Friday, July 19, 2013

தமிழ் கதை

அரசன் பரிவாரங்களுடன் சென்று கொண்டிருந்த போது எங்கிருந்தோ வந்த ஒரு கல் அவன் தலையில் பட்டு காயம் ஏற்பட்டது. வீரர்கள் உடனே நாலாபுறமும் சென்று ஒரு கிழவியைப் பிடித்து வந்தார்கள்.

கிழவி சொன்னாள்,''அரசே என் மகன் சாப்பிட்டு மூன்று நாள் ஆகிறது. அவனுக்காகப் பழம்பறிக்கக் கல்லை விட்டு எறிந்தேன். அது தவறி உங்கள் மேல் பட்டுவிட்டது.

''இதைக் கேட்ட அரசர் மந்திரியிடம் உடனே கிழவிக்கு ஆயிரம் காசுகள் கொடுக்கச் சொன்னார். எல்லோருக்கும் ஆச்சரியம். காரணம் கேட்க அவர் சொன்னார்,

''உணர்ச்சியே இல்லாத மரம் தன மீது கல்லை விட்டு
எறிந்ததற்குபுசிக்கப் பழங்களைத் தருகிறது.
ஆறறிவு படைத்த, அதுவும் மன்னனான நான் தண்டனையா கொடுப்பது?!'

நீதி: நடந்த செயல்களை ஆராய்ந்து முடிவெடுங்கள். அவசரப்படாதீர்கள்!

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...