Friday, March 1, 2013

சிவனின் பஞ்ச முகங்கள்-



ஈசானம் [சதாசிவம்]

தற்புருடம் [மகேஸ்வரன்]

அகோரம் [ருத்ரா]

வாமதேவம் [விஷ்ணு]

சத்யோசாதம் [பிரம்மா]

சதாசிவ மூர்த்தம், ஐந்து முகங்கள்,

பத்து கரங்களுடன் அருள் பாலிப்பார்.

இவ்வைந்து வடிவங்களும் "நமசிவாய"

எனும் ஐந்தெழுத்தின் வடிவாக உள்ளனர்.

சத்யோசாதம்-

பஞ்சாட்சரத்தின் முதல் எழுத்தான

"ந"வடிவாக விளங்குகிறார்.

தங்க நிறத்துடன், குண்டலம் அணிந்து இருப்பார்.

பஞ்சபூதங்களில் நிலம் முழுவதும் நிறைந்து இருப்பார்.

உயிர்களின் வினைகளை நீக்கி,

நற்பயன்களை தருவார்.

வாம தேவம்-

பஞ்சாட்சரத்தின் இரண்டாவது எழுத்தான

"ம" வடிவாக விளங்குகிறார்.

குங்குமம் போன்ற செம்மை நிறத்திலிருப்பார்.

பஞ்சபூதங்களில் நீரின் மத்தியில் இருப்பார்.

பதிமூன்று கலைகளுடன்

உமாதேவியுடன் காட்சி அளிக்கிறார்.

உயிர்களின் பாவங்களை நீக்கி,

அருள் புரிகிறார்.

அகோரம்-


பஞ்சாட்சரத்தின் மூன்றாவது எழுத்தான

"சி " வடிவாக விளங்குகிறார்.

கருத்த பெரிய வடிவுடையவர்.

பஞ்சபூதங்களில் அக்கினியின் மத்தியில் இருப்பார்.

எட்டு கலைகளுடன்

அகோரேசி என்று பெயருடைய

உமாதேவியுடன் காட்சி அளிக்கிறார்.

உயிர்களின் பாவங்களை சுட்டெரிக்கிறார்.

தற்புருடம் -

பஞ்சாட்சரத்தின் நான்காவது எழுத்தான

"வ" வடிவாக விளங்குகிறார்.

பால சூரியனைப் போன்று பிரகாசிப்பார்.

பஞ்சபூதங்களில் வாயுவின் மத்தியில் இருப்பார்.

நான்கு கலைகளுடன் காட்சி அளிக்கிறார்.

உயிர்களின் மனமயக்கத்தை நீக்கி,

நற்பயன்களை தருவார்.

ஈசானம்-

பஞ்சாட்சரத்தின் ஐந்தாவது எழுத்தான

"ய" வடிவாக விளங்குகிறார்.

கோடி சூரியனைப் போன்று பிரகாசிப்பார்.


பஞ்சபூதங்களில்ஆகாயத்தின் மத்தியில் இருப்பார்.


ஐந்து கலைகளுடன் காட்சி அளிக்கிறார்.

உயிர்களின் பாவங்களை நீக்கி,

நற்பயன்களை தருவார்.

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...