Monday, February 24, 2014

சிவ மந்திரங்கள்


ஓம் ஜகங் என தினமும் 108 முறை
ஜபித்தால் கணபதியின் அருள் கிட்டும்.
ஓம் நமசிவாய என்று ஜெபித்தால்
காலனை வெல்லலாம்.
ஓம் நமசிவாய நமா என ஜெபித்தால்
பூதக்கூட்டங்கள் வசமாகும்.துஷ்ட
தேவதைகள் அழியும்.மன்னர்கள் அருள் கிடைக்கும்.
ஓம் நூம் பயப்யுஞ் சிவாய நமா என்ற
மந்திரத்தை ஜபித்தால் துன்பங்கள் விலகும்.
ஆறு சாஸ்திரங்களையும், நான்கு
வேதங்களையும் அறிய உதவும்.
சிவாய ஓம் என்று சொன்னால்
திருமாலின் ஆற்றல் கிட்டும்.
மய நசிவ சுவாகா என ஓதினால்
ஆகாயத்தில் பறந்து செல்லும் சித்தர்கள்
கீழிறங்கிவந்து சுமனக்குளிகை தருவார்கள்.
இங் சிங் ச்ங் ஓம் என்ற ஈசான மந்திரத்தை
தனக்கு ஆபத்தான வேளைகளில் சூரியனுக்கு
எதிராக நின்று கைகளை மேலே உயர்த்தி
ஜபிப்பவன் எல்லா பாவங்களிலிருந்து
முழுமையாக நீங்குவான்.
சிங் சிங் சிவாய ஓ என ஜபித்துவந்தால்
முக்காலமும் அறியும் ஆற்றல் உண்டாகும்.
ஓங்கிறியும் ஓம் நமச்சிவாய என சொன்னால்
வியாபாரம் நன்றாக நடக்கும்.
லீங் க்ஷும் சிவாய நம என ஜபித்தால் பெண்கள்
வசியம் உண்டாகும்.
சவ்வும் நமசிவாயநமா என ஜபித்தால்
அரச போகம் கிட்டும்.
மந்திர ஜபம் பற்றி சித்தர்கள் கூறியிருப்பது:
மசிவயந ஜபித்தாலும்,நயவசிம ஜபித்தாலும்
மோகனம் உண்டாகும்-அகத்திய மகரிஷி
சிவாயநம ஜபித்தால் மோகனம் உண்டாகும்-
நந்தீசர் மகரிஷி

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...