Showing posts with label மறைக்கப்பட்ட வரலாறு. Show all posts
Showing posts with label மறைக்கப்பட்ட வரலாறு. Show all posts

Monday, May 4, 2020

தாரா ஷிகோ

இந்தியர்களில் 99.87 சதவீதம்பேர்கள் தாராஷிகோ என்கிற பெயரையே கேள்விப்பட்டதில்லை என்கிற செய்தி என் மண்டைக்குள் உறைக்க நீண்ட நேரம் பிடித்தது. இந்தியர்களிடமிருந்து மறைக்கப்பட்ட மிக முக்கியமான ஒருவன் தாராஷிகோ. நாம் அவனைக் குறித்துத்தான் பள்ளியில் படித்திருக்க வேண்டும். அதற்குப் பதிலாக நாம் படித்ததெல்லாம் கொடுங்கோலர்களின் சரித்திரத்தைத்தான்.

முகலாய அரசருக்கு மிகவும் பிரியப்பட்ட மகனாகவும், அவருக்கு அடுத்தபடியாக அரியணை ஏறியிருக்க வேண்டியவருமான தாரா ஷிகோ அவரது சகோதரரான அவ்ரங்க்ஸிப்பினால் கொல்லப்பட்டார். ஹிந்து மத இலக்கியங்களின் மீது மிகுந்த பற்றுள்ளவராக இருந்த தாரா ஷிகோ, பகவத் கீதையையும், பிரபோத சந்திரோதயா எனப்படும் பத்தாம் நூற்றாண்டு தத்துவ நாடகத்தையும், யோக வஷிஷ்டத்தையும் இந்திய அறிஞர்களின் உதவியுடன் பாரசீக மொழியில் மொழிபெயர்த்திருக்கிறார். 

அதனுடன் இந்திய தத்துவங்களுக்கு அடிப்படையான ஐம்பத்தி இரண்டு உபநிஷத்துகளையும் பனாரஸ் பண்டிதர்களின் உதவியுடன் பாரசீக மொழியில் எழுதியிருக்கிறார். சிர்-இ-அக்பர் (The Grand Secret) என்கிற தலைப்பில் எழுதி முடிக்கப்பட்ட அந்தப் புத்தகம் ஜூன் 28, 1657-ஆம் வருடம் வெளியிடப்பட்டது. புத்தகம் வெளியிடப்பட்ட சிறிது காலத்திற்குள்ளாகவே அவரது சகோதரர் அவ்ரங்க்ஸிப்புடன் நடந்த போரில் தோற்கடிக்கப்பட்ட தாரா ஷிகோ பல்வேறு துயரச் சம்பவங்களுப் பின்னர் பிடிபட்டு அவ்ரங்க்ஸிப்பின் உத்தரவின் பேரில் தலை துண்டிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்.

தாரா ஷிகோ முகலாய அரியணை ஏறியிருந்தால் இன்றைய இந்திய வரலாறு வேறுவிதமாக இருந்திருக்கும். அவரது பாரசீக மொழிப் புத்தகங்கள் பின்னர் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு மேற்கத்திய நாடுகளை அடைந்தது. அவர் இல்லாதிருந்தால் பகவத்கீதை மேற்குலகை அடைந்திருக்க வாய்ப்புகள் மிகக் குறைவு.

முகலாய அரசர் ஷாஜஹானுக்கும், மும்தாஜுக்கும் பிறந்த நான்கு மகள்களில் மூத்தவளான ஜஹனாராபேகமும், எல்லாவருக்கும் கடைசியான ரோஷனாராபேகமும் மிக முக்கியமானவர்கள். முகலாய அரியணை அரசியலில் ஷாஜஹானும், அவருக்குப் பிரியமான ஜஹானாரா பேகமும், அவரது மூத்தமகனான தாரா ஷிகோவும் ஒரு கட்சிக்காரர்கள் என்றால், ரோஷனாரா பேகமும், அவ்ரங்க்ஸிப்பும் இன்னொரு கட்சிக்காரர்கள். அரண்மனையின் அந்தப்புரத்தில் எடுக்கப்படும் அத்தனை ரகசிய முடிவுகளையும் தக்காணத்தில் இருந்த அவ்ரங்க்ஸிப்பிற்கு ஒற்றர்கள் மூலம்ரோஷனாராபேகம் தொடர்ந்து அனுப்பிக் கொண்டிருந்தார். அதனை வைத்தே அவ்ரங்க்ஸிப் முகலாய அரண்மனையைக் கைப்பற்ற முடிந்தது என்பதில் சந்தேகமில்லை.

ரோஷனாராபேகம் தனது மூத்த சகோதரனான தாரா ஷிகோவிடம் மிகக் கடுமையான வெறுப்பு கொண்டிருந்தாள். அவள் மூலம் தனக்கு அரண்மனைக்குள்ளேயே கடுமையான எதிரிகள் உருவாகியிருப்பதனை தாரா ஷிகோ உணர்ந்திருக்கவில்லை. அதனை அவருக்கு எடுத்துச் சொன்ன அவர்களது நண்பர்களின் பேச்சையும் தாரா ஷிகோ மதிக்கவில்லை. ஷாஜஹானுக்குப் பிறகு தானே ஹிந்துஸ்தானத்து பாதுஷாவாகப் போவது உறுதியானது என்பதில் அவருக்கு எந்த சந்தேகமும் இருந்திருக்கவில்லை. அதையெல்லாம் விட, தாரா ஷிகோ முகலாய அரசவை முல்லாக்களை தனது எதிரிகளாக்கிப் பெரும் பிழை செய்திருந்தார். எல்லா மதத்தவரையும் மதித்து நடக்கும் அவரை அரசவை முல்லாக்கள் அவரைக் "காஃபிர்" என்று மனதுக்குள் கறுவிக்கொண்டு தாராவைக் கவிழ்க்க நேரம் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

ஷாஜஹான் அவரிடம் அரசுப் பொறுப்புகளை ஒப்படைத்த காலத்தில் தாரா ஷிகோ ஏறக்குறைய இஸ்லாமை விட்டு வெளியேறியிருந்தார். வெள்ளைக்கார கிறிஸ்தவ பாதிரிகள் என்னேரமும் அவரைச் சூழ்ந்திருந்தார்கள். தொடர்ந்த மூளைச்சலவையின் காரணமாக தாரா ஷிகோ ஒரு கிறிஸ்தவரைப் போலவே நடந்து கொள்ளத் தலைப்பட்டார். அவர் கிறிஸ்தவராக மதம் மாறிவிட்டதாகவும் வதந்திகள் உலவின. ஒருவேளை அவர் பதவியேற்றிருந்தால் இந்தியாவை ஆண்ட முதல் கிறிஸ்தவ அரசாராக அவர் இருந்திருக்கலாம். மெல்லக் கசிந்த இந்தச் செய்திகளை முகலாய அரசவை முல்லாக்கள் வெறுத்தார்கள். எனவே இஸ்லாமிய அடிப்படைவாத எண்ணம் கொண்டவராக அறியப்படுகிற, தாரா ஷிகோவினால் "நமாஸி" என்று தமாஷாக அழைக்கப்பட்ட அவ்ரங்க்ஸிப்பிடம் ரகசியமாக தொடர்பு வைத்திருந்தார்கள்.

போரில் தோல்வியடைந்த தாரா ஷிகோவும் அவரது ஏழு வயது மகனான ஷிஃபிர் ஷிகோவும் கைப்பற்றப்பட்டு, தில்லியில் ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்டு பின்னர் ஒரு சிறிய கட்டிடத்தில் அடைத்து வைக்கப்பட்டார்கள் (அந்தக் கட்டிடம் இன்றைக்கும் தில்லியில் இருக்கிறது). அவரை என்ன செய்வது என்று அவ்ரங்க்ஸிப் அவரது அரசவை பிரதானிகள் மற்றும் சகோதரி ரோஷனரா பேகத்திடம் ஆலோசனை கேட்க, ஒன்றிரண்டு பேர்கள் அவரை மற்ற இளவரசர்களைப் போல குவாலியர் சிறையில் அடைத்து வைக்கலாம் என்று யோசனை சொல்ல, ரோஷனாரா பேகம் மிகக் கோபத்துடன் தாரா ஷிகோவைக் கொல்ல வேண்டும் என்று வாதிடுகிறாள். அவளுக்கு ஆதரவாக அரசவை முல்லாக்களும் சேர்ந்து கொண்டு காஃபிரான தாரா ஷிகோவைக் கொல்வதுதான் சரியானது என்று யோசனை சொல்ல, அவ்ரங்க்ஸிப் அவரைக் கொலை செய்ய முடிவெடுக்கிறார். அதன்படியே தாரா ஷிகோவைக் கொல்ல அவரது அடிமைகளில் ஒருவனை அனுப்புகிறார்.

இதற்கிடையே, தன்னையும் தன் மகனையும் விஷம் வைத்துக் கொன்றுவிடுவார்கள் என்று அஞ்சிய தாரா ஷிகோ தன்னுடைய உணவைத் தானே சமைத்துக் கொள்வதாகச் சொல்லிவிட்டு, தனது மகனுடன் பேசியபடியே ஒரு சிறிய பாத்திரத்தில் பருப்பை (lentils) வேகவைத்துக் கொண்டிருந்திருக்கிறார். அந்தச் சமயத்தில் கதவை உடைத்துக் கொண்டு நான்கு பேர் உள்ளே புகுந்திருக்கிறார்கள். தாரா ஷிகோ உடனே சிறுவனைத் தூக்கி அணைத்துக் கொண்டு, "நம்மைக் கொல்வதற்காக வந்திருக்கிறாகள் மகனே" எனக் கூறியபடி சமையலறையிலிருந்த சிறிய கத்தியை எடுத்துக் கொண்டு அவர்களுடன் சண்டையிடுகிறார்.
தன்னுடைய நேரம் வந்துவிட்டதை உணர்ந்த தாரா ஷிகோ சத்தமாக "முகமது எனக்கு இறப்பைத் தந்தார்; தேவனின் பிள்ளை என்னைக் காப்பார்" எனப் பாரசீக மொழியில் மீண்டும் மீண்டும் சத்தமாகச் சொல்கிறார்,

"He found the Prince in his apartment raising his eyes to heaven, and repeating these words: [Mahammad ma-ra mikushad, ibn Allah Maryam mibashaid, Pers.], which is, "Mahomet gives me death, and the Son of God [and Mary] will [are necessary to] save me." - Bernier, Page 102

ஷிஃபிர் ஷிகோவை தாரா ஷிகோவிடமிருந்து ஒருவன் வலுக்கட்டாயமாகப் பிடுங்குகிறான். மற்ற மூன்று பேர்களும் தாரா ஷிகோவின் மீது பாய்ந்து அவரை அடித்துத் தரையில் வீழ்த்திக் கழுத்தை அறுத்துத் தலையைத் துண்டித்து எடுக்கிறார்கள். இது அத்தனையும் அந்தச் சிறுவனின் முன்பு நடக்கிறது. அந்தச் சிறுவன் மனது என்ன பாடுபட்டிருக்கும் என்று சொல்லத் தேவையில்லை.

துண்டித்த தலையைக் கழுவி, ஒரு தட்டில் வைத்து அவ்ரங்க்ஸிப்பின் முன் வைக்கிறார்கள். அவ்ரங்க்ஸிப் மிகச் சந்தோஷமாகத் தனது வாளின் முனையால் அந்தத் தலையைத் தொட்டுப் பார்க்கிறார். அதே வாளால் தலையின் ஒரு கண்ணைத் திறந்து பார்த்து அது சரியானதுதான் என உறுதி செய்து கொண்டு உடனடியாக அந்தத் தலையை ஒரு பெட்டியில் வைத்து மூடி "பாதுஷாவின் பரிசாக" சிறைப்பட்டிருக்கிரும் அவரது தந்தையான ஷாஜஹானிடம் அனுப்பி வைக்க உத்தரவிடுகிறார் அவ்ரங்க்ஸிப் (Page 103).

பெட்டியில் என்ன இருக்கிறது என்பதனை அறியாத ஷாஜஹான் சந்தோஷமாக "இப்போதாவது அந்தக் கொடியவனுக்கு இந்த அப்பனின் நினைவு வந்ததே" என்று சொல்லிக் கொண்டு பெட்டியைத் திறந்து பாத்து அவரது பிரியமான மகனின் வெட்டப்பட்ட தலையைப் பார்த்துக் கதறி அழுகிறார்.

பின்னர் அந்தத் தலையையும், தாரா ஷிகோவின் உடலையும் ஹுமாயூனின் கல்லறையில் புதைக்க உத்தரவிடுகிறார் அவ்ரங்க்ஸிப். சிறுவன் ஷிஃபிர் ஷிகோ அவ்ரங்க்ஸிப்பை எதிர்த்த பிற இளவரசர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த குவாலியர் சிறைக்குக் கொண்டு போய் சிறையில் அடைக்கப்படுகிறான்.



Wednesday, April 15, 2020

முத்து வடுக நாத துரை

கிழக்கிந்திய கம்பெனியின் உயர் அதிகாரி ஜெனரல் ஜேம்ஸ் வெல்ஷ், 1818ல் பினாங் வந்து இறங்கினார்.

ஓய்வெடுப்பதற்காக பினாங்கில் தங்கியிருந்த வெல்ஷைப் பார்க்க ஒரு பார்வையாளர் காத்திருந்தார்.

அவர் ஒரு முதியவர். தோல் சுருங்கி, தலை நரைத்து, உடல் மெலிந்து, கைகள் நடுங்க நின்று கொண்டிருந்த அந்த முதியவரை உற்றுப் பார்த்தான் ஜெனரல் வெல்ஷ்.

"யார்?'

முதியவரால் பதில் சொல்ல முடியாமல் உதடுகள் நடுங்கின. தன்னை வெல்ஷ் அடையாளம் கண்டு பிடித்து விடுவான் என்ற நம்பிக்கையோடு, ஆதரவற்ற கண்களால் ஜெனரல் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார் அந்த முதியவர்.

அவர் கன்னங்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது.

"யார் நீ?' இம்முறை கோபத்தில் வெடித்தது வெல்ஷின் குரல். பயத்தில், ஆடிப் போனார் அந்த முதியவர். கைகளை மடித்து, உடம்போடு ஒட்டிக் கொண்டு, கூனிக் குறுகிப் போய், உதடுகளும், கண்களும் துடிக்க, ஒரே ஒரு சொல் வெளிப்பட்டது முதியவரிடமிருந்து...

"துரைசாமி!'

அந்தப் பெயர் வெல்ஷின் முகத்தில் அறைந்தது. இவனா? இவனா? அந்த துரைசாமியா இவன்?

யார் இந்த "துரைசாமி"?...

எவ்வளவு தொலைவில் எதிரி இருந்தாலும், குறி தப்பாமல் ஈட்டி எறியும் வீரன்... கர்னல் பதவியில் இருந்த போது வெல்ஷுக்கு வளறித்தடி சுழற்றும் வித்தையைக் கற்றுக் கொடுத்த மாவீரன் சின்ன மருதுவின் மகன் தான் இந்த துரைசாமி...

பதினைந்து வயதுப் பையனாக, 1802ல் வெளி உலகக் கொடுமையின் சாயல் கூடப் படியாத குழந்தை முகத்தோடு, தூத்துக்குடியில் கப்பலேற்றப்பட்டு, தீவாந்தர தண்டனைக்காக நாடு கடத்தப்பட்ட அதே துரைசாமி தான்...

தடித்த ஆற்காடு நாணயத்தைத் தன் இரண்டு விரல்களால் வளைத்து எறிந்த பெரிய மருதுவின் பரம்பரையில் உதித்த அதே துரைசாமி தான்...

துரைசாமியைப் பார்த்து இரக்கப்பட்டான் ஜெனரல் ஜேம்ஸ் வெல்ஷ்; ஆனால், கம்பெனி விதிகளுக்கு எதிராக அவனால் துரைசாமிக்கு எந்த உதவியும் செய்ய முடியவில்லை. அவன் வெள்ளை கிறிஸ்தவ அதிகாரி. ஒரு காலத்தில் அவன் மருதுபாண்டியரின் நண்பன். பிறகு அவர்களை வேட்டை நாயாகத் துரத்திப் பிடித்து, தூக்கில் போட்டவனும் அவன் தான்.

கம்பெனி உத்தரவின் படி துரைசாமியைத் தூத்துக்குடி வரை கொண்டு சென்று, கப்பலேற்றி, "பிரின்ஸ் ஆப் வேல்ஸ்' என்ற தீவுக்கு நாடு கடத்தியவனும் அவன் தான்.

பதினாறு ஆண்டுகளில், தீவாந்தர தண்டனையும், கொத்தடிமை வாழ்க்கையும் ஆங்கிலக் கிறிஸ்தவர்களின் கொடுமைகளும் ஒரு இளைஞனை கிழவனாக்கி விட்ட கொடுமை வெல்ஷை உலுக்கியது. ஆனாலும், அவன் என்ன செய்வான். பாவம்!

இந்த மண்ணில் போராடி வீழ்ந்து, சருகாகி, உரமாகி மக்கிப் போன பல குடும்பங்களை, சிதிலமாகிப் போன அவர்களது பரம்பரைகளை ஒரு நொடி ஈரத்தோடு எண்ணிப் பார்க்கத் தான் நமக்கு நேரமில்லையே!

பினாங்கில் வெல்ஷம், துரைசாமியும் சந்தித்த அந்த நிகழ்ச்சி தான் மருதுபாண்டியர் வாரிசு பற்றி ஆதாரபூர்வமாகக் கிடைத்த கடைசிச் செய்தி!

மருது சகோதரர்களின் இளையவரான சின்னமருது மகன் துரைச்சாமியின் இயற்பெயர் முத்து வடுக நாத துரை என்றும் பின்னர் அப்பெயர் துரைச்சாமி என மருவியது...துரைசாமி உட்பட 11 விடுதலைப் போராளிகளைப் பிடித்துக் கொடுத்தால் 1000 கூலிச்சக்கரங்கள் ( 18ம் நூற்றாண்டு நாணயம்) பரிசாக வழங்க்கப்படும் என்று ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனித் தளபதி கர்னல் அக்னியூ பொது அறிவிப்பை பிரகடனப்பத்தினார். 

மருது சகோதரர்கள் 1801, அக்டோபர் 24 இல் தூக்கிலிடப்பட்ட பின்னர் 15 வயதே ஆன துரைச்சாமி உட்பட 72 விடுதலைப் போராளிகளை மலேயாவின் பிரின்ஸ் ஆப் வேல்ஸ் தீவிற்கு (இன்றைய பினாங்கு) 1802, பெப்ரவரி 11 இல் தளபதி வெல்ஸ் நாடு கடத்தி அனுப்பி வைத்தார்

1818 ஆம் ஆண்டு தளபதி வெல்ஸ் (Colonel Welsh) பினாங்குக்குச் சென்ற போது உடல் நலம் குன்றிய தோற்றத்துடன் காணப்பட்ட துரைச்சாமியைக் காண நேரிட்டது. துரைச்சாமியின் இத்தோற்றம் வெல்ஸ் தம் இதயத்தில் கத்தி பாய்ந்தது போன்று இருந்தது எனக் குறிப்பிடுகின்றார்.

1891, மே 18 ஆம் நாள் போராளி துரைச்சாமியின் மகன் மருது சேர்வைகாரன் என்பான் மதுரைக் கலக்டரிடம் ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பித்த மனுவில் துரைச்சாமியின் இறுதி நாட்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். துரைச்சாமி பினாங்கிலிருந்து சென்னைக்குக் கொண்டு வரப்பட்டார். 

அவர் ஆங்கில அரசிடம் பாதுகாப்புக் கோரி மதுரையில் தங்கியிருக்க அனுமதி கேட்டிருந்தார். ஆனால் திடிரென துரைச்சாமி நோய்வாய்ப்பட்டு சிவகங்கைக்கு கொண்டு வரப்பட்டு அங்கு காலமானார் என்று அவரது மகன் குறிப்பிடுகின்றார்.....

துரைசாமிக்குக் கிடைத்த சிறிது வெளிச்சம் கூட அவரோடு சிறைப்பட்ட மற்ற 71 பேருக்கும் கிடைக்கவில்லை. அவர்கள் என்ன ஆனார்கள்? எப்படி வாழ்ந்தார்கள்? அவர்களின் வாரிசுகள் எங்கே இருக்கிறார்கள்? விடை இல்லாத கேள்விகள் கொப்பளிக்கின்றன.

சுதந்திரப் போராட்டம் என்பது இப்படி வெளியே தெரியாமல் போன எண்ணிக்கையற்ற மனிதர்களின் உயிர்த் தியாகத்தால் உருவானது என்பதை அறியும் போது தான் சுதந்திரத்தின் உண்மையான மதிப்பை  முழுமையாக உணர முடியும்.

Saturday, August 10, 2019

பாரதத்திர்க்கு சுதந்திரம் வழங்கப்பட்ட வரலாறு

1947 ஆகஸ்டு 15 நாம் எப்படி சுதந்திரம் பெற்றோம்.
மௌண்ட் பேட்டன், நேருவை அழைத்து, உங்கள் இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்கப் போகிறோம் அதை எப்படிக் கொடுப்பது என்று கேட்க,

நேருவுக்கு குழப்பமாக இருந்தது.
எதை அடையாளமாக வைத்து சுதந்திரத்தைப் பெறுவது.....
(பிரிட்டிஷ் அரசு இந்தியாவுக்கு  சுதந்திரம் வழங்கியது என்பதற்கு எந்த சாசனமும் இல்லை).

உடனே நேரு  மூதறிஞர் ராஜாஜியை அணுகி,
"எனக்கு இந்த நடைமுறைகள் தெரியாது, அதனால் தாங்கள் தான் தீர்வு கூற வேண்டும்"
என்று கூற,

உடனே ராஜாஜி  "கவலை வேண்டாம், எங்கள் தமிழகத்தில் மன்னர்களிடம் ஆட்சி மாற்றம் ஏற்படும் போது, ராஜகுருவாக இருப்பவர், செங்கோலைப் புதிய மன்னருக்குக் கொடுத்து, ஆட்சி மாற்றம் செய்வர்.
நாமும் அன்னியன் கையால் சுதந்திரம் பெறுவதை விட, குரு மகானின் கையால் செங்கோலைப் பெற்று ஆட்சி மாற்றம் அடையலாம்", என்றார்.

நேருவும் "நேரம் குறைவாக உள்ளது.. உடனே ஏற்பாட்டை செய்யுங்கள்", என்று உத்தரவிட்டார்.

ராஜாஜி உடனே திருவாவடுதுறை ஆதீனத்தைத் தொடர்பு கொண்டு  விஷயத்தைச் சொல்ல,
அப்போது கடும் காய்ச்சலில் இருந்த ஆதீனம் அவர்கள், உடனே முறையாக செங்கோல் தயாரித்து, தங்க முலாம் பூசி,
இளைய ஆதீனம் தம்பிரான் பண்டார சுவாமிகளிடம் பொறுப்பை ஒப்படைத்து, கூடவே ஓதுவார் மூர்த்திகளையும் உடன் அனுப்பி வைத்தார். (தேவாரத்தில் இருந்து கோளறு பதிகம் பதினோரு பாடல்களை குறித்துக் கொடுத்தார்--இந்த பாடல்களை அப்போது ஓதுவார் மூர்த்திகள்  பாட வேண்டும்).

ராஜாஜி அனுப்பிய தனி விமானத்தில் அவர்கள் செங்கோலுடன்  டில்லி போய் சேர்ந்தனர்.

அப்போது ஆயிரம் ஆண்டு அடிமைத் தளையில் இருந்து, பாரதத்தின் விடுதலை பெறும் விழாவிற்காக எல்லோரும் காத்திருந்தனர்.

அந்த சுதந்திர வைபவ தினத்தில் மௌண்ட் பேட்டனிடம் இருந்து செங்கோலை குரு மகா சன்னிதானம் திருவாவடுதுறை ஆதீனம் தம்பிரான் பண்டார சுவாமிகள் பெற்று, செங்கோலுக்கு புனித நீர் தெளித்து, ஓதுவார் மூர்த்திகள், வேயிறு தோளிபங்கன் என்று துவங்குகிற தேவார திருப்பதிகத்தைப் பாட, பதினோராவது பாடலின் கடைசி வரி,
"அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே"-- 
இந்த வரியைப் பாடி முடிக்கும் போது தான், சுவாமிகள் செங்கோலை நேருவிடத்தில் கொடுத்தார்.

அந்த நிகழ்வைத் தான் நாம் சுதந்திர தினமாகக் கொண்டாடுகிறோம்.

இந்த நிகழ்வு தமிழுக்கும் தமிழகத்திற்கும் எவ்வளவு பெருமை..

இந்த வரலாற்று விஷயத்தை பாடப் புத்தகத்தில் வெளியிட்டு, நாடறிய செய்யாமல் சதி செய்யப்பட்டது.

நண்பர்களே இவ்வளவு பெருமை வாய்ந்த செய்தியை நாடறியச் செய்வோம்.

திருவாவடுதுறை ஆதீன மடத்தில், இந்த செங்கோல் வைபவம், கருப்பு வெள்ளை புகைப்படமாக உள்ளது. புகைப்படத்தில் 15.8.1947 என்று தேதியிட்டு இருக்கும்.

கடவுளைக் கண்ட ஹரி சிங்

ஜெய்ப்பூரில், சுவாமி (சுவாமி விவேகானந்தர்) அரசின் தலைமைத் தளபதியான சர்தார் ஹரி சிங்குடன் மிகவும் நெருக்கமாகப் பழகினார். அவர் ஹரி சிங்கின் இல...