Saturday, January 13, 2018

மருது பாண்டியர்கள்

பதினொன்றாவது மருது பாண்டியர்கள் வாழ்வில் அனுபவித்த பல துயரங்களும் அவர்களுக்கு நடந்த துரோகங்களும் ஏறலாம். மாமன்னர்கள் குற்றவாளி போல சங்கிலி பூட்டி நிற்கிறார்களே இவர்கள் நினைத்து இருந்தால் இவர்களை நம்பி வந்த கட்டபொம்மன் தம்பி ஊமைத்துரையை வெள்ளையனிடம் காட்டி கொடுத்துவிட்டு தனது நாட்டை பாதுகாத்துக் கொண்டு நிம்மதியாக வாழ்ந்து இருக்க முடியும் ஆனால் அவர்கள் தன்னை நம்பி வந்த நண்பனுக்காக தனது ஒட்டு மொத்த வம்சத்தையுமே இழந்தனர்...!!!
தாய் நாட்டின் விடுதலைக்காக இங்கு பலர் உயிர் நீத்து இருந்தாலும் மருது பாண்டியர்களின் வீர மரணம் மிகவும் மாறுபட்டது உலகில் வேறு எந்த மன்னருக்கும் நடக்காத கொடூரம் மருது பாண்டியர்களுக்கு நடந்தது அவர்கள் வெள்ளையனை எதிர்த்தனர் ஆனால் வெள்ளையன் சிறிதும் மனசாட்சியின்றி மருது பாண்டியர்கள் குடும்பத்தில் உள்ள சிறு சிறு குழந்தைகளையும் அழித்தான்...!!!
சின்ன மருது பாண்டியரின் காலில் இரத்தம் வலிக்கிறதே இது துரோகி கரடி கருத்தான் சின்ன மருது பாண்டியருக்கு கொடுத்த பரிசு ஆம் மாமன்னர் சின்ன மருது பாண்டியரின் நிழலாக இருந்த கரடி கருத்தான் பணத்திற்காக வெள்ளையனிடம் விலைபோகி சின்ன மருது பாண்டியரை காலில் துப்பாக்கியால் சுட்டு சிங்கத்தை அடைக்கும் இரும்பு கூண்டிற்குள் அடைத்து வெள்ளையனிடம் பிடித்து கொடுத்தான்...!!!
மருது பாண்டியர்களை சுற்றி ஒரு பிண குவியல் உள்ளதே யார் இவர்கள்...??? நம்மில் பலருக்கு தெரியாது அக்டோபர் 24 1801 அன்று திருப்பத்தூரில் மருது பாண்டியர்களை மட்டுமின்றி 500 க்கும் மேற்பட்ட வீரர்களையும் கொத்து கொத்தாக வெள்ளையன் தூக்கிலிட்டானே அந்த கொடூர சம்பவத்தை இந்த உலகம் மறந்துவிட்டது அந்த வீரர்களின் வீரமரணத்திற்கும் மரியாதை செய்யவே இந்த படம்...!!!
திருப்பத்தூரே இரத்த வெள்ளம் ஓட மரணமே அஞ்சும் மாவீரர்கள் மருது பாண்டியர்களே தூக்கு கயிற்றின் முன்பு நிற்கும் போது வெள்ளையன் அருகில் சிலர் நிம்மதியாக கை கட்டி நின்று இந்த கொடூர சம்பவத்தை கண்டு சிரித்த முகத்துடன் ரசிக்கிறார்களே இவர்கள் தான் சிவகங்கை அரியணைக்கு ஆசைப்பட்டு தாய் நாட்டையும் அவர்களது தன்மானத்தையும் வெள்ளையனின் காலுக்கு கீழ் வைத்துவிட்டு வெள்ளையன் காலில் விழுந்த துரோகிகள் மருது பாண்டியர்களை வெள்ளையனிடம் காட்டி கொடுத்து மன்னரான தமிழ் இனத்தின் துரோகிகள்...!!!
மறதி நமது தேசிய வியாதி எதை வேண்டுமானாலும் மறக்கலாம் ஆனால் மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் தூக்கிலிடப்பட்ட இந்த கொடூர சம்பவத்தை மறக்க முடியுமா...???
வீரவணக்கம் மாமன்னர்களுக்கு...

No comments:

Post a Comment

இளவயது ஒற்றர் சரஸ்வதி ராஜாமணி

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மிக இளவயது ஒற்றராகச் செயல்பட்ட சரஸ்வதி ராஜாமணி அவர்களின் வாழ்க்கை வரலாறு வீரமும் தியாகமும் நிறைந்தது. ந...