Tuesday, September 17, 2013

விரைவில் திருமணம் நடக்கா திருமணஞ்சேரி





வன்னிமரமும், உறைகிணறுமே சாட்சி!

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடிக்கு தெற்கில் 3வது கிலோ மீட்டரில் உள்ளது திருமணஞ்சேரி. ஈசன் சுகந்தபரிமளேஸ்வரராகவும் இறைவி பெரிய நாயகியாகவும் கோயில் கொண்டுள்ள தலம்.

அஞ்ஞான விமோசன நதியின் தென்கரையில் ஆலயம் அமைந்துள்ளது. நறுமணம் நிரம்பியவர் என்றும், திருமணநாதர் என்றும் இந்த சுயம்பு லிங்க ஈசனுக்கு வேறு பெயர்கள் உண்டு. ஆலயத்தின் உள்ளேயே தனி சந்நதியில் அம்பாளும், விமானம் அமைந்த சந்நதியில் சுயம்பு நந்தி தேவரும் உள்ளனர்.

இங்கிருந்த வன்னி மரமும், உறைகிணறும் புதுமண தம்பதியருக்காக மதுரை சென்று சாட்சி சொன்னதாக புராணம். இத்தல அம்பிகை, திருமணத் தடையை விலக்கி விரைவில் திருமணம் நடத்தி வைக்கிறாள்; மாங்கல்ய தோஷத்தை நிவர்த்தி செய்கிறாள்.

நீண்ட நாள் நோயுற்றவர்கள், மனநலம் பாதித்தவர்கள் இக்கோயில் திருக்குளத்தில் 48 நாட்கள் நீராடி ஈசனையும் அம்பிகையையும் வழி பட, விரைவில் குணமடைகிறார்கள்.

No comments:

Post a Comment

இளவயது ஒற்றர் சரஸ்வதி ராஜாமணி

இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மிக இளவயது ஒற்றராகச் செயல்பட்ட சரஸ்வதி ராஜாமணி அவர்களின் வாழ்க்கை வரலாறு வீரமும் தியாகமும் நிறைந்தது. ந...