Saturday, January 13, 2018

மறைமலை அடிகள்

அலையலவும் வங்காளக் குடாக்கடலின் அடிக்கிடக்கும்விலைவரம்பு காணாத முழுமுத்தும் மேலுயர்ந்த

மலையருவி கொழித்துவரும் மணிகளொடு பசும்பொன்னும்

தலையணியப் பிறநாட்டார்தந்தனை இந்திய மாதே

உலகிற்கோர் விளக்கனையாய் எம்முயிர்கோர் உயிரனையாய்

பலவாறு நின்புகழ்மை பாரித்து என்சிற்றறிவாற்
சொலவருமோ? தொலையாத வளமுடையாய்  தொன்றுதொட்ட
நலமெலாம் பிறர்கவர இந்நாளில் நாணினையே

அந்நாணம் இனியொழிய நின்மகார் அறிந்தெழுந்து
முன்னாளில் விரிந்தபல கைத்தொழிலை முதிர்ச்சியுற்ற
மன்னிமிக முயல்கின்றார் மனக்கவலை நீங்குற்றோம்
இன்னுமிவர் சிறக்கவென ஏத்திமிக வாழ்ததுவமே!

-மறைமலை அடிகள்

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...