Monday, July 23, 2018

தன்னம்பிக்கை

ஒரு ஊரில் அரசன் ஒருவன் இருந்தான்...!!  அதிகாலையில் எழுந்தவுடன் "சூரிய உதயத்தைப் பார்ப்பது" , அவனது வழக்கம்....!!

ஒரு நாள் காலையில் சூரியோதயத்துக்கு பதில்,

   ஒரு பிச்சைக்காரன் முகத்தில் விழித்து விட்டார்.

அதனால் கோபத்தோடு கீழே இறங்க திரும்பிய போது,

    தலையில் அடிபட்டு இரத்தம் வந்துவிட்டது....!!

  கோபம் கொண்ட அரசர்,

பிச்சைக்காரனை அரண்மனைக்கு இழுத்து வர செய்து,

தூக்கிலிடும்படி கட்டளை பிறப்பித்தார்.....!!

  பிச்சைகாரன் சிறிதும் கலங்கவில்லை.....!!

கல கலவென சிரிக்கத் தொடங்கினான்....!!

அரசருக்கு அவன் சிரிப்பதை பார்த்ததும் கோபம் வந்துவிட்டது ...!!

மற்றவர்களுக்கு திகைப்பு...!!

   அரசன் பிச்சைக்காரனை      "ஏன் சிரிக்கிறாய்?"

    என்று கோபமாக கேட்க,

பிச்சைக்காரன்,
     "என் முகத்தில் நீங்கள் விழித்தால் ,

   உங்களுக்கு சிறு காயம் மட்டுமே  அரசே....!!

  ஆனால்,
     உங்கள் முகத்தில் நான் விழித்ததால்,......

   " என் உயிரே போக போகிறதே" ,...!!

இப்போது மக்களுக்கு மிக நன்றாக புரிந்து விடும்....

  மன்னன் முகத்தில் எவன் விழித்தாலும் மரணம் நிச்சயம் என்று...!!

  அரசனின் முகம் அவ்வளவு "ராசியான முகம்" ,
          என நாடே சிரிக்கும் அரசே...என்றான்..!!

   அதை எண்ணி சிரித்தேன்" என்றான்,

அரசனுக்கு இப்போது தான் தான் செய்ய இருந்த தவறு உறைத்தது...!!

தன் தவறை உணர்ந்து தலை குனிந்தான்.

தண்டனை ரத்து செய்யப் பட்டது....!!

தைரியம் என்பது தன்னம்பிக்கையின் மறுபெயர்....!!

அது இல்லையென்றால்,

    சமயத்தில் தன் உயிரைக் கூட காப்பாற்றிக் கொள்ள முடியாமல் போய் விடும்.

    எதை இழந்தாலும்,

தன்னம்பிக்கையை மட்டும் எப்போதும் இழக்காதீர்கள்....!!

Saturday, July 21, 2018

'உண்மையை பேசுவது தர்மம் ஆகுமா?

தர்மம் என்பது எதன் மூலம் நிலைநிறுத்தப்படுகிறதோ
அதுவே தர்மம்.

ஒருமுறை அர்ஜுனனுக்கு
ஒரு ஐயம் ஏற்பட்டது.

'உண்மையை பேசுவது தர்மம் ஆகுமா?' தன் ஐயத்தை தீர்த்துக்கொள்ள பகவான் கிருஷ்ணனிடம் சென்றார்.

"கிருஷ்ணா ! ஒருவன் உண்மையை மட்டும் பேசுவானேயானால் அவன் தர்மத்தை பின்பற்றியவன் ஆவானா?? என கேட்டார்.

அதற்கு பகவான் கிருஷ்ணன் ஒரு சின்ன கதை சொன்னார்.

"அர்ஜுனா! ஒரு முனிவர் காட்டில் வசித்து வந்தார். ஒரு வழிப்போக்கன் கனமான மூட்டையுடன் தலைதெறிக்க முனிவரை நோக்கி ஓடி வந்தார்.

அவர் தன்னை காப்பாற்றும் படி கேட்டார்.

''என்னிடம் உள்ள பொருட்களை அபகரிக்க திருடர்கள் வருகிறார்கள்'' என்றார்.

முனிவர், அவர் மேல் இரக்கம் கொண்டு சற்று அருகில் இருந்த புதரில் மறைத்து இருக்க சொன்னார்.

சற்று நேரத்தில் திருடர்கள் நால்வர் வந்தனர்.

முனிவரிடம் "இந்த பக்கமாக ஒருவன் ஓடி வந்தானா? அவன் எந்த வழியில் சென்றான்?" என கேட்டனர்.

முனிவர், என்ன சொல்வது என யோசித்தார். 'உண்மை பேசுவதுதான் தர்மம்' என வழிப்போக்கன் மறைத்திருந்த புதரை காட்டினார்.

திருடர்கள் வழிப்போக்கனை அடித்து காயப்படுத்திவிட்டு பொருட்களை அவரிடமிருந்து எடுத்துசென்றனர்.

பிறகு, அந்த வழிப்போக்கன் முனிவரிடம் வந்து "தங்களை நம்பிய என்னை கட்டிக்கொடுத்துவிட்டிரே? அவர்கள் என் பொருட்களை எல்லாம் கைப்பற்றி சென்றுவிட்டனர்" என கேட்டார்.

முனிவர் காட்டிக் கொடுத்ததால் தர்மம் தவறிவிட்டதாக வருத்தப்பட்டார்.

எனவே...

அர்ஜுனா! உண்மை பேசுவது மட்டும் தர்மம் ஆகாது. பொய் பேசினால் தர்மம் நிலைக்குமாயின் பொய்யும் சில நேரம் தர்மம் ஆகும்!

தர்மம் என்பது எதன் மூலம் நிலைநிறுத்தப்படுகிறதோ அதுவே தர்மம்!

உண்மை,பொய் இரண்டும் தர்மம் எது என்பதை பொறுத்து மாறுபடுகின்றது என்றார்.

துறவிக்கு இல்லை துன்பம்

பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் மறைந்த பிறகு, சுவாமி விவேகானந்தரும் மற்றைய சீடர்களுமாக, பன்னிரண்டு பேர் கல்கத்தா அருகில் உள்ள வராநகரில் ஒரு வீட்டில் தங்கியிருந்தனர். இந்த வீடுதான் ராமகிருஷ்ண சீடர்கள் தங்கியிருந்த முதல் ஆஸ்ரமம்.

தினசரி சந்நியாசிகளில் யாராவது ஒருவர் பிக்ஷை எடுத்து வரவேண்டும். எல்லோருக்குமாக சேர்ந்து ஒரு காவி வேஷ்டியும் ஒரு துண்டும் மட்டுமே இருந்தன. பொதுவாக, வீட்டில் இருக்கும் போது அனைவரும் கௌபீனத்துடன் (கோவணம்) இருந்தனர். யார் பிக்ஷைக்கு வெளியே செல்கிறார்களோ அவர் மட்டும் வேஷ்டி துண்டு அணிந்து சென்று வருவார். இளம் சந்நியாசிகளான அவர்களைப் பார்த்து, சிலர் கேவலமாக திட்டி அனுப்பியிருக்கின்றனர். சில நேரங்களில் பிக்ஷை கிடைக்கும். சில நேரங்களில் ஒன்றுமே கிடைக்காது. அப்படியே கிடைத்தாலும் அது காய்ந்துபோன, கெட்டுப்போன ரொட்டிகளாக இருக்கும். அவைகளைப் பாத்திரத்தில் வைத்து, தண்ணீர் ஊற்றி ஊறவைத்தால் மட்டுமே சாப்பிட முடியும். பல நாட்கள் பசி பட்டினியோடு காலம் கழித்தார்கள்.

ஒருநாள் விவேகானந்தரே பிக்ஷைக்கு செல்லும்போது, பசி காரணமாக தெருவில் மயங்கி விழுந்து விட்டார். அடுத்து மழை பெய்த பிறகே, உணர்ச்சி பெற்று எழுந்து வந்தார்.

இத்தகைய சூழ்நிலையிலும் கூட தியானம், பூஜைகள், சத்சங்கம் என ஈடுபட்டு வந்தனர். சில மாதங்களுக்குப் பிறகு தீர்த்த யாத்திரைக்காக அவரவர் விருப்பப்படி புறப்பட்டனர். சுவாமி விவேகானந்தரும் பரிவ்ராஜகராக தனது யாத்திரையைத் தொடங்கினார். இப்படி பாத யாத்திரை செல்பவர்கள் நடந்தே செல்ல வேண்டும். கையில் எந்தவிதமான பணமும் வைத்துக்கொள்ளக் கூடாது. அடுத்த நேரம் உணவு என்பது இறைவனின் சித்தம், என்று சென்றுகொண்டேயிருக்க வேண்டும்.

உண்மையான துறவி எப்படி இருக்க வேண்டும் என்பதை வாழ்ந்து காட்டியிருக்கிறார் சுவாமி விவேகானந்தர்.

"எத்தனையொ மகான்கள் இந்த ஞான பூமியில்.....

அத்தனை பேருக்கும் நமது வணக்கங்கள்....."

எலியும் நெப்போலியன்

எலி சாதாரணமாக இருக்கும்போது மரத்தால் ஆன பொருட்களை ஓட்டை போட்டு நாசம் செய்யும்.

அதே எலி அதற்கென வைக்கப்பட்ட மரப்பொறியில் சிக்கிக் கொண்டால், எப்படி தப்பிக்கலாம் என பயத்தில் அங்கும் இங்கும் அலையுமே தவிர, மற்ற மரப்பொருட்களை ஓட்டை போட்டது போல, இம்மரப் பொறியையும் ஓட்டை போட்டு வெளியில் சென்று விடலாம் என யோசிக்கவே யோசிக்காது.

ஆமாம், இப்படி யோசித்தால், அதிகபட்சம் ஐந்து நிமிடத்தில் பொறியையே ஓட்டை போட்டு வெளியேறி விடும். ஆனால், மரப்பொறியில் சிக்கிய எலியை நீங்கள் ஐந்து நாட்கள் அப்படியே வைத்திருந்தாலும், அது தன்னால் வெளிவர முடியாத ஏதோவொரு பொறியில் அடைத்து வைத்து விட்டது போன்றே அங்கும் இங்கும் அலைபாயும்.

நம்மை யாரும் காப்பாற்ற மாட்டார்களா என ஏக்கத்தோடு பார்க்கும்.

அதற்கே உயிர் பிழைக்க வழி தெரிந்தாலும்  அந்த பதட்டத்தில் அதனது மூளை வேலை செய்யாது.

மனிதனும் பல நேரத்தில் இப்படித்தான் பல பிரச்சினைகளிலிருந்து வெளியே வர தெரிந்தும் பொறுமை இல்லாததால் தனது வாழ்க்கையை துறக்கிறான்.

பிரான்ஸ் மன்னர் மாவீரன் நெப்போலியன் புரட்படையினரால் கைது செய்யபட்டு செயின்ட் ஹெலினா தீவில் தனிமையில் அடைக்கபட்டார் அவரை பார்க்க வந்த அவரது நண்பர் ஒரு சதுரங்க போர்டும் காயின்களும் கொடுத்துவிட்டு போனார் தனிமையில் சதுரங்கத்தில் விளையாடியே நாட்களை கழித்து இறந்தும் போனார் சிறிது காலத்திற்கு முன் அவர் விளையாண்ட சதுரங்க அட்டையை பிரான்ஸ் அரசு ஏலம் விட்டது அதை வாங்கிய நபர் அதை பிரித்து பார்த்த போது ஹெலீனா தீவிலிருந்து தப்பிப்பதற்கான வரைபடம் இருந்தது எப்பேற்பட்ட திறமையான மாவீரன் ஆனால் இனிமேல் தப்பிக்க முடியாது என்ற எண்ணமே நெப்போலியனை அடுத்த கட்ட நகர்விற்கு செல்ல முடியாமல் தடுத்து விட்டது...

சிந்தித்து செயல்பட்டால் வெற்றி உறுதி

எருக்க இலையும் ரதசப்தமி

மகாபாரதப் போரில் வீழ்த்தப்பட்டு விட்டார் பிதாமர் என்று அழைக்கப்பட்ட பீஷ்மர். நினைத்த நேரத்தில் உயிர் விடலாம் என்று அவர் பெற்றிருந்த வரமே இப்போது அவருக்கு பெரிய கஷ்டத்தை அளித்துக் கொண்டிருந்தது. உத்தராயணத்தில் உயிர் விடலாம் என்று நினைத்த பீஷ்மர், அர்ச்சுனனால் ஏற்படுத்தப்பட்ட அம்புப் படுக்கையின் மீது படுத்திருந்தார். மேலும் அவரது தாகத்தை தீர்ப்பதற்காக, அர்ச்சுனன் நிலத்தில் அம்பை செலுத்தி கங்கயை வரவழைத்துக் கொடுத்தான். இருந்தாலும் காலம் போய்க் கொண்டே இருந்தது. உத்தராயணக் காலம் வந்தும் பீஷ்மரின் உயிர் அவரது உடலை விட்டுப் பிரியவில்லை. பாண்டவர்கள், கவுரவர்கள், கிஷ்ணர் என அனைவரும் அவரைச் சூழ்ந்து நின்றனர்.

பீஷ்மருக்கோ தன் உயிர் இன்னும் பிரியாததை நினைத்து வேதனை. அப்போது அங்கு வந்து சேர்ந்தார் வேத வியாசர்.

அவரைப் பார்த்த பீஷ்மர், ‘மகரிஷியே.. என்னுடைய உயிர் ஏன் இன்னும் போகவில்லை. நான் செய்த பாவம் தான் என்ன?’ என்றார்.

அதற்கு வியாசர், ‘பீஷ்மரே! ஒருவர், தன் மனம், மொழி, மெய்யால் செய்வதுதான் தீமை என்றில்லை. தன் கண் முன் பிறர் செய்யும் தீமைகளை தடுக்காமல் இருப்பதும் கூட ஒரு வகையில் பாவம் தான். அதற்கான தண்டனையை யாராக இருந்தாலும் அனுபவித்து தான் ஆக வேண்டும்.’

பீஷ்மருக்கு இப்போது புரிந்து விட்டது, தன்னுடைய இந்த வேதனைக்கான காரணம். பாஞ்சாலியைத் துச்சாதனன் துகில் உரித்த போது, சபையில் இருந்த அனைவரிடமும் தன்னை காப்பாற்றும்படி மன்றாடினாள். அங்கு இருந்த அனைவரும் அங்கு ஒரு பெண்ணுக்கு நடக்கும் கொடுமையைக் கண்டும் காணாதது போல் இருந்தனர். அவர்களில் பீஷ்மரும் ஒருவர். அந்த பாவம் தான் தனக்கான இந்த தண்டனை என்பதை உணர்ந்த பீஷ்மர், ‘இதற்கு என்ன பிராயச்சித்தம்?’ என்று வியாசரிடம் கேட்டார்.

‘பீஷ்மா! ஒருவர் தன் பாவத்தை உணரும் போதே அது அகன்று விடுகிறது.  உன்னுடைய பாவம் இப்போது அகன்று விட்டது. என்றாலும், திரவுபதி சபையில் கூக்குரலிட்டு கதறியபோது, கேட்காதது போல் இருந்த உன் செவிகள், பார்த்தும் பாராதது போல் இருந்த உன் கண்கள், தவறை தட்டிக் கேட்காத வாய், அசாத்திய வலிமை இருந்தும் தினவெடுக்காத உன் தோள்கள், வாளை பயன்படுத்தாத உன் கைகள், இருக்கையில் இருந்து எழும்பாத உன் கால்கள், தவறைப் பற்றி யோசிக்காத உன் மூளை இருக்கும் தலை ஆகியவற்றுக்கு தண்டனை கிடைத்தே தீர வேண்டும். அதுதான் விதி’ என்றார் வியாசர்.

அதையடுத்து பீஷ்மர், ‘என் இந்த அங்கங்களைப் பொசுக்கக் கூடிய வல்லமை படைத்தவர் சூரிய பகவான் ஒருவரே. எனக்குச் சூடு வைக்க, சூரிய சக்தியை எனக்குப் பிழிந்து தாருங்கள்’ என்று துக்கத்தோடு வியாசரை வேண்டினார்.

வியாசர், எருக்க இலை ஒன்றைக் காட்டி, ‘பீஷ்மா! எருக்க இலை சூரியனுக்கு உகந்தது. இதன் பெயர் ‘அர்க்க பத்ரம்’. அர்க்கம் என்றாலே சூரியன் என்றே பொருள். சூரியனின் சாரம் இதில் உள்ளது. சந்திரனைத் தலையில் சூடிக் கொண்ட எம்பெருமான், சூரியனாக உருவகம் ஆன எருக்க இலையையும் இதன் காரணமாகவே சூடிக் கொண்டிருக்கிறார். ஆகவே இந்த இலைகளால், உன்னுடைய அங்கங்களை அலங்கரிக்கிறேன். அதன் மூலம் உன் உடல் வெப்பம் சாந்தியாகும்’ என்றார்.

அதன்பிறகே பீஷ்மர் தியானத்தில் மூழ்கி, ஏகாதசி அன்று தன் உயிரை உடலில் இருந்து விடுவித்துக் கொள்கிறார்.

அவருக்குச் சிராத்தம் போன்றவற்றை செய்ய யாருமில்லாமல் திருமணம் ஆகாத நைஷ்டிக பிரம்மச்சாரியாக உயிர் நீத்ததை நினைத்து வருந்திய தருமரிடம், வியாசர், ‘வருந்தாதே தருமா! ஒழுக்கமே தவறாத பிரம்மச்சாரிக்கும், துறவிக்கும் பிதுர்க்கடன் என்பது அவசியமே இல்லை,. அவர்கள் மேம்பட்ட ஒரு நிலைக்குப் போய்விடுகிறார்கள், என்றாலும் உன் வருத்தத்துக்காக, இனி இந்த பாரத தேசமே பீஷ்மனுக்காக நீர்க்கடன் அளிக்கும். ரதசப்தமி அன்று தங்கள் உடலில் எருக்க இலைகளை வைத்துக் கொண்டு குளிக்கும் மக்கள் தங்கள் பாவங்களில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ளுவதோடு அல்லாமல், பீஷ்மனுக்கும் நீர்க்கடன் அளித்த புண்ணியம் அவர்களுக்குக் கிடைக்கும்’ என்று ஆறுதல் சொன்னார்.

ஆகவே தான் ரதசப்தமி அன்று விரதம் இருப்பதும், தலையிலும், கண்கள், செவிகள், கை, கால், தோள்களில் எருக்க இலைகளை வைத்துக் கொண்டு குளிக்கும் முறையும் ஏற்பட்டது.

சேஷாத்ரி சுவாமிகள்

சேஷாத்ரி சுவாமிகள் 1870ம் ஆண்டு பிறந்தார் இவர் திருவண்ணாமலையில் வாழ்ந்து மறைந்தார்.

இவரின் வரலாறை கேட்டால் வித்தியாசமானது. இவர் தங்கக்கை #சேஷாத்ரி என்றும் அழைக்கப்பட்டார்
இதற்க்கு காரணம் இவர் சிறுவயதாக இருந்தபோது இவர் ஊரில் இருந்த கண்ணன் கோவிலில்
விழா நடந்தது.

அந்தகோவில் விழாவிற்க்கு இவர் தன்
தாயுடன் சென்று இருந்தார் அந்தநேரமாக ‌அந்தக்கோவிலில் ஒருவன் பொம்மை விற்றுகொண்டிருந்தான் சிறு குழந்தையான சேஷாத்ரி.

பொம்மை வேண்டும் என்று அடம்பிடிக்க தாய் வேண்டாம் என்றார்.இதை பார்த்த பொம்மை விற்றவன் அம்மா சிறு குழந்தை கேட்கிறது உங்களிடம் காசு இல்லாவிட்டாலும் பரவாயில்லை
ஒரு பொம்மை நான் சும்மா தருகிறேன் என்று சேஷாத்ரியிடம் ஒரு பொம்மையை கொடுத்தான்.

சிலமணிநேரங்களுக்கு பிறகு சேஷாத்ரியை தேடி பொம்மை விற்பவன் வந்தான் அம்மா இது சாதாரண குழந்தை இல்லை ஞானக்குழந்தை என்றான். ஏனென்றால் சற்றுமுன் என்னிடம் நிறைய பொம்மைகள் இருந்தன பலநாட்களாக அந்தபொம்மைகள் விற்கவில்லை. இப்போது விற்றுதீர்ந்துவிட்டது இன்னும் நிறையபேர் கேட்கிறார்கள் எனக்கு ஒன்றும் புரியவில்லை இது சாதாரணகை இல்லை தங்கக்கை என்று பாராட்டினான் அதனாலேயே இந்தபெயர் வந்தது.

ஞானமார்க்கத்தை தேடிய சேஷாத்ரி தனது இளமைப்பருவத்தில் திருவண்ணாமலை வந்தார்.
அங்கேயே சுற்றிதிரிந்தார் இவர் அருணாச்சலேஸ்வரர் கோவில் அருகேயுள்ள சிவகங்கை குளத்தில் குளிப்பார் அங்கு வரும் பக்தர்களில் சிலர் மீது மட்டும் [கடும் தோஷம் உடைய]
பக்தர்கள் மீது தண்ணீரை வாயில் கொப்பளித்து துப்புவார் பலருக்கு பல்வேறு விதமான நோய்கள் தீர்ந்துஇருப்பதாக இதனால் நம்பப்படுகிறது பலருக்கு பல்வேறுவிதமான தோஷங்கள்
விலகி உள்ளது.

இவர் திருவண்ணாமலையில் ஒரு இடத்தில் இருக்கமாட்டார் இவரை கிறுக்குச்சாமி என்றும் அழைக்கப்பட்டார் அதற்க்குகாரணம் இவர் ஊரை சுற்றி வந்துகொண்டே இருப்பார் எந்தநேரத்தில் எந்தசெயலை செய்வார் என்று யாராலும் சொல்லமுடியாது.

திடீரென்று ஒரு கடைக்குள் செல்வார் கடையில் உள்ள நெய்டின்னை தட்டிவிடுவார் கடைக்காரருக்கு வியாபாரம் அமோகமாக நடக்கும் இப்படி இவர் செய்வதால் ஆரம்பத்தில் இவரை வெறுத்த மக்களும் வியாபாரிகளும் இவர் பார்வை நம் மீது படாதா என ஏங்குவர்.ஆனால் சரியான நபருக்கு மட்டுமே இவரின் கருணைப்பார்வை படும்.

ஒருமுறை ஒரு சவஊர்வலம் சென்று
கொண்டிருந்தது அதன் பின்னே சென்ற இவர் திடீரென ஒரு கல்யாணவீட்டிற்க்குள் சென்றார். சவ ஊர்வலத்தில் கலந்துவிட்டு தீட்டோடு கல்யாணத்திற்க்குள் வருகிறானே என்று அனைவரும் இவரை விரட்டினர் எதையும் பொருட்படுத்தாமல் சமையலறையில் வைத்து இருந்த ஒரு பெரிய பாத்திரத்தில் கல்யாணவிருந்திற்காக வைத்து இருந்த சாம்பாரை தட்டிவிட்டார்.

ஆத்திரமடைந்தவர்கள் அவரை அடிக்கப்பாய்ந்தனர் திடீரென் ஒருவர் அவரை அடிக்காதீர்கள் சாம்பாரை பாருங்கள் என்று காண்பித்தார் அதற்க்குள் ஒரு நாகம் இறந்து கிடந்தது சுவாமிகளின் சக்தியை நினைத்து அவரை கையெடுத்து வணங்கினர் மக்கள் அனைவரும். இப்படி இவரின் வரலாறு அதிகம். ஒரு முறை ஊரில் அம்மை நோய் அதிகம் இருந்தது யாரும் வெளியில் வரக்கூடாது என்ற ஆங்கிலேய ஆட்சியின் உத்தரவை மீறி வெளியில் வந்தார்.

இவரை 15 நாட்கள் ரிமாண்ட் செய்ய நீதிபதி உத்தரவிட்டார். இரண்டு நாட்களுக்கு பிறகு விழுப்புரம் செல்வதற்க்கு நீதிபதி காரில் சென்று கொண்டிருந்தபோது
நீதிபதியின் கண்களுக்கு சாலையோரத்தில் இவர் தெரிந்தார். அப்படியே தன் உதவியாளரை அனுப்பி ஜெயிலில் சேஷாத்ரி உள்ளாரா எனப்பார்த்து வரச்செய்தார் அவர் அங்கு பத்திரமாக‌ உள்ளார் என உதவியாளர் வந்து தகவல் சொன்னார். நீதிபதிக்கு ஆச்சரியம் தாங்கமுடியவில்லை அவர் ஒரு மகான் எனப்புரிந்துகொண்டார் தன் தவறை உணர்ந்து அவரை விடுதலை செய்தார்.

இப்படி பல அற்புதங்கள் நிகழ்த்திய சுவாமிகள் 1929ம் ஆண்டு சித்தியடைந்தார் அவரின் இறுதி ஊர்வலத்தில் பகவான் ரமணர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

சேஷாத்ரி சுவாமிகளின் ஆஸ்ரமம் திருவண்ணாமலை நகரில் அமைந்துள்ளது.

Friday, July 20, 2018

நோய்க்கான கிரகங்கள்

சூரியன் –

உஷ்ணக்காரன் ஆகையால் உஷ்ணம் சம்மந்தமான நோயைக் கொடுப்பார். இருமல், வலிப்பு, கண், சம்மந்தப்பட்ட நோய் ஏற்படலாம்;. புhர்வை குறைபாடு ஏற்படலாம்.

சந்திரன் –

ஜலதோஷம், வாதம், ரத்தம் சம்மந்தமான நோய், சீதளம், தோல், சம்மந்தப்பட்ட நோய்கள் ஏற்படலாம்.

செவ்வாய் –

ரத்தக்காரன் என்பதால் ரத்தம் சம்மந்தமான நோய்கள், ரத்தப்புற்று நோய், பிளட் பிரஷர். கண் எரிச்சல், தீக்காயம், விஷம் சம்மந்தப்பட்ட நோய் ஏற்படலாம்.
புதன் – நரம்பு தளர்ச்சி, நரம்பு சம்மந்தப்பட்ட நோய், தோல் பிரச்சினைகள், கண், மூக்கு, கழுத்து, இவற்றில் ஏற்படும் நோய், சளி இருமல் தொல்லை, வெண்குஷ்டம் போன்ற நோய்கள் ஏற்படலாம்.

குரு –

சர்க்கரை நோய்,காது சம்மந்தப்பட்ட நோய், பித்தம் சம்மந்தப்பட்ட நோய் என்பன ஏற்படலாம்.

சுக்கிரன் –

கிட்னி சம்மந்தமான நோய், பெண்கள் சம்மந்தமான நோய், சிறுநீர் கழிப்பதில் ஏற்படும் பிரச்சினைகள், வாத நோய் என்பன ஏற்படலாம்.

சனி –

வாத நோய், வலிப்பு நோய், யானைக்கால் வியாதி, காலல் ஏற்படும் உபத்திரவம், வயிற்றுவலி, சளி, குளிர்காய்ச்சல், இருமல் போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு.

ராகு –

இதய நோய், விஷம் சம்மந்தப்பட்ட பிரச்சினைகள், புற்று நோய், குடல் நோய், குஷ்டம் மற்றும் தோலில் ஏற்படும் பிரச்சனைகள் என்பன உண்டாகலாம்.

கேது –

வெட்டுகாயம், அம்மை, அஜூரணம், வயிற்றுவலி, விஷம் சம்மந்தப்பட்ட பிரச்சினைகள், புண், உடல் வலி என்பன உண்டாகலாம

நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய சிவரூபங்கள்

அசுவனி. … கேது. … கோமாதாவுடன் கூடிய சிவன்
பரணி. … சுக்கிரன். … சக்தியுடன் கூடிய சிவன்
கார்த்திகை. … சூரியன். … சிவன் தனியாக
ரோகிணி … சந்திரன். … பிறை சூடியப் பெருமான்
மிருகசீரிஷம். … செவ்வாய். … முருகனுடைய சிவன்
திருவாதிரை. … ராகு. … நாகம் அபிஷேகம் செய்யும் சிவன்
புனர்பூசம். … குரு. … விநாயகர், முருகனுடன் உள்ள சிவன்
பூசம். … சனி. … நஞ்சுண்டும் சிவன்
ஆயில்யம். … புதன். … விஷ்னுவுடன் உள்ள சிவன்
மகம். … கேது. … விநாயகரை மடியில் வைத்த சிவன்
பூரம். … சுக்கிரன். … அர்த்தநாரீஸ்வரர்
உத்ரம். … சூரியன். … நடராஜ பெருமான்-தில்லையம்பதி
ஹஸ்தம். … சந்திரன். … தியாண கோல சிவன்
சித்திரை. … செவ்வாய். … பார்வதி தேவியுடன் நந்தி அபிஷேகத்த தரிசிக்கும் சிவன்
சுவாதி. … ராகு. … சகஸ்ரலிங்கம்
விசாகம். … குரு. … காமதேனு மற்று,ம் பார்வதியுடன் உள்ள சிவன்
அனுஷம். … சனி. … ராமர் வழிபட்ட சிவன்
கேட்டை. … புதன் … நந்தியுடன் உள்ள சிவன்
மூலம். … கேது. … சர்ப்ப விநாயகருடன் உள்ள சிவன்
பூராடம். … சுக்கிரன். … சிவ சக்தி கணபதி
உத்திராடம். … சூரியன். … ரிஷபத்தின் மேலமர்ந்து பார்வதியின் அபிஷேகத்தை கானும் சிவன்
திருவோனம். … சந்திரன். … சந்திரனில் அமர்ந்து விநாயகரை ஆசிர்வதிக்கும் சிவன்
அவிட்டம். … செவ்வாய். … மணக்கோலத்துடன் உள்ள சிவன்
சதயம். … ராகு. … ரிஷபம் மீது சத்தியுடன் உள்ள சிவன்
பூராட்டாதி. … குரு. … விநாயகர் மடியின் முன்புறமும் சத்தியை பின்புறமும் இனைத்து காட்சி தரும் சிவன்
உத்திராட்டாதி … சனி. … கயிலாய மலையில் காட்சி தரும் சிவன்
ரேவதி. … புதன். … குடும்பத்துடன் உள்ள சிவன்
திருச்சிற்றம்பலம்.!

சுக்கிரன்

பொதுவாக லக்ஷ்மியை குறிக்கும் கிரஹம் சுக்கிரன். 8 கிரகங்களுடன் சுக்கிரனை இணைத்து அஷ்ட லக்ஷ்மியை கீழ் கண்ட வாறு பிரிக்கலாம்

1) சுக்கிரன் + சூரியன் = ஸ்ரீ விஜய லக்ஷ்மி (வெற்றியை தருபவள்)

2) சுக்கிரன் + சந்திரன் = ஸ்ரீ தன்ய லக்ஷ்மி ( தானியம் + உணவை தருபவள்)

3) சுக்கிரன் + செவ்வாய்  = ஸ்ரீ தைரிய லக்ஷ்மி  (முயற்சி + தைரியத்தை  தருபவள்)

4) சுக்கிரன் + புதன் = ஸ்ரீ வித்யா லக்ஷ்மி (வித்தை + கல்வியை  தருபவள்)

5) சுக்கிரன் + குரு = ஸ்ரீ சந்தான லக்ஷ்மி ( சந்ததியை தருபவள்)

6) சுக்கிரன் + சனி = ஸ்ரீ ஆதி லக்ஷ்மி (தாமதம், தடைகளை நீக்கிக்குபவள்)

7) சுக்கிரன் + ராகு = ஸ்ரீ தன லக்ஷ்மி (புதையல் போன்ற திடீர் செல்வத்தை தருபவள்)

8) சுக்கிரன் + கேது = ஸ்ரீ கஜ லக்ஷ்மி ( ஞானம் +அரசயோகத்தை தருபவள்)

வெற்றி நமதே
பயிற்சி+முயற்சி+தொடர்ச்சி = வெற்றி
வெற்றி+மகிழ்ச்சி நமதே !!
வாழ்க வளமுடன் !!

Thursday, July 19, 2018

பிரதோஷ காலங்களின் வகைகள்

திவ்யபிரதோஷம்:

துவாதசி திதியும், திரயோதசி திதியும் சேர்ந்து வரும் பிரதோஷம் திவ்ய பிரதோஷம் எனப்படும். அன்று மரகத லிங்கத்திற்கு அபிசேகம் செய்தால் முன்வினைகள் நீங்கும். தீராத வியாதிகள், வழக்குகள் தீரும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை பெருகும். இதற்கு வாய்ப்பு கிடைக்காதவர்கள் பஞ்சலோக சிவலிங்கத்திற்கு அபிசேகம் செய்து மேற்கண்ட பலனை அடையலாம்.
மகா பிரதோஷம்: சனிக்கிழமையும், திரயோதசி திதியும் இணைந்து வருகிற தினம் மகா பிரதோஷம் எனப்படும். அன்று முறையான பிரதோஷ விரதம் இருந்து சிவாலயம் சென்று விளக்கேற்றி வழிபாடு செய்ய வேண்டும். உங்கள் வயது எண்ணிக்கை இலுப்பை எண்ணெய் தீபம் ஏற்றி சிவபெருமானை வணங்கினால் இப்பிறவியில் இப்போதைய வயது வரை செய்த எல்லா பாவங்களும் நீங்கும்.
சப்தரிஷி பிரதோஷம்: பிரதோஷ காலத்தில் முறையாக விரதம் மற்றும்ம் வழிபாடுகளை முடித்த பின்பு, வெட்ட வெளியில், வடக்கு திசையில் வானம் முழுமையாக தெரிகிற இடத்தில் நின்று கவனித்தால் சப்த ரிஷி மண்டலம் எனப்படும் விண்மீன் கூட்டம் தெரியும். அந்த ஏழு ரிஷிகளை வணங்கினால் அவர்கள் ஆசிகள் கிடைக்கும். வானம் தெளிவாக தெரியாவிடில் கிழக்கு திசை நோக்கி நின்று சப்த ரிஷிகளை மனதில் துதித்து வணங்கினால் எல்லா நலங்களும் உண்டாகும்.
ஆட்சரப பிரதோஷம்: ஒரு ஆண்டில் ஐந்து மகா பிரதோஷம் வந்தால் அதற்க்கு ஆட்சரப பிரதோஷம் என்று பெயர். தாருகா வனத்து முனிவர்கள் தான் என்ற அகந்தை கொண்டு சிவபெருமானை எதிர்க்க, சிவபெருமான் பிட்சாடனர் வடிவத்தில் வந்து அவர்களின் அகந்தையை அழித்தார். தங்கள் பிழை உணர்ந்த முனிவர்கள் இந்த பிரதோஷ விரதத்தை கடைப்பிடித்து சாப விமோசம் பெற்றார்கள். அறிந்தே பிழைகள் செய்தவர்கள் இந்த பிரதோஷத்தினை பின்பற்றலாம்.
கந்த பிரதோஷம்: சனிக்கிழமையும், திரயோசசி திதியும், கிருத்திகை நட்சத்திரமும் சேர்ந்து வரும் பிரதோஷம் கந்த பிரதோஷம் என்று பெயர். இது முருக பெருமான் சூர சம்ஹாரத்திற்கு முன்பாக வேல் வேண்டி சிவபெருமானை சிக்கல் என்னும் தலத்தில் வழிபட்ட பிரதோஷம் ஆகும். கந்தவேளின் அருள் பெற நினைப்பவர்கள் இந்த கந்த பிரதோஷ வழிபாட்டைச் செய்யலாம்.
ஏகாட்ச்சர பிரதோஷம்: ஒரு ஆண்டில், ஒரு முறை மட்டும் வரும் மகா பிரதோஷம் ஏகாட்ச்சர பிரதோஷம் எனப்படும். அன்றைய தினம் விரதமிருந்து சிவாலயம் சென்று “ஓம்” என்ற பிரணவ மந்திரத்தை சொல்லி சிவபெருமானுக்கு வழிபாடு செய்தால் கோடி தோஷங்கள் நீங்கும்.
அர்த்தநாரி பிரதோஷம்: ஒரு ஆண்டில் இரண்டு முறை மகா பிரதோஷம் வந்தால், அதற்கு அர்த்தநாரி பிரதோஷம் என்று பெயர். அந்த நாளில் பிரிந்து வாழும் தம்பதிகள் விரதமிருந்து சிவாலயம் சென்று சிவ வழிபாடு செய்தால் கர்ம வினைகள் நீங்கி மீண்டும் ஒன்று சேர்ந்து வாழ்வார்கள். மேலும் கருத்து வேற்றுமையோடு வாழும் தம்பதிகள் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் கருத்து வேற்றுமை நீங்கும். தம்பதிகளிடையே அன்பும், பாசமும், ஒற்றுமையும் மேலோங்கும். எல்லா நன்மைகளும் உண்டாகும்.
பிரம்ம பிரதோஷம்: பிரம்மா, திருவண்ணாமலையில் தனக்கு ஏற்பட்ட சாபம் விலக, ஒரு ஆண்டில் வரும் நான்கு சனி பிரதோஷத்தை முறையாக கடைப்பிடித்து திருவிரிஞ்சிபுரத்தில் சாப விமோசனம் பெற்றார். நாமும் இதனை கடைபிடித்தால் நம் முன்னோர்களின் கர்ம வினையும், நம்முடைய கர்ம வினைகளும், முற்பிறவி சாபங்களும் நீங்க பெறலாம்.

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...