Thursday, February 13, 2014

எப்படி எல்லாம் சாப்பிடக் கூடாது



கேட்பார்கள் என்றால், நம் பிள்ளைகளுக்கு சொல்லலாம்....
கிடந்து உண்ணார்; நின்று உண்ணார்; வெள்ளிடையும் உண்ணார்;
சிறந்து மிக உண்ணார்; கட்டில்மேல் உண்ணார்;
இறந்து, ஒன்றும் தின்னற்க, நின்று!

கிடந்து உண்ணார்; = படுத்துக் கொண்டு சாப்பிடக் கூடாது

நின்று உண்ணார் = நின்று கொண்டு சாப்பிடக் கூடாது (generally, fast food center களில் சாப்பிடக் கூடாது)

வெள்ளிடையும் உண்ணார் = வெட்ட வெளியில் இருந்து சாப்பிடக் கூடாது

சிறந்து மிக உண்ணார்; = நல்லா இருக்கிறது என்பதற்காக, நிறைய சாப்பிடக் கூடாது

கட்டில்மேல் உண்ணார் = படுக்கை அறையில் சாப்பிடக் கூடாது

இறந்து = ஒரு முறை இல்லாமல் (நேரம் காலம் பார்க்காமல்)

ஒன்றும் தின்னற்க, நின்று! = ஒன்றும் சாப்பிடக் கூடாது

கொஞ்சம் மாத்தி சொல்லுவதாய் இருந்தால்,

உட்கார்ந்து சாப்பிடனும், அளவோட சாப்பிடனும், நேரம் காலம் அறிந்து சாப்பிடனும், சரியான இடத்தில இருந்த உணவு உண்ண வேண்டும்....
சைவநீதி விளங்குக உலகமெல்லாம் .

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...