Friday, February 19, 2021

பானிப்பட் போர்

18ம் நூற்றாண்டு......The stage is set...

 மராட்டிய பேரரசு ஆல் போல் தழைத்து, அருகு போல் வேரூன்றி, கிட்டதட்ட இந்த முழு பாரதமும் அதன் ஆளுமையில், டில்லி முகலாயர்கள் செல்லா காசு. 

ஒரு மராட்டிய மன்னர் டில்லி அரியணையில் அமர்வது தான் பாக்கி.

 அதற்க்கும் ஆள் தயார், அது "ஸ்ரீ மான் விஸ்வாஸ்  ராவ்." மராட்டிய பேஷ்வா நானா சாகிப் பின் புதல்வர். தேவை ஒரு Excuse... சீக்கிரமே அதுவும் லபித்தது 

 14 ஆம் தியதி, ஜனவரி மாதம் 1761
அந்த பானிப்பட்  சமவெளியில் மாதக்கணக்கான பலப் பரீக்ஷை  களுக்கு பின் அந்த இரு படைகளும் மோதிக் கொண்ட.ன..

 சத்திரபதி சிவாஜி  மஹராஜ் அவர்கள் கனவுகண்ட..... ஹிந்து சாம்ராஜ்யம்...... , A Slip betwex the cup and the lip ஆன நாளும் அது தான்..... 

அதற்க்கு முக்கிய   காரணம்  ஒரே, ஒரு டெக்னிக்கல் தவறு தானாம்... 

அந்தப் படைகள்.... 
ஒன்று...    இந்திய மிலேச்சர் களின் வேண்டுகோளின் படி   இந்தியாவை கொள்ளை அடிக்க, வீர மராட்டியரின்  வளர்ச்சியை தடுக்க அழைக்கப்பட்ட ஆப்கானிய மன்னர்  அஹ்மத் ஷா அப்தாலி தலைமையில்.. . (... 1, 00,000  ஆப்கானிய,+ இந்திய ரோகில்லா+, அவந் நவாப் சிரஜ் - உத்-தௌலா "ஜிகாத்" பெயரால், அவர்களின் உள் ஊர் உதவி உடன் . ) 

மற்றொன்று  காலம் காலமாக நடந்து வரும் இந்த அட்டூழியத்திற்க்கு முற்றுப்புள்ளி இட வேண்டும் என்ற சங்கல்பத்துடன்  மராட்டிய பேரரசின்... வீர மராட்டியர்களின் வட திசை படை...

 சதாசிவ ராவ் பாகு , மற்றும்  பேஷ்வா பாஜி ராவ் வின் மகன், (அடுத்த டில்லி சக்கரவர்த்தி...?? )  ஸ்ரீமான் விஸ்வாஸ்  ராவ் தலைமையில்... . (70,000 வீர மராட்டியர்கள், முக்கியமாக 200 long range, அதி நவீன பிரஞ்சு பீரங்கிகளுடன்... , 

மராட்டியர்கள் டில்லியை கைப்பற்றினர், அதை ஆக்கிரமித்து  இருந்த அப்தாலி. , மிகுந்த உயிர் சேதத்துடன் பின் வாங்கினார். 

சில மாதங்களில்..... அவரை பானிப்பட்டில் சதாசிவ ராவ் மீண்டும்  எதிர் கொண்டார்..
 ஆனால் நிலைமை இப்போது  தலைகீழ்,

 மராட்டியர்கள் ஏறத்தாழ  முற்றுகையில், பாசறையில் தலைவிரித்து ஆடும் கடும் உணவு,,பணப் பஞ்சம், 

பூனாவில் இருந்து பேஷ்வா அனுப்பிய பணம்... உணவு ஆப்கானியர்களிடம் மாட்டிக் கொண்டது. உள் ஊர்   ஹிந்து.... ராஜபுத்திர்கள், ஜாட், சீக்கிய படை உதவி இல்லை... . தளபதிகளிடையே முணு முணுப்பு. 

ஆப்கானியர்க்கு இந்தப் பண, உணவு ப் பிரச்சனைகள் இல்லை, நன்றி இந்திய மிலேச்சர்கள்... ரோகில்லாக்கள், அவுத் நவாப்,, "ஜீகாத் ." .... ஆனால் அவர்களுக்கு போரை ஆரம்பிக்க அச்சம்.. 

பட்டினியில்  சாவதை விட, போரில் சாகலாம்... , முற்றுகையை உடைத்து டில்லி போனால் உணவு கிடைக்கும் என மராட்டியர்கள் சதா சிவ  ராவிடம் வேண்ட, போர் துவங்க அனுமதி கிடைக்கிறது. ஜனவரி 14.... 

காலையில் ஆரம்பித்த போரின் 
முதல் சுற்றில் மராட்டிய, பீரங்கி, துப்பாக்கி தாக்குதலில் 15,,000 ரோகில்லா, ஆப்கானியர்கள் point blank ஆக கொல்லப் பட்டனர்.. 

இப்போது தான் அந்த டெக்னிகல் தவறு நடந்தது.. 

மராட்டியர்களுக்கு  தங்கள் குதிரை படை மேல் மிகுந்த  நம்பிக்கை. பலமுறை அவர்களின் வெற்றிகளுக்கு அது  காரணமும். கூட.... ஆனால்... 

 சதா சிவ ராவ் ஒரு கண்டிப்பான ஒரு  கட்டளை இட்டு இருந்தார், பீரங்கி தாக்குதல்களினால்  எதிரி போதுமான அளவு, மென்மை பட்ட பிறகு தான் குதிரை படை களம் புக வேண்டும் என்று, 

ஆனால் அது அன்று  மீறப்பட்டது. சர்தார்களின் போட்டி பெறாமை,.... தான் பெயர் எடுக்க வேண்டும் என்ற அல்ப ஆசை,

 மராட்டிய... குதிரை படைகள்  முன்னேறி தாக்க ஆரம்பித்தன. 

இப்போது மராட்டிய பீரங்கிகள் சுட  தயங்கின, சுட்டால் தங்கள் குதிரை படையே அடி படும்.. 

அப்தாலி தேர்ந்த தளபதி.. எதிர்பாராமல் லட்டு போல்  வாய்த்த இந்த   சந்தர்ப்பத்தை நழுவ  விடுவாரா? 

பயன் அற்று இருந்த தன் short range, பீரங்கிகளால் குதிரை படையை  தாக்க ஆரம்பித்தார்...  பெரும் அழிவு 

கவனித்த சதாசிவ ராவ் பல போர் கண்டவர்... அந்த சந்தர்ப்பத்தில் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்தார்...

 தனே தலைமை தாங்கி முழு மராட்டிய  பலத்துடன் நேரடியாக  எதிரிகள் மேல் பாய்ந்தார்".ஹர ஹர மஹாதேவ்" முழக்கத்துடன். 

எதிரி யால் இந்த இடியை  தாங்க  முடிய வில்லை... பின் வாங்க ஆரம்பித்தான்...

 அப்தாலி தன்  ரிசர்வ் படைக்கு கட்டளை இட்டார், "புற முதுகு காட்டி ஓடிவரும் ஆப்கானியர்களை வெட்டித் தள்ளுங்கள்" என்று, 

பின் வாங்கி ஓடியவர்கள் திரும்பினர்... வேறு வழி.. போர் மாலை வரை நடந்தது. 

மதியம் 3 மணி வரை வெற்றி முகத்தில் இருந்த மராட்டியர்... போர் திசை மாறியது.. 

அதிகம் வளர்த்துவானேன்..., 30,000/அப்தாலி படையினரும்,, 40,000 வீர மராட்டியரும் கொல்லப் பட்டனர், சதா சிவ ராவும் ..... ஸ்ரீ மான் விஸ்வாஸ்  ராவும் களத்திலேயே  வீர மரணம், 

அதை விட கொடுமை மராட்டிய  படையின் பாதுகாப்பில் வட நாட்டின் புண்ணிய தலங்களை தரிசிக்கலாம் என வந்த 30,000 ++ போரில் ஈடுபடாத ( DEAD WEIGHT) ஆண், பெண், குழந்தைகள் ஈவு இரக்கமின்றி கொல்லப் பட்டனர். அடிமை படுத்தப் பட்டனர். 

போரில் தங்கள் உறவு  களை இழக்காத ஒரு மராத்திய குடும்பம் கூட இல்லை, 

படு தோல்வியை குறிக்கும் விதமாக "அது தான் என் பானிப்பட்". எனும் புதிய மராத்திய  சொலவடையே அறிமுகம் ஆயிற்று... 

பொது எதிரி... ஆப்கானியர்களுக்கு எதிரான இப்போரில் இராசபுத்திர,
 சீக்கிய, ஜாட் படைகள் மராட்டியப் படைகளுக்கு உதவ முன் வரவில்லை.  இது மராத்திய  தோல்விக்கு ஒரு காரணம். 

போரில் ஆப்கானிய வெற்றி இந்திய வரலாற்றில் ஒரு பெரும் திருப்புமுனையாக அமைந்தது.

 மராத்தியர்கள் பஞ்சாப், ஜம்மு காஷ்மீர், தில்லி, கங்கைச் சமவெளி பகுதிகளை  விட்டு .வெளியேறினர். 

மராத்தியப் பேரரசு சிதைந்து, தனித்தனி நாடுகளாக மாறியது. .

 இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி வலுப்பட  இப்போர் காரணமாக அமைந்தது. 

போரின் கடுமையை அனுபவித்த  ஆக்கிரமிப்பாளர்கள் பிறகு இந்தியா பக்கம் பிறகு தலை வைத்தும் படுக்க வில்லை..

இதற்க்கு எல்லாம் காரணம் அந்த  தலைமைக்கு கீழ் படியா அந்த  டெக்னிகல் தவறு, மற்றும் ஹிந்துக்களின் ஒற்றுமை இன்மை தான் என்பது சரித்திர ஆய்வாளர்களின் முடிவு. 

நாம், இன்னும் பாடம் கற்ற பாடு இல்லை.

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...