Saturday, July 4, 2020

திருநீறு இட்டார் கெட்டார்

“திருநீறு இட்டார் கெட்டார்.. திருநீறு இடாதார் வாழ்ந்தார்” : வாட்சாப்

வாரியார் சுவாமிகள் நகைச்சுவையாக பேசுவதில் வல்லவர்.  அதே போல் எதிர் மறையாக இருந்தால் கூட இதை நேர் மறையாக மாற்றி சிந்திப்பவர்.

 இவர் ஒரு கூட்டத்திற்கு போகும் வழியில் நாத்திகர்கள் 
*திருநீறு இட்டார் கெட்டார்..* 
*திருநீறு இடாதார் வாழ்ந்தார்*
என்று எழுதி இருந்தார்கள். 

உடன் வந்தவர், “காலம் கெடட்டுப் போச்சு. என்ன எழுதியிருக்கிறார்கள் பார்த்தீர்களா?” என்றார். 

அதற்கு வாரியார், “இல்லை... சரியாகத்தானே எழுதி இருக்கிறார்கள்” என்றார். 

“சாமி, நீங்களும் இப்படிச் சொல்கிறீர்களே?”, என்றார். 

அதற்கு வாரியார், “நன்றாக பதம் பிரித்து படித்து பார்”, என்று சொல்லி, அவரே பதம் பிரித்துச் சொன்னார். 

“திரு நீறு இட்டு யார் கெட்டார் (இட்டு + யார் = இட்டார்)” என்றும்.... அடுத்தது, 

“திருநீறு இடாது யார் (இடாது+யார்=இடாதார்) யார் வாழ்ந்தார்” என்றும் சொன்னார்.

அவருக்கு முருகன் தந்த அறிவுக் கொடை. 

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...