Friday, July 6, 2018

ஏகாதசி

பகவான் கிருஷ்ணருக்கும் மகாராஜா யுதிஸ்டிரருக்கும் இடையிலான உரையாடல்.

இந்த ஏகாதசி கடைபிடிப்போருக்கு மிக பெரிய அளவில் தெய்வ பக்தியைக் கொடுக்கும். மற்றும் தன் எல்லா பாவ விளைவுகளையும் அழித்துவிடும். இந்த ஏகாதசியை கடைபிடிப்பதால், ஒரு அந்தணரை கொல்லுதல், பசுவதை கரு கலைப்பு, மற்றவர்களைக் குற்றம் கூறுதல், தகாத உடலுறவு, பொய் பேசுதல், பொய் சாட்சி அளித்தல், மற்றவர்களிடம் தற்பெருமை கொள்ளுதல், பணத்திற்காக வேதங்களை உச்சரிப்பது மற்றும் கற்பிப்பது தனக்கென்றே ஒரு இலக்கியத்தை உருவாக்கிக் கொள்வது போன்றவற்றால் ஏற்படும் பாவ விளைவுகள் அனைத்தும் இந்த ஏகாதசியை கடைப்பிடிப்பதால் அழிந்துவிடும். ஏமாற்றுபவர் பொய் ஜோசியர் மற்றும் ஏமாற்றும் வைத்தியர் போன்றவர்களும் பொய் சாட்சி அளிப்பவருக்கு ஈடான பாவத்தை செய்பவர்கள் ஆவர். இது போன்ற எல்லா பாவச் செயல்களும் இந்த ஏகாதசியை கடைபிடிப்பதால் அழிந்துவிடும். தன் தொழில் தர்மத்தை விட்டுவிட்டு போர்களத்தில் இருந்து வெளியேறும் ஒரு க்ஷத்திரியன், நிச்சயமாக தன் கடமைகளில் இருந்து வீழ்ச்சி அடைந்து இறுதியில் நரகத்திற்கு செல்வார். இதுபோன்ற ஒருவர் இந்த ஏகாதசியை உறுதியுடன் கடைபிடித்தால் சுவர்க்கலோகத்தை அடைவார்.

ஓ! மன்னா, தன் ஆன்மீக குருவிடமிருந்து அறிவைப் பெற்ற ஒரு சீடன், தன் குருவை நிந்திப்பதில் ஈடுபட்டால் மிகப்பெரிய பாவங்களை சேமித்துக் கொள்வான். இதுபோன்ற நிராகரிக்கப்பட்ட ஒரு பாவியும் இந்த ஏகாதசியை கடைபிடிப்பதால் தன் எல்லா பாவ விளைவுகளில் இருந்து விடுபட்டு பரமத்தை அடைவான். ஓ! மன்னர்களின் மன்னனே! ஒருவர் கார்த்திகை மாதத்தில் புஸ்கரில் மூன்று முறை நீராடுவது மற்றும் ஜனவரி மாதத்தில் சூரியன் மகர ராசியில் நுழையும்போது பிரயாகையில் குளிப்பது, காசியில் சிவராத்திரி விரதத்தை கடைபிடிப்பது. கயா என்னுமிடத்தில் பகவான் விஷ்ணுவின் தாமரைப் பாதங்களை சேவிப்பது. குரு கிரகம் சிம்ம ராசியில் நுழையும் போது கவுதமி நதியில் குளிப்பது. கும்பமேளா சமயத்தில் கேதர் நாத்திற்கு செல்வது. பத்ரிநாத் - ஐ வணங்குவது. சூரிய கிரகணத்தின்போது குரு க்ஷேத்திரத்தில் குளிப்பது, யானைகள், குதிரைகள், பசுக்கள், தங்கம், மற்றும் நிலத்தை தானமளிப்பது போன்றவற்றை மேற்கொள்வதால் அடையும் பலன் அனைத்தையும் இந்த ஏகாதசியை கடைபிடிப்பதால் ஒருவர் எளிதில் அடைவார். இந்த ஏகாதசி பாவச் செயல்கள் என்ற மரத்தை வெட்டி வீழ்த்தும் கூர்மையான கோடாளியைப் போன்றது. மற்றும் பாவங்கள் எனும் எரிபொருளை எரித்து சாம்பலாக்கும் காட்டுத் தீயைப் போன்றது. மேலும் பாவச் செயல்களால் உண்டான இருளை போக்கும் பிரகாசமான சூரியனைப் போன்றது.

இந்த அபரா ஏகாதசியைக் கடைபிடித்து, பகவான் விஷ்ணுவை திரிவிக்ரமா உருவத்தில் வழிபடுபவர் எல்லா மங்களங்களும் உடைய பகவான் விஷ்ணுவின் பரமத்தை அடைவார். அனைவரின் நலனுக்காக நான் உன்னிடம் எடுத்துரைத்த இந்த ஏகாதசியின் புகழை எவரொருவர் படித்தாலோ அல்லது கேட்டாலோ, அவர் தன் எல்லா பாவ விளைவுகளில் இருந்து விடுபடுவார்.

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...