Saturday, July 17, 2021

ஆடி மாத சிறப்புகள்

1. ஆடி மாதம் பிறந்ததும் #தட்சணாயனம் ஆரம்பமாகிறது. ஆடி முதல் மார்கழி வரை தட்சணாயன காலமாகும்.

2. இந்த #புண்ணிய கால கட்டங்களில் புனித நதிகளில் நீராடுவது மிகவும் விஷேம்.

3. ஆடி மாதத்தைக் கணக்கிட்டுத்தான் பண்டிகைகளின் தொடக்கம் ஏற்படுகிறது.

4. ஆடி மாதம் முழுவதும் கிராமப்புறத்தில் காவல் தெய்வமாக விளங்கும் மாரியம்மன், அய்யனாரப்பன், மதுரை வீரன், மாடசாமி, கருப்பண்ணசாமி போன்ற கிராம தேவதைகளுக்கு பூஜைகளும், விழாக்களும் நடைபெறும்.

5. ஆடி மாதத்தில் #பாண்டியநாடு சங்கரன்கோவிலில் பன்னிரண்டு நாட்கள் அம்மனின் ஆடி தபசு திருநாள் மிகக் கோலாகலமாக கொண்டாடப் படுகிறது. ஹரியும் சிவனும் ஒன்றே என்ற தத்துவத்தை உலகிற்கு உணர்த்த இந்த விழா நடத்தப்படுகிறது.

6. ஆறு, மக்களின் ஜீவ நாடியாதலால், அதில் ஆடி மாதம் புதுநீர் வருவதைக் கொண்டாடுவது பல நூற்றாண்டுகளாக தமிழர் மரபாக உள்ளது.

7. ஆடி மாதத்தில் சிவனின் சக்தியை விட பார்வதியின் சக்தி அதிகமாக இருக்கும் என்பது ஐதீகம்.

8. தமிழ் மாதங்களில் ஆடி மாதத்தில் தான் அதிகபட்ச அளவுக்கு அம்மன் கோவில்களில் திருவிழா நடக்கிறது. எனவே ஆடி மாதத்துக்கு அம்மன் பக்தர்களிடம் தனி மரியாதை உண்டு.

9. கேரளாவில் ஆடி மாதத்தை  இராமாயண மாத மாக அம்மாநில மக்கள் கருதுகிறார்கள்.

10. ஆடி அமாவாசை அன்று மறைந்த  
முன்னோர்களுக்கு பிதுர் கடமைகளை செய்தால், ஆண்டு முழுவதும் பித்ருக்களுக்கு கடன் கொடுத்த பலன் கிடைக்கும்.

11. ஆடி பவுர்ணமி தினத்தன்று தான் ஹயக்ரீவர் அவதாரம் நிகழ்ந்தது. எனவே ஆடி பவுர்ணமி தினத்தன்று வைணவ தலங்களில் சிறப்பு வழிபாட நடைபெறும்.

12. தமிழகத்தில் பல பகுதிகளில் அம்மனுக்கு பல வித காய்கறிகளால் ஆன கதம்ப சாதத்தை படைப்பது ஐதீகமாக உள்ளது.

13. ஆடி மாதம் சுக்ல தசமியில் திக் தேவதா விரதம் இருக்க வேண்டும். அன்று திக்  
தேவதைகளை அந்தந்த திக்குகளில் வணங்கி பூஜித்தால் நினைத்தது நடக்கும்.

14. ஆடி மாதம் சுக்லபட்ச ஏகாதசி முதல் கார்த்திகை மாத சுக்லபட்ச ஏகாதசி வரை மாச உப வாசம் இருப்பது குடும்பத்தில் அமைதி ஏற்படுத்தும்.

15. ஆடி மாதம் கிராம தேவைதை கோவில்கள் உள்பட திறக்காத எல்லா கோவில்களும் திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

16. ஆடி செவ்வாய்க்கிழமைகளில் கோவிலில் எலுமிச்சம் பழ விளக்கு ஏற்றினால் கூடுதல் பலன்கள் கிடைக்கும். ஆனால் எலுமிச்சம் பழ விளக்குகளை ஒரு போதும் வீட்டில் ஏற்றக் கூடாது.

17. ஆடி மாதம் வளர்பிறை துவாதசி நாளில் தொடங்கி கார்த்திகை மாதம் வளர்பிறை துவாதசி நாள் வரை பெண்கள் துளசி பூஜை செய்து வந்தால், நினைத்தது நடைபெறும். வீட்டில் சகல செல்வங்களும் குவியும்.

18. நாஞ்சில் நாடு தோவாளை என்ற ஊரில் முருகன் கோவில் உள்ளது. ஆடி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை அங்குள்ள முருகனுக்கு கூடை, கூடையாக மலர்களை கொட்டி மலர் அபிஷேகம் செய்வார்கள். இதை அந்த பகுதி மக்கள் ஆடியில் மலர் முழுக்கு, அழகு வேல்முருகனுக்கு என்று சொல்வார்கள்.

19. ஆடிப்பெருக்கு திருவிழா ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் விமரிசையாக நடைபெறும். அப்போது பெருமாள் மண்டபத்துக்கு எழுந்தருள்வார்.

20. ஆடி மாதம் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் காமாட்சியை வணங்கினால் திருமண தடைகள் விலகி சுபம் உண்டாகும்.

21. ஆடி மாதம் முழுவதும் மீனாட்சியை வழிபட்டால் குடும்பத்தில் அமைதி ஏற்படும்.

22. ஆடி மாதம் முத்து மாரியம்மனை மனம் உருக வழிபட்டால் திருஷ்டிகள் விலகி விடும்.

23. ஆடி மாதம் சுக்ல துவாதசியில் மகா விஷ்ணுவை நினைத்து விரதம் இருந்தால் செல்வம் பெருகும்.

24. ஆடி மாதம் சுக்ல பட்ச ஏகாதசி தினத்தன்று அன்னதானம் செய்தால் சகல பாக்கியங்களும் கிடைக்கும்.

25. ஆடி மாதம் சுக்லபட்ச திரயோதசியில் பார்வதி தேவியை நினைத்து விரதம் இருந்தால் நினைத்தது நடக்கும்.

26. கஜேந்திரன் என்ற யானையை முதலை கவ்வியபோது அந்த யானை ஆதிமூலமே என்ற கதற உடனே திருமால் சக்ராயுதத்தை ஏவி யானையை காப்பாற்றினார். இதனை நினைவுப்படுத்தும் வகையில் ஆடி மாதம் எல்லா திருமால் தலங்களிலும் கஜேந்திர மோட்ச வைபவம் நடத்தப்படுகிறது.

27. ஆடி மாதம் ஏகாதசி, துவாதசி நாட்களில் அரச மரத்தை சுற்றி வந்து வழிப்டால் வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.

28. தஞ்சாவூரில் நிசும் சூதனி உக்கிர காளியம்மன் கோவில் உள்ளது. ஆடி பதினெட்டாம் பெருக்கு தினத்தன்று தஞ்சை மாவட்ட கிறிஸ்தவர்கள் அங்கு ரொட்டி, ஆட்டுக்கறி படையலிட்டு வழிபடுவதை வழக்கத்தில் வைத்துள்ளனர்.

29. ஆடி மாத வெள்ளிக் கிழமைகளில் மகாலட்சுமியை வழிபட்டால் வீட்டில் செல்வம் சேரும்.

30. ஆடி மாதம் ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமை அம்மனை ஆவாகனம் செய்து வீட்டுக்கு வரவழைத்து வழிபடுவது சிறப்பை தரும்.

31. ஆடி மாதம் குத்துவிளக்கை லட்சுமியாக பாவித்து அலங்கரித்து வழிபடுதல் வேண்டும்.

32. ஆடி மாதம் அம்மனுக்கு பால் பாயாசம், சர்க்கரைப் பொங்கல் வைத்து வணங்குதல் வேண்டும்.

33. அம்மனை வழிபடும் போது மறக்காமல் லலிதாசகஸ்ர நாமம் சொல்ல வேண்டும்.

34. ஆடி மாதம் வீட்டில் சிறப்பு பூஜைகள் செய்யும் போது சிறு பெண் குழந்தைகளை அம்மனாக பாவித்து, உணவு கொடுத்து, ரவிக்கை, சீப்பு, குங்குமச்சிமிழ், கண்ணாடி, வளையல், தாம்பூலம் கொடுக்க வேண்டும்.

35. ஆடிப்பூரத்தன்று ஆண்டாள் பிறந்தாள் என்பது உங்களுக்குத் தெரிந்து இருக்கும். ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவிலில் ஆடிப்பூரத்தன்று ஆண்டாளை நந்தவனத்துக்கு எழுந்தருள செய்வார்கள். அப்போது திருப்பாவை, நாச்சியார் திருமொழி, திருப்பல்லாண்டு பாசுரங்கள் பாடப்படும். இதனால் ஆண்டாள் மனம் குளிர்ந்து இருப்பாள். அந்த சமயத்தில் ஆண்டாளை வழிபட்டால், உங்களது எல்லா பிரார்த்தனைகளும் நிறைவேறும்.

36. ஆடி மாதம் அம்மனுக்கு சாற்றப்படும் வளையல் களைப் பெண்கள் அணிந்து கொண்டால் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், சகல நலன்களையும், நீங்காத செல்வத்தை பெறலாம் என்பது ஐதீகம்.

37. ஆடி மாத வெள்ளிக் கிழமைகளில் அதிகாலையில் எழுந்து குளித்து, தூய ஆடை அணிந்து, சாணத்தைப் பிள்ளையாராகப் பிடித்து, செவ்வரளி, செம்பருத்தி, அறுகு கொண்டு சூர்யோதயத்திற்கு முன்னர் விநாயகரை பூஜிக்க வேண்டும். வாழையிலை மீது நெல்லைப்பரப்பி அதன் மீது கொழுக்கட்டை வைத்து விநாயகரை வழிபட செல்வம் கொழிக்கும்.

38. ஆடி மாதத்தை “பீடை மாதம்” என்று ஒதுக்குவது, அறியாமையால் வந்த பழக்கம். உண்மையில், “பீட மாதம்” என்றுதான் பெயர். அதாவது மனமாகிய பீடத்தில் இறைவனை வைத்து வழிபடவேண்டிய மாதம் என்பதே சரியானது.

39. ஆடி பவுர்ணமியன்று சிவபெருமானுக்கு திரட்டுப்பால் அபிஷேகம் செய்து, கருப்புப் பட்டாடை, நூறு முத்துக்கள் கோர்த்த மணிமாலை, கருஊமத்தம் பூமாலை அணிவித்து, மூங்கில் அரிசிப் பாயாசம் படைத்து வழிபட்டால் எப்பேர்ப்பட்ட பகையும் விலகும்.

40. பொதுவாகவே வெள்ளிக் கிழமைகள் அம்பாளுக்குரிய சிறந்த நாட்களாகும். இதனோடு அயனத்துக்குரிய சிறப்பும் சேருவதால் ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக் கிழமைகள் அம்பாளுக்குத் தனிச்சிறப்பு கொண்டவையாகக் கருதப்படுகின்றன.

Monday, June 21, 2021

தேசியக் கொடியில் உள்ள 24 ஆரங்கள்


அசோகர் பரப்பிய 24 தர்மங்களை குறிக்கிறது என குறிப்பிட்டிருந்தது.

 24  தர்மங்கள்:
     
1.அஹிம்சை: (உயிர்களுக்கு இன்னா செய்யாமை)

2.அப்பந்தா: (சிக்கனம், சேமிப்பு)

3.அபிச்சதி: பயபக்தி (பெரியோர் & ஆசிரியர்)

4.அபசினவம்: (மானமுடைமை)

5.உத்சஹா: (உற்சாகமாக செயலாற்றுதல்)

6.கிருதக்ஞாதா: (செய்நன்றி அறிதல்)

7.சத்யம்: (நேர்மையாக இருத்தல், உண்மையை போற்றுதல்.)

8.சமயப்பொறை: (மாற்று மதக்கருத்துக்களையும் மதித்தல்)

9.சாதுதா: (நல்லவர்களாக இருத்தல்)

10.சாம்யமா: (புலனடக்கம்)

11.சாத்வம்: (நன்மை தரும் செயல்களைச் செய்தல்)

12.சிரமசேவிதம்: (கடின உழைப்பு)

13.சுஷ்ருதா சரீர சஹாயம்: (உடல் நோய் தீர்த்தல்)

14.சௌசம்: (உடல் தூய்மை)

15.தயை: (இரக்ககுணம்)

16.தானம்: (வறியோர்க்கு வழங்கல்)

17.தம்மதானம்: (தர்மத்தைப் பரப்புதல்)

18.தம்ம விஜயம்: (அறத்தின் வழிபெறும் வெற்றி)

19.தர்மதாமதா: (அறம் செய்வதில் ஆர்வம்)

20.த்ருதபக்திதா: (மாறாத அன்புள்ளம்)

21.பயம்: (பாவம் செயவதில் அச்சம்)

22.பரிக்‌ஷா: தன்னம்பிக்கை)

23.பாவசுத்தி: எண்ணத்தூய்மை)

24.மார்த்தவம்: (அருளுடைமை)

Sunday, June 13, 2021

போதனா

ஆந்திர மாநிலம், வாரங்கல்லுக்கு அருகில் சிறு கிராமத்தில் பிறந்தவர் போதனா. சிறு வயதிலேயே கவிதை எழுதினார். வீரபத்ர விஜயம் எழுதும்போது அவருக்கு வயது பத்து. ராஜகொண்டா சமஸ்தான அரசர் சிங்கபூபாலர் அவரை ஆஸ்தான கவிஞராக நியமித்துப் பல பரிசுகள் அளித்தார். ஆனால், ராமனைத் தரிசிக்கும் ஆசையில் வெகு சீக்கிரம் பதவியிலிருந்து விலகிக் கொண்டார். கோதாவரி தீரத்தில் யோகத்தில் ஆழ்ந்து பரந்தாமனைத் தரிசித்தார். கவி சார்வபௌம ஸ்ரீநாதர் தன் சகோதரியை போதனாவுக்கு மணமுடித்தார். அவர்களுக்கு ஓர் ஆண் குழந்தையும் பிறந்தது. நிலத்தில் உழும்போதே இசை பாகவதம் எழுதத் தொடங்கினார். பயிரோடு பாகவதமும் வளர்ந்தது. ஒரு நாள் அமைத்த வார்த்தைகள் அவருக்குத் திருப்தியைத் தரவில்லை. மன வருத்தத்தோடு வரப்பில் படுத்து உறங்கி விட்டார். எழுந்து பார்த்தால் அழகாகப் பாடல் எழுந்து பார்த்தால் அழகாகப் பாடல் முடிக்கப்பட்டிருந்தது. பகவான் வந்து பாடலை எழுதியபோது பார்க்க முடியவில்லையே என்று வருந்தினார். இந்த விஷயம் மன்னர் செவிக்கு எட்ட, பாகவதத்தை அரசவையில் பாட வரும்படி அழைப்பு விடுத்தார் மன்னர் போதனா, கோவிலியே பாகவதம் அரங்கேறும் என்று தீர்மானமாகச் சொல்லி விட்டார்.

போதனாவின் தமையனார், ஆதிமூலமே... என்று கஜேந்திரன் அழைத்தவுடன் இரு தேவியருடன் கருட வாகனத்தில் வந்ததாக பாகவதம் சொல்கிறது. நீ உத்தரீயம் நழுவ, கதாயுதமும், சக்கரமும் கொண்டு கிரீடமும் தரிக்காமல் விரைந்து வந்ததாகப் பாடல் புனைந்திருக்கிறாய். புராணத்தை நம் இஷ்டத்துக்கு மாற்றக் கூடாது. திருத்தி எழுதிக் கொண்டு வந்தாலே கோயிலில் அரங்கேற்றலாம் என்று தீர்மானமாகச் சொல்லி விட்டார். போதனா எதுவும் பேசவில்லை. அன்று சனிக்கிழமை தமையனார் ஒரு சிறு துண்டோடு கிணற்றடியில் எண்ணெய் தேய்த்துக் கொண்டிருந்தார். பெரிய கிணறு. தமையனாரின் ஐந்து வயதுப் பையன் வேத கிரி, அதனருகில் சுற்றிச் சுற்றி வந்து விளையாடிக் கொண்டிருந்தான். கண்களில் எண்ணெய் கட்டிக் கொள்ளும் அந்தக் கால வழக்கப்படி கண்ணை மூடிக் கொண்டிருந்தார் தமையன். போதனா, வேதகிரிக்குத் தின்பண்டங்களும், விளையாட்டுச் சாமான்களும் கொடுத்துத் தூக்கிக் கொண்டு போய் மறைவாக விட்டார்.

கிணற்றில் ஒரு கல்லைப் போட்டார். கிணற்றிலே என்னை விழுந்தது? என்று தமையனார் குரல்கொடுக்க, உள்ளேயிருந்து பெண்கள் ஓடி வந்தனர். வேதகிரி விழுந்து விட்டானண்ணா என்று கவலையோடு போதனா கூற, அவரது தமையனார் பதற்றத்துடன் முகத்தைத் துடைத்துக் கொண்டு கிணற்றில் இறங்க முயன்றார். என்னண்ணா! தண்ணீரெல்லாம் எண்ணெய்யாகும். கைபிடி வழுக்கும், சீக்கிரம் குளித்து உத்தரீயம் தலைப்பாகை, நெற்றியில் திலகம் அணிந்து வாருங்கள் என்று தடுத்தார் போதனா. முட்டாள்! குழந்தை உயிருக்குப் போராடுகையில் அலங்காரமா? என்று சீறினார் தமையன். உங்களுக்கொரு தர்மம்! பகவானுக்கொரு தர்மமா! காலில் உதிரம் சொட்ட நீருக்குள் இழுபடும் கஜேந்திரனைக் காப்பாற்ற பகவான் தேவியரைத் தேடிக் கொண்டு அலங்கரித்துக் கொண்டா வருவார்...? பத்திரமாய் இருக்கிறான். கவலைப்பட வேண்டாம் என்று போதனா, வேதகிரீ என்று குரல் கொடுக்க ஓடி வந்தான் வேதகிரி. போதனா, பாகவதத்தை சங்கீதமாய் கோயிலில் அரங்கேற்ற அரசரும் வந்து, பாராட்டி பரிசுகளை வழங்கினார். இதேபோல் பிரகலாத  சரித்திரம், ருக்மணி கல்யாணம் ஆகியவற்றையும் இயற்றியிருக்கிறார் பக்த போதனா.

Sunday, June 6, 2021

Kamala Devi Hazarika

A Christian missionary was sent to Assam for the promotion of religion. His name was Cruz. He came across to one the boys from an influential family in Assam to teach him English. The pastor slowly began to study the house and he learned that the boy's grandmother was the most influential person in te house. ...
'Corrupting the grandmother's mind can make the whole family Christian as well as the whole village', he thought.
The pastor began to tell Grandma. How Jesus cured leprosy of lepers, how He gave sight to the blind, etc ... 
But the strong Sanatani grandmother said ...
A stone turned into a living woman(Ahalya) for our Rama when he touched the stone. She spoke of Rama setu and how influenced by the name of Rama, stones was floating in seawater on the route to Lanka, and that they are still floating today. The priest continued his efforts but all his tricks went in vain. 
One day he brought a cake from the church He believed that the old lady would not eat the cake. But contrary to his expectation, she took the cake and ate it
Feeling triumphant, the pastror told her .. 'Grandmother, you are eating the prasad of the church ... you are now a christian and your name is audrey. I hereby convert you to Christianity', he said. The grandmother pulled the priest by the ear and told him- ' How big a donkey you are and so are those of your religion who think like  you . If i am a christian for just eating a piece of cake. I feed you from my house every day so why don't you become a Hindu? You consume the food, air and water every day of this land then you have become a Hindu long back by this logic.' ...
This great lady played an instrumental role in saving the Nation from being misled and also prevented many Assamese from being led astray . Her name "Kamala Devi Hazarika", the famous revolutionary of Assam...
(Translated from Kannada)
Credit-Surya Sarathi Roy

Friday, June 4, 2021

How To Make Ashta Choornam?

Ingredients:
1 Part  Pippali - Piper longum    

1 Part Maricha  -  Piper nigrum    

1 Part Shunti  -  Zingiber officinalis    

1 Part Sweta jeeraka  -  Cuminum cyminum  

1 Part Krishna jeeraka  -  Carom bulbocastanum  

1 Part Shuddha Hingu (Processed with Ghee) - Ferula asafoetida  

1 Part Ajamoda  -  Carum roxburghianum 

1 Part Saindhava  - Rock salt

Method:
Purify the hingu with cow ghee.

Dry all the herbal ingredients separately till there is no moisture remaining.

Put them together in a blender and make a powder of it.

Now again keep the powder under direct sunlight to remove the presence of moisture.

Pass the entire powder through sieve no. 100 to remove any impurities or hard particles.

Store it in air-tight containers for future use.

Therapeutic Benefits Of Ingredients:
Pippali:    
Pippali or Indian long pepper is extensively used for the treatment of heartburn, indigestion, diarrhoea, cholera, asthma, etc. It also improves digestion and skin health.

Maricha:
It improves the function of the digestive tract, helps in digestion and alleviates symptoms of indigestion, flatulence, constipation, dysentery, skin disorders, disorders of the liver, oliguria, common cold, cough, dental and vision problems.

Sunthi:
Sunthi or dried ginger is a potent ayurvedic remedy for promoting digestion, relieving constipation, abdominal gas and distension. It is also widely used for treating asthma, cough and cold symptoms.

Shweta Jeeraka:
Being a rich source of iron, cumin is extremely beneficial for not only anemia but also promotes digestion, regulates diabetes and facilitates weight loss.

Krishna Jeeraka:
Black cumin is good for reducing pain and inflammation in the case of arthritis. It also reduces high blood pressure, treats IBS and good for dental hygiene.

Hingu:
The potent carminative, anti-viral, anti-bacterial, anti-inflammatory properties of hing are extremely useful in treating stomach pain, bloating, asthma, high blood pressure, sting bites, menstrual problems and headache.

Ajamoda:   
Ajamoda, also known as celery has potent antispasmodic, diuretic, anthelmintic, laxative and stimulant properties. It is used for treating pain and inflammation, indigestion, urinary disorder, insomnia, rheumatism, kidney problem, bronchitis, asthma, and other breathing disorders.

Lavana:
The addition of saindhava lavana in the formulation balances the electrolytes, keeps the body hydrated by meeting the ion needs, prevents muscle cramps, improves digestion, bloating and treats the common cold symptoms.

Ayurvedic Benefits Of Ashta choornam:
Relieves Constipation:
Ayurveda strongly suggests the use of this concoction in the treatment of constipation. It increases secretion of bile by the liver, which in turn, acts on the peristalsis movement of the intestines and liver, thereby allowing smooth faecal passage from the large intestine. It also plays a quintessential role in minimalizing mucous and excess fat content in the stools and preventing them from sticking to the intestinal walls and thereby allowing easy movement through peristalsis.

Promotes Digestion:
Touted as a powerful digestive stimulant, this traditional herbal formulation helps in breaking down food particles in the stomach and intestine, promotes the secretion of the digestive juices and thereby increases the absorption of essential nutrients through the intestines. It helps to eliminate abdominal gas and in turn reduces abdominal distension, bloating and gaseous cramps. It also holds high significance in treating a wide range of gastrointestinal disorders like esophagitis, heartburn, diarrhoea, flatulence, peptic ulcer and gastroesophageal reflux disease.

Treats IBS
IBS also known as Grahani in Sanskrit is mostly caused due to excessive intake of food particles which are difficult to digest, unhealthy dietary choices, intake of foods that cause allergy, intake of foods low on nutrients, overeating, eating at irregular intervals, and other physical and mental factors like emotional problems, stress, etc. IBS can cause both diarrhoea and constipation. The use of trikatu (i.e. pippali, maricha and shunthi)  and other powerful herbs in ashta choornam make it an effective choice for treating this painful disease. Also Read: Irritable Bowel Syndrome: 5 Incredible Ayurvedic Herbs To Relieve IBS

Enhances Appetite
Ashta choornam is extremely crucial for patients suffering from a loss of appetite and eating disorders like anorexia nervosa, bulimia, pre-existing chronic debilitating disorders, and during convalescence from an acute or chronic infective disorder. Regular intake of this magical remedy acts as a natural appetizer and aids in the digestion of food, improves appetite and helps the person to eat.

Remedies Arthritis
The classical medicine has potent analgesic and anti-inflammatory properties, which is extremely beneficial in reducing joint and muscle pain, thereby reducing the chances of chronic autoimmune inflammatory diseases like rheumatoid arthritis which occurs due to the vitiation of Vata Doshas. It is also beneficial for bursitis, muscle and joint pain, shoulder dislocation pain and general debility due to fever.

Effect On Doshas:
Ashta choornam is sanctified with Katu (i.e. pungent taste) and Lavana Rasa (i.e. salty taste) and Laghu (i.e. light), Ushna (i.e. hot) and Rukshna Guna (i.e. rough quality). It inherently portrays Ushna Virya (i.e. hot potency) and Katu Vipaka (i.e. pungent metabolic taste). Being rough and light, it appeases the Vata doshas (i.e. air) and Kapha (earth and water) doshas, whereas having a pungent metabolic taste, it aggravates and detoxifies the Pitta (fire and air) doshas. Also Read: Introduction To Ayurveda: Learn About Vata, Pitta And Kapha Doshas

Therapeutic Dosage
The effective therapeutic dosage of Ashta choornam may vary from person to person depending upon the age, severity, and condition of the patient. Consultation from an ayurvedic doctor is a must, as he or she will thoroughly examine the indications and prescribe the correct dosage for a specific time period.

Adults: 1 to 3 grams twice a day, preferably with lukewarm water or cow’s ghee or as specified by the ayurvedic doctor for the specific gastrointestinal disorder.

Side Effects
Although it is an absolute remedy for digestive anomalies, care should be taken to consume it with doctor’s consultation. Overdosage of the medicine or intake without dilution with water can lead to a burning sensation in the throat, gastric irritation, acid reflux, vertigo, sour belching, and restlessness.

Conclusion
Ashta Choornam is a traditional ayurvedic remedy that holds high significance in treating umpteen health problems including indigestion, gastritis, Irritable bowel syndrome, constipation, and loss of appetite. Imbued with potent herbal ingredients, seek benefit from this powerful digestive choornam with proper doctor recommendation

Wednesday, May 26, 2021

ஊத்துக்காடு வேங்கடகவி

கண்ணபிரானை நேரில் தரிசித்து கவிபாடிய அருளாளர்களில் வடநாட்டு ஜெயதேவருக்கு இணையானவர் ஊத்துக்காடு வேங்கடகவி. இவருடைய பிறப்பைப் பற்றிய வரலாறு கிடைக்கவில்லை. ராமச்சந்திர வாதூலர் பரம்பரையில் வந்தவர் இவர். தந்தையிடமே ஆரம்ப இசை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டார். எனினும், ஊத்துக்காடு வேங்கடகவிக்கு பகவான் ஸ்ரீகிருஷ்ணனே குருவாக இருந்து அருள்பாலித்ததாகக் கூறுவர். தஞ்சை அரசர்களின் மானியமாக ஒன்பது கிராமங்கள் ராமச்சந்திர வாதுலருக்கு அளிக்கப்பட்டது. இவரது தந்தையார் ஏழைகளிடம் இரக்கம் கொண்டவர். தானதர்மம் செய்தில் ஆர்வம் உள்ளவர் என்பதை ""ஏழைக்கு இரங்கும் ராமச்சந்திர அய்யன் எப்போ வருவாரோ அரசரடிக்கு என்று நாட்டுப்புறப்பாடல்கள் குறிப்பிடுவதைக் காணலாம். ஒன்பது கிராமத்து மக்களுக்கும் திருமண சடங்குக்காக ஒரு தாலியும், பொன்னும் அளிப்பதை இவரது முன்னோர்கள் கடமையாகக் கொண்டிருந்தனர். ராமச்சந்திர வாதுலருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தவர் வேங்கட சுப்பிரமணியன்.
வேங்கடகவியின் குடும்பம் சிறிது சிறிதாக பொருளாதார வளத்தை இழந்தது. ஒன்பது கிராமங்களும் அவரது குடும்பத்தை விட்டுச் சென்றன. இதன்பின், வேங்கடகவி தவயோகியாக வாழ்ந்த கிருஷ்ணயோகி என்பவரைத் தேடி நீடாமங்கலம் காட்டிற்குச் சென்றார். அவரே, தன்னுடைய தாய்மாமன் என்ற உண்மையை உணர்ந்தார். ஆனால், கிருஷ்ணயோகியோ வேங்கடகவியை சிஷ்யனாக ஏற்க மறுத்தார். இதன்பின், தன் தாயின் ஆசியுடன் ஊத்துக்காடு காளிங்க நர்த்தன கிருஷ்ணனை தன்னுடைய மானசீக குருவாக ஏற்று தியானத்தில் ஆழ்ந்தார். அப்போது வானில் அசரீரி ஒலித்தது. ""இன்று முதல் உமக்கு யாமே குருவானோம். கோயிலின் ஈசான மூலையில் உள்ள துளசி மாடத்தருகே உமக்கு இசை ஞானத்தைப் போதிப்போம் என்பதைக் கேட்டு அதிசயித்தார். இந்நிகழ்வை, ""கூடப் படித்தவன் குசேலன்- ஆடற்கொடுத்து வைத்தவன் காளீயன்- பகவத் கீதை கேட்டான் விஜயன்- சங்கீர்த்தனம் கேட்டவன் அடியேன் என்ற பாடல் மூலம் நமக்கு உணர்த்துகிறார்.
வேங்கடகவிக்கு நீலமேக சியாமளனாக கண்ணன் பலமுறை நேரில் வந்த காட்சி அளித்தார். கண்ணனின் அருளால் மனித இயல்புகளான ஆசை,கோபம், காமம் ஆகிய துர்குணங்கள் மறைந்தன. வயிற்றுப்பசிக்கு மட்டும் சிறிதளவு உணவை, அன்னதானம் இடும் ஊட்டுப்பறைகளில் பெற்று வாழ்ந்தார். ஒருசமயம் தஞ்சை மன்னன் வயிற்றுவலியால் அவதிப்பட்டான். செய்வினைக்கோளாறால் ஏற்பட்ட நோய் என்று சொல்லி மந்திரவாதி ஒருவன் மன்னனை ஏமாற்றி வந்தான். இவ்விஷயத்தை அறிந்த வேங்கடகவி, அரண்மனைக்கு சென்றார். வழியில் பல்லக்கில் மந்திரவாதி வந்து கொண்டிருந்தான். பல்லக்கை தூக்குபவர்களுடன் வேங்கடகவியும் சேர்ந்து அரண்மனைக்குள் நுழைந்தார். கண்ணனைப் பாடி மன்னனின் வயிற்றுவலியை முற்றிலும் போக்கினார். மற்றொரு சமயம் நாதஸ்வர வித்வான் பெரிய ருத்ராதிபிள்ளைக்கு, வேங்கடகவியின் தெய்வீக இசையைக் கேட்கும் வாய்ப்பு ஏற்பட்டது. இசையின் கடினவழிமுறைகளில் ஒன்றான ஸ்ரீருத்ர சப்தமான கனம் வழியில் அவர் பாடிக் கொண்டிருந்தார்.
ருத்ராதிபிள்ளை அவரின் ராகத்தை மறைந்திருந்து கேட்டு, அதை நாதஸ்வரத்தில் வாசித்துக் காண்பித்தார். வேங்கடகவி அவரைப் பாராட்டி ஆசி அளித்தார். மன்னார்குடி ஸ்ரீராஜகோபால சுவாமி திருவிழாவில் வெண்ணெய்த்தாழி சேவைவிழா நடந்து கொண்டிருந்தது. அவ்விழாவை தரிசிக்க தனவந்தர் ஒருவர, ஒரு சிறுவனை அழைத்து வந்திருந்தார். கூட்டத்தில் சிறுவன் காணாமல் போனான். தனவந்தர் தவித்துக் கொண்டிருந்தார். பஜனைக்கோஷ்டியினருடன் பாடிக் கொண்டு வந்த வேங்கடகவி தனவந்தரிடம் இரக்கம் கொண்டார். கண்ணபிரானைத் தியானித்து, ""கண்ணா! எழுந்திரும் பிள்ளாய்! என்று பாடினார். வேங்கடகவி பாடத் தொடங்கியதும், எங்கோ உறங்கிக் கொண்டிருந்த சிறுவன் எழுந்து ஓடி வந்தான். அச்சிறுவனைக் கண்ட தனவந்தர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. 
திருக்கண்ணபுரத்தில், அபிராமி என்ற நங்கை பரதநாட்டியக்கலையில் தேர்ச்சி பெற்றிருந்தாள். காசி சென்று, அங்குள்ள அரண்மனை நாட்டியக்காரி சித்ராவளியுடன் போட்டியில் பங்கேற்று தோற்றாள். ஒருமுறை, திருக்கண்ணபுரம் கோயிலுக்கு வந்த வேங்கடகவியைக் கண்டு தன் வருத்தத்தை தெரிவித்தாள். அவர் அவளுக்கு நடனத்தில் "லய நுணுக்கங்களை கற்றுக் கொடுத்து மீண்டும் காசிக்கு அனுப்பி வைத்தார். அவள் சித்ராவளியைத் தோற்கடித்து வெற்றிவாகை சூடினாள். வேங்கடகவியின் தொடையில் கண்ணன் இருந்ததால், ஆயுள்முழுவதும் தாளம் போட்டு பாடியதில்லை. திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்ந்து வந்தார். இவர் பாடிய பாடல்களில், "தாயே யசோதா, "காயாம்பூ வண்ணனே, "ராஜ விலாஸம், "புல்லாய் பிறக்க வேணும், "அலை பாயுதே போன்றவை இன்றும் இசைமேடைகளில் ரசிகர்களால் விரும்பிக் கேட்கப்படுபவையாகும். இவருடைய இறுதிக்காலம் பற்றி அறிந்து கொள்ள முடியவில்லை.

Monday, May 24, 2021

சிந்தனை செய் மனமே

சிரியாவிலுள்ள ஒரு பள்ளியில் நடந்த உண்மைச் சம்பவம்.

அற்புதமான ஒரு நிகழ்வு இது.

ஓர் ஆசிரியை பாடவேளையின் இறுதியில் மாணவிகளை ஊக்குவிக்க சிறிய தேர்வை நடத்தினார்.
அதில் வெற்றி பெறும் மாணவிக்கு புதியதொரு ஜோடி காலணி வழங்கப்படும் என்றும் கூறினார்.
அனைத்து மாணவிகளும் மிகுந்த மகிழ்ச்சியுடன் தேர்வு எழுதினர்.
இறுதியில் அவர்களது விடைகளைப் பரிசீலித்துப் பார்த்த பொழுது அவர்கள் அனைவரும் சரியான விடைகளை எழுதி இருந்தனர்.
ஆசிரியை யாருக்குப் பரிசினை வழங்குவது என்று சிந்தித்து விட்டு ஒரு பெட்டியில் அனைவரும் அவரவர் பெயர்களை ஒரு தாளில் எழுதி சுருட்டிப் போடுமாறு சொன்னார்.
அனைவரும் எழுதிப் போடவே ஆசிரியை அப்பெட்டியைக் குலுக்கி அதில் ஒரு தாளை எடுத்தார்.
அதில் "வபாஃ" என்ற மாணவியின் பெயர் காணப்படவே அம்மாணவிக்குப் பரிசு வழங்கப்பட்டது.
அம்மாணவி தான் அவ்வகுப்பில் மிகவும் ஏழ்மையான மாணவி. பல காலமாகவே தேய்ந்து போயிருந்த காலணிகளை அணிந்து வந்த அம்மாணவிக்கோ எல்லையில்லா மகிழ்ச்சி.
பின்னர் அவ்வாசிரியை மகிழ்ச்சியுடன் வீட்டுக்கு வந்து நடந்த நிகழ்வைப் பற்றி கணவரிடம் கண்ணீருடன் கூறினார். கணவனும் மகிழ்ச்சி அடைந்தார்.
எனினும் அவ்வாசிரியை வழக்கத்துக்கு மாறாக தொடர்ந்து கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தார்.
கணவர் மீண்டும் காரணம் கேட்க " நான் வீட்டுக்கு வந்து பெயர்கள் இடப்பட்ட அப்பெட்டியில் இருந்த தாள்களைப் பிரித்துப் பார்த்தேன். அதில் அனைத்து மாணவிகளும் தங்களது பெயர்களை எழுதாமல் வகுப்பில் ஏழை மாணவியாக இருந்த "வபாஃ" வின் பெயரையே எழுதியிருந்தனர்". என்று
கண்ணீருடன் பதிலளித்தார்.
"தன்னை விட அதிகம் தேவையில் உள்ள பிறர் மீது அக்கறை கொண்டு அவர்களை முன்னிலைப் படுத்தும் பிள்ளைகளாக நமது பிள்ளைகளை வளர்ப்பது நமது கடமையாகும்""

நம்பிக்கையுட்டும் உற்சாகம்

ஒரு ராஜாவுக்கு பல யானைகள் இருந்தன, ஆனால் ஒரு யானை மிகவும் சக்திவாய்ந்த, கீழ்ப்படிதலான, விவேகமான மற்றும் சண்டை திறன்களில் திறமையானது.  பல போர்களில்,போர்க்களத்தில் அனுப்பப்பட்டு ராஜாவுக்கு வெற்றியைப் பெற்று திரும்பி வரும்.எனவே, ராஜாவின் மிகவும் விரும்பப்பட்ட யானையாகியது .  நாட்கள் ஓடியது.யானைக்கு வயதாகியது. இப்போது யானைக்கு முன்பு போல களத்தில் போர் செய்ய முடியவில்லை.  எனவே, இப்போது மன்னர் அதை போர்க்களத்திற்கு அனுப்பவில்லை, ஆனாலும் அவரது அணியின் ஒரு பகுதியாகவே யானை இருக்கிறது.

     ஒரு நாள் யானை தண்ணீர் குடிக்க ஏரிக்குச் சென்றது.ஆனால் அதன் கால்கள் சேற்றில் சிக்கி பின்னர் மூழ்கியது .  அதிக முறை முயன்றும் சேற்றில் இருந்து அதன் காலை அகற்ற முடியவில்லை.  யானை சிக்கலில் இருப்பதாக அதன் அலறல் சத்தத்திலிருந்து மக்கள் அறிந்து கொண்டனர்.  யானை சேற்றில் சிக்கிய செய்தி ராஜாவையும் சென்றடைந்தது.  ராஜா உட்பட மக்கள் அனைவரும் யானையைச் சுற்றி கூடி அதை சேற்றிலிருந்து வெளியேற்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.  ஆனால் நீண்ட நேரம் முயற்சி பலனளிக்கவில்லை.

  கவுதம புத்தர் அப்போது சாலையில் சென்று கொண்டிருந்தார்.  கவுதம  புத்தர் முதலில் சம்பவ இடத்தைப் பரிசோதித்தார், பின்னர் ஏரியைச் சுற்றி போர் முரசு இசைக்க வேண்டும் என்று ராஜாவுக்கு பரிந்துரைத்தார். 

     
        சேற்றில் சிக்கிய யானை, முரசு வாசிப்பதன் மூலம் எப்படி சேற்றில் இருந்து வெளியே வரும் என்று, வினோதமாக அனைவரும் பார்த்தார்கள். போர் முரசு ஒலிக்கத் தொடங்கியவுடன், அந்த யானையின் உடல் மொழியில் மாற்றம் ஏற்பட்டது.

                
            முதலில் யானை மெதுவாக எழுந்து நின்று,பின்னர் சேற்றில் இருந்து தானாகவே வெளியே வந்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

கவுதம புத்தர் செயலிலிருந்து நாம் அறிந்து  கொள்ள வேண்டியது :

 யானையின் உடல் பலம் குறைந்து விட இல்லை, அதற்கு உற்சாகத்தை கொடுக்க வேண்டிய அவசியம் மட்டுமே இருந்தது.

மேலும் மனிதர்கள் வாழ்க்கையில் உற்சாகத்தைத் தக்க வைத்துக் கொள்ள, சிறந்த குறிக்கோள், அதற்குரிய சிந்தனை மற்றும் மனநிலையையும் பராமரிக்க வேண்டியது அவசியம்.மேலும் எந்த சூழலிலும் விரக்தி அடைய கூடாது  

  இந்த சவாலான காலத்தில் நாம் அனைவரும், நம்மையும் மற்றும் நம்மைச் சுற்றியுள்ள மக்களையும் நம்பிக்கையுடனும், உற்சாகப்படுத்தும் படியும் பேச வேண்டும். உற்சாகப்படுத்த வேண்டும்(போர் முரசு கொட்டுவது போல் )

             வரும் காலங்களில் நண்பர்கள் அனைவரும்  நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் சந்தோசத்தை பெற்று வாழ்க்கையை கொண்டாடுவோம்  !!

அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்

“ஒரு முறை டெல்லி ரயில்வே ஸ்டேஷனில் டாக்ஸி ஏறினார்கள் இரண்டு இளைஞர்கள். டாக்ஸி டிரைவர் ஒரு வயதான சர்தார்ஜி. அவரைப் பார்த்ததும் இளைஞர்களுக்கு கிண்டல் புத்தி வந்துவிட்டது. அவர்கள் கேட்ட, படித்த சர்தார்ஜிகளைக் கேலி செய்யும் ஜோக்குகள் நினைவுக்கு வந்தன. டிரைவரை வெறுப்பேற்ற வேண்டும் என்றபதற்காக நிறைய சர்தார்ஜி ஜோக்குகளை சொல்லிக் கொண்டே வந்தார்கள். ஆனால் அந்த சர்தார்ஜி டிரைவர் ஒரு வார்த்தைகூடபேசவில்லை. பல மணி நேரம் சுற்றிவிட்டு அவர்கள் இறங்கும் இடம் வந்தது. அதற்குள் ஏகப்பட்ட கிண்டல் அடித்தவிட்டனர். 

இளைஞர்கள். மீட்டரைப் பார்த்து காசு கொடுத்ததும் அந்த சர்தார்ஜி டிரைவர், அந்த இளைஞர்களிடம் இரண்டு ஐந்து ரூபாய் நாணயங்களைக் கொடுத்து, “தம்பி, எங்க சர்தார்ஜிகளை நிறைய கிண்டலடிச்சிங்க பரவாயில்லை. எனக்காக ஒரே ஒரு காரியம் பண்ணுங்க. இந்த அஞ்சு ரூபாய் காசை நீங்க பாக்கிற முதல் சர்தார்ஜி பிச்சைக்காரனுக்கு போடுங்க. உங்களுக்கு புண்ணியமா போகும்’ என்று சொல்லி போய்விட்டார்.

இளைஞர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அந்த ஐந்து ரூபாய் நாணயங்களை வைத்துக் கொண்டு அவர்கள் போன இடமெல்லாம் பார்த்தார்கள். ஒரு இடத்தில் கூட பிச்சைக்கார சர்தார்ஜியை பார்க்க முடியவில்லை. 

அவர்கள் டெல்லியைவிட்டு கிளம்பும் நாள் வந்தது. ரயில் நிலைய வாசலில் அந்த சர்தார்ஜி டிரைவரை சந்தித்தனர். அப்போது அவர் கேட்டார், “என்ன தம்பி, அஞ்சு ரூபாயை சர்தார்ஜிக்கு பிச்சை போட்டிங்களா’ என்று. இளைஞர்கள் “இல்லை’யென்று தலையசைத்தார்கள்.“அதான் தம்பி சர்தார்ஜி. உலகம் முழுக்க எங்களை வச்சு ஜோக்கடிக்கிறாங்க. கேலி பண்றாங்க. 

ஆனா நாங்க அதெல்லாம் பொருட்படுத்துறதில்ல. எங்களுக்குத் தெரிஞ்சதுலாம் உழைப்புதான். ரோட்டுக் கடை வைப்போம், லாரி ஓட்டுவோம், மூட்டை தூக்குவோம் ஆனா பிச்சை மட்டும் எடுக்க மாட்டோம். டெல்லில நீங்க ஒரு பிச்சைக்கார சர்தார்ஜியைக் கூட பார்க்க முடியாது.’ என்று அந்த சர்தார்ஜி டிரைவர் சொன்னபோது இளைஞர்கள் கண்களில் பிரமிப்பு.’இந்தச் சம்பவத்தை குரு சொன்னதும் தான் செய்ய வேண்டியது என்ன என்பது வந்தவனுக்குப் புரிந்தது.அப்போது குரு அவனுக்குச் சொன்ன 

அடுத்தவர் கிண்டலை அலட்சியப்படுத்தினால்தான் வெற்றி.

Wednesday, April 21, 2021

விநாயகரும் விட்டலரும்

துக்காராம் மராத்தியைத் தவிர  வேறு மொழி தெரியாதவர்.  படிக்காதவர். பரிபூர்ண  பக்தியோடு  விட் டல ஸ்மரணம் செய்பவர். அபங்கங்கள்  இயற்றி  பாடுவார்.  

விட்டலன்   அவரிடம்   அலாதி அன்பு கொண்டவன்.  அவரோடு பேசுவான் சாப்பிடுவான்.  உற்ற  நண்பர்கள் இவ்வாறு தானே இருப்பார்கள். தேஹு  என்ற அந்த கிராமத்து  பிராமணர்கள் துக்காராமை  ஒரு விஷ  ஜந்துவாகவே பார்த்தார்கள்.

எரியும் தீயில் எண்ணையாக  துக்காராமோடு  சேர்ந்து  பாண்டுரங்கன்  சாப்பிடுகிறான் என்ற  செய்தி  அவர்களை வாட்டியது.  ஆனால்  அண்டை  கிராமங்களில் துக்காராம்   புகழ் பரவியது. இதனால் எங்கும் அவரை வரவேற்றனர். 

எங்கு  சென்றாலும்  யார் என்ன   உணவளித்தாலும் துக்காராம்   தனக்கு  அருகே  ஒரு மற்றொரு இலை  போடுங்கள்   என்பார் 
"யாருக்கு?"
"என் பாண்டுரங்கனுக்குத்தான்" 
எல்லோரும் சாப்பிட்டு முடித்தவுடன்  அந்த  ஆளில்லாத இலையும்  காலியாகத்தான் இருக்கும் விட்டலன் அரூபமாக (மற்றவர் கண்ணுக்கு)   அமர்ந்து சாப்பிடுவான். 

தேஹூ  பிராமணர்கள் சும்மா இருப்பார்களா? 
சின்ச்வாட் என்று ஒரு  ஊர் கூப்பிடு தூரத்தில்  இருந்தது  அங்கு   சிந்தாமணி தேவ் எனும் விநாயக உபாசகர் அவர்  விநாயகர்  கோயிலில் விசேஷம் அந்த சிந்தாமணி தேவ் அழைத்தால் விநாயகர் அவரோடு அமர்ந்து அன்னம் புசிப்பார் அதனால்  பிரமாத  ஏற்பாடுகளில்  அன்னதானமும் இருந்தது அன்று  ஏனோ அன்னம் புசிக்க சிந்தாமணி தேவ் விநாயகரை அழைத்திருந்தார் ஆனால் அவர் வரவில்லை ஆனாலும்  சிந்தாமணி தேவ் துக்காராமை அழைத்து அவமானப்படுத்தவென்றே ஒரு  தீர்மானம்   வரிசையாக எல்லோரும்  சாப்பிட உட்கார்ந்தபோது  துக்காராம்  அருகே ஒரு  காலி  இலை  போட்டார்கள்.

துக்காராமோ  "எனக்கு  இந்தப்பக்கமும் ஒரு  இலை  போடுங்கள்"   என்று  கேட்டுக்கொண்டார்.
"ஏன்  விட்டலன்  ரெண்டு பக்கமும்  உட்கார்ந்து   உங்களோடு சாப்பிடப்போகிராரோ?" பிராமணர்கள்  அவரைக் கேலியாக கேட்டார்கள் 
"இல்லை.    எப்போதும் போல் விட்டலன் இடப்பக்கம் அமர்வார்.

உங்கள் ஊர் 
வினாயகர் வந்து  வலப்பக்கம் அமர்வார்"
சிரித்தார்கள் பிராமணர்கள்  மற்றும் சிந்தாமணி தேவும் ஏற்கனவே படப்போகிற  அவமானத்துக்கு  விநாயகர் வேறு  சாட்சியா?"
அவர்கள் சந்தேகத்துக்கு இடமில்லாமல்  இரண்டு இலையில் உள்ள அன்னமும் குறைய ஆரம்பித்தது  விநாயகனும் விட்டலனுடன் சேர்ந்து துக்காராமுடன் சமாராதனையில்   சாப்பிட்டனர் 

துக்காராம் சாப்பிட்டு  முடித்தபோது  அவருக்கு இரண்டு  பக்க இலைகளும்   சாப்பிடப்பட்டு  காலியாக இருந்ததைப்  பார்த்த பிராமணர்களும் சிந்தாமணி தேவும்  வெட்கிப்போய்  என்ன  அபசாரம்  செய்தோம் என்று  துக்காராம் காலில்  விழுந்தனர் அன்றிலிருந்து சிந்தாமணி தேவ் தீவிர துக்கா ராம் மகராஜ் சிஷ்யர்களில் ஒருவரானர்.

Saturday, April 3, 2021

சனீஸ்வரர் பரிகாரத் தலங்கள்

திருக்கொள்ளிக்காடு -பொங்குசனி திருத்தலம்
சனீஸ்வரனுக்கு முற்பிறவிகளில் பாவச் செயல்களில் ஈடுபட்ட ஜீவன்களுக்கு அவற்றின் மறுபிறவிகளில் தயங்காது தண்டனை அளிக்கும் கடமை தரப்பட்டிருந்தது. இதனால் மக்கள் தன்னை ஏசுவதை நினைத்து அதிக மனவேதனை ஏற்பட்டு சிவபெருமானை வணங்கி, பாவத்திற்குத் தண்டனையளிக்கும் பொறுப்பிலிருந்து தன்னை விடுவிக்க மனமுருக வேண்டினார்.தவறு செய்பவர்களைத் தண்டிப்பதன் மூலம் தர்மத்தை நிலைநாட்டுவதால் அஞ்சற்க என்று சிவபெருமான் ஆறுதல் கூறி அருள்புரிந்தார். சனி பகவான் சமாதானம் அடையாமல் வசிஷ்ட முனிவரின் அறிவுரைப்படி அக்னீவனம் என்னும் திருத்தலத்திற்கு வந்து பல்லாயிரம் ஆண்டுகாலம் கடும் தவமியற்றியபோது, இறைவன் அக்னி உருவில் தரிசனம் அளித்து சனி பகவானை பொங்கு சனியாகத் தன் இரண்டாவது அவதாரம் எடுக்கச் செய்து அவரைத் தரிசிப்பவருக்கு, எத்தகைய கொடிய பாவத்தைச் செய்திருந்தாலும் அவர்களது பாவங்களை அடியோடு நிவர்த்தி செய்து தண்டனை இல்லாமல் தவிர்த்துவிடும் சக்தி அளித்து அனுக்கிரக சனியாக அருள் புரியச் செய்தார்.

சனி பகவானின் சோகத்தை தீர்த்த சக்தி வாய்ந்த திருத்தலம் அக்னீஸ்வரம். அக்னிபுரி, அக்னிவனம் எனும் சீரளத்தூர். இத்தலம் திருக்கொள்ளிக்காடு எனவும் அழைக்கப்படுகிறது. இங்கு சனி பகவான் சதூர் புஜத்துடன் வலதுகரம் அபயஹஸ்தமாகவும், ஒரு கரத்தில் கலப்பை ஏந்தியும், தனிச்சன்னிதியில் எதிரில் மகாலெட்சுமி சன்னிதி அமையப் பெற்று விளங்குவதால் பொங்குசனி என்ற பெயரில் அருள்பாலிக்கிறார். இங்கு இறைவனை தரிசித்து பொங்குசனி பகவானை பூஜிப்பவர்களின் பாவங்கள் அந்த விநாடியே அக்னீஸ்வரரால் எரிக்கப்பட்டு நீண்ட ஆயுளையும், தொழில் முன்னேற்றத்தையும் அடைவதாக கூறுகிறது புராதனமான தல வரலாறு. இங்கு நவக்கிரஹங்களுக்குத் தண்டனை அளிக்கும் பொறுப்பு இல்லாததால் தங்கள் மாறுபட்ட குணங்களை விட்டு ஒரே வரிசையில் “ப” வடிவில் நின்று தரிசனம் அளிப்பது சிறப்பாகும். இறைவன்-அக்னீஸ்வரன். இறைவி-மிருதபாதநாயகி. இத்தலத்தில் 3 தலவிருட்சங்கள் உள்ளன. வன்னிமரம் குபேர சம்பத்தை அளிக்கிறது. ஊமத்தை தீராத சஞ்சலம், சித்த பிரமை, மனக்கவலையைப் போக்குகிறது. சரக்கொன்றை மரம், கொன்றைப்பூ கொத்துக் கொத்தாதப் பூப்பது போல் குடும்பத்தில் மனவேற்றுமைகளைப் போக்கி ஒற்றுமையை அளிக்கிறது. இத்தலம் மன்னார்குடியிலிருந்து கிழக்கே 22கி.மீ. திருவாரூரிலிருந்து தென்மேற்கே 25 கி.மீ. திருத்துறைப்பூண்டியிலிருந்து வடமேற்கே 19 கி.மீ தொலைவில் உள்ளது. இது சுமார் 2,300 ஆண்டு பழமையானது என்பது தொல்பொருள் ஆராய்ச்சித் துறையின் கணிப்பாகும்.

திருநாரையூர் ஸ்ரீ இராமநாத சுவாமி திருக்கோயில் மங்கள சனீஸ்வரர்
கும்பகோணம்-திருவாரூர் வழித்தடத்தில் திருநாரையூர் எனும் சித்தீஸ்வரம் என்கிற சேத்திரத்திற்கு எதிரில் அரசாங்க மருத்துமனைக்கு அருகில் இராமநாத சுவாமி திருக்கோயில் உள்ளது.இத்தலத்தில் கஷ்டங்கள் ஏற்பட்டு இறைவனை வணங்கினார். அவரது வேண்டுதலை ஏற்று சித்தர்கள் வாழ்ந்த இத்தலத்தில் இராமநாத சுவாமியை பிரதிஷ்டை செய்து மங்களம் அளிக்கும் சனீஸ்வரர் சன்னிதியையும் ஏற்படுத்தி சனிதோஷம் நீங்கப் பெற்றதாகக் கூறப்படுகிறது. சனீஸ்வரர் தனிசன்னிதியில் தனது இரண்டு தேவியர்-மாந்தாதேவி, ஜேஷ்டதேவியுடன் தனது இரண்டு குமாரர்கள்-மாந்தி, குளிகன் ஆகியோருடன் குடும்ப சகிதமாக மங்களம் அளிக்கிறார். தசரதர் வழிபட்டதற்கு ஆதாரமாக மங்கள சனீஸ்வரர் சன்னிதியில் தசரத மகாராஜா வணங்கி பூஜிக்கும் நிலையில் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். இங்கு கோஷ்டத்தில் ரிஷப வாகனத்தில் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி எழுந்தருளியிருப்பது சிறப்பாகும்.

 

புதுக்கோட்டை ஆலங்குடி
புதுக்கோட்டை மாவட்டத்தில் கிடாரம் கொண்ட சோழபுரம் பேரூர் ஆண்டான் என்று அழைக்கப்பட்டு தற்சமயம் ஆலங்குடி என்று வழங்கப்படுகிற திருத்தலத்தில் ஸ்ரீ தர்ம சம்வர்த்தினி சமேத ஸ்ரீ நாமபுரீஸ்வரர் சைவ, வைணவ ஒருமைப்பாட்டினை உணர்த்தி அருள்புரிவது சிறப்பாகும். காசி வில்வம் இக்கோயிலின் தலவிருட்சமாகும். புதன்கிழமைகளில் வரும் பிரதோஷம் இக்கோயிலில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் விஷ்ணுவையும், பிரம்மாவையும் தரிசிக்கலாம். புதனுக்கும், சனீஸ்வரனுக்கு அதிதேவதையாக மகாவிஷ்ணு விளங்குகிறார்.இக்கோயிலில் அருள்பாலிக்கும் சிவபெருமானையும், மகாவிஷ்ணுவையும் வணங்கினால் சனி மற்றும் புதன் கிரஹ தோஷங்கள் நீங்குகின்றன.இங்குள்ள நந்தியெம்பெருமானுக்கு நெற்றியில் திருநாமம் இடப்பட்டிருப்பது காரணமாக இந்த கோயில் பெருமான் நாம புரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். இங்குள்ள காலபைரவர், சூரியன் மற்றும் குழந்தை வடிவாகத் திகழும் பால சனீஸ்வரர் தனிச்சன்னிதிகளில் அருள் புரிவதால் இம்மூவரையும் தேய்பிறை அஷ்டமி தினத்தன்று வழிபட்டால் சகல தோஷங்களும் நீங்கி நற்பலன்கள் உண்டாகும். புதன் கிரஹத்திற்குரிய பரிகாரத்தலமும் ஆகும்.

 

திருநெல்வேலி மாவட்டம் கயத்தாறு
கயத்தாறு சேத்திரம் திருவாறைத்தலம் என்று வழங்கியது. இத்திருக்கோயில் திருநெல்வேலி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது.
அகத்தியர், ஸ்ரீ ராமர், அனந்த குணபாண்டியன், ராஜசேகர பாண்டியன் ஆகியோர் பூஜித்துத் திருவருள் பெற்ற தலம். ஆலயத்தின் கிழக்கே கயத்தாறு (யானை நதி) ஆலயத்தினுள் கோடி தீர்த்தம் ஆகிய புண்ணிய தீர்த்தங்கள். சுவாமி ஸ்ரீ கோதண்டராமேஸ்வரர். அம்பாள் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி. இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் சனீஸ்வரன் ஆவுடையார் மீது காகவாகனத்துடன் தெற்கு நோக்கி அமர்ந்து அருள்பாலிப்பது பிரத்யேக சிறப்பம்சமாகும்.
சனி பகவான் மானிடர்களின் உயிரைக் காக்கும் ஆயுள்காரக கிரகமாதலால் தெற்கு நோக்கி தரிசனம் அளிக்கிறார். ஜாதகத்தில் அஷ்டமச்னி,கண்டச்சனி, ஏழரைச்சனி ஆகியவற்றாலும், இதர கிரக தோஷங்களினாலும் ஆயுளுக்கு ஆபத்து வரும்போது இத்தலத்தில் தொடர்ச்சியாக 9 வாரம் சனிக்கிழமைகளில் சனீஸ்வரருக்கு அபிஷேகம் செய்வித்து, நெய் தீபமேற்றி ஆராதித்தால் யம பயம் நீங்கும். சித்திரைவிஷூ அன்று சூரியனின் கிரணங்கள் சிவலிங்கத்தின் மீது விழுவது ஒரே கல்லில் வடிக்கப்பட்ட 6 அடி உயரமுள்ள அற்புத நடராஜப் பெருமான் சிலை தரிசனம், நதிக்கரையில் உள்ள ஸ்ரீ ராமர் பாதம், நவக்கிரஹங்கள் ஒரே இடத்தில் இல்லாமல் தனித்தனியாக உட்பிரகாரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது ஆகியவை இத்தலத்தில் சிறப்பம்சமாகும்.

 

சென்னை பொழிச்சலூர் -சனீஸ்வரர் மற்றும் நாகதோஷ நிவர்த்தி திருக்கோயில்
சென்னை புறநகர்ப் பகுதியான பொழிச்சலூர் அகஸ்தீஸ்வரர் கோயில் வடதிருநள்ளாறு என்னும் பெருமைக் குரியதாகும். சனீஸ்வரர் பிறருக்குத் துன்பம் அளித்ததால் தனக்கு ஏற்பட்ட பாவங்களிலிருந்து நீங்குவதற்காக இத்தலத்திற்கு வந்து ஆனந்தவள்ளி ஸமேத அகஸ்தீஸ்வரரை வணங்கித் தண்னைப் பிடித்த பாவங்களிலிருந்து விமோசனம் பெற்றார் என்பது தலவரலாறு.

 

தனிச்சன்னிதியில் குடிகொண்டுள்ளாள் சனீஸ்வரர், நவக்கிரகங்களுக்கு அருகில் உள்ள சனீஸ்வரரின் குருநாதரான பைரவர் ஆகிய இருவரையும் சனிக்கிழமைகளில் விளக்கேற்றியும், அர்ச்சித்தும் வணங்கினால் எல்லா தோஷங்களும் நீங்கிவிடும் என்பது நிச்சயம்.

 

அகஸ்தீஸ்வர் கோயிலின் கருவறை முன்மண்டபத்தில் மேற்புறமுள்ள கல்லில் நாகத்தின் புடை சிற்பம் இருப்பதால் இது நாக தோஷ பரிகாரத்தலம் என்று கூறப்படுகிறது. கோயில் பிரகாரத்தில் நாக கற்கள் அருகில் விளக்கேற்றினால் நாகதோஷம் நீங்குகிறது என்பது நம்பிக்கை. ஐப்பசி மாதமும், சித்திரை மாதமும் 3 நாட்கள் லிங்கத்தின் மீது சூரிய கிரணங்கள் விழுவதால் சூரியன் வழிபாட்டுத் தலமாகவும் உள்ளது.

 

மங்கம்மாபேட்டை மங்கள சனீஸ்வரர்
அரக்கோணத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் மங்கம்மாபேட்டை எனும் நீலதேவி ஸமேத சனீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. பிரமிடு வடிவ குகைக்குள் கட்டப்பட்டுள்ள ஆலயத்தில் திருக்கல்யாண கோலத்தில் வீற்றிருக்கும் சனி பகவானைஎண்ணிக்கொண்டு எள் தீபம் ஏற்றி வன்னி மரத்தடியில் அமர்ந்திருக்கும் சனீஸ்வரரை மூன்று முறை வலம் வந்து பிரார்த்தனை செய்து தீபத்தை அவ்விடம் வைத்து இங்கு மூலவரை அர்ச்சித்து 27 முறை வலம் வந்து 5 நிமிடம் தியானம் செய்ய வேண்டும். இம்முறையில் 47.27 அல்லது 11 சனிக்கிழமைகள் வழிபட்டு கடைசி வாரம் அபிஷேக ஆராதனைகள் செய்தால் திருமணம், குழந்தை பாக்கியம், கல்வி வளர்ச்சி, வியாபார மேன்மை ஆகிய கோரிக்கைகள் அனைத்தும் மேற்கண்ட பரிகார பூஜையால் நிவர்த்தியாகும். இந்த ஆலய வழிபாட்டால் நாகதோஷம், காலசர்ப தோஷம், செவ்வாய் தோஷங்கள் அனைத்தும் நீங்கும். சனீஸ்வரர் கல்யாண கோலத்தில் அருள்பாலிப்பதால் இங்கு ஷஷ்டியப்தபூர்த்தி, சதாபிஷேகம், பீமரத சாந்தி போன்ற நிகழ்ச்சிகள் செய்தால் நற்பலன் கூடும்.

 

சோழபுரம் ஸ்ரீ பைரவேஸ்வரர் ஆலயம்
மக்களுக்கு ஏற்படும் தோஷங்களில் மிகக்கொடிய தோஷம் கலியுக பைரவ தோஷம் எனப்படும். ஆலயங்களை சீரழித்து, ஆலய சொத்துகளை அபகரித்தல், பெண்களின் நிராதரவான நிலைமையை பயன்படுத்தி அவர்களைக் கற்பழித்தல், பெற்ற தாய்க்குச் சமமாக பூஜிக்கப்பட வேண்டிய பசுக்களை வதை செய்வது போன்ற பாவங்கள் செய்பவர்களை கலியுக பைரவ தோஷம் பீடிக்கும். இத்தகைய கலியுக பைரவ தோஷத்திற்கு பரிகார தலம் கும்பகோணத்திலிருந்து சுமார் 12 கி.மீ. தூரத்தில் உள்ள சோழபுரம் ஸ்ரீ பைரவேஸ்வரர் சிவாலயமாகும். 64 பைரவ சக்திகளுக்கும் தனித்தனியான யாகசாலைகளுடன். மிகக்கடுமையான செய்வினை தோஷங்களை வேரோடு அறுக்கும் சக்தி கொண்டது. தொடர்ந்து 7 நாட்களுக்கு இடைவிடாது இச்சன்னிதியில் தீபம் ஏற்றி வந்தால் எத்தகைய கொடிய நாக தோஷங்களானாலும் நீங்கும். இதற்காகவே “பின்னற்பிறையால்” என்ற வகையிலான விசிறித் தட்டு அகல்கள் போன்ற அபூர்வமான தீப்பிறைகள் இத்திருக்கோயிலில் இருந்துள்ளன.மேலும் சென்ற வினை, வந்துள்ள வினை, இனி வரப்போகும் வினை ஆகிய 3 வினைகளையும் களைந்தெறியும் வினைதீர்த்த சனீஸ்வர பகவானும் சூட்சம் உருவில் இருந்து அம்பிகை ஸ்ரீ சிவாபூரணியையும் ஸ்ரீ கைலாச நாதரையும் பூஜிப்பதால் சனீஸ்வர பரிகார தலமாகவும் சோழபுரம் விளங்குகிறது.

 

தஞ்சாவூர் மாவட்டம் கட்டுமாவடி அருகில் விளங்குளம்
தஞ்சாவூர் மாவட்டப் பேராவூரணிலிருந்து 20 கி.மீ. தொலைவிலும், கட்டுமாவடியிலிருந்து 7 கி.மீ. தொலைவிலும் விளாங்குளம் உள்ளது. இங்கு அருள்மிகு பூசம் ஸ்ரீ அட்சயபுரீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.

 

சனீஸ்வர பகவானின் நடசத்திரமான பூச நட்சத்திரத்தில் பிறந்தோர் வழிபட வேண்டிய தலமாகும். சனீஸ்வர பகவான் யமனால் துண்டிக்கப்படட்டு ஊனமானார். ஊனமான கால்களுடன் மனித உருவில் வாழ்ந்தபோது சுரைக்காய்க் குடுவையில் பிச்சையெடுத்து தன்னால் முடிந்த அளவிற்கு அன்னதானம் வழங்கினார். வரும்போது விளம் என்னும் மரவேர் தடுக்கி எதிரே உள்ள பள்ளத்தில் விழுந்தார். அப்போது அக்குளத்தில் ஞானவாவி என்னும் ஞானதீர்த்தம் உற்பத்தியாகி சனீஸ்வர பகவானின் ஊனம் நீங்கியது. அவர் செய்த அன்னதானமே அப்பலனைத் தந்தது. ஊனம் நீங்கிய நாள் பூசம், சனிக்கிழமை, அட்சய கிருதியை ஆகிய மூன்றும் இணைந்த நாள்.

 

விளம் மரத்தின் வேர் தடுக்கிக் குளத்தில் விழுந்ததால் விளமும் குளமும் இணைந்து விளங்குளம் என்ற பெயர் ஏற்பட்டது. சிவபெருமான் அட்சய புரீஸ்வரராகக் காட்சியளித்து சனீஸ்வர பகவானுக்கு திருமணம் நடக்க வரம் அளித்தார். அந்த வரத்தின்படி சனீஸ்வரர் மந்தா, ஜேஷ்டா என்ற இரு பத்தினியரைத் திருமணம் செய்து அருள் பாலிக்கிறார். இத்தலத்தின் தீர்த்தம் மிகவும் சக்தி வாய்ந்தது. சனீஸ்வர பகவான் விழுந்தபோது ஊனம் நீங்கியதால் ஊனம் உள்ளவர்கள் வழிபட்டால் ஊனம் நீங்கும் என்பது ஜதீகம். குடும்பத்தில் குழப்பம் உள்ளவர்களும், பாவம் போக்கவும் சனீஸ்வர பகவானுக்கு அபிஷேகம் செய்து வழிபடலாம். இக்கோயிலின் முக்கிய தினமே சனீஸ்வர பகவானே நேரில் வரும் சனிக்கிழமை, பூசம், அட்சய திருதியை மூன்றும் சேர்ந்த நாளாகும்.

 

தேனி மாவட்டம் -குச்சனூர்
சனீஸ்வர பகவான் தல நாயகனாக, முதல் மூர்த்தியாக மற்ற கிரகங்களோடு இணைந்து இல்லாமல் தனித்தெய்வமாக கோவில் கொண்டிருப்பது குச்சனூரில் மட்டுமே. இவ்வூர் தேனி மாவட்டம் சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்தில் சுரபி நதி ராஜா வாய்க்காலின் மேற்கு கரையில் அமைந்துள்ளது. ஆழ்ந்த பக்தியோடு வழிபட்ட சந்திரவதனனுக்கு சனி பகவான் அருள்பாலித்த இடமே குச்சனூரில் கோயில் கொண்டுள்ள இடமாகும். மூலஸ்தானத்தில் மூலவர் சுயம்புவாகத் தோன்றியவர். லிங்க வடிவில் சற்று அகன்றுள்ள இவரது தோற்றம் காண்போர் மனதைக் கவரும் தன்மையுடையது. சனி பகவானுக்குரிய கருமையும், அழகும் கொண்டது. மூலவருக்கருகில் உற்சவ மூர்த்தி அமைந்துள்ளார். ஆண்டுக்கொருமுறை பவனி வருபவர் உற்சவ மூர்த்தியே ஆவார். குச்சனூரில் நிலைத்திருக்க விரும்பிய சனீஸ்வர பகவான் தனது உண்மைத் தொண்டராகிய லாட சன்னியாசியை இங்கே இருத்தித் தம் திருவடி கமலங்களில் ஐக்கியமடையச் செய்து துணைத் தெய்வங்களுள் ஒன்றாக அமைத்துக் கொண்டார். சனீஸ்வர பகவான் விரும்பிக் குடிகொண்டிருக்கும் இத்தலத்தின் பெருமையே பெருமை. தீர்த்தம் சுரபி நதி எனும் புகழ் பெற்ற சுருளி நதி. இதில் வருடம் 365 நாட்களும் தண்ணீர் ஓடிக் கொண்டிருப்பது சிறப்பாகும்.

 

ஈஸ்வரன் கட்டளையின்படி இடத்தலை மரத்தடியில் தியானத்தில் அமர்ந்து மனநிறைவு பெற்று மகிழ்வுடன் வீற்றிருக்கும் இடம் இத்திருத்தலம் ஆகும்.இப்போதும் இம்மரம் மூலஸ்தானத்திற்கு பின்னால் செழிப்பாக இருப்பதை நாம் காணலாம். விடியற்காலம், உச்சிக்காலம், சாயங்காலம் ஆகிய 3 வேலைகளிலும் நாள்தோறும் தவறாமல் பூஜை நடைபெறுகிறது. உச்சிகால பூஜையானவுடன் சனீஸ்வர பகவானின் வாகனமாகிய காகத்திற்குத் தளிகை அளித்த பின்னரே பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. சில சமயங்களில் காகம் தளிகை ஏற்காவிடில் அப்படியே அன்றைய அனைத்து நிகழ்ச்சிகளையும் நிறுத்தி வைத்து பக்கதர்களும், பூசாரிமார்களும் பகவான் சன்னிதானத்தில் தாழ்பணிந்து தங்கள் குற்றங்களுக்கு மன்னிப்பு வேண்டி மன்றாடியபின் காகம் தளிகை ஏற்று வருவது இன்றும் நடைபெறும் அதிசயங்களுள் ஒன்றாகும். இக்கோயிலில் எள் பொங்கல் படைப்பது சிறப்பாகும். ஒவ் வொரு வருடமும் ஆடி மாதம் சனிக்கிழமைகளில் தோறும் திருவிழா நடைபெறுகிறது. ஐந்து சனிக்கிழமைகளில் மூன்றாவது சனிக்கிழமையே மிகவும் விசேஷமானது. கோயிலை வலம் வரும்போது ஓம் மந்தாய நம: என்று சொல்லி வலம் வருவது விசேஷம். தேனி மாநகரத்திலிருந்து தெற்கே 20 கி. மீ. தூரத்தில் குச்சனூர் அமைந்துள்ளது.

 

திருநள்ளாறு
ஸ்ரீ சனீஸ்வர பகவான் பூஜை செய்த தலங்களுள் தலையாயது திருநள்ளாறு என்னும் திருத்தலமாகும். ஒருவருக்குப் பொங்கு சனி தசை வந்து விட்டால் பொன் கொழிக்கும். மங்கு சனி தசை வந்துவிட்டால் அஷ்ட தரித்திரம் கூத்தாடும். பல நோய்களும் வரும். சனிக்கிழமை விரதமிருந்து ஸ்ரீ சனீஸ்வர பகவானுக்கு ஸகஸ்ர நாமார்ச்சனை செய்தால் கெடுதல்கள் விலகிப் பலவகை நன்மைகள் உண்டாகும். இத்தலம் பேரளம்-காரைக்கால் ரயில் மார்க்கத்தில் அமைந்துள்ளது. இந்த சேத்திரத்திற்கு ஆதி புரி, நகவிடங்கபுரம் , நலேச்சுரம் என்று பல பெயர்கள் உண்டு. திருநள்ளாறு என்பது காரணப் பெயராகும். நளனுக்கு நல்ல வழியைக் கொடுத்ததால் நள்+ஆறு என்ற பெயர் பெற்று அதுவே மருவி நள்ளாறு என்று ஆயிற்று. திருநள்ளாற்றில் 13 தீர்த்தங்கள் உள்ளதாக தலவரலாறு கூறுகிறது. சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்ய பிரம்மன் தன்னுடைய தண்டாயுதத்தால் அமைத்த தீர்த்தத்தை பிரம்ம தீர்த்தம் என்கின்றனர்.

 

இது கோயிலுக்கு நேர்கிழக்கில் உள்ளது. இதில் நீராடுவோர் பிரம்மபதம் அடைவர். அம்மன் சன்னிதிக்கு எதிரே மதிலை ஒட்டி சரஸ்வதி தீர்த்தம் (வாணி) உள்ளது. இதில் நீராடுவோருக்கு எல்லாக் கலைஞானங்களும் கிட்டும். கோயிலுக்கு வடக்கு முகமாகச் சென்றால், அன்னதீர்த்தத்தையும், அகஸ்திய தீர்த்தத்தையும் காணலாம்.
கோயிலுக்கு வடமேற்கு திசையில் உள்ள நள தீர்த்தத்தில் ஸ்தானம் செய்தால் சகலவிதமான தோஷங்களும், பீடைகளும் அனலிடைப்பட்ட மெழுகுபோல் மறைந்துவிடும். நளனுக்காக சிவபெருமான் தன் சூலாயுதத்தால் கங்கையை இந்த இடத்தில் வரவழைக்கப் புராணம் போற்றும். இதை அனைவரும் ஸேவிக்கின்றனர். இதில் நீராடுவதில்லை. ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் சன்னிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இறைவனுக்கு ஸ்ரீ ஆதிமூர்த்தி, ஸ்ரீ நகவிடங்கர், ஸ்ரீ நள்ளாறர் என்ற பல திருநாமங்கள் உண்டு. ஸோபன மண்டபத்திற்கருகில் அம்மன் சன்னிதி வடக்கு முகமாய் அமைந்துள்ளது. ஸ்ரீ போக மார்த்த போகமார்த்த பூண்முலையாள், ஸ்ரீ பிராணேஸ்வரி என்பவை அம்மனின் திருநாமங்கள். அம்மன் சன்னிதிக்கு முன்புறம் கிழக்குப் பக்கமாக ஸ்ரீ சனீஸ்வர பகவான் சன்னிதி உள்ளது. ஒவ்வொரு சனிக்கிழமையும் விசேஷ அர்ச்சனைகள் நடைபெறுகின்றன. ஸ்ரீ சனீஸ்வர பகவானுக்கு சங்க புஷ்பம் (பாலாடை புஷ்பம் அல்லது காக்காட்டான் புஷ்பம் ) போன்ற நீல நிறமுடைய புஷ்பங்கள், மற்ற புஷ்பங்களுடன் வன்னிபத்ரமும், வில்வ பத்ரமும் சேர்த்து அர்ச்சனை செய்யப்படுகிறது. வைகாசி மாதத்தில் உத்திரட்டாதியில் துவஜாரோகணமாகி 18 நாட்களுக்கு பிரம்மோற்சவம் நடைபெறுகின்றது. தனுர்மாத பெளர்ணமியில் பலர் வந்து அன்னதானம் செய்கிறார்கள். எல்லா மதத்தினருக்கும் சம்மதமானவர் இவர். எல்லா மதத்தவரும் ஒன்று சேர்ந்து ஸ்ரீ சனீஸ்வர பகவானை துதித்து உய்வோமாக!
துயர்கள் நீங்கித் தூயவராக தொல்வினைகள் தொலைந்து போக, பிறப்பும், இறப்பும் அற்றுப்போக. தீராப்பிணிகள் தீர்ந்து போக, வாக்குவன்மை வளமாய்ப் பெருக சரஸ்வதி தீர்த்தத்திலும், சகல பாவங்களும் விலகத் திருக்குளம் மூன்றிலும் தீர்த்தமாட வேண்டும். புத்திர பாக்கியம் பெற 3 தீர்த்தங்களிலும் நீராடி ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் , ஸ்ரீ போகமார்த்த பூண்முலையாள், ஸ்ரீ சனீஸ்வர பகவான், ஸ்ரீ நளநாராயணப்பெருமாள் இவர்களை துதிப்போருக்கு புத்திர பாக்கியம் கிட்டும். சிவபெருமானுக்கு தும்பை மாலை சாற்றினால் சாற்றும் ஒவ்வொரு மலருக்கும் கோடி வருஷ சிவலோக வாசம் கிடைக்கும்.

"நகர்ப்புற நக்சல்" (Urban Naxal)

செயல்பாடுகள் மற்றும் சட்டப் பின்னணி ​1. அறிமுகம் மற்றும் சொல்லாடலின் தோற்றம் ​ "நகர்ப்புற நக்சல்" (Urban Naxal) என்பது இந்திய அ...