Sunday, May 31, 2020

தக்ஷயக்ஞஷத மூர்த்தி

தக்ஷன் சிவபெருமானை மதிக்காமல்., சிவ சிந்தனையே இல்லாமலிருந்தான்.

இதனையறிந்தோர் தக்ஷனிடம் சென்று சிவபெருமான் ஒருவரே கடவுள்., அவரை பகைக்க வேண்டாமென்றும்., அவரை வணங்கி வரவும் பணித்தனர். இதைக்கேட்ட தக்ஷனும் கையிலை சென்றான். ஆனால் அங்கேயிருந்த கணநாதர் தக்ஷனை திருப்பியனுப்பினர். இதனால் மனம் நொந்த தக்ஷன் தன் தலைநகர் திரும்பி அனைவரிடத்திலும் கையிலையில் நடந்ததைக் கூறி., சிவபெருமானை வணங்க வேண்டாமெனத் தடுத்தான். அதற்கு பிரம்மனை தவிர., தேவர்குழாமும் ஒப்புக் கொண்டது. ஒருமுறை பிரம்மன் யாகமொன்று நடத்த இருந்தான். அதற்கு அழைக்க சிவபெருமானை அழைத்துவர கையிலை சென்று அவரையும்ஹஅழைத்தான். அவரோ தனக்கு பதிலாக நந்திதேவரை அனுப்புவதாகக் கூறினார். அதன்படி யாகத்திற்கு நந்திதேவர் தனது பூதகணங்களுடன் சென்றார். இதனைக் கண்ட தக்ஷன் சிவபெருமானுக்கு அவிர்பாகம் கொடுக்காமல்., திருமாலுக்கு கொடுக்கச் சொல்லி கட்டாயப் படுத்தினான். இதனால் கோபமுற்ற பிரம்மன் தக்ஷனின் தலை துண்டாகவும்., அவனது கூட்டாளிக்கு (தேவர்களுக்கு) சூரபத்மனால் ஆபத்து உண்டு எனவும் சாபம் விடுத்தார். இதனால் அவ்வேள்வி தடைபட்டது. இதற்கிடையே தக்ஷன் ஒரு யாகம் நடத்த இருந்தான். சிவபெருமானுக்கு அவிர்பாகம் கொடுக்காமல் நடத்த நினைத்தான். உடனே தத்சி முனிவர் இது முறையற்றது., சிவபெருமான் இன்றி யாகம் செய்தல் கூடாது என்றார்.

பார்வதிதேவியும் அவிர்பாகம் பெற உக்கிரமாகாளி., வீரபத்திரர் உடன் வந்திருந்தார். பார்வதி தேவி கேட்டும் அவர்க்குரிய அவிர்பாகம் மறுக்கப்பட்டது. அப்பொழுது தேவர்கள் அனைவரும் ஊமை போல் காணப்பட்டனர். இதனால் பெருங்கோபம் கொண்ட வீரபத்திரர், தனது தண்டத்தால் திருமாலை அடிக்க அவர் வீழ்ந்தார். பின்னர் பிரம்மன் வீழ்ந்தார். வீரபத்திரர் சந்திரனைத் தன் காலடியில் தேய்த்தார். வீரபத்திரிரன் பூதகணங்கள் தக்ஷன் இருப்பிடம் யாகசாலை., கோட்டை., மதில் என அனைத்தையும் அழித்தனர். வீரபத்திரர் அனைத்து தேவர்களையும் துவம்சம் செய்தார். தேவகணங்களை வதைத்தார். தேவர்களின் மனைவியர்., இந்திராணி., தக்ஷனின் மனைவியர் என அனைவரையும் பார்வதி தேவியும்., காளியும் துவம்சம் செய்தனர். அனைவரும் ஏதாவது ஒரு குறைபாட்டுடன் இருக்கும்படி வீரபத்திரர் செய்தார். போர் உச்சத்தை அடைந்ததும் சிவபெருமான் தோன்றி வீரபத்திரரை சாந்தப் படுத்தினார்.
பார்வதியின் உத்தரவிற்கேற்ப மாண்ட அனைவரும் உயிர் பெற்றனர்.
தக்ஷனையும் பிழைக்க வைக்கும்படி பிரம்மன் வேண்ட., உடனே வீரபத்திரர் ஒரு ஆட்டுத்தலையை அவனுடலில் பொருத்தி அவனை உயிர்பித்தார். அவன் பார்வதி சிவபெருமான் தரிசனம் பெற்று சிவகணங்களில் ஒன்றானான்.

சிவபெருமான் தன்னை வணங்காத தக்ஷனின் வேள்வியை அழிக்க எடுத்த மூர்த்தமே *தக்ஷயக்ஞஷத மூர்த்தி* ஆகும். தரங்கம்பாடி., செம்பனார் கோயில் அருகே உள்ளத் ஸ்தலம் *திருப்பறியலூர்* (தற்போது பரசலூர் என்று வழங்குகிறது) ஆகும். இறைவன் திருநாமம் வீரட்டேஸ்வரர்., என்பதும்., இறைவி திருநாமம் சுகந்த இளம்கொம்பனையாள்., என்றும் அழைக்கப்படுகிறார்கள். வில்வார்ச்சனையும்., பால் நைவேத்தியமும் திங்கள்., பிரதோஷம் அன்று கொடுக்க பகைவர் தொல்லைத் தீரும். கோர்ட் வழக்கு சாதகமாகும். தம்பதியர் ஒற்றுமை ஒங்கும்.


இறைவனின் பெயர் : வீரட்டேஸ்வரர்., தக்ஷபுரீசுவரர்

உற்சவர் : சம்ஹாரமூர்த்தி.

இறைவியின் பெயர் : இளம்கொம்பனையாள் (பாலாம்பிகா)

முகவரி : அருள்மிகு வீரட்டேஸ்வரர் கோயில்., கீழப்பரசலூர்., திருப்பறியலூர் - 609 309. நாகப்பட்டினம் மாவட்டம்.

தொலைபேசி : +91 - 4364 -  205 555 & 287 429

கைப்பேசி : ~

கோவில் திறந்திருக்கும் நேரம் : காலை 06:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை., மற்றும் மாலை 05.00 மணி முதல் இரவு 07.00 மணி வரை திறந்திருக்கும்.

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...