Friday, June 7, 2013
ஔவையாரின் நல்வழியிலிருந்து,
வருந்தி அழைத்தாலும் வாராத வாரா
பொருந்துவன போமினென்றால் போகா இருந்தேங்கி
நெஞ்சம்புண்ணாக நெடுந்தூரம் தாம்நினைந்து
துஞ்சுவதே மாந்தர் தொழில்.
ஊழ்வினைப் பயனால் அன்றி, வரக்கூடாதவைகளை வருந்தி அழைத்தாலும் வராது. அதுபோல் வந்தவைகளை எவ்வளவு வெறுத்துத் ஒதுக்கினாலும் போகாது. நன்மையும், தீமையும் ஊழ்வினைப் பயனாலே என்பதை அறியா மக்கள் எப்போதும் இன்பத்தை நாடியும், துன்பத்தை வெறுத்தும், கவலைகளில் மூழ்கிக் கிடப்பார்கள்.
செய்தீ வினையிருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்
எய்த வருமோ இருநிதியம் - வையத்து
அறும்பாவம் என்ன அறிந்தன் இடார்க்கின்று
வெறும்பானை பொங்குமோ மேல்.
அறம் செய்வதால் பாவங்கள் நீங்கும் என்று உணர்ந்து செல்வம் பெற்றிருந்த காலத்தில் வறியவர்களுக்கு உதவாதவர்களுக்கு, செல்வம் போய் வறுமையுற்ற காலத்தில் வெறும்பானை பொங்காதது போல் முன்னர் செய்த தீவினைப் பயனே என்று வருந்த வேண்டுமே தவிர, தெய்வத்தை வெறுப்பதால் செல்வம் வராது.
Subscribe to:
Post Comments (Atom)
பகத்சிங்
பிரிட்டிசாருக்கு எதிரான கடைசிகட்ட சுதந்திரபோரில் ஜாலியன் வாலாபாக் சம்பவம் கொடுமையானது, அங்கிருந்து எத்தனையோ தேசாபிமானிகள் போராட கிளம்பினார்க...
-
கந்தர்வ ராஜாய காயத்ரி மந்திரம் ஓம் கந்தர்வராஜாய வித்மஹே களத்ரதோஷ நிவர்த்தகாய தீமஹி தந்நோ யக்ஷ: ப்ரசோதயாத் கீழ்க்காணும் மந்திரங்களைய...
-
மயூர பந்தம் பகை விலக,மந்திர,தந்திர,பில்லி,சூனிய ஏவல் பிணி நீக்க வல்லது ரத பந்தம் வாகன விபத்துக்கள் ,வ...
No comments:
Post a Comment