Friday, November 1, 2019

முன்று வகை மனிதர்கள்

கிருபானந்த வாரியார் கூறியது

1. கஜ கர்ணம்🐘

2. அஜ கர்ணம்🐏

3. கோ கர்ணம்🐂

1. கஜகர்ணம் :

யானை தனது நான்கு கால்களையும் சரியாக ஊன்றி நிற்காது !!

அதுபோல சில மனிதர்கள் ஒரே விஷயத்தில் தங்கள் கருத்தைச் செலுத்தாமல், பல விஷயங்களில் ஈடுபட்டுக் குழம்புவார்கள்...

அவர்களை கஜகர்ணம் போடுபவர்கள் என்று அழைக்கிறோம்..

2. அஜகர்ணம் :

ஆட்டின் வாலைப் பிடித்து இழுத்தால் அது தன் தலையைத் தொங்கப்போடும் !!!

அதுபோல மனிதர்களில் சிலர் தங்கள் குறையை யாராவது சுட்டிக்காட்டினால் அவர்களை வெறுப்பார்கள்.... திரும்பிப் பார்க்க மாட்டார்கள்...

அவர்களை அஜகர்ணம் போடுபவர்கள் என்று அழைக்கிறோம்...

3.கோகர்ணம்

பசு மாட்டின் உடலில் எந்த இடத்தில் விரலால் தொட்டாலும், அந்த இடம் உணர்ச்சி வசப்பட்டு சிலிர்க்கும் !!!

அதுபோல அறிவாளிகள் எந்தச் சிறு குறையைச் சுட்டிக் காட்டினாலும் புரிந்துகொண்டு மன்னிப்புக் கேட்டுத் திருந்துவார்கள்...

இவர்களை கோகர்ணம் போடுபவர்கள் என்று அழைக்கிறோம்...

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...