Wednesday, July 18, 2018

திருமணம் நடக்குமா???

நிச்சயமாக திருமணம் நடக்கும் என்பதை நிர்ணயம் செய்வது எப்படி

ஆண் ஜாதகம்

1, ஆண் ஜாதகத்தில் லக்னாதிபதிக்கு 1,5,9-இல் அல்லது 2,12-இல் அல்லது
7-இல் 7-க்குடையவன் நின்றிருக்க 7-க்குடையவனுக்கு திரிகோணத்தில் கேதுஇல்லாமல் இருக்க வேண்டும்.

2, ஆண் ஜாதகத்தில் குருவுக்கு 1,5,9-இல் அல்லது 2,12-இல் அல்லது 7-இல் சுக்கிரன் நின்றிருக்க, சுக்கிரனுக்கு திரிகோணத்தில் கேது இல்லாமல் இருக்க வேண்டும்.

3, 7-க்குடையவனும், லக்னாதிபதியும் அடுத்தடுத்த ராசிகளiல் நின்றால்
திருமணம் நிச்சயம் நடைபெறும்.
4, 7-க்குடையவனும், லக்னாதிபதியும் ஒருவருக்கொருவர் திரிகோணமாக
நின்றால் திருமணம் நிச்சயம் நடைபெறும்.

5, 7-ஆம் பாவ அதிபதி லக்னத்திற்கு கேந்திரத்தில் ( 1-4-7-10 )
நின்றிருந்தால் திருமணம் நிச்சயம் நடைபெறும்.

6, 7-ஆம் பாவ அதிபதி குருவாக அமைந்து லக்னத்திற்கு கேந்திரத்திலோ (1-4-7-10 ) அல்லது திரிகோணத்திலோ ( 1,5,9 ) நின்றிருந்தால் திருமணம் நிச்சயம் நடைபெறும்.

7, 7-ஆம் பாவ அதிபதி செவ்வாயாக அமைந்து லக்னத்திற்கு கேந்திரத்திலோ அல்லது 6-ஆம் வீட்டிலோ அல்லது 10-ஆம் வீட்டிலோ நின்றிருந்தால் திருமணம் நிச்சயம் நடைபெறும்.

8, 7-ஆம் பாவ அதிபதிபதி சனியாக அமைந்து, லக்னத்திற்கு கேந்திரத்திலோ அல்லது 4-ஆம் வீட்டிலோ அல்லது 11-ஆம் வீட்டிலோ நின்றிருந்தால் திருமணம் நிச்சயம் நடைபெறும்.

9, 7-ஆம் பாவ அதிபதியும், லக்னாதிபதியும் இணைந்து எந்த
பாவத்திலிருந்தாலும் திருமணம் நிச்சயம் நடைபெறும்.

10, 7-ஆம் பாவ அதிபதியும் லக்னாதிபதியும் ஒருவருக்கொருவர் சம சப்தமாக இருந்தாலும் திருமணம் நிச்சயம் நடைபெறும்.

11, 7- ஆம் பாவாதிபதியும், லக்னாதிபதியும் பரிவர்த்தனை பெற்று
நின்றிருந்தால் திருமணம் நிச்சயம் நடைபெறும்.

மேற்கண்ட விதிகளில் ஒரு விதியாவது ஜாதகருக்கு பொருந்தி வருமானால்
நிச்சயம் திருமணம் ஆகும். எனக் கூறலாம்.

பெண் ஜாதகம்

1, பெண் ஜாதகத்தில் லக்னாதிபதிக்கு 1,5,9-இல் அல்லது 2,12-இல் அல்லது
7-இல் 7-க்குடையவன் நின்றிருக்க 7-க்குடையவனுக்கு திரிகோணத்தில் கேது இல்லாமல் இருக்க வேண்டும்.

2, பெண் ஜாதகத்தில் சுக்கிரனுக்கு 1,5,9-இல் அல்லது 2,12-இல் அல்லது 7-
இல் செவ்வாய் நின்றிருக்க, செவ்வாய்க்கு திரிகோணத்தில் கேது இல்லாமல் இருக்க வேண்டும்.

மேற்கண்ட விதிகளில் ஒரு விதியாவது ஜாதகருக்கு பொருந்தி வருமானால்
நிச்சயம் திருமணம் ஆகும். எனக் கூறலாம்.

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...