Monday, May 12, 2014

அர்த்த சக்ராசனம்


செய்முறை:
விரிப்பின் மீது கால் பாதங்களை ஒன்று சேர்த்து வைத்து நின்று கொள்ள வேண்டும். கைகளால் இடுப்பை பிடித்து கை கட்டை விரல்களால் முதுகை அழுத்தி பின்னோக்கி முடிந்த அளவிற்கு வளைய வேண்டும். இந்த நிலையில் இருக்கும் போது கால் முட்டிகளை வளைக்கக் கூடாது.
அப்படியே சாதாரணமாக மூச்சில் 20 எண்ணிக்கையில் இருக்க வேண்டும். பின்னர் மெதுவாக நிமிர்ந்து நின்று பழைய நிலைக்கு வரவும். சிறிது நேரம் ஓய்வு எடுத்த பின்னர் மறுபடியும் செய்ய வேண்டும்.
இவ்வாறு ஐந்து முறை இந்த ஆசனத்தை செய்ய வேண்டும். இதயநோய் உள்ளவர்கள் இதனை மெதுவாகச் செய்ய வேண்டும்.முதுகெலும்பு தேய்ந்தவர்கள் மற்றும் கழுத்துவலி உள்ளவர்கள் இந்த ஆசனம் செய்ய வேண்டாம்.
பலன்கள்:
நீண்ட நாட்களாக ஆஸ்துமா நோயால் அவதிப்பட்டு வருபவர்கள் இந்த ஆசனத்தை செய்தால் நோய் குணமாகும். மேலும், நீரிழிவு, டி.பி, கிட்னி கோளாறுகள், முதுகுத் தண்டு பிரச்சனைகள் தீரும். உடம்பின் முன்புறத் தசைகள், கெண்டைக்கால் தசைகள், இடுப்பு, விலாப்பகுதிகளில் உள்ள தசைகள் முறுக்கேறுகின்றன.

No comments:

Post a Comment

"நகர்ப்புற நக்சல்" (Urban Naxal)

செயல்பாடுகள் மற்றும் சட்டப் பின்னணி ​1. அறிமுகம் மற்றும் சொல்லாடலின் தோற்றம் ​ "நகர்ப்புற நக்சல்" (Urban Naxal) என்பது இந்திய அ...