழிநடத்தியதாக 2009-ல் கைது செய்யப்பட்டார். நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு பல வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

பேராசிரியர் ஜி.என். சாய்பாபா (G.N. Saibaba): 
டெல்லி பல்கலைக்கழகப் பேராசிரியரான இவர் மீது நகர்ப்புற ஆதரவு மற்றும் சதிக்குற்றம் சுமத்தப்பட்டு UAPA கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். 2024-ல் மும்பை உயர் நீதிமன்றம் இவரைப் போதிய ஆதாரங்கள் இல்லாததால் முழுமையாக விடுதலை செய்தது.

சுதா பரத்வாஜ் (Sudha Bharadwaj): சத்தீஸ்கரில் தொழிலாளர்களுக்காகப் பணியாற்றிய வழக்கறிஞர். பீமா கோரேகான் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு, பின்னர் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

வரவர ராவ் (Varavara Rao): 
புரட்சிக் கவிஞர். தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு ஒருங்கிணைப்பாளராக இருந்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு, வயது முதிர்வு மற்றும் உடல்நலக் காரணங்களுக்காக உச்ச நீதிமன்றத்தால் ஜாமீன் பெற்றார்.

பாதிரியார் ஸ்டான் சுவாமி (Stan Swamy): 
பழங்குடியினர் உரிமை ஆர்வலர். பீமா கோரேகான் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு விசாரணைக் கைதியாக இருந்தபோதே 2021-ல் காலமானார்.

5. பீமா கோரேகான் வழக்கு 

பாரத பிரதமர் மோடியை கொள்ள திட்டம் காவல்துறை 2018-ல் கைது செய்யப்பட்ட நபர்களின் கணினிகளில் இருந்து கைப்பற்றப்பட்ட கடிதங்களின் அடிப்படையில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை பாணியில் பிரதமர் நரேந்திர மோடியைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தத் திட்டம் தீட்டப்பட்டதாகக் காவல்துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது.
 குற்றவாளிகளுக்கு சார்பாக அமெரிக்காவின் 'ஆர்சனல் கன்சல்டிங்' (Arsenal Consulting) என்ற நிறுவனம், குற்றம்சாட்டப்பட்டவர்களின் கணினிகளில் 'மால்வேர்' மூலம் ஆவணங்கள் போலியாகத் திணிக்கப்பட்டதாகத் தெரிவித்தது வடக்கை விசைத்திருப்ப முயன்றது இருந்தாலும் நீதிமன்றம்  அந்த அறிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை .  

6.வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிரான நிதி: 
2014-ஆம் ஆண்டு வெளியான உளவுத்துறை (IB) அறிக்கை போன்ற ஆவணங்களில், சில வெளிநாட்டுத் தொண்டு நிறுவனங்கள் (அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த சில அமைப்புகள் உட்பட) இந்தியாவில் உள்ள உள்ளூர் அமைப்புகளுக்கு நிதி உதவி அளித்து அணுமின் நிலையங்கள், சுரங்கங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு எதிராகப் போராட்டங்களைத் தூண்டுவதாகக் குறிப்பிடப்பட்டது.

வழிமாற்றப்படும் நிதி: 

கிருத்துவ மிஷனரி அமைப்புகள், கல்வி மற்றும் சமூக நலப் பணிகளுக்காகக் கொண்டுவரும் நிதியை ஒருசில குழுக்கள் நகர்ப்புற சமூக விழிப்புணர்வு என்ற பெயரில் அரசுக்கு எதிரான அரசியல் அல்லது சித்தாந்தப் போராட்டங்களுக்குப் பயன்படுத்துவதாகக் குற்றம்சாட்டப்படுகிறது.

7. சட்டப்பூர்வ நிலை

சட்ட அங்கீகாரம் இன்மை: இந்திய உள்துறை அமைச்சகம் (MHA) நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்தின் அடிப்படையில் 'நகர்ப்புற நக்சல்' என்ற வார்த்தை சட்டப்பூர்வ அல்லது நிர்வாக வகைப்பாடு கிடையாது.

FCRA விதிகள் மீறல்: 

அன்னிய நிதி ஒழுங்குமுறைச் சட்டத்தின் (Foreign Contribution Regulation Act - FCRA) விதிகளை மீறி, உள்நாட்டுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் நிதி பயன்படுத்தப்படுவதாகக் கூறி பல அமைப்புகளின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பயன்படுத்தப்படும் சட்டங்கள்:

இந்திய அரசு அன்னிய நிதி சட்டவிரோதமாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க FCRA சட்டத்தை மிகக் கடுமையாக்கியுள்ளது.
பயங்கரவாத அமைப்புகளுக்கோ அல்லது தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் குழுக்களுக்கோ நேரடியாகவோ மறைமுகமாகவோ நிதி உதவி அளிக்கப்படுவது கண்டறியப்பட்டால், அது சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டம் (UAPA) மற்றும் நிதி முறைகேடு தடுப்புச் சட்டம் (PMLA) ஆகியவற்றின் கீழ் கடுமையான குற்றமாக விசாரிக்கப்படுகிறது.

இந்திய இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு எதிராகச் செயல்படுவோர் மீது சட்டவிரோதச் செயல்கள் தடுப்புச் சட்டம் (UAPA) மற்றும் குற்றவியல் சட்டங்களின் கீழ் மட்டுமே சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

Sunday, July 13, 2025

கீழடி-ல் கனிமொழி, ஜகத்_கஸ்பர் தலையீடு -

அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்ட மூத்த தொல்லியல் ஆய்வாளர்கள்.! 

 சர்வதேச அளவில் நன்கு அறியப்பட்ட....
 தொல்லியல் ஆய்வாளரும், சிம்லாவில் உள்ள‌ இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் அட்வான்ஸ்ட் ஸ்டடீஸ் கல்விக் குழு உறுப்பினருமான Dr B S #ஹரிசங்கர்....
 கீழடியில் நடக்கும் இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனத்தின் ஆய்வில் வரலாற்றைத் திரிக்கும்‌ முயற்சி நடைபெறுவதாக பரபரப்பு குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார். 

 மறைந்த முதல்வர் கருணாநிதியின் மகளும் மக்களவை உறுப்பினருமான கனிமொழி எம்பி அனாவசியமாக கீழடி அகழாய்வில் தலையிட்டு ஆய்வு #முடிவுகளை‌_மாற்ற முயற்சி செய்வதாக அவர்‌ குற்றம் சாட்டியுள்ளார். 

அவருடைய ஆய்வுக் கட்டுரையில்...., 
"#தங்களைத்_தாங்களே தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் என்று கூறிக்கொண்டு கீழடியில் அகழ்வாராய்ச்சி செய்து கொண்டு‌ இருக்கும் நபர்கள் அகழ்வாய்வின் போது பின்பற்றப்பட வேண்டிய #விதிகள் அனைத்தையும் #மீறி செயல்பட்டு‌ வருகிறார்கள். 

ஒரு முன்னாள் ASI இயக்குனரையே அங்கே தோண்டி எடுக்கப்பட்ட தொல் பொருட்களை பார்க்க விடாமல் #மர்மமாக ஏதோ செய்து வருகின்றனர். 

நாட்டின் #பிற பகுதிகளில் நடக்கும் அகழ்வாய்வுகள் எல்லாம் திறந்த புத்தகமாக இருக்கும் போது....
 இங்கு மட்டும் இப்படி #ரகசியமாக செயல்பட வேண்டியதன் அவசியம் என்ன?" என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். 

 'கீழடி அகழாய்வில் உலகளவிலான தலையீடு' என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள இந்தக் கட்டுரையில் கீழடி அகழ்வாய்வின் பின்னணியில் இருப்பவர்கள்....
 வட இந்தியாவில் இருந்த நாகரிகத்திலிருந்து #வேறுபட்ட ஒரு நாகரிகம் தென்னிந்தியாவில் இருந்தது என்று #நிறுவ முயற்சிப்பதாக அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டுள்ளார்.

 முன்னாள் ASI இயக்குனரான Dr T சத்யமூர்த்தி போன்றவர்களை கூட அனுமதிக்காமல் தோண்டி எடுக்கப்பட்ட தொல் பொருட்களின் பழமையைக் கண்டறிய அவற்றை #அமெரிக்காவில் உள்ள ஒரு ஆய்வுக் கூடத்துக்கு எடுத்துச் சென்று பரிசோதித்துள்ளனர். 

இந்தியாவிலேயே அந்த பொருட்களை ஆய்வுக்கு உட்படுத்துவதற்கான வசதிகள் உள்ளன. 
ஆனால்....
 அவை இவர்கள் #எதிர்பார்க்கும் முடிவைத் தராது. 

#பிரிவினைவாதத்தை தூண்டி‌ விடுவதற்காக #திராவிடர்கள் என்ற ஒரு தனி இனம் இருந்தது என்று....
#செயற்கையாக நிரூபிக்கும் DNA முடிவுகளை இவர்கள் எதிர்பார்க்கின்றார்கள்" என்பது உள்ளிட்ட பரபரப்பான தகவல்களை ஆய்வாளர் ஹரிசங்கர் அவரது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். 

முன்னாள் இயக்குநர் #சத்யமூர்த்தி கூறுகையில்..., 
"தோண்டப்பட்ட பொருட்களில் ஒன்றுக்கு_கூட தோண்டி எடுக்கும்‌ போது எப்படி இருந்ததோ அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஒன்றைக் கூட அவர்கள் வெளியிடவில்லை. தொல்லியல் ஆராய்ச்சி என்ற பெயரில் கீழடியில் நடந்து வரும் #மோசடியைப் பற்றி முழு #விசாரணை தேவை. 

புகழ்பெற்றவர்கள் என்பதற்காக யாரையும் #வரலாற்றைத்_திரிக்கவோ புதிதாக எழுதவோ #அனுமதிக்க_கூடாது" என்றும்....
 ஹரிசங்கர் எழுப்பியுள்ள அச்சங்கள் முக்கியமானவை என்றும் குறிப்பிட்டுள்ளார். 

திடுக்கிடச் செய்யும் ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக வெளி உலகத்துக்கு அறிவிக்கப்பட்ட உடன்...
 முதலில் கீழடி ஆய்வுக் களத்துக்குச் சென்றவர்கள் கனிமொழியும் அவருடைய நீண்டகால நண்பர் பாதிரியார் ஜகத் கஸ்பர் ராஜும் தான்‌. 

கத்தோலிக்க பாதிரியார் ✝️ ஜகத் கஸ்பர் இந்தியாவில் தடை செய்யப்பட்ட தமீழ் ஈழப் புலிகள் (LTTE) அமைப்புடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

ASI கட்டுப்பாட்டில் இருக்கும் ஆய்வகங்களுக்கு கீழடியில் கிடைத்த பொருட்களை எடுத்துச் செல்ல தடை விதிக்குமாறு கனிமொழி சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினார். 
முதலில் இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டாலும் பின்னர் ASI தகுந்த ஆதாரங்களைச் சமர்ப்பித்த போது தடையை நீக்கியது. 

ஆனால்....
 சில ✝️ #கிறிஸ்தவ மதவாதிகள் நுழைந்து சூழலைக் களங்கப்படுத்தி விட்டனர் என்று கூறப்படுகிறது. 

"கீழடி ஆய்வில் கண்டறியப்பட்ட விஷயங்கள் என்று கூறி அதை துணைக் கொண்டு ஜகத் கஸ்பரால் நடத்தப்படும் அரசு சாரா அமைப்பு (NGO) தமிழ்நாட்டில் பிரிவினைவாத இயக்கங்களைத் தொடங்க முயற்சி செய்தது" என்று அந்த அமைப்புக்கு வரும் வெளிநாட்டு நிதியைப் பற்றிய தகவல்களைச் சேகரித்து வரும் புலனாய்வுத் துறை அதிகாரி கூறியதாக தி பயனியர் குறிப்பிட்டுள்ளது. 

மேலும், கேரளாவில்...
 #பட்டணம் என்ற இடத்தில் நடைபெற்று வரும் தொல்லியல் ஆய்விலும் தென்னிந்திய வரலாற்றைத் திரிக்கும் பணியில் இக்காலத்து வரலாற்று ஆய்வாளர்கள் ஒரு சிலர் ஈடுபட்டுள்ளதாக ஆய்வாளர் ஹரிசங்கர் மற்றும் இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் பேராசிரியர் C I ஐசக் ஆகியோர் கூறுகின்றனர். 

"பட்டணமும் கீழடியும் பொதுவான விஷயங்களால் இணைக்கப்பட்டு இருந்தன என்றும்....
✝️ #ரோமுடன் தொடர்பிருந்தது என்றும் #நீரூபிப்பதில் மட்டும் அவர்கள் வெற்றியடைந்தால் இந்த நிலப்பகுதியின் வரலாறு முழுவதுமே #கட்டுப்படுத்தப்படலாம்" என்று பேராசிரியர் ஐசக் தி பயனியர் நாளிதழிடம் கூறியுள்ளார். 

கீழடியில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருட்களை காட்சிப்படுத்த ஒரு அருங்காட்சியகம் அமைக்கப்படும்....
 என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது கூட....
கிறிஸ்தவ பின்புலத்துடன்...
 #திமுகவின் #திராவிடநாடு திட்டம்தான் என்றும் பேராசிரியர் ஐசக் குறிப்பிட்டுள்ளார். 

Courtesy
Kathir news 
copyright reserved ©®

"நகர்ப்புற நக்சல்" (Urban Naxal)

செயல்பாடுகள் மற்றும் சட்டப் பின்னணி ​1. அறிமுகம் மற்றும் சொல்லாடலின் தோற்றம் ​ "நகர்ப்புற நக்சல்" (Urban Naxal) என்பது இந்திய அ...