Wednesday, May 27, 2020

ஸ்ரீ சனீஸ்வரபகவான் கவசம்

ஸ்ரீ  சனீஸ்வர கவசம் படித்து நமது துன்பங்களை நீக்கிக்கொண்டு இன்பங்கள் பெற்று மகிழ 

ஸ்ரீ சனீஸ்வரபகவான் அனுக்ரஹமூர்த்தியே திருவடிகள் சரணம்

ஸ்ரீ சனீஸ்வரபகவான் கவசம்

நெருங்கிடு பிணி யெலாம்

நீக்கு நோன்மையும்

ஒருங்கு மொய்ம்பு இரண்டும்

ஆங்குறும் கருந்துகில்

மருங்குலும் கழுகிவர்

வனப்பும் கொண்டு அமர்

அருங்கதிர் மதலை தாள்

அன்போடு ஏத்துவாம்!

(வேறு)

மறுவறும் எனது சென்னி

வளர்புகழ்ச் சனி புரக்க

பெறுமுகம் அன்பர் அன்பன்

பேணுக செவி கறுக்கும்

அறுவை நன்கு அணிவோன் காக்க

அச்சமே விளைக்கு மெய்யோன்

நறுமலர் விழி புரக்க

நாசி கை காரி காக்க.

கருங்களம் உடைய தேவன்

கவின்படு கண்டம் காக்க

பெருங்கடின் படுபு யத்தோன்

பெருவரைப் புயம் புரக்க

வருங்கை நீலோற் பலம்போல்

வளர்ஒளி அண்ணல் காக்க

ஒருங்குறும் எனது நெஞ்சம்

உடல் கரியவன் புரக்க.

சுந்தரம் தழுவும் உந்தி

சுட்கமாம் வயிற்றோன் காக்க

சந்தமார் விகடன் செய்வோன்

தடம்படு கடி புரக்க

நந்திய கோர ரூபன்

நற்றொடை புரக்க நாளும்

முந்துறு நெடிய ரூபன்

மொழிதரு முழுந்தாள் காக்க.

மங்கலம் ஈயும் ஈசன்

வனப்புறு கணைக்கால் காக்க

தங்குறு பரடு இரண்டும்

தகு குணாகரன் புரக்க

பங்கெனப் படுவோன் பாதம்

பழுதறப் புரக்க பார்மேல்

செங்கதிர் அளிக்கு மைந்தன்

திருந்திமென் அங்கங் காக்க.

நன்றிதரு சனிகவச நாள்தோறும்

அன்பினொடு நவின்று போற்றில்

வெற்றிதரும் விறல்உதவும் புகழ் அளிக்கும்

பெருவாழ்வு மேவ நல்கும்

கன்றுபவத் துயர்ஒழிக்கும் வினை ஒழிக்கும்

பிணி ஒழிக்கும் கவலை போக்கும்

அன்றியும் உள் நினைந்தவெலாம் அங்கை நெல்லி

யம்கனியாம் அவனி யோர்க்கே.

அருஞ்சுவணம் முதலவற்றின் அமைக்கும்

இயந்திரம் எள்ளுள் அமரவைத்து

வருஞ்சுகந்த மலராதிக்கு அரியவற்றால்

பூசித்து மனுப்பு கன்று

பெருஞ்சுகம் கொண்டிட விழைவோன்

கருந்துகிலோடு அந்தணர்க்குப் பெட்பின்ஈயில்

கருஞ்சனி உள் மகிழ்ந்துறு நோய்

களைந்துநல முழுதும்உளங் கனிந்தே நல்கும்.

ஆங்கதனோடு அரும்பொருளும் மற்றவனுக்கு

அளிப்பன் எனில் அவனுக்கு என்றும்

தீங்குஅகல மேன்மேலும் பெருகி எழு

வாழ்நாளும் செல்வப் பேறும்

ஓங்குமனை மக்கள்முதல் பற்பலசுற்

றப்பொலிவும் உதவும் காண்பீர்

வாங்குகடன் முளைத்திருள்நீத் தெழும்

கதிரேசன் அன்று உதவ வந்த மைந்தன்!

ஸ்ரீ சனீஸ்வரபகவான் அனுக்ரஹமூர்த்தியே திருவடிகள் சரணம்


No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...