Friday, June 7, 2013
வாசல்கள் எவ்வாறு அமைய வேணடும் ?
தலைவாசல் உயரமானதாகவும் அகலமானதாகவும் அதைவிட சின்னதாக அடுத்த வாசலும் அதைவிட சின்னதாக அதற்கு அடுத்த வாசலும் இப்படியாக கடைசியில் பின்வாசல் முன்னதை காட்டிலும் சின்னதாக வைக்க வேண்டும் தலைவாசல் மற்றும் பின் வாசல்களில் அமைக்கப்படும் நிலைகளின் கீழ் பகுதியில் குறுக்குச் சட்டம் வைக்க வேண்டும்
நாம வீடு கட்டும்போது கல், மண், சிமென்ட், மரம் போன்றவை களை பயன்படுத்து கிறோம் இவைகள் பழைய வீட்டில் இருந்து கழித்த தாகவோ அல்லது வேறு நபரிடம் மிச்சமானதாகவோ இருக்கக் கூடாது.
நமது வீட்டின் அமைப்பு வாஸ்து சாஸ்திரப்படி உள்ளதா பாகம்1
ஜன்னல் ஏன் ஈசானிய முலையில் வைக்க வேண்டும் ?
வடகிழக்கு பருவ காற்று தென்மேற்கு பருவகாற்று இவைகளை கருத்தில் கொண்டு வடகிழக்கு, வடமேற்கு ஆகிய திசைகளில் ஜன்னல் வைக்கலாம் என்று வாஸ்து சாஸ்திரத்தில் சொ்லப்படுகிறது. அறிவியல் ரீதியாகப் பார்த்தால் வடகிழக்கு, தென்மேற்கு ஆகிய திசைகளில்தான் காற்று அதிகமாகக் கிடைக்கிறது. அதனால் வடகிழக்கு பகுதியில் ஜன்னல் வைப்பதுதான் நல்லது இதனால் அவ்வீட்டில் வசிப்பவர்கள் அனைவரும் ஆரோக்கியமாக இருப்பபர்கள். இதனால்தான் நமது முன்னோர்கள் பூஜை அறையையும் முதியோர் தங்கும் அறையையும் ஈசானிய மூலையில் கட்டினார்கள்
ஆண் சந்ததியே இல்லாமல் போக காரணம் என்ன?
நாமது வீடுகளில் ஈசானிய மூலையை காற்று வராதபடி அடைத்து வைக்கக் கூடாது. தாராளமாக காற்று வரும்படி அந்த பக்கத்தில் சன்னல் வைக்க வேண்டும். அப்படி செய்யாவிட்டால் அடிக்கடி நோய் ஏற்படும். ஆண் சந்ததி ஏற்கடாது
தென்மேற்கு திசையில் திறப்பு இல்லாமல் இருக்க வேண்டும் ஏன்?
வடக்கு, வடகிழக்கு திசைகளில் அலமாரிகள் வைக்காமல் இருப்பது நல்லது. ஏனென்றால் வடக்கு, வடகிழக்கு திசையில் இருந்து வரும் காற்று வீட்டிற்குள் நுழையும் வகையில் இருந்தால் அந்த வீட்டில் செல்வமும் ஆரோக்கியம் சந்தோசமும் நிறைந்து இருக்கும் அதனால் அங்கு ஜன்னல்கள் வைக்கலாம். தென்மேற்கு திசையில் அலமாரிகள் வைக்கலாம்
வீட்டு வாசல் படியில் உட்காரக் கூடாது ஏன்?
நமது வீட்டில் இருக்கும் வாசல்படியின் எண்ணிக்கை ஒற்றைப்படையில் இருந்தால் ரெம்ப நல்லது. நாம் நினைத்ததை பேச வாய் எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு ஒரு வீட்டின் நுழைவு வாசலும் மிக முக்கியம். ஆன்மிக ரீதியாகப் பார்த்தால் வாசல் வழியாகத்தான் லட்சுமி நமது வீட்டில் வாசம் செய்ய வருவார்கள் அதனால் வாசலின் குறுக்கே உட்காருவது வீட்டிற்கு வரும் லட்சுமியை தடுப்பதற்கும் அவமதிப்பதற்கும் சமமாகும்
நாம் வீடு கட்டும்போது வாசல்கால் நடுவதுண்டு அப்போது பல நவரத்தினக் கற்களையும் பஞ்சலோக பொருட்களையும் வைத்து பல்வேறு பூஜைகள் செய்து இருப்போம் இப்படி அதற்கு தெய்வீகத் தன்மையை உண்டு பண்ணிவிட்டு இப்போது, அதன் மீது அமர்தால் அது லட்சுமியை அவமதிப்பதாகத்தானே கருதமுடியும்
Subscribe to:
Post Comments (Atom)
"நகர்ப்புற நக்சல்" (Urban Naxal)
செயல்பாடுகள் மற்றும் சட்டப் பின்னணி 1. அறிமுகம் மற்றும் சொல்லாடலின் தோற்றம் "நகர்ப்புற நக்சல்" (Urban Naxal) என்பது இந்திய அ...
-
பீடம் அமைத்து கும்பம் வைத்து செய்யப்படும் எந்த பூஜை முறைக்கும் பிராண பிரதிஸ்டை செய...
-
Ancient Sacred Chants AUM. In chapter 17 of Bhagwadgita, one of the most sacred texts of the Hindus. Lord Krishna has said that the word...
No comments:
Post a Comment