Sunday, July 1, 2018

மண்ணில் நல்ல வண்ணம் வாழ


ஏகநாதர் மகாராஷ்டிரத்தில் அவதரித்த மகான். அவரிடம் ஒரு பக்தர் வந்து "சுவாமி, உங்களால் எப்படி புனித வாழ்வு
வாழ முடிகிறது? சிறு பாவம்கூடச் செய்யாமல் எப்படி இருக்க முடிகிறது?” என்று கேட்டார் சிந்தனையில் ஆழ்ந்தார் ஏகநாதர் பிறகு , 

எண்ணைப் பற்றிய கவலையை விடு . உன்னைப் பற்றி கவலைப்படு இன்னும் ஒரு வாரத்தில் உனக்கு மரணம் வரும . இன்னும ஆறே நாட்கள் தான் உனக்கு வாழ்வு, வண்டியதைச் செய என்றார்

பக்தர் நடுநடுங்கிப் போய் வீட்டிற்கு விரைந்தார் குடும்பத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளை அவசரம் அவசரமாகச் செய்தார். இதே கவலையில் காய்ச்சலாகப் படுத்துவிட்டார். சிறு துன்பம் கூட பிறருக்குச் செய்யத்
துனியவில்லை . சதா சர்வகாலமும் ஆண்டவேைய தியானம் செய்து கொண்டிருந்தார்

ஆறாவது நாள் ஏகநாதர் பக்தரைப் பார்க்க வந்தார். பக்கர் அவர் பாதங்களைத் தொட்டு வணங்கினார். பெரியவர் கேட்டார் ‘அன்பனே! இந்த ஆறு நாட்களும் எவ்வளவு பாவம்
செய்திருப்பாய்?
பாவமா? அதற்கு நேரமே இல்லையே! மரண பயம் என்னை பாவ வழிக்குப் போகவிடவில்லை . கடமைகளை
அவசரம் அவசரமாக முடிக்கவே நேரம்
போதவில்லையே சுவாமி' என்றார் பக்தர்
'மரணம் ஒவ்வொரு கணமும் நம்மை
நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டால் போதும்' நாம் பாவம் செய்ய வாய்ப்பில்லை என்றார் ஏகநாதர்

பக்தருக்கு அப்போதுதான் உண்மை புரிந்தது

No comments:

Post a Comment

கடவுளைக் கண்ட ஹரி சிங்

ஜெய்ப்பூரில், சுவாமி (சுவாமி விவேகானந்தர்) அரசின் தலைமைத் தளபதியான சர்தார் ஹரி சிங்குடன் மிகவும் நெருக்கமாகப் பழகினார். அவர் ஹரி சிங்கின் இல...