Sunday, June 2, 2019

சலத்தால் பொருள்செய்து

பச்சை மண்ணால் செய்த பானையில் நீரை ஊற்றிவைத்து தாராளமாக அதைப் பாதுகாக்கலாம், சட்டரீதியாக ஒரு பிரசினையும் இல்லை - உச்சநீதிமன்றம்.

வஞ்சனையால் பொருள்சேர்க்கும் அரசின் பாதுகாப்பு, பச்சை மண்ணால் செய்த பானையில் நீரை ஊற்றிவைத்துப் பாதுகாப்பது போல - திருக்குறள்

'பானையும் நீரும் சேர்ந்து அழிதல் போல, அரசனும் அவன் ஈட்டிய பொருளும் சேரக்கெடும்' என்பதே எல்லா உரையாசிரியர்களும் இக்குறளுக்குக் கூறும் பொருள். இன்றைய காலகட்ட அரசியல் சூழலில் நடப்பது இதற்கு நேர்மாறாக அல்லவா இருக்கிறது என்றே நாம் பொதுவாக எண்ணுவோம். ஆனால், குறளாசிரியர் இந்த உவமையில் இன்னும் ஆழ்ந்த ஒரு பொருளையும் வைத்திருக்கிறார் என்று தோன்றுகிறது. அதாவது, எந்த சுயகட்டுப்பாடும் இன்றி ஊழல் செய்து பொருள் சேர்க்கும் ஆட்சியாளர்கள் தன்னிச்சைப்படி சிதறும் நீர் போல. அவர்களைக் கட்டுப்படுத்தும் நீதிநெறிகளும், சட்டங்களும் கூட அதே போல பச்சைமண் பானையாக இருந்தால், ஒட்டுமொத்த சமூகமும் சீரழியும். மாறாக, அந்தச் சட்டங்களும் நெறிகளும் தர்மம், நியாயம் என்னும் நெருப்பில் சுட்டுக் கெட்டிப் படுத்தப் பட்ட பானையாக இருக்க வேண்டும். அதுவே உண்மையான பாதுகாப்பு.

சலத்தால் பொருள்செய்து ஏமார்த்தல் பசுமண்
கலத்துள் நீர் பெய்திரீஇ யற்று.

[சலம் - வஞ்சனை [छल:] ; ஏமார்த்தல் - பாதுகாத்தல்]

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...