Sunday, July 26, 2020

தவ வலிமை

அடியோடு நம்பிக்கை இழந்து போய் அந்த அரசன், முனிவரின் ஆசிரமத்தில் அடைக்கலம் தேடி போனான். “முனிவர் பெருமானே! போரில் தோற்று நாட்டை இழந்து விட்டேன். அன்பு கூர்ந்து என்னை கைதூக்கி விட வேண்டும்” என்று வேண்டினான்.
முனிவர், “அரசே அதோ அந்த மரத்தின் கீழே போய் நின்று மரத்திடம் உன் விருப்பத்தைச் சொல்” என்றார். அது கற்பக விருட்சம்! அதனால் அரசன் எண்ணம் நிறைவேறியது. இழந்த நாட்டை பெற்றுவிட்டான். ஆனால் மறுபடி ஆசிரமத்துக்குப் போய் முனிவரிடம் தனது சந்தேகத்தை கேட்டான்.
“புண்ணியாத்மாவே! தங்களிடம் விரும்பியதையெல்லாம் அளிக்கும் கற்பகமே இருக்கும் போது தாங்கள் இப்படி ஏழையாகவே ஏன் இருக்கிறீர்கள்? மிகவும் தேவையான சௌகரியங்களைக் கூட கேட்டு பெற்றுக் கொள்வதில்லையே ஏன்?” என்றான் அரசன்.
முனிவர் சிரித்தபடி சொன்னார்:-
“அரசே! நாங்கள் கஷ்டங்கள் நிறைந்த வாழ்க்கை நடத்துகிறோம். ஆகவேதான் கற்பகமரம் இங்கே முளைத்துள்ளது. எனது தவம் தளர்ச்சி அடையுமானால் அந்தக் கணத்திலேயே இந்த கற்பக மரத்தின் சக்தி போய்விடும். மனிதன் உயர்ந்த லட்சியத்தை அடைய ஆழ்ந்த ஈடுபாட்டுடன் செயல்படும்போது சுற்றுப்புற சூழ்நிலை எப்படி இருந்தாலும் பொருட்படுத்தவே கூடாது. பற்றற்ற மனநிலையுடன் செயல்பட வேண்டும். நமது எண்ணம் கைகூட இவைதான் காரணமாகின்றன”.

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...