Thursday, July 12, 2018

நிர்ஜலா_ஏகாதசி


பீம_ஏகாதசி/நிர்ஜலா_ஏகாதசி

ஆனி மாத வளர்பிறை ஏகாதசியை ‘நிர்ஜலா ஏகாதசி’ என்பார்கள்....

மகான்களை தரிசிக்கும் நல்லவர்கள், மகான்களிடம் இருந்து மேற்கொண்டும் நிறைய தெரிந்து கொள்ள விரும்புவார்கள்....

இந்த முறைப்படி, ஒரு முறை வியாசரை சந்தித்தார் தர்மபுத்திரர்....

வியாசரை வணங்கி, ‘‘தவசீலரே! கலியினால் உண்டாகும் துன்பங்களை அகற்ற, சுலபமான ஒரு வழியைக் கூறி அருளுங்கள்!’’ என்றார்....

‘‘எல்லாத் துன்பங்களும் நீங்கு வதற்கு, ஏகாதசி உபவாசத்தைத் தவிர, வேறு வழியேதும் இல்லை....
சகல சாஸ்திரங்களும் கூறுவது இதுவே!’’ என்றார் வியாசர்...

சீடர்களும், தர்மருடன்  
வந்தவர்களும் இந்த உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்தனர்....
அவர்களில் பீமன் மட்டும் ஒரு கேள்வி கேட்டான்... ‘‘முனிசிரேஷ்டரே! உடன் பிறந்த வர்களும் தாயும் மனைவியும் நீங்கள் சொன்ன ஏகாதசி விரதத்தைச் செய்கிறார்கள்....
என்னையும் உபவாஸம் இருக்கச் சொல்கிறார்கள்....
ஒருபொழுது இருப்பதே என்னால் முடியாத காரியம்....
அப்படிப்பட்ட நான் எப்படி உபவாஸம் இருப்பேன்? மேலும் என் வயிற்றில் ‘#விருகம்’ என்று ஓர் அக்னி இருக்கிறது (இதனால் பீமனுக்கு ‘#விருகோதரன்’ என்றும் பெயர் உண்டு!)...
திருப்தியாக சாப்பிட்டால் அன்றி, அது அடங்குவதில்லை.
வருடத்துக்கு ஒரே ஒரு நாள் என்னால் உபவாஸம் இருக்க முடியும்...
அதன் மூலம் எல்லா ஏகாதசிகளின் பலனையும் நான் பெற வேண்டும்....
அப்படிப் பட்ட ஓர் ஏகாதசியைப் பற்றிச் சொல்லுங்கள்!’’ என வேண்டினான்....

வியாசர் பதில் சொல்லத் தொடங்கினார்:
‘‘பீமா! இந்தக் கேள்விக்கு பரவாசு தேவனான கிருஷ்ண பரமாத்மா என்னிடம் சொன்னதை நான் உனக்குச் சொல்கிறேன்...
நீ கேட்டபடி ஓர் ஏகாதசி உண்டு... அதற்கு #நிர்ஜலா_ஏகாதசி என்று பெயர்...
தண்ணீர் கூடக் குடிக்காமல் அன்று விரதம் இருக்க வேண்டும்...
அதனால் அது #நிர்ஜலா #ஏகாதசி எனப்படுகிறது...
ஆனி மாத வளர்பிறையில் வரும் அந்த ஏகாதசியன்று, விரதம் இருந்து பெருமாளை வழிபடு! இதன் மூலம் எல்லா ஏகாதசிகளிலும் விரதம் இருந்த பலன் கிடைக்கும்!’’ என்றார் வியாசர்...

அப்படியே செய்தான் பீமன்... (இதனால் இந்த ஏகாதசி ‘#பீம #ஏகாதசி’ எனப் பெயர் பெற்றது...
பீமன், அன்று முழுவதும் தண்ணீர் கூடக் குடிக்காமல் விரதம் இருந்து மறு நாள் துவாதசி அன்று உணவு உண்டான்...
அதனால் அந்த துவாதசி ‘#பாண்டவ_துவாதசி’ எனப் பெயர் பெற்றது என்றும் சொல்வது உண்டு)...

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...