Thursday, September 24, 2015

32 வகை தர்மங்கள்


பிற உயிர்கட்குச் செய்யும் புண்ணியங்கள் என 32 வகை தர்மங்கள்......

1. வழிப் போக்கர்கட்குச் சத்திரங்கள் கட்டிவைப்பது.

2. கல்வி கற்கும் ஏழைப் பிள்ளைகட்கு உணவு வசதி அளிப்பது.
3. அறுவகைச் சமயத்தார்க்கும் உணவு கொடுப்பது.
4. பசுவுக்கு வைக்கோலும் புல்லும் வழங்குவது.
5. சிறைச் சாலையில் துன்புறுவோர்க்கு சோறளிப்பது.
6. வீடு தேடி வரும் ஆதரவற்ற ஏழைகட்குப் பிச்சை அளிப்பது.
7. தின்பண்டம் நல்கல்.
8. அறநெறி மேற்கொண்டு வாழும் துறவிகட்குச் சோறளிப்பது.
9. தாய்மைப் பேறுபெற்ற பெண்கட்கு உதவி செய்வது.
10. அனாதைக் குழந்தைகளை எடுத்து வளர்ப்பது.
11. அனாதைப் பிணங்களை அடக்க்கம் செய்வது.
12. வாசனைப் பொருள்களை அளிப்பது.
13. நோயாளிகட்கு மருந்துகள் கொடுத்து உதவுவது.
14. துணிவெளுக்கும் தொழிலாளர்க்கு உதவி செய்வது.
15. நாவிதர்க்கு உதவிகள் செய்வது.
16. ஏழைப் பெண்கட்குச் காசோலை கொடுத்து உதவுவது.
17. ஏழைகளின் கண் நோய்க்கு மருந்து கொடுத்து உதவுவது.
18. தலைக்கு எண்ணெய் கொடுப்பது.
19. திருமணமாகாத ஏழைப் பையனுக்குத் திருமணம் செய்து வைப்பது.
20. பிறர் துன்பம் தீர்ப்பது.
21. தண்ணீர்ப் பந்தல் வைத்து உதவுவது.
22. மடம் கட்டிச் சமய அற்இவை வளர்ப்பது.
23. சாலைகளை அமைத்துக் கொடுப்பது.
24. சோலைகளை உண்டாக்கி வைப்பது.
25. பசுமாடுகள் உடம்பைத் தேய்த்துக் கொள்ள தூண்களை நிறுவுவது.
26. விலங்கினங்கட்கு உணவளிப்பது.
27. ஏறு விடுதல்.
28. விலை கொடுத்து உயிரைக் காப்பாற்றுதல்.
29. கன்னிகாதானம் செய்து கொடுத்தல்.
30. குழந்தைகட்குப் பால் வழங்குதல்.
31. கண்ணாடி வழங்குதல்.
32. அறவைத் தூரியம்.

No comments:

Post a Comment

"நகர்ப்புற நக்சல்" (Urban Naxal)

செயல்பாடுகள் மற்றும் சட்டப் பின்னணி ​1. அறிமுகம் மற்றும் சொல்லாடலின் தோற்றம் ​ "நகர்ப்புற நக்சல்" (Urban Naxal) என்பது இந்திய அ...