Wednesday, August 29, 2012

பயமுறுத்தும் சுறாக்கள்


கரைக்கு வந்தால் நாம் சாப்பிடுகிறோம். நாம் கடலுக்குள் போனால் நம்மை அவை சாப்பிட்டு விடுகின்றன என்று மீன்களை பற்றி வேடிக்கையாக சொல்வார்கள்.
இதை கேட்கவும் வேடிக்கையாகத்தான் இருக்கும். அதேநேரம் சுறாமீன்கள் நம் நினைவில் வந்து மோதினால் கொஞ்சம் இதயம் ஜிலீரிடத்தான் செய்யும். சுறாக்களின் கடல் வேட்டை அந்த அளவுக்கு அபாயகரமானது.
இதோ நம்மை பயமுறுத்தும் சில சுறா வகைகள்.
சாஷார்க்:

saw 3

வை நீளமூக்கை உடையவை. நீந்திக் கொண்டிருக்கும் போதே தம் நீள மூக்கால் மோதி இரையை செயலிழக்க வைத்து விடும். பெரும்பாலும் சிறிய மீன்கள் தான் இதன் விருப்ப உணவு.
பாஸ்கிங்ஷார்க்

basking-1

சுறா வகைகளில் இரண்டாவது பெரிய சுறாவான இது எப்போதும் தன் வாயைத் திறந்து கொண்டே நீந்தும். மூன்றடி திறந்திருக்கும் இந்த வாய்க்குள் பாசிவகைள், சிறு மீன்கள் உட்புகுந்து இரையின்தேவையை பூர்த்தி செய்து விடும். சராசரியாகஇந்த வகை சுறாக்கள் 20 அடி முதல்26 அடி வரைவளரும். ஆனால் அதிகபட்சமாக இவை 40 அடி நீளம் வளரும்.
சுத்தியல் தலை சுறா

hammer 2

சுத்தியல் தலை போன்ற தலை கொண்ட இந்த வகை சுறாக்கள் பார்வையாலேயே தூரத்தை நிர்ணயித்து விடுவதில் வல்லவை. இவை தனியாக போகாமல் கூட்டமாகவே போய் இரை வேட்டை நடத்தும். இவற்றுக்கும் பிரச்சினை. அதாவது வெயில் இவற்றுக்கு ஆகவே ஆகாது. அதிக வெயிலில் இதன் தோலின் நிறம் மாறும்.
அதை இவை நோயாக எண்ணிக்கொண்டு வெயிலுக்கு ஓடிஒளிந்து கொண்டிருக்கும் என்கிறார்கள், கடல் ஆய்வாளர்கள்.
பெரிய வாய் சுறா

mega 1

ந்த சுறாவை முதலில் கண்டறிந்ததே 1976-ம் ஆண்டில் தான். 51/2 மீட்டர் நீளமும் 1200 கிலோ எடையும் கொண்டவை இவை. இதுவும் வாயைத் திறந்து கொண்டு தான் நீந்தும். இவற்றின் விருப்ப உணவு ஜெல்லி மீன்கள், பாசிகள்.
நீளவால் சுறா
thresher 2 
டம்பில் பாதியை வாலாக கொண்டிருக்கும் இந்த வகை சுறாக்கள் அதிகபட்சம் 15 அடி வரை வளரும். இவை தன் வாலால் அடித்து தன் இரை மீன்களை திகைக்க வைக்கும்.அந்த அதிர்ச்சியில் இருந்து அவை சுதாரித்து தப்புவதற்குள் இந்த சுறாவின் அன்றைய இரைப்பட்டியலில் இணைந்து விடும்.

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...