Thursday, July 2, 2020

வற்றாத செல்வம் தரும் மஹாலஷ்மி சுலோகம்

துர்வாச முனிவர் சாபத்தினால் செல்வம் யாவும் இழந்து துன்புற்ற  தேவேந்திரன், தன் தவறு உணர்ந்து, திருமகளைத் தியானித்து இழந்த செல்வத்தை மீண்டும் பெற்றதாக புராணக் கதை உண்டு. அப்போது அவன் சொன்ன அற்புதத் துதி இது. இதனைச் சொல்வோர் இல்லத்தில் சகல சௌபாக்யமும் ஐஸ்வர்யமும் சேரும்.

நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீபீடே சுர பூஜிதே
சங்கு சக்ர கதா ஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

நமஸ்தே கருடாரூடே கோலாசுர பயங்கரி
சர்வ பாப ஹரே தேவி மஹாலஷ்மி நமோஸ்துதே

சர்வக்ஞே சர்வ வரதே சர்வ துஷ்ட பயங்கரி
சர்வ துக்க ஹரே தேவி மஹாலஷ்மி நமோஸ்துதே

சித்தி புத்தி பிரதே தேவி புத்தி முக்தி பிரதாயினி
மந்திர மூர்த்தே ஸதா தேவி மஹாலஷ்மி நமோஸ்துதே

ஆத்யந்த ரஹிதே தேவி ஆதி சக்தி மஹேஸ்வரி
யோகஜே யோக சம்பூதே மஹாலஷ்மி நமோஸ்துதே

ஸ்தூல சூக்ஷ்ம மகா ரௌத்ரே மகாசக்தி மகோதரே
மகாபாப ஹரே தேவி மஹாலஷ்மி நமோஸ்துதே

பத்மாஸன ஸ்திதே தேவி பரபிரம்ம ஸ்வரூபிணி
பரமேஸி ஜகந்மாதா மஹாலஷ்மி நமோஸ்துதே

ஸ்வேதாம் பரதரே தேவி நானாலங்கார பூஷிதே
ஜகஸ்திதே ஜகந்மாதா  மஹாலஷ்மி நமோஸ்துதே

பலச்ருதி

மஹாலக்ஷ்மி அஷ்டக ஸ்தோத்ரம் ய: படேத் பக்திமந் நர:
ஸர்வஸித்தி மவாப்நோதி ராஜ்யம் ப்ராப்நோதி ஸர்வதா
ஏககாலே படேந் நித்யம் மஹாபாப விநாஸநம்
த்விகாலம் ய: படேந் நித்யம் தனதான்ய ஸமந்வித:
த்ரிகாலம் ய: படேந் நித்யம் மஹாஸத்ரு விநாஸநம்
மஹாலக்ஷ்மி பவேந் நித்யம் ப்ரஸந்ந வரதா ஸுபா

என்ன படிக்கிறோம் என்று விளங்கிக் கொண்டு படித்தால் இன்னும் நன்றாக என்று நினைப்பவர்களுக்கு இதனுடைய பொருள் கீழே கொடுத்திருக்கிறேன்.

மகா மாயையும் ஸ்ரீ பீடத்தில் வசிப்பவளும் தேவர்களால் வழிபட்டவளும், சங்கு, சக்கரம், கதை இவற்றைக் கையில் ஏந்தியிருப்பவளுமான மகாலக்ஷ்மி தேவியே உன்னை வணங்குகிறேன்.

கருட வாகனத்தில் அமர்ந்தவளும் கோலாசுரன் என்னும் அசுரனுக்கு பயத்தைக் கொடுத்தவளும் சகல பாபங்களையும் போக்குபவளுமான மகாலக்ஷ்மி தேவியே உன்னை வணங்குகிறேன்.

சிந்தனை, புத்தி, அறிவு, போகம் இவற்றைத் தருபவளும், மந்திர வடிவானவளும், எப்போதும் ஒளிமயமாகத் திகழ்பவளுமான மகாலக்ஷ்மி தேவியே உன்னை வணங்குகிறேன்.

தொடக்கமும், முடிவும் அற்றவளும், முதல் சக்தியும், மஹேஸ்வரியும், யோகத்தினால் தோன்றியவளும், யோகத்தினால் அவதரித்தவளும், யோகத்துக்கும் பலமானவளான மகாலக்ஷ்மி தேவியே உன்னை வணங்குகிறேன்.

கண்களுக்கு தெரிபவளும், புலப்படாதவளும், மிகுந்த ஆற்றல் உடையவளும், மகா பாவங்களைப் போக்குகிறவளுமான மகாலக்ஷ்மி தேவியே உன்னை வணங்குகிறேன்.

பத்மாசனத்தில் அமர்ந்தவளும் பரம் பொருள் ஆனவளும், பரமேஸ்வரியும், அகில உலகத்திற்கும் அன்னையுமான மகாலக்ஷ்மி தேவியே உன்னை வணங்குகிறேன்.

வெண்ணிர ஆடை தரித்தவளும், பல வித அலங்கரங்களால் சிங்கரிக்கப் பட்டவளும்,  உலகம் முழுதும் பரவியிருப்பவளும் உலகங்களுக்கெல்லாம் தாயுமான மகாலக்ஷ்மி தேவியே உன்னை வணங்குகிறேன்.

மகாலக்ஷ்மி தேவியே உன்னைப் போற்றும் இந்த எட்டுத் துதிகளையும் மனப்பூர்வமாக தினமும் சொல்பவர் யாவும் வெல்பாராகவும் ராஜ்யங்களை அடைந்தாராகவும் இருப்பார். ஒரு நாளில் ஒரு முறை இத்துதியைச் சொன்னால் சகல பாவங்களும் நீங்கும். இரு முறை சொல்வோர் இல்லத்தில் தன தான்யங்கள் சேரும். மூன்று முறை சொல்வோர் உன் அருளை முழுமையாகப் பெற்று  தன் எதிரிகளை வெல்வான். நீயே அந்த இடத்தில் நிலைத்து நிற்பாய்.


No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...