Thursday, February 13, 2014
எப்படி எல்லாம் சாப்பிடக் கூடாது
கேட்பார்கள் என்றால், நம் பிள்ளைகளுக்கு சொல்லலாம்....
கிடந்து உண்ணார்; நின்று உண்ணார்; வெள்ளிடையும் உண்ணார்;
சிறந்து மிக உண்ணார்; கட்டில்மேல் உண்ணார்;
இறந்து, ஒன்றும் தின்னற்க, நின்று!
கிடந்து உண்ணார்; = படுத்துக் கொண்டு சாப்பிடக் கூடாது
நின்று உண்ணார் = நின்று கொண்டு சாப்பிடக் கூடாது (generally, fast food center களில் சாப்பிடக் கூடாது)
வெள்ளிடையும் உண்ணார் = வெட்ட வெளியில் இருந்து சாப்பிடக் கூடாது
சிறந்து மிக உண்ணார்; = நல்லா இருக்கிறது என்பதற்காக, நிறைய சாப்பிடக் கூடாது
கட்டில்மேல் உண்ணார் = படுக்கை அறையில் சாப்பிடக் கூடாது
இறந்து = ஒரு முறை இல்லாமல் (நேரம் காலம் பார்க்காமல்)
ஒன்றும் தின்னற்க, நின்று! = ஒன்றும் சாப்பிடக் கூடாது
கொஞ்சம் மாத்தி சொல்லுவதாய் இருந்தால்,
உட்கார்ந்து சாப்பிடனும், அளவோட சாப்பிடனும், நேரம் காலம் அறிந்து சாப்பிடனும், சரியான இடத்தில இருந்த உணவு உண்ண வேண்டும்....
சைவநீதி விளங்குக உலகமெல்லாம் .
Subscribe to:
Post Comments (Atom)
சுவாமி ரங்கநாதானந்தர்
சங்கரன் என்று பெயரிடப்பட்ட இந்த சுவாமி, 1908 ஆம் ஆண்டு புனித அன்னை சாரதா தேவியின் ஜெயந்தியின் புனிதமான சந்தர்ப்பத்தில் கேரளாவின் திருக்கூரில...
-
கந்தர்வ ராஜாய காயத்ரி மந்திரம் ஓம் கந்தர்வராஜாய வித்மஹே களத்ரதோஷ நிவர்த்தகாய தீமஹி தந்நோ யக்ஷ: ப்ரசோதயாத் கீழ்க்காணும் மந்திரங்களைய...
-
பீடம் அமைத்து கும்பம் வைத்து செய்யப்படும் எந்த பூஜை முறைக்கும் பிராண பிரதிஸ்டை செய...
No comments:
Post a Comment