Friday, September 18, 2015

இது தாங்க ஆர்.எஸ்.எஸ்!!!

 
பாரத நாட்டின் உயிர் துடிப்பான இந்து சமுதாயத்தை ஒற்றுமைப்படுத்தி இந்து தர்மத்தை, இந்து பண்பாட்டை பாதுகாத்து தேசபக்தி கட்டுப்பாட்டை உருவாக்கி, தீண்டாமையை அகற்றி பாரதத்தை உலகின் குருவாக திகழ வைக்க துவக்கப் பட்ட இயக்கமே ஆர்.எஸ்.எஸ்.

1925-ல் பிறவி தேசபக்தரான ஹெட்கேவார் அவர்களால் விஜயதசமி அன்று நாகபுரியில் துவக்கப்பட்டது.1947 பாகிஸ்தான் பிரிவினையின் போது சொந்த நாட்டிலேயே எண்ணற்ற ஹிந்துக்கள் அகதிகளாக முஸ்லீம்களால் பாகிஸ்தானிலிருந்து விரட்டியடிக்கப் பட்டனர். அப்போது அங்குள்ள ஹிந்துக்களை உதவிகரம் நீட்டி மீட்டது ஆர்.எஸ்.எஸ்.

1962-ல் சீன போரில் நமது ராணுவத்துடன் இணைந்து போர் முனையில் உதவி செய்ததால் ஆர்.எஸ்.எஸ் ஐ தவறாக நினைத்து கொண்டு இருந்த அன்றைய பிரதமர் நேரு உண்மையை உணர்ந்து சங்கத்தை 1963 ஜனவரி 26 குடியரசு தின விழா அணி வகுப்பில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார்.1965-ல் பாகிஸ்தான் போரின் போது தலைநகர் தில்லியில் சாலை போக்குவரத்து, கட்டுப்பாடு, காவல் துறை பனி முழுவதையும் இருபது நாட்களுக்கு அன்றைய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி ஆர்.எஸ்.எஸ். வசம் ஒப்படைத்தார். அத்தகைய சீரிய பனி செய்த இயக்கம் தான் ஆர்.எஸ்.எஸ்.

1975 நெருக்கடி நிலை சமயத்தில் பல கட்சிகளும், அமைப்புகளும், தலைவர்களும், பத்திரிக்கைகளும் முடங்கி கிடந்த நேரத்தில் சங்க சகோதரர்கள் சர்வாதிகார அரசை கண்டித்து நாடு முழுவதும் சத்யாக்ராஹ போர் செய்தனர். 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பல மாதம் சிறை சென்று பல கொடுமைகளை ஏற்று, சர்வாதிகார ஆட்சியை நீக்கி தேசத்தை மீண்டும் மக்களாட்சிக்கு கொண்டு வந்தனர்.1995 தேச விரோதிகளால் தூண்டி விடப்பட்டு ஜாதி வெறியினால் தென் மாவட்டங்கள் ரணகளமான சமயத்தில், சமய நல்லிணக்க கூடத்தையும், பாத யாத்திரையும் நடத்தி சமுதாய இசைவை ஏற்படுத்தியது ஆர்.எஸ்.எஸ்.

2004 ஆழிப் பேரலை (சுனாமி) தாக்கிய போது உடனடியாக அவர்களுக்கு நேசகரம் நீட்டி வாழ்வில் ஒளியை ஏற்றியது ஆர்.எஸ்.எஸ்.2013 உத்திரகன்ட் வெள்ள நிவாரண பணியில் ஆயிரக்கணக்கான ஸ்வயம் சேவகர்கள் அணைத்து வித உதவிகளும் செய்தனர்.தேசம் முழு கல்வி, மருத்துவம், பண்பாடு, பொருளாதாரம், சார்ந்த ஒன்றரை லட்சம் சேவா காரியங்களை செய்து வரும் அமைப்பு ஆர்.எஸ்.எஸ்.விமான ரயில் விபத்து, லாத்தூர், குஜராத் பூகம்பம் போன்ற பேரிடர்களின் போது நேசகரம் நீட்டி உடனே சேவை செய்தது ஆர்.எஸ்.எஸ்.

தேசம் முழுவதும் 60 ஆயிரம் கிளைகளை கொண்ட மாபெறும் இயக்கம் மற்றும் 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் ஹிந்துக்களை ஒன்றிணைக்கும் பணியை செய்து கொண்டு வருகின்றது ஆர்.எஸ்.எஸ்.உலகிலேயே நாட்டிற்காக தினமும் 1 மணி நேரம் செலவிடும் கோடிக் கணக்கான ஸ்வயம் சேவகர்களை கொண்ட ஒரே அமைப்பு என்ற பெருமையும் ஆர்.எஸ்.எஸ் –ற்கு உண்டு.தேசமே தெய்வம்

No comments:

Post a Comment

பிறப்புடன் பிறக்கும் ஐந்து விதிகள்...

ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன.  (1) *ஆயுள்* : மனிதன் எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி க...